Posted tagged ‘பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட்’

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!

பிப்ரவரி 8, 2023

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது: கோவை கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபா் 23ஆம் தேதி 23-09-2022 அன்று கார் குண்டு வெடித்தது. இதில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் அங்கேயே உயிரிழந்தார். இதுதொடா்பாக என்ஐஏ குழுவினா் நடத்தி வரும் விசாரணையில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி உள்ள முகமது அசாருதீன், அஃப்சா்கான், ஃபெரோஸ்கான், முகமது தெளபீக், ஷேக் இதயத்துல்லா, சனோஃபா் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதாவது, சென்னையில் தான் இந்த நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், ஊடகங்கள் இவற்றைப் பற்ரியெல்லாம் கண்டு கொள்ளாமல், வேறு விவகாரங்களை ஐத்துக் கொண்டு வாத-விவாதங்கள், பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.

சட்டப் படி நடந்து வரும் நீதிமன்ற விசாரணைகளில் காலதாமதம் ஏற்படுவது: இவ்வாறு சட்டப் படி வழக்குகளை விசாரிப்பது, கைது செய்யப் பட்டவர்களை விசாரிப்பது, வாக்குமூலம் வாங்குவது, அதை வைத்து, மறுபடியும் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று சோதனை செய்வது, விசாரிப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவற்றில் இடையே காலதாமதம் ஏற்படுகிறது. செப்டம்பர் 2022ல் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு, நிச்சயமாக சம்பந்தப் பட்டவர்கள் உஷாராகியிருப்பர். இருக்கும் ஆதாரங்களை அழித்திருப்பர். ஆகவே, இவற்றையெல்லாம் மீறி, விசாரணை நடத்தி உண்மையை நிலை நாட்ட என்ஐஏ போன்றோர் மிக கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் என்ஐஏவையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர். சோதனைக்கு வந்தால், கலாட்டா செய்கின்றனர். இதனால், தமிழக போலீஸாரும் கூட வர வேண்டியுள்ளது. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாகி விட்டது. இதையெல்லாம் யாரும் கண்ட்ப்பதும் இல்லை. மிக சாதாரணமாக எடுத்துக் கொ/ல்கின்றனர் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இப்பொழுது கூட, இந்த விவகாரங்களை சில ஊடகங்கள் தான் வெளியிட்டுள்ளன.

பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய அசாருதீன் பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை நடத்தினா். மனுவை விசாரித்த நீதிபதி அந்த 7 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி அவா்கள் 7 பேரையும் கோவைக்கு வியாழக்கிழமை 02-02-2023 அன்று அழைத்து வந்தனா். கோவையில் அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது கார் வெடிப்பு சம்பவம் தொடா்பான திட்டம் குறித்தும், ஜமேஷா முபீன் குறித்தும், இதில் வேறு எவருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அவா்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவா்கள் தெரிவித்த தகவல்களை விடியோவாகவும் பதிவு செய்து கொண்டனா்.

23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை: அவா்கள் 7 பேரில் அசாருதீன் என்பவா் கோவையிலுள்ள ஒரு பட்டாசுக் கடையில் பட்டாசுகளை வாங்கி அவற்றிலிருந்து திரிகளை மட்டும் எடுத்துவிட்டு அந்த பட்டாசு மருந்துடன் வேறு ரசாயனங்களைச் சோ்த்து புதிதாக வெடிபொருள் தயாரித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது[1]. இதையடுத்து அசாருதீன் பட்டாசு வாங்கிய கடைக்கு அவரை செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று நேரில் அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்[2]. 23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். இதையெல்லாம், என்ஐஏவுக்கு கடினமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு சாதமாக இருக்கும். இத்தகைய அடைமுறை விவகாரங்களை சட்ட ஓட்டைகளாக்கி தப்பித்துக் கொள்ள முயல்வர்.

வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப் பட்டுள்ள ரசாயனங்கள் முதலியன பறிமுதல், சோதனைக்கு உட்படுத்தப்பட்டன: கார் வெடிப்பு நடந்த பின்னர் ஜமேஷா முபின் வீட்டில் நடந்த சோதனையில் 120 கிலோ எடையிலான வெடி பொருட்கள் இருந்தன. 109 வகையான அந்த பொருட்களை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்தனர்.  இதில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயன பொருட்களும் அடங்கும்[3]. இந்த ரசாயன மூலப் பொருட்களில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், ரெட் பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டேரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் பவுடர்), அலுமினியம் பவுடர் ஆகியவை இருந்தன. தவிர, வயர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு பொருட்கள் உள்ளிட்டவையும் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.வெடி பொருட்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது[4]. அவையெல்லாம் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப் படும் பொருட்கள், ரசாயனங்கள் என்று நிரூபிக்கப் பட்டன. இருப்பினும், அவையெல்லாம் எப்படி தீவிரவாதிகள் வசம் செல்கின்றன என்பது புதிராக இருக்கிறது. உதாரனத்திற்கு நைரோ செல்லுலோஸ் வெடிகுண்டுகள் மலை, மலைபாறை, குவாரிக்களில் உபயோகிக்க, சாலைப் பணி முதலியவற்றிற்கும் விற்கப் படுகின்றன. ஆனால், அத்தகைய பொருள் முன்னர் சந்திர பாபு நாயுடு செல்லும் போது உபயோகப் படுத்தப் பட்டன.

ரசாயனங்கள் செயலிழக்கப் பட்டன: பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அவினாசி ரோட்டில் உள்ள என்ஐஏ தற்காலிக முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது[5]. நேற்று என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜித், வெடிகுண்டு அழிக்கும் நிபுணர் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் வெடி பொருட்கள் எடுத்து செல்லும் சிறப்பு வாகனத்தில் பறிமுதலான வெடிபொருட்களை கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள சுல்தான்பேட்டையை அடுத்த கந்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வெடி மருந்து குடோனிற்கு கொண்டு சென்றனர்[6]. அங்கு வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன[7]. வெடி பொருட்கள் அழித்தது தொடர்பான ஆதாரங்களை போலீசார் பதிவு செய்தனர். குறிப்பிட்ட சில வகையான வெடி பொருட்கள் தீ வைத்தும், சில பொருட்கள் மண்ணில் மூடியும் அழிக்கப்பட்டதாக தெரிகிறது[8]. வெடி பொருட்கள் அழிக்கப்பட்டபோது அந்த வளாகத்தில் தொழிலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை[9]. வெளியே தெரியாமல் மிகவும் ரகசியமாக வெடி மருந்துகளை கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த வெடிமருந்து தொழிற்சாலையின் மேலாளர் கூறுகையில், “கோவையில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் எங்கள் தொழிற்சாலையில் வைத்து செயல் இழக்கச் செய்யப்பட்டன. காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் உட்பட 18 பேர் வந்திருந்தனர்,” என்றார்[10]. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெடிபொருட்களை செயலிழக்க செய்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

08-02-2023.


[1] தினமணி, கோவை பட்டாசுக் கடையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை, By DIN  |   Published On : 08th February 2023 12:00 AM  |   Last Updated : 08th February 2023 12:00 AM

[2] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2023/feb/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3997001.html

[3] தந்தி டிவி, கோவை கார் வெடிப்பு சம்பவம் – 120 கிலோ வெடிபொருட்கள் என்.. முன் அழிப்பு, By 6 பிப்ரவரி 2023 8:30 PM

[4] https://www.thanthitv.com/latest-news/coimbatore-car-blast-incident-120-kg-explosives-destroyed-before-nia-166187

[5]  தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை வெடி விபத்தில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகள் அழிப்பு; என்ஐஏ நடவடிக்கை, Velmurugan s, First Published Feb 7, 2023, 11:41 AM IST, Last Updated Feb 7, 2023, 11:41 AM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/coimbatore-car-blast-issue-nia-officers-demolish-the-raw-materials-of-bom-rpp575

[7] தமிழ்.இந்து, கோவை | கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ வெடிகுண்டு மூலப் பொருட்கள் அழிப்பு , Published : 07 Feb 2023 07:03 AM

Last Updated : 07 Feb 2023 07:03 AM.

[8]  https://www.hindutamil.in/news/tamilnadu/940102-coimbatore-car-blast.html

[9] தினகரன், கோவை கார் வெடிப்பு வழக்கு: பறிமுதலான வெடிபொருட்கள் வெடிக்க வைத்து செயலிழப்பு, 2023-02-07@ 21:21:37

[10]  https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=837081

கத்தியிலிருந்து குண்டுவெடுப்பு வரை – மாறிவரும் ஜிஹாதின் தன்மை!

செப்ரெம்பர் 11, 2011

கத்தியிலிருந்து குண்டுவெடுப்பு வரை – மாறிவரும் ஜிஹாதின் தன்மை!

மாறிவரும் ஜிஹாதின் கொலை ஆயுதங்கள், கருவிகள்: இடைக்காலத்திலிருந்து, நாகரிகம் வளர்ந்த நிலையில் ஜிஹாதின் உருவமும் பரிணாம வளர்ச்சிப் போன்று மாறித்தான் வந்துள்ளது. கத்தியிலிருந்து, குண்டுவெடிப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் பாகிஸ்தானில் வெடிப்பது வேறு, இந்தியாவில் வெடிப்பது வேறு என்பதில்லை, எல்லாமே, காஃபிர்களுக்கு எதிராக நடத்துவது தான் ஜிஹாத். முஸ்லீம்கள், முஸ்லீகளுக்கு எதிராகவே ஜிஹாதை நடத்துவார்களா என்று கேட்டால், ஆமாம், நடத்துவார்கள். இஸ்லாம் உருவான சரித்திரமே அத்தகைய ஜிஹாத் சண்டைகள், கொலைகள், குரூரங்கள் தாம். பல இஸ்லாமிய விற்ப்பன்னர்கள், குரானைக் கரைத்துக் குடித்த வித்வான்கள் இதனை பலமுறை எடுத்துக் காட்டியுள்ளனர். ஒரு முஸ்லீம் அதுத்த முஸ்லீமை, ஒரு முஸ்லீம் குழுமம் அடுத்த முஸ்லீம் குழுமத்தை, ஒரு முஸ்லீம் சமூகம் அடுத்த முஸ்லீம் சமூகத்தை, ஒரு முஸ்லீம் நாடு அடுத்த முஸ்லீம் நாட்டை, “காஃபிர்கள்” என்று அறிவித்துவிட்டால்,  “ஜிஹாத்” துவங்கிவிடும், விளைவுகள் வெளிப்பட்டுவிடும். இதுதான் ஜிஹாதின் உண்மையானத் தன்மை[1].

07-09-2011 (புதன்கிழமை): டெல்லி உயர்நீதிமன்றத்தின் 5வது நுழைவாயில் அருகே இன்று காலை 10.15 மணிக்கு பலத்த சப்தத்துடன் குண்டுவெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வக்கீல்களும், கோர்ட்டுக்கு வந்தவர்களும் அங்கிருந்து ஓடினர். இதையடுத்து போலீஸாரும், தீயணைப்புப் படையினரும், ஆம்புலன்ஸ்களும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மற்ற விஷயங்கள் எல்லாமே வழக்கம் போலத்தான் இருக்கிறது.

‘ப்ரீப்கேஸ்’ குண்டு: வெடிகுண்டு ப்ரீப்கேஸ் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அமோனியம் நைட்ரேட் மற்றும் பிளாஸ்டிக் வெடி மருந்துகள், இரும்புத் துகள்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. குண்டு வெடித்த இடத்தில் பெரிய பள்ளமே ஏற்பட்டுவிட்டது. இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகிவிட்டனர். 76க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராம் மனோகர் லோகியா மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்தசம்பவம் நடந்த சில மணி நேரங்களில் சந்தேகப் பேர்வழிகளின் புகைப்படங்களை போலீஸார் வெளியிட்டனர். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 20 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

ஹூஜி அமைப்பிடமிருந்து  / பெயரில் வந்த இமெயில்கள் – அப்சல் குருவைத் தூக்கிலிடக் கூடாது என்று எச்சரிக்கவே இந்த குண்டுவெடிப்பை நடத்தினோம்[2]: இந்த நிலையில் நேற்று ஹூஜி அமைப்பிடமிருந்து ஒரு இமெயில் வந்தது. அந்த மெயிலில், டெல்லி குண்டுவெடிப்புக்குத் தாங்கள் பொறுப்பேற்பதாக கூறியிருந்தனர். வழக்கமாக ஹூஜி அமைப்பு இதுபோல மெயில் அனுப்புவது கிடையாது என்பதால், இந்த மெயில் திசை திருப்பும் மெயிலாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் இந்த மெயில் எங்கிருந்து வந்தது என்பதை அறியும் முயற்சியில் தேசிய புலனாய்வுப் படையினர் இறங்கினர். அதில் மெயில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரிலிருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட குளோபரல் சைபர் கபே என்ற இன்டர்நெட் மையத்தின் உரிமையாளரைப் பிடித்து தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் விசாரணை நடத்தினர்.

இன்டர்நெட், அமோனியம் நைட்ரேட் மற்றும் பிளாஸ்டிக் வெடி மருந்துகள், இரும்புத் துகள்கள்: இப்படி அத்தாட்சிகள் எளிதாக இருக்கும் போது, வழக்கம் போல விசாரணையின் இறுதியில், உரிமையாளரான 28 வயதான மகமூத் அஜீஸ் காஜா, அவரது சகோதரர் காலித் ஹூசேன், பணியாளர் அஸ்வினி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த இன்டர்நெட் மையத்திற்கு 18 வயது வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர்தான் இந்த மெயிலை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. கிஷ்த்வார் பகுதியில் ஹூஜி அமைப்புடன் தொடர்புடையவர்கள் பலர் உள்ளனர். 2005ம் ஆண்டு அயோத்தியில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு முக்கியக் காரணமான நபர் கிஷ்த்வாரில்தான் போலீஸார் நடத்திய வேட்டையின்போது கொல்லப்பட்டார். இதன் காரணமாக கிஷ்த்வார் பகுதியில் ஹூஜி அமைப்புடன் தொடர்புடையவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். அப்சல் குருவைத் தூக்கிலிடக் கூடாது என்று எச்சரிக்கவே இந்த குண்டுவெடிப்பை நடத்தினோம் என்று முன்னதாக ஹூஜி மெயிலில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரமும், இஸ்லாமிய தீவிரவாதமும், ஜிஹாதும், குண்டுவெடிப்புகளும்:  உள்துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு காலம் இந்தியாவில் எங்குமே குண்டுவெடிக்காத நிலையை உருவாக்கி வைத்திருந்தார் என்று சில ஊடகங்கள்[3] கூறினாலும்,  ஜூலை 14ம் தேதியன்று மும்பையில் மூன்று இடங்களில் பலத்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்து 21 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வழக்கம் போல, “நாங்கள் அதை செய்தோம், இதை செய்தோம் என்று சொன்னதோடு சரி”. காஷ்மீரத்தில் வளர்ந்து விட்டுள்ள ஜிஹாத்-இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்காமல், மெத்தகப் போக்கைக் கடைபிடித்து வந்து, இந்தியாவிற்கு பல வகைகளில் பிரச்சினைகளை காங்கிரஸ் வளர்த்தூள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முதலியவை கேலிகூத்தாகி விட்டது.

குண்டு வெடிக்கும் போதெல்லாம் அயல்நாடு சென்றுவிடும் மன்மோஹன் சிங்: ஜிஹாதிகள் குண்டு வெடிக்கும் போதெல்லாம், மன் மோஹன் சிங் அயல்நாட்டிற்குச் சென்று விடுவார், அங்கிருந்து வீராப்பாக அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார். இதேபொலத்தான் இப்பொழுதும், வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது, அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை நசுக்க வேண்டும், நாட்டு மக்கள் அனைவரும் அமைதியுடனும், பொறுமையுடனும் இருந்த இந்த சவாலை சந்திக்க வேண்டும் என்று பேசியுள்ளார், குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்[4].

காங்கிரஸ் கவர்னரை அடுத்து, குஜராத் தலைநகர் அகமதாபாத்தை தாக்கப் போவதாக இ-மெயில் மிரட்டுகிறதாம்[5]: இந்நிலையில் 3-வது இமெயில் வந்தவுடன் அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அனுப்பிய இரண்டாவது இமெயிலில் வரும் 13-ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் முன்பு குண்டு வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நியூமெரிக்கல் கோட் வடிவத்தில் வந்துள்ள இமெயிலில் அகமதாபாத்தை குறிவைத்திருப்பதாக வந்துள்ளது. ஆக ஜிஹாதி தீவிரவாதிகள், சோனியா காங்கிரஸுடன் சேர்ந்தே வேலை செய்வது போல உள்ளது.

08-09-2011 (வியாழக் கிழமை) மதவாத மசோதா, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில், குண்டு வெடிப்பு: குண்டு வெடித்த அடுத்த நாளே, சோனியா இந்தியாவிற்கு வந்து விட்டாராம். ஒரு மாத காலம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று நாடு திரும்பினார்..டில்லி வந்திறங்கிய சோனியாவுடன், அவரது மகள் பிரியங்கா வதோராவும் வந்தார். கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதியன்று உடல்நலக்குறைவால் அவதியுற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா சிகிச்சைக்கா அமெரிக்கா சென்றார். ஒரு மாத காலம் நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்றுவந்தார்.அதுவரை காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பினை ராகுல், அகமதுபடேல், அந்தோணி உள்ளிட்டோரிடம் ஒப்படைத்தார். தற்போது குணமடைந்துவிட்டதால். நாடு திரும்ப முடிவு செய்தார். இந்நிலையில் 08-09-2011 அன்று அதிகாலை 3 மணியளவில் இந்தியா வந்ததாக செய்திகள் கூறுகின்றன[6].

09-09-2011 (வெள்ளிக் கிழமை): உடனே தேசிய ஒருமைப்பாடு குழு, மதவாத கலவர மசோதா என்று ஆரம்பித்துவிட்டது. உத்திரபிரதேசத்தில் தேர்தல் வருவதால், முஸ்லீம்களை தாஜா செய்வதற்காகத்தான், இந்த மசோதாவை அறிமுகப்படுத்திறார்கள்[7] என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக விவாதத்தில் உள்ளது. இந்நிலையில் தான் குண்டுவெடிப்பில், ஸ்விடசைக் கண்டு பிடித்தோம், ஆனால் டைமரைக் காணோம்[8], போனை கண்டு பிடித்தோம், ஆனால் அது குண்டுவெடிப்பில் பரிதாபமாக இறந்தவருடையது என்றெல்லாம் கேவலமாக போலீஸார் சொல்லி வருகின்றனர்[9].

காஷ்மீரை மையமாக வைத்து வளர்ந்து வரும் ஜிஹாதி குண்டு வெடிப்புகள்: பிரிவினைவாதிகள், மனித உரிமைகள் பெயரில் அவ்வப்போது கவனத்தைத் திருப்பி, ஜிஹாதிகளுக்கு சாதகமாக வேலை செய்து வருவதால் தான், காஷ்மீர், ஜிஹாதியின் தலைநகராகி விட்டது. ஜிஹாதிகளுக்கு போத மருந்து, செக்ஸ் எல்லாம் கொடுத்து, தீவிரவாத பயிற்சியினையும் கொடுத்து அனுப்புகிறது. இப்பொழுது, அங்கு குண்டுகளையும் தயாரிக்கிறது என்று தெரிகிறது[10].

 

அம்மோனியம் நைட்ரேட்டும், பி.எ.டி.என்.னும், ஜிஹாதி தொழிற்நுட்பமும்: முன்பே பல அறிக்கைகளில், ஜிஹாதிகளின் குண்டு வெடிப்பு தொழிற்நுட்பங்கள், அவற்றிற்கு வேண்டிய மூலப் பொருட்கள், அவற்றை வாங்கி சேகரித்து வைக்கும் வியாபாரிகள், ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மாற்றுதல் / கடத்துதல், அத்தகைய “சாதாராண முஸ்லீம்கள்” தெரிந்தே குண்டுவெடிப்பு ஜிஹாதிகளுக்கு உதவி வருதல் முதலியற்றை எடுத்துக் காட்டப் பட்டன. இப்பொழுது, மறுபடியும் அத்தகைய விவாதம் வந்துள்ளது. PETN (Penta-erythritol Trinitrate) என்ற ரசாயனப் பொருள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது[11]. காஷ்மீர் ஜிஹாதிகளுக்கு இதுதான் பிடித்தமான குண்டுவெடிப்பு மூலப் பொருளாம்[12]. ஏற்கெனவே லஸ்கர்-இ-தொய்பா, ஹிஜ்புல் முஜாஹித்தீன், அல்-குவைதா போன்ற ஜிஹாதி அமைப்புகளுக்கு, இது மிகவும் பிடித்தப் பொருளாக இருந்து வருகிறது[13]. முதுகல் சகோதர்கள் இந்த ரசாயன குண்டு தயாரிப்புகளில் வல்லவர்கள். அவர்கள் கெமிக்கல் இஞ்ஜினியரிங் படித்தது மட்டுமல்லாமல், மற்ற இளைஞர்களையும் ஊக்குவித்து, படிக்க வைத்து, தொழிற்சாலைகளை வைத்து, அதற்காக ரசாயனப் பொருருட்கள் வேண்டும் என்று இறக்குமதி செய்து, வாங்கி, சேகரித்து வைத்து விநியோகம் செய்து வருகின்றனர். பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட் எல்லா சோதனைகளையும் ஏமாற்றி விடும், கண்டு பிடிக்க முடியாது என்று அறிந்துதான், இதை தேர்ந்தெடுத்து உபயோகப்படுத்துகின்றனர்[14]. ஆனால், சோனியா காங்கிரஸின் அடக்குமுறையில், போலீஸார் மற்ற உளவு நிறுவனங்கள், இந்த விஷயங்களில் செயல்பட முடியாத நிலையில் இருக்கின்றனர். அரசியல் முஸ்லீம்களை முஸ்லீம்களாகவே பார்த்து, ஓட்டு வங்கி சிதறிவிடும், ஆட்சி போய்விடும், கிடைக்கின்ற அனைத்துலக வசதிகள் போய்விடும் என்ற காரணங்களுக்காக, ஜிஹாதிகளையும், இஸ்லாமிய தீவிரவாதிகளையும் “முஸ்லீம்களாகவே” பார்க்கின்றனர். இங்குதான், இந்த போலித்தனமான அரசியல்வாதிகளும், முஸ்லீம்களும் ஏமாந்து விடுகின்றனர். இதனால் அத்தகைய வெடிப்பொருட்கள், ரசாயனங்கள் முதலியவற்றை விற்பது-வாங்குவது முதலியவற்றையும் கட்டுப்படுத்தாமல், சோனியா காங்கிரஸ் அரசு இருந்து வருகிறது[15]. பென்டா எரித்ரிடோல் டிரைநைட்ரேட்டை இறக்குமதி செய்பவர்கள், வாங்குபவர்கள்[16], உபயோகிப்பவர்க்ளை[17] விசாரித்தால், இந்த “நெட்வொர்க்கை”ப் பிடுத்துவிடலாம்.

வேதபிரகாஷ்

11-09-2011


[1] Rafiq Zakaria, The Struggle within Islam – the conflict between religion and politics, Viking, New Delhi, 1988.

[10] In the Mumbai serial bombings ammonium nitrate with traces of PETN mixed with fuel oil and a detonator were used in the three blasts, which, sources said, was a “trademark” IM explosive. However, in the Delhi blast the bomb was made up primarily of PETN with traces of ammonium nitrate. Interestingly, PETN is used heavily by militant outfits operating in the Kashmir Valley. “This clearly proves that IM is not alone in these operations. They are being assisted and backed by a Kashmir terror outfit, which, in all probability, could be the Lashkar-e-Tayyaba, though HuJI is also under the scanner,” a source said. Sources confirmed that a switch had been found at the blast site.

http://www.deccanchronicle.com/channels/nation/north/delhi-blast-bomb-makeup-shows-jk-outfit-hand-907

[12] PETN, which has become popular over the years because it does not get easily detected, is not used in isolation but is laced with more volatile explosives like Ammonium Nitrate or Potassium Nitrate to increase the intensity of the blast. The chemical normally used as vasodilator in the medical field gained notoriety in India between 2003-05 when militants in Jammu and Kashmir used it in many of their attacks with most deadly being a car bombing in Pattan, North Kashmir in 2003. In 2010 blast in Varanasi also the use of PETN was suspected by investigative agencies.

[14] PETN is one of the most powerful explosives and is difficult to detect. Because of its plastic nature, the explosive can easily pass metal detectors. Even bomb-sniffing dogs cannot detect it because of its low pressure molecules. The explosive allows terrorists to use only small quantities for causing enormous damage. Even 100 grams of PETN is enough to blast away a car.