Posted tagged ‘பாஜக’

“தலித்-முஸ்லிம்” மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவன் விஜயம், தலித் பெண்கள் எதிர்ப்பு ஏன்? (4)

மே 13, 2018

தலித்முஸ்லிம்மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவன் விஜயம், தலித் பெண்கள் எதிர்ப்பு ஏன்? (4)

Thiruma VALmeets Muslims-at Bomminaicketpatti- 12-05-2018

பொம்மிநாயக்கன்பட்டி என்கின்ற துலுக்கப்பட்டியில்….மதநல்லிணக்கம் சீர்குலைகிறது: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பொம்மிநாயக்கன்பட்டி என்கின்ற துலுக்கப்பட்டி…….” என்று ஆரம்பித்தது, அவரது போலித்தனத்தை காட்டியது. கலவரம் நடந்தவுடன் என்னால் உடனே வரமுடியவில்லை. ஆனால் எனது கட்சியினர் ஏராளமான உதவிகளை செய்துள்ளனர். நடந்து முடிந்த கலவரம் குறித்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். கலவரத்தில் கைதானவர்களை ஜாமீனில் எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உள்ளோம். மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் நோக்கிலே சில அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன”, இவ்வாறு திருமாவளவன் கூறினார்[1]. “குடிசைகள் எரிந்த காலத்தில் வராத சில அமைப்புகள் தற்போது இங்கு வர ஆர்வம் காட்டுகின்றனர். மத நல்லிணக்கத்தைச் சீர் குலைக்கும் நோக்கிலே செயல்படுகின்றனர்,” என இந்து அமைப்புகளைச் சாடினார் திருமாவளவன்[2]. 12-05-2018 அன்று மாலை ஹெச்.ராஜா பொம்மி நாயக்கன்பட்டிக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இரு தரப்பினரும் சமாதானம் பேசி பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்[3].

Thiruma-at Bomminaicketpatti- 12-05-2018-1

திருமாவளவனை பாதிக்கப்பட்ட பெண்கள் கேள்விகள் கேட்டது: முன்னதாக, இஸ்லாமியர் மற்றும் தலித் சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து திருமாவளவன் இதுவரை நேரில் சென்று பார்வையிடவில்லை என பல்வேறு பிரிவினர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்[4]. இதனால், வேறு வழியில்லாமல், அங்கு செல்ல தீர்மானித்தார்[5]. தினசரி, “திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[6]. “தேவதானப்பட்டி அருகே கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஆறுதல் கூறினார். அப்போது, பெண்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.” என்று தினத்தந்தியும் குறிப்பிட்டுள்ளது[7]. திருமா கொடுத்த விளக்கம், “கலவரம் நடந்த இடத்துக்கு நான் தாமதமாக வந்ததாக கூறுகிறார்கள். நான் வராவிட்டாலும், என்னுடைய கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் இங்கு வந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்[8]. பல ஊர்களில் தலித் மக்களின் குடிசைகள் எரிக்கப்பட்டு இன்னல்களுக்கு ஆளானார்கள். அங்கெல்லாம் ஆர்வம் காட்டாத சிலர், இந்த ஊர் பிரச்சினையில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமாக உள்ளது…..எங்கள் கட்சி பொறுப்பாளர்கள் இருதரப்பிடமும் ஒற்றுமையாக இருக்க கூறினர். ஆனால் காழ்ப்புணர்ச்சியில் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. ஒற்றுமையை சீர்குலைக்க பார்க்கிறார்கள். மக்கள் அதற்கு இடம் தரமாட்டார்கள்…….” என்றார்[9].

Tiruma meets affected-at Bomminaicketpatti -ABR Mahal -12-05-2018

திருமாவளவனின் போக்கு, மனப்பாங்கு முதலியன: திருமா நிச்சயமாக, துலுக்கரிடம் “தாசன்” போன்றுதான் நடந்து கொள்கிறார். அதன் பின்னணி என்ன என்பதனை காரரியங்களுடன் தெரியப் படுத்தப் பட வேண்டும், அறியப் பட வேண்டும். இங்கு தனது இனத்தவரிடமும், துலுக்கருடனும் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது மேலே எடுத்துக் காட்டப்பட்டது:

மசூதிக்குச் சென்று குல்லா போட்டுக் கொண்டு பேசுகிறார். ஏ.பி.ஆர். மஹாலில் “தலித்துகளுடன்” பேசுகிறார். அதாவது, கோவிலில் உட்கார்ந்து பேசவில்லை, எந்தவித இந்துமத சின்னங்களையும் திக்கவில்லை.
துலுக்கர் முன்பு நின்று கொண்டு பேசுகிறார். தலித்துகள் தரையில் உட்கார, இவர் சேரில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்[10].
முஸ்லிம் சொல்வதை பவ்யமாக, தரையில் உட்கார்ந்து கொண்டு கேட்கிறார். கையை நீட்டி பேசுகிறார், ஒரு பெண் எழுந்து நின்று பேசும் போது, முகத்தை இருக்கமாக வைத்துக் கொள்கிறார்.
துலுக்கரைக் கட்டிப்பிடித்தும், பணிவோடும் பேசுகிறார். ஒரு இந்து பெண்ணிடம் பேசும் போது, இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு முறைத்துப் பார்க்கிறார்.
40 நிமிடம் உட்கார்ந்ததால், இடது பக்கம் என்றெல்லாம் சாய்ந்து உட்காருகிறார், தண்ணீர் குடிக்கிறார். இங்கோ, பேசிவிட்டு முஸ்லிம்களிடம் சென்று விடுகிறார்.
முஸ்லிம் பெண்கள் – அங்கு அப்படி கேட்டதாகத் தெரியவில்லை. பெண்கள் கலவரம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனநிலையில் தற்போது தான் வழி தெரிந்ததா? இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள்? என்று அவரிடம் கேள்வி கேட்டனர்.

இப்படி துலுக்கர்-தலித்துகளிடம் வித்தியாசமாக நடந்து கொண்டதையும் செக்யூலரிஸ, நடுநிலைவாதிகள் கவனமாக கவனிக்க வேண்டும் அரசியல், அரசியல் கூட்டு, நாளைக்கு பாராளுமன்ற எம்.பி பதவி என்ற ஆசையில், தில்லிக்குச் சென்றதால், தேனி பிரச்சினை அவௌக்கு தேனாகவில்லை போலும். அவரது “துலுக்க சார்பு, ஆதாவு” முதலியவை, எஸ்சிக்களை தனிமைப் படுத்துகிறது என்று தெரிகிறது. இவரது முந்தைய இந்து-விரோத பேச்சுகள் முதலியவற்றையும் இங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Thiruma-at Bomminaicketpatti- with Muslims sitting on the floor-12-05-2018-1

பொம்மிநாயக்கன்பட்டி சம்பவத்தில் இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,” எச்.ராஜா 12—05-2018: தேனி, ”பொம்மிநாயக்கன்பட்டி சம்பவத்தில் இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,”என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா வலியுறுத்தினார். தேனியில், பொம்மிநாயக்கன்பட்டி இருபிரிவினர் மோதல் தொடர்பாக இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது[11]: “கம்பத்தில் போலீஸ் செக்போஸ்ட், ஒட்டி இருந்த கோயிலை ஒருவர் இடித்து தரைமட்டாக்கி உள்ளார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால் பொம்மிநாயக்கன்பட்டியில் நடந்த பிரச்னையில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் மீதே வழக்குப்போட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட 58 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பிரச்னை குறித்து ஸ்டாலின், வைகோ, சீமான் பேசாதது, வராதது ஏன். இந்துக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அத்தனையும் ரத்து செய்யவேண்டும்”, என்றார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உமையராஜ், நகரத் தலைவர் கார்த்திக், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்[12]. எச்.ராஜா, பாதிக்கப் பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர்களை நேரில் சென்று, கண்டு, நலம் விசாரித்தார். இவ்வாறு “இந்துக்களை” ஒன்று சேர்க்கும்முயற்சியில், பிஜேபி ஈடுபடும் நேரத்தில், “தி இந்து” போன்ற நாளிதழ்கள், “இந்து தலித்துகள்” என்று குறிப்பிட ஆரம்பித்து விட்டன. முன்னெரே குறிப்பிட்டப் படி, எஸ்சி என்றாலே இந்துதான் எனும்போது, “இந்து தலித்” பிரயோகம் தேவையில்லை.

© வேதபிரகாஷ்

13-05-2018

Thiruma-with Muslims sitting on the floor obediently-12-05-2018

[1] தமிழ்.ஒன்.இந்தியா, தேனி பொம்மிநாயக்கன்பட்டி மோதல்இரு சமூகத்தினரையும் சந்தித்து திருமாவளவன் சமாதான பேச்சு!, Posted By: Hemavandhana Published: Saturday, May 12, 2018, 18:10 [IST] .

https://tamil.oneindia.com/news/tamilnadu/thirumavalavan-is-the-comfort-the-periyakulam-incident/articlecontent-pf307398-319537.html

[2] விகடன், `மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்!’ − பொம்மிநாயக்கன்பட்டியில் திருமாவளவன்,வீ.சக்தி அருணகிரி, Posted Date : 16:30 (12/05/2018) Last updated : 16:30 (12/05/2018)

[3] https://www.vikatan.com/news/tamilnadu/124849-thirumavalavan-visited-bomminayakanpatti.html

[4] ஈநாடு.இந்தியா, இஸ்லாமியர்-தலித் மோதல் எதிரொலி: திருமாவளவன் ஆறுதல்!, Published 12-May-2018 17:59 IST

[5] http://tamil.eenaduindia.com/State/South/Theni/TheniDistrict/2018/05/12175910/IslamDalit-conflict-Thirumavalavan-comfort.vpf

[6] தினசரி, திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள், பொதிகைச்செல்வன், மே.12, 2018. 6.37 மாலை.

http://dhinasari.com/local-news/madurai-news/38487-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81.html

[7] தினத்தந்தி, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமாவளவன் ஆறுதல் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு, மே 13, 2018, 03:45 AM

[8] https://www.dailythanthi.com/News/State/2018/05/13013352/Thirumavalavan-comfort-for-the-victims-of-the-riots.vpf

[9] தினமலர், காழ்ப்புணர்ச்சியால் விமர்சனம் திருமாவளவன் குற்றச்சாட்டு, Added : மே 13, 2018 05:31

http://www.dinamalar.com/news_detail.asp?id=2020083

[10] சங்கராச்சிரியார் முன்பு, பொன்.ராதாகிருஷ்ணன் கீழே உட்கார்ந்தார், சுப்ரமணியம் சுவாமி, இணையாக நாற்காலியில் உட்கார்ந்தார் என்றெல்லாம் படம் போட்டு விவாதிக்கும் ஆட்கள் இதையெல்லாமும் கவனிக்க வேண்டும்.

[11] தினமலர், இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், Added : மே 13, 2018 04:25.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=2020009

2011 மற்றும் 2016 தேர்தல்கள் – முஸ்லிம் கட்சிகளின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (3)

மார்ச் 23, 2016

2011 மற்றும் 2016 தேர்தல்கள்முஸ்லிம் கட்சிகளின் யுக்திகள், மதவாத முயற்சிகள், மற்றும் ஓட்டு வங்கி அரசியல் வியாபாரங்கள்! (3)

AIADMK Iftar

தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிலைப்பாடு:  ”அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சேர்ந்தாலும், கூட்டணியில் தொடர்வோம்,” என, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் கூறினார். முஸ்லிம் லீக் இரண்டாகப் பிரிந்து அதிமுக மற்றும் திமுக கோஷ்டிகளில் இருந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது, கூட்டணி குழப்பங்கள் நீடித்து வருவதால், இத்தகைய மதவாதக் கட்சிகளுக்கு வேறு வழியில்லாமல் திகைத்துக் கொண்டிருக்கின்றன. ஊழல் பற்றி பேசும் “சுத்தமான” திராவிடக் கட்சிகள் இப்பொழுது ஒன்றாக சேர்ந்து விட்டன. அதாவது திமுக காங்கிரசூடன் சேர்ந்து விட்டது. இதனால், பிஜேபி, அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்ற நிலையில் முஸ்லிம் கட்சிகளுக்கு “அரசியல் தீண்டாமை” வந்து தள்ளாட ஆரம்பித்து விட்டன. இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது[1]: வரும் சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணியில் நாங்கள் தொடர்வோம். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., சேர்ந்தாலும், தமிழ் மாநில முஸ்லிம் லீக் அந்த கூட்டணியில் தொடரும். சட்டசபை தேர்தலில் போட்டியிட, தமிழக முதல்வரிடம் சீட் கேட்டுள்ளோம். அவர் எங்கள் கட்சிக்கு, பல தொகுதிகள் வழங்குவார் என நம்புகிறோம். எங்கள் கட்சி நிர்வாகிகள் எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்பதை விட, நல்ல ஆட்சி தான் முக்கியம். தமிழக அரசு நடத்தும் உருது பள்ளிகளில், உருது ஆசிரியர்கள் நியமிக்க நேர்காணல் நடந்து வருகிறது. விரைவில் காலியாக உள்ள உருது பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்[2].

Jeyalalita at Quade millat tombமூன்றாவது  அணிக்கு  வேலையில்லை:  இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில தலைவர்  காதர் முகைதீன் பேட்டி[3]: தமிழகத்தில் 3–வது அணிக்கு வேலையில்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் சென்ற மாதம் அக்டோபரில் கூறினார். ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகள் மத்திய அரசின் கொள்கையாக மாறிவிட்டன. பா.ஜனதா பெயரில் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் உள்ள மத சார்பற்ற சக்திகள் ஜனநாயக இயக்கங்கள் ஒன்றுதிரண்டு மதவாத போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அரசியல் அரங்குகள், சாகித்ய அகாடமி என அனைத்திலும் மதவாத கொள்கைகள் புகுத்தப்பட்டு வருகிறது. இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகத்தின் அடித்தளமே தகர்ந்துவிடும். இதற்கு ஆதாரமாக மாட்டுக்கறி பிரச்சினைக்காக 4 அப்பாவி முஸ்லிம்கள் பலியாக்கப்பட்டு உள்ளனர். அரியானா பா.ஜனதா முதல்வர் உள்பட மத்திய மந்திரிகள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு வருகின்றனர். முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி வன்முறை தூண்டப்படுகிறது”.

M . H. Jawahirullah, Hyder Ali of TMMKதமிழகத்தை பொறுத்தவரை .தி.மு.., மற்றும் தி.மு..வை தவிர மூன்றாவது அணிக்கு வேலையில்லை: “இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும். எதிர்க்கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர 3–வது அணிக்கு வேலையில்லை[4]. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க.தான் பெரிய கட்சி. அதற்கு இணையான கட்சி தி.மு.க. மட்டுமே. உதிரி கட்சியினர் ஆட்சியை பிடிப்போம் என கூறுவது அவர்களது தனிப்பட்ட ஆசை, விருப்பம். அ.தி.மு.க. ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந் தாலும் ஆட்சி, அதிகாரம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எந்த அதிகாரியும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இல்லை. நாட்டிலேயே அதிக அளவில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அரசின் மீது மக்கள் அவநம்பிக்கையில் உள்ளனர். அதனால்தான் மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின்போது மக்கள் எழுச்சியும், வரவேற்பும் அதிகரித்து உள்ளது. மக்களின் அதிருப்தி வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக திரும்பும். அந்த எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வுக்குதான் செல்லும். எனவே வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்”, இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொருளாளர் ஷாஜகான், முன்னாள் எம்.பி. அப்துல் ரகுமான், மாவட்ட செயலாளர் முகம்மதுபைசல், சாதுல்லாகான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

IUML members with Jeyalalita

ஆளும் மத்திய அரசுடன் கூட்டுவைத்துக் கொண்டுஅனுபவித்த திராவிட கட்சிகள்: பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ள ஆவலாகத்தான் திராவிட கட்சிகள் இருக்கின்றன. அவை ஒன்றும் கூட்டு வைத்துக் கொள்ளாமலும் இருந்ததில்லை. செக்யூலரிஸம் என்றெல்லாம் பேசினால் கூட, தில்லியில் அதிகாரத்தை விரும்பத்தஆன் செய்கின்றன. ஒரு எம்.பி பதவுக்கு அலையும் கட்சித்தலைவர்கள் தமிழகத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். அதனால் தான், ஓட்டுகள் கிடைக்காது என்றால் கூட அத்தகையக் கட்சித் தலைவர்கள் ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள். எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைத்துக் கொண்டு அறிக்கைக்கள் விடுவது, கூட்டங்கள் போடுவது என்று செய்திகளில் வர ஆசைப்பட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள். எந்த கட்சியாவது கூப்பிடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பதால் அதை கூட்டணியில் சேர்க்க தயாராக இல்லை என்ற நிலையில் பாஜகவுடன் கூட்டு வத்துக் கொள்ள திமுக முயல்கிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[5]. இதனால் தான் முஸ்லிம் லீக் போன்றவை மறைமுகமாக பேரம் பேசுகின்றன போலும். மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மமக ஆகிய 5 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை உருவாக்கி, “அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸுடன் கூட்டணியில்லை: ஒத்த கருத்துடைய கட்சிகள் வரலாம்”, என்று அறைகூவல் விடுத்ததும் வேடிக்கையாகவே இருந்தது[6]. காங்கிரஸ் பிளவு பட்டுள்ளதால், பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளத்தான் திமுக மற்றும் அதிமுக விரும்பும். பாஜகவைப் பொறுத்த வரையில், அதிமுகதான் விருப்பமான கட்சி, ஆனால், ஊழல் என்ற பிரச்சினையும், ஜெயலலிதா வழக்குகளும் தடுக்கின்றன. அதற்கேற்ற முறையிலும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளும் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன. அந்நிலையில், பணிவுடன் வரும் திமுகவுடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று தான் பாஜகவினர் நினைத்தார்கள். அதே நிலைதான் 2016லும் உள்ளது.

IUML splinter groups

அரசியல் வியாபாரம் செய்து கோடிகளை அள்ளும் முஸ்லிம் கட்சிகள்: உண்மையில் அரசியல் மூலம் கோடிக்கணக்கில் தங்களது தொழில், வியாபாரம், வர்த்தகம், ஏற்றுமதி-இறக்குமதி, கான்ட்ரேக்ட், முதலியவற்றில் தான் அவர்களுக்குக் குறிக்கோள் அதற்கு அவர்கள் வளைகுடா நாடுகளில் உள்ள தொடர்புகளை தாராளமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் பலவிதங்களில் வலுவாக இருப்பதினால், அங்கிருக்கும் பலம், அதிகாரம் முதலியவையும் கிடைக்கின்றன. குற்றங்கள் புரியும் போது, வரியேய்ப்புகளில் ஈடுபடும் போது, இவர்கள் தங்களது அதிகாரங்களை பயன்படுத்திக் கொள்கிறர்கள். அவற்றுடன் கடந்த 30-40 ஆண்டுகளில் தீவிரவாதமும் இணைந்து விட்டது. தடை செய்யப்பட்ட சிமி, அல்-உம்மா போன்ற கூட்டனர் தார் இப்பொழுது வெவ்வேறு பெயர்களில், பேனர்களில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

Muslims aiming to capture Parliament - banner

ஓட்டு வங்கி உருவாக்கி பேரம் பேசும் முஸ்லிம் கட்சிகள்: மதத்தின் பெயரால் பாரதத்தைத் துண்டாடிய முஸ்லிம் லீக் இன்று வரை தான் செக்யூலரிஸ கட்சியாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது. மானங்கெட்ட திராவிடக் கட்சிகள் அதனுடம் கூட்டு வைத்துக் கொண்டு தங்களது செக்யூலரிஸத்தை நிரூபித்து வருகின்றன. முஸ்லிம் கட்சிகள் செக்யூலரிஸம் பேசுவது முதலியன முரண்பாடானது மட்டுமல்ல ஜனநாயக கேலிக் கூத்தாகும். தமிழகத்தில் 2006-ஆம் வருட சட்ட பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் எண்ணிக்கை 7-லிருந்து 5-ஆக குறைந்தது பற்றியே முஸ்லிம்கள் கவனமாக இருந்தார்கள். ஆனால், ராமநாதபுரத்தைச் சேர்ந்த எம்.எச் ஜவாஹிருல்லாஹ் (மனித நேய மக்கள் கட்சி) அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது என்று பதிவு செய்து கொண்டார்கள். மேலப்பாளையம், அதிராம்பட்டினம், கடையநல்லூர், தென்காசி, கோவை, திருப்பூர், நாகூர், வாணியம்பாடி, ஆம்பூர், திருச்சி, திருவல்லிக்கேணி, துறைமுகம், லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, பண்டாரவாடை, காயல்பட்டினம், கீழக்கரை முதலிய தொகுதிகளில் முஸ்லிம் ஆதரவுடன் தான் ஜெயிக்க முடியும் என்ற ஓட்டு வங்கி அரசியலை உண்டாக்கி, அதன் மூலம் தான் திராவிட கட்சிகளிடம் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

makkal-nala-kuutani

அரசியல் கட்சிகளின் போலித்தனங்கள்: திராவிட கட்சிகளைப் போல, முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளும் உருமாறி விட்டனவா அல்லது அதுபோல நடிக்கின்றனவா? இந்தியாவில் உள்ள ஒரே மதவாதி கட்சி பி.ஜே.பி தான் என்று இந்த முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளே கூறுவதும் வேடிக்கையான விஷயம் தான். ஆனால், செக்யூலரிஸ கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் திமுக, அதிமுக மாறி மாறி பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துள்ளன. இப்பொழுதுகூட, காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டு சேரும் பட்சத்தில் மாறுபட்ட எண்ணங்கள் இருந்தன. காங்கிரஸைப் பற்றி கேட்கவே வேண்டாம். செக்யூலரிஸம் சொல்லிக் கொண்டு பி.ஜே.பியை விட, அதிகமாகவே மதசார்புள்ள கட்சிகளுடன் – முஸ்லீம் லீக், கிருத்துவ கட்சிகள், சீக்கிய கட்சிகள் – தொடர்ந்து கூட்டு வைத்திருந்து வந்துள்ளன. ஆகவே, இப்படி முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் ஆளும் மற்றும் எதிர் கூட்டணிகளில் இருப்பது, அரசியலை மீறிய நிலையைத்தான் காட்டுகிறது.

© வேதபிரகாஷ்

23-03-2016

[1] தினமலர், .தி.மு.., கூட்டணியில் தொடர்வோம் முஸ்லிம் லீக் தலைவர் தகவல், பிப்ரவரி.28, 2016. 07:31.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1467302

[3] மாலைமலர், 3 –வது  அணிக்கு  வேலையில்லை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேட்டி, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, அக்டோபர் 26, 2015: 5:17 PM IST.

[4] http://www.maalaimalar.com/2015/10/26171739/dont-work-to-third-party-india.html

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-tries-woo-bjp-forging-alliance-238651.html

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-forms-new-poll-alliance-peoples-welfare-front-2016-239004.html

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (1)

நவம்பர் 11, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (1)

திப்பு ஜெயந்தி - சித்தராமையா- முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

திப்பு ஜெயந்தி – சித்தராமையா- முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

தீபாவளி 10-11-2015 அன்று இந்தியா முழுவதும் பண்டிகை கொண்டாடும் வேளையில், கர்நாடகாவில் 18-வது நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த மன்னரான திப்பு சுல்தானின் 266வது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்து[1], நடத்தியதில் கலவரத்தில் முடிந்தது. இந்து மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் தமது எதிப்பைத் தெரிவித்திருந்தும் பிடிவாதமாகக் கொண்டாடுவேன் என்று விழாவை ஏற்பாடு செய்து சித்தராமைய்யா நடத்தினார். பசுமாமிசம் சாப்பிடுவேன் என்றேல்லாம் பேசிய இவர் கர்நாடகாவின் முதலமைச்சர். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எனும் போது, எல்லா மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற பண்புக்கு எதிராக செயல் பட்டுவரும், அவர் இதற்கும் சளைக்கவில்லை. நிச்சயமாக சோனியா அம்மையாரின் சம்மதி இல்லாமல், இவர் இவ்வளவு ஆட்டம் போடமாட்டார். ஆக காங்கிரசின் உள்நோக்கம், கலவரத்தை உண்டாக்குவது என்பது தான் போலும். இருக்கவே இருக்கிறது, பிறகு இதெல்லாம் அந்த இந்துத்துவ சக்திகளின் வேலைதான் என்று பழி போட்டு திசைத்திருப்பி விடலாம்.

lash-over-tipu-sultan-jayanti-celebrations

lash-over-tipu-sultan-jayanti-celebrations

பலவித எதிர்ர்புகளை மீறி சித்தராமையா திப்பு ஜெயந்தி கொண்டாடியது: ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் மே 1799ல், ஹைதர் அலியின் மகனான திப்பு கொல்லப்பட்டான்[2]. அதன்படி, 10-11-2015 (செவ்வாய்க்கிழமை) அன்று திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது[3]. ஹைதர் மற்றும் திப்பு இருவரின் கொடுமைகளை தென்னிந்தியாவில், குறிப்பாக மைசூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் (கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா) மக்கள் அறிவர். இந்த விழாவை கொண்டாடுவதற்கு பா.ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். உள்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன[4]. இந்நிலையில், இன்று நடைபெறும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை புறக்கணிப்பதாக பா.ஜனதா அறிவித்தது. மாநில பிஜேபி தலைவர் பிரஹலாத் ஜோஷி, “எங்களுடைய 44 எம்.எல்.ஏக்கள், மற்ற அரசு பதவி வகிக்கும் எவரும் இந்த விழாவில் பங்கு கொள்ள மாட்டார்கள்”, என்று அறிவித்தார்[5]. கர்நாடக கௌரவ சம்ரக்ஷண சமிதி [Karnataka Gaurava Samrakshana Samiti] போன்ற இயக்கங்களும் எதிப்புத் தெரிவித்தன. குர்பூர் வஜ்ரதேஹி மடத்தின் ஸ்வாமிஜி ஶ்ரீ ராஜசேகரானந்தா அரசு அந்நிகழ்ச்சியை நடத்தினால், அதே நாளில், “அரசின் தற்கொலை தினம்” என்று எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தப் படும் என்றார்[6]. இதனிடையே, கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று சில மதஅமைப்புகள் அறிவித்தன. மத அமைப்புகளின் இந்த அறிவிப்புக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால், பாரதிய ஜனதா ஆதரவு வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோடகு மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அங்குள்ள சில அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

United Christian Association எதிப்பு-06-11-2015

United Christian Association எதிப்பு-06-11-2015

கிறிஸ்தவர்களின் எதிர்ப்பு: மங்களூரின் அனைத்து கிறிஸ்தவ சங்கமும், “கடற்கரை பகுதிகளில் இருந்த பல சர்ர்சுகளை திப்பு தனது ஆட்சியில் இடித்தான் மற்றும் கிறிஸ்துவர்களை துன்புறுத்தினான்”, என்று இந்த ஜெயந்தியை எதிர்த்துள்ளது[7]. நவம்பர் 6ம் தேதி எதிர்ப்பு தெர்வித்து கமிஷனரிடம் மனுவையும் கொடுத்தனர்[8]. திப்புவினால் கிறிஸ்தவர்கள் நடத்தப் பட்ட விதம் குறித்து, அவர்களே ஆவணப்படுத்தியுள்ளவற்றிலிருந்து அறியலாம், ஒருவேளை அதனால் தான், கிறிஸ்தவர்களாக இருந்த ஆங்கிலேயர், அவன் மீது படையெடுத்து, அப்பகுதியை, தமதாட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று போரை நடத்தியிருக்கலாம். எப்படியாகிலும், கிறிஸ்தவர்களால் கூட, திப்புவின் கொடுமைகளை, இன்றளவும் மறக்க முடியாத அளவுக்கு, அவர்களது மனங்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

lash-over-tipu-sultan-jayanti-celebrations-இரு குழுக்கள் மோதல்

lash-over-tipu-sultan-jayanti-celebrations-இரு குழுக்கள் மோதல்

மடிக்கேரியில் இரு குழுக்கள் மோதிக் கொண்டது எப்படி?: அரசு விழாவை ஆதரித்து முஸ்லிம் அமைப்பு ஒன்று ஊர்வலம் மடிக்கரையில் நடத்தியது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தியது[9]. இதனால், ஒரு இடத்தில் இரு அமைப்பு தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது[10]. இந்த பேரணியின் போது, திடீரென வெடித்த மோதல் விபரீதத்தில் முடிந்தது. விஷ்வ இந்து பரிஷத் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு அமைப்புக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது[11] என்கிறது தினத்தந்தி. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருடன் மோதினார்கள் என்றால், அது முஸ்லிமஸமைப்புதான் என்று பதிவு செய்யாமல் இருந்தது செக்யூலரிஸ பத்திரிகா தர்மத்தைக் காட்டுகிறது போலும். இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். குட்டப்பா இறந்த பிறகு, கலவரமாக மாறியது. இதையடுத்து, அங்கு நிலவிவரும் பதற்றத்தை தணிக்க கூடுதலாக பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோடகு மாவட்டம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமான இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

An injured is taken away for medical aid after two groups clashed over -Tipu Sultan Jayanti celebrations, in Kodgu.

An injured is taken away for medical aid after two groups clashed over -Tipu Sultan Jayanti celebrations, in Kodgu.

குட்டப்பா இறந்தது அல்லது கொல்லப்பட்டது எப்படி?: கல்வீச்சில் முன்னாள் அரசு ஊழியரும் உள்ளூர் விஷ்வ இந்து பரிஷத் தலைவருமான குட்டப்பா (50) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்[12] என்று சில ஊடகங்கள் கூறுகின்றன.  புட்டப்பா தடியடியில் உயிரிழந்ததாக செய்திகள் பரவின என்கின்றன மற்ற ஊடகங்கள்.. ஆனால் தடியடியிளிருந்து தப்பிக்க உயரமான சுவரை தாண்டி குதித்த போது தவறி விழுந்து அவர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது[13] என்றும் கூறப்படுகின்றன. ஆகவே, குட்டப்பா இறப்பில், எதையோ மறைக்கிறார்கள் என்று தெரிகிறது. கல்லடி கலாட்டாவில் இறந்தார் அல்லது கொல்லப்பட்டார் என்றால், வீசியவர்கள் காரணமாகிறார்கள். ஆனால், கல்லடி கலாட்டாவில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் தான் என்று குறிப்பிட செக்யூலரிஸ ஊடகங்கள் தயங்குகின்றன போலும்.  மேலும் தீபாவளியன்று, இப்படி இந்து-விரோத போக்கில் நடத்தப் பட்ட ஜெயந்தியில், ஒரு இந்து அமைப்பின் தலைவர் இறந்தது ஒரு பிரச்சினை ஆகக்கூடாது என்று அமுக்கி வாசித்திருக்கலாம்.

சித்தராமையாவின் திப்பு ஜெயந்தி 10-11-2015

சித்தராமையாவின் திப்பு ஜெயந்தி 10-11-2015

காங்கிரஸ் எம்.எல்,ஏ குட்டப்பாவின் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்கிறார்: குட்டப்பாவின் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஜி. போபைய்யா [Congress MLA K.G. Bopaiah] கேட்டுள்ளார். ஆமாம், பாவம் அவருக்கு இந்துக்களின் ஓட்டுகள் தேவைப்படுகிறது. மைசூரின் எம்.பியான, பிரதாப் சிம்ஹா, “மாவட்ட நிர்வாகம் நிலைமையை கையாளத் தவறிவிட்டது. மற்ற மாவட்டங்களிலிருந்து, நிறையபேர் இங்கு வந்து, திப்பு ஜெயந்தியை ஆதரிக்க வந்துள்ளனர். அதே மாதிரி விழாவை எதிர்ப்பவர்களையும், அவர்களையும் போலீஸார் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது”, என்றார். மூர்நாடு, ஹக்கதரு, விராஜ்பேட், கொட்டமுடி போன்ற ஊர்களிலிருந்து சுமார் 4,000 பேர் மடிகேரியுள் நுழையப் பார்த்தார்கள், ஆனால், போலீஸார் தடுத்ததால், அவர்கள் மடிகேரி எல்லைகளிலேயே தங்க நேர்ந்தது. சுமார் காலை பத்து மணிக்கு மோதல்கள் ஆரம்பித்தன, மதியம் குட்டப்பா இறந்தவுடன், கலவரமாக மாறிவிட்டது[14]. மேலும், “அரசு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போன்றோருக்கு விழா எடுக்கலாம், ஆனால், திப்புவைப் போன்றவர்களுக்கு அல்ல”, என்றும் கூறினார்[15].

© வேதபிரகாஷ்

11-11-2015

[1] மாலைமலர், திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட எதிர்ப்பு: வன்முறையில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஒருவர் பலி, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10.2015, 3:05 PM IST.

[2] http://www.greaterkashmir.com/news/national/story/201214.html

[3] http://www.maalaimalar.com/2015/11/10150553/Tipu-birth-anniv-celebrations.html

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=177868

[4]  தினகரன், பாஜக., வி.எச்.பி தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி கலவரத்தில் வி.எச்.பி பிரமுகர் உயிரிழந்ததால் பதட்டம், நவம்பர். 10.2015,16.00.21 PM IST.

[5] On Monday (09-11-2015), BJP announced its plans to boycott the celebrations across the state. State BJP president Prahlad Joshi told media persons on Monday that none of its 44 legislators and office-bearers will attend the Tipu Jayanti celebrations being organized by the state government.

http://www.business-standard.com/article/news-ians/one-dead-in-clash-over-tipu-sultan-anniversary-115111000719_1.html

[6] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367470

[7] Mangaluru United Christian Association has protested against the celebrations, alleging that Tipu was responsible for the destruction of many churches in the coastal region and harassing Christians.

http://atimes.com/2015/11/hindu-leader-dies-in-violence-during-protest-over-tipu-anniversary/

[8] The members of the United Christian Association staged a protest against the state government’s decision to celebrate “Tipu Jayanti”, in front of the DC’s Office here, on November 6.2015.

http://www.mangalorean.com/mangaluru-uca-stages-protest-against-state-governments-decision-to-celebrate-tipu-jayanti/

[9] தினத்தந்தி, திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போரட்டத்தில் வன்முறை வி.எச்.பி தலைவர் ஒருவர் பலி, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 10,2015, 2:16 PM IST; பதிவு செய்த நாள்:செவ்வாய், நவம்பர் 10,2015, 2:16 PM IST.

[10] The clashes erupted after a Muslim group that was taking out a procession to mark the Karnataka government’s Tipu Sultan Jayanti celebration through Madikeri town came face to face with Hindutva activists protesting against the celebration of the birth anniversary in the middle of the town.

http://indianexpress.com/article/india/politics/tipu-sultan-jayanti-protest-vhp-activist-succumbs-to-injuries-in-karnataka/

[11] http://www.dailythanthi.com/News/India/2015/11/10141620/Tipu-birth-anniv-celebrations-VHP-leader-dies-in-violence.vpf

[12] New Indian express, Tipu Sultan jayanti protest: VHP activist killed in violence in Karnataka, Written by Express News Service | Updated: November 10, 2015 4:09 pm.

[13]http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=177868

[14] Some 4,000 people, who had come from nearby towns such as Moornadu, Hakkaturu, Virajpet and Kottamudi, were stranded on the outskirts of Madikeri after police barricaded the town. According to police, clashes erupted in different parts of Madikeri by 10am. By noon, when Kuttappa died, police had a full blown riot on their hands.

http://www.hindustantimes.com/india/vhp-leader-dies-in-clashes-over-tipu-sultan-s-birth-anniversary-celebrations/story-25FViLDz9rageQiTW9rtwK.html

[15] Congress MLA K.G. Bopaiah called for immediate arrest of those responsible for Kuttappa’s death. Mysuru MP Pratap Simha, who spoke to The Hindu, flayed the district administration and the police for their failure to handle the situation. He alleged that people from other districts had arrived in large numbers ostensibly in support of the Jayanti celebrations and the police failed to crack down armed protesters. “Such events should be held to commemorate icons, who have rendered yeoman service to society. Let the government hold a jayanti celebration in honour of late President A.P.J. Abdul Kalam but not Tipu Sultan,” said Mr. Simha. Inspector-General of Police (South) B.K. Singh and other officers are camping in the district and monitoring the situation.

http://www.thehindu.com/news/national/karnataka/one-dead-in-stone-pelting-in-kodagu/article7864756.ece