Posted tagged ‘நியூ காலேஜ்’

ஐசிஸ்-தமிழக தொடர்புகள் கல்லூரி நாட்களிலேயே மரைக்காயர் அடிப்படைவாதி – இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை (தி இந்து)!

நவம்பர் 23, 2015

ஐசிஸ்-தமிழக தொடர்புகள் கல்லூரி நாட்களிலேயே மரைக்காயர் அடிப்படைவாதி – இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை (தி இந்து)!

பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்-2

கல்லூரி நாட்களிலேயே மரைக்காயர் அடிப்படைவாதி – இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை (தி இந்து): இது வெறும் கதையல்ல இந்தக் கதை பல்வேறு உலக நாடுகளையும் ஐ,எஸ். கோட்பாட்டின் ஆதிக்கம் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து கவலை கொள்ளச் செய்துள்ளது. முகமது மரகாச்சி மரைக்காயர், கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டார். மரைக்காயர் சவுதி அரேபியாவில் ஐந்து ஆண்டுகள் வேலை செய்துள்ளார். அதன் பின்னர் 2007-ல் சிங்கப்பூர் சென்றுள்ளார். எக்ஸான் மொபைல், ஐ.பி.எம்., போன்ற நிறுவனங்களில் வேலை செய்துள்ளார். மரைக்காயர் சிங்கப்பூர் வர முக்கிய காரணமே அவரது நண்பர் ஃபக்ருதீனை பார்க்க வேண்டும் என்பதே. மரைக்காயரிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது பல்வேறு முக்கியத் தகவல்களும் கிடைத்தன. கல்லூரி நாட்களிலேயே மரைக்காயர் அடிப்படைவாதியாக இருந்துள்ளார். தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார். ஜனநாயகம் மீது அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை. உள்ளூர் தேர்தல்களை அவர் எதிர்த்துள்ளார்.

 பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்

திசையை மாற்றிய பிரச்சாரம் – இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை – (தி இந்து)[1]: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தீவிரவாத பிரச்சாரகர் பெய்ஸ் முகமதின் பேச்சுக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டார் மரைக்காயர். அதேபோல் ஏமன் நாட்டின் அன்வர் அல் அவ்லாகியின் பேச்சுகளும் அவரை வெகுவாக ஈர்த்தது. 2011-ல் அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். சிங்கப்பூரில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சிங்கப்பூர் தேசிய தினத்தை ஒட்டி மசூதி ஒன்றில் ஏற்றப்பட்டிருந்த அந்நாட்டு தேசியக் கொடியை அப்புறப்படுத்தியுள்ளார். இதற்காக அவரை சிங்கப்பூர் போலீஸார் கைது செய்தனர். பின்னாளில் சிங்கப்பூர் போலீஸார் நடத்திய விசாரணையில், ஃபக்ருதீனை மூளைச் சலவை செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைய வைத்ததை மரைக்காயர் ஒப்புக் கொண்டார். சிரியா போன்ற நாடுகளில் தவிக்கும் முஸ்லிம்களுக்கு உதவுவது நமது கடமை என ஃபக்ருதீனை நம்ப வைத்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். மரைக்காயரால் மூளைச்சலவை செய்யப்பட்ட ஃபக்ருதீன் சிரியாவில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர் ஒருவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். அநத நபர் கூறியது போல் 1,500 டாலர் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு சிரியா பயணப்பட தயாரானார் ஃபக்ருதீன். இனி ஐ.எஸ். கலிஃபேட்டில்தான் தனது வாழ்க்கை என்பதை அவர் உறுதி செய்துள்ளார். மீண்டும் ஐ.எஸ். ஆதரவாளரை தொடர்பு கொண்டார். அவர், குடும்பத்துடன் வருமாறு ஃபக்ருதீனுக்கு ஆலோசனை அளித்துள்ளார்.

The detention of Adnan Hassan Damudi in Dubai

நவம்பர் 18, 2013-ல் சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஃபக்ருதீனையும் அவரது குடும்பத்தினரையும் கடைசியாக சந்தித்து வழி அனுப்பிவைத்த மரைக்காயர்: அப்போதுதான் சிரியாவுக்குள் நுழைய எளிதாக இருக்கும் எனவும் ஃபக்ருதீனுக்கு அவர் கூறியுள்ளார். அதன்படி குடும்பத்துடன் சிரியா புறப்பட்டார் ஃபக்ருதீன். நவம்பர் 18, 2013-ல் சிங்கப்பூர் விமான நிலையத்தில் ஃபக்ருதீனையும் அவரது குடும்பத்தினரையும் கடைசியாக சந்தித்து வழி அனுப்பியிருக்கிறார் மரைக்காயர். 12 நாட்கள் கழித்து ஃபக்ருதீனின் குடும்பத்தினர் துபாய் திரும்பினர். செச்சன்யாவில் இருந்து வந்த சில போராளிகளுடன் ஃபக்ருதீன் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இருப்பினும் ஐ.எஸ். ஆதிக்கம் உள்ள முக்கிய பகுதிகளுக்கு அவர்களால் செல்ல முடியவில்லை. அங்கு வாழ்வதற்கான சூழல் இல்லாததால் 12 நாட்களிலேயே ஃபக்ருதீன் குடும்பத்தினர் அனைவரும் துபாய் திரும்பியுள்ளனர்.

பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்- போட்டோ

சென்னையில் இருந்து மேலும் இருவரை சிரியாவுக்கு அழைத்துச் செல்ல முயற்சி – இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை – (தி இந்து)[2]: இந்திய உளவு நிறுவனங்கள் வசம் இருக்கும் தகவலின்படி, ஃபக்ருதீன் இரண்டாவது முறையாக சிரியாவுக்குச் செல்ல திட்டமிட்டபோது சென்னையில் இருந்து மேலும் இருவரை அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறார். அந்த இருவரது அடையாளமும் தெரியவந்துள்ளது. இருவரில் ஒருவருக்கு துருக்கி விசா மறுக்கப்பட்டுவிட்டது. மற்றொருவருக்கு பாஸ்போர்ட்டே இல்லை. இதனால், அவர்களை விட்டுவிட்டு மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சிரியா புறப்பட்டுச் சென்றார் ஃபக்ருதீன். ஜனவரி 22, 2014-ல் இச்சம்பவம் நடந்தது. தற்போதைய தகவலின்படி, ஃபக்ருதீன் சிரியா – துருக்கி எல்லையில் இருக்க வேண்டும் எனக் கூறுகின்றன உளவு நிறுவனங்கள். ஃபக்ருதீன் குடும்பத்துடன் சிரியா செல்ல விமான டிக்கெட்டை கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அவருக்கு சென்னையில் டிராவல் ஏஜென்சி இருக்கிறது. மேலும், தான் குடும்பத்தினருடன் பத்திரமாக சிரியா அடைந்துவிட்டதாக ஃபக்ருதீன் கன்னியாகுமரி இளைஞருக்கு தகவலும் அனுப்பியுள்ளார். சிரியாவுக்கான முதல் பயணம் தோல்வியடைந்த பின்னர் டிசம்பர் 2013-ல் இருந்து ஜனவரி 2014 வரை ஃபக்ருதீன் சென்னையில் தங்கியுள்ளார். அப்போது அவர் தான் படித்த புதுக்கல்லூரி மாணவர்கள் சிலரையும் மூளைச்சலவை செய்ய முயன்றுள்ளார்.

New college students become ISIS warriors

தமிழகத்தைச் சேர்ந்த சிறிய குழு சிரியா சென்று .எஸ்ஸில் தங்களை இணைத்துக் கொள்ள ஒன்று தயாராக இருந்தது- இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை – (தி இந்து)[3]: ஐ.எஸ். மீது ஈர்ப்பு கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பல இளைஞர்களும் ஃபக்ருதீனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் கடலூரில் குரான் மனனம் செய்ய பயிற்றுவிக்கும் பள்ளியை நடத்துபவர். இவரைத் தவிர சென்னையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஒருவரும், புதுக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவரும் அடங்குவர். உளவுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “சிரியா சென்று ஐ.எஸ்-ஸில் தங்களை இணைத்துக் கொள்ள தமிழகத்தைச் சேர்ந்த சிறிய குழு ஒன்று தயாராக இருந்ததற்கு நம்பத்தகுந்த ஆதாரம் இருக்கிறது. சிரியா செல்வதற்கு முன்னர் மூன்று மாதங்களுக்கு உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றனர். சிரியா செல்பவர்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ.20,000 பணமும், ஒருவேளை அவர்கள் உயிரிழந்துவிட்டால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் பணமும் அளிக்கப்படும் என அந்த இளைஞர்களிடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பணத்தை யார் அளிப்பார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை” என்றார். ஆக, “தி இந்துவை”ப் பொறுத்த வரையிலும், இது வெறும் இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதையாகத்தான் இருக்கிறது போலும்! இனி பரங்கிப்பேட்டை விவகாரத்தைப் பார்ப்போம், அதாவது, அங்கு எப்படி தீவிரவாதிகள் பிடிபட்டுள்ளார்கள் என்ற “கதைகளையும்” பார்ப்போம்!

Nine Muslims deported to Bangalore from Turkey - Muhammed Abdul Ahad

ஐசிஸ் பைல்கள் – தி இந்துவின் கதை: உண்மையில் முஸ்லிம் இளைஞர்கள் எப்படி, ஏன், எவ்வாறு மதவாதத்தினால், அடிப்படைவாதத்தினால், சிறுவயது முதலே, நம்பிக்கைகளை மனங்களில் ஏற்றிக் கொண்டு, பள்ளிப்பருவங்களில் சித்தாந்தமாக மாற்றிக் கொண்டு, கல்லூரி காலங்களில் ஜிஹாதாக்கிக் கொண்டு, வேலைக்குச் சேர்ந்த பிறகு ஐசிஸ் போராளிகளாகியுள்ளனர் என்பதனை “A tale of two friends: ne makes it to Syria, the other cools his heels in jail” என்று ஆங்கிலத்திலும், “இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை” என்று தமிலும் ஏதோ சாதாரணக் கதை போல வெளியிட்டிருப்பதால், அதனைப் படிப்பவர்கள், எப்படி அத்தகைய தீவிரவாதிகள் உருவாக்கப்பட்டார்கள் என்று கவலைப் பட மாட்டார்கள். முஸ்லிம்கள் தங்களுடைய கொள்கைகளினால், அவர்களை பாராட்டவும் செய்வார்கள். இன்னும் இளைஞர்கள் அவர்களை மாதிரிகளாகக் கொண்டு செயல்படலாம். ராமநாதபுரத்தில் டி-சர்ட் போட்டவர்கள், சென்னையில் ஐசிஸ்சில் சேர தயாரிகிறார்கள். ஆகவே, பொறுப்புள்ள பேற்றோர்கள் மற்றவர்களை ஜாக்கிரதையாக கண்காணிக்க வேண்டும். பல்லாயிர அப்பாவி உயிர்களைப் போக்குவதால், பூமியின் மீது சாந்தமோ, அமைதியோ வந்து விடாது. இப்பொழுது நடக்கும் நிகழ்ச்சிகளே அதற்கு சாட்சி.

© வேதபிரகாஷ்

23-11-2015


[1] தமிழ்.இந்து, பரங்கிப்பேட்டையிலிருந்து .எஸ். முகாம் வரை: இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை, Published: November 21, 2015 11:54 ISTUpdated: November 21, 2015 15:19 IST

[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article7903456.ece

[3] தமிழில்: பாரதி ஆனந்த், என்று ஆங்கிலத்தில் வந்ததை மொழிபெயர்த்து கொடுக்கப்பட்டுள்ளது. தி இந்து, ஞாயிறு, நவம்பர் 22, 2015.

சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக ஐசிஸ்.சில் சேர சென்ற ஜிஹாதிகள்!

நவம்பர் 23, 2015

சென்னையிலிருந்து பெங்களூர் வழியாக ஐசிஸ்.சில் சேர சென்ற ஜிஹாதிகள்!

Muslim youth become ISIS supporters, warriors

தமிழக ஜிஹாதிகள் துருக்கிக்குச் சென்றது எப்படி?: இருவரையும் தொடர்ந்து கண்காணித்து வரும் உளவு துறை அதிகாரிகள் அவர்கள் துருக்கி வரை செல்ல உதவி செய்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்[1]. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில், தமிழக வாலிபர்கள் சேர முயன்ற விவகாரம் போலீசாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்காசிய நாடுகளான இதுகுறித்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறியதாவது[2]: “சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த பி.காம்., பட்டதாரியும், சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த, கரூரைச் சேர்ந்த அவனது நண்பனும் .எஸ்., அமைப்பில் சேர முயன்று, துருக்கியில் பிடிபட்டு, நாடு கடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வாலிபர்களின் குடும்ப பின்னணி, நண்பர்கள் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து வருகிறோம். மேலும், .எஸ்., அமைப்புக்கு, தமிழகத்தில் ஆள் பிடிக்கும் ஏஜன்ட்கள் உள்ளனரா; வாலிபர்கள் துருக்கி வரை செல்ல பண உதவி செய்தது யார்; விசா பெற்றுத் தந்தோருக்கு, .எஸ்., பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக விசாரணை நடக்கிறது”, இவ்வாறு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறினர்[3]. முதலில் அவர்கள் போலீஸார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. பிறகு, அவர்களது குடும்பத்தாரை வரவழைத்தபோது, அழுது கொண்டே விசயங்களை வெளியிட்டனர். தாங்கள் வேலைதேடித்தான் சென்றோம் என்று கூறினர்.

ISIL Chennai terror nexus - The Hindu - a tale of two friends

தமிழ்நாடும், .எஸ் தொடர்புகளும்: தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் ஐ.எஸ் பற்றிய வழக்குகள் பல நிலுவையில் உள்ளன[4]. ஆகஸ்ட்.2014ல், ராமநாதபுரம் மசூதி முன்பாக 26 முஸ்லிம் இளைஞர்கள் ஐ.எஸ் டி-சர்ட் போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு, சமூகவலைதளத்தில் பரப்பினர். விசாரித்து எச்சரித்து அவர்கள் அனுப்பப்பட்டனர். செப்டம்பர் 2014ல், சென்னையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞன் தற்கொலை குண்டுவெடிப்பில் கொலையுண்டது தெரியவந்தது. ஆகஸ்ட் 2014ல், வேலூரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இஞ்சினியர் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் ஐ.எஸ்.சில் சேர்ந்ததாக தெரிந்தது. தென்னிந்தியாவில் 150 ஐசிஸ் ஆதரவாளர்கள் உள்ளனராம்[5]. அப்படியென்றால், தமிழகத்தில் சுமார் 50 பேராவது இருக்க வேண்டும். “தி இந்து”, “இரு நண்பர்களின் கதை” என்று ஒரு கதையை “ஐ.எஸ் பைல்” என்ற படத்துடன் வெளியிட்டுள்ளது. இருவரும் ஜிஹாதித்துவத்தில் ஊறியவகளாக, தீவிரவாதிகளாக இருந்தாலும், ஏதோ “இரு நண்பர்களின் கதை” என்ற ரீதியில், தனக்கேயுரிய பாணியில் வெளியிட்டுள்ளது. அவர்கள் இருவரும் சென்னையில் நியூ காலேஜில் படித்தவர்கள் தாம். அக்கதை சுருக்கம் பின்வருமாறு:

ISIL Chennai terror nexus - The Hindu graphics

இரு .எஸ் தீவிரவாதிகளின் கதை: ஹாஜா பக்ருத்தீன் உஸ்மான் அலி [Haja Fakkrudeen  Usman Ali] மற்றும் குல் மொஹம்மது மராச்சி மரக்காயர் [Gul Mohamed Maracachi Maraicar] இருவரும் பறங்கிப்பேட்டை அரசு பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். பிறகு ராயப்பேட்டை நியூ காலேஜில் சேர்ந்தனர். மரைக்காயர் ஐந்து வருடங்கள் சவுதி அரேபியாவில் இருந்து 2007ல் சிங்கப்பூருக்கு வந்தான். அதாவது 2002-07 வருடங்களில் அங்கிருந்திருக்கிறான். சிங்கப்பூரில் சாப்ட்வேர் வேலையில் இருந்தான். பிறகு, சில வருடங்கள் கழித்து இருவரும் சிங்கப்பூரில் சந்தித்தனர். 2008ல் அலி சிங்கப்பூர் குடிமகனானான்[6]. ஆனால், நவம்பர் 2013ல் சிரியாவுக்குச் சென்றதாக தெரிகிறது. இருவரும் முஸ்லிம்களின் நிலைப்பற்றி விவாதித்தனர். பிப்ரவரி 27, 2014 அன்று பக்ருத்தீனை தீவிரவாதத்திற்குட்படும் வகையில் முயன்றதாகவும், வன்முறையில் ஈடுபட தூண்டியதாகவும் மரைக்காயர், சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டான்[7]. பக்ருத்தீன் அலியின் மனைவி, குழந்தைகளுடன் ஜனவரி.22, 2014 அன்று அபுதாபி வழியாக துருக்கிற்கு சென்றான். அலி இப்பொழுது சிரியா-துருக்கி எல்லையில் இருக்கிறான்[8]. அலி சிரியாவில் இருந்தாலும், அடிக்கடி சென்னைக்கு வந்துள்ளான். சென்னையில் டிசம்பர் 2013 மற்றும் ஜனவரி 2014 காலத்தில் இருந்தபோது, சில நியூ காலேஜ் மற்றும் இதர மாணவர்களை தீவிரவாதத்திற்கு இழுத்துள்ளான். கடலூரில் ஒரு குரான் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறான். இவன் ஜிஹாதிகளை சேர்க்க ஒரு குழுவை நடத்தி வருகிறான். மாத சம்பளம் ரூ.20,000/- மற்றும் ஜிஹாதில் இறக்க நேர்ந்தால் ரூ.20 லட்சம் குடும்பத்திற்கு கொடுக்கப்படும் என்ற விவரங்களும் அறியப்பட்டன[9]. இப்பொழுது பக்ருத்தீன் ஐசிஸ்.சிக்காக போராடுகிறான், மரக்காயர் சிறையில் இருக்கிறான்[10].  நான் இப்படி எழுதி முடிக்கும் வேலையில், “தி ஹிந்து” தமிழிலும் அக்கதையை விவரமாக வெளியிட்டுள்ளது.

பக்ருத்தீன், மரக்காயர் சிரியா தொடர்புகள்- போட்டோ

பரங்கிப்பேட்டையிலிருந்து .எஸ். முகாம் வரை: இரண்டு நண்பர்கள் வழிதவறிய கதை (தி இந்து)[11]: தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டைதான் இவர்கள் இருவரும் பிறந்து வளர்ந்த ஊர். பால்ய நண்பர்களாகிய இவர்கள் உள்ளூர் அரசுப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தனர். பின்னர் இருவருமே சென்னை புதுக் கல்லூரியில் (நியூ காலேஜ்) பட்டம் பயின்றனர். பட்டப்படிப்புக்குப் பின்னர் சில பல ஆண்டுகள் உருண்டோடின. மரைக்காயர் சவுதியிலும், ஃபக்ருதீன் சிங்கப்பூரிலும் பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் இருவரும் சிங்கப்பூரில் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்திப்பில் அவர்கள் உணர்ச்சிகரமாக விவாதித்தனர். உலகளவில் முஸ்லிம்கள் சந்திக்கும் இன்னல்கள் என்னவென்பதே அந்த விவாதத்தின் கருப்பொருளாக இருந்தது. அந்த விவாதம் இருவரின் வாழ்க்கை திசையையும் மாற்றியது. நண்பர்கள் இருவரில் ஒருவர் இப்போது இந்தியச் சிறையில் இருக்கிறார். மற்றொருவர் சிரியாவில் ஐ.எஸ். படையில் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டார். அவர் எந்த களத்தில் போரில் இருக்கிறாரோ?! சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் ஹாஜா ஃபக்ருதீன் இப்போது சிரியாவில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது நண்பர் முகமது மரகாச்சி மரைக்காயர் சிறையில் இருக்கிறார். இவர்கள் இருவரின் கதையும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஐ.எஸ். கொள்கை உலகளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

© வேதபிரகாஷ்

23-11-2015

[1] http://www.maalaimalar.com/2015/11/21120740/intelligence-investigation-2-t.html

[2] தினமலர், .எஸ்., அமைப்பில் தமிழக வாலிபர்கள், நவம்பர் 22, 2015.02:57.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1392623

[4] http://indianexpress.com/article/india/india-news-india/two-chennai-men-deported-from-turkey-for-trying-to-join-is/

[5] http://www.thehindu.com/news/national/150-is-supporters-in-south-india/article7904410.ece?ref=relatedNews

[6] https://www.youtube.com/watch?v=4lxEp4D8FTs

[7] http://timesofindia.indiatimes.com/nri/other-news/Singapore-Indians-involvement-in-Syrian-conflict-being-probed/articleshow/32542736.cms

[8] Singapore has deported an Indian-origin man for radicalising and helping a compatriot go to strife-torn Syria and have launched a probe into his journey “with the intention to undertake violence”. The Singapore Ministry of Home Affairs deported Gul Mohamed Maracachi Maraicar, 37, for radicalising Haja Fakkurudeen Usman Ali, 37, and helping him to go to Syria. Gul is a permanent resident of Singapore and had worked there as a system analyst. Ali, who worked as a supermarket manager and became a citizen of Singapore in 2008, allegedly left the country last November to fight against forces loyal to Syrian President Bashar al-Assad, the Ministry said Saturday. Officials were informed of his trip only once he left Singapore. The ministry, however, refused to comment on the investigation and deportation of Gul, a report in The Sunday Times said.

http://indianexpress.com/article/india/india-others/singapore-deports-indian-man-for-syrian-links/

[9] http://www.thehindu.com/news/national/is-files-a-tale-of-two-friends-one-makes-it-to-syria-the-other-cools-his-heels-in-jail/article7900874.ece?ref=relatedNews

[10]  The Hindu, A tale of two friends: ne makes it to Syria, the other cools his heels in jail, reported by Josy Joseph, New Delhi, November 21, 2015.11:14 IST.

[11]http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article7903456.ece

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்ட மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ்!

நவம்பர் 23, 2015

.எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்ட மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ்!

Bangalore Biswas becomes ISIS agent, techie workerடுவிட்டர் மூலம் .எஸ்.க்கு ஆட்கள் வேலைசேர்ப்பு: கடந்த வருடம் 2014ல் பெங்களூரில் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் என்பவரை ஜாலஹள்ளி என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர்[1].  இவர் ஷாமி என்ற பெயரில் ஐ.எஸ் இயக்கத்திற்கான “@ShamiWitness” என்ற பிரசார டுவிட்டர் கணக்கை நடத்தி வந்தார்[2]. அவனது இருப்பிடத்தில் சோதனை செய்ததில், அவனது கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன்கள் முதலியவற்றிலிருந்து பல விவரங்கள் தெரிய வந்தன. முன்னர் ஷாமி விட்னஸ் என்கிற பெயரிலான இந்த குறிப்பிட்ட டுவிட்டர் கணக்கை நடத்துபவர் யார் என்கிற அடையாளத்தை பிரிட்டனைச் சேர்ந்த தொலைக்காட்சி சேனலான சேனல் 4 தொலைக்காட்சி தனது புலனாய்வு மூலம் கண்டறிந்ததாக செய்தி வெளியிட்டிருந்தது[3]. அந்த நபரை மெஹ்தி என்கிற பெயரிட்டு அழைத்திருந்த அந்த சேனல்-4 தொலைக்காட்சி, அவரது முழுமையான அடையாளத்தை வெளியிட்டால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவரது முழுமையான அடையாளத்தை தாம் வெளியிடவில்லை என்று தெரிவித்திருந்தது. இந்திய பெருவர்த்தக நிறுவனக் குழுமம் ஒன்றில் அவர் நிர்வாகியாக பணிபுரிவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெங்களுர் மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் - ShamiWitness - போட்டோநீண்ட நாள்களாக .எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்ட மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ்: இஸ்லாமிய அரசு அமைப்பு, வெளிநாடுகளிலிருந்து புதிதாக ஆள் சேர்க்கவும், மேலை நாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னார்வப் பணியாளர்களை தாங்கள் சிரச்சேதம் செய்யும் காட்சிகளை வீடியோவாக வெளியிடவும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்திவந்தது என்பது குறிப்பிடத்தக்கது[4]. மெஹ்தியிடம் நடத்திய விசாரணையில், நீண்ட நாள்களாக ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் டுவிட்டர் கணக்கை கையாண்டு வந்தவந்ததை ஒப்புக் கொண்டார் என்று, கர்நாடக டி.ஜி.பி லால்ரோக்குமா தெரிவித்தார். இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மட்டுமன்றி, சட்டவிரோத சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழும் மெஹ்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, தன் மகனுக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதை நம்ப முடியவில்லை என்று, மெஹ்தியின் தந்தை பிஸ்வாஸ் தெரிவித்தார். மகன் இவ்வளவு வேலைகளை செய்து வந்தபோது, இவர் தெரியாது என்று சொல்வது வியப்பாக இருக்கிறது. பட்கல் விசயத்தில் கூட பேற்றோர்கள் மட்டுமல்ல, அந்த ஊரில் உள்ளோர் அனைவரும், எங்கள் குழந்தைகள் அப்பாவிகள், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது, என்று தான் சொல்லி வந்தனர்!

மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் - இரு முகங்கள்மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது: முஸ்லிம் இளைஞர்களை வேலைக்கு எடுப்பது, இந்தியாவிற்கு வெளியே அனுப்பி வைப்பது என்று செய்து வந்தான். பொதுவாக வளைகுடா நாடுகளுக்கு அல்லது அந்நியநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதாக இருந்தால், அவர்கள் ஏஜென்டுக்கு அல்லது ஏஜென்சிக்கு பணம் கொடுக்க வேண்டும், இங்கோ வேலைக்கு விரும்பி வருபவர்களுக்கு அவர்களே பணத்தைக் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். இஸ்லாமிய அரசின் பிரசாரத்தை தொடர்ந்து, 150 இந்தியர்கள் (இதில் அதிகமான பேர் நாட்டின்  தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள்) ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்து வந்து உள்ளனர் என உளவுத்துறை அறிந்து எச்சரித்துள்ளது. ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்து செயல்படுபவர்களை தேசிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அமைப்பு வழிகாட்டுதலின்படி உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்[5]. இந்நிலையில் தான், பெங்களுர் வழியாக சிரியாவுக்குச் செல்ல முயன்ற இரு தமிழ்நாட்டு முஸ்லிம் வாலிபர்களின் கதை வருகிறது. பாவம், துருக்கி அவர்களை நாடு கடத்த, பெங்களுருக்கே வந்து சேர்ந்து விட்டனராம்!

New college students become ISIS warriorsபுரசவாக்கம் மசூதியில் ராயப்பேட்டை பாயும், கரூர் பாயும் சந்தித்தது எப்படி?: சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 23 வயது வாலிபரும், கரூரை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரும் ராயப்பேட்டை ஐஸ் அவுஸ்சில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தனர்[6]. முன்னவர் பி.காம் பட்டதாரியாவார், தனது தந்தையின் துணிகடையில் வேலை பார்த்து வந்தார். பின்னவர் பள்ளிபடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சென்னைக்கு ஒரு கடையில் வேலைக்கு வந்திருந்தார்[7]. ஆக, ராயப்பேட்டை பாயும், கரூர் பாயும் எப்படி அறிமுகமானார்கள்? இருவருக்கும் ஜிஹாதில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது? இருவரும் புரசவாக்கத்தில் உள்ள ஒரு மசூதியில் சந்தித்துள்ளனர்[8] என்று செய்திகள் கூறுகின்றன. பிறகு, மசூதிகள் தாம் இவர்கள் சந்திந்துக் கொண்டு அறிம்கமாவதற்கு தகுந்த இடமாக இருக்கின்றனவா? இவர்கள் தாமாகவே வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார்களா அல்லது யாராவது இணைப்பாக செயல்பட்டாரா? ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர முடிவு செய்ததால், அவர்கள் இணையதளம் மூலமாக சிரியா நாட்டிற்குச் செல்வது குறித்த தகவல்களை திரட்டியுள்ளனர்[9]. அப்போது பெயர் தெரியாத நபர் ஒருவர் அவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்[10]என்று மேலும் செய்திகள் கூறுகின்றனர். ஒருவேளை, முழுவிவரங்கள் வெளியில் தெரியக்கூடாது என்று அவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், இணைத்தள உபயோகம் இவர்களுக்குக் கிடைத்துள்ளது. இவ்விசயங்கள் எல்லாம் ரகசியமாகத்தான் பார்க்க முடியும், கண்டவர்கள் எல்லோரும் பார்க்க முடியாது.  அந்த வசதிகளை இவர்களுக்கு அளித்தது யார்? இவ்விருவருல் ஒருவன் நியூ காலேஜில் படித்தான் என்றால், அந்த ஹாஜா பக்ருதீன் மற்றும் குல் மொஹம்மது ஜோடிக்கும், இவனுக்கும் தொடர்பு இருந்ததா?

Bangalore to turkey and back- ISIS agent, techie workerசென்னை, பெங்களுர், இஸ்தான்புல் சென்றது: அப்படியென்றால், அத்தகைய விவரங்களை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றாகிறது. அதன்படி, சென்னையிலிருந்து பெங்களூர் சென்று, அங்கிருந்து, துபாய்க்கு சென்றுள்ளனர்[11].  அதாவது, இவர்களுக்கு விமான டிக்கெட், பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுக்கப்பட்டிருக்கின்றன. அப்படியென்றால், தமது அடையாள விவரங்கள், விலாசம் முதலியவற்றைக் கொடுத்தான் அவை பெறப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா பயணிகள் போல் பெங்களூருவிலிருந்து துபாய் சென்ற இருவரும் பின்னர் அங்கிருந்து துருக்கி சென்றுள்ளனர்[12]. ஆக, இஸ்தான்புல் நகரத்தில் இறங்கியதும், இவர்களை வரவேற்று, ஓட்டலுக்குச் சென்று தங்க வைத்தது யார் என்று தெரியவில்லை. சிரியா எல்லை பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி எல்லை தாண்டி செல்வது குறித்து இருவரும் விசாரித்திருக்கின்றனர்[13] என்றுதான் செய்திகள் கூறுகின்றன. ஆனால், அவ்வாறு செல்வதற்கு வேண்டிய அவசியம், தேவை என்னவென்று குறிப்பிடப்படவில்லை.  இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தங்கும் விடுதி ஊழியர் துருக்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்[14].  இருவரையும் பிடித்து விசாரித்த துருக்கி அதிகாரிகள் அவர்கள் இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்காக வந்து இருப்பதை கண்டுபிடித்தனர்.  இதையடுத்து இருவரும் துருக்கியிலிருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்[15]. பெங்களூருவுக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்த அவர்களை பிடித்தனர். இத்தனைக்கும், பணம் தேவையாயிற்றே, யார், எவ்வாறு கொடுத்தனர்? பிறகு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய உளவு துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.

© வேதபிரகாஷ்

23-11-2015

 

[1] http://www.puthiyathalaimurai.tv/%E0%AE%90-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-190057.html

[2] It may be recalled that in December 2014, Bengaluru police had arrested Mehdi Masroor Biswas from the city for operating a pro-ISIS Twitter handle. Biswas owned @ShamiWitness, which had 17,700 followers.

http://timesofindia.indiatimes.com/india/Engineers-among-9-ISIS-bound-Indians-deported-by-Turkey/articleshow/46079886.cms

[3] http://www.bbc.com/tamil/india/2014/12/141212_isistwitter

[4] http://www.bbc.com/tamil/india/2014/12/141213_indiatwitter

[5] http://www.dailythanthi.com/News/State/2015/11/21125309/ISIS-The-extremist-movement-2-young-men-who-went-to.vpf

[6]  பாரத்.நியூச்.ஆன்லைன், .எஸ்..எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற 2 தமிழக வாலிபர்கள், 21 November, 2015.

[7] மாலைமலர், .எஸ். இயக்கத்தில் சேர்ந்த 2 தமிழக வாலிபர்கள்: உளவுத்துறை விசாரணை, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 21, 12:07 PM IST.

[8] http://indianexpress.com/article/india/india-news-india/two-chennai-men-deported-from-turkey-for-trying-to-join-is/

[9] http://bharathnewsonline.com/714/

[10] தமிழ்.வெப்துனியா, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழக இளைஞர்களை நாடு கடத்திய துருக்கி அரசு: பரபரப்பு தகவல்கள், சனி, 21 நவம்பர் 2015 (13:59 IST).

[11]  தினத்தந்தி, .எஸ்..எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர சென்ற 2 தமிழக வாலிபர்கள் நாடு கடத்தல், மாற்றம் செய்த நாள்: சனி, நவம்பர் 21,2015, 12:53 PM IST; பதிவு செய்த நாள்: சனி, நவம்பர் 21,2015, 12:53 PM IST.

[12] நியூ.இந்தியா நியூஸ், துருக்கிசிரியா எல்லையில் சிக்கிய .எஸ். இயக்கத்தில் சேரச் சென்ற தமிழக இளைஞர்கள், சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 06:15.04 AM GMT +05:30.

[13] http://tamil.oneindia.com/news/tamilnadu/turkey-deports-2-tamil-nadu-men-trying-contact-isis-240380.html

[14] http://www.newindianews.com/view.php?23DA2cUMU42M4302lA2dyO322A03e3Ag2bImN3

[15]  http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/turkey-deports-2-tamil-nadu-men-for-trying-to-contact-isis-115112100031_1.html

இஸ்லாமியரை தேர்வெழுத அனுமதிக்காத தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்றம் அபராதம்!

பிப்ரவரி 10, 2011

இஸ்லாமியரை தேர்வெழுத அனுமதிக்காத தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்றம்!

சமஸ்கிருதம் தெரியாத முஸ்லீமின் மனு நிராகரிக்கப் பட்டது[1]: தொல்லியல்துறையில் பணியில் சேர்வதற்கான தேர்வு எழுத இஸ்லாமியர் அனுமதிக்கப்படவில்லை. இதற்காக அந்த துறைக்கு உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நல்ல முகமது என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, தொல்லியல்துறையில் `எபிகிராபிஸ்ட்’, `கியுரேட்டர்’ (காப்பாளர்) உள்ளிட்ட 4 பதவிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நான் அந்த 4 பதவிகளுக்குமே விண்ணப்பித்தேன். குறிப்பாக கியுரேட்டர் பதவிக்கு முன்னுரிமை அளித்திருந்தேன். ஆனால் தேர்வு எழுதமுடியாதவாறு எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. கியுரேட்டர் பதவிக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றும், நான் இந்து மதத்தினர் அல்லாததால் மற்ற 3 பதவிகள் அளிக்க முடியாது என்றும் கூறி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

கியுரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதற்கான உத்தரவை கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கு தொல்லியல் துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில் இந்து சமயம் பற்றி தெரிந்திருந்தால்தான் எபிகிராபிஸ்ட் போன்ற பதவிகளுக்கு வரமுடியும். ஆனால் அவர் இஸ்லாமியர் என்பதால் தான் நிராகதரித்தோம். கியுரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தோம் என்றும் கூறியிருந்தது.

நீதிபதியின் உத்தரவு: இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, “தொல்லியல்துறை என்பது இந்து சமய துறையல்ல. அதில் சில பணிகளுக்கு மட்டும் தான் இந்து சமயத்தினராக இருக்க வேண்டும். கிறிஸ்தவம், இஸ்லாமியம், புத்தமதம் ஆகிய மதங்களுக்கான தொல்லியல் விஷயங்களும் உள்ளன. ஆகையால் தொல்லியல்துறையில் பணிகளுக்கு இந்துக்கள் தான் சேர வேண்டும் என்று மததத்தின் அடிப்படையில் ஒதுக்க முடியாது. கியுரேட்டர் பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றால் அதை முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் விண்ணப்பித்த பிறகு அந்தக் காரணத்தை காட்டி நிராகரிப்பது முறையன்று. எனவே மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக 12 வாரங்களுக்குள் பிரதிவாதிகள் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். மேலும், மனுதாரருக்கு வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் பிரதிவாதிகள் வழங்க வேண்டும், என்று அவர் அதில் கூறியிருந்தார். [ரூ.5,000/- என்றிருக்க வேண்டும்]

உருது / அரேபிக் தெரிந்த இந்துவிற்கு முஸ்லீம்கள் அதே மாதிரியான வேலை கொடுப்பார்களா? மசூதிகள், மதரஸாக்கள், முஸ்லீம் கட்டிடக் கலை, போன்ற துறைகள், முஸ்லீம் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் முதலியவற்றில், உருது / அரேபிக் மொழி தெரிந்திருந்தால் மட்டும், வேலை கொடுத்துவிடுவார்களா? சென்னை நியூ காலேஜில் எப்படி படிப்படியாக இந்துக்கள் வேலைக்கு அமர்த்துவதை நிறுத்திவிட்டார்கள் என்பதனை, அங்கு வேலைசெய்த் இந்துக்களுக்குத் தான் தெரியும். உள்ள இந்துக்கள் வேலையிலிருந்து சென்ற பிறகு, ஓய்வு பெற்றப் பிறகு, அந்த இடங்களுகு முஸ்லீம்களாகப் பார்த்துதான் வேலைக்கு வைக்கிறார்கள். ஏதாவது, ஒரு இந்து ஒருவேளை வந்து விட்டால், அவருடன், மற்றவர்கள் ஒத்துழைக்க மாட்டடர்கள். அவரே வேறு இடத்தில் வேலைத் தேடிக்கொண்டு சென்றுவிடுவார் அல்லது செல்லுமாறு செய்யப்படும். இதுதான் உண்மை. ஆதிசங்கரர் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பல முஸ்லீம்கள், கிருத்துவர்கள் உள்ளார்கள், ஏன், வேந்தராகவே முஸ்லீம்கள் உள்ளனர். அதுமாதிரி, அலிகார் முஸ்லீம் பல்கலைகழகத்திற்கு, ஒரு இந்து வேந்தராக முடியுமா? இதைத்தான் கனம் நீதிபதி அவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள்.

மோடியை பாராட்டிய முஸ்லீம் வேந்தர் ஏன் மிரட்டப்படவேண்டும்? இன்றுவரை, தியோபந்த் பல்கலைக் கழக துணை வேந்தர், மோடி பற்றி ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக, முஸ்லீம்கள் தமகுள்ளேயே அடித்துக் கொள்கிறார்கள். இதோ, இதை எழுதும் போது, இங்கு துப்பாக்கி சூடு[2] நடப்பதாக செய்தி[3] வந்துக் கொண்டிருக்கிறது! இதற்கு நீதிபதி என்ன விளக்கம் அளிப்பார்? முஸ்லீம் முஸ்லீமாஅ இல்லாமல், இந்தியனாக செயல்படுவான் என்ற உத்திரவாதம் கிடைக்கும் வரை அல்லது அதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கும் வரை, இந்தியர்கள் இத்தகைய அனுபவ்ங்களைத் தொடர்ந்துப் பெற்றுக் கொண்டே இருப்பார்கள். அதனால் தான், தாமஸ் கேட்கிறார், எத்தனையோ கிரிமினல்கள் எல்லோரும் அமைச்சர்களாக, எம்.பிகளாக உள்ளார்களே, நான் இருக்கக் கூடாதா, என்று! அதாவது, எதர்கெல்லாம், எப்படி ஒப்புமை செய்வது என்ற விவஸ்தையே இல்லாமல் பொய் விட்டது.

ஆர்வமா, வேறு நோக்கமா என்பதை காலம் தான் பதில் சொல்லியாக வேண்டும்: என்னத்தான் பாரசீக மொழி தெரிந்திருந்தும், ஏ.ஏ.எஸ்.ரிஸ்வி போன்ற பண்டிதருடன் இருந்தாலும், இர்ஃபான் ஹபீப் முதலியவர்கள் நண்பர்களாக இருந்தாலும், எஃப்.ஜே.ஏ. ஃபிளின் என்ற ஆஸ்திரேலிய முனைவர்-ஆராய்ச்சியாளர், இந்திய தொல்துறை பொருட்களை திருடித்தான் சென்றார்[4]. அவர்கூட, தனக்கு இந்தியாவில் எல்லா உரிமைகளும் உண்டு என்றுதான் உள்ளே நுழைந்தார். ஆனால், கடைசியில் தனது நிலைமை, தகுதி, சலுகை முதலியவற்றை துர்பிரயோகம் செய்து, பல தொல்பொருட்களை கடத்திச் சென்றார். அதே மாதிரி எத்தனை தொல்துறை அத்தாட்சிகள், ஆதாரங்கள் மறைக்கப் பட்டன, உடைக்கப் பட்டன, அழிக்கப் பட்டன என்பதனை அறிந்து கொள்ளலாம். ஆக, இங்கு முஸ்லீம், கிருத்துவர் என்று மற்றவர்கள் பார்ப்பதில்லை, ஆனால், சமயம் வரும்போது, அவர்கள் அவ்வாறே செயல்படுவதால் தான், அத்தகைய எண்ணம் வருகிறது. இங்கு கூட, அந்த மனுதாரர், உண்மையிலேயே ஆர்வத்துடன் அந்த வேலைக்கு வருவதாகத் தெரியவில்லை, ஏதோ உள்நோக்கத்துடந்தான் வந்துள்ளார். இப்பொழுதே, இப்படி பிரச்சினை செய்பவர், நாளைக்கு, உள்ளே நுழைந்து விட்டால், என்ன செய்வாரோ?

வேதபிரகாஷ்

10-02-2011


[2] A meeting on the fate of Ghulam Mohammad Vastanvi, the newly elected vice-chancellor of the Darul Uloom Deoband, turned violent as gun-toting men gate crashed the gathering on Tuesday. The meeting, held in Deoband’s Abulmali locality at the house of one Haji Riyaz Mahmood, was convened by Arif Siddiqui, the local president of a Jamiat-Ulema-i-Hind faction. It also included supporters of Rashtriya Lok Dal MP Mahmood Madani.  The men, who are supporters of Vastanvi, fired in the air indiscriminately to intimidate the students of the Islamic seminary and local Muslim leaders who were present. Taslim Qureshi, an eye witness, said at least 10 of them were carrying guns. “About 20 people entered the house and began threatening those present. Soon, about 10 more gun-toting men joined them and opened fire,” he said. The men are allegedly followers of Maviya Ali, the former state secretary of the Samajwadi Party. Ali was suspended from the party last week. “We have registered cases against four persons under Section 307 for attempt to murder,” a police officer said.

[4] இதைப் பற்றிய என்னுடைய பதிவுகள் ஆங்கிலத்தில் உள்ளன. கூகுள் தேடலில் கண்டு படித்து கொள்ளலாம்.