Posted tagged ‘தி இந்து’

“உண்மையும், பொய்யும்” [Truth vesus Hype] – “தி இந்துவை” தொடர்ந்த என்.டி.டிவியின் பிரச்சாரம் (31-01-2016)!

பிப்ரவரி 6, 2016

உண்மையும், பொய்யும்” [Truth vesus Hype] – “தி இந்துவைதொடர்ந்த என்.டி.டிவியின் பிரச்சாரம் (31-01-2016)!

NDTV - The Hindu secukar nexus operating

என்.டி.டி.வி ஆங்கில செய்திச் சேனல் ஹிந்து நாளிதழுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு சில வருடங்களுக்கு முன் Metronation Chennai Television Ltd[1] என்ற தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கியது[2]. இந்த நிறுவனத்தின் சார்பில் என்டிடிவி-ஹிந்து என்ற பெயரில் வெளியான இந்த டிவியில் மெட்ரோ செய்திகள் மட்டும் முதலில் ஒளிபரப்பட்டன. பின்னர் தமிழிலும், ஆங்கிலத்திலும் செய்திகள் ஒளிபரப்பட்டன. ஆனால் சன் டிவி நிறுவனத்தின் வியாபித்த நேயர் பரப்பை ஊடுறுவிப் போக இவர்களால் முடியவில்லை. மேலும் புதிய தலைமுறை என்ற புதிய செய்திச் சேனல் சன் நியூஸ் சேனலையே பின்னுக்குத் தள்ளியதால் என்டிடிவி-ஹிந்து மேலும் பின்னுக்குப் போய் விட்டது. தமிழ் சேனல்களுடன் போட்டியிட முடியாத காரணத்தினாலும், சரியான விளம்பர வருவாய் இல்லாத காரணத்தினாலும் இந்த சேனலுக்கு மூடுவிழா நடத்த இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருந்தன. அந்நிலையில் தினத்தந்தி நிர்வாகம் அதனை வாங்கி, ஏப்ரல் 14ம் தேதி 2012 தமிழ்புத்தாண்டு முதல் நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. அதாவது அளவுக்கு அதிகமாக பிரச்சார ரீதியில் செயல்பட்ட அச்செனல் மக்களிடம் எடுபடவில்லை. இருப்பினும், இவ்விரண்டும் பிரச்சார பீரங்குகளை முடுக்கிவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.  பொதுவாக இவ்வூடகங்கள் இந்திய நலன்களுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருவதும், கருத்துருவாக்கம் புனைவதும், பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளன.

Lions Of India - Usood ul Hind - The Mujahideen of Ansar ut Tawheed For Hind

உண்மையும், பொய்யும்” [Truth vesus Hype] என்.டி.டிவியின் பிரச்சாரம் (31-01-2016):  31-01-2016 அன்று, என்.டி.டிவி செனலில் “உண்மையும், பொய்யும்” [Truth vesus Hype] என்ற நிகழ்ச்சியை ஒலி-ஒளிபரப்பியது[3]. சீனிவாசன் ஜெயின் மற்றும் மனஸ் ரோஷன் இதை விவரிக்கின்றனர். “இதுவரை ஐசிஸ்ஸின் இந்தியாவின் மீதான அச்சுருத்தல் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐசிஸுக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் உள்ளதா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில், ஒருசிலரே அதனுடன் தொடர்பு கொண்டிருந்தனர். கடந்த வாரத்தில் 14 பேரை கைது செய்துள்ளதால், இந்தியா அதற்கான ஆதாரத்தைப் பெற்று விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது”. இந்தியாவில் இத்தனை வெடிகுண்டுகள் வெடித்தும், ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் அவற்றில் குரூரமாக-கோரமாகக் கொலையுண்டும், இன்னும் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் அவற்றில் குரூரமாக-கோரமாக கை-கால்கள் இழந்து படுகாயம் அடைந்தும், இன்று வரை அந்த பீதி, கலவரம், மனப்பிராந்தி, மனவுலைச்சல் முதலியவற்றிலிருந்து விடுபட இயலாமல் அவதியுற்று இருக்கும் நிலையில், இவர்களது முகாந்திரம், ஏதோ தீவிரவாதத்தை ஆதரிப்பது போலிருந்தது. நடுநடுவே, அஜய் சஹானி [Ajai Sahni, Executive Director, Institute for Conflict Management, Delhi] பர்வீன் ஸ்வாமி, இந்தியன் எக்ஸ்பிரஸ் [Prveen Swami, National Editor, Strategic & nternational Affairs, Indian Express] இவர்களின் கருத்துகளைக் கேட்பது போல காண்பிட்தாலும், அவர்கள் சொன்ன முழு கருத்துகளை போடாமல் மறைத்திருப்பது தெரிகிறது.

Mumbai blast victims - none bothers about their rightsஎன்டிடிவியின்எடிட்செய்யப்பட்ட, தீவிரவாதஆதரவு நிகழ்ச்சி: அஜய் சஹானி என்பவர், “இவர்கள் எல்லோருமே தீவிரவாத சித்தாந்தத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள், அவர்களது தலைவர்கள் இங்கும், பாகிஸ்தானிலும் இருக்கிறார்கள்”, என்று சொல்லி முடிக்கும் முன்னரே கட்டாகி விடுகிறது. இதிலிருந்து, அவர் மேலே சொன்னது இவர்களுக்கு சாதகமாக இல்லை என்றாகிறாது. உடனே சீனிவாசன் தோன்றி, இதற்கெல்லாம் என்ன ஆதாரங்கள் இருக்கின்றனர், கைது செய்யப்பட்டவர்கள் எல்லோருமே, கொடுத்துள்ள வாக்குமூலம் வழியாகத்தான் இவ்விவரங்கள் வெளிவந்துள்ளன. பதிலுக்கு, பர்வீன் சுவாமி “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தாம் தான் எந்த அளவிற்கு சம்பந்தம் இருக்கிறது அல்லது இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது”, என்றார். பல இடங்களில் குற்றஞ்சாட்டப்படுவதற்கேற்றபடியான, ஆவணங்கள், ஆதாரங்களை வைத்துதான், அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இல்லையென்றால், அவர்கள் பெயர்கள், விவரங்கள் எப்படி தெரிய வரும்?

செல்போன்கள், சிம் கார்டுகள், லேப்டாப்புகள் போன்றவை அதிகமாக வைத்திருந்தால் தீவிரவாதிகளாகி விடுவார்களா?: சபி அஹமது என்கின்ற யூசுப் அல்-ஹிந்தி, பட்கல், இவர்களின் இணைப்பாளனாக உள்ளான். இவன் இந்தியன் முஜாஹித்தீனின் பிரிவின்  தலைவனாக உள்ளான். இது அல்-குவைதாவின் பிரிவும் ஆகும். என்.ஐ.ஏ கீழ்கண்டவற்றை கைப்பற்றியுள்ளனர்:

  1. 45 செல்போன்கள்.
  2. 29 சிம் கார்டுகள்
  3. 9 லேப்டாப்புகள்
  4. 3 ஹார்ட்-டிரைவ்
  5. 3 பென் ட்ரைவ்

இதிலுள்ள விவரங்களை வைத்து மற்றும் அவர்கள் தீவிரவாதிகள் என்று தீர்மானித்து விடமுடியுமா என்று சீனிவாசன் கேட்பது வியப்பாக உள்ளது. அதற்கு ஒத்து ஊதுவது போன்று, மனஸ் ரோஷன், ஆகையால் தான் வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ளன, என்பது அதை விட வேடிக்கையாக இருக்கிறது. பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரேட், குச்சிகள் மற்ற ரசாயனப் பொருட்கள் [Potassiium Chlorate, Potassium Nitrate, sticks and other chemicals] வேடிக்கைக்காக வைத்திருந்தார்களா? முஸ்தாக் செயிக் வெடிகுண்டுகளைத் [Improvised expolosive devises (IED)] தயாரிக்கக் கட்டளையிட்டான். என்.ஐ.ஏ இவற்றையும், டைமர்களையும் மும்பை மற்றும் ஹைதராபாத் அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து கைப்பற்றியது[4]. 31-01-2016 அன்று சாகர், மத்திய பிரதேசத்தில் 132 டிடோனேடர்கள் உடபட்ட 1,000 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன[5]. ஹைரஜன் பெராக்ஸைட் மற்றும் ஜிஹாதி புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன[6]. ஒருவன் எதற்காக பத்திற்கும் மேலாக செல்போன்கள், சிம்கார்டுகள் முதலியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்? வைத்துக் கொண்டு சிரியா, பாகிஸ்தான் முதலிய நாடுகளில் உள்ளவர்களிடம் ஐசிஸ் பற்றி பேசவேண்டும்? இத்தனை உபகரணங்களை வைத்துக் கொண்டு, ஐசிஸ் தொடர்பாளர்களுடன் பேசியது முதலிய விவரங்கள் விளையாட்டிற்காக செய்யப்பட்டது போல அவர்கள் பேசுவது கேவலமாக இருக்கிறது.

வெடிகுண்டுகளைத் தயாரிப்பவர்களைக் கண்டிக்க வேண்டுமே தவிர ஆதரிக்கக் கூடாது: இந்திய முஜாஹித்தீன் எப்படி வெடிகுண்டுகளைத் தயாரித்தது என்பது நன்றகவே தெரியும். பிறகு முன்றாண்டுகளாக இவர்கள் ஐசிஸ் தொடர்புகளுடன், இவற்றையெல்லாம் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்க சீனிவாசன் ஜெயின் மற்றும் மனஸ் ரோஷன்களுக்கு தெரியாயமலா இருக்கும்? சீனிவாசன் ஜெயின் மற்றும் மனஸ் ரோஷன் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய விவரங்களை சேகரிக்க அங்கங்கு செல்கிறார்கள். ஆனால், 14 பேர்களையும் நாங்கள் சந்திக்க முடியவில்லை, என்று ஒப்புக் கொள்கிறார்கள். என்.ஐ.ஏவில் இருப்பவர்களை, இவர்கள் என்ன பேட்டிக் காண்பது? இவர்களுக்குத்தான் எல்லாமே தெரியும் என்றால், முன்னமே வந்து அறிவுரை சொல்லியிருக்கலாமே, அல்லது கவுன்சிலிங்கிற்கு அனுப்பியிருக்கலாமே? இப்பொழுது, இவர்கள் போலீஸாருக்கு, என்.ஐ.ஏவுக்கு அறிவுருத்துவது, ஆலோசனைக் கூறுவது தமாஷாக இருக்கிறது. மேலும், அவர்களது பெற்றோர், மற்றோர்களுக்கு எங்கு புத்தி போயிற்று? தங்கள் மகன்கள், மகள்கள் இவ்வாறு செய்து வருவதைக் கண்டிருத்து இருக்கலாமே, ஏன் தடுத்திருக்கலாமே? மனைவி-மக்களுடம் ஒழுங்காக வாழப்பா என்று மாமனார்-மாமியார் கூட கெஞ்சியிருக்கலாமே?

மௌலானா மோயின் கான், ஐசிஸ் ஒரு தீவிரவாத இயக்கம், அது மனித இனத்திற்கு எதிரானது, ஆபத்தானது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்கிறார்: முப்ரா என்ற இடத்திற்கு சென்ற போது, இப்படி கமென்ட் அடிக்கிறார்கள். பொதுவாக மும்ப்ராவில், முஸ்லிம்கள் போலீஸுக்கு எதிராகத்தான் ஆர்பாட்டங்கள் நடத்துவார்கள், ஆனால், இப்பொழுது ஐசிஸ்ஸுக்கு எதிராக நடத்தியுள்ளார்கள் என்று காண்பிக்கப்படுகிறது. மௌலானா மோயின் கான், ஜாமியா காத்ரியா அஸ்ரபியா மத்ரஸா, மும்ப்ரா, மும்பை, ஐசிஸ் ஒரு தீவிரவாத இயக்கம், அது மனித இனத்திற்கு எதிரானது, ஆபத்தானது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்கிறார். அப்படியென்றால், அப்பகுதியில் இருக்கும் முஸ்லிம்கள் ஐசிஸ்ஸுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. பிறகு, மேலே எழுப்பியுள்ள கேள்விகள் இங்கும் பொறுந்துகிறது. பெற்றோர், உறவினர், நண்பர்கள், மற்றவர்கள் தங்களது கடமைகளினின்று தப்பிக்க முடியாது. அவர்களது நடவடிக்கைகளை அறிந்தும் அமைதி காத்திருக்கிறார்கள், ஆதரித்திருக்கிறார்கள் என்றாகிறது.

வேதபிரகாஷ்

06-02-12016

[1] Media group New Delhi Television Ltd (NDTV) and Kasturi and Sons Ltd (publisher of The Hindu newspaper) are selling their two-year-old joint venture Metronation Chennai Television Ltd that runs the city-based English news channel, to Educational Trustee Company Pvt Ltd, for Rs 15 crore.

http://in.reuters.com/article/idINIndia-59798520111010

[2] http://www.ndtv.com/convergence/ndtv/corporatepage/ndtv_hindu.aspx

[3] http://www.ndtv.com/video/player/truth-vs-hype/truth-vs-hype-of-isis-indian-franchise/401485

NT-TV, Truth Vs Hype Of ISIS’ Indian Franchise, PUBLISHED ON: JANUARY 31, 2016 | DURATION: 22 MIN, 22 SEC

[4] http://economictimes.indiatimes.com/news/defence/arrested-islamic-state-men-were-using-matchsticks-to-make-bomb/articleshow/50799696.cms

[5] Three men arrested with 1000 kg explosives, 132 detonators in Madhya Pradesh, Besides the massive haul of explosives, around 132 detonators and other materials were also seized by the police. Meanwhile, the questioning of the three men is underway. Further details awaited.

http://www.dnaindia.com/india/report-three-men-arrested-with-1000-kg-explosives-132-detonators-in-madhya-pradesh-2172232

[6] Other than Mushtaq among those arrested include Mohammad Nafees Khan of Mohammad Shareef Mounuddin Khan from Hyderabad, Najmul Huda of Mangalore and Mohammad Afzal of Bengaluru. NIA and central agency sleuths seized 42 mobile phones, including eight from ‘amir’, sources said.  Explosive material, detonators, wires, batteries and hydrogen peroxide besides ‘jihadi literature’ was also seized from those arrested.

http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3412561/India-s-Islamic-State-crackdown-NIA-pounces-14-desi-terror-recruits-attempt-procure-improvised-explosive-device.html

தீவிரவாதிகளின் உரிமைகளும், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளும் – குடியரசு தினத்திற்கு முன்பாக மற்றும் பின்பாக “தி இந்து” வக்காலத்து வாங்கியது!

பிப்ரவரி 6, 2016

தீவிரவாதிகளின் உரிமைகளும், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளும் – குடியரசு தினத்திற்கு முன்பாக மற்றும் பின்பாக “தி இந்து” வக்காலத்து வாங்கியது!

Indian Muslim youth become ISIS supporters, warriors

ஜனவரி 26 குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு பிரெஞ்சு ஜனாதிபதி பிங்கோயிஸ் ஹோலேன்டே [French President Francois Hollande] வந்த முன்பு, பெங்களூரு பிரஞ்சு தூதரகத்திற்கு, அவர் இந்தியாவுக்கு வரவேண்டாம் என்ற எச்சரிக்கைக் கடிதம் வந்தது[1]. இதனால், இந்திய அரசு பலத்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டன. தீவிரவாதிகளால் பாரிஸ் தாக்கப்பட்டது தெரிந்த விசயமே, எனவே, நிச்சயமாக இத்தகைய நடவடிக்கைகளைக் குறை சொல்ல முடியாது. ஆனால், “தி இந்து” போன்றவை 25-01-2016 அன்றே, சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகளின் உரிமைகளைப் பற்றி வக்காலத்து வாங்கி, தலையங்கத்தை வெளியிட்டது[2].  27-01-2016 அன்று தமிழிலும் தலையங்கமாக வெளிட்டது. பிரெஞ்சு ஜனாபதி வருகிறார் எனும்போது, நிச்சயமாக அந்நாட்டு தீவிரவாத-எதிர்ப்புத் துறை, எச்சரிக்கையாக, இந்திய அரசுக்கு, சில விவரங்களைக் கொடுத்திருக்கும். என்.ஐ.ஏவும் விசாரிக்காமல், முகாந்திரம் இல்லாமல் வெறும் சதேகத்தின் பேரிலேயே அனைவரையும் கைது செய்து விட்டதாக ஆகாது. உத்தரக்காண்டத்தில், ரூர்கி நகரில் கைது செய்யப்பட்ட அக்லக் உர்-ரஹ்மான் (20), மொஹம்மது அஜிம்முஸன் (20), மொஹம்மது மீரஜ் என்கின்ற மோனு (20), ஒசாமா மொஹம்மது என்கின்ற ஆதில் (18) மூலம் தான் விவரங்கள் தெரியவந்தன. இவர்கள் எல்லோருமே சிரியாவைச் சேர்ந்த அன்ஸார்-உத் தௌஹீத் பி பிலால் அல்-ஹிந்த் [Ansar-ut Tawhid fi Bilal al-Hind] என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தனர். அதன் பிறகுதான் மற்ற கைதுகள் பெங்களூரு, ஹைதரபாத், மும்பை முதலிய இடங்களில் நடந்தன.

Gazwa e Hind green map

தி இந்துவின் வக்காலத்து வாங்கும் போக்கு (தி இந்து, 27-06-2016)[3]: தி இந்து, தீவிரவாதத்திற்கு வக்காலத்து வாங்கியுள்ள தன்மை, அதன் தலையங்கத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது: “உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ். பயங்கரவாதம் இந்தியாவில் கால் பதிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் சமீபத்தில் தெரிய வந்திருக்கின்றன. அந்த அமைப்புக்கு ஆதரவானவர்கள் என்று கருதப் படும் 18 பேர், நாச வேலைகளின் ஈடுபடத் திட்டமிட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் உத்தராகண்ட் மாநிலத்திலிருந்து டெல்லி காவல் துறையாலும், மற்றவர்கள் ‘தேசியப் புல னாய்வு முகமை’ (என்.ஐ.ஏ.) அமைப்பாலும் கைதுசெய்யப்பட்டனர்.

பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த பயிற்சி முகாம்களுக்கான ஏற்பாடுகளில் 14 பேரும் ஈடுபட்டிருந்ததாக என்.ஐ.ஏ. தெரிவிக்கிறது. ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் உள்ள ‘அன்சருல்-தவ்ஹீத்’ என்ற பெயருள்ள பயங்கரவாதக் குழுவின் தலைவர் ஷஃபி அர்மார் என்கிற யூசுஃப் என்பவருடன் இந்த 18 பேரும் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்திய முஜாஹிதீன் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களில் சிலர் ‘அன்சருல்-தவ்ஹீத்’ அமைப்பிலும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தெரிவிக்கிறது, கூறப்படுகிறது, தெரியவந்துள்ளது, தெரிய வந்திருக்கின்றன என்று சொல்வதிலிருந்து, உலகத்தில், இந்தியாவில் நடப்பது, ஒன்றுமே தெரியாது என்ற பாணியில் எழுதியுள்ளது. இந்தியாவில் என்ன இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்கவில்லையா, அதனால், அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் சாகவில்லையா? அவையெல்லாமே பொய்யாகி விட்டனவா? அவர்களது உரிமைகளைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?

அண்டை நாடான வங்கதேசத்தில் சில ஐ.எஸ். அனுதாபிகள் தாக்குதல்களை நடத்தியிருக்கும் சூழலில், இவ்விஷயத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்”, என்கிறது[4].

khilafat-e-rashida-is-the-only-solution

கெடுபிடிகளைக் காட்டாமல் அடையாளம் காண வேண்டும் (தி இந்து, 27-06-2016): அதேசமயம், அளவுக்கு மீறி அரசு பலத்தைப் பிரயோகிக்காமல், சந்தேகத்துக்குரியவர்களிடம் கெடுபிடிகளைக் காட்டாமல் இந்த பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களையும், அவர்கள் செயல்படும் குழுக்களையும், எந்த அமைப்பிலும் சேராமல் தனித்து இயங்கக்கூடியவர்களையும் அடையாளம் காண வேண்டும்.

இத்தகைய விசாரணைகளின்போது அப்பாவிகளை அலைக்கழிக்காமலும் சட்டபூர்வ உரிமைகளை மீறாமலும் வெகு கவனமுடன் செயல்பட வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் வெளிப்படையாகவும், தொழில்முறையிலும் விசாரணைகள் நடைபெறுவதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும். அப்படிச் செய்வது பொது அமைதியைக் காப்பதுடன், சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு உள்ளாவோரின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் ஊறு நேராமல் காப்பாற்றும்.

குண்டுகளை தயாரிப்பதில், குண்டுகளை வெடிக்க வைத்ததில், அப்பாவி மக்களைக் குரூரமாகக் கொன்றதில், பலத்தை பிரயோகிக்கவில்லையா? அவர்கள் அவ்வாறு செய்வதை சட்டங்களை மீறியதாகாதா? வெளிப்படையாகவும், தொழில்முறையிலும் அவர்கள் அறிவித்தா குண்டுகளை வெடித்து கொன்றார்கள்? ஜிஹாதிகள் அப்படித்தான் தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் ஊறு நேராமல் காப்பாற்றினார்களா? ஜிஹாதிகளின் கொலைவெறி வன்முறைக்கு முன்னால் அஹிம்சை போராட்டமா நடத்த முடியும்?

பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோரை அரசு அமைப்புகள் நடத்தும் விதத்தில்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றி அல்லது தோல்வி கிடைக்கும் என்பது உலக அனுபவம்.

1993 Mumbai blast- who pay for the victims.1

1993 Mumbai blast- who pay for the victims.1

வன்முறைச் சிந்தனைகளுக்கு ஆளானோருக்குக் கூட பேசியே தீர்த்துக்கொள்ள வழியிருப்பதும் புலனாகும் (தி இந்து, 27-06-2016): குற்றம்சாட்டப்படுவோருக்கு எதிரான விசாரணைகளும், குற்றப்பத்திரிகைத் தாக்கல்களும் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டு முடிக்கப்பட வேண்டும்.

வழக்கு விசாரணையும் விரைவாக நடந்து தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுக்கு உள்ள அக்கறையுடன், மக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசுக்குள்ள பொறுப்பும் சேர்ந்து வெளிப்பட வேண்டும். அதே சமயம் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குக்கூட அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்.

காலவரம்பு நிர்ணயித்தா குண்டுகள் வைத்டுக் கொன்றார்கள்? அந்த பயங்கரவாதிகளின் பெற்றோர், மற்றோர் எந்த பொறுப்புடன் அவ்வாறு ஈடுபட வைத்தார்கள்? “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக்கூட அரசியல் சட்டம் அளிக்கும் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்” என்று வெட்கமில்லாமல் வக்காலத்து வாங்கும் போது, ஜிஹாதி குரூரத்தால் கொலையுண்டவர்களின் சட்டப் பாதுகாப்பு என்னவாயிற்று?

இதனால் வன்முறைச் சிந்தனைகளுக்கு ஆளானோருக்குக் கூட இந்திய ஜனநாயகத்தின் மாண்பும், எந்தக் குறை இருந்தாலும் அதை பேசியே தீர்த்துக்கொள்ள வழியிருப்பதும் புலனாகும்.

1993 Mumbai blast- who pay for the victims.3

1993 Mumbai blast- who pay for the victims.3

அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு இழைத்த அநீதிக்குப் பதிலடியாகத்தான் நாசவேலைகளில் ஈடுபட நேர்கிறது (தி இந்து, 27-06-2016): தங்கள் கோரிக்கைகளும் மனவருத்தங்களும் நியாயமானவை தான் என்றும், பாராமுகமாக இருக்கும் அரசுக்கு எதிராக நேரடி நடவடிக்கைகளில் இறங்க நேர்கிறது என்றும் கருதும் இளைஞர் குழுக்களும் தனிநபர்களும் இப்படி நாச வேலைகளில் இறங்குவதை வரலாறு நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு இழைத்த அநீதிக்குப் பதிலடியாகத்தான் நாசவேலைகளில் ஈடுபட நேர்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள். 1990-களிலிருந்து மத அடிப்படையிலான பயங்கரவாதத் தாக்குதல்கள் நாட்டில் 3 முறை நடந்துள்ளன. பயங்கரவாதச் செயல்களில் நாட்டமுள்ள இளைஞர்களுக்கு எதிரான வழக்குகளை நியாயமான, வெளிப்படையான, விரைவான நடைமுறைகள் மூலம் நடத்தி முடிப்பது மிக முக்கியம்.

ஜிஹாதி குரூர கொலையாளின் கோரிக்கைகளும் மனவருத்தங்களும் நியாயமானவை என்று யார் தீர்மானித்தது? “பாராமுகமாக இருக்கும் அரசுக்கு எதிராக நேரடி நடவடிக்கைகளில் இறங்க நேர்கிறது” என்றால், இந்தியர்கள் எல்லோருமே இறங்கலாமே? உதாரணத்திற்கு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அவ்வாறே செயல்படலாமே? அவர்களின் கோரிக்கைக்கள், பாதிப்புகள் என்ன என்பதன இத்தனை ஆண்டுகள் யாரும் கவலைப்படவில்லையே?

இந்த ஆபத்தை எதிர்கொள்வதற்கு இதைவிட சிறந்த வழி இப்போதைக்கு இல்லை. “தி இந்து” இப்படி வக்காலத்து வாங்கிய ஐந்தே நாட்களில் அதன் தோழமை என்.டி.டிவி, இவ்வாறு பயங்கரவாத ஆதரிப்பை வெளிப்படுத்தியுள்ளது.

huji Bangaladesh

huji Bangaladesh

தீவிரவாதிகளின் உரிமைகளும், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளும்: பொதுவாக மனித உரிமைகள் போர்வையில், “தி ஹிந்து” போன்ற ஊடகங்கள் எப்பொழுதும் சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் உரிமைகளைப் பற்றி அதிகமாகவே கவலைப்படுவது, செய்திகளை வெளியிடுவது என்ற போக்கில் இருந்து வருகிறது. ஆனால், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர் மற்றும் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதே இல்லை. எய்ட்ஸ் வரும் அதனால், கான்டம் போட்டுக் கொள் என்று, அதனை எப்படி ஆண்கள் மாட்டிக் கொள்ளவேண்டும் என்று செய்து காட்டி விளக்கம் அளிக்கும் போது, அதனை பாராட்டுகிறார்கள். என்ன இப்படி பொது இடத்தில் பலருக்கு முன்னிலையில், அதிலும் பெண்கள் இருக்கும் போது, இப்படியெல்லாம் செய்து காட்டுகிறார்களே என்று யாரும் எதிர்க்கவில்லை. விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று அனுமதிக்கப்பட்டது, படுகிறது. ஆனால், தீவிரவாதிகள் இப்படி இருப்பார்கள், அவர்கள் குண்ட் தயாரிப்பார்கள், குண்டுவெடித்தால் சாவு ஏற்படும், அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், தீவிரவாதிகளை கண்டுகொள்ள வேண்டும் என்று யார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்? பிறகு முன்னெச்சரிக்கை கைதுகளை எதிர்ப்பதேன்?

வேதபிரகாஷ்

06-02-12016

[1] http://www.firstpost.com/world/letter-cautions-french-president-on-india-visit-says-bengaluru-police-2593784.html

[2] http://www.thehindu.com/opinion/editorial/nias-crackdown-on-is-terror-suspects-alert-fair-transparent/article8148224.ece?ref=relatedNews

[3] தி இந்து, வெளிப்படையான விசாரணை தேவை, தலையங்கம், Published: January 27, 2016 09:34 ISTUpdated: January 27, 2016 09:35 IST.

[4]http://tamil.thehindu.com/opinion/editorial/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88/article8157012.ece