Posted tagged ‘பசு’

ஆயிஷா அன்ட்ரப் – பசுமாடு அறுத்த வீராங்கனை, காஷ்மீர பெண் ஜிஹாதி, ஆயுத போராளி, ஐசிஸ் ஏஜென்டா? (1)

திசெம்பர் 31, 2015

ஆயிஷா அன்ட்ரப் பசுமாடு அறுத்த வீராங்கனை, காஷ்மீர பெண் ஜிஹாதி, ஆயுத போராளி, ஐசிஸ் ஏஜென்டா? (1)

ஆயிஸா அன்ட்ரபி கத்திகளுடன்

காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதுதான் ஒரே வழி: துக்தரன்-இ-மில்லத் [(Dukhtaran-e-Millat (DeM), உம்மாவின் மகள்கள்] என்ற தீவிரவாத இயக்கத்தின் தளபதி-தலைவி ஆஷியா அன்ட்ரபி (Asiya Andrabi, வயது 53) 2010களில் “கல்லடி கலாட்டா” என்ற யுக்தியைக் கையாண்டு, பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்களை தெருக்களில் வந்து, பாதுகாப்புப் படை, ராணுவம் மற்றும் போலீஸ் மீது கற்களை எறியும் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தாள். கடந்த ஆகஸ்ட் 14, 2014 அன்று பாகிஸ்தான் கொடியேற்றி, பாகிஸ்தான் விடுதலை தினத்தைக் கொண்டாடினாள். இதே போல மார்ச்.23, 2014 அன்றும் செய்துள்ளாள். செப்டம்பர் 2014ல் கைது செய்யப்பட்டாள்[1]. உடன் பெஹ்மிதா சூபி [Fehmida Soofi] என்ற இன்னொரு பிரிவினைவாதக்குழுத் தலைவியும் இருந்தாள். இதனால், இவள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது[2]. உடனே, தொலைபேசியில், மும்பை குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தேடப்பட்டுவரும், தீவிரவாதியான  ஹாவிஸ் சையதுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளாள். சையது ஜிலானியின் மாணவி, பிரிவினைவாதத்தில் ஈர்க்கப்பட்டு, ஜிலானி வழியில் செயல்பட்டும் அடிப்படைவாத போராளி. மனித உரிமைகள் பெயரில், அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிகளின் குரூரக் கொலைகள், கற்பழிப்புகள் முதலியவற்றை மறைத்து, அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத ஜிஹாதிகளின் உரிமைகள் பற்றி பேசிவரும் திறமைசாலி. இதனால், சிறைக்குள் செல்வது, வெளியே வருவது என்பது வாடிக்கையாகி விட்டது. காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதுதான் ஒரே வழி என்று போதிக்கும் இவள் பிரிவினைவாதப் போர்வையில், ஜிஹாத் தத்துவத்தை பெண்களுக்கு போதித்து வருகிறாள்.

காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும்

ஜிஹாதி குடும்பத்தில் பிறந்து, ஜிஹாதியாக செயல்பட்டுவரும் ஜிஹாதிபெண்: ஆயிஷா அன்ட்ரபி 1962ல் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது[3]. 1990ல் ஆஷிக் ஹுஸைன் என்ற பயங்கரவாதியை நிக்காஹ் செய்து கொண்டாள், அவனும் பயங்கரவாத செயல்களுக்காக கடந்த 23 ஆண்டுகளாக 1992லிருந்து சிறையில் இருக்கிறான். ஹிஜ்புல் முஜாஹித்தீன் என்ற தீவிரவாத இயக்கத்தைத் துவக்கியவர்களுள் ஒருவன். மொஹம்மது பின் காசிம் (23) மற்றும் அஹமது பின் காசிம் (15) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இவளுடைய மற்ற உறவினர்கள் பாகிஸ்தான், சௌதி அரேபியா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று விட்டனர். 1990ல் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு, கைதாகி, பிறகு 2004-2007 காலத்தில் தலைமறைவாக வாழ்ந்தாள். சர்வகட்சி ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் [All Parties Hurriyat Conference] கிளையாக துக்தரன்-இ-மில்லத் செயல்பட்டு வருகிறது. இவளின் மூன்று மைத்துனர்கள், தீவிரவாத தொடர்புகளுக்காக, பாகிஸ்தானில் செப்டம்பர் 2013ல் கைது செய்யப்பட்டனர். 2010ம் வருடம் மஸ்ரத் ஆலத்துடன் “கல்லடி கலாட்டாவில்” இறங்கியவள். இளைஞர்கள் மற்றவர்களைத் தூண்டிவிட்டு நடத்திய இந்த கல்லடி கலாட்டாக்களில் சுமார் நூறு பேர் இறந்ததாக தெரிகிறது. வெளிப்டையாக ஜிஹாதித்துவத்தை போதித்து இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி வருகிறாள் என்று காஷ்மீர மிதவாதிகளே குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆயிஸா அன்ட்ரபி பசுவைக் கொன்று எதிர்ப்பைத் தெரிவித்தாள்.1

கல்லெறி கலாட்டா ஜிஹாதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டது (ஆகஸ்ட்.2011)[4]: காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்கியதுடன், பொது சொத்துக்களுக்கு தீ வைத்தும் கொழுத்தினார்கள். கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு அங்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது பாலஸ்தினத்தில் பயன்படுத்தப் படும் முறை என்பதனையும் அறியப்பட்டது. கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதிலும் ஊடகக்காரர்கள் காயப்பட்டனர். ஆனால், இதைப் பற்றி அவர்கள் ஒன்றும் ஆர்பாட்டம் செய்யவில்லை. இந்நிலையில் காஷ்மீர் அரசு இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. கலவரத்தின் போது தீ வைப்பு போன்ற சட்ட விரோத செயலில் சம்பந்தப்படாமல் கல்வீச்சில் மட்டும் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டது[5]. இது தொடர்பாக காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லா கூறுகையில், வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது[6]. பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைத்தவர்களை தவிர மற்றவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என கூறினார்[7].

ஆயிஸா அன்ட்ரபி பசுவைக் கொன்று எதிர்ப்பைத் தெரிவித்தாள்.2

பசுமாட்டை அறுத்து எதிர்ப்புத் தெரிவித்த பயங்கரவாதி[8]: ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட பசு-மாமிச விற்பனை தடையை எதிர்த்து செப்டம்பர் 2015ல் ஒரு பசுவைக் கொன்று, அந்த கொலைக்காட்சி விடியோவை வெளியிட்ட[9] ஆயிஷா அன்ட்ரபியை என்னென்பது? அவளைக் கொடூரக்காரி எனலாமா அல்லது ஜிஹாதி என்று பாராட்டலாமா? பெண்களுடன் நின்று கொண்டிருக்கிறாள். ஒரு பசுமாட்டை இழுத்து வந்து, அவள் முன்னால் அறுக்கிறார்கள். அந்நேரத்தில் “தாரே தக்பீர், அல்லாவு அக்பர்” என்று கத்துகிறாள். வெறியோடு கத்தும் அவளது குரல் வீடியோவில் தெளிவாகக் கேட்கிறது. இதில் திகிலூட்டுவது என்னவென்றால், குழந்தை ஏந்திய ஒரு பெண் முன்வரிசையில் நின்று கொண்டு அவ்வாறு கத்துகிறாள். இப்படி பயங்கரமான செயல்களை சிறுவயதிலிருந்தே பார்த்து, கடினமாகி, இருகிவிட்ட இம்மனங்களுக்கு ஜீவகாருண்யம் என்பதெல்லாம் எப்படி புரியும்? பெண்கள் மென்மையானவர்கள் என்றெல்லாம் இங்கு செல்லுபடியாகாது. பெண் என்றால், பேயும் இரங்கும் என்றேல்லாம் சொல்லமுடியாது, ஏனெனில், பேயே இவளைக் கண்டால், பயப்படும். மற்ற பெண்களின் துன்பத்தை கண்டுகொள்ளாமல் மரத்துப் போன, வெறிபிடித்த ஜிஹாதி, முஸ்லிம் பெண்களுக்காக பாடுபடுகிறாள் என்று வேறு சொல்லிக் கொள்கிறாள். இந்நிகழ்ச்சி வெளிப்படையாக ஊடகங்களில் வரவில்லை. மறைக்கப்பட்டது எனலாம். “பீப்” விசயத்தில் அத்தனை கலாட்டா, ஆர்பாட்டம் செய்த ஊடகங்களை இதனை ஏன் மறைக்க வேண்டும்? இது சகிப்புத்தன்மையா என்று யாரும் கேட்கவில்லை.

ஆயிஸா அன்ட்ரபி பசுவைக் கொன்று எதிர்ப்பைத் தெரிவித்தாள்.3

ஆயிஷா அன்ட்ரபி ஐசிஸ்க்கு ஆள்பிடிக்கும் போராளியா?: இப்பொழுது டிசம்பர் 2015ல் ஹைதரபாதிலிருந்து மூன்று இளைஞர்கள் அன்ட்ரபியை சந்தித்து ஐசிஸ்ஸில் சேர செல்வதாக மத்தியாரசு புலனாய்வுத் துறைக்குத் தெரிய வந்தது[10].

  1. மொஹம்மது அப்துல்லா பசித் [Mohd Abdulla Basith],
  2. சையது ஒமர் பரூக் ஹுஸைனி [Syed Omer Farooq Hussaini]
  3. மாஜ் ஹஸன் பரூக் [ Maaz Hasan Farooq]

இவர்கள் எல்லோருமே 20-22 வயதினர், உறவினர்கள் ஆவர். இவர்கள் எல்லோருமே, அன்ட்ரபியை சந்தித்து, பாகிஸ்தான் வழியாக ஐசிஸ் சேர செல்வதாக இருந்தது. கடந்த வாரம் மஹாராஷ்ட்ரா ஏ.டி.ஸ்.பிரிவு போலீஸாரால், நாக்பூர் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது அவ்விவரம் தெரியவந்தது. அவர்கள் அன்ட்ரபியை சந்திக்க விரும்பியதாகத் தெரிவித்தனர்[11]. இவர்களது மாமா சையது சலாவுத்தீன், தடை செய்யப்பட்ட சிமியின் தலைவர் ஆவார். இவர்கள் ஐசிஸ், தாலிபான், அல்-குவைதா அல்லது ஹிஜ்புல் முஜாஹித்தீன் போன்ற தீவிரவாத இயக்கத்துடன் சேருவதாக திட்டமிட்டிருந்தனர்[12]. ஆனால், அன்ட்ரபி அவர்கள் தன்னை சந்திக்கவில்லை என்றும், அவர்கள் யார் என்பதும் தனக்குத் தெரியாது என்றும், அவர்கள் வேண்டுமென்றே தன் பெயரை இழுத்து விட்டனர் என்றும் கூறியுள்ளாள்[13]. சட்டத்தை வளைப்பதற்கு இவ்வாறு பேசுவது, பலமுறை சிறைச் சென்று விடுவிக்கப்பட்ட இவளுக்கு கைவந்த கலை என்பதால், ஒன்றும் வியப்பில்லை. விடுவிக்கப்பட்ட பிரிவினைவாதியான மஸரத் ஆலமும் [Masarat Alam] மறுபடியும் கைது செய்யப்பட்டான்.

ஆயிஸா அன்ட்ரபி பசுவைக் கொன்று எதிர்ப்பைத் தெரிவித்தாள்.4 - கைக்குழந்தயுடன்

© வேதபிரகாஷ்

31-12-2015

[1] The youngest child of prominent Srinagar doctor Sayeed Shahabuddin Andrabi, 1962-born Ms. Andrabi had completed a degree in biochemistry, and hoped to study further in Dalhousie. http://www.geo.tv/article-197860-Asiya-Andrabi-arrested-four-Kashmiris-killed-in-Indian-army-firing-

[2] The DeM chief celebrated Pakistan’s Independence Day on August 14 at her residence by singing that country’s national anthem and unfurling the flag of the neighbouring country on the outskirts of the city. Hours after that, Andrabi had stoked another controversy by addressing via phone a rally in Pakistan which was organized by Mumbai attack mastermind Hafiz Saeed-led Jamat-ud Dawa (JuD).

Saeed was sitting on the stage during Andrabi’s address. Andrabi had earlier also celebrated Pakistan’s National Day on March 23 this year and hoisted the flag of the country and sung its national anthem, following which the police registered a case against her under the Unlawful Activities Prevention Act.

http://articles.economictimes.indiatimes.com/2015-09-18/news/66677405_1_dem-chief-pakistani-flag-saeed

[3] http://www.thehindu.com/news/national/inside-kashmirs-new-islamist-movement/article580687.ece?ref=relatedNews

[4] மாலைமலர், கல் எறிந்தவர்களுக்கு பொது மன்னிப்பு: காஷ்மீர் அரசு அறிவிப்பு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28, 3:04 PM IST.

[5] http://www.maalaimalar.com/2011/08/28150458/Amnesty-for-throwing-stones-Ka.html

[6] தினமலர், கல் எறிந்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க காஷ்மீர் மாநில அரசு முடிவு, ஆகஸ்ட்.28, 2011, 17:14.

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=302950

[8] https://www.youtube.com/watch?v=UVwF71dJWMQ

[9] Ms. Andrabi, who slaughtered a cow after a court ordered banning the same, faces a number of FIRs in the Valley. She released a 1:15-minute video on September 10 wherein she slaughtered a cow to defy the beef ban.

http://www.thehindu.com/news/national/separatist-andrabi-arrested-for-antinational-activities/article7664426.ece

[10] The central government has ordered an investigation by a high-level body after three boys, Mohd Abdulla Basith, Syed Omer Farooq Hussaini and Maaz Hasan Farooq (all aged around 20-22) from Hyderabad claimed they were on their way to Srinagar to meet Andrabi.

http://www.hindustantimes.com/punjab/dukhtaran-e-millat-chief-asiya-andrabi-denies-isis-links/story-uSQaI3tGwRuMcn9g6Q00tL.html

[11] Whether Kashmiri separatist leader Asiya Andrabi visited Telangana has yet to be determined, said the local police today amid reports that three young men arrested for wanting to join jihadi groups in Pakistan have confessed that they wanted to meet the 53-year-old.

http://www.ndtv.com/top-stories/isis-controversy-links-3-hyderabadi-cousins-to-separatist-asiya-andrabi-1260743

[12] During the interrogation, the arrested men reportedly confessed that they were trying to join any of the jihadist groups — ISIS, Al Qaeda or Hizbul Mujahideen. The police say their uncle was Sayed Salahuddin, the former chief of the banned Students Islamic Movement of India or SIMI.

http://www.ndtv.com/top-stories/isis-controversy-links-3-hyderabadi-cousins-to-separatist-asiya-andrabi-1260743

[13] “I came to know about the story through the media. Even the ATS (Anti-Terrorism Squad) Hyderabad was quoted saying that they [the boys] wanted to meet me. I think the arrested boys know better why they named me. It seems my name has been deliberately dragged in,” said Ms. Andrabi.

http://www.thehindu.com/news/national/other-states/never-met-hyderabad-youths-andrabi/article8046023.ece

மலேசியாவில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுதல்: பசுமாடு தலை ஊர்வலத்திற்குப் பிறகு, மாரியம்மன் தலை உருளல்!

ஏப்ரல் 5, 2012

மலேசியாவில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுதல்: பசுமாடு தலை ஊர்வலத்திற்குப் பிறகு, மாரியம்மன் தலை உருளல்!

மலேசியா முஸ்லீம் நாடானது: இந்து நாடாக இருந்த மலேசியா எப்படி முஸ்லீம் மயமாக்கப் பட்டது என்று முன்னமே பல இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்[1]. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் எப்படி ஸ்ரீவிஜய அரசர்கள் சைனர்களுடன், அரேபியர்களுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்தனரோ, அதே நிலை இன்றும் தொடர்கிறது. பரமேஷ்வரன் 1411ல் சீனாவிற்குச் சென்று, மிங் வம்சாவளி அரசனைப் பார்த்து 1414ல் தனது பெயரை மாற்றிக் கொள்கிறானாம். அவனது மகன் செரி மஹாராஜாவும் “சுல்தான்” என்ற பட்டத்துடன் 1424ல் பட்டத்திற்கு வருகிறானாம்[2]. 50 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் ஆட்சியாளர்கள் முஸ்லீம்களக மாறியவுடன், நாடே மாறிவிடுகிறது. இன்று நவீன காலத்திலும், மதமாற்றம் சட்டப்படி ஊக்குவிக்கப் படுகிறது[3]. 1946ல் சுதந்திரம் பெற்றும், மலேசியா இஸ்லாமிய நாடாக மாறுகிறது. கோவாவிலிருந்து அல்பான்ஸோ அல்புகுர்க், சேவியர் எல்லோரும் இங்கு வந்தாலும் கிருத்துவர்கள் ஆகவில்லை. கோவாவில் இருந்த இந்துக்கள் கொல்லப்பட்டு, கோவில்கள் இடிக்கப்பட்டு கிருத்துவமயமாக்கப் பட்டது. ஆனால், மலேசியா முஸ்லீமாகியது ஆச்சரியமே. அந்நாட்டுச் சட்டதிட்டங்கள், இந்துக்களுக்கு எதிராகத்தான் உள்ளது. அதாவது இஸ்லாமிய-ஷரீயத் சட்டம் அமூலில் உள்ளதால், காபிர்களான இந்துக்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. வெளிப்படையாக பார்த்தால் ஒன்றும் இல்லாதது போல தெரியும். ஆனால் நடந்து வரும் நிகழ்ச்சிகள் அதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

தொடர்ந்து கோவில்கள் இடிக்கப்படுதல்: கோவில்கள் உடைப்பது, இடிப்பது முதலியன சர்வசகஜமான காரியங்கள், விஷயங்களாக உள்ளன. கோவில்களில் ஏதாவது நடந்தால், அது “திருடர்கள்” செய்தார்கள் என்றுதான் செய்திகள் வரும், அதாவது நம் ஊரில் “சமூக விரோதிகள்” என்பதுபோல. ஏப்ரல் 26, 2006ல் கோலாலம்பூரில் நூறாண்டுகளுக்கும் மேலாக விளங்கி வந்த மலைமேல் ஸ்ரீ செல்வ காளியம்மன் கோவில் புல்டோசர்களால் இடித்துத் தள்ளிப் பட்டது[4]. ஆயிரக்கணக்கில் இந்துக்கள், அழுது-புலம்பி வேண்டியும், அதிகாரிகள் கொஞ்சமுன் இரங்காமல், போலீசை வைத்து இடித்துத் தள்ளியது. 107 ஆண்டுகள் பழமைவாய்ந்த அக்கோவிலுக்கு, இஸ்லாம் அரசு அனுமதி மறுத்து வந்தது. 1977லிருந்து விண்ணப்பித்தும், அதனை வேண்டுமென்றே நிராகரித்து வந்தது. இதுபோல நூற்றுக்கணக்கான கோவில்கள் இடுத்துத்தள்ளப்பட்டன.

இந்து கோவில் கட்டக்கூடாது என்று முஸ்லீகளின் வெறிச்செயல்!

ஆகஸ்ட்.29, 2009ல் இந்துக்கள் தங்களுக்காக ஒரு கோவிலைக் கட்டத் தீர்மானித்தபோது, செலங்கூர் தலைநகர் ஷா ஆலம் என்ற இடத்தில் 50 முஸ்லீம்கள் சேர்ந்து கொண்டு கலாட்டா செய்தனர். வழக்கம்போல, தொழுகைக்குப் பிறகு மசூதியிலிருந்துப் ( Sultan Salahuddin Abdul Aziz Mosque ) புறப்பட்ட முஸ்லீம்கல் ஒரு பசுமாட்டின் தலையை அறுத்து, அதனை வீதி-வீதியாக எடுத்துச் சென்று, அரசு தலைமையகத்தின் வாசலில் போட்டனர். வெறிபிடுத்து கால்களினால் ரத்தம் சொட்டும் அந்த பசுத்தலையை உதைத்துத் தள்ளினர்.

Malaysian Muslims protest against proposed construction of Hindu temple[5]

August 29, 2009|Associated Press

KUALA LUMPUR, Malaysia – Dozens of Malaysian Muslims paraded yesterday with the head of a cow, a sacred animal in Hinduism, in a dramatic protest against the proposed construction of a Hindu temple in their neighborhood.

The unusual protest by some 50 people in Shah Alam, the capital of Selangor state, raises new fears of racial tensions in this multiethnic Muslim-majority country where Hindus make up about 7 percent of the 27 million population.

The demonstrators who marched from a nearby mosque after Friday prayers dumped the cow head outside the gates of the state government headquarters. Selangor adjoins Kuala Lumpur.

மைக் சகிதம் வைத்துக் கொண்டு, “தாரே தக்பீர், அல்லாஹு அக்பர்” என்று கூச்சலிட்டனர். தலையை அரசு தலைமையகத்தின் வாசலில் போட்டுவிட்டு சென்றனர்[6]. பசு இந்துக்களுக்கு புனிதமான விலங்கு, அதனை தெய்வமாகப் போற்றுகின்றனர். 7% இருக்கின்ற இந்துக்கள் மதரீதியிலாக பாதிப்பில் இருந்து வருகின்றனர். வேடிக்கை என்னவென்றால், மலேசிய உள்துறை அமைச்சர் அதனை ஆதரித்துள்ளார்[7].இவ்வளவு குரூரமான செயல் நடந்தும், போலீஸ் ஒன்றும் செய்யமுடியவில்லையாம்.

இந்துஉரிமைகள்போராட்டக்குழு: 2007ல் நடந்த இக்குழுவின் போராட்டத்தில், அதன் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மலேசிய நாட்டு தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டதால், இன்ட்ராப் குழு தனது போராட்டங்கள் முதலியவற்றை அடக்கிக் கொண்டது. அக்டோபர் 18, 2008ல் இன்ட்ராப் பொது ஒழுங்கு மற்றும் நேர்மை முதலியவற்றிற்கு குந்தகம் விளைக்கும் வகையில் செயல்பட்டுவதாகக் குற்றஞ்சாட்டப் பற்றி தடைச்செய்யப்பட்டது[8]. இன்ட்ராப் தலைவர்களில் ஒருவரான வைத்தியமூர்த்தி மற்றும் அவரது ஆறுவயது பெண்குழந்தை முதலியோர் கைது செய்யப்பட்டனர். ஆகமொத்தத்தில், இந்தியாவில், தமிழகத்தில் தமிழர்களின் உரிமைகள் என்றெல்லாம் கூச்சலிட்டுத் திரியும் கூட்டங்கள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை. முஸ்லீம்தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கும் அருந்ததிராய், இம்மக்களின் உரிமைப்பறிப்புகள், கைதுகள் பற்ரி மூச்சுக் கூடவிடவில்லை.

இந்துக்கோவில்கள் தாக்கப்படுவது சகஜமான விஷயம்: முன்பு பல கோவில்கள் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி அரசாங்கமே இடுந்துத் தள்ளியுள்ளது. மலேசிய தமிழ் அரசியல்வாதிகள், “நம்மவூர் நாத்திகத் திராவிடர்கள்” போல முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். உள்ளே இஸ்லாமிய அரசிற்கு சாதகமாகவும், வெளியில் ஏதோ மலேசிய இந்துக்களுக்கு உதவுவதுமாதிரிக் காட்டிக் கொள்வர்.

ஏப்ரல் 3, 2012ல் மறுபடியும் வெறியாட்டம்: பங்குனி உத்திரம் வந்தால், மலேசியர்களுக்கு வெறி பிடிக்கும் போல இருக்கிறது. குறிப்பாக கோவில்களைத் தாக்க அவ்வெறித்தூண்டுதல் மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள மாரியம்மன் கோவிலில், எட்டு சிலைகளை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் கிழக்கு பகுதியில் டெர்ரங்கானு என்ற இடத்தில், ஸ்ரீ மகா மாரியம்மன் சபை கோவில் உள்ளது. கம்புங் பகுட் குயாங் (Kampung Bukit Kuang) என்ற இடத்திலிருந்து, துறைமுகத்தில் வேலைசெய்து வரும் தொழிலாளி ஒருவர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது, நேராகச் சென்று மாரியம்மன் கோவிலிலுள்ள சிலைகளை உடைத்துப் போடு என்று தனக்கு யாரோ ஆணைட்டதாக உணர்ந்தததால், மோட்டார் சைக்கிளில் விரைவாக அன்று சென்றான். யூனிபாம் போட்டு வந்தவன்,  நேராக கோவிலுக்குள் நுழைந்தான். 29 வயதான அவன் கோவில் கதவை சேதப்படுத்தி விட்டு உள்ளே சென்று, எட்டு சிலைகளை உடைத்துள்ளான். இந்த சம்பவத்தை பார்த்த பூசாரியும், கோவில் நிர்வாகியும் பயந்து போய், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, சிலைகளை உடைத்த நபரை கைது செய்தனர். இவரிடம் விசாரித்ததில், கோவில் சிலைகளை உடைக்கும்படி அசரீரி கூறியதாகக் குறிப்பிட்டுள்ளான்[9]. உடனே அவன் மனம் நலம் பாதிக்கப்பட்ட நபராக உள்ளான் என்று கூறி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.

“கோவில் சிலை உடைப்பை அரசியலாக்க வேண்டாம். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை’: தமிழர்களை, குறிப்பாக தமிழ் இந்துக்களை முஸ்லீம்கள் சரியாகத்தான் புரிந்து கொண்டுள்ளார்கள். “கோவில் சிலை உடைப்பை அரசியலாக்க வேண்டாம். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை’ என, போலீசார் தெரிவித்துள்ளனர். ஆகவே, மலேசியனுக்கு திடீர்-திடீர் என்று இவ்வாறு மனநிலை சரியாமல் போய்விடும்; யாரோ விக்கிரகத்தை உடை என்று சொல்வார்கள்; அவனும் உடைத்து விடுவான்; ஜாலியாக ஆஸ்பத்திரியில் சில நாட்கள் வைத்து அனுப்பி விடுவர். இந்துக்களுக்கு மட்டும் சுரணையில்லாமல், காசு வருகிறது என்று அவர்களது கால்களை நக்கிக் கொண்டிருப்பார்கள் போலும்.

வேதபிரகாஷ்

05-04-2012


[8] After several warnings by the Malaysian government HINDRAF was officially banned on October 15, 2008, confirmed by Malaysian Home Minister Datuk Seri Syed Hamid Albar.In a statement issued at the ministry, Syed Hamid said the decision to declare HINDRAF as an illegal organisation was made following the ministry being satisfied with facts and evidence that showed HINDRAF had and was being used for unlawful purposes and posed a threat to public order and morality. “Based on powers vested under Section 5(1) of the Societies Act, HINDRAF from today is declared an illegal organisation,” he said.

http://www.bernama.com/bernama/v3/news_lite.php?id=364772

http://thestar.com.my/news/story.asp?file=/2008/10/15/nation/20081015184431&sec=nation

http://www.malaysianbar.org.my/legal/general_news/hindraf_declared_an_illegal_organisation.html

இஸ்லாம் இப்படியும் செய்யுமா?

திசெம்பர் 14, 2009

இஸ்லாம் இப்படியும் செய்யுமா?

இச்செய்தி பழைதேயாயினும் இதை இப்போழுது படித்தபோது ஆச்சரியமாக இருந்தது.

ஏனெனில் அந்த முஸ்லீம்களைப் பார்க்கும் போது மிகவும் நாகரிகம் மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர்.

இறகு எப்படி அவர்கள் அத்தகைய கீழ்த்தரமான செயல்களை செய்கின்றனர்? தமிழக / தமிழ் பேசும் முஸ்லீம்கள் பொத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் மலேசியரின் பெரும்பாலான மூதாதையர்கள் எல்லாம் இந்துக்கள்தாம்.பிறகு என்ன இத்தகைய காழ்ப்பு, வெறுப்பு, துவேஷம் எல்லாம்?

மலேசியாவில் இந்துக்களை அவமதித்து, – ‘மாட்டுத்தலையுடன்’ நடந்த ஆர்ப்பாட்டம் சர்ச்சையில்


Written by Sara  Wednesday, 09 September 2009 06:31
 

மலேசியாவில் செலாங்கூர் மாநில தலைநகர் ஷாஅலாமில் செக்ஷன் 19 இல் இருந்த, 150 வருடம் பழமைமிக்க பாரம்பரிய இந்து கோவில் ஒன்றினை, செக்சன் 23ல் அதிகமாக முஸ்லீம் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு இடம்மாற்றம் செய்ய, அரசு தீர்மானம் எடுத்திருந்ததை முன்னிட்டு, அக்குடியிருப்பு வாசிகள் ஒன்றினை ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஓர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்து கோவில் கட்டக்கூடாது என்று முஸ்லீகளின் வெறிச்செயல்!

ஆகஸ்ட்.29, 2009ல் இந்துக்கள் தங்களுக்காக ஒரு கோவிலைக் கட்டத் தீர்மானித்தபோது, செலங்கூர் தலைநகர் ஷா ஆலம் என்ற இடத்தில் 50 முஸ்லீம்கள் சேர்ந்து கொண்டு கலாட்டா செய்தனர். வழக்கம்போல, தொழுகைக்குப் பிறகு மசூதியிலிருந்துப் ( Sultan Salahuddin Abdul Aziz Mosque ) புறப்பட்ட முஸ்லீம்கல் ஒரு பசுமாட்டின் தலையை அறுத்து, அதனை வீதி-வீதியாக எடுத்துச் சென்று, அரசு தலைமையகத்தின் வாசலில் போட்டனர். வெறிபிடுத்து கால்களினால் ரத்தம் சொட்டும் அந்த பசுத்தலையை உதைத்துத் தள்ளினர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில், இந்துக்கள் தெய்வமாக மதித்து வழிபடும், (கோமாதா) பசுவினை நிந்திக்கும் முகமாக, உண்மையான ஒரு மாட்டுத்தலையினை தமது கைகளில் பிடித்த படி கொண்டு வந்து, அதனை அரச கட்டிட நுழைவாயிலில் போட்டு மிதித்துள்ளதுடன், காறியும் உமிழ்ந்துள்ளனர்.
இது இந்துக்கள் மீதான இனவெறியினை சித்தரிக்கும் முகமாக அமைந்திருக்க, கடும் அதிர்ச்சிக்குள்ளானர்கள் இந்துமக்கள்.

இவ் ஆர்ப்பாட்டத்தின் பின்னர், இந்துக்கோவிலை இடம்மாற்றம் செய்யும் திட்டத்தை மாநில அரசாங்கம் முடக்கி வைத்தது.

எனினும் மாட்டுத்தலை ஆர்ப்பாட்டக்காரர்களின் விவகாரத்தினால், மலேசிய தமிழர்கள் மிகவும் கொதிப்படைந்து போயினர்.

இந்நிலையில், இத்தேச நிந்தனைக்காக குற்றம் சுமத்தப்பட்டு, சுமார் ஆறு பேர் கைது செய்யப்பட்டு, 15, 000 ரிங்கிட் பிணையில் ஜாமீனில் விடுவிக்கப்படவுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதனை எதிர்த்தும் அக்குடியிருப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லீம் இன குடியிருப்பாளர்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் தவறேதும் செய்யவில்லை. எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஒன்று பட்டோம். அவ்வளவு தான் எனக்கூறியுள்ளனர்.

எனினும் இம்மாட்டுத்தலை ஆர்ப்பாட்டத்தினால், மலேசியாவின், முஸ்லீம், இந்துக்களிடையேயான முறுகல் நிலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.