Posted tagged ‘தீவைப்பு’

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

ஒக்ரோபர் 29, 2022

2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)

22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ளவை என்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.

இந்நிலையில் தான் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்செய்திகள் வர ஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].

22-10-2022 (சனிக்கிழமை இரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. 

23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து  2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.

பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக் கிழமை):  தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கார் குண்டு வெடித்தலில் இறந்தவன் ஜமேசா முபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……

வாட்ஸ்ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட  அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் போது எனது தவறை மன்னித்து விடுங்கள், குற்றங்களை மறந்துவிடுங்கள் எனது இறுதி சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!

© வேதபிரகாஷ்

29-10-2022


[1]  திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

[2]  சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.

[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறைஅன்றேகொடுத்த சிக்னல்!.. கிடப்பில் போடப்பட்டதா ? கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.

[4] https://tamil.asianetnews.com/tamilnadu/coimbatore-car-bomb-blast-tn-police-ignored-central-intelligence-agency-warning-rkgw4i

துலாகரில் டிசம்பர் 13-15 தேதிகளில் நடந்த கலவரங்கள் – முஸ்லிம்கள் “மீலாது நபி” ஊர்வலம் நடத்தி இந்துக்களின் வீடுகளை சூரையாடி எரித்துள்ளனர்! – துலாகர் கலவரம் (1)

ஜனவரி 3, 2017

துலாகரில் டிசம்பர் 13-15 தேதிகளில் நடந்த கலவரங்கள் முஸ்லிம்கள் “மீலாது நபி” ஊர்வலம் நடத்தி இந்துக்களின் வீடுகளை சூரையாடி எரித்துள்ளனர்! துலாகர் கலவரம் (1)

dhulagarh-mamtas-suppression-of-facts

கலவரங்கள் நடந்த விவரங்களை மறைத்த மம்தா அரசு: மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள துலாகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு – டிசம்பர் 13-15 தேதிகளில் – மத பேரணியில் இரு தரப்பினருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. ஏற்பட்ட கலவரங்களில், இந்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், ஊடகங்களின் மீதான அடக்குமுறைகளினால், “சென்சார் / தடை” விதிக்கப்பட்டது போல நிலையினால், செய்திகள் அதிகமாக வெளிவராமல் மறைக்கப்பட்டன. ஆங்கில ஊடகங்களுக்கே இந்த கதி என்றால், தமிழ் ஊடகங்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒன்றுமே நடக்கவில்லை என்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளார்கள். போதாகுறைக்கு 12-12-2016 அன்று வர்தா புயலினால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் தங்களது சொந்த வீடுகள், பொருட்கள், பணம் எல்லாம் இழந்து, அகதிகள் போல தெருக்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இக்கலவரங்கள் பற்றிய செய்திகள் கூட கொஞ்சமாக கடந்த இருநாட்களாக டிசம்பர் 31 2016 மற்றும் ஜனவரி 1, 2017 – வந்து கொண்டிருக்கின்றன.

18_Monday_2016_Police acts against the members of Tehreek-e-Hurriyat who were taking out a protest march against the killing of four persons in Handwara

முஸ்லிம் மக்கட்தொகை பெருகினாலே மதகலவரம் உருவாகும் என்ற நிலை: துலாகர் ஹௌரா மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற் மற்றும் வியாபார ஸ்தலமாகும். கொல்கொத்தாவிலிருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது. சுமார் 45% முஸ்லிம்கள் உள்ளாதால், 2013லிருந்து, மத-கலவரங்கள் அதிகமாகி வருகின்றன. 2013ல் மட்டும் 106 கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. பிறகு, 15-20 என்று குறைந்துள்ளன[1], ஆனால், கலவரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மம்தா ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, ஏழ்மை மற்றும் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி வைத்துக் கொண்டு தனது பலத்தை ஸ்திரமாக்கிக் கொள்ள முயன்று வருகிறார். பங்களாதேச முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் மேற்கு வங்காள எல்லைகள் மூலம் நுழைந்து, வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பரவி வருவது தெரிந்த விசயமே. முன்னர் அசாமில் இதுவே ஒரு பிரச்சினையாகக் கொண்டு அசாம் கணபரிஷத் 1980களில் போராடி ஆட்சிக்கு வந்தது. ஆனால், பிறகு அடங்கி விட்டது. மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் உள்-நுழைந்த அந்நிய முஸ்லிம்களுக்கு, ரேசன் கார்ட், ஓட்டர் கார்ட் என்று கொடுத்து ஊக்குவித்து, ஓட்டுவங்கியை வளர்த்தனர். இப்பொழுது, ஆதார் கார்டுடன் வாழ்ந்து வருகின்றனர், தொடர்ந்து ஊக்குவிப்பது திரிணமூல் காங்கிரஸ். இதனால், வளர்க்கப்பட்ட மூஸ்லிம்கள் இந்துக்களுக்குத் தொல்லைக் கொடுத்து வருகின்றனர்.

dulagarh-attacked-on-14-12-2016-rioters-in-action

மீலாது நபிக்கு அடுத்த நாள் ஊர்வலம் நடத்தி கலவரத்தை உண்டாக்கியது: டிசம்பர் 12, 2016 மீலாது நபி நிமித்தம் மேற்கு வங்க அரசு விடுமுறை அளித்தது. ஆனால், டிசம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் “ஈத்-இ-மிலத்-உன்-நபி” / மீலாது நபி ஊர்வலம் நடத்தியதில், முஸ்லிம் கும்பல், அப்பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டு இந்துக்களின் விடுகள் மற்றும் கடைகள் முதலியவை சூரையாடப் பட்டன. பொருட்கள் கொள்ளையிடப்பட்டதோடு தீயிட்டு கொளுத்தப் பட்டன.  இந்துக்கள் தங்களது பூஜை நேரத்தில், வேண்டுமென்றே, ஊர்வலம் நடத்தியதோடு, திட்டமிட்டு, ஆயுதங்களுடன் வந்து தாக்கி அவ்வாறு செய்துள்ளார்கள். முதலில் சில செய்திகள் வெளிவந்தாலும், வங்காள அரசின் அடக்குமுறைகளால், செய்திகள் வெளிவராமல் தடுக்கப்பட்டன. ஆனால், சமூக வலைத்தளங்களில், கலவரச் செய்திகள் பரவின. இருப்பினும், அரசு தொடர்ந்து கலவரம் நடந்ததை மறுத்து வந்துள்ளது. வி.பி. சிங் தான், மீலாது நபிக்கு அரசு விடுமுறை முதன்முதலில் அறிவித்தார் என்று, செக்யூலரிஸவாதிகள் பெருமையாகக் கூறுவர். இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத விடுமுறையை, இந்திய அரசியல்வாதிகள் அறிவித்துள்ளனர்.

dhulagarh_victims_are_terrified_and_worried_about_their_future

மார்கசிரிஷ பூர்ணிமாஅன்று மீலாது நபி ஊர்வலம் ஏன்?: டிசம்பர் 12ம் தேதி 2016 அரசு விடுமுறை தினமாக அறிவித்தது. அதாவது முஸ்லிம்களுக்கு அன்றுதான் கொண்டாட்டம், ஆனால், அடுத்த நாள் டிசம்பர் 13 அன்று முகமதியர் மீலாது நபி என்று ஊர்வலம் என்று தெருக்களில் வலம் வந்தனர். அதாவது 12ம் தேதி ஊர்வலம் போகாமல், அடுத்த நாள் போனது எப்படி என்று தெரியவில்லை. உள்ளூர் வழக்கம் தெரிந்த நிலையில், போலீஸார் எப்படி அனுமதி கொடுத்தனர் என்பதும் கேள்விக்குரியதாக உள்ளது. சினிமா பாடல்களை சப்தமாக ஒலித்துக் கொண்டு தெருக்களில் சென்றனர். அன்று “மார்கசிரிஷ பூர்ணிமா” [Margashirsha Purnima] என்ற மங்களகரமான நாளை அன்று இந்துக்கள் கொண்டாடினர்[2]. 15ம் தேதியிலிருந்து “தனுர் மாதம்” தொடங்குகிறது என்பதால், தங்களது நோன்பு, விரதம் முதலியவற்றைத் தொடங்குவார்கள். பாரம்பரிய வங்காள மக்கள், இத்தகைய விழாக்கள், சம்பரதாயங்கள் முதலியவற்றை விடாமல் கொண்டாடி வருகின்றனர். அதனால், தங்களது சடங்குகளுக்கு தொந்தரவாக இருப்பதால், சப்தத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை.

dulagarh-attacked-on-14-12-2016-rioters-and-police

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூக்குரலிட்டு இந்துக்கள் வீடுகள்-கடைகள் தாக்கப்பட்டது: “செக்யூலரிஸம்”, சமதர்மம் மற்றும் உரிமைகள் பேசப்படும் இந்தியாவில் முஸ்லிம்கள் அதை மதிக்காமல் கலவரத்தை ஏற்படுத்த தீர்மானமாக இருந்தனர் போலும். இதை சாக்காக வைத்துக் கொண்டு, ஊர்வலத்தினர், இந்துக்களோடு வாய்சண்டை இழுத்து, கேலிபேசி, கிண்டலடித்து, திட்டியுள்ளனர். வாக்குவாதம் கைசண்டையாகி, முகமதியர் இந்துக்களைத் தாக்கியுள்ளனர். கலவரமாகியபோது, நாட்டு வெடிகுண்டுகளை வீடுகள் மற்ரும் கடைகள் மீது வீசினர். டிரம்களில் கெரோஸின் மற்றும் பெட்ரோல் முதலியவற்றையும் எடுத்து வந்து தீயிட்டுக் கொளுத்தினர்[3]. இக்கலவரம், டிசம்பர் 14ம் தேதியும் தொடர்ந்தது.  இதெல்லாம் திட்டமிட்டபடி நடந்த தாக்குதல் என்று தெரிகிறது. தாக்கியவர்களில் சிலர், “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்றெல்லாம் கத்தியதாக கூறினார்கள்[4]. முஸ்லிம்களின் இந்த மனோபாங்கு தான் விசித்திரமாக இருக்கிறது. 1947ல் தனிநாடு கொடுத்தப் பிறகு, இந்தியாவில் பிறந்து, வளர்ந்து வருபவர்கள் எப்படி, இவ்வாறு கத்த முடியும்? இக்கால முஸ்லிம்களுக்கு அதுகூட தெரியாதா அல்லது தெரியாமல் வளர்க்கப்பட்டுள்ளனரா? மேலும் அவர்களை கவனித்த, பாதிக்கப்பட்ட இந்துக்கள், “அவர்கள்” அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்றும் தெரிவித்தனர். அதாவது, கலவரத்திற்கு, வெளியிலிருந்து கூட்டி வரப்பட்டது தெரிகிறது.

dulagarh-attacked-on-14-12-2016-victim-explains-times-now

வீடுகளை சூரையாடி, தீயிட்டு கொளுத்த முயன்ற போது, செய்யாதே என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோதும், கொளுத்திவிட்டுச் சென்றது[5]: நாட்டு வெடிகுண்டுகள் போட்டு தாகியதை பாதிக்கப்பட்டவர் “டைம்ஸ் நௌ” டிவி பேட்டியில் கூறினார். மேற்கு வங்காள கலவரங்களில் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தப் படுவது, ஒரு தொடர்ந்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. 10-15 முறை வெடிக்க வைத்ததாக கூறினார். அவர்கள், வீடுகளை சூரையாடியப் பிறகு, தீயிட்டு கொளுத்த முயன்ற போது, அவ்வாறு செய்யாதே என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டபோதும், விடாமல், பெட்ரோல்-கிரோஸின் ஊற்றி கொளுத்தி விட்டு சென்றனர். அதனால், இந்துக்களது வீட்டுப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. வந்தவர்கள் “புதியவர்களாக” தென்பட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டினார். அருகில் இருந்த கார்கள்-லாரிகள் முதலியவற்றையும் விட்டு வைக்கவில்லை. பாதிக்கப்பட்ட இந்துக்கள், தாங்கள் மீளமுடியாத அளவுக்கு அழித்துவிட்டு சென்றுள்ளனர் என்று புலம்பினர்.

© வேதபிரகாஷ்

03-01-2017

Kerala, Kashmir becoming hub of ISIS

[1] Merchant, Minhaz (28 December 2016). “How Mamata tore the secular fabric of Bengal into shreds”Daily Mail. Retrieved 31 December 2016

[2] Daily Mail-UK, How Mamata tore the secular fabric of Bengal into shreds, by Minhaz Merchant, Published: 23:58 GMT, 28 December 2016 | Updated: 10:50 GMT, 31 December 2016

[3] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4071842/How-Mamata-tore-secular-fabric-Bengal-shreds.html

[4] India Today, Rather than protecting, Bengal polica gave two minutes to flee our own homes: Dhulagarh riot victims tell India Today, Indrajit Kundu | Posted by Ashna Kumar, December 28, 2016 | UPDATED 13:25 IST.

[5] http://www.timesnow.tv/india/video/times-now-report-from-dhulagarh-the-story-india-isnt-reporting/53364

அலிகர் முஸ்லிம் பல்கலை மாணவர்கள் ஏன் வன்முறையில் ஈடுபடுகின்றனர் – இஸ்லாம் ஏன் அவர்களை “அமைதியாக” வைத்திருக்கவில்லை?

ஏப்ரல் 25, 2016

அலிகர் முஸ்லிம் பல்கலை மாணவர்கள் ஏன் வன்முறையில் ஈடுபடுகின்றனர் – இஸ்லாம் ஏன் அவர்களை “அமைதியாக” வைத்திருக்கவில்லை?

rk24amuviolence3

Burnt documents seen at the proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

 

பல்கலைக்கழகம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது:23-04-2016 சனிக்கிழமை இரவன்று அலிகர் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் வெளி-மாணவன். ‘மாணவர் விடுதியில் தங்கியுள்ள, வெளிநபர்களை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அப்படியென்றால், வெளியாட்கள் ஏன், எப்படி, எவ்வாறு மாணவர்கள் விடுதியில் வந்து தங்குகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த மோதலில் காயமடைந்த மற்றொரு இளைஞர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆக உயிரிழந்த இவர்கள் மெஹ்தப் (22) மற்றும் மொஹம்மது வாகப் (18) [Mehtab (22) and Mohammad Waqif (18) ] என்று தெரியவருகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் கோவிந்த் அகர்வால் என்கின்ற போலீஸ் அதிகாரி[1].

rk24amuviolence5

A burnt two wheeler at the proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

நுழைவு தேர்வு நடைபெறுகின்ற வேளையில் நடந்த கொலைகள், கலவரம்:த்தகைய கலவரம், தீவைப்பு, கொலை போன்ற சூழ்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (24-04-2016) அன்று பல்கலைக்கழகத்தின் பொறியல் கல்லூரிக்கான நுழைவு தேர்வு பலத்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சுமார் 22,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். நாளை திங்கள் கிழமை மாணவர்கள் கலவரம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால், மத்திய பாதுகாப்புப் படையினர் வளாகத்தில் குவிக்கப்பட்டு பதட்டம் நீடிக்கிறது. குண்டுபட்ட மற்றவரான வாசீப் இப் பல்கலையின் மாணவர் அல்ல. அவரது உயிருக்கும் ஆபத்து நீடிப்பதால் அவர் டெல்லியின் கங்காராம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்[2].

rk24amuviolence6

A burnt vahicle at the proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

இறப்பையும் வைத்து கலவரத்தை உண்டாக்கும் இஸ்லாமிய முறை: அதாவது, இறப்பை வைத்துக் கொண்டும் கலவரத்தை உருவாக்கும் யுக்தியை முஸ்லிம்கள் செய்து வருவதை மறைமுகமாக எடுத்துக் காட்டப்படுகிறது. காஷ்மீரத்தில் முதலில் ஒரு நொண்டி சாக்கை வைத்து கலவரத்தை ஆரம்பிப்பர். அதில் யாராவது இறந்தால், அந்த உடலை எடுத்துச் செல்ல ஆர்பாட்டம் செய்வர். பிறகு அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று ரகளை செய்ய திட்டமிடுவர். அதனைப் புதைத்தப் பிறகு, ஊர்வலமாகத் திரும்பி வரும் போது, இன்னொரு கலவரத்தை செய்வர். “கல்லடி கலாட்டா” போன்ற யுக்திகளைப் பின்பற்றி சிறுவர்கள் மற்றும் பெண்களை முன்னிருத்து, அத்தகய கலவரங்களை மேற்கொள்வர். இதனால், “ராபிட் ஆக்ஸன் போர்ஸ்” என்ற கலவரத்தை அடக்கும் போலீஸார் வரவழைப்பட்டு, பாதுகாப்பாக “வஜ்ரா” போன்ற வண்டிகள் நிற்க வைக்கப்பட்டுள்ளன.

rk24amuviolence9

Rapid Action Force (RAF) deployed inside the campus, after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

முஸ்லிம் பிரச்சினையை பொதுப்பிரச்சினை மற்றும் அரசியலாக்கும் போக்கு: துணை வேந்தர் ஜமீர் உத்தீன் ஷா [Vice Chancellor Lt Gen Zameer Uddin Sha] இந்த மோதலை கடுமையாகக் கண்டித்துள்ளார். மற்ற விசயங்களுக்கு இவர் வீரதீரமான அறிக்கைகள் எல்லாம் விடுவார், ஆனால், இப்பிரச்சினையில் அடக்கியே வாசித்துள்ளார். ஆனால், இவரும் செய்திகளில் வந்துள்ள விசயங்களைத் தவிர வேறு எதையும் கூறவில்லை. வளாகத்தில் இணைதளவசதியும் முடக்கப்பட்டுள்ளது. அதாவது, இணைதளங்களில் தவறான செய்திகள் மற்றும் வதந்திகளைப் பரப்பி கலவரங்களை உண்டாக்குவது, சமீப காலத்தில் அடிப்படைவாத முஸ்லிம்களின் யுக்தியாக இருந்து வருகிறது. இப்பொழுதே, அலிகர் பல்கலைக்கழகத்தின் நிலை மறந்து, இதற்கும் பிஜேபி அரசு, மோடி, ஆ.எஸ்.எஸ் தான் காரணம் என்று சிலர் ஆரம்பித்துள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெயர்கள் எல்லாமே முஸ்லிம்கள் என்பதனால், அடக்கி வாசிக்கின்றனர்.

rk24amuviolence12

Rapid Action Force (RAF) deployed inside the campus, after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

ஆஸம்கர் நகர், சம்பல் நகர், காஜிப்பூர் மாணவர்களிடையே பிரச்சினை என்ன?: எல்லோருமே முஸ்லிம்கள் என்றால், இஸ்லாம் ஏன் அவர்களை இணைக்கவில்லை. இஸ்லாம் என்றால் அமைதி என்றால், ஏன் அவர்களுக்கு இஸ்லாம், அமைதியைக் கொடுக்கவில்லை. இரு முஸ்லிம் மாணவர்கள் ஏன் சுட்டுக் கொண்டு இறக்க வேண்டும். நாளைக்கு இவர்களையும் ஷஹீத் என்று அறிவித்து பிரச்சினையை முடித்து வைப்பார்களா? “ஈகோ பிரச்சினை” என்று ஆங்கில ஊடகங்கள் நாஜுக்காகக் கூறுகின்றன. அப்படியென்ன முஸ்லிம்களுக்குள் ஈகோ / தான் என்ற அகம்பாவம், திமிர் வரமுடியும்? அல்லாவுக்கு முன்னர் எல்லோரும் சமம் என்றால், எப்படி அத்தகைய மாற்று எண்ணங்கள், பிரிவினை சிந்தனைகள், சகோதரனை அடிக்க வேண்டும், துப்பாக்கி வைத்து சுட வேண்டும் போன்றவை வரமுடியும்? அப்படியென்றால் தவறு எங்கு இருக்கிறது? அதனை கண்டுபிடித்து தடுக்க வேண்டாமா? இன்றைக்கு இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள், அவர்களது தீவிரவாத கலவரங்கள், வன்முறைகள், குண்டுவெடிப்புகள். முதலியன பெரிய அச்சுருத்தலாக இருந்து வருகின்றன. மனித சமுதாயத்திற்கே எதிராக செயல்படும் நிலையும் அறியப்பட்டு விட்டது.

AMU VCமுஸ்லிம்கள் ஏன் முஸ்லிம்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்?: ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் முஸ்லிம்களையே கொன்று வருகின்றனர். பிறகு, இஸ்லாம் பெயரில் என்னதான் நடக்கிறது என்ற புதிர், குழப்பம் மற்றும் சந்தேகங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம் இஸ்லாம் என்றால், இனி அதனை சீர்திருத்த வேண்டும் அல்லது விட்டுவிடும் நிலைமையும் ஏற்படலாம். மனிதர்கள், “மனிதர்கள்” என்று மதிக்கப்படாமல், “முஸ்லிம்கள்” மற்றும் “காபிர்கள்” என்று பிரித்து வைத்து, நாங்கள் எல்லோரையும் “முஸ்லிம்கள்” ஆக்குவோம் இல்லை ஒழித்துக் கட்டுவோம் என்றால் அது மதம் ஆகாது. இது சாதாரண முஸ்லிம் மக்களுக்கும் புரிந்து விட்டது. இருப்பினும், அடிப்படைவாத, பயங்கரவாத, தீவிரவாத சக்திகள் அவர்களை மிரட்டி, அடக்கி வைத்துள்ளன. இந்நிலை மாறினால் தான் அந்த அடக்கப்படும் முஸ்லிம்களுக்கு வாழ்வு ஏற்படும் இல்லை அழிவுதான் என்று அந்த இயக்கங்களே தெளிவாக்கி வருகின்றன. பல்கலைக்கழகங்கள் இப்படி தொடர்ந்து, கலவர நிலை, துப்பாக்கி சூடு, தேச-விரோத ஆர்பாட்டங்கள் என்ற சூழ்நிலைகளில் செயபட்டுக் கொண்டிருந்தால், மாணவர்களின் படிப்பு முதலியவை என்னாகும் என்று யோசிக்க வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

25-04-2016

[1]http://www.dinamani.com/india/2016/04/25/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/article3398102.ece

[2]http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8516087.ece

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் இருவர் சாவு கலவர நிலையில் அலுவலகம், ஆவணங்கள், வண்டிகள் தீக்கிரை!

ஏப்ரல் 25, 2016

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் இருவர் சாவு கலவர நிலையில் அலுவலகம், ஆவணங்கள், வண்டிகள் தீக்கிரை!

Aligarh கில்லிங் 2

அலிகர் பல்கலைக்கழகத்தின் சித்தாந்த நிலைப்பாடும், மாணவர்கள் பிளவுப்பட்டிருக்கும் நிலையும்: உபியின் அலிகர் நகரில் அமைந்துள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம், முஸ்லிம்கள் கல்வி நிறுவனம் ஆகும். சமீபத்தில் இது “சிறுபான்மையினர்” பல்கலைக்கழமாகக் கருத முடியாது போன்ற செய்திகள் வெளி வந்தன. பொதுவாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிக்கும் சிந்தனைகள் கொண்ட கல்வி நிறுவனமாக உள்ளது. இர்பான் ஹபீப் (Hirfan Habib) போன்ற இடதுசாரி, “மார்க்சீய சரித்திவியல் சிந்த்தாந்தம்” (Marxist ideology) கொண்ட சரித்திராசிரியர்களின் கூடாரமாகவும் இருந்து வருகிறது. “இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ்” (Indian History Congress) நடக்கும் பொழுது, “அலிகர் ஹிஸ்டாரியன்ஸ் போரம்” (Aligarh Historians Forum) என்ற பெயரில் அம்மாநாடு நடந்து கொண்டிருக்கும் போதே, இணையாக கருத்தரங்களம் நடத்தி தங்களது “மார்க்சீய” சரித்திர-வரைவியல் முறையை (Marxist historiography) திணித்து வருகின்றனர். இவ்வாறு, இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் மார்க்சீயம் இரண்டும் சேர்வதால், படிக்கும் மாணவர்களில் சித்தாந்த ரீதியில் பிளவு ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் அடிக்கடி காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பேசுவது, ஆர்பாட்டம் நடத்துவது, முஸ்லிம்களின் உரிமைகள் என்று கூட்டங்கள் போடுவது முதலியவை நடந்து வருகின்றன. மத்திய பல்கலைக்கழகமான இங்கு சுமார் 37,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

amu-story-vehicles burnt முஸ்லிம் மாணவர்களுக்கு இடையே கோஷ்டி பூசல், சண்டை, தகராறு: உத்தர பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில், மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், வன்முறை வெடித்தது[1]. இதில், முன்னாள் மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்[2]. உத்தர பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக, மாணவர் விடுதியில், முன்னாள் மாணவர்கள் பலர் விதிமுறைகளை மீறி தங்கியுள்ளனர்[3]. இதுதவிர, இரு மாணவர் கோஷ்டிகளுக்கு இடையில் பல்வேறு காரணங்களால் விரோதம் நிலவி வந்தது[4].  அவர்களுக்கு ஆதரவாக சில மாணவர்கள் செயல்பட்டு வரும் நிலையில், மற்றொரு பிரிவு மாணவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்[5]. இது தவிர இந்நிலையில் சனிக்கிழமை  இரவு (22-04-2016), இரு பிரிவு மாணவர்களும் பயங்கரமாக மோதினர்[6]. அப்போது, வளாகத்துக்குள் உள்ள”மும்தாஜ்’ என்ற பெயரிலான மாணவர் விடுதியில்  மோசீன் இக்பால் என்ற மாணவர் ஒருவரின் அறையை (எண்.12), மற்றொரு பிரிவினர் தீ வைத்து எரித்தனர்;  தாளாளர் அறை மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது மாணவர்கள் தீ வைத்து எரித்தனர்[7]. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களும் எரிக்கப்பட்டன[8]. தாளாளர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 28,000 மாணவர்களின் ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்திருக்கும் விவரங்களிலிருந்து, அவற்றை மீட்டு விடலாம் என்று நம்புகின்றனர்[9]. இதையடுத்து, இங்கிருந்து உயிர் தப்பிய பல்கலைக்கழகத்தில் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரியிடம் மோசீன் 9.30 அளவில் புகார் அளிக்கச் சென்றார். அப்பொழுது பைக்குகளில் சுமார் 30-40 மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்து சேர்ந்தனர்[10]. அப்போது, அந்தச் செய்தி வெளியே பரவியது. இதையடுத்து, ஆஸம்கர் நகரைச் சேர்ந்த மாணவர்களும், சம்பல் நகரைச் சேர்ந்த மற்றொரு மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர். காஜிப்பூர் மாணவர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்[11]. 30 முறை துப்பாக்கிகள் சுடப்பட்டன என்று குறிப்பிடப்படுகிறது[12].

amuviolence தீவைப்பு

A burnt building of Proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

துப்பாக்கி சுடும் வேலையை மாணவர்கள் எப்படி செய்தார்கள்?: இப்படித்தான் – அதாவது, மேலே குறிப்பிட்டப்படி, ஊடகங்கள் பொதுவாக செய்திகளில் சொல்லி வருகின்றன. மற்ற விசயங்களுக்கு “புலன்-விசாரணை ஜார்னலிஸம்” என்று எல்லா விசயங்களும் எங்களுக்குதான் தெரியும் என்பது போல புட்டு-புட்டு வைக்கும் ஊடகங்கள் இவ்வாறு செய்திகளை வெளியிடுவது தமாஷாகத்தான் இருக்கிறது. துப்பாக்கிகளை வைத்து சுட்டுக் கொண்டனர் என்றால், படிக்கும் மாணவர்களிடம் எப்படி துப்பாக்கிகள் வந்தன? போலீஸார் அதைப் பற்றி ஏன் விவரங்களைக் கொடுக்காமல் இருக்கின்றனர்? ஹைதராபாத் மத்திய பல்கலை, ஜே.என்.யூ, புனே பிளிம் இன்ஸ்டிடுயூட் என்றேல்லாம் வரும் போது, நேரிடையாக சென்று, மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோரையும் பேட்டிக் கண்டு விவரங்களை அள்ளி வீசினவே? இப்பொழுது அவ்வாறு ஏன் செய்யவில்லை? யார் தடுக்குகிறார்கள்? மோட்டார் சைக்கிள்களில் வந்தார்கள் என்றால், எண்களை வைத்து யார் என்று கண்டுபிடிக்கலாமே? உள்ளே நுழையும் போது, செக்யூரிடியில் அவ்விவரங்கள் பதிவாகி இருக்குமே? சரி, உள்ளே நடக்கும் நிகழ்சிகளை கண்காணிக்க வைத்துள்ள கேமராக்கள் என்ன விவரங்களைக் கொடுக்கின்றன?

rk24amuviolence1

Policemen stand next to the blood stains at Proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

துப்பாக்கிப் பிரயோகம் மாணவர்களல் நடத்தப் பட்டது: இந்நிலையில் சில மாணவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் துப்பாக்கியால், ஒருவருக்கு ஒருவர் சுட்டதில், முன்னாள் மாணவர் ஒருவர் பலியானார்; மேலும் இருவர் காயம் அடைந்தனர். தமிழ்.இந்து, “அப்போது அங்கும் வந்த அந்த மாணவர் கோஷ்டி புகார் செய்ய வந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் குண்டுபட்டு படுகாயம் அடைந்தனர்.” என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸும் இதனை “கேம்பஸ் கன்பைட்”, அதாவது வளகத்தில் நடந்த துப்பாக்கிச்சண்டை என்றெ குறிப்பிட்டுள்ளது[13]. ஆனால், தினத்தந்தி, “அலிகார் பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.” செய்தி வெளியிட்டுள்ளது[14]. தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவர்களின் வன்முறையை கட்டுப்படுத்த முதலில் கண்ணீர் புகை வீசினர். மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்தால் துப்பாக்கிச்சூடு நடத்தினர்[15]. இதில் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த கலவர சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பலியானவர் பெயர் மெஹ்தாப் / மக்தாப்[16]. இவர், பல்கலைக்கழகத்தில் இருந்து, ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்ட மாணவர். இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

© வேதபிரகாஷ்

25-04-2016

[1] மாலைமலர், உத்தரப்பிரதேசத்தில் அலிகார் பல்கலைக்கழகத்தில் கலவரம்துப்பாக்கி சூட்டில் மாணவர் பலி, பதிவு: ஏப்ரல் 24, 2016 11:19

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/24111926/1008139/Clash-between-two-student-groups-in-AMU-one-killed.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்.. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, By: Jayachitra, Updated: Sunday, April 24, 2016, 10:43 [IST]

[4] தமிழ்.இந்து, அலிகர் பல்கலை. மாணவர் கோஷ்டி மோதலில் இருவர் பலி; பதற்றம்: மத்திய பாதுகாப்பு படை குவிப்பு, ஆர்.ஷபிமுன்னா, Published: April 24, 2016 14:16 ISTUpdated: April 24, 2016 18:13 IST.

[5] http://tamil.oneindia.com/news/india/amu-clash-one-student-killed-proctor-office-vehicles-torched-252013.html

[6] தினமலர், அலிகார் பல்கலையில் வன்முறை:முன்னாள் மாணவர் படுகொலை, ஏப்ரல்.24. 2016.20.02.

[7] நியூஸ்7.தமிழ், பல்கலைகழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் பலி, Updated on April 24, 2016; http://ns7.tv/ta/fight-among-students-university-and-student-died.html

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1508546

[9] http://indiatoday.intoday.in/story/violence-in-amu-campus-2-students-killed-in-gun-battle-28000-student-records-gutted-in-fire/1/650495.html

[10] http://indianexpress.com/article/india/india-news-india/amu-clash-one-student-killed-proctor-office-vehicles-torched-2767734/

[11] Sources in the university told The Hindu at the clash was between students from Ghazipur, Sambhal and Azamgarh. “The tension between students and former students belonging to Sambhal, Azamgarh and Ghazipur has been simmering for quite some time now. And the violence which we saw on Saturday was result of an ongoing war of ego between these warring groups of regional students,” said a university official.

http://www.thehindu.com/news/national/other-states/exstudent-killed-in-amu-campus-clash/article8515953.ece

[12] At about 9.30 pm Saturday, Mohsin along with others reached the proctor’s office to lodge a complaint. “Meantime, a group of students belonging to a rival gang arrived on motorcycles. They were around 30 to 40 in number and were carrying weapons. After heated arguments, firing started from both the sides and went on for 15 minutes. At least 30 rounds were fired…we were helpless as the students were armed,” a member of the security staff, who was present at the spot, said.

[13] Indian express, Two killed in AMU campus gunfight, vehicles torched, Updated: April 25, 2016 1:53 am

[14] தினத்தந்தி, அலிகார் பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே மோதல்:போலீஸ் துப்பாக்கி சூட்டில் மாணவர் பலி , மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஏப்ரல் 24,2016, 12:38 PM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஏப்ரல் 24,2016, 12:38 PM IST

[15] http://www.dailythanthi.com/News/India/2016/04/24123829/1-killed-in-clashes-at-Aligarh-Muslim-University-proctors.vpf

[16] தினமணி, அலிகர் பல்கலை.யில் துப்பாக்கிச் சண்டை: 2 இளைஞர்கள் பலி, By அலிகர், First Published : 25 April 2016 12:31 AM IST

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (2)

ஜூலை 2, 2015

ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (2)

Ambur riot - police  attacked.

Ambur riot – police attacked.

அஸ்லம் பாஷா என்ற உள்ளூர் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு ஜவாஹிருல்லா மறுப்பு: கலவரத்தைத் தூண்டிவிட்டதில் அஸ்லம் பாஷா என்ற உள்ளூர் எம்.எல்.ஏவுக்கு தொடர்புள்ளதாக, போலீஸ் விசாரிக்க ஆரம்பித்துள்ளது[1]. அஸ்லம் பாஷா ஒரு முஸ்லிம் இளைஞனைத் தூண்டிவிட்டதாக சொல்லப்பட்டுகிறது[2]. ஆனால், ஜவாஹிருல்லா உள்ளூர்வாசிகள் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்கின்றனர். கலவரத்தின் போது, ஆம்பூர் எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா, அமைதி ஏற்படுத்த முயற்சி செய்தார். அவரை கலவர வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் மீது அவதுாறு வழக்கு தொடுப்போம். கலவரத்திற்கு முன், போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தி இருக்க வேண்டும். கலவரத்தில், பெண் போலீசார் உட்பட அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு, அவர் கூறினார். எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா, மாவட்ட செயலர் சுகூர் உட்பட பலர் உடனிருந்தனர்[3].

Ambur riot - police  attacked.2

Ambur riot – police attacked.2

உயிர் தப்புவதற்காக 2 கி.மீ., ஓடினேன் – பெண் பொலீஸ் கதறல்! ஆம்பூரில் கலவரத்தின்போது, கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, பெண் போலீஸ் ஒருவர், 2 கி.மீ., துாரம் ஓடி, உயிர் பிழைத்துள்ள தகவல், வெளியாகி உள்ளது[4]. வேலுார் மாவட்டம், ஆம்பூரில், வாலிபர் ஒருவர், மர்ம மரணம் அடைந்ததையொட்டி, கடந்த மாதம், 27ம் தேதி இரவு, பெரிய அளவிற்கு கலவரம் வெடித்தது. இதில், 50க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். ஆம்பூர் ஆயுதப்படை போலீஸ் விஜயகுமார், 34, கால், தொடை, வயிறு, கழுத்து, தொண்டை, கை மற்றும் தோள்பட்டையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு, தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். கலவரம் குறித்து, விஜயகுமார் கூறியதாவது[5]: “சம்பவம் நடந்த, 27ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, ஆம்பூர் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, 300க்கும் மேற்பட்ட கலவரக்காரர்கள், என்னை சூழ்ந்து, கத்தியால்சரமாரியாக குத்தினர்சரமாரியாக தாக்கினர் – அப்போது, அங்கு வந்த, இரண்டு பெண் போலீசாரையும் அடித்து உதைத்தனர். அவர்கள், உயிர் பிழைக்க தப்பி ஓடிய போதும், கலவர கும்பல் அவர்களை துரத்திச் சென்று தாக்கியது. இதை பார்த்த நான், படுகாயத்துடன் இருந்தாலும், அந்த பெண் போலீசாரை காப்பாற்ற போராடினேன். இதனால், கலவர கும்பல், என்னை கற்களாலும், தடியாலும் தாக்கினர். அப்போது, ஒரு கும்பல் வந்து, ‘இது எங்கள் கோட்டை; நீங்கள் எப்படி, இங்கு வரலாம்எனக்கூறி தாக்கினர். அதன்பின், பாதுகாப்புக்கு வந்த, போலீசார் எங்களை மீட்டனர்”, இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் காயம்

போலீசார் காயம்

காரை மடக்கிகாஞ்சிபுரம் ஆயுதப்படையைச் சேர்ந்த மல்லிகா கூறியதாவது[6]: ஆம்பூரில் கலவரம் நடக்கும் போது, கற்களால் தாக்கியவர்களை, சக போலீசாருடன் சேர்ந்து விரட்டினேன். இதை பார்த்த ஒரு கும்பல், என்னை தடியால் தாக்கியது. அவர்களிடமிருந்து தப்பிக்க, 2 கி.மீ., துாரம் ஓடி, வழியில் வந்த காரை மடக்கி, அதில் ஏறி உயிர் தப்பினேன். கண்ணில் பட்ட போலீசாரை எல்லாம், கலவர கும்பல் சரமாரியாக தாக்கினர். அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். திருவண்ணாமலை ஆயுதப்படையைச் சேர்ந்த ரமேஷ் கூறியதாவது: என் சர்வீசில், நிறைய கலவரங்களை பார்த்திருக்கிறேன். கலவரம் செய்பவர்களை தடியால் அடித்தால், பயந்து ஓடுவர். அதைப் போலத்தான், இந்த கலவரத்தை நினைத்தேன். ஆனால், கலவரம் செய்தவர்கள், பயங்கர ஆயுதங்களுடன் எங்களை விரட்டினர். போலீசார் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், எங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஓட ஓட விரட்டி… இதனால், கலவர கும்பல், எங்களை ஓட ஓட விரட்டி தாக்கினர்; நாங்களும் அடி வாங்கிக் கொண்டு, திரும்ப ஓடி வந்து விட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். கலவரத்தை அடக்குவதற்காக, வேலுார், தி.மலை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார், ஆம்பூர் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்படி, ஆம்பூர் சென்றவர்களில், கடுமையான தாக்குதலுக்கு உள்ளான, 50க்கும் மேற்பட்ட போலீசாரில், இவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_012

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_012

பெண் போலீஸ் என்று கூட பார்க்காமல், என் சட்டையை கழற்ற வந்தனர்; சிலரை மானபங்கம் செய்ய முயற்சித்தனர்: ஆம்பூரில் கலவரம் நடந்த பகுதிகளை, மனித நேய மக்கள் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான, ஜவாஹிருல்லா, நேற்று பார்வையிட்டார். கலவர கும்பல் தாக்கியதில், படுகாயம் அடைந்து, வேலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீசாரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, சிகிச்சை பெற்று வரும் பெண் போலீசார், கோபமாக, ஜவாஹிருல்லாவைப் பார்த்து, பெண் போலீஸ் என்று கூட பார்க்காமல், என் சட்டையை கழற்ற வந்தனர்; சிலரை மானபங்கம் செய்ய முயற்சித்தனர். கத்தியால் வெட்டினர்; தடியால் அடித்தனர்; கற்களால் தாக்கினர். ஒரு பெண் போலீசின் சட்டையை கிழித்துள்ளனர்; இதெல்லாம் நியாயமா என, ஆவேசமாக கேட்டனர். இத்தகைய செய்தி வந்த பிறகுக்கூட பெண்ணிய வீராங்கனைகள் அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. சாதாரணமான விசயங்களுக்கு பிருந்தா காரத் இத்யாதிகள் தங்களது கருத்துகளை அள்ளி வீசுவர், ஆனால் இப்பொழுது……………..அதே மாதிரி அந்த குஷ்புவையும் காணவில்லை.

ஆம்பூர் - தினமலர் - 02_07_2015_002_015

ஆம்பூர் – தினமலர் – 02_07_2015_002_015

ஆம்பூர் கலவரத்தில் தவறு நடந்து விட்டது‘ – ஜவாஹிருல்லா மன்னிப்பு: ஆம்பூர் கலவரத்தில் படுகாயம் அடைந்து, சிகிச்சை பெறும் போலீசாரிடம், மனித நேய மக்கள் கட்சி தலைவர், ஜவாஹிருல்லா மன்னிப்பு கேட்டார். தவறு நடந்துவிட்டது இதை கேட்ட, ஜவாஹிருல்லா, ‘தவறு நடந்து விட்டது; நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என, சிகிச்சை பெறும் ஒவ்வொரு போலீசாரிடமும் சென்று, மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பின், அவர், நிருபர்களிடம்கூறியதாவது: ஜமில் அகமது மரணத்துக்கு காரணமான இன்ஸ்பெக்டர் பிரேம்ராஜ், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். இதில், சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆம்பூரில் நடந்த கலவரத்தை, சில விஷமிகள் முன்னின்று நடத்தியுள்ளனர். கலவரம் செய்த வன்முறை கும்பல், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்பட்டுள்ளனர். அவப்பெயரை ஏற்படுத்த சதி…. தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை, மக்களிடம் நல்லிணக்கம் ஏற்படுவதையே விரும்புகிறது. அரசிடம், எங்கள் கட்சி மீது அவப்பெயரை ஏற்படுத்தி தர, சிலர் முயற்சிக்கின்றனர். கலவரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளவர்களில் அப்பாவிகளும் உள்ளனர்; அவர்களை அரசு விடுதலை செய்ய வேண்டும்.

போலீசார் தாக்கப்படல் - விகடன் போட்டோ

போலீசார் தாக்கப்படல் – விகடன் போட்டோ

முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை? முஸ்லிம்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்த எந்த முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று வெளிப்படையாக தெரிவிக்க வேண்டியதுதானே? இல்லை, இவ்வாறு சொல்லி தப்பித்துக் கொள்ளப்பார்க்கின்றனரா? கலவரம் செய்த வன்முறை கும்பல், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்றால், கொலைவெறி பிடித்தவர்கள் இருந்தார்களே, அவர்களை பைத்தியங்கள் என்று சொல்லி தப்பிக்க தூபம் போடுகிறாரா? கலவரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளவர்களில் அப்பாவிகளும் உள்ளனர் என்று சேர்த்து சொல்லியிருப்பதையும் கவனிக்க வேண்டும். இத்தனை நாசத்தை உண்டாக்கி விட்டு, போலீஸ் நிலைய, ஜீப்புகள் மற்றும் போலீஸ்காரர்களையும் தாக்கி விட்டு, கலவரம் செய்த வன்முறை கும்பல், மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்றால் என்ன அர்த்தம்? முஸ்லிம்களுக்கு அத்தகைய நிலைமை எதனால், ஏன் ஏற்படும் என்பதனையும் ஒன்று அவர்களே விளக்கவேண்டும் அல்லது மற்றவர்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

ஆம்பூர் கலவரம் - 30_06_2015_011_003

ஆம்பூர் கலவரம் – 30_06_2015_011_003

போலீஸ் ஜீப் எரித்தவர்கள் கைது: ஆம்பூரில் நடந்தது கலவரம் என்பதை விட, போர்க்களம் என்றே சொல்ல வேண்டும். கலவரக்காரர்கள், கத்தி, கற்கள், தடியால் தாக்கினர். அவர்களிடம் துப்பாக்கி இருந்திருந்தால், ஒரு போலீஸ்காரர் கூட, உயிருடன் வீடு திரும்பி இருக்க முடியாது. இருதயராஜ், போலீஸ்காரர், காஞ்சிபுரம். 113 பேர் கைது ஆம்பூர் கலவரம் தொடர்பாக, இதுவரை, 113 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். கலவரம் நடந்தபோது, ஆம்பூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகுந்து, அங்கிருந்த ஜீப், ஆம்பூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப் ஆகியவற்றை, கலவர கும்பல், தீ வைத்து கொளுத்தியது. இது தொடர்பாக, ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆம்பூர் கே.எம்.நகரைச் சேர்ந்த கயம், 20, அக்பர், 23, சபீர், 26, சலீம், 22, ஆகிய, நான்கு பேரை, நேற்று கைது செய்தனர்.

பவித்ராவை தேடுகிறது தனிப்படை! வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த,குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த இளம்பெண் பவித்ரா, 23, காணாமல் போனது தொடர்பாக, அவரது கணவர் பழனி கொடுத்த புகாரின்படி, பள்ளிகொண்டா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கில் சம்பந்தப்பட்ட பவித்ரா, எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. இவரை தேடும் பணியில், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், கோவிந்த சாமி தலைமையில், இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், பவித்ராவின் புகைப்படம் அனுப்பப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் பஸ் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில், பவித்ரா புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்களை ஒட்டவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தனிப்படை போலீசார் தெரிவித்தனர். ஒரு பெண் காணவில்லை என்பதைப்பற்றியும் பெண்ணிய வீராங்கனைகள் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. நீதியை கலவரத்தால், வன்முறையால் அடைய முடியும் என்பது விசித்திரமான தத்துவம் தான். முசபர்நகர் கலவரமும் இதே பாணியில் ஆரம்பித்தது என்பதனை நினைவு கொள்ள வேண்டும். இங்கு வேண்டுமானால், இன்னொரு கோயம்புத்தூர் போல ஆகக்கூடாது என்று அறிவுஜீவிகள் சொல்லலாம், ஆனால், இருக்கும் முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைக்கும் பிரச்சினையை சரிசெய்ய வேண்டும். ஆம்பூர், வாணியம்பாடி, வேலூர் முதலிய தோல் தொழிற்சலைகளில் இந்து பெண்கள் மதம் மாற்றப்படுவது நடந்து வருகின்றது. எனவே பிரச்சினை பெரிதாகாமல் இருக்க வேண்டும்.

வேதபிரகாஷ்

01-07-2015

[1] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Police-Probe-Role-of-MLA-in-Ambur-Riot/2015/06/29/article2891992.ece

[2] New Indian express, Police Probe Role of MLA in Ambur Riot, By J Shanmugha Sundaram, Published: 29th June 2015 06:10 AM;  Last Updated: 29th June 2015 06:10 AM.

[3] தினமலர், உயிர் தப்புவதற்காக 2 கி.மீ., ஓடினேன்!, நமது நிருபர் குழு 01-07-2015.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1286934

[5] http://www.newindianexpress.com/states/tamil_nadu/Cops-Recall-Horror-During-Ambur-Clash/2015/07/02/article2897905.ece

[6] தினமலர், உயிர் தப்புவதற்காக 2 கி.மீ., ஓடினேன்!, நமது நிருபர் குழு 01-07-2015.

பொய்மையுடன் மாற்றப்பட்டப் புகைப்படங்கள், தூண்டுகின்ற அபத்தமான விளக்கங்கள், கலவரத்தை ஏற்படுத்தும் எஸ்.எம்.எஸ்கள், திட்டமிட்டு நடத்தப் பட்ட கலவரம்!

ஓகஸ்ட் 14, 2012

பொய்மையுடன் மாற்றப்பட்டப் புகைப்படங்கள், தூண்டுகின்ற அபத்தமான விளக்கங்கள், கலவரத்தை ஏற்படுத்தும் எஸ்.எம்.எஸ்கள், திட்டமிட்டு நடத்தப் பட்ட கலவரம்!

பராஸ் அஹமது என்பவர் எப்படி வெவ்வேறு இடங்களில், காலக்கட்டங்களில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களை, மாற்றியமைத்து, திருத்தி பொய்யான விளக்கங்களுடன் “பேஸ்புக்” போன்ற இணைதளங்கள், எஸ்.எம்.எஸ்கள் மூலம் புரளிகளைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்று எடுத்துக் காட்டியுள்ளார்.

திபெத்திய துறவிகள், சீன பூகம்பத்தால் இறந்தவர்களுக்கு சேவை செய்யச் சென்றபோது எடுத்த புகைப்படத்திற்கு, “பௌத்தர்களால் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் உடல்கள் (பர்மா)” என்று போட்டு, விஷமத்தனமாகப் பொய்யைப் பரப்பியுள்ளார்கள்.

திபெத்திற்கு சீன ஜனாதிபதி வந்தபோது, ஒரு திபத்திய பௌத்த இளைஞன் எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்தபோது எடுக்கப்பட்டப் படம். அதுவும் அந்நிகசழ்சி நட்ந்தது தில்லியில், இந்தியாவில்.

ஆனால் பர்மாவில் பௌத்தர்கள் முஸ்லீமை இவ்வாறு எடுத்தபோது, அவனைக் காப்பாற்றாமல், ஊடகக்காரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விஷத்தனமாக “பேஸ்புக்கில்” படம் போட்டு, குரூரமான விளக்கத்தையும் கொடுத்துத் தூண்டியுள்ளார்கள்.

 

பர்மா முஸ்லீம்கள் தொடர்ந்து பௌத்தர்களால் பெருமளவில் கொல்லப்படும் காட்சி – விழிப்புணர்ச்சிற்காக இப்படத்தை மற்றவர்களுடன் தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும்“, என்று தலைப்பிட்டு இன்னொரு பொய்யானப் பிரச்சாரம்!

உண்மையில் அது 2004ல் பாங்காக்கில் போலீஸாருடன் மோதிய சுமார் 400 பேர் பிடிக்கப்பட்டு, தமது கட்டுப்பாட்டில் இருக்க, படுக்க வைக்கப்பட்டுள்ள காட்சி!

இதனை இப்பொழுது, அதுவும் பர்மாவில் நடதுள்ளதாக, அபத்தமாக புரளி கிளப்பியுள்ளாறர்கள்.

 

 

முஸ்லீம்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”  என்று தலைப்பிட்டு “பேஸ்புக்கில்” பரப்பிவிட்டுள்ள ஒன்னொரு கட்டுக்கதைப் படம்.

தாய்லாந்த்தில் 2003ல் எடுக்கப்பட்டப் படம். அப்பொழுது, கலவரத்தில் ஈடுபட்டவர்களைப் பிடித்து கட்டி வைத்து, படுக்க வைத்துள்ளனர்.

இப்படி பொய்யாக, துஷ்பிரச்சாரம், புனையப்பட்ட கதைகள், பொய்மாலங்கள், மாய்மாலக் கட்டுக்கதைகள், முதலியவற்ரை வைத்துக் கொண்டு, ஏன் படித்த முஸ்லீம் இளைஞர்கள் இவ்வாறு இணைதள தீவிரவாதத்தை வளர்க்க வேண்டும்.

இஸ்லாம் ஆபத்தில் உள்ளது என்று தூண்டி விட்டு, கலவரங்களை உண்டாக்க வேண்டும்?

http://www.pakalertpress.com/2012/07/16/muslims-killing-in-burma-and-social-media-manipulating-images/

http://farazahmed.com/

ராஸா அகடெமியின் தேசிய விரோதச் செயல்கள்!

ஓகஸ்ட் 14, 2012

ராஸா அகடெமியின் தேசிய விரோதச் செயல்கள்!

எல்லா விஷயங்களையும் அறிந்திருந்தே, ராஸா அகடெமி இந்த எதிர்ப்பு-போராட்டம் நடத்தியதோடல்லாமல், மற்றொரு கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் பத்திரிக்கைகளில் வருவதற்கு முன்பாகவே தங்களுக்கும், கடலவரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை வேறு வெளியிட்டிருக்கிறது.

ராஸா அகெடமியின் மற்ற தேசிய விரோத செயல்கள் என்று கீழ்கண்டவை எடுத்துக் காட்டப்படுகின்றன:

  • Raza Academy’s president Yusuf Raza was involved in provoking the Muslims during 2007 riot in Bhivandi and killing 2 policemen by setting them on fire. He was arrested also in the incident.
  • Raza Academy issued a Fatwa to kill Mr. Charles Moor, journalist of London-based renowned daily ‘Telegraph’ under the charge that he insulted Prophet Mohammad. The press statement is available at the Academy’s website.
  • In January 2012, Mr. Salman Rushdie was to attend a book exhibition in Jaipur, Rajasthan. To oppose him, the Academy declared that ‘he who will slap him with a shoe will be given a reward of Rs.1 lakh’.