Posted tagged ‘பட்கல்’

அன்ஸார்-உத் தௌஹீத் பி பிலால் அல்-ஹிந்த் 2013லிருந்து செயல்பட்டுவருவது எப்படி பெற்றோர், உற்றோர், மாற்றோர்களுக்குத் தெரியாமல் இருந்தது?

பிப்ரவரி 6, 2016

அன்ஸார்உத் தௌஹீத் பி பிலால் அல்ஹிந்த் 2013லிருந்து செயல்பட்டுவருவது எப்படி பெற்றோர், உற்றோர், மாற்றோர்களுக்குத் தெரியாமல் இருந்தது?

Muddabir Mushtaq Sheikh, Shafi armanஎன்டிடிவியின்  தீவிரவாதஆதரவு நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் சொல்வது: சையது அன்ஸார் ஷா காஸ்மி என்ற இஸ்லாமிய வெறியூட்டும் பேச்சாளர். இவரது ஆயிரக்கணக்கான பேச்சுகள் உள்ளன. இவற்றையெல்லாம் பெங்களூரு போலீஸ் கமிஷனர் கேட்டுள்ளார், அதில் இந்திய-விரோதமாக எதுவும் இல்லை, ஆனால், என்.ஐ.ஏக்கும் மட்டும் கிடைத்துள்ளது, என்று ஒரு முஸ்லிம் கேட்கிறார். கைது செய்யப்பட்டுள்ளவரின் சொந்தக்காரராகிய இன்னொரு இளம்பெண், “அந்த பேச்சுகளைக் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு, அவரது பேச்சைக் கேட்காமல், மற்ற மதத்தலைவரின் பேச்சையா கேட்பார்கள்?”, என்று காட்டமாக , கிண்டலாகக் கேட்கிறார். முஸ்லிம்கள் மசூதிகளுக்குச் செல்லட்டும், மதரஸாக்களுக்குச் செல்லட்டும், யார் பேச்சை வேண்டுமானாலும் கேட்கட்டும், ஆனால், ஐசிஸ் தொடர்புகள் எவ்வாறு உருவாகியுள்ளன, 2013லிருந்து செயல்படுகின்றன என்பதையெல்லாம் இப்பெண்மணிகள் ஏன் பொறுப்பாக கண்காணித்து, தடுக்கவில்லை?

Shafi arma recruits and contactsஇன்ஜினியரிங், பிஏ, ஆயுர்வேத மருத்துவம் படிப்படிக்கும் மாணவர்கள். சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஐஎஸ்., தலைவர்களுடன், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஏன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வேண்டும்?: கைது செய்துள்ளதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் வந்திருப்பதாக டில்லி போலீஸ் அறிவித்தது. இவர்கள், குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் விதமாகவும், ஹரித்வாரில் நடக்கும் அரித் கும்பமேளா, முக்கிய ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டது. ஹரித்வாரில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்த 4 இளைஞர்களை டில்லி போலீசார் 20-01-2016 அன்று கைது செய்தனர்.

  1. அக்லக் உர்-ரஹ்மான் (20),
  2. மொஹம்மது அஜிம்முஸன் (23),
  3. மொஹம்மது மீரஜ் என்கின்ற மோனு (21),
  4. ஒசாமா மொஹம்மது என்கின்ற ஆதில் (18)

விமாரணையில் அவர் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இவர்களின் வயது 19 முதல் 23 வரை. இவர்கள் 4 பேரும் இன்ஜினியரிங், பிஏ, ஆயுர்வேத மருத்துவம் படிப்படிக்கும் மாணவர்கள். சிரியா மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஐஎஸ்., தலைவர்களுடன், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தது. எந்த இடத்தில் எவ்வாறு தாக்குவது, அதற்கான ஆயுதங்களை எவ்வாறு கையாள்வது என்ற விபரங்கள் இவர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

சர்வே நடத்தியது பற்றி பேசாதது: 26-01-2016 அன்று குடியரசு தின விழாவின் போதும், ஹரித்வார் அரித் கும்பமேளா, டில்லியில் மக்கள் அதிகம் கூடும் ஷாப்பிங் மால்கள், டிஎல்எப் சுற்றுலா சாலை, நொய்டாவில் உள்ள கிரேட் இந்தியா பகுதி உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரிய வந்துது[1]. இந்தோனேஷியாவின் ஜகர்த்தாவில் சமீபத்தில் நடத்தப்பட்டது போன்று மக்களோடு மக்களாக கலந்து தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது தெரியவந்தது. பிப்ரவரி 8ம் தேதி ஹரித்வாரில் நடக்கும் ஹரித்வாரா கும்பமேளாவின் போது, தினமும் ஆயிரக்கணக்கானர்கள் வந்து செல்லும் மால் ஒன்றை தகர்க்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு திட்டமிடுவதற்காக எங்கெல்லாம் மக்கள் அதிகம் கூடுகிறார்கள் என்பதை கண்டறிய சர்வே ஒன்றையும் இந்த பயங்கரவாதிகள் குழு நடத்தி உள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் 20-01-2016 அன்று எச்சரிந்தது குறிப்பிடத்தக்கது[2].

அந்நிலையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்: இந்நிலையில், இந்தியாவில் வரும் 26ம் தேதி குடியரசுத் தினம் கொண்டாடபட்டது. இதையொட்டி, நாடு முழுவதும், என்ஐஏ மற்றும் காவல்துறையினர் சேர்ந்து பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர்[3]. இந்த சோதனையில், கர்நாடகா, ஹைதராபாத், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் 14 கைது செய்யப்பட்டனர். இந்த தகவலை மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது[4]. கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள பஜ்பேயில் தேசிய புலனாய்வுத்துறையினர் வியழக்கிழமை இரவு 21-01-2016 அன்று நடத்திய தேடுதல் வேட்டையில் நஜ்மல் ஹூடா [Najmul Huda] என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டான்[5]. கைதான தீவிரவாதி பதன்கோட் தாக்குதலில் தொடர்புடையவரா என அதிகாரிகள், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்[6].  தும்கூரிலிருந்து சையது ஹுஸைன் [Syed Husain] கைது செய்யப்பட்டான்[7].

அன்ஸார்உத் தௌஹீத் பி பிலால் அல்ஹிந்த் 2013லிருந்து செயல்பட்டுவருவது: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட 16 ஐஎஸ் ஆதரவாளர்கள், இராக், சிரியா நாடுகளில் செயல்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைமையுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மும்பையில் முத்தாபிர் முஸ்தாக் செயிக் [Muddabir Mushtaq Shaikh, 33] என்பவன் கைது செய்யப்பட்டான். இவனுக்கு, ஐசிஸ் தலைவன் அபு பக்கர் அல்-பாக்ததியுடன் [Abu Bakr Al-Baghdadi] நேரிடை தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. பாக்தாதியின் ஆலோசனையின் பேரில் இந்தியாவில் புதிய பயங்கரவாத அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு துருக்கி, சிரியா வழியாக ஷேக்குக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது[8]. இதனால், இந்தியாவில் உள்ள முஸ்லிம் இளைஞர்களை இவன் தான் அனுப்பி வைக்கிறான் என்று அவனது மனைவி உஜ்மா [Ujma, 30] கூறுகிறாள்[9]. ஒன்றரை வருடத்திற்கு முன்பாக ஒரு தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் ரூ.50,000/-க்கு வேலைப் பார்த்து வந்தவன், திடீரென்று வேலையை விட்டு விட்டான். ஆனால், வங்கியில் மட்டும் ரூ.30 லட்சம் வரை இருப்பதால், குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறான் என்றெல்லாம் விவரங்கள் தெரியவந்தன[10].  அன்ஸார்-உத் தௌஹீத் பி பிலால் அல்-ஹிந்த் [Ansar-ut Tawhid fi Bilal al-Hind] என்ற அமைப்பு, ஐசிஸ்சின் இந்திய பிரிவாக 2013ல் உருவாக்கி, அதற்கு தலைவனாக, முத்தாபிர் முஸ்தாக் செயிக் நியமிக்கப்பட்டான். இதை ஷபி அர்மான் [Shafi Arman] என்பவன் சிரியாவிலிருந்து கண்காணித்து வந்தான்[11].

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆளெடுக்கும் ஷபி அர்மார்: ஷபி அர்மார் என்ற இந்த இளைஞருக்கு26 வயதுதான் ஆகிறது. ஆனால் இந்த வயதில் இந்த இளைஞர் செய்துள்ள “சாதனை” நடுநடுங்க வைக்கிறது என்று ஆரம்பிக்கிறது தமிழ்.ஒன்.இந்தியா[12]. இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆளெடுக்கும் நபர்களுக்கும், அந்த அமைப்புக்கும் இடையே முக்கிய இணைப்புப் பாலமாக விளங்கி வருகிறாராம் அர்மார். இவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை அனுப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கும் நபர் என்றும் விசாரணை அதிகாரிகள் கூறுகிறார்கள். இவர் குறித்து இன்டர்போல் போலீஸ் பிறப்பித்த உத்தரவில், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது, நிதி சேகரித்தது, ஆட்களைத் திரட்டிது உள்ளிட்ட பல்வேறு புகார்களை அடுக்கியுள்ளது. கர்நாடக மாநிலம் பத்கலைச் சேர்ந்தவர் அர்மார். இவரது பெயர் முகம்மது ஷபி. அர்மார் என்பது குடும்பப் பெயராகும். ஆங்கிலம், அட்டகாசமாக பேசுவார். அது போக கன்னடம், உருது, இந்தி ஆகியவையும் நன்றாகத் தெரியும். இவரது புனை பெயர் யூசுப் அல் ஹிந்தி. இவர் அன்சர் உல் தவாஹித் என்ற அமைப்பின் நிறுவனரான சுல்தான் அர்மாரின் சகோதர் ஆவார். இந்த அமைப்புதான் ஐஎஸ்ஐஎஸ் மைப்புக்கு ஆட்களைத் திரட்டி அனுப்பும் அமைப்பாகும். தனது சகோதரரின் நிழலில்தான் ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தார் ஷபி. தனது சகோதரருடன் சேர்ந்துதான் அவர் ஆட்களைத் திரட்டும் வேலையில் ஈடுபட்டார். சமீபத்தில்தான் அதிலிருந்து வெளியே வந்துள்ளார்.

வேதபிரகாஷ்

06-02-12016

[1] தினமலர், இந்தியாவில் .எஸ்., பயங்கரவாதிகள் : மக்கள் கூடும் இடங்களில் தாக்க திட்டம், ஜனவரி.21.2016,09.08.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1438428

[3] விகடன், இந்தியாவில் ஐஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் கைது: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!, 20-01-2016.

[4] http://www.vikatan.com/news/india/57984-india-is-supporters-arrested-central-government.art

[5] நியூச்.7, மங்களூரில் பதுங்கி இருந்த ஐஎஸ் தீவிரவாதி கைது, Updated on January 22, 2016.

[6] http://ns7.tv/ta/entrenched-extremist-arrested-mangalore.html

[7] http://www.livemint.com/Politics/QJF46lkYM8YlxceQ1BOIDL/Four-arrested-for-alleged-ISIS-links-in-Karnataka.html

[8]http://www.dinamani.com/india/2016/01/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-16-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article3243241.ece

[9] https://www.youtube.com/watch?v=NqWwt_6bvcE

[10] http://www.ndtv.com/india-news/arrested-mumbra-mans-wife-reveals-her-husbands-isis-links-1269639

[11] The structure of the outfit was decided by Shafi Arman, the handler of recruitments in India operating from Syria, in 2013, and Sheikh, 33, was made the amir (chief) of Ansar-ut Tawhid fi Bilal al-Hind, ISIS’s wing in India.

http://www.hindustantimes.com/india/nia-crackdown-reveals-arrested-mumbra-man-is-chief-of-isis-india-wing/story-XrrUznTbYiLH7tvregWCHP.html

[12] தமிழ்.ஒன்.இந்தியா, அர்மார்இந்தியாவில் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் 26 வயது இணைப்புப் பாலம்!, Posted by: Jayachitra, Published: Thursday, February 4, 2016, 17:51 [IST].

தீவிரவாதிகளின் உரிமைகளும், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளும் – குடியரசு தினத்திற்கு முன்பாக மற்றும் பின்பாக “தி இந்து” வக்காலத்து வாங்கியது!

பிப்ரவரி 6, 2016

தீவிரவாதிகளின் உரிமைகளும், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளும் – குடியரசு தினத்திற்கு முன்பாக மற்றும் பின்பாக “தி இந்து” வக்காலத்து வாங்கியது!

Indian Muslim youth become ISIS supporters, warriors

ஜனவரி 26 குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு பிரெஞ்சு ஜனாதிபதி பிங்கோயிஸ் ஹோலேன்டே [French President Francois Hollande] வந்த முன்பு, பெங்களூரு பிரஞ்சு தூதரகத்திற்கு, அவர் இந்தியாவுக்கு வரவேண்டாம் என்ற எச்சரிக்கைக் கடிதம் வந்தது[1]. இதனால், இந்திய அரசு பலத்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டன. தீவிரவாதிகளால் பாரிஸ் தாக்கப்பட்டது தெரிந்த விசயமே, எனவே, நிச்சயமாக இத்தகைய நடவடிக்கைகளைக் குறை சொல்ல முடியாது. ஆனால், “தி இந்து” போன்றவை 25-01-2016 அன்றே, சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் உரிமைகளைப் பற்றி வக்காலத்து வாங்கி, தலையங்கத்தை வெளியிட்டது[2].  27-01-2016 அன்று தமிழிலும் தலையங்கமாக வெளிட்டது. பிரெஞ்சு ஜனாபதி வருகிறார் எனும்போது, நிச்சயமாக அந்நாட்டு தீவிரவாத-எதிர்ப்புத் துறை, எச்சரிக்கையாக, இந்திய அரசுக்கு, சில விவரங்களைக் கொடுத்திருக்கும். என்.ஐ.ஏவும் விசாரிக்காமல், முகாந்திரம் இல்லாமல் வெறும் சதேகத்தின் பேரிலேயே அனைவரையும் கைது செய்து விட்டதாக ஆகாது. உத்தரக்காண்டத்தில், ரூர்கி நகரில் கைது செய்யப்பட்ட அக்லக் உர்-ரஹ்மான் (20), மொஹம்மது அஜிம்முஸன் (20), மொஹம்மது மீரஜ் என்கின்ற மோனு (20), ஒசாமா மொஹம்மது என்கின்ற ஆதில் (18) மூலம் தான் விவரங்கள் தெரியவந்தன. இவர்கள் எல்லோருமே சிரியாவைச் சேர்ந்த அன்ஸார்-உத் தௌஹீத் பி பிலால் அல்-ஹிந்த் [Ansar-ut Tawhid fi Bilal al-Hind] என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தனர். அதன் பிறகுதான் மற்ற கைதுகள் பெங்களூரு, ஹைதரபாத், மும்பை முதலிய இடங்களில் நடந்தன.

Gazwa e Hind green map

தி இந்துவின் வக்காலத்து வாங்கும் போக்கு (தி இந்து, 27-06-2016)[3]: தி இந்து, தீவிரவாதத்திற்கு வக்காலத்து வாங்கியுள்ள தன்மை, அதன் தலையங்கத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது: “உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ். பயங்கரவாதம் இந்தியாவில் கால் பதிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் சமீபத்தில் தெரிய வந்திருக்கின்றன. அந்த அமைப்புக்கு ஆதரவானவர்கள் என்று கருதப் படும் 18 பேர், நாச வேலைகளின் ஈடுபடத் திட்டமிட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் உத்தராகண்ட் மாநிலத்திலிருந்து டெல்லி காவல் துறையாலும், மற்றவர்கள் ‘தேசியப் புல னாய்வு முகமை’ (என்.ஐ.ஏ.) அமைப்பாலும் கைதுசெய்யப்பட்டனர்.

பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த பயிற்சி முகாம்களுக்கான ஏற்பாடுகளில் 14 பேரும் ஈடுபட்டிருந்ததாக என்.ஐ.ஏ. தெரிவிக்கிறது. ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் உள்ள ‘அன்சருல்-தவ்ஹீத்’ என்ற பெயருள்ள பயங்கரவாதக் குழுவின் தலைவர் ஷஃபி அர்மார் என்கிற யூசுஃப் என்பவருடன் இந்த 18 பேரும் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய முஜாஹிதீன் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களில் சிலர் ‘அன்சருல்-தவ்ஹீத்’ அமைப்பிலும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தெரிவிக்கிறது, கூறப்படுகிறது, தெரியவந்துள்ளது, தெரிய வந்திருக்கின்றன என்று சொல்வதிலிருந்து, உலகத்தில், இந்தியாவில் நடப்பது, ஒன்றுமே தெரியாது என்ற பாணியில் எழுதியுள்ளது. இந்தியாவில் என்ன இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்கவில்லையா, அதனால், அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் சாகவில்லையா? அவையெல்லாமே பொய்யாகி விட்டனவா? அவர்களது உரிமைகளைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?

அண்டை நாடான வங்கதேசத்தில் சில ஐ.எஸ். அனுதாபிகள் தாக்குதல்களை நடத்தியிருக்கும் சூழலில், இவ்விஷயத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்”, என்கிறது[4].

khilafat-e-rashida-is-the-only-solution

கெடுபிடிகளைக் காட்டாமல் அடையாளம் காண வேண்டும் (தி இந்து, 27-06-2016): அதேசமயம், அளவுக்கு மீறி அரசு பலத்தைப் பிரயோகிக்காமல், சந்தேகத்துக்குரியவர்களிடம் கெடுபிடிகளைக் காட்டாமல் இந்த பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களையும், அவர்கள் செயல்படும் குழுக்களையும், எந்த அமைப்பிலும் சேராமல் தனித்து இயங்கக்கூடியவர்களையும் அடையாளம் காண வேண்டும்.

இத்தகைய விசாரணைகளின்போது அப்பாவிகளை அலைக்கழிக்காமலும் சட்டபூர்வ உரிமைகளை மீறாமலும் வெகு கவனமுடன் செயல்பட வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் வெளிப்படையாகவும், தொழில்முறையிலும் விசாரணைகள் நடைபெறுவதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும். அப்படிச் செய்வது பொது அமைதியைக் காப்பதுடன், சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு உள்ளாவோரின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் ஊறு நேராமல் காப்பாற்றும்.

குண்டுகளை தயாரிப்பதில், குண்டுகளை வெடிக்க வைத்ததில், அப்பாவி மக்களைக் குரூரமாகக் கொன்றதில், பலத்தை பிரயோகிக்கவில்லையா? அவர்கள் அவ்வாறு செய்வதை சட்டங்களை மீறியதாகாதா? வெளிப்படையாகவும், தொழில்முறையிலும் அவர்கள் அறிவித்தா குண்டுகளை வெடித்து கொன்றார்கள்? ஜிஹாதிகள் அப்படித்தான் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் ஊறு நேராமல் காப்பாற்றினார்களா? ஜிஹாதிகளின் கொலைவெறி வன்முறைக்கு முன்னால் அஹிம்சை போராட்டமா நடத்த முடியும்?

பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை அரசு அமைப்புகள் நடத்தும் விதத்தில்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றி அல்லது தோல்வி கிடைக்கும் என்பது உலக அனுபவம்.

1993 Mumbai blast- who pay for the victims.1

1993 Mumbai blast- who pay for the victims.1

வன்முறைச் சிந்தனைகளுக்கு ஆளானோருக்குக் கூட பேசியே தீர்த்துக்கொள்ள வழியிருப்பதும் புலனாகும் (தி இந்து, 27-06-2016): குற்றம்சாட்டப்படுவோருக்கு எதிரான விசாரணைகளும், குற்றப்பத்திரிகைத் தாக்கல்களும் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டு முடிக்கப்பட வேண்டும்.

வழக்கு விசாரணையும் விரைவாக நடந்து தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுக்கு உள்ள அக்கறையுடன், மக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசுக்குள்ள பொறுப்பும் சேர்ந்து வெளிப்பட வேண்டும். அதே சமயம் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குக்கூட அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்.

காலவரம்பு நிர்ணயித்தா குண்டுகள் வைத்டுக் கொன்றார்கள்? அந்த பயங்கரவாதிகளின் பெற்றோர், மற்றோர் எந்த பொறுப்புடன் அவ்வாறு ஈடுபட வைத்தார்கள்? “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக்கூட அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்” என்று வெட்கமில்லாமல் வக்காலத்து வாங்கும் போது, ஜிஹாதி குரூரத்தால் கொலையுண்டவர்களின் சட்டப் பாதுகாப்பு என்னவாயிற்று?

இதனால் வன்முறைச் சிந்தனைகளுக்கு ஆளானோருக்குக் கூட இந்திய ஜனநாயகத்தின் மாண்பும், எந்தக் குறை இருந்தாலும் அதை பேசியே தீர்த்துக்கொள்ள வழியிருப்பதும் புலனாகும்.

1993 Mumbai blast- who pay for the victims.3

1993 Mumbai blast- who pay for the victims.3

அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு இழைத்த அநீதிக்குப் பதிலடியாகத்தான் நாசவேலைகளில் ஈடுபட நேர்கிறது (தி இந்து, 27-06-2016): தங்கள் கோரிக்கைகளும் மனவருத்தங்களும் நியாயமானவை தான் என்றும், பாராமுகமாக இருக்கும் அரசுக்கு எதிராக நேரடி நடவடிக்கைகளில் இறங்க நேர்கிறது என்றும் கருதும் இளைஞர் குழுக்களும் தனிநபர்களும் இப்படி நாச வேலைகளில் இறங்குவதை வரலாறு நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு இழைத்த அநீதிக்குப் பதிலடியாகத்தான் நாசவேலைகளில் ஈடுபட நேர்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள். 1990-களிலிருந்து மத அடிப்படையிலான பயங்கரவாதத் தாக்குதல்கள் நாட்டில் 3 முறை நடந்துள்ளன. பயங்கரவாதச் செயல்களில் நாட்டமுள்ள இளைஞர்களுக்கு எதிரான வழக்குகளை நியாயமான, வெளிப்படையான, விரைவான நடைமுறைகள் மூலம் நடத்தி முடிப்பது மிக முக்கியம்.

ஜிஹாதி குரூர கொலையாளின் கோரிக்கைகளும் மனவருத்தங்களும் நியாயமானவை என்று யார் தீர்மானித்தது? “பாராமுகமாக இருக்கும் அரசுக்கு எதிராக நேரடி நடவடிக்கைகளில் இறங்க நேர்கிறது” என்றால், இந்தியர்கள் எல்லோருமே இறங்கலாமே? உதாரணத்திற்கு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அவ்வாறே செயல்படலாமே? அவர்களின் கோரிக்கைக்கள், பாதிப்புகள் என்ன என்பதன இத்தனை ஆண்டுகள் யாரும் கவலைப்படவில்லையே?

இந்த ஆபத்தை எதிர்கொள்வதற்கு இதைவிட சிறந்த வழி இப்போதைக்கு இல்லை. “தி இந்து” இப்படி வக்காலத்து வாங்கிய ஐந்தே நாட்களில் அதன் தோழமை என்.டி.டிவி, இவ்வாறு பயங்கரவாத ஆதரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

huji Bangaladesh

huji Bangaladesh

தீவிரவாதிகளின் உரிமைகளும், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளும்: பொதுவாக மனித உரிமைகள் போர்வையில், “தி ஹிந்து” போன்ற ஊடகங்கள் எப்பொழுதும் சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் உரிமைகளைப் பற்றி அதிகமாகவே கவலைப்படுவது, செய்திகளை வெளியிடுவது என்ற போக்கில் இருந்து வருகிறது. ஆனால், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதே இல்லை. எய்ட்ஸ் வரும் அதனால், கான்டம் போட்டுக் கொள் என்று, அதனை எப்படி ஆண்கள் மாட்டிக் கொள்ளவேண்டும் என்று செய்து காட்டி விளக்கம் அளிக்கும் போது, அதனை பாராட்டுகிறார்கள். என்ன இப்படி பொது இடத்தில் பலருக்கு முன்னிலையில், அதிலும் பெண்கள் இருக்கும் போது, இப்படியெல்லாம் செய்து காட்டுகிறார்களே என்று யாரும் எதிர்க்கவில்லை. விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டது, படுகிறது. ஆனால், தீவிரவாதிகள் இப்படி இருப்பார்கள், அவர்கள் குண்ட் தயாரிப்பார்கள், குண்டுவெடித்தால் சாவு ஏற்படும், அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், தீவிரவாதிகளை கண்டுகொள்ள வேண்டும் என்று யார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்? பிறகு முன்னெச்சரிக்கை கைதுகளை எதிர்ப்பதேன்?

வேதபிரகாஷ்

06-02-12016

[1] http://www.firstpost.com/world/letter-cautions-french-president-on-india-visit-says-bengaluru-police-2593784.html

[2] http://www.thehindu.com/opinion/editorial/nias-crackdown-on-is-terror-suspects-alert-fair-transparent/article8148224.ece?ref=relatedNews

[3] தி இந்து, வெளிப்படையான விசாரணை தேவை, தலையங்கம், Published: January 27, 2016 09:34 ISTUpdated: January 27, 2016 09:35 IST.

[4]http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/article8157012.ece

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)

மம்தா- ஹஸினா - அரசியல்-ஜிஹாத்

மம்தா- ஹஸினா – அரசியல்-ஜிஹாத்

வடபழனிக்கும், பர்த்வானுக்கும் என்ன தொடர்பு?: இப்படி கேட்டால், ஏன்னது, “அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்”, போல கேள்விக் கேட்கப் படுகிறதே என்று நினைக்க வேண்டாம். பர்த்வான் வெடிகுண்டு தொழிற்சாலை சொந்தக்காரர்கள், வடபழனியில் உள்ள மூன்று “பாய்கள் / முஸ்லிம் சகோதரர்களுடன்”, அவர்கள் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் தீவிரவாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்க அல்லது தெரியாமல் இருந்திருக்க வேண்டும். தெரிந்திருக்கக் கூடும் என்றால், அவர்களுக்கு ஏன் துணை போகவேண்டும், அப்பா-அம்மா, இப்படி குண்டு தயாரிப்பது, தொழிற்சாலை வைப்பது, மற்றவர்களுக்கு விநியோகிப்பது எல்லாம் தப்பு என்று அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அந்த இரண்டு பேர் இறந்திருக்க மாட்டார்கள், இரண்டு பெண்களும் விதவையாகி இருக்கமாட்டார்கள். முஸ்லிம்களாக இருந்து கொண்டே ஜிஹாதி தொடர்புகள் தெரியாமல் இருந்திருக்க வேண்டும் என்றால், “ஸ்லீப்பர் செல்” முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இருப்பினும் நன்மையாகவோ, மென்மையாகவோ, வன்மையாகவோ கண்டிக்கப்படவில்லை, எச்சரிக்கப்படவில்லை.

Vadapalani -burdwan link

Vadapalani -burdwan link

ஜிஹாத் என்றால் உண்மையினை அறிய வேண்டும்: “ஜிஹாத்” என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கத்தை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அடிக்கடி சில முஸ்லிம் இயக்கங்கங்கள் பறைச்சாற்றிக் கொண்டாலும், குண்டுகள் வெடிக்கும் போது அமைதியாகி விடுகிறார்கள்.  தினத்தந்திக்கு[1] (05-10-2014) எச்சரிக்கைக் கொடுத்து (08-10-2014), ஜிஹாதி-மறுத்த நாட்களில் தான் வடபழனி முஸ்லிம்கள், பர்த்வான் முஸ்லிம்களான ஷகீல் மற்றும் ரஜிரா பீபீ என்ற வெடிகுண்டு தொழிற்சாலைக்காரர்களுடன் (02-10-2014 தேதிக்கு முன்னர்) பேசிக்கொண்டிருந்தார்கள். அதாவது, ஏற்கெனவே, இவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். சென்னயில் உள்ள முஸ்லிம்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கிறதா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும். அவர்கள் ஏன் அப்படி தொடர்பு கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்று எந்த முஸ்லிம் அமைப்பும் கேட்டதாகத் தெரியவில்லை. அதைப் பற்றியும் ஊடகங்கள் தாராளமாகவே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றையும் இவர்கள் எதிர்க்கவில்லை!

பர்த்வான் வடபழனி - தொடர்பு

பர்த்வான் வடபழனி – தொடர்பு

வடபழனி முஸ்லிம்களுடன் பேசிய ரூமி பீபி மற்றும் அமீனா பீபி வெளியிடும் திடுக்கிடும் ரகசியங்கள்: JMB தலைவர்களான சொஹைல் மெஹ்பூஸ் [Sohail Mehfooz] மற்றும் மொஹப்பது பிலால் [Mohammed Bilal] அடிக்கடி இந்தியாவில் உள்ள மதரஸாக்களுக்கு வந்து சென்றுள்ளனர். பிறகு, வங்காளதேசத்தில் நவாப் கஞ் என்ற இடத்தில் உள்ள தாருல்-உலும்-மஜ்ஹருல் [the Darul-Ulum-Majharul madrasa in Nawabganj, Bangladesh] என்ற மதரஸாவில், ஆகஸ்ட் 2014ல் கூடிய கூட்டத்தில் தான், இந்தியாவில் எப்படி நிதிதிரட்டுவது, ஆட்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற விவரங்கள் பேசப்பட்டு தீர்மானம் செய்யப் பட்டன. இவர்களுடன் இன்னொரு JMB தலைவர் மொஹம்மது ஹபிபுர் ரஹ்மான் [Mohammed Habibur Rehman] என்பவரும் நிதிதிரட்டும் சேவைக்கு சேர்ந்து வந்துள்ளார். மூர்ஷிதாபாத், மால்டா, நாடியா மாவட்டங்களில் அவர்களது ஆட்கள் வேலைசெய்து வருகிறார்கள். இவ்வாறு உள்ளூர் நிதிவசூல் மட்டுமல்லாது, பங்களாதேசத்தில் சைலெட் என்ற இடத்தில் (Syhlet, Bangladesh) உள்ள JMB ஆட்கள் கொரியர் மூலம் ரூபாய் நோட்டுகளை அசாமில் உள்ள ஒரு டாக்டருக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த டாக்டர் கௌஸருக்கு அறிவிக்க, பணத்தை எடுத்துவர மூன்றுய் ஆட்கள் அசாமிற்கு அனுப்பப்படுகிறார்கள். கொரியர்கள் / பணத்தை எடுத்துச் செல்லும் நம்பிக்கையானவர்கள் மூலம் பல வழிகளில் சென்று, கடைசியில் முர்ஷிதாபாதில் பேராம்பூர் நகருக்கு சுமார் ரூ.10 லட்சம் என்ற விதத்தில் வந்து சேரும். பர்த்வானில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள அந்த வீட்டைப் பிடித்தனர். ஒரு பக்கம் பர்கா பேகடரி மற்பக்கம் பாம்ப் பேக்டரி என்று வேலைகளை ஆரம்பித்தனர். நூற்றுக் கணக்கான ஆட்கள் இவ்வேலையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். ஆனால், மிகவும் விசுவாசமான சுமார் 40 பேர் தாம் குண்டு தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தப் பட்டனர். ரூமி பீபி மற்றும் அமீனா பீபி சாதாரணமாக கொல்கொத்தாவில் உள்ள புர்ரா அஜாருக்குச் சென்று (Burrabazar in Kolkata), குண்டுகள் தயாரிக்க வேண்டிய மூலப் பொருட்களை வாங்கி வருவார்கள். அந்த குண்டு தொழிற்சாலை மூன்று மாதங்களாக, அதாவது, ஆகஸ்ட் 2014லிருந்து, வேலை செய்து வருகின்றது. அக்டோபர் 2 குண்டுவெடிப்பிற்கு முன்னர் சுமார் 50 குண்டுகள் டாக்கா, அசாம் போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.  என்.டி.ஏ அரசாங்கம் பதவி ஏற்றவுடன், இது ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்தோ-பங்காளதேச உறவுகளை சீர்குலைக்க இக்காரியங்கள் நடக்கின்றன, எனும்போது, இதன் பின்னணியில் மற்ற விவகாரங்களும் இருக்க வேண்டும்.

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் - தினத்தந்தி

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்தி

ஜிஹாதிகளாக பெண்கள் உபயோகப் படுத்தப் படுவது ஏன்?: பர்த்வான் குண்டு தொழிற்சாலை உருவானதில் இரண்டு பெண்களின் பங்கு அதிகமாக அறியப்படுகிறது. கைக்குழந்தைகளுடன் இப்பெண்கள் எவ்வாறு அத்தகைய வேலைகளில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்கள் ஜிஹதித்துவத்தில் நன்றாக ஊறவைக்கப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறான காரியங்கள் புண்ணியமானவை, அல்லாவுக்குப் பிடித்தனமானவை, அதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று அறிவுருத்தப் பட்டுள்ளனர். பிறகு அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கப் படும் என்றும் சொல்லப்பட்டது. இதனால், மிகவும் விசுவாசமாக அவர்கள் வேலை செய்து வந்தனர். நிதி வசூல், விநியோகம் போன்ற விசயங்களிலிருந்து, குண்டு தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்குவது, குண்டுகளை விநியோகிப்பது என்ரும் ஈடுபட்டிருக்கிறார்கள். பணம் விசயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள். அதாவது பணம் இப்படித்தான் பட்டுவாடா செய்யப் படுகிறது என்ற அறியப்படாமல் போகும் என்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளார்கள். மேலும் பங்களாதேசத்திலிருந்து, பாகிஸ்தானிலிருந்து வரும் கள்ளநோட்டுகள், இந்தியாவில் புழக்கத்தில் விடும் கோஷொடியினரும், தமிழகத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. இப்பெண்கள் கைக்குழந்தைகள் சகிதமாக சென்றுவரும் போது, யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்பது நிதர்சனமே, ஆனால், அதவே திட்டமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு பெண்களை ஜிஹாதிக்கு உபயோகப் படுத்தும் முறையும் நோக்கத்தக்கது.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

Madrasha Dinia Madania at Khakhragarh, Burdwan.

பர்த்வான் மதரஸாக்களில் நடப்பவை என்ன?: மதரஸாக்கள் அதிகமாக முளைத்து வருவதும் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன. முஸ்லிம்கள் தாங்கள் மதக்கல்விதான் அளிக்கிறோம் என்றாலும், நடப்பது வேறுவிதமாக இருக்கிறது. ஏனெனில், பர்த்வான் மாவட்டத்தில் மட்டும் உள்ள 700க்கும் மேலான மதரஸாக்காளில் 37 மட்டும் தான் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதாவது, பதிவு செய்யப் படாத மதரஸாக்களில் நடப்பதை யாரும் அறிந்து கொள்ல முடியாது. குறிப்பாக, ஒரு மதரஸாவில் 30-40 இளம்பெண்கள் படிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். வெளியே இருந்து கொண்டு வரப்பட்டுள்ளவர்கள். மேலும் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவது கிடையாது. அவர்கள் தங்களது கணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து அங்கே வசித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், திருமணம் ஆகாத பெண்கள் பாதிக்கப் படுகிறார்களா என்று தெரியவில்லை. அவர்களுக்கு வேண்டிய வசதிகள் எங்குள்ளனவா, பாலியல் ரீதியில் தொல்லைகள் எதுவும் கொடுக்கப் படுகின்றனவா என்ற விசயங்களைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதரஸாக்களில் உள்ள மற்ற முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரையில், அவர்கள் தங்களது உறவுகளை மறந்து ஜிஹாதி வேலைகளை செய்ய தயாராக வந்துள்ளனர்[2].

மதரஸாக்களின் கீழே சுரங்க பாதைகள், உள்ளே வெடிகுண்டுகள், வெளியே நிற்கவைக்கப் பட்ட காரில் ஜிஹாதி புத்தகங்கள்: சில மதரஸ்ஸாக்களின் கீழே சரங்கப் பாதைகளை தோண்டி வைத்துள்ளனர். அவை அருகிலுள்ள குளக்கரைகளில் சென்று முடிகின்றன[3]. பர்த்வானில் ஒரு மதரஸாவுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மஞ்சள் நிற காரில் சோதனையிட்ட போது, அதில் ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் 12 டிரங்க் பெட்டிகள் இருந்துள்ளன[4]. அக்காரின் மீது “இந்திய ராணுவம்” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, ஆனால், எண்ணோ, ஒரு பைக்கினுடையாத இருந்தது. புத்தகங்கள் மற்றவை ஜிஹாதி இலக்கியங்களாக இருந்தன. அவை அரேபிக், உருது மற்றும் வங்காள மொழிகளில் இருந்தன. இவ்வாறு மதரஸாக்கள் ஜிஹாதி காரியங்களுக்கு உபயோகப் படுத்த எப்படி முஸ்லிம்கள் ஒப்புக் கொள்கிறார்கள், அனுமதிக்கிறார்கள்?

© வேதபிரகாஷ்

25-10-2014

பர்கா பேக்டரி - கடை

பர்கா பேக்டரி – கடை

[1] தினத்தந்தி, தீவிவாதிகளாக மாறும் பெண்கள், 05-10-2014

[2] The team has also recovered a phone book, believed to belong to Yousuf Sheikh, the terror module’s mentor. It has the contact numbers of women who took training in the Simulia madrassa, say sources. As per reports, the module was busy recruiting women through systematic brain wash. These women were trained in such a way that they were trained in such a way that they were ready to sacrifice their families when it came to jihad.

http://news.oneindia.in/india/burdwan-blast-nia-secret-tunnel-madrassa-tmc-jamaat-link-1541340.html

[3] In yet another shocking revelation, NIA discovered secret tunnels under mud huts which were previously Madarsas (Islamic Schools) in Burdwan. To everyone’s surprise, the secret passages ended up in nearby ponds.

[4]http://www.nagalandpost.com/ChannelNews/National/NationalNews.aspx?news=TkVXUzEwMDA2ODc0Mg%3D%3D

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!

பிப்ரவரி 28, 2013

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்!

தொழிலதிபருக்கு மிரட்டல் கடிதம் ஏன்?: முன்னர், இந்திய முஜாஹித்தீன் இ-மெயில்கள் மூலம் டிவி-செனல்களுக்கு வெடிகுண்டு வைத்து மக்களைக் கொன்றதற்கு பொறுப்பேற்று அனுப்பி வைத்துள்ளது. இம்முறை கடிதம் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளது. அப்படியென்றால், ரதன் டாடாவிற்கும் மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். இல்லை, மற்ற எல்லா தொழிலதிபர்களுக்கும் மிரட்டல்கள் வந்திருக்க வேண்டும். இப்பொழுதுதான், ஐரோப்பிய குழுமம், மோடி மீதான தடையை நீக்கிக் கொண்டு, வியாபார ரீதியாக பேச்சுகள் தொடங்கியுள்ளன. ஆகவே, இந்திய பொருளாதார முன்னேற்றத்தை அல்லது குஜராத்தின் வளர்ச்சியைத் தடுக்க இம்மாதிரியான மிரட்டல் வந்திருக்க வேண்டும்.

 

இந்தியன் முஜாஹித்தீன் முகேஷ் அம்பானியை மிரட்டி அனுப்பிய கடிதம்: பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்[1].  ஒரு அடையாளம் தெரியாத மர்ம நபர் குரியர் மூலம் இந்த கடிதம் மும்பை ரிலையன்ஸ் அலுவலகத்துக்கு வந்தது, அதாவது, செக்யூரிடியிடம் 24-02-2014 அன்று கொடுக்கப்பட்டது[2]. 26-02-2013 அன்று எஸ்.பி. நந்தா, ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், துணைத் தலைவர், போலிஸ் கமிஷனர் சத்யபால் சிங்கை சந்தித்து புகார் அளித்துள்ளார்[3]. அதைத் தொடர்ந்து அவருக்கு பாதுகாப்புக் கொடுக்கப்பட்டுள்ளது[4]. கடிதம் கொடுத்து சென்றவரையும் தேடி வருகிறார்கள்.

 

கடிதத்தில் என்ன எழுதியிருந்தது?: வெள்ளைக் காகிதத்தில் எழுதப்பட்ட அதில் –

  1. குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை ஆதரிப்பது முஸ்லீம்களை அவமதிப்பது போன்றது
  2. குஜராத்தில் முதலீடு செய்வதை நிறுத்தி கொள்ளாவிட்டால் முகேஷ் அம்பானியையும்,
  3. அவரது 27 மாடி ஆன்டில்லா – வீட்டையும் தாக்குவோம் என்றும்,
  4. ஏனெனில் அது வக்ப் சொத்தை அபகரிக்கப் பட்டுக் கட்டப்பது என்பதால் (Accusing him of grabbing the Waqf Board property at Altamount Road to build his house)
  5. தங்களது கூட்டாளியான முஹம்மது டேனிஷ் அன்சாரி (Mohammed Danish Ansari) என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

 

டேனிஷ் என்பவன் யார்?: டேனிஷ் என்பவன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது ஏனெனில், அதே பெயரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

  1. டேனிஷ் முஹம்மது அன்சாரி[5] தர்பங்கா, பீகாரைச் சேர்ந்தவன். பகல் பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்வதற்கு முன்னர், அவனிடத்தில் தங்கியிருந்தான்[6]. தீவிரவாதி யாஸின் பட்கலுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜனவரியில் கைது செய்யப்பட்டான்.
  2. மற்றும் 2008 அகமதாபாத் வெடிகுண்டு[7] குற்றங்களுக்காக இன்னொரு டேனிஸ் கைது செய்யப்பட்டுள்ளான்.
  3. இன்னொருவன் டேனிஷ் ரியாஸ் அல்லது சையது அஃபாக் இக்பால் என்பதாகும்.

 

இக்கடிதம் போலியா, உண்மையா?: இக்கடிதம் போலியாக இருக்கும் என்றாலும்[8], மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இக்கடிதம் உண்மையென்றால், தனிப்பட்ட நபருக்கு, அனுப்பிய முதல் கடிதம் இதுவாகத்தான் இருக்க வேண்டும், ஏனனில் இந்தியன் முஜாஹித்தீன் அவ்வாறு முன்னர் யாருக்கும் கடிதம் அனுப்பியது கிடையாது. இருப்பினும், தேசிய புலனாவுக் கழகமும் இதைப் பற்றி விசாரித்து வருகிறது[9]. தீவிரவாத எதிர்ப்புப் படையும் இதனை ஆய்ந்து வருகிறது, ஏனெனில் கடந்த வெடிகுண்டு வெடிப்புகளில் பொறுப்பேற்று ஐந்து முறை டிவி-செனல்களுக்கு இ-மெயில்கள் அனுப்பியுள்ளதை எடுத்துக் காட்டுகிறது[10].

 

© வேதபிரகாஷ்

28-02-2013


[3] On Tuesday, Reliance vice-president SP Nanda filed a police complaint after meeting with police commissioner Satyapal Singh.

[5] The letter also did not mention the full name of the IM operative in custody. Three people of the same name were arrested in various cases, but police believe the demand is for the release of Mohammed Danish Ansari who was arrested in January for giving shelter to the Bhatkal brothers.

[7] The police said the Danish, whose release is demanded in the letter, is Danish Riyaz alias Syed Afaque Iqbal, who was arrested for his role in the 2008 Ahmedabad blasts.

Read more at:http://indiatoday.intoday.in/story/indian-mujahideen-narendra-modi-mukesh-ambani/1/251980.html

[10] Anti-terrorism squad (ATS) sources said the IM has in the past sent at least five emails to news channels claiming responsibility for blasts.

http://timesofindia.indiatimes.com/india/Cops-tighten-Mukesh-Ambanis-security-after-threat/articleshow/18720646.cms

ஐயோ–வெடிக்கும், அதிரும், அலறும்பாத் – ஐதராபாத்!

பிப்ரவரி 22, 2013

ஐயோவெடிக்கும், அதிரும், அலறும்பாத்ஐதராபாத்!

நவீனகாலத்தில் ஜிஹாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்: ஐதராபாத்தில் இந்துக்களைக் கேவலமாகப் பேசிய ஒவைஸியின் சகோதரர் கைதாகிய விஷயம் ஆறுவதற்குள்[1], இரண்டு குண்டுகள் வெடித்து 16 பேர்களை பலிகொண்டதுடன், 100ற்கும் மேற்பட்டவர்களை  காயமடையச் செய்துள்ளது. வழக்கம் போல அதே மாதிரியான, சைக்கிள்-டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள், கோவிலைக் குறிபார்த்தது, தியேட்டர்களில் வெடித்துள்ளன.  இந்திய முஜாஹித்தீன் கைவரிசை என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிரிகாரிகள் கூறுகிறார்கள்[2]. இடைக்காலத்தில், ஜிஹாதிகள் குதிரைகளின் மீது கத்திகளோடு வந்து, இந்தியர்களைத் தாக்கிக் கொள்ளையிட்டு, தீவிரவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு வெடி மருந்து உபயோகப்படுத்தி, பீரங்கள் மூலம் கோட்டைகளைத் தாக்கி, கொன்று அட்டூழியம் செய்தனர். அப்பொழுது எந்த யுத்ததர்மத்தையும் கடைபிடிக்கவில்லை. இந்தியர்கள் காலையிலிருந்து மாலை வரைத்தான் சண்டையிடுவார்கள். பிறகு அமைதி காப்பார்கள், ஆனால், முகமதியர்களோ வஞ்சகமாக இரவு நேரங்களிலும் தாக்கினர். நவீன காலத்தில் துப்பாக்கி வந்ததும், அதனைப் பயன்படுத்தி எல்லைகளில் தாக்கி வந்தனர். இப்பொழுது ஏ.கே.47 மற்றும் வெடிகுண்டுகளை வைத்துத் தாக்கி வருகின்றனர்.

உபயோகமற்ற உள்துறை அமைச்சர்: எல்லாம் நடந்த பிறகு, ஐதராபாத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. முன்னமே விஷயம் தெரியுனம் என்று வேறு கூறுகிறார். பிறகு என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. இந்த இடங்களில் வெடித்தது சக்தி வாய்ந்த தாமதித்து வெடிக்கும் டைமர் குண்டுகள் என தெரியவந்துள்ளது[3]. இது குறித்து ஆந்திர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் நேற்று அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுகள் வெடித்துச் சிதறின. உவசி மூன்று என்று இப்படித்தான் சொல்லி, பிறகு இரண்டு என்று மாற்றிக் கொண்டார். அங்குள்ள கொனார்க் தியேட்டர் அருகே 7.01 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 5 நிமிடத்தில் கொனார்க் தியேட்டர் பின்புறம் உள்ள வெங்கடாத்ரி தியேட்டரில் 2வது குண்டு வெடித்தது. 15 நிமிட இடைவெளியில் அங்குள்ள ஒரு ஓட்டலில் 3வது குண்டு வெடித்தது. இதில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பலியானவர்களில் 5 பேர் மாணவர்கள். சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயார் செய்வதற்கு புத்தகங்கள் வாங்க வந்துள்ளனர்[4]. அப்போது குண்டு வெடிப்பில் சிக்கி பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கடைகள் சேதமடைந்தன.

இந்திய முஜாஹித்தீன் கைவரிசை: பயங்கரவாதி கசாப்பிற்குப் பிறகு, நாடாளுமன்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியான அப்சல் குரு, சமீபத்தில் தூக்கிலிடப்பட்டாரன். அதனால், இந்திய முஜாஹித்தீன் மும்ஐ, பெஙளூரு, கோயம்புத்தூர், ஐதராபாத் முதலிய இடங்களைத் தாக்குதல் நடத்தலாம் என்று ரகசிய விவரங்கள் வந்துள்ளனவாம். இப்பொழுதோ, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது வேடிக்கைதான்! சைக்கிளில் டிபன்பாக்ஸ் பேக்குகள் மூலம் மிக சக்திவாய்ந்த டைமர் குண்டுகளை வைத்து வெடிக்கச் செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அது முந்தைய வெடுகுண்டுகளைப் போல, உள்ளுக்குள் வெடித்து சிதறும் (Internall Explosive Devices) வகையைச் சேர்ந்தவை. வெடிகுண்டு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை ஐதராபாத் வந்து, குண்டு வெடிப்பு நடந்த இடங்களை அவர் பார்வையிட்டார்.  அவருடன் கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி மற்றும் டிஜிபி தினேஷ் ரெட்டி ஆகியோரும் இருந்தனர்.

ஒத்திகைப் பார்த்ததும், கேமரா வயர்களை அறுத்ததும்: கடந்த அக்டோபரில் கைதான சயீத் மக்பூல் மற்றும் இம்ரான் கான், தாங்கள் ஜூலை 2012ல் திசுக் நகருக்கு வந்து இடங்களைப் பார்த்துவிட்டு சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர்[5]. ரியாஸ் பட்கல் என்ற இந்திய முஜாஹித்தீன் தலைவனின் ஆணைப்படி இவ்வாறு ஒத்திகைப் பார்த்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். நான்கு நாட்களுக்கு முன்னர் தான் அங்கிருந்த கேமராவின் வயர்கள் அறுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்[6]. இவ்விவரம் போலீசாருக்குத் தெரிந்தேயுள்ளது. அமெரிக்க நாளிதழே இதைப் பற்றி வெளியிடும் போது[7], உள்துறை அமைச்சருக்கு தெரியாமலா இடருக்கும்? “காவி தீவிரவாதம்” என்றெல்லாம் பேசும் ஷிண்டே இதைப் பற்றி தெரிந்தும் ஏன் மௌனியாக இருந்தார்? சிதம்பரம் பாதையில் சென்று கழுத்தை அறுக்கிறார் போலும்!

மூன்று  நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது: மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகள் குறித்து ஷிண்டேவிடம் டிஜிபி விளக்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயரதிகாரிகளிடம் ஷிண்டே  விசாரித்தார். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ஷிண்டே நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “ குண்டு வெடிப்பு குறித்து மாநில அரசு துப்பு துலக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே மூன்று  நாட்களுக்கு முன்பு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்தது உண்மைதான். ஆனால் எந்த இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளதுகுண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்பு குறித்து முழு விசாரணை நடத்தி வருகிறோம்.” இவ்வாறு ஷிண்டே கூறினார்.

ஐதராபாத் சாய்பாபா கோயிலை குறிவைத்த குண்டுகள்: இதற்கிடையே, போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயில் அருகே தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்ய திட்டமிட்டு, பின்னர் இடத்தை மாற்றியது தெரியவந்துள்ளது. ஐதராபாத் சாய்பாபா கோயிலில் குண்டு வைக்கத்தான் சதிகாரர்கள் முதலில் திட்டமிட்டுள்ளனர். நேற்று அங்கு நடந்த சிறப்பு பூஜையில் மாநகர போலீஸ் கமிஷனர் அமர்சிங் கலந்து கொண்டார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் மர்ம நபர்கள், தங்கள் திட்டத்தை கைவிட்டு, வேறு இடங்களில் குண்டு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு குண்டு வெடித்திருந்தால் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்திருக்கக் கூடும்.

இரண்டாவது முறையாக குண்டு வெடிப்பில் சிக்கியவர்: ஐதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி வாசலில் 2007ம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மிர்சா அப்துல்வாசி என்ற கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார். அவரது கழுத்து, கால்கள் மற்றும் வயிறு பகுதியில் காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். கல்லூரி படிப்பை முடித்த மிர்சா, சரியான வேலை கிடைக்காததால் கடந்த மாதம் ஐதராபாத் தில்சுக் நகரில் கொனார்க் தியேட்டர் அருகே உள்ள கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தில்சுக் நகரில் நேற்று நடந்த குண்டு வெடிப்பிலும் மிர்சா அப்துல்வாசி சிக்கினார். அவருக்கு முதுகு, இடதுபக்க விலா பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை யசோதா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்துல்வாசியின் தந்தை முகமது அசாமுதீனுக்கு தகவல் தரப்பட்டது. தனது மகன் 2வது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.


[1] ஆந்திராவில் கடந்த 2005ம் வருடம் மேடக் மாவட்டத்தின் அப்போதைய கலெக்டரை தவறாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கின் முக்கிய குற்றவாளி ஆசாதுதீன் ஒவைசி இன்று மேடக் கோர்ட்டின் முன் ஆஜரானார். அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

[2] Sources claim that Indian Mujahideen founder Riyaz Bhatkal, who is holed up in Pakistan, masterminded the Hyderabad twin blasts and carried it out with the help of IM operative Yasin Bhatkal.

http://timesofindia.indiatimes.com/india/Hyderabad-bomb-blasts-Initial-probe-suggests-hand-of-Indian-Mujahideen/articleshow/18625615.cms

[3] Initial reports speculate use of ‘delayed timer’ for detonating the bombs used in the blasts. The ‘delayed timer’ provides ample time for the bomb-planter to escape after placing the bomb.

http://zeenews.india.com/news/andhra-pradesh/live-hyderabad-blasts-delayed-timer-used-to-detonate-bombs_830723.html

[5] Sayed Maqbool and Imran Khan, both of whom hail from Nanded district in Maharashtra, told police during interrogation after their arrest in October that they both did a recee of Dilsukhnagar, Begum Bazar and Abids in the Andhra Pradesh capital on a motorcycle in July 2012. “About a month before Ramzan in 2012, Maqbool helped Imran in doing a recce of Dilsukhnagar, Begum Bazar and Abids in Hyderabad on a motorcycle. This was done on the instruction of Riyaz Bhatkal,” the officials said.

http://www.dnaindia.com/india/report_pune-blasts-accused-did-a-recce-of-blast-site-other-hyderabad-areas_1803092

[6] In Dilsukhnagar, police officers say the wires of a security camera near the site of yesterday’s blasts had been cut four days ago. Nobody tried to re-connect the camera, though traffic policemen were aware of the lapse.

http://www.ndtv.com/article/india/hyderabad-bomb-blasts-danger-signs-since-october-a-disconnected-cctv-this-week-334057