2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டியதால் என்ஐஏவுக்கு ஒப்படைக்கப் பட்ட நிலை (4)
எஸ்.ஐ., உட்பட 27 பேருக்குவெகுமதி: கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில், சதிச்செயலுக்கு திட்டமிட்ட ஜமேஷா முபீன் பலியானார். வழக்கு விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய, 27 பேருக்கு, நேற்று டி.ஜி.பி., சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கினார்[1], என்று ஊடகங்கள் கூருகின்றன.. சம்பவம் நடந்த நாளன்று, உக்கடம் எஸ்.ஐ., செல்வராஜன், ஏட்டு தேவக்குமார், காவலர் பாண்டியராஜா ஆகியோர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், முதல் நிலைக் காவலர், மூத்த புகைப்படக் கலைஞர் ஒருவர் என மொத்தம் 34 பேருக்கு விருது வழங்கப்பட்டது[2]. இந்த பட்டியலில் உள்ளவர்கள் உளவுப்பிரிவு சைபர் கிரைம் சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது[3]. அதன் காரணமாகவே, ஜமேஷா முபீன், காரில் தொடர்ந்து செல்ல வாய்ப்பின்றி போயிருக்கலாம் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பெரியளவில் ஏற்பட இருந்த பாதிப்பை தடுக்க உதவியதாக, வாகன தணிக்கையில் ஈடுபட்ட எஸ் .ஐ., ஏட்டு, காவலருக்கு பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கப்பட்டது.
பந்தை குறிவைப்பது அரசியலாகிறது: வரும், 31ம் தேதி கோவை மாநகரில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த்தை முன்னிட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், வாகன போக்குவரத்துக்கும், அத்தியாவசிய பொருட்களின் வினியோகத்துக்கும் எந்தவித குறைபாடும் நேராமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று, மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர். நிச்சயமாக பொறுப்புடன் வேலை செய்த போலீஸாரை எல்லோருமே பாராட்ட வேண்டிய நிலையில் தான் உள்ளார்கள். இங்கு கூட, அந்த குண்டுவெடிப்பு செயல் அரைகுறையாக முடிந்ததால், யார் நடத்த வேண்டும் என்று நினைத்தானோ, அவன் மட்டும் பலியாகியுள்ளான் என்பது நோக்கத் தக்கது.
மத்தியஉளவுத்துறையும், தமிழகபோலீஸாரும்: தென்னிந்தியாவில், தீவிரவாதம் பரவி, சிறந்த முறையில், தொழிற்நுட்பத்துடன், பாண்டித்தியத்துடன் நடந்து கொன்டிருப்பதால், வழக்குகள் தொடர்ந்து நடந்து கொன்டிருக்கின்றன. மேலும், அரசியல்வாதிகளின் தொடர்பு மற்றும் இதர பணப் போக்குவரத்து, சட்டமீறல் போக்குவரத்துகளுடன் திறமையாக செயல் பட்டு வருவதால், வழக்குகளும் இழுத்தப் படுகின்றன. இதனால் தான், காவல்துறை இந்த தகவலை தெரிந்தவுடன், பாதுகாப்பை உஷார் செய்தவுடன், இவர் திடீரென மாயமாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[4]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[5]. தேசிய புலனாய்வு முகமை 2019ம் ஆண்டு ஜமேஷா முபினை நேரடியாகவே விசாரணைக்கு அழைத்தது. தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் இந்தியாவிலும், இலங்கையிலும் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் அவருக்கு இருக்கின்ற தொடர்பு சம்பந்தமான வலுவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவரை தமிழக காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தமிழகத்தை நாசமாக்கும் எண்ணத்துடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபட 96 பேர் தயாராக இருக்கின்றன என்ற பட்டியலை மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது என்றும், அதில் இவர் இடம்பெற்றிருந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது[6]. இதனை தமிழக அரசு எப்படி கோட்டைவிட்டது என்று கேள்வி எழுந்துள்ளது[7]. சம்பவம் நடந்த பிறகு தமிழக அரசு சார்பில் விளக்க அறிக்கை உட்பட பல்வேறு தகவல்கள் சரியாக பொதுமக்களிடையே சொல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பட்டியலில் 89 ஆவது நபராக ஜமேஷா முஃபின் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இதற்கு எதிர்வினை இருக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே எதிர்பார்த்து இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே இனி வரும் காலங்களிலாவது மத்திய உளவுத்துறை எச்சரிக்கைகளை தமிழக அரசு தன்னுடைய முழு கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமயமாக்கப்படும்தீவிரவாதம்: திமுக ஆட்சியில்லாமே “பாஸ்ட் ஃபுட்” ரேஞ்சில், வேகத்தில், அதிரடியாகத்தான் நடக்கும் போலிருக்கிறது. கார் காஸ் சிலிண்டர் விபத்து, தீவிரவாத கார் காஸ் சிலிண்டர் வெடிப்பாகி, கார் குண்டு வெடிப்பாகியுள்ள நிலையில், அமைதிகாத்த திராவிடிய ஸ்டாக் முதலமைச்சர், திடீஎன்று கூட்டம் கூடி, இந்த விபத்து வழக்கை என்.ஐ.ஏ.க்கு ஒப்படைக்க அறிவித்து விட்டார். போலீஸ் துறைக்கும் அவர் பொறுப்பேற்றுள்ளதால், இவ்வழக்கின் பாரத்தை, தீவிரவாதத்தை அறிந்து, மாற்றி விட்டார் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாது, சம்பந்தப் பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு வெகுமதி அளிக்கப் பட்டு பாராட்டும் தெரிவிக்கப் பட்டது. கோவையில் புதியதாக மூன்று காவல் நிலையங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. டிவி செனல்களிலேயே வாதவிவாதங்கள் படுஜோர். பேச்சாளர்கள், நேரிடையாக அரசியலாக்கி, அரசியல் மயமாக்கி, திராவிட மாடலா- குஜராத் மாடலா ரேஞ்சில் இறங்கி விட்டனர். திமுக-பிஜேபி நேரிடையாக இந்த மோதலில் ஈடுபட்டுள்ளன எனலாம்.
தமிழகத்தில்முதன்முதலாகஎன்.ஐ.ஏ. செய்துள்ளவழக்கு: முதன்முதலாக என்.ஐ.ஏ. ஏஜென்சி சென்னையில் அலுவலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போலீஸ் நிலையத்திற்கு சமமாகும். இது போன்ற மற்ற நிறுவனங்கள் இதனுடன் சேர்ந்து ஒத்துழைத்து செயல்பட வேண்டும். தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவை சமூக, பொருளாதார, மற்றவற்றை பெரிதும் பாதிப்பதால், இது மனித வாழ்க்கைக்கு எதிராக செயல்படுகிறது. மேலும், எல்லைகளைக் கடந்து, இவை செயல் படுவதால், மற்ற நாடுகளும் இவற்றை கடுமையாக எதிர்க்கிறார்கள். பதிவு செய்துள்ள இந்த முதல் வழக்கே தமிழகத்தின் இறுதி வழக்காக இருக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு, விருப்பமாகும், எனும் நிலையில், இத்தகைய கும்பல்கள் வேறருக்கப் பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..
[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவைகார்வெடிப்புவிவகாரம்… சிறப்பாகபணியாற்றியகாவலர்களுக்குடிஜிபிபாராட்டு!!, Narendran S, First Published Oct 27, 2022, 6:00 PM IST, Last Updated Oct 27, 2022, 8:42 PM IST.
[4] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்தசிக்னல்!.. கிடப்பில்போடப்பட்டதா ? கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.
2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகி மாநிலங்களை தாண்டும் நிலை (2)
24-10-2022 (திங்கட்கிழமை): ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். தீவிரவாத தொடர்புகளால் ஐந்து பேர் கைது செய்யப் பட்டனர். கார் வெடிப்பில் ஜமேசா உயிரிழந்த நிலையில், அவருக்கு உடைந்தையாக இருந்த –
முகமது தல்கா (25),
முகமது அசாருதீன் (23),
முகமது ரியாஸ் (27),
ஃபிரோஸ் இஸ்மாயில் (27),
முகமது நவாஸ் இஸ்மாயில் (26)
ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டமும் பாய்ந்தது.
ஜமேஷாமுபினின்உடலைஅடக்கம்செய்யஜமாத்நிர்வாகத்தினரும்முன்வரவில்லை: பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் 4-10-2022 அன்று மாலை உடல் ஒப்படைக்கப்பட்டது. சதிச் செயலுக்கான பின்புலத்தில் இருந்ததால், ஜமேஷா முபினின் உடலை அடக்கம் செய்ய கோவையைச் சேர்ந்த எந்த ஜமாத் நிர்வாகத்தினரும் முன்வரவில்லை[1]. இதுகுறித்து பேசிய ஜமாத் நிர்வாகி ஒருவர்[2], “நாங்கள்அமைதியையும், சமூகநல்லிணக்கத்தையும்விரும்பிகிறோம். இதனால்பலரும்அவரதுஉடலைஅடக்கம்செய்யஅனுமதிஅளிக்கவில்லைஎனதெரிவித்தார். மேலும், ஒருவரதுஉடலைஅடக்கம்செய்யவேண்டுமானால், ஏதாவதுஒருஜமாத்தில்உறுப்பினராகஇருக்கவேண்டும், அவர்உறுப்பினராகஇல்லைஎன்பதால், அவரைஅடக்கம்செய்யஅனுமதிகடிதம்கொடுக்கப்படவில்லை,” என கூறினார்[3]. இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் அவரது குடும்பத்தினரும், போலீஸாரும் தவித்தனர். பின்னர், போலீஸாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர், மனிதாபிமான அடிப்படையில் மேட்டுப்பாளையம் சாலை, பூ மார்க்கெட் அருகே உள்ள திப்புசுல்தான் பள்ளிவாசலில், லங்கர்கானா அடக்கஸ்தலத்தில் ஜமாத் மூலம் உடல் அடக்கம் செய்யப்பட்டது[4].
அமைதியைவிரும்பினால், இளஞர்கள்திசைமாறாமல்பார்த்துக்கொள்ளவேண்டும்: இதிலிருக்கும் மதநம்பிக்கையை விடுத்து, “குண்டு வெடிப்பு” கோணத்தில் அலசினால், மனைவி ஏன் கடிதம் கொடுக்கவில்லை, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. “பிரேதப்பரிசோதனைக்குபிறகுஅவரதுகுடும்பத்தினரிடம் 4-10-2022 அன்றுமாலைஉடல்ஒப்படைக்கப்பட்டது,” எனும் பொழுது, அவர்கள் நிச்சயமாக, பொறுப்பேற்று கடிதம் கொடுத்திருக்கலாம். கொரோனா காலத்திலேயே, முஸ்லிம் உடல்கள் எப்படியெல்லாம் புதைக்கப் படவேண்டும் போன்ற வாத-விவாதங்கள் வெளியாகியுள்ளன. அதே போல, கடந்த காலங்களிலும், தீவிரவாதிகள் உடல்கள் அடக்கம் செய்யப் பட்டுள்ளன. ஆதவே இதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று புரியவில்லை. “நாங்கள்அமைதியையும், சமூகநல்லிணக்கத்தையும்விரும்பிகிறோம், “ என்றால், அவ்வாறே முஸ்லிம் இளைஞர்கள் ஐசிஸ் போன்ற அமைப்புகளுடம் இணையாமல் இருக்க, பெற்றோர்-மற்றோர் கவனிக்கலாம், தடுக்கலாம், அறிவுரை கூறலாம். ஆனால், தொடர்ந்து நடக்கின்றன என்பதால், இதில் என்ன பிரச்சினை என்றும் புரியவில்லை.
முகமதுதல்கா(25): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்டவர்களில் முகமது தல்கா என்பவர் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் சகோதரர் நவாப்கான் என்பவரின் மகன் ஆவார். நவாப்கான் 1988 கோவை குண்டு வெடிப்பு வழக்கில், ஆயுள் கைதியாக மத்திய சிறையில் இருப்பவர். தடை செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தவர்[5]. நவாப் கான், கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து பரோலில் வந்தபோது யாரை எல்லாம் சந்திதார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது[6]. தல்கா மூலம் தான் முபினுக்கு கார் கை மாறியுள்ளது.
முகமதுஅசாருதீன்(23): உக்கடத்தைச் சேர்ந்தவன்; கைது செய்யப்பட்ட மற்றொருவரான முகமது அசாருதீன் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு இலங்கை வெடிகுண்டு வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர். அப்போது கேரளா சிறையில் இருந்த அசாருதீனை முபின் சந்தித்தத் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
முகமதுரியாஸ்(27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்; ஜமேசா முபின் நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.
ஃபிரோஸ்இஸ்மாயில்(27): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்; ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.
முகமதுநவாஸ்இஸ்மாயில்(26): ஜி.எம். நகரைச் சேர்ந்தவன்; ஜமேசா முபின் நண்பன். நண்பன். இஸ்லாமிய அடிப்படைவாதம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டவன்.
25-10-2022 (செவ்வாய்கிழமை): இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் உயிரிழப்பு, வெடிப்பொருள் தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். மேலும், உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்து பல கிலோ நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சோதனையில் 75 கிலோ வெடிப்பொருட்கள் – ரசாயனங்கள் கண்டெடுக்கப் பட்டன. கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்தபேட்டியில், ” முபினின் வீட்டில் கைப்பற்றப்ட்ட மூலப்பொருட்கள் குறைந்த திறனுடைய வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுபவையாகும். அவர் மேலும் நிறைய வெடிகுண்டுகளை தயாரிக்க திட்டமிட்டிருந்தது தெரியவருகிறது. அவரது வீட்டில் இருந்த மூலப்பொருட்களின் மாதிரிகளை தடயவியல் துறையினர் சோதனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதன் அறிக்கை வந்தால் மட்டுமே எந்த மாதிரியான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பது விசாரணையில் தெரியவரும்[7]. வெடிப்பொருள்களை முபின் எப்படி வாங்கினார் என்பதை கண்டறிய முயன்ற போது அவை ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்தது[8]. கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக வெடிபொருட்களை வாங்கி தனது வீட்டில் முபின் சேமித்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்றும்[9], முபின் தடை செய்யப்பட்ட பல இஸ்லாமிய இயக்கங்களின் அதிகாரபூர்வ இணையதளப் பக்கங்களை அவர் பார்வையிட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்[10].
[3] News.18.Tamil, ஜமோஷாமுபினின்உடலைஅடக்கம்செய்யமுன்வராதஜமாத்நிர்வாகங்கள்.. கோவையில்பரபரப்பு..!, Published by:Anupriyam K, First published: October 26, 2022, 08:52 IST; LAST UPDATED : OCTOBER 26, 2022, 08:52 IST.
2022 கோவை கார் குண்டு விபத்து, குண்டு வெடிப்பு ஆகி, தற்கொலை குண்டு வெடிப்பாகிய நிலை (1)
22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட்கிழமை) வரைநடந்துள்ளவைஎன்ன?: 24-10-2022 அன்று தீபாவளி என்பதால், துணிமணி, பட்டாசு, ஸ்வீட் வாங்க வேண்டும், எல்லோருமே ஊருக்குச் செல்ல வேண்டும், வாங்கியதை குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும், சந்தோஷமாக கொண்டாட வேண்டும், என்று லட்சக்கணக்கில் மக்கள் வாகனங்களில், பேருந்துகளில், ரெயில்களில் சென்று கொண்டிருந்தனர். அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப, பட்ஜெட்டில் தீபாவளி கொண்டாட திட்டத்துடன் இருப்பர், சென்று கொண்டிருந்தனர். ஆனால், அப்பொழுது, கோயம்புத்தூரில் சிலர் வேறு விதமாக திட்டம் போட்டிருந்தனர் போலும். வெகுஜன மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, ஊடகங்களில் வழக்கம் போல, தீபாவளி எதிர்ப்பு, பட்டாசு மறுப்பு, நாத்திக-நராகாசுரன் ஆதரவு செய்திகள் வந்து கொண்டிருந்தன[1]. பட்டாசு வெடிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரங்களில் தான் வெடிக்க வேண்டும், மீறினால், வழக்கு, புகார், தண்டனை என்றெல்லாம் பெரிய போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதாக செய்திகள்[2]. அதே நேரத்தில் பட்டாசு விற்பனை பெருக்க வேண்டும் போன்ற பிரச்சாரமும் இருக்கிறது. இன்னொரு பக்கமோ, கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது போன்ற செய்திகள்.
இந்நிலையில்தான்கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம்–செய்திகள்வரஆரம்பித்தன: 22-10-2022 (சனிக்கிழமை) முதல் 24-10-2022 (திங்கட் கிழமை) வரை நடந்துள்ள நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தால், இந்த கோவை கார் குண்டு வெடிப்பு திட்டமிட்டு நடந்துள்ள-நடத்தப்பட்ட செயல் என்று அறிந்து கொள்ளலாம். பிறகு, மற்ற செய்திகள் எல்லாம் வெளிவர ஆரமித்துள்ளன. ஊடகங்களின் பாரபட்சமிக்க, செய்தி வெளியீட்டுப் போக்கும், “ஆபத்திலிருந்து” மெதுவாக, “குண்டு வெடிப்பு” என்று முடிந்துள்ளது. இருப்பினும் இந்த தீவிரவாதிகள், பயங்கரவாதிள் எல்லோருமே மரியாதையுடன் தான் குறிப்பிடப் படுகிறார்கள். மத்திய உளவுத்துறை காவல்துறையினர் ஜமிஷா தொடர்பான பல்வேறு தகவல்களுடன் அவரை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு 2018ம் ஆண்டு முதன் முதலில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது[3]. தமிழக காவல்துறையினர் இதனை பெரிதாக கருதவில்லை என்று கூறப்படுகிறது[4].
22-10-2022 (சனிக்கிழமைஇரவு): சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்மபொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், முபின் தன்னுடைய வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அந்தப் பெட்டியில் ஸ்கிரேப் பொருள்கள் இருந்ததாக முபின் விளக்கம் அளித்ததாக கூறியுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து பிறகு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர், என்றெல்லாம் செய்திகள் பிறகு வெளி வந்தன. அப்படியென்றால், இவர்களும் முன்னமே இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். சுற்றியுள்ளவர்கள், இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு, எச்சரித்திருக்கலாம், புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், முஸ்லிம்கள் எனும் போது, அமைதியாக இருந்து விட்டனர் போலும். ஒரு ஊடகத்தால், அங்கு செய்தி-விவரங்கள் சேர்க்கச் சென்றபோது, ஜன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டனர், யாரும் பேச முன்வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
23-10-2022 (ஞாயிற்றுக்கிழமை): அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர். முதலில், ஏதோ பட்டாசு சத்தம் என்று கூட நினைத்திருக்கலாம். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விடியற்காலை காரில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்து ஒரு ஆள் இறந்தான். செல்போன் உதவியுடன் இறந்தவன் அடையாளம் காணப் பட்டான். வெடித்து சிதறிய காரில் இன்னொரு வெடிக்காத சிலிண்டர் மற்றும் சுற்றிலும் ஆணிகள், பால்ரஸ் போன்றவையும் சிதறிக் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து 2 முதல் 3 கிலோ 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆக, நிச்சயமாக கோவை போலீஸார் சென்னை உயர் அதிகாரிகளுக்கு தெரியப் படுத்தி, விசயம் முதலமைச்சருக்குச் சென்றிருக்கும்.
பிற்பகல் – 23-10-2022 (ஞாயிற்றுக்கிழமை): தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார். அதாவது, விசயம் சாதாரணமானது அல்ல என்பது தெரிந்து விட்டது. பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கார்குண்டுவெடித்தலில்இறந்தவன்ஜமேசாமுபின்: போலீஸார் செல்போன், கார் எண் முதலியவற்றை வைத்துக் கொண்டு விவரங்களை சேகரித்தனர். ஜமேசா முபின் என்பவன் தான் இறந்திருக்கிறான் எனூ முடிவானது. அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். அப்பா இல்லை. அம்மா மட்டும் தான். அவர் மனைவிக்கு செவி மற்றும் பேச்சுத்திறன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஜமேசாவுக்கும் இதயம், கண் ஆகியவற்றில் சில பிரச்னைகள் உள்ளன. முன்பு பழைய புத்தகக் கடை நடத்தி வந்தவர், பிறகு துணி வியாபாரம் செய்து வந்திருக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர். அதனால்தான் கடந்த 2019ம் ஆண்டு இலங்கை குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு பிறகு ஜமேசா முபினிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்துக்குப் பிறகு போலீஸ் அவர் வீட்டில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு கடிதத்தில் சுற்றிப் பார்க்கவுள்ள சுற்றுலா தலங்கள் என எழுதி ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், ஆணையர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ், விக்டோரியா ஹால் (மாநகராட்சி அலுவலகம்) ஆகிய பகுதிகளை குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், இந்தப் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இப்படி செய்திகள்……
வாட்ஸ்–ஆப்பதிவு, இறப்புஉண்மைஎன்றால், அதுதற்கொலைகுண்டுவெடிப்புஆகிறது: விபத்து நடந்தக் காரை ரூ.10,000க்கு தல்காவிடம் இருந்து வாங்கியுளளார். இப்படி கைது செய்யப்பட்ட அனைவரும், இந்த சதித் திட்டத்தில் ஒவ்வொரு பணியைச் செய்துள்ளனர். ஜமேசா அவ்வபோது கேரளா சென்று, அங்கு ஏற்கெனவே என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ள அசாருதீன் என்பவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆங்காங்கே சிறுக சிறுக சேகரித்து 75 கிலோ வெடி மருந்துக்கான வேதிப் பொருள்களை வாங்கியுள்ளனர். வெடி பொருள் தயாரிப்பது எப்படி என்பதை யூ-ட்யூபில் தேடிப் பார்த்திருக்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் இல்லாமல், இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது.” என்றனர். …….’வாட்ஸ்ஆப்ஸ்டேட்டஸில், என்னுடையஇறப்புசெய்திஉங்களுக்குதெரியும்போதுஎனதுதவறைமன்னித்துவிடுங்கள், குற்றங்களைமறந்துவிடுங்கள்எனதுஇறுதிசடங்கில்பங்கேறுங்கள். எனக்காகபிரார்த்தனைசெய்யுங்கள்,” என்று பதிவிட்டு உள்ளார். இதற்கான புகைப்படத்தை அவர் பதிவேற்றி இருக்கிறார். இதை பற்றி விசாரிக்க வேண்டும். இது ஐஎஸ்எஸ் தொடர்புடைய வாசகம். அவர்கள்தான் தற்கொலை தாக்குதல்களுக்கு முன்பாக இப்படி எல்லாம் போஸ்ட் செய்வார்கள்…..இப்படியும் செய்திகள்! வாட்ஸ்-ஆப் பதிவு, இறப்பு உண்மை என்றால், அது தற்கொலை குண்டு வெடிப்பு ஆகிறது, “சூஸைட் பாம்பர்” என்றாகிறது!
[1] திக-திமுகவினர் தொடர்ந்து தங்களது ஊடகங்களில் இத்தகைய பிரச்சாரங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டு, உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.
[2] சுவாசிக்கும் காற்று மாசு படுகிறது என்ற கோணத்தில் உச்சநீதி மன்றமே வரையறை கொடுத்திருப்பதால், அதன் மீது, மாநில அரசுகள் மற்றும் இதர நிறுவனங்கள், இயக்கங்கள் இதை பெரிது படுத்தி, பிரச்சாரம் செய்கின்றன.
[3] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், உளவுத்துறை ‘அன்றே’ கொடுத்தசிக்னல்!.. கிடப்பில்போடப்பட்டதா ? கோவைகார்குண்டுவெடிப்புசம்பவம், Raghupati R, First Published Oct 28, 2022, 7:56 PM IST; Last Updated Oct 28, 2022, 8:34 PM IST.
19-04-2022 கவர்னருக்குகருப்புக்கொடி, கொம்புகள்எறிந்தது: 19-04-2022 அன்று தமிழக கவர்னர் மயிலாடுதுறை வந்தபோது, போலீஸார் முன்பே, திக-வகையறாக்கள் கூடி, ஆர்பாட்டம் செய்து, கொம்புகளை வீசி எறிந்தனர். அத்தகைய வன்மம் ஏன், எப்படி, எதற்காக வெளிப்படுகிறது என்பதனை ஆராய வேண்டும். தினம்-தினம் சட்டசபையிலேயே கவர்னர் தேவையில்லை என்று முதலமைச்சரே பேசுவது, மசோதாக்கள் போடுவது என்றெல்லாம் செய்து வரும் போது, மற்றவர்களுக்கும் மரியாதை இல்லாமல் போகும். ஆனால், இவையெல்லாம் பெரிய சட்டமீறல், தேசவிரோதம் ஆகும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கவர்னர் பாதுகாப்பு அதிகாரி, தமிழக போலீஸுக்கு நடவடிக்கை எடுக்கும் படி கடிதம் அனுப்பியுள்ளார். அந்நிகழ்ச்சி அமைதியாக மறக்கப் படுகிறது. அதே மயிலாடுதுறையில் போலீஸாரை எதிர்த்து மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கைது செய்யப் பட்டுள்ளனர். இத்தகைய நிகழ்ச்சிகள் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்கின்றன. என்.ஐ.ஏ.வும் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவரங்கள் வெளியே வந்தாலும், தமிழக ஊடகங்கள் இவற்றை அமுக்கப் பார்க்கிறது. முஸ்லிம்கள் என்பதால், திமுக ஆட்சி செய்திகளில் கூட குறைவாகவே வருவது போல கவனித்துக் கொள்கிறது போலும். இத்தகைய, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தமிழகத்தில் வளர்ப்பது என்ன நன்மை பயக்கும்?
மார்ச் 2022 – தமிழகமுஸ்லிம்கர்நாடகநீதிபதிகளைமிரட்டுவது: ஹிஜாப் வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பு வழங்கிய கர்நாடகா உயர்நீதிமன்றம், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என்பதால், ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் என உத்தரவிட்டது. மேலும்இது தொடர்பான பல்வேறு மனுக்களை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜே எம் காசி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. மூன்று நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்து, சமூக வலைதளங்களில் பரவிய காணொளி தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது விதான் சவுதா காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ரஹமத்துல்லா என்பரை மதுரையில் இருந்து விசாரணைக்கு கர்நாடகா போலீசார் அழைத்து வந்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்[1]. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எட்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறினார்[2]. இதனிடையே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
21-02-2022 அன்று போலீஸார் ஐந்து முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது: முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமாக செயல்படுவது திகைப்பாக இருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம், நீடூரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா, 38.
அதே மாவட்டத்தில் உள்ள, இலந்தனகுடியைச் சேர்ந்தவர் ஜஹபர் அலி, 58.
இவர்களது கூட்டாளிகள், கோவை முகமது ஆஷிக், 29;
காரைக்கால் முகமது இர்பான், 22;
சென்னை அயனாவரம் ரஹ்மத், 29.
இவர்கள், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிப்., 21 காலை 11:00 மணியளவில், மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே, சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் சென்ற, ‘ஸ்கார்பியோ’ கறுப்பு நிற காரை, போலீசார் மடக்கினர்[3]. அப்போது, போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி, அவர்கள் மிரட்டினர்[4]. துப்பாக்கி நீட்டி மிரட்டும் அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் கிடைக்கிறது, தயாரானார்கள் என்ற கேள்வி எழுகின்றது. முதலமைச்சருக்கு இவையெல்லாம் தெரியாதா, எப்படி அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. பின், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு பின்னணியில் பயங்கரவாத அமைப்பு இருப்பது பற்றி, மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., சார்பில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய தகவல் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அப்படியென்றால், அதன் தீவிரத்தை நன்றாக அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு வன்மத்தை வளர்த்து விட்டது மாநில அரசும், சித்தாந்தமும், தினம்-தினம் மத்திய அரசுக்கு எதிராக பேசி வரும் பேச்சுகளும் காரணம் என்று புரிந்து கொள்ளலாம்.
துப்பாக்கிக்காட்டிபோலீஸாரைமிரட்டதைரியம்எப்படிவந்தது?: தமிழகம் காஷ்மீர் ஆகும் என்றெல்லாம் பேசுவது, அயல்நாட்டில் முஸ்லிம்கள் பாதிப்பு என்றால் இங்கு ஆர்பாட்டம் செய்வது, அந்நிய தேசவிரோத இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவது-எழுதுவது-பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றை தீவிரவாதம், அடிப்படைவாதம், தேசவிரோதம் என்றெல்லாம் பார்க்காமல், அதெல்லாம் முஸ்லிம்கள் பிரச்சினை, யாரும் தலையிடக் கூடாது, தலையிட்டால், விமர்சித்தால் மிரட்டப் படுவார்கள், தாக்கப் படுவார்கள் போன்ற மனோபாவத்தை உண்டாக்குவது தான், போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டியது.
முகமதுஆசிக்கைது 27-02-2021: மயிலாடுதுறை அருகே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்த கோவை இளைஞரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்[5].. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைமை ஏற்றுக்கொண்டு குழுவாக செயல்பட்டு வந்தனர்[6]. இவர்கள் கோவையை சேர்ந்த இந்து மத தலைவர்களை கொலை செய்வதற்காக சதி திட்டம் தீட்டி வந்தனர்[7]. இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 2010ஆம் ஆண்டு 7 பேரையும், என்ஐஏ அதிகாரிகள் கைதுசெய்த நிலையில், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்[8]. இந்த வழக்கு, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கில் முதல் குற்றவாளியான முகமது ஆசிக் என்பவர் பிணையில் வெளியானது[9] முதல் தலைமறைவாக இருந்து வந்தார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கலான நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் ஆசிக்கிற்கு சம்மன் அனுப்பி இருந்தது[10]. எனினும் அவர் விசாரணை ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் நீடுரில் கோழிக்கடையில் பதுங்கியிருந்த ஆசிக்கை 27-02-2021 அன்று நள்ளிரவு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.
தினமணி, ஐ.எஸ். அமைப்புடன்தொடா்புஜாமீனில்வெளிவந்துதலைமறைவானஇளைஞா்மயிலாடுதுறைஅருகேகைது, By DIN | Published On : 28th May 2021 11:13 PM | Last Updated : 28th May 2021 11:13 PM
[7] தினமணி, ஐ.எஸ். அமைப்புடன்தொடா்புஜாமீனில்வெளிவந்துதலைமறைவானஇளைஞா்மயிலாடுதுறைஅருகேகைது, By DIN | Published On : 28th May 2021 11:13 PM | Last Updated : 28th May 2021 11:13 PM
அப்பாவி அமர்நாத் யாத்திரிகர்களை சுட்டுக் கொன்ற லஸ்கர்-இஸ்லாமிய தீவிரவாதிகள் (1)
10-07-2017 திங்கட்கிழமைஅன்றுகுஜராத்திலிருந்துவந்தயாத்திரிகர்கள்மீதுதீவிரவாததாக்குதல்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்து வருகிறார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும் இப்பயணத்திற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த 2017 ஆண்டின் யாத்திரை ஜூன் மாதம் 28-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 2,280 யாத்ரீகர்கள் மலையடிவாரத்தில் இருந்து அமர்நாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றனர். பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து இந்த யாத்திரை தொடங்கியது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், கடந்த சில நாள்களாகத் தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்திருப்பதாலும் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் 10-07-2017 அன்று ஜிஹாதி-இஸ்லாமிய தீவிரவாதிகள் ஒரு பேரூந்தை மடக்கி சுட்டதில் ஏழு பேர் உயிரிழந்தனர், சுமார் 20 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிசூட்டில்5 பெண்கள்உள்பட 7 பக்தர்கள்படுகொலை, 21 பேர்படுகாயம்: அமர்நாத் யாத்திரை முடிந்து, வைஷ்ணவ தேவி வழிபாடு செய்து திரும்பும் போது, பஇக்கில் வந்த நான்கு பேர் வழிமறித்தனர். டிரைவர் முதலி நிறுத்த யத்தனித்த போது, சுட ஆரம்பித்ததால், வேகமாக ஓட்ட ஆரம்பித்தார். பிறகு போலீஸ் க்ஷ்செக்போஸ்டில் வந்து நிறுத்தினார். ஸ்ரீநகரில் காஷ்மீர் பகுதியின் காவல்துறை தலைமையதிகாரி முனீர்கானின் கருத்துப்படி, அனந்த்நாகில் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா என்றாலும், இதற்கு சூத்திரதாரி, பாகிஸ்தான் தீவிரவாதி அபு இஸ்மாயில்[1]. யாத்திரிகர்களை சுட்ட தீவிரவாதிகள் நான்கு பேர், அதில் இருவர் பாகிஸ்தானியர் மற்ற இருவர் உள்ளூர் தீவிரவாதிக்கள் என்று உளவுத்துறை கூறுகிறது. அபு இஸ்மாயில்,, லஸ்கர்-இ-தொய்பாவின் தளபதி ஆவான்[2]. மோட்டார் சைக்கிளில் வந்து சுட்டுவிட்டு சென்றதால், அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்[3].இதில் 5 பெண்கள் உள்பட 7 பக்தர்கள் இறந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதி இஸ்மாயில் என தெரியவந்து இருக்கிறது[4].
பொறுப்பேற்றலஷ்கர்–இ–தொய்பாதளபதிஅபுஇஸ்மாயில்[5]: அபு இஸ்மாயில் வேலை செய்து வருவதை உள்ளூர்வாசிகள் அறிவர். [6]. இருப்பினும், உள்ளூர்வாசிகள் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து, மறைத்து வருவதால், உடனடியாக கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.இதையடுத்து, அபு இஸ்மாயிலை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தெற்கு காஷ்மீரில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது[7]. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த அபு இஸ்மாயில் ஓராண்டுக்கு முன்பே தெற்கு காஷ்மீரில் தனது தளத்தை உருவாக்கியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முசபராபாதில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாலும், உள்ளூர்வாசிகள் ஆதாரவாலும், அப்பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு இடத்தில் இருப்பதாலும், அவர்களைப் பிடிக்க கடினமாக இருக்கிறது. இந்திய கட்டுப்பாட்டு எல்லைக்களுக்குள் வரும் போதுதான், மோதல் ஏற்படும் போது, அவர்கள் கொல்லப்படுகின்றனர். அதுவரை அவர்கள் தீவிரவாத செயல்களை செய்து கொண்டே இருக்கிறார்கள்[8].
கொல்லப்பட்டயாத்திரிகர்களின்பரிதாபகரமானநிலை, உறவினர்கள்கொடுத்ததகவல்கள்: தாக்குதலுக்கு உள்ளான பேருந்து ஓட்டுனர் குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர். மாவட்ட மருத்துவமனை, காயமடைந்த யாத்ரீகர்களால் நிறைந்திருந்தது. சுமார் 16 பேர் இருந்தார்கள். சிலர் துப்பாக்கிக்குண்டு காயத்துடன் இருந்தார்கள். சிலருக்கு வெட்டு மற்றும் சிராய்ப்புக் காயங்கள். அவர்களில், பஸ் உரிமையாளர் ஹர்ஷும் ஒருவர். “5-6 துப்பாக்கிதாரிகள் எங்கள் பஸ் முன் வந்து கண்மூடித்தனமாகச் சுட்டார்கள். “சரமாரியாக கற்களையும் வீசினார்கள். பஸ்ஸை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டுமாறு டிரைவரிடம் சொன்னேன்”[9]. ஹர்ஷும், பெரும்பலான யாத்ரீகர்களும், குஜராத்தைச் சேர்ந்தவர்கள். ஹிமாலய மலையில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலுக்கு 08-07-2017 அன்று சென்றுவிட்டு, ஜம்மு அருகே உள்ள வைஷ்ணவதேவி கோயிலுக்கு போய் கொண்டிருந்தார்கள். ஷ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை 10-07-2017 இரவு 8 மணிக்குப் பிறகு அவர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது. தான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக மூதாட்டி ஒருவர் தெரிவித்தார். அவரது இரு சகோதரிகளும் அவருடன் பயணித்தார்கள். “எனக்கு அருகில் அமர்ந்திருத்த என் சகோதரி, இருக்கையிலேயே இறந்துவிட்டார். எனக்குப் பின்னால் இருந்தவரும் அதே இடத்தில் உயிரிழந்தார். நான் மட்டும் தப்பிவிட்டேன்”.
அப்பாவிமக்களின்மீதானதாக்குதல்கள்; மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், கால்களில் லேசாக காயமடைந்திருந்தார். “எனக்கு காயம் சிறிதுதான். ஆனால் என் சோகம் பெரியது. இந்தத் தாக்குதலில் எனது உறவினரை இழந்துவிட்டேன்”. மருத்துவமனை ஊழியர்கள் அவர்களுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தபோதே, போலீசார் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். அவர்களது ஆடை, போர்வைகளில் ரத்தக்கறையாக இருந்தது. போலீஸ் குடியிருப்பு பகுதியில் இருந்து, உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸுகள் எடுத்துச் சென்று கொண்டிருந்தன. தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில், பாதுகாப்புப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தார்கள். அனந்த்நாக் நகர் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானதைப் போல் இருந்தது. அப்பாவி மக்கள் இவ்வாறு கொலைசெய்யப் படுவதை, இஸ்லாமியர், தமது ஜிஹாத்துவம் பெயரில் நியாயப்படுத்துகிறார்கள். இன்றுவரையில், ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள், நேரிடையாக கண்டிக்காமல், தாக்குதல் “காஷ்மீரியத்திற்கு” எதிரானது என்று தான் சொல்வதை கவனிக்க வேண்டும்.
“காஷ்மீரியத்” ஏன்இந்துக்களுக்குஎதிரானதீவிரவாதத்தில்ஈடுபட்டுள்ளது?: “காஷ்மீயத்” என்கின்ற காஷ்மீரத் தன்மை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு என்றால், இந்துக்களுக்கு எதிராக ஏன், எப்படி, எவ்வாறு இஸ்லாம் செயல்பட்டுக் கொண்டு வருகிறது என்று ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள், பிரிவினைவாதிகள், பதில் சொல்லாமல் மழுப்பி வருகிறார்கள். எல்லோருமே ம்,அதம் மாற வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்ற சித்தாந்தத்தைத் தான், மறைமுகமாக சொல்லி வருகிறார்கள். “ஆஜாத் காஷ்மீர்” போர்வையில் இந்த மனிதத்தன்மையற்ற கொலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்துக்களின் மக்கட்தொகை அடியோடு குறைந்து விட்டது. 1980களிலிருந்து வளர்ந்து வரும் தீவிரவாதத்தினால் லட்சக்கணக்கான இந்துக்கள் வெளியேறி விட்டனர், அவர்கள் தில்லியில் கூடாரங்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இதைப்பற்றியெல்லாம், மிகச்சிலரே எடுத்துக் காட்டிப் பேசி வருகின்றனர்.
[4] தினத்தந்தி, அமர்நாத்தாக்குதலுக்குகாரணமானஅபுஇஸ்மாயிலைதீவிரமாகதேடும்பாதுகாப்புபடை, ஜூலை 12, 2017, 12:40 PM
[5] On Tuesday morning the Inspector General of Police also identified the main perpetrator of the attack as Abu Ismail. “Attack on Amaranth yatra pilgrims was carried out by LeT, masterminded by Pak terrorist Ismail. He was also supported by local militants,” said Muneer Khan, the IGP. Meanwhile LeT issued a statement early morning on Tuesday, condemning the attacks and calling it “reprehensible and unIslamic.” “Islam does not allow violence against any faith. We strongly condemn such acts,” the outfit’s spokesperson Abdullah Ghaznavi said in a statement. While LeT still remains primary suspects in the case, the outfit’s denial in Monday’s attacks is the first of its kind. The outfit, which previously has also attacked Amarnath pilgrims, has never earlier issued a denial.
[8] On Tuesday morning the Inspector General of Police also identified the main perpetrator of the attack as Abu Ismail. “Attack on Amaranth yatra pilgrims was carried out by LeT, masterminded by Pak terrorist Ismail. He was also supported by local militants,” said Muneer Khan, the IGP.
தென்மாநிலங்களில்குண்டுவெடிப்புசம்பவங்களைநிகழ்த்தபலகோடிரூபாய்பணபரிமாற்றம்நடத்தப்பட்டிருக்கிறது – மதுரை ஜிஹாதித்துவத்தின் சமகால பரிமாணம்!
28-11-2016 மற்றும் 29-11-2016 தேதிகளில்எடுக்கப்பட்டநடவடிக்கைகள்: முதல் நாள் இரவு துவங்கி மறுநாள் மாலை வரை விசாரணை: மதுரையில் கைதான வெடிகுண்டு தீவிரவாதிகள் 28-11-2016 அன்று முன்தினம் மதுரை – சிவகங்கை மாவட்ட எல்லையில் இடையபட்டியில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இங்கு நடந்த விசாரணை குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தீவிரவாதிகளுக்கு வேறு நபர்களால் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த முகாமை தேசிய புலனாய்வு படையினர் தேர்வு செய்தனர். தனித்தனியாக தீவிரவாதிகள் ஒவ்வொருவரிடமும் 26-11-2016 அன்று இரவு துவங்கி, நேற்று மாலை 3 மணி வரை துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல முக்கியத்தகவல்கள் கிடைத்தன. சேகரித்தவற்றை ஆவணங்களாக தயாரித்து, உடனுக்குடன் பெங்களூருக்கும், டெல்லி தலைமையகத்திற்கும் புலனாய்வுப்படையினர் அனுப்பினர்,’’ என்றார். 150 சிம்கார்டுகள் மதுரை, சென்னையில் கைதானவர்கள் போலி பெயர்களில் 150 சிம் கார்டுகள் வரை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. ‘சமூகப்போராளிகள்’ பெயரில் இவர்கள் பேஸ்புக்கில் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்களது முகநூல் பக்கங்கள், சிம் கார்டுகளை ‘ட்ரேஸ்’ செய்து, அதன் அடிப்படையில் இவர்களது பல்வேறு தொடர்புகளை தேசிய புலனாய்வுப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
தென்மாநிலங்களில்குண்டுவெடிப்புசம்பவங்களைநிகழ்த்தபலகோடிரூபாய்பணபரிமாற்றம்நடத்தப்பட்டிருக்கிறது: கண்காணிப்பில் 548 பேர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தென்மாநிலங்களில்குண்டுவெடிப்புசம்பவங்களைநிகழ்த்தபலகோடிரூபாய்பணபரிமாற்றம்நடத்தப்பட்டிருக்கிறது. மதுரையைமையமாகவைத்தேதீவிரவாதகும்பல்செயல்பட்டிருக்கிறது. எனவே, மதுரையில்இன்னும்சிலநாட்கள்தேசியபுலனாய்வுப்படையினர்முகாமிட்டுகண்காணிப்பைதீவிரப்படுத்தஉள்ளனர். கைதானதீவிரவாதிகளைகாவலில்எடுத்துவிசாரிக்கும்போது, மதுரைஉள்ளிட்டதென்மாவட்டங்களில்யார், யாருக்குதொடர்புஉள்ளது, நடந்தபணப்பரிமாற்றம்உள்ளிட்டபல்வேறுகேள்விகளுக்குவிடைகிடைக்கும். குண்டுவெடிப்புகளுக்கானசெலவுக்குபணத்தைசப்ளைசெய்தவர்கள்யார்? அல்கொய்தாதீவிரவாதஅமைப்பிற்கும், கைதானவர்களுக்கும்உள்ளதொடர்புமற்றும்பிரதமர்மோடிஉள்ளிட்ட 22 தலைவர்களைகொல்லதிட்டமிட்டதுகுறித்தபல்வேறுதகவல்களும்வெளிவரும். தமிழகம்முழுவதும் 548 பேர்பட்டியல்தயாரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாததொடர்புடையபலரும்கண்காணிக்கப்பட்டுவரும்நிலையில்அடுத்தடுத்துபலர்கைதாவர்,’’ என்றார். நூறுக்கும், இருநூறுக்கும் கோடிக்கணக்கான மக்கள் அலைந்து கொண்டிருக்கும் நிலையில், கோடிகளில் தீவிரவாதிகள் விளையாடி வருவது திகைப்பாக இருக்கிறது.
500 / 1000 இதில் கூடவிளையாடியுள்ளது[1]: “தீவிரவாத செயல்களுக்கான செலவினங்களுக்கு பல கோடி ரூபாய் பணம் மதுரைக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டிருக்கிறது. பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளான இவற்றை மதுரையை மையமாக வைத்து கும்பல் ரூ.25 கோடி வரை இளைஞர்களின் வங்கிக்கணக்குகள் மூலம் புதிய நோட்டுகளாக மாற்றிச் சென்றுள்ளனர். இந்த பணத்தை மாற்றித்தர தீவிரவாதக் கும்பல், 30 சதவீத கமிஷன் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. வங்கிக்கணக்குகள் மூலம் பணம் மாற்றியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்பேரிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தீவிரவாத தொடர்புடைய மேலும் சிலர் சிக்குவர்”, என்று போலீஸார் தெர்வித்துள்ளனர்[2].
ஐவரின்தொடர்புகள்[3]: இந்த ஐந்து-ஆறு பேர் என்பது அகப்பட்டவர்கள் தான். இன்னும் பிடிபடாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. இவர்கள் அனைவரும், பேஸ்புக் முதல் இஸ்லாமிய பிரச்சாரம் வரையில் உள்ள செயல்களில் ஈடுபட்டிருந்ததால், தொடர்புகள் ஏற்பட்டு நண்பர்களாகினர். இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம், அவர்களை பிணித்து விட்டது. நூலகம் மூலம் தீவிரவாத பிரசாரம். கைதானவர்களில் ஒருவரான அப்பாஸ் அலி, 8ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, பெயின்டராக இருந்தார். ‘தாருல் இல்ம்’ என்ற பெயரில் இவர் நூலகம் வைத்து நடத்தி வந்ததும், இதன் மூலம் தீவிரவாத பிரசாரப்பணிகளில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. கைதான சம்சும் கரீம் ராஜா, பிகாம் பட்டதாரி. கோழிக்கடை வைத்துள்ளார். கைதான முகம்மது அய்யூப்பிற்கு திருமணமாகி ஒரு வாரமே ஆகிறது. பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், காது கேட்கும் கருவி விற்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சுலைமான் (23), சென்னையில் கைது செய்யப் பட்டார். கைதானவர்கள் பணியாற்றும் இடங்களிலும், வீடுகள் உள்ள பகுதிகளிலும் கடந்த 2 நாட்கள் கண்காணித்த பிறகே, தேசிய புலனாய்வுப்படையினர் அதிரடியாக இவர்களை அடுத்தடுத்து கைது செய்துள்ளனர்.
அமைதியாக, ஜாத்திரைக்கையாகநடந்தேறியகைதுகள்: பாதுகாப்பு வளையத்தில் இந்தோ – திபெத் முகாம் தீவிரவாதிகளிடம் விசாரணை நடந்த இடையபட்டி இந்தோ -திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீஸ் முகாமிற்குள், உள்ளூர் போலீசார், பத்திரிகையாளர்கள் என யாரும் அரை கிலோ மீட்டருக்கு முன்பே அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பிற்கு வந்திருந்த ஒத்தக்கடை போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். முகாமைச் சுற்றிய ரோட்டில் போலீஸ் வாகனங்கள் ரோந்து சுற்றி வந்தன. அவ்வழியாக வந்த சந்தேகத்திற்குரிய வாகனங்களை ஒத்தக்கடை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினர். 30-11-2016 அன்று பிற்பகல் 3.10 மணிக்கு தீவிரவாதிகளை ஏற்றிக்கொண்டு காரில், தேசிய புலனாய்வு படையினர் மேலூர் கோர்ட்டிற்கு புறப்பட்டனர். காரின் முன்னும், பின்னும் திண்டுக்கல், மதுரை துப்பாக்கி ஏந்திய, ஆயுதப்படையினர் வேன்களில் சென்றனர். பெங்களுர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்[4]. நாகூரைச் சேர்ந்த அபு பக்கர் மலேஸ்வரம் குண்டுவெடிப்பில் சிக்கிக்கொண்டு, கைதாகி, சிறையில் கிடக்கிறான்[5]. இவர்களது கேரளா-தமிழ்நாடு தொடர்புகள் ஏற்கெனவே எடுத்துக் காட்டப்பட்டன. ஆனால், இவர்கள் எல்லோருமே தாங்கள் எதையோ சாதித்து விட்டதைப் போலத்தான் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேண்டியவர்களின் தயவோடு தங்களுக்கு வேண்டியதைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர். மதுரையைப் போன்று பெங்களுரும் அவர்களது “ஹப்பாகி” விட்டது
மதுரை ஜிஹாதித்தனம் திட்டமிட்டே வளர்க்கப்படுகிறது என்பது கைதாகியவர்களின் தொடர்புகள் வெளிப்படுத்துகின்றன!
முதலில்இருவர், நால்வர்என்றுஇறுதியாகஅறுவர்கைதானது: இதில், குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக முகம்மது அய்யூப் தெரிவித்த தகவலின்பேரில், மதுரை நெல்பேட்டை கீழமாரட் வீதியைச் சேர்ந்த சம்சுதீன் (25) என்பவரை நேற்று கைது செய்தனர். இவ்வழக்கில் மதுரையில் கைதான 4 பேரும் மேலூர் கோர்ட்டில் 29-11-2016 அன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். மேல் விசாரணைக்காக பெங்களூர் தேசிய புலனாய்வு பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்த, இவர்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர். மதுரை மாவட்டம், மேலூர் குற்றவியல் கோர்ட்டிற்கு, கைதான 4 தீவிரவாதிகளும் 29-11-2016 அன்று மாலை 3.30 மணிக்கு கொண்டு வரப்பட்டனர். முன்னதாக வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய் விஜய் வரவழைக்கப்பட்டு கோர்ட் வளாகம் முழுவதும் சோதனையிடப்பட்டது.
முக்கியஆதாரங்களுடன்நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தியது: மத்திய குற்றப்புலனாய்வு எஸ்பி பிரதீபா அம்பேத்கர் தலைமையில் டெல்லி தேசிய புலனாய்வுப்படையினர், கைதான நால்வரையும் மாஜிஸ்திரேட் செல்வகுமார் முன்பு ஆஜர்படுத்தினர்[7]. பின்னர் நால்வரையும் டிச. 1ம் தேதிக்குள் பெங்களூரு தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்[8]. கைதானவர்களின் பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் மல்க கோர்ட் வாசலில் காத்திருந்தனர். பொதுமக்களும் பெருமளவில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கைதானவர்கள் நால்வரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ஆவணங்கள், வரைபடங்கள் போன்றவற்றை அட்டைப்பெட்டியில் வைத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் தேசிய பாதுகாப்பு படையினர் சீல் வைத்தனர். கிளம்புவதற்கு முன்னதாக, கைதானவர்களின் தாய்மார்கள் மட்டும் தங்கள் பிள்ளைகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது மகனைப் பார்த்து பேசிவிட்டு வந்த ஒரு தாய், கோர்ட் வளாகத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தீவிரவாதபயிற்சிஅளித்தவர்கள்கைதாகியுள்ளனர்: 29-11-2016 அன்று மாலை 3.30 மணிக்கு கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்ட 4 தீவிரவாதிகளும், மாலை 6.30 மணிக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிற்குப்பிறகு, காரில் ஏற்றி பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பாதுகாப்பு கருதியே மதுரையை தவிர்த்து மேலூர் கோர்ட்டில் 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்’ என்றார். முன்னதாக பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதுரை மற்றும் சென்னையில் கைதான தீவிரவாத கும்பல், கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி நவ. 1ம் தேதி வரை ஆந்திர மாநிலம், சித்தூர் மற்றும் நெல்லூர், கேரள மாநிலம், கொல்லம் மற்றும் மலப்புரம், கர்நாடக மாநிலம் மைசூரு ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்ற வளாகப் பகுதிகளில் 5 இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளனர்[9]. இச்சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட குக்கர், பேட்டரி, வெடிபொருட்களை மதுரையில் தயாரித்து, 4 மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது[10]. இதற்காக மதுரை மேலூர், சிவகாசி பகுதிகளில் வெடி மருந்துகள், பொருட்கள் வாங்கி தயாரித்துள்ளனர்[11]. மேலும், மதுரையில் 30 இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி முகாம்களையும் நடத்தியுள்ளனர். சுலைமான் கைது, விவகாரங்களை சுலபமக்கியுள்ள்து[12].
கணினிவல்லுனனானசுலைமான்தலைவன்: இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் செல்போன்களை கொடுத்தால், பின்னர் போலீஸ் விசாரணையில் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். அதனால், அவர்கள் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தினால், அவர்கள் குண்டு வைக்கும் இடம் வரை செல்கிறார்களா என்பதை எளிதாக சென்னையில் உள்ள சுலைமான் கண்காணிப்பான். பின்னர் குண்டு வைத்து விட்டு திரும்பி வரும்வரையும் ஜிபிஎஸ் மூலமே அவர் கண்காணிப்பார். ஒருவேளை போலீஸ் பிடித்து விட்டால், மற்ற தீவிரவாதிகள் தப்புவதற்கும் எளிதாக இருக்கும் என்பதற்காகவே இந்த திட்டத்தை அவர்கள் செயல்படுத்தி வந்தனர் என்றும் தெரியவந்தது. மேலும் டிசம்பருக்குள் தென் மாநிலங்களில் பல இடங்களில் குண்டு வெடிப்பை நிகழ்த்தவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்[13]. இதற்கான வரைபடங்கள் தற்போது போலீசிடம் சிக்கியுள்ளன. இது குறித்தும் பிடிபட்ட தீவிரவாதிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[14]. இவர்களுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதால், தமிழகத்தில் தேசிய புலனாய்வு படையினர் தங்கி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[15].
[1] Dawood Suleiman, 23 yrs, s/o Saeed Mohd. Abdulla of Karimsa Pallivasal, Madurai, now
residing at Chennai. He works in a software firm and was the main leader of the terrorist gang.
He has been arrested in Chennai today 28-11-2016, for the involvement in the crime.
[2] Abbas Ali, 27 yrs, s/o Nainar Mohammed, resident of 11/23, 2nd floor, 4th street, Ismailpuram, Munichalai Road, Madurai. He studied up to 8th standard, and a painter. He is also running a library in the name ‘DARUL ILM’ at Madurai. He has been arrested in Madurai today [28-11-2016], for his involvement in the crime.
[3] Samsum Karim Raja, s/o V.S. Mohammed Jainullah- buddin, resident of No.17, Ramu kothanar compound, Viswanatha Nagar, K. Pudur, Madurai. He is a B.Com graduate and runs a chicken broiler shop at Kannimara Koil street in Madurai. He has been arrested in Madurai today 28-11-2016, for his role in the crime.
[4] Md. Ayub Ali, age 25 yrs, s/o Mohd Tasleem, resident of Island nagar, Madurai. He is a Public liaison officer for a hearing aid company. He is being further examined in Madurai for his role in the crime.
[6] Today 29-11-2016, NIA has arrested accused namely Mohd Ayub aged 25 yrs, S/o Mohd Dhaslim, Island Nagar, 2nd Cross Street, Kaipathur, Madurai in Madurai in RC-03/2016/NIA/HYD.
[10] The Hindu, NIA detains four youths for blasts in courts, Vijaita Singh, MADURAI/NEW DELHI: NOVEMBER 29, 2016 01:07 IST UPDATED: NOVEMBER 29, 2016 01:07 IST.
[14] The Hindu, NIA arrests one more terror suspect in Madurai, by S. Sundar, MADURAI NOVEMBER 29, 2016 20:47 IST UPDATED: NOVEMBER 30, 2016 02:08 IST.UPDATED: NOVEMBER 30, 2016 02:08 IS
பங்களாதேசதீவிரவாதகொலைகள்மூலம்ஜாகிர்நாயக்கின்ஜிஹாதிதூண்டுதல்பிரச்சாரம்வெளிப்பட்டது: ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்காளதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி 2016 பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ரோஹன் இம்தியாஸ், முகநூலில் வெளியிட்ட பதிவில் ஜாகிர் நாயக்கின் உரை தனக்கு ஊக்கமளித்ததாக தெரிவித்திருந்தார்[1]. இதையடுத்து, நாட்டை விட்டு வெளியேறிய ஜாகிர் நாயக், அதன்பிறகு மீண்டும் திரும்பி வரவில்லை. வெளிநாட்டிலேயே தங்கிவிட்டார்[2]. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது. வங்கதேசத்தில் ஒளிபரப்பாகும் அவருக்குச் சொந்தமான “பீஸ் டிவி’க்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. ஜாகீர் நாயக்கின் மதபோதனைகள் பிரிவினையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் நுழைய அவருக்கு அந்நாட்டு அரசுகள் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. மலேசிய அரசும் அவரது பிரசாரத்துக்குத் தடை விதித்தது.
உள்நாட்டுஜிஹாதிகளைஊக்குவித்துதீவிரவாதத்தைவளர்க்கிறதுஎன்பதும்தெரியவந்தது: மும்பை, ஹைதராபாத், கேரளா, சென்னை / தமிழகம், போன்ற இடங்களில் கைதான முஸ்லிம் இளைஞர்களின் தீவிரவாத – ஐசிஸ் தொடர்புகளும் ஜாகிர் நாயக்கின் தீவிரவாத ஊக்குதல் எடுத்துக் காட்டியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிக்கிறேன் என்ற போர்வையில், தீவிரவாத-பயங்கரவாதத்தையே நாயக் தூண்டி விட்டுள்ளது உறுதியானது. இதனால், ஜாகீர் நாயக் “இஸ்லாமிக் ரிசர்ச் பவுண்டேஷன்” (ஐஆர்எப்) [Islamic Research Foundation (IRF)] கல்வி அறக்கட்டளை, ‘பீஸ் டிவி’ [Peace TV] ஆகியவற்றை நிறுவி, தீவிரவாதத்தை தூண்டும் வகையில் மதப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், பிற மதங்களை இழிவுப் படுத்தி, முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக மாற வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருவதாக ஜாகீர் நாயக் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள் எழுந்தது[3].
மாநிலமத்தியஅரசுகள்நடவடிக்கைஎடுத்தது: மஹாராஷ்ட்ரா அரசு முஸ்லிம் இளைஞர்களை மதவாதிகளாக்கி, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகிறார் என்று வழக்குகள் பதிவு செய்துள்ளது[4]. மும்பை சிறப்புப் பிரிவு [Special Branch (SB) போலீஸார், Mumbai police] மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு [Economic Offences Wing (EOW)] முதலிய அதிகாரிகள், மேற்குறிப்பிடப்பட்ட அலுவலங்களில் சோதனையிட்டு, குற்றஞ்சாட்டப்படக் கூடிய வகையில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர்[5]. அயல்நாட்டு பணம் வரவு கட்டுப்பாடு சட்டத்தின் பிரிவுகளை [Foreign Contribution (Regulation) Act (FCRA)] மீறி பணம் பெறப்பட்டதும் தெரிந்தது. அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது[6]. விசாரணையில் வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[7]. இந்திய ரிசர்வ் வங்கியின் [RBI] முன்னனுமதி இல்லாமல் பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது[8]. அந்த அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூர்வ தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான நிறுவனம் என அடையாளப்படுத்தப்படுவதாக உறுதியானது.
எல்லாவற்றையும்ஆராய்ந்துமத்தியஅரசுதடைசெய்யதீர்மானித்தது: இந்நிலையில், சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்புக்கு மத்திய அரசு [Unlawful Activities Prevention Act (UAPA)] கீழ் ஐந்து வருடங்கள் தடை விதித்துள்ளது[9]. மேலே கூறப்பட்டுள்ள விவகாரங்களை முறைப்படி ஆய்ந்து, ஆவணங்கள் முதலியவற்றை சர்பார்த்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதை உறுதி செய்து, அதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 15-11-2016 அன்று நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது[10]. இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக அவரின் பேச்சுக்கள் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாகிர் நாயக் மேல் முறையீடு செய்யலாம் என்று “தி இந்து” ஆலோசனை செய்தி வெளியிட்டுள்ளது: ஐ.ஆர்.எப்பை தடை செய்ய பாராளுமன்ற அனுமதி தேவைப்படுகிறது, அதற்குப் பிறகு அரசு கெஜட்டில் முறைப்படி “தடை செய்யப்பட்ட இயக்கம்” என்று அறிவிக்கப் படும்[11]. இதை எதிர்த்து டிரிப்யூனல் [Tribunal] மூலம் மேல்முறையீடு செய்யலாம்[12] என்றெல்லாம் “தி இந்து” விவரிக்கிறது. அதாவது, நடந்துள்ள தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதி குண்டுவெடுப்புகள், குரூர கொலைகள் முதலியவற்றைக் கண்டு கொள்ளாமல், உயிரிழந்த அப்பாவி மக்கள், அவர்களின் மனைவி-மக்கள், உறவினர்கள் முதலியோரின் உரிமைகளைப் பற்றிக் கவலைப் படாமல், ஜாகிர் நாயக் சட்டப்படி எப்படி தப்பித்துக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொல்லும் ரீதியில் செய்திகளை வெளியிடுவது திகைப்பாக இருக்கிறது. அரசுக்கு இதெல்லாம் தெரியாமலா நடவடிக்கை எடுத்துள்ளது? இத்தகைய செய்திகளும் தீவிரவாதத்தை மறைமுகமாக ஆதரிப்பதாக உள்ளது.
ஊடகங்கள் தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதிகுண்டுவெடுப்புகள், குரூரகொலைகள்தடுக்கப்படவேண்டும், முஸ்லிம்இளைஞர்கள்நல்லவழியில்செல்லவேண்டும் என்று ஏல் ஆலோசனை சொல்லக் கூடாது?: அதற்கு பதிலாக, சட்டப்படி, நடவடிக்கை எப்படி எடுக்கப்பட வேண்டும், இத்தகைய தீவிரவாத, பயங்கரவாத, ஜிஹாதி குண்டுவெடுப்புகள், குரூர கொலைகள் தடுக்கப்பட வேண்டும், முஸ்லிம் இளைஞர்கள் நல்லவழியில் செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆல்லோசனை கூறி, செய்திகளை வெளியிடலாமே? அவ்வாறு வெளியிட நிருபர்களுக்கு தெரியவில்லையா அல்லது “தி இந்து” அவ்வாறெல்லாம், நாட்டுக்கு, இளைஞர்களுக்கு நல்லது செய்யும் விசயங்களை வெளியிட வேண்டாம் என்று ஆணையிட்டுள்ளதா? கனடா, இங்கிலாந்து, மலேசியா போன்ற நாடுகளிலும், மேல்முறையீடு செய்யலாம் என்று ஆலோசனை சொல்லலாமே? அந்த நாடுகளில் உள்ள சட்ட நிபுணர்களையெல்லாம் விட, “தி இந்து” நிருபர்கள் பெரிய சட்ட ஆலோசகர்கள் ஆகி விட்டார்கள் போலும். விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் செய்வதை விடுத்து, இவ்வாறு சித்தாந்த ரீதியில் வேலை செய்வது தான். “தி இந்துவின்” முகமூடியை அவ்வப்போது, திறந்து காட்ட வைக்கிறது.
[11] The Hindu, Centre bans Zakir Naik’s NGO, calls it ‘unlawful’, New Delih, November 15, 2016
[12] Banning any organisation under the Unlawful Activities Prevention Act (UAPA) requires an approval by the Cabinet, and a Gazette notification will follow soon. A Tribunal will be set up where Dr. Naik could challenge the ban on his NGO.
யாசின் பட்டகல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (5)
டிஎன்ஏ சோதனை: யாசின் பட்கலின் அடையாளத்தை உறுதி செய்ய உடனடியாக ஒரு சிறப்பு குழுவை அனுப்பிவைக்கும்படி கர்நாடக போலீசாரை பீகார் போலீசார் கேட்டுக் கொண்டனர். மேலும் யாசின் பட்கலுக்கு டிஎன்ஏ சோதனை செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கும் கர்நாடக போலீசாரிடம் உதவி கோரியுள்ளனர். இதில் பீகார் போலீசார் எந்த அளவிற்கு ஒத்துழைப்பார்கள் என்று பார்க்க வேண்டும். “நான் அவனில்லை” என்ற வாதங்கள் வருவதால், புலன்விசாரணைக் குழு இதனை உறுதி செய்ய தீர்மானித்துள்ளது. இதனை அறிந்து தான், ஒருவேளை தந்தை, மாமா மற்ற உறவினர்கள் வேறு மாதிரி நடந்து கொள்கிறார்கள் போலும்.
விசாரிக்க கர்நாடகம், குஜராத் போலீஸ் தீவிரம்[1]: கர்நாடகம், குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் யாசின் பட்கலுக்கு தொடர்பு இருப்பதால், அவரை விசாரணைக்கு தங்களிடம் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் கோருவதற்கு இரு மாநில காவல் துறையும் திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக கர்நாடக காவல் துறை இயக்குநர் லால் ரொகுமா பசாவ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: “பெங்களூரில்இந்தியன்முஜாஹிதீன்நடத்தியபயங்கரவாததாக்குதல்சம்பவம்தொடர்பாகஅவரிடம்விசாரிக்கநீதிமன்றம்மூலம்அனுமதிபெறப்படும்”, என்றார். குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரக் காவல்துறை இணை ஆணையர் ஏ.கே. சர்மா கூறியது: “யாசின்பட்கலைஎங்களிடம்விசாரணைக்குஒப்படைக்கும்படிநீதிமன்றத்தில்கோருவோம்”, என்றார்.
முல்லாயம் சிங் கட்சி முஸ்லிம் தலைவர்தீவிரவாதிகளுக்கு சாதகமாக செய்திகளை வெளியிடுவது, பேசுவது ஏன்?: இந்திய ஊடகங்கள், அரசியல்வாதிகள், சட்டத்துறையினர், மனித உரிமைப் போராளிகள், செக்யூலரிஸ வித்வான்கள், சமத்துவ ஞானிகள், மனிதநேய விற்பன்னர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்கள் இத்தகைய தீவிராவாதிகள் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றே, சில முரண்பட்ட செய்திகளை போட்டு வைக்கிறார்கள். தீவிரவாதிகளின் பெயர்களைக் கூட வேண்டுமென்றே மாற்றி-மாற்றி குறிப்பிடுவார்கள். அவற்றை தீவிரவாதிகள் தரப்பில் ஆஜராகும் வக்கீல்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, யாசீன் போன்ற படித்த தீவிரவாதிகள் “நான் அவனில்லை” போன்ற வாதங்களை வைத்து, “அலிபி”, அதாவது “அந்நேரத்தில் நான் அங்கில்லை” என்றும் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.
யாசின் பட்டகல் மற்றும் அவனது வக்கீல் எம். எஸ். கான் வாதிப்பது ஏன்?: யாசின் பட்டகல் சொல்கிறான், “இந்திய முஜாஹித்தீனை தோற்றுவித்தவர்களுள் ஒருவன் நான் என்பதனை நான் மறுக்கிறேன்”, என்கிறான். பிறகு, “தில்லி மற்றும் 7 தொடர்குண்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவனும் நானும் வேறு”, என்கிறான். ஆனால், யாசின் பட்டகல், அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா என்ற எல்லோரும் ஓரே நபர் தான் என்று என்.ஐ.ஏ எடுத்துக் காட்டியது[2]. இப்பொழுது கூட, எம். எஸ். கான் என்ற யாசினின் வக்கீல் அத்தகைய வாதங்களை வைத்துள்ளது கவனிக்கத்தக்கது[3].
ஊடகங்களின் தேவையற்ற செய்திகள், பிரச்சாரங்கள்: யாசின் பட்டகல் பாகிஸ்தானில் இருந்தான், ஐ.எஸ்.ஐ.யினால் பயிற்சி கொடுக்கப் பட்டான் என்ற உண்மை அவனை விசாரிக்கும் போது தெரிய வந்துள்ளது. இதுவரை அவன் லச்கர்-இ-தொய்பா தான் பயிற்சி கொடுத்தது என்று நம்பி வந்தார்களாம்[4]. இப்படிபட்ட செய்திகள் வெளியிடும் போக்கும் என்னவென்று தெரியவில்லை. இந்திய துப்பறிவாளர்கள் என்ற நினைத்தார்கள், நம்பிக் கொண்டிருந்தார்கள் என்பதெல்லாம், இந்தியர்களுக்கு வேண்டிய செய்திகளா? முன்பு கூட மும்பை வெடிகுண்டுவெடிப்பிற்கு பிறகு, யாசின் தில்லிக்குச் சென்று அங்கிருந்து தப்பிச் சென்றதில் மும்பை மற்றும் தில்லி போலீஸார் பரஸ்பர குற்றச்சாட்டுகளை சொல்லி வருகின்றன[5]. யாசின் தப்பிச் செல்ல தில்லி போலீஸார் தான் காரணம் என்ரு மும்பை போலீஸார் கூறினர்[6]. வழக்கம் போல, சி.என்.எநை.பி.என், டைம்ஸ்-நௌ, என்.டி-டிவி, ஹெட்லைன்ஸ்-டுடே முதலியவை பாகிஸ்தான் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் முதலிவவர்களை வைத்துக் கொண்டு “பட்டி மன்றம்” நடத்தி, தாங்கள் ஏதோ மிகப்பெரிய உண்மைகளை தருவது போல “டமாரம்” அடித்துக் கொள்வார்கள். இதுதான் இந்தியாவின் லட்சணம் என்று விசயம் தெரிந்தவர்கள் பரிகாசம் செய்வார்கள். முதலில், இனிமேல் இந்தியாவில் இவர்களது கொட்டம் அடக்கப்படும், அவர்களது கூட்டாளிகளின் வால்கள் அறுக்கப்படும், இந்தியாவில் இருந்து கொண்டு ஆதரவு காட்டி வரும் சதிகாரர்கள் அடக்கப்படுவார்கள். அதனால், இனி குண்டுவெடிப்புகளே நிகழாது என்றுதானே தைரியமாக சொல்ல வேண்டும். மாறாக, இத்தகைய பிரச்சாரங்களால், சாதாரண மக்களுக்கு என்ன லாபம்.
[2] However, District Judge I S Mehta, who remanded Bhatkal and his close associate and alleged top IM operative Asadullah Akhtar for custodial interrogation for 12 days, did not accept his claims saying NIA has said that he was the IM co-founder. ‘Both the accused have been produced before the court on the issuance of NBWs (non-bailable warrants) on July 18, 2013 wherein the accused Yasin Bhatkal and accused Asadullah Akhtar alias Haddi alias Danial. In the present application it is stated that Mohd. Ahmed Siddibappa is Yasin Bhatkal and he is the same person against whom the NBWs were issued.
[3]Yasin Bhatkal today failed in his attempt in a Delhi court to falsify the claim of investigators that he was the same person whom the NIAhas dubbed as the co-founder of Indian Mujahideen (IM) involved in a string of terror strikes in the country in the last seven years. His lawyer M S Khan opposed National Investigation Agency (NIA’s) plea seeking 14-day custody saying ‘the accused person before the court is Mohmmad Ahmed and not Yasin Bhatkal.’
[6] A series of reports on an alleged botched operation to catch Indian Mujahideen operative and purported 13/7 mastermind Yasin Bhatkal has left the Maharashtra Anti-Terrorism Squad and the State government fuming. A top official told The Hindu on Thursday that the government was upset with the leaks from the Delhi police and is sure to take up the matter with the Ministry of Home Affairs “at the right time.” The ATS, which is investigating the 13/7 blasts, has already flagged off its grievance to Delhi.
யாசின் பட்டகல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (4)
கர்நாடகத்திலிருந்து தப்பித்தது (2008): மும்பைப் பிரிவு போலீஸார், அவனைப் பிடிக்க பட்கலுக்கு வந்தது. ஆனால், அப்பொழுது உள்ளூர் போலீஸ்காரனால் உசார்படுத்தப் பட்டான். மும்பை குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர், அவன் வீட்டிற்க்கு வந்தபோது, பின் கதவு திறந்து கிடந்தது, அடுப்பில் கெட்டிலில் டீ கொதித்துக் கொண்டிருந்தது. ஆமாம், யாசின் தப்பித்து விட்டான்[1]. பிறகு ஏன் பெற்றோர் அவனிடத்தில் கேட்கவில்லை? போலீஸார் விளாவரியாக சொல்லியிருப்பார்களே?
தில்லியிலிருந்து தப்பித்தது (2008): “2008 ஆம்ஆண்டுதில்லியில்இருந்துதலைமறைவாகிமேற்குவங்கத்தில்நடமாடியயாசின்பட்கலைஅம்மாநிலகாவல்துறையினர்சந்தேகத்தின்பேரில்கைதுசெய்தனர். ஆனால், அவர்மீதானகுற்றச்சாட்டைநிரூபிக்கமுடியாததால்நீதிமன்றத்தால்விடுவிக்கப்பட்டார்”, என்று குறித்து மத்திய உளவுத் துறை உயர் அதிகாரி கூறியுள்ளாராம்.
2009ல் தப்பித்தது[2]: அனைத்துலக ரீதியில் நடந்து வரும் கள்ளநோட்டு கும்பலைப் பிடித்தபோது, இவனும் சிக்கிக் கொண்டான். ஆனால், தன்னை தர்பங்காவைச் சேர்ந்த “மொஹம்மது அஸ்ரப்” என்று சொல்லிக் கொண்டு தப்பித்து விட்டான். தான் வங்காளதேசத்திலிருந்து, வெறும் பார்சலைத் தான் கொண்டு வருவதாகவும், உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாது என்றும் நாடகம் ஆடினான். அதாவது நேபாளத்திலிருந்து, வங்காளதேசம், அங்கிருந்து தில்லி என்று சென்று வந்து கொண்டிருக்கும் போது கூட யாரும் கண்டு கொள்ளவில்லை. ஜெயிலில் ஒரு மாதம் இருக்கும் போது பெயிலில் வெளியே வந்தான். பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற அவன் பிப்ரவரி 2010ல் புனேவிற்கு வந்து, ஜெர்மன் பேக்கரியில் குண்டிவெடிப்பு நடத்தினான், என்றும் சொல்கிறார்கள்.
சென்னையில்அப்துல்ரகுமான்வீட்டிலிருந்துயாசின்தப்பியது (2011): இதேபோல, 2011 ஆம் ஆண்டு நவம்பரில் சென்னை சேலையூர் பகுதியில் அப்துல் ரகுமான் என்பவரது வீட்டில் யாசின் பட்கல் பதுங்கியிருப்பதாக மத்திய உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்த வீட்டுக்கு மத்திய உளவுத் துறை, தில்லி போலீஸ், சென்னை போலீஸ் அதிகாரிகள் செல்வதற்குள் அங்கிருந்து யாசின் பட்கல் தப்பித்து விட்டார்’ என்று உள்துறை உயரதிகாரி கூறினார். அப்படியென்றால், கர்நாடக போலீஸார் மாதிரி, இங்கும் யாரோ எச்சரிக்கைக் கொடுத்து விட்டார்கள் போலும்! சரி, யார் இந்த சேலையூர் அப்துல் ரகுமான், அவர் எப்படி பட்கல்லுக்கு இடம் கொடுத்தார் என்ற விவரங்கள் ஊடகங்கள் தெரிவிக்கவில்லை. மற்ற விசயங்களுக்கு பாய்ந்து க்ஷ்செல்லும் ஊடகங்கள், இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை, காட்டவில்லை. அதாவது, அந்த அப்துல் ரகுமான் “ஸ்லீப்பர்-செல்” வகையில் வருகிறாரோ என்னமோ?
2012ல் தில்லியிலிருந்து பீஹாருக்குத் தப்பி சென்றது: 2011 மும்பை குண்டுவெடிப்பிற்கு பிறகு, தில்லிக்குத் தப்பி சென்றான். அங்கு தன்னை லக்னௌவைச் சேர்ந்த இம்ரான் அஹமது [Imran Ahmed] என்று அறிமுகப்படுத்திக் கொண்ண்டு, ஜெய்தா இர்ஸத் கான் [Zahida Irshad Khan] என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டான். நவம்பர் 2012ல் தில்லி போலீஸார் வெடிமருந்து தயாருக்கும் தொழிற்சாலை வைத்ததற்காக ஆறு இந்தியன் முஜாஹித்தீன் ஆட்களை பிடித்தபோது, எச்சரிக்கை செய்ததால், பீஹாருக்குத் தப்பிச் சென்றான்[3]. அந்த ஆறுபேரில் இவனது மாமனார் மொஹமது இர்ஸத் கானும் [Mohammed Irshad Khan] அடக்கம். அங்கிருந்துதான், எல்லையைக் கடந்து சென்றுள்ளான். இவ்விசயத்தில் மும்பை மற்றும் தில்லி போலீஸாருக்கு இடையில் மனஸ்தாபம், கோபம், சண்டை முதலியன உள்ளன[4].
யாசினுக்கு மனைவி இருப்பதே எங்களுக்குத் தெரியாது: யாகூப் சித்திபாபா, யாசினின் மாமா, அவனுக்கு திருமணம் ஆனது, மனைவி இருப்பது என்பதெல்லாம் தெரியாது என்கிறார்[5]. செய்திகளினின்று தான் அவருக்கு தெரியவருகிறதாம்! அதேபோல, ஜெய்தா குடும்பத்தாருக்கு யாசினின் பின்னணி தெரியாதாம். அஞ்சர் ஹுஸைன் என்ற பெயரில் ராஞ்சியிலிருந்து பாஸ்போர்ட் பெற்றிருக்கிறான்[6]. 2008ல் உடுப்பியில் தங்கியிருக்கும் போது, அஹமதாபாத், தில்லி குண்டுவெடிப்புகளுக்கு வெடிப்பொருட்களை அனுப்பியிருக்கிறான். அப்பொழுதுதான், மதானியையும்ம் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது[7]. இதிலிருந்து ஒட்டு மொத்தமாக அவர்களது குடும்பத்தினர், தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று, தப்பித்துக் கொள்ள அல்லது யாசினை தப்பிக்கவைக்கப் பார்க்கின்றனர் என்று தெரிகிறது.
யாசின்தில்லியில்உருவாக்கியஆயுதங்கள்தொழிற்சாலை: தில்லியில் நங்லோய் என்ற இடத்தில் பலவித ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை வைத்திருந்ததை நவம்பர் 2012ல் போலீஸார் கண்டுபிடித்தனர். லேசான மிஷன் துப்பாக்கி மற்றும் ராக்கேட்டுகளை ஏவும் கருவிகள் முதலியவற்றை தயாரிக்கும் அளவில் அங்கு இயந்திரங்களை (லேத், டிரில்லிங், போரிங் முதலியன) வைத்திருந்தான்[8]. அவன் 18-வயதாக இருக்கும் போதே, 9/11 தாகுதலுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் நேடோ படைகளை எதிர்த்து போராட வேண்டும் என்று தீர்மானித்தானாம்[9]. அதைத்தவிர, ரெயிடுக்குப் போனபோது, ஆயுதங்களின் பகுதிகள், உதிரிகள், பாகங்கள் முதலியஅ கண்டெடுக்கப் பட்டன. அப்பொழுதே பெயில் இல்லாத கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. பட்கலில் FIRம் போடப்பட்டது. ஆனால், தப்பிச் சென்றுவிட்டான்[10]. அதாவது ஜிஹாதி போதனைகள் எப்படி அவனை அந்த வயதிலேயே மனத்தை இருக்கி, தீவிரவாதியாக மாற தீர்மானிக்கும் என்ற போக்கை அறிய முடிகிறது. இப்பொழுது கூட, குண்டுவெடிப்புகளைப் பற்றி விசாரித்தபோது, “ஆமாம், குண்டுகள் வெடிக்கப்பட்டன, அதற்கென்ன இப்பொழுது, அவை அப்படித்தான் நடந்தன, அதில் புதியதாக என்ன இருக்கிறது”, என்று கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் பதில் அளித்தானாம்[11].
ரம்ஜான்பண்டிகைக்குமனைவிக்குரூ.1 லட்சத்தைபரிசாகஅனுப்பியயாசின்பட்கல்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் உள்ள தனது மனைவிக்கு ரூ.1 லட்சத்தை பரிசாக அனுப்பியுள்ளார் பயங்கரவாதி யாசின் பட்கல்[12]. எந்த மனைவிக்கு (பட்கல் அல்லது தில்லி) அனுப்பப் பட்டது என்று தெரியவில்லை. இதன் மூலம் அவரது செயல்பாடுகளைக் கண்காணித்து வரை கைது செய்ய போலீஸாருக்கு உளவுத் துறை உதவியது. அவன் தனது மனைவிக்கு வங்கி மூலம் ரூ.1 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். இதனைக் கண்காணித்த இந்திய உளவுத் துறை, மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடுவதற்காக பட்கல் இந்தியாவுக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என்பதை சரியாகக் கணித்தது. இதன்படியே நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
நேபாள எல்லையில் என்ன நடக்கிறது?: நேபாள எல்லையில் தொடர்ந்து இரண்டாவது தீவிரவாதியைப் பிடித்துள்ளதில், சில கேள்விகள் எழுகின்றன. பொதுவாக நேபாளம் அனைத்துலக தீவிரவாதிகள், தப்பியோடும் குற்றவாளிகள், தேடப்பட்டு வரும் குற்றவாளிகள், முதலியோருக்கு மறைந்து வாழ்வதற்கு சிறந்த இடமாக இருந்து வந்துள்ளது. கம்யூனிஸ்டுகள் ஆட்சி வந்தபிறகு, ஊழல் கட்டுக்கடங்காத நிலையில் உள்ளது. பணம் கொடுத்தால் யாரும் கண்டுகொண்டாத நிலையுள்ளது. இதனை குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குறிப்பாக கள்ளநோட்டுகள், போதை மருந்து, விபச்சாரம் முதலியவற்றில் தாராளமாக ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும், நேபாளம் இந்தியாவின் நிலையை மதிக்கிறது என்று சொல்கிறது[13]. ஒரு கோணத்தில் பார்க்கும் போது, உலகத்திலேயே ஒரே “இந்து நாடு” என்று சொல்லப்பட்ட நேபாளம், கம்யூனிஸ்ட் நாடான பிறகு, இந்தியா ஒட்டு மொத்தமாக எதிரளல்லது இந்தியாவிற்கு சாதகமாக இல்லாத நாடுகள் சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுவிட்டது. குட்டி நாடுகள் எல்லாம், இந்தியாவை எதிர்த்து வருகின்றன, இந்தியாவிற்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டுள்ளன. இங்கும் வெளியுறவு மந்திரிகள் என்பவர்கள் இந்தியாவின் நிலைக்கு சாதகமாக வேலை செய்கிறார்களா என்று பார்த்தால், இல்லை என்றுதான் உள்ளது.
யாசின்பட்கல்புராணம் (தொகுத்தது): 1983ம் ஆண்டு கர்நாடக மாநிலம், வடகனரா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள சிறிய கடற்கரை நகரமான பட்கலில் பிறந்தவன் யாசின் பட்கல். இவனது இயற்பெயர் முகமது அகமது சரார் சித்திபாபா. இவரது தந்தை தொழிலதிபர் என்பதால் அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றுவிடுவார். இதனால் தனது தாயுடன் வசித்த இவன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பட்கல் நகரத்திலேயே முடித்தான். பொறியியல் படிப்பை முடித்த இவன் தொழிலில் தந்தைக்கு உதவுவதற்காக சவுதி அரேபியாவிற்கு சென்றான். அங்கு தந்தைக்கு சரிவர உதவாமல் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வந்தான். இதன் பின்னர் பட்கல் பகுதியில் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்[14]. ஆனால் அங்கிருந்து தப்பிய அவன் புனே பகுதியில் உள்ள அவனது பால்ய நண்பன் இக்பால் இஸ்மாயில் ஷாபந்த்ரி என்பவனுடன் சேர்ந்து யுனானி மருத்துவ பயிற்சி பெற்று வந்தான்.
பட்கல் சகோதரர்கள் குண்டுகளை தயாரித்து வெடித்தது (தினகரன்): இதனிடையே இக்பால் மதபோதகராக மாறினான். சிறிது காலத்திற்கு பிறகு இக்பாலும் அவரது சகோதரரான ரியாஸ் இஸ்மாயில் என்பவரும் சேர்ந்து ஒரு நடமாடும் முஸ்லிம் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். நாளடைவில் இந்த அமைப்பை லஷ்கர்-இ-தொய்பாவுடன் இணைத்து தீவிரவாத செயல்களில் ஈடுபட தொடங்கினார்கள். இந்த அமைப்பில் சேர்ந்த யாசின் பட்கல் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட தொடங்கினான். இதன் பின்னர் தான் இந்திய முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை தொடங்கி கடந்த 2008 முதல் பல்வேறு மாநிலங்களில் வெடிகுண்டுகள் வைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டான். தனது பொறியியல் நுண்ணறிவால் இவனே வெடிகுண்டுகளை தயாரித்து பல்வேறு மாநிலங்களில் வெடிக்கவும் வைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தான் பிறந்த மாநிலமான கர்நாடகாவின் சட்டம் , ஒழுங்கை சீர்குலைக்க 2008 மற்றும் 2010ம் ஆண்டுகளில் மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் மூளையாக செயல்பட்டுள்ளான். மேலும் 2012ம் ஆண்டு புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி வெடிகுண்டு சம்பவத்திலும் தொடர்பு கொண்டிருந்தான்.
இந்தியன்முஜாஹித்தீனின் குண்டுவெடிப்புகள் (தினகரன்): பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் நிதி உதவியுடன் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு. இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமிக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய அமைப்பு தொடங்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த யாசின் பட்கல், தனது சகோதரர்களான ரியாஸ் மற்றும் அப்துல் சுபான் குரேஷி ஆகியோருடன் சேர்ந்து இந்த இயக்கத்தை தொடங்கினான். புணேவில் ஜெர்மன் பேக்கரியில் 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் யாசின் பட்கல், ரியாஸ் பட்கல் உள்ளிட்டோர் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. வெளிநாட்டினர் உள்பட 17 பேர் அந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக 2010 ஆம் ஆண்டில் இந்தியாவும் 2011 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் அறிவித்தன. அதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி மும்பையில் உள்ள மேற்கு தாதர், ஜாவேரி பஜார், காவேரி ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் யாசின் பட்கல், அவரது கூட்டாளிகள் தஹசீன் அக்தர் வாசிம் அக்தர் ஷேக் (23), அசதுல்லா அக்தர் (26), வகாஸ் என்கிற அகமது (26) ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த மூவர் குறித்தும் தகவல் தெரிவிப்போருக்கு தலா ரூ. 10 லட்சம் பரிசுத் தொகையை மகாராஷ்டிர மாநில பயங்கரதவாதத் தடுப்புப் படை அறிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி தஹசீன் நீங்கலாக மற்ற மூவரும் மும்பையில் உள்ள முக்கிய சாலையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. தில்லி உயர் நீதிமன்ற வளாக வெடிகுண்டு தாக்குதல் உள்பட மூன்று பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் யாசின் பட்கல் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரது சகோதரர் ரியாஸ் பட்கலும் இக்பால் பட்கலும் தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வருவதாக மத்திய உளவுத் துறை சந்தேகிக்கிறது.
என்.ஐ.ஏகுற்றப்பத்திரிகை: கடந்த வாரம் தில்லி குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் யாசின் பட்கலுக்கு உள்ள பயங்கரவாதத் தொடர்புகளை அந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது. தில்லி, பிகாரின் தர்பங்கா, மும்பை, கர்நாடகத்தின் பட்கல், ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டாளிகள் மூலம் அங்குள்ள இளைஞர்களுக்கு “ஜிஹாத்’ (புனிதப் போர்) பயிற்சி அளிக்க யாசின் பட்கல் மூளையாக செயல்பட்டான்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 100 பேருக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் இதற்காகவே தாம் நேபாளத்தில் 6 மாதம் தங்கியிருந்ததாகவும் அந்த வாக்குமூலத்தில் பட்கல் கூறியிருக்கிறான். அதே நேரத்தில் புத்த கயாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தங்களுக்கு தொடர்பில்லை என்று பட்கல் தெரிவித்திருக்கிறான்[15].
[2] In 2009, the West Bengal police cracked an international fake currency racket operating via West Bengal and had even arrested Bhatkal but he managed to escape from there too. Bhatkal identified himself as Mohammed Ashraf from Darbhangadistrict in Bihar. He told the police that he was a ‘courier’ and was asked to ‘receive’ a consignment of fake currencies from Bangladesh. He was in jail for a month and later released on bail. Bhatkal managed to escape to Pakistan via Dubai only to return in February 2010 to Pune to carry out the blast at German bakery.
[10] The official, who has spent a significant time of his career investigating various terror cases across the country, said Bhatkal is “highly motivated” and “very ambitious” as he had set up a weapons manufacturing unit in Nangloi area of Outer Delhi way back in 2011. “He wanted to manufacture rocket launchers and LMGs (Light Machine Guns) in Delhi. This is evidence enough of how ambitious he is,” the official said. The Special Cell of Delhi police had busted an illegal arms factory located in Meer Vihar area of Nangloi in Outer Delhi in November, 2011. “This ordinance unit was first of its kind as it was equipped with machinery and the capacity to manufacture not only conventional arms but the ammunition required for them as well as fabrication of LMG and rocket launchers,” the official said. An FIR was filed against Bhatkal in the case on November 22, 2011 and later a non-bailable warrant was also issued against him for setting up the factory. The unit had elaborate equipment like moulding machine, lathe machine, cutting machine, assembly drilling machine and buffing/grinding machine besides explosives and iron pieces to be parts of pistols, carbines, rocket launchers among others, he said. Read more at: http://indiatoday.intoday.in/story/yasin-bhatkal-indian-mujahideen-9-11-attacks-nato-forces-afghanistan/1/304945.html
அண்மைய பின்னூட்டங்கள்