Posted tagged ‘பலாத்காரம்’

பத்ருதீன் அஜ்மல்: இந்துக்களும் முஸ்லிம்கள் போல லவ் ஜிஹாத் செய்யலாம்,  எங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகளை தூக்கிச் செல்லுங்கள்…. பலம் என்னதான் என்று பார்ப்போமே! (1)

திசெம்பர் 6, 2022

பத்ருதீன் அஜ்மல்: இந்துக்களும் முஸ்லிம்கள் போல லவ் ஜிஹாத் செய்யலாம்எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை தூக்கிச் செல்லுங்கள்…. பலம் என்னதான் என்று பார்ப்போமே! (1)

இந்தியில் பத்ருதீன் அஜ்மல் சொன்னது என்ன?: பொதுவாக இந்தியில் ஒருவர் பேசியதை, சொன்னதை, ஆங்கிலத்தில் ஒழிபெயர்த்து செய்தி வெளியிடும் பொழுது சிறிது மாறுதல் ஏற்படும். பிறகு, ஆங்கிலத்திலிருந்து, தமிழில் மொழிபெயர்த்தால் மேலும் மாறுதல் ஏற்படும். ஆகவே இந்தியில் என்னவுள்ளது என்ரூ பார்ப்போம். ஆஜ்தக் என்ற இந்தி இனையத்தில்[1], “बदरुद्दीन अजमल ने कहा कि, “मुस्लिम मर्द 20-22 साल में शादी कर लेते हैं, जबकि मुस्लिम लड़कियों की शादी 18 साल में होती है जो कि कानून द्वारा तय की गई उम्र सीमा है.  जबकि दूसरी ओर हिन्दू 40 साल से पहले 1…2…3 अवैध बीवियां रखते हैं.  बच्चे होने नहीं देते हैं, खर्चा बचाते हैं, मजा उड़ाते हैं.    40 साल के बाद माता-पिता के दबाव में, या फिर कहीं फंस गए तो एक शादी कर लेते हैं. उन्होंने कहा कि 40 साल के बाद बच्चा पैदा करने की सलाहियत कहां रहती है. इसलिए हिंदुओं को हमारी तरह ही फॉर्म्यूले को अपनाते हुए अपने बच्चों की शादी कम उम्र में ही कर देनी चाहिए।फिर बच्चे कहां से पैदा होंगे. लड़कियों की शादी 18-20 साल में करानी चाहिए. इसके [2]देखिए आपके यहां भी कितने बच्चे पैदा होंगे. लेकिन गलत काम नहीं करना चाहिए. आप भी चार-पांच ‘लव जिहाद’ करिए  और हमारी मुस्लिम लड़कियों को ले जाइए. हम इसका स्वागत करेंगे और लड़ाई भी नहीं करेंगे.”……………………, என உள்ளது.

தாரகேஷ்வரி பிரசாத் என்ற பிஜேபி தலைவர் பதில் அளித்தது: “நவபாரத் டைம்ஸ்”ல் வெளியாகியுள்ளது[3], सनातन धर्म में सदैव प्रेम की पूजा होती रही है। इसी का प्रतीक है कि कृष्ण की 16,000 प्रेमिका और पत्नियां थीं।हमारे पूर्वज राजा सागर के साठ हजार पुत्र थे। हमें बदरुद्दीन से ज्ञान की जरूरत नहीं है। पूर्व केंद्रीय मंत्री सैयद शाहनवाज हुसैन ने भी बदरुद्दीन अजमल के बयान की निंदा की है। उन्होंने कहा कि बदरुद्दीन का बयान हिंदुओं की भावनाओं को भड़काने वाला है। उन्होंने कहा कि इसके लिए बदरुद्दीन को सारे देश से माफी मांगनी चाहिए।“. அதாவது கிருஷ்ணரைப் போல பல மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் மற்றும் சகரனை போல பல பிள்ளைகளை பெற்றுக் கொள்ளலாம், தாரகேஷ்வரி பிரசாத் [तारकिशोर प्रसाद] பிரசாத் பதில் கொடுத்துள்ளார்[4].

“சனாதன தர்மத்தில் அன்பு, காதல் எப்போதும் போற்றி வழிபடப்படுகிறது.  அதன்படியாக, கிருஷ்ணருக்கு 16,000 தோழிகள் மற்றும் மனைவிகள் இருந்ததை இது உணர்த்துகிறது. நம் மூதாதையரான சாகர் மன்னன் அறுபதினாயிரம் மகன்கள். பத்ருதீனிடம் இருந்து நமக்கு ஞானம் பெற தேவையில்லை. பதுருதின் அஜ்மலின் கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சையத் ஷாநவாஸ் ஹுசைனும் கண்டனம் தெரிவித்துள்ளார். பதுருதீனின் கருத்து இந்துக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் உள்ளது என்றார். இதற்காக நாடு முழுவதும் பதுருதீன் மன்னிப்பு கேட்க வேண்டும்,: என்றார். இதற்காக போலீசிடம் புகார் கொடுக்கப் பட்டு, வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

அப்தாப் கொலையாளிலவ் ஜிஹாத்மக்கட்தொகை பெருக்கம்: இந்தியாவில் அதிகரித்துவரும் மக்கள்தொகை, அடுத்த ஆண்டு சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலக அளவில் முதலிடம் பிடிக்கும் என்றும் அண்மையில் ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனால் ஒருபக்கம் மக்கள்தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்டுவர வேண்டும் எனப் பலர் கூறிவர, மறுபக்கம் சில தலைவர்கள் மக்கள்தொகை அதிகரிப்புக்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்றும் கூறுகின்றனர். தில்லி குரூரக் கொலைக்குப் பிறகு மறுபடியும் “லவ் ஜிஹாத்” போன்றவற்றைப் பற்றி வாதவிவாதங்கள் எழுந்துள்ளன. ஆங்கில மற்ற ஊடகங்களில் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் பொழுது, அதைப் பற்றி அவ்வளவாக கண்டுகொள்ளாமல், இப்பொழுது, பத்ருதீன் அஜ்மல், என்ற அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் கூறியதற்கு தமிழ் ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டுள்ளன. “தமிழ்.இந்து” முதலில் அரைகுறையாக வெளியிட்டு, பிறகு பத்ருதீன் அஜ்மல் சொன்னதை போட்டிருக்கிறது.

இந்துக்களும் முஸ்லிம்கள் போல் தங்கள் பிள்ளைகளுக்கு இளம்வயதிலேயே திருமணம் செய்துவைக்க வேண்டும்: “இந்துக்களும் முஸ்லிம்கள் போல் தங்கள் பிள்ளைகளுக்கு இளம்வயதிலேயே திருமணம் செய்துவைக்க வேண்டும்,” என்று அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ரூதீன் அஜ்மல் யோசனை தெரிவித்துள்ளார்[5]. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்தியாவில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவர வேண்டும். இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவை. இந்துக்களின் மக்கள்தொகை குறைந்து வருகிறது. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது,” என்று கூறியிருந்தார்[6]. இது பொதுவாக எல்லா நிகழ்வுகளையும் வைத்து பேசியது என்று தெரிகிறது. ஏனெனில், “பொது சிவில் சட்டம்” பற்றியும் பேச்சுகள், விமர்சனங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பத்ருதீன் அஜ்மல் விமர்சிப்பது, உயர்வு நவிற்சியாக இருந்தாலும், சட்டவிரோதமான, அநாகரிகமான மற்றும் இன்றைய சூழ்நிலைகளில் வெறுப்புப் பேச்சாக அமைந்துள்ளது.

இந்துக்களும் முஸ்லிம்களின் நடைமுறையைப் பின்பற்றி தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும்: இது குறித்த கேள்விக்குப் பதிலளித்த பத்ருதீன் அஜ்மல், “முஸ்லிம் ஆண்கள் 20 முதல் 22 வயதில் திருமணம் செய்துவிடுகின்றனர். முஸ்லிம் பெண்கள் 18 வயதில் திருமணம் செய்து கொள்கின்றனர்[7]. ஆனால் இந்துக்கள் திருமணத்துக்கு முன்னரே இரண்டு, மூன்று பெண்களுடன் வாழ்கின்றனர்[8]. குழந்தை பெற்றுக் கொள்வதில்லை. சுகங்களைப் பெற்றுக் கொண்டு பணத்தை சேமிக்கின்றனர்[9]. 40 வயதுக்கு மேல்தான் அவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்[10]. 40 வயதுக்கு மேல் எப்படி குழந்தை பெற்றுக் கொள்வது எளிதாகும். நல்ல வளமான மண்ணில் விதைக்கப்படும் விதைகளே பலன் தரும் பயிறாகும். அதனால் இந்துக்களும் முஸ்லிம்களின் நடைமுறையைப் பின்பற்றி தங்கள் பிள்ளைகளுக்கு ஆண்களாக இருந்தால் 20 முதல் 22 வயதிலும் பெண்களாக இருந்தால் 18 முதல் 20 வயதிலும் திருமணம் செய்துவைக்க வேண்டும். அப்புறம் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்று பாருங்கள்,” என்று கூறினார். [இது ஏதோ நல்லெண்ணத்தில் சொல்லியது இல்லை, ஏனெனில், இந்துமதத்தில் பலதாரமுறை அனுமதி இல்லை. “திருமணத்துக்கு முன்னரே இரண்டு, மூன்று பெண்களுடன் வாழ்கின்றனர்,” என்பதெல்லாம் விசமத்தனமானது..]

© வேதபிரகாஷ்

05-12-2022 


[1] आज तक, असम: ‘मुस्लिम फॉर्मूला अपनाएं हिंदू, 18 साल में करें लड़की की शादी‘, बोले बदरुद्दीन अजमल, aajtak.in, नई दिल्ली, 02 दिसंबर 2022, (अपडेटेड 02 दिसंबर 2022, 10:28 PM IST).

[2] https://www.aajtak.in/india/news/story/badruddin-ajmal-auidf-chief-hindus-should-marriage-early-like-muslim-ntc-1587861-2022-12-02

[3] नवभारतटाइम्स, हिंदू 40 की उम्र तक दोतीन बीवियां रखते हैं, बदरुद्दीन अजमल का विवादित बयान, Curated by राघवेंद्र सिंह | नवभारतटाइम्स.कॉम | Updated: 3 Dec 2022, 2:45 pm.

[4] https://navbharattimes.indiatimes.com/state/assam/guwahati/aiudf-cheif-badruddin-ajmal-said-hindus-should-adopt-muslim-formula-for-marriage/articleshow/95958221.cms

[5] தமிழ்.இந்து, முஸ்லிம்கள் போல இந்துக்களும் தங்கள் பிள்ளைகளுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்கலாம்” – பத்ருதீன் அஜ்மல் யோசனை, செய்திப்பிரிவு, Published : 03 Dec 2022 02:53 PM; Last Updated : 03 Dec 2022 02:53 PM

[6] https://www.hindutamil.in/news/india/909551-aiudf-chief-badruddin-ajmal-says-hindus-should-adopt-muslim-formula-get-girls-married-at-18-20-years-1.html

[7] விகடன், இந்த விஷயத்தில் இந்துக்கள் முஸ்லிம்களின் ஃபார்முலாவைப் பின்பற்ற வேண்டும்” – பத்ருதீன் அஜ்மல் எம்.பிசி. அர்ச்சுணன், Published:03 Dec 2022 11 AMUpdated:03 Dec 2022 11 AM

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/hindus-should-follow-muslim-formula-in-marriage-says-assam-mp-badruddin-ajmal

[9] ஜீ.டிவி, இப்படி இருந்தால் இந்துக்களால் எப்படி குழந்தை பெற முடியும்? – இஸ்லாமிய தலைவரின் சர்ச்சை கருத்து, Written by – Sudharsan G | Last Updated : Dec 3, 2022, 06:57 AM IST.

[10] https://zeenews.india.com/tamil/india/assam-mp-badruddin-ajmal-controversy-statement-about-hindu-community-422315

பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது!

பிப்ரவரி 4, 2015

பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது!

With-FacebookCheated-and-deprived-women-jewelryFake_தினத்தந்தி

With-FacebookCheated-and-deprived-women-jewelryFake_தினத்தந்தி

நகை திருட்டு புகார் என்று ஆரம்பித்த விவகாரம்: சேலம் உள்பட பல இடங்களில் ‘’பேஸ்புக்’ போலி கணக்கில், டாக்டர் போல் நடித்து, பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து, 40 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்[1], என்று செய்தி வந்துள்ளன. 03-02-2015 அன்று இச்செய்தி டிவிசெனல்களில் காட்டப்பட்டது. சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பிரபல வக்கீல் சகோதரர்கள் கூட்டுக்குடும்பமாக வசிக்கின்றனர். அவர்கள் தங்க நகைகளை தங்கள் தாயாரிடம் கொடுத்து வைத்திருந்தனர். இதில் தம்பி குடும்பத்தினரின் நகைகள் அப்படியே இருக்க, அண்ணன் குடும்பத்தினரின் நகைகள் 60 சவரனுக்கு மேல் காணாமல்போனது, அதிர்ச்சியைக் கொடுத்தது. இதுகுறித்து அந்த வக்கீல் குடும்பத்தினர் குரோம்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.  இவ்வாறு இப்பிரச்சினை “நகைத்திருட்டு” என்று ஆரம்பித்தது.

Facebook love - Islamic way

Facebook love – Islamic way

போலி டாக்டரிடம் சிக்கிக்கொண்ட வக்கீல் குடும்பத்துப் பெண்[2]: போலீசார் வக்கீல் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, வக்கீலின் மகள்தான் நகையை எடுத்து வாலிபர் ஒருவரிடம் கொடுத்ததாக தெரிவித்தார். அதாவது, தன்னுடைய தோழி ஒருவருக்கு ‘பேஸ் புக்’ மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கும் டாக்டர் முகமது ஷானு என்பவர் பழக்கமானார். இவர், தனக்கு கேரளாவில்  மந்திரவாதி ஒருவரை தெரியும். அவரிடம் நகைகளை கொடுத்து பூஜை செய்தால், குடும்ப பிரச்னைகள் தீர்ந்துவிடும் என கூறியுள்ளார்.  குடும்பத்தில் அப்படி என்ன பிரச்சினைகள் என்றும் தெரியவில்லை. வக்கீல்களால் சாதிக்க முடியாதத்தை மந்திரவாதி எப்படி சாதிப்பார் என்றும் தெரியவில்லை. முஸ்லிம்களுக்கு மந்திர-தந்திரங்களில் நம்பிக்கை உண்டா-இல்லையா என்றும் புரியவில்லை[3]. அதை நம்பிய வழக்கறிஞரின் மகள், வீட்டில் உள்ள நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக முகமது சானுவிடம் கொடுத்துள்ளார். தோழி மூலம் வக்கீல் குடும்பத்தில் நடக்கும் சில பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நகைகளை கேரளாவில் பூஜை செய்து கொண்டுவருவதாக கூறி வாங்கியுள்ளார். ஆனால், அவர்  நகைகளை திருப்பி தரவில்லை[4]. அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது

பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது

போலி டாக்டர் மலையாள மாந்தீரிகம் செய்வேன் என்று நகைகளைப் பெற்றது: மாந்தீரகம் செய்ய ஏன் முஸ்லிம் பெண் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. மேலும், மந்திர-தந்திர வேலைகள் செய்து விட்டு எப்படி நகைகளைத் திருப்பிக் கொடுக்கப்படும் என்பதும் தெரியவில்லை. இதை பெற்றோரிடம் மறைக்கவே வீட்டில் இருந்த நகை கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடியது தெரிந்தது, என்று போலீசாருக்குத் தெரிந்தது. இதனால் “பேஸ்புக்” விவகாரங்களை ஆராய ஆரம்பித்தனர். இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின்பேரில், 2 தனிப்படை அமைக்கப்பட்டது. ஜிப்மர் மருத்துவமனையில் விசாரித்தபோது அதுபோல அங்கு யாரும் பணியாற்றவில்லை என தெரியவந்தது. போலீசார் முகமது ஷானுவின் செல்போன் நம்பரை வைத்து அவர் யார்? என்ற விவரங்களை சேகரித்தபோது மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது

பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது

பேஸ்புக் மூலம் ஏமாற்றி பெண்களுடன் உல்லாசம்[5]: முகமது ஷானுவின் உண்மையான பெயர் ரகுமத்துல்லா (வயது 27). அவர் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த அசன்அலி என்பவரது மகன் என்றும், 10–ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர் எனவும் தெரியவந்தது. “பேஸ்புக்” தொடர்புகளை “சைபர்-கிரைம்” மூலம் கண்காணிக்கப்பட்டது. அவருடைய ‘பேஸ்புக்’ பக்கத்தில் யாராவது அவரை தொடர்பு கொள்கிறார்களா? என போலீசார் இரவு பகலாக கண்காணித்து வந்தனர். அப்போது டாக்டர் ஷானு என்ற பெயரில் ரகுமத்துல்லா சென்னை, சேலம், கன்னியாகுமரி, பெங்களூரு, திருநெல்வேலி என பல பகுதிகளிலும் பேஸ்புக் மூலம் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. டாக்டர் என கூறியதால் பல இளம்பெண்கள் அவருடன் தொடர்பு கொண்டுள்ளனர். இதில் எளிதில் ஏமாறுபவர்களை தேர்வு செய்து அந்த பெண்ணுடன் செல்போனில் பேசி பழகி வந்துள்ளார். இதில் ஏமாறும் பெண்களுடன் உல்லாசமாக சுற்றிவிட்டு, கிடைக்கும் நகைகளை சுருட்டிக்கொண்டு அதை விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். எப்படி, அப்படி இளம் பெண்கள் எளிதாக ஏமாறுகிறார்கள் என்றும் தெரியவில்லை.

பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிப்பு

பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிப்பு

பேஸ்புக் பெண் நண்பர் போலி டாக்டரை ஓட்டலுக்கு அழைத்தது: அவரது பேஸ்புக்கை தொடர்ந்து கண்காணித்தபோது, தற்போது ஒரு இளம்பெண், அவருடன் தொடர்பில் இருப்பது தெரிந்தது. அந்த பெண்ணை சந்தித்த தனிப்படை போலீசார், ரகுமத்துல்லா பற்றிய விபரங்களை கூறியதும் அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். தன்னைக் காதலிப்பதாகத்தான் “பேஸ்புக்கில்” உரையாடி போன் நம்பர் முதலியவற்றை அவன்வாங்கியுள்ளதாகத் தெரிவித்தாள். இதனால், தொடர்ந்து ரகுமதுல்லாவிடம் சந்தேகம் வராதது போல பேசி அவரை வரவழைக்க அந்த பெண்ணிடம் போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி அந்த பெண், குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சில நாட்களுக்கு முன் ரகமதுல்லாவை வரவழைத்தார். அப்போது, அங்கு மாறு வேடத்தில் இருந்த தனிப்படை போலீசார், அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்[6].

போலி டாக்டரின் காம வலையில் சிக்கிய பேஸ்புக் நண்பிகள்: ரகமத்துல்லாவிடம் விசாரணை செய்தபோது, அவன் உண்மையினை ஒப்புக்கொண்டுள்ளான். இதுபற்றி போலீசார் கூறியதாவது, “இவர், டாக்டர் சானு என்ற  பெயரில் சென்னை, சேலம், கன்னியாகுமரி, பெங்களூர், திருநெல்வேலி என பல பகுதிகளிலும் பேஸ்புக் மூலம் பல பெண்களை நண்பர்களாக்கி  உள்ளார். தன்னை டாக்டர் என காட்டிக்கொண்டதால், பலர் அவருடன் நட்பு வட்டாரத்தில் இணைந்துள்ளனர்[7]. இதில் யார் எளிதில் ஏமாறுவார் என்பதை அறிந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு, அவர்களிடம் டாக்டர் போலவே நடித்து  பழகி வந்துள்ளார். இதில் ஏமாறும் பெண்களிடம் நகைகளை வாங்கி கொண்டு அதை விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இவரிடம் ஏமாந்த  பெண்கள் போலீசில் புகார் செய்யாமல் இருந்ததால் இதுவரை போலீசில் சிக்கவில்லை”, என தெரிவித்தனர்.

 

போலி டாக்டர் கைது: இவரிடம் ஏமாந்த பெண்கள் அவமானம் காரணமாக போலீசில் புகார் செய்யாமல் இருந்ததால் தீராத விளையாட்டு பிள்ளையாய் தன்னுடைய லீலைகளை தொடர்ந்துள்ளார், என்று ஒரு நாளிதழ் கூறுகிறது. அப்படியென்றால், பாதிக்கப் பட்ட பெண்கள் எப்படி தங்களது குற்றவுணர்வை மறைத்துக் கொள்கின்றனர், பின்விளைவுகளை சரிசெய்து கொள்கின்றனர் என்பதும் வியப்புகுறிகளாக உள்ளன. ரகுமத்துல்லாவை கைது செய்த போலீசார், அவரை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சுமார் 40 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பேஸ்புக் மூலம் இளம்பெண்கள் அறிமுகம் இல்லாத நபர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அறிமுகத்தை செய்து வைக்கக் கூட்டம் வேலை செய்யும் போது, அவர்களையும் “சைபர் கிரைம்” வலையில் கண்காணிப்பப் படவேண்டும்.

பல பெண்களிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை மிரட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறித்தது, தெரியவந்தது[8]: இதில் தான் விவகாரங்கள் அடங்கியுள்ளன என்று தெரிகிறது. இப்பிரச்சினை பொதுவாகவும், இஸ்லாம் நோக்கிலும் ஆராய வேண்டியுள்ளது. பொதுவாக படித்த பெண்கள் ஏமாறுவார்களா என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. அப்படி இளம்பெண்கள் எப்படி, ஏன், எவ்விதமாகத் தூண்டப் படுகிறார்கள் என்றும் நோக்கத்தக்கது. குடும்பத்தில் இளம்பெண்கள் மிகவும் கட்டுப்பாட்டோடுத் தான் வளர்க்கப் படுகிறார்கள். இன்றைய சூழ்நிலைகளில், சிறுமிகள், இளம்பெண்கள் முதலியோர் அடுத்த பையன்கள், வாலிபர்களுடன் பேசுவது, பழகுவது முதலியவை படித்த-நாகரிகமான குடும்பங்களில் அனுமதிக்கப் படுகிறது. ஆனால், “நட்பு” என்ற வட்டத்தில் தான் அது அனுமதிகிகப்படுகிறது. இருப்பினும், இணைத்தள விவகாரங்கள் அவர்களை கட்டுக்கடங்காமல் செய்ய தூண்டுகிறது. அதையே தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் வலைவீசும் போது, இத்தகைய பெண்கள் மாட்டிக் கொள்கிறார்கள் போலும். பழகிய பெண்களிடம் உடனே பாலியல் பலாத்காரம் செய்துவிட முடியாது. அதனால், பழகும் போதே வீடியோ எடுப்பது போன்ற விவகாரங்கள் இருந்தால், அவற்றை வைத்து மிரட்டி அவ்வாறு செய்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு மிரட்டி நகைகளைப் பறித்தல், முதலியன குற்றவாளிகளின் சாதாரண-வழக்கமான வேலைகள் தாம் என்பது தெரிந்த விசயமே.

© வேதபிரகாஷ்

04-02-2015

[1] தினமலர், ‘பேஸ்புக்கில் டாக்டராக நடித்து பெண்களை சீரழித்தவன் கைது : பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை, சென்னை, புதன், 04-02-2015, பக்கம்.6.

[2] தினத்தந்தி, சேலம் உள்பட பல இடங்களில்பேஸ்புக்மூலம் பல பெண்களை ஏமாற்றி நகைகளை பறித்த போலி டாக்டர் கைது, பதிவு செய்த நாள்:புதன், பெப்ரவரி 04,2015, 1:50 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், பெப்ரவரி 04,2015, 1:50 AM IST;

[3] சமீபத்தில் சவால்கள், அதைப் பற்றிய சுவரொட்டிகள், செய்திகள், வாதங்கள்-விவாதங்கள் எல்லாம் வெளிவந்தன.

https://islamindia.wordpress.com/2014/12/30/muslim-wizards-arrested-for-naked-ritual-performed-and-sexual-harassment/

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130284

[5] http://www.dailythanthi.com/News/State/2015/02/04015044/With-FacebookCheated-and-deprived-women-jewelryFake.vpf

[6] தினகரன், பேஸ்புக் மூலம் பழகி பெண்களிடம் நகை மோசடி போலி டாக்டர் பிடிபட்டார், சென்னை, 04-02-2015.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130284

[8] http://www.dinamalar.com/district_detail.asp?id=1175536

 

ஆசிக் மீரானால் அலைக்கழிக்கப்படும் துர்கேஸ்வரி: பெண்ணிய வீராங்கனைகள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என்று தெரியவில்லை!

ஜூன் 14, 2014

ஆசிக் மீரானால் அலைக்கழிக்கப்படும் துர்கேஸ்வரி: பெண்ணிய வீராங்கனைகள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என்று தெரியவில்லை!

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்2

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்2

துர்க்கேஸ்வரி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கொடுத்ததால் நடவடிக்கை[1]:  பெண்பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக, திருச்சி மாநகராட்சி துணைமேயர் மரியம்ஆசிக்கிடம்,  பொன்மலை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா, நேற்று விசாரணை மேற்கொண்டார். திருச்சியை சேர்ந்த துர்க்கேஸ்வரி, 28.  சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சையின் மகன் ஆசிக்மீரான், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக,  போலீசில் புகார் தெரிவித்தார்[2]. இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், துர்க்கேஸ்வரி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினார். அவர் கொடுத்த புகாரை விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்படி,  முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து, பொன்மலை மகளிர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதனால், நேற்றுமதியம், 2:00 மணிக்கு, துர்க்கேஸ்வரி, துணைமேயர் மரியம்ஆசிக் ஆகியோர்,  பொன்மலை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைக்கப் பட்டனர். இந்த தகவல்அறிந்த, பத்திரிகையாளர்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர்.

துர்கேஸ்வரி, ஆஷிக் மீரான்

துர்கேஸ்வரி, ஆஷிக் மீரான்

பத்திரிகையாளர்களை கண்டதும், மரியம் ஆசிக், இன்ஸ்பெக்டர் ஜெயசுதாவுடன், ஸ்டேஷனில் இருந்த பாத் ரூமுக்குள் சென்று ஒளிந்து கொண்டார்[3]: பத்திரிகையாளர்களை கண்டதும், மரியம் ஆசிக்,  இன்ஸ்பெக்டர் ஜெயசுதாவுடன், ஸ்டேஷனில் இருந்த பாத்ரூமுக்குள் சென்று ஒளிந்து கொண்டார். அப்படியென்றால், இன்ஸ்பெக்டர் ஒத்துழைக்கிறார் என்றால்லாவா ஆகிறது.  பத்திரிகையாளர்களைக் கண்டதும் மறைந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே? தொடர்ந்து, இன்ஸ்பெக்டரின் அறையை மூடிக்கொண்டு, போலீசார் விசாரணை நடத்தினர். இதென்னா “காமராக்குள் நடக்கும்” ரகசிய விசாரணையா என்ன?  அப்படியென்றால், பாத்ரூமுக்குள் ஒளிந்து கொண்டவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? போலீசார் விசாரணை நடத்தினர் என்றால்,  இன்ஸ்பெக்டர் இல்லாமலா விசாரணை நடத்தினர்? எதற்கோ பெண்ணியக் கூட்டங்கள் கொடிபிடித்துக் கொண்டு வரும் போது, இத்தகைய சட்டமீறல்களுக்கு, ஏன் குரல் கொடுப்பதில்லை என்று தெரியவில்லை.

துர்கேஸ்வரி, ஆஷிக் மீரான்

துர்கேஸ்வரி, ஆஷிக் மீரான்

விசாரணை குறித்து, துர்க்கேஸ்வரி கூறியதாவது: “விசாரணை நியாயமாக நடக்கும் என, தெரியவில்லை. ஆசிக் மீரானும், போலீசாரும் சேர்ந்து என்னை மிரட்டுகின்றனர். முதல்வர் தலையிட்டால் மட்டுமே, எனக்கும், என் குழந்தைக்கும் நீதி கிடைக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்[4].  தான்தான் அவரது மனைவி,  குழந்தை அவருடையது என்று மெய்ப்பிக்கப் படவேண்டும், தனக்கு நீதி வேண்டும் என்று கேட்கிறார்[5].  மரபு அணுபரிசோதனை செய்தாலே உண்மை விளங்கிவிடும். பிறகு இதற்கு ஏன் இவ்வளவு தாமதம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.  மேலும் புகாரில், “என் கணவர், துணைமேயர் ஆசிக்மீரா, அவரது மாமியார் மைமூன் நிஷா, அவரது சகாக்கள் பாபு,  சரவணன், உமர் ஆகியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார், அதில் உமர் என்பவன் ஏற்கெனவே கொலைக்குற்றத்தில் தேடப்பட்டு வருகிறான் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன[6].

ஊடகக்காரர்களிடம் முறையிடும் துர்கேஸ்வரி

ஊடகக்காரர்களிடம் முறையிடும் துர்கேஸ்வரி

மார்ச்.1, 2014 அன்று கொடுத்த புகார்[7]: அ.தி.மு.க.,  துணைமேயர் ஆசிக் மீரா மீது புகார் தெரிவிக்க நேற்றும் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த எட்டு மாத கர்ப்பிணியை, “கமிஷனர் இல்லை’ எனக் கூறி புகாரை வாங்காமல் போலீஸார் திருப்பி அனுப்பியதால், அப்பெண் ஏமாற்றத்துடன் சென்றார்.மறைந்த அ.தி.மு.க., அமைச்சர் மரியம் பிச்சை மகன் ஆசிக்மீரா, திருச்சி மாநகராட்சி துணைமேயராக உள்ளார். திருச்சி, சங்கிலியாண்டபுரம், மணல் வாரித்துறைரோடு பகுதியைச் சேர்ந்த ரஞ்ஜித்சிங் ராணா மகள் துர்கா (என்ற) துர்கேஸ்வரி, 28. இவர் 01-03-2014 அன்று முன்தினம் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு துணைமேயர் ஆசிக் மீரா மீது புகார் அளிக்க வந்தார்.  அவரது புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: “நானும், துணைமேயர் ஆசிக் மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவரால் மூன்று முறை கருத்தரித்தேன். அவர் நிர்ப்பந்தத்தால் கருவை கலைத்தேன்.  திடீரென அவரது அத்தை மைமூன் நிஷா மகள் சாஜிதா பேகத்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இது பற்றி கேட்ட போது, என்னை சமாதானம் செய்தார். மீண்டும் கருவுற்று தற்போது, எட்டு மாதமாக உள்ளேன்.  தனது மாமியார் பேச்சைக் கேட்டு, கருவை கலைக்கும் படி மிரட்டுகிறார். எனவே, என்கணவர், துணைமேயர் ஆசிக்மீரா,  அவரது மாமியார் மைமூன் நிஷா, அவரது சகாக்கள் பாபு, சரவணன், உமர் ஆகியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.

Asique Meeran Trichy Dy Mayor accused

Asique Meeran Trichy Dy Mayor accused

புகார் வாங்க மறுத்த பொன்மலை போலீஸ் ஸ்டேஷன்:  மாநகர போலீஸ் கமிஷனர் சைலஷ் குமார் யாதவ் இல்லாததால் அவர், பொன்மலை போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்கச் சென்றார்.  போலீஸார் புகாரை வாங்கவில்லை.நேற்று காலை, 10.30 மணிக்கு கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.  நீண்ட நேரம் கழித்து அவரை அழைத்த போலீஸார், “”கமிஷனர் இன்றும் இல்லை.  பொன்மலை போலீஸில் புகாரை கொடுத்து ரசீது பெற்றுக் கொள்ளுங்கள்,” எனக்கூறி அனுப்பினர்.இதனால் நொந்து போன துர்கேஸ்வரி கூறுகையில்,  “”கருவுற்று எட்டுமாதம் ஆகியதால், என்னால் தனியாக எங்கும் செல்ல முடியவில்லை. கமிஷனர் அலுவலகத்துக்கு ஆட்டோவில் வந்து,  மாடி ஏறிச் செல்லவும் முடியவில்லை. நீண்ட நேரம் காக்க வைத்து என்னை திருப்பி அனுப்பினர்.  வாந்தி வருவது போல இருந்ததால் பொன்மலை போலீஸ் ஸ்டேஷனக்குச் செல்லாமல் வீட்டுக்கு சென்றேன்,” என்றார். மார்ச், ஏப்ரல், மே என்று மாதங்கள் கழிந்து ஜூனில் உள்ள நிலை இது. இனி என்னாகும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்!

Ashik married - woman complained

Ashik married – woman complained

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=997116

[2] https://islamindia.wordpress.com/2014/03/09/muslims-affecting-hindu-women-their-rights-etc-in-secular-india/

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=997116&Print=1

[4]தினமலர், பாலியல்வழக்குவிசாரணை: பாத்ரூமில்ஒளிந்ததுணைமேயர், சென்னை, 12-06-2014

[5] http://www.youtube.com/watch?v=BlXKPLONa3s

[6] http://www.youtube.com/watch?v=BlXKPLONa3s

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=930944&Print=1