Posted tagged ‘பரங்கிபேட்டை’

ஐ.எஸ். உடன் தொடர்பு: காரைக்காலும், ராமநாதபுரமும்: விபச்சாரமும், டி-சர்டும் தானா, அல்லது அதற்கும் மேலாக உள்ளதா?

நவம்பர் 23, 2015

.எஸ். உடன் தொடர்பு: காரைக்காலும், ராமநாதபுரமும்: விபச்சாரமும், டி-சர்டும் தானா, அல்லது அதற்கும் மேலாக உள்ளதா?

காரைக்காலில் மத்திய உளவுப் பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்துல் சிராஜ் தவுலத்-இடமிருந்து 2-வது.எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு: காரைக்கால் இளைஞர் கைது (அக்டோபர்.2015): ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினருடன் தொடர்பில் இருந்த காரைக்கால் இளைஞர் கைது செய்யப்பட்டார். காரைக்கால் வள்ளலார் நகர் விரிவாக்கப் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த அமீது மரைக்காயர் மகன் முகம்மது நவாப் சிராஜ் தவ்லத் மரைக்காயர் (35) என்பவரை சந்தேகத்தின்பேரில் மத்திய உளவுத் துறையினர் செவ்வாய்க்கிழமை 27-10-2015 அன்று விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இவ்வழக்கு விவரம்: கடந்த 2000-ம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற சிராஜ் தவ்லத் மரைக்காயர் பின்னர் ஊர் திரும்பினார். தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அவர், தமிழகத்தில் ஏ.வி.எஸ். [Anti Vice Squad, AVS] என்கிற விபசார தடுப்புப் பிரிவினருக்கு, வழக்குத் தொடர்பாக செல்லிடப்பேசி உரையாடலை பதிவு செய்து தரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில் பல்வேறு பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டதன் விளைவாக நிறுவனம் இவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டது. இதையடுத்து, விபசாரம் செய்து பணம் சம்பாதிப்பதில் ஈடுபடத் தொடங்கினார். இந்த அனுபவத்தைக் கொண்டு, பல முக்கியப் பிரமுகர்களின் தொலை பேசி உரையாடல்களை ஒட்டு கேட்டதும், பலரை வேலைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிந் துள்ளது. மேலும், சென்னையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது[1].

அமீது மரைக்காயர் மகன் முகம்மது நவாப் சிராஜ் தவ்லத் மரைக்காயர் கைதுபுழல் சிறையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இயக்க உறுப்பினர் இஸ்மா சாதிக் / இக்மா சாதிக் ஏற்பட்ட தொடர்பு: பல்வேறு வழக்குகளில் தமிழக போலீஸார் இவரைக் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அங்கு சிலருடன் ஏற்பட்ட தொடர்பை வைத்துக்கொண்டு, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் இயக்க உறுப்பினர் இஸ்மா சாதிக் / இக்மா சாதிக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது[2].  மத்திய உளவுத் துறையினர் இஸ்மா சாதிக்கை தேடும் பணியில் ஈடுபட்டபோது, அவருடன் தவ்லத் மரைக்காயருக்கு இருந்த தொடர்பு தெரியவந்து காரைக்காலில் இவர் பிடிபட்டார்[3]. நெடுங்காடு காவல்நிலையத்தில் வைத்து விசாரித்த போது உளவுத் துறையினர், போலீஸாரிடம் இந்த தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.  இவரிடமிருந்து 3 செல்லிடப்பேசி, 7 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்கால் காவல்நிலைய போலீஸார், இவரை கைது செய்து காரைக்கால் 2-ம் வகுப்பு குற்றவியல் நீதிபதி ராதாகிருஷ்ணன் முன்பு புதன்கிழமை ஆஜர்படுத்தினர். இவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இவரை போலீஸ் காவலில் எடுத்து, விசாரணையை தொடர போலீஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்[4]. அதாவது, ஒரே ஆள் பலகுற்றங்களை செய்வது என்பது, இவர்களில் பொதுவான அம்சமாக இருக்கிறது. இந்த போக்கு அல்-உம்மாவிலிருந்தே காணப்படுகிறது.

ஐசிஸ் சர்ட் அணிந்த முச்லிம் வாலிபர்கள் - ராமநாதபுரம் மசூதிஐசிஸ் ட்சர்ட் புகைப்பட விவகாரம் (ஜூலைஆகஸ்ட்.2014): ஜுலை 29, 2014 தேதியன்று, தொண்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 24 பேர் ஐசிஸ் அமைப்பின் முத்திரை பொறிக்கப்பட்ட கறுப்பு நிற டி ஷர்ட் அணிந்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்[5]. இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியானதும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது, ஈராக்கில் பணியாற்றி வந்த இந்தியச் செவிலியர்கள் ஐசிஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு, துன்புறுத்தாமல் விடுவிக்கப்பட்டதை பாராட்டும் வகையில்தான் அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாக இளைஞர்கள் தெரிவித்தனர்[6]. ஆனால், ஆயிரக்கணக்கில் முஸ்லிம் பெண்களையே கற்பழிக்கின்றனர், முதலிய காரியங்களை அவர்கள் அறியாமல் போனது விந்தையே! இந்த நிலையில், ஆகஸ்ட்.4, 2015 அன்று மாலையில் அப்துல் ரஹ்மான் என்ற 24 வயது இளைஞரும் முகமது ரில்வான் என்ற இளைஞரும் ராமநாதபுரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்[7]. அப்துல் ரஹ்மான்தான் திருப்பூரில் இந்த டி ஷர்ட்களை வாங்கியவர் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால், அத்தகைய ட்-சர்ட்டுகளை அச்சடித்து தயாரித்தது, விற்றது யார் என்ற கேள்விகளும் எழுகின்றன. இதெல்லாம் தெரியாமல் செய்தது என்று சொல்ல முடியாது. திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மொத்தம் 100 டி சர்ட்களுக்கு ரில்வான் மூலம் அப்துல் ரஹ்மான்தான் ஆர்டர் கொடுத்து வாங்கியுள்ளார்[8]. இந்த டி சர்ட்டை தலா ரூ. 250க்கு விற்றுள்ளனர். இந்தப் புகைப்படத்தில் உள்ள 26 பேரையும் போலீஸார் பிடித்து விசாரித்து விட்டனர். அதன் இறுதியில் 24 பேரை விடுவித்து விட்டு இந்த 2 பேர் மீது மட்டும் தற்போது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

J K youth showing off ISIS Flags during demonstration againat Indiaசிறையிலடைக்கப்பட்டது[9]: இந்தக் கைது குறித்து, ராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனத்திடம் கேட்டபோது, ” ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு இல்லை என்றபோதிலும், இது பல்வேறு அரசுகளுக்கு எதிரான ஒரு போராட்டக் குழுவாக உள்ளது. எனவே இந்த அமைப்புக்கு இத்தகைய டி சர்ட்கள் மூலம் ஆதரவு திரட்ட இவர்கள் முயற்சித்துள்ளனர்[10]. இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளர்களாகவும் உள்ளனர். வெளிநாட்டில் ஒரு அரசை எதிர்த்துப் போராடும் பயங்கரவாத அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும் இங்கிருக்கும் இளைஞர்களைத் தூண்டியதற்காகவும் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக”த் தெரிவித்தார். இது தொடர்பில் பேசிய, தொண்டி ஜமாத்தின் செயலாளரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத் தலைவருமான சாதிக் பாட்சா, இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகளைப் போலச் சித்தரிப்பது வருத்தம் தருவதாகத் கூறினார். இது குறித்துப் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லா, இஸ்லாமிய இளைஞர்கள் இதுபோன்ற சமூக வலைதளங்கைப் பயன்படுத்தும்போது பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என பிபிசியிடம் தெரிவித்தார். ஆகஸ்ட்.4, 2014 அன்று மாலை கைதுசெய்யப்பட்ட அவர்கள், திருவாடனை மாஜிஸ்ட்ரேட் இளவரசி முன்பாக ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டனர்[11].

© வேதபிரகாஷ்

23-11-2015

[1] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7821818.ece

[2] தினமணி, .எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு: காரைக்கால் இளைஞர் கைது, By  காரைக்கால், First Published : 29 October 2015 12:31 AM IST

[3] தமிழ்.இந்து, .எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு?மத்திய உளவுப் பிரிவால் விசாரிக்கப்பட்ட காரைக்கால் இளைஞர் சிறையில் அடைப்பு, Published: October 30, 2015 09:10 ISTUpdated: October 30, 2015 09:10 IST.

[4]http://www.dinamani.com/tamilnadu/2015/10/29/%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/article3102332.ece

[5]  தமிழ்.வெப்துனியா, ஐஎஸ்ஐஎஸ் டிஷர்ட்: தமிழகத்தில் இரண்டு இளைஞர்கள் கைது, புதன், 6 ஆகஸ்ட் 2014 (11:17 IST).

[6] http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/ramanathapuram-iraq-isis-t-shirt-two-young-men-arrested-114080600007_1.html

[7] பிபிசி.தமிழ், ஐசிஸ் டிஷர்ட் : தமிழகத்தில் இரு இளைஞர்கள் கைது, ஆகஸ்ட்.5, 2015.

[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஐஎஸ்ஐஎஸ் டி சர்ட் விவகாரம்: போட்டோவுக்கு போஸ் கொடுத்த 2 பேர் கைது– 24 பேர் விடுவிப்பு, Posted by: Sutha, Published: Tuesday, August 5, 2014, 17:24 [IST].

[9] https://www.youtube.com/watch?v=k8PUdCqY-XE

[10] http://tamil.oneindia.com/news/tamilnadu/two-arrested-tamil-nadu-over-group-photo-isis-t-shirts-207779.html

[11]  http://www.bbc.com/tamil/india/2014/08/140805_isis_tshirt_tnarrests

ஐசிஸ் – தமிழக தொடர்புகள் – பரங்கிப்பேட்டையுடன் ஏன் ஐசிஸ் மற்றும் தீவிரவாதம் அதிகமாக சம்பந்தப்படுகிறது?

நவம்பர் 23, 2015

ஐசிஸ் – தமிழக தொடர்புகள் – பரங்கிப்பேட்டையுடன் ஏன் ஐசிஸ் மற்றும் தீவிரவாதம் அதிகமாக சம்பந்தப்படுகிறது?

பரங்கிப்பேட்டையில் அஷ்ரப் அலி கைது - மே 2014

பரங்கிப்பேட்டையில் தீவிரவாதி கைதுபரங்கிப்பேட்டை பக்கீரிமாலிமார் தெருவில் உள்ள பள்ளி வாசலில் வெளிமாநில வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல்[1]: ஹாஜா பக்ருத்தீன் உஸ்மான் அலி [Haja Fakkrudeen  Usman Ali] மற்றும் குல் மொஹம்மது மராச்சி மரக்காயர் இருவரும் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்றால், இங்கு ஏற்கெனெவே தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மே.1, 2014 அன்று கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகளில் குண்டுகள் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பக்கீரிமாலிமார் தெருவில் உள்ள பள்ளி வாசலில் வெளிமாநில வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து சிதம்பரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையிலான போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து அந்த வாலிபரை பிடித்தனர். விசாரணையில், அவர் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி (வயது 39) என்பதும், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் தேடப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அஷ்ரப் அலியை கடலூரை அடுத்த தூக்கனாம் பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று அவரிடம் விடிய, விடிய போலீசார் விசாரணை நடத்தினார்கள். தீவிரவாதி அஷ்ரப் அலிக்கு அடைக்கலம் கொடுத்து, அவருக்கு உறுதுணையாக இருந்த 9 பேரையும் போலீஸார் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இவர்களிடம் கடலூர் மாவட்டப் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்[2].

Parangipettai mosque

ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அஷ்ரப் அலி[3]: விசாரணையில் அவருக்கும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்தது. அஷ்ரப் அலி பிடிபட்ட தகவல் அறிந்து ராஜஸ்தான் மாநிலம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு குசால்சிங், இன்ஸ்பெக்டர் புஷ்பேந்திரசிங் ரத்தோர் மற்றும் போலீசார் கடலூர் வந்தனர். விசாரணைக்கு பின்னர் மே.2, 2015 அன்று மதியம் கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அஷ்ரப் அலியை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது தீவிரவாதி அஷ்ரப் அலிக்கு ஜோத்பூர் கோர்ட்டு ஏற்கனவே பிடிவாரண்டு பிறப்பித்து இருப்பதால் அவரை ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்து செல்வதற்கு அனுமதி வழங்கக்கோரி நீதிபதியிடம் ராஜஸ்தான் போலீசார் மனு கொடுத்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்டு அஷ்ரப் அலியை 5 நாட்களுக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார். இதை அடுத்து தீவிரவாதி அஷ்ரப் அலியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் ஜோத்பூருக்கு அழைத்து செல்லப்பட்டார்[4].

பரங்கிப்பேட்டையில் அஷ்ரப் அலி, தமீம் அன்சாரி, ஜாகீர் உசேன் கைது - மே 2014.

பாகிஸ்தான் .எஸ்.. உளவாளியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரியாஷ் பட்டேல் என்பவனுக்கும் அஷ்ரப் அலிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு: கைது செய்யப்பட்ட தீவிரவாதி அஷ்ரப் அலி பற்றிய திடுக்கிடும் தகவல்களை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பேந்திரசிங் ரத்தோர் நிருபர்களிடம் கூறினார். அவர் கூறியதாவது: “இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுகிறவர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்குவது தான் தீவிரவாதி அஷ்ரப் அலியின் வேலை. ஜோத்பூரில் பல்வேறு இடங்களில் இதுபோன்று இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி இருக்கிறார். இதுபோன்று ஆலோசனை வழங்கும் அமைப்புக்கு அவர் தலைவராக இருந்துள்ளார். பாகிஸ்தான் .எஸ்.. உளவாளியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரியாஷ் பட்டேல் என்பவனுக்கும் அஷ்ரப் அலிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரியாஷ் பட்டேல் சொல்வதைத்தான் அஷ்ரப் அலி செய்வான். அஷ்ரப் அலியும் அவனது கூட்டாளிகளும் போலியான முகவரி கொடுத்து செல்போன்களை பயன்படுத்தி இருப்பதை கண்டுபிடித்தோம். அந்த செல்போன் சிம்கார்டுகளை வைத்து ரியாஷ் பட்டேலுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதை அறிந்து கொண்டோம்”.

அஷ்ரப் அலி கைது - பரங்கிப்பேட்டையில் - மசூதி தங்கினான்

மதபோதகர் போர்வையில் பரங்கிப்பேட்டை மசூதிக்கு வந்த அஷ்ரப் அலி:தமிழகத்தில் மதபோதனை செய்வதற்காக டெல்லியில் இருந்து ஒரு குழுவினர் கடந்த ஏப்ரல் 2–ந் தேதி டெல்லியில் இருந்து ரெயில் மூலம் தமிழகம் வந்தனர். அந்த குழுவில் அஷ்ரப் அலியும் எப்படியோ இணைந்து கொண்டான். மதபோதகர் போர்வையில் அவனும் தமிழகம் வந்துள்ளான். தமிழகம் வந்த அந்த குழுவில் 9 பேர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரம், பின்னூர் ஆகிய பகுதிகளில் மதபோதனை செய்துவிட்டு கடந்த 28–ந் தேதி பரங்கிப் பேட்டைக்கு வந்துள்ளனர். இதையடுத்து அஷ்ரப் அலியை பிடிப்பதற்காக நாங்கள் தமிழ்நாட்டு போலீஸ் உதவியை நாடினோம். சிதம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் போலீசார் தீவிரவாதி அஷ்ரப் அலியை பொறி வைத்து பிடித்துள்ளனர். அஷ்ரப் அலியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த இருக்கிறோம். அப்போது அவன் இதற்கு முன்பு எங்கெல்லாம் சென்று கூட்டம் நடத்தி சதி திட்டம் தீட்டி இருக்கிறான் என்பது தெரியவரும்”, இவ்வாறு அவர் கூறினார்[5].

அஷ்ரப் அலி கைது - பரங்கிப்பேட்டை

சிதம்பரம் பகுதியில் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தார் தீவிரவாதி அசரப் அலி[6]: போலீஸாரால் தேடப்பட்டு வந்த அசரப்அலி புதுதில்லியிலிருந்து தமிழகத்திற்கு வந்த மதபோதகர்கள் குழுவினருடன் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிதம்பரம், பின்னத்தூர், லால்பேட்டை, பரங்கிப்பேட்டையில் உள்ள பள்ளிவாசல்களில் கடந்த ஏப்.20-ம் தேதி முதல் தங்கியிருந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அசரப்அலியுடன் பரங்கிப்பேட்டை பள்ளிவாசலில் தங்கியிருந்த 12 மத போதகர்களை போலீஸார் கடலூர் அருகே உள்ள தூக்கனாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் மதபோதகர்களுக்கும், தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பில்லை என உறுதி செய்த போலீஸார் மத போதர்கள் 12 பேரையும் சிதம்பரம் வ.உ.சி தெருவில் உள்ள பள்ளிவாசலில் ஒப்படைத்தனர். இவர்கள் அனைவரும் தில்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும் என போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

23-11-2015

[1] மாலைமலர், கைதான தீவிரவாதி அஷ்ரப் அலி பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்புடையவர், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மே 03, 2014. 10:46 AM IST

 http://www.maalaimalar.com/2014/05/03104632/Pakistani-spy-arrested-militan.html

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article5972545.ece

[3] http://www.dinamani.com/latest_news/2014/05/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1/article2203914.ece

[4] தினமணி, சிதம்பரம் பகுதியில் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தார் தீவிரவாதி அசரப் அலி, By ஜி.சுந்தர்ராஜன், சிதம்பரம், First Published : 03 May 2014 06:55 PM IST.

[5] தமிழ்.இந்து, பரங்கிப்பேட்டையில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி கைது, Published: May 3, 2014 10:24 IST, Updated: May 3, 2014 10:24 IST

[6] தினமணி, சிதம்பரம் பகுதியில் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தார் தீவிரவாதி அசரப் அலி, By ஜி.சுந்தர்ராஜன், சிதம்பரம், First Published : 03 May 2014 06:55 PM IST.