Posted tagged ‘பரங்கிப்பேட்டை’

ஐ.எஸ். உடன் தொடர்பு: காரைக்காலும், ராமநாதபுரமும்: விபச்சாரமும், டி-சர்டும் தானா, அல்லது அதற்கும் மேலாக உள்ளதா?

நவம்பர் 23, 2015

.எஸ். உடன் தொடர்பு: காரைக்காலும், ராமநாதபுரமும்: விபச்சாரமும், டி-சர்டும் தானா, அல்லது அதற்கும் மேலாக உள்ளதா?

காரைக்காலில் மத்திய உளவுப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்துல் சிராஜ் தவுலத்-இடமிருந்து 2-வது.எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு: காரைக்கால் இளைஞர் கைது (அக்டோபர்.2015): ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினருடன் தொடர்பில் இருந்த காரைக்கால் இளைஞர் கைது செய்யப்பட்டார். காரைக்கால் வள்ளலார் நகர் விரிவாக்கப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அமீது மரைக்காயர் மகன் முகம்மது நவாப் சிராஜ் தவ்லத் மரைக்காயர் (35) என்பவரை சந்தேகத்தின்பேரில் மத்திய உளவுத் துறையினர் செவ்வாய்க்கிழமை 27-10-2015 அன்று விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இவ்வழக்கு விவரம்: கடந்த 2000-ம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற சிராஜ் தவ்லத் மரைக்காயர் பின்னர் ஊர் திரும்பினார். தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர், தமிழகத்தில் ஏ.வி.எஸ். [Anti Vice Squad, AVS] என்கிற விபசார தடுப்புப் பிரிவினருக்கு, வழக்குத் தொடர்பாக செல்லிடப்பேசி உரையாடலை பதிவு செய்து தரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில் பல்வேறு பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதன் விளைவாக நிறுவனம் இவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது. இதையடுத்து, விபசாரம் செய்து பணம் சம்பாதிப்பதில் ஈடுபடத் தொடங்கினார். இந்த அனுபவத்தைக் கொண்டு, பல முக்கியப் பிரமுகர்களின் தொலை பேசி உரையாடல்களை ஒட்டு கேட்டதும், பலரை வேலைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிந் துள்ளது. மேலும், சென்னையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது[1].

அமீது மரைக்காயர் மகன் முகம்மது நவாப் சிராஜ் தவ்லத் மரைக்காயர் கைதுபுழல் சிறையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இயக்க உறுப்பினர் இஸ்மா சாதிக் / இக்மா சாதிக் ஏற்பட்ட தொடர்பு: பல்வேறு வழக்குகளில் தமிழக போலீஸார் இவரைக் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அங்கு சிலருடன் ஏற்பட்ட தொடர்பை வைத்துக்கொண்டு, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இயக்க உறுப்பினர் இஸ்மா சாதிக் / இக்மா சாதிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது[2].  மத்திய உளவுத் துறையினர் இஸ்மா சாதிக்கை தேடும் பணியில் ஈடுபட்டபோது, அவருடன் தவ்லத் மரைக்காயருக்கு இருந்த தொடர்பு தெரியவந்து காரைக்காலில் இவர் பிடிபட்டார்[3]. நெடுங்காடு காவல்நிலையத்தில் வைத்து விசாரித்த போது உளவுத் துறையினர், போலீஸாரிடம் இந்த தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.  இவரிடமிருந்து 3 செல்லிடப்பேசி, 7 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்கால் காவல்நிலைய போலீஸார், இவரை கைது செய்து காரைக்கால் 2-ம் வகுப்பு குற்றவியல் நீதிபதி ராதாகிருஷ்ணன் முன்பு புதன்கிழமை ஆஜர்படுத்தினர். இவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவரை போலீஸ் காவலில் எடுத்து, விசாரணையை தொடர போலீஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்[4]. அதாவது, ஒரே ஆள் பலகுற்றங்களை செய்வது என்பது, இவர்களில் பொதுவான அம்சமாக இருக்கிறது. இந்த போக்கு அல்-உம்மாவிலிருந்தே காணப்படுகிறது.

ஐசிஸ் சர்ட் அணிந்த முச்லிம் வாலிபர்கள் - ராமநாதபுரம் மசூதிஐசிஸ் ட்சர்ட் புகைப்பட விவகாரம் (ஜூலைஆகஸ்ட்.2014): ஜுலை 29, 2014 தேதியன்று, தொண்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 24 பேர் ஐசிஸ் அமைப்பின் முத்திரை பொறிக்கப்பட்ட கறுப்பு நிற டி ஷர்ட் அணிந்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்[5]. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது, ஈராக்கில் பணியாற்றி வந்த இந்தியச் செவிலியர்கள் ஐசிஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு, துன்புறுத்தாமல் விடுவிக்கப்பட்டதை பாராட்டும் வகையில்தான் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக இளைஞர்கள் தெரிவித்தனர்[6]. ஆனால், ஆயிரக்கணக்கில் முஸ்லிம் பெண்களையே கற்பழிக்கின்றனர், முதலிய காரியங்களை அவர்கள் அறியாமல் போனது விந்தையே! இந்த நிலையில், ஆகஸ்ட்.4, 2015 அன்று மாலையில் அப்துல் ரஹ்மான் என்ற 24 வயது இளைஞரும் முகமது ரில்வான் என்ற இளைஞரும் ராமநாதபுரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்[7]. அப்துல் ரஹ்மான்தான் திருப்பூரில் இந்த டி ஷர்ட்களை வாங்கியவர் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால், அத்தகைய ட்-சர்ட்டுகளை அச்சடித்து தயாரித்தது, விற்றது யார் என்ற கேள்விகளும் எழுகின்றன. இதெல்லாம் தெரியாமல் செய்தது என்று சொல்ல முடியாது. திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மொத்தம் 100 டி சர்ட்களுக்கு ரில்வான் மூலம் அப்துல் ரஹ்மான்தான் ஆர்டர் கொடுத்து வாங்கியுள்ளார்[8]. இந்த டி சர்ட்டை தலா ரூ. 250க்கு விற்றுள்ளனர். இந்தப் புகைப்படத்தில் உள்ள 26 பேரையும் போலீஸார் பிடித்து விசாரித்து விட்டனர். அதன் இறுதியில் 24 பேரை விடுவித்து விட்டு இந்த 2 பேர் மீது மட்டும் தற்போது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

J K youth showing off ISIS Flags during demonstration againat Indiaசிறையிலடைக்கப்பட்டது[9]: இந்தக் கைது குறித்து, ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனத்திடம் கேட்டபோது, ” ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு இல்லை என்றபோதிலும், இது பல்வேறு அரசுகளுக்கு எதிரான ஒரு போராட்டக் குழுவாக உள்ளது. எனவே இந்த அமைப்புக்கு இத்தகைய டி சர்ட்கள் மூலம் ஆதரவு திரட்ட இவர்கள் முயற்சித்துள்ளனர்[10]. இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளர்களாகவும் உள்ளனர். வெளிநாட்டில் ஒரு அரசை எதிர்த்துப் போராடும் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும் இங்கிருக்கும் இளைஞர்களைத் தூண்டியதற்காகவும் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக”த் தெரிவித்தார். இது தொடர்பில் பேசிய, தொண்டி ஜமாத்தின் செயலாளரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவருமான சாதிக் பாட்சா, இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகளைப் போலச் சித்தரிப்பது வருத்தம் தருவதாகத் கூறினார். இது குறித்துப் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லா, இஸ்லாமிய இளைஞர்கள் இதுபோன்ற சமூக வலைதளங்கைப் பயன்படுத்தும்போது பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என பிபிசியிடம் தெரிவித்தார். ஆகஸ்ட்.4, 2014 அன்று மாலை கைதுசெய்யப்பட்ட அவர்கள், திருவாடனை மாஜிஸ்ட்ரேட் இளவரசி முன்பாக ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டனர்[11].

© வேதபிரகாஷ்

23-11-2015

[1] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7821818.ece

[2] தினமணி, .எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு: காரைக்கால் இளைஞர் கைது, By  காரைக்கால், First Published : 29 October 2015 12:31 AM IST

[3] தமிழ்.இந்து, .எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு?மத்திய உளவுப் பிரிவால் விசாரிக்கப்பட்ட காரைக்கால் இளைஞர் சிறையில் அடைப்பு, Published: October 30, 2015 09:10 ISTUpdated: October 30, 2015 09:10 IST.

[4]http://www.dinamani.com/tamilnadu/2015/10/29/%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/article3102332.ece

[5]  தமிழ்.வெப்துனியா, ஐஎஸ்ஐஎஸ் டிஷர்ட்: தமிழகத்தில் இரண்டு இளைஞர்கள் கைது, புதன், 6 ஆகஸ்ட் 2014 (11:17 IST).

[6] http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/ramanathapuram-iraq-isis-t-shirt-two-young-men-arrested-114080600007_1.html

[7] பிபிசி.தமிழ், ஐசிஸ் டிஷர்ட் : தமிழகத்தில் இரு இளைஞர்கள் கைது, ஆகஸ்ட்.5, 2015.

[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஐஎஸ்ஐஎஸ் டி சர்ட் விவகாரம்: போட்டோவுக்கு போஸ் கொடுத்த 2 பேர் கைது– 24 பேர் விடுவிப்பு, Posted by: Sutha, Published: Tuesday, August 5, 2014, 17:24 [IST].

[9] https://www.youtube.com/watch?v=k8PUdCqY-XE

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/two-arrested-tamil-nadu-over-group-photo-isis-t-shirts-207779.html

[11]  http://www.bbc.com/tamil/india/2014/08/140805_isis_tshirt_tnarrests

ஐசிஸ்-தமிழக தொடர்புகள் கல்லூரி நாட்களிலேயே மரைக்காயர் அடிப்படைவாதி – இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை (தி இந்து)!

நவம்பர் 23, 2015

ஐசிஸ்-தமிழக தொடர்புகள் கல்லூரி நாட்களிலேயே மரைக்காயர் அடிப்படைவாதி – இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை (தி இந்து)!

பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்-2

கல்லூரி நாட்களிலேயே மரைக்காயர் அடிப்படைவாதி – இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை (தி இந்து): இது வெறும் கதையல்ல இந்தக் கதை பல்வேறு உலக நாடுகளையும் ஐ,எஸ். கோட்பாட்டின் ஆதிக்கம் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து கவலை கொள்ளச் செய்துள்ளது. முகமது மரகாச்சி மரைக்காயர், கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டார். மரைக்காயர் சவுதி அரேபியாவில் ஐந்து ஆண்டுகள் வேலை செய்துள்ளார். அதன் பின்னர் 2007-ல் சிங்கப்பூர் சென்றுள்ளார். எக்ஸான் மொபைல், ஐ.பி.எம்., போன்ற நிறுவனங்களில் வேலை செய்துள்ளார். மரைக்காயர் சிங்கப்பூர் வர முக்கிய காரணமே அவரது நண்பர் ஃபக்ருதீனை பார்க்க வேண்டும் என்பதே. மரைக்காயரிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது பல்வேறு முக்கியத் தகவல்களும் கிடைத்தன. கல்லூரி நாட்களிலேயே மரைக்காயர் அடிப்படைவாதியாக இருந்துள்ளார். தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார். ஜனநாயகம் மீது அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை. உள்ளூர் தேர்தல்களை அவர் எதிர்த்துள்ளார்.

 பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்

திசையை மாற்றிய பிரச்சாரம் – இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை – (தி இந்து)[1]: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தீவிரவாத பிரச்சாரகர் பெய்ஸ் முகமதின் பேச்சுக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டார் மரைக்காயர். அதேபோல் ஏமன் நாட்டின் அன்வர் அல் அவ்லாகியின் பேச்சுகளும் அவரை வெகுவாக ஈர்த்தது. 2011-ல் அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். சிங்கப்பூரில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சிங்கப்பூர் தேசிய தினத்தை ஒட்டி மசூதி ஒன்றில் ஏற்றப்பட்டிருந்த அந்நாட்டு தேசியக் கொடியை அப்புறப்படுத்தியுள்ளார். இதற்காக அவரை சிங்கப்பூர் போலீஸார் கைது செய்தனர். பின்னாளில் சிங்கப்பூர் போலீஸார் நடத்திய விசாரணையில், ஃபக்ருதீனை மூளைச் சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய வைத்ததை மரைக்காயர் ஒப்புக் கொண்டார். சிரியா போன்ற நாடுகளில் தவிக்கும் முஸ்லிம்களுக்கு உதவுவது நமது கடமை என ஃபக்ருதீனை நம்ப வைத்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். மரைக்காயரால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஃபக்ருதீன் சிரியாவில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர் ஒருவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். அநத நபர் கூறியது போல் 1,500 டாலர் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு சிரியா பயணப்பட தயாரானார் ஃபக்ருதீன். இனி ஐ.எஸ். கலிஃபேட்டில்தான் தனது வாழ்க்கை என்பதை அவர் உறுதி செய்துள்ளார். மீண்டும் ஐ.எஸ். ஆதரவாளரை தொடர்பு கொண்டார். அவர், குடும்பத்துடன் வருமாறு ஃபக்ருதீனுக்கு ஆலோசனை அளித்துள்ளார்.

The detention of Adnan Hassan Damudi in Dubai

நவம்பர் 18, 2013-ல் சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஃபக்ருதீனையும் அவரது குடும்பத்தினரையும் கடைசியாக சந்தித்து வழி அனுப்பிவைத்த மரைக்காயர்: அப்போதுதான் சிரியாவுக்குள் நுழைய எளிதாக இருக்கும் எனவும் ஃபக்ருதீனுக்கு அவர் கூறியுள்ளார். அதன்படி குடும்பத்துடன் சிரியா புறப்பட்டார் ஃபக்ருதீன். நவம்பர் 18, 2013-ல் சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஃபக்ருதீனையும் அவரது குடும்பத்தினரையும் கடைசியாக சந்தித்து வழி அனுப்பியிருக்கிறார் மரைக்காயர். 12 நாட்கள் கழித்து ஃபக்ருதீனின் குடும்பத்தினர் துபாய் திரும்பினர். செச்சன்யாவில் இருந்து வந்த சில போராளிகளுடன் ஃபக்ருதீன் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இருப்பினும் ஐ.எஸ். ஆதிக்கம் உள்ள முக்கிய பகுதிகளுக்கு அவர்களால் செல்ல முடியவில்லை. அங்கு வாழ்வதற்கான சூழல் இல்லாததால் 12 நாட்களிலேயே ஃபக்ருதீன் குடும்பத்தினர் அனைவரும் துபாய் திரும்பியுள்ளனர்.

பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்- போட்டோ

சென்னையில் இருந்து மேலும் இருவரை சிரியாவுக்கு அழைத்துச் செல்ல முயற்சி – இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை – (தி இந்து)[2]: இந்திய உளவு நிறுவனங்கள் வசம் இருக்கும் தகவலின்படி, ஃபக்ருதீன் இரண்டாவது முறையாக சிரியாவுக்குச் செல்ல திட்டமிட்டபோது சென்னையில் இருந்து மேலும் இருவரை அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறார். அந்த இருவரது அடையாளமும் தெரியவந்துள்ளது. இருவரில் ஒருவருக்கு துருக்கி விசா மறுக்கப்பட்டுவிட்டது. மற்றொருவருக்கு பாஸ்போர்ட்டே இல்லை. இதனால், அவர்களை விட்டுவிட்டு மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சிரியா புறப்பட்டுச் சென்றார் ஃபக்ருதீன். ஜனவரி 22, 2014-ல் இச்சம்பவம் நடந்தது. தற்போதைய தகவலின்படி, ஃபக்ருதீன் சிரியா – துருக்கி எல்லையில் இருக்க வேண்டும் எனக் கூறுகின்றன உளவு நிறுவனங்கள். ஃபக்ருதீன் குடும்பத்துடன் சிரியா செல்ல விமான டிக்கெட்டை கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அவருக்கு சென்னையில் டிராவல் ஏஜென்சி இருக்கிறது. மேலும், தான் குடும்பத்தினருடன் பத்திரமாக சிரியா அடைந்துவிட்டதாக ஃபக்ருதீன் கன்னியாகுமரி இளைஞருக்கு தகவலும் அனுப்பியுள்ளார். சிரியாவுக்கான முதல் பயணம் தோல்வியடைந்த பின்னர் டிசம்பர் 2013-ல் இருந்து ஜனவரி 2014 வரை ஃபக்ருதீன் சென்னையில் தங்கியுள்ளார். அப்போது அவர் தான் படித்த புதுக்கல்லூரி மாணவர்கள் சிலரையும் மூளைச்சலவை செய்ய முயன்றுள்ளார்.

New college students become ISIS warriors

தமிழகத்தைச் சேர்ந்த சிறிய குழு சிரியா சென்று .எஸ்ஸில் தங்களை இணைத்துக் கொள்ள ஒன்று தயாராக இருந்தது- இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை – (தி இந்து)[3]: ஐ.எஸ். மீது ஈர்ப்பு கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பல இளைஞர்களும் ஃபக்ருதீனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் கடலூரில் குரான் மனனம் செய்ய பயிற்றுவிக்கும் பள்ளியை நடத்துபவர். இவரைத் தவிர சென்னையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவரும், புதுக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவரும் அடங்குவர். உளவுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “சிரியா சென்று ஐ.எஸ்-ஸில் தங்களை இணைத்துக் கொள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிறிய குழு ஒன்று தயாராக இருந்ததற்கு நம்பத்தகுந்த ஆதாரம் இருக்கிறது. சிரியா செல்வதற்கு முன்னர் மூன்று மாதங்களுக்கு உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றனர். சிரியா செல்பவர்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ.20,000 பணமும், ஒருவேளை அவர்கள் உயிரிழந்துவிட்டால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் பணமும் அளிக்கப்படும் என அந்த இளைஞர்களிடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பணத்தை யார் அளிப்பார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை” என்றார். ஆக, “தி இந்துவை”ப் பொறுத்த வரையிலும், இது வெறும் இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதையாகத்தான் இருக்கிறது போலும்! இனி பரங்கிப்பேட்டை விவகாரத்தைப் பார்ப்போம், அதாவது, அங்கு எப்படி தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளார்கள் என்ற “கதைகளையும்” பார்ப்போம்!

Nine Muslims deported to Bangalore from Turkey - Muhammed Abdul Ahad

ஐசிஸ் பைல்கள் – தி இந்துவின் கதை: உண்மையில் முஸ்லிம் இளைஞர்கள் எப்படி, ஏன், எவ்வாறு மதவாதத்தினால், அடிப்படைவாதத்தினால், சிறுவயது முதலே, நம்பிக்கைகளை மனங்களில் ஏற்றிக் கொண்டு, பள்ளிப்பருவங்களில் சித்தாந்தமாக மாற்றிக் கொண்டு, கல்லூரி காலங்களில் ஜிஹாதாக்கிக் கொண்டு, வேலைக்குச் சேர்ந்த பிறகு ஐசிஸ் போராளிகளாகியுள்ளனர் என்பதனை “A tale of two friends: ne makes it to Syria, the other cools his heels in jail” என்று ஆங்கிலத்திலும், “இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை” என்று தமிலும் ஏதோ சாதாரணக் கதை போல வெளியிட்டிருப்பதால், அதனைப் படிப்பவர்கள், எப்படி அத்தகைய தீவிரவாதிகள் உருவாக்கப்பட்டார்கள் என்று கவலைப் பட மாட்டார்கள். முஸ்லிம்கள் தங்களுடைய கொள்கைகளினால், அவர்களை பாராட்டவும் செய்வார்கள். இன்னும் இளைஞர்கள் அவர்களை மாதிரிகளாகக் கொண்டு செயல்படலாம். ராமநாதபுரத்தில் டி-சர்ட் போட்டவர்கள், சென்னையில் ஐசிஸ்சில் சேர தயாரிகிறார்கள். ஆகவே, பொறுப்புள்ள பேற்றோர்கள் மற்றவர்களை ஜாக்கிரதையாக கண்காணிக்க வேண்டும். பல்லாயிர அப்பாவி உயிர்களைப் போக்குவதால், பூமியின் மீது சாந்தமோ, அமைதியோ வந்து விடாது. இப்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளே அதற்கு சாட்சி.

© வேதபிரகாஷ்

23-11-2015


[1] தமிழ்.இந்து, பரங்கிப்பேட்டையிலிருந்து .எஸ். முகாம் வரை: இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை, Published: November 21, 2015 11:54 ISTUpdated: November 21, 2015 15:19 IST

[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article7903456.ece

[3] தமிழில்: பாரதி ஆனந்த், என்று ஆங்கிலத்தில் வந்ததை மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது. தி இந்து, ஞாயிறு, நவம்பர் 22, 2015.

சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக ஐசிஸ்.சில் சேர சென்ற ஜிஹாதிகள்!

நவம்பர் 23, 2015

சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக ஐசிஸ்.சில் சேர சென்ற ஜிஹாதிகள்!

Muslim youth become ISIS supporters, warriors

தமிழக ஜிஹாதிகள் துருக்கிக்குச் சென்றது எப்படி?: இருவரையும் தொடர்ந்து கண்காணித்து வரும் உளவு துறை அதிகாரிகள் அவர்கள் துருக்கி வரை செல்ல உதவி செய்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்[1]. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில், தமிழக வாலிபர்கள் சேர முயன்ற விவகாரம் போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்காசிய நாடுகளான இதுகுறித்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறியதாவது[2]: “சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த பி.காம்., பட்டதாரியும், சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த, கரூரைச் சேர்ந்த அவனது நண்பனும் .எஸ்., அமைப்பில் சேர முயன்று, துருக்கியில் பிடிபட்டு, நாடு கடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வாலிபர்களின் குடும்ப பின்னணி, நண்பர்கள் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து வருகிறோம். மேலும், .எஸ்., அமைப்புக்கு, தமிழகத்தில் ஆள் பிடிக்கும் ஏஜன்ட்கள் உள்ளனரா; வாலிபர்கள் துருக்கி வரை செல்ல பண உதவி செய்தது யார்; விசா பெற்றுத் தந்தோருக்கு, .எஸ்., பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக விசாரணை நடக்கிறது”, இவ்வாறு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறினர்[3]. முதலில் அவர்கள் போலீஸார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. பிறகு, அவர்களது குடும்பத்தாரை வரவழைத்தபோது, அழுது கொண்டே விசயங்களை வெளியிட்டனர். தாங்கள் வேலைதேடித்தான் சென்றோம் என்று கூறினர்.

ISIL Chennai terror nexus - The Hindu - a tale of two friends

தமிழ்நாடும், .எஸ் தொடர்புகளும்: தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஐ.எஸ் பற்றிய வழக்குகள் பல நிலுவையில் உள்ளன[4]. ஆகஸ்ட்.2014ல், ராமநாதபுரம் மசூதி முன்பாக 26 முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ் டி-சர்ட் போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு, சமூகவலைதளத்தில் பரப்பினர். விசாரித்து எச்சரித்து அவர்கள் அனுப்பப்பட்டனர். செப்டம்பர் 2014ல், சென்னையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞன் தற்கொலை குண்டுவெடிப்பில் கொலையுண்டது தெரியவந்தது. ஆகஸ்ட் 2014ல், வேலூரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இஞ்சினியர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஐ.எஸ்.சில் சேர்ந்ததாக தெரிந்தது. தென்னிந்தியாவில் 150 ஐசிஸ் ஆதரவாளர்கள் உள்ளனராம்[5]. அப்படியென்றால், தமிழகத்தில் சுமார் 50 பேராவது இருக்க வேண்டும். “தி இந்து”, “இரு நண்பர்களின் கதை” என்று ஒரு கதையை “ஐ.எஸ் பைல்” என்ற படத்துடன் வெளியிட்டுள்ளது. இருவரும் ஜிஹாதித்துவத்தில் ஊறியவகளாக, தீவிரவாதிகளாக இருந்தாலும், ஏதோ “இரு நண்பர்களின் கதை” என்ற ரீதியில், தனக்கேயுரிய பாணியில் வெளியிட்டுள்ளது. அவர்கள் இருவரும் சென்னையில் நியூ காலேஜில் படித்தவர்கள் தாம். அக்கதை சுருக்கம் பின்வருமாறு:

ISIL Chennai terror nexus - The Hindu graphics

இரு .எஸ் தீவிரவாதிகளின் கதை: ஹாஜா பக்ருத்தீன் உஸ்மான் அலி [Haja Fakkrudeen  Usman Ali] மற்றும் குல் மொஹம்மது மராச்சி மரக்காயர் [Gul Mohamed Maracachi Maraicar] இருவரும் பறங்கிப்பேட்டை அரசு பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பிறகு ராயப்பேட்டை நியூ காலேஜில் சேர்ந்தனர். மரைக்காயர் ஐந்து வருடங்கள் சவுதி அரேபியாவில் இருந்து 2007ல் சிங்கப்பூருக்கு வந்தான். அதாவது 2002-07 வருடங்களில் அங்கிருந்திருக்கிறான். சிங்கப்பூரில் சாப்ட்வேர் வேலையில் இருந்தான். பிறகு, சில வருடங்கள் கழித்து இருவரும் சிங்கப்பூரில் சந்தித்தனர். 2008ல் அலி சிங்கப்பூர் குடிமகனானான்[6]. ஆனால், நவம்பர் 2013ல் சிரியாவுக்குச் சென்றதாக தெரிகிறது. இருவரும் முஸ்லிம்களின் நிலைப்பற்றி விவாதித்தனர். பிப்ரவரி 27, 2014 அன்று பக்ருத்தீனை தீவிரவாதத்திற்குட்படும் வகையில் முயன்றதாகவும், வன்முறையில் ஈடுபட தூண்டியதாகவும் மரைக்காயர், சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான்[7]. பக்ருத்தீன் அலியின் மனைவி, குழந்தைகளுடன் ஜனவரி.22, 2014 அன்று அபுதாபி வழியாக துருக்கிற்கு சென்றான். அலி இப்பொழுது சிரியா-துருக்கி எல்லையில் இருக்கிறான்[8]. அலி சிரியாவில் இருந்தாலும், அடிக்கடி சென்னைக்கு வந்துள்ளான். சென்னையில் டிசம்பர் 2013 மற்றும் ஜனவரி 2014 காலத்தில் இருந்தபோது, சில நியூ காலேஜ் மற்றும் இதர மாணவர்களை தீவிரவாதத்திற்கு இழுத்துள்ளான். கடலூரில் ஒரு குரான் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறான். இவன் ஜிஹாதிகளை சேர்க்க ஒரு குழுவை நடத்தி வருகிறான். மாத சம்பளம் ரூ.20,000/- மற்றும் ஜிஹாதில் இறக்க நேர்ந்தால் ரூ.20 லட்சம் குடும்பத்திற்கு கொடுக்கப்படும் என்ற விவரங்களும் அறியப்பட்டன[9]. இப்பொழுது பக்ருத்தீன் ஐசிஸ்.சிக்காக போராடுகிறான், மரக்காயர் சிறையில் இருக்கிறான்[10].  நான் இப்படி எழுதி முடிக்கும் வேலையில், “தி ஹிந்து” தமிழிலும் அக்கதையை விவரமாக வெளியிட்டுள்ளது.

பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்- போட்டோ

பரங்கிப்பேட்டையிலிருந்து .எஸ். முகாம் வரை: இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை (தி இந்து)[11]: தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டைதான் இவர்கள் இருவரும் பிறந்து வளர்ந்த ஊர். பால்ய நண்பர்களாகிய இவர்கள் உள்ளூர் அரசுப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தனர். பின்னர் இருவருமே சென்னை புதுக் கல்லூரியில் (நியூ காலேஜ்) பட்டம் பயின்றனர். பட்டப்படிப்புக்குப் பின்னர் சில பல ஆண்டுகள் உருண்டோடின. மரைக்காயர் சவுதியிலும், ஃபக்ருதீன் சிங்கப்பூரிலும் பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் இருவரும் சிங்கப்பூரில் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்திப்பில் அவர்கள் உணர்ச்சிகரமாக விவாதித்தனர். உலகளவில் முஸ்லிம்கள் சந்திக்கும் இன்னல்கள் என்னவென்பதே அந்த விவாதத்தின் கருப்பொருளாக இருந்தது. அந்த விவாதம் இருவரின் வாழ்க்கை திசையையும் மாற்றியது. நண்பர்கள் இருவரில் ஒருவர் இப்போது இந்தியச் சிறையில் இருக்கிறார். மற்றொருவர் சிரியாவில் ஐ.எஸ். படையில் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டார். அவர் எந்த களத்தில் போரில் இருக்கிறாரோ?! சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் ஹாஜா ஃபக்ருதீன் இப்போது சிரியாவில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது நண்பர் முகமது மரகாச்சி மரைக்காயர் சிறையில் இருக்கிறார். இவர்கள் இருவரின் கதையும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஐ.எஸ். கொள்கை உலகளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

© வேதபிரகாஷ்

23-11-2015

[1] http://www.maalaimalar.com/2015/11/21120740/intelligence-investigation-2-t.html

[2] தினமலர், .எஸ்., அமைப்பில் தமிழக வாலிபர்கள், நவம்பர் 22, 2015.02:57.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1392623

[4] http://indianexpress.com/article/india/india-news-india/two-chennai-men-deported-from-turkey-for-trying-to-join-is/

[5] http://www.thehindu.com/news/national/150-is-supporters-in-south-india/article7904410.ece?ref=relatedNews

[6] https://www.youtube.com/watch?v=4lxEp4D8FTs

[7] http://timesofindia.indiatimes.com/nri/other-news/Singapore-Indians-involvement-in-Syrian-conflict-being-probed/articleshow/32542736.cms

[8] Singapore has deported an Indian-origin man for radicalising and helping a compatriot go to strife-torn Syria and have launched a probe into his journey “with the intention to undertake violence”. The Singapore Ministry of Home Affairs deported Gul Mohamed Maracachi Maraicar, 37, for radicalising Haja Fakkurudeen Usman Ali, 37, and helping him to go to Syria. Gul is a permanent resident of Singapore and had worked there as a system analyst. Ali, who worked as a supermarket manager and became a citizen of Singapore in 2008, allegedly left the country last November to fight against forces loyal to Syrian President Bashar al-Assad, the Ministry said Saturday. Officials were informed of his trip only once he left Singapore. The ministry, however, refused to comment on the investigation and deportation of Gul, a report in The Sunday Times said.

http://indianexpress.com/article/india/india-others/singapore-deports-indian-man-for-syrian-links/

[9] http://www.thehindu.com/news/national/is-files-a-tale-of-two-friends-one-makes-it-to-syria-the-other-cools-his-heels-in-jail/article7900874.ece?ref=relatedNews

[10]  The Hindu, A tale of two friends: ne makes it to Syria, the other cools his heels in jail, reported by Josy Joseph, New Delhi, November 21, 2015.11:14 IST.

[11]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article7903456.ece