Posted tagged ‘பன்றி’

பன்றிக்காக வைத்த டிடோனேடரை வெடிக்க வைத்த அப்பாவி சிறுவன் அப்துல் முஜீத்!

நவம்பர் 5, 2011

பன்றிக்காக வைத்த டிடோனேடரை வெடிக்க வைத்த அப்பாவி சிறுவன் அப்துல் முஜீத்!

பள்ளிக்குச் செல்லாத அப்துல் மஜீத் குப்பைத்தொட்டியிலிருந்து டிடோனேரை எடுத்தல்: திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பண்பொழி கிராமத்தில் மு.ந.அ.தெருவைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி மகன் அப்துல் முஜீத்.  முகமது அன்சாரி. அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்[1].  அப்துல் முஜீத் (14) அவ்வூர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று அவன் பள்ளிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்துள்ளான். மாலையில் அவன் வீட்டில் இருந்த நேரத்தில் குண்டு வெடிக்கும் சத்தம் போல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், அருகில் இருந்த பள்ளிவாசலில் இருந்தவர்கள் முஜீபின் வீட்டுக்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் பேட்டரி கட்டைகள், வயர் துண்டுகள், டெட்டனேட்டர் உள்ளிட்ட பொருட்கள் சிதறியும், அப்துல் முஜீப் ரத்த காயங்களுடனும் இருந்துள்ளான். உடனடியாக அவனை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மற்றொரு செய்தி: இன்று மாலை, வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருக்கையில், அங்கு கிடந்த பொருளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். அதில் 2 வயர்கள் இணைக்கப்பட்டிருந்ததால், அதற்கு அவன் மின் இணைப்பு கொடுத்துள்ளான். அப்போது, அது திடீரென்று வெடித்தது[2]. இந்த சம்பவத்தில், முஜீத்தின் கை, கால் என உடலின் பல பாகங்களில் பயங்கர அடிபட்டது. இதனையடுத்து, அவன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலீஸார் விசாரணை: மாணவன் கையில் டெட்டனேட்டர் எப்படி வந்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்தென்காசி டிஎஸ்பி பாண்டியராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு, கைரேகை பிரிவு சிறப்பு படையினர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி, டிஐஜி வரதராஜு உள்ளிட்டோர் பண்பொழி வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்[3].  பள்ளி மாணவன் கையில் டெட்டனேட்டர் குச்சி கிடைத்தது எப்படி, சிறுவர்கள் கைக்கு கிடைக்கும் வண்ணம் இதனை யாரும் ரோட்டில் போட்டு சென்றார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பன்றி வெடிக்கும் அத்வானிக்கும் என்ன தொடர்பு[4]? என்ற தலைப்பில் இப்படி ஒரு இணைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது பன்றியைக் கொல்ல வாங்கும் வெடிகூட எப்படி குப்பையில் கிடைக்கிறது, அதை எப்படி சிறுவன் எடுக்கிறான், எடுத்தவன், வயர்களை இணைக்கிறான் என்றெல்லாம் தெரியவில்லை. அவ்வாறு சிறுவர்கள் அறிவில்லாமல் இருக்கும் போது, மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குப்பைத்தொட்டியில் எளிதாக கிடைக்கும் வகையில் வைத்திருக்கக் கூடாது அல்லது போட்டிருக்கக் கூடாது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை சரக டிஐஜி வரதராஜு, ரூரல் எஸ்பி விஜயேந்திர பிதாரி உட்பட காவல்துறையினர் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு லோக்கல் முதல் நேஷனல் வரை உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களும் குவிய ஆரம்பித்தனர். அத்தனை பத்திரிக்கையாளர்களுக்கும் பேட்டி அளித்த டிஐஜி வரதராஜூ கூறும்போது, “முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இன்னும் சிறிது நேரத்தில் இங்கு எப்படி டெட்டனேட்டர் வந்தது தகவல் தெரிந்து விடும். இச்சம்பவத்திற்கும் மதுரையில் அத்வானி ரத யாத்திரையில் கைப்பற்றப்பட்ட பைப் வெடி குண்டு சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்று உறுதியாக கூறினார். சமீபத்தில் டில்லி குண்டுவெடிப்பில் சம்பந்தமாக இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்[5].

பன்றி வெடியால் அப்பாவி சிறுவன் காயம்: அப்பாவி சிறுவன் தெரியாமல் செய்திருக்கும் பட்சத்தில் முதலில் இப்படி சொல்லியிருக்க வேண்டிய அவசியமேயில்லை. “ஆனால் பரப்பரப்பு செய்திகளைக் கொடுத்து மட்டுமே பழக்கப்பட்ட நமது பத்திரிக்கையாளர்கள் இச்சம்பவத்தையும் மதுரை சம்பவத்தையும் தொடர்பு படுத்தி கதை எழுத ஆரம்பித்தனர்”, என்கிறது அந்த இனைத்தளம்[6]. மேலும், “ஆனால் அங்கு கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர் குச்சி பன்றியைக் கொல்ல ஒருவர் பயன்படுத்தியது என்பது தற்போதைய விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது”, என்றும் கூறுகிறது[7]. பன்றியைக் கொன்றுவிட்டு அல்லது அவ்வாறு உபயோகப் படுத்திய பிறகு, ஏன் அப்படி டிடோனேடரை அஜாக்கிரதையாக விட்டுவிட்டுச் சென்றனர் என்றும் தெரியவில்லை.

எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்கள், வன்முறை, மனப்பாங்கு வளரும் விதம்: பன்றியைக் கொல்ல, கிணறு தோண்ட, பாறைகளை உடைக்க, ரோடு போட, குவாரிகளில் உபயோகப்படுத்த என பல காரியங்களுங்கு வெடிப்பொருட்கள் எளிதாகக் கிடைக்கிறது என்று தெரிகிறது. ஆகவே, அவ்வாறு வெடிப்பொருட்களை வாங்குபவர்கள் எதற்கு உபயோகிப்பார்கள் என்று தெரியவில்லை. மற்ற வகை வெடிப்பொருட்கள், ரசாயனப் பொருட்கள் எப்படி கிடைக்கின்றன என்று ஏற்கெனவே விளக்கியுள்ளேன்[8]. தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவியுள்ளதால் தான் சிறுவர்களுக்கு அத்தகைய எண்ணம் வருகிறது. கத்தியைப் பார்த்தவுடன் கழுத்தை வெட்ட வேண்டும் என்று யாருக்கும் எண்ணம் வராது. அப்படி வந்தால், அத்தகைய காட்சிகளைப் பார்த்து, மனத்தில் பதிய வைத்துக் கொண்டதாலும், மனம் அதற்கேற்றப்படி பழகிப்போனதாலும் பயமின்றி அத்தகைய மனம் உருவாகி விடுகிறது. இன்றைய திரைப்படங்களிலேயே, வெடிகுண்டுகளை வீசித் தாக்குவது போல, குண்டுகள் வெடிப்பது போன்ற வன்முறைக் காட்சிகளைக் காட்டுகிறார்கள். சிறுவர்கள் விளையாடும் கணினி விளையாட்டுகளில் பெரும்பாலாக துப்பாக்கியை வைத்து சுடுவது, வெடிகுண்டுகளை வீசித் தாக்குவது, குண்டுகள் வெடிப்பது, மனிதர்களை கண்டபடி சுட்டுக் கொல்வது………….என்றுதான் உள்ளன. அவ்வளவு ஏன் சிறுவர்களுக்கு துப்பாக்கி பொம்மைகள் அல்லது பொம்மைத் துப்பாக்கி வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு பெற்றோர்களே தயாராக உள்ளார்கள். அஹிம்சை பேசும் நாட்டில் தூக்க்குத் தண்டனைத் தேவையா என்று கேட்கும் தமிழ்நாட்டில்[9], முதலில் இத்தகைய எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

வேதபிரகாஷ்

05-11-2011


[2] தினமலர், நெல்லையில்குண்டுவெடிப்பு : மாணவன்காயம், நவம்பர் 03, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=342812

[6] The Hindu, Boy injured in mysterious blast, Tirunelveli, November 5, 2011

A mysterious explosion near Tenkasi on Thursday evening in which a school boy sustained injuries has triggered suspicion among the police that the explosive material might have been meant for use against senior Bharatiya Janata Party leader L.K. Advani during his Jan Chetna Yatra at Tenkasi, but discarded later.

http://www.thehindu.com/news/cities/Madurai/article2600388.ece

[8] வேதபிரகாஷ், தமிழகத்தில்வெடிகுண்டுதயரிப்பு, வெடிப்பொருட்கள்உபயோகம், வெடிகுண்டுகலாச்சாரம் (2), http://dravidianatheism2.wordpress.com/2011/10/29/bomb-blasts-in-tamilnadu-manufacture-logistics/

[9] இன்று டிவியில் “வீரவாண்டி” படம் ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று சொல்லும் ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா கோடிகளைக் கொட்டி அழுவதேன்?

ஒக்ரோபர் 26, 2011

பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று சொல்லும் ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா கோடிகளைக் கொட்டி அழுவதேன்?

முஸ்லீம் முஸ்லீமைத்தான் ஆதரிப்பேன் என்றால்,  அவர்கள் தனியாக இருந்து விடலாமே: உண்மையைச் சொன்னால் முஸ்லீமுக்கு பொத்துக் கொண்டு கோபம் வரும், ஆனால் முஸ்லீம் என்றாலும், அடிப்படைவாதி என்றாலும், ஏன் தீவிரவாதி என்றே குறிப்பிட்டாலும், முஸ்லீம் என்றால், முஸ்லீமுக்குத்தான் ஆதரவு கொடுப்போம் என்று சொல்வது, முன்னர் அலி சகோதரர்கள், “ஒரு மிகவும் கேடுகெட்ட மோசனான ஆள் முஸ்லீமாக இருந்தால், அவனுக்கு மரியாதை செய்வோமே தவிர, காந்தியை மகாத்மா என்று மதிக்க மாட்டோம், ஏனென்றால், அவர் ஒரு காஃபிர்”,  என்று பொருள்பட சொன்னதை இங்கு நினைவு கூர்தல் வேண்டும்[1]. அதை நன்றாக அறிந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர், அலி சகோதரர்களை தனது வீட்டில் விருந்தினர்களாகத் தங்க வைத்துக் கொண்டபோது, “இந்தியா வேண்டுமானால், காந்தியை பெருமையாக மதிக்கலாம், ஆனால் இந்த காந்தி இவர்களது ஜேபிக்குள் அடக்கம்”, என்றார். முஹமது அலியின் பேச்சைக் கேட்டு அம்பேத்கரே வியந்து அதனைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்[2].

காஃபிர்-மோமின், “தூய்மையானவன்” – “தூய்மையில்லாதவன்” என்ற எண்ணம் இருக்கும் வரையில் முஸ்லீம் முஸ்லீமாகத்தான் இருப்பான்: அலி சகோதரர்களை காந்தி தனது சகோதரர்களைப் போல பாவித்தார். ஆனால், முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனைகளால், அலி சகோதரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளா முடியவில்லை. “காந்தியின் குணாதியம் (நடத்தை, பண்பு) எந்த அளவிற்கு தூய்மையாக இருந்தாலும், எனது மதத்தின் (இஸ்லாம்) பார்வையில் ஒரு குணாதியமே இல்லாத ஒரு முசல்மானை விட தாழ்ந்தவராகத்தான் தோன்றுகிறார்”. அதாவது இந்து “தூய்மையில்லாதவன்” ஆனால் முஸ்லீம் “தூய்மையானவன்” என்று சொல்வது “காஃபிர்” மற்றும் “மோமின்” என்று பிரித்து பாகுபாடு காட்டிப் பேசுவதுதான். அமினாபாத், லக்னௌவில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, முஹம்மது அலியை, என்ன காந்தியைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இதோ[3] – “ஆமாம், என்னுடைய மதம் மற்றும் நம்பிக்கையின்படி, ஒரு விபச்சாரத்தனமுடைய மற்றும் வீழ்ந்த (மிக மோசமான / கேடுகெட்ட) முசல்மான்தான் காந்தியைவிட உயர்ந்தவன்”! அதுமட்டமல்ல தாங்கள் உயர்ந்த முஸ்லீம்கள் என்பதனால், காந்தியுடன் செரமாட்டோம், மேடையில் சமமாக உட்காரமாட்டோம் என்றெல்லாம் கூட வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள், நடந்து காட்டியிருக்கிறார்கள். காந்தி தன்னுடைய எழுத்துகளில் அதனை தக்கேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார்[4].

முஸ்லீம் மனதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்: அம்மாதிரித்தான் தேவையில்லாமல் இந்தியா ஆப்கானிஸ்தானிற்கு பலவழிகளில் கோடிகளில் பணம், மற்ற உதவிகளை செய்து வருகிறது. ஆனால், அங்கு வேலை செய்து உதவும் இந்தியர்களைக் கொன்று வருவதுதான் முஸ்லீம்களாகிய ஆப்கானிஸ்தானியர் செய்து வருகின்றனர். தாலிபான்கள் இருந்து மற்ற உலக மகா பிரத்தி பெற்ற ஜிஹாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள் முதலியோர் உண்மையில் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். இந்நிலையில் தான் அந்த நன்றி கெட்ட பொம்மை பிரதம மந்திரி கூறுகிறார், “போர் என்று வந்து விட்டால், நாங்கள் பாகிஸ்தானிற்குத்தான் ஆதரவு அளிப்போம்”, வீராப்பாக சொல்லியிருக்கிறார். இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடுமோ, பாகிஸ்தானை தாக்கினால், போர் தொடுத்தால், நாங்கள் எங்கள் சகோதரன் பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் கர்ஸாயின் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. சீனாவின் துரோகத்தனத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பாக்.மீது படையெடுத்தால்: இந்தியா-அமெரிக்காவிற்கு கர்சாய் எச்சரிக்கை[5]: தலிபான்களிடம் சிக்கி சீரழிந்த ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்த அமெரிக்கப் படையினர், ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து தலிபான்களை வேட்டையாடி வருகின்றனர். கூடவே பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்தபடி ஆப்கானிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தி வரும் அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகளுடனும் மோதி வருகின்றன. சீரழிந்து போய் விட்ட ஆப்கானிஸ்தானை கட்டி எழுப்பும் முக்கியப் பணியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானை தத்தெடுத்துக் கொண்டது போல பல ஆயிரம் கோடி பணத்தை இறைத்து ஆப்கானிஸ்தானில் பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா[6]. இந்த நிலையில் இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது வேறு நாடோ பாகிஸ்தானை தாக்கினால், போர் தொடுத்தால் நாங்கள் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவாக இருப்போம் என ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாய் அதிரடியாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அல்லது வேறு நாடுகளுடன் சண்டை மூளக் கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் ஒரு வேளை நாளையே பாகிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தால் நாங்கள் பாகிஸ்தானுக்குத்தான் ஆதரவாக இருப்போம். காரணம், பாகிஸ்தான் எங்களது சகோதரன்.

பாகிஸ்தானை தாக்கினால் பதிலடி கொடுபோம் : ஹமித் கர்சாய்[7] ! பாகிஸ்தான் மீது யாராவது போர் தொடுத்தால் பாகிஸ்தான் மக்கள் ஆப்கானிஸ்தானின் உதவியைத்தான் நாடுவார்கள். அப்போது பாகிஸ்தானியர்களுக்கு உதவ, கை கொடுக்க நாங்கள் தயாராக இருப்போம். பாகிஸ்தானின் சகோதரர்கள் நாங்கள். 1979-80ல் ரஷ்யா எங்களை ஆக்கிரமித்தபோது பாகிஸ்தானியர்கள்தான் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். எங்களை சகோதரர்களாக கருதி எங்களுக்கு உதவினர் பாகிஸ்தானியர். தங்களது உள்ளங்களை மட்டுமல்லாமல் இல்லங்களையும் கொடுத்தவர்கள் அவர்கள். எங்களுக்கு உதவிய அவர்களுக்கு நாங்கள் துரோகம் இழைக்க முடியாது, ஏமாற்ற முடியாது. எனவே அமெரிக்காவோ, இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் எங்களது முழு ஆதரவும் பாகிஸ்தானுக்குத்தான் இருக்கும்[8].

பாகிஸ்தான் எங்களுக்கு துயரத்தை அளித்தாலும் அவர்கள் தாம் எங்களுக்கு சகோதரர்கள்: எங்களுக்கு பாகிஸ்தான் அரசு நிர்வாகம் பல துயரங்களை இழைத்துள்ளது. நான் அதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் எங்களது சகோதரர்கள். அதை நாங்கள் மறக்க மாட்டோம். இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் நான் விளக்க விரும்புகிறேன். இதுதிடீரென நடந்த ஒப்பந்தம் அல்ல, பல காலமாகவே பேசப்பட்டு வந்த ஒன்றுதான். இதற்கும், பாகிஸ்தானுடனான எங்களது உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் கர்ஸாய். கர்ஸாயின் இந்தக் கருத்து அமெரிக்காவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹக்கானி தீவிரவாதக் குழு மீது அமெரிக்கா கடும் ஆத்திரத்தில் உள்ளது. ஆனால் அந்த குழு மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுத்து விட்டது. இதற்காக அமெரிக்காவுடன் நேரடி மோதலிலும் ஈடுபட அது தயாராக உள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அமெரிக்கா படைகளைக் குவித்துள்ளது. அதேபோல பாகிஸ்தானும் தனது பகுதியில் படைகளைக் குவித்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலையில் கர்ஸாயின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

பாம்புகளை தோட்டத்தில் வைத்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது[9]:  பாம்புகள் என்றால் அவற்றின் தன்மை என்ன என்பது தெரிந்துதான் இருக்கும், அதிலும் கடிக்கும் பாம்புகள் எனும்போது, விளையாட்டாக இருக்கும் பாம்புகள் இல்லை. “பின் தோட்டத்தில் நச்சுப் பாம்புகளை வைத்துக் கொண்டு, அதிலும் அவை உங்களது அடுத்த வீட்டுக் காரர்களை கடிக்கும் நிலையில் இருக்கும்போது, நாம் சும்மா இருக்க முடியாது”, என்று ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானிற்கு விஜயம் செய்தபோது வெளிப்படையாகக் குறிப்பிட்டார்[10]. இருப்பினு பாம்புகளை அவர்கள் வைத்துள்\னர்[11]. பாம்புகள் என்று குறிப்பிட்டது ஜிஹாதிகள் தாம், தீவுரவாதிகள் தாம், பயங்கரவாதிகள் தாம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில், ஹக்கானி குழுவினர் மீது அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன[12]. கடந்த சில நாட்களுக்குமுன் பாகிஸ்தான் வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ஹக்கானி குழுவினரை ஒழிக்க, பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என கூறியிருந்தார்[13]. நட்பு எனும்போது, நல்ல உறவு எனும்போது, அதில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும், நீ முட்டாள் மாதிரி எங்கலுக்கு உதவி செய்து கொண்டேயிரு, அவர்கள் விமானங்களைக் கடத்தினாலும் சரி, நமது எஞ்சினியர்களைக் கொன்றாலும் சரி, எல்லைகள் கடந்த தீவிரவாதத்திற்கு ஆட்களை அனுப்பினாலும் சரி, இந்தியா உதவி செய்து கொண்டியிருக்கிறது என்றால், அதில் முட்டாள்தனம் இல்லை, ஏதோ சதி இருக்கிறது எனலாம்.

வேதபிரகாஷ்

26-10-2011


[1] “However pure Mr. Gandhi’s character may be, he must appear to me from the point of religion inferior to any Mussalman he be without character”

“Yes, according to my religion and creed, I do hold an adulterous and a fallen Mussalman to be better than Mr Gandhi”

[2] B. R. Ambedkar, Thoughts on Pakistan, Thacker & Co., Bombay, 1941, p.302.

[3] Mahathama Gandhi, Collected works, Volume.XXIII, Appendix, 13, p.569.

[4] Mahathama Gandhi, Collected works, Volume XXVI, p.214.

[8] மேலே விளக்கியபடி, மோமின், மோமின் கூட சேர்ந்து காஃபிருக்கு எதிராகத்தான் ஜிஹாத்-போரை நடத்துவோம் என்று வெளிப்படையாக பேசும் முஸ்லீம்களுடம், ஏன் இன்னும் தாஜா செய்து கொண்டிருக்கிறார்கள்?

[10] US secretary of state Hillary Clinton on Friday warned Pakistan that it cannot keep “snakes in your backyard and expect them to only bite your neighbours”, a not so veiled reference to terror havens in its tribal areas. Then she pressed Islamabad to crackdown on Afghan insurgent Haqqani network holed up there.