Posted tagged ‘பலன்’

இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர்: முஸ்லிம்களுக்கு சிகிச்சை மறுத்தது, வெறிநாய்கள் கடித்தது, குவாரென்டைன் செய்தது, தடை நீக்கியது!

மே 1, 2020

இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர்: முஸ்லிம்களுக்கு சிகிச்சை மறுத்தது, வெறிநாய்கள் கடித்தது, குவாரென்டைன் செய்தது, தடை நீக்கியது!

Muslims sharpening knives etc , 29-04-2020

கேரளா சென்று திரும்பிய இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர்களுக்குத் திரும்பியவர்கள்: 144 தடை உத்தரவை மீறிய கிராமங்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சீல் வைத்தனர்[1]. திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரகநல்லூர் ஊராட்சி  இஸ்லாம் நகர் பகுதியில் 1,100 குடும்பங்கள் வசிக்கின்றன[2]. இதேபோல் சாத்திரம், ஜெயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம் நகரில்  மொத்தம் 750 வீடுகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலானோர் காய்கறி நறுக்கும் கத்தியை கூர்மை தீட்டும் தொழில் செய்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் கேரளா மாநிலத்திற்கு சென்று அந்தப் பகுதியில் தொழில் செய்பவர்கள். இந்நிலையில்,  கேரளாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்தது வருவதாக கூறப்படுகிறது. எனவே  இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர் மக்கள் கேரளா சென்று திரும்பியவர்கள் என்பதால் இவர்களுக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தின்பேரில் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆனால் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தங்காமல் நகர்புறம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு அடிக்கடி சென்று வந்தனர்[3]. எனவே அரசு ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்காததால்   திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணஅமுதம் மற்றும் திருத்தணி போலீஸ் டிஎஸ்பி சேகர், ஒன்றிய ஆணையர்கள் இணைந்து மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி அந்த கிராமங்களை சுற்றி காவலர்களை நியமித்து செக்போஸ்ட்  அமைத்து சீல் வைத்தனர்[4]. அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்தனர்.

Complaint to Authority against hospital-1

முஸ்லிம் என்பதால் வேறு மருத்துவமனையைப் பாத்துக்கோங்கன்னுசொன்ன மருத்துவர்: திருத்தணியை அடுத்த இஸ்லாம் நகர் பகுதியில் வசிக்கும் சைதா என்பவர் தன் மனைவி ஆஷாவுக்கு கடந்த சில வாரங்களாக திருத்தணியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை செய்துவந்துள்ளார். திடீரென ஒருநாள், சைதாவைத் தொடர்புகொண்ட மருத்துவமனை நிர்வாகம் `மேற்கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாதென்றும், தங்கள் மருத்துவமனையில் முஸ்லிம் மதத்தினருக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம்’ என்று கூறி சைதாவின் மனைவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய சைதா, “என் மனைவி ஆஷாவுக்கு போன மாசம் திடீர்னு உடம்பு சரியில்லாமப் போச்சு. உடனடியா, திருத்தணியில இருக்குற பீகாக் மருத்துமனைக்கு கூட்டிட்டுப் போனேன். என் மனைவியைப் பரிசோதிச்சிட்டு அவங்களுக்கு கிட்னில பாதிப்பு இருக்கு, உடனடியாக ஆபரேஷன் பண்ணனும்னு சொன்னாங்க. நான் அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னதுக்கு, அவங்க உடல் நிலை மோசமா இருக்கறதால உடனடியா ஆபரேஷன் செய்யணும்னு சொன்னாங்க. இல்லனா உயிருக்கு உத்தரவாதம் இல்லைனு சொன்னதால நானும் என் மனைவியை அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை செய்யலாம்னு முடிவெடுத்தேன். அந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.30,000 செலவாகும்னு முதல்ல சொன்னாங்க, ஆனா எங்க கிட்ட ரூ.65,000 வாங்கிட்டாங்க. அறுவை சிகிச்சை முடிஞ்சு அங்கேயே 4 நாள் வெச்சிருந்தாங்க பிறகு வீட்டுக்கு அனுப்பிட்டு, தொடர்ந்து வாரத்துல செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வந்து டயாலிசிஸ் செஞ்சுட்டு போகணும்னு சொன்னாங்க. நானும் கடந்த செவ்வாய்க்கிழமை கூட என் மனைவிய கூட்டிட்டுப் போய் டயாலிசிஸ் செஞ்சுட்டு வந்தேன். ஆனா இந்த நிலையில ஏப்ரல் 2-ம் தேதி காலையில மருத்துவமனைல இருந்து போன் வந்துச்சு. என்கிட்ட பேசினவரு `நாளைக்கு நீங்க டயாலிசிஸ் சிகிச்சைக்கு வர வேண்டாம், எங்க மருத்துவமனைல முஸ்லிம் யாருக்கும் சிகிச்சை அளிக்கக் கூடாதுனு எங்க எம்.டி சொல்லிட்டாரு, அதனால நீங்க மேற்படி சிகிச்சைக்கு வேற மருத்துவமனையைப் பாத்துக்கோங்கன்னு” சொன்னாங்க.

Complaint to Authority against hospital-2

திருவள்ளூர் ஜாயின்ட் டைரக்டர் அலுவலகத்துல இருந்து சுற்றறிக்கை:  நான் பதிலுக்கு என் மனைவிக்கு ஆரம்பத்துல இருந்தே உங்க மருத்துவமனையிலதானே பார்த்துட்டு வர்றேன். இப்போ திடீர்னு இப்படி சொன்னீங்கன்னா நாங்க இந்த 144 தடை நேரத்துல எங்க போறதுன்னு கேட்டதுக்கு, இல்ல சார் எங்களுக்கு திருவள்ளூர் ஜாயின்ட் டைரக்டர் அலுவலகத்துல இருந்து சுற்றறிக்கை வந்துருக்கு. அதுல, முஸ்லிம் மதத்தினர் யாரு சிகிச்சைக்கு வந்தாலும் அனுமதிக்க வேண்டாம்னு உத்தரவு போட்ருக்காங்க. உங்களுக்கு மேற்படி சிகிச்சை வேணும்னா நீங்க உங்க மனைவிய அரசு மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிப் போன வெச்சுட்டாங்க. இப்ப என் மனைவிக்கு டயாலிசிஸ் பண்ணனும். மருத்துவமனை நிர்வாகம் திடீர்னு இப்படி சொல்லிட்டதால அடுத்து என்ன பண்றதுனு தெரியாம தவிச்சிட்டு இருக்கோம். ஒரு நாள் சிகிச்சை அளிக்கத் தவறினா கூட அவ உயிருக்கே ஆபத்தாயிடும். திருத்தணி பகுதில வேற எங்கயும் இந்த சிகிச்சை கிடையாது. எங்க பகுதில இஸ்லாமிய சமூக மக்கள்தான் அதிகமா இருக்கோம். ஆரம்பத்துல இருந்து சிகிச்சை அளிச்சிட்டு வந்துட்டு இப்ப அவங்க இப்படி எங்களுக்கு மருத்துவம் பார்க்காமல் புறக்கணிக்கிறதுதான் எதுக்குன்னு தெரியல, குறிப்பாக எங்க மதத்தினருக்கு மட்டும் சிகிச்சை இல்லைன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்னும் தெரியல.

30 percent infection due to Tabliq, Tamil Hindu, 20-04-2020

டெல்லில நடந்த ஜமா-அத் மாநாட்டுக்குப் போய்ட்டு வந்துருப்போம்னுதான் எங்களுக்கு சிகிச்சை அளிக்காம புறக்கணிக்குறாங்க. ஆனா எங்க இஸ்லாம் நகர் பகுதியில இருந்து ஒருத்தர் கூட அந்த மாநாட்டுக்குப் போகல. அப்படி இருக்கும்போது உயிர் காக்கும் மருத்துவமனையில இது மாதிரி மத பாகுபாடு பார்ப்பதுதான் மிகுந்த வேதனை அளிக்குது. நான் என் மனைவிய வேற மருத்துவமனையில சிகிச்சைக்கு அனுமதிப்பேன். ஆனா எங்களுக்கு நடந்த மாதிரி இனி யாருக்கும் நடக்கக் கூடாது. இன்னைக்கு இப்படி செய்றவங்க நாளைக்கு ஒரு அவசரம்னு போனாலும் இப்படித்தான் எங்களைப் புறக்கணிப்பாங்க. திருவள்ளூர் இணை இயக்குநர்தான் சுற்றறிக்கை அனுப்புனதா சொன்னதால நாங்க இப்ப இணை இயக்குநர்கிட்டயே தகுந்த ஆதாரங்களோடு புகார் மனு அளிச்சிருக்கோம். நடவடிக்கை எடுக்ககுறதா உறுதி அளித்துள்ளார். மேற்கொண்டு அரசு பீகாக் மருத்துவமனை மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து என் மனைவிக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க உதவணும்” என்றார்.

Muslim nagar children bitten by dogs Dinamani

அரசு ஆஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஒப்புதல்: இது குறித்து, திருவள்ளூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் இளங்கோவிடம் பேசினோம், “பாதிக்கப்பட்டுள்ள ஆஷாவின் தரப்பிலிருந்து மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிரான புகார் மனுவைப் பெற்றிருக்கிறேன். மனுவின் மீதான நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளேன். அரசுத் தரப்பிலிருந்து அப்படி ஏதும் சுற்றறிக்கைகள் அனுப்பவில்லை. மருத்துவமனை நிர்வாகம் பொய்யான ஒரு கருத்தை பரப்பியிருப்பது முறையல்ல. மனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை வலியுறுத்தி இருக்கிறேன். உடனடியாக விசாரிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, “ஆஷா எங்கள் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு நாங்கள்தான் சிகிச்சை அளித்து வருகிறோம். ஆனால், தற்போது நோய்த் தொற்று பரவலின் காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நோய் பாதிப்பு இருக்கலாம். எனவே, அவர்கள் குறித்து அரசுக்குத் தகவல் தெரிவித்து அரசு சிகிச்சையளிக்க ஒப்புதல் அளித்தால் மட்டுமே மேற்கொண்டு சிகிச்சை அளிக்கிறோம். அதன் அடிப்படையில்தான் அவர்களுக்கும் கூறினோம்[5]. ஆனால், இப்போது அரசு ஆஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதால், நாங்கள் ஆஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கத் தயாராகவே இருக்கிறோம்” என்று கூறி சமாளித்தனர்[6].

Islam nagar, disinfected, Tikkathir, 30-04-2020

முஸ்லிம் நகரில் வெறி பிடித்த நாய்கள் கடித்தது: திருத்தணி அருகே ஒரே நாளில் 20 சிறுவர்களை வெறி நாய்கள் துரத்திக் கடித்தன.  திருத்தணி ஒன்றியம், வீரகநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்டது இஸ்லாம் நகர். இங்கு, 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், இங்கு அரசினர் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், இஸ்லாம் நகர் பகுதியில் வெறி நாய்கள் கடந்த இரு நாள்களாக சுற்றி திரிந்தன. புதன்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற மாணவ-மாணவியர் மற்றும் தெருவில் விளையாடிய சிறுவர்களை வெறி நாய்கள் துரத்திக் கடித்துள்ளன. இதில், ஆதீரா(7), சலீம்(6), மஸ்தான்(11), பாய்ஸ் (11), சலீம்முல்லா(12), முகமது அலி (3), ஆயிஷா (7), பாத்திமா (10) உள்பட 18 மாணவ-மாணவிகள், பாஷா பாய் (32) காதர்பாஷா(56) ஆகிய இருவர் என மொத்தம், 20 பேரை வெறி நாய்கள் கடித்து குதறியுள்ளன[7]. இதில் காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வெறி நாய்கள் தொடர்ந்து இஸ்லாம் நகரில் சுற்றித்திரிவதால், புதன்கிழமை பள்ளிக்குச் சென்ற மாணவ-மாணவிகள் தங்களது கைகளில் கம்புடன் சென்றனர். அதே போல் மாலையும் கம்புகளுடன் வீட்டுக்குத் திரும்பினர். வெறி நாய்களைப் பிடிக்க வேண்டும் என ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இஸ்லாம் நகர் மக்கள் கூறுகின்றனர்[8]. எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து, இஸ்லாம் நகரில் சுற்றித்திரியும் வெறி நாய்களைப் பிடித்து காட்டில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Islam nagar, quarantine fremoved, Dinakaran, 29-04-2020

திருத்தணி : வீரகநல்லுார் ஊராட்சியில், 28 நாட்களாக போடப்பட்டிருந்த சோதனைச்சாவடி அகற்றப்பட்டது: திருத்தணி ஒன்றியம், வீரகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட இஸ்லாம் நகரில் வசிக்கும், 59 இஸ்லாமியர்கள் சாணை பிடிக்கும் தொழிலுக்காக, மார்ச் மாதம், கேரளாவுக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்தனர்.இதையடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, இஸ்லாம் நகர் பகுதியில் வசித்த, 59 குடும்பத்தினரை தனிமைப்படுத்தினர்.மேலும், வெளியாட்கள் யாரும் செல்லாதவாறு வருவாய் துறை மற்றும் சுகாதார துறையின் சார்பில், நுழைவு வாயிலில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், தனிமைப்பட்டவர்களுக்கு, 28 நாட்கள் முடிந்ததைத் தொடர்ந்து, மருத்துவக் குழுவினர், இஸ்லாம் நகர் முழுதும் வீடு வீடாகச் சென்று, வைரஸ் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என, உறுதி செய்யப்பட்டது [9]. அதை தொடர்ந்து, திருத்தணி கோட்டாட்சியர் சொர்ணம் அமுதா உத்தரவின்படி, இஸ்லாம் நகர் சுற்றிலும் மூடப்பட்ட எல்லைகள் மற்றும் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டன[10].

Islam nagar, quarantine fremoved, DM, 29-04-2020

  1. முஸ்லிம்கள் இவ்வாறு தனிடயாக சேர்ந்து, இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர் என்றெல்லாம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
  2. எல்லோரையும் போல, சேர்ந்து இல்லாமல், இவ்வாறு தனித்திருக்க வேண்டிய, தம்மைத் தனித்துக் காட்டிக் கொள்ளக் கூடிய போக்கு தான் தெரிகிறது.
  3. இவ்வாறு செய்வதால் தான் மற்றவர்களுக்கு, நிச்சயமாக மனங்களில் சந்தேகம், அச்சம், பீதி, கலவரம் முதலியவை வருகின்றன.
  4. இந்த கொரோனா காலத்தில், யாரிடத்தில் தொற்று உள்ளது, இல்லை குடும்பத்தில் உள்ளது என்றெல்லாம் யாருக்கும் தெரியாது.
  5. முஸ்லிம்கள் இல்லாதவர்களே தனிமைப் படுத்திக் கொண்டு வாழும் தனிமனிதர்கள், குடும்பங்கள் இருக்கின்றன.
  6. ஆகவே, இங்கு “முஸ்லிம்” என்ற பிரச்சினையை கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை.
  7. சிகிச்சைப் பொறுத்த வரையில், இருதரப்பிலுமுள்ள விவகாரங்கள் வேறுவிதமாக இருக்கின்றன.
  8. செக்யூலரிஸம் என்றபோது, எல்லா வழிகளிலும் அது கடைபிடிக்கப் படவேண்டும்.

© வேதபிரகாஷ்

01-05-2020

Mxm attended Tabliq conf. TN, corona graphics

[1] தினத்தந்தி, 144 தடை உத்தரவை மீறிய கிராமங்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சீல் வைப்பு !!, 29 மார்ச். 2020

[2] https://m.dailyhunt.in/news/india/tamil/dina+seithigal-epaper-dinasei/144+tadai+utharavai+meeriya+kiramangalukku+boleesar+marrum+athikarikal+seel+vaippu-newsid-174710006

[3] தினகரன், ஊரடங்கு உத்தரவை மீறிய கிராமங்களுக்கு சீல் வைப்பு: அதிகாரிகள் அதிரடி, 2020-03-29@ 10:50:46

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=575209

[5] விகடன், நோயாளியைப் புறக்கணித்த திருத்தணி தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை உறுதி!,சே. பாலாஜி, Published:05 Apr 2020 6 PM Updated:05 Apr 2020 6 PM

[6] https://www.vikatan.com/government-and-politics/healthy/private-hospital-deny-treating-patients-in-thiruttani?artfrm=v4

[7] தினமணி, ஒரே நாளில் 20 பேரைக் கடித்த வெறி நாய்கள், By DIN | Published on : 25th January 2018 04:08 AM

[8] https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2018/jan/25/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2850692.html

[9] தினமலர், ஊராட்சியில் சோதனைச்சாவடி அகற்றம், Added : ஏப் 27, 2020 22:49

[10]https://www.dinamalar.com/news_detail.asp?id=2529164&fbclid=IwAR2n0nyehih1wCuYMFTyEXh20IVD-zM5k4ZwlQ1hFVuj7fsBDy1tb6DBnaU

தமிழக முஸ்லிம் கட்சிகள் பிளவுப்பட்ட நிலை – இரட்டை வேடங்களா, நிறைய சீட்டுகளைப் பெற ஆடும் நாடகமா – திராவிட கட்சிகளின் தாஜா செய்யும் போக்கு தொடர்கிறது!

ஏப்ரல் 20, 2016

தமிழக முஸ்லிம் கட்சிகள் பிளவுப்பட்ட நிலை – இரட்டை வேடங்களா, நிறைய சீட்டுகளைப் பெற ஆடும் நாடகமா – திராவிட கட்சிகளின் தாஜா செய்யும் போக்கு தொடர்கிறது!

16-04-2016 னிக்ஹ்ட் Taking-the-opposition-coalition-dmk-protest-in-vaniyambadiதிமுகவினருக்கும், முஸ்லிம்களுக்கும் என்ன பிரச்சினை?: உளுந்துார்பேட்டையை போல வாணியம்பாடி தொகுதியை, அண்ணா அறிவாலயத்தில், ‘சரண்டர்’ செய்து விடு’ என, முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு, தி.மு.க.,வினர் மிரட்டல் விடுத்த தகவல் வெளியாகி உள்ளது[1] என்ற செய்தி வியப்பாக உள்ளது. என்ன மீலாது நபி விழாக்களில் கலந்து கொண்டு, ரம்ஜான் நோன்பு விழாக்களில் நன்றாக சாப்பிட்டு முஸ்லிம்களை புகழ்ந்த திராவிடர்களா, முஸ்லிம்களை எதிர்க்கிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது. வேலுார் மாவட்டத்தில், மொத்தமுள்ள, 13 தொகுதிகளில், 10ல் தி.மு.க., போட்டியிடுகிறது; மூன்று தொகுதிகளில், கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், ஆம்பூர் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சியும், வாணியம்பாடி தொகுதியில் முஸ்லிம் லீக் கட்சியும் போட்டியிடுகிறது[2]. வாணியம்பாடி தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், முகமது பாரூக் போட்டியிடுகிறார்.

Fight among the mohammedan parties in Tamilnaduஉளுந்தூர்பேட்டை தொகுதியை திமுகவிடம் ஒப்படைத்தது ஏன்?: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.ம.க.வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப் பட்டது. அதில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுக-விடம் ஒப்படைத்தது[3]. இந்தத் தொகுதியில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் போட்டியிடுவார் என்று திமுக அறிவித்துள்ளது.  இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு வேட்பாளரை திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்[4]. ம.ம.க.தலைவர் ஜவாஹிருல்லா வெள்ளி மாலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பின்பு உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுக வசம் அளித்ததாகத் தெரிவித்தார். எனினும் அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. ஒரு தொகுதியை திமுகவுக்கு விட்டுக் கொடுத்துள்ள நிலையில் ம.ம.க போட்டியிடும் தொகுதிகள் நிலவரம்:

  1. ராமநாதபுரம்: ஜவாகிருல்லா.
  2. தொண்டாமுத்தூர்: எம்.ஏ.சையது முகமது.
  3. நாகப்பட்டிணம்: ஏ.எம்.ஜபருல்லா.
  4. ஆம்பூர்: வி.எம்.நஜீர் அகமது.

தொகுதி உடன்பாடு பிரச்சனையில் திமுக கூட்டணியிலிருந்து எஸ் .டி.பி.ஐ.கட்சி வெளியேறியமை குறிப்பிடத்தக்கது[5]. ஆகவே, சீட்டு எண்ணிக்கையினால் எஸ்.டி.பி.ஐ.கட்சி விலகியது என்று சொல்வதில் அர்த்தமில்லை.

கருணாநிதி முஸ்லிம்களுடன். எஸ்.டி.பி.ஐவாணியம்பாடி திமுகவுக்கே: கடந்த, 37 ஆண்டுகளாக, கூட்டணி கட்சிகளுக்கே, வாணியம்பாடி ஒதுக்கப்பட்டு வந்துள்ளதால், இந்த முறை வாய்ப்பு கிடைக்கும் என, தி.மு.க.,வினர் எதிர்பார்த்திருந்தனர். தொகுதி முழுவதும், சுவர்களில் உதயசூரியன் சின்னத்தை வரைந்து வைத்திருந்தனர். ஆனால், இந்த முறையும் தொகுதி கைமாறியதால், தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்தனர்[6]. நேற்று முன்தினம் இரவு, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய தி.மு.க.,வினர், வேலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தி.மு.க., போட்டியிட வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்[7]. இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனிதநேய மக்கள் கட்சி, உளுந்துார்பேட்டை தொகுதியை, தி.மு.க.,விடம் சரண்டர் செய்தது[8]. அதேபோல், வாணியம்பாடி தொகுதியையும் சரண்டர் செய்ய வேண்டும் என, முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது பாரூக்கை, தி.மு.க.,வினர் மிரட்டியதாக, 16-04-2016 அன்று தகவல் பரவியது[9].

SDPI, MMK, IUML all in DMK 2016முஸ்லிக் லீக் நிர்வாகி திமுகவினருக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ள பிரச்சினை பற்ரி கூறுவது: இது குறித்து, முஸ்லிம் லீக் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இதன் பின்னணியில், வேலுார் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் தேவராஜ் உள்ளார். அவரது மைத்துனர் அசோகன், ஆலங்காயம் ஒன்றிய செயலராக இருக்கிறார். அவரது துாண்டுதலில் தான், தி.மு.க.,வினர் போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். ஆம்பூரிலும் எதிர்ப்பு: ஆம்பூர் தொகுதியை, மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியதைக் கண்டித்து, தி.மு.க.,வினர் போராட்டத்தில் குதித்தனர். ஆம்பூர் நேதாஜி சாலையில் மறியல் நடத்திய, 100க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர், பின், நகர தி.மு.க., அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ‘ஆம்பூர் தொகுதியில், தி.மு.க.,வே போட்டியிட வேண்டும்; இல்லையெனில், தேர்தல் பணியில் ஈடுபட மாட்டோம்’ என, கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த தி.மு.க. நிர்வாகிகள் போராட்டக்காரர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்[10].

IUML splinter groupsதங்களது மக்கட்தொகைக்கு அதிகமாக முஸ்லிம்கள் சீட்டுகள் பெறுவது: தமிழக மக்கட்தொகை சுமார் 7.3 கோடி அல்லது 730 லட்சங்கள், அதில் முஸ்லிம்கள் சுமார் 43 லட்சங்கள் இருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால், அவர்களுக்கு 6% என்ற கணக்கில் ஒன்று அல்லது இரண்டு இடங்கள் தான் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் 12 முதல் 15 சீட்டுகள் கொடுக்கப்படுகிறன. இது தவிர “தேர்தெடுக்கும் முறையில்” ஒரு எம்.பி பதவியையும் சேர்த்து பேரத்தில் பேசி வருகிறார்கள். தவிர அரசு ஒதுக்கீடு இடங்கள், கடைகள், குத்தகைகள் முதலியவற்றி;உம் முஸ்லிம்கள் கணிசமான இடங்களைப் பெறுகிறார்கள், கோடிகளை அள்ளுகிறார்கள். இதெல்லாம், மற்ற திராவிட அரசியல்வாதிகளை பாதிக்கின்றன. 30-50 ஆண்டுகள் என்று உழைத்து வந்து கொண்டிருக்கின்ற நிலையில், நேற்று வந்தவர்கள் சீட் பெற்று பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை என்றே தெரிகிறது. இது தவிர மற்ற கட்சிகளில் உள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் முஸ்லிம்களாகத்தான் செயல்பட்டு வருகிறார்களே தவிர இந்துக்களைப் போல நாத்திகர்கள், செக்யூலரிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என்றெல்லாம் செயல்படுவதில்லை. திராவிடக் கட்சித் தலைவர்கள் அவர்கள் மூலம் ஆதாயம் பெறுகின்றனரே தவிர மற்றவர்களுக்கு, தொண்டர்களுக்கு எந்த லாபமுன் இல்லை.

கரு முஸ்லிம் லீக், குழுக்களுடன்தமிழகத்தில் முஸ்லிம் அரசியல் நிலை என்ன?: 1948 முதல் 1972 வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்), திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டு இரண்டு கட்சிகளும் பரஸ்பர ஆதாரங்கள் பெற்றன. 1970-80களில் வளைகுடாவுக்கு வேலைக்குச் சென்றது, இலங்கை (மலேசியா, சிங்கப்பூர் முதலியவற்றைச் சேர்த்து) வியாபார இணைப்புகள், தங்கம், போதை மருந்து கடத்தல் போன்றவற்றில் கோடிகளை அள்ளினர். இதற்காகத்தான் அவர்களது அரசியல் உறவுகள் உதவின. பணம் அதிகமாக வரவர, மசூதிகள், டிரஸ்டுகள், நிறுவனங்கள் அதிகமாகின. அதற்கேற்றப்படி, முக்கியஸ்தர்கள் அரசியல் ஆதாயம் பெற விரும்பினர். சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு 1987ல் ஷாபானு வழக்கு உதவியது. இதை வைத்துக் கொண்டு, ஐ.யூ.எம்.எல் அடக்கி வாசிக்கிறது, இந்துத்த்வத்திற்கு துணை போகிறது என்று குற்றஞ்சாட்ட ஆரம்பித்தன. 1992ல் ராமஜென்பபூமி விவகாரம் அவர்களுக்கு பெரிதும் உதவியது. இதனால், 1995ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தனர். 1997ல் கோயம்புத்தூரில் கான்ஸ்டெபில் செல்வராஜ் முஸ்லிம்களால் கொலை செய்யப் படுகிறார். பிப்ரவரி 14, 1998ல் கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. அதில் 58 பேர் கொல்லப்படுகின்றனர், 200ற்கும் மேலானவர்கள் படுகாயம் அடைகின்றனர். 2009ல் மனிதநேயக் கட்சி தோன்றியது. இப்படியாக முஸ்லிம் கட்சிகள் தீவிரவாத அரசியலில் இறங்கின.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_015

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_015

முஸ்லிம் கட்சிகளினால் தமிழகத்திற்கு கிடைத்த பலன் என்ன?: ஒவ்வொரு திராவிட கட்சி அமைச்சர், எம்.பி, எம்.எல்.ஏ, தான் பதவியில் இருந்த காலத்தில், தான் மக்களுக்காக இதை செய்தேன் – அதை செய்தேன் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இந்த முஸ்லிம்கள் பதவிக்கு வந்தால், தமிழக மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதை இதுவரை யாரும் கேட்கவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல் கட்சி வேட்பாளராக நின்று வெற்ற்ப்பெற்றப் பிறகும், அவர்கள் முஸ்லிம்களாக இருந்து, தங்களது நலன்களை பெருக்கிக் கொண்டார்களே தவிர மற்ற மக்களின் நலன்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. ராமேஸ்வரம், நாகப்பட்டினம், கும்பகோணம் போன்ற தொகுதிகளில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தாலும், அங்குள்ள கோவில்களை, கோவில் சொத்துகளை பாதிக்கும் வகையில் தான் நடந்து கொள்கின்றனர். கோடிக்கணக்கில் வருகின்ற பக்தர்கள் மூலம், வியாபாரங்களில் லாபங்களை அள்ளுகின்றனரே தவிர, பதிலுக்கு அவர்கள் எந்த வசதிகளையும் செய்து தருவதில்லை. பிறகு அரசியல் மற்றும் அரசியல் இல்லாத நிலைகளில் அவர்களினால் தமிழக மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை எனும் போது, விகிதாசாரத்திற்கு அதிகமாக அவர்களாஇத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதனால் என்ன பலன்?

© வேதபிரகாஷ்

20-04-2016

[1] தினமலர், தொகுதியை சரண்டர் செய்‘: முஸ்லிம் லீக்கிற்கு தி.மு.., மிரட்டல், ஏப்ரல்,18,,220016.011:22..

[2] மாலைமலர், கூட்டணிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு: வாணியம்பாடியில் தி.மு..வினர் போராட்டம், பதிவு: ஏப்ரல் 17, 2016 16:37, மாற்றம்: ஏப்ரல் 17, 2016 16:40.

[3] இன்னேரம்.காம், மனிதநேய மக்கள் கட்சியின் ஒரு தொகுதி திமுகவிடம் ஒப்படைப்பு!, சனிக்கிழமை, 16 April 2016 00:44.

[4]http://www.dinamani.com/tamilnadu/2016/04/16/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/article3382392.ece

[5] http://www.inneram.com/news/tamilnadu/8641-mmk-one-seat-submitted-to-dmk.html

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1503913

[7] தினமணி, உளுந்தூர்பேட்டையை விட்டுக் கொடுத்தது மமக; திமுக வேட்பாளரும் உடனே அறிவிப்பு, By  சென்னை, First Published : 16 April 2016 12:47 AM IST

[8] தமிழ்.ஒன்.இந்தியா, மமக அறிவிப்பை தொடர்ந்து .பேட்டையில் திமுக போட்டி..ஜி.ஆர்.வசந்தவேல் வேட்பாளராக அறிவிப்பு, By: Karthikeyan, Updated: Friday, April 15, 2016, 20:32 [IST].

[9] http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-contest-ulundurpet-constituency-251346.html

[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/17163725/1005449/cni-47.vpf