Posted tagged ‘புர்ஹான் வானி’

அல்லாவின் பெயரால் ஜிஹாத், காபிர்கள் அழிப்பு, ஷஹீத் அடையும் நிலை – எல்லாமே ஹை-டெக் தொழிற்நுட்பத்தில் தான் நடக்கின்றன!

ஜூலை 10, 2016

அல்லாவின் பெயரால் ஜிஹாத், காபிர்கள் அழிப்பு, ஷஹீத் அடையும் நிலை – எல்லாமே ஹை-டெக் தொழிற்நுட்பத்தில் தான் நடக்கின்றன!

Burhan supporting Zakir Naik - twitterஜாகிர் கான் தாக்கம், புர்ஹான் வானி தீவிரவாதியானது, தொடர்புகள்: இங்குதான், ஜாகிர் கான் போன்ற ஜிஹாதி-விற்பன்னர்கள், மாயாஜால மயக்கு பேச்சாளர்கள், பேச்சு-தீவிரவாதிகள் வருகிறார்கள். இஞ்ஜினியரிங், தொழிற்நுட்பம், மருத்துவம் படித்த இளைஞர்கள் இவரது பேச்சுகளுக்கு மயங்கி ஜிஹாதிகளாகின்றனர்[1]. அதனால் தான், “நீ இளம் வயதில், ஏன் இப்படி ஆனாய்?” என்று கேட்டால், “ஜாகிர் நாயக்கின் பேச்சில் ஈர்க்கப் பட்டேன், இஸ்லாத்திற்காக போராட முடிவெடுத்தேன்”, என்று வெளிப்படையாக இவர்கள் சொல்லிகொள்கிறார்கள். அந்நிலையில் தான், ஜாகிர் நாயக்கின் ஊக்குவிப்பு, தூண்டுதல், முதலியவை கண்டறியப்பட்டுள்ளன. புர்ஹான் டுவிட்டரில் ஜாகிர் நாயகிற்கு ஆதரவு தெரிவித்துள்ளான். முன்பெல்லாம் “பாப்ரி மஸ்ஜித்” உடைக்கப்பட்டதால் தான், நாங்கள் பழி வாங்க அவ்வாறு செய்தோம் போன்ற வாதங்கள் இப்பொழுது வருவதில்லை என்பது நோக்கத்தக்கது. ஏனெனில், சுன்னி இஸ்லாம் தவிர மற்ற எந்த இஸ்லாத்தையும் இஸ்லாம் இல்லை என்று போதிக்கப்படுவதால், பெரும்பாலாக ஷியா முஸ்லிம்கள் இந்த ஐசிஸ்-ஐசில்-ஐ.எஸ் ஜிஹாதிகளால் தாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள், அவர்களது மசூதிகளும் இடிக்கப்படுகின்றன, குரான் புத்தகங்களும் எரிக்கப்படுகின்றன.

Burhan supporting Zakir Naikஅல்லாவை மகிழ்விக்க ஷஹீதுகள் உருவாக்கப்படுகின்றனர்: இக்கால நாகரிக படித்த முஸ்லிம் சாதாரணமாக அடிப்படைவாதியாக இருப்பதில்லை. ஆனால், எங்கோ, ஒரு நிலையில், அவன் அவ்வாறாக இருக்கிறான் என்று கண்டறிந்ததும், முதலில் அவனை அடிப்படைவாதியாக்க முயற்சிகள் நடக்கின்றன. முஸ்லிம் என்றதால், சிக்கிரத்தில் அது அவனது மனதை பிடித்து விடுகிறது. அவ்வாறான இஸ்லாமிய அடிப்படைவாதம் புனிதமானது என்று புரிய வைத்த பிறகு, பார், எப்படி நீ அவ்வாறு புண்ணியவானக இருக்கும் போது, உனக்கு இடையூறுகள் செய்கிறார்கள் என்று அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கிறது. அந்நிலையில் கூல்லா மாட்டிக் கொள்கிறான், தாடி வைத்துக் கொள்கிறான். “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” என்பது வேலை செய்ய ஆரம்பிக்கிறது. பிறகு, தீவிரவாத செயல்கள் எல்லாமே புனிதமாகத் தோன்றுகின்றன. “அல்லா மகிழ்கிறார்” என்று கனவு காண்கிறான், சொர்க்க ததவு திறந்துள்ளது என்று உணரிகிறான், பிரகென்ன, ஜிஹாதியாக மாறி, ஷஹீதாகி சொர்க்கத்திற்கு செல்ல வேண்டியது தான்.

Burhan supporting Zakir Naik - Can Zakir Naik say now, he was not inspired by himமுஸ்லிம்களை முஸ்லிம்களே கொல்லும் தீவிரவாதம், முஸ்லிம்அல்லாதவர்களைக் கொல்லும் தீவிரவாதம்: இத்தகைய மனோநிலைகளில் வேலை செய்து வரும் ஜிஹாதிகள் “அல்லாவின் பெயரால்” என்றால் சொல்வதை கேட்கிறார்கள், சுலபமாக ஆணைகளை ஏற்றுக் கொள்கிறார்கள், நடத்திக் காட்டுகிறார்கள். முஸ்லிம்களை முஸ்லிம்களே கொல்லும் தீவிரவாதம் இருப்பது கண்டு ஆச்சரியப் படவேண்டிய அவசியம் இல்லை. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை எப்பொழுது வேண்டுமானாலும் “காபிர்” என்று பிரகடனம் செய்து, ஜிஹாதைத் துவக்கி விடலாம். குரானின் மீது ஆணையிட்டு, ஒரு முஸ்லீம் மறு முஸ்லீமை காபிர் என்று அறிவித்து விட்டால், அவன் மீது ஜிஹாதைத் தொடங்கிவிடலாம். அதாவது அந்த மறு முஸ்லீம் என்பவன் ஒரு குறிபிட்டப் பிரிவை / சமூகத்தை / நாட்டை சேராதவனாக இருப்பான். Burhan-targeting friendsபாகிஸ்தானில் ஷியாக்கள் தாக்கப்படுவது, அவர்கள் மசூதிகள் இடிக்கப்படுவது, அவர்களது மசூதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வது எல்லாமே ஜிஹாத் தான், தீவிரவாதம் தான். அது எப்படி வேலை செய்கிறதோ, அதேபோலத்தான் இந்தியாவிலும் வேலை செய்கிறது. மற்ற முஸ்லிம்கள் ஏற்ருக் கொள்வார்கள் அல்லது தனித்தனி குழுக்கள் ஆவார்கள். இந்நிலையில், முஸ்லிம்-அல்லாதவர்களைக் கொல்லும் தீவிரவாதம் பற்றி சொல்லவே வேண்டாம், அது அல்வா தின்பது போல, கரும்பு தின்ன கூலி கொடுப்பது போல! அதிலும் மனத்தை மாற்றும் போதை மருந்து [psychotropic drug] கொடுத்து வேலை வாங்கும் போது, சுலபமாக நடந்து விடுகிறது. இறந்தவனுடன் எல்லாமே மறைந்து விடுகின்றன. அடுத்தவர்கள் அல்லது ஏவி விட்டவர்கள் சொன்னால்தான் உண்மை வெளிவரும். இல்லையென்றால், ஏதோ தீவிரவாதி, ஜிஹாதி செய்தான் என்று செய்திகளில் படித்து மறந்து விடுவார்கள்.

Burhan Wani - supported by omar, jilani etcதில்லி இமாமும், திக் விஜய் சிங்கும்: ஜாகிர் நாயக்கின் விசயத்தில் கலாட்டா செய்து வரும் திக்விஜய் சிங்கின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். 2013ல் திக் விஜய் சிங்கை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளபோதும்[2], முந்தைய தில்லி இமாம் போல கைது செய்யப்படமால் சுற்றி வருகிறார். இருவரும் இந்துக்களுக்கு எதிராக அவதூறு பேசுவது, தூஷிப்பது, முதலிய வேலைகளில் ஈடுபடுவது ஒப்புமையாக உள்ளது. திக் விஜய் சிங் இந்தியாவில் செய்து வருகிறார் என்றால், தில்லி இமாம் பாகிஸ்தானிற்கும் சென்று பேசியுள்ளார். ஜூலை 17, 2011ல் பாரதிய யுவமோர்சாவினர் திக் விஜயசிங்கிற்கு எதிராக கருப்புக் கொடிகள் காட்டியபோது, காங்கிரஸ்காரர்கள் அவர்களை அடித்துள்ளனர். அதனால் வழக்குத் தொடுத்தபோது, உஜ்ஜயினி கோர்ட்டில், பெயிலில் விடமுடியாத கைது வாரண்டைப் பிறப்பித்தது[3]. இருப்பினும் இப்பொழுது – அதாவது பெங்களூரில் குண்டு வெடித்த அதே நாளில் – இந்தூர் கோர்ட்டில் கைது-வாரண்டிற்கு எதிராக பெயிலைப் பெற்றுள்ளார்[4]. அதே பொல இப்பொழுதும் 2016ல் இத்தனை குண்டுவெடிப்புகள், கொலைகள் நடந்தாலும், திக்விஜய் திசைத்திருப்பும் போக்கில் பேசி வருகிறார். ஜாகிர் நாயக்கே, அவற்றை ஆதரிக்கவில்லை என்றாலும், இவர் ஜாகி நாயக்கை ஆதரிப்பதை விடமாட்டார் போலும். அவருடைய “செக்யூலரிஸம்” அப்படி வேலை செய்து கொண்டிருக்கிறது.

J-K - New type of young terrorist-burhan waniபண்டிட்டுகள், பட்டுகள் எல்லாம் ஜிஹாதிகள் ஆகிறார்களே?: இந்த பண்டிட்டுகள், பட்டுகள் இந்துக்கள் மட்டுமல்லாது, பிராமணர்களும் கூட, பிறகு, அவர்கள் எப்படி ஜிஹாதிகள், தீவிரவாதிகள் ஆனார்கள்? அதாவது, சாத்விக குணம் கொண்டவர்கள், அப்பாவிகள், கோழைகள், பயப்படுபவர்கள் …….என்றெல்லாம் இகழப்படும் பார்ப்பனர்கள், அங்கு தீவிரவாதிகளாகி விட்டனர் எனும்போது வியப்பாக இருக்கிறது. இதை இஸ்லாத்தின் மேன்மை என்பதா, அல்லது அவர்கள் வழிதவறி சென்று விட்டனர் என்பதா? ஒருவேளை முஸ்லிம்களாகி, இறைச்சி முதலியவற்றை உண்டு, சிறுவயதிலிருந்தே மாற்றப்பட்டு விட்டாதால், இரண்டு-மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு, அத்தகையவர்களாக உருவாக்கப்படுகிறார்களா என்று நோக்கத்தக்கது. இனிமேல், இதையும் “பார்ப்பனீய தீவிரவாதம்” என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்களா? முஸ்லிம்களாகி, இறைச்சி முதலியவற்றை உண்டு, சிறுவயதிலிருந்தே மாற்றப்பட்டு விட்டாதால், இரண்டு-மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு, அத்தகையவர்களாக உருவாக்கப்படுகிறார்கள் என்பது மனோதத்துவரீதியில் அறிந்து கொள்ளலாம். இங்கு பாரம்பரிய காரணிகளை விட, சுற்றுசூழ்நிலை காரணிகள் அதிகமாகவே தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சுமார் 200 வருடங்களில் அப்பகுதிகளில் இருந்த இந்துக்களின் எண்ணிக்கை குறைந்ததற்கும், தீவிரவாதம் வளர்ந்ததற்கும் உள்ள சம்பந்தங்ளையும் ஆராயலாம்.

© வேதபிரகாஷ்

10-07-2016

[1] A new breed of militants is rising in Kashmir – young, educated, tech-savvy. HT travelled to the valley to find out what is fuelling these young men to take up arms against the state.

http://www.hindustantimes.com/static/the-young-militants-of-kashmir/

[2] http://articles.timesofindia.indiatimes.com/2013-04-03/indore/38247299_1_digvijay-singh-bjym-jiwajiganj-police-station

[3]  A local court here on Tuesday issued a non-bailable arrest warrant against Congress General Secretary Digvijay Singh and Ujjain’s Congress MP Prem Chand Guddu after they failed to appear before it in connection with a case against them and others for allegedly thrashing Bharatiya Janata Yuva Morcha (BJYM) workers.

http://zeenews.india.com/news/madhya-pradesh/local-court-issues-non-bailable-warrant-against-digvijay-singh_839408.html

[4]  Indore Bench of Madhya Pradesh High Court on Wednesday granted anticipatory bail to senior Congress leader Digvijaya Singh and party MP Prem Chand Guddu in connection with a case filed against them and others for allegedly thrashing BJP youth wing workers in Ujjain in 2011. Justice PK Jaiswal, who on Tuesday heard arguments on separate applications filed by the two and reserved his judgement, granted pre-arrest bail on Wednesday, their lawyer Akash Sharma told PTI.

http://ibnlive.in.com/news/high-court-grants-anticipatory-bail-to-digvijaya-singh-mp/386123-37-64.html

காஷ்மீரத்தில் ஹிஜ்புல் முஜாஹித்தீன்-தளபதி தோன்றிய விதம் – பேற்றோரே உருவாக்கிய ஜிஹாத்-தியாகி!

ஜூலை 10, 2016

காஷ்மீரத்தில் ஹிஜ்புல் முஜாஹித்தீன்-தளபதி தோன்றிய விதம் – பேற்றோரே உருவாக்கிய ஜிஹாத்-தியாகி!

burhan father proud of his son

பெற்றோரே மகனை தீவிரவாதியாக்க ஊக்குவித்தனர்: பள்ளித் தலைமையாசிரியரின் மகனான புர்கான், படிப்பில் கெட்டிக்காரராக இருந்தான். ஒருகட்டத்தில் படிப்பில் நாட்டமில்லாமல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாக காணாமல் போனான். இதுவே முரண்பாடாக இருக்கிறது. பரீட்சைக்கு முன்னால் பையனை காணோ என்றால், பெற்றோரறெப்படி அமைதியாக இருந்தனர்? படிப்பில் கெட்டிக்காரனாக இருப்பவன் எப்படி படிப்பில் நாட்டமில்லாமல் போவான் என்று தெரியவில்லை. பின்னர் ஹிஸ்புல் இயக்கத்தில் சேர்ந்திருப்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. வயது 15 லேயே தீவிரவாடியாகி விட்டான் எனும்போது, அபோழுதாவது தவறு என்று சுட்டிக் காட்டி, மகனை மீட்டிருக்க வேண்டும், ஆனால், தந்தை என்ற முறையிலோ, ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் என்ற வகையிலோ ஒன்றும் செய்யவில்லை என்றே தெரிகிறது. வானியின் தந்தை, அதை “அல்லாவின் சேவையில் ஷஹீதானான்”, என்று தனது மகனை போற்றினார்[1] எனும்போது, எல்லா உண்மைகளையும் அறிந்து, மகனின் தீவிரவாத்தை ஆதரித்தார் என்று தான் தெரிகிறது. ஏற்கெனவே, ஒரு மகனை இழந்ததும் அவருக்கு பொருட்டாகத் தேரியவில்லை போலும். பெற்ற மகன்களை ஜிஹாதிகளாக்கி, ஷஹீதுகள் என்று போற்றி, மேன்மேலும், கொலைகள், குரூர பலிகள், முதலியவற்றைப் பெருக்கவே, அவர்கள் மனங்கள் விரும்புகின்றன போலும்.

J-K - New type of young terrorists- techie, computer savvyவழக்கம் போல பிணத்தை வைத்துக் கொண்டு நடத்திய கலவரங்கள்: 144-ஊரடங்கு உத்தரவை மீறி ஊர்வலத்தை நடத்தியுள்ளனர். தேசவிரோத, ஜிஹாதி கோஷங்களை முழங்கியுள்ளனர். உடலடக்கம் பின்பும், கல்லேறிந்து கலாட்டா செய்துள்ளனர்;  ராணுவம், போலீஸார் இருந்தாலும், அவர்கள் இந்த வெறிபிடித்த கூட்டத்தின் செயல்களுக்கு எல்லாம் பொறுத்தே இருந்தனர். எனினும், பிரிவினைவாதிகளின் திட்டப்படி பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது[2]. போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி ஆக்ரோஷமாக கற்களைவீசி தாக்குதல் நடத்தியதால் பொதுமக்கள் யாரும் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இந்துக்களின் வீடுகள், அரசு கட்டிடங்கள், வாகனங்கள் என்று குறி வைத்து தாக்கினர். மறைந்திருந்த-அடையாளம் கண்டுபிடிக்க முடியாத தீவிரவாதிகள் சுடவும் செய்தனர். இவ்வாறாக தூண்டிவிடும் போக்கும் அறிந்த விசயமே. இதனால், கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் முயன்றது. அந்நிலையில் குல்காம், அனந்த்நாக் மாவட்டங்களில் நடந்த வன்முறை மோதல்களில் 11 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்[3].

J-K - New type of young terrorists.stone jihadதாக்குதல், பதில்தாக்குதல்கலவரம், துப்பாக்கி சூடு, சாவு, ஊர்வலம், கலவரம் என்று நடப்பது: இந்த செய்தி பரவியதும், ஹால் புல்வாமா என்ற இடத்தில் இருந்த இந்து-பண்டிடுகள் தற்காலிக கேம்ப் / தங்குமிடம் கற்களால் தாக்கப்பட்டது. குல்காம் என்ற இடத்தில் பாஜக அலுவலமும் தாக்கப்பட்டது[4]. இதனை தமிழ் ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை. தெற்கு காஷ்மீரில் 5 காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச்சாவடிகள் தீக்கிரையாக்கப்பட்டன[5]. “இந்திய நிர்வாகத்துக்கு” உட்பட்ட காஷ்மீரில் கடந்த சில ஆண்டுகளாக திடீரென வன்முறைகள் அதிகரித்துள்ளன என்று “பிபிசி” கூறுகிறது[6]. ஆயுதம் ஏந்திப் போராடும் தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் ஆதரவு அதிகரித்து வருவது, பாதுகாப்புப் படையினருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. எழுபது லட்சம் பேர் உள்ள காஷ்மீர் பள்ளத்தக்கில், சுமார் 143 தீவிரவாதிகள் முழுவேகத்துடன் இயங்குவதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. அந்த 143 பேரில், 89 பேர், பெரும்பாலும் தென் காஷ்மீர் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். காஷ்மீர் முழுவதும் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்குமாறு பிரிவினைவாதத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்[7].

Burhan Wani - praised by PAK media Dwan etcதமிழ் ஊடகங்களின் தேசவிரோத போக்கு செய்திகள்: “இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில்”, என்கிறது பிபிசி. தமிழ் தெரிந்த ஒருவர் இவ்வாறு எழுதியிருந்தாலும், இந்திய உணர்வு அதில் இல்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதே நேரத்தில் லெட்டினென்ட் ஜெனரல் சைது அடா ஹஸ்னைன் என்பவரின், “ஒரு துரோகியின் இறப்பு: புர்ஹான் வானியின் கொலையும், அதற்கு பிறகு நடந்தவையும்”, என்ற விவரமான கட்டுரை அவசியம் படிக்க வேண்டும்[8]. ஒரு முஸ்லிமாக இருந்தாலும், காஷ்மீரத்தின் இப்பிரச்சினை பற்றி நேற்று வரை நடந்தவற்றை விவரத்துடன் கொடுத்துள்ளார். அவர் வானியை “துரோகி” என்றே ராணுவ பாஷையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்திய நிருபர், அதைவிட மோசமாக செய்தியை வெளியிட்டது கவனிக்கலாம். இவர் அனைத்துலக விவேகானந்த நிறுவனம் மற்றும் தில்லி கருத்துவாக்கம் குழு முதலியவற்றுடன் சம்பந்தப்பட்டுள்ளார். தமிழக ஊடகத்துறையில் உள்ளவர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்களது சித்தாந்த நோக்கிலேயே செயல்படுகின்றனர் என்று தெரிகிறது.

qasim funeral huge crowd

Srinagar, India-October 29-2015: Kashmiri villagers carry the body of top Lashkar-e-Taiba commander Abu Qasim during his funeral procession in Bugam district Kulgam some 75 km from Srinagar, Kashmir, India. Police on Thursday claimed that the most wanted LeT Commander Abu Qasim was killed during an encounter in Khandaypora area of Kulgam district, south Kashmir. (Photo by Waseem Andrabi/ Hindustan Times) – this is only for illustrative purpose.

இந்தியாவில் மறுபடி இஸ்லாம் ஆட்சி நிறுவப்பட வேண்டும்: ஐசிஸ், தலிபான், அல்-குவைதா, இஜ்புல் முஜாஹித்தீன் போன்ற ஜிஹாதி-தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவைத் தாக்க வேண்டும், பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. இருபக்கமும் இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தான், பங்களாதேசம், ஊடுருவி செல்ல “கம்யூனிஸ” நேபாளம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் இருப்பதால், அவர்களது போக்குவரத்து இப்பகுதிகளில் சுலபமாக இருக்கின்றன. எல்லை மாநிலங்களான பீஹார், மேற்கு வங்காளம் இவர்களின் போக்குவரத்திற்கு உபயோகமாக இருக்கின்றன. நிதிஷ்குமார் மற்றும் மம்தா ஆட்சிகளில் “முஸ்லிம்களின் ஆதரவு, முஸ்லிம்களை டாஜா செய்தல்” என்று கொள்கை கடைப்பிடிப்பதால், எந்த வழக்கில் முஸ்லிம் சம்பந்தப்பட்டிருந்தாலும், மென்மையாகவே அரசு அதிகாரிகள், போலீஸார் முதலியோர் நடந்து கொள்கின்றனர். மேலும், முஸ்லிம்களே அப்பகுதிகளில் அரசியலில் ஆதிக்கம் செல்லுத்தி வருவதால், எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி என்றுள்ளோரும் ஆதரவு-பாதுகாப்பு கொடுக்கின்றனர். இதனால், பரஸ்பர ஆதாயம், பலன்கள் முதலியவற்றால், தீவிரவாதிகள் தாராளாமாகவே செயல்பட்டு வருகின்றனர்.

Support-for-Burhan-Wani-Breathtaking-Literallyஇணைதள ஜிஹாதில் ஆட்களை சேர்த்தல்: இந்நிலையில் தான், இணைதளம் மூலம் படித்த இளைஞர்களை ஐசிஸ்/ஐசில் போன்றவை வேலைக்கு வைத்துக் கொள்ள ஆரம்பித்தன. இஞ்ஜினியரிங், தொழிற்நுட்பம், மருத்துவம் போன்ற படிப்புகள் படித்தவர்களை “தகுந்த வேலை” என்று அமர்த்தி, நன்றாக சம்பளம் கொடுத்து, பிறகு, படிப்படியாக, அவர்களது நாடித்துடிப்பை அறிந்து, மதவெறி ஏற்றி, ஜிஹாதித்துவத்தை போதித்து, இந்தியாவில் உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை, நீங்கள் இவ்வாறிருக்கிறீர்கள் என்றால், அதற்கு காபிர்களின் ஆட்சி தான் காரணம், அவர்கள் ஆட்சி ஒழிய வேண்டும், 300 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த இஸ்லாமிய அரசை இந்தியாவில் நிறுவ வேண்டும், அப்பொழுது, இந்தியாவிலேயே, உங்களுக்கு இதே போன்ற வேலை கிடைக்கும். அதற்கு தான் நாங்கள் பாடுபட்கிறோம், நீங்கள் ஒத்துழையுங்கள் என்று ஆரம்பித்து, தீவிரவாதிகளாக்குகின்றனர். அவர்களுக்கு எல்லாம் கொடுத்து அடிமையாக்குகின்றனர். தினம்-தினம் செக்ஸுக்கு இளம்பெண்கள், குடி, போதை மருந்து, நல்ல சாப்பாடு…….என்று கொடுத்து வளைத்து போடுகின்றனர். பிறகு, என்ன சொன்னாலும் கேட்பர் என்ற நிலை உண்டாக்கியவுடன், ஜிஹாதியாக, பிதாயுனாக மாற்றுகின்றனர். பிதாயீன் என்று சொல்லிக் கொண்டு யார் வேண்டுமானாலும் இருக்கலாம் போலிருக்கிறது. அட்னன் ரஷீத், முந்தைய பாகிஸ்தானிய விமானப்படையினர் கூட அவ்வாறு உள்ளனர்[9]. இவன் முஸாரப்பை கொல்லும் முயற்சியில் கைது செய்யப்பட்டான். பட்கல் என்பவனும் அவ்வாறேயுள்ளான்[10]. ஜிஹாதிகளும் அவ்வாறே இருக்கிறார்கள். இஸ்லாத்திற்காக உயிரை விடுவதில் இருகூட்டத்தாரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள், உயிரை விடுகிறார்கள். பெயர்கள், இடங்கள் மாறினாலும், அவர்களது செயல்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. அதனால், ஊக்குவிக்கும் மூலம் ஒன்றுதான் என்று வெளிப்படுகிறது.

© வேதபிரகாஷ்

10-07-2016

[1] At the funeral in Tral Eidgah, eyewitnesses said three to four armed Hizbul Mujahideen militants fired a gun salute. Wani’s father Muzaffar called his son a “martyr in the service of Allah”.

http://timesofindia.indiatimes.com/india/11-killed-200-hurt-as-Valley-erupts-over-Wanis-death/articleshow/53135735.cms

[2] மாலைமலர், ஜம்மு காஷ்மீரில் தொடரும் வன்முறைக்கு 2 பேர் பலி: 50 பேர் காயம், பதிவு: ஜூலை 09, 2016 17:21, மாற்றம்: ஜூலை 09, 2016 17:22

[3] The Times of India, 11 killed, 200 hurt as Valley erupts over Wani’s death, M Saleem Pandit| TNN | Jul 10, 2016, 04.16 AM IST

[4] As news of Wani’s killing spread, mobs pelted stones on Kashmiri Pandit transit camps in Haal Pulwama and attacked a BJP office in Kulgam. Authorities also suspended train services within the Valley.

http://timesofindia.indiatimes.com/india/11-killed-200-hurt-as-Valley-erupts-over-Wanis-death/articleshow/53135735.cms

[5] http://www.maalaimalar.com/News/TopNews/2016/07/09172201/1024590/Violence-erupts-in-Kashmir-two-protesters-killed.vpf

[6] பிபிசி.தமிழ், காஷ்மீரில் வன்முறை வெடித்தது: 8 பேர் சாவு, 09-07-2016: 11.30 pm

[7] http://www.bbc.com/tamil/global/2016/07/160709_kashmir_8_dead

[8] Lt Gen Syed Ata Hasnain, The death of a renegade : Burhan Wani’s killing and its aftermath, Posted on 10/07/2016 by Dailyexcelsior.

(The writer is an ex GOC of the Srinagar based 15 Corps, now associated with the Vivekanand International Foundation and the  Delhi Policy Group), feedbackexcelsior@gmail.com

[9]A special fidayeen unit headed by Adnan Rasheed, a former Pakistan Air Force personnel has been formed by the Pakistani Taliban and the Islamic Movement of Uzbekistan to attack jails and free imprisoned militants. Rasheed was convicted for an attempt to assassinate former President Pervez Musharraf.

 http://www.indiatvnews.com/news/world/former-paf-man-heads-fidayeen-unit-to-free-jailed-militants–10548.html

[10] பிதாயீன் மாதிரி தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று தான் பட்கல் வெறியுடன் உள்ளான். அதே மாதிரி குண்டுவெடி-கொலைகளையும் செய்துள்ளான்.

http://kashmirmonitor.org/03032013-ND-bhatkal-wanted-to-carry-fidayeen-strike-in-train-with-foreign-passengers-in-2011-43016.aspx

ஹைடெக்-ஜிஹாத் தீவிரவாதம், இணைதள ஆட்சேர்ப்பு, சேடிலைட்-போதனை, ஆனால், குண்டுவெடிப்பில் சாவுதான், ரத்த பீறல்தான், கைகால் சேதம் தான்!

ஜூலை 10, 2016

ஹைடெக்-ஜிஹாத் தீவிரவாதம், இணைதள ஆட்சேர்ப்பு, சேடிலைட்-போதனை, ஆனால், குண்டுவெடிப்பில் சாவுதான், ரத்த பீறல்தான், கைகால் சேதம் தான்!

J-K - New type of young terrorists- Tral hotbed of terror

ரம்ஜான் முடியும் வாரத்தில் நடந்த தீவிரவாத கொலைகள் 07-07-2016 வரை: முதல் வாரத்தில் ரம்ஜான் முடியும் தருவாயில் உலகத்தில் பல இடங்களில் இஸ்லாம் பெயரில் தீவிரவாத குண்டுவெடிப்புகள், துப்பாக்கி சூடுகள், குரூர கத்திக் குத்துகள்-வெட்டுகள் என்ற முறையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொலைசெய்யப் பட்டிருக்கிறார்கள். தினபதற்கு விலங்குகள் என்றால், அவர்களது ஜிஹாதி-பசிக்கு மனிதர்களே தேவைப்பட்டனர் போலும். 01-07-2016 மற்றும் 07-07-2016 தேதிகளில், இந்தியாவுக்குள் இருக்கும் அண்டை நாடான பங்களாதேசத்தில் 9/11 மற்றும் போன்ற தாக்குதலில் மக்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். அதே வாரத்தில் தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அதே போன்ற தீவிரவாத செயல்கள் தினம்-தினம் நடந்து கொண்டிருந்தன. இந்திய ராணுவத்திற்கு, இந்தியாவும் தாக்கப்படும் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன. அந்நிலையில் தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று சுட்டுக் கொன்றனர்.

Burhan Wani - praised by Urudu PAK media

08-07-2016 வெள்ளிக்கிழமைபாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டதால், பதிலுக்கு சுட்டதில் கொலை: இதுகுறித்து அந்த மாநில காவல் துறை டிஜிபி கே.ராஜேந்திரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது[1]: “பர்ஹன் முசாஃபர் வானி (21) என்ற பயங்கரவாதி, முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்து இளைஞர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர வைக்க முயற்சி செய்து வந்தார். இவரைப் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தின் கோகெர்நாக் பகுதியில் அவர் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்ற பாதுகாப்புப் படையினர், அவரைத் தேடினர். அப்போது, ஓர் இடத்தில் பதுங்கி இருந்த பர்ஹன் முசாஃபரும், மேலும் 2 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்”, என்று ராஜேந்திரா தெரிவித்தார். காஷ்மீரின் புதிய தீவிரவாதத்தின் போஸ்டர் பாய் என்று அழைக்கப்படும், 21 வயதான பர்ஹன் முசாஃபர் வானி தனது 15-ஆவது வயதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. இவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை அறிவித்திருந்தது[2].

J-K - New type of young terrorists- Pandits, Bhats turning into jihadists

ஹிஜ்புல் முஜாஹித்தீன் அட்டகாசமும், புர்ஹான் வானியின் இணைதள ஜிஹாதும், உண்மையன ஜிஹாதும்: கடந்த 1989ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரித்து தர வேண்டுமென்று ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கம் பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பாதுகாப்புப் படையினரையும் கொன்றுள்ளது, என்றாலும், மத அடிப்படையில் நடந்து வரும் அத்தகைய தீவிரவாதம், காஷ்மீரத்திலிருந்து எல்லா இந்துக்களையும் கொன்று விட்டது, மிச்சமிருந்தவர்களை விரட்டி விட்டது என்று இங்கு குறிப்பிடவில்லை. இந்த இயக்கத்தின் முக்கிய அங்கமாக இருந்தார் புர்கான் என்ற 21 வயது இளைஞர். இவரை 08-07-2016 அன்று இரவு பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்திய ராணுவத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி ஆகும். பள்ளித் தலைமையாசிரியரின் மகனான புர்கான், படிப்பில் கெட்டிக்காரராக இருந்தான். ஒருகட்டத்தில்  படிப்பில் நாட்டமில்லாமல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 10 நாட்கள் முன்னதாக காணாமல் போனான். இதுவே முரண்பாடாக இருக்கிறது. படிப்பில் கெட்டிக்காரனாக இருப்பவன் எப்படி படிப்பில் நாட்டமில்லாமல் போவான் என்று “விகடன்” விளக்கவில்லை. பெற்றோர்கள் அத்தகைய மாற்றத்தைக் கண்காணித்து சரிபடுத்தியிருக்க வேண்டும். பின்னர் ஹிஸ்புல் இயக்கத்தில் சேர்ந்திருப்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. அப்போது அவனுக்கு வயது 15 தான். அபோழுதாவது தவறு என்று சுட்டிக் காட்டி, மகனை மீடிருக்க வேண்டும். செய்யவில்லை என்றே தெரிகிறது.

 J-K - New type of young terrorists

தேசத்துரோகியை புகழ்ந்து தள்ளிய தமிழ் ஊடகங்கள்: இணையதளங்கள், சமூக வலைத் தளங்களை கையாளுவதில் புர்கான் கெட்டிக்காரனாக இருந்ததால், இதன் வாயிலாக தீவிரவாத இயக்கத்துக்கு வேண்டிய நபர்களை தேர்ந்தெடுப்பதில் திறமையாக செயல்பட்டான், என்று திடீரென்று “விகடன்” கூறுகிறது. அவ்வாறான திறமையை அவன் எப்படி, எங்கு, எவ்விதம் பெற்றான் என்று விளக்கவில்லை. தீவிரவாதச் செயல்களை வீடியோவாக பதிவு செய்து அதனை ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிடுவான்[3]. அதற்கு லைக் போடுபவர்கள், காமாண்ட் போடுபவர்களை குறி வைத்து நட்பாக்கிக் கொள்வான்[4]. பின்னர் அந்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து இயக்கத்தில் சேர்க்கும் வேலையில் ஈடுபடுவான். அப்படி 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை அந்த இயக்கத்தில் புர்கான் சேர்த்துள்ளான்[5]. தான் சேர்த்து விட்டவர்கள் ‘ஆக்டிவாக’ இருக்கிறார்களா என்றும் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளான். டெல்லி செங்கோட்டையில் இஸ்லாமியக் கொடி பறக்கவிட வேண்டுமென்பதுதான் புர்கானின் கோஷமாக இருந்தது. ஹிஸ்புல் இயக்கத்தின் முக்கிய பொறுப்புக்கு வந்திருந்த இவனது தலைக்கு இந்திய அரசு 10 லட்சம் அறிவித்திருந்தது, என்றேல்லாம் புகழ்ந்து தள்ளின ஊடகங்கள். தேசத்துரோகத்தில் ஈடுபட்டான் என்று ஒரு வரி கூட இல்லை. சுட்டுக் கொல்லப்பட்ட புர்கான் ஒரு கிரிக்கெட் வீரனும் கூட.  கடந்த 2015ம் ஆண்டு புர்கானின் சகோதரன் காலீத்தையும் இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.  காலீத், புர்கானை சந்திக்க சென்று கொண்டிருந்த போது பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர் என்று அரைகுறையாக செய்தியை வெளிட்டுள்ளது. தாக்கினால், பதிலுக்கு தாக்கத்தான் செய்வர், அதனை குறிப்பிடாமல், இவ்வாறு செய்திகளை வெளியிடுவது விசித்திரம் தான்!

Kashmiri mourners carry the body of Burhan Muzaffar Wani, the new-age poster boy for the rebel movement in the restive Himalayan state of Jammu and Kashmir, ahead of his funeral in Tral, his native town, 42kms south of Srinagar on July 9, 2016. A top commander from the largest rebel group in Indian-administered Kashmir was killed in a gun battle with government forces on July 8, police said. Young and media savvy, Burhan Wani was a top figure in Hizbul Mujahideen and had a one million rupee ($14,900) bounty on his head. Wani, 22, joined the rebel movement at the age of 15 and in recent years had been behind a huge recruitment drive to the group's ranks, attracting young and educated Kashmiris to the decades-old fight for independence of the restive disputed region. Viewed locally as a hero, his death sparked protests in nearby Anantnag town, with hundreds taking to the streets shouting independence slogans and lauding Wani as a revolutionary, witnesses said. / AFP PHOTO / TAUSEEF MUSTAFA

Kashmiri mourners carry the body of Burhan Muzaffar Wani, the new-age poster boy for the rebel movement in the restive Himalayan state of Jammu and Kashmir, ahead of his funeral in Tral, his native town, 42kms south of Srinagar on July 9, 2016.
A top commander from the largest rebel group in Indian-administered Kashmir was killed in a gun battle with government forces on July 8, police said. Young and media savvy, Burhan Wani was a top figure in Hizbul Mujahideen and had a one million rupee ($14,900) bounty on his head. Wani, 22, joined the rebel movement at the age of 15 and in recent years had been behind a huge recruitment drive to the group’s ranks, attracting young and educated Kashmiris to the decades-old fight for independence of the restive disputed region. Viewed locally as a hero, his death sparked protests in nearby Anantnag town, with hundreds taking to the streets shouting independence slogans and lauding Wani as a revolutionary, witnesses said. / AFP PHOTO / TAUSEEF MUSTAFA

09-07-2016 சனிக்கிழமை பிண ஊர்வலம்: ஸ்ரீநரில் 114 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு எதிராக பிரிவினைவாதிகள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்[6]. இதனால், ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவுக்கு இணையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சமூக வலைத்தளங்களின் மூலம் வீண் வதந்திகள் பரவுவதை தவிர்க்கும் வகையில்  மொபைல் இண்டர்நெட் சேவையும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. உள்மாவட்டங்களுக்கு இடையில் ஓடும் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், அங்குள்ள டிரால் நகரில் வானியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது[7].  நான்கு ஹிஜ்புல் முஜாஹித்தீன் வீரர்கள் வானத்தை நோக்கி சுட்டனர். ராணுவம், போலீஸார் முதலியோர் இருக்கு போதே, இவ்வாறு ஹிஜ்புல் முஜாஹித்தீன் எப்படி துப்பாக்கிகளோடு வந்தனர் என்று தெரியவில்லை. வானியின் தந்தை, அதை “அல்லாவின் சேவையில் ஷஹீதானான்”, என்று தனது மகனை போற்றினார்[8]. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு படையினரின் கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி மாற்று வழியில் வந்து பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்[9]. சட்டத்தை மீறியது பற்றி எந்த மனித உரிமை மற்றும் செக்யூலரிஸ பழங்கள் தங்களது கருத்துகளை வெளியிடவில்லை. இந்த கூட்டத்தினரிடையே பேசுவதற்காக சில பிரிவினைவாதிகள் வர முயற்சித்தனர். அதாவது சாவிலும் ஆதாரம் தேடத்தான் அந்த ஜிஹாதிகள் இருக்கிறார்கள் என்பதை, அந்த முஸ்லிம்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வினோதம் தான். ஆனால், பலத்த பாதுகாப்பை மீறி பிரிவினைவாதிகளால் அங்கு செல்ல முடியவில்லை.

© வேதபிரகாஷ்

10-07-2016


[1] தினமணி, ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி பர்ஹன் வானி சுட்டுக் கொலை: காவல்துறை டிஜிபி, By dn-First Published : 09 July 2016 11:31 AM IST

[2]http://www.dinamani.com/latest_news/2016/07/09/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA/article3521154.ece

[3] விகடன், ஃபேஸ்புக்கில் ஆள் பிடிப்பார்:ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட புர்கான்!, Posted Date : 16:59 (09/07/2016).

[4] Burhan Wani managed in five years, to create a band of 60-70 young locally recruited terrorists. Many were well educated and technically proficient to exploit social media for their cause. Their photographs in combat fatigues with weapons went viral on Facebook and Whatsapp.

http://www.dailyexcelsior.com/death-renegade-burhan-wanis-killing-aftermath/

[5] http://www.vikatan.com/news/india/65996-dead-in-protests-after-terrorist-burhan-death.art

[6] தினத்தந்தி, பர்ஹான் வானி இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு, காஷ்மீரில் தொடர்ந்து பதட்டமான சூழல், பதிவு செய்த நாள்: சனி, ஜூலை 09,2016, 2:28 PM IST; மாற்றம் செய்த நாள்: சனி, ஜூலை 09,2016, 2:28 PM IST.

[7] Tral is notorious for its alienation and use of violence over the last 26 years. The Wagad ridge to its West and the Dachigam Forest to the North afford excellent hideouts. Despite presence of a full RR unit here along with CRPF the area has only been passingly under control. Burhan belonged to Tral and last year in April his brother was killed in an encounter when he was mistakenly taken to be Burhan even as he had gone to the forest to meet his renegade brother.

http://www.dailyexcelsior.com/death-renegade-burhan-wanis-killing-aftermath/

[8] At the funeral in Tral Eidgah, eyewitnesses said three to four armed Hizbul Mujahideen militants fired a gun salute. Wani’s father Muzaffar called his son a “martyr in the service of Allah”.

http://timesofindia.indiatimes.com/india/11-killed-200-hurt-as-Valley-erupts-over-Wanis-death/articleshow/53135735.cms

[9] http://www.dailythanthi.com/News/India/2016/07/09142807/Thousands-Gather-at-Tral-For-Funeral-of-Hizbul-Militant.vpf