Posted tagged ‘நடிகர்’

குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!

மார்ச் 19, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!

முஸ்லீகளுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்: “முதலில் முஸ்லீம்களின் நலன் தான், பிறகு தான் அரசாட்சி, என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நான் முஸ்லீம்களை ஏமாற்றமாட்டேன். முஸ்லீம்கள் ஆசைகளுக்காக எங்களுடைய அரசாங்கத்தையே தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்[1]………..எனது சபையில் 11 முஸ்லீம் மந்திரிகள் இருக்கிறார்கள். அரசு முதன்மை செயலாளரே முஸ்லீம் தான் (Javed Usmani)”, என்று முல்லா முலாயம் சிங், ஜமைத் உலாமா ஹிந்த் [Ulema-e-Hind] ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் அடுக்கிக் கொண்டே போனார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்குகள் நடைப்பெற்று வரும் நிலையில் சிறைலிருக்கும் கணிசமான முஸ்லீம் கைதிகளையும் சமீபத்தில் விடுவிக்க முஸ்லீம்கள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த அப்பாவி முஸ்லீமும் சிறையில் இருக்கமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்[2]. இப்படி முல்லாயம் பேசியவுடன், சோனியாவின் விசுவாசியான பேனி பேசியது இப்படித்தான்!

மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா என்றும் பேசியுள்ளார்[3]. இருவரும் இப்படியிருக்கும் போது, உபியை எப்படி காப்பாற்ற முடியும்? என்று பேனி கேட்டுள்ளார். “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய்.” பேனி பிரசாத் வர்மாவின் பேச்சு, முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, என்ற பேச்சு. கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[4]. இதைக்கேள்விப்பட்ட முல்லாயம், “ஒன்று அவர் பதவி விலக வேண்டு, இல்லை நான் கைது செய்யப்படவேண்டும்”, என்று ஆர்பரித்தார்[5], என்னைப்பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?”, என்றும் கேட்டார்[6].

மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்இப்படி ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார்அதாவது பிஜேபியை வம்புக்கு இழுத்தார்: இவரது பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியினர் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெனிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெனிபிரசாத் கூறுகையில், “என்னை பதவி விலக சொல்வதற்கு முலாயம் யார் ? நான் பதவி விலகத்தயார் ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன். முலாயம்சிங் அயோத்தி இடிப்பு சம்பவத்தின்போது சிலருக்கு துணையாக இருந்தார். குறிப்பாக மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்”“, என்றார். மேலும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.

மாயாவதி அமைதியாக இருக்கும்போது, இன்னொரு கஞ்சிகுடித்தவர் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார்: ஆமாம், கருணாநிதி வழக்கம் போல, தங்களது ஆதரவு பற்றி பரிசீலினை செய்ய வேண்டியிருக்கும் என்று பாடலை ஆரம்பித்தார். உடனே, இலங்கை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக, திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இந்தியா சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இதையடுத்து மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் இன்று கருணாநிதியை சந்தித்து, அமெரிக்காவின் தீர்மானம் குறித்து விவாதித்தனர். கருணாநிதியின் சிஐடி காலனி வீட்டில் இன்று மாலை 5.30 மணியளவில் சந்திப்பு தொடங்கியது.  முன்னதாக, இன்று காலையில், டெசோ உறுப்பினர் சுப. வீரபாண்டியன் மற்றும் திமுக தலைமை நிர்வாகிகளுடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இச்சந்திப்பில், மத்திய அமைச்சர்களுடன் என்ன பேசுவது என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குலாம்நபிஆசாத் இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: “தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் சில திருத்தம் செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரினார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்திலும் திருத்தம் பற்றி விளக்கியிருந்தார். அது தொடர்பாகவும் நேரில் விவாதித்தோம். கருணாநிதியுடன் பேசியது பற்றி பிரதமரிடம் கூறுவோம். கருணாநிதியின் கோரிக்கை பற்றி பிரதமரிடம் ஆலோசித்து, பின்னர் முடிவு எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்.

சிதம்பரம்  இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதியை , மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று வழக்கம் போல புன்னகையுடன் சொன்னார். பிறகு, “சி.ஏ.ஜி.க்கு கூடுதலாக உறுப்பினர்கள் நியமிக்கும் திட்டம் இல்லை”, என்றார்[7]. ஆனால், இதன் ரகசியம் என்ன, கருணாநிதி அவ்வாறு கேட்டுக் கொண்டாரா, அல்லது இவராகச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. பிறகு சிவகங்கைக்குச் சென்று ஏதாவது வங்கிக் கிளையை திறந்து வைப்பார் போலும்!

நாராயணசாமி இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[8]: “இலங்கையில் தமிழர்கள் நலமுடன் வாழ மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக மக்களும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் திருப்தி அடையும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். இதற்கான அறிவிப்பை பிரதமர் விரைவில் அறிவிப்பார். மூவரும் ஒரே பாட்டை மாற்றிப் பாடியுள்ளனர்.

நாராயணசாமி விடுவாரா – அவரும் பிஜேபியை இழுத்துள்ளார்: கூடங்குளத்தை வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை சீண்டி வரும் இவர், “கடந்த 9 ஆண்டுகளாக தி.மு.க. – காங்கிரஸ் இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது. இதில் பிரிவு எதுவும் வராதா என்று பா.ஜனதா எதிர்ப்பார்க்கிறது. இலங்கை பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கையை வரவேற்று பா.ஜனதா குட்டையை குழப்ப பார்க்கிறது. எதிர்கட்சியான அவர்களே இப்படி செய்யும் போது ஆளுங்கட்சியான நாங்கள் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம். அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்வது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்”, இவ்வாறு அவர் கூறினார்[9]. ஆக தேர்தலுக்காக இவ்வாறு எல்லோரும்மாடுகின்றனர் என்று தெரிகிறது.

ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர் மாயாவதி, முல்லாயம் சிங் யாதவ், மோடி, பீஜேபி என்று அனைவரையும் இழுத்து வசவு பாடியாகி விட்டது. பிறகு ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர்? ஒருவேளை புத்த பிக்குகளைத் தாக்கி அதனால் ஏற்படுத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும், அவர் மீது அவதூறு ஏற்படும், அவரது ஆட்சியை கலையுங்கள் என்று கூட பேசலாம் என்று செய்ய ஆரம்பித்துள்ளனரா? வழக்கம் போல மம்தா-சமதா-அம்மா-மாயா சீண்டல்கள் ஆரம்பித்துள்ளன. பங்களாதேச முஸ்லீம்கள் விவகாரத்தில் மம்தா காங்கிரஸை மிஜ்சி விட்டார். சமதா கட்சி முதல்வர் தில்லிக்கே வந்து விட்டார். மாயாவைத் திட்டியாகி விட்டது. அதனால் அம்மாவை இப்படி சீண்டுகிறர்கள் போலும்!

முஸ்லீம் கூட்டுத் தேவை[10]: நிதிஷ் குமாரை கவனித்தாகி விட்டது; கருணாநிதியை சந்தித்தாகி விட்டது; ஆனால், இப்படி பேனி பேசியவுடன், முலாயம் முஸ்லீம் பிரச்சினையைத் திசைத்திருப்பி விட்டது போலாகி உள்ளது. முஸ்லீம் பிரச்சினையை விட்டு, முலாயம் பிரச்னையை அலச ஆரம்பித்து வருவார்கள்[11]. முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது[12], இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருந்தாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு செய்வது விடுவார். தமிழகத்திலும் ஒரு முஸ்லீம் மாநாடு நடத்தி அதில் கருணாநிதி பங்கு கொள்ளலாம். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.

© வேதபிரகாஷ்

19-03-2013


[1] “We will not hesitate in even sacrificing our government to fulfil the aspirations of the Muslims,” he said. “We will not let any kind of injustice be done against Muslims,” he added.

http://www.dnaindia.com/india/report_keeping-muslim-votebank-intact-a-challenge-for-mulayam_1812375

[2] He referred to the demand for the release of Muslim youths, who had been lodged in various jails in the state after being charged with terror activities. He said the SP government will make sure that no ‘innocent’ Muslim youth remains in prison.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html

ஆதிலாபானு கொலை – சாத்தான்குளத்துக் கொலையை தொடர்ந்துள்ளது: தமிழகத்தில் கோஷ்டி போர் நடக்கிறாதா (1)?

நவம்பர் 21, 2010

ஆதிலாபானு கொலை – சாத்தான்குளத்துக் கொலையை தொடர்ந்துள்ளது: தமிழகத்தில் கோஷ்டி போர் நடக்கிறாதா (1)?

அளந்து கொடுக்கும் இந்திய ஆங்கில நாளிதழ்கள், ஆனால் அள்ளி வீசும் மலேசிய நாளிதழ்கள்: காதலும், கொலையும் இந்த கொலையின் பின்னணியில் இருப்பதாகத் தெரிகிறது, என்று “தி இந்து” மிகவும் சுருக்கமாக செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை[1]. டெக்கான் ஹரால்ட் ஓரளவிற்கு விஷயத்தைக் கொடுத்திருக்கிறது – “மலேசிய கோஷ்டி சண்டை தமிழகக் கொலைக்குக் காரணமகியது” [Malay feud leads to murder in TN], என்று தலைப்பிட்டு கொடுத்துள்ளது[2]. மலேசிய பெர்நாமா, “கோஷ்டி போர் மூன்று மலேசிய மக்கள் கொலைக்கு காரணாமாகியது” [Gang war led to Triple murder of Malaysians] என்று தலைப்பிட்டு கொடுத்துள்ளது[3]. முக்கியமாக ஆறு ஆண்கள் மற்றும் முன்று பெண்கள் இவ்விஷயத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் விசாரணையில் மேலும் விவரங்கள் தரக்கூடும்[4]. அப்படியென்றால், அந்த முன்று பெண்கள் யார் என்று தெரியவில்லை. தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல், முதலிய கோஷ்டிகள்தாம் மும்பை, துபாய் முதலிய இடங்களில் இருந்து கொண்டு அப்படி யுத்தங்களை நடத்துகின்றனர் என்று கேள்விப்பட்டதுண்டு. அவர்கள் போதை மருந்து கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், தீவிரவாதம், ஜிஹாத், விபச்சாரம், சிறுமிகள்-பெண்களை அதற்காக பெருமளவில் கடத்துதல், கள்ளப்பணத்தை அச்சடித்தல், விநியோகித்தல், திருட்டு டிவிடி போடு விற்றல், நடிக-நடிகையரை மிரட்டுதல், அவர்களிடம் பணம் வாங்குதல் என பல விவகாரங்களை, பல நாடுகளில் செய்து வருகின்றனர். அத்தகைய கலாச்சாரம், தமிழகத்திற்கும் வந்து விட்டதா?

கைது செய்யப்பட்டுள்ள ஆறு ஆண்கள் மற்றும் முன்று பெண்கள் யார்? இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள், விவரங்கள் பலவாறு வெளிவந்துள்ளன. கைது செய்யப்பட்டுள்ள ஆறு ஆண்கள் – ஜெயக்குமாரையும் சேர்த்து, இவ்வாறு இருக்கலாம்:

1.   முனியசாமி, 

2.   சேக் தாஹாசத்,

3.   தமிமுல் அன்சாரி,

4.   சானவாஸ்,

5.   நாகூர் ஹூசைன்

1.   முனியசாமி (28), 

2.   சேக்கஜத் என்ற சூடானி (19),

3.   தமிமுல் அன்சாரி (21),

4.   சாநவாஸ் (20)

5.   நாகூர் உசேன் (19)

அந்த இரண்டு விவசாயிகள் யார்? இரு விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. ஆனால், அவர்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

செய்திகளில் பெண்கள் பெயர்கள் இரண்டு / மூன்று இடங்களில்தான் வந்துள்ளன:

1.   சுந்தரி: சம்பவ தினத்தன்று (08-10-2010) மத்தியான பொழுதில் பக்கத்து வீட்டுக்காரரான சுந்தரி என்பவருடன் சமையல் சாமான்களும் சமையல் எரிவாயு உருளையும் வாங்குவதற்கு கடைக்கு போயிருக்கிறார்கள்[6].

2.   பக்கிரியம்மாள்: சாகுலின் பாட்டி பக்கிரியம்மாள் – இந்நிலையில் தோட்டத்தில் உள்ள உடல்களை அகற்றுமாறு பக்கிரம்மாள் போனில் சாகுலிடம் சண்டையிட்டுள்ளார்[7].

3.   மூன்றாவது பெண்: யார் என்று தெரியவில்லை! – ஆதிலாபானுவின் தாயார் – ஹம்சத் நிஷா?

மலேசியாவுக்குத் தப்பி விட்டவர்கள்:

1.   சாத்தான்குளத்தைச் சேர்ந்த சாகுல்,

2.   வாணி கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஷத்,

3.   ராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன். மணிகண்டன்

மற்றொரு குற்றவாளியான வாலாந்தரவை முனியசாமி தலைமறைவாக இருப்பதாகவும் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தெரிவித்தார்.

ஆதிலா கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது[8]: கடந்த 11ம் தேதியன்று வாடிப்பட்டி அருகே பாலத்துக்கு கீழ் ஒரு பெண், 2 குழந்தைகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் இறந்து போன ஆதிலாவின் கணவர் முத்துசாமி (எ) அகமதுவின் நண்பன் ஜெயக்குமார் முதல் கட்டமாக கைது செய்யப்பட்டான். ஜெயக்குமார் அளித்த தகவலின் அடிப்படையில் கொலையில் தொடர்புடைய –

6.   முனியசாமி,

7.   சேக் தாஹாசத்,

8.   தமிமுல் அன்சாரி,

9.   சானவாஸ்,

10.  நாகூர் ஹூசைன்

ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசியாவுக்கு தப்பி ஓடிய சாகுல், அர்சத், மணிவண்ணன் ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலும் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெட்சுமணன் தலைமையிலும் இரு தனிப் படை போலீஸார் குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில்  ஆதிலா பானுவின் குடும்ப நண்பரான ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை வாடிப்பட்டி போலீஸார் செவ்வாய்க்கிழமை 16-11-2010 அன்று வாலாந்திரா பஸ் ஸ்டேன்டில் கைது செய்துள்ளனர்[9].

ஜெயக்குமாரின் வாக்குமூலத்தில் அறிவாதாவது: ஆதிலா பானுவின் கணவர் முத்துசாமி / அகமதுக்கும், இவனுக்கும் பத்தாண்டுகளுக்கு மேலாக பழக்கம் இருந்தது. அகமது வீட்டிற்கு அடிக்கடி சென்று குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்வான். கடந்த 20 நாட்களுக்கு முன்பு கியாஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டதாக ஆதிலாபானு கூறினார். உடனே தீபாவளி சமயமாக உள்ளதால் தட்டுப்பாடு உள்ளதால், குடோனில் கேட்டுப் பெற்றுத்தருவதாக சொன்னான். அந்நேரத்தில் அங்கு வந்த அத்தை மகன் முனியசாமி, அவள் பணக்காரப் பெண்ணாக உள்ளதால் கடத்திச் சென்று வைத்துக் கொண்டு தாயாரிடம் பணம் பறித்துக் கொண்டு பிறகு விட்டுவிடலாம் என்று தூபம் போட்டான். முதலில் ஜெயக்குமார் ஒப்புக்கொள்ளாததால், மூளைசலவை செய்வது போல பண ஆசைக் காட்டி மயக்கியதும், பிறகு ஒப்புக் கொண்டான். பிறகு மொட்டார் சைக்கிளில் ஆதிலா வீட்டிற்குச் சென்று, சிலின்டர் வாங்க கூப்பிட்டேன். அதன்படியே ஆதிலா தன்னுடைய குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டார். அவர்களை மொட்டார் கைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு ஓட்டிச்சென்றேன்[10]. குடோனுக்கு அருகில் சென்றபோது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென ஒரு கறுப்புக்கார் வந்தது. ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தினான்.  காருக்குள் இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த ஷாகுல் (29), மணிவண்ணன் (29), முகமது சர்ஜித் (30), முனியசாமி (30) ஆகியோர் இறங்கி ஓடிவந்து, ஜெயக்குமாரைத் தள்ளிவிட்டு, அவர்களைக் கடத்திக் ககண்டு சென்றுவிட்டனர். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரியாது. பிணம் கிடைத்தப் பிறகுதான், அவள் கொலை செய்யப்பட்டதே தெரியும்[11] என்கிறான் ஜெயக்குமார்.

வேதபிரகாஷ்

© 21-11-2010


[1] A combination of factors, including enmity between Shahul and Adhila Banu while they were in Malaysia, a love affair and a murder, is said to be the motive behind the murders.

The Hindu, Five persons arrested in murder of mother and her two children, Sunday, Nov 21, 2010, http://www.hindu.com/2010/11/21/stories/2010112158400100.htm

[2] Deccan Chronicle, Malay feud leads to murder in TN, November 21st, 2010,

http://www.deccanchronicle.com/chennai/malay-feud-leads-murder-tn-072

[3] Bernama, Gang war led to Triple murder of Malaysians, says police, Nov.20, 2010, http://www.bernama.com/bernama/v5/newsgeneral.php?id=544350

[4] This follows the arrest of six men and three women whom the police believe cpuld shed light on the triple murder.

http://www.bernama.com/bernama/v5/newsgeneral.php?id=544350

[5] Police in India have detained two farmers in connection with the death of a Malaysian woman and her two children who had earlier gone missing in South India last Monday (08-11-2010). http://thestar.com.my/news/story.asp?file=/2010/11/14/nation/7427381&sec=nation

[8] தினமலர், ஆதிலா கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது, நவம்பர் 20, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=130240

[9] தினமணி, தாய், 2 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கு: குற்றவாளிகளில் 3 பேர் மலேசியா தப்பி ஓட்டம்,, First Published : 18 Nov 2010 12:42:13 PM IST, http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Madurai&artid=333673&SectionID=137…….8D

[10] நான்கு பேர்கள் எப்படி மோட்டார் சைக்கிளில் சென்றார்கள் என்று தெரியவில்லை. மேலும், ஒரு மணமான முஸ்லீம் பெண் அப்படி செல்வாளா என்பது சந்தேகமே. எப்படியாகிலும், அவ்வாறு சென்றிருந்தால், பலரும் பார்த்திருப்பார்கள். அதைத் தெரிந்துதான் அவடர்கள் சென்றார்களா?

[11] இது பொய் என்பது, அவன் சாகுல் அமீதுடன் பேசியது – போனில் மற்றும் நேரில் – அவனே இவனுடன் முதலிய விஷயங்களில் தெரிகிறது.