Posted tagged ‘நம்பிக்கை’

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திக-பகுத்தறிவு-கம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாது – இருந்து விமர்சித்தால் கொலை தான் (2)!

மார்ச் 19, 2017

முஸ்லிம் நாத்திகனாக இருக்க முடியாது, நியாயவானான முஸ்லிம் நாத்திகபகுத்தறிவுகம்யூனிஸ கடவுள் மறுப்பு கட்சிகளில், இயக்கங்களில் இருக்க முடியாதுஇருந்து விமர்சித்தால் கொலை தான் (2)!

Farooq - Ukkadam scrap market

தொழில் சம்மந்தமாக பேச வேண்டுமென அழைத்து கொலை செய்யப் பட்டது: கோவை உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் பாரூக் (31). உக்கடம் “பிலால் மார்கெட்டில்” பழைய இரும்பு சந்தையில் வியாபாரம் செய்து வந்தார். இரும்பு வியாபரமே பெரிய அளவில் கள்ளத்தனமாக, வரியேப்பில் தான் நடந்து வருகிறது[1]. அதில், முகமதியர்கள் கில்லாடிகள். 16-03-2017 வியாழக்கிழமை அன்று பாரூக்கை செல்போனில் அழைத்த மர்ம நபர் தொழில் சம்மந்தமாக பேச வேண்டுமென, உக்கடம் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணை அருகே வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து தனது இரு சக்கர வாகனத்தில் அப்பகுதிக்கு சென்ற பாரூக்கை ஏற்கனவே அங்கு காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்க தொடங்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த பாரூக் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கடைவீதி காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Farooq murder, one surrendered - DM - 18_03_2017_012_036

அன்சர்ந்த், என்ற முஸ்லிம் கோவை 5 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 17-03-2017 அன்று சரணடைந்தது: அதற்குள் விசயம் அறிந்த திராவிடர் விடுதலை கழகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்யப் பட்டு தண்டிக்க வேண்டும் என்று ஆர்பாட்டம் செய்தனர். இந்நிலையில் போத்தனூர் பகுதியை சேர்ந்த அன்சர்ந்த், கோவை 5 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 17-03-2017 அன்று சரணடைந்தார். தாடி வைத்த முகத்துடன் அவனது புகைப்படமும் நாளிதழ்களில் வெளியாகியது. இவரை வருகின்ற மார்ச் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி செல்வகுமார் உத்தரவிட்டார். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் தேடும் பணியை தீவிரபடுத்தி உள்ளனர். கொலையாளிகளுள் ஒருவன் முஸ்லிம் என்றதும் தமிழக ஊடகக்கள் அடங்கி விட்டன. மற்றவர்கள் வேலூரைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் யூகிக்கிறார்கள். ஆக, முஸ்லிமின் கொலைக்கு காரணம் முஸ்லிம் தான், காரணம் மதசமாசாரம் தான் என்று தெரிந்து விட்டது.

Muslim to atheist - Farooq murdered

பகுத்தறிவுநாத்திககம்யூனிஸ்டுகளின் மௌனநிலை: முஸ்லிம் விவகாரம் என்றால் சொல்ல வேண்டுமா, பகுத்தறிவு-நாத்திக-கம்யூனிஸ்டுகளின் நிலை மேலே எடுத்துக் காட்டப்பட்டது. தமிழக இச்செய்தியை ஓரம் தள்ளி விட்டன. ஆர்.கே. நகரை பிடித்துக் கொண்டன. செக்யூலரிஸ சித்தாந்தம் இப்படித்தான், சுதந்திரமாக செயல்படுகிறது போலும். மஹாராஷ்ட்ராவில், கர்நாடகாவில் நாத்திகன் கொலை செய்யப் பட்டால் குதிக்கிறார்கள். வீரமணி பக்கம்-பக்கமாக எழுதி தள்ளினார்! ஆனால், தமிழகத்தில், ஒன்றுமே நடக்காதது போல அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. “பெரியார் பிறந்த மண்ணில்” பிறந்தவர்களின் யோக்கியதையும் அந்த அளவுக்கு இருக்கிறது. அதாவது, இந்துமதம், இந்துகடவுளர்களை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம், அது செக்யூலரிஸ உரிமை என்று போற்றப்படும், ஆதரிக்கப் படும். முஸ்லிம்கள், கிருத்துவர்கள், நாத்திகர்கள், ஏன் இந்து-விரோதிகள் கூட அவ்வாறு செய்யலாம், “கருத்து சுதந்திரம்” என்று ஆராதிக்கப் படும். ஆனால், முஸ்லீமாக இருந்தால் கூட, இஸ்லாத்தை விமர்சிக்கக் கூடாது. செய்தால் கொலைதான்! செக்யூலரிஸ சித்தாந்திகள் இவ்வாறு இருப்பதும் நோக்கத்தக்கது.

Farooq murdered - Coimbatore- DM -17_03_2017_015_011_001

முஸ்லிம் நாத்திககனாக இருக்க முடியாது: கொலை செய்யப்பட்ட பாரூக் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே அவரை இஸ்லாம் மார்க்கத்திலிருந்து நீக்கி உள்ளனர். அதாவது, பத்வா போட்டு, மதபகிஷ்காரம் செய்துள்ளார்கள். உண்மையில், ஆசார இஸ்லாமியத்தின் படி, ஒரு முஸ்லிமை முஸ்லிம் அல்லாதவனாக ஆக்க முடியாது. இல்லை, முஸ்லிமாக பிறந்தவனும், இஸ்லாத்திலிருந்து வெளியேற முடியாது. ரகசியமாக, விளம்பரம் இல்லாமல் செய்யலாம் அது வேறு விசயம். ஆனால், முறைப்படி செய்வதானால், சாவு தான் அவனுக்கு முடிவு[2]. பாருக்குக்கு அதுதான் நேர்ந்துள்ளது. ஆனால், எந்த செக்யூலார்வாதியும் இதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையிலும் அவர் தொடர்ந்து சமூக வலை தளங்களில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவேற்றம் செய்ததால் ஆத்திரமுற்று சிலர் கொலை செய்ததாக தெரியவருகிறது என்கிறது ஒரு இணைதள செய்தி. வாட்ஸ்அப் குரூப் நடத்தி வந்த பாரூக் அதில் கடவுள் மறுப்பு கொள்கையை தெரிவித்து வந்துள்ளார்[3]. தனது பேஸ்புக் பக்கத்திலும் மத மூட நம்பிக்கைகள், கடவுள் மறுப்பு விஷயங்களை தொடர்ந்து எழுதி வந்துள்ளார்[4]. அதாவது, ஒரு முஸ்லிம் கடவுள் இல்லை என்று சொல்லக் கூடாது, ஆனால், முஸ்லிம் கடவுள் இருக்கிறது, மற்ற கடவுள்கள் இல்லை என்று சொல்லல்லாம். இதுதான் இஸ்லாத்தின் செக்யூலரிஸவாதம். “லா இலா இல்லல்லஹ” என்பதற்கு, “அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்றுதான் விளக்கம் கொடுக்கிறார்கள். “இல்லை-இருக்கிறது” என்ற குழப்பத்தில் தோன்றிய இறையியலில், கடவுளின் தன்மை அவ்வாறு இருக்கிறது.

Farooq Coimbatore scrap dealer murdered - DM -17_03_2017_015_010

பாரூக்கின் வாட்ஸ்அப், பேஸ்புக் பதிவுகள் எதிர்க்கப்பட்டன, கண்டிக்கப் பட்டன: கடந்த மாதம் பிப்ரவரி, பாரூக்கின், நான்கு வயது குழந்தையின் பிறந்த நாள் விழா நடந்தது[5]. அதில், ‘கடவுள் இல்லை’ என்ற வாசகத்தை எழுதி, அவரது குழந்தை பிடித்திருந்த பதாகையுடன், போட்டோ போடப்பட்டது. இதன்பின், சிலர் அவரை மிரட்டியுள்ளனர். ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. கருத்துரிமை என்று ஆதரித்து குரல் கொடுக்கவில்லை. யார்-யாரோ பேஸ்புக், டுவிட்டர் “குழாயடி” விவகாரங்களை னெல்லாம் செய்திகளாக்குகிறார்கள். ஆனால், இது யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில், முஸ்லிம் பிரச்சினை, இஸ்லாம் விவகாரம், நமக்கேன் வம்பு என்றுதான் ஒதுங்கியது மட்டுமல்லாமல், விசயத்தையும் அமுக்கப் பார்க்கிறார்கள். இஸ்லாத்தை ஒரு முஸ்லிம் கூட விமர்சிக்க முடியாது. இதன் தொடர்ச்சியாக இக்கொலை நடந்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது[6]. இவைதான் அவரது உயிரை பறிக்க காரணமாக இருந்துவிட்டன என கூறப்படுகிறது. கருத்து சுந்திரத்திற்கு எதிராக கொலையாகவே இது பார்க்கப்படுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் சிலரை கோபப்படுத்தியுள்ளன. அந்த குரூப்தான் இவரை கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறோம் என்று கோவை துணை கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார். கோவையில் தாலிபானிசம் தனது முகத்தை காட்ட ஆரம்பித்துள்ளதா என அஞ்சியுள்ளனர் மக்கள். பாரூக் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல, திகவினருக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர்[7]. இதனால், சாலை மறியலில் ஈடுபட்டனர்[8].

© வேதபிரகாஷ்

19-03-2017

Farooq murder - malaimalar - 18349983

[1] இதைப்பற்றியெல்லாம் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. தொழிலில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். அத்தகைய வரியேய்த்த கள்ள வியாபார, கள்ளப் பணம் தாம், தீவிரவாத, சமூகவிரோத காரியங்களுக்கு உபயோகப்படுத்தப் படுகிறது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

[2] “Takfeer” (Arabic: تكفير‎‎ takfīr) refers to the practice of excommunication, one Muslim declaring another Muslim as kafir (non-believer). The act which precipitates takfir is termed the mukaffir. An ill-founded takfir accusation is a major forbidden act.

[3] தமிழ்.ஒன்.இந்தியா, மதத்திற்கு எதிராக, வாட்ஸ்அப், பேஸ்புக்கில் கருத்து கூறியதற்காக வாலிபர் கொலை! அதிர்ச்சியில் கோவை, By: Veera Kumar, Published: Saturday, March 18, 2017, 15:44 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/coimbatore-man-hacked-death-over-atheistic-fb-posts-277287.html

[5] தினமலர், தி.வி.., பிரமுகர் கொலை கோவையில் ஒருவன் சரண், பதிவு செய்த நாள். மார்ச்.18, 2017, 00.48.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1732501

[7] தினகரன், கோவையில் திராவிடர் விடுதலை கழகம், விசிக உள்ளிட்ட கட்சிகள் சாலை மறியல், Date: 2017-03-17 15:52:18

[8] http://www.dinakaran.com/latest_detail.asp?Nid=287911

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!

ஜனவரி 18, 2017

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!

madras-high-court-bans-sharia-court-woman-position

2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய தலாக் சான்றிதழ்கள் முறையற்றவை: அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இஸ்லாமிய தனி நபர் சட்டத்தின்படி திருமணமான ஆண் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது என்றும், ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்கிவிட்டால் அதுவே இறுதி முடிவாக எடுத்து கொள்ளப்படுவதாகவும் அதில் கூறியிருந்தார். இந்த முஸ்லிம் நடைமுறையானது பெண்களுக்கு எதிரானது என்றும், ஹாஜிக்கள் வழங்கும் சான்றிதழ் வெறும் பரிந்துரையே தவிர அது இறுதி முடிவல்ல என்றும் பதர் சயீத் தெரிவித்திருந்தார்[1]. மேலும், 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய பரிந்துரை சான்றிதழ்களில் சிலவற்றை நீதிமன்றத்தில் சமர்பித்த பதர் சயீத் தரப்பு, ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரைத்து சான்றிதழ் வழங்கியது, சம்பந்தப்பட்ட பல பெண்களுக்கு தெரியாது என்றும், இந்த நடைமுறையின் போது பெண்கள் ஆஜராகவில்லை என்றாலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது[2].

muslim-women-divorce-act-1986பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது: வழக்கம்போல, பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது கவனிக்கத்தக்கது. சாதாரணமான விசயங்களுக்கு எல்லாம் போராட்டம் என்றெல்லாம் புறப்படும் வீராங்கனைகள் எங்கோ பதுங்கி விட்டது போலத் தெரிகிறது. ரத்தம் சொரிவோம், ஐயப்பன் கோவிலில் நுழைவோம் என்றெல்லாம் புறப்பட்ட பெண்ணுருமை போராளிகளையும் காணோம். முஸ்லிம்கள் விவகாரம் என்றாலே, அவ்வாறு ஒளிந்து கொள்வார்கள் போலும். ஷாபானு விசயத்தில் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் கால்களை உடைப்போம் என்ற தில்லி இமாம், சட்டத்தை மாற்றி, புதிய சட்டத்தை எடுத்து வந்த விதம், வயதான ஷாபானு இறந்த பிறகும், கண்டுகொள்ளாமல் இருந்தது முதலியன மறந்து விட்டார்கள் போலும், இல்லை நமக்கேன் வம்பு பயந்து செக்யூலரிஸத் தனமாக ஒதுங்கி விட்டார்களோ என்று தெரியவில்லை. அது அவர்களது உள்-விவகாரம் என்றும் நாஜுக்காக சொல்லி அமைதியாக இருந்து விடலாம்.

muslim-women-protection-divorce-act-1986சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்: தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய காஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவிகளை மூன்று முறை, ‛தலாக்’ கூறி, விவகாரத்து செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி இருந்தார்[3]. இந்த மனு இன்று, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜிக்கள் பிப்., 21 2017 வரை, தலாக் சான்றிதழ் வழங்க தடை விதித்தனர்[4]. மேலும், இந்த சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்[5]. இந்த வழக்கு விசாரணை பிப்.,21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது[6].

திருமணம் என்னும் நிக்காஹ்.3

திருமணம் என்னும் நிக்காஹ்.3

முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ்ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும்: 1980ம் ஆண்டு ஹாஜிகளுக்கான சட்டத்தில் அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருப்பதாக நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுந்தரேஷ் தெரிவித்தனர்[7]. அந்த விதிகளின்படி தலாக் கூறி விவாகரத்து வழங்க ஹாஜிகளுக்கு உரிமை இல்லை என அவர்கள் கூறினர்[8]. முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ், ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும் என்றும், உத்தரவிடமுடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்[9]. இதையடுத்து இந்த வழக்கில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹாஜிகளுக்காக உரிமைகள் குறித்து புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்[10].

badar-syedநீதிபதியின் உத்தரவில் சொல்லப்பட்டிருப்பது[11]: “ஹாஜிகளுக்கு எந்த அளவு சட்டஉரிமை இருக்கிறது என்பது முஸ்லீம் ஹாஜி சட்டம் 1880 பிரிவு 4 இல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவருக்கு மதச் சடங்கு செய்யும் உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே ஹாஜிகளுக்கு எந்த விதசட்டரீதியான உத்தரவும் பிறப் பிக்க உரிமையில்லை. முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தலாக்சான்றிதழில் மாற்றம் கொண்டுவரப்போவதாகத் தெரிவித்துள் ளது. எனவே இது தொடர்பான அடுத்த உத்தரவு வரும் வரை ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்கால தடை விதிக்கிறோம். மேலும், ஹாஜிக்கள் வழங்கும் தலாக் சான்றிதழ்களுக்கு எந்த விதமான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான உரிமையில்லை என்றும், அது ஹாஜிக்களின் தனிப்பட்ட கருத்தாகவே கருதப்படும் என்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் உயர்நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெறும்”, இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. இதைப்பற்றி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், “மணிச்சுடர்” கூறுவது, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

badar-syed-with-jayaகாஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்![13]: சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கீழ்க்கண்டவாறு அறிவித்திருக்கிறது.

  1. முதலாவதாக, தமிழ்நாடு தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜிகள்) யாருக்கும் தலாக் பற்றி சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரமில்லை.
  2. இரண்டாவதாக, 1997 முதல் 2015 வரை தமிழ்நாடு தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களில் தலாக் என்னும் விவாகரத்து ஏற்பட்டதற்குரிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்டிருக்கிறது.
  3. மூன்றாவதாக, வரும் பிப்ரவரி 21-ந்தேதி வரை தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களை தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களோ, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளோ சான்றிதழ்களாக அங்கீகரிக்கத் தேவையில்லை என்று உயர்நீதி மன்ற பதிவாளர் அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தீர்ப்பின் வாசகங்களை பார்க்கும் போது தலைமை காஜி மற்றும் துணை காஜிகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளன. உண்மை நிலை அதுவல்ல. ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. அதே சட்டத்தின் அடிப்படையில்தான் இன்றும் காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். தலைமை காஜி, தங்களிடம் கொண்டு வரப்படும் ‘தலாக்’ போன்ற மார்க்க விவகாரங்களுக்கு பத்வா என்றும், தனது கருத்தை எழுத்து மூலம் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

 

© வேதபிரகாஷ்

18-01-2017

badar-syed-talaq-case

 

[1] பிபிசி, தமிழகம் : ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை, ஜனவரி.11, 2017.

[2] http://www.bbc.com/tamil/india-38593266

[3] தினமலர், தலாக்சான்றிதழ் வழங்க தடை, பதிவு செய்த நாள். ஜனவரி.11, 2017.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1688593

[5] தினகரன், தமிழகம் முழுவதும் தலாக் சான்று வழங்க ஹாஜிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை, 2017-01-11@ 17:30:14

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=271858

[7] புதியதலைமுறை, தலாக் கூறி விவாகரத்து வழங்கும் உரிமை ஹாஜிகளுக்கு இல்லை..நீதிமன்றம், பதிவு செய்த நாள் : January 11, 2017 – 07:57 PM; மாற்றம் செய்த நாள் : January 11, 2017 – 09:46 PM.

[8] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/75692/madras-high-court-says-haji-has-no-right-to-provide-grounds-for-divorce

[9] நியூஸ்.7.செனல், இஸ்லாமிய ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்காலத் தடை!, January 11, 2017

[10] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/11/1/2017/high-court-ordered-not-issue-talaq-certificate-muslim-haji

[11] தீக்கதிர், தலாக் முறைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, January 11, 2017.

[12]https://theekkathir.in/2017/01/11/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/

[13] மணிச்சுடர், காஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, Friday, January 12, 2007.

மக்கள் தாக்கப்படுவது: உணர்ச்சி, சுரணை மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய பாரபட்சம், அலட்சியம் மற்றும் சுணக்கம் – துலாகர் கலவரம் (3)

ஜனவரி 3, 2017

மக்கள் தாக்கப்படுவது: உணர்ச்சி, சுரணை மற்றும் சகிப்புத்தன்மை பற்றிய பாரபட்சம், அலட்சியம் மற்றும் சுணக்கம் – துலாகர் கலவரம் (3)

dulagarh-14-12-2016-rioters-with-cans-of-petrol-etc

மதகலவரம்அல்ல என்றும், சிறியஉள்ளூர் பிரச்சினைஎன்றும். மறுப்பது:  துலாகரில் மத கலவரம் கொதித்து அடங்கியுள்ளது[1]. இது பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள்-கடைகள் எரிந்து, சாம்பலாகி அடங்கியது போலுள்ளது[2]. பிஜேபி தலைவர் சித்தார்த் நாத் சிங், திரிணமூல் காங்கிரஸின், சிறுபான்மை குழுவினர் தாம், இந்த கலவரங்களை திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்[3]. தேசிய மனித உரிமைகள் வாரியத்திடம், இப்பிரச்சியை எடுத்துச் செல்வோம் என்றும் பிஜேபியினர் கூறியுள்ளார்கள்[4]. ஆனால், மம்தா பானர்ஜியோ, இது, “மத-கலவரம்” அல்ல என்றும், சிறிய “உள்ளூர் பிரச்சினை” என்றும். மறுத்துள்ளார். சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார். அதே போல, திரிணமூல் கட்சியினர் பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி தவறான விவரங்களை பரப்புகிறார்கள் என்றும், அவற்றிற்கு மதசாயம் பூசப் பார்க்கிறார்கள் என்றும் குறைகூறினார்கள். அதாவது, ஒன்றுமே நடக்கவில்லை போன்று சாதிக்கும் மம்தாவின் போக்கு திகைப்படைவதாக உள்ளது. துலாகர் கலவர விவரங்கள் முழுவதும் வெளிவருமா-வராதா என்ற சந்தேகம் வலுவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

dulagarh-14-12-2016-vehicles-torchedகலவரங்களில் கூட செக்யூலரிஸம் பார்த்து பாரபட்சத்துடன் செயல்படுவது: இந்துக்களின் பாதிப்பு கிள்ளுக்கீறையாக உள்ளது. இந்தியாவில், காஷ்மீரத்து இந்துக்கள் தாம், சொந்த நாட்டிலேயே “அகதிகள்” என்று சொல்லப்பட்டு, வாழ்கின்றனர் என்றால், அந்நிலை, வேற்கு வங்காளத்திலும் வந்து விட்டது. முசபர்நகரில், டிவி-குழுக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு, பேட்டி கண்டு, ஏதோ, முஸ்லிம்கள் மட்டும் தான் பாதிக்கப்பட்டனர் என்பது போல சித்தரித்துக் காட்டினர். ஆனால், துலாகரில், ஒட்டுமொத்தமாக இந்துக்கள் அகதிகளாகிய போது, அதே ஊடகக்கள் மௌனம் காக்கின்றன. 2016 டிசம்பர் 28 முதல் 31 வரை இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாட்டில் கூட செக்யூலரிஸம் பற்றி கருத்தரங்கம் நடத்தி பேசியபோது, இந்துக்கள் சார்புடைய இயக்கங்கள் குற்றஞ்சாட்டப்பட்டன. அதே தேதிகளில் தான் துலாகர் கலவரங்கள் பற்றிய செய்திகள் கொஞ்சம் வெளிவர ஆரம்பித்தன. “தி இந்து” முன்னதை விளாவரியாக, பிரபலப்படுத்தி செய்திகள் வெளியிட்டது, ஆனால், பின்னதைப் பற்றி ஒன்றையும் காணவில்லை. இதுதான் அவர்களது உணர்ச்சி, சுரணை மற்ற்றும் சகிப்புத்தன்மைகளின் நிலைபோலும்.

dulagarh-14-12-2016-rioters-in-action-3உணர்ச்சி, சகிப்புத்தன்மை மற்றும் சொரணை பற்றி ஆர்பாட்டம் செய்த கூட்டங்கள் அமைதியாக இருப்பது[5]: ஒரு ஆண்டிற்கு முன்னர், செக்யூலரிஸவாதிகள், பிரபலங்கள் என்று பல்வேறு அறிவுஜீவி கூட்டங்கள் பெரிய அளவில் கலாட்டா செய்து, ஆர்பாட்டம் செய்தனர். அதாவடு சிறுபாப்மையினர் மீது தாக்குதல் நடக்கின்றது. யாருக்கும் சுரணை இல்லை, மரத்து விட்டது, ஆனால், அவர்களுக்கு மட்டும் தான் ஐபுலன்களும் உணர்ச்சியோடு இருப்பதனால், தாங்க முடியாமல், துடிதுடித்து, தாங்கள் வாங்கிய விருதுகளைத் திரும்ப கொடுத்து கலாட்டா செய்தனர். சகிப்புத் தன்மை இல்லை என்றெல்லாம் வியாக்யானம் செய்து அட்டகாசம் செய்தனர். ஆனால், இப்பொழுதே அவர்களில் ஒருவர் கூட இதைப் பற்றி பேசுவதாக இல்லை. ஏனெனில், இதில் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் என்பதனால், சுரணை வரவில்லை போலும். அங்குதான் அப்பாவி இந்துக்கள், உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்தனர் என்றால், இந்த வீர-தீர-சூர உணர்ச்சிப்புலிகள் எங்கு ஓடி ஒளிந்தன என்று தெரியவில்லை. காங்கிரஸைப் பற்றி கவலையே இல்லை. கிருஸ்துமஸ்-புது வருடம் என்று ராகுல் காந்தி இந்தியாவை விட்டு ஜாலியாகக் கிளம்பி விட்டார். குஜராத்தில் 2002-இல் நடைபெற்ற கலவரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியவர்கள், இப்போது மேற்கு வங்கத்தில் நடைபெறும் வன்முறைகள் குறித்து கேள்வி எழுப்பாமல் இருப்பது ஏன்? என்று ரவிசங்கர் பிரசாத் கேட்டுள்ளார்[6].

riots-erupted-after-milad-ul-nabi-yatraதுலாகரின் மதகலவரமும், சென்னையின் வர்தா புயலும்: டிசம்பர் 12-15 தேதிகள் துலாகர் மற்றும் சென்னை இரண்டும், மதகலவரம் மற்றும் வர்தா புயலால் பாதிக்கப்பட்டதால், மக்கள் பெருத்த சேதத்தைக் கண்டுள்ளனர். இயற்கை உண்மையிலேயே, செக்யூலரிஸ ரீதியில் சென்னையைத் தாக்கியுள்ள போது, இந்திய செக்யூலரிஸம், இஸ்லாமிய மதவெறியோடு சேர்ந்து கொண்டு, இந்துக்களை மட்டும் தாக்கியுள்ளது. ஆகையால், செக்யூலரிஸ உணர்ச்சியாளர்கள் சொரிந்து விட்டுக் கொண்டு, அடங்கி கிடக்கின்றனர் போலும். ஆனால், டிசம்பர் 28-31 2016 தேதிகளில், திருவனந்தபுரத்தில், இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாட்டில் செக்யூகரிஸம் பற்றி அதிகமாகவே பேசப்பட்டது, ஆனால், துலாகர் கலவரங்கள் பற்றிப் பேசப்படாதது, அவர்களது மறைக்கும் போக்கையே காட்டுகிறது. மெத்தப் படித்த ரோமில தாபர் போன்றோருக்கு, அதெல்லாம் தெரியாதா என்ன? சரி, கம்யூனிஸ முதலமைச்சர், இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு, தங்களது எதிரியான, மம்தா பானெர்ஜியை சாடியிருக்கலாமே? ஆனால், செய்யவில்லை. அங்கிருப்பவர்களின் தாக்குதல்களுக்கு உட்பட்டது “சங்கப் பரிவார்” தான்! மால்டாவில் தீர்மானங்கள் நிறைவேற்றியது போல, மிக்க செக்யூலரிஸத்துடன், துலாகர் கலவரங்களைக் கண்டித்து எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை. அதாவது, இந்துக்கள் எனும்போது, கம்யூனிஸ்ட்டுகளும், காங்கிரஸ்காரர்களும் ஒன்றாக சேர்ந்து கொள்கின்றனர். அதுதான் திருவனந்தபுரத்தில் வெளிப்பட்டது.

dulagarh-14-12-2016-rioters-in-action-lorry-torchedமால்டாவில் இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாடு நடந்த பிறகு கலவரம் ஏற்பட்டது, அதேபோல கேரளாவில் நடக்குமா?: சென்ற மால்டா இந்திய சரித்திர காங்கிரஸ் மாநாட்டிற்கும், மால்டா கலவரங்களுக்கும் இருக்கக் கூடிய சம்பந்தங்களை எனது கட்டுரைகளில் எடுத்துக் காட்டியுள்ளேன்[7]. ஆனால், இப்பொழுது, மாநாட்டிற்கு முன்னமே, இக்கலவரங்கள் நடந்துள்ளன. அப்பொழுது வேண்டுமென்றே, “ராமஜன்ம பூமி” பிரச்சினையை வைத்து, உள்ள சரித்திய கட்டிடங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றெல்லாம் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[8]. நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜராகி பொய் சொல்லி மாட்டிக் கொண்ட விசயங்களை மறைத்து[9], அவ்வாறு செய்தனர். முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கிய, ஏன், நீதிமன்றத்தில் சாட்சிகளாககைருந்தவர்கள் தாம் செக்யூலரிஸம் பேசுகின்றனர்[10]. இம்முறை மாநாடு கேரளாவில் நடந்து முடிந்துள்ளதால், இனி கேரளாவில் ஏதாவது நடக்கும் என்று பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

03-01-2017

dulagarh-14-12-2016-zee-tv

[1] First Post, Dhulagarh riots: West Bengal town on the boil after communal violence, Dec 28, 2016 16:29 IST

[2] http://www.firstpost.com/india/dhulagarh-riots-west-bengal-town-on-the-boil-after-communal-violence-3177608.html

[3] The Hindu, BJP to move NHRC over Dhulagarh riots, NEW DELHI: DECEMBER 21, 2016 03:15 IST; UPDATED: DECEMBER 21, 2016 03:15 IST

[4] http://www.thehindu.com/news/national/other-states/BJP-to-move-NHRC-over-Dhulagarh-riots/article16915243.ece

[5] http://tamil.oneindia.com/news/india/writers-step-up-protest-5-more-return-akademi-award/slider-pf172066-237502.html

[6]http://www.dinamani.com/india/2016/dec/30/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2624002.html

[7] https://vedaprakash.wordpress.com/2016/01/14/malda-ihc-conference-communal-fire-and-blaspheme-riots-were-they-incidental-coincidental-or-ancillary-1/

[8] https://vedaprakash.wordpress.com/2016/01/14/malda-ihc-conference-communal-fire-and-blaspheme-riots-were-they-incidental-coincidental-or-ancillary-2/

[9] http://www.firstpost.com/india/babri-demolition-how-hc-verdict-discredited-eminent-historians-547549.html

[10] R Vaidyanathan is Professor of Finance and Control, IIM Bangalore, The views are personal and do not reflect that of his organisation.

 http://www.firstpost.com/india/babri-demolition-how-hc-verdict-discredited-eminent-historians-547549.html

துலாகரில் டிசம்பர் 13-15 தேதிகளில் நடந்த கலவரங்கள் – முஸ்லிம்கள் “மீலாது நபி” ஊர்வலம் நடத்தி இந்துக்களின் வீடுகளை சூரையாடி எரித்துள்ளனர்! – துலாகர் கலவரம் (1)

ஜனவரி 3, 2017

துலாகரில் டிசம்பர் 13-15 தேதிகளில் நடந்த கலவரங்கள் முஸ்லிம்கள் “மீலாது நபி” ஊர்வலம் நடத்தி இந்துக்களின் வீடுகளை சூரையாடி எரித்துள்ளனர்! துலாகர் கலவரம் (1)

dhulagarh-mamtas-suppression-of-facts

கலவரங்கள் நடந்த விவரங்களை மறைத்த மம்தா அரசு: மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள துலாகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு – டிசம்பர் 13-15 தேதிகளில் – மத பேரணியில் இரு தரப்பினருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. ஏற்பட்ட கலவரங்களில், இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், ஊடகங்களின் மீதான அடக்குமுறைகளினால், “சென்சார் / தடை” விதிக்கப்பட்டது போல நிலையினால், செய்திகள் அதிகமாக வெளிவராமல் மறைக்கப்பட்டன. ஆங்கில ஊடகங்களுக்கே இந்த கதி என்றால், தமிழ் ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒன்றுமே நடக்கவில்லை என்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளார்கள். போதாகுறைக்கு 12-12-2016 அன்று வர்தா புயலினால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் தங்களது சொந்த வீடுகள், பொருட்கள், பணம் எல்லாம் இழந்து, அகதிகள் போல தெருக்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இக்கலவரங்கள் பற்றிய செய்திகள் கூட கொஞ்சமாக கடந்த இருநாட்களாக டிசம்பர் 31 2016 மற்றும் ஜனவரி 1, 2017 – வந்து கொண்டிருக்கின்றன.

18_Monday_2016_Police acts against the members of Tehreek-e-Hurriyat who were taking out a protest march against the killing of four persons in Handwara

முஸ்லிம் மக்கட்தொகை பெருகினாலே மதகலவரம் உருவாகும் என்ற நிலை: துலாகர் ஹௌரா மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற் மற்றும் வியாபார ஸ்தலமாகும். கொல்கொத்தாவிலிருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது. சுமார் 45% முஸ்லிம்கள் உள்ளாதால், 2013லிருந்து, மத-கலவரங்கள் அதிகமாகி வருகின்றன. 2013ல் மட்டும் 106 கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. பிறகு, 15-20 என்று குறைந்துள்ளன[1], ஆனால், கலவரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மம்தா ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, ஏழ்மை மற்றும் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி வைத்துக் கொண்டு தனது பலத்தை ஸ்திரமாக்கிக் கொள்ள முயன்று வருகிறார். பங்களாதேச முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் மேற்கு வங்காள எல்லைகள் மூலம் நுழைந்து, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பரவி வருவது தெரிந்த விசயமே. முன்னர் அசாமில் இதுவே ஒரு பிரச்சினையாகக் கொண்டு அசாம் கணபரிஷத் 1980களில் போராடி ஆட்சிக்கு வந்தது. ஆனால், பிறகு அடங்கி விட்டது. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் உள்-நுழைந்த அந்நிய முஸ்லிம்களுக்கு, ரேசன் கார்ட், ஓட்டர் கார்ட் என்று கொடுத்து ஊக்குவித்து, ஓட்டுவங்கியை வளர்த்தனர். இப்பொழுது, ஆதார் கார்டுடன் வாழ்ந்து வருகின்றனர், தொடர்ந்து ஊக்குவிப்பது திரிணமூல் காங்கிரஸ். இதனால், வளர்க்கப்பட்ட மூஸ்லிம்கள் இந்துக்களுக்குத் தொல்லைக் கொடுத்து வருகின்றனர்.

dulagarh-attacked-on-14-12-2016-rioters-in-action

மீலாது நபிக்கு அடுத்த நாள் ஊர்வலம் நடத்தி கலவரத்தை உண்டாக்கியது: டிசம்பர் 12, 2016 மீலாது நபி நிமித்தம் மேற்கு வங்க அரசு விடுமுறை அளித்தது. ஆனால், டிசம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் “ஈத்-இ-மிலத்-உன்-நபி” / மீலாது நபி ஊர்வலம் நடத்தியதில், முஸ்லிம் கும்பல், அப்பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டு இந்துக்களின் விடுகள் மற்றும் கடைகள் முதலியவை சூரையாடப் பட்டன. பொருட்கள் கொள்ளையிடப்பட்டதோடு தீயிட்டு கொளுத்தப் பட்டன.  இந்துக்கள் தங்களது பூஜை நேரத்தில், வேண்டுமென்றே, ஊர்வலம் நடத்தியதோடு, திட்டமிட்டு, ஆயுதங்களுடன் வந்து தாக்கி அவ்வாறு செய்துள்ளார்கள். முதலில் சில செய்திகள் வெளிவந்தாலும், வங்காள அரசின் அடக்குமுறைகளால், செய்திகள் வெளிவராமல் தடுக்கப்பட்டன. ஆனால், சமூக வலைத்தளங்களில், கலவரச் செய்திகள் பரவின. இருப்பினும், அரசு தொடர்ந்து கலவரம் நடந்ததை மறுத்து வந்துள்ளது. வி.பி. சிங் தான், மீலாது நபிக்கு அரசு விடுமுறை முதன்முதலில் அறிவித்தார் என்று, செக்யூலரிஸவாதிகள் பெருமையாகக் கூறுவர். இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத விடுமுறையை, இந்திய அரசியல்வாதிகள் அறிவித்துள்ளனர்.

dhulagarh_victims_are_terrified_and_worried_about_their_future

மார்கசிரிஷ பூர்ணிமாஅன்று மீலாது நபி ஊர்வலம் ஏன்?: டிசம்பர் 12ம் தேதி 2016 அரசு விடுமுறை தினமாக அறிவித்தது. அதாவது முஸ்லிம்களுக்கு அன்றுதான் கொண்டாட்டம், ஆனால், அடுத்த நாள் டிசம்பர் 13 அன்று முகமதியர் மீலாது நபி என்று ஊர்வலம் என்று தெருக்களில் வலம் வந்தனர். அதாவது 12ம் தேதி ஊர்வலம் போகாமல், அடுத்த நாள் போனது எப்படி என்று தெரியவில்லை. உள்ளூர் வழக்கம் தெரிந்த நிலையில், போலீஸார் எப்படி அனுமதி கொடுத்தனர் என்பதும் கேள்விக்குரியதாக உள்ளது. சினிமா பாடல்களை சப்தமாக ஒலித்துக் கொண்டு தெருக்களில் சென்றனர். அன்று “மார்கசிரிஷ பூர்ணிமா” [Margashirsha Purnima] என்ற மங்களகரமான நாளை அன்று இந்துக்கள் கொண்டாடினர்[2]. 15ம் தேதியிலிருந்து “தனுர் மாதம்” தொடங்குகிறது என்பதால், தங்களது நோன்பு, விரதம் முதலியவற்றைத் தொடங்குவார்கள். பாரம்பரிய வங்காள மக்கள், இத்தகைய விழாக்கள், சம்பரதாயங்கள் முதலியவற்றை விடாமல் கொண்டாடி வருகின்றனர். அதனால், தங்களது சடங்குகளுக்கு தொந்தரவாக இருப்பதால், சப்தத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை.

dulagarh-attacked-on-14-12-2016-rioters-and-police

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூக்குரலிட்டு இந்துக்கள் வீடுகள்-கடைகள் தாக்கப்பட்டது: “செக்யூலரிஸம்”, சமதர்மம் மற்றும் உரிமைகள் பேசப்படும் இந்தியாவில் முஸ்லிம்கள் அதை மதிக்காமல் கலவரத்தை ஏற்படுத்த தீர்மானமாக இருந்தனர் போலும். இதை சாக்காக வைத்துக் கொண்டு, ஊர்வலத்தினர், இந்துக்களோடு வாய்சண்டை இழுத்து, கேலிபேசி, கிண்டலடித்து, திட்டியுள்ளனர். வாக்குவாதம் கைசண்டையாகி, முகமதியர் இந்துக்களைத் தாக்கியுள்ளனர். கலவரமாகியபோது, நாட்டு வெடிகுண்டுகளை வீடுகள் மற்ரும் கடைகள் மீது வீசினர். டிரம்களில் கெரோஸின் மற்றும் பெட்ரோல் முதலியவற்றையும் எடுத்து வந்து தீயிட்டுக் கொளுத்தினர்[3]. இக்கலவரம், டிசம்பர் 14ம் தேதியும் தொடர்ந்தது.  இதெல்லாம் திட்டமிட்டபடி நடந்த தாக்குதல் என்று தெரிகிறது. தாக்கியவர்களில் சிலர், “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்றெல்லாம் கத்தியதாக கூறினார்கள்[4]. முஸ்லிம்களின் இந்த மனோபாங்கு தான் விசித்திரமாக இருக்கிறது. 1947ல் தனிநாடு கொடுத்தப் பிறகு, இந்தியாவில் பிறந்து, வளர்ந்து வருபவர்கள் எப்படி, இவ்வாறு கத்த முடியும்? இக்கால முஸ்லிம்களுக்கு அதுகூட தெரியாதா அல்லது தெரியாமல் வளர்க்கப்பட்டுள்ளனரா? மேலும் அவர்களை கவனித்த, பாதிக்கப்பட்ட இந்துக்கள், “அவர்கள்” அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்றும் தெரிவித்தனர். அதாவது, கலவரத்திற்கு, வெளியிலிருந்து கூட்டி வரப்பட்டது தெரிகிறது.

dulagarh-attacked-on-14-12-2016-victim-explains-times-now

வீடுகளை சூரையாடி, தீயிட்டு கொளுத்த முயன்ற போது, செய்யாதே என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோதும், கொளுத்திவிட்டுச் சென்றது[5]: நாட்டு வெடிகுண்டுகள் போட்டு தாகியதை பாதிக்கப்பட்டவர் “டைம்ஸ் நௌ” டிவி பேட்டியில் கூறினார். மேற்கு வங்காள கலவரங்களில் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தப் படுவது, ஒரு தொடர்ந்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. 10-15 முறை வெடிக்க வைத்ததாக கூறினார். அவர்கள், வீடுகளை சூரையாடியப் பிறகு, தீயிட்டு கொளுத்த முயன்ற போது, அவ்வாறு செய்யாதே என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோதும், விடாமல், பெட்ரோல்-கிரோஸின் ஊற்றி கொளுத்தி விட்டு சென்றனர். அதனால், இந்துக்களது வீட்டுப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. வந்தவர்கள் “புதியவர்களாக” தென்பட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டினார். அருகில் இருந்த கார்கள்-லாரிகள் முதலியவற்றையும் விட்டு வைக்கவில்லை. பாதிக்கப்பட்ட இந்துக்கள், தாங்கள் மீளமுடியாத அளவுக்கு அழித்துவிட்டு சென்றுள்ளனர் என்று புலம்பினர்.

© வேதபிரகாஷ்

03-01-2017

Kerala, Kashmir becoming hub of ISIS

[1] Merchant, Minhaz (28 December 2016). “How Mamata tore the secular fabric of Bengal into shreds”Daily Mail. Retrieved 31 December 2016

[2] Daily Mail-UK, How Mamata tore the secular fabric of Bengal into shreds, by Minhaz Merchant, Published: 23:58 GMT, 28 December 2016 | Updated: 10:50 GMT, 31 December 2016

[3] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4071842/How-Mamata-tore-secular-fabric-Bengal-shreds.html

[4] India Today, Rather than protecting, Bengal polica gave two minutes to flee our own homes: Dhulagarh riot victims tell India Today, Indrajit Kundu | Posted by Ashna Kumar, December 28, 2016 | UPDATED 13:25 IST.

[5] http://www.timesnow.tv/india/video/times-now-report-from-dhulagarh-the-story-india-isnt-reporting/53364

457வது ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா கந்தூரி விழாவில் சந்தனகூடு தீப்பற்றி எரிந்து – அபசகனம் என்று முஸ்லிம்கள் தவிப்பு!

ஏப்ரல் 6, 2014

457வது ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா கந்தூரி விழாவில் சந்தனகூடு தீப்பற்றி எரிந்து – அபசகனம் என்று முஸ்லிம்கள் தவிப்பு!

 

சந்தனகூடு தீவிபத்து 2014

சந்தனகூடு தீவிபத்து 2014

சந்தனகூடு  தீப்பற்றி  எரிந்தது[1]: நாகைமாவட்டம்  நாகூர்  ஆண்டவர்  தர்கா  உலகபிரசித்தி  பெற்றது,   ஏனெனில்,  இங்கு   ஆண்டுதோறும்  சந்னக்கூடு  விழா  நடைபெறும்[2].   அதாவது  தேரோட்டம்  போன்று  முகமதியர்   “சந்தனக்கூடு”  என்ற  வடிவத்தைத்  தயாரித்து  அதனை  ரதம்  போன்று  விளக்கு  சகிதம்  அலங்காரங்களுடன்  தெருக்களில்  எடுத்துச்  சென்று,   தர்காவிற்குள்  கொண்டு  வைப்பார்கள்.   அமாவாசைக்கு  அடுத்தநாளிலிருந்து  பௌர்ணமி  வரை  14-நாட்கள்  விழாவில்  முஸ்லிம்கள் பலர்  கலந்து  கொள்வார்கள்.  உண்மையில்  அக்காலத்தில்  புத்தாண்டு  வருவதையொட்டி  கொண்டாடப்பட்டு  வந்தவிழாவை  அப்பகுதியில்  முஸ்லிம்கள்  தமதாக்கிக்  கொண்டார்கள்  போலும்.  முன்னும்,  பின்னும்  தெலுங்கு  மற்றும்  தமிழ்  புத்தாண்டுகள்  வருவதையும்  காணலாம்.   வேண்டிக்  கொண்டு,  திருப்பதி-திருமலை-பழனிப்  போன்று  இங்கு  வந்து  மொட்டையும்  அடித்துக்கொள்கிறார்கள்.  இதில்  பெரிய-பெரிய  அதிகாரிகள்,   மந்திரிகள்  முதலியோர்  அடங்குவர்.  இந்நிலையில்   04-04-2014 அன்று  சந்தனக்கூடு  கட்டும்போது,   எரிந்ததாக  தகவல்கள்  வெளியாகியுள்ளன. 

 

இது கோவில்-குளம் அமைப்பு கொண்ட நாகூர் தர்கா

இது கோவில்-குளம் அமைப்பு கொண்ட நாகூர் தர்கா

முஸ்லிம்  சமாதியின்  கதை: ஹஜரத்  சையது  ஷாஹுல்  ஹமீது  காதிர்  வாலி  [Hazrath Syed Shahul Hameed Quadir Wali] என்பருடைய  சமாதி  நாகூரில்  உள்ளது[3]. இவர்  முகமது  நபியின்  வழி   23வது  சந்ததியர்  என்று  கூறப்படுகிறது. அந்த  வாலி  இறந்த  தினத்தை  முஸ்லிம்கள்  இங்கு 14-நாள்   விழாவாகக்  கொண்டாடுகின்றனர்[4]. “ஷாஹூல்  ஹமீது  பாதுஷா  நாயகம்” தர்கா  453ம்  ஆண்டு  கந்தூரி  விழா, 01-04-2014 இரவு கொடியேற்றத்துடன்துவங்கும்.நாகை  மீராபள்ளிவாசலில், தர்காவின்  ஐந்துமினவராக்களிலும்  ஏற்றப்படும்  கொடிகள்  வைக்கப்பட்டு   ‘துவா’ ஓதப்படும். பின்னர்  அலங்கரிக்கப்பட்ட  பெரியரதம், சின்ன  ரதம்  மற்றும்  செட்டிப்  பல்லக்கு, கப்பல்கள்  போன்று  வடிவமைக்கப்பட்ட  இரண்டு  வாகனங்களில்,   மங்கள  வாத்தியங்கள்  முழங்க  கொடிகள்  ஏற்றிவைக்கப்பட்டு,   ஊர்வலமாக  நாகை, நாகூரின்  முக்கிய  வீதிகளில்  வலம்  வந்து  இரவு  நாகூர்  தர்கா  வந்தடையும்.   இவ்விதமாக   14 நாட்கள்  அமர்க்களமாக  விழா  கொண்டாடப்படும்[5]. ஆட்டம்,  பாட்டம்,  கொண்டாட்டம்  என்று  விழா  கொண்டாடுவது  சகஜமாகிவிட்டது. ஆஜ்மீர்  போன்ற  தர்காக்களிலும்  இவையெல்லாம்  நடக்கின்றன[6].

 

Inside Nagore Dargha pillars like Hindu temple

Inside Nagore Dargha pillars like Hindu temple

கோவிலா,  தர்காவா,  கப்பல் விழாவா?: இந்த  தர்காவின்  உட்புறம்  ஒரு  இந்துகோவிலைப்  போன்றே  உள்ளது.  உட்பகுதியும்,  உள்ள  தூண்களும், தெப்பக்குளமும்  கோவில்  என்று  காட்டுகிறது.   உயர்வாக  உள்ள  கட்டிடங்கள் / மினராக்கள்  கலங்கரை  விளக்கங்களாக  உபயோகப்படுத்தப்பட்டன.   இதைப்  போன்ற  அமைப்பு  சனீஸ்வரன்  கோவிலின்  வாசலிலும்  இருப்பதை  காணலாம். தர்காவில்  உள்ள   5 மினராக்களில்  பாய்மரம்  ஏற்றி  இப்பொழுது  கந்தூரிவிழா  கொண்டாடப்படுகிறது.   இப்பொழுது “பாத்திமா”   என்ற  யானையையும்  வைத்திருக்கிறார்கள்[7].   அமாவாசைக்கு  அடுத்தநாளில்  கொடியேற்றம்  நிகழ்ச்சிலிருந்து  பௌர்ணமி  வரை 14-நாட்கள்விழாவில்கொண்டாடப்படுகிறது. இதன்படி, இம்மாதத்தில், வருகிற 9–ந்தேதி (புதன்கிழமை) பீர்  வைக்குதல்  நிகழ்ச்சி  நடைபெறுகிறது. பின்னர்  விழாவின்  முக்கிய  நிகழ்ச்சியான  சந்தனக்கூடு  ஊர்வலம்  வருகிற   10–ந்தேதி  (வியாழக்கிழமை)  மாலை  தொடங்கி 11–ந்தேதி  காலை  சந்தனம்  பூசும்  நிகழ்ச்சி  நடைபெறும். இதை  தொடர்ந்து   12–ந்தேதி  (சனிக்கிழமை) பீர்  ஏகுதல்  நிகழ்ச்சி  நடைபெறுகிறது.   14–ந்தேதி  கொடியிறக்கம்  நடக்கிறது[8].

 

Hindu temple like dargha Nagore

Hindu temple like dargha Nagore

தர்கா-மசூதி  ஏற்படும்  விதம்  மற்றும்  அமையும்  தன்மை: இஸ்லாத்தைப்  பொறுத்தவரைக்கும்  ஆண்டவன்  இறுதிதீர்ப்புநாளில்  பிறந்த  அதே  உடலில்  உயிர்த்தெழச்  செய்வான்.   அதாவது,   தான்  செய்த  காரியங்களுக்கேற்ப  தண்டனை  அல்லது  பரிசு  பெற  தயாராக  இருப்பான்.   அதனால்  தான்  உடல்  எரிக்கப்படாமல்,   புதைக்கப்  படுகிறது. புதைத்தாலும், மக்கிவிடுமே, என்றாலும், உயிர்த்தெழும்  போது,   வேறொரு  உடலைத்  தருவதாக  நம்புகிறார்கள். இவ்வகையில்  அவுலியாக்கள்  மேம்பட்டவர்கள்  என்பதனால்,   அவர்கள்  புதைக்கப்பட்டாலும்,   ஜீவசமாதியில்  இருப்பது  போல, உயிரோடு   இருந்து  கொண்டு,   மக்களின்  குறைகளை  தீர்த்து  வைப்பதாக  முஸ்லீம்கள்  நம்புகின்றனர். அதனால்தான், சமாதியிலிருந்து, கை  எழுந்து  ஆசீர்வாதித்தது, குரல்  எழும்பி  பதில்  சொன்னது, மூச்சு  சுவாசம்  பட்டு  வியாதி  மகுணமாகியது,   ஒளிவட்டம்  தோன்றியது  என்றெல்லாம்  சொல்லி  வருகின்றனர். இறந்த  பிறகும்  மறுபிறப்பு  உண்டு  என்பது,   ஒரு  காலத்தில்  உலகம்  முழுவதும்  பரவியிருந்த  வேதமதத்தின்  நம்பிக்கையாகும்.   இது  எல்லா  மதஞானிகளும்  ஏற்றுக்  கொண்டுள்ளார்கள். அதன்  படியே,   அவரவர்  புனிதநூல்களில்  அங்கங்கே  அத்தகைய  விவரங்கள்  உள்ளன  என்று  அறிஞர்கள்  எடுத்துக்  காட்டுகிறார்கள்.

 

Inside dargah Hindu temple like structure

Inside dargah Hindu temple like structure

தர்கா  வேறு, மசூதி  வேறு: உருவ  வழிபாடு  கூடாது  என்ற  நோக்கத்தினால், ஆசாரமான  முஸ்லீம்கள்,   இந்த  தர்கா  வழிபாட்டை  தடுக்க, மாற்ற,  அறவே  ஒழிக்க  முனைந்துள்ளார்கள். தர்காவை  இணைத்து  மசூதிகள்,  மதரஸாக்கள்,  மற்றவை  கட்டப்பட்டன.  பிறகு, தர்கா  வேறு, மசூதி  வேறு  என்றுகாட்ட,   இடையில்  சுவர்களும்  எழுப்பப்பட்டன. இப்படி  ஆசாரமான  முஸ்லீம்கள்  பலவித  முயற்ச்சிகள்  மேற்கொண்டாலும், தர்கா  வழிபாட்டை  ஒழிக்க  முடியவில்லை. இன்னும்  அதிகமாகித்தான்  வருகின்றது.   இந்தியாவில்,   இடைக்காலத்தில்,  பிணங்களைப்  புதைத்து இடங்களை  ஆக்கிரமித்தது  தான்  முகலாயர்களின் /  முகமதியர்களின்  வேலையாக  இருந்தது. கோவில்கள்,  மடங்கள்,  நதிக்கரை  புனிதஇடங்கள்  (கட் / காட்) முதலியவை  அவ்வாறு  ஆக்கிரமிக்கப்பட்டு, பிறகு  இந்துக்களின்  கோவில்கள்  இடிக்கப்பட்டு, மசூதிகள்  கட்டப்பட்டன. தர்கா  வழிபாடே  ஹராம் /  இஸ்லாமிற்குப்  புரம்பானது  என்று  அத்தகைய  ஆசாரமான  முஸ்லீம்கள்  வாதிடுவது  உண்டு. பிறகு  எப்படி  இத்தகைய  நாடகங்கள்  அரங்கேற்றப்  படுகின்றன? மற்ற  விஷயங்களுக்கு  ஆர்பாட்டம்  செய்யும்  தமிழக  முஸ்லீம்கள்  மௌனிகளாக  இருக்கின்றார்கள். உண்மையில்  அவர்கள்  நாகூர், ஆஜ்மீர்  போன்ற  இடங்களுக்குச்  சென்று  போராட்டம்  நடத்தியிருக்க  வேண்டுமே,   ஆனால்  செய்ய  வில்லையே?

 

Sufi dance dailyfresher.com

Sufi dance dailyfresher.com

பெண்கள் இப்படி தர்கா – மசூதி முன்னர் ஆடலாமா?: ஆஜ்மீரில்  நடந்த  விழாவின்  போது  எடுக்கப்பட்டப்  புகைப்படங்களைப்  பார்க்கும்  போது, பெண்கள்  ஆடுவது, மேளதாளங்கள்  ஒலிப்பது, அவர்களை  சூழ்ந்துகொண்டு  முஸ்லீம்கள்  இருப்பது  முதலியகாட்சிகள்  தெரிகின்றன. வெளிப்புறம்  என்றில்லாமல், உள்புறத்திலும், கவ்வாலி,  நடனம்  என்ற  நிகழ்சிகள்  நடப்பது  புகைப்படங்கள்  ஊர்ஜிதம்  செய்கின்றன. இவற்றை  முஸ்லீம்கள்  எதிர்ப்பதாகத்  தெரியவில்லை.   இல்லையென்றால்,   அமைதியாக  அவை  காலங்காலமாக  நடந்து  கொண்டிருக்க  முடியாது. மேலும்,   பாகிஸ்தானிய  அரசியல்வாதிகள்,   பெரிய  செல்வந்தர்கள், புள்ளிகள்,   சினிமாக்காரர்கள், நடிகைகள்  என  அனைவரும்  இங்கு  வந்து  போகின்றனர். அதனை, அந்த  தர்கா   இணைத்தளமே  பெருமையாக  புகைப்படங்களை  வெளியிட்டு  வருகின்றன. நாகூரிலும் “நாச்” என்ற  பெண்களை   வைத்துக்கொண்டு  நடனம்  முதலியவை  நடந்து  வருகின்றன.

 

Jawahirullah gwtting blessing from Aadheenam, Mayildauthurai

Jawahirullah getting blessing from Aadheenam, Mayildauthurai

தர்கா  வேறு  மசூதி  வேறு  என்றால், தர்காவில்  தொழுகை  ஏன்?: இறைவனைத்  தவிர  வேறு  ஒருவனையும்  வணங்கக்கூடாது  என்றால், இஸ்லாத்தில்  தர்கா  வழிபாடு  இருக்கக்கூடாது. எப்படி  உருவவழிபாடு  கூடாது  என்றாலும், அது  நிஜவாழ்க்கையில்  முடியாதோ,   அதாவது,   வெளிப்புறத்தில்  உருவத்தினால்  தான்எல்லாமே  அடையாளம்  காணப்படுகிறது. உருவம்,  சின்னம்,  அடையாளம்,  குறியீடு,  என  எதுவும்  இல்லை  என்றால், இவ்வுலகத்தில்  எதுவுமே  நடக்காது. அதனால்தான்  குரான்  புத்தகம், கத்தி, பிறை, நட்சத்திரம், குதிரை, கை, கையெழுத்து, பச்சை  நிறம்  முதலியன  இஸ்லாத்தில்  சின்னங்களாக  உபயோகப்  படுத்தப்பட்டு  வருகின்றன. அதனால்தான், முஸ்லீம்அரசியல்வாதிகள்இந்துகடவுளர்கள்இல்லைஎன்றுவாதிட்டாலும், தேர்தல்  மற்றும்  மற்ற  நேரங்களில்  கோவில்களை, மடாதிபதிகளைச்  சுற்றி  வருவார்கள்.

 

Ajmer Sharif Mannat

Ajmer Sharif Mannat

 

தர்கா  வழிபாடும், ஆசார  இஸ்லாமும், திராவிடமும்: அடிப்படைவாத  முஸ்லிம்கள்  இது  இஸ்லாத்திற்கு  விரோதமானது  என்று  பிரச்சாரம்  செய்து  வருகின்றனர்.   தர்கா வேறு,   மசூதி  வேறு  என்பதனை  எடுத்துக்  காட்டும்  விதமாக,   மேலே  எடுத்துக்  காட்டியுள்ளபடி  சில  இடங்களில்  குறுக்கே  சுவர்களை  எழுப்பி  பிரித்துக்  காட்டுகின்றனர். தர்கா  இருக்கும்  இடங்களில்  மசூதிகளைக்  கட்டிப்  பிரித்தும்  காட்டுகின்றனர்.   திராவிட  அரசியல்வாதிகள்  கடவுள்  இல்லை  என்றெல்லாம்  கூப்பாடு  போட்டு  வந்தாலும்,  காயதே  மில்லத்  இறந்தநாளை  தவறாமல்  ஞாபகத்தில்  வைத்துக்  கொண்டு  சமாதிக்கு  மலர்வளையம்   / பச்சை  துணி  வைத்து  மரியாதை  செய்து  கும்பிட்டுவிட்டு  செல்கின்றனர். இதில்  கருணாநிதி,   ஜெயலலிதா  போன்றொருக்கும்  போட்டித்  தான்.   முஸ்லிம்களும்  ஒரு  பக்கம்  இதெல்லாம்  இஸ்லாத்திற்கு  விரோதமானது  என்றெல்லாம்  சொல்லிக்  கொண்டாலும், அத்தகைய  கூத்துகள்  நடந்து  கொண்டிருக்கின்றன[9].

 

Qawwali  dance ajmeeri dargah

Qawwali dance ajmeeri dargah

2014ல் சந்தன கூடு எரிவது: நாகூர்  தர்காவில்  நடைபெறும்  கந்தூரி  விழாவுக்காக  தயார்  செய்யப்பட்ட  சந்தனக்கூடு  வெள்ளிக்கிழமை  அதிகாலை  தீப்பற்றி  எரிந்தது  பக்தர்களிடையே  பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது[10]. இதனால்  இஸ்லாமியர்கள்  மத்தியில்  சோகமும், பதட்டமும்  ஏற்பட்டது[11].   நாகூர்  ஆண்டவர்  தர்கா  கந்தூரி  விழாவை  ஒட்டி  நாகப்பட்டினம்  நகரில்  இருந்து  அலங்கரிக்கப்பட்ட  கூட்டில்  வைத்து  சந்தனம்  ஊர்வலமாக  எடுத்துச்  செல்லப்  படுவது  வழக்கம்.  சந்தனம்  எடுத்துச்  செல்லும்  கூடு  நாகப்பட்டினம்  ஜமாத்தினரால்  செய்யப்படும். மூங்கில்களால்  கூடு  செய்து  அதற்கு  வண்ணம்  தீட்டி,   அதனை  வண்ணகாகிதங்கள், பூக்களைக்  கொண்டு  அலங்கரித்து  அதில்  சந்தனத்தை  வைத்து  எடுத்துச்  செல்வார்கள்[12].   கூடு  செய்யும்  வேலை  கடந்த  சில நாட்களாக  நாகப்பட்டினம்  அபிராமி  அம்மன் கோயில் திடல்  அருகே   ஒரு  கட்டிடத்தில்  நடைபெற்று  வந்தது.  ஐம்பது  சதவீத  பணிகள்  முடிவடைந்திருந்த  நிலையில்  வெள்ளிக்கிழமை (04-04-2014) அதிகாலையில்  அக்கூட்டின்  ஒருபகுதியில்  திடீரென  தீப்பற்றி  எரிந்தது.   அதனைக்  கண்ட  கூடுதயாரிக்கும்  பணியில்  ஈடுபட்டிருந்த  பாபுஜி (எ)   காதர்  நாகப்பட்டினம்  தீயணைப்புத்  துறைஅலுவலகத்துக்கும்  நாகப்பட்டினம்  ஜமாத்  தலைவரான  லாசா  மரைக்காயருக்கும்  தகவல்  தெரிவித்தார்[13].   தீயணைப்பு  அலுவலர்கள்  வந்து  தீயை  அணைத்தனர்.   ஆனாலும்  கூட்டின்  ஒருபக்கம்  பெருமளவு  எரிந்துவிட்டது.

 

Khushi dance at Ajmir Sharif Urs

Khushi dance at Ajmir Sharif Urs

“இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்”தின்  மீது  பொய்  வழக்கு  போடப்  பட்டுள்ளது[14]:   பொய்  வழக்கு  போட்ட  காவல்துறையைக்  கண்டித்து  இந்திய  தவ்ஹீத்  ஜமாத்  கண்டன  ஆர்ப்பாட்டம்  அறிவித்துள்ளது.   இது  குறித்து  அக்கட்சியின்  மாநில   செயலாளர்  முஹம்மது  ஷிப்லி  வெளியிட்டுள்ள  அறிக்கையில்:   “நாகூருக்கு  எடுத்துச்  செல்வதற்காக  நாகப்பட்டினத்தில்  வைக்கப்  பட்டிருந்த  சந்தனக்கூடு  கடந்த   4.4.2014   தேதி  இரவு  சமூகவிரோதிகள்  சிலரால்  தீவைத்து  கொளுத்தப்  பட்டிருக்கிறது.   இதனையடுத்து  சந்தனக்கூடு  வைத்த  தரப்பினரால்  காவல்துறையில்  புகார்  அளிக்கப்பட்டுள்ளது.   அந்தப்  புகாரில்  எவருடைய,   எந்த  இயக்கத்தின்  பெயரையும்  குறிப்பிடப்படாமல்  இருந்த  நிலையிலும்,   இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்தின்  மாவட்ட  மற்றும்  நகர  நிர்வாகிகள்  மீது  எந்த  அடிப்படையும்  இல்லாமல்  பொய்வழக்கு  போட்டுள்ளது  காவல்துறை.   சமூகவிரோதசெயலில்  யார்  ஈடுபட்டாலும்  அது  கண்டிக்கத்  தக்கது  என்பதில்  எவருக்கும்  மாற்று  கருத்து  இருக்க  முடியாது.   ஆனால்  எந்தவித  முகாந்திரமும்  இல்லாமல்,   புகார்  அளித்தவர்கள்  சந்தேகப்படும்  நபர்களின்  பெயரையோ  எந்த  அடையாளத்தையோ  புகாரில்  குறிப்பிடாத  நிலையில்  இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்தின்  நிர்வாகிகள்  மீது  காவல்  துறை  பொய்வழக்கு  போட்டிருப்பது  வன்மையாக  கண்டிக்கத்  தக்கது.

 

 

“நாகை  பகுதிகளில்  சமூக  சீர்திருத்தப்  பணிகளையும்,  மனிதநேயப்  பணிகளையும்  முன்னெடுத்து  வருவதோடு  முஸ்லிம்களுக்கு  மத்தியில்  புரையோடிப்போயிருக்கும்  இஸ்லாத்திற்கு  முரணான  செயல்களையும்  கண்டித்து  விழிப்புணர்வு  பிரசாரங்களை  இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்தின்  நிர்வாகிகள்  செய்து  வருகின்றனர்.   இந்தப்பணிகளை  முடக்க  நினைக்கும்  சக்திகளின்  தூண்டுதல்  காரணமாகவே  இந்த  பொய்வழக்கை  போட்டிருக்கிறது  காவல்துறை.

 

“இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்  ஜனநாயகதின்  மீதும்  அறவழி  போராட்டங்களின்  மீதும்  நம்பிக்கை  கொண்ட  அமைப்பு.  இந்த  அமைப்பின்  தொண்டர்கள்  பொது  அமைதிக்கு  பங்கம்  நேரும்  எந்த  செயலிலும்  ஈடுபடமாட்டார்கள்  என்பது  தமிழக  அரசுக்கும்  காவல்  துறைக்கும்  நன்கு  தெரியும்.   அப்படியிருந்தும்  நாகை  காவல்துறை  உள்நோக்கம்  கொண்டயாரோ  சிலரின்  தூண்டுதலின்  பேரில்  இந்த  பொய்  வழக்கை  போட்டிருக்கிறது.

 

“எனவே, உண்மை  குற்றவாளிகளை  காவல்துறை  அடையாளம்  காணவேண்டும்.   அதோடு,  சம்பவத்திற்கு  சற்றும்  தொடர்பில்லாத  இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்தின்  நிர்வாகிகள்  மீது  போடப்பட்ட  பொய்வழக்குகளை  உடனடியாக  திரும்ப  பெறவேண்டும்  நாகை  மாவட்ட  காவல்  துறையின்  நியாயமற்ற  இந்தசெயலை  கண்டித்து   (இறைவன்  நாடினால்) எதிர்வரும் 10.4.14 அன்றுமாலை 4 மணியளவில்  நாகூரில்  மாபெரும்  கண்டன  ஆர்ப்பாட்டத்தை   நடத்த  இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்  தீர்மானித்திருக்கிறது.”  இவ்வாறு  அந்த அறிக்கையில்  கூறப்  பட்டுள்ளது[15].

 

பாய்மரம் கட்டுவது முதலிய பழைய விழாவைக் காட்டுகிறது

பாய்மரம் கட்டுவது முதலிய பழைய விழாவைக் காட்டுகிறது

சந்தனக்கூடு  வைத்த  தரப்பினரால்  காவல்  துறையில்  புகார்  அளிக்கப்  பட்டுள்ளது: நாகை  ஜமாஅத்  தலைவர்  லாசா  மரைக்காயர்  கொடுத்த  புகாரின்  பேரில்  நாகப்பட்டினம்  நகரகாவல்  நிலைய  போலீஸார்  வழக்குப்பதிந்து  நாசவேலையா, மின்கசிவா விசாரணை  நடத்தி  வருகின்றனர்.   இந்நிலையில்   தீவிபத்து  நடந்த  இடத்தை  நாகூர்  தர்கா  டிரஸ்ட்  ஷேக்  ஹசன்  சாஹிப்,   நாகூர்  டவுன்  ஆலோசனை குழுதலைவர்  சையது  முகமது  கலிபா  சாஹிப் மற்றும்  நிர்வாகிகள்  நேரில்  பார்வையிட்டனர்.   பின்னர்  சையது  முகமது  கலிபா  சஹிப்,   “நாகூர்  ஆண்டவர்  தர்கா  பெரிய  கந்தூரி  விழாவிற்கு  கடந்த  ஆண்டைவிட  அதிக  அளவில்  இஸ்லாமியர்களும், சுற்றுலா  பயணிகளும்  வரவிருப்பதால்,   அனைத்து  வசதிகளும்  சிறப்பாக  செய்யப்  பட்டுள்ளன. இதைப்  பொறுக்காத  சில  மர்ம  நபர்கள்  இந்த  நாசவேலையைச்  செய்துள்ளனர்[16].   இதை  நாங்கள்  வன்மையானக்  கண்டிக்கிறோம். தன்  கைகளால்  தனது  கண்ணை  மறைக்க  முடியுமே  தவிர,   சூரியனை  மறைக்க  முடியாது.   அது  போல  யார்  என்ன  முயற்சி  செய்தாலும்  நாகூர்  ஆண்டவரின்  தொடர்ந்த  படிதான்  இருக்கும்”, என்று  உறுதியாகக்  கூறினார்[17].

 

Inside Nagore Dargha pillars, lamps etc

Inside Nagore Dargha pillars, lamps etc

புகார்  கொடுத்ததும்,   சந்தேகங்களும்: சந்தனக்கூடு  திடீரென்று  எரிந்ததால்,   இது  குறித்து  லாசா  மரைக்காயர்  கொடுத்த  புகாரின்  பேரில்  நாகப்பட்டினம்  நகரகாவல்  நிலைய  போலீஸார்  வழக்குப்  பதிந்து  நாசவேலையா,   மின்கசிவா என்று அறிய விசாரணை  நடத்தி  வருகின்றனர்[18]. “நாகூர்  தர்கா  விழாவில்  மர்மமான  தீ” என்று  ஒரு  ஆங்கில  இணைதளம்  விவரிக்கின்றது[19]. இதனால், அப்பகுதியில்  பதட்டம்  நிலவுகிறது[20].   அதாவது  முஸ்லிம்களே  முஸ்லிம்களின்  மீது  புகார்  கொடுத்துள்ளனர்.   இந்திய  தவ்ஹீத்  ஜமாஅத்  என்ற  இயக்கம்  வேண்டுமென்றே  தமது  நிர்வாகிகள்  மீது  காவல்துறை  பொய்வழக்கு  போட்டிருக்கிறது  என்று  மேற்கூறியப்படி  கண்டனம்  தெரிவித்துள்ளனர்.   பெண்களோ  இதனை கெட்டசகுனமாக  கருதி  கவலையுடன்  இருக்கின்றார்கள்.   இதற்கு  பரிகாரம்  எதாவது  செய்ய  வேண்டும்  என்றும்  தீவிரவாதமாக  யோசித்து  வருகின்றனர்.

 

© வேதபிரகாஷ்

06-04-2014

 

[1]திஇந்து, சந்தனகூடுதீப்பற்றிஎரிந்தது, சென்னை, 06-04-2014

[2]தினகரன், நாகூரில்கந்தூரிவிழாசந்தனக்கூடுதீபிடித்துநாசம், சென்னை, 06-04-2014

[3] http://www.business-standard.com/article/pti-stories/holy-car-partially-burnt-in-mysterious-fire-114040400583_1.html

[4]Tension prevailed for almost whole day today at the famous Dargah at Nagore near here, after a mystery fire accident which partially burnt the Sandanakoodu (holy car decorated with sandal paste).According to official sources the Sandanakoodu made out of bamboo sticks with sandal paste on it and is taken out in a procession is as part of the 14-day annual Kandoori festival, incidentally which is under way currently. The Dargah of Saint Hazrath Syed Shahul Hameed Quadir Wali at Nagore is more than 500 years old. It has a golden dome, flanked by five minarets. Saint Hazrath Syed Shahul Hameed is known to be the 23rd descendant of Prophet Muhammad (Sal).The death anniversary of this Saint is celebrated as ‘Kandoori Festival’ every year for 14 days. The 457th annual festival commenced with hoisting of the holy flag on Tuesday last 01-04-2014.

[5]https://islamindia.wordpress.com/2010/05/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/

[6] https://islamindia.wordpress.com/2013/03/10/how-music-dance-entertained-inside-before-mosques-dargahs/

[7] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/nagore-dargah-elephant-joins-camp/article5485906.ece

[8] http://www.dailythanthi.com/2014-03-30-khanduri-festival-minarakkal-mounted-on-the-mast-nagai-news

[9] https://islamindia.wordpress.com/2010/06/06/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

[10] http://timesofindia.indiatimes.com/city/trichy/Fire-damages-festival-chariot-under-construction/articleshow/33252952.cms

[11] http://muthupetnews.com/irrespective-b-c-khanduri-ready-to-function-cantanakkutu-burnt-sensation/

[12] http://www.maalaimalar.com/2014/04/04121947/Nagore-Dargah-fire-accident.html

[13]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/article5875440.ece?utm_source=RSS_Feed&utm_medium=RSS&utm_campaign=RSS_Syndication

[14] http://www.inneram.com/news/tamilnadu/5735-intj-protest-announcement.html

[15] http://www.inneram.com/news/tamilnadu/5735-intj-protest-announcement.html

[16]  இந்நிலையில்நேற்றுஇரவுமர்மநபர்கள்சந்தனக்கூட்டிற்குதீவைத்தனர். இதனால்சந்தனக்கூடுசேதமடைந்துள்ளது. இச்சம்பவம்நாகையில்பதற்றத்தைஏற்படுத்திஉள்ளது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=119324

[17] http://muthupetnews.com/irrespective-b-c-khanduri-ready-to-function-cantanakkutu-burnt-sensation/

[18] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=86352

[19] webindia123, Mysterious fire at dargah during ‘Kandoori festival’ at Nagore, 04-04-2014.

[20] http://news.webindia123.com/news/Articles/India/20140405/2370117.html

 

பாகிஸ்தானிய நடிகை நிர்வாணமாக போஸ் கொடுத்தது எப்படி?

திசெம்பர் 5, 2011

பாகிஸ்தானிய நடிகை நிர்வாணமாக போஸ் கொடுத்தது எப்படி?


வீணா மாலிக் பாகிஸ்தானிய கவர்ச்சி நடிகை மற்றும் பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளவர்: பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. அங்கு பெண்கள் பர்தாவில் இருக்க வேண்டும். இருப்பினும், மேனாட்டு நாகரிகம் பரவியுள்ளதால், படித்த பெண்கள் நாகரிகமாகவே இருக்கிறார்கள், உடையணிகிறார்கள். இருப்பினும், இஸ்லாமிய மதகுருமார்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறர்கள். வீணா மாலிக் ஒரு நாகரிகமான பாகிஸ்தானிய நடிகை. ராவல்பிண்டியில் 1978ல் ஒரு பாலிஸ்தானிய ராணுவ வீரருக்குப் பிறந்தவர்.  பள்ளியில் கூடைபந்து விளையாடி, பிறகு பி.ஏ வரைப் படித்துள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தான் சினிமாக்களில் நடித்துள்ள இவர், பிக்-பாஸ்-4 நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்[1]. அடிக்கடி நிர்வாண போஸ் கொடுப்பது, கிரிக்கெட் வீரர்களுடன் உல்லாசமாக இருப்பது முதலியவ அவருக்கு பொழுது போக்கு எனலாம்.

நிர்வாணத்திலும் போட்டா-போட்டி போடும் நடிகை: இந்தியாவில் ராக்கி சாவந்த் எனும் சர்ச்சைக்கு பெயர் பெற்ற நடிகைக்கு தானும் சளைத்தவர் இல்லை என்பது போல், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது வீணா மாலிக்குக்கு வழக்கம்தான்[2].  இந்தியாவில் கலர்ஸ் டிவி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு கலந்து கொண்டு அதன் மூலம் பெரும் பிரபலமானவர் வீணா மாலிக். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல ஆண் போட்டியாளர்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்தி சலசலப்பையும் ஏற்படுத்தியவர் வீணா மாலிக்[3]. ஏற்கெனவே அதே எப்.எச்.எம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் அதே மாதிரி நிர்வாணப்படம், தோளில் ஐ.எஸ்.ஐ முத்திரையுடன் வெளி வந்துள்ளது. இப்பொழுது இரண்டாவது முறை. வித்தியாசம், இது முழு நிர்வாணம், அவ்வளவு தான்! முன்பு முகமது ஆசிப்புடன் சுற்றி வந்தார்[4]. அட்டைபடத்தில் கிடைப்பது, இணைத்தளத்தில் கிடைப்பது அனைவருக்கும் சொந்தம் தான். ஆகவே,

நிர்வாணமாக போஸ் கொடுக்கிறார்கள் என்றால், பெண்கள் ஆகட்டும், நடிகைகள் ஆகட்டும், துணிந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. மனத்துணிவு மற்றும் ஏதாவது ஒரு விதத்தில் பணம், புகழ் கிடைக்கும் என்றால் அவ்வாறு வெய்கிறார்கள், வற்புறுத்தினாலும் செய்வதுண்டு.

இந்த போட்டோ டூவிட்டர் மற்றும் பேஷ்புக் இணைய தளங்களில் வெளியாகியுள்ளது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.  இதெல்லாம் பிரச்சார யுக்தியேயன்றி வேறெந்த சகசியமோ, வேடிக்கையோ விளையாட்டோ இல்லை. அவர் ஐ.எஸ்.ஐ. உளவுத்துறை முத்திரையுடன் நிர்வாண போஸ் கொடுத்து இருப்பதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது[5]. இதற்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.  ஆனால், வழக்கம் போல நமது “தி ஹிந்து” இதற்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டு விளக்கம் அளித்துள்ளது.

 

உண்மைகளை மறைக்க, மக்களின் மனங்களைத் திசைத் திருப்ப பிரச்சார யுக்தி: “அவரது தோள்பட்டையில் கருப்பு நிறத்தில் ஐ.எஸ்.ஐ. என்று எழுத வைத்தது என்னுடைய ஐடியா தான். இது வெறும் ஜோக்குக்காக செய்யப்பட்டது. இந்தியாவில் நாங்கள் இவ்வாறு ஜோக் அடிப்பதுண்டு. ஏதாவது தவறாக ஆகிவிட்டால், அதற்கு காரணம் ஐ.எஸ்.ஐ. தான் பின்னணி என்போம்”, என்று FHM பத்திரிக்கை ஆசிரியர்

யுத்தத்தில் அல்லது இக்கால நிலவரப்படி சொல்வதானால், தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள நாடுகள் தங்களது அக்கிரமமான கொடூரங்களை மறைக்க பலவிதமான பிரச்சார யுக்திகளை கையாளுவதுண்டு. அதாவது, பரப்பரப்பான செய்தியை வெளியிட்டு பரப்பி, மக்களின் மனங்களை திசைத் திருப்பி விடுவர். வாயில் வெடிகுண்டு, தோள்பட்டையில் ஐ.எஸ்.ஐ என்பதெல்லாம் அதைத்தான் காட்டுகிறது.

கபீர் சர்மா விளக்கம் அளித்தார்[6]. இதற்கிடையே, அந்த பத்திரிகைக்கு நான் நிர்வாண போஸ் கொடுக்க வில்லை என நடிகை வீணாமாலிக் மறுப்பு தெரிவித்துள்ளார். நான் ஆடையுடன்தான் கவர்ச்சி போஸ் கொடுத்தேன். ஆனால் அது நிர்வாணமாக மார்பிங் செய்து மாற்றி அமைத்து வெளியிடப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார்[7].   மேலும், தனது கையில் ஐ.எஸ்.ஐ. என்ற, பாகிஸ்தான் உளவுத்துறையின் முத்திரையை ஒரு நகைச்சுவை கலந்த வேடிக்கைக்காகதான் பச்சை குத்தியிருந்தேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் வீணாமாலிக் கூறியிருப்பதை பத்திரிகை நிர்வாகம் மறுத்துள்ளது.

 

26/11 துயரத்தை, பயங்கரத்தை, குரூரத்தை பிளேஷ் டான்ஸினால் மறைக்க முடியுமா? 26/11 அன்று கொல்லப்பட்டவர்களின் ஆத்மா எப்படி சாந்தி அடையும்? அவர்களது உற்றார்-உறவினர்களது துயரத்தை எப்படி தீர்க்க முடியும்? அந்த பயங்கரத்தை, குரூரத்தை எப்படி தவிக்க அல்லது நீக்க முடியும்? இதெற்கெல்லாம் பதில் சொல்லாமல், தீர்வு காணாமல், வெட்கங்கெட்ட பெண்கள் / ஆண்கள் அதே சி.எஸ்.டி. ஸ்டேஷனில் நடனம் ஆடுகின்றனர். கேட்டால், “பிளேஷ் டான்ஸ்” என்ரு டிவி-ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. பிளேஸ் டான்ஸினால் தீவிரவாதத்தை மறைக்க முடியுமா? பிறகு காஷ்மீரத்தில் சென்ரு ஆடவேண்டியது தானே? ஆகவே, இது இந்தியர்களை ஏமாற்ற செய்யப்படும் ஒரு பிரச்சாரமே ஆகும்.

 

எப்படி நிர்வாண போட்டோ எடுக்கப்பட்டது: “நவம்பர் 23ம் தேதி வெர்சொவா அரம்நகரிலுள்ள ஸ்டூடியோவில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. விஸால் சாக்ஸேனா என்ற புகைப்படக்காரர், மேக்கப்காரார், ஸ்டைல்-ஆலோசகர்  மற்றும்

இப்படி பல ஆண்களுக்கு முன்னால் தைரியமாக நின்று போஸ் கொடுக்கிறார்கள் என்பதிலிருந்து, எல்லாவற்றையும் துறந்து விட்டனர் என்றே தெரிகிறது. பிறகு வெட்கப்படுவதிலேயோ, மறுப்பதிலேயே என்ன இருக்கிறது? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு என்றெல்லாம் விவாதிக்கப் போகிறார்களா என்ன?

துணையாளிகள் என்று எட்டு பேர் அப்பொழுது இருந்தனர். அதைத்தவிர வெளியில் இருந்த பத்து பேர்களுக்கும், நாங்கள் அத்தகைய படத்தை எடுக்கப் போகிறோம் என்று நன்றாகத்தெரியும். மதியம் அந்த சூட்டிங் ஆரம்பித்தது, 6.30க்கு முடிந்தது, வீணா சென்று விட்டார். உண்மையில் நாங்கள் இரண்டு விதமான புகைப்படங்கள் எடுத்தோம். ஒன்று பத்திரிக்கையின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டது, மற்றொன்று ஒரு கையெரி குண்டை தனது பற்களில் கடித்துக் கொண்டு நிற்பது போன்ற போஸ். அது மிகவும் பிரச்சினைக்குள்ளாகும் என்று அதனை தவிர்த்து விட்டோம். இதற்காக வீணாவை நாங்கள் நேரிடையாகவே தொடர்பு கொண்டோம். அவரது ஆட்கள் மூலம் செல்லவில்லை. ஈ-மெயில் தொடர்பிலேயே ஒப்பந்தத்தை செய்து கொண்டோம்.

படத்தை பார்க்க ஆவலாக உள்ள நடிகை: நவம்பர் 29ம் தேதி அவர் அனுப்பியுள்ள ஈ-மெயிலில், “நவம்பர் 23ம் தேதி எடுத்த படங்களுக்காக நான் சந்தோஷமடைந்தேன். பத்திரிக்கையின் அட்டைப்படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளேன்”, என்று சொல்லியுள்ளார். கபீர் சர்மா அன்று நடந்த புகைப்படம் எடுக்கும் நிகழ்வை வீடியோவும் எடுத்துள்ளதாகவும், அது அத்தாட்சியாகவும் விளங்குகிறது என்கிறார்[8]. இதனால் விளம்பரம் அதிகம் கிடைக்கும் என்று இவ்வாறு வீணா மறுப்பதாக கூறப்படுகிறது. வீணா மாலிக்குடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தான் அவரது நிர்வாணபடம் எடுத்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ. முத்திரை தெரியாத வகையில் மிகவும் மெல்லியதாக தான் வரைந்தோம். ஆனால் வீணாமாலிக்தான் அதை மிகவும் பெரிதாக வரையும்படி கேட்டுக் கொண்டார் என கூறப்பட்டுள்ளது.

 

பாகிஸ்தானில் எதிர்ப்பு, நடவடிக்கை: நடிகை வீணாமாலிக் நிர்வாண படம் குறித்து பாகிஸ்தானின் பழமைவாத மதகுரு மவுலானா அப்துல் குவாய் கூறும்போது,

இஸ்லாமில் இவையெல்லாம் அனுமதிப்பதில்லை என்றால், எதற்காக முஸ்லீம்கள் அதிகமாக “புரொனோகிராபி’ இணைதளங்களை அதிகமாகப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. எப்பொழுது சர்வே எடுத்தாலும், அதிகமாக கிளிக் செய்பவர்கள் அவர்கள் தாம் என்று தெரிகிறது.

வீணாமாலிக்கின் செயல் அனைத்து முஸ்லிம்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.  ஆனால் அதற்கு அந்நாட்டு டிவி-ஸோவிலேயே, “இதைவிட/தன்னைவிட நிறைய பிரச்சினைகள் நாட்டில் உள்ளன”, என்று கிண்டலாக பதிலளித்தாராம்! உள்துறை மந்திரி ரகுமான் மாலிக் கருத்து தெரிவிக்கையில், “முதலில் அந்த படம் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிய வேண்டும். நான் அந்த புகைப்படத்தைப் பார்க்கவில்லை. உண்மையானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று தெரிவித்துள்ளார்[9].

வேதபிரகாஷ்

05-12-2011


[4] வேதபிரகாஷ், முகமதுஆசிப்பும், காதலிவீணாமாலிக்கும்ஊடல்!ஆசிப்மீதுநடிகைவீணாமோசடிபுகார், https://islamindia.wordpress.com/2010/04/09/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5/