Posted tagged ‘பட்டகல்’

மொஹம்மது ரியாஸா, மொஹம்மது ஸ்வாலியா, யார் ஐந்து மாணவிகளின் மடிகளில் படுத்தவன் – பிரச்சினை இதுவா அல்லது பெண்மையா, பெண்மையை கீழ்த்தனமாக்கும் காரியங்களா? (2)

மார்ச் 1, 2015

மொஹம்மது ரியாஸா, மொஹம்மது ஸ்வாலியா, யார் ஐந்து மாணவிகளின் மடிகளில் படுத்தவன் – பிரச்சினை இதுவா அல்லது பெண்மையா, பெண்மையை கீழ்த்தனமாக்கும் காரியங்களா? (2)

Mohammed Yesseer arrested by Udupi police  uploading her sex play with him under duress. Jan.2014

Mohammed Yesseer arrested by Udupi police uploading her sex play with him under duress. Jan.2014

தார்மீகக் கட்டுப்பாடு, தார்மீக போலீஸ் கட்டுப்பாடு தேவையா?: தார்மீக காவல் கட்டுப்பாடு (Moral policing), போலீஸ் வேலையை தாங்கள் எடுத்துக் கொள்ளுதல், எச்சரிக்கை தாக்குதல் [“vigilante attack”] முதலிய வேலைகளில் ஈடுபடுகின்றனர், என்று ஊடகத்தினர் குறைகூறி வருகின்றனர்[1]. தமாஷான விசயத்தில் மாணவன் அடிக்கப்பட்டான், என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டுள்ளன[2]. இங்கு “தமாஷான” விசயங்கள் என்று எதையெல்லாம் சொல்வார்கள் என்று தெரியவில்லை.  கர்நாடகாவில், “ஶ்ரீராம் சேனா”, பப்புகளில் இளம் பெண்கள், பள்ளி-கல்லூரி மாணவிகள் குடித்து, ஆட்டம் போட்டபோது, அவர்களை அடித்துத் துரத்தியதை, பெரிய பிரச்சினையாக்கி, அத்தகைய சட்டத்தை தங்கள் கைகளுக்குள் எடுத்துக் கொள்ளும் காரியத்தை “தார்மீக காவல் கட்டுப்பாடு”, “மாரல் போலிஸிங்” (Moral policing) என்றெல்லாம் விமர்சித்துக் கண்டித்தன. இந்து இயக்கங்கள் தாம் அவற்றில் ஈடுபட்டு வருகின்றன என்பது போல சித்தரிக்கப்பட்டு, அத்தகைய போக்கைத் தொடர்ந்து, மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றன மற்றும் எதிர்த்து வருகின்றன.

The Melangadi Mohiuddin Masjid in Ullal  was against the stay order issued by the Karnataka Wakf Board

The Melangadi Mohiuddin Masjid in Ullal was against the stay order issued by the Karnataka Wakf Board

மொஹம்மது ரியாஸ் அல்லது மொஹம்மது ஸ்வாலி அல்லது அப்துர் ரஹ்மான் அல்லது வேறேராவது இருந்தாலும், அவர் தனது மகள், சகோதரி அல்லது உறவினர் பெண்ணை இவ்வாறு ஒரு பையனோடு படுக்க வைத்து, போட்டோ எடுக்க அனுமதிப்பார்களா: பள்ளியில்-கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இவ்வாறு “ஐந்து மாணவிகளின் மடிகளில் ஒரு மாணவன்”, மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு போட்டோ எடுத்துக் கொள்ளலாம், என்றதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையை எதிர்ப்பவர்கள், தங்களது மகள், சகோதரி அல்லது உறவினர் பெண்ணை இவ்வாறு செய்ய அனுமதிப்பார்களா? மொஹம்மது ரியாஸ் அல்லது மொஹம்மது ஸ்வாலி அல்லது அப்துர் ரஹ்மான் அல்லது வேறேராவது இருந்தாலும், அவர் தனது மகள், சகோதரி அல்லது உறவினர் பெண்ணை இவ்வாறு ஒரு பையனோடு படுக்க வைத்து, போட்டோ எடுக்க அனுமதிப்பார்களா. “ஆமாம்” என்றால், ஆஹா, இந்தியர்கள், குறிப்பாக “இந்திய முஸ்லிம்கள்” முன்னேறி விட்டார்கள் என்று விட்டுவிடலாம், “இல்லை” என்றால், அவர்களது போலித்தனத்தைக் காட்டுகிறது. அதாவது, ஒருபக்கம் “மாரல் போலிஸிங்” என்று எதிர்த்துக் கொண்டு, இன்னொருப் பக்கம், முஸ்லிம் பையன்களை, இந்து பெண்களுடன் நட்பு ஏற்படுத்த ஊக்குவிக்கின்றனர்; உறவாட வைக்கின்றனர்; காதல் உண்டாக்கப் பாடுபடுகின்றனர் என்றாகிறது. உண்மையில், இது பெண்களை, கேவலப்படுத்தும், பெண்மையை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது. பெண்மை அவமதிக்கப் படுகிறது என்ற எண்ணமே ஏன் யாருக்கும் இவ்விசயத்தில் எழவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. அதே போல, எந்த பெண்ணும், பெண்ணிய வீராங்கனையும், தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து எவரும், இவ்விசயத்தில் தங்களது கருத்தை வெளியிட்டதாகத் தெரியவில்லை, ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை. மேலும், படுத்தவன் ஒரு “முஸ்லிம் பையன்“ என்பதால், பிரச்சினையைத் திசைத்திருப்பப் பார்க்கின்றன.

கோவில்கள் மசூதிகள் ஆக்கப்பட்டது

கோவில்கள் மசூதிகள் ஆக்கப்பட்டது

இந்து மாணவிகளுடன் போஸ் கொடுத்த முஸ்லிம் பையன் அடித்து நொறுக்கப்பட்டான்[3]: இந்திய ஊடகங்களின் ஒருதலைப்பட்சமான அல்லது பாரபட்சமான போக்கு, பாகிஸ்தான் ஊடகங்களை வாசித்தப் பிறகுதான் தெரிகிறது. இதே செய்தியை, “பாகிஸ்தான் டுடே” இந்து மாணவிகளுடன் போஸ் கொடுத்த முஸ்லிம் பையன் அடித்து நொறுக்கப்பட்டான், என்று செய்தி வெளியிட்டுள்ளது[4]. இந்தியாவில் இப்படி செய்து வெளியிடக்கூடாது என்று “செக்யூலரிஸ” கட்டுப்பாடு இருக்கலாம். அவனது மதம் என்ன என்று கேட்கப்பட்டு உதைக்கப்பட்டான் மற்றும் நண்களும் அடிக்கப்பட்டனர் என்று “தி இந்து” தனக்கே உரிய பாணியில் கூறுகிறது[5], என்று மேலே எடுத்துக் காட்டப்பட்டது.   அப்படியென்றால், “பாகிஸ்தான் டுடே”க்குத் தெரிந்திருப்பது, “தி இந்து”வுக்குத் தெரியவில்லையா, அல்லது உண்மையினை உண்மையாக எடுத்துரைக்க தைரியம் இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. இதே, சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றால், விசயத்தை அப்படியே அமுக்கி விடுவார்களா? பிரச்சினையை, பிரச்சினையாக அணுகாமல், இத்தகைய “செக்யூலரிஸ-கம்யூனலிஸ” நிறம் பூசி செய்திகளை அரைகுறையாக வெளியிடுவதன் மூலம் தான் பொது மக்களிடத்தில் நம்பிக்கைக் குறைகிறது, சந்தேகம் எழுகின்றது, மனங்களில் கலவரம் ஏற்படுகின்றது. உண்மையில் மதங்களிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்றால், பொதுப்பிரச்சினைகளை, பொதுப்பிரச்சினைகளாகத்தான் பார்க்கப்பட வேண்டும்.

Coastal Karnataka love jihad

Coastal Karnataka love jihad

மேற்குக்கடற்கரைக் கரைப் பகுதிகள் அந்நிய சக்திகளின் கைகளில் போகும் அபாயம்: மேற்குக்கடற்கரைக் கரைப் பகுதிகளில் தீவிரவாதம், கடத்தல், போதை மருந்து விநியோகம், விபச்சாரம், அந்நிய சுற்றுலா இவற்றுடன் சம்பந்தப் பட்டுள்ள தொழில்கள், வியாபாரங்கள் என்று பல விசயங்கள் அடங்கியுள்ளன. மும்பை தாக்குதலுக்குப் பிறகு, இப்பகுதிகள், மிகவும் அபாய வளையத்தில் வந்துள்ளன. கோவாவில், அந்நிய சுற்றுலா பயணிகளுக்கு, சில கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளமையால், அவர்கள், கீழே கோகர்ணம், முருடீஸ்வர், பட்டகல், மங்களூரு போன்ற பகுதிகளுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். பட்டகல் என்பது, ஏற்கெனவே அனைத்துலக தீவிரவாதம், போதை மருந்து மற்றும் கடத்தல் வளையத்தில் உள்ளது. பட்டகல் சகோதர்களின் ஜிஹாதி தீவிரவாதச் செயல்கள் அனைவரும் அறிந்த விசயங்களாக இருக்கின்றன. இக்கடற்கரைப் பகுதிகளில் முஸ்லிம்கள் தங்களது ஆதிக்கத்தைப் பெருக்கி வருகின்றனர். பட்டகல் மற்றும் அதற்கு மேல் மற்றும் கீழ் பகுதிகளில் அவர்களது ஆதிக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. போதாகுறைக்கு, வளைகுடா நாடுகளிலிருந்து, இஸ்லாமிய மதகுருக்கள், காஜிக்கள் முதலியோரது போக்குவரத்தும் அதிகமாகியுள்ளது. புதியதாக மசூதிகளும் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றின் எண்ணிகையும் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. இது கேரளாவையே மிஞ்சிவிடும் போலுள்ளது. அதே நேரத்தில், இக்கடற்கரைகளில் இந்துக்களின் புண்ணிய க்ஷேத்திரங்கள் அதிகமாக உள்ளன மற்றும் அவர்கள் ஆண்டு முழுவதும் வந்து போகிறார்கள் என்பதும் தெரிந்த விசயம் தான். எனவே, அவர்களது தீர்த்த-யாத்திரை போக்குவரத்துகளில் ஏற்படும் எந்த தொந்தரவும், இடைஞ்சலும், பாதிப்பும் நாளடைவில் பெரிய விரிசலை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. இப்பொழுதே, இந்து தீர்த்த யாத்திரிகளுக்கு, அந்நிய சுற்றுலாப் பயணிகளால், கோகர்ணம் போன்ற பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிகமுக்கியமான கோகர்ண கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் அவர்களது ஆக்கிரமிப்பில் சேருவது புலப்படுகிறது.

© வேதபிரகாஷ்

28-02-2015

[1] http://indianexpress.com/article/india/india-others/whatsapp-picture-raises-hackles-of-moral-police-in-mangalore/

[2] http://www.deccanherald.com/content/461514/mluru-student-assaulted-over-photo.html

[3] http://www.pakistantoday.com.pk/2015/02/27/foreign/muslim-boy-beaten-black-and-blue-for-posing-with-hindu-girls/

[4] Pakistan Today, Muslim boy beaten black and blue for posing with Hindu girls, 28-02-2015.

[5] When contacted by The Hindu , Riaz said his friend Ritesh, who was in the photo, had come to his (Riyaz’s) house in Kana with another friend, Vinith, around 11 a.m. on Sunday to discuss the photo going viral. He said that suddenly, four persons came in a car, pushed the three of them inside and drove to Kaikamba, near Bajpe. Riaz said that at a ground there, five more persons joined the assailants and mercilessly beat him after asking about his religion. They also beat up his two classmates.

ஐயோ–வெடிக்கும், அதிரும், அலறும்பாத் – ஐதராபாத்!

பிப்ரவரி 22, 2013

ஐயோவெடிக்கும், அதிரும், அலறும்பாத்ஐதராபாத்!

நவீனகாலத்தில் ஜிஹாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்: ஐதராபாத்தில் இந்துக்களைக் கேவலமாகப் பேசிய ஒவைஸியின் சகோதரர் கைதாகிய விஷயம் ஆறுவதற்குள்[1], இரண்டு குண்டுகள் வெடித்து 16 பேர்களை பலிகொண்டதுடன், 100ற்கும் மேற்பட்டவர்களை  காயமடையச் செய்துள்ளது. வழக்கம் போல அதே மாதிரியான, சைக்கிள்-டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், கோவிலைக் குறிபார்த்தது, தியேட்டர்களில் வெடித்துள்ளன.  இந்திய முஜாஹித்தீன் கைவரிசை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிரிகாரிகள் கூறுகிறார்கள்[2]. இடைக்காலத்தில், ஜிஹாதிகள் குதிரைகளின் மீது கத்திகளோடு வந்து, இந்தியர்களைத் தாக்கிக் கொள்ளையிட்டு, தீவிரவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு வெடி மருந்து உபயோகப்படுத்தி, பீரங்கள் மூலம் கோட்டைகளைத் தாக்கி, கொன்று அட்டூழியம் செய்தனர். அப்பொழுது எந்த யுத்ததர்மத்தையும் கடைபிடிக்கவில்லை. இந்தியர்கள் காலையிலிருந்து மாலை வரைத்தான் சண்டையிடுவார்கள். பிறகு அமைதி காப்பார்கள், ஆனால், முகமதியர்களோ வஞ்சகமாக இரவு நேரங்களிலும் தாக்கினர். நவீன காலத்தில் துப்பாக்கி வந்ததும், அதனைப் பயன்படுத்தி எல்லைகளில் தாக்கி வந்தனர். இப்பொழுது ஏ.கே.47 மற்றும் வெடிகுண்டுகளை வைத்துத் தாக்கி வருகின்றனர்.

உபயோகமற்ற உள்துறை அமைச்சர்: எல்லாம் நடந்த பிறகு, ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. முன்னமே விஷயம் தெரியுனம் என்று வேறு கூறுகிறார். பிறகு என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. இந்த இடங்களில் வெடித்தது சக்தி வாய்ந்த தாமதித்து வெடிக்கும் டைமர் குண்டுகள் என தெரியவந்துள்ளது[3]. இது குறித்து ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. உவசி மூன்று என்று இப்படித்தான் சொல்லி, பிறகு இரண்டு என்று மாற்றிக் கொண்டார். அங்குள்ள கொனார்க் தியேட்டர் அருகே 7.01 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 5 நிமிடத்தில் கொனார்க் தியேட்டர் பின்புறம் உள்ள வெங்கடாத்ரி தியேட்டரில் 2வது குண்டு வெடித்தது. 15 நிமிட இடைவெளியில் அங்குள்ள ஒரு ஓட்டலில் 3வது குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 5 பேர் மாணவர்கள். சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயார் செய்வதற்கு புத்தகங்கள் வாங்க வந்துள்ளனர்[4]. அப்போது குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கடைகள் சேதமடைந்தன.

இந்திய முஜாஹித்தீன் கைவரிசை: பயங்கரவாதி கசாப்பிற்குப் பிறகு, நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, சமீபத்தில் தூக்கிலிடப்பட்டாரன். அதனால், இந்திய முஜாஹித்தீன் மும்ஐ, பெஙளூரு, கோயம்புத்தூர், ஐதராபாத் முதலிய இடங்களைத் தாக்குதல் நடத்தலாம் என்று ரகசிய விவரங்கள் வந்துள்ளனவாம். இப்பொழுதோ, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது வேடிக்கைதான்! சைக்கிளில் டிபன்பாக்ஸ் பேக்குகள் மூலம் மிக சக்திவாய்ந்த டைமர் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது முந்தைய வெடுகுண்டுகளைப் போல, உள்ளுக்குள் வெடித்து சிதறும் (Internall Explosive Devices) வகையைச் சேர்ந்தவை. வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை ஐதராபாத் வந்து, குண்டு வெடிப்பு நடந்த இடங்களை அவர் பார்வையிட்டார்.  அவருடன் கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் டிஜிபி தினேஷ் ரெட்டி ஆகியோரும் இருந்தனர்.

ஒத்திகைப் பார்த்ததும், கேமரா வயர்களை அறுத்ததும்: கடந்த அக்டோபரில் கைதான சயீத் மக்பூல் மற்றும் இம்ரான் கான், தாங்கள் ஜூலை 2012ல் திசுக் நகருக்கு வந்து இடங்களைப் பார்த்துவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர்[5]. ரியாஸ் பட்கல் என்ற இந்திய முஜாஹித்தீன் தலைவனின் ஆணைப்படி இவ்வாறு ஒத்திகைப் பார்த்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்னர் தான் அங்கிருந்த கேமராவின் வயர்கள் அறுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்[6]. இவ்விவரம் போலீசாருக்குத் தெரிந்தேயுள்ளது. அமெரிக்க நாளிதழே இதைப் பற்றி வெளியிடும் போது[7], உள்துறை அமைச்சருக்கு தெரியாமலா இடருக்கும்? “காவி தீவிரவாதம்” என்றெல்லாம் பேசும் ஷிண்டே இதைப் பற்றி தெரிந்தும் ஏன் மௌனியாக இருந்தார்? சிதம்பரம் பாதையில் சென்று கழுத்தை அறுக்கிறார் போலும்!

மூன்று  நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது: மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஷிண்டேவிடம் டிஜிபி விளக்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் ஷிண்டே  விசாரித்தார். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ஷிண்டே நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ குண்டு வெடிப்பு குறித்து மாநில அரசு துப்பு துலக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே மூன்று  நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது உண்மைதான். ஆனால் எந்த இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளதுகுண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறோம்.” இவ்வாறு ஷிண்டே கூறினார்.

ஐதராபாத் சாய்பாபா கோயிலை குறிவைத்த குண்டுகள்: இதற்கிடையே, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயில் அருகே தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்ய திட்டமிட்டு, பின்னர் இடத்தை மாற்றியது தெரியவந்துள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயிலில் குண்டு வைக்கத்தான் சதிகாரர்கள் முதலில் திட்டமிட்டுள்ளனர். நேற்று அங்கு நடந்த சிறப்பு பூஜையில் மாநகர போலீஸ் கமிஷனர் அமர்சிங் கலந்து கொண்டார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் மர்ம நபர்கள், தங்கள் திட்டத்தை கைவிட்டு, வேறு இடங்களில் குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு குண்டு வெடித்திருந்தால் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்.

இரண்டாவது முறையாக குண்டு வெடிப்பில் சிக்கியவர்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி வாசலில் 2007ம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மிர்சா அப்துல்வாசி என்ற கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். அவரது கழுத்து, கால்கள் மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். கல்லூரி படிப்பை முடித்த மிர்சா, சரியான வேலை கிடைக்காததால் கடந்த மாதம் ஐதராபாத் தில்சுக் நகரில் கொனார்க் தியேட்டர் அருகே உள்ள கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தில்சுக் நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பிலும் மிர்சா அப்துல்வாசி சிக்கினார். அவருக்கு முதுகு, இடதுபக்க விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை யசோதா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்துல்வாசியின் தந்தை முகமது அசாமுதீனுக்கு தகவல் தரப்பட்டது. தனது மகன் 2வது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


[1] ஆந்திராவில் கடந்த 2005ம் வருடம் மேடக் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி ஆசாதுதீன் ஒவைசி இன்று மேடக் கோர்ட்டின் முன் ஆஜரானார். அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

[2] Sources claim that Indian Mujahideen founder Riyaz Bhatkal, who is holed up in Pakistan, masterminded the Hyderabad twin blasts and carried it out with the help of IM operative Yasin Bhatkal.

http://timesofindia.indiatimes.com/india/Hyderabad-bomb-blasts-Initial-probe-suggests-hand-of-Indian-Mujahideen/articleshow/18625615.cms

[3] Initial reports speculate use of ‘delayed timer’ for detonating the bombs used in the blasts. The ‘delayed timer’ provides ample time for the bomb-planter to escape after placing the bomb.

http://zeenews.india.com/news/andhra-pradesh/live-hyderabad-blasts-delayed-timer-used-to-detonate-bombs_830723.html

[5] Sayed Maqbool and Imran Khan, both of whom hail from Nanded district in Maharashtra, told police during interrogation after their arrest in October that they both did a recee of Dilsukhnagar, Begum Bazar and Abids in the Andhra Pradesh capital on a motorcycle in July 2012. “About a month before Ramzan in 2012, Maqbool helped Imran in doing a recce of Dilsukhnagar, Begum Bazar and Abids in Hyderabad on a motorcycle. This was done on the instruction of Riyaz Bhatkal,” the officials said.

http://www.dnaindia.com/india/report_pune-blasts-accused-did-a-recce-of-blast-site-other-hyderabad-areas_1803092

[6] In Dilsukhnagar, police officers say the wires of a security camera near the site of yesterday’s blasts had been cut four days ago. Nobody tried to re-connect the camera, though traffic policemen were aware of the lapse.

http://www.ndtv.com/article/india/hyderabad-bomb-blasts-danger-signs-since-october-a-disconnected-cctv-this-week-334057