Posted tagged ‘தீ வைப்பு’

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (2)

ஜூலை 2, 2015

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (2)

Ambur riot - police  attacked.

Ambur riot – police attacked.

அஸ்லம் பாஷா என்ற உள்ளூர் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு ஜவாஹிருல்லா மறுப்பு: கலவரத்தைத் தூண்டிவிட்டதில் அஸ்லம் பாஷா என்ற உள்ளூர் எம்.எல்.ஏவுக்கு தொடர்புள்ளதாக, போலீஸ் விசாரிக்க ஆரம்பித்துள்ளது[1]. அஸ்லம் பாஷா ஒரு முஸ்லிம் இளைஞனைத் தூண்டிவிட்டதாக சொல்லப்பட்டுகிறது[2]. ஆனால், ஜவாஹிருல்லா உள்ளூர்வாசிகள் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்கின்றனர். கலவரத்தின் போது, ஆம்பூர் எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா, அமைதி ஏற்படுத்த முயற்சி செய்தார். அவரை கலவர வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் மீது அவதுாறு வழக்கு தொடுப்போம். கலவரத்திற்கு முன், போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தி இருக்க வேண்டும். கலவரத்தில், பெண் போலீசார் உட்பட அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு, அவர் கூறினார். எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா, மாவட்ட செயலர் சுகூர் உட்பட பலர் உடனிருந்தனர்[3].

Ambur riot - police  attacked.2

Ambur riot – police attacked.2

உயிர் தப்புவதற்காக 2 கி.மீ., ஓடினேன் – பெண் பொலீஸ் கதறல்! ஆம்பூரில் கலவரத்தின்போது, கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, பெண் போலீஸ் ஒருவர், 2 கி.மீ., துாரம் ஓடி, உயிர் பிழைத்துள்ள தகவல், வெளியாகி உள்ளது[4]. வேலுார் மாவட்டம், ஆம்பூரில், வாலிபர் ஒருவர், மர்ம மரணம் அடைந்ததையொட்டி, கடந்த மாதம், 27ம் தேதி இரவு, பெரிய அளவிற்கு கலவரம் வெடித்தது. இதில், 50க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். ஆம்பூர் ஆயுதப்படை போலீஸ் விஜயகுமார், 34, கால், தொடை, வயிறு, கழுத்து, தொண்டை, கை மற்றும் தோள்பட்டையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். கலவரம் குறித்து, விஜயகுமார் கூறியதாவது[5]: “சம்பவம் நடந்த, 27ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, ஆம்பூர் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, 300க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள், என்னை சூழ்ந்து, கத்தியால்சரமாரியாக குத்தினர்சரமாரியாக தாக்கினர் – அப்போது, அங்கு வந்த, இரண்டு பெண் போலீசாரையும் அடித்து உதைத்தனர். அவர்கள், உயிர் பிழைக்க தப்பி ஓடிய போதும், கலவர கும்பல் அவர்களை துரத்திச் சென்று தாக்கியது. இதை பார்த்த நான், படுகாயத்துடன் இருந்தாலும், அந்த பெண் போலீசாரை காப்பாற்ற போராடினேன். இதனால், கலவர கும்பல், என்னை கற்களாலும், தடியாலும் தாக்கினர். அப்போது, ஒரு கும்பல் வந்து, ‘இது எங்கள் கோட்டை; நீங்கள் எப்படி, இங்கு வரலாம்எனக்கூறி தாக்கினர். அதன்பின், பாதுகாப்புக்கு வந்த, போலீசார் எங்களை மீட்டனர்”, இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் காயம்

போலீசார் காயம்

காரை மடக்கிகாஞ்சிபுரம் ஆயுதப்படையைச் சேர்ந்த மல்லிகா கூறியதாவது[6]: ஆம்பூரில் கலவரம் நடக்கும் போது, கற்களால் தாக்கியவர்களை, சக போலீசாருடன் சேர்ந்து விரட்டினேன். இதை பார்த்த ஒரு கும்பல், என்னை தடியால் தாக்கியது. அவர்களிடமிருந்து தப்பிக்க, 2 கி.மீ., துாரம் ஓடி, வழியில் வந்த காரை மடக்கி, அதில் ஏறி உயிர் தப்பினேன். கண்ணில் பட்ட போலீசாரை எல்லாம், கலவர கும்பல் சரமாரியாக தாக்கினர். அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். திருவண்ணாமலை ஆயுதப்படையைச் சேர்ந்த ரமேஷ் கூறியதாவது: என் சர்வீசில், நிறைய கலவரங்களை பார்த்திருக்கிறேன். கலவரம் செய்பவர்களை தடியால் அடித்தால், பயந்து ஓடுவர். அதைப் போலத்தான், இந்த கலவரத்தை நினைத்தேன். ஆனால், கலவரம் செய்தவர்கள், பயங்கர ஆயுதங்களுடன் எங்களை விரட்டினர். போலீசார் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், எங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஓட ஓட விரட்டி… இதனால், கலவர கும்பல், எங்களை ஓட ஓட விரட்டி தாக்கினர்; நாங்களும் அடி வாங்கிக் கொண்டு, திரும்ப ஓடி வந்து விட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கலவரத்தை அடக்குவதற்காக, வேலுார், தி.மலை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார், ஆம்பூர் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்படி, ஆம்பூர் சென்றவர்களில், கடுமையான தாக்குதலுக்கு உள்ளான, 50க்கும் மேற்பட்ட போலீசாரில், இவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_012

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_012

பெண் போலீஸ் என்று கூட பார்க்காமல், என் சட்டையை கழற்ற வந்தனர்; சிலரை மானபங்கம் செய்ய முயற்சித்தனர்: ஆம்பூரில் கலவரம் நடந்த பகுதிகளை, மனித நேய மக்கள் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான, ஜவாஹிருல்லா, நேற்று பார்வையிட்டார். கலவர கும்பல் தாக்கியதில், படுகாயம் அடைந்து, வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, சிகிச்சை பெற்று வரும் பெண் போலீசார், கோபமாக, ஜவாஹிருல்லாவைப் பார்த்து, பெண் போலீஸ் என்று கூட பார்க்காமல், என் சட்டையை கழற்ற வந்தனர்; சிலரை மானபங்கம் செய்ய முயற்சித்தனர். கத்தியால் வெட்டினர்; தடியால் அடித்தனர்; கற்களால் தாக்கினர். ஒரு பெண் போலீசின் சட்டையை கிழித்துள்ளனர்; இதெல்லாம் நியாயமா என, ஆவேசமாக கேட்டனர். இத்தகைய செய்தி வந்த பிறகுக்கூட பெண்ணிய வீராங்கனைகள் அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சாதாரணமான விசயங்களுக்கு பிருந்தா காரத் இத்யாதிகள் தங்களது கருத்துகளை அள்ளி வீசுவர், ஆனால் இப்பொழுது……………..அதே மாதிரி அந்த குஷ்புவையும் காணவில்லை.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_015

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_015

ஆம்பூர் கலவரத்தில் தவறு நடந்து விட்டது‘ – ஜவாஹிருல்லா மன்னிப்பு: ஆம்பூர் கலவரத்தில் படுகாயம் அடைந்து, சிகிச்சை பெறும் போலீசாரிடம், மனித நேய மக்கள் கட்சி தலைவர், ஜவாஹிருல்லா மன்னிப்பு கேட்டார். தவறு நடந்துவிட்டது இதை கேட்ட, ஜவாஹிருல்லா, ‘தவறு நடந்து விட்டது; நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என, சிகிச்சை பெறும் ஒவ்வொரு போலீசாரிடமும் சென்று, மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பின், அவர், நிருபர்களிடம்கூறியதாவது: ஜமில் அகமது மரணத்துக்கு காரணமான இன்ஸ்பெக்டர் பிரேம்ராஜ், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். இதில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆம்பூரில் நடந்த கலவரத்தை, சில விஷமிகள் முன்னின்று நடத்தியுள்ளனர். கலவரம் செய்த வன்முறை கும்பல், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்பட்டுள்ளனர். அவப்பெயரை ஏற்படுத்த சதி…. தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை, மக்களிடம் நல்லிணக்கம் ஏற்படுவதையே விரும்புகிறது. அரசிடம், எங்கள் கட்சி மீது அவப்பெயரை ஏற்படுத்தி தர, சிலர் முயற்சிக்கின்றனர். கலவரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளவர்களில் அப்பாவிகளும் உள்ளனர்; அவர்களை அரசு விடுதலை செய்ய வேண்டும்.

போலீசார் தாக்கப்படல் - விகடன் போட்டோ

போலீசார் தாக்கப்படல் – விகடன் போட்டோ

முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை? முஸ்லிம்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்த எந்த முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியதுதானே? இல்லை, இவ்வாறு சொல்லி தப்பித்துக் கொள்ளப்பார்க்கின்றனரா? கலவரம் செய்த வன்முறை கும்பல், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்றால், கொலைவெறி பிடித்தவர்கள் இருந்தார்களே, அவர்களை பைத்தியங்கள் என்று சொல்லி தப்பிக்க தூபம் போடுகிறாரா? கலவரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளவர்களில் அப்பாவிகளும் உள்ளனர் என்று சேர்த்து சொல்லியிருப்பதையும் கவனிக்க வேண்டும். இத்தனை நாசத்தை உண்டாக்கி விட்டு, போலீஸ் நிலைய, ஜீப்புகள் மற்றும் போலீஸ்காரர்களையும் தாக்கி விட்டு, கலவரம் செய்த வன்முறை கும்பல், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்றால் என்ன அர்த்தம்? முஸ்லிம்களுக்கு அத்தகைய நிலைமை எதனால், ஏன் ஏற்படும் என்பதனையும் ஒன்று அவர்களே விளக்கவேண்டும் அல்லது மற்றவர்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

ஆம்பூர் கலவரம் - 30_06_2015_011_003

ஆம்பூர் கலவரம் – 30_06_2015_011_003

போலீஸ் ஜீப் எரித்தவர்கள் கைது: ஆம்பூரில் நடந்தது கலவரம் என்பதை விட, போர்க்களம் என்றே சொல்ல வேண்டும். கலவரக்காரர்கள், கத்தி, கற்கள், தடியால் தாக்கினர். அவர்களிடம் துப்பாக்கி இருந்திருந்தால், ஒரு போலீஸ்காரர் கூட, உயிருடன் வீடு திரும்பி இருக்க முடியாது. இருதயராஜ், போலீஸ்காரர், காஞ்சிபுரம். 113 பேர் கைது ஆம்பூர் கலவரம் தொடர்பாக, இதுவரை, 113 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். கலவரம் நடந்தபோது, ஆம்பூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகுந்து, அங்கிருந்த ஜீப், ஆம்பூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப் ஆகியவற்றை, கலவர கும்பல், தீ வைத்து கொளுத்தியது. இது தொடர்பாக, ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்பூர் கே.எம்.நகரைச் சேர்ந்த கயம், 20, அக்பர், 23, சபீர், 26, சலீம், 22, ஆகிய, நான்கு பேரை, நேற்று கைது செய்தனர்.

பவித்ராவை தேடுகிறது தனிப்படை! வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த,குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் பவித்ரா, 23, காணாமல் போனது தொடர்பாக, அவரது கணவர் பழனி கொடுத்த புகாரின்படி, பள்ளிகொண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கில் சம்பந்தப்பட்ட பவித்ரா, எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. இவரை தேடும் பணியில், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், கோவிந்த சாமி தலைமையில், இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், பவித்ராவின் புகைப்படம் அனுப்பப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் பஸ் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில், பவித்ரா புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்களை ஒட்டவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தனிப்படை போலீசார் தெரிவித்தனர். ஒரு பெண் காணவில்லை என்பதைப்பற்றியும் பெண்ணிய வீராங்கனைகள் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. நீதியை கலவரத்தால், வன்முறையால் அடைய முடியும் என்பது விசித்திரமான தத்துவம் தான். முசபர்நகர் கலவரமும் இதே பாணியில் ஆரம்பித்தது என்பதனை நினைவு கொள்ள வேண்டும். இங்கு வேண்டுமானால், இன்னொரு கோயம்புத்தூர் போல ஆகக்கூடாது என்று அறிவுஜீவிகள் சொல்லலாம், ஆனால், இருக்கும் முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைக்கும் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் முதலிய தோல் தொழிற்சலைகளில் இந்து பெண்கள் மதம் மாற்றப்படுவது நடந்து வருகின்றது. எனவே பிரச்சினை பெரிதாகாமல் இருக்க வேண்டும்.

வேதபிரகாஷ்

01-07-2015

[1] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Police-Probe-Role-of-MLA-in-Ambur-Riot/2015/06/29/article2891992.ece

[2] New Indian express, Police Probe Role of MLA in Ambur Riot, By J Shanmugha Sundaram, Published: 29th June 2015 06:10 AM;  Last Updated: 29th June 2015 06:10 AM.

[3] தினமலர், உயிர் தப்புவதற்காக 2 கி.மீ., ஓடினேன்!, நமது நிருபர் குழு 01-07-2015.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1286934

[5] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Recall-Horror-During-Ambur-Clash/2015/07/02/article2897905.ece

[6] தினமலர், உயிர் தப்புவதற்காக 2 கி.மீ., ஓடினேன்!, நமது நிருபர் குழு 01-07-2015.

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (1)

ஜூலை 2, 2015

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (1)

Ambur riot - body brought to Ambur

Ambur riot – body brought to Ambur

ஷமில் அகமது போலீஸாரால் விசாரிக்கப்பட்டது, ஜூன்.26 அன்று இறந்தது: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா குச்சிபாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா. பள்ளிகொண்டாவில் தோல் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த மே மாதம் 24–ந் தேதி திடீரென மாயமானார். இது தொடர்பாக பழனி பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். அதில் ஆம்பூரை சேர்ந்த ஷாமில் அகமது மீது சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார். ஈரோடில் ஒரு நகைக்கடையில் ஷமில் அகமது சூபர்வைசராக வேலை செய்து வந்தார். அதே நகைக்கடையில் பவித்ராவும் வேலை பார்த்ததால், அவர்களது நெருக்கம் பற்றிய விவரங்கள், ஒருவேளை செல்போன் விவரங்களிலிருந்தும் அறியலாம் என்று சொல்லப்படுகிறது[1]. இது தொடர்பாக ஆம்பூரை சேர்ந்த ஷமில் அகமது (வயது 26) என்பவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் கடந்த 15–ந் தேதி விசாரணைக்கு அழைத்து சென்றார். போலீஸ் நிலையத்தில் ஷமில் அகமதுவை, இன்ஸ்பெக்டர் மற்றும் 6 போலீசார் அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது[2]. படுகாயம் அடைந்த ஷமில் அகமதுவை சிகிச்சைக்காக ஜூன்.19 அன்று ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் ஜூன்.23 அன்று வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜூன் 26 அன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு இறந்தார். “வெளிப்படையாக உடலில் எந்தவித காயங்களும் தெரியவில்லை. ஆனால், உள்ளுக்குள் பலவித பாதிப்புகள் ஏற்பட்டன. மூளையிலிருந்து கைகளுக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டதால், மாரடைப்பு ஏற்பட்டது”, என்றுமருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்[3].

பவித்ரா, ஷமீல் அஹ்மது

பவித்ரா, ஷமீல் அஹ்மது

ஜூன் 26 மற்றும் 27 பதட்டமான நிலவரம்: இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேற்று முன்தினம் இரவு 500–க்கும் மேற்பட்டோர் ஆம்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஷமில் அகமதுவை தாக்கிய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்[4]. இந்த நிலையில் ஷமில்அகமதுவின் உறவினர் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சபாரத்தினம், போலீஸ்காரர்கள் நாகராஜ், அய்யப்பன், முரளி, சுரேஷ், முனியன் ஆகிய 7 பேர் மீது குற்ற நடைமுறை சட்டப்பிரிவு 176 (1) பிரிவின்கீழ் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டார். இதனிடையே ஷமில்அகமது இறந்த சம்பவத்தையடுத்து ஆம்பூரில் நேற்று 2–வது நாளாக பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதனால் வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரி ஆகியோர் ஆம்பூரில் முகாமிட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேசன், விஜயகுமார் உள்ளிட்ட 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1000–க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அதிரடி படைவீரர்களும் குவிக்கப்பட்டனர்.

போலீஸ் நிலையம் முன்பு முஸ்லிம்கள் குவிதல்

போலீஸ் நிலையம் முன்பு முஸ்லிம்கள் குவிதல்

ஜூன் 27 கலவரம் துவக்கம்: இரவு 7 மணியளவில் ஆம்பூரில் சென்னை பெங்களூர் மெயின் ரோட்டில் 500–க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக தெரிவித்தனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர். நேரம் செல்லச்செல்ல பதற்றம் அதிகரித்தது, கூட்டமும் அதிகரித்தது. 1000–க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். அவர்கள் ஷமில் அகமது சாவுக்கு காரணமான ‘‘போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் மற்றும் 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தது போதாது. அவர்களை உடனடியாக கைது செய்து சஸ்பெண்டு செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், லாரி, கார்கள் மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்கினர். இதில் அந்த வாகனங்களின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன. பஸ்சில் இருந்த பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அதன்பின்னர் லாரிகளை நிறுத்தி அதில் இருந்த டிரைவர்களை தாக்கினர். போராட்டம் கலவரமாக மாறியதால் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைக்க உத்தரவிடப்பட்டது.

Ambur riot - lorry attacked

Ambur riot – lorry attacked

ஜூன் 27  போலீசார் கலவரக்காரர்களை தாக்கியது, ஆனால், தாக்குப்பிடிக்காமல் போலீசார் ஓடியது: இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது கலைந்து சென்றவர்கள் மீண்டும் கற்களை எடுத்து போலீசாரை நோக்கி சரமாரியாக வீசினர். ஒரு கல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரியின் தலையில் விழுந்தது. இதில் அவர் காயம் அடைந்தார். உடனே போலீசார் அவரை அங்கிருந்து அழைத்துச்சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் கலவரக்காரர்கள் தொடர்ந்து போலீசாரை குறிவைத்து கற்களால் வீசி தாக்கினர். கட்டடங்களின் மாடியில் நின்று கற்களை வீசினர். கல்வீச்சில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டிச்சென்றனர். அவர்கள் தெருக்களுக்குள் ஓடினர். போலீசார் அவர்களை விடாமல் துரத்திச்சென்று விரட்டி அடித்தனர். அப்போது போலீசாரை சிலர் கத்தியாலும் பிளேடாலும் வெட்டினர். இதில் மேலும் பல போலீசார் காயம் அடைந்தனர். 15 பெண் போலீஸ் உள்பட 54 போலீசார் படுகாயமடைந்தனர். அவர் கள் அனைவரும் வேலூர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். ஆம்பூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டாலும் அவர்களை விட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் போராட்டக்காரர்களை ஒடுக்கி கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கலவரத்தை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Ambur riot - vehicle burnt

Ambur riot – vehicle burnt

ஜூன் 27 – கலவரக்காரர்கள் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டது: இந்த சம்பவங்களை தொடர்ந்து வேலூரிலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர் செல்லும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல் சேலம், ஓசூர், பெங்களூரு, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து வேலூர் வழியாக வரும் பஸ்களும் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் நடுவழியில் தவித்தனர். ஆம்பூர் பஸ் நிலையத்தில் இருந்து ஓ.ஏ.ஆர். தியேட்டர் வரை சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு ரோட்டில் வந்த வாகனங்கள் அனைத்தும் கலவரக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. 30–க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் நெடுஞ்சாலை பகுதி போர்க்களமாக மாறியது. குறைந்த அளவு போலீசாரே இருந்ததால் அவர்கள் ஒரு கட்டத்தில் பின்வாங்க நேர்ந்தது. அப்போது ஆம்பூர் நேதாஜி சாலையில் புகுந்த வன்முறையாளர்கள் ஆம்பூர் தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுலகம் ஆகியவற்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், வன்முறையாளர்கள் போலீஸ் நிலையத்துக்குள் செல்லாதவாறு தாலுகா அலுவலகம் அருகில் மணல் கடத்தல் மாட்டு வண்டிகளை குறுக்கே போட்டு போலீசார் தடை ஏற்படுத்தினர். அதில் ஒரு மாட்டு வண்டியை தீயிட்டு எரித்தனர். இதனால் அங்கும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் தாலுகா போலீஸ் நிலைய பகுதிக்குள் நுழைந்தது. அப்போது போலீஸ் நிலையம் முன்பு விபத்தில் சிக்கிய மினி பஸ் ஒன்றை வழக்கு தொடர்பாக போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர். அந்த மினி பஸ்சுக்கும் வன்முறைக் கும்பல் தீவைத்தனர். இதில் அந்த வேன் தீயில் எரிந்து நாசமானது.

அலுவலகம் தீ வைப்பு

அலுவலகம் தீ வைப்பு

ஜூன் 27 இரவு – ஜூன் 28 காலை – போலீஸ் ஜீப்புகளுகள், கடைகள் எரியூட்டல்: இதற்கிடையே ஓ.ஏ.ஆர். தியேட்டர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 போலீஸ் ஜீப்களுக்கு வன்முறையாளர்கள் தீவைத்தனர். இதில் அந்த போலீஸ் ஜீப்கள் கொழுந்து விட்டு எரிந்தன. அது முற்றிலும் எரிந்து நாசமானது. அதுதவிர ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 மோட்டார் சைக்கிள்களையும் வன்முறை கும்பல் தீவைத்து கொளுத்தியது. அத்துடன் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் அதனை சுற்றி இருந்த பெட்டிக்கடைகளுக்கும் வன்முறைக்கும்பல் தீவைத்தது. இதனால் அங்கிருந்த 10–க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்தன. ‘இந்த கலவரத்தை தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். எனினும் நள்ளிரவை தாண்டி ஆம்பூரில் கலவரம் நீடித்தது. இதனையடுத்து ஐ.ஜி.மஞ்சுநாதா, டி.ஐ.ஜி.க்கள் தமிழ்சந்திரன் (வேலூர்), சத்தியமூர்த்தி (காஞ்சீபுரம்) தலைமையில் 6 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். வஜ்ரா வாகனமும் வரவழைக்கப்பட்டது. அவர்கள் கலவரக்காரர்களை அடித்து விரட்டினர். நள்ளிரவு 1 மணிக்கு பின் கலவரம் கட்டுக்குள் வந்தது. இரவு 8 மணிக்கு தொடங்கிய கலவரம் 1 மணிவரை நீடித்ததால் 5 மணி நேரம் ஆம்பூர் போர்களமாக மாறியது. கலவரப்பகுதியில் பல இடங்களில் கற்களும், வாகனங்களில் உடைக்கப்பட்ட கண்ணாடிகளும் சிதறிக்கிடந்தன. போலீசார் விரட்டியதால் தப்பி ஓடியவர்கள் காலணிகளையும் விட்டுச்சென்றதால் எங்கும் காலணிகளாக காட்சி அளித்தது.

ஆம்பூர் கலவரம் - 29_06_2015_004_011

ஆம்பூர் கலவரம் – 29_06_2015_004_011

ஜூன்.28 போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட், ஜமில் அகமதுவின் ஆதரவாளர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம்: வாகனங்கள் உடைப்பு, தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூன்.28 அன்று காலை 200 பேரை கைது செய்து செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர். இந்த சம்பவங்களால் ஆம்பூரில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. அங்கு போலீசார் தொடர்ந்து முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்பூரில் நடந்த கலவரம் தொடர்பான விவகாரத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்[5]. போலீஸ் விசாரணைக்கு சென்ற, ஆம்பூரைச் சேர்ந்த ஜமில் அகமது, மர்மமாக இறந்ததால், ஆம்பூரில் கலவரம் வெடித்தது. கலவரத்திற்கு காரணமான, இதற்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆம்பூரில் நேற்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது, கல்வீசி தாக்கப்பட்டது. இதில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சேதமடைந்தன. போலீசார் உள்ளிட்ட 40 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக 101 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[6]. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[7]. 200க்கும் மேற்பட்டோரை, ஆம்பூர் டவுன் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, ஜமில் அகமதுவின் ஆதரவாளர்களின் ரகசிய ஆலோசனை கூட்டம், வாணியம்பாடி அடுத்த உம்மராபாத்தில், மதியம், 2 மணிக்கு நடந்தது. இதற்கிடையே, “தன் மனைவி பவித்திராவை கண்டுபிடித்து தர வேண்டும்’ என, ஆம்பூர் அடுத்த, துத்திப்பாளையத்தைச் சேர்ந்த பழனி, கலவரத்தை பார்வையிட ஆம்பூர் வந்த ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தார். கலவர விவகாரத்தில், பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜை, வேலூர் சரக டி.ஜி.பி., அசோக்குமார், சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாக, வேலூர் மாவட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர்[8].

வேதபிரகாஷ்

01-07-2015

[1] The police identified the deceased as Shameel Basha, a resident of Ambur, who was working as a supervisor in a jewellery shop in Erode.One of his female colleagues, Pavithra, a married woman and resident of Pallikonda went missing in the second week of June after which the police picked up the victim for questioning.“Both were working together at Erode and police believed that Shameel knew about her as they thought both were very close after going through Pavithra’s mobile records,” sources said.

http://www.deccanchronicle.com/150628/nation-current-affairs/article/youth-dies-after-police-detention

[2]  http://www.maalaimalar.com/2015/06/28120019/Youth-kills-in-police-custody.html

[3] Basha was taken to the Ambur GH and admitted for treatment at 3 pm on June 19. He was shifted to the Government Vellore Medical College Hospital, Adukkamparai on June 23. He was moved to the RGGGH on June 26 and around 5.40 pm the same day, he passed away, Shah Jahan claimed. Doctors at the RGGGH said, “Though there were no visible injuries, he suffered polytrauma (multiple traumatic injuries).” The brachial plexus, a nerve which is under the shoulder joint and carries signals from the brain to the muscles that move the arms, was injured. He suffered ‘cardiac arrest’ and died, the doctors said.

http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Kept-Youth-in-illegal-Custody-for-4-Days/2015/06/28/article2890411.ece

[4]  மாலைமலர், போலீஸ் காவலில் வாலிபர் சாவுஆம்பூரில் கலவரம்: பஸ் எரிப்புசூப்பிரண்டு உள்பட 54 போலீசார் காயம், பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28, 12:00 PM IST

[5]  தினமலர், ஆம்பூர் கலவரம் விவகாரம் :இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட், 28-06-2015.22.33.

[6]  தினமலர், ஆம்பூர் வன்முறை குறித்து 101 பேர் மீது வழக்குப்பதிவு,28-06-2015.19.12

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1284833

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1284988

ராஸா அகடெமி சார்பில் நடத்தப் பட்ட முஸ்லீம் ஆர்பாட்டம் ரகளை, கலவரம், தீவைப்பில் முடிந்து இரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர்!

ஓகஸ்ட் 11, 2012

ராஸா அகடெமி சார்பில் நடத்தப் பட்ட முஸ்லீம் ஆர்பாட்டம் ரகளை, கலவரம், தீவைப்பில் முடிந்து இரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர்!

ராஸா அகடெமி ( Raza Academy) சார்பில் மயன்மார் (பர்மா) மற்றும் அசாமில் முஸ்லீம்களால்  மும்பையில் ஆஜாத் மைதானத்தில் நடத்தப் பட்ட ஆர்பாட்டம் ரகளை, கலவரம், தீ வைப்பில் முடிந்து இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்[1]. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சன்னி ஜமைதுல் உல்மா மற்றும் ஜமாதே-இ-முஸ்தபா (Sunni Jamaitul Ulma and Jamate Raza-e-Mustafa) போன்ற இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரித்துள்ளன.

மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடினர். அமைப்புகளின் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர். ஆனால், அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக் காரர்கள், திடீரென்று போலீஸார் மற்றும் ஊடகக்காரர்களின் மீது கல்லெறிய ஆரம்பித்தனர்.

ஆஜாத் மைதானத்தில் மட்டும் கூட அனுமதி பெற்ற முஸ்லீம்களில், திடீரென்று தெருக்களில் வந்து ரகளை செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே நின்று கொண்டிருந்த டிவி-செனல்களின் வண்டிகள், போலீஸ் வேன்கள் முதலியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். பிறகு  CST ரெயில்வே டெர்மினலுக்குள் (CST Railway terminus) நுழைந்து கண்ணாடி ஜன்னல்களை உடைக்க ஆரம்பித்தனர்[2].

3 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், 3.30ற்கு கலவரமாக மாறியது. எதிப்பு போராட்டம் என்று ஆரம்பித்த முஸ்லீம்கள் எப்படி திடீரென்று கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. தெருக்களின் வந்து ரகளை செய்து வண்டிகளை அடித்து நொறுக்கியதில் 10 பெஸ்ட் பேரூந்துகள், 6 கார்கள், 20ற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் முதலியன கொளுத்தப்பட்டு சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், புறவழி ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது[3].

கலவரத்தை அடக்க தாமதமாகத்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆகாசத்தில் சுட்டு, பிறகு லத்தி ஜார்ஜ் செய்துள்ளனர். அவர்களின் அடையாளம் தெரியவில்லை. இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது[4]. 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் செயின்ட் ஜார்ஜ், ஜி.எச். மற்றும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர்[5].  இப்பொழுது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். முஹம்மது சயீத் என்ற அகடெமியின் பொது செயலாளர் (Mohammed Saeed, General Secretary of the academy) திடீரென்று தமக்கும் அந்த கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்[6].

[புகைப்படங்கள் மற்ற இணைத்தளங்களினின்று எடுத்து உபயோகப்படுத்தப் பட்டுள்ளன – நன்றி]

© வேதபிரகாஷ்

11-08-2012


[6] Meanwhile, Raza Academy distanced itself from the violence. “While we were protesting at the ground, some people got aggressive and started behaving violently,” Mohammed Saeed, General Secretary of the academy, said. “We never encourage violence and strongly condemn such acts,” he added.

http://www.indianexpress.com/news/16-injured-as-antiassam-riot-protest-turns-ugly-in-mumbai/987080/2