Posted tagged ‘பழனி’

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (2)

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம்: போலீஸே போலீஸ் மீது நடவடிக்கை – ஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை? (2)

POLIMER-NEWS_மார்டின் பிரேம்ராஜ் கைது

POLIMER-NEWS_மார்டின் பிரேம்ராஜ் கைது

ஆகஸ்ட்.5 வேலூர் கோர்ட்டில் ஆஜர்: ஷமீல் அகமதுவை கைது செய்தபோது, பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்த தகவல்களை வைத்தும், விசாரணை என்ற பெயரில் எந்தெந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார்? அப்போது யார் யார் எல்லாம் உடன் இருந்தார்கள்? ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதா? காணாமல் போன பவித்ராவை கண்டுபிடிக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது? போன்ற கேள்விகளை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தெரிவிக்கும், அனைத்து பதில்களையும் போலீசார் எழுத்துபூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆம்பூர் கலவரம் 105 பேர் கைது, முஸ்லிம் பெண்கள் ஆர்பாட்டம்

ஆம்பூர் கலவரம் 105 பேர் கைது, முஸ்லிம் பெண்கள் ஆர்பாட்டம்

ஆகஸ்ட்.7 வரை விசாரணை: விசாரணையின் போது பதிலளித்த இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், ’நான் ஷமில் அகமதுவை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரிக்கவில்லை. ஷமில் அகமதுவை அடிக்கவும் இல்லை. என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது’’ என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், ‘‘அப்படியானால் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் நடந்தது என்ன? என எழுதி தாருங்கள்’’ என்று கூறி ஒரு பேப்பரை கொடுத்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜோ, ‘‘நான்தான் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறேனே. பின்னர் நான் எதை எழுதி தருவது? எழுதி கொடுக்க வேண்டிய தகவல் என்னிடம் ஒன்றும் இல்லை’’ என்று கூறிவிட்டு சி.பி.சி.ஐ.டி போலீசார் கொடுத்த பேப்பரை திருப்பி கொடுத்துவிட்டார்[1]. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் அவர் வருகிற 7–ந் தேதி மாலை 4 மணிக்கு வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகிறார்[2].

போலீசார் காயம்

போலீசார் காயம்

போலீஸே போலீஸ் மீது நடவடிக்கைஆனால், போலீஸாரைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை?: ஆம்பூர் முஸ்லிம்கள் புகார் கொடுத்ததின் ஆதாரமாக இவ்வாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டு வருகிறார், செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றனர். ஆனால், கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸாரையேத் தாக்கி, பெண் போலீஸாரை மானபங்கப்படுத்தி, பொது மக்களைத் தாக்கி, வாகனங்களைத் தாக்கி, எரித்தது, போக்குவரத்தைக் குலைத்தது, கலவரத்தில் ஈடுப்பட்டது, பொது சொத்தை நாசப்படுத்தியது போன்ற வேலைகளில் ஈடுபட்ட கலவரக்காரர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 100 பேருக்கும் மேல் கைது என்று செய்தி வந்தது, பிறகு ஜாமீனில் விடுதலை என்றும் செய்தி வந்தது, ஆனால், கலவரக்காரர்கள் அவ்வாறு தாராளமாக, எவ்வாறு செயல்பட்டனர் என்ற விசாரணை விவரங்களைப் பற்றி ஏன் செய்திகள் வெளிவருவதில்லை? எல்லாவற்றிற்கும் முன்பாக முஸ்லிம் இணைதளங்களோ மார்டின் தான் கொலையாளி என்று தீர்மானித்துள்ளன[3]. “டெக்கான் குரோனிகள்” என்ற நாளிதழ் அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது[4]. வழக்கம் போல “மனித உரிமைகள் இயக்கம்” போன்றவையும் ஆம்பூரில் உண்மையில் நடந்தது என்ன என்று அங்குள்ளவர்களிடம் பேட்டி கண்டு எழுதி வருகிறார்கள். ஆனால், அவர்களும், நோயின் மூலகாரணத்தை ஆராயாமல் இருக்கிறார்கள்.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_012

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_012

ஷமீல் அகமதுவை பவித்ராவுடன் பழகுவதை ஏன் அவரது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லை?: தன் மனைவி காணவில்லை என்று பழனி கொடுத்த புகார் மீது தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால், இப்பிரச்சினை உருவாகியிருக்கிறது என்றால், திருமணம் ஆன ஷமீல் அகமது, ஏன் திருமணமான பவித்ராவுடன் தொடர்பு வைத்திருந்தான்? அவனது மனைவி, மாமனார், மாமியார், பெற்றோர் முதலியோர் தடுக்கவில்லையே? டெல்டா ஷூ கம்பெனியிலிருந்து, இருவரும் வேலை நீக்கம் செய்யப்பட்டபோதே, விசயம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டுமே?  மே-ஜூன் விவகாரங்களைப் பார்த்தால், நடு-நடுவே பல விசயங்கள் மர்மமாகவே இருக்கின்றன:

  • கடந்த மே மாதம் 17-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பவித்ரா, ஈரோட்டில் உள்ள ஷமீலிடம் சென்றுவிட்டார். அப்படியென்றால், அவர்கள் திட்டமிட்டபடிதான் செய்திருக்கின்றனர்.
  • நடுவில் பழனி பவித்ராவை தேடி அலைகிறார். ஷமீல், சரவணன், புகழேந்தி முதலியோருடன் தொடர்பு கொண்டு விசாரிக்கிறார். அதாவது, பவித்ராவின் நண்பர்கள் என்று பழனிக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறது.
  • மே.24-ம் தேதி பவித்ராவை காணவில்லை என்று பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பழனி புகார் கொடுத்தார்.
  • ஒரு வாரம் (?) ஈரோட்டில் தங்கியிருந்த பவித்ராவும், ஷமீல் அகமதுவும் என்ன செய்து கொண்டிருந்தனர்?
  • ஜூன் மாதம் 2-வது வாரத்தில் பழனியின் செல்போனில் தொடர்புகொண்ட ஷமீல், “பவித்ராவை பேருந்தில் ஊருக்கு அனுப்பிவைக்கிறேன். அவரிடம் எதுவும் கேட்க வேண்டாம்”. என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். ஆனால், ஆம்பூருக்கு வரவேண்டிய பவித்ரா சென்னைக்கு ஏன் சென்றாள்? ஷமீல் மட்டும் எப்படி தனியாக ஆம்பூருக்கு வரவேண்டும்? ஷமீல் என்றைக்கு ஆம்பூருக்கு வந்தார் என்று தெரியவில்லை.
  • பழனி ஷமீல் வீட்டிற்குச் சென்று சண்டை போடுகிறார். அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்று விரட்டி விடுகின்றனர். இதனால், ஷமீலின் மீது சந்தேகம் இருப்பதாக போலீஸிடம் பழனி சென்று சொல்லியிருக்கலாம்.
  • 15-06-2015 அன்று போலீஸார் விசாரணைக்கு ஷமீலைக் கூட்டிச் செல்கின்றனர்.
  • ஜூல.4 அன்று சென்னையில் பவித்ரா, சரவணன்-புகழேந்தி முதலியோருடன் போலீஸில் சிக்குகிறார்.
  • 02-06-2015 முதல் 04-07-2015 வரை சென்னையில் பவித்ரா எப்படி இருந்தாள்?
  • ஆக, பவித்ரா-ஷமீல் இருவரையும் எல்லாவற்றையும் மீறி ஊக்குவித்தது யார்?
  • சந்தேகிக்கப்படுவது போல, இதில் “லவ்-ஜிஹாத்” போன்ற விவகாரம் உள்ளதா அல்லது வேறு விவகாரங்கள் உள்ளனவா? அவ்வுண்மைகளை மறைக்க இப்பிரச்சினை திசைத்திருப்பப்படுகிறதா?
  • பெண்ணிய வீராங்கனைகள் ஒரு பெண்ணின் பிரச்சினை மற்றும் பெண் போலீஸாரே பாலியல் தொல்லைகளில் உட்படுத்தப்பட்டார்கள் எனும் போது, ஏன் மௌனமாக இருந்தார்கள், இருக்கிறார்கள்?
  • தேசிய ஊடகங்களும் இவற்றை கண்டுகொள்ளாதது வேடிக்கையாக இருக்கிறது.
  • இதற்கு மதசாயம் பூசப்படுவதாக “ராஜ் டிவி” கூறுகிறது[5].

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] http://www.maalaimalar.com/2015/08/06110912/ambur-violence-case-shameel-ah.html

[2] மாலைமலர், ஆம்பூர் கலவர வழக்கு: ஷமில் அகமதுவை தனி அறையில் விசாரிக்கவில்லைஇன்ஸ்பெக்டர் மார்ட்டின் தகவல், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஆகஸ்ட் 06, 11:09 AM IST.

[3] http://www.vkalathur.in/2015/06/7_28.html

[4] http://www.deccanchronicle.com/150704/nation-crime/article/cb-cid-yet-question-custody-killer-inspector

[5] https://www.youtube.com/watch?v=7RPBacw0F5Y

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (2

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (2)

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

விவாகரத்து வேண்டும் என்று கேட்ட பவித்ரா[1]: தனது மனைவியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை பழனி தாக்கல் செய்தார். இதனால், தனிப் படை அமைத்து பவித்ராவை போலீஸார் தேடினர். அம்பத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த பவித்ராவை மீட்டனர். இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு பவித்ரா நேற்று ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் நடந்த விசாரணை வருமாறு[2]:

நீதிபதிகள்: நீ தான் பவித்ராவா?

பவித்ரா: ஆமாம், நான்தான் பவித்ரா.

நீதிபதிகள்: நீ யாருடன் செல்ல விரும்புகிறாய். பெற்றோருடனா அல்லது கணவருடனா?

பவித்ரா: பெற்றோருடன் செல்ல விரும்புகிறேன். ஆனால், எனக்கு விவாகரத்து வேண்டும். ‘என் கணவரிடம் இருந்து என் பெற்றோர் விவாகரத்து வாங்கித்தர வேண்டும்’ என்றும் நீதிபதியிடம் அவர் கூறினார்.

நீதிபதிகள், ‘உன்னுடைய பெற்றோருடன் செல்கிறாயா?’ என்று கேட்டார்கள். அப்போது கோர்ட்டு அறையில் இருந்த வக்கீல் சங்கத்தலைவர் பால்கனகராஜ், ‘இந்த பெண் காணவில்லை என்ற வழக்கு விசாரணையின் தொடர் நடவடிக்கையில் தான் ஆம்பூரில் கலவரம் ஏற்பட்டது’ என்று கூறினார். இதையடுத்து நடந்த விவாதம் பின்வருமாறு:-

நீதிபதிகள்:- பத்திரிகைகளில் வெளியான செய்திகளை படித்தோம். ஷமில் அகமதுவுக்கு திருமணமாகிவிட்டது. உனக்கும் திருமணமாகிவிட்டது. கணவர், குழந்தை உள்ளனர். அப்புறம் என்ன? இப்போது அந்த வாலிபரும் இறந்துவிட்டார். அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற பிரச்சினைகளினால் தான், மதக்கலவரம், சாதிக்கலவரம் நடக்கிறது. ஏற்கனவே திருமணம் நடக்காத ஆணும், பெண்ணும் வேறு மதங்களை சார்ந்தவர்களாக இருந்தாலும், சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் இருவருக்கும் திருமணம் செய்துவைக்கலாம்[3]. ஆனால், இங்கு இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி இவர்களது திருமணத்தை ஏற்க முடியும்?  [இருவருக்கும் குழந்தைகள் உள்ளன என்ற விசயம் இங்கு வெளிப்படுகிறது. மேலும் இரு மதத்தினர் சம்பந்தப்பட்டிருப்பதால், இச்சட்டம் பற்றி குறிப்பிடுவது, அத்தகைய நிலை இருப்பதை அவர்கள் அறிந்துள்ளனர் என்று தெரிகிறது]

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

பிடிவாதமாக விவாகரத்து கேட்ட பவித்ரா[4]: நீதிபதிகள் எவ்வளவு அறிவுரை கூறியும், விவரங்களை எடுத்துக் கூறியும், பவித்ரா பிடிவாதமாக விவாக ரத்து வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது அனைவரையும் திகைக்க வைத்தது.

பவித்ரா:- என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

நீதிபதிகள்:- விவாகரத்து என்ன பெட்டிக்கடையில் கிடைக்கும் பொருளா? காசு கொடுத்து வாங்குவதற்கு? விவாகரத்து வேண்டும் என்றால் அதுதொடர்பாக வழக்கை தாக்கல் செய்ய வேறு நீதிமன்றம் உள்ளது. நினைத்தவுடன் விவாகரத்து கிடைத்துவிடுமா?

அரசு வக்கீல் தம்பித்துரை:- ஆம்பூரில் நடந்துள்ள கலவரத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்துகள், வாகனங்கள் நாசமாகியுள்ளன.

பால்கனகராஜ்:- இந்த வழக்கை சாதாரண ஆட்கொணர்வு மனுவாக ஐகோர்ட்டு கருதக்கூடாது. ஏன் என்றால், ஏற்கனவே திருமணமான ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது தொடர்பான பிரச்சினைக்கு தெளிவான சட்டம் இல்லை. எனவே, இந்த வழக்கை அரிதான வழக்காக கருதி, சிறப்பு கவனம் செலுத்தி இதுபோன்ற பிரச்சினைகளில் போலீசார் எப்படி செயல்பட வேண்டும் என்று விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ராவுக்கு நீதிபதிகள் ஆலோசனை[5]: நீதிபதிகள்:- (பவித்ராவை பார்த்து) உனக்கு கணவர், குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களுடன் சந்தோஷமாக வாழவேண்டும். தேவையில்லாத பிரச்சினை எதற்கு? உனக்கு ஷமில் அகமது தெரியுமா?

பவித்ரா:- ஒரே கம்பெனியில் வேலை செய்யும்போது அவரை தெரியும்.

சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் (குறுக் கிட்டு): இது முக்கியமான வழக்கு என்பதால் இங்கே நாங்கள் எல்லாம் கூடியிருக்கிறோம். ஆம்பூர் சம்பவத்துக்கு இந்தப் பெண்தான் மூல காரணம். அங்கு நடந்த வன்முறையில் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏராள மானோர் கைது செய்யப் பட்டுள்ளனர். திருமணமான ஒரு பெண், திருமணமான ஆணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் சென்றுவிட்டால், அந்த வழக்கை எப்படி கையாள வேண்டும்? என்று போலீஸாருக்கு இந்த நீதிமன்றம் வழிகாட்டுதல்களை உருவாக்கித் தரவேண்டும். அது ஒரு முன்உதாரணமாக இருக்கும்[6].

நீதிபதிகள்: ஆம்பூரில் நடந்த சம்பவத்துக்கு நாங்களும் வருந்துகிறோம். பவித்ரா மேஜரான பெண். அவரை நாங்கள் கட்டுப்படுத்த முடியாது. அவர் பெற்றோருடன் செல்ல விரும்புகிறார்.

ஆர்.சி.பால்கனகராஜ்: ஆம்பூரில் இப்போது சுமுகமான சூழல் இல்லை. இந்நிலையில், பவித்ராவை அங்கு அனுப்பினால் அவருக்கு பாதுகாப்பாக இருக்காது. இதை கருத்தில் கொண்டு தாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்[7].

அரசு வக்கீல்:- அவரது கருத்தை இந்த வழக்கில் பதிவு செய்யக்கூடாது. ஏற்கனவே அவர் காணாமல்போனதாக பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது. அந்த விசாரணைக்கு பாதிப்பு வரக்கூடாது.

பால்கனகராஜ்:- தற்போது இவ்வளவு பெரிய பிரச்சினைக்கு இந்த பெண் காணாமல்போன சம்பவம் தான் காரணம். எனவே, இந்த பெண்ணை பெற்றோரிடம் தற்போது அனுப்பினால், தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.

நீதிபதிகள்:- தற்போது பவித்ரா எங்கே வசிக்கிறார்?

பவித்ரா:- சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் உள்ளேன்.

நீதிபதிகள்:- அதே விடுதியில் 2 வாரத்துக்கு தங்கி இருக்க வேண்டும். இவருக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

ஜூலை 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு[8]: இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘அம்பத்தூரில் ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருந்து கடை ஒன்றில் வேலை செய்துவருவதாகவும், தன் பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் பவித்ரா கூறினார். ஆம்பூர் கலவரம் பற்றியும் இங்கே கூறினார்கள். எனவே இந்த வழக்கை வருகிற 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று பவித்ரா நேரில் ஆஜராக வேண்டும். அதுவரை தற்போது அவர் தங்கி இருக்கும் விடுதியிலேயே தங்கியிருக்க வேண்டும். அவருக்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] தினத்தந்தி, ஆம்பூர் கலவரத்துக்கு காரணமான பவித்ரா சென்னையில் தங்கி இருக்க உத்தரவு, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஜூலை 07,2015, 5:15 AM IST; பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜூலை 07,2015, 4:36 AM IST

[2] தி இந்து, ஆம்பூர் பவித்ரா உயர் நீதிமன்றத்தில் ஆஜர்: 23-ம் தேதி வரை விடுதியில் தங்கியிருக்க உத்தரவு, Published: July 7, 2015 07:33 ISTUpdated: July 7, 2015 15:21 IST

[3] 4. Conditions relating to solemnization of special marriages

Notwithstanding anything contained in any other law for the time being in force relating to the solemnization of marriages, a marriage between any two persons may be solemnized under this Act, if at the time of the marriage the following conditions are fulfilled, namely:

(a) Neither party has a spouse living;

1[(b) Neither party-

(i) Is incapable of giving a valid consent to it in consequence of unsoundness mind; or

(ii) Though capable of giving a valid consent, has been suffering from mental disorder of such a kind or to such an extent as to be unfit for marriage and the procreation of children; or

(iii) has been subject to recurrent attacks of insanity 2[* * *]

(c) The male has completed the age of twenty-one years and the female the age of eighteen years;

3[(d) The parties are not within the degrees of prohibited relationship;

Provided that where a custom governing at least one of the parties permits of a marriage between them, such marriage may be solemnized, not withstanding that they are within the degrees of prohibited relationship; and ]

4[(e) Where the marriage is solemnized in the State of Jammu and Kashmir, both parties are citizens of India domiciled in the territories to which this Act extends.]

5[Explanation. -In this section, “customs”, in relation to a person belonging to any tribe, community, group or family, means any rule which the State Government may, by notification in the Official Gazette, specify in this behalf as applicable to members of that tribe, community, group or family;

http://www.vakilno1.com/bareacts/splmarriage1954/specialmarriageact.html

[4] http://www.dailythanthi.com/News/State/2015/07/07043612/Root-cause-of-the-Ambur-mishap-pavithra-ordered-to.vpf

[5] http://tamil.oneindia.com/news/tamilnadu/aambur-violence-pavithra-appear-madras-high-court-230417.html#slide161128

[6]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-23%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article7394400.ece

[7] ஆம்பூருக்குச் சென்றால் அவருக்கு / பவித்ராவுக்கு பாதுகாப்பாக இருக்காது, என்பதும் நோக்கத்தக்கது. யாரால் அவருக்கு அத்தகைய பாதுகாப்பு பாதகம் ஏற்படும் நிலை ஏற்படும் என்றும் யோசிக்கத் தக்கது. முஸ்லிம் அமைப்புகள் கலவரத்திற்கு காரணம் பவித்ரா தான் என்ற பிரச்சாரத்தை, இணைதளம் மூலமும், டிவி-பேட்டிகள் (ராஜ்-டிவி) மூலமும் செய்துள்ளன.

[8] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/aambur-violence-pavithra-appear-madras-high-court-230417.html#slide161128

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (1)

ஓகஸ்ட் 8, 2015

ஆம்பூர் கலவரம் – ஷமீல் அகமது – பவித்ரா கூடாத தொடர்புகளில் மறைக்கப்படும் விவகாரங்கள் (1)

ஆம்பூர் கலவரம் - குமுதம் ரிப்போர்டர் 10-11

ஆம்பூர் கலவரம் – குமுதம் ரிப்போர்டர் 10-11

குமுதம் ரிப்போர்டர் கொடுக்கும் விவரங்கள்[1]: ஷமீல் அகமது (26) ஈரோட்டைச் சேர்ந்த ஷாஜஹான் மற்றும் பரிதா பேகம் தம்பதியரின் மகன். ஷமீல் அகமதுக்கும், “இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின்”[2] ஆம்பூர் நகரத் தலைவர் கவுஸ் பாஷா மகள் முஸ்தரிக்கும் நவம்பர் 2014ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பே பவித்ராவுடன் (23) தொடர்பு இருந்திருக்கிறது, இதனால், ஷமீல் அதனை விடவில்லை. இவ்விசயம் தெரியவந்தவுடன் பிரச்சினையாகி இருக்கிறது. ஈரோட்டுக்கு இடம் பெயர்ந்தால், ஷமீல் மனம் மாறக்கூடும் என்று, அங்கு சென்றனர். அப்பொழுதுதான், பவித்ரா ஷமீலைத் தேடி 24-05-2015 அன்று ஈரோட்டுக்கு சென்றார். ஷமீல் தனியாக ஒரு வீடு பார்த்து, பவித்ராவை அங்கு தங்க வைத்திருக்கிறார். பழனிக்கு (29) ஷமீல் தான் பவித்ராவின் கள்ளக்காதலி என்பது தெரியாது. ஆனால், ஷமீல், பழனிக்கு போன் செய்து “பவித்ரா வீட்டுக்கு வந்துவிட்டாரா” என்று கேட்டபோது, “நீங்கள் யார்” என்று பழனி கேட்டார். அதற்கு ஷமீல், சென்னையில் பவித்ரா முகவரி தெரியாமல் நின்று கொண்டிருந்தபோது, தான் விசாரித்து ரெயிலில் ஏற்றிவிட்டதாகவும், பவித்ராதான், அவரது செல்போன் நெம்பரைக் கொடுத்ததாவும் கூறியுள்ளார். இந்த நெம்பர் மூலம் தான் போலீஸாற் ஷமீலைக் கண்டு பிடித்தனர். மேலும் போலீஸ் விசாரணையின் போது, ஷமீல் அருவருப்பான முறையில் பதில் கொடுத்ததாகத் தெரிகிறது. இவ்விவரங்களை “குமுதம் ரிப்போர்டர்” கொடுக்கிறது. “ஷமீல் அஹமதுவின் காதலி” என்றே இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைப்பிட்டு “காணவில்லை” என்று செய்தி வெளியிட்டது[3].  இம்முன்னுரையுடன் மற்ற செய்தி தொகுப்புகளைப் படிக்கும் போது, விசயங்கள் தெளிவாகின்றன.

ஆம்பூர் கலவரம் - குமுதம் ரிப்போர்டர் 12-13

ஆம்பூர் கலவரம் – குமுதம் ரிப்போர்டர் 12-13

தலைமறைவாக இருந்த ஆம்பூர் பவித்ரா கிடைத்தார்சென்னையில் பதுங்கியவரை கைது செய்தது போலீஸார்[4]: பவித்ரா செல்போனுக்கு செல்லும் எண்களை கண்காணித்த போலீஸார் சுரேஷின் நம்பரைக் கண்டு பிடித்தனர். அதிலிருந்து சரவணன் மற்றும் புகழேந்தியின் எண்களை கண்டு பிடித்தனர். சுரேஷை விசாரித்தபோது, அம்பத்தூரில் ஒரு பெண்கள் விடுதியில் இருப்பது தெரியவந்தது. இவ்வாறு, பவித்ராவை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர், அவரின் மொபைல் போன் எண் தொடர்புகள் அடிப்படையில், விசாரணையில் இறங்கினர். அதில், சென்னையில் அவர் பதுங்கியிருப்பது தெரியவந்தது. 04-07-2015 இரவு, சென்னைக்கு வந்த போலீசார், அம்பத்துார் பகுதியில், தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த, பவித்ராவை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அம்பத்துாரில் உள்ள ஜவுளி கடை ஒன்றில், வேலை செய்து வருவதாகவும், இரு வாலிபர்கள் உதவி செய்ததாகவும் தெரிவித்தார். உடன், சென்னை கிண்டியில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த, இரு வாலிபர்களையும் பிடித்தனர். அவர்களில் ஒருவர், அரக்கோணம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன்; மற்றொருவர், திண்டுக்கல்லைச் சேர்ந்த சுரேந்திரன்.

ஆம்பூர் கலவரம் - பவித்ரா சென்னையில்.1

ஆம்பூர் கலவரம் – பவித்ரா சென்னையில்.1

மாஜிஸ்திரேட் முன்னர் ஆஜர் படுத்தப்பட்ட பவித்ரா: இதையடுத்து, 05-07-2015 மதியம், 12:30 மணிக்கு, அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு, பவித்ராவை கொண்டு வந்த போலீசார், அங்கு பிற்பகல், 3:00 மணி வரை, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வேலுார் மாவட்ட எஸ்.பி., செந்தில்குமாரியும் உடனிருந்தார். பின், மாலை, 5:00 மணிக்கு வேலுார் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி முன் ஆஜர்படுத்தினர். பவித்ராவை விசாரித்த மாஜிஸ்திரேட், அவரை மகளிர் காப்பத்தில் தங்கவைக்கும்படியும், இன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார். இதையடுத்து, வேலுார் அடுத்த அரியூர் கிராமத்திலுள்ள, தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான பெண்கள் விடுதியில், பவித்ரா தங்க வைக்கப்பட்டார்.  இதற்கிடையில், பவித்ராவுக்கு உதவிய சரவணன் மற்றும் சுரேந்திரனை, அரக்கோணம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார், அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் கலவரம் - பவித்ரா சென்னையில்.2

ஆம்பூர் கலவரம் – பவித்ரா சென்னையில்.2

பவித்ரா கடத்தப்பாட்டாள் என்றும் செய்தி[5]: பவித்ரா ஏற்கனவே வேலை பார்த்த நகை கடையில் விசாரணை நடத்தினர். அவர் பெங்களூரில் பதுங்கியுள்ளாரா என்று விசாரித்தனர். அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் பவித்ராவின் செல்போன் எண் மூலம் விசாரணையில் இறங்கினர். அப்போது சென்னை கோயம்பேடு பகுதியில் பவித்ரா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. நேற்று இரவு தனிப்படை போலீசார் சென்னை வந்தனர். கோயம்பேடு பஸ் நிலையம் அருகே பவித்ராவை தனிப்படை போலீசார் மீட்டனர். அவர் நேற்று இரவு வேலூர் கொண்டு வரப்பட்டார். ராணிப்பேட்டை அருகே உள்ள மேல்பாடி போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ராவை மீட்டபோது அவருடன் 2 வாலிபர்கள் இருந்தனர். 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று சென்னையில் மடக்கி பிடித்தனர். அவர்கள் அரக்கோணத்தை சேர்ந்த சரவணன், திண்டுக்கல்லை சேர்ந்த புகழேந்தி என்று தெரிந்தது. இவர்கள் இருவரும் கிண்டியில் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களை அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பவித்ரா கடத்தல் பின்னணியில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது[6]. அவர்களிடம் இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இன்று பவித்ராவை வேலூர் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அப்போது பவித்ரா கடத்தல் சம்பவத்தில் பரபரப்பு தகவல் வெளிவரும். பவித்ராவுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். அவள் அம்மா எங்கே எனக் கேட்டு அழுகிறாள். விரைவில் பவித்ராவை ஒப்படையுங்கள் என போலீசாரிடம் பழனி கேட்டுக் கொண்டுள்ளார்.

டெக்கான் குரோனிகள் - அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

டெக்கான் குரோனிகள் – அவர் கொலையாளி என்று தீர்மானித்து அவ்வாறே குறிப்பிட்டது

போலீஸ் தப்பாக சித்தரிக்கிறது என்று குற்றஞ்சாட்டிய பவித்ரா: அரியூர் பெண்கள் விடுதியில் உள்ள பவித்ரா, நிருபர்களிடம் கூறுகையில், “எனக்கு ஜமில் அகமதுவை தெரியாது; பார்த்தது கூட இல்லை. அவரிடம், எந்த கள்ளத் தொடர்பும் இருந்ததில்லை. வேலை தேடி சென்னைக்கு சென்றபோது, மகளிர் விடுதியில் தங்கியிருந்தேன். போலீசார், என்னை தப்பான பெண்ணாக சித்தரிக்கின்றனர்,” என்றார். ஆனால், பிறகு, ஒப்புக்கொண்டாள்.தன்னைவிட வயதில் சிறிய ஷமீலுடன் கள்ள உறவை வைத்துக் கொண்டுள்ள இப்பெண்ணின் நிலை விசித்திரமாக உள்ளது. ஷமீலும், திருமணர்த்திற்குப் பிறாகும், அத்தகைய உறவைத் தொடர்ந்தது பல கேள்விகளை எழுப்புகிறது. ஷமிலைப் பொறுத்த வரையில், ஒருவேளை அவரது மதநம்பிக்கைகள் அத்தகைய பலதார உறவுகளை தடுக்காமல் இருக்கலாம், ஆனால், ஒரு பெண்-குழந்தைக்குத் தாயாக உள்ள பவித்ரா எப்படி, அத்தகைய உறவில் சிக்கினார் என்பது மர்மமாக இருக்கிறது. ஷமீல்-முஸ்தரிக்கும் குழந்தை இருக்கிறது என்று நீதிமன்ற விவாதம் மூலம் தெரிய வருகின்றது. ஆக இது தகாத உறவு தான், தெரிந்தே, இருவரும் வைத்துள்ளனர்.

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

ஆம்பூர் பவித்ரா.- பழனி, இடையில் ஷமீல்

ஜமீலுடன் கள்ளத்தொடர்பு உண்டு [7]: ஆம்பூர் டி.எஸ்.பி., கணேசன் கூறியதாவது: “இறந்து போன ஜமில் அகமது மற்றும் பவித்ரா இடையே ஏற்பட்ட கள்ளத் தொடர்பால், இருவரும் ஆம்பூரில் இருந்து ஈரோடு சென்று, அங்குள்ள நகை மற்றும் ஜவுளி கடையில் பணியாற்றியதோடு, தனிக்குடித்தனமும் நடத்தி உள்ளனர். அப்போது, பவித்ராவின் கணவர் பழனி, தன் மனைவியை ஜமில் அகமது கடத்திச் சென்று விட்டதாக, பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். இதை அறிந்த ஜமில் அகமது, ஈரோட்டில் உள்ள வாடகை வீட்டை காலி செய்து விட்டு, பவித்ராவிடம், 300 ரூபாய் கொடுத்து, அவரை ரயில் ஏற்றி அனுப்பி உள்ளார். பவித்ரா சொந்த ஊருக்கு வராமல், வேலை தேடி சென்னைக்கு சென்று விட்டார். இது தொடர்பான முழு விவரத்தையும், போலீசாரிடம், பவித்ரா வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். இருந்தும், ‘ஜமில் அகமதுவை தெரியாது; பார்த்தது கூட இல்லை. எந்த உறவும் இல்லைஎன, நிருபர்களிடம், அவர் பொய் சொல்கிறார். பவித்ரா கொடுத்த வாக்குமூலத்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று சமர்ப்பிப்போம்”, இவ்வாறு அவர் கூறினார்.

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

பவித்ரா-என் கணவனிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.

பவித்ரா மதம் மாற்றப்பட்டதாகதிடுக்தகவல் தொடர்பில் இருந்த 11 பேரிடம் விசாரணை[8]: வேலூர் ஆம்பூர் கலவர விவகாரத்தில் மாயமான பவித்ராவை போலீசார் மீட்டுள்ளநிலையில் அவர் குறிப்பிட்ட மதத்திற்கு மாற்றப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது………………பவித்ராவின் பழைய காதலர்கள் என கூறப்படும் அரக்கோணம் சரவணன் 26, சென்னை குன்றத்தூர் மனோகரன் 34, காட்பாடி சரவணபெருமாள் 40, ஈரோடு சசிதரன் 34, ஆரணி செங்கமலம் 35 உள்பட 11பேரிடம் விசாரணை செய்தனர். இதுகுறித்து, தனிப்படை போலீஸார் கூறியதாவது[9]: “ஆம்பூர் கலவரத்தின் முக்கிய காரணமான பவித்ரா குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு மாற்றப்பட்டார்[10]. அந்த மதத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுடன் பல கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் எதுவும் தெரியாது என பலரிடம் தெரிவித்து வருகின்றார். பவித்ராவின் பழைய காதலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றோம். அவரது அழகுக்கு மயங்கி அவர் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளனர். பழைய காதலர்களிடம் விசாரித்தால் ஷமில் அகமதுவின் தொடர்பு எவ்வளவு நாள் என்பது தெரிந்துவிடும்”. மேலும், பவித்ரா கணவர் பழனி கூறியதாவது: “என் அக்காள் மகள் பவித்ராவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தேன். அவரது சித்தி மகள் வேலைக்கு செல்வதை பார்த்து, பவித்ராவும் தோல் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அங்கு, ஜமில் அகமதுவுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும், என் வீட்டில் தனிமையில் இருந்தனர். இதையறிந்த நான், பவித்ராவை கண்டித்தேன். இதனால், ஜமில்அகமதுவுடன் சென்று விட்டார். பவித்ராவை பிரிந்து வாடும் எனக்கும், குழந்தைக்கும் நிம்மதி இல்லை”. இவ்வாறு, அவர் கூறினார்[11].

© வேதபிரகாஷ்

08-08-2015

[1] குமுதம் ரிப்போர்டர், 109-07-2015, பக்கங்கள்.10-13.

[2] இதனால் தான், இவ்வமைப்பு முன்னின்று ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது, பிறகு அது கலவரமாகி விட்டது.

[3] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Shameel-Ahmeds-Lover-Untraceable/2015/06/29/article2892446.ece

[4] தினமலர், தலைமறைவாக இருந்த ஆம்பூர் பவித்ரா கிடைத்தார்சென்னையில் பதுங்கியவரை கைது செய்தது போலீஸார், பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015,23:42 IST

[5] மாலைமலர், ஆம்பூர் கலவர பின்னணி: கடத்தப்பட்ட பவித்ரா சென்னையில் மீட்பு, மாற்றம் செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 05, 2:42 PM IST; பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 05, 11:52 AM IST.

[6] http://www.maalaimalar.com/2015/07/05115212/Ambur-riot-Background-In-Chenn.html

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1289719

[8] தினமலர், பவித்ரா மதம் மாற்றப்பட்டதாகதிடுக்தகவல் தொடர்பில் இருந்த 11 பேரிடம் விசாரணை, ஜூலை.7, 2015: 05:37.

[9] http://www.dinamalar.com/news_detail.asp?id=1290846

[10] இப்பிரச்சினைப் பற்றி யாரும் அலசக் காணோம். விவாக ரத்து கேட்கிறார், ஒருவேலை கொடுத்து விட்டார் என்ன செய்வார் என்பது பற்றியும் ஒன்றும் தகவல் இல்லை. பொலீஸார் கூறினர் என்று தினமலர் பொய்யான செய்தியை வெளியிட்டிருந்தால், அது இப்பொழுதைய நிலையில் இன்னொரு பெரிய பிரச்சினையாக இருக்கும்.

[11] முஸ்லிம் இணைதளங்கள் இதை சாடியுள்ளன. ஆனால், அதை மறுக்கவோ, அல்லது கூடா தொடர்புகளைப் பற்றி கண்டிக்கவோ, வருத்தப்படவோ இல்லை.

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (4)

ஓகஸ்ட் 7, 2015

ஆம்பூர் கலவரம்முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன்அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (4)

ஆம்பூர் பவித்ரா.- பழனி

ஆம்பூர் பவித்ரா.- பழனி – தம்பதியராக இருந்தவர்களை பிரித்தது எது?

இந்திய கூட்டுக் குடும்பங்கள், கணவன்மனைவி உறவுகள் மறக்கப்படுகின்றனவா?: இந்திய கூட்டுக் குடும்பங்கள், குடும்பங்கள், கணவன்-மனைவி உறவுகள், தாய்-குழந்தை பாச-பந்தங்கள், இவையெல்லாம் மறக்கப்படுகின்றனவா, மறுக்கப்படுகின்றனவா, மறைக்கப்படுகின்றனவா, அவ்வாறான நிலைக்கு யார் காரணம் என்று தான் இவ்விசயத்தில் கவனிக்க வேண்டியுள்ளது. இப்படி குறிப்பிட்டால், பழமைவாதம் என்று கூட முத்திரைக் குத்துவார்கள். பெண்களை அடிமைப்படுத்தும் வழி என்றும் விளக்கம் கொடுப்பார்கள். ஊடகங்கள், டிவி-சீரியல்கள் கூட இத்தகைய முறைகளை கிண்டலடிக்கின்றன, தாக்குகின்றன, ஏன் கேவலப்படுத்தவும் செய்கின்றன. கணவன்-மனைவி உறவுகள் தேவையில்லை, திருமண பந்தங்கள் தேவையில்லை, தாலி தேவையில்லை, விருப்பம் இருந்தால், எந்த பெண்ணும், எந்த ஆணுடனும் சேர்ந்து வாழலாம்[1], தேவையில்லை என்றால் பிரிந்து விடலாம், வேறு ஒருவரை நாடி போகலாம், என்றெல்லாம் பேசி, வாழ்க்கை நடத்தவும் ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், அத்தகைய கூடி வாழ்ந்த காலங்களில் குழந்தைகள் பிறந்தால், அவற்றை என்ன செய்வார்கள், யார் அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள் என்பது பற்றி அவர்கள் விளக்குவது கிடையாது. இல்லை, அப்பிரச்சினையே வரக்கூடாது என்று குழந்தைகளைப் பெற்றெடுத்துக் கொள்ளாமல் இருந்து விடுவார்களா? இதைப் போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.

லிவ் இன் வாழ்க்கை

லிவ் இன் வாழ்க்கை – சேர்ந்து வாழும் வாழ்க்கை என்ற மேனாட்டு “விபச்சாரத்தை” ஆதரிக்கும் சில இந்திய அறிவுஜீவிகள்

பெருகி வரும் லிவ்இன் உறவுமுறை[2]: இக்கட்டுரை மாலைமலரிலேயே வந்துள்ளதால், இங்கு கொடுக்கப் படுகிறது. “இப்போது திருமணம் செய்யப் போகும் தம்பதியரோ அல்லது காதலித்துக் கொண்டிருக்கும் ஆண்பெண் இருவருமோ திருமணத்திற்கு முன்னரே சேர்ந்து வாழும் வகையிலான உறவை ஏற்படுத்தியுள்ளலிவ்இன்முறை திருமண பந்தத்தை புதியதொரு நிலைப்பாட்டிற்கு கொண்டு சென்றுள்ளது. மேற்கத்திய உலகில் பரவலாக இருந்து வந்த இந்த உறவு லிவ்இன் முறை, இன்று பல்வேறு கலாச்சாரங்களையும் சேர்ந்த திருமண உறவுகளிலும் ஊடுருவியுள்ளது. லிவ்இன் உறவு என்பது அடிப்படையாகவே ஒரு சட்ட ரீதியில் அங்கீகரிக்கப்படாத திருமணமாகவும் மற்றும் இருவர் ஒன்று சேர்ந்து வாழ்வது என்றும் கருதப்படுகிறது. லிவ்இன்உறவு இன்னும் பல நாடுகளில் அங்கீகரிக்கப்படாத உறவாகவே விளங்குகிறது. இதற்கான சட்டங்களும், விதிமுறைகளும் இன்னும் உருவாக்கப்படவில்லை. இவ்வாறு இரண்டு பேர் உறவில் திருமணமின்றி வாழ்வது கிழக்கத்திய கலாசாரங்களின் படி இன்னும் தடை செய்யபட்டதாகவே இருக்கின்றது. எப்படியாயினும் மேற்கத்திய கலாசாரத்தில் இதை ஏற்றுக் கொண்டு இளைஞர்களில் பெரும்பாலானோர் பின்பற்றும் செயலாக இந்த உறவு முறை உள்ளது. இதன் வசதிகள் மற்றும் பிரச்சனையின்மை காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் இந்த லிவ்இன் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகின்றனர். திருமணம் அதிகமான நேரமும், பொருளாதாரமும் தேவைப்படும் மிகுந்த விலையுயர்ந்த உறவாகும். திருமணம் தோல்வியில் முடிந்தால் அதற்கு விவாகரத்து செய்வதற்கும் அதிக செலவு தான். அப்படி இருக்கையில்லிவ்இன்உறவு திருமணத்திற்குப் பின் நாம் எவ்வாறு வாழப் போகிறோம் என்பதை ஒத்திகை பார்ப்பதை போன்ற அனுபவமாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இந்த உறவு நமக்கு உகந்ததாய் இருக்குமா. இல்லையா என்பதை புரிந்து கொள்ளவும் தீர்மானிக்கவும் முடியும். விருப்பமிருந்தால் திருமணம் அல்லது எந்த சலனமுமின்றி பிரிந்து விடலாம் என்பதே இவ்வுறவின் சாராம்சமாகும். ஆனால் இந்த உறவைப் பற்றிய பார்வைகளும், எண்ணங்களும் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றன. சுதந்திரமும் வளைந்து கொடுக்கும் தன்மையும் உடைய இந்த உறவு முறை தான் இளைஞர்களை வெகுவாக கவர்கின்றது. இந்த உறவில் வாழும் தம்பதிகள் சிக்கல்களில் பிடிபடாமல் திருமண சட்ட திட்டங்களில் உட்படாமல் வாழ்வதை விரும்புகின்றனர்”.

கற்பு, குஷ்பு, இந்தியா, குடும்பம்

கற்பு, குஷ்பு, இந்தியா, குடும்பம் – கற்ப்பைப் பற்றி விளக்கம் கொடுத்த சினிமா நடிகை.

லிவ்இன் நிஜமா, கானல் நீரா?: “லிவ்இன் உறவில் வாழ்பவர்கள் பிள்ளைகளை பெறுவதைப் பற்றியோ, புதிய உறவினர்களை கவனிக்கும் முறைக்காவோ அல்லது அனைத்தையும் பகிர்ந்து கொள்வது என எந்தவிதமான முன்னேற்பாடுகளும் செய்யத் தேவையில்லாததால், தொந்தரவுகள் இல்லாத உறவு முறையாக உள்ளது. இப்படித் தான் நாம் வாழ வேண்டும் என்ற கட்டாயமும் இதில் கிடையாது. இருவரது பொறுப்பையும் சரி சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் கூட இல்லை. அனைவரும் ஒரே நபருடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று எண்ண மாட்டார்கள். ஒரு நபருடன் சிறிது காலம் வாழ்ந்த பின் மிகவும் சோர்வுற்று வேறு நபருடன் வாழ வேண்டும் என்று எண்ணுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்குலிவ்இன்முறையே மிக சிறந்த வழியாகும். திருமணத்துடன் ஒப்பிடும் போதுலிவ்இன்உறவை முறிப்பது மிகுந்த சுலபமான மற்றும் தொல்லை இல்லாத அனுபவமாக இருக்கும். பிரிவதற்கு முன் எந்த ஒரு சட்ட ரீத்யான செயல்களையும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. உங்களது உணர்வுகளை மட்டும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுதல் அவசியம். கடைசியாக மற்றும் மிகவும் முக்கியமான விபரம் என்னவென்றால்லிவ்இன்உறவில் விவாகரத்து தேவையில்லை. சில காலம் ஒன்றாக வாழ்ந்த பின்னும் இருவருக்குள்ளும் ஒத்துப் போகாவிடில் அவர்கள் பிரிந்து போவதற்கு முடிவு செய்து விட்டு, எந்த ஒரு சலனமுமின்றி பிரிந்து செல்லலாம். இதற்காக விவாகரத்து போன்ற விஷயங்களை நாடிச் செல்லத் தேவையில்லை[3].

Chastity-belt-wallpaper

Chastity-belt-wallpaper – கற்ப்பை எப்படித்தான் காப்பாற்றுவதோ?

ஆணை கற்பழிப்பாளியாக ஆக்குவது யார்?: மூன்று வயது குழந்தை கற்பழிக்கப்படுகிறது, இந்தியாவில் தினமும் இத்தனை பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள் என்றெல்லாம், பட்டியிலிட்டு, புள்ளி விவரங்களுடன் விவரங்களைத் தருகிறார்கள். ஆனால், பெண்கள் முறையாக ஆடை அணியவேண்டும், பள்ளி-கல்லூரிகளில் மாணவர்களுடன் பழகும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று யாராவது பேசினால், அவர்கள் மீது பெண்ணிய வீராங்கனைகள் பாய்கிறார்கள். மூன்று வயது குழந்தை கற்பழிக்க ஒரு ஆணுக்கு வக்கிரம் ஏன் வருகிறது என்று பொறுமையுடன் ஏன் ஆராயமல் இருக்கிறார்கள்? பந்த-பாசம், ஈவு-இரக்கம் முதலிய குணங்கள் இருந்தால், அவர்கள் அவ்வாறு செய்வார்களா? தாய்-சகோதரி முதலியவர்களோடு தானே, அம்மனிதனும் வாழ்கிறான், பிறகு, இன்னொரு பெண்ணை எப்படி தன்னுடைய பலிக்கடாவாகக் கருத முடியும், அவ்வாறே நடத்த முடியும்? அவ்வாறு ஒரு ஆண் உருவாகிறான் என்றால், அவனை உருவாக்குவது யார்? அவனுடைய தாயா, சகோதரியா, மனைவியா, மகளா, யார்?

Joint family - Illustration

Joint family – Illustration இத்தகைய அழகான கூட்டுக் குடும்பங்களைப் பிரிப்பது ஏன்?

பெண்கள் ஜாலியாக, சுதந்திரமாக வாழ வேண்டும் என்றால் என்ன?: நன்றாக சம்பாதிக்க வேண்டும், வாழ்க்கையினை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பெண் பெறும் போது, அவள் மற்றவற்றைக் கொடுக்கத் தயாராகிறாள். புகழும் வேண்டும் எனும்போது, இன்னும் கொடுக்க தயாராகி விடுகிறாள். மேலும், இன்று குறுக்குவழி என்று ஏதாவது இருந்தால் அல்லது பணம், இன்பம், புகழ் முதலியவற்றை பெறுவதற்கு அத்தகைய முறைகள், வழிகள் இருந்தால், அவற்றைப் பின்பற்றவவும் தயங்காமல், தயாராக இருக்கும் பெண்களையும் பார்க்க முடிகிறது. இங்கு கற்பு என்று பேசினால், 100% கற்புடன் எந்த பெண்ணும் இருக்க முடியாது, இல்லை என்ற வாதங்களை வைக்கப்படுகிறது[4]. இந்தியாவில், திருமணத்திற்கு முன்பாகவே, பல பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். இதனை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன என்றும் எழுத ஆரம்பித்து விடுகிறார்கள்.  வாங்கும்-விற்கும் பொருட்களுக்கு தரநிர்ணயம், கட்டுப்பாடு, போன்ற முறைகளை வைத்துக் கொண்டிருக்கும் போது, பெண்களுக்கு ஏன் வைக்கக் கூடாது என்றால், ஆஹா, இது இந்தியாவில் தாலிபான்கள் வந்து விட்டார்கள் என்றும் விளக்கம் கொடுப்பார்கள்.

ஆம்பூர் பவித்ரா, ரிஷிதா, பழனி

ஆம்பூர் பவித்ரா, ரிஷிதா, பழனி – இக்குடும்பத்தை சீரழித்தது யார்? தாய்-குழந்தை விரோதத்தை உருவாக்கியது யார்?

பவித்ராவை வளர்த்து, பெரியாக்கியது அவளது பாட்டிதான். இப்பொழுது, அவளது மகளையும் வளர்ப்பது பாட்டிதான். இது கூட்டுக் குடும்பம் சிதறினாலும், இல்லையென்றாலும், உறவுகள் மறப்பதில்லை, மறுப்பதில்லை. அங்குதான், இந்திய பாரம்பரியம் வாழ்கிறது எனலாம். அப்பாட்டி, இதெல்லாம் என்னுடைய வேலையில்லை, நான் ஒன்றும் ஆயா இல்லை, இவ்வேளையை நான் பார்க்க முடியாது, என்றெல்லாம் பேச ஆரம்பித்தால், அப்பட்டியை யாராவது குறை கூற முடியுமா? பவித்ராவைப் பொறுத்த வரைக்கும், நாகரிகம், அந்நிய-மேனாட்டு தாக்கம், ஜாலியாக வாழ வேண்டும் என்ற போக்கு முதலியவை, திசை மாற வைத்து, சீரழித்துள்ளன. தன் மகளிடம் மிக்க பாசமும், அன்பையும் கொண்டுள்ள பழனியைப் பொறுத்த வரைக்கும், இன்றைக்கும், பவித்ராவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பது போலிருக்கிறது. ஒருவேளை பழனியும் மற்ற பெண்களுடன் திரிய ஆரம்பித்திருந்தால், என்னவாகியிருக்கும்? பவித்ராவுக்கு, அதைச் சொல்லிக் காட்டி, வாதம் புரிய நன்றாக இருந்திருக்கும். நீதிமன்றத்தில், நீதிபதி அந்த அளவிற்கு காட்டமாக, அவளிடம் பேசியிருக்க முடியாது. ஒருவேளை, பழனியே மனு போட்டிருக்க தேவையில்லாமல் போயிருக்கும்.

© வேதபிரகாஷ்

07-08-2015

[1] http://cinema.dinamalar.com/tamil-news/30418/cinema/Kollywood/What-wrong-with-living-together-says-Nithya-Menon.htm

[2]  மாலைமலர், பெருகி வரும் லிவ்இன் உறவுமுறை, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 30, 11:04 AM ISTஇ

[3] http://www.maalaimalar.com/2013/11/30110410/Mounting-Live-In-relationship.html

[4] குஷ்பு, “சென்னையிலுள்ள பெண்கள் செக்ஸ் பற்றிய மனத்தடைகளைக் கடந்து வருகிறார்கள். பப்களிலும் டிஸ்கோதேக்களிலும் ஏராளமான பெண்களைப் பார்க்க முடிகிறது. ஒரு பெண் தனது பாய்பிரெண்ட் பற்றி உறுதியாக இருக்கும் போது அவள் தனது பெற்றோரிடம் சொல்லிக் கொண்டே அவனுடன் வெளியே போகலாம். பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பாக்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்” .

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (3)

ஓகஸ்ட் 7, 2015

ஆம்பூர் கலவரம்முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன்அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (3)

Pavitra-Pazhani Ambur

Pavitra-Pazhani Ambur

பவித்ராவின் மறுபக்கம் (நக்கீரன்)[1]: மாயமான பவித்ராவை மையங்கொண்டே ஷகீல் அகமது மரணமும், ஆம்பூர் கலவரமும் வெடித்திருக்கிறது. தற்போது பவித்ரா கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். பவித்ரா யார்? இவர் மாயமானது ஏன்? கண்டு பிடிக்கப்பட்டது எப்படி? என்று கேள்விகளை எழுப்பி பவித்ரா புராணம் பாடியியுக்கிறது நக்கீரன் பத்திரிக்கை. திருவண்ணாமலை மாவட்ட கண்ணமங்கலத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன்-செல்வி ஆகியோரின் மகள்தான் பவித்ரா. சிறுமியாக இருக்கும் போதே பவித்ராவை, குச்சிப்பாளையத்தில் இருக்கும் அவளது பாட்டி ராதாம்மாளிடம் வளர்க்கக் கொடுத்துவிட்டார்கள். அவர்தான் வளர்த்து 10 ஆம் வகுப்புவரை படிக்கவைத்தார். 10ஆம் வகுப்பில் ஃபெயிலான பவித்ராவுக்கு அதற்கு மேல் படிக்க ஆர்வம் இல்லை. ஒருவருடம் வீட்டிலேயே இருந்த அவரை, அவரது மாமா மகனான பழனிக்கு 7 வருடங்களுக்கு முன் கட்டிவைத்தனர்[2]. அப்போது பவித்ராவிற்கு வயது 17. அவரை விட பழனி 10 வயது மூத்தவர். திருமணமான 3 ஆம் வருடம் பவித்ராவிற்கு  ரிஷிதா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதன்பின் வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை என ஊர்ப்பெண்கள் சிலர் வேலைபார்க்கும்ஷூ’ கம்பெனிக்கு வேலைக்கு போனார் பவித்ரா.

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா திசை மாறியதைப் பற்றி மாலைமலரின் விவரங்கள்: “சுறுசுறுப்பான கேரக்டர் உடைய பவித்ராவுக்கு குழந்தையை கவனித்துக் கொண்டு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. எனவே வேலைக்கு செல்லப்போகிறேன் என்று அடம் பிடித்தார். இறுதியில் ஆம்பூர் பகுதியில் உள்ள , ’டெல்டா ஷூ கம்பெனிக்கு வேலைக்கு போனார் பவித்ரா. டெல்டா ஷூ பிரைவேட் லிமிடெட், பரிதா குழுமத்தைச் செர்ர்ந்த கம்பெனி[3]. அங்கிருந்து அவரது பாதை மாறும் என்று பழனியும் நினைக்கவில்லை. அவரது பெற்றோரும் நினைக்கவில்லை. உடன் பணிபுரிந்த பெண்களும், பவித்ராவின் தோழிகளும் அவரது மனம் தடம் மாற வழிவகுத்தனர். “என்னடி உன் புருசன் இப்படி கன்னங்கரேல்ன்னு இருக்கார். உன்னைவிட இத்தன வயசு மூத்தவரோட எப்படி குடும்பம் நடத்துறே” என்று கேட்டுக் கேட்டே உசுப்பேற்றினர்”, மாலை மலர் இவ்வாறு கூறுகிறது.

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

டெல்டா ஷூ, ஆம்பூர்- ஷமில் அஹ்மது, பவித்ரா

டெல்டா ஷூ கம்பெனியில், சமீல் அகமதுவிடம் தொடர்பு வைத்துக் கொண்டது: ஷூ கம்பெனிகள் சில பெண்கள் பல காரணங்களுக்காக பலருடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அத்தகையோர் மற்றவர்களையும் தம்மை போல ஆக்க முயல்வது வழக்கம். அவ்விதத்தில் தான், பவித்ராவைப் பார்த்து இவ்வாறு கணைகளைத் தொடுத்தனர். அந்த கேள்விகள் பவித்ராவின் மனதில் அதுவரை தோன்றாமல் இருந்த கணவரின் வயதும் நிறமும் திடீரென தவறாக தெரிய தொடங்கியது. இதுவே கணவரிடம் இருந்து பவித்ராவை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தது.  தனது அழகை உயர்வாக நினைத்த அவர் அங்கு பணிபுரிந்த ஷமில் அகமதுவுடன் பழகினார். இது அவரை தவறான வழிக்கு கொண்டு சென்றது என்று ஊடகங்கள் குறிப்பிட்டாலும், ஒரு மணமான பெண்ணுடன் பழக எப்படி மணமான ஷமில் அகமது ஒப்புக்கொண்டார், இயைந்து நடந்தார் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஓன்று இருவரும் திருமணம் ஆனவர்கள் மற்றும் வெவ்வேறு மதத்தினை சேர்ந்தவர்கள். மேலும், ஏற்கெனவே, லவ்-ஜிஹாத் போன்ற விவாதங்கள் நடந்து வருகின்றன என்பது தெரிந்திருக்கும். அதனையும் மீறி, இடங்கொடுத்திருக்கிறார் என்றால், ஷமீல் அகமதுக்கு ஏதோ உள்-நோக்கம் இருந்துள்ளது என்றாகிறது.

Pazhani with his daughter Rishitha- Ambur issue

Pazhani with his daughter Rishitha- Ambur issue

ஆம்பூரிலிருந்து ஈரோடுக்குச் சென்ற ஷமீல்பவித்ரா: மாலை மலர் தொடர்கிறது, “மலர் கணவரையும், குழந்தையையும் முற்றிலும் மறக்க தொடங்கினார். ஷூ கம்பெனியில் பவித்ராவின் தவறான நடவடிக்கையை அறிந்த நிர்வாகம் அவரை வேலையை விட்டு தூக்கியது. ஷமில் அகமதுவையும் நீக்கினர். அதன்பின்னர் ஷமில் அகமது ஈரோட்டுக்கு வேலைக்கு சென்றார்.  அதன்பின் பவித்ராவை ஷமில்அகமது ஈரோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளார். பின்னர் பயத்தினால் பவித்ராவிடம் ரூ.300– கையில் கொடுத்து அவரை குச்சிபாளையத்திற்கு செல்லும்படி அனுப்பி வைத்து உள்ளார்[4]. அவரது நினைவாகவே பவித்ரா இருந்தார். அவருடன் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிய படி இருந்தார். இதை அறிந்த அவரது கணவர் பழனி ஆத்திரம் அடைந்தார். ஒருநாள் செல்போனை பிடுங்கி எறிந்து உடைத்தார். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் கணவருடனான விரிசல் அதிகமானது.  தனது மனவிருப்பப்படி நடந்து கொள்வதற்காக கணவரையும், குழந்தையையும் விட்டு பிரிந்து போக பவித்ரா முடிவு செய்தார்[5].  ஒரு வருடம் ஈரோட்டில் தனிகுடித்தனம் நடத்தியிருக்கிறார்கள் என்றால், எல்லோரிடத்திலும் அதிகமாகவே பொய் சொல்லியிருந்திருக்க வேண்டும்.

ஆம்பூர் பவித்ரா.- பழனி

ஆம்பூர் பவித்ரா.- பழனி

மனைவி பவித்ராவை தேடிய புருஷன் பழனி: மாலை மலர் தொடர்கிறது, “கடந்த 17.5.2015 அன்று வீட்டைவிட்டு சென்றார். பல இடங்களில் பவித்ராவை தேடினர். பழனியும் பவித்ரா பணிபுரிந்த இடங்களுக்கு சென்று விசாரித்தார். அப்போது ஷமில் அகமது, சரவணன், புகழேந்தி ஆகிய 3 பேருடன் பவித்ராவுக்கு பழக்கம் இருந்தது தெரிய வந்தது. அவர்களை பற்றி விசாரித்த பழனி அவர்களுடன் தனது மனைவி சென்றிருப்பாரா என்று தேடி அலைந்தார். கணவரையும், குழந்தையையும் பிரிந்த பவித்ராவோ நேராக ஈரோடு சென்றார். அங்கு ஷமில் அகமதுவை சந்தித்து பேசினார். தன்னுடன் இருக்க ஷமில் அகமது அனுமதிக்காததால் ரெயில் ஏறி பவித்ரா சென்னைக்கு சென்றார். அங்கு சரவணன், புகழேந்தி ஆகியோரின் உதவியை நாடினார். சினிமா வாய்ப்பு கேட்டும் அலைந்தார். ஒரு வழியாக அம்பத்தூரில் உள்ள துணிக்கடையில் ரூ.6 ஆயிரம் சம்பளத்துக்கு பவித்ரா வேலைக்கு சேர்ந்தார். அருகில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார்[6].  மூன்று பேருடன் பழக்கம் எனும்போது, எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. நிச்சயமாக, இதை தீவிரமாக விசாரிக்க வேண்டியுள்ளது.

சமீல் அகமது காதலி காணவில்லை - இந்தியன் எக்ஸ்பிரஸ்.1

சமீல் அகமது காதலி காணவில்லை – இந்தியன் எக்ஸ்பிரஸ்.1

பழனி போலீஸாரிடம் புகார் கொடுத்ததும், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கலும்: மாலை மலர் தொடர்கிறது, “மனைவியை தேடி அலைந்த பழனிக்கு ஷமில் அகமதுவின் வீடு தெரிந்திருந்ததால் அங்கு சென்றுஎன் மனைவியை எங்கேஎன்று கேட்டு தகராறு செய்துள்ளார். அது கைகலப்பாகவும் மாறியது. இருந்தபோதிலும் மனைவி பற்றி தகவல் தெரியாததால் 24.5.2015 அன்று பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் பழனி புகார் செய்தார். அதில்எனது மனைவி மாயமானதில் சரவணன், புகழேந்தி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அறிகிறேன். எனவே அவர்களிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத்தாருங்கள்என்று கூறி இருந்தார். சென்னை ஐகோர்ட்டிலும் தனது மனைவியை மீட்டுத்தருமாறு கேட்டு ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்”.  அழனி சென்னை ஐகோர்ட்டிலும் தனது மனைவியை மீட்டுத்தருமாறு கேட்டு ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார் என்றதால், யாரோ அவருக்கு ஆலோசனை கொடுத்திருக்கிறார்கள்  அல்லது உதவியிருக்கிறார்கள் என்றாகிறது.

சமீல் அகமது காதலி காணவில்லை - இந்தியன் எக்ஸ்பிரஸ்.2

சமீல் அகமது காதலி காணவில்லை – இந்தியன் எக்ஸ்பிரஸ்.2

17.5.2015 அன்று ஆம்பூர் வீட்டை விட்டுச் சென்ற பவித்ரா 04-07-2015 அன்று சென்னையில் பிடிபட்டது:  மாலை மலர் தொடர்கிறது, “சந்தேகத்தின் பேரில் ஷமில் அகமதுவை பள்ளி கொண்டா போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணை முடிந்து திரும்பிய ஷமில் அகமது போலீசார் தாக்கியதாக கூறி ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் தாக்கிய தால்தான் ஷமில் அகமது இறந்ததாக கூறி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் பவித்ராவை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். செல்போன் உதவியுடன் பவித்ரா சென்னையில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்றனர். கடந்த ஜூலை 4-ந் தேதி இரவு பவித்ரா போலீசில் பிடிபட்டார். அவருக்கு உதவிய சரவணன், புகழேந்தி ஆகியோரும் பிடிபட்டனர்”.

Pazhani Ambur with his daughter Rishitha

Pazhani Ambur with his daughter Rishitha

தன்னை கடத்தவில்லை என்று பவித்ரா நீதிபதியிடம் கூறியதால் சரவணனும் புகழேந்தியும் தப்பினர்: மாலை மலர் தொடர்கிறது, “சென்னையில் சரவணன், புகழேந்தியிடம் சென்று பவித்ரா உதவி கேட்டது ஏன் பவித்ராவுக்கு அவர்கள் உதவியது ஏன் என்பது தெரியவில்லை. பவித்ரா மாயமானது தொடர்பாக கொடுத்த புகாரிலும், ஆட்கொணர்வு மனுவிலும்சரவணன், புகழேந்தி ஆகியோர் தனது மனைவியை கடத்தி சென்றிருக்கலாம்என்று பழனி கூறி இருந்தார். ஆனால் யாரும் தன்னை கடத்தவில்லை என்று பவித்ரா நீதிபதியிடம் கூறியதால் சரவணனும் புகழேந்தியும் தப்பினர். இருந்தபோதிலும் சரவணனையும், புகழேந்தியையும் பவித்ரா தேடி சென்று வேலை கேட்டது எப்படி நடந்தது பவித்ராவுக்கும் சரவணன், புகழேந்திக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததா என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதுபற்றிய உண்மை நிலை என்ன என்பது பின்னர்தான் தெரியவரும்”.  ஆம்பூரில் இவ்வளவு விவகாரங்கள் நடந்த நிலையில், எப்படி-ஏன் – எதற்காக இவ்விருவர், பவித்ராவை மறைந்து வாழ செய்ய வேண்டும்?

கணவன், மகளை ஏறேடுத்துப் பார்க்காத பத்னி பவித்ரா: மாலை மலர் தொடர்கிறது, தாய் பாசத்துக்கு ஏங்கும் மகளுக்காக காப்பகத்தில் பவித்ராவை சந்தித்து பேசவில்லை ஒரே வார்த்தையில் பதிலளித்த கணவர் பழனி சென்னையில் பிடிபட்ட பின்னர் ஐகோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பவித்ரா தனது கணவரையும், குழந்தையையும் ஏறெடுத்து பார்க்கவில்லை. நீதிபதியிடம், “எனது கணவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்என்று அவர் கேட்ட கேள்வி நீதிபதி உள்பட கணவரையும் தூக்கி வாரிப்போட்டது. நீதிபதி எவ்வளவோ கூறியும் அதை காதில் வாங்கிக் கொள்ளாத பவித்ரா விவாகரத்து கேட்பதிலேயே குறியாக இருந்தார். இதைத் தொடர்ந்து அவரை காப்பகத்தில் தங்க வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி சென்னை காப்பகத்தில் பவித்ரா தங்க வைக்கப்பட்டார்”.  விவாகரத்து தான் குறி என்றிருக்கும் பவித்ராவின் போக்கு திடுக்கிட வைக்கிறது. கணவனைத் தவிர மூன்று பேருடன் தொடர்பு, சினிமாவில் நடிக்க முயற்சி என்றெல்லாம் பார்க்கும் போது, பவித்ராவின் மனநிலை என்ன என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

அம்மா எப்போது வருவார் என்று கேட்டபடி  இருக்கும்                 மகள் ரிஷிதாவும், கண்டு கொள்ளாமல் இருக்கும் தாய் பவித்ராவும்: மாலை மலர் தொடர்கிறது, “பவித்ரா தனது மகள் ரிஷிதாவுக்காக மனம் மாறி தன்னுடன் சேர்ந்து வாழ வருவார் என்ற ஆசையில் பழனி இருக்கிறார். விசாரணைக்காக வேலூருக்கு பவித்ரா அழைத்து வரப்பட்ட போது தனது மகளுடன் பழனி அங்கு சென்றார். ஆனால் 2 பேரையும் பவித்ரா கண்டுகொள்ளவே இல்லை. அப்போது தாய் பாசத்துக்காக ஏங்கிய ரிஷிதாவை பார்த்து பலர் மனம் கலங்கினர். தற்போது ரிஷிதா குச்சிபாளையத்தில் தனது பாட்டியின் அரவணைப்பில் உள்ளார் என்றபோதிலும் அம்மா எப்போது வருவார் என்று கேட்டபடிதான் ரிஷிதா இருக்கிறார். அவருக்காக பழனியுடன் பவித்ரா சேர்வாரா பவித்ராவை பழனி சந்தித்து பேசி மனம் மாற்றுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பழனியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, “பத்திரிகைக்காரங்களா…” என்று கேட்டுவிட்டு பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார். ஆனால் இணைப்பை துண்டிக்காமல் இருந்த அவரிடம், “உங்கள் மனைவி பவித்ராஎன்று ஆரம்பித்ததும், “சார் எம்பாட்டுக்கு நான் என் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன் சார். என்னை விடுங்க…” என்று கூறினார். உங்கள் மகளுக்காக காப்பகத்தில் இருக்கும் உங்கள் மனைவியுடன் பேசினீர்களாஎன்று கேட்டபோது, “இல்லைஎன்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். நீதிபதி உத்தரவுபடி வருகிற 20-ந் தேதி வரை காப்பகத்தில் இருக்க வேண்டிய பவித்ரா மகளுக்காக கணவருடன் இணைவாரா”., என்று முடித்துள்ளது.

© வேதபிரகாஷ்

07-08-2015

[1] நக்கீரன், பவித்ராவின் மறுபக்கம், பதிவு செய்த நாள் : 8, ஜூலை 2015 (10:1 IST) ; மாற்றம் செய்த நாள் :8, ஜூலை 2015 (10:1 IST)

[2] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=146393

[3] http://www.farida.co.in/group_companies.php

[4] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/07/06012707/Pavithra-how-police-came-to-redeem.vpf

[5] http://www.maalaimalar.com/2015/07/12194252/Pavithra-track-changed-and-why.html

[6]  மாலைமலர், பவித்ரா தடம் மாறியது ஏன்? வெளிவராத புதிய தகவல், பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12, 7:42 PM IST.

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (1)

ஜூலை 2, 2015

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (1)

Ambur riot - body brought to Ambur

Ambur riot – body brought to Ambur

ஷமில் அகமது போலீஸாரால் விசாரிக்கப்பட்டது, ஜூன்.26 அன்று இறந்தது: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிபாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா. பள்ளிகொண்டாவில் தோல் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த மே மாதம் 24–ந் தேதி திடீரென மாயமானார். இது தொடர்பாக பழனி பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். அதில் ஆம்பூரை சேர்ந்த ஷாமில் அகமது மீது சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார். ஈரோடில் ஒரு நகைக்கடையில் ஷமில் அகமது சூபர்வைசராக வேலை செய்து வந்தார். அதே நகைக்கடையில் பவித்ராவும் வேலை பார்த்ததால், அவர்களது நெருக்கம் பற்றிய விவரங்கள், ஒருவேளை செல்போன் விவரங்களிலிருந்தும் அறியலாம் என்று சொல்லப்படுகிறது[1]. இது தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த ஷமில் அகமது (வயது 26) என்பவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் கடந்த 15–ந் தேதி விசாரணைக்கு அழைத்து சென்றார். போலீஸ் நிலையத்தில் ஷமில் அகமதுவை, இன்ஸ்பெக்டர் மற்றும் 6 போலீசார் அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது[2]. படுகாயம் அடைந்த ஷமில் அகமதுவை சிகிச்சைக்காக ஜூன்.19 அன்று ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் ஜூன்.23 அன்று வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜூன் 26 அன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு இறந்தார். “வெளிப்படையாக உடலில் எந்தவித காயங்களும் தெரியவில்லை. ஆனால், உள்ளுக்குள் பலவித பாதிப்புகள் ஏற்பட்டன. மூளையிலிருந்து கைகளுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டதால், மாரடைப்பு ஏற்பட்டது”, என்றுமருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்[3].

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா, ஷமீல் அஹ்மது

ஜூன் 26 மற்றும் 27 பதட்டமான நிலவரம்: இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று முன்தினம் இரவு 500–க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஷமில் அகமதுவை தாக்கிய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்[4]. இந்த நிலையில் ஷமில்அகமதுவின் உறவினர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சபாரத்தினம், போலீஸ்காரர்கள் நாகராஜ், அய்யப்பன், முரளி, சுரேஷ், முனியன் ஆகிய 7 பேர் மீது குற்ற நடைமுறை சட்டப்பிரிவு 176 (1) பிரிவின்கீழ் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டார். இதனிடையே ஷமில்அகமது இறந்த சம்பவத்தையடுத்து ஆம்பூரில் நேற்று 2–வது நாளாக பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனால் வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி ஆகியோர் ஆம்பூரில் முகாமிட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேசன், விஜயகுமார் உள்ளிட்ட 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1000–க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அதிரடி படைவீரர்களும் குவிக்கப்பட்டனர்.

போலீஸ் நிலையம் முன்பு முஸ்லிம்கள் குவிதல்

போலீஸ் நிலையம் முன்பு முஸ்லிம்கள் குவிதல்

ஜூன் 27 கலவரம் துவக்கம்: இரவு 7 மணியளவில் ஆம்பூரில் சென்னை பெங்களூர் மெயின் ரோட்டில் 500–க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக தெரிவித்தனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். நேரம் செல்லச்செல்ல பதற்றம் அதிகரித்தது, கூட்டமும் அதிகரித்தது. 1000–க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். அவர்கள் ஷமில் அகமது சாவுக்கு காரணமான ‘‘போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் மற்றும் 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தது போதாது. அவர்களை உடனடியாக கைது செய்து சஸ்பெண்டு செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், லாரி, கார்கள் மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்கினர். இதில் அந்த வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. பஸ்சில் இருந்த பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அதன்பின்னர் லாரிகளை நிறுத்தி அதில் இருந்த டிரைவர்களை தாக்கினர். போராட்டம் கலவரமாக மாறியதால் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைக்க உத்தரவிடப்பட்டது.

Ambur riot - lorry attacked

Ambur riot – lorry attacked

ஜூன் 27  போலீசார் கலவரக்காரர்களை தாக்கியது, ஆனால், தாக்குப்பிடிக்காமல் போலீசார் ஓடியது: இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது கலைந்து சென்றவர்கள் மீண்டும் கற்களை எடுத்து போலீசாரை நோக்கி சரமாரியாக வீசினர். ஒரு கல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரியின் தலையில் விழுந்தது. இதில் அவர் காயம் அடைந்தார். உடனே போலீசார் அவரை அங்கிருந்து அழைத்துச்சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் கலவரக்காரர்கள் தொடர்ந்து போலீசாரை குறிவைத்து கற்களால் வீசி தாக்கினர். கட்டடங்களின் மாடியில் நின்று கற்களை வீசினர். கல்வீச்சில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டிச்சென்றனர். அவர்கள் தெருக்களுக்குள் ஓடினர். போலீசார் அவர்களை விடாமல் துரத்திச்சென்று விரட்டி அடித்தனர். அப்போது போலீசாரை சிலர் கத்தியாலும் பிளேடாலும் வெட்டினர். இதில் மேலும் பல போலீசார் காயம் அடைந்தனர். 15 பெண் போலீஸ் உள்பட 54 போலீசார் படுகாயமடைந்தனர். அவர் கள் அனைவரும் வேலூர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். ஆம்பூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டாலும் அவர்களை விட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் போராட்டக்காரர்களை ஒடுக்கி கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கலவரத்தை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Ambur riot - vehicle burnt

Ambur riot – vehicle burnt

ஜூன் 27 – கலவரக்காரர்கள் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டது: இந்த சம்பவங்களை தொடர்ந்து வேலூரிலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல் சேலம், ஓசூர், பெங்களூரு, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து வேலூர் வழியாக வரும் பஸ்களும் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் நடுவழியில் தவித்தனர். ஆம்பூர் பஸ் நிலையத்தில் இருந்து ஓ.ஏ.ஆர். தியேட்டர் வரை சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு ரோட்டில் வந்த வாகனங்கள் அனைத்தும் கலவரக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. 30–க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் நெடுஞ்சாலை பகுதி போர்க்களமாக மாறியது. குறைந்த அளவு போலீசாரே இருந்ததால் அவர்கள் ஒரு கட்டத்தில் பின்வாங்க நேர்ந்தது. அப்போது ஆம்பூர் நேதாஜி சாலையில் புகுந்த வன்முறையாளர்கள் ஆம்பூர் தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுலகம் ஆகியவற்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், வன்முறையாளர்கள் போலீஸ் நிலையத்துக்குள் செல்லாதவாறு தாலுகா அலுவலகம் அருகில் மணல் கடத்தல் மாட்டு வண்டிகளை குறுக்கே போட்டு போலீசார் தடை ஏற்படுத்தினர். அதில் ஒரு மாட்டு வண்டியை தீயிட்டு எரித்தனர். இதனால் அங்கும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் தாலுகா போலீஸ் நிலைய பகுதிக்குள் நுழைந்தது. அப்போது போலீஸ் நிலையம் முன்பு விபத்தில் சிக்கிய மினி பஸ் ஒன்றை வழக்கு தொடர்பாக போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர். அந்த மினி பஸ்சுக்கும் வன்முறைக் கும்பல் தீவைத்தனர். இதில் அந்த வேன் தீயில் எரிந்து நாசமானது.

அலுவலகம் தீ வைப்பு

அலுவலகம் தீ வைப்பு

ஜூன் 27 இரவு – ஜூன் 28 காலை – போலீஸ் ஜீப்புகளுகள், கடைகள் எரியூட்டல்: இதற்கிடையே ஓ.ஏ.ஆர். தியேட்டர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 போலீஸ் ஜீப்களுக்கு வன்முறையாளர்கள் தீவைத்தனர். இதில் அந்த போலீஸ் ஜீப்கள் கொழுந்து விட்டு எரிந்தன. அது முற்றிலும் எரிந்து நாசமானது. அதுதவிர ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 மோட்டார் சைக்கிள்களையும் வன்முறை கும்பல் தீவைத்து கொளுத்தியது. அத்துடன் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் அதனை சுற்றி இருந்த பெட்டிக்கடைகளுக்கும் வன்முறைக்கும்பல் தீவைத்தது. இதனால் அங்கிருந்த 10–க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்தன. ‘இந்த கலவரத்தை தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். எனினும் நள்ளிரவை தாண்டி ஆம்பூரில் கலவரம் நீடித்தது. இதனையடுத்து ஐ.ஜி.மஞ்சுநாதா, டி.ஐ.ஜி.க்கள் தமிழ்சந்திரன் (வேலூர்), சத்தியமூர்த்தி (காஞ்சீபுரம்) தலைமையில் 6 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டது. அவர்கள் கலவரக்காரர்களை அடித்து விரட்டினர். நள்ளிரவு 1 மணிக்கு பின் கலவரம் கட்டுக்குள் வந்தது. இரவு 8 மணிக்கு தொடங்கிய கலவரம் 1 மணிவரை நீடித்ததால் 5 மணி நேரம் ஆம்பூர் போர்களமாக மாறியது. கலவரப்பகுதியில் பல இடங்களில் கற்களும், வாகனங்களில் உடைக்கப்பட்ட கண்ணாடிகளும் சிதறிக்கிடந்தன. போலீசார் விரட்டியதால் தப்பி ஓடியவர்கள் காலணிகளையும் விட்டுச்சென்றதால் எங்கும் காலணிகளாக காட்சி அளித்தது.

ஆம்பூர் கலவரம் - 29_06_2015_004_011

ஆம்பூர் கலவரம் – 29_06_2015_004_011

ஜூன்.28 போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட், ஜமில் அகமதுவின் ஆதரவாளர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம்: வாகனங்கள் உடைப்பு, தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூன்.28 அன்று காலை 200 பேரை கைது செய்து செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர். இந்த சம்பவங்களால் ஆம்பூரில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. அங்கு போலீசார் தொடர்ந்து முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்பூரில் நடந்த கலவரம் தொடர்பான விவகாரத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்[5]. போலீஸ் விசாரணைக்கு சென்ற, ஆம்பூரைச் சேர்ந்த ஜமில் அகமது, மர்மமாக இறந்ததால், ஆம்பூரில் கலவரம் வெடித்தது. கலவரத்திற்கு காரணமான, இதற்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆம்பூரில் நேற்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது, கல்வீசி தாக்கப்பட்டது. இதில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சேதமடைந்தன. போலீசார் உள்ளிட்ட 40 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 101 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[6]. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[7]. 200க்கும் மேற்பட்டோரை, ஆம்பூர் டவுன் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, ஜமில் அகமதுவின் ஆதரவாளர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம், வாணியம்பாடி அடுத்த உம்மராபாத்தில், மதியம், 2 மணிக்கு நடந்தது. இதற்கிடையே, “தன் மனைவி பவித்திராவை கண்டுபிடித்து தர வேண்டும்’ என, ஆம்பூர் அடுத்த, துத்திப்பாளையத்தைச் சேர்ந்த பழனி, கலவரத்தை பார்வையிட ஆம்பூர் வந்த ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தார். கலவர விவகாரத்தில், பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜை, வேலூர் சரக டி.ஜி.பி., அசோக்குமார், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாக, வேலூர் மாவட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர்[8].

வேதபிரகாஷ்

01-07-2015

[1] The police identified the deceased as Shameel Basha, a resident of Ambur, who was working as a supervisor in a jewellery shop in Erode.One of his female colleagues, Pavithra, a married woman and resident of Pallikonda went missing in the second week of June after which the police picked up the victim for questioning.“Both were working together at Erode and police believed that Shameel knew about her as they thought both were very close after going through Pavithra’s mobile records,” sources said.

http://www.deccanchronicle.com/150628/nation-current-affairs/article/youth-dies-after-police-detention

[2]  http://www.maalaimalar.com/2015/06/28120019/Youth-kills-in-police-custody.html

[3] Basha was taken to the Ambur GH and admitted for treatment at 3 pm on June 19. He was shifted to the Government Vellore Medical College Hospital, Adukkamparai on June 23. He was moved to the RGGGH on June 26 and around 5.40 pm the same day, he passed away, Shah Jahan claimed. Doctors at the RGGGH said, “Though there were no visible injuries, he suffered polytrauma (multiple traumatic injuries).” The brachial plexus, a nerve which is under the shoulder joint and carries signals from the brain to the muscles that move the arms, was injured. He suffered ‘cardiac arrest’ and died, the doctors said.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Kept-Youth-in-illegal-Custody-for-4-Days/2015/06/28/article2890411.ece

[4]  மாலைமலர், போலீஸ் காவலில் வாலிபர் சாவுஆம்பூரில் கலவரம்: பஸ் எரிப்புசூப்பிரண்டு உள்பட 54 போலீசார் காயம், பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28, 12:00 PM IST

[5]  தினமலர், ஆம்பூர் கலவரம் விவகாரம் :இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட், 28-06-2015.22.33.

[6]  தினமலர், ஆம்பூர் வன்முறை குறித்து 101 பேர் மீது வழக்குப்பதிவு,28-06-2015.19.12

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1284833

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1284988

டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது – பழனியில் வெடிகுண்டு மிரட்டல் – முஸ்லிம் சகோதரர்கள் கைது!

திசெம்பர் 9, 2013

டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது – பழனியில் வெடிகுண்டு மிரட்டல் – முஸ்லிம் சகோதரர்கள் கைது!

பைசூல் மன்னார் (27), அவரது சகோதரர் சுலைமான் சேட் (23)

பைசூல் மன்னார் (27), அவரது சகோதரர் சுலைமான் சேட் (23)

டிசம்பர் 6ம்தேதிபீதிகிளப்பும், பொதுமக்களைதொந்தரவுசெய்யும்தினமாகமாறிவருவது[1]: இந்த வருடம் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பழனி கோவிலுக்கு வெடி குண்டு மிரட்டல் (05-12-2013): அறுபடை வீடுகளில் 3–ம் படை வீடான பழனி கோவிலுக்கு தினசரி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கிய பண்டிகை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவதுண்டு. தற்போது சபரிமலை சீசன் காலமாக இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பழனி மலை கோவிலுக்கும் வந்து சாமிதரிசனம் செய்து செல்கின்றனர். டிசம்பர் 6–ந்தேதியை முன்னிட்டு பழனி மலைக்கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மதியம் சுமார் 2 மணியளவில் ஒரு மர்மநபர் தொலைபேசியில் பழனி கோவிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

 

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது சாதாரணமான விஷயமா

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவது சாதாரணமான விஷயமா

சிம் கார்டை மாற்றி பேசி, மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் (06-12-2013): பழனி மலைக்கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக வெள்ளிக்கிழமை மதியம் தீயணைப்பு நிலையத்துக்கு வந்த தொலைபேசி தகவலைத் தொடர்ந்து மலைக்கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது[2].  டிஐஜி வெற்றிச்செல்வன், எஸ்பி ஜெயச்சந்திரன், டிஎஸ்பி சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவுடன் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.  மலைக்கோவில், அடிவாரம், ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று இரவு விடிய, விடிய நடத்தப்பட்டு அதிகாலை 3 மணிக்கு முடிவடைந்தது[3]. தவிர, மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முழுக்க பலத்த சோதனை மேற்கொள்ளப்பட்டு எந்த வெடிகுண்டும் கைப்பற்றப்படாததால் அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த தொலைபேசி மிரட்டலைத் தொடர்ந்து பழனிக்கோயிலில் கூடுதலாக வின்ச், ரோப்கார், படி வழிப்பாதைகளில் மொத்தம் நான்கு டோர்பிரேம் மெட்டல் டிடெக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 20 போலீஸாரும் கூடுதலாக நியமிக்கப்பட்டு தைப்பூசம் திருவிழாக்காலம் வரை பணியிலிருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தீயணைப்பு நிலையத்துக்கு வந்த தொலைபேசித் தகவலை வைத்து எந்த செல்போனில் இருந்து பேசப்பட்டது என்றும், அந்த மர்ம நபர்கள் தற்போது எந்த எண்ணில் பேசி வருகின்றனர் என்றும் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. விடுமுறையில் பழனி வந்த இவர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும், மிரட்டல் விடுத்த பின் சிம்கார்டை மாற்றியதும் தெரியவந்தது[4].

Threatening call or teror call how to distinguishபழனிகோயிலுக்கு  வெடிகுண்டு  மிரட்டல்   விடுத்ததாக  முஸ்லிம்   சகோதரர்கள்  இருவர்  கைது  செய்யப்  பட்டுள்ளனர்[5] (07-12-2013): இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அந்த செல்போனுக்கு எந்த டவரில் இருந்து சிக்னல் வருகிறது என்று போலீஸார் கண்காணித்தனர். இதையடுத்து புதுஆயக்குடி மஞ்சணக்காரத் தெருவை சேர்ந்த முகமது அலி என்பவர் மகன்கள் பைசூல் மன்னார் (27), அவரது சகோதரர் சுலைமான் சேட் (23) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்[6]. முகமது அலி அரிசி வியாபாரம் செய்து வருகிறார். கைது செய்யப்பட்ட இவரது மகன்கள் பைசூல் மன்னாரும், சுலைமான் சேட்டும் 13 ஆண்டுகளுக்கு முன்பே கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு மிட்டாய் வியாபாரத்துக்காக சென்று அங்கேயே தங்கி விட்டனராம். கைது செய்யப்பட்ட இருவருக்கும் நிரந்தர முகவரி, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் கேரள மாநிலம் பாலக்காடு முகவரியிலேயே உள்ளது. இவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததை ஒப்புக் கொண்டனராம். இவர்களுக்கு ஏதும் அமைப்புடன் தொடர்பு உள்ளதா என பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கேரள முஸ்லிம்களும், குண்டுவெடிப்புகளில் அவர்களது பங்கும்: இப்பொழுதுள்ள நிலைமையில் முஸ்லிம்கள் இவ்வாறு செய்வது விளையாட்டல்ல, விபரீதத்தை விட மேலான விசயமாகும். மேலும் குண்டுவெடிப்புகளில் கேரள முஸ்லிம்கள் அதிகமாக சம்பந்தப் பட்டு ஏற்கெனவே கைது செய்யப்பாட்டிருக்கின்றனர். இந்நிலையில், மறுபடியும் முஸ்லிம்கள் சம்பந்தப்படுவது அதிகமான சந்தேகத்தையே எழுப்பும்.

வேதபிரகாஷ்

© 09-12-2013


[2] மாலைமலர், வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: பழனி கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 07, 3:44 PM IST

[5] தினமணி, பழனிகோயிலுக்குவெடிகுண்டுமிரட்டல்: சகோதரர்கள்கைது, By dn, பழனி, First Published : 08 December 2013 02:31 AM IST