Posted tagged ‘பன்னா’

அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – ஆனால் என்கவுன்டர் ஒத்திகை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது!

செப்ரெம்பர் 27, 2015

அல்உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில்ஹாலிவுட் ஸ்டைலில்போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்ஆனால் என்கவுன்டர் ஒத்திகை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது!

TN POLICE announcement

அல்உம்மா கும்பல் தாக்கியது[1]: என்று தலைப்பிட்டு தி இந்து செய்தி வெளியிட்டது. அதற்குள் சிறை காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை மடக்கிப் பிடித்து அறையில் அடைத்து பூட்டினர். பின்னர் படுகாயம் அடைந்த 4 பேரையும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்[2]. அந்த கைதிகளை அறைக் குள் அடைத்த போது, அவர்கள் துணை ஜெயிலர் குமார், சிறை காப்பாளர் மாரி ஆகிய இருவரையும் தங்கள் வசம் பிடித்து வைத்துக் கொண்டனர்[3].  காவலர்கள் அவர்களை விடுவிக்கும்படி கூறிய போது அவர்கள் மறுத்துவிட்டனர்.   இது தொடர்பாக   அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். புழல் சிறைக்குள் கைதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சிறைத்துறை தலைவர் திரிபாதி புழல் சிறைக்கு விரைந்து வந்தார்[4]. அவர் அதிகாரிகளிடம்   நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினார். மேலும் கைதிகள் பிடித்து வைத்துள்ள 2 காவலர்களை விடுவிக்க அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து இரவு அந்த காவலர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்[5].  பிறகு சிறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது[6].

Dinamalar-TN-Jihadis-arrest-Graphicsபுழல்  சிறையில் கலவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லை:  டி.ஐ.ஜி.  ராஜேந்திரன், வடக்கு மண்டல இணை கமிஷனர் தினகர், மாதவரம் துணை கமிஷனர் விமலா, புழல் உதவி கமிஷனர் மன்னர் மன்னன் ஆகியோர் புழல் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். புழல்  சிறையில் கலவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லாததால் தற்போது கூடுதலாக போலீசார் வரவழைக்கப் பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர். சிறைக்குள் கைதிகளை கண்காணிக்க  1 டி.ஐ.ஜி, 3 சூப்பிரண்டுகள், 2 ஜெயிலர்கள், 11 துணை ஜெயிலர்கள், 112 வார்டன், 81 துணை  வார்டன்கள் உள்ளனர்.இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் தற்போது நடவடிக்கை   எடுக்கப் பட்டுள்ளது. கைதிகள் தாக்குதலில் காயம் அடைந்தவர்களில் சிறை வார்டன் முத்துமணி, நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.   ஸ்டான்லி ஆஸ்பத்திரி ஐ.சி.யு. வார்டில் அவருக்கு   டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்[7]. கொலை முயற்சி, அரசு அதிகாரியை தாக்குதல் உட்பட 12 பிரிவுகளின் கீழ் 20 கைதிகள் மீது புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்[8].  ;போலீஸாரின் மனைவி, மக்கள், உறவினர் சிறைச்சாலை முன்பு போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டி ஆர்பாட்டம் செய்தனர்[9].

Mohammed Haneefa arrested - Advani murder plotஅல்உம்மா தீவிரவாதிகள் கலவரத்தில் இறங்கியது ஏன்?: ஹிந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், பா.ஜ., மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோர் வேலூரிலும், ஆடிட்டர் ரமேஷ் சேலத்திலும், வெட்டி கொலை செய்யப்பட்டனர். கொலை வழக்குகளில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணைக்காக, இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். 25-09-2015 அன்று, புழல் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த உளவுப்பிரிவு போலீஸ்காரர் முத்து மணி, சிறை வார்டன்கள் செல்வன், இளவரசன், மோகன் உள்பட, 5 பேரை கைதிகள் தாக்கி, பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் முக்கிய பங்கு வகித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் சிறையில் பதட்டம் ஏற்பட்டது.

Bomb plnters to kill Advaniஅல்உம்மா தீவிரவாதிகள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்[10]: குறிப்பிட்ட அல்-உம்மா தீவிரவாதிகள் சேர்ந்திருந்தால், மேலும் பிரச்சினை பெரிதாகும் என்பதனால், அவர்கள் வெவேறு சிறைகளுக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது. கலவரத்திற்கு காரணமான –

  1. போலீஸ் பக்ருதீன் [Fakruddin alias ‘Police’ Fakruddin], வேலூர் சிறைக்கும்,
  2. பன்னா இஸ்மாயில் [Mohammed Ismail alias Panna Ismail], மதுரை சிறைக்கும்,
  3. பிலால் மாலிக் [Bilal Malik], கடலூர் சிறைக்கும்,
  4. காஜா மொய்தீன் [Khaja Moideen], சேலம் சிறைக்கும்,
  5. முன்னா [Munna alias Mohammed Rafiq] கோவை சிறைக்கும்,
  6. கர்நாடகா மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த அப்துல்லாவை [Abdulla alias Abdulla Muthalip], திருச்சி சிறைக்கும் மாற்றி,

சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டார்[11]. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் பக்ருதீன் 26-09-2015 அன்று, காலை புழல் சிறையில் இருந்து, காலை, 11 மணிக்கு வேலூர் சிறைக்கு கொண்டு சென்று, தனி செல்லில் அடைத்தனர். அவருக்கு, 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. 26-09-2015 அன்று மதியம், 12 மணிக்கு, போலீஸ் பக்ருதீனுக்கு மதிய உணவவாக, அரிசி சாதம், கீரை பொரியல் கொண்டு சென்றனர். உணவு தட்டை தூக்கி எரிந்த போலீஸ் பக்ருதீன், தனக்கு சிக்கன் பிரியாணி வேண்டும் என, கலாட்டா செய்தார்[12]. அதாவது அவனுக்கு எந்த அளவுக்கு கொழுப்பு, ஆணவம் இருக்கிறது என்பதனை கவனிக்க வேண்டும். அரை மணி நேரம் கெஞ்சிக் கூத்தாடிய சிறை காவலர்கள், நாளை சிக்கன் பிரியாணி கொடுப்பதாக கூறி, சமாதானம் செய்தனர். பிறகு வேறு உணவை கொடுத்து, சாப்பிட வைத்தனர்[13]. ஏற்கெனவே போலீஸாரைத் தாக்கி, கலவரம் செய்ததலினால், சிறை மாற்றம் செய்யப்பட்டுள்ள கைதிக்கு, ஏன் இவர்கள் இவ்வாறு தாஜா செய்ய வேண்டும்? சமீபத்தில் ஆம்பூர் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வைத்திருந்தபோது, போலீஸார் பிரியாணி விருந்து போட்டது ஞாபகம் இருக்கலாம். அப்படியென்றால், முஸ்லிம்கள் என்பதனால் அவர்களுக்கு இத்தகைய சீராட்டு கிடைக்கிறதா? இந்நிலையில் பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகமது ஒரு குண்டைப் போட்டுள்ளார்.

© வேதபிரகாஷ்

27-09-2015

[1]  S. Vijayakumar, Al Umma cadre attack jail officials in Puzhal prison, The Hindu, September.26, 2015, Updated: September 26, 2015 13:59 IST.

[2]  தினகரன், புழல் சிறையில் கைதிகள் தாக்கியதில் சிறை காவலர்கள் 4 பேர் காயம், பதிவு செய்த நேரம்: 2015-09-25 21:08:54.

[3]  தினமலர், புழல் சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் கைதிகள், பயங்கரவாதிகள் ஆவேசம், செப்டம்பர்.26, 2015. 03.11.

[4] http://www.thehindu.com/news/cities/chennai/al-umma-cadre-attack-jail-officials-in-puzhal-prison/article7690955.ece

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1350503

[6] https://www.youtube.com/watch?v=rczOrMOMIBU

[7] http://www.dailythanthi.com/News/State/2015/09/26110857/6-prisoners-were-transferred-to-another-prison.vpf

[8]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-20-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article7694509.ece

[9] Policemen’s wives protest– Furious over the attack on the warders, the family members of prison staff staged a protest near Puzhal prison demanding that security for the personnel be stepped up. The police pacified them and they dispersed only after officers assured them that the necessary measures will be taken to ensure their safety. http://www.thehindu.com/news/cities/chennai/shortage-of-personnel-hits-security-at-puzhal-prison/article7693585.ece?ref=relatedNews

[10]  Viveka Narayanan, 6 Al-Umma cadre sent to different jails, The Hindu, September.27, 2015; Updated: September 27, 2015 08:06 IST

[11] http://www.thehindu.com/news/national/tamil-nadu/6-alumma-cadre-sent-to-different-jails/article7694506.ece?ref=relatedNews

[12]  தினமலர், சிக்கன் பிரியாணி கேட்டு போலீஸ் பக்ருதீன் கலாட்டா, செப்டம்பர்.27, 2015.08.33.

[13] http://www.dinamalar.com/news_detail.asp?id=1351396

அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்!

செப்ரெம்பர் 27, 2015

அல்உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில்ஹாலிவுட் ஸ்டைலில்போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்!

Puzhal jail

Puzhal jail

புழல் சிறையில் பயங்கரமான குற்றவாளிகள் இருப்பது, போலீஸார் குறைவாக இருப்பது[1]: சென்னை புழல் சிறையில் தண்டனை கைதிகள் 230 பேரும், விசாரணை கைதிகள் 2003 பேரும், பெண் கைதிகள் 150 பேர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். 3 விதமான கைதிகளுக்கும் தனித்தனி ஜெயில்கள் விசாலமாக உள்ளது. போதை  பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் முக்கிய   பிரமுகர்களை தீர்த்து கட்டிய பயங்கரமான கைதிகளும் இங்கு அடைக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 2014ல் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கி இருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது[2].  அப்போது என் கவுண்டரும் நடந்தது. இதில் பிடிபட்ட பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதேபோல் சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் கொலை வழங்கில் கைதான காஜா மொய்தீன், அப்துல் வகாப், ராஜா முகமது, தமீம் அன்சாரி, முன்னா என்ற முகமது ரபீக், மண்ணடி அப்துல்லா உள்பட 16 பேரும் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இத்தனை முக்கியமான சிறைக்கு பாதுகாப்பாக போலீஸார் இல்லை என்று எடுத்துக் காட்டப்படுகிறது.

Puzhal attacked -Puthiya thalaimurai - 25-09-2015

Puzhal attacked -Puthiya thalaimurai – 25-09-2015

கொலைக்குற்றவாளிகள், தீவிரவாதிகள் எப்படி வசதிகளை சிறைகளில் அனுபவிக்கின்றனர்?: திரைப்படங்களில் தாம், சிறைக்குற்றவாளிகள் எல்லா வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைப் போல காட்டுவார்கள். ஆனால், இப்பொழுது உண்மையாகவே அத்தகைய வசதிகள் குற்றவாளிகளுக்கு, கொலைகாரர்களுக்கு, தீவிரவாதிகளுக்குக் கிடைக்கிறது என்று அஜ்மல் கசாப், அபு சலீம் போன்றோரின் விவரங்களிலிருந்து அறியப்படுகிறது. அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் கொடுத்து திருப்தி படுத்தினர். அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதால், கோடிக்கணக்கில் செலவான பணம் நின்றது. ஆனால், அபு சலீம் போன்றோர் இன்னும் வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அபு சலீமை தாவூத் இப்ராஹிமின் ஆள் முஹமது தோஸா என்பவன் ஆர்தர் சாலை ஜெயிலிலேயே 24-07-2010 அன்று காலை (சனிக்கிழமை) ஒரு கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டான்[3]. அதாவது, இந்திய சிறைச்சாலைகள் அந்த அளவுக்கு ஓட்டையாக உள்ளனவா அல்லது தீவிரவாதிகள் தங்களது ஆடிக்கத்தைச் செல்லுத்தி வருகிறார்களா என்று பார்க்க வேண்டும். வில் ஹியூம் என்ற குழந்தை கற்பழிப்பாளி புழல் சிறையில் தான் அடைக்கப்பட்டான் என்ற செய்திகள் வந்தன. இப்பொழுது, அச்சிறையில் கலவரம், அல்-உம்மா தீவிரவாதிகள் ஜெயில் வார்டன் மற்றும் போலீஸாரைத் தாக்கினர், செல்போன் வைத்திருந்தனர் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன.

Puzhal police attacked - chennai patrika- 25-09-2015

Puzhal police attacked – chennai patrika- 25-09-2015

முகமது ரபீக் ஜெயிலில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்[4]: கடந்த வாரம் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான முகமது ரபீக் ஜெயிலில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதை ஜெயிலர்   இளவரசன் கண்காணித்து செல்போனை பறிமுதல் செய்தார்[5]. அப்படியென்றால், செல்போனை யார் கொடுத்தது, எப்படி ஜெயிலின் உள்ளே சென்றாது போன்ற கேள்விகள் எழுகின்றன. மேலும் சில கைதிகளிடம் இருந்து போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் ஜெயிலர் மீது கடும் கோபத்தில் இருந்தனர். ஜெயிலில் யாரோ தகவல் சொல்வதால்தான் செல்போன் பேசுவது தெரிந்துவிட்டதாக கருதினர்.  இதனால் ஜாகீர் உசேன் என்ற கைதியை சந்தேகப்பட்டு கைதிகள் அடித்தனர்[6]. இதுபற்றி புழல் சிறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. ஜெயிலர் இளவரசன் கைதிகளை தீவிரமாக கண்காணித்தார். இந்நிலையில் புழல் சிறை ஜெயிலர் இளவரசன், உதவி ஜெயிலர் குமார், வார்டர் முத்துமணி (28), எலக்ட்ரீசியன் மாரி என்ற மாரியப்பன் மற்றும் சில காவலர்கள் சிறையின் கைதிகள் அறையை சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்தனராம்[7].  அவர்கள் மாலை 5.15 மணியளவில், சிறையின் உயர் பாதுகாப்பு பகுதி-2 இல் இருக்கும் முஸ்லிம் கைதிகள் இருக்கும் பகுதியில், சோதனையிடச் சென்றனர். இதற்கு கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது[8].

Puzhal attacked police admitted in Hospital - 25-09-2015

Puzhal attacked police admitted in Hospital – 25-09-2015

ஜாகிர் உசேனை சிறையிலேயே அல்உம்மா ஆட்கள் அடித்தது ஏன்?: ஜெயிலில் யாரோ தகவல் சொல்வதால்தான் செல்போன் பேசுவது தெரிந்துவிட்டதாக கருதினர்.  இதனால் ஜாகீர் உசேன் என்ற கைதியை சந்தேகப்பட்டு கைதிகள் அடித்தனர்[9]. இதுபற்றி புழல் சிறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. ஜாகிர் உசேன் சொன்னான், அதனால், அல்-உம்மா கும்பல் அவனை அடித்தது என்றால், சிறைக்குள்ளேயே அவர்கள் தங்களது ராஜ்யத்தை நடத்துகின்றனர் என்றாகிறது. மும்பை சிறைகளில் தான் அத்தகைய வசதிகளை பெறுகிறார்கள் என்றால், இங்கும் அதே நிலைதான் என்று தெரிகிறது. ஜெயிலில் கைதிகள் அடித்துக் கொள்வது, கலவரம் செய்வது, ஜெயிலரை அடிப்பது, தாக்குவது முதலியன போலீஸார் கட்டுப்பாட்டில் சிறை உள்ளதா அல்லது இந்த தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளதா, ஆட்டி வைக்கிறார்களா, இதன் பின்னணி என்ன என்ற சந்தேகங்கள் எழுகின்றான.

Prison warden Muthumani, who was reportedly hit with a carom board, got 20 stitches — Photo-B. Jothi Ramalingam-the hindu

Prison warden Muthumani, who was reportedly hit with a carom board, got 20 stitches — Photo-B. Jothi Ramalingam-the hindu

அனைத்து கைதிகளும் ஒன்று சேர்ந்து ஜெயிலர் இளவரசனை தாக்குதல்: இந்த நிலையில் 25-09-2015 அன்று மாலை வழக்கம் போல் ஜெயிலர்  இளவரசன், சிறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர் உயர் பாதுகாப்பு அறைக்கு சென்ற போது, அங்கு அடைக்கப்பட்டு இருந்த அனைத்து கைதிகளும் ஒன்று சேர்ந்து திடீரென ஜெயிலர் இளவரசனை தாக்கினார்கள்[10]. எதிர்பாராத விதமாக நடந்த இந்த தாக்குதலில் நிலை குலைந்த  ஜெயிலர் இளவரசன், அலறி அடித்துக் கொண்டு கதவை திறந்து வெளியே ஓடி வந்தார்.  அவரை பின் தொடர்ந்து விரட்டி வந்த கைதிகள், அங்கே கிடந்த செங்கல் மற்றும் உருட்டுக் கட்டைகளால் அவரை தாக்கினார்கள். இதைப் பார்த்த சிறை காவலர்கள் முத்துமணி, செல்வின் தேவராஜன், சிறை காப்பாளர் ரவிமோகன் ஆகியோர் கைதிகளை தடுக்க முயன்றனர்.  ஆத்திரம் அடைந்த கைதிகள் அவர்களையும் கற்கள், கட்டைகளால் தாக்கினார்கள். கேரம் போர்டை உடைத்து அந்த கட்டையாலும் தாக்கினர். அப்போது கைதிகள் காவலர் முத்துமணியை  இரும்பு கம்பியாலும் குத்தினர். இதில் ஜெயிலர் இளவரசன் மற்றும் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகிய 4 பேரும் படுகாயம்  அடைந்தனர்.

© வேதபிரகாஷ்

27-09-2015

[1]  Vivek Narayanan, Shortage of personnel hits secuirity at Puzhal prison, The Hindu, September.27, 2015.

[2] https://islamindia.wordpress.com/2013/10/05/tn-police-clash-with-jihadis-in-ap-one-policeman-killed/

[3]https://islamindia.wordpress.com/2010/07/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A/

[4] தினத்தந்தி, புழல் சிறையில் வார்டன் மீது தாக்குதல்:கைதிகள் 6 பேர் வேறு சிறைக்கு மாற்றம், மாற்றம் செய்த நாள்: சனி, செப்டம்பர் 26,2015, 11:08 AM IST

பதிவு செய்த நாள்: சனி, செப்டம்பர் 26,2015, 11:08 AM IST.

[5] The clashes in which two jail personnel were taken hostage and four others injured, was a fallout of an altercation over use of mobile phones in the prison and visitors bringing in prohibited food items. The Al Umma cadres attacked prison staff with carrom board and stones, the sources added.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/6-alumma-cadre-sent-to-different-jails/article7694506.ece?ref=relatedNews

[6] தங்களுடன் இருக்கும் ஜாகீர் உசேன் என்ற கைதி உளவு சொல்வதாக சந்தேகப்பட்டு அவரை தாக்கினர்.

தமிழ்.இந்து, சிறைக்குள் காவலர்களை தாக்கி கலவரம்: புழலில் இருந்து 6 கைதிகள் இடமாற்றம் – 20 கைதிகள் மீது வழக்கு பதிவு, Published: September 27, 2015 08:49 ISTUpdated: September 27, 2015 08:50 IST.

[7]  தினமணி, புழல் சிறையில் கைதிகள்காவலர்கள் மோதல்: ஜெயிலர் உள்பட 4 பேர் காயம்; பணயக் கைதிகளாக இருவரை சிறைப் பிடித்தனர், By  சென்னை, First Published : 26 September 2015 01:49 AM IST.

[8]http://www.dinamani.com/tamilnadu/2015/09/26/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D—%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2/article3047911.ece

[9] தங்களுடன் இருக்கும் ஜாகீர் உசேன் என்ற கைதி உளவு சொல்வதாக சந்தேகப்பட்டு அவரை தாக்கினர்.

தமிழ்.இந்து, சிறைக்குள் காவலர்களை தாக்கி கலவரம்: புழலில் இருந்து 6 கைதிகள் இடமாற்றம் – 20 கைதிகள் மீது வழக்கு பதிவு, Published: September 27, 2015 08:49 ISTUpdated: September 27, 2015 08:50 IST.

[10] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=169216

தமிழக ஜிஹாதிகள்-போலீசார் சித்தூரில் பயங்கர மோதல் – துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் உயிரிழப்பு!

ஒக்ரோபர் 5, 2013

தமிழக ஜிஹாதிகள்-போலீசார் சித்தூரில் பயங்கர மோதல் – துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் உயிரிழப்பு!

Dinamalar-TN-Jihadis-arrest-Graphicsதிருப்பதி அருகே முஜாஹித்தீன் தீவிரவாதிகள்: ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பிடிக்க போலீசார் கடும் துப்பாக்கிச்சண்டை நடத்தி வருகின்றனர். இதில் தமிழக போலீ­சார் 2 பேர் ­கா­ய­முற்­ற­னர். முன்­ன­தா­க ­போ­லீ­சார் உயிரிழந்ததா­க ­கூ­றப்­பட்­ட­து. தொடர்ந்து 10 மணி நேரமாக துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. தமிழகத்தில் பிஜேபி பிரமுகர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டனர். இவர்களில், வேலூரில் வெள்ளையன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என டில்லியில் உள்ள அனைத்து பிஜேபி நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

TN POLICE announcementபிரம்மோஸ்தவம் நடக்கும் வேலையில் புத்தூரில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் மறைவிடம்: இதையடுத்து, குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் நேற்று வெள்ளிக்கிழமை பதுங்கியிருந்த போலீஸ் பக்ரூதின் என்பவனை கைது செய்தனர். இவன் கொடுத்த தகவலின்படி இன்று காலையில் சென்னை அருகே ஆந்திர எல்லையான புத்தூரில் (சித்தூர் மாவட்டம்) பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது[1]. இதனையடுத்து போலீசார் துப்பாக்கிகளுடன் மேதரா வீதியில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்டனர். இங்கு போலீசார் வருவதை அறிந்த பயங்கரவாதிகள் போலீசார் நோக்கி சுட்டனர். க­த­வை ­ தட்டிய­போ­து இரண்டு  ­ ­போ­லீ­சா­ரை ­அ­ரி­வா­ளால் ­வெட்­டி­னர், இ­தில் ­இ­ரு­வ­ரும் படுகாயமுற்­ற­­னர். இதனையடுத்து போலீசாருக்கும், பயங்கரவாதிகள் இடையேயும் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

Abubakkar Siddique - TN police noticeதில்லியிலிருந்து எஸ்-ஐ.டி படை வந்தது: இன்று காலையில் தில்லியிலிருந்து எஸ்.ஐ.டி படை வந்தது. மத்திய அரசின் ஆக்டோபஸ் என்ற படையும், தமிழக, ஆந்திர போலீஸ் படையும் இணைந்து இந்த ஆப்ரேஷனை நடத்தின[2]. இந்த துப்பாக்கிச்சண்டையில் தமிழக ­போ­லீஸ்கா­ரர் ­ 2 பேர் காயமுற்றனர். முன்­ன­தா­க போலீசார் ­இ­றந்­த­தா­க கூறப்பட்ட­து[3]. போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து போனில் பேசிவந்தது தெரிந்தது. ஜிஹாதிகள் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒடரு வீட்டில் பதுங்கியுள்ளனர். உள்ளே ஒருவேளை குண்டுக்லள் வைத்திருக்கக் கூடும் என்பதால், போலீசாரார் அதிரடியாக உள்ளே நுழைய பயப்படுகின்றன்சர் என்று தெலுங்கு ஊடகங்கள் எடுத்துக் காட்டின.

CBCID_NOTICEதமிழகத்தின் அல்முஜாகிதீன் படை[4]: மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த பிலால் மாலிக்கும், “போலீஸ்’ பக்ருதீனும், “அல்முஜாகிதீன் படை” இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் தெரிவிக்கின்றனர். அதாவது அல்-உம்மா, அல்-முஜீஹித்தீனாக மாறியது போலும். இதன் உறுப்பினர்கள், “தியாகப்படை” என்றும் அழைக்கப்படுகின்றனர். அதாவது ஜிஹாத் தமிழகத்தில் “தியாகத்தோடு” செயல்படுவது மெய்ப்பிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், மதுரையில் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்திற்கு இவ்விதமாகத்தான் இஸ்லாமிய தீவிரவாதம் இறக்குமதி செய்யப்பட வேண்டும் போலிருக்கிறது. கடந்த, 2005ல், மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி, காளிதாஸ் கொலையில், 17 வயதாக இருந்த, பிலால் மாலிக் சேர்க்கப்பட்டான். அதன் பின், பூசாரி கங்காதரன் கொலை, அத்வானி யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வருகிறான். பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவன் மாலிக். இவனை கண்டு பிடித்து தருபவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

Dinamalar-TN-Jihadis-arrest.6பீடிசுற்றும் தொழிலாளிகள் போர்வையில் ஜிஹாதி குடும்பங்கள்: போலீஸ் விசாரணை அல்-உம்மா பயங்கரவாதி பிலால்மாலிக், இரண்டு மாதத்திற்கு முன்னர் தான் தற்போது குடியிருக்கும் வீட்டை, அங்குள்ள நண்பர் உதவியுடன் பீடிசுற்றும் தொழிலாளிகள் என்ற போர்வையில் அவ்வீட்டை வாடகைக்கு பிடித்துள்ளான்[5]. பீடி உற்பத்தி செய்யும் முஸ்லிம் தொழிற்சாலை அதிபர்கள் இந்துவிரோத பிரசுரங்களுக்கு உதவுகிறார்கள் என்பதை முந்த்யைய ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த இடம்  “முஸ்லிம் காலனி” என்றே அழைக்கப்படுகிறது. குடியேறியபோது அவனுடன் நான்கு குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் மற்றவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதாவது “தியாகம்” செய்யவேண்டிய நிலை வரும் போது, “குடும்பங்கள்” சென்று விடும் போலிருக்கிறது. பிலால்மாலிக்கின் குடும்பத்துனருடன் மேலும் சிலர் மட்டும் தற்போது அங்கு தங்கி உள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து, பிலால்மாலிக்குடன் தங்கியிருந்தவர்கள் குறித்த விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர். ஜிஹாதிகளுக்கு இப்படித்தான் “லாஜிஸ்டிக்ஸ்” கிடைக்கிறது போலும்!

chittoor-puttur-jihadi-hideout-Dinamani.7தமிழக ஜிஹாதிகள்-போலீசார் துப்பாக்கி சண்டை: தமிழக-ஆந்திர எல்லை கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று துப்பாக்கி முனையில் பக்ருதீன் பிடிபட்டான். இதற்குள் மற்ற தீவிரவாதிகள் சித்தூரில், ஒரு வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், தமிழக போலீசார், அவ்வீட்டை வளைத்தனர். விசயம் தெரிந்த தமிழக ஜிஹாதிகள், போலீசார் மீது தாக்க ஆரம்பித்தனர். துப்பாக்கிகளால்  சுட்டதாகவும் தெரிகிறது[6]. ஒரு போலீஸ்காரரை – சர்க்கிள் இன்ஸ்பெக்டர் லட்சுமண மூர்த்தி – தமிழக ஜிஹாதி குத்தித் தப்பிச் சென்றுவிட்டதாக ஆங்கில செனல்களில் செய்தி வந்துக் கொண்டிருக்கின்றது. போலீஸ் உடனே இறந்துவிட்டதாகத் தெரிகிறது, இன்னொரு போலீசார் காயமடைந்துள்ளார். சுமார் 30 போலீசார், இந்த வேட்டையில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் தமிழக-ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். என்.டி.டிவி இதனை என்கவுன்டர் என்று வர்ணித்துள்ளது[7]. அதாவது, சட்டரீதில் ஜிஹாதிகளுக்கு உதவ ஆலோசனையை சூசகமாகத் தெரிவிக்கிறது. உடனே, ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுவிடுவார் என்பது தெரிய வரும்.

chittoor-puttur-jihadi-hideout-Dinamani.2பிலால்மாலிக்குடன் போலீசார் பேச்சு-வார்த்தை[8]: ஆந்திர எல்லை கிராமமான புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருக்கும் பைப் வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அல் உம்மா பயங்கரவாதியுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையா, பேரமா, உடன் படிக்கையா என்பது பிறகு தான் தெரிய வரும். அவனை உயிருடன் பிடிக்க வேண்டும் என முடிவெடுத்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது, பிலால்மாலிக்கை சரண் அடையும்படி போலீசார் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவன் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன. பிறகு,வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பிலால்மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்தனர்[9]. இதன்மூலம், 12 மணி நேர அதிரடி நடவடிக்கை நிறைவடைந்தது. முன்னதாக, வீட்டில் பதுங்கியிருந்த ஒரு பெண், மூன்று குழந்தைகளை வெளியில் அனுப்பிய பிலால்மாலிக், பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பன்னா இஸ்மாயிலுடன் சரண் அடைந்தான். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் எங்கு உள்ளனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. எப்படியிருந்தாலும், மருத்துவமனையில் சேர்க்கப் படுவர். உபசரிக்கப் படுவர். அதற்குள் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்படும்!

® வேதபிரகாஷ்

05-10-2013


[5] According to the local people, four people, who claimed to be working in the beedi manufacturing industry, had taken the house on rent a few months ago. Locals said that they had no information about these people as they only came back home late in the night.

http://www.rediff.com/news/report/andhra-pradesh-police-raid-terrorist-hideout-constable-killed/20131005.htm

[7] Firing between suspected militants and police in Andhra Pradesh; one cop killed: report

HyderabadA policeman has been killed and another injured in an on-going encounter with suspected militants in the Chittoor district of Andhra Pradesh, according to reports. A team of 30 policemen have reportedly surrounded the men, who are believed to be heavily armed.  Police sources say the men are suspected to be behind the killing of Bharatiya Janata Party’s Tamil Nadu unit general secretary V Ramesh, who was attacked fatally with sharp-edged weapons near his house in July.

http://www.ndtv.com/article/south/firing-between-suspected-militants-and-police-in-andhra-pradesh-one-cop-killed-report-428105