Posted tagged ‘துரைமுருகன்’

முன்பிருந்த முஸ்லிம் லீக் இப்பொழுதில்லை: முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – இப்படி முஸ்லிம்களுக்கு காபிர்கள் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமா, நாடகமா, கபடமா?

ஜூலை 26, 2013

முன்பிருந்த முஸ்லிம் லீக் இப்பொழுதில்லை: முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – இப்படி முஸ்லிம்களுக்கு காபிர்கள் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமா, நாடகமா, கபடமா?

வழக்கம் போல கஞ்சி குடிக்கும் அரசியல்வாதிகளும், நோன்பு திறக்கும் / துறக்கும் நிகழ்சிகளும்: முஸ்லிம்களுக்கு நோன்பு என்றாலே கருணாநிதிக்கு குஷ்ஈய்யாகி விடுகிறது.

  • குல்லாப் போட்டு கஞ்சி குடிக்க சந்தர்ப்பம்,
  • இந்து பண்டிகைகளை தூஷிக்க சந்தோஷம்[1],
  • பிரத்யேகமாக குல்லா வாங்கி வந்து மாட்டிவிடும் வேலை
  • தன்னுடைய பெருமைகளை டமாரம் அடித்துக் கொள்ளும் விதம்
  • முஸ்லிம்களைவிட நான் எவ்வளவு பெரிய முஸ்லிமாக இருக்கிறேன் என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் விதம்
  • முஸ்லிம்கள் இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு கைத்தட்டும் காட்சி

இப்படித்தான், வழக்கம் போல கஞ்சி குடிக்கும் அரசியல்வாதிகளும், நோன்பு திறக்கும் / துறக்கும் / தொறக்கும் நிகழ்சிகளும் நடந்து வருகின்றன. திறக்கும் / துறக்கும் / தொறக்கும் நிகழ்சிகள் என்கிறார்கள் இதில் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. பனகல் பார்க் அருகில் ஒரு பேனர், “நோன்பு துறக்க வசதி செய்யப்பட்டுள்ளது” (ஶ்ரீ வேங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில்) என்று அறிவிக்கிறது.

முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்  (தினமணி): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எழும்பூரில் வியாழக்கிழமை 25-07-2013 நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியது: “நான் (கருணாநிதி) அதிக நேரம் பேச வேண்டும் என்பதற்காக காதர் மொகிதீன் குறைவான நேரம் பேசினார். அதுபோல எல்லாவற்றிலும் (மக்களவை இடம்) குறைவாக எடுத்துக் கொண்டு, திமுகவுக்கு அதிகமாக ஒதுக்குவார் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறேன். முஸ்லிம் சமுதாயத்தினர் கட்சி ரீதியாக 4 பிரிவுகளாக தமிழகத்தில் இருக்கிறீர்கள். ஆனால் என்ன காரணத்தினாலோ, தமிழகத்திலும், இந்திய அளவிலும் இது போன்ற நிலை இல்லாமல் போய்விட்டது. அந்தக் காலத்தில் நான் பார்த்த முஸ்லிம் லீக் இன்றைக்கு இல்லை. பல கூறுகளாக பிளந்துகிடக்கிறது. முஸ்லிம் சமுதாயத்தினரிடையே தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் ஒற்றுமை இல்லாத காரணத்தினால்தான் பாபர் மசூதி இடிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்டபோது தமிழகத்தில் இருந்து முதலில் குரல் கொடுத்தது திமுகதான். திராவிடர் இயக்கத்திலும் இதுபோன்ற பிளவுகள் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. மீலாது நபிக்கு விடுமுறை, உருது பேசும் மக்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது, சிறுபான்மையினர் நல ஆணையம் என திமுக ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு பல்வேறு நலப்பணி ஆற்றப்பட்டுள்ளன”, என்றார் அவர். முஸ்லிம் சமுதாயத்தினர் இந்திய அளவில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்[2]. முன்னதாக நோன்பை திறந்து வைத்து, கருணாநிதி கஞ்சி குடித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் பழநிமாணிக்கம் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி பேச்சு,“இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்  (தினகரன்): இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் ஒற்றுமை இல்லை என்பதை கண்டுகொண்டதால்தான் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எழும்பூரில் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழக தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் வரவேற்றார். அப்துல் ரஹ்மான் எம்.பி அறிமுக உரையாற்றினார். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று நோன்பு கஞ்சி அருந்தினர். கனிமொழி இம்முறை கஞ்சி குடிக்க வரவில்லை[3] போலும்!

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: “நிகழ்ச்சியில் பேசிய காதர் மொய்தீன், தனக்கு நேரம் குறைவாக எடுத்துக் கொண்டு எனக்கு நேரம் அதிகமாக கொடுத்துள்ளார். இப்படி எல்லாவற்றிலும் குறைவாக எடுத்துக் கொண்டு திமுகவுக்கு அதிகம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்லாமிய சமுதாயம், ஒரே பிரிவாக இருந்து ஒற்றுமை பாராட்டினால் இந்த சமுதாயம் இன்னும் வீறுகொண்டு எழும். இந்த சமுதாயத்தை துச்சமாக கருதும் சில, மதவாத எரிச்சல்காரர்கள், ஒதுங்கும் நிலை உருவாகியிருக்கும்தமிழகத்தில் நான் சிறுவனாக இருந்தபோது இருந்த முஸ்லிம் லீக், இன்று பல பிரிவுகளாக மாறியுள்ளது. திராவிட இயக்கம் பிரியவில்லையா என்று கேட்கலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அது ஏற்பட்டிருந்தாலும் இஸ்லாமிய சமுதாய மக்கள், முஸ்லிம் லீக்கின் வரலாறு, இயக்கத்தை எப்படி வளர்த்தார்கள் என்பதை எண்ணிப்பார்த்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். அந்த ஒற்றுமை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் இல்லை என்பதை கண்டுகொண்டதால்தான் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டது. அதை கண்டித்து முதல் முதலில் குரல் கொடுத்தவன் நான். இஸ்லாமிய சமுதாயத்துக்காக என்னென்ன தொண்டு ஆற்ற முடியுமோ, அவற்றை ஆற்றி வருகிறோம். தொடர்ந்து ஆற்றுவோம். திமுக ஆட்சி இப்போது இல்லை.

 

ஆட்சியில் இருந்தபோதே இந்த சமுதாயத்துக்காக எந்த வகையில் பாடுபட்டோம் என்பதை அறிவீர்கள்.

Ø  மிலாது நபி தினத்தன்று விடுமுறை,

Ø  உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பு,

Ø  அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர்,

Ø  சிறுபான்மையினர் நல ஆணையம்,

Ø  விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு,

Ø  உருது அகாடமி,

Ø  காயிதே மில்லத் மணிமண்டபம்

Ø  இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு,

Ø  உமறுபுலவருக்கு மணிமண்டபம்,

Ø  திருமண பதிவு சட்டத்தில் திருத்தம்

 

என்று எத்தனையோ செய்தோம். திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று ஜெயலலிதா கூறுவார். அதற்கு நான் மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் ஆட்சி என்று பதில் அளித்தேன். இதற்கெல்லாம் நன்றியை பரிசாக அளித்திருக்கிறேன்”, இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “இஸ்லாமிய சமுதாயத்துக்கும் திமுகவுக்கும் எந்த அளவு தொடர்பு உண்டு என்பதை அறிவீர்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய மக்களுக்காக பாடுபடும் கட்சி திமுக. உங்களுக்காக வாதாடுபவர், போராடுபவர் கருணாநிதி. அந்த கடமையை திமுக தொடர்ந்து செய்யும். குரானில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதைத்தான் பெரியார் தீர்மானமாக முன்மொழிந்தார். 60 ஆண்டுகளுக்கு பிறகு கருணாநிதி அதை நிறைவேற்றினார்.  தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை நாடி வரும் கட்சி திமுக அல்ல. அதற்கென்று சில கட்சிகள், தலைவர்கள் உள்ளனர். அவர்களை நீங்கள் அறிவீர்கள். என்றும் உங்களை பற்றியே சிந்திக்கும் கருணாநிதிக்கு ஆதரவு தாருங்கள்”, இவ்வாறு அவர் பேசினார்[4].

தி.மு.., அதிகதொகுதிகளில்போட்டியிடும் : கருணாநிதி சூசக அறிவிப்பு (தினமலர்)“லோக்சபா தேர்தலில், தி.மு.க., அதிக தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குறைந்த தொகுதிகளிலும் போட்டியிடும்,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி சூசகமாக தெரிவித்தார்[5]. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மாநில தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்து பேசுகையில், “2004ல், நாட்டில் மதசார்பற்ற ஆட்சி அமைய கருணாநிதி பாடுபட்டார். அதேபோல் மீண்டும் நல்லாட்சி அமைய அவர் வழி காட்ட வேண்டும்,” என்றார்.

பின்னர் கருணாநிதி பேசியதாவது: “முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. நான் சிறுவயதில் பார்த்த முஸ்லிம் லீக் இப்போது இல்லை. அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, தமிழகத்திலிருந்து, முதல் கண்டன குரல் நான் கொடுத்தேன். நான் அதிகமாக பேச வேண்டும் என்பதற்காக, காதர் மொய்தீன் குறைவாக பேசினார். அதேபோல் எல்லாவற்றிலும் அவர் குறைவாக எடுத்துக் கொண்டு, எனக்கு, அதாவது தி.மு..,வுக்கு அதிகமாக ஒதுக்குவதற்கு அவர் ஒத்துழைப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தி.மு.., ஆட்சியில்,

  • மிலாது நபிக்கு விடுமுறை;
  • உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது;
  •  சென்னையில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்பட்டது;
  • ஹஜ் பயணிகள் குலுக்கல் மூலமாக தேர்வு செய்யும் முறை ரத்து செய்து,
  • விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இப்படி, சிறுபான்மை மக்களின் நலனுக்காக, தி.மு.., ஆட்சி நடந்தது”, இவ்வாறு, அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சியினருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இப்படி வருத்தப் படவேண்டிய அவசியம் இல்லை. போட்டிப் போட்டுக் கொண்டு நிகழ்சிகள் நடத்துவதால், கஞ்சிக் குடிக்க அவகாசங்கள் அதிகமாகவே உள்ளன. ஏற்கெனவே கார்த்திக் சிதம்பரம், தனியாக கஞ்சி குடிக்க ஏற்பாடு செய்தது நினைவு படுத்திக் கொள்ளவேண்டும்[6]. திராவிடக் கட்சிகளுக்கு வெட்கமே இல்லை, குல்லா போட்டு போட்டோ, குல்லா போடாமல் போட்டோ என்று தமாஷாக்கள் நடத்தியுள்ளன[7].

ரம்ஜான் நோன்பு போது தான் இப்படி பேசுவார்கள் என்றில்லை. மற்ற நேரங்களிலும், மற்ற கட்சிகளும் சலைத்தவை அல்ல. மார்ச் மாதத்திலேயே இந்த நாடகம் ஆரம்பித்து விட்டது[8]. ஜெயலலிதா தனியாக கஞ்சி குடிக்க ஏற்பாடு செய்வார்[9]. இப்படி வேடிக்கை-வினோதங்கள், இனி நிறைய பார்க்கலாம். இதோ இவற்றையும் படியுங்களேன்:

1.குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சிபோய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின்கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும்[10], ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (4)!

2.  குல்லா…………..மிரட்டல்களும்[11] (3).

3.  குல்லா…………..மிரட்டல்களும்[12] (2).

4.  குல்லா…………..மிரட்டல்களும்[13] (1).


[1] வேதபிரகாஷ்ரம்ஜான் கஞ்சியும்இந்துவிரோத திராவிட பேச்சுகளும், http://dravidianatheism.wordpress.com/2009/10/07/ரம்ஜாந்கஞ்சியும்-இந்து/

முஸ்லிம் மாணவர்களுக்கு தனி மருத்துவக் கல்லூரி வேண்டும்: IUMLன் கோரிக்கை!

திசெம்பர் 13, 2010

முஸ்லிம் மாணவர்களுக்கு தனி மருத்துவக் கல்லூரி வேண்டும்: IUMLன் கோரிக்கை!

IUMLன் தமிழ் மாநில மாநாடு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில மாநாடு சென்னை தாம்பரத்தில் சனிக்கிழமையன்று (11-12-2010) நடைபெற்றது. இம்மாநாட்டில் கருணாநிதிக்கு, “நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்” விருதும் வழங்கப்பட்பட்டது. விழாவில் கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், மத்திய ரெயில்வே இணை அமைச்சருமான இ .அகமது `இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இலக்கு 2020′ என்ற நூலை வெளியிட்டு ஆற்றிய சிறப்புரையில், “கலைஞர் கருணாநிதி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ, குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ மாத்திரம் தலைவர் அல்ல. அவர், முஸ்லிம் நண்பராகவும், ஒற்றுமை, ஒருமைப்பாட்டை கட்டிக் காக்கும் தலைவராகவும் இருப்பதால் மட்டுமே முதல்வராக இருக்கவில்லை. அவருக்கு காயிதே மில்லத்தின் பரிபூரண ஆசி இருக்கிறது” என்று தெரிவித்தார்.

IUML தலைவர் காதர் மொய்தீன் பேசியது: மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் காதர் மொய்தீன் பேசியதாவது[1]: “தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜமாத்துகள் ஒருங்கிணைந்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதை, அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். முஸ்லிம் சமுதாயத்திற்காக தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். நாங்கள் பல கோரிக்கைகளை முதல்வரிடத்தில் வைத்திருக்கிறோம். அதை நிறைவேற்ற சட்டத்திலே இடம் இருக்கிறதோ இல்லையோ. முதல்வர் இதயத்திலே எங்களுக்கு இடம் கொடுத்து, பல கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்துள்ளார். இந்த ஆட்சியின் சாதனைகளை விளக்கி இந்திய யூனியன் முஸ்லிக் லீக் கட்சி, வரும் ஜனவரி முதல் தமிழகத்தில் யாத்திரை நடத்த உள்ளது. சிறையில் இருக்கும் முஸ்லிம் சமுதாய இளைஞர்களை, அவர்களின் நன்னடத்தையை பொறுத்து விடுதலை செய்ய, முதல்வர் ஆவண செய்ய வேண்டும். அவர்களால் சமுதாயத்திற்கு மீண்டும் எந்த ஒரு தீங்கும் வராது. அதற்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்”, இவ்வாறு காதர் மொய்தீன் பேசினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில: முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதமாக இருக்கும் இடஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்தித் தரவேண்டும்; சமச்சீர் கல்வித்திட்டத்தில் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், அதனை கட்டாயமாகப் பயிலவும், தேர்வு எழுதவும் அரசுக்கு வழிகாட்ட வேண்டும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும்; வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்கு தனி துறையை உருவாக்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் சிறைக்கைதிகளாக உள்ளவர்களை, விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன[2].

நிறைவேற்ற சட்டத்திலே இடம் இருக்கிறதோ இல்லையோ: கோரிக்கைகளை வைத்துக் கொண்டே இருப்போம், “நிறைவேற்ற சட்டத்திலே இடம் இருக்கிறதோ இல்லையோ. முதல்வர் இதயத்திலே எங்களுக்கு இடம் கொடுத்து, பல கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்துள்ளார்”,  இப்படியெல்லாம் பேசியது வேடிக்கையாக இருந்தது. முந்தைய உள்-உதுக்கீடு பிரச்சினை கூட அவ்வாறுதான் செய்யப்பட்டு, விவகாரமாக்க பட்டது. முதலில் செய்து விடுவோம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற ரீதியில், செயல்படுவது, எதில் சேர்த்தி எனபது தெரியவில்லை.

IUMLன் விநோத கோரிக்கை: முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் தனி மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்: முஸ்லிம் சமுதாயத்திற்காக தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். நாங்கள் பல கோரிக்கைகளை முதல்வரிடத்தில் வைத்திருக்கிறோம். அதை நிறைவேற்ற சட்டத்திலே இடம் இருக்கிறதோ இல்லையோ. முதல்வர் இதயத்திலே எங்களுக்கு இடம் கொடுத்து, பல கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்துள்ளார். இப்படியும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதில் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. படிப்பில் தனியாக இருக்கவேண்டும் என்றால், அதை ஆரம்பநிலையிலிருந்தே செய்யலாமே? இனி முஸ்லிம் / இஸ்லாமிய குழந்தைகள் பள்ளி, முஸ்லிம் / இஸ்லாமிய பொறியியல் கல்லூரி என்று ஆரமபித்து என்ன செய்ய போகிறார்கள்? நாளைக்கு வேலை என்றாலும் தனியாக அவர்களுக்கு என்று பிரத்யேகமாக “முஸ்லிம் / இஸ்லாமிய வேலைகள்” உருவாக்கப்படுமா?

என் மீது என்ன கோபம் உங்களுக்கு? இன்னும் 40 ஆண்டு காலம் கஷ்டப்படு என்கிறீர்களே. இயலாது – இயற்கை இடம் தராது – இடம் தருகின்ற வரையிலே மட்டும் சில காலம் இருந்து இந்த மக்களுக்கு, சமுதாய மக்களுக்கு என்னலான பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி[3].

சென்னை தாம்பரத்தில் நேற்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். அப்போது அவருக்கு நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

கருணாநிதி பேசியதாவது: “மாநாட்டுத் தலைவர் காதர் மொகிதீன், விருதினை எனக்கு வழங்கும்போது அவருடைய அழகான முத்து முத்து போன்ற இனிய தமிழால் அதைப் படித்தளித்தார். எனக்கொரு குறை. பெரியாருடைய பெரும் தொண்டன், அண்ணாவின் அருமை தம்பி நான் என்பதையும் வாழ்த்திலே எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஒன்றை விட்டுவிட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை? காயிதே மில்லத்தினுடைய அடியொற்றி நடந்தவன் நான் என்ற அந்த வாசகத்தை ஏன் விட்டு விட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை தன்னுடைய இயக்கத்தைப் பற்றிச் சொன்னால், அது சுயவிளம்பரமாகி விடும் என்று கருதி விட்டுவிட்டார்களோ – என்னவோ தெரியவில்லை. ஆனாலும், எனக்கு பெரிய மனக்குறை அது. பெரியாரை, அண்ணாவை தமிழகத்திலே நினைவு படுத்துகிற நேரத்தில் காயிதே மில்லத்தை மறந்து விட்டால் நான் நம்முடைய பேராசிரியர் பெரியவர் என்பதால் இந்த வார்த்தைகளை ஜாக்கிரதையாகச் சொல்லுகிறேன் – மன்னிக்க முடியாத குற்றம். இரவு வீட்டுக்குச் சென்றாலும் அவருக்கு தூக்கம் வராது. எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை நினைத்து நினைத்து மனம் உருகுவார் என்பதும் எனக்குப் புரியும். அதனால் தான் அவர் படிக்கும்போது மாத்திரமல்ல – படித்து முடித்த பிறகும்கூட – எடுத்து திரும்பத் திரும்ப பார்த்தேன். காயிதே மில்லத் பெயர் இருக்குமா; என்று. இல்லை என்பதற்காக நான் மீண்டும் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

நல்லிணக்க நாயகர் பட்டம்: “இதற்கிடையே நல்லிணக்க நாயகர் என்கின்ற பெயர் எனக்கு வைக்கப்பட்டிருக்கின்றது. பட்டங்களை அளித்தவர்கள் என்ன உள்ளத்தோடு, எத்தகைய நம்பிக்கையோடு இதை வழங்கியிருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்து அவர்களுடைய உள்ளமும் மகிழ்கின்ற அளவிற்கு நடந்து காட்ட விரும்புகின்றவன் நான். அப்படி நடந்து காட்டுவேன் என்பதை இந்த நேரத்திலே, இந்த மாபெரும் மாநாட்டிலே உறுதியோடு நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

உருது மொழிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும்: இந்த மாநாட்டில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகளையெல்லாம் நிறைவேற்றித் தர வேண்டும் என்று பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். அதை நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையோடுதான் நீங்கள் இந்தத் தீர்மானங்களையெல்லாம் இன்றைக்கு எனக்கு அளித்திருக்கிறீர்கள். முதல் தீர்மானம் – சமச்சீர் கல்வியில் உருது மொழிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்ற தீர்மானமாகும். “நமது” மொழியான உருது மொழிக்கு பெருமை சேர்க்க அதை சிறப்பு செய்ய, அதற்கு உரிமைகளைப் பெற்றுத் தர எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் இந்த அரசு அல்ல – இன்றைக்கு இந்த அரசு இருக்கலாம், நாளைக்கு வேறு அரசு வரலாம். (நீங்கள்தான் முதல்வராக வருவீர்கள் என்று, கூட்டத்தில் இருந்து குரல்) அது உங்களுடைய ஆசை. 40 ஆண்டுகள் நான்தான் முதலமைச்சராக இருப்பேன் என்று இங்கே மாநாட்டுத் தலைவர் “சாபம்”கூட விட்டார். நான் அதை சாபமாகத்தான் கருதுகிறேன்.

இயற்கை இடம் தராது: 40 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து நான் இன்னும் கஷ்டப்பட வேண்டும் – படாதபாடுபட வேண்டும் என்று நம்முடைய மாநாட்டினுடைய தலைவர் அவர்கள் விரும்புகிறார் என்றால், நான் என்ன சொல்வது?  என் மீது என்ன கோபம் உங்களுக்கு? இன்னும் 40 ஆண்டு காலம் கஷ்டப்படு என்கிறீர்களே என்றால், இயலாது – இயற்கை இடம் தராது – இடம் தருகின்ற வரையிலே மட்டும் சில காலம் இருந்து இந்த மக்களுக்கு, சமுதாய மக்களுக்கு என்னலான பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பேன்.

குப்பையையெல்லாம் எங்களுக்கு அளிக்கப்படுகின்ற பன்னீர்க் குளியல்: ஒரு சில அம்மையார்கள் எங்கள் தலையிலே குப்பை கொட்டத் தயாராக இருக்கிறார்கள். அப்படிக் கொட்டப்படுகிற குப்பையையெல்லாம் நாங்கள் எங்களுக்கு அளிக்கப்படுகின்ற பன்னீர்க் குளியல் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை – ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் தலையிலே குப்பை கொட்டியவர்களுக்கு அறிவு புகட்டுவோமே தவிர, நாங்கள் ஆத்திரப்பட்டு, எரிச்சல்பட்டு, அவர்கள் மீது கோபப்பட்டு, கொந்தளித்து, அதன் காரணமாக அமைதி இழந்து, நல்லெண்ணத்தை பரப்புவதற்கு பதிலாக, நச்சுக் கருத்துக்களைப் பரப்புகின்ற குற்றத்திற்கு ஆளாகி விடுவோம் என்பதை நாங்கள் மிக நன்றாக உணர்ந்தவர்கள்.

சொல்லப்பட்ட இந்தக் கருத்துக்கள்கோரிக்கை வடிவிலே வந்திருக்கிறது: எனவேதான், இங்கே சொல்லப்பட்ட இந்தக் கருத்துக்கள் – கோரிக்கை வடிவிலே வந்திருக்கிறது. அதிலே ஒரு கோரிக்கைதான் – உருது மொழிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அனைத்துத் தரப்பிலிருந்தும் தெரிவிக்கப்பட்ட பொதுகருத்துக்கள்; பாடத்திட்டத்தில் சிறுபான்மை மொழிகள் கற்பிப்பதற்கு 4 பாடவேளைகள் ஒதுக்கீடு செய்தல்; அனைத்து மொழிப்பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரித்தல்; சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடத்துதல்; மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான மதிப்பெண் இடம் பெறச் செய்தல் – இதன்மீது உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்ற உறுதியை இந்த மாநாட்டிலே தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகத் தனித்துறை: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் பணிபுரிவதால் அவர்களின் நலனுக்காகவும், வெளிநாடுகளில் பணிபுரிகின்றபோது அங்கு அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை மீட்டிடவும், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காகத் தனித்துறையை ஏற்படுத்திட வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்கும் வகையில், மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தை, அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களின் நல ஆணையரகம் எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின்கீழ், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாட்டிலே இருக்கின்ற – இங்கிருந்து சென்ற தமிழர்கள் கூட அல்ல, அங்கே உள்ள தமிழர்கள் – அவர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடினால், தங்களுடைய நலன்களுக்காகப் போராடினால், அவர்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கமாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் – அந்த அரசின் சார்பில் நான் இங்கே சொல்லுகின்றேன் – “அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களின் நல ஆணையரகம்” எனப் பெயர் மாற்றம் செய்திடவும், அந்த ஆணையரகத்தின்கீழ், “வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம்” ஒன்றை ஏற்படுத்திடவும் இந்த அரசு முடிவு செய்யும்.

கூட்டணி கட்சி: இந்த அணி தொடரும் அப்படிக் காப்பாற்று வதிலே நாங்கள் கொண்ட அந்தப் பிடிவாதத்தை, புரிந்து கொண்ட காரணத்தினால்தான் இன்றைக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நண்பர்கள் என் பக்கத்தில் அமர்ந்திருக்கின்ற காட்சியை நீங்கள் காணுகிறீர்கள். என்றென்றும் நிலையாக இந்த அணி இருக்கும். இந்த அணியிலே எந்தக் கட்சி வந்து சேர்ந்தாலும், பிரிந்து சென்றாலும், இந்த அணி அப்படியே ஒட்டுமொத்தமாக நிலைத்து இருக்கின்ற அணி. எந்த இடர் வரினும் அந்த இடரை இடறி எறிந்து விட்டு தொடரும் தொடரும் தொடரும் என்பதை எடுத்து சொல்லி, வாழ்க உங்களது ஒற்றுமை வளர்க உங்களுடைய உள்ள உறுதி என்று கூறி விடைபெறுகிறேன்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளைகள்: உலகப் புகழ் பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளைகள் மேற்கு வங்கம், கேரள மாநிலங்களில் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதைப்போல, தமிழகத்திலும் அமைக்க மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ஒரு தீர்மானம். நிச்சயமாக மத்திய அரசை இதற்காக வலியுறுத்துவோம் – வெற்றி பெறுவோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

தமிழ்வளர்த்த முஸ்லிம் தமிழறிஞர்: தமிழ்வளர்த்த முஸ்லிம் தமிழறிஞர்களைக் கண்டறிந்து அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்கள் மரபுரிமையர்க்குப் பரிவுத் தொகை வழங்கி வருகிறது. இவ்வகையில் கா.மு. ஷெரிப், புலவர் முகம்மது நயினா மரைக்காயர் ஆகியோரின் மரபுரிமையர்களுக்குத் தலா 5 லட்சம் ரூபாய்; புலவர் குலாம் காதிறு நாவலரின் மரபுரிமையர்க்கு 6 லட்சம் ரூபாய்; சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர், மணவை முஸ்தபாவின் மரபுரிமையர்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாய்; டாக்டர் எஸ்.எம். கமால் அவர்களின் மரபுரிமையர்க்கு 7 லட்சம் ரூபாய் என மொத்தம் 43 லட்சம் ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கப்பட்டு; 6 முஸ்லிம் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, மேலும் கோரிக்கைகள் வரப்பெறுமாயின் அதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

முஸ்லிம்களுக்கும் எனக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளதுதுணை முதல்வர் மு..ஸ்டாலின்[4]: இந்த நிகழ்ச்சியில், முன்னிலையுரையாற்றிய துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், முஸ்லிம்களுக்கும் எனக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்று முதல் அமைச்சர் கலைஞர் கூறுவார். அந்த உறவுக்கு அடையாளமாக இந்த விருதினை வழங்கி உள்ளார்கள். ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் தி.மு.க.வினரும், கலைஞரும் சிறு பான்மையினருக்காக தொடர்ந்து குரல் கொடுப் பார்கள் என்றார்.

முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொஹைதீன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், மைதீன்கான், தா.மோ.அன்பரசன், அப்துல் ரகுமான் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாசித், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர், செயலாளர் காயல் மகபூப், பொருளாளர் வடக்குக்கோட்டையார், கேரள மாநிலத் தலைவர் ஹைதர் அலி சிகாப்தங்கள், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துர் ரகுமான் உள்ளிட்ட பலர் பேசினார்கள். முன்னதாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

விமர்சனம்: முஸ்லிம்கள் “தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும்” என்று அடிக்கடி சொல்வார்கள், ஏனெனில், அவர்கள் எப்பொழுது பார்த்தாலும், தாங்கள் ஏதோ தனிப்பட்டவர்கள், மற்ற மனிதர்களைப் போல / இந்தியர்களைப் போல இல்லை என்ற ரீதியில் பிரிவினையை எடுத்துக் காட்டுவதைப் போல நடந்து கொள்கிறார்கள் என்ற எண்ணம், மற்றவர்கள் அவர்களைப் பார்க்கும் போதே தோன்றுகிறது. இப்பொழுது முஸ்லீம் மாணவர்களுக்கு தனி மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துள்ளனர். அப்படியென்றால், நாளைக்கு முஸ்லீம் மாணவிகளுக்கு தனி மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கெனெவே, இந்தியாவிலேயே முஸ்லீம்கள் ஏன் இப்படி “பிரிவினை, பிரிவினை-எண்ணம், பிரிவினை தன்மை, பிரிவினை-மனப்பாங்கு” முதலியவற்றை வளர்க்கின்றனர் என்பதற்காக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, தனித்திருக்கும் மனப்பான்மை, தனித்திருக்கும் தன்மையை உரிமையாகக் கேட்கும் மனப்பான்மை முதலியவை கலந்த மனப்பாங்குடன் இருப்பதாக தெரியவந்தது.

வேதபிரகாஷ்

© 13-12-2010


[1] முஸ்லிம் மாணவர்களுக்கு தனி மருத்துவக் கல்லூரி வேண்டும் டிசம்பர் 11,2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=143950