Posted tagged ‘தூக்கு’

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (3)

ஓகஸ்ட் 2, 2015

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (3)

The Memons at the wedding of Yakub and Ayub- The occasion provided a valuable photo album to the police- India today photo

The Memons at the wedding of Yakub and Ayub- The occasion provided a valuable photo album to the police- India today photo

கசாப்பை அடுத்து யாகூப் மேமன்[1]: மகாராஷ்டிர மாநிலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் 2012 நவம்பரில் தூக்கிலிடப்பட்டார். அதற்கு அடுத்தபடியாக இப்போது அங்கு யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் கசாப் புணே எரவாடா சிறையிலும், யாகூப் மேமன் நாக்பூர் சிறையிலும் தூக்கிலிடப்பட்டனர். மும்பையில் புகுந்து தாக்குதல் நடத்திய கசாப் தூக்கிலிடப்பட்ட பிறகு. 2013 பிப்ரவரியில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அப்சல் குருவுக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கு நிறைவேற்றப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து இரு தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது[2]. முன்னதாக சுதந்திர இந்தியாவில் முதல் தூக்கு தண்டனை, மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் குற்ற வாளிகளான நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோருக்கு நிறை வேற்றப்பட்டது. அவர்கள் இருவரும் பஞ்சாப் மாநிலம் அம்பாலா சிறையில் 1949-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டனர். அதன் பிறகு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்த சத்வந்த் சிங், கேஹார் சிங் ஆகியோருக்கு 1989-ம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை சுமார் 50 தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும் சமீப ஆண்டுகளில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்படுவதும், நிறைவேற்றப் படுவதும் அதிகரித்துள்ளதாக தூக்கு தண்டனைக்கு எதிராக போராடி வரும் அமைப்புகள் தெரிவித்துள்ளன[3]. ஆனால், அவர்களால் கொலையுண்டவர்களைப் பற்றி ஏன் ஒன்றும் சொல்வதில்லை? தீவிரவாதிகள் தொடர்ந்து இவ்வாறு குண்டுகளை வெடித்து, அப்பாவி மக்களைக் கொண்டு வந்தால், அது மனித உரிமைகளில் ஏற்கப்படுமா?

அம்புகளுக்கு ஆயுள், அம்பை ஏவியவருக்கு தூக்கு: உச்ச நீதிமன்றம் கருத்து[4]: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக 129 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் யாகூப் மேமன் உட்பட 12 பேருக்கு மும்பை தடா நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டில் மரணதண்டனை விதித்தது. வழக்கு விசாரணையின்போதே ஒருவர் உயிரிழந்துவிட்டார். எனினும் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் 10 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது. யாகூப் மேமனுக்கு மட்டும் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் அப்போது கூறியதாவது: “பத்து பேரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. அந்த 10 பேரும் சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்ந்த வர்கள். அவர்களுக்கு நிரந்தர வேலை இல்லை. இதனால் வறுமையில் வாடிய அவர்கள் சிலரின் சதிவலையில் சிக்கியுள்ளனர். இதை ஏற்க முடியாது என்றாலும் அவர்கள் வெறும் அம்புகள்தான். அவர்களை வில்லில் இருந்து ஏவியவர்களை மன்னிக்க முடியாது. அவர்கள்தான் திட்டமிட்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். அந்தந்த வழக்கின் பின்னணி, உண்மைகளை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பளிக்க வேண்டும்”, இவ்வாறு உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது[5]. இங்கும், தீர்ப்பின் பகுதியை வெளியிட்டு அலசுவதைக் கவனிக்க வேண்டும். மேலே ஆரம்பத்தில் அதற்காகக் தான், மற்ற பத்திகளையும் சேர்த்துக் கொடுத்துள்ளேன்.

யாகூம் மேமன், ஒவைஸி, வீரமணி

யாகூம் மேமன், ஒவைஸி, வீரமணி

யாகூப் மேமனுக்கு தூக்கு நிறைவேற்றம்: மரண தண்டனையை ஒழிப்பதே கலாமுக்கான உண்மையான அஞ்சலிதலைவர்கள் கருத்து[6]: இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதே கலாமுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலி என்று தமிழக அரசியல் தலைவர்கள் கூறி யுள்ளனர். யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. யாகூப் மேமனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளில் ஒருவரை தூக்கிலிடுவது அவருக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலியாகும். இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதுதான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்”, என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மற்ற தலைவர்களும் – தொல்.திருமாவளவன் (விசிக தலைவர்), எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ் (அகில இந்திய தேசிய லீக்), கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி (எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர்) முதலியோரும் அறிக்கை  வெளியிட்டுள்ளனர்.

  1. இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதே கலாமுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலி என்றால் 1993 முதல் 2011 வரை கொல்லப்பட்டவர்களுக்கு இவர்கள் எப்படி அஞ்சலி செல்லுத்துவ்வார்கள்?

 

  1. யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றியது இஸ்லாமிய சமூகம் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார் ஒருவர், அப்படியென்றால் அவர்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியைக் கொடுக்கவில்லையா?

 

  1. இங்கு இஸ்லாமிய சமூகம் என்று குறிப்பிட்டு பேச வேண்டிய அவசியம் என்ன? அப்படியென்றால், பாதிக்கப்பட்ட இந்து சமூகத்தினைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை என்றாகிறது.

 

  1. இது செக்யூலரிஸ இந்தியாவில், இத்தகையோர்களுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை, சமத்துவம் ஒத்துப் போகல்லை, மனிதநேயம் நோகடிக்கவில்லை, மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் பார்க்கச் சொல்கிறது என்றாகிறது.
  1. தீவிரவாதிகளின் உரிமைகள், பயங்கரவாதிகளின் உரிமைகள், குண்டுத் தயாரிப்பவர்களின் உரிமைகள், குண்டுவெடிப்பவர்களின் உரிமைகள், குண்டுவெடித்து ம்மக்களைக் கொல்பவர்களின் உரிமைகள்,……………..என்று பேசும் இவர்கள் மற்றவர்களின் உரிமைகளைப் பற்றி ஏன் நினைப்பதில்லை?
  1. அந்த பலிக்கடாக்களுக்கு அஞ்சலியை, பரஸ்பர கருணையை, சமரச தீர்ப்பை, சமூகநீதி போன்ற முடிவை இவர்கள் எப்படி அளிப்பார்கள் என்று யோசிக்கவில்லையே?

 

  1. தீவிரவாதிகளை இனிமேல் குண்டு தயாரிக்காதே, குண்டு வைக்காதே, குண்டுவெடிக்க வைத்து அப்பாவி மக்களைக் கொல்லாதே என்று ஒருவனும் சொல்லக் காணோமே?

 

  1. பயங்கரவாதிகள் அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தபோது, அவர்கள் எந்த சட்டங்களையும், நீதிகளையும், விதிமுறைகளையும் மீறவில்லையா?

 

  1. மரண தண்டனைக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார் இன்னொருவர், சரி மரணத்தை ஏற்படுத்தும் தீவிரவாய்திகள், பயங்கரவாதிகள், இவர்களுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்ல ஏன் எண்ணம் வரவில்லை அல்லது தைரியம் இல்லை?

© வேதபிரகாஷ்

02-08-2015

[1]  தி இந்து, கசாப்பை அடுத்து யாகூப் மேமன், Published: July 31, 2015 08:53 ISTUpdated: July 31, 2015 08:56 IST.

[2] தி இந்து இவ்வாறு விவரிப்பது ஏன் என்று கவனிக்க வேண்டும், ஏனெனில், எங்குமே பலிக்கடாக்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய பேச்சே இல்லை!

[3]http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/article7484494.ece

[4] தி இந்து, அம்புகளுக்கு ஆயுள், அம்பை ஏவியவருக்கு தூக்கு: உச்ச நீதிமன்றம் கருத்து, Published: July 31, 2015 08:48 ISTUpdated: July 31, 2015 09:20 IST

[5]http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article7484487.ece

[6] தி இந்து, யாகூப் மேமனுக்கு தூக்கு நிறைவேற்றம்: மரண தண்டனையை ஒழிப்பதே கலாமுக்கான உண்மையான அஞ்சலிதலைவர்கள் கருத்து, Published: July 31, 2015 08:18 ISTUpdated: July 31, 2015 08:18 IST

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (2)

ஓகஸ்ட் 2, 2015

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (2)

தொல்.திருமாவளவன் (விசிக தலைவர்): “யாகூப் மேமனின் விசாரணையில் பல்வேறு குறைகள் இருந்ததை அவரை சரணடையச் செய்த ரா உளவுப்பிரிவின் முன்னாள் அதிகாரி பி. ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். உலகம் முழுவதும் 140 நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்தியாவும் மரண தண்டனையை முற்றாக கைவிட வேண்டும். மரண தண்டனைக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்”. கொசுரு: இந்தியாவின் மனசாட்சியையே உலுக்கும் வகையில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். அதுவும் அவரது பிறந்த நாளில், இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்[1]. [பாரபட்சத்துடனும், முஸ்லிம்களுக்கு ஆதரவாக கண்மூடித்தனமாக பேசி வரும் இவரது கருத்தை யார் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. அண்டைநாடுகளான பஙளாதேசம் மற்றும் பாகிஸ்தானிலேயே தீவிரவாதிகளை தூக்கிட்டு வருகிறார்கள். அது இவருக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே. அரபு நாடுகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை].

அசாசுதீன் ஒவைஸி தீவிரவாத வாதங்கள்: அசாசுதீன் ஒவைஸி உடனே, பாபு பஜரங்கி, மாயா கொடானி, காலனெல் புரோஹித், சுவாமி அஸீமாநத் முதலியோரும் தூக்கில் போடப்படவேண்டும் என்றார்[2].  “பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்தி சிங் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இருந்ததைப் போன்ற அரசியல் பின்புலம் யாகூப் மேமனுக்கு இல்லாமல் போனதே அவர் தூக்கிலிடப்பட காரணமாக அமைந்தது. இதைப் பின்பற்றி பாபர் மசூதியை இடித்தவர்களையும் தூக்கிலிட வேண்டும்” முன்னர் யாகுப் மேனன் முஸ்லிம் என்பதனால் தான் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது என்றெல்லாம் பேசினார். இவரும், இவரது சகோதரனும் வாய்-தீவிரவாதப் பேச்சுகளில் வல்லவகள். இருப்பினும் ஊடகங்கள் இவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்து பேச வைத்து, அவற்றை பிரபலப்படுத்தி, பரப்பி வருகிறார்கள். [அண்டைநாடுகளான பஙளாதேசம் மற்றும் பாகிஸ்தானிலேயே தீவிரவாதிகளை தூக்கிட்டு வருகிறார்கள். அவர்கள் எல்லோருமே முஸ்லிம்கள் தாம். பிறகு அவர்கள் முஸ்லிம்கள் என்றாலும், ஏன் தூக்கில் போடுகிறர்கள், மரணதண்டனையை நிறைவேற்ருகிறார்கள்? அது இவருக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே. அரபு நாடுகளைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை].

எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ் (அகில இந்திய தேசிய லீக்)[3]: “அப்துல் கலாம் என்னும் மாமேதை மறைந்ததற்காக உலக மக்கள் அனைவரும் கவலை கொண்டுள்ளனர். இந்த வேளையில், யாகூப் மேமனை தூக்கிலிட்டிருப்பது எந்த வகையிலும் ஏற்று கொள்ள முடியாது. தானாக சரணடைந்த யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றியது இஸ்லாமிய சமூகம் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” [இப்படி அரைகுறையாக இவர் கூறியிருப்பதிலிருந்தே, இவருக்கு விசயம் தெரிவில்லை அல்லது மறைக்கிறார் என்றாகிறது]

கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி (எஸ்.டி.பி. மாநிலத் தலைவர்): “முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் நடக்கும் நாளில், யாகூப் மேமனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் மூலம் மரண தண்டனை ஒழிப்பு குறித்த கலாமின் கோரிக்கையும் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.” [இங்கும் கலாமின் கருத்து திரிக்கப் பட்டிருக்கிறது. தீவிரவாதிகளைப் பொறுத்த வரையிலும், அடுத்தவர்களின் உயிரை பறிக்க அவர்களுக்கு உரிமையில்லை, அதனால், சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கூறியுள்ளார்]

Supporters of Memon against hanging 2015

Supporters of Memon against hanging 2015

அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் கருணை மனு கொடுத்தது: செக்யூலரிஸ வகையறாக்கள் அப்படி-இப்படி என்று சுற்றி வளைத்து, மரண தண்டனை கூடாது என்ற வாதத்தை குறிப்பிட்ட ஊடகங்கள் வெளிப்படையாக வைத்தன[4]. இதில் வேடிக்கையென்னவென்றால், ராஜிவ் காந்தி கொலைகாரர்களின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப் பட்டு, அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதுவும் குறிப்பட்ட மாநில மக்களை தாஜா செய்வதற்காக செய்யப் பட்டது என்று செக்யூலரிஸ வகையறாக்கள் திரிபு விளக்கம் அளித்தன. முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவில் யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் கரத் (மார்க்சிஸ்ட் கம்யூ.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), சிவா (தி.மு.க.) உள்ளிட்ட கட்சித்தலைவர்களும்,  பா.ஜனதா எம்.பி. சத்ருகன் சின்கா, மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி, நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் என பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களும் கையெழுத்து இட்டனர்[5].

Tejas, 1993 victim-Mehta family pays tribute every year

Tejas, 1993 victim-Mehta family pays tribute every year

257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்!: கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் 123 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர். குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அப்பாவி 257 மனிதர்களின் உயிர்களைப் பற்றி இந்த மனிதர்கள் கவலைப் பட்டனரா என்று தெரியவில்லை. காயமடைந்த700க்கும் மேற்பட்ட மனிதர்களைப் பற்றியும் இரக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  தீவிரவாதிகள் இரக்கத்துடனா குண்டுகளை வைத்து வெடிக்க வைத்தனர்? கருணையுடனா அத்தனை அப்பாவி மக்களைக் கொன்றனர். கை-கால் பிய்ந்து, ரத்தம் பீய்ச்சி அடித்து, உடல்கள் சிதறிய போது, இரக்கம், கருணை, மனிதாபமானம் முதலிய குணாதரியங்களைப் பற்றி இவர்கள் சிந்தித்துப் பார்த்தார்களா? எந்த உயிரையும் எடுக்க மனிதனுக்கு உரிமையில்லை என்றால், இவ்வுயிர்களை எப்படி தீவிரவாதிகள் எடுத்தார்கள்?

1993 victim-pays tribute every year

1993 victim-pays tribute every year

பலிக்கடாக்களுக்கு நீதி தாமதப்படுத்துவது ஏன்?: பலிக்கடாக்களின் உறவினர்களுக்கு நீதி நேரம் தாழ்த்தித்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. வினாயக் தெவ்ருக்கர் தனது 19 வயதான சகோதரி சசிகலா மற்றும் 11 வயது சகோதரன் வசந்த் முதலியோரை சென்சுரி பஜார், வோர்லியில் பிணமாக ரத்தம் மற்றும் உடல் பாகங்களில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. ஐந்து-மணி தேடலுக்குப் பிறகு மருத்துவ மனையில் அவர்களது உடல்களைக் கண்டு பிடித்தனர்[6]. 36 வயதாகும் தெவ்ருக்கர் மனப்பிராந்தியுடன் வாழ்ந்து வருகிறார். “எங்கள் பெற்றோர் அதிலிருந்து மீளவில்லை…..கொலையாளி சீக்கிரம் தண்டனை பெற்றால் தான், ஓரளவிற்கு பாதிக்கப்பட்டவருக்கு மனநிம்மதி கிடைக்கும்.. 22 ஆண்டுகளுக்குப் பிறகு அவன் தண்டனை பெற்றால்…..இதெல்லாம் அரசியலாகி விட்டது. நாளைக்கே ஒரு குண்டு வெடிக்கலாம், நான் அத்தகைய நிகழ்சியுடன் சேர்ந்து வாழ வேண்டியதுதான். நான் எனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியதுதான். பலசாலிகளிடம் தான் நீதியுள்ளது. நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது”, என்று சோகத்தோடு கூறினார்[7].

A woman pays homage to victims of the 1993 Mumbai serial blasts, at one of the blast sites in Mumbai

A woman pays homage to victims of the 1993 Mumbai serial blasts, at one of the blast sites in Mumbai

பலிக்கடாக்களின் சோகக்கதையும், மனநிலையும்[8]: பாதிக்கப்பட்ட 1,600 குடும்பத்தினர் யாகுப் தூக்கிலப்படுவதில் உறுதியாக இருக்கின்றனர். தாய், தந்தை, மகள், மகன், சகோதரன், சகோதரன், மாமா, மாமி என்றெல்லாம் இழந்தவர்கள் இதில் மாற்றுக் கருத்து எதையும் கொள்ளாவில்லை-சொல்லவில்லை. உண்மையில் கருணை மனுவை அவன் கொடுத்தது, நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது தான் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. துஸார் தேஷ்முக், “பலரது உடல்கள் கிடைக்கவில்லை. சிலருக்கு உடல் பகுதிகள் தான் கிடைத்தன. கிடைத்ததைக் கொண்டு இறுதி சடங்குகளை முடித்த குடும்பங்கள் ஏராளம். இந்நிலையில் ஒரு கொலைகாரனின் கருணை மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. கருணையே இல்லாத அவன் எப்படி கருணை மனு போடுகின்றான் என்றே தெரியவில்லை. அம்மனு விசாரணைக்குள்ளது என்பது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. நாங்கள் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்”, என்று சோகக் கதையினை விளக்கினார். 1993 குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட அனைவரும், யாகூப் துக்கிலிடப்படவேண்டும் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுதுதான், இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு கொஞ்சமாவது சாந்தி கிடைக்கும் என்கிறார்கள்[9]. பாதிக்கப்பட்ட 1,600 குடும்பத்தினர், முதலமைச்சருக்கு அவன் தூக்கிலிடப்படவேண்டும் என்று மனு கொடுத்தனர்[10]. மஹாராஷ்ட்ர அசெம்பிளிக்கு வெளியே கூடி தங்களது கோர்க்கையினை வெளிப்படுத்தினர்[11].

© வேதபிரகாஷ்

02-08-2015

[1]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/article7481183.ece

[2] All India Majlis-e-Ittehadul Muslimeen leader and Hyderabad parliamentarian Asaduddin Owaisi said the government should ensure death sentence in all similar cases. “Death sentence should also be given to Babu Bajrangi, Maya Kodnani, Col. Purohit and Swami Aseemanand,” he said.

http://timesofindia.indiatimes.com/india/Political-war-of-words-erupts-over-Yakub-Memons-execution-Owaisi-says-Kodnani-and-others-should-also-get-death/articleshow/48281117.cms

[3]  தி இந்து, இணையதள செய்திப் பிரிவு, அரசியல் விவாத மேடைக்கு வித்திட்ட யாகூப் தூக்கு மேடை, Published: July 31, 2015 10:06 ISTUpdated: July 31, 2015 10:08 IST

[4] http://www.ndtv.com/blog/lessons-from-the-yakub-memon-execution-1202101

[5] http://www.dailythanthi.com/News/India/2015/07/27021144/Yaqub-Memon–death-penaltyTo-cancel-Petition-to-the.vpf

[6] http://www.hindustantimes.com/india-news/yakub-memon-hanging-justice-comes-too-late-for-1993-mumbai-blasts-victims-kin/article1-1371806.aspx

[7] Badri Chatterjee, Justice comes too late for 1993 Mumbai blasts victims’ kin, Hindustan Times, Mumbai, Updated: Jul 22, 2015 11:14 IST

[8] Family members of some of the victims of 1993 Mumbai blasts on Wednesday demanded that Yakub Memon to be hanged and submitted a mass petition to Chief Minister Devendra Fanavis in this regard

http://www.ibnlive.com/videos/india/families-of-1993-mumbai-blasts-victims-demand-yakub-to-be-hanged-1027379.html

[9] http://www.dnaindia.com/mumbai/report-1993-blasts-death-to-yakub-memon-will-give-solace-to-victims-says-bjp-mp-kirit-somaiya-2106875

[10] Family members of the victims of 1993 Mumbai blasts on Wednesday 29-07-2015 demanded that Yakub Memon to be hanged and submitted a mass petition to Chief Minister Devendra Fanavis in this regard. “Yakub should be hanged,” Tushar Deshmukh, who lost his mother in the blasts, said in a memorandum to Fadnavis at Vidhan Bhawan here. “The families have suffered. We demand that the death sentence be carried out,” Deshmukh said. He said the memorandum was signed by of 1600 family members of the victims.on Tuesday 28-07-2015, the Supreme Court set up a three-judge bench to decide Yakub’s fate after a two-judge bench was split on his plea seeking stay of his execution scheduled for tomorrow (30-07-2015). On March 12, 1993, 12 coordinated blasts had rocked Bombay, as the city was then known, leaving 257 dead and over 700 injured.

http://www.ibnlive.com/news/india/hang-yakub-demand-kin-of-blast-victims-1027262.html

[11] http://www.odishanewsinsight.com/breakingnews/1993-mumbai-blast-victims-demonstrate-outside-maha-assembly/

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (1)

ஓகஸ்ட் 2, 2015

யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (1)

1993 Mumbai blast- who pay for the victims.1

1993 Mumbai blast- who pay for the victims.1

மார்ச். 2013 – சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு: மும்பையில் கடந்த 1993–ம் ஆண்டு, மார்ச் 12–ந்தேதி அன்று தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. 12 இடங்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில், 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.  இது தொடர்பான வழக்கை விசாரித்த தடா கோர்ட்டு கடந்த 2006–ம் ஆண்டில் தீர்ப்பு கூறியது. மொத்தம் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் தண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டது. மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தீர்ப்பில் யாகுப் மேமனின் மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. யாகுப் மேமன், குண்டு வெடிப்பில் முக்கிய சதிகாரனான தேடப்படும் குற்றவாளி டைகர் மேமனின் சகோதரர். மேலும், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மரண தண்டனை பெற்ற 10 பேர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.

1993 Mumbai blast- who pay for the victims.2

1993 Mumbai blast- who pay for the victims.2

பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப் பட்டுள்ளது – சுப்ரீம் கோர்ட் ஆதாரங்கள் மூலம் அறிவித்தது (மார்ச்.2013): மேலும், குண்டு வெடிப்பை நடத்தியவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. குண்டு தயாரிக்கவும் மிகவும் சக்தி வாய்ந்த வெடி பொருட்களை கையாளுவதற்கும் அவர்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.க்கும் குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. மேலும், இந்த குண்டு வெடிப்பில் தூக்கு தண்டனை பெற்றுள்ள யாகுப் மேமன் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளான தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், அயூப் மேமன் ஆகியோர் தாக்குதல் நடத்துவதற்கு அம்பு எய்தவர்களாக இருந்துள்ளனர். மற்றவர்கள் அம்புகளாக இருந்துள்ளனர் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

1993 Mumbai blast- who pay for the victims.3

1993 Mumbai blast- who pay for the victims.3

போலீஸ், சுங்க வரிதுறை, கடலோர பாதுகாப்பு துறையினர் ஆகியோர் கண்டனத்திற்குரியவர்கள் (மார்ச்.2013): போலீஸ், சுங்க வரிதுறை, கடலோர பாதுகாப்பு துறையினர் ஆகியோர் கண்டனத்திற்குரியவர்கள் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது[1]. குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானில் வைத்து தாவூத் இப்ராகிம் மற்றும் பலரால் சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. ஏ.கே.56 ரக துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆயுத சட்டத்தின் கீழ் இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் கடுமையான தடா சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருந்த கிரிமினல் சதி குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சஞ்சய் தத்தும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார்.  தற்போது கோர்ட் சஞ்சய் தத்தின் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையை 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்துள்ளது. இவற்றையெல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டுதான், இப்பொழுதைய தீர்ப்பைப் படித்தறிய வேண்டும், விவாதிக்க வேண்டும். ஆனால், செக்யூலரிஸ போர்வையில், காங்கிரஸ்காரர்கள் தங்களது வாய்களைத் திறந்து உளாறியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

1993 Mumbai blast- who pay for the victims.4

1993 Mumbai blast- who pay for the victims.4

காங்கிரஸ் தலைவர்கள் யாகுப்பின் தூக்கிற்கு வருத்தப் பட்டது (ஜூலை.2015): யாகுப் மேனன் 30-07-2015 அன்று காலை தூக்கிலிடப்பட்டதும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங், “அரசு இதே போல, மற்ற எல்லா தீவிரவாத வழக்குகளிலும் ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்”, என்று டுவிட்டரில், தனது கருத்தை வெளியிட்டார்[2]. பல நேரங்களில் விசித்திரமாக பேசி வரும் இவர், இதே வேகத்தை மற்ற வழக்குகளிலும் காட்ட வேண்டும் என்று கமென்ட் அடித்தார்[3]. சசி தரூர், “அரசு ஒரு மனிதனை தூக்கிலிட்டது குறித்து வருத்தமடைகிறேன். அரசு மூலம் நடக்கும் கொலைகள் நம்மையும் கொலைகாரர்களாக்கி விடும். கொடும் செயல் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்காக அதற்குக் காரணமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த தண்டனை காரணமாக அத்தகைய செயல் தடுக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. மாறாக, மேலும் அத்தகைய சம்பவங்கள் அதிகரிக்கவே அது வகை செய்கிறது. தீவிரவாதத்தை படைகளைக் கொண்டுதான் ஒடுக்க வேண்டும். மரண தண்டனை மூலம் அல்ல”, என்றெல்லாம் கமென்ட் அடித்தார்[4]. ஒருவேளை தனது மனைவி மர்ம மரணத்தில் / கொலை என்று சந்தேகிக்கப்படும் வழக்கில் தான் சம்பந்தப் பட்டிருப்பதால், அவ்வாறு பேசினாரா என்பது அவருக்குத் தான் தெரியும்.

1993 Mumbai blast- Dwaood, Tiger Memon, Dossa, Javed Patel

1993 Mumbai blast- Dwaood, Tiger Memon, Dossa, Javed Patel

ஜூலை 30.2015 காலை தூக்கிலிடப்பட்ட நாள்: உச்ச நீதிமன்ற அமர்வு அந்த நேரத்தில் கூடி, மரண தண்டனையை நிறுத்தக் கோரும் குற்றவாளியின் மனுவை ஆய்வு செய்தது. ஆனால் “மிகுதியான அளவு காலஅவகாசம் அளிக்கப்பட்டு விட்டது. கடந்த ஆண்டே மேமனின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு விட்டது” எனக் கூறிய நீதிபதிகள், மனுவை நிராகரித்தனர். இதனால் காலை 6.35 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார். யாகூபின் அண்ணன் சுலைமான் உடலைப் பெற்றுக்கொண்டு விமானம் மூலம் மும்பைக்கு எடுத்துச் சென்றார். மாஹிமில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிகையாக, மும்பை முழுவதும் சுமார் 450 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய மும்பை பகுதியான மாஹிம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். நேற்று மாலை இஸ்லாமிய முறைப்பட்டி யாகூபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மும்பையில் இவர்களது குண்டுவெடிப்பில் பலியான 257 ஆத்மாக்களும் சாந்தியடைந்தன என்று அவர்களது உறவினர்கள் கூறிக்கொண்டார்கள். இதை ஊடகங்கள் எடுத்துக் காட்டவில்லை, மனித உருமைகள் பேசுபவர்களையும் கண்டுகொள்ளவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத்[5] கூறும்போது, “யாகூப் மேமன் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுதான் சரண் அடைந்தார் என உளவுத் துறை (ரா) முன்னாள் அதிகாரி பி.ராமன் தான் எழுதிய ஒரு கட்டுரையில் கூறியிருந்தார். மேலும் முக்கியக் குற்றவாளி அல்லாத மேமனுக்கு மரண தண்டனை விதிப்பது சரியல்ல என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அவரை தூக்கிலிட்டிருப்பது சரியல்ல” என்றார். [இதை ஏற்கெனவே அதிகாரிகள் மறுத்துள்ளனர், ஏனெனில் அதிகாரிகளுக்கு அத்தகைய பேரம் பேசவும், எந்தவித தண்டனை குறைப்பு உத்திரவாதம் கொடுக்கவும் சட்டப்படி உரியையும், அதிகாரமும் இல்லை. எனவே, வழக்கம் போல கம்யூனிஸ்டுகள், இறந்தவரின் கருத்தைக் குறிப்பிட்டு குழப்ப முயற்சி செய்கின்றனர்]

 

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. யாகூப் மேமனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளில் ஒருவரை தூக்கிலிடுவது அவருக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலி யாகும். இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதுதான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். [இவரது கருத்தும் அர்த்தமில்லாதது, பல ஆண்டுகளாக நடந்து வரும் இவ்வழக்கு, முறைப்படி கருணை மனு, அது மறுக்கப்பட்டது, அதை எதிர்த்து தொடரப்பட்ட மனு என்று எல்லாவற்றையும் விசாரித்து தான் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் டுவிட்டரில் தெரிவிக்கப்படும் கருத்துகளை வைத்து எந்த தீர்மானமும் எடுக்க முடியாது].

© வேதபிரகாஷ்

02-08-2015

[1] இதனை செக்யூலரிஸவாதிகள், யாகுப்-ஆதாரவாளர்கள் கண்டு கொள்வவதில்லை.

[2] Congress general secretary Digvijaya Singh fired the first salvo, saying that the BJP- led government should show “similar commitment” in all cases of terror as it showed in the case of Yakub Memon. “I hope similar commitment of the government and the judiciary would be shown in all cases of terror, irrespective of their caste, creed and religion,” he said in a tweet following Memon’s execution in the Nagpur central jail on Thursday morning (30-07-2015).

[3] http://indianexpress.com/article/india/india-others/show-same-urgency-in-other-terror-cases-digvijaya-singh-on-yakub-memons-hanging/

[4] Party colleague and former union minister Shashi Tharoor said he was “saddened” by Memon’s execution.”Saddened by news that our government has hanged a human being. State-sponsored killing diminishes us all by reducing us to murderers too,” Tharoor tweeted. “There is no evidence that death penalty serves as a deterrent, to the contrary in fact. All it does is exact retribution, unworthy of a government,” the Thiruvananthapuram parliamentarian said.

[5] http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/article7484832.ece

குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

பிப்ரவரி 13, 2013

குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

Photo0652

மக்களைக் கொல்லும் மாலிக்: யாஸின் மாலிக் ஒரு முஸ்லீம், ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (JKLF) என்ற இந்திய-விரோத, பிரிவினைவாத இயக்கத்தை நடத்தி வருபவன். கடந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்தப் பின்னணியில் அவ்வியக்கத்தினர் உள்ளனர். இஸ்லாமாபாதில் நடந்த உண்ணாவிரத போராட்டதில், பயங்கரவாதி-தீவிரவாதி ஹாவீஸ் சையீத் கலந்து கொண்டுள்ளான். JKLF பேனர் பின்னால் இருக்கிறது. ஆகவே, அக்கூட்டத்தில் அவனைக் கலந்து கொள்ள அழைத்துள்ளாதத் தெரிகிறது. இருப்பினும், மாலிக் மறுத்துள்ளான்[1]. எதற்காக இதிய பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும் என்று கேட்டதற்கு, காந்தி கூட, பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை வைத்திருந்தார் என்றான்[2].

Photo0653

நண்பர்களுடன் உல்லாசம்!

Photo0648

ஆட்டத்தில் கிக் ஏருகிறது போலும்!

Photo0649

அலேக்காக தூக்குதல்!

Photo0654

குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்: யாஸின் மாலிக் மற்றும் மற்றொரு குல்லா போட்ட முஸ்லீம், இரு பெண்களுடன் ஆடிகொண்டு கும்மாளம் போடுகின்றனர். இறுக்கமாக சிகப்பு நிற சட்டைப் போட்ட இரு பெண்கள் ஆடுகின்றனர். அவர்களுடன் இவ்விருவரும் ஆடுகின்றனர். குல்லாப் போட்டவன், மாலிக்கின் தோளின் கையை போடுகிறன். திடீரென்று யாஸின் மாலிக், பின்னால் ஆடிக்கொண்டிருக்கின்ற பெண்ணை அலேக்காகத் தூக்கி, இரண்டு சுற்று சுற்றுகிறான். அப்பெண் பயந்து அலறுகிறாள். உடனே, பக்கத்தில் இருக்கும் குல்லா போட்ட முஸ்லீம், பர்தா அணிந்த பெண் மற்றவர்கள் யாஸின் மாலிக் மற்றும் அப்பெண் இருவரையும் வலுக்கட்டாயமாக விலக்கி விடுகின்றனர். அப்பெண் கீழே விழுகிறாள், மாலிக்கையும் தூரத்தள்ளிவிடுகின்றார்கள். இதையெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா என்று முஸ்லீம்கள் தாம் சொல்ல வேண்டும். இந்த வீடியோவை இங்கு காணலாம்[3]. இப்படி குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

Photo0650

இருவரையும் பிரித்து விடுகின்றனர்!

Photo0651

காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம்[4]: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான்[5]. கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[6]. டைம்ஸ்-நௌ டிவி-செனலுக்கு அளித்த பேட்டியில் இதை சொல்லியிருக்கிறான். இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.

 

வேதபிரகாஷ்

13-02-2013


[4] Irks me when Yasin Malik compares himself with Gandhi & Nehru. They never picked up guns & killed innocents. Didn’t hobnob with terrorists.

http://inagist.com/all/301357321534177281/

கசாப் மற்றும் ஒசாமா முடிவுகள் – இந்தியா மற்றும் அமெரிக்கா காட்டிய வழிகள்

நவம்பர் 24, 2012

கசாப் மற்றும் ஒசாமா முடிவுகள் – இந்தியா மற்றும் அமெரிக்கா காட்டிய வழிகள்

ஜிஹாத் தவறு என்றல் இனி ஜிஹாத நடத்துவது கூடாது: “அல்லாவின் மீது ஆணையாகச் சொல்கிறேன், என்னை மன்னியும். இனிமேல் இரண்டாவது தடவையாக இத்தகைய தவறு நடக்காது” (“Allah kasam, maaf kar do. Chhod do, aisi galti dobara nahin hogi.”) என்று முணுமுணுத்தாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன[1]. அதாவது அல்லாவின் பெயரால் ஜிஹாத் என்று “புனிதப் போரை” நடத்தி நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் – பெண்கள், முதியோர், குழந்தைகள் என்று கொன்று குவித்துவிட்டு, “இனிமேல் இரண்டாவது தடவையாக இத்தகைய தவறு நடக்காது”, என்று பாவ மன்னிப்புப் போல கேட்டு முறையிட்டால் அல்லா மன்னிப்பாரா அல்லது இறந்த உயிர்கள் திரும்பக் கிடைக்குமா? அப்படியென்றால், இப்படிப்பட்ட தீவிரவாதச் செயல்கள் தவறு என்றாகிறது. எனவே பொறுப்புள்ள முஸ்லீம் பெரியோர்கள் மற்றவர்களுக்கு இந்த உண்மையைச் சொல்லி அவர்களைத் திருத்த வேண்டும். அல்லாவின் பெயரால் தவறுகள் – இத்தகைய குரூரக் கொலைகள் நடப்பது ஏன்? இனிமேலாவது, தாலிபான், ஹிஜ்பு முஜாஹித்தீன், அல்லா புலிகள், என்றெல்லாம் பெயர்களை வைத்துக் கொண்டு, குண்டுகள்  வெடித்து அப்பாவி மக்களைக் கொல்வதை நிருத்துவார்களா?

ஜிஹாத் பெயரில் முஸ்லீம்கள் தீவிரவாதச் செயல்களை நடத்துவதை நிறுத்தி விட வேண்டும்: ஜிஹாத் என்பது முஹம்மது நபி காலத்தில் நடத்தப் பட்டது. அப்பொழுது அவருக்கு எதிராக செயல்பட்டவட்கள் தாம் காபிர்கள். எனவே இப்பொழுது அவர் பெயரால் அல்லது இஸ்லாம் / அல்லா பெயரால் ஜிஹாத் என்ற பெயரில் தீவிரவாதத்தை நடத்துவது தவறு என்றாகிறது. உலகத்தில் முஸ்லீம் அல்லதவர்கள் எல்லோரும் அப்படி காபிர்கள் என்றாகி வுடமாட்டார்கள். அல்லா மன்னிக்கமாட்டார் என்றால், இனி இக்காலத்தில் ஜிஹாத் பெயரில் தீவிரவாதத்தை நடத்துவது நிறுத்தப்படவேண்டும். அப்பொழுது, உலகத்தில் உண்மையிலேயே அமைதி நிலவும். பொறுப்புள்ள முஸ்லீம் பெரியோர்கள், முல்லாக்கள், இஸ்லாமிய மதத்தலைவர்கள் அமைதியான இஸ்லாமை கடைபிடிக்க அறிவுரை சொல்லவேண்டும்.

கசாப் மற்றும் ஒசாமா முடிவுகள்  –  இந்தியா மற்றும் அமெரிக்கா காட்டிய வழிகள்: தீவிரவாதத்தை ஒடுக்குவோம் என்ற அமெரிக்கா, பாகிஸ்தான் ஒத்துழைப்புடன், பாகிஸ்தானில் மறைந்து வாழ்ந்த ஒசாமா இன் லேடனை ரகசியமான முறையில், படை பலத்துடன் சென்று பிடித்தது, கொன்றது, ரகசியமாகவே எங்கோ அவனது உடலை புதைத்தது என்று தான் செய்திகள் வந்தன, வீடியோக்கள் காட்டப்பட்டன. ஆனால், இந்தியாவில், கசாப்பின் தூக்குத் தண்டனை, ஜனநாயக ரீதியில், வெளிப்படையாக நடத்தப் பட்டு, அவனுக்கு எல்லா வசதிகள் (கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு), உரிமைகள் முதலியவை கொடுக்கப்பட்டு (சட்டப்படி வக்கீல், மேல் முறையீடு முதலியவை), தூக்குத் தண்டனை வேண்டுமா-கூடாதா என்று ஊடகங்களில் விவாதம் செய்யப்பட்டு, ……………………கடைசியாக கொடுக்கப்பட்டது (இப்பொழ்ய்து கூட “தி ஹிந்து” வழக்கம் போல மாற்றுக் கருத்துக் கொண்ட கட்டுரை வெளியிட்டுள்ளது[2]). அதற்கு முன்னர் கூட, பாகிஸ்தானிற்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், எங்கே உலகத்தில் எல்லா உண்மைகளும் தெரிந்து விடுமோ என்று அவனது உடலைக்கூட ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. இவ்விஷயத்தில் நிச்சயமாக, அமைதியை, சாந்தத்தை விரும்ம்பும் இந்தியா தனித்து நிற்கிறது. இதனை பொறுப்புள்ள முஸ்லீம் பெரியோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வேதபிரகாஷ்

© 22-11-2012


[2] சயீது ஷா, ஜிஹாத் பூமியின் மத்தியில் ஒரு பெயரித் தேடி அலைந்தது, http://www.thehindu.com/opinion/op-ed/chasing-a-name-in-jihadi-heartland/article4120446.ece; அதாவது இத்தகைய கருத்து சுதந்திரம் இந்தியாவில் தான் கொடுக்கப் படும், வேறெந்த நாட்டிலும் எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக முஸ்லீம் / இஸ்லாமிய நாட்டில் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

N. Venkatesan, Keeping the nation in dark, http://www.thehindu.com/opinion/lead/keeping-the-nation-in-the-dark/article4120378.ece

Editorial, The hangman’s justice, http://www.thehindu.com/opinion/editorial/the-hangmans-justice/article4120370.ece

Amruta Bayntal and Soumojit Banerjee, Kasab hangs, justice for 26/11 still elusive, http://www.thehindu.com/news/states/other-states/kasab-hangs-justice-for-2611-still-elusive/article4118491.ece