Posted tagged ‘பெண்கள்’

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது – யதீம் கானா அதிகாரிகளின் தொடர்பு!

மார்ச் 16, 2017

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது – யதீம் கானா அதிகாரிகளின் தொடர்பு!

girls-raped-at-muslim-orphanage-07-03-2017

அனைத்துலக பெண்கள் தினத்திற்கு முன்னர் கற்பழிப்பு விவகாரம் வெளிவருவது:  மார்ச்.8 அனைத்துலக பெண்கள் தினம் என்ற நிலையில் 07-03-2017 அன்று வயநாடு, யதீம் கானாவில் உள்ள முஸ்லிம் அனாதை இல்லத்து டீன் – ஏஜ் பெண்கள் கற்பழிக்கப் பட்ட செய்தி வந்துள்ளது. பெரிய இடத்து புள்ளிகள், அதிலும் முஸ்லிம்கள் சமந்தப்பட்டிருப்பதால், உடனடியாக பெண்கள் மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைத்து, முடிவுகள் பெறப்பட்டுள்ளன[1]. வெளியாட்கள் எப்படி அந்த அனாதை இல்லத்து 15-17 வயது பெண்களை சாக்லெட், மிட்டாய் கொடுத்து கற்பழிக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது[2]. பாலியல் வன்முறையில் இருந்து பெண்கள், சிறுமிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை மத்திய, மாநில அரசுக்கள் தரப்பில் எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து வன்முறை தாக்குதல் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கேரள மாநிலத்தில் ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

wayanad-muslim-orphanage-muttil-google-map

வயநாடு முஸ்லிம் ஹார்பனேஜ் – யதீம் கானா: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கால்பேட்டாவின் முட்டில் பகுதியில் உள்ள முஸ்லிம் அமைப்பு நடத்தும்ஆதரவற்றோர் விடுதியில் 14-15 வயதுகள் கொண்ட 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  வயநாடு முஸ்லிம் ஹார்பனேஜ் [Wayanad Muslim Orphanage Muttil, WMO[3]] 1967ல் தொடங்கப்பட்டது. முன்னரே பல்வேறு நிதிமோசடிகளில் சம்பந்தப் பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து நிதி பெறும் இது, பலவிதமான வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளது. கடவுளின் சொந்தமான தேசம் என்று பீழ்த்திக் கொள்ளும், இந்த கேரள மாநிலம், இவ்வாறு அடிக்கடி பாலியல், செக்ஸ் குற்றங்கள், கற்பழிப்புகள் முதலியன தொடர்ந்து நடந்து வருவது திகிலடையச் செய்வதாக இருக்கிறது[4]. இங்கு 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் உள்ளனர்.

 medical-report-confirms-rape-of-students-of-yateen-khana

கேரள முஸ்லிம் அனாதை இல்லத்து இளம்பெண்கள் மூன்று மாதங்களாக கற்பழிக்கப்பட்டு வருவதால் ஏழு இளைஞர்கள் கைது: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவிகளில் ஒருவர் விடுதிக்கு அருகே உள்ள கடையில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் வெளியே வந்து உள்ளார். அப்போது விடுதியை சேர்ந்த பாதுகாவலர் அவரிடம் விசாரித்து உள்ளார். விசாரணையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறுமிகள் ஆசைவார்த்தை கூறப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரியவந்து உள்ளது[5]. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 6, 7 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வரும் போலீசார் இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை[6]. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாலியல் பலாத்காரங்கள் தொடர்பாக எந்த ஒரு முழு தகவல்களும் இதுவரையில் வெளியாகவில்லை. இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமி பாதிரியாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

rape-in-kerala

சாக்லேட், மிட்டாய் கொடுத்து கற்பழிக்க முடியுமா?: விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் சிறுமிகள் பள்ளிக்கு சென்றபோது அவர்களை வழிமறித்து இனிப்புகளை வழங்கி உள்ளனர் மற்றும் அவர்களுக்கு செல்போனில் ஆபாச பாடங்களை பார்க்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இதனை வெளியே கூறினால் கடும் விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என மிரட்டிஉள்ளனர் என புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் அந்த பகுதி போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அந்த பெட்டிக் கடைக்காரரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது, மொத்தம் 7  சிறுமிகளுக்கு மயக்க மருந்து கலக்கப்பட்டிருக்கும் சாக்லேட் கொடுத்து, மயக்கமடைந்த பின்பு அவர் காம லீலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதோடு, அந்த 7 சிறுமிகளையும் தனது நண்பர்கள் சிலருக்கும் அவர் விருந்தாக்கியது தெரிய வந்ததும் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்[7].

yateen-khana-rape-persons-close-to-management-among-the-accused

வழக்கு பதிவு செய்யப் பட்டது: இதெல்லாம் ஜனவரி 2017லிருந்து நடந்து வருகின்றது. இதையடுத்து அவரின் நண்பர்கள் சிலரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.  சில சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியும், சில சிறுமிகளை ஆபாசமாக செல்போனில் புகைப்படம் எடுத்து மிரட்டியும் பல மாதங்களாக அவர் அந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது[8]. சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தை கொண்டு  குற்றத்தில் ஈடுப்பட்ட 6 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்[9]. குழந்தைகளுக்கான பாலியல் குற்றம் தடுப்பு சட்டம் [the Protection of Children from Sexual Offences Act (POCSO) act] உட்பட 11 பிரிவுகளின் கீழ் இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[10]. இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிறுமிகளுக்கு கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களின் விவரத்தை போலீசார் வெளியிடவில்லை[11]. இந்த சம்பவம் தொடர்பாக வயநாடு எஸ்.பி. ராஜ்பால் மீனா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்[12].

 rape-in-kerala-a-woman-is-raped-in-every-6-hours

மெத்தப்படித்த மாநிலத்தில், இவ்வாறு நடப்பது எப்படி?: யதீம் கானா கற்பழிப்பில், அந்த அனாதை இல்லத்து நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களே சம்பந்தப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது[13]. அனாதை இல்லங்கள், பள்ளிகள்-கல்லூரிகள், வியாபார நிறுவனங்கள் என்பதோடு, அரசியல் தொடர்புகளும் இருப்பதால், முதலில் போலீசார் தயங்கினர். பெயர்களைக் கூட வெளியிடவில்லை. ஹாஸ்டலில் இருப்பவர்கள் இதில் சம்பந்தப் பட்டிருப்பதும் தெரிகிறது. இப்பொழுது கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் உள்ளதால், பத்து நாட்கள் இடைவெளியில் இவ்வாறு கிருத்துவ மற்றும் முஸ்லிம் மதத்து மடாலயங்கள், சாமியார்கள் என்று பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது, எல்லோரையும் கலங்க வைத்துள்ளது. முழுக்க அரசியல்வாதிகள் இப்பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளது, வெளிவந்துள்ள விவகாரங்களை விட மறைக்கப் பட்டவை அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஒரு பக்கம் கொலைகள், இன்னொரு பக்கம் இப்படி கற்பழிப்புகள் என்று அசிங்கப்படுகிறது. கேரளாவில் ஆறு மணி நேரத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள் என்று புள்ளி விவரங்கள் கொடுக்கப் படுவது, அதைவிட கேவலமாக இருக்கிறது. மேலும் கேரளா எழுத-படிக்கும் கல்வியறிவில் இந்தியாவில் முதன்மையாக இருக்கிறது. பிறகு, அத்தகைய மெத்தப் படித்தவர்கள், எவ்வாறு இத்தகைய ஆபாசமான, பாலியல், கொக்கோகங்களில் ஈடுபட முடியும்? உலக நாடுகளுக்கு நர்சுகளையும், கன்னியாஸ்திரிக்களையும் ஏற்றுமதி செய்கிறது என்ற பெருமையும் கொண்டுள்ளது கேரளா.

© வேதபிரகாஷ்

16-03-2017.

rape-in-kerala-a-woman-is-raped-in-every-6-hours-gods-own

[1] Mathrubhumi, Girls in Wayanad orphanage sexually abused: report, Published: Mar 7, 2017, 08:43 AM IST

[2] http://english.mathrubhumi.com/news/kerala/girls-in-wayanad-orphanage-sexually-abused-report-kerala-crime-news-1.1780392

[3] http://www.wmomuttil.org/contact/

[4]  Though, the media mentions it as “Yatheem Khana at Muttil in Kalpetta”, it has been pointed out specifically as the one that has been there started in 1967 and involved in financial irregularities earlier. As the WMO has many orphanages, educational institutions, commercial ventures, and other interests with political patronage and gulf-connerction, probably, the identity has been suppressed. Kerala has been ‘the God own country” and any God can do anything and ordinary men, particularly, secular Indians cannot ask anything. Now, ironically, the Communists have been ruling such “God owned country” and none knows what would happen there in coming days.

[5] தினத்தந்தி, ஆதரவற்றோர் விடுதியில் 2 மாதங்களாக 7 சிறுமிகள் பாலியல் பலாத்காரம், மார்ச் 07, 11:07 AM.

[6] http://www.dailythanthi.com/News/India/2017/03/07110737/7-minor-girls-in-Kerala-orphanage-raped-for-2-months.vpf

[7] வெப்துனியா, ஏழு சிறுமிகளை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காம கொடூரன்அதிர்ச்சி செய்தி, Last Modified: புதன், 8 மார்ச் 2017 (15:48 IST)

[8] http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/seven-girls-molested-in-kerala-man-arrested-117030800028_1.html

[9] தினமலர், கேரளாவில் ஆதரவற்றோர் இல்ல சிறுமிகள் பாலியல் பலாத்காரம் – 7 பேர் கைது, 07 மார்ச் 2017, 06:33 PM.

[10] http://www.dinamalarnellai.com/cinema/news/23902

[11] தினகரன், கேரள காப்பகத்தில் 7 சிறுமிகள் பலாத்காரம்: 6 வாலிபர்கள் சிக்கினர், 2017-03-08@ 00:39:27.

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=285339

[13] Kamudi.com, Yateem Khana rape: Persons close to management among accused, Posted on :15:06:31 Mar 7, 2017,  Last edited on:15:06:31 Mar 7, 2017

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!

ஜனவரி 18, 2017

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!

madras-high-court-bans-sharia-court-woman-position

2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய தலாக் சான்றிதழ்கள் முறையற்றவை: அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இஸ்லாமிய தனி நபர் சட்டத்தின்படி திருமணமான ஆண் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது என்றும், ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்கிவிட்டால் அதுவே இறுதி முடிவாக எடுத்து கொள்ளப்படுவதாகவும் அதில் கூறியிருந்தார். இந்த முஸ்லிம் நடைமுறையானது பெண்களுக்கு எதிரானது என்றும், ஹாஜிக்கள் வழங்கும் சான்றிதழ் வெறும் பரிந்துரையே தவிர அது இறுதி முடிவல்ல என்றும் பதர் சயீத் தெரிவித்திருந்தார்[1]. மேலும், 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய பரிந்துரை சான்றிதழ்களில் சிலவற்றை நீதிமன்றத்தில் சமர்பித்த பதர் சயீத் தரப்பு, ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரைத்து சான்றிதழ் வழங்கியது, சம்பந்தப்பட்ட பல பெண்களுக்கு தெரியாது என்றும், இந்த நடைமுறையின் போது பெண்கள் ஆஜராகவில்லை என்றாலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது[2].

muslim-women-divorce-act-1986பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது: வழக்கம்போல, பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது கவனிக்கத்தக்கது. சாதாரணமான விசயங்களுக்கு எல்லாம் போராட்டம் என்றெல்லாம் புறப்படும் வீராங்கனைகள் எங்கோ பதுங்கி விட்டது போலத் தெரிகிறது. ரத்தம் சொரிவோம், ஐயப்பன் கோவிலில் நுழைவோம் என்றெல்லாம் புறப்பட்ட பெண்ணுருமை போராளிகளையும் காணோம். முஸ்லிம்கள் விவகாரம் என்றாலே, அவ்வாறு ஒளிந்து கொள்வார்கள் போலும். ஷாபானு விசயத்தில் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் கால்களை உடைப்போம் என்ற தில்லி இமாம், சட்டத்தை மாற்றி, புதிய சட்டத்தை எடுத்து வந்த விதம், வயதான ஷாபானு இறந்த பிறகும், கண்டுகொள்ளாமல் இருந்தது முதலியன மறந்து விட்டார்கள் போலும், இல்லை நமக்கேன் வம்பு பயந்து செக்யூலரிஸத் தனமாக ஒதுங்கி விட்டார்களோ என்று தெரியவில்லை. அது அவர்களது உள்-விவகாரம் என்றும் நாஜுக்காக சொல்லி அமைதியாக இருந்து விடலாம்.

muslim-women-protection-divorce-act-1986சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்: தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய காஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவிகளை மூன்று முறை, ‛தலாக்’ கூறி, விவகாரத்து செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி இருந்தார்[3]. இந்த மனு இன்று, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜிக்கள் பிப்., 21 2017 வரை, தலாக் சான்றிதழ் வழங்க தடை விதித்தனர்[4]. மேலும், இந்த சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்[5]. இந்த வழக்கு விசாரணை பிப்.,21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது[6].

திருமணம் என்னும் நிக்காஹ்.3

திருமணம் என்னும் நிக்காஹ்.3

முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ்ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும்: 1980ம் ஆண்டு ஹாஜிகளுக்கான சட்டத்தில் அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருப்பதாக நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுந்தரேஷ் தெரிவித்தனர்[7]. அந்த விதிகளின்படி தலாக் கூறி விவாகரத்து வழங்க ஹாஜிகளுக்கு உரிமை இல்லை என அவர்கள் கூறினர்[8]. முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ், ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும் என்றும், உத்தரவிடமுடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்[9]. இதையடுத்து இந்த வழக்கில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹாஜிகளுக்காக உரிமைகள் குறித்து புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்[10].

badar-syedநீதிபதியின் உத்தரவில் சொல்லப்பட்டிருப்பது[11]: “ஹாஜிகளுக்கு எந்த அளவு சட்டஉரிமை இருக்கிறது என்பது முஸ்லீம் ஹாஜி சட்டம் 1880 பிரிவு 4 இல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவருக்கு மதச் சடங்கு செய்யும் உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே ஹாஜிகளுக்கு எந்த விதசட்டரீதியான உத்தரவும் பிறப் பிக்க உரிமையில்லை. முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தலாக்சான்றிதழில் மாற்றம் கொண்டுவரப்போவதாகத் தெரிவித்துள் ளது. எனவே இது தொடர்பான அடுத்த உத்தரவு வரும் வரை ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்கால தடை விதிக்கிறோம். மேலும், ஹாஜிக்கள் வழங்கும் தலாக் சான்றிதழ்களுக்கு எந்த விதமான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான உரிமையில்லை என்றும், அது ஹாஜிக்களின் தனிப்பட்ட கருத்தாகவே கருதப்படும் என்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் உயர்நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெறும்”, இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. இதைப்பற்றி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், “மணிச்சுடர்” கூறுவது, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

badar-syed-with-jayaகாஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்![13]: சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கீழ்க்கண்டவாறு அறிவித்திருக்கிறது.

  1. முதலாவதாக, தமிழ்நாடு தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜிகள்) யாருக்கும் தலாக் பற்றி சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரமில்லை.
  2. இரண்டாவதாக, 1997 முதல் 2015 வரை தமிழ்நாடு தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களில் தலாக் என்னும் விவாகரத்து ஏற்பட்டதற்குரிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்டிருக்கிறது.
  3. மூன்றாவதாக, வரும் பிப்ரவரி 21-ந்தேதி வரை தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களை தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களோ, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளோ சான்றிதழ்களாக அங்கீகரிக்கத் தேவையில்லை என்று உயர்நீதி மன்ற பதிவாளர் அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தீர்ப்பின் வாசகங்களை பார்க்கும் போது தலைமை காஜி மற்றும் துணை காஜிகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளன. உண்மை நிலை அதுவல்ல. ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. அதே சட்டத்தின் அடிப்படையில்தான் இன்றும் காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். தலைமை காஜி, தங்களிடம் கொண்டு வரப்படும் ‘தலாக்’ போன்ற மார்க்க விவகாரங்களுக்கு பத்வா என்றும், தனது கருத்தை எழுத்து மூலம் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

 

© வேதபிரகாஷ்

18-01-2017

badar-syed-talaq-case

 

[1] பிபிசி, தமிழகம் : ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை, ஜனவரி.11, 2017.

[2] http://www.bbc.com/tamil/india-38593266

[3] தினமலர், தலாக்சான்றிதழ் வழங்க தடை, பதிவு செய்த நாள். ஜனவரி.11, 2017.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1688593

[5] தினகரன், தமிழகம் முழுவதும் தலாக் சான்று வழங்க ஹாஜிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை, 2017-01-11@ 17:30:14

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=271858

[7] புதியதலைமுறை, தலாக் கூறி விவாகரத்து வழங்கும் உரிமை ஹாஜிகளுக்கு இல்லை..நீதிமன்றம், பதிவு செய்த நாள் : January 11, 2017 – 07:57 PM; மாற்றம் செய்த நாள் : January 11, 2017 – 09:46 PM.

[8] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/75692/madras-high-court-says-haji-has-no-right-to-provide-grounds-for-divorce

[9] நியூஸ்.7.செனல், இஸ்லாமிய ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்காலத் தடை!, January 11, 2017

[10] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/11/1/2017/high-court-ordered-not-issue-talaq-certificate-muslim-haji

[11] தீக்கதிர், தலாக் முறைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, January 11, 2017.

[12]https://theekkathir.in/2017/01/11/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/

[13] மணிச்சுடர், காஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, Friday, January 12, 2007.

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது!

திசெம்பர் 21, 2016

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது!

dinakaran-madras-high-court-to-ban-shariat-court

தலாக், தலாக், தலாக்விசயத்தில் வழக்கு: கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிபாட்டு தலமாக இருந்தாலும், அவை வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும் என்று சென்னை ஐகோர்ட்டு 20-12-2016 திஙட்கிழமை அன்று உத்தரவிட்டுள்ளது, என்று தமிழ் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டாலும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை [ illegal ‘sharia courts’ functioning from various mosques across Tamil Nadu], சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது என்று ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன[1]. தினகரன் மட்டும் தான் “ஷரியத் கவுன்சில் கட்டப்பஞ்சாயத்து செய்தால் போலீஸ் தடுக்க வேண்டும் : நீதிமன்றம் உத்தரவு” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[2]. மேலும் நான்கு வாரங்களில் செயபடுத்திய விவரங்களை தாக்கல் செய்யுமாறு ஆணையிட்டது[3]. ஷரீயத் போல, மத சட்டங்களின் அடிப்படையில், நீதிமன்றம் போன்று கோவில்களில் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்வதில்லை. இருப்பினும் செக்யூலரிஸ முறையில் நீதிபதிகள் அவ்வாறு சொல்லியிருப்பது தெரிகிறது.

dinamalar-madras-hingh-court-about-sharia-court-20_12_2016_005_005

முகமதிய பெண்களும் மாறி வருவது தெரிகிறது: சமீப காலத்தில் முஸ்லிம் பெண்கள் “தலாக், தலாக், தலாக்”     என்று மூன்று முறை வாயால் கூறி, விவாகரத்து செய்யும் முறையை எதிர்த்து வருகின்றனர். ஏனெனில், பெரும்பாலும், முகமதிய ஆண்கள் இந்த நவீன காலத்தில், போன், செல்போன், ஈ-மெயில் போன்ற முறைகளிலும் அத்தகைய  “தலாக்” செய்து வருகின்றனர். காரணம் இல்லாமல், பல பெண்களுடன் வாழ வேண்டும் போன்ற நோக்கில் செயல்படும் ஆண்களும் இருக்கிறார்கள். அதற்காக இந்துக்களில் சிலர் மதம் மாறியுள்ளார்கள். ராஜிவ் காந்தி ஆட்சியில், “ஷாபானு” வழக்கில் மெத்தனமாக இருந்ததால், இப்பிரச்சினை பெரிதாகியுள்ளது. இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத வழக்கத்தை, செக்யூலரிஸப் போர்வையில் இந்தியாவில் இத்தகைய இடைக்கால, ஒவ்வாத பழக்க-வழக்கங்களை இந்தியாவில் ஏற்றுக் கொண்டுள்ளதை, முகமதிய பெண்களே சமீபகாலத்தில் எடுத்துக் காட்டி, எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். பலதார முறை இருந்தாலும், பெரும்பாலான முகமதிய பெண்கள், ஒரு ஆண் – ஒரு பெண் என்ற நியதியை விரும்புகிறார்கள். படித்தவர்கள் அவ்வாறே கடைப்பிடிக்கிறார்கள். இருப்பினும் அடிப்படைவாதிகள் மதவாத அச்சுருத்தல்களுடன், சமூகத்தை மிரட்டி வருகிறார்கள்.

mont-rosd-mosque-shariat-council

சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலை எதிர்த்து வழக்கு: சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் அப்துர் ரஹ்மான். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது[4]: “நான் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றினேன். என்னுடைய மனைவி என்னை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார். அவரை சேர்த்து வைக்கும்படி சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலில் [Makka Masjid Shariat Council] முறையிட்டேன். ஆனால், அவர்கள் என்னை மிரட்டி எனது மனைவியை விவகாரத்து செய்து விட்டதாக என்னிடம் கையெழுத்து வாங்கி கொண்டு, என்னை அனுப்பி விட்டனர். என்னைப் போல பலர் இதுபோல பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் பல இடங்களில் சட்டத்திற்கு விரோதமாக ஷரியத் நீதிமன்றம் என்ற பெயரில் முஸ்லிம் ஜமாஅத்களில் குடும்ப பிரச்சினைகளை விசாரிக்கின்றனர். இவ்வாறு ஜமாஅத்களில் நீதிமன்றம் நடத்துவதற்கு சட்டப்படியான அங்கீகாரம் உள்ளது என்றும், முஸ்லிம் மக்கள் தங்களது பிரச்சினைகளை தங்களது ஷரியத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் எனவும் ஜமாத்தார்கள் கூறி வருகின்றனர்.” சென்னை அண்ணா சாலையில் அத்தகைய ஷரீயத் கோர்ட் இருப்பதே யாருக்கும் தெரியாது எனலாம். ஹெரிந்திருந்தாலும், முகமதியர் விவகாரங்கள் என்று கண்டு கொள்ளாமலும் இருந்திருக்கலாம்.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-toi

ஜமாஅத்களில் தம்பதிகளுக்கு விவாகரத்துகள் மனம்போன போக்கில் ஒரு தலைபட்சமாக வழங்கப்படுவதால் பெண்களுக்கு பாதிப்பு: அப்துர் ரஹ்மான் மேலும் கூறியிருப்பது[5], “இந்த ஜமாஅத்களில் தம்பதிகளுக்கு விவாகரத்துகள் மனம்போன போக்கில் ஒரு தலைபட்சமாக வழங்கப்படுகின்றன. சொத்துப் பிரச்சினைகளிலும் இவர்கள் தான் தீர்ப்பு வழங்குகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான பெண்கள் தங்களின் வறுமை காரணமாக இந்த தீர்ப்புகளை எதிர்த்து நீதிமன்றங்களை நாடுவதில்லை. ஆகவே ஜமாஅத்களில் இதுபோன்ற கட்ட பஞ்சாயத்து நீதிமன்றங்கள் செயல்படுவதை தடை செய்ய வேண்டும்,”  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது[6]. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது. முதன்முதலாக இப்பிரச்சினை கோர்ட்டுக்குச் சென்று, இவ்வாறு வெளி வந்திருப்பது தெரிகிறது. பொதுவாக முகமதியர், இத்தகைய விவகாரங்களை, வெளியே வராமல் அமுக்கி விடுவார்கள். ஜமாத்தை மீறி செயல்படுவதை ஒதுக்கி வைப்பது, மிரட்டுவது, தீர்த்துக் கட்டுவது போன்ற நிலைகளும் உள்ளன.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-hindusthan-times

விவாக ரத்து செய்த தம்பதியரிடம் கருத்து வேறுபாடு: இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் கமிஷனர் சார்பில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பி.பெருமாள் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது[7]: “மனுதாரருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2013–ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனுதாரர் அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலில் புகார் செய்துள்ளார். அந்த கவுன்சிலின் பொதுச் செயலாளர், இருவரையும் சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறியுள்ளார். இதற்காக இருவருக்கும் கவுன்சிலிங்கும் நடந்துள்ளது.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-financial-express

மறு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்: போலீஸ் தரப்பு மனுவில் கூறியிருப்பது தொடர்கிறது[8], “இதன்பின்னர் மனுதாரர் முஸ்லிம் சட்டம் மற்றும் பழக்க வழக்கத்தின் அடிப்படையில், அவரது மனைவியிடம்தலாக்சொல்லியுள்ளார். அவரது மனைவியும் அதை ஏற்றுக் கொண்டார். இந்த விவாகரத்து பெரியவர்கள் முன்னிலையில் தான் நடந்துள்ளது. இதன்பின்னர் மனுதாரரின் புகார் முடித்து வைக்கப்பட்டு விட்டது. இதன்பின்னர் மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மனுதாரர் குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 19–ந் தேதி குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மனைவியிடம் விவாகரத்து கேட்டு மற்றொரு வழக்கும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில் இந்த இரு வழக்குகளும் நிலுவையில் இருக்கும்போது, மனுதாரரை விவாகரத்து செய்த பெண், வேறு ஒருவரை மறுதிருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த அக்டோபர் 27–ந் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.”

 

© வேதபிரகாஷ்

21-12-2016

ஷா பானு வழக்கு

[1] Times of India, Madras high court bans unauthorised ‘Sharia courts’, A Subramani| TNN | Updated: Dec 20, 2016, 07.02 AM IST.

[2] தினகரன், ஷரியத் கவுன்சில் கட்டப்பஞ்சாயத்து செய்தால் போலீஸ் தடுக்க வேண்டும் : நீதிமன்றம் உத்தரவு, Date: 2016-12-19 15:44:48

http://www.dinakaran.com/latest_detail.asp?Nid=266694

[3] http://timesofindia.indiatimes.com/city/chennai/madras-hc-bans-sharia-courts/articleshow/56061972.cms

[4] தினத்தந்தி, கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வழிபாட்டை தவிர வேறு செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமை; ஐகோர்ட்டு உத்தரவு, பதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 20,2016, 7:28 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், டிசம்பர் 21,2016, 1:15 AM IST.

[5] தினமணி, வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை தவிர்த்து வேறு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, Published on : 20th December 2016 03:58 AM

[6] http://www.dailythanthi.com/News/State/2016/12/20192814/Temples-churches-mosques-participate-in-acts-of-worship.vpf

[7]http://www.dinamani.com/tamilnadu/2016/dec/20/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-2618328.html

[8] தமிழ்.இந்து, மத வழிபாட்டுத் தலங்களில் சட்டவிரோத நீதிமன்றம் செயல்படுவதை ஏற்க முடியாது: போலீஸார் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு, Published: December 20, 2016 08:17 ISTUpdated: December 20, 2016 08:18 IST

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (2

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (2)

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

விவாகரத்து வேண்டும் என்று கேட்ட பவித்ரா[1]: தனது மனைவியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை பழனி தாக்கல் செய்தார். இதனால், தனிப் படை அமைத்து பவித்ராவை போலீஸார் தேடினர். அம்பத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பவித்ராவை மீட்டனர். இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு பவித்ரா நேற்று ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் நடந்த விசாரணை வருமாறு[2]:

நீதிபதிகள்: நீ தான் பவித்ராவா?

பவித்ரா: ஆமாம், நான்தான் பவித்ரா.

நீதிபதிகள்: நீ யாருடன் செல்ல விரும்புகிறாய். பெற்றோருடனா அல்லது கணவருடனா?

பவித்ரா: பெற்றோருடன் செல்ல விரும்புகிறேன். ஆனால், எனக்கு விவாகரத்து வேண்டும். ‘என் கணவரிடம் இருந்து என் பெற்றோர் விவாகரத்து வாங்கித்தர வேண்டும்’ என்றும் நீதிபதியிடம் அவர் கூறினார்.

நீதிபதிகள், ‘உன்னுடைய பெற்றோருடன் செல்கிறாயா?’ என்று கேட்டார்கள். அப்போது கோர்ட்டு அறையில் இருந்த வக்கீல் சங்கத்தலைவர் பால்கனகராஜ், ‘இந்த பெண் காணவில்லை என்ற வழக்கு விசாரணையின் தொடர் நடவடிக்கையில் தான் ஆம்பூரில் கலவரம் ஏற்பட்டது’ என்று கூறினார். இதையடுத்து நடந்த விவாதம் பின்வருமாறு:-

நீதிபதிகள்:- பத்திரிகைகளில் வெளியான செய்திகளை படித்தோம். ஷமில் அகமதுவுக்கு திருமணமாகிவிட்டது. உனக்கும் திருமணமாகிவிட்டது. கணவர், குழந்தை உள்ளனர். அப்புறம் என்ன? இப்போது அந்த வாலிபரும் இறந்துவிட்டார். அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற பிரச்சினைகளினால் தான், மதக்கலவரம், சாதிக்கலவரம் நடக்கிறது. ஏற்கனவே திருமணம் நடக்காத ஆணும், பெண்ணும் வேறு மதங்களை சார்ந்தவர்களாக இருந்தாலும், சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் இருவருக்கும் திருமணம் செய்துவைக்கலாம்[3]. ஆனால், இங்கு இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி இவர்களது திருமணத்தை ஏற்க முடியும்?  [இருவருக்கும் குழந்தைகள் உள்ளன என்ற விசயம் இங்கு வெளிப்படுகிறது. மேலும் இரு மதத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதால், இச்சட்டம் பற்றி குறிப்பிடுவது, அத்தகைய நிலை இருப்பதை அவர்கள் அறிந்துள்ளனர் என்று தெரிகிறது]

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

பிடிவாதமாக விவாகரத்து கேட்ட பவித்ரா[4]: நீதிபதிகள் எவ்வளவு அறிவுரை கூறியும், விவரங்களை எடுத்துக் கூறியும், பவித்ரா பிடிவாதமாக விவாக ரத்து வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது அனைவரையும் திகைக்க வைத்தது.

பவித்ரா:- என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

நீதிபதிகள்:- விவாகரத்து என்ன பெட்டிக்கடையில் கிடைக்கும் பொருளா? காசு கொடுத்து வாங்குவதற்கு? விவாகரத்து வேண்டும் என்றால் அதுதொடர்பாக வழக்கை தாக்கல் செய்ய வேறு நீதிமன்றம் உள்ளது. நினைத்தவுடன் விவாகரத்து கிடைத்துவிடுமா?

அரசு வக்கீல் தம்பித்துரை:- ஆம்பூரில் நடந்துள்ள கலவரத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்துகள், வாகனங்கள் நாசமாகியுள்ளன.

பால்கனகராஜ்:- இந்த வழக்கை சாதாரண ஆட்கொணர்வு மனுவாக ஐகோர்ட்டு கருதக்கூடாது. ஏன் என்றால், ஏற்கனவே திருமணமான ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது தொடர்பான பிரச்சினைக்கு தெளிவான சட்டம் இல்லை. எனவே, இந்த வழக்கை அரிதான வழக்காக கருதி, சிறப்பு கவனம் செலுத்தி இதுபோன்ற பிரச்சினைகளில் போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என்று விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ராவுக்கு நீதிபதிகள் ஆலோசனை[5]: நீதிபதிகள்:- (பவித்ராவை பார்த்து) உனக்கு கணவர், குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களுடன் சந்தோஷமாக வாழவேண்டும். தேவையில்லாத பிரச்சினை எதற்கு? உனக்கு ஷமில் அகமது தெரியுமா?

பவித்ரா:- ஒரே கம்பெனியில் வேலை செய்யும்போது அவரை தெரியும்.

சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் (குறுக் கிட்டு): இது முக்கியமான வழக்கு என்பதால் இங்கே நாங்கள் எல்லாம் கூடியிருக்கிறோம். ஆம்பூர் சம்பவத்துக்கு இந்தப் பெண்தான் மூல காரணம். அங்கு நடந்த வன்முறையில் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏராள மானோர் கைது செய்யப் பட்டுள்ளனர். திருமணமான ஒரு பெண், திருமணமான ஆணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்றுவிட்டால், அந்த வழக்கை எப்படி கையாள வேண்டும்? என்று போலீஸாருக்கு இந்த நீதிமன்றம் வழிகாட்டுதல்களை உருவாக்கித் தரவேண்டும். அது ஒரு முன்உதாரணமாக இருக்கும்[6].

நீதிபதிகள்: ஆம்பூரில் நடந்த சம்பவத்துக்கு நாங்களும் வருந்துகிறோம். பவித்ரா மேஜரான பெண். அவரை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. அவர் பெற்றோருடன் செல்ல விரும்புகிறார்.

ஆர்.சி.பால்கனகராஜ்: ஆம்பூரில் இப்போது சுமுகமான சூழல் இல்லை. இந்நிலையில், பவித்ராவை அங்கு அனுப்பினால் அவருக்கு பாதுகாப்பாக இருக்காது. இதை கருத்தில் கொண்டு தாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்[7].

அரசு வக்கீல்:- அவரது கருத்தை இந்த வழக்கில் பதிவு செய்யக்கூடாது. ஏற்கனவே அவர் காணாமல்போனதாக பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. அந்த விசாரணைக்கு பாதிப்பு வரக்கூடாது.

பால்கனகராஜ்:- தற்போது இவ்வளவு பெரிய பிரச்சினைக்கு இந்த பெண் காணாமல்போன சம்பவம் தான் காரணம். எனவே, இந்த பெண்ணை பெற்றோரிடம் தற்போது அனுப்பினால், தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

நீதிபதிகள்:- தற்போது பவித்ரா எங்கே வசிக்கிறார்?

பவித்ரா:- சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் உள்ளேன்.

நீதிபதிகள்:- அதே விடுதியில் 2 வாரத்துக்கு தங்கி இருக்க வேண்டும். இவருக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

ஜூலை 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு[8]: இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அம்பத்தூரில் ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருந்து கடை ஒன்றில் வேலை செய்துவருவதாகவும், தன் பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் பவித்ரா கூறினார். ஆம்பூர் கலவரம் பற்றியும் இங்கே கூறினார்கள். எனவே இந்த வழக்கை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று பவித்ரா நேரில் ஆஜராக வேண்டும். அதுவரை தற்போது அவர் தங்கி இருக்கும் விடுதியிலேயே தங்கியிருக்க வேண்டும். அவருக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] தினத்தந்தி, ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான பவித்ரா சென்னையில் தங்கி இருக்க உத்தரவு, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஜூலை 07,2015, 5:15 AM IST; பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜூலை 07,2015, 4:36 AM IST

[2] தி இந்து, ஆம்பூர் பவித்ரா உயர் நீதிமன்றத்தில் ஆஜர்: 23-ம் தேதி வரை விடுதியில் தங்கியிருக்க உத்தரவு, Published: July 7, 2015 07:33 ISTUpdated: July 7, 2015 15:21 IST

[3] 4. Conditions relating to solemnization of special marriages

Notwithstanding anything contained in any other law for the time being in force relating to the solemnization of marriages, a marriage between any two persons may be solemnized under this Act, if at the time of the marriage the following conditions are fulfilled, namely:

(a) Neither party has a spouse living;

1[(b) Neither party-

(i) Is incapable of giving a valid consent to it in consequence of unsoundness mind; or

(ii) Though capable of giving a valid consent, has been suffering from mental disorder of such a kind or to such an extent as to be unfit for marriage and the procreation of children; or

(iii) has been subject to recurrent attacks of insanity 2[* * *]

(c) The male has completed the age of twenty-one years and the female the age of eighteen years;

3[(d) The parties are not within the degrees of prohibited relationship;

Provided that where a custom governing at least one of the parties permits of a marriage between them, such marriage may be solemnized, not withstanding that they are within the degrees of prohibited relationship; and ]

4[(e) Where the marriage is solemnized in the State of Jammu and Kashmir, both parties are citizens of India domiciled in the territories to which this Act extends.]

5[Explanation. -In this section, “customs”, in relation to a person belonging to any tribe, community, group or family, means any rule which the State Government may, by notification in the Official Gazette, specify in this behalf as applicable to members of that tribe, community, group or family;

http://www.vakilno1.com/bareacts/splmarriage1954/specialmarriageact.html

[4] http://www.dailythanthi.com/News/State/2015/07/07043612/Root-cause-of-the-Ambur-mishap-pavithra-ordered-to.vpf

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/aambur-violence-pavithra-appear-madras-high-court-230417.html#slide161128

[6]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-23%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7394400.ece

[7] ஆம்பூருக்குச் சென்றால் அவருக்கு / பவித்ராவுக்கு பாதுகாப்பாக இருக்காது, என்பதும் நோக்கத்தக்கது. யாரால் அவருக்கு அத்தகைய பாதுகாப்பு பாதகம் ஏற்படும் நிலை ஏற்படும் என்றும் யோசிக்கத் தக்கது. முஸ்லிம் அமைப்புகள் கலவரத்திற்கு காரணம் பவித்ரா தான் என்ற பிரச்சாரத்தை, இணைதளம் மூலமும், டிவி-பேட்டிகள் (ராஜ்-டிவி) மூலமும் செய்துள்ளன.

[8] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/aambur-violence-pavithra-appear-madras-high-court-230417.html#slide161128

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதை-புனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல் – பொகோ ஹரமின் கவர்ச்சியான-செக்ஸியான திட்டம் (2)

மே 10, 2015

அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல், ஜிஹாதிகளாக் உருவாக்குதல், ஜிஹாதைபுனிதப்போரைத் தொடர்ந்து நடத்துதல்பொகோ ஹரமின் கவர்ச்சியானசெக்ஸியான திட்டம் (2)

30 More Women, Children Escape Boko Haram Sambisa

30 More Women, Children Escape Boko Haram Sambisa

நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” – இனவெறி முதல் ஜிஹாத் வரை: ஜிஹாதி பாதையில் தீவிரவாதத்தை வளர்க்க பொருளாரத்தைப் பாதிக்கும் செயல்கள் நடந்து கொண்டிருக்கும் வேலையில், பொகோ ஹராமின் பெண்களின் மீதான தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” என்ற [eugenics] முறையும் இக்காலத்தில் தொடர்ந்து கடைப்பிடித்து வருவது கவனிக்கத்தக்கது. அமெரிக்காவில் வெள்ளை-கறுப்பு நிற மக்களிடையே உள்ள வேறுபாடுகளை களைய அவர்க்களுக்கிடையே திருமணத்தை ஊக்குவித்து வருகிறது. விருப்பப்படி குழந்தைகளைப் பெற்ருக் கொள்ள நவீன முறைகளும் உருவாக்கப் பட்டு விட்டன[1]. இப்பொழுதைய பால்டிமோர் கலவரங்களுக்குக் கூட அத்தகைய விளக்கம் கொடுக்கப்பட்டது. உலகப்போர்களுக்கு முக்கியமான காரணம் இனவெறி மற்றும் அது சம்பந்தமான விஞ்ஞானத்திற்குப் புறம்பான இனவெறி நம்பிக்கைகள். அதில் ஒன்று இனத்தூய்னை என்பது. இதன் மூலம் வெள்ளைநிற மக்களிடையே, யார் உயர்ந்தவர், சிறந்தவர் மற்றும் அறிவாளி அத்தகைய நிலை எந்த மக்களிடம் காணப்படுகிறது என்றெல்லாம் ஆராய்ச்சி நடந்து, அதிலும் மதம் புகுத்தப்பட்டது. இப்பொழுது, ஜிஹாதிகளின் அறிவுஜீவிக்குழுக்கள் அவற்றைப் பின்பற்றுகின்றன போலும்.

Boko-Haram-rescued women from sex harassment

Boko-Haram-rescued women from sex harassment

பெண்களைக் கடத்தல், உடலுறவு கொள்ளுதல், கர்ப்பமாக்குதல், ஜிஹாதித்துவ குழந்தைகளைப் பெற்றெடுத்தல்: இஸ்லாமிய நாடுகளில் அல்லது முஸ்லிம்களினால் இது – “நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்தல்” வேறுமுறையில் செயல்படுத்தப் படுகின்றன. அதாவது, பெண்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள செய்தல், நிறைய பெண்களை திருமணம் செய்து கொள்ளுதல், நூற்றுக்கணக்கில் பெண்களை கற்பழித்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளச் செய்தல் என்ற முறைகள் பின்பற்றப் படுகின்றன. முஸ்லிம்களின் நான்கு-மனைவி திட்டம் விமர்சிக்கப் பட்டாலும், பொகோ ஹராம் என்ற ஜிஹாதி இயக்கத்தின் வலுக்கட்டாய உடலுறவு, செக்ஸ், கற்பழிப்பு முதலியவை இந்திய ஊடகங்களில் குறைவாகவே விவாதிக்கப்படுகின்றன. போகோ ஹராம் தலைவரான அபுபக்கர் என்பவர் இந்தப் பெண்களை நாங்கள் விரும்பும் நபர்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடுவோம். அல்லது அடிமைகளாக விற்று விடுவோம். அல்லது அவர்களை மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்துவோம் என்று அச்சுறுத்தியிருக்கிறார். ஏற்கெனவே பத்து வயதுச் சிறுமிகளை எல்லாம் மனித வெடிகுண்டாகப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள்தான் போகோ ஹராம் இயக்கத்தினர்[2]. ஆகவே பெண்களைக் கடத்தல், உடலுறவு கொள்ளுதல், கர்ப்பமாக்குதல், ஜிஹாதித்துவ குழந்தைகளைப் பெற்றெடுத்தல் என்ற இம்முறை, அவர்களது குரானில் உள்ள “இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்ட பெண்கள்” பிறகு அனைவருக்கும் பொதுவானர்கள் என்ற இறையியல் சித்தாந்தத்திற்கு ஏற்றமுறையில் செயல்படுத்துவாதாகத் தோன்றுகிறது[3].

Escaped women tell their horrowful stories

Escaped women tell their horrowful stories

பள்ளி சிறுமிகள் கடத்தல்செக்ஸ், குழந்தை பெற்றெடுப்பு 2014-15 நிகழ்வுகள்: நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14ந்தேதி 2014 பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை கடத்திச் சென்ற நைஜீரிய ஆயுதக்குழுவான போகோ ஹரம் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சிறை வைத்தனர்[4]. இவர்களை விடுவிக்க மக்கள் தெருக்களில் வந்து ஆர்பாட்டம் செய்தனர். போர்னா பகுதியின் ஆளுநர், பெண்கள் மேல் நிலைப் பள்ளியை சேர்ந்த 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் குறித்து உரிய தகவல் அளிப்பவர்க்ளுக்கு சன்மானம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பள்ளி மாணவிகளில் 107 பேர் பத்திரமாக விடுவிக்கப்பட்டதாகவும், சில மாணவிகளை விடுவித்துவிட்டதாக தீவிரவாதிகள் தகவல் அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் தீவிரவாதிகள் கடத்தி செல்லும் வழியிலேயே சில மாணவிகள் ஜீப்பில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றுவிட்டதாக நைஜீரிய ராணுவ தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்தக் கடத்தலுக்குப் பின்னணியாக, போகோ ஹராம் இயக்கத்துக்கு அல் காய்தா உதவியிருக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது[5]. காரணம் இதே போன்ற மாணவிகள் கடத்தல் சம்பவங்களை அல்ஜீரியாவில் 1990-க்களிலும், 2000களிலும் அல் காய்தா நிகழ்த்தி இருக்கிறது[6].

Escape more than 60 women and girls abducted by Boko Haram

Escape more than 60 women and girls abducted by Boko Haram

ராணுவம் மற்றும் ஆட்சியாளர்களுன் முரண்பட்ட அறிக்கைகள்பாதிக்கப்பட்டது பெண்கள் தாம்: ஆனால், இன்று இது குறித்து போர்னா நைஜீரிய பள்ளியின் முதல்வர் கூறுகையில், “கடத்தப்பட்ட மாணவிகள் குறித்து இதுவரை எந்த தகவலும் அறியப்படவில்லை. மாணவிகள் விடுவிக்கப்பட்டதாக ராணுவம் சார்பில் ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மை இல்லை. நாங்கள் அனைவரும் மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை பிராத்தித்து வருகிறோம்”, என்று அவர் தெரிவித்தார். நைஜீரியாவில் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்ததாக கருதப்படும் பகுதிகளில் மாணவிகளை தேடும் பணியை அதன் அரசு முடக்கி விட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் கல்வி முறை பெரும் பாவம் என்று கூறி அதனை தீவிரமாக எதிர்த்து வரும் பொகோ ஹரம் அமைப்பினர், சமீப காலமாக பள்ளிகள் மற்றும் மாணவர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது[7]. அதாவது, தலிபன்கள் ஆப்கானிஸ்தானில் செய்து வருவதை, பொகோ ஹராம் இங்கு செய்கின்றனர். மேற்கத்தைய கல்வியை எதிர்க்கிறோம் என்பதில், இஸ்லாமியக் கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தெரிகிறது.

Ridiculing Boko Haram Where It Hurts

Ridiculing Boko Haram Where It Hurts

கடத்தப்பட்ட மாணவிகள் விற்கப்படுதல் முதலியன: அந்த மாணவிகளில் ஒரு சிலரை விற்பனை செய்யவும், வேறு சிலரை அடிமைகளாக வைத்திருக்கவும், மற்றவரைக் கட்டாயத் திருமணம் செய்துவைக்கப் போவதாகவும் அந்த இயக்கத்தின் தலைவர் அறிவித்தார். கடத்தப்பட்ட மாணவிகளில் சிலர் காமரூனிலும், சட் முதலிய நாடுகளில் கட்டாயத் திருமணம் செய்துவைக்கும் கூட்டத்தினருக்கு 12 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டதாகவும் தெரியவந்தது. 53 மாணவிகள் தப்பியுள்ளதாகவும், மற்றவர் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளதாகவும் காவல் படையினரின் தகவல் தெரிவித்தன. பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டை பயனளிக்காது போனமையும், கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் வீதிகளில் ஆர்பாட்டங்கள் நடத்தின. பொகோ ஹரம் இயக்கத்தினர், வட நைஜீரியாவில் முஸ்லீம் மத அரசை அமைக்கப் போராடி வருகின்றமை நினைவு கூறப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் மேலும், நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜோநாதன் மேலும், பாதிக்கப்பட்டோர்களும், ஊர்மக்களும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடப்பட்டுள்ளது. வீதி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பெண்களில் இருவர் கைது செய்யப்பட்டு, ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக, ஜனாதிபதியின் மனைவியால் குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட பெண்கள் கூறும் விசயங்கள் எந்த மனிதனையும் திகைக்க வைக்கின்றன[8]. இடைக்காலத்தில் முகமதியர்கள் எப்படி பெண்களைக் கடத்தியது, அடிமைகளாக விற்றது, ஹேரம் என்ற அந்தப்புரங்களில் சுல்தான்கள், படைத்தலைவர்கள், என்று முறையே அனுபவிக்கப் பட்டு, பிறகு வீரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஏனெனில், இந்த நவீன காலத்திலும் அதே முறைகளை, வேறு மாதிரி செய்து வருவது வெளிப்படுகிறது[9]. அவற்றையெல்லாம் மீறிய முறைதான் ஜிஹாதி-குழந்தைகளைப் பெற்றெடுத்தல், வளர்த்தல் முதலியனவாகும்[10].

© வேதபிரகாஷ்

09-05-2015

[1] http://www.theguardian.com/commentisfree/2014/oct/03/sperm-donot-lawsuit-racism-eugenics-lesbian-couple-black-donor

[2] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-6/article7052396.ece

[3]  பைபிளில் இத்தகைய ஆதாரங்கள், அவற்றைப் பின்பற்றிய போக்கு சரித்திரத்தில், பல உதாரணங்களில் காணலாம்.

[4] https://www.ctc.usma.edu/v2/wp-content/uploads/2015/05/CTCSentinel-Vol8Issue42.pdf

[5] https://www.ctc.usma.edu/v2/wp-content/uploads/2015/03/CTCSentinel-Vol8Issue316.pdf

[6] http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1/article7002695.ece

[7]http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-129-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88/article5922474.ece

[8] Wall Street Journal, Boko Haram and the Lost Girls of Nigeria- After a military rescue, captives tell their story to The Wall Street Journal, By Patrick McGrothy, Updated May 8, 2015 3:38 p.m. ET.

[9] http://www.wsj.com/articles/boko-haram-and-the-lost-girls-of-nigeria-1431113437

[10] http://www.ibtimes.co.uk/nigeria-boko-haram-impregnated-girls-guarantee-new-generation-fighters-1500022

இஸ்லாமில் இசையா – ஐயோ, ஹராம், ஹராம் என்று பத்வா போட்ட முப்தி, ஜாலியாக இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாராம்!

ஜூலை 28, 2013

இஸ்லாமில் இசையா – ஐயோ, ஹராம், ஹராம் என்று பத்வா போட்ட முப்தி, ஜாலியாக இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாராம்!

Kashmir state Mufti enjoying music

இசையை ரசித்துக் கொண்டிருந்த முப்தி  (ஜூலை  2013): காஷ்மீர் மாநிலத்தில் ஒரு இளம்பெண் பெண்களே கொண்ட “பேண்ட்-குரூப்” வைத்துக் கொண்டு இசைக்குழு நடத்தி வந்தாளாம். இஸ்லாமில் இசையா – ஐயோ, ஹராம், ஹராம் என்று பத்வா போட்டாராம் முப்தி. ஆனால், அதே முப்தி, இசையை ரசித்துக் கொண்டிருந்தாராம்! ரம்யாமான தல் ஏரியில், ஒரு பெரிய படகில், அக்பர் ஜயபூரி [Urdu poet Akbar Jaipuri] என்ற உருது கவிஞர் நினைவாக, ஆல் இன்டியா ரேடியோ, ஒரு நிகழ்சி ஏற்பாடு செய்திருந்தது. காஷ்மீர் மாநிலத்தின் பிரபல கஜல் பாடகர் கைஸர் நிஜாமி [Qaiser Nizami ] தன்னுடைய உருது கஜல்களுடன் னைவரையும் மகிழ்வித்தார். அன்றைய மயக்கும் மாலைப் பொழுதில் “ரஞ்சிஸ் ஹி சஹி, தில் ஹி துகானே கேலியே” [Ranjish hi sahi, dil hi dukhaane ke liye aa], என்று மெஹ்தி ஹஸன் பிரபலமான கஜல் பாட்டுப் பாட, “சாப் திலக்” என்ற பஞ்சாபி கஜலோடு[Chaap Tilak (Punjabi ghazal)] நிகழ்சித் தொடங்கியது. மாநிலத்தின் பெரிய முப்தி, ஆஜம் பஷீர்-உத்-தீமன் அஹமது [the grand mufti of J&K, Mufti Azam Bashir-ud-din Ahmad], மற்றவர்களுடன் அழகான நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு, சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்[1].

Kashmir state Mufti enjoying music with instruments

முப்தி பத்வாக்கள் போட்டுக் கொண்டே இருந்தார்  (2012): ஜனவரி 2012ல் தன் தலைமையில் இயங்கி வரும் ஷரீயா நீதிமன்றத்தில் மூன்று கிருத்துவ மிஷனரிகள் – எம். சி. கன்னா, ஜிம் போர்ஸ்ட் மற்றும் கயூர் மெஸ்ஸா என்பவர்கள் வெளியேற வேண்டும் என்று பதவா போட்டு விரட்டினார்[2].

Kashmir state Mufti Azam Bashir-ud-din Ahmad

கிருத்துவ மிஷனரிகள் நடத்தும் பள்ளிகளுக்கு அரசு உதவக்கூடாது என்றும்ம் பத்வா போட்டார். இதற்கு பிரிவினைவாத தலைவர் சையது அலி ஜிலானி ஆதரவு தெரிவித்தார்[3].

 

செப்ப்ட்டம்பர் 2012ல், இஸ்லாமுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. உடனே, அமெரிக்கர்கள் அனைவரும் காச்மீரிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். இதனால், தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்கர்களை காஷ்மீருக்குச் செல்ல வேண்டாம் என்று பணித்தது[4].

 

Kashmir girls band group.performing on the stage

பாண்ட் இசைக் குழு ஆரம்பித்த காஷ்மீர இளம் பெண்கள்: காஷ்மீரில் முதல் முறையாக 3 கல்லூரி மாணவிகள் – மாணவி பாராக தீபா [Farah Deeba] டிரம்மராகவும், மாணவி அனீகா காலித் [Aneeka Khalid] கிடாரிஸ்ட்டாகவும், மாணவி நோமா நசிர் [Noma Nazir] பாடகியாகவும் சேர்ந்து இசைக்குழு தொடங்கினார்கள்[5]. இவர்களின் முதலாவது இசை நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 2012ல் ஸ்ரீநகரில் நடந்தது. இதற்கு இளைஞர்களிடையே வரவேற்பு ஏற்பட்டது. இசைக்குழுவுக்கு ”பிரகாஷ்” (முதல் ஒளி) என்று பெயரிடப்பட்டனர். கடந்த டிசம்பரில் அவர்கள் முதல் போட்டியில் கலந்து கொண்டு, அந்த போட்டியிலேயே முதல் பரிசும் பெற்றார்கள்[6]. இதனால், தேவையில்லாமல், அவர்களுக்கு விளம்பரத்தை / பிரபலத்தை ஏற்படுத்தினார்கள். இதனால் பிரிவினைவாத, அடிப்படைவாத, தீவிரவாத கும்பல்கள் உஷாரானாயினர். இது அவர்களது “இஸ்லாம்-மயமாக்கல்” என்ற கொள்கைக்கு விரோதமானது என்றறிந்தனர். அதனால், தங்களது வேலைகளை முடிக்கி விட்டனர்.

Kashmir girls band group.2

இசை இஸ்லாமிற்கு எதிரானது  –   எதிர்ப்பில் இணைதள தீவிவாதமும் இணைந்தது: முஸ்லிம் பெண்கள் இப்படி மேடையேறி பாடுவது இஸ்லாம் மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கூறி அவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் இந்த குழுவை விமர்சித்து கருத்துக்கள் பரவின. இ.மெயில்கள் மூலமும் 3 மாணவிகளுக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்தன. அந்நிலையில், முஸ்லிம் மத குரு முப்தி பஷீருதீன் அகமது பிறப்பித்த பத்வா[7] உத்தரவில் இஸ்லாம் விரோத செயலில் ஈடுபட்டு வரும் மாணவிகள் தங்கள் இசைக்குழுவை உடனடியாக கலைக்க வேண்டும் என்று ஆணையிட்டார்[8]. இதற்கிடையே காஷ்மீர் பெண்கள் இசை நிகழ்ச்சி நடத்த முப்தி சாகிப் என்ற அமைப்பு தடை விதித்து `பட்வா’ உத்தரவு பிறப்பித்தது. துகாடாரான்-இ-மில்லத் [Dukhataarn-e-Millat] என்ற அடிப்படைவாத மகளிர் அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால், பெண்களின் பெற்றோர் மற்ரும் குடும்பத்த்னர் பெருத்த தொல்லைகளுக்கு ஆளாயினர். தமது மகள்களை சமூகத்திலிருந்து மறைக்க வேண்டியதாயிற்று[9]. இதை தொடர்ந்து இசைக்குழுவை மாணவிகள் கலைத்துவிட்டனர்[10]. இதைத் தொடர்ந்து, இசைக்குழுவை கலைக்க 3 மாணவிகளும் நேற்று முடிவு செய்ததாக பெற்றோர்கள் அறிவித்தனர்.

Pragaash-internet support - but failed

பெண்கள் அமைப்பு என்ற பெயரில் பெண்களை வைத்து மிரட்டியது: துகாடாரான்-இ-மில்லத் [Dukhataarn-e-Millat] என்ற அடிப்படைவாத மகளிர் அமைப்பு 1982ல் சாரா அன்ட்ரபி என்ற பெண்ணால் ஆரம்பிக்கப்பட்டது. “அமைதியான முறையில்” இஸ்லாம் கொள்கைகளை பரப்புவோம் என்று ஆரம்பித்த இந்த குழு, சினிமா தியேட்டர்கள், வீடியோ லைப்ரரிகள், மதுக்கடைகள் முதலியவற்றை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தினர். ஜனவரி 1990ல் இதனால் கலவரங்கள் ஏற்பட்டன. ஆயுதங்களும் உபயோகப்படுத்தப் பட்டன. ஜீன்ஸ் அணிந்த பெண்கள் மீது அமிலத்தை ஊற்றி பீதியைக் கிளம்பி வந்தது. தடை செய்யப் பட்ட மற்ற பிரிவினைவாத, அடிப்படைவாத, தீவிரவாத கோஷ்டிகளுடன், இதுவும் சேர்ந்துள்ளது[11]. இவரது கணவர் அன்ட்ரபி, ஜைமத்துல் முஜாஹித்தீன் [Jamiatul Mujahideen] என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவர். இவ்வமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தவுடன், பண்களின் பெற்றோர் பயந்து விட்டனர்.

CM just assured that is all

ஒப்புக்கு பேட்டி கொடுத்து பிரிவினைவாத,  அடிப்படைவாத,  தீவிரவாத கும்பல்களுடன் ஒத்துப்போன இளைமையான முதலமைச்சர்: இது பற்றி காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில்,”மாணவிகளின் இசைக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால், தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்துவதா வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அவர்கள்தான்” என்றார்[12]. இதற்கு முதல்-மந்திரி உமர் அப்துல் கண்டனம் தெரிவித்தார். அதாவது, ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை என்கிறார். இதுதானே, காஷ்மீரத்தில் நடந்து வருகின்றது. மேலும் இ.மெயிலில் மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யவும். போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து இ.மெயிலில் மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்[13]. கைதான ஒருவர் பெயர் தாரிக்கான். இவர் தெற்கு காஷ்மீரில் உள்ள பிஜ் பெகரா என்ற நகரைச் சேரந்தவர். மற்றொருவரான ரமீஷ் ஷா மத்திய காஷ்மீரில் கந்தர்பால் நகரில் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவர் ஸ்ரீநகர் பத்மலோ என்ற இடத்தில் இருந்து இ.மெயில் அனுப்பியது தெரியவந்தது. நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் இர்ஷாத் அகமத் சாரா பாதமலோ எஸ்.டி. காலனியில் பிடிபட்டார். இதே போல் இன்டர்நெட் மூலம் 900 மிரட்டல்கள் 26 இடங்களில் இருந்து வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவர்கள் மீது மிரட்டல், கிரிமினல் குற்றம் மற்றும் தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[14].

Fatwa against the girls by the Mufti

முஸ்லிம்கள் இத்தகைய முரண்பாடான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்: காஷ்மீரம் இந்திய கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. மேலே, இஸ்லாம் என்ற போர்வைப் போற்றப்பட்டிருந்தாலும், உள்ளே-அஸ்திவாரத்தில் இவைதான் இருக்கின்றன. இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிரிகிஸ்தான் போன்ற எல்லா “ஸ்தானங்களுக்கும்” பொறுந்தும். இங்கு இசை, நடனம், நாடகம், கவிதை முதலியவையும் பாரம்பரியமானவைதாம். மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளுக்குட் பட்டிருக்கும் இப்பிரதேசங்களில் மக்கள் இவையில்லாமல் வாழ்ந்ததில்லை. அந்நிலையில், இப்பொழுது பிரிவினைவாத, அடிப்படைவாத, தீவிரவாத கும்பல்கள் இவ்வாறு “இஸ்லாம்” பெயரில் முரண்பாடுகளை திணித்து வருகின்றது. நிச்சயமாக மேனாட்டு சீரழிவுகளை இந்தியா ஏற்கலாகாது. அதே நேரத்தில், நவீனமாக இருக்க வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தையும் (உதாரணத்திற்கு – விமானம், மின்னணு சாதனங்கள், கட்டுமான வசதிகள், வாகனங்கள், ஊடகங்கள்) ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

வேதபிரகாஷ்


[2] In January last year, the Sharia court headed by him ordered expulsion of three Christian missionaries from the Valley on charges of proselytism. He issued a fatwa directing the three priests – M. C. Khanna, Jim Borst and Gayoor Messah – to leave the Valley immediately.

http://indiatoday.intoday.in/story/grand-mufti-of-kashmir-ban-on-girls-rock-band-in-kashmir-mufti-bashir-ud-din/1/296564.html

[3] Mufti’s Sharia court also decreed that the state government must involve it in the management of missionary schools. The matter died down after separatist leader Syed Ali Shah Geelani supported the missionaries and their schools.

http://indiatoday.intoday.in/story/grand-mufti-of-kashmir-ban-on-girls-rock-band-in-kashmir-mufti-bashir-ud-din/1/296564.html

[4] In September 2012, a controversial anti- Islam film surfaced in America and Europe and Mufti got a chance to hit out at the US. He asked Americans to leave Kashmir and urged people to register their protest against the blasphemous film and ” attack US citizens if they are seen anywhere in the Valley”. This led an alarmed US Embassy in New Delhi to ask its citizens to stay away from Kashmir. Geelani again stepped in and rejected Mufti’s call.

http://indiatoday.intoday.in/story/grand-mufti-of-kashmir-ban-on-girls-rock-band-in-kashmir-mufti-bashir-ud-din/1/296564.html

[9] Left to fend for themselves, the families of Noma Nazir, Farah Deeba and Aneeka Khalid in the vulnerable neighbourhoods of Chhanpora, Bemina and Rajbagh have forced the teenagers to snap their contact with all, especially the media. “We have seized their cellphones and laptops,” two of their relatives revealed to The Hindu. “Their band has been shut.”

http://www.thehindu.com/news/national/other-states/rock-band-girls-go-into-hiding-after-social-boycott-threat/article4378341.ece

[11] The Dukhataarn-e-Millat does not have any history of using firearms. Founded in 1982 by Syeda Asiya Andrabi, the outfit claims to orchestrate ‘peaceful campaigns’ against anything it perceives to be contrary to the tenets, teachings and traditions of Islam. It played a key role in a campaign to close down cinema, video libraries and wine-shops, which culminated in the eruption of an armed insurgency in January 1990. Since then, it has been among the outlawed radical groups in the Valley. In 1992-93, it grabbed the headlines, enforcing the Islamic dress code allegedly by sprinkling acid on young girls wearing jeans and refusing to clad the ‘Abbaya’. Ms. Andrabi has repeatedly denied having used acid. The spray, she insisted, was “a harmless ink.” Nonetheless, the Dukhataarn-e-Millat carries the image of a dreaded outfit for many — particularly those associated with the media, art and culture — in Srinagar. Ms. Andrabi is the wife of the jailed founder of the Jamiatul Mujahideen, Ashiq Hussain Faktoo, who now heads a different political outfit called the Muslim League.

[13] மாலை மலர், காஷ்மீரில்இசைக்குழுதொடங்கியமாணவிகளுக்குமிரட்டல்விடுத்த 3 பேர்கைது, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, பெப்ரவரி 07, 12:34 PM IST.

பாகிஸ்தானில் தேர்தல் – தலிபான், ரத்தம், குண்டுவெடிப்பு, இவற்றிற்கிடையில் வாக்குப் பதிவு நடக்கிறது!

மே 11, 2013

பாகிஸ்தானில் தேர்தல் – தலிபான், ரத்தம், குண்டுவெடிப்பு, இவற்றிற்கிடையில் வாக்குப் பதிவு நடக்கிறது!

who will be next prime minister of pakistan 2013பலத்த பாதுகாப்பில் தேர்தல் நடக்கிறது: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[1], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டார்கள்[2]. 73,000 ஓட்டு சாவடிகள் இருந்தன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் என்று காவல் இருந்தார்கள்.

quaid-e-azam-and-liaquat-ali-khan-was-the-prime-minister-smokingபாகிஸ்தானில் எல்லா முஸ்லீம்களும் முஸ்லீம்கள் இல்லை: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருந்தால், எல்லா முஸ்லீம்களும் அங்கு சரிசமமாக நடத்தப் படுவதில்லை, ஏன் முஸ்லீமாகக் கூட கருதப்படுவடில்லை. சுன்னி / சன்னி முஸ்லீம்கள் தாம் உயர்ந்தவகள், அதற்கடுத்து ஷியா முஸ்லீம்கள். ஆனால், அவர்களும் பலமுறைத் தாக்கப் பட்டுள்ளார்கள், அவர்கள் மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன. பிறகு அஹ்மதியா[3], காதியான், பஹாய் போன்றோர் முஸ்லீம்களே இல்லை என்று விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்[4]. முஸ்லீம்-அல்லாவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஆக ஓட்டுரிமை அவர்களுக்கு இல்லை[5]. அஹ்மதியர் ஓட்டுரிமைப் பிரச்சினைப் பற்றி அமெரிக்காவே வக்காலத்து வாங்கியுள்ளது[6].

Veero Kolhiபெண்கள் ஓட்டுரிமை, வாக்களிப்பு,  முதலிய பிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[7]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[8]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 42% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[9].

Nawaz vs Imranஅடுத்த பிரதம மந்திரி யார்: அடுத்த பிரதம மந்திரி யார் என கெட்டதற்கு[10], “நான் தான், ஏனெனில் இம்ரன் கானுக்கு அத்தகைய வாய்ப்பு என்றும் இருந்ததில்லை” என்று மௌலானா பசல்-உர்-ரஹ்மான், அமீலர் ஜமைத்-உலேமா-இ-இஸ்லாம் என்ற இயக்கத்தின் தலைவர் கூறியிருக்கிறாராம்[11]. இருப்பினும் நவாஸ் செரிப் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Bindia Rana - transgender contest PAK-ele-2013முதல் முறையாக  திருநங்கை தேர்தலில் போட்டி: முதல் முறை, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[12]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர்.

© வேதபிரகாஷ்

11-05-2013


[8] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.

[10] Amir Jamiat Ulema-e-Islam (JUI-F), Maulana Fazl-ur-Rehman said on 08-05-2013 it was likely that he becomes the next prime minister of Pakistan but the Pakistan Tehreek-e-Insaf Chief Imran Khan neither had any such chance before nor now

பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை!

திசெம்பர் 28, 2009

பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை

இன்றைய விடுதலை மற்றும் தினமலர் செய்திகள்

http://www.dinamalar.com/world_detail.asp?news_id=4490

Female circumcion

கம்பாலா (ஆப்பிரிக்கா), டிச. 28, 2009_ பெண்களுக்கு செய்யப்-படும் சுன்னத் சடங்குக்கு, உகாண்டா அரசு தடை விதித்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் உள்ள பழங்-குடி முஸ்லிம் பெண்-களுக்கு, சுன்னத் செய்யும் வழக்கம் உள்ளது. பெண்-களின் பிறப்புறுப்பை சிதைக்கும் இந்த சடங்-குக்கு, பல நாடுகள் தடை விதித்துள்ளன. உடலுற-வின் போது ஏற்படும் இன்பத்தை, சுன்னத் செய்து கொண்ட பெண்-களால் அனுபவிக்க முடி-யாது. அதுமட்டுமல்-லாது, குழந்தை பிறப்பின் போதும் இதனால் சிக்கல் ஏற்படும். பெண்களுக்கு எதிரான இந்த சடங்கை தடை செய்யும் விதத்தில், உகாண்டா நாடாளு-மன்-றத்தில் சட்ட முன்-வரைவு கொண்டு வரப்பட்டு உள்ளது. உகாண்டாவில் ஒவ்வொரு டிசம்பர் மாத-மும் நடக்கும் சடங்கில் 3 ஆயிரம் பெண்களுக்கு சுன்-னத் செய்யப்படும். நாடா-ளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டமுன்வரைவு மூலம், இந்த சடங்குக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

A girl cries as she is circumcisedஆணின் உறுப்பின் நுனிப்பகுதியின் சதையை வெட்டியெடுப்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய சடங்காகும். அதேபோல பெண்களின் உறுப்பின் பகுதியை அறுத்தெடுக்கும் முறைக்கு கிளைடோரிடெக்டோமி (clitoridectomy), லேபியாபிளாஸ்டி (labiaplasty), வெஜினோபிளாஸ்டி (vaginoplasty) எனப்பல பெயர்களில் அந்த அறுவைச்சிகிச்சை முறைப்படி அழைக்கப்படுகிறது. சுருக்கமாக இது “பெண்-சுன்னத்” எனப்படுகிறது. இதில் மூன்று முறைகள் உள்ளன. சரித்திர ரீதியாக இது எகிப்தில் தோன்றி மற்ற இடங்களுக்குப் பரவியதாகத் தெரிகிறது. இஸ்லாத்தில் இப்பழக்கம் இல்லையென்று வாதித்தாலும், ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகவும் இந்தோனேசியா, லெபனான், யேமன், பங்களாதேசம் முதலிய நாடுகளிலும், மற்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் ககறைந்த அளவிலும் முஸ்லீம்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.

A girl is soothed by an attendant before her circumcisionகிளைடோரிஸ் (Clitoris) என்பது பெண்ணுருப்பின் மேல்பகுதியில் இருக்கும் ஒரு சதை (படத்தில் கருப்பாகக் காட்டப்பட்டுள்ளது).

File:FGC Types.jpg

1. (A). “பிரிப்யூஸ்” (Prepuce) என்ற முறையில் கிளைடோரிஸைச் சுற்றியுள்ள சதையினை வெட்டியெடுப்பது.

1 (B). “பிரிப்யூஸ்” என்ற முறையில் கிளைடோரிஸைச் சுற்றியுள்ள சதை மற்றும் கிளைடோரிஸின் பகுதி அல்லது முழுவதுமாக எடுக்கப்படும் முறை

2. கிளைடோரிஸ் மற்றும் அதன் கீழிருக்கும் லேபியா மைனோரியா (Labia minoria) என்ற சதையின் பகுதியினையோ அல்லது முழுவதுமாகவோ சேர்த்து வெட்டியெடுப்பது.

3. மேல் – லேபியா மைனோரியா (Labia minoria), மற்றும் கீழ் – லேபியா மேஜோரா (Labia majora) லேபியா சதையை முழுவதுகாக வெட்டி, சிறுநீர் போகும் பகுதி (Urethra) மற்றும் பெண்ணின் பிரதான மைய உறுப்பு (Vagina) இரண்டையும் மறைக்கும் வகையில் உள்ள சதையைச் சேர்த்துத் தைத்து விடுவது. பிறகு சிறுநீர் மற்றும் மாதவிடாய் திரவம் வெளியேறுவதற்காக ஒரு ஓட்டைப் போடப்படும்.

Female circumcisers and their attendants waiting in an elementary-school classroom, where they do their work.உலக ஆரோக்கியக் கழகத்தின் அறிக்கையின்படி, எந்தெந்த நாடுகள் / நாகரிங்கள் அரேபிய முஸ்லிம்களால் படையெடுக்கப்பட்டுத் தாக்கப்பட்டனவோ, அந்தந்த நாடுகளில் இப்பழக்கம் காணப்படுகிறது. உதாரணமாக ஆப்பிரிக்கா – வடக்காப்பிரிக்க நாடுகளில் பெருமளவில், மத்தியத் தரைக்கடல் நாடுகளில் – குறிப்பாக அரேபிய தீபகற்பம், பாரசீக வளைகுடா நாடுகள் – யேமன், பஹ்ரின், சௌதி அரேபியா, ஐக்கிய அரேபிய எமிரைட்), ஆசியாவில் – மலேசியா, இந்தோனேசியா, இந்தியா (தௌபி போஹ்ரா முஸ்லிம்கள்) முதலிய நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது.Girl-being-circumcised

COUNTRY PREVALENCE (%) TYPE PERFORMED
Benin 16.8 II
Burkina Faso 76.6 II – Performed throughout the country in all but a few provinces.
Cameroon 1 I, II
Central African Republic 35.9 I, II
Chad 44.9 II – Widely practiced in all parts of Chad.III – Confined to areas bordering Sudan in the eastern part of the country.
Cote d’Ivoire
(Ivory Coast)
44.5 II
Djibouti 90-98 II – Performed on girls of Yemeni origin.III – Most common among the Issa and Afar.
DRC (Congo) Unknown II
Egypt 97.3% I, II, III
Eritrea 88.7 I, II, III
Ethiopia 79.9 I – Commonly practiced among Amharas, Tigrayans and the Jeberti Muslims living in Tigray.II – Most commonly practiced form.  The Gurages, some Tigrayans, Oromos and the Shankilas practice this form.

III – Practiced in the eastern Muslim regions bordering Sudan and Somalia.

IV – Referred to as “Mariam Girz” in Ethiopia, it is practiced mainly in Gojam in the Amhara region.

Gambia 60-90 I – The Sarahulis perform this on girls one week after birth.  The Bambaras perform the procedure on girls between 10-15 years of age.II – Nearly all Mandinkas, Jolas and Hausas practice this form on girls 10-15 years old.

III – The Fulas perform a procedure similar to Type III that is described as “vaginal sealing” on girls from one week old to 18 years old.

IV – The Fulas perform this type on girls from one week old to 18 years old.

Ghana 5.4 I, II, III
Guinea 98.6 I, II, III, IV
Indonesia 100 I, IV
Kenya 32.2 I and II most common.III – found in the far eastern areas bordering Somalia.
Liberia 50 II
Mali 91.6 I, II, III(Type III practiced in southern areas of country)
Mauritania 71.5 I, II
Niger 4.5 II
Nigeria 19 I, II, III, IV(Type I and II more prominent in the south; Type III more prominent in north)
Senegal 28.2 II, III(Type II is most common)
Sierra Leone 80-90 II
Somalia 90-98 I – practiced mainly in the coastal towns of Mogadishu, Brava, Merca, and Kismayu.III – Approximately 80% of the circumcisions are this type.
Sudan 90 I, II, III(Type III is most common)
Tanzania 17.7 II, III
Togo 12 II
Uganda 5 No information available.
Yemen 22.6 II, III

INDONESIA_-_femalecircumcisionஉலகம் முழுவதும் இப்பழக்கம் இருப்பினும், ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் இது அதிகமாக பின்பற்றப்பட்டு வருகிறது. உலக சுகாதர நிறுவனம் இதைத் தடுக்க, முடிவிற்குக் கொண்டு வர முயற்ச்சி செய்து வருகிறது. பிப்ரவரி மாதம் 6ம் தேதி “அனைத்துலக பெண் உறுப்புச் சிதைவு எதிர்ப்பு தினம்” என்று ஐக்கிய நாடுகள் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இதைப் பற்றி மூச்சுக் கூட விடுவது கிடையாது.

சூஃபியா, சோஃபியா, ஜிஹாதி பெண்தீவிரவாதிகள்!

திசெம்பர் 20, 2009

சூஃபியா, சோஃபியா, ஜிஹாதி பெண்தீவிரவாதிகள்

ஆண்டவனின் மகிமையினால் உலகில் அமைதியும் சாந்தமும் நிலவுவதாக!

பெண்களைத் தீவிரவாதிகளாக மாற்ற முடியுமா? இயற்கையில் பெண் மென்மையானவள், மிருதுவானவள் என்றெல்லாம் கருதப்படும்போது, இல்லை அவள் ஆணுக்கு நிகர் என்று எல்லாத் துறைகளிலும் தலைசிறந்து விளங்கும்போது மகிழ்ச்சியாகத் தான் உள்ளது. ஆனால், தீவிரவாத சித்தாந்தத்தை அவர்களின் மனத்தில் ஏற்றி , புகுத்தி அவர்களை தீவிரவாதத்திலும் சிறப்பாக ஈடுபடுத்தலாம், அதிலும் தற்கொலை தீவிரவாதிகளாக, மனித குண்டுகளாகக் கூட மாற்றலாம் என்பது பிரபலமான இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் நடவடிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. மனோதத்துவ ரீதியில் இதன் பின்னணி பயங்கரமாக இருக்கிறது.

இங்கு ஏதோ இஸ்லாமியத் தீவிரவாதத்தை மட்டும் குறைச் சொல்வதாக நினைக்கவேண்டாம். ஆனால் நிகழ்வுகள் அதைத்தான் காட்டுகிறது. ஜம்மு-காஷ்மீரத்தைப் பொறுத்தவரையிலும், சரித்திர ரீதியில் இடைக்காலத்திலிருந்து 1947 வரை பார்க்கும்போது, இந்துக்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனர். காஷ்மீரத்தின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் முதலியவற்றை அடியோடு ஒழித்து, கோவில்கள், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள், சின்னங்கள் எல்லாமே ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு, இஸ்லாம் அங்கு திணிக்கப்பட்டது. “இஸ்லாம்-மயமாக்கல்” என்ற செயல்பாட்டில், லட்சக் கணக்கான இந்துக்கள் கொடுமைப்படுத்தப் பட்டனர். அவர்கள் தங்களது கோடிக்கணக்கான சொத்துக்களைக் கூட விட்டு-விட்டு துரத்தி அடிக்கப்பட்டனர். தினமும் அவர்களைத் துன்புறுத்துதல், பெண்களை கற்ப்பழித்தல், மதம்-மாறச்சொல்லி அறிவித்தல்…………..என்ற ரீதியில் செயல்பட்டபோது, அவர்கள் தங்கள் பிரதேசத்தைவிட்டு ஓடுவதைத் தவிர வேறு வழி இல்லை. தலைநகர் தில்லியில் விடரட்டியடிக்கப் பட்ட இந்துக்கள் – காஷ்மீரிகள் தங்களது சொந்த நாட்டில் அகதிகளாக கூடாரங்களில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது உரிமைகளைப் பற்றி யாரும் பேசுவது கிடையாது. இந்திய அரசியல்வாதிகளோ ஓட்டுவங்கி மற்றும் செக்யூகரிஸம் (மற்ற மறைமுக லாபங்கள் கிடைக்கும்) என்ற போர்வையில் மௌனம் காத்து, அத்தகைய தீவிரவதத்தை வளர்க்க உதவி செய்தனர். விளைவை இன்று எல்லோரும் அனுபவிக்கின்றனர்.

ஆகவே, சரித்திர ரீதியில் மிகவும் கொடுமைப் படுத்தப்படவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள், நொறுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், அடிக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள், …………….என்றெல்லாம் பார்த்தால், இந்துக்கள்தாம் தீவிரவாதிகளாக உலகத்தில் அதிக அளவில் வந்திருக்கவேண்டும்.

அதிலும் இந்து பெண்மணிகள் தாம் தீவிரவதிகளாக மாறியிருக்கவேண்டும். அதற்கு அவர்களுக்கு பயிற்ச்சிக் கூட வேண்டாம். ஒத்தக் கருத்து, மாற்றுக் கருத்து மற்ற நாகரிகக் கருத்து என்று எந்த ரீதியில் பார்த்தாலும் இந்திய பெண்கள், குறிப்பாக இந்துப் பெண்கள்தாம் குறைக்கூறப்படுகிறார்கள், விமர்சனம் செய்யப் படுகிறர்கள், கேவலமாகச் சித்தரிக்கப் படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள்……………….ஊடகங்களிலெயோ, திரைப்படங்களிலேயோ…………கேட்கவே வேண்டாம்…….எனவே அந்நிலையில் ஒவ்வொரு இந்துப் பெண்ணும் தனியாக உட்கார்ந்து சிந்தித்தால், அவள் தானாகவே ஒரு தீவிரவாதி ஆகிவிடமுடியும்! அவளுக்கு எந்த மூளை சலவையும், படிப்பும், பயிற்ச்சியும்………………தேவையில்லை.

ஆனால், மாறாக இஸ்லாமிய பெண்கள் அதிலும் குறிப்பாக, இளம் பெண்கள் எப்படி ஜிஹாதி-தீவிரவாதிகளாக உருவாகுகிறார்கள், உருவாக்கப்படுகிறாற்கள் என்பதைப் பார்க்கவேண்டும். ஒரு ஆணைப்போல அவளுக்கும் அத்தகைய “ஷஹீத்” எண்ணத்தை உருவாக்கவேண்டும். அம்மாதிரி நடந்தால்தான் அவர்கள் மாறமுடியும், உருவாக, உருவாக்க முடியும்.

இந்தியாவில் நடந்த, நடக்கும், நடக்கின்ற நிகழ்வுகள் அத்தகையப் போக்கைக் காட்டுகின்றன. அதில்தான் இந்த சோஃபியா முதல் சூஃபியா வரை சில உதாரணங்கள் வருகின்றன.

காவலர்கள் கைது: ஜூலை 2009: தெற்கு காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்தில் கடந்த மே மாதம் 29 ஆம் தேதி, ஆயிஸா, நீலோஃபர் என்ற இரு பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இச்சம்பவம் காஷ்மீரில் பெரும் கலவரத்தையும், வன்முறையையும் ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டங்களினால், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் 4 காவலர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. உடனே கைது செய்யுமாறு ஜம்மு-காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு மரபணு சோதனை நடத்தவும், உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டது. பரிசோதனைக்குப் பிறகு அத்தகைய பலாத்காரம் எதுவும் காணப்பட்டதாகத் தெரியவில்லை என்று அறிக்கை வந்தது. ஆனால் கொல்லப்பட்ட ஆஸியா, நிலோஃபர் ஆகியவரின் உடலிலிருந்து எடுத்த மாதிரிகளை அனுப்பாமல் வேறொன்றை அதிகாரிகள் ஃபாரன்சிக் சோதனைக்கூடத்திற்கு அனுப்பியதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. கொல்லப்பட்ட பெண்களின் மர்ம உறுப்புகளிலிருந்து எடுக்கப்பட்டதாக அனுப்பப்பட்ட திரவம் / செமன் அவர்களின் இரத்த சாம்பிள்களுடன் / மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை என்று சோதனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால்தான் அனுப்பட்ட மாதிரிகள் கொல்லப்பட்ட பெண்களுடையதல்ல என்ற முடிவுக்கு வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுபற்றிய விளக்கம் வரவில்லை. எடுக்கப்பட்டதாக இருக்கலாம். இப்பிரச்சினையால் சி.பி.ஐ. விசாரணை வந்தது.

 

ஷோபியான்கொலைவழக்கு: செப்டம்பர் 2009: ஷோபியான் கொலை வழக்கில் இறந்தவர்களின் உடலை தோண்டியெடுத்து மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்த மத்திய குற்றப்புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ., வழக்கு விசாரணைக்காக நீதிமன்ற அனுமதியுடன் இறந்தவர்களின் உடல்களை இன்று தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்மூலம் தடயங்கள் கிடைத்தலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது.

 

டிசம்பர் 2009 சி,பி.ஐ அறிக்கைத் தாக்கல்: காஷ்மீரத்தில் எது கிடைத்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு பிரச்சினை செய்வது, கலாட்டா செயவது, அதன்மூலமாக பிரபலம் தேடுவது என்ற ரிதியில் முஸ்லீம்கள் தீவிரவாதிகளுடன் சேர்ந்து கொண்டு செயல்படுகின்றனர். ஷோஃபியா பகுதியைச் சேர்ந்த ஆயிஸா, நீலோஃபர் என்ற இரு பெண்கள் கற்ப்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாக குற்றாஞ்சாட்டி கலாட்டா செய்து வருகின்றனர். அந்நிலையில் சி,பி.ஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பிறகு இந்த மாதம் 14ம் தேதி 66-பக்க அறிக்கையை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி அவ்விரு பெண்களும் நீரில் மூழ்கியதாகத் தெரிகிறது அதாவது இந்திய-விரோத சக்திகளின் குற்றாச்சாட்டின் படி அவர்கள் கற்ப்பழிக்கப்படவும் இல்லை, கொலைசெய்யப்படவும் இல்லை.

 

காஷ்மீரில் பெண்கள் சாவது: காஷ்மீரத்தில் பெண்கள் சாவது என்பது சகஜம். முன்பெல்லாம், இந்து பெண்கள் கற்ப்பழிக்கப் பட்டு கொலைசெய்யப் படுவர், அவகளது பிணங்கள் கிடைக்கும். ஆனால், ஊடகங்கள் அதைப் பற்றி என்றும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

 

பிப்ரவரி 2009: பெண் தீவிரவாதிகள் இந்தியாவில் நுழைவதாக தகவல்:பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இந்த சதியை அறிந்த இந்திய உளவு நிறுவனம் மத்திய அரசை உஷார்படுத்தியது[1]. இதையடுத்து மத்திய அரசு நாடெங்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.இதனால் தீவிரவாதிகளால் கடந்த 3-மாதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ இயலவில்லை. இதன் காரணமாக வெறுப்படைந்த தீவிரவாதிகள், பெண்-தீவிரவாதிகளை பயன்படுத்த முடிவு செய்தனர்[2]. அல்-கொய்தா இயக்கத்தில் பெண்-மனித-வெடிகுண்டு தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். இவர்கள் மூலம் மிகப் பெரிய தாக்குதலை நடத்த தீர்மானித்துள்ளனர்.  பெண் மனித வெடி குண்டுகளில் சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் போர்வையில் அவர்கள் ஊடுருவி உள்ளனர். அவர்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பதுங்கி உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் மும்பையில் தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதிகளுடன் பெண் தீவிவாதிகள் சிலரும் சேர்ந்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அவர்கள் குஜராத் மாநிலத்துக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. அவர்கள் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

 

ஜிஹாதி-தற்கொலை-பெண்-குண்டுகள்: மார்ச் 2009: இதற்கிடையே மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு முன்பாகவே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் பெண் மனித வெடிகுண்டுகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை உயர் அதிகாரிகள் கருதுகிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா,குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, உள்பட சில தலைவர்களை பெண் மனித வெடிகுண்டுகள் குறி வைத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி.தலைவர்கள் அருகில் வரும்,அறிமுகம் இல்லாத பெண்களிடம் மிக,மிக உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண் தற்கொலை தீவிரவாதிகள் தவிர,விஷவாயு மற்றும் வேறு சில புதிய பாணிகளிலும் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி செய்வார்கள் என்று தெரியவந்துள்ளது.இது குறித்து டெல்லியில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

 

சமீபத்தில் ஜிஹாதி-பெண்கள்: ஏப்ரல் 2009: சென்ற வருடம் பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளுடன் மோதியபோது, சில பெண்தீவிரவாதிகள் அச்செயல்களில் ஈடுபட்டது ஆச்சரியமாக இருந்தது. நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவிய மூன்று தீவிரவாதிகளை ஜம்மு காஷ்மீர் போலீசார் சுட்டு கொன்றனர். நவம்பர் 26ம் தேதி 2008 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மும்பை மீது தாக்குதல் நடத்தினர். அவர்களில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் பிடிபட்டான். மற்றவர்கள் சுட்டு கொல்லப்பட்டார்கள். இந்நிலையில் இது போன்ற வெறி தாக்குதலை தீவிரவாதிகள் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மீண்டும் அரங்கேற்றலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீருக்குள் சமீபத்தில் 400க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்று தேர்தலை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளனர். தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இதுவரை நடந்த சண்டையில் சுமார் 30 தீவிரவாதிகளும், 10 ராணுவ வீரர்களும் மரணமடைந்துள்ளனர்.

முதன் முதலில் ஜிஹாதி-பெண் தீவிரவாதி: ஏப்ரல் 2009: இந்நிலையில் நேற்று இந்திய ராணுவத்துக்கு ஜம்முவில் இருந்து வட கிழக்கே சுமார் 180 கிமீ., தூரத்தில் உள்ள தோடா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் உள்ளூர் போலீசாருடன் கிளம்பி அந்த வீட்டை முற்றுகையிட்டனர். இதில் அந்த வீட்டில் தங்கியிருந்த ஒரு பெண் தீவிரவாதி உட்பட மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் பிப்லாவ் நாத் கூறுகையில், நேற்று காலை 9.00 18-04-2009 மணிக்கு துவங்கிய என்கவுன்டர் பிற்பகல் வரை நீடித்தது. இதில் 1 பெண் உட்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த இரண்டு துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம். தீவிரவாதிகள் கூட்டத்தை சேர்ந்த பெண் தீவிரவாதி சுட்டு கொல்லப்படுவது இதுவே முதல் முறை என்றார்[3]. இதையடுத்து காஷ்மீர் பகுதியில் ஆண் தீவிரவாதிகளை தொடர்ந்து சில பெண் தீவிரவாதிகளும் ஊடுருவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியான அந்த பெண் தீவிரவாதியின் பெயர் ஷகிதா பானு என தெரிகிறது. மற்ற இரண்டு ஆண் தீவிரவாதிகளின் பெயர்கள் நிசார் அகமது, ரபீக் குஜ்ஜார். இவர்கள் மூன்று பேருமே லஷ்கர்- இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.

 

இந்நிலையில் கேரளாவில் லவ் ஜிஹாத்: நவம்பர் 2009: காஷ்மீரத்தில் கொல்லப்பட்ட ஒரு பெண் தீவிரவாதி கேரளாவைச் சேர்ந்தவர் என்று சொல்லப்பட்டது. பிறகு கேரளவிலிருந்து, மும்பை பெண்ணுடன் குஜராத்திற்கு சென்றவரும் பிரச்சினையில் சிக்கினர், கொல்லப்பட்டனர். கர்நாடகத்தைச் சேர்ந்த பட்டக்கல் என்ற இடத்திலிருந்து முன்பு சிமி இளைஞர்கள்-பெண்கள் இச்செயல்களில் ஈடுபடுவது தெரிகிறது. முன்பு ராம்சேனா பிரச்சினையில், இதுமாதிரி ஒரு முஸ்லிம் பெண் தன் காதலனுடன் பஸ்ஸில் சிக்கினார், ஆனால், கேரள அரசியல்வாதியின் மகள் என்பதும் விஷயம் அப்படியே அமுக்கப்பட்டது.

 

சூஃபியாவின் பின்னணி: டிசம்பர் 2009: கேரளாவில் செயல்படும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மதானியின் மனைவி சூஃபியா கலமசேரியில் 2005ல் தமிழகப் பேருந்து எரிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தன்னை விடுவிக்கக் கோரி அலுவலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சூஃபியா சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி பி.எஸ். ஜோசப் முன்னிலையில் அந்த மனு விசாரணைக்கு வந்தது.  இதில், சூஃபியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூஃபியா ஜனவரி 1ம் தேதி, 2010 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியின் மனைவி சூபியா மதானிக்கு தொடர்பு இருப்பது, சமீபத்தில் தெரியவந்தது. வங்கதேச ரைபிள் படையினரால் கைது செய்யப்பட்டு, இந்திய பாதுகாப்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி நசீர் என்பவனிடம் கேரள போலீசார் நடத்திய விசாரணையில் இந்த விவரம் தெரியவந்தது.அவரது கணவர் மதானி கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று பின்னர் விடுதலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பெண் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற கட்டுரையை 30-04-2009 அன்று கீழ்கண்ட தளத்தில் வெளியிட்டேன்:

http://vedaprakash.indiainteracts.in/2009/04/30/woman-islamic-terrorist-in-india/

The revelation of a Pakistani woman, Asiya Bibi (23), who is in J&K police’s custody, that ISI is training about 100 women for terror assignments in the state has sent the security establishment into a tizzy.

வேதபிரகாஷ்

19-12-2009 ©


[1] http://economictimes.indiatimes.com/News/Politics/Nation/Now-ISI-training-women-for-jihad-in-JK/articleshow/3995939.cms

[2] http://www.jihadwatch.org/2009/01/pakistans-isi-training-women-in-the-arts-of-jihad-and-terrorism.html

[3] http://thatstamil.oneindia.in/news/2009/04/19/india-three-militants-inlcuding-1-women-killed.html