Posted tagged ‘பத்வா’

மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை!

செப்ரெம்பர் 13, 2015

மொஹம்மது இறைத்தூதர்: சினிமா, பத்வா, பிராயசித்தம் இத்யாதிகள் – திலிப்குமார் முதல் ரஹ்மான் வரை!

Mohammed messenger of God - A R RAhman fatwa

Mohammed messenger of God – A R RAhman fatwa

முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்[1]. ஆஸ்கார் விருது பெற்ற, ஸ்லம்-டாக் மில்லியனர் படம் இசைப்புகழ் ரஹ்மானுக்கு பத்வா போடப்பட்டுள்ளது என்று “ஹாலிவு ரிப்போர்டர்” தலைப்பிட்டு அறிவித்துள்ளது[2]. 1989ல் முஸ்லிமாக மாறிய இவர், தனது பெயரான திலிப் குமார் என்பதனை மாற்றிக் கொண்டார்[3]. அதிலிருந்து, இவர் பழுத்த முஸ்லிமாக நாகூருக்குச் செல்வது, மொட்டை அடித்துக் கொள்வது, சூபித்துவத்தில் ஈடுபடுத்திக் கொள்வது, சூப்பாடல்களை சினிமா பாடல்களில் சேர்ப்பது என்று பரிசோதனை செய்து வந்தார். சினிமா பாடல்களில் கூட இஸ்லாமிய ராகங்கள், இசைக்கருவிகள், கவ்வாலிகள் போன்ற மெட்டுகள் முதலியவற்றைக் காணலாம். இருப்பினும், இப்பொழுது பத்வாவிக்கு உட்பட்டிருக்கிறார்.

A R Rhman and Majid Majith

A R Rhman and Majid Majith

மஜித் மஜீதும், ரஹ்மானும், இறைத்தூதர் மொஹம்மது திரைப்படமும்: ஈரானிய சினிமாவை உலகளவில் பேச வைத்த படம் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படத்தை மஜித் மஜிதி என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் 1997-ல் வெளிவந்து உலக ரசிகர்களால் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் ஒரு ஜோடி ஷூவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உலக ரசிகர்களை மஜித் மஜிதி தன் பக்கம் ஈர்த்தார். உலகப்பட விழாக்களில் நூற்றுக்கணக்கான விருதுகளை குவித்த இந்தப் படம் இப்போதும் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதேபோல் ‘த கலர் ஆப் பாரடைஸ்’, ‘த சாங் ஆப் ஸ்பாரோ’ போன்ற அன்பைப் பற்றி பேசும் தரமான திரைப்படங்களை இவர் அளித்துள்ளார்[4]. இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘முஹம்மத்: மெசஞ்சர் ஆப் காட்’ [ ‘Muhammad: Messenger of God’] என்ற ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்[5].

Muhammad_-_The_Messenger_of_God_poster

Muhammad_-_The_Messenger_of_God_poster

இறைத்தூதர் மொஹம்மது திரைப்படத்திற்கு எதிப்புத் தெரிவிக்கும் முஸ்லிம்கள்: ஈரான் அரசின் நிதியுதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு முஹம்மது நபியின் பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், முஹம்மது நபியின் பெயருடன் வெளியாகும் இந்தப் படத்தைப்பற்றி மக்கள் தவறாக விமர்சித்தால் அது அவரை இழிவுப்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே, இந்த படத்தை திரையிட கூடாது எனவும் மும்பையில் உள்ள சன்னி பிரிவினர் கடந்த வாரம் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்[6].  மஹாராச்ட்ரா முதலமைச்சர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் போன்றோரை சந்திப்போம் என்றும் கூறியுள்ளனர். தங்களது எதிர்ப்பையடுத்து, இந்த படத்தை வெளியிடும் முயற்சியை படத்தின் இயக்குனர் கைவிடாததால், இயக்குனர் மஜித் மஜிதி, மற்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக ‘பத்வா’ எனப்படும் மார்க்கத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையை சேர்ந்த சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ராஸா அகாடமியின் பொதுச் செயலாளர் சயீத் நூரி [Saeed Noorie, chief of Raza Academy] தெரிவித்துள்ளார்[7]. இந்த ராஸா அகடெமி ஏற்கெனவே பல சர்ச்சைகளில், கலவரங்களில் ஈடுபட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மொஹம்மது இறைத்தூதர் - சினிமா

மொஹம்மது இறைத்தூதர் – சினிமா

மும்பை முதி பத்வா போட்டது ஏன்?: இது தொடர்பாக ரஸாக் அகாடமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[8]:  “மஜித் மஜிதி எடுத்துள்ள முகமத்மெஸஞ்சர் ஆப் காட் படம்  இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது. தன்னைப்பற்றிய எந்த உருவத்தையும் எவ்விதத்திலும் உருவாக்கக் கூடாது என்று மொஹம்மது நபி கூறியுள்ளார்[9]. இந்நிலையில் இஸ்லாம் மத கோட் பாட்டுக்கு எதிராக இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்த முஸ்லிமும் இந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது. இந்த படத்தில் தொழில்முறை முஸ்லிம் கலைஞர்களும், முஸ்லிம்-அல்லாத பிற மதக்கலைஞர்களும் (காபிர்களும்) பணியாற்றியுள்ளனர்[10]. இஸ்லாத்துக்கு விரோதமான ஒரு படத்தில் பணியாற்றியதன் மூலம் மஜித் மஜிதியும், ஏ.ஆர்.ரகுமானும் தெரிந்தே இஸ்லாத்தின் சட்டங்களை மீறி இருக்கிறார்கள்[11]. இந்தப் படத்தை இந்தியாவில் தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மஜித் மஜிதி மற்றும் .ஆர்.ரஹ்மானுக்குபத்வாவிதிக்கப்படுகிறது”, இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது[12].

Mohammed messenger of God - An Iranian film

Mohammed messenger of God – An Iranian film

பிராயசித்தம் செய்ய வேண்டியது என்ன?: மொஹம்மது அக்தர், மும்பை முப்தி அந்த பத்வாவை அறிவித்துள்ளார்[13]. அப்படத்தில் நடித்த, வேலை பார்த்த முஸ்லிம்கள், கலிமா படித்து, தங்களது திருமணங்களையும் மறுபடியும் செய்வித்து புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. மஜீதி மற்றும் ரஹ்மான் இருவரும், அவர்களது கருத்துகளைக் கேட்க முற்பட்டபோது, இருவரையும் காணவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது[14]. அதாவது காபிர்களுடன், மோமின்கள் எந்த தொடர்பையும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று இருக்கும் நிலையில், முஸ்லிம்களான இவர்கள், காபிர்களுடன் சேர்ந்து வேலை செய்திருக்கின்றனர். “இறைவனின் தூதர்” என்ற பெயரை வைத்து, அதில் காபிர்களையும் நடிக்க வைத்துள்ளனர். இதனால், அவர்களை காபிருத்துவம் ஒட்டிக்கொண்டுள்ளது. அதனால், அவர்கள் காபிர்களாகவும் மாறி விட்டனர். அதனால், கலிமா படித்து, தங்களது திருமணங்களையும் மறுபடியும் செய்வித்து புனிதப்படுத்திக் கொள்வதின் மூலம் மோமின் நிலையை அடையலாம் என்று, தனக்கேயுரிய பாணியில் முப்தி கூறியுள்ளார். இனமவர்கள் பிராயசித்தம் செய்து மறுபடியும் முஸ்லீம்களாக மாறுவார்களா அல்லது அப்படியே இருப்பார்களா என்று பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

13-09-2015

[1] पैगंबर मोहम्मद साहब पर बनी अब तक की सबसे महंगी फिल्म में संगीत देने वाले भारत के सबसे बड़े संगीताकार को मुस्लिम समुदाय ने फतवा जारी कर दिया है। मुंबई के सुन्नी मुस्लिम समुदाय की राजा एकेडमी ने इरानी फिल्मकार माजिद मजीदी और संगीतकार भारतीय संगीतकार एआर रहमान को फतवा जारी कर पैंगबर मोहम्मद साहब पर बनी अब तक की सबसे बड़ी फिल्म पर कड़ा विरोध जताया है।

http://www.amarujala.com/photo-gallery/multiplex/entertainment-photo-gallery/fatwa-against-a-r-rahman-for-film-on-prophet/

[2] http://www.hollywoodreporter.com/news/fatwa-issued-slumdog-millionaire-composer-822668

[3] Rahman, 48, is one of India’s most successful composers, whose multiple awards include an Oscar and Grammy for his work onDanny Boyle‘s Slumdog Millionaire. He worked again with Boyle on the 2010 release 127 Hours. Rahman officially converted to Islam in 1989, replacing his Hindu birth name Dileep Kumar.

[4] தினமணி, .ஆர்.ரஹ்மானுக்கு இஸ்லாமிய அமைப்புஃபத்வாஅறிவிப்பு!, By எழில்

First Published : 12 September 2015 05:17 PM IST.

[5] http://www.maalaimalar.com/2015/09/12130105/Fatwa-issued-against-AR-Rahman.html

[6]http://www.dinamani.com/cinema/2015/09/12/%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85/article3024497.ece

[7] மாலைமலர், ஈரானிய சினிமாவுக்கு இசையமைத்த .ஆர். ரஹ்மானுக்கு எதிராக பத்வா, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, செப்டம்பர் 12, 1:01 PM IST.

[8] தினகரன், முகமது நபிகள் பற்றிய ஈரான் படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .ஆர்.ரஹ்மானுக்கு பத்வா: மும்பையை சேர்ந்த சன்னி அமைப்பு அறிவிப்பு, செப்டம்பர்.13, 2015, 03.22.14, ஞாயிற்றுக்கிழமை.

[9] http://indianexpress.com/article/entertainment/entertainment-others/fatwa-against-a-r-rahman-majid-majidi-for-film-on-prophet/

[10] http://www.dailythanthi.com/News/CinemaNews/2015/09/12142522/Fatwa-against-AR-Rahman-Majid-Majidi-for-film-on-Prophet.vpf

[11] தினத்தந்தி, .ஆர்.ரகுமான்ஈரான் இயக்குனருக்கு முஸ்லிம் அமைப்பு கண்டனம், மாற்றம் செய்த நாள்:சனி, செப்டம்பர் 12,2015, 2:25 PM IST; பதிவு செய்த நாள்:சனி, செப்டம்பர் 12,2015, 2:25 PM IST.

[12] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=166848

[13] Saeed Noorie, chief of Raza Academy, which initiated the fatwa that was issued by Muhammad Akhtar – the chief mufti of Mumbai.

http://www.thehindu.com/news/national/fatwa-against-ar-rahman-for-film-on-prophet/article7642275.ece

[14] In the fatwa, they cite as the reason the Prophet’s word that no visual or picture of him be created or kept. The fatwa claims the film makes a mockery of Islam, and professional actors, including some non-Muslims, have been cast in the key roles.The fatwa adds that the Muslims working on the film, especially Majidi and Rahman, have thus committed sacrilege and will have to read the kalma again and also solemnise their marriage again. Despite repeated attempts, Rahman remained unavailable for comment.

தலைக்கு பத்வா போட்ட மதவெறி பிடித்த தௌகீர் ரஸா கான் “இந்து-முஸ்லிம்” ஒற்றுமை, பசுவதை முதலியவற்றை ஆதரித்து போராடப் போகிறாராம்!

நவம்பர் 11, 2013

தலைக்கு பத்வா போட்ட மதவெறி பிடித்த ட்தௌகீர் ரஸா கான் “இந்து-முஸ்லிம்” ஒற்றுமை, பசுவதை முதலியவற்றை ஆதரித்து போராடப் போகிறாராம்!

Acharya Pramod Krishan with Baba Ram dev

பத்வா மௌலானாவின் விவரங்கள்: தௌகீர் ராஸா கான், இதிஹாத்-இ-மில்லத் கவுன்சில் [ Ittehad-e- Millat Council] என்ற தீவிரகருத்துக்களைப் பரப்பி வரும் இயக்கத்தின் தலைவர். என்ற அடிப்படை முஸ்லிம் ஏற்கெனவே கலவரங்களைத் தூண்டி விட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டவர். புஸ்ஸின் தலைக்கு ரூ ஒரு கோடி என்று அறிவித்து பத்வா போட்டவர். அதாவது, தஸ்லிமா நஸ் ரீன் இஸ்லாமுக்கு எதிராக எழுதினார் என்ற காரணத்திற்காக, அயத்துல்லா கோமேனி மாதிரி, தண்டனை விதித்து, யாராவது அவரைக் கொன்று தலை வெட்டிக் கொண்டு வந்தால் பணம் கொடுக்கப்படும் என்று அர்த்தமாம். அதே மாதிரி, பிறகு தஸ்லிமா நஸ் ரீன் என்ற பங்களாதேச தலைக்கு ரூ 5 லட்சம் என்று அறிவித்தவர். இப்படி பத்வா போட்டு பிரபலமாகியதால், இவரை “பத்வா மௌலானா” என்றே அழைக்கப் படுகிறார்.

after-kejriwal-digvijaya-singh-praises-tauquir-raza-khan

அரவிந்த் கேசரிவால் தௌகீர்ராஸாகானை சந்தித்தது:  ஒன்பது நாட்களுக்கு முன்னர் 01-11-2013 அன்று அரவிந்த் கேசரிவால் என்கின்ற “ஆம் ஆத்மி கட்சி”த் தலைவர், இந்த கம்யூனல், அடிப்படைவாத, தீவிரவாத கொள்கைளைக் கடைப்பிடிக்கும் மௌலானாவை பிரெய்லியில் சந்தித்து தங்கள் கட்சிற்காக பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அப்பொழுது “கம்யுனிலிஸத்துடன் ஜோடி சேர்கிறார், ஓட்டுவங்கி அரசியல் நடத்த்ய்கிறார்ரென்றெல்லாம் காங்கிரஸ்காரர்கள் இவரைக் கடுமையாக சாடினார்கள்[1]. மீம் அப்சல் என்ற காங்கிரஸ் கட்சி ஊடக பேச்சாளர், அரவிந்த் கேசரிவாலின் அரசியல் ஆர்.எஸ்.எஸ்ஸை ஆதரிப்பதில் உள்ளது, அதனால் முஸ்லிம்களை கால்பந்து போல நினைக்கிறார்”, என்று எதிர்ப்புத் தெரிவித்தார்[2]. அரவிந்த் கேசரிவாலோ அதெல்லாம் எனக்குத் தெரியாது, என்று சப்பைக்கட்டியதோடு, ஏதோ பெரிய இஸ்லாமிய பண்டிதர் போல, முப்தியால் தான் பத்வா போட முடியும், மௌலானாவால் பத்வா போட முடியாது என்று விளக்கம் கொடுத்தார். வேடிக்கையென்னவென்றால், இதனை எந்த முப்தியோ, மௌலானாவோ தவறு அல்லது சரி என்று சொல்லவில்லை, இல்லை என்ன காபிராகிய நீர், எங்கள் மதவவிசயங்களைப் பற்றி வியாக்யானம் செய்கிறாயே, என்று கண்டிக்கவில்லை.

Digvijay and Tauqeer together 2013

காங்கிரஸ் ஊக்குவிக்கும் சாமியார்கள்: காங்கிரஸுக்கு நெருங்கிய சாமியாரான, ஆச்சார்யா பிரமோத் கிருஷண் என்பவர் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்[3]. அது மட்டுமல்லாது மோடிக்கு எதிராக பேசும் சாமி என்றும் குறிப்பிடத் தக்கது[4]. பல போலி சாமியார்கள் மோடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும் பேசி வருகிறார். பாபா ராம் தேவ் விசயத்தில், அவர்க்கு எதிராக செயல்பட்டு வருகிறார். பாலகிருஷ்ணனின் போலி பாஸ்போர்ட் வழக்கில் பங்கு கொண்டுள்ளார்[5]. இவர் பேசும் விதம், நடந்து கொள்ளும் போக்கு முதலியவற்றைப் பார்க்கும் போது, காங்கிரஸுக்கு சார்பாக, இந்து நலன்களுக்கு எதிராக செயல்படுவது நன்றாகத் தெரிகிறது. இதனால், இந்து சந்நியாசிகளின் ஒற்றுமை குலைகிறது. அதாவது, சந்நியாசிகள், மடாதிபதிகள் ஒற்றுமையாக இருக்கக் கூடாது, பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸும், காங்கிரஸ் ஆதரவு சந்நியாசிகளும் வேலை செய்கின்றனர் என்ரும் தெரிகிறது.

some-swami, Tahil Ali, Dig, Tauqir Raza, Acharya Pramod Krishan

மதவெறிக் கொண்டவர் “இந்து-முஸ்லிம்” பாடுபடப் போகிறாராம்: “கல்கி மஹோத்சவம்” என்ற நிகழ்சியில் கலந்து கொண்டபோது, 10-11-2013 அன்று தனக்கு வலது பக்கத்தில் தாரிக் அன்வர் [Union Minister of State for Agriculture Tariq Anwar] மற்றும் இடது பக்கத்தில் தௌகீர் ராஸா கான் உட்கார்ந்து கொண்டிருந்தனர். இவர்கள் எல்லோருமே ஒரே மேடையில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். நடுவில் திக்விஜய் நன்றக குனிந்து, தௌகீர் ராஸா கானின் பின்பக்கத்தில் ஸ்வாமியுடன் ஏதோ பேசியதும் வீடியோவில் தெர்கிறது[6]. அதாவது அந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கின்றனர் என்ரு காட்டிக் கொள்கின்றனர். திக்விஜய் சிங்கோ, தௌகீர் ராஸா கானைப் புகழ்ந்து, அவர் ஸ்வாமியுடன் சேர்ந்து கொண்டு “இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபடுகிறார். பசுக்களை பாதுகாக்க வேண்டும் என்று பேசியுள்ளார்[7], என்று பாராட்டி பேசினார்[8]. மக்கள் இதையெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும். அவரை மதவாதி போல பார்க்கக் கூடாது என்றெல்லாம் விளக்கினார்.

Beware of anti-Hindu hindus

கோசாலையைத் திறந்து வைத்து பசுவதையைப் பற்றி பேசினாராம்: தௌகீர் ராஸா கான் ஆயிரக்கணக்கில் பசுக்கள் கொலைசெய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படும் முறையை எதிர்க்கிறேன். இப்படியே பசுக்கள் கொல்லப்பட்டால், நாளைக்கு குழந்தைகள் குடிக்க பாலே இருக்காது, என்று ஒரு பசு காப்பகத்தைத் திறந்து வைக்கும் போது பேசினார்[9]. பிறகு தௌகீர் ராஸா கான், ஊடகக்காரர்களுடன் பேசும் போது, தான் மதவாதம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுவதாக தெரிவித்தார். பத்வா விசயத்தில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் மறுத்தார்[10].

TAUQEER REZA KHAN

காங்கிரசஸின் வஞ்சக திட்டம்: முன்னர் ராமஜன்ம பூமி விசயத்தில், காங்கிரஸே முந்தி கொண்டது. முலாயம் சிங் யாதவோ, கரசேகர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தி, இந்துக்களைக் கொன்று, முல்லாயம் சிங் யாதவ் ஆனார். இப்பொழுது, சோனியா இந்து சாமியார்களைப் பிரிக்க சட்ய்ஹி செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. பதவி, பணம், அதிகாரம் இருப்பதனால், சோனியா இவர்களை சுலபமாக வளைத்து விடுகிறார் என்று தெரிகிறது. ஒவ்வொரு இந்து எழுச்சியையும் அடக்க இவ்வாறான எதிர்மறையான செயல்களை செய்து வருவது தெரிகிறது. முன்னர் அஜாரே ஆர்.எஸ்.எஸ் தூண்டுதல் பேரில் தான், ஊழல் எதிர்ப்பி போராட்டம் நடத்துகிறார் என்பது போல செய்தி வந்தது. அவர் ஒதுங்கிக் கொண்டார். அரசியல்வாதிகளை எதிர்ப்பதானால், கட்சி தொடங்கி தேர்தலில் நில்லுங்கள் என்ரு கபில் சிபல் சவால் விட்டார். இவ்விதமாக காங்கிரஸ் ஊழல் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை அடக்கியது. அரவிந்த கேசரிவால் கட்சி தொடங்கி அரசியலில் இறங்கி விட்டார். இதனால், காங்கிரசூக்குத் தான் ஆதாயம்.

© வேதபிரகாஷ்

11-11-2013


. [1] Earlier on November 1, Arvind Kejriwal met Maulana Tauqeer Raza Khan in Bareilly, which sparked a political conspiracy as Congress claimed that the AAP leader is playing a communal card ahead of the Assembly election in Delhi. http://www.niticentral.com/?p=155911

[2] Congress spokesman Meem Afzal had alleged that Kejriwal “whose politics originated with the backing of the RSS was trying to make Muslims a football” for electoral mileage.

http://ibnlive.in.com/news/after-kejriwal-digvijaya-singh-praises-tauquir-raza-khan/433353-3-242.html

[3] The function was organised by Swami Pramod Krishnan, who is said to have good relations with the Congress. Krishnan also praised the cleric and said people like him were needed to promote communal harmony in the country

[5] Pramod Krishnan, who is a litigant in the fake passport case filed against Balkrishan, even feared that Shankar Dev may have been killed by them as their guru knew of the fake documents that were submitted by him at Bareilly passport office to procure the passport.

http://www.tribuneindia.com/2012/20120806/dun.htm#7

[7] Speaking at the inauguration of Kalki Mahotsava here last night, Digvijay praised Raza, who enjoys minister of state rank in SP government in Uttar Pradesh, and said that he along with Acharya Pramod Krishnan have started a mission of Hindu-Muslim unity in the country.

http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/after-arvind-kejriwal-digvijay-singh-praises-controversial-muslim-clerictauqeer-raza-khan/articleshow/25562343.cms

[8] Dig vijay Singh on Sunday shared the stage with controversial Muslim cleric Tauqeer Raza Khan praised him for working for ‘Hindu-Muslim unity’. his party attacked AAP leader Arvind Kejriwal following his meeting with the religious leader.

http://zeenews.india.com/news/nation/digvijay-praises-tauqeer-raza-says-he-started-mission-of-hindu-muslim-unity_889072.html

[9] Inaugurating a cow shelter, Raza said the manner in which thousands of cattles were being slaughtered and exported to foreign countries was a matter of great concern and if it was not stopped a day would come when the children in the country would not get milk to drink.He said that a joint campaign was needed to save cattle.

http://ibnlive.in.com/news/after-kejriwal-digvijaya-singh-praises-tauquir-raza-khan/433353-3-242.html

[10] Tauqeer Razadenied having any hand in the violence. He has also denied that he had issued any “fatwa” against Taslima Nasreen.

http://www.deccanherald.com/content/368211/digvijay-shares-stage-039controversial039-cleric.html

இஸ்லாமில் இசையா – ஐயோ, ஹராம், ஹராம் என்று பத்வா போட்ட முப்தி, ஜாலியாக இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாராம்!

ஜூலை 28, 2013

இஸ்லாமில் இசையா – ஐயோ, ஹராம், ஹராம் என்று பத்வா போட்ட முப்தி, ஜாலியாக இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாராம்!

Kashmir state Mufti enjoying music

இசையை ரசித்துக் கொண்டிருந்த முப்தி  (ஜூலை  2013): காஷ்மீர் மாநிலத்தில் ஒரு இளம்பெண் பெண்களே கொண்ட “பேண்ட்-குரூப்” வைத்துக் கொண்டு இசைக்குழு நடத்தி வந்தாளாம். இஸ்லாமில் இசையா – ஐயோ, ஹராம், ஹராம் என்று பத்வா போட்டாராம் முப்தி. ஆனால், அதே முப்தி, இசையை ரசித்துக் கொண்டிருந்தாராம்! ரம்யாமான தல் ஏரியில், ஒரு பெரிய படகில், அக்பர் ஜயபூரி [Urdu poet Akbar Jaipuri] என்ற உருது கவிஞர் நினைவாக, ஆல் இன்டியா ரேடியோ, ஒரு நிகழ்சி ஏற்பாடு செய்திருந்தது. காஷ்மீர் மாநிலத்தின் பிரபல கஜல் பாடகர் கைஸர் நிஜாமி [Qaiser Nizami ] தன்னுடைய உருது கஜல்களுடன் னைவரையும் மகிழ்வித்தார். அன்றைய மயக்கும் மாலைப் பொழுதில் “ரஞ்சிஸ் ஹி சஹி, தில் ஹி துகானே கேலியே” [Ranjish hi sahi, dil hi dukhaane ke liye aa], என்று மெஹ்தி ஹஸன் பிரபலமான கஜல் பாட்டுப் பாட, “சாப் திலக்” என்ற பஞ்சாபி கஜலோடு[Chaap Tilak (Punjabi ghazal)] நிகழ்சித் தொடங்கியது. மாநிலத்தின் பெரிய முப்தி, ஆஜம் பஷீர்-உத்-தீமன் அஹமது [the grand mufti of J&K, Mufti Azam Bashir-ud-din Ahmad], மற்றவர்களுடன் அழகான நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு, சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்[1].

Kashmir state Mufti enjoying music with instruments

முப்தி பத்வாக்கள் போட்டுக் கொண்டே இருந்தார்  (2012): ஜனவரி 2012ல் தன் தலைமையில் இயங்கி வரும் ஷரீயா நீதிமன்றத்தில் மூன்று கிருத்துவ மிஷனரிகள் – எம். சி. கன்னா, ஜிம் போர்ஸ்ட் மற்றும் கயூர் மெஸ்ஸா என்பவர்கள் வெளியேற வேண்டும் என்று பதவா போட்டு விரட்டினார்[2].

Kashmir state Mufti Azam Bashir-ud-din Ahmad

கிருத்துவ மிஷனரிகள் நடத்தும் பள்ளிகளுக்கு அரசு உதவக்கூடாது என்றும்ம் பத்வா போட்டார். இதற்கு பிரிவினைவாத தலைவர் சையது அலி ஜிலானி ஆதரவு தெரிவித்தார்[3].

 

செப்ப்ட்டம்பர் 2012ல், இஸ்லாமுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டது. உடனே, அமெரிக்கர்கள் அனைவரும் காச்மீரிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஆணையிட்டார். இதனால், தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்கர்களை காஷ்மீருக்குச் செல்ல வேண்டாம் என்று பணித்தது[4].

 

Kashmir girls band group.performing on the stage

பாண்ட் இசைக் குழு ஆரம்பித்த காஷ்மீர இளம் பெண்கள்: காஷ்மீரில் முதல் முறையாக 3 கல்லூரி மாணவிகள் – மாணவி பாராக தீபா [Farah Deeba] டிரம்மராகவும், மாணவி அனீகா காலித் [Aneeka Khalid] கிடாரிஸ்ட்டாகவும், மாணவி நோமா நசிர் [Noma Nazir] பாடகியாகவும் சேர்ந்து இசைக்குழு தொடங்கினார்கள்[5]. இவர்களின் முதலாவது இசை நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் 2012ல் ஸ்ரீநகரில் நடந்தது. இதற்கு இளைஞர்களிடையே வரவேற்பு ஏற்பட்டது. இசைக்குழுவுக்கு ”பிரகாஷ்” (முதல் ஒளி) என்று பெயரிடப்பட்டனர். கடந்த டிசம்பரில் அவர்கள் முதல் போட்டியில் கலந்து கொண்டு, அந்த போட்டியிலேயே முதல் பரிசும் பெற்றார்கள்[6]. இதனால், தேவையில்லாமல், அவர்களுக்கு விளம்பரத்தை / பிரபலத்தை ஏற்படுத்தினார்கள். இதனால் பிரிவினைவாத, அடிப்படைவாத, தீவிரவாத கும்பல்கள் உஷாரானாயினர். இது அவர்களது “இஸ்லாம்-மயமாக்கல்” என்ற கொள்கைக்கு விரோதமானது என்றறிந்தனர். அதனால், தங்களது வேலைகளை முடிக்கி விட்டனர்.

Kashmir girls band group.2

இசை இஸ்லாமிற்கு எதிரானது  –   எதிர்ப்பில் இணைதள தீவிவாதமும் இணைந்தது: முஸ்லிம் பெண்கள் இப்படி மேடையேறி பாடுவது இஸ்லாம் மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கூறி அவர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் இந்த குழுவை விமர்சித்து கருத்துக்கள் பரவின. இ.மெயில்கள் மூலமும் 3 மாணவிகளுக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்தன. அந்நிலையில், முஸ்லிம் மத குரு முப்தி பஷீருதீன் அகமது பிறப்பித்த பத்வா[7] உத்தரவில் இஸ்லாம் விரோத செயலில் ஈடுபட்டு வரும் மாணவிகள் தங்கள் இசைக்குழுவை உடனடியாக கலைக்க வேண்டும் என்று ஆணையிட்டார்[8]. இதற்கிடையே காஷ்மீர் பெண்கள் இசை நிகழ்ச்சி நடத்த முப்தி சாகிப் என்ற அமைப்பு தடை விதித்து `பட்வா’ உத்தரவு பிறப்பித்தது. துகாடாரான்-இ-மில்லத் [Dukhataarn-e-Millat] என்ற அடிப்படைவாத மகளிர் அமைப்பும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால், பெண்களின் பெற்றோர் மற்ரும் குடும்பத்த்னர் பெருத்த தொல்லைகளுக்கு ஆளாயினர். தமது மகள்களை சமூகத்திலிருந்து மறைக்க வேண்டியதாயிற்று[9]. இதை தொடர்ந்து இசைக்குழுவை மாணவிகள் கலைத்துவிட்டனர்[10]. இதைத் தொடர்ந்து, இசைக்குழுவை கலைக்க 3 மாணவிகளும் நேற்று முடிவு செய்ததாக பெற்றோர்கள் அறிவித்தனர்.

Pragaash-internet support - but failed

பெண்கள் அமைப்பு என்ற பெயரில் பெண்களை வைத்து மிரட்டியது: துகாடாரான்-இ-மில்லத் [Dukhataarn-e-Millat] என்ற அடிப்படைவாத மகளிர் அமைப்பு 1982ல் சாரா அன்ட்ரபி என்ற பெண்ணால் ஆரம்பிக்கப்பட்டது. “அமைதியான முறையில்” இஸ்லாம் கொள்கைகளை பரப்புவோம் என்று ஆரம்பித்த இந்த குழு, சினிமா தியேட்டர்கள், வீடியோ லைப்ரரிகள், மதுக்கடைகள் முதலியவற்றை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தினர். ஜனவரி 1990ல் இதனால் கலவரங்கள் ஏற்பட்டன. ஆயுதங்களும் உபயோகப்படுத்தப் பட்டன. ஜீன்ஸ் அணிந்த பெண்கள் மீது அமிலத்தை ஊற்றி பீதியைக் கிளம்பி வந்தது. தடை செய்யப் பட்ட மற்ற பிரிவினைவாத, அடிப்படைவாத, தீவிரவாத கோஷ்டிகளுடன், இதுவும் சேர்ந்துள்ளது[11]. இவரது கணவர் அன்ட்ரபி, ஜைமத்துல் முஜாஹித்தீன் [Jamiatul Mujahideen] என்ற தீவிரவாத இயக்கத்தின் தலைவர். இவ்வமைப்பு எதிர்ப்புத் தெரிவித்தவுடன், பண்களின் பெற்றோர் பயந்து விட்டனர்.

CM just assured that is all

ஒப்புக்கு பேட்டி கொடுத்து பிரிவினைவாத,  அடிப்படைவாத,  தீவிரவாத கும்பல்களுடன் ஒத்துப்போன இளைமையான முதலமைச்சர்: இது பற்றி காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறுகையில்,”மாணவிகளின் இசைக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால், தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்துவதா வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டியது அவர்கள்தான்” என்றார்[12]. இதற்கு முதல்-மந்திரி உமர் அப்துல் கண்டனம் தெரிவித்தார். அதாவது, ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை என்கிறார். இதுதானே, காஷ்மீரத்தில் நடந்து வருகின்றது. மேலும் இ.மெயிலில் மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்யவும். போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து இ.மெயிலில் மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்[13]. கைதான ஒருவர் பெயர் தாரிக்கான். இவர் தெற்கு காஷ்மீரில் உள்ள பிஜ் பெகரா என்ற நகரைச் சேரந்தவர். மற்றொருவரான ரமீஷ் ஷா மத்திய காஷ்மீரில் கந்தர்பால் நகரில் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவர் ஸ்ரீநகர் பத்மலோ என்ற இடத்தில் இருந்து இ.மெயில் அனுப்பியது தெரியவந்தது. நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் இர்ஷாத் அகமத் சாரா பாதமலோ எஸ்.டி. காலனியில் பிடிபட்டார். இதே போல் இன்டர்நெட் மூலம் 900 மிரட்டல்கள் 26 இடங்களில் இருந்து வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களையும் போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவர்கள் மீது மிரட்டல், கிரிமினல் குற்றம் மற்றும் தகவல் தொடர்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[14].

Fatwa against the girls by the Mufti

முஸ்லிம்கள் இத்தகைய முரண்பாடான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்: காஷ்மீரம் இந்திய கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. மேலே, இஸ்லாம் என்ற போர்வைப் போற்றப்பட்டிருந்தாலும், உள்ளே-அஸ்திவாரத்தில் இவைதான் இருக்கின்றன. இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிரிகிஸ்தான் போன்ற எல்லா “ஸ்தானங்களுக்கும்” பொறுந்தும். இங்கு இசை, நடனம், நாடகம், கவிதை முதலியவையும் பாரம்பரியமானவைதாம். மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளுக்குட் பட்டிருக்கும் இப்பிரதேசங்களில் மக்கள் இவையில்லாமல் வாழ்ந்ததில்லை. அந்நிலையில், இப்பொழுது பிரிவினைவாத, அடிப்படைவாத, தீவிரவாத கும்பல்கள் இவ்வாறு “இஸ்லாம்” பெயரில் முரண்பாடுகளை திணித்து வருகின்றது. நிச்சயமாக மேனாட்டு சீரழிவுகளை இந்தியா ஏற்கலாகாது. அதே நேரத்தில், நவீனமாக இருக்க வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தையும் (உதாரணத்திற்கு – விமானம், மின்னணு சாதனங்கள், கட்டுமான வசதிகள், வாகனங்கள், ஊடகங்கள்) ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

வேதபிரகாஷ்


[2] In January last year, the Sharia court headed by him ordered expulsion of three Christian missionaries from the Valley on charges of proselytism. He issued a fatwa directing the three priests – M. C. Khanna, Jim Borst and Gayoor Messah – to leave the Valley immediately.

http://indiatoday.intoday.in/story/grand-mufti-of-kashmir-ban-on-girls-rock-band-in-kashmir-mufti-bashir-ud-din/1/296564.html

[3] Mufti’s Sharia court also decreed that the state government must involve it in the management of missionary schools. The matter died down after separatist leader Syed Ali Shah Geelani supported the missionaries and their schools.

http://indiatoday.intoday.in/story/grand-mufti-of-kashmir-ban-on-girls-rock-band-in-kashmir-mufti-bashir-ud-din/1/296564.html

[4] In September 2012, a controversial anti- Islam film surfaced in America and Europe and Mufti got a chance to hit out at the US. He asked Americans to leave Kashmir and urged people to register their protest against the blasphemous film and ” attack US citizens if they are seen anywhere in the Valley”. This led an alarmed US Embassy in New Delhi to ask its citizens to stay away from Kashmir. Geelani again stepped in and rejected Mufti’s call.

http://indiatoday.intoday.in/story/grand-mufti-of-kashmir-ban-on-girls-rock-band-in-kashmir-mufti-bashir-ud-din/1/296564.html

[9] Left to fend for themselves, the families of Noma Nazir, Farah Deeba and Aneeka Khalid in the vulnerable neighbourhoods of Chhanpora, Bemina and Rajbagh have forced the teenagers to snap their contact with all, especially the media. “We have seized their cellphones and laptops,” two of their relatives revealed to The Hindu. “Their band has been shut.”

http://www.thehindu.com/news/national/other-states/rock-band-girls-go-into-hiding-after-social-boycott-threat/article4378341.ece

[11] The Dukhataarn-e-Millat does not have any history of using firearms. Founded in 1982 by Syeda Asiya Andrabi, the outfit claims to orchestrate ‘peaceful campaigns’ against anything it perceives to be contrary to the tenets, teachings and traditions of Islam. It played a key role in a campaign to close down cinema, video libraries and wine-shops, which culminated in the eruption of an armed insurgency in January 1990. Since then, it has been among the outlawed radical groups in the Valley. In 1992-93, it grabbed the headlines, enforcing the Islamic dress code allegedly by sprinkling acid on young girls wearing jeans and refusing to clad the ‘Abbaya’. Ms. Andrabi has repeatedly denied having used acid. The spray, she insisted, was “a harmless ink.” Nonetheless, the Dukhataarn-e-Millat carries the image of a dreaded outfit for many — particularly those associated with the media, art and culture — in Srinagar. Ms. Andrabi is the wife of the jailed founder of the Jamiatul Mujahideen, Ashiq Hussain Faktoo, who now heads a different political outfit called the Muslim League.

[13] மாலை மலர், காஷ்மீரில்இசைக்குழுதொடங்கியமாணவிகளுக்குமிரட்டல்விடுத்த 3 பேர்கைது, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, பெப்ரவரி 07, 12:34 PM IST.

முஸ்லீம்கள் மின்சாரத்தை திருடலாமா- அதற்கு ஒரு பத்வா போடலாமா – கேட்பது உமர் அப்துல்லா!

திசெம்பர் 30, 2011

முஸ்லீம்கள் மின்சாரத்தை திருடலாமா- அதற்கு ஒரு பத்வா போடலாமா – கேட்பது உமர் அப்துல்லா!

இஸ்லாத்தில் பத்வாக்கள்: இஸ்லாத்தில் பலவிதமான விஷயங்களுக்கு பத்வா போடுவது வழக்கம். “நாயை வைத்துக் கொள்ளலாம, கூடாதா, புகைப்படம் எடுக்கலாமா, கூடாதா, மனைவியை மருத்துவர் தொட்டு சிகிச்சை செய்யலாமா, கூடாதா”, ……….என்று இப்படி பல கேல்விகள் எழும். அதற்குஇ முல்லாக்கள், இமாம்கள் மற்ற குருமார்கள் விளக்கம் கொடுத்து பத்வா போடுவார்கள். பிறகு, முஸ்லீம்கள் அதன்படித்தான் நடக்க வேண்டும். சில நேரங்களில், பத்வா கொடுத்தவரை விட, பெரிய-அதிகாரமுள்ளவரிடம் சென்று வேறு விதமான பத்வாக்களை வாங்கி வருவதும் உண்டு.

மேலே காட்டப் பட்டுள்ள எலக்ட்ரானிக் கருவி ரூ.2,000/-ற்கு விற்கப்படுகிறது. இதனால், மின்சார உபயோகத்தை குறைத்துக் காட்டும்.

மின்சாரம் திருட்டிற்கு பத்வா போடலாமா? மீர்வாயிஸ் உமர் பரூக், இந்திய எதிருத்துவ ஹுரியம் மாநாடு என்ற இயக்கத்தின் தலைவர். தேவையில்லாமல், இந்தியா இவருக்கு அதிக சலுகைகள் கொடுத்து வருகிறது. ஆனால், அந்த ஆளோ அதைப் பற்றி கவலைப் படாமல், தான் ஏதோ ஒரு அந்நிய நாட்டில் இருப்பது போல பேசுவது தான் வழக்கம். அதற்கு அருந்ததி ராய் போன்ற கொள்கையற்ற பேர்வழிகளும் அதிகமாக கொஞ்சிக் குலவி ஆதரித்து வருகின்றனர் (இதற்கு ஆதாரமாக புகைப்படங்களுடன் கூடிய எனது இதர பதிவுகளை பார்க்கவும்). இப்பொழுது, ஜம்மு-காஷ்மீர் முதல் மந்திரி, பஉமர் அப்துல்லா கேட்டுள்ளார்[1], “ஏனய்யா, முஸ்லீம்கள் மின்சாரத்தைத் திருடுகிறார்களே. இப்படி செய்தால் எப்படி நமது மாநிலம் உருப்படும். அடுத்த வெள்ளிக் கிழமை தொழுகைக்குப் பிறகு, மின்சாரம் திருடக் கூடாது என்று ஒரு பத்வாவை போடுவீரா?”, என்று கேட்டுள்ளார்.

இப்படி ஒரு கருவியை, மின்சாரகம்பத்திலியே பொறுத்தி மின்சாரத்தைத் திருடுகிறார்கள். அந்த கருவிக்கு குண்டி என்று பெயர். ஒருவேளை, கொக்கி / கம்பி போட்டுத் திருடுவது என்பது தான், இப்படி நவீனமாக செய்கிறார்கள் போலும்!

மின்சாரத்தை யார், ஏன், எதற்குத் திருடிகிறார்கள்?  மாநிலத்தில் மின்சார நிலைமைக் குறித்து உரிய அரசாங்கப் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த போது, அதிகமளவில் மின்சாரத்தை பிரிவினைவாதிகள் முதலியோர் மற்றும் அரசியல்வாதிகள் திருடுவதாகவும், அதனை கேட்க முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளதாகவும் அறிவித்தனர்[2]. கேட்டால் “முஸ்லீம்களின் எதிரிகள்” என்றும் அறிவிப்பார்கள் என்று பயப்படுகின்றனர். “மக்கள் ஒத்துழைக்காவிட்டால், மாநில முன்னேற்றத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. ரூ 2,000 கோடி அளவிற்கு மின்சாரம் திருடப் படுகிறது. இதனால், மாநிலத்திற்கு பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது”, என்று உமர் அப்துல்லா கூறுகிறார்[3]. “குண்டி” என்ற உபகரணத்தை உபயோகித்து வெளிப்படைகயாக மின்சாரத்தைத் திருடுகிறார்களாம்[4]. காஷ்மீரத்தில் இதெல்லாம் சகஜமான விஷயமாம்[5]. மின்சார வாரியம் எத்தனை மீட்டர்கள் வைத்தாலும்[6], அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், குண்டி மூலம் மின்சாரத்தை இழுத்து விடுகிறார்கள். இதனால், புதிய யுக்திகளை கையாள விரும்புகிறது[7]. 2003லிருந்து, எல்லோருடைய இல்லத்திற்கும் மீட்டர் வைக்க ஆரம்பித்தது[8]. அதாவது, அதற்கு முன்னர், இலவசமாகவே இணைப்புக் கொடுத்தார்கள். அதாவது, அவர்களாகவே ஏதாவது கட்டினாகல், வாங்கிக் கொள்வார்கள், இல்லையென்றால், “காந்தி கணக்கில்” எழுதி விடுவார்கள் போலும்.

மீட்டரின் இணைப்பை எடுத்து விடிகிறார்களாம், இல்லை ஏதோ பத்து-பதினைந்து நாட்களுக்கு கொடுத்துக் கொள்கிறார்களாம்!

இந்திய விரோதிகளை ஏன் ஊக்குவிக்கிறார்கள்? ரூ 2,000 கோடி மின்சாரத்திருட்டு என்றால், வெறும் ஒரு கோடி அபராதத்தை[9] வசூலித்துள்ளதாம்! குஞ்சு மைனர் ரூ. 5,000/- அட்வான்ஸ் கொடுத்து ரேப் செய்த விவேக் ஜோக் போல உள்ளது. அப்படி 2,000 கோடி அளவிற்கு மின்சாரம் திருடப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு உபயோகப் படுத்தப் படுகின்றதா என்றால், அதுவும் இல்லை. அந்த மின்சாரம் இந்திய விரோதிகள் – பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் தாம் தீவிரவாத-பயங்கரவாத செயல்களுக்கு உபயோகப் படுத்துகின்றனர். முஸ்லீம்கள், முஸ்லீம்களிடமிருந்தே திருடலாமா? அல்லது, இதில் கூட வேறு ஏதாவது, விவகாரம் உள்ளாதா? டிஜிட்டல் மீட்டர்களையே, செயலிழக்கச் செய்து, குறைவாகக் காட்ட, உபகரணங்களை தயாரித்து ரூ.2,000/-ரற்கு விற்கும் கூட்டத்தை போலீஸாறர் கைது செய்துள்ளனர்[10]. இவர்களும் முஸ்லீம்கள் தாம். பிறகு என்ன நியாயம், தர்மம் எல்லாம் பேசுகிறர்கள் என்று தெரியவில்லை. அதாவது, மதத்தின் மீது குறை கூறவில்லை, ஆனால், அதே நேரத்தில் மதத்தை வைத்துக் கொண்டு தான், இக்காரியங்களை செய்து வருகிறர்கள் என்று கவனிக்க வேண்டியுள்ளது. இல்லையென்றால், ஒரு முஸ்லீம் முதலமைச்சர், மின்சாரத்திருட்டைத் தடுக்க பத்வா போடவேண்டும் என்று ஏன் சொல்லியிருக்கிறார்?


[1] Talking to Greater Kashmir Omar said, “Mirwaiz has held government responsible for Valley reeling under darkness. We know our responsibilities and limitations. I hope he (Mirwaiz) in his next Friday sermon issues a Fatwa against those who indulge in power theft. If he is serious then he should see both the sides and act accordingly.”

http://www.greaterkashmir.com/news/2011/Dec/30/issue-fatwa-against-power-theft-omar-tells-mirwaiz-71.asp

[3] Till people don’t stop indulging in power thefts government won’t be able to help them,” he said. “State is losing Rs 2000 crores to power theft. If there were no power theft, Government would have generated power worth Rs 1500 crores.”

[8] The metering drive was started in 2003 during the government headed by Mufti Mohammad Sayeed, but it was limited to cities and towns.

http://www.dnaindia.com/india/report_j-and-k-govt-to-install-7-lakh-electricity-meters_1502977

[10] During investigation a gang of three persons Adil Nazir Wani of Batamaloo, Showkat Ahmad Akhoon and Parvez Ahmad Dar of Hazratbal, who were expert in tampering the digital electricity meters, were nabbed. The trio confessed during questioning that they have tampered many digital electric meters in different parts of City for Rs 2000 by consumers to get low cost electricity bills.

www.risingkashmir.com/news/crime-branch-busts…