Posted tagged ‘திப்பு சுல்தான்’

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (7)

நவம்பர் 13, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (7)

Sankaracharya and Tipu

Sankaracharya and Tipu

மிலேச்சன் திப்புவுக்கு சிருங்கேரி ஆச்சாரியார்சண்டீஹவனம்செய்து, ஜாதகம் கணித்துக் கொடுத்தாரா?: எதிரிகளை வெல்ல மற்றும் தனது அரசின் மேன்மைக்கு, சங்கராச்சாரியாரை தினமும் மூன்றுமுறை ஈஸ்வரனை வணங்கி, “சண்டீஹவனம்” செய்யுமாறு வேண்டிக் கொள்கிறான்[1]. இங்கு எதிரிகள் என்றால் “இந்துக்கள்”, அதிலும் “ஹிந்து சாம்ராஜ்யம்” உருவாக்க பாடுபடும் மராத்தியர். அப்படியென்றால், சங்கராச்சாரியார் இந்துக்களுக்கு எதிராக மூன்றுமுறை ஈஸ்வரனை வணங்கி, “சண்டீஹவனம்” செய்தாரா? இன்னொரு கடிதத்தில் தனது ஜாதகத்தைக் கணித்துத் தருமாறு சொல்கிறான். உண்மையிலேயே சங்கராச்சாரியார் அவ்வாறு செய்தாரா, இல்லையா என்று எடுத்துக் காட்டப்படவில்லை. ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், எல்லாம் சாஸ்திரங்களும் தெரிந்தவர், எப்படி “மிலேச்சனுக்கு” அவ்வாறு அருளினார் என்பதுதான் கேள்வி. மேலும் மிலேச்சனுக்காக அவ்வாறு செய்தார் என்று எந்த மடமும் ஒப்புக்கொள்ளாது. மேலும், ஜோதிடம் பார்க்க சில பிராமணர்களை அரசவையிலேயே வைத்திருந்தான் எனும் போது, இது அதிகமாகவேக் காணப்படுகிறது. ஏனெனில், எந்த சங்கரச்சாரியாரும், ஒரு முகமதியனுக்கு ஜாதகம் கணித்து கொடுத்தார் என்பதெல்லாம் பிதற்றலானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

What Sringeri informs about Tipu

What Sringeri informs about Tipu

திப்பு எழுதியதாக சொல்லப்படும் கடிதங்களுக்கு ஆதாரம் இருக்கிறதா?: ஏ. கே. சாஸ்திரி என்பவர் 1753-1799 ஆண்டுகளில் திப்பு சங்கராச்சாரியாருக்கு ஶ்ரீ சச்சிதானந்த பாரதி – III அனுப்பியதாக சொல்லப்படும் 47 கடிதங்களை பதிப்பித்தார்[2].  அதாவது, திப்பு அனுப்பியதாகத்தான் உள்ளது, பதிலுக்கு, இவர் அனுப்பியதாக எந்த கடிதமும் இல்லை. ஆகவே, இருவழி போக்குவரத்துக்கான ஆதாரம் இல்லை. கடிதங்களில் திப்புத் தரப்பில் உள்ளவற்றை, சிருங்கேரி ஆதரித்து சரித்திரம் போல அதன் தளத்தில் போட்டிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது[3]. ஆகவே, இக்கடிதங்களுக்கு சரித்திர ரீதியில் எந்த ஆதாரம் இருக்கிறது என்று தெரியவில்லை. இடைக்காலத்தில் முகலாயர்கள் இந்துக்களை ஏமாற்ற அல்லாபுநிஷத், பாவிஷ்ய புராணம் முதலியவற்றை புழக்கத்தில் விட்டது போல, 18வது நூற்றாண்டிலும், முஸ்லிம்கள் அத்தகைய யுக்தியை பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிகிறது. இக்கடிதங்கள், “திப்புவின் கடிதங்கள்” என்று முன்னர் வெளியிடப்பட்ட எந்த புத்தங்களிலும் காணப்படவில்லை. எந்த விதத்திலும் ஒவ்வாத இத்தகைய போலித்தனமாக ஆதாரங்களை தவிர்ப்பதே நல்லது.

What Sringeri informs about Tipu.2

What Sringeri informs about Tipu.2

முகலாயர் மற்றும் திப்பு போன்ற தீயசக்திகள் மக்களைக் கொல்ல அவற்றை உபயோகப்படுத்தினர்: முகலாயர் மற்றும் திப்பு போன்றவர்கள் தீயசக்திகள் போன்று அறியப்பட்டிருந்ததால், மக்களைக் கொல்ல, அவற்றை – வெடியுப்பு, வெடிமருந்து போன்றவற்றை – உபயோகப்படுத்தினர் என்று பறைச்சாற்றிக் கொண்டால், அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆகவே, திப்பு ராக்கெட்டைக் கண்டுபிடித்தான் என்பதெல்லாம், உள்ள சரித்திரத்தை மறைத்து, அளவுக்கு அதிகமான வர்ணனை எனலாம். மேலும் சரித்திராசிரியர்கள், விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பங்களின் தோற்றம், வளர்ச்சி, விருத்தி (Origin, progress and development of Science and Technology) போன்றாவற்றை அறிந்து கொள்ளாமல், சரித்திரத்தை விதவிதமாக எழுதிக் கொண்டிருப்பது, எல்லோரையும் ஏமாற்றுவது போலாகும். இன்றைக்கு, விவரங்கள் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இருப்பதால், உலக நாகரிகங்களைப் பற்றி ஒப்புமைப்படுத்தி அறியமுடியும் நிலை உருவாகி இருப்பதால், எதை, யார் முதலில் கண்டுபிடித்தார் என்பது, அங்கங்கு இருக்கும் பொருட்களான ஆதாரங்கள் (material evidences) மூலம் தெரியவருகிறது.

Hazarat Tipu Urs celebrated.1

Hazarat Tipu Urs celebrated.1

ஹஜரத் திப்பு சுல்தான் உர்ஸ் கொண்டாட்டம்: திப்புவை ஹஜரத் ஆகி, ஹஜரத் திப்புவுக்கு உர்ஸ் கொண்டாடத்தையும், முஸ்லிம்கள் நடத்தி வருகிறார்கள்[4]. ஜூன் 1999ல் திப்பு சமாதியில் அமர்க்களமாக கொண்டாடப்பட்டது[5]. 220 உர்ஸ் விழா மற்றும் படங்களை விவரங்களுடன் இங்கே காணலாம்[6]. இங்கு காந்திக்கு இணையாக திப்புவை வைத்திருப்பதால், இருவரும் ஒரே நிலையில் உள்ளனர் என்று எடுத்துக் கொள்ளாலாமா? முன்பு காந்தி விசயத்தில், அலி சகோதரர்களில் ஒருவரான, மொஹம்மது அலி, ஒரு கேடுகெட்ட முஸ்லிமை நான் மதிப்பேனே தவிர காந்தியை மதிக்க மாட்டேன், ஏனென்றால், அவர் ஒரு காபிர் என்றனர் [“In my eye, Gandhi is worse than a fallen Mussalman.”]. ஆக, இங்கு காந்தியை திப்புவுக்கு இணையாக வைத்து, உயர்த்துகின்றனரா அல்லது தாழ்த்துகின்றனரா என்று தெரியவில்லை. 223 உர்ஸுக்கு அழைப்பிதழ் “உர்ஸ்-ஏ-ஷரீப் முபாரக்” எல்லாம் அமர்க்களமாக அச்சடித்து விநியோகிக்கப்பட்டது. காந்தி மற்றும் திப்பு படங்களை ஒன்றாக வைத்து, மாலைப் போட்டு, தேங்காய் உடைத்து, ஊதுவத்திகள் ஏற்றி, வெற்றிலை-பாக்கு-பழங்கள் வைத்து, ஜோராக பூஜை செய்யப்பட்டது. இவற்றை புகைப்படங்களிலிருந்தே கண்டு கொள்ளாலாம். மைசூர் வக்ப் எஸ்டேட் இதற்கு ஆதரவு அளிக்கிறது. இவையெல்லாம் இஸ்லாத்தில் ஏற்கப்பட்டவையா என்று தெரியவில்லை. சமாதிகளை சின்னங்களாக வைக்கக்கூடாது; வணங்கக் கூடாது; விழா நடத்தக் கூடாது; என்றெல்லாம் ஆர்பாட்டமாக பிரச்சாரம் செய்யும் போது, இவற்றையெல்லாம் எப்படி முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்?

Hazarat Tipu Urs celebrated.2

Hazarat Tipu Urs celebrated.2

காஃபிர்மோமின், “தூய்மையானவன்” – “தூய்மையில்லாதவன்என்ற எண்ணம் இருக்கும் வரையில் முஸ்லீம் முஸ்லீமாகத்தான் இருப்பான்: அலி சகோதரர்களை காந்தி தனது சகோதரர்களைப் போல பாவித்தார். ஆனால், முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனைகளால், அலி சகோதரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளா முடியவில்லை. “காந்தியின் குணாதியம் (நடத்தை, பண்பு) எந்த அளவிற்கு தூய்மையாக இருந்தாலும், எனது மதத்தின் (இஸ்லாம்) பார்வையில் ஒரு குணாதியமே இல்லாத ஒரு முசல்மானை விட தாழ்ந்தவராகத்தான் தோன்றுகிறார்”. அதாவது இந்து “தூய்மையில்லாதவன்” ஆனால் முஸ்லீம் “தூய்மையானவன்” என்று சொல்வது “காஃபிர்” மற்றும் “மோமின்” என்று பிரித்து பாகுபாடு காட்டிப் பேசுவதுதான். அமினாபாத், லக்னௌவில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, முஹம்மது அலியை, என்ன காந்தியைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இதோ[7] – “ஆமாம், என்னுடைய மதம் மற்றும் நம்பிக்கையின்படி, ஒரு விபச்சாரத்தனமுடைய மற்றும் வீழ்ந்த (மிக மோசமான / கேடுகெட்ட) முசல்மான்தான் காந்தியைவிட உயர்ந்தவன்”! அதுமட்டமல்ல தாங்கள் உயர்ந்த முஸ்லீம்கள் என்பதனால், காந்தியுடன் செரமாட்டோம், மேடையில் சமமாக உட்காரமாட்டோம் என்றெல்லாம் கூட வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள், நடந்து காட்டியிருக்கிறார்கள். காந்தி தன்னுடைய எழுத்துகளில் அதனை தக்கேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார்[8].

Hazarat Tipu Urs celebrated.3

Hazarat Tipu Urs celebrated.3

ஷிர்க்விவகாரங்களில் முஸ்லிம்களும், நாத்திக அறிவுஜீவிகளும் இரட்டை வேடம் போடுவதேன்?: மொஹம்மது சமாதி-கல்லறையே ஷிர்க் என்று அழித்தவர்கள், திப்புவின் சமாதியை வைத்துக் கொண்டு ஏன் ஆர்பாட்டம் செய்கின்றனர் என்பதும் நோக்கத்தது. சைத்தானின் மீது கல்லெறிகிறேன் என்று, நெறிசல் ஏற்பட்டு ஹஜ் யாத்திரையின் போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அடிக்கடி இறக்கிறார்கள். உண்மையில் அல்லாவின் சக்தி பெரியதென்றால், அவர்களை அல்லா காப்பாற்றியிருக்கலாம். ஆனால், சாத்தான் வெற்றிக் கொள்வது போல, அவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். திராவிட-நாத்திக வீரமணி “அல்லா ஏன் காப்பாற்றவில்லை”, என்று கேட்டு, “விடுதலையில்” கட்டுரை எழுதவில்லை. பகுத்தறிவாளிகள்-நாத்திகர்கள்-அறிவுஜீவிகளான தபோல்கர், பன்ஸரே, கல்புர்கி, முதலியோரும் பேசவில்லை, புத்தகங்களில் குறிப்பிடவில்லை. இதிலிருந்தே, நாத்திகம் என்று சொல்லிக் கொள்பவர்கள் மற்ற மாநிலங்களிலும் “செக்யூலரிஸ” ரீதியிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, இஸ்லாம், கிறிஸ்தவம் என்றால், அவர்களது பகுத்தறிவு, நாத்திகம், அறிவுஜீவித்தனம் முதலியவை வேலைசெய்யாது. ஆனால், முஸ்லிம்களே அவ்வாறு இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதாவது, ஷிர்க் விசயத்தில் இரட்டைவேடம் போடுகிறார்கள் என்று தெரிகிறது.

Hazarat Tipu Urs celebrated.4

Hazarat Tipu Urs celebrated.4

ஒப்பீடு எப்படி செய்வது?: கஜினி மொஹம்மது, கோரி மொஹம்மது, மாலிக்காபூர், ஔரங்கசீப், போன்றோர்களின் ஜெயந்தியை கொண்டாடாமல் ஏன் இருக்கிறார்கள் என்ரும், செக்யூலரிஸ இந்தியர்கள் கேட்கலாம். அவர்கள் எல்லோரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து பாராடவில்லை எனலாம், ஆனால், இந்தியர்களுக்கு அவர்கள் வீரர்களா, தேச பக்தர்களா, தேசபிமானிகளா? எந்த வகையில் அவர்கள் வைக்கப்படுவர்? நாதிர்ஷா, 1739 படையெடுத்து வந்து, தில்லியைக் கொள்ளையெடித்தான். ஆக, நாதிர்ஷா ஜெயந்தியையும் கொண்டாடுவார்களா? வெளியிலிருந்து வந்தவர்கள், இங்கேயே தங்கி விட்டவர்கள், என்றுதான் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்கள். ஆனால், இந்திய தேசத்துவத்தை யார் ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பது மூலம் அடையாளம் காணப்படுகின்றனரே? அரவிந்தர், வ,உ.சி.ஐயர், சவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ் போன்றோரை, இந்தியர்கள் இன்றும் சில சித்தாந்த குழுக்கள் ராஜதுரோகிகள் என்று தான் பேசி-எழுதி வருகின்றனர். ஆனால், பெரும்பான்மையினர், அவர்களை மாபெரும் தலைவர்களாக, போராளிகளாக, தேச பக்தர்களாகத்தான் கருதப்பட்டு வருகிறார்கள். பிறகு எப்படி திப்பு எல்லா தியசக்திகளையும் விடுத்து, புண்ணியவானாக, தேவனாக, தூய்மையானவனாக கருதப்பட முடியும்?

© வேதபிரகாஷ்

13-11-2015

[1] For over 10 years Tipu remained in constant touch with the Shankaracharya and even the last recorded letter written in 1798 request the Swami to offer worship , three times a day to Lord Isvara and perform the Chandihavana, a special oblation, for the destruction of enemies and the prosperity of the government.

https://toshkhana.wordpress.com/2012/03/25/tipu-sultan-and-the-ring-of-rama/

[2] Dr. A.K. Shastry has published the contents of 47 letters from Tipu sent to the Sringeri Shankaracharya Sri Sacchidananda Bharati III who presided over the affairs of the mutt from 1753-1799 A.D. These letters range from Tipu Sultan enquiring after the Shankaracharya’s welfare to requesting him to pray for Mysore’s prosperity and even requesting his Holiness to cast a horoscope for Tipu. Tipu’s letters breathe an honest spirit of veneration for the Sringeri Guru.

https://toshkhana.wordpress.com/2012/03/25/tipu-sultan-and-the-ring-of-rama/

[3] http://www.sringeri.net/jagadgurus/sri-sacchidananda-bharati-iii-1770-1814

[4] https://toshkhana.wordpress.com/2012/06/04/the-light-of-islam-tipu-sultan-as-a-practising-muslim/

[5] http://www.islamicvoice.com/june.99/tippu.htm

[6] https://toshkhana.wordpress.com/2012/10/19/remembering-a-martyr-220th-urs-e-shareef-of-hazrath-tipu-sultan-shaheed/

[7] Mahathama Gandhi, Collected works, Volume.XXIII, Appendix, 13, p.569.

[8] Mahathama Gandhi, Collected works, Volume XXVI, p.214.

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (6)

நவம்பர் 13, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (6)

லூயிஸ் ரைஸ் - திப்பு பற்றி

லூயிஸ் ரைஸ் – திப்பு பற்றி

ஶ்ரீரங்கப்பட்டிடனும், திப்பு சுல்தானும்: லூயிஸ் ரைஸ் என்ற சரித்திராசிரியர் குறிப்பிடுவதாது, “திப்பு இறந்த போது, ஶ்ரீரங்கப்பட்டன கோட்டை வளாகத்தில் தினமும் பூஜை செய்யப் படும் வகையில் இரண்டே கோவில்கள் தாம் இருந்தன. அவைகூட, அவனது ஜாதகத்தைப் பார்த்து அவனுக்கு வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பவற்றை சொல்லும் ஜோதிடர்களுக்காக விட்டு வைக்கப்பட்டன. மதுவிலக்கு விசயமாக வருவாய் குறைந்ததால், அதனை சரிகட்ட ஒவ்வொரு இந்து கோவிலும் கொள்ளையடிக்கப்பட்டு அவற்றின் செல்வம் அபகரிக்கப்பட்டது”[1]. இதுதான் திப்பு சுல்தான் கோவில்களுக்கு மானியம் அளித்த லட்சணம். எம். எச். கோபால், “முசல்மான்களுக்கு வீட்டுவரி, தானியங்களின் மீதான வரி, மற்றும் விற்பனைக்கு என்றெல்லாத பொருட்கள் என்று அனைவற்றிற்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் தலைநகருக்கு அனுப்பப்பட்டனர். முகமதிய மதத்திற்கு மாறியவர்களுக்கு மட்டும் வரிவிலக்கு போன்ற சலுகைகள் கொடுக்கப்பட்டன. திவான் பூர்ணைய்யாவைத்தவிர மற்ற எல்லா இந்துக்களின் பதவிகளும் பறிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக முசல்மான்கள் பதவிக்கு அமர்த்தப்பட்டனர். வருவாய்துறையில் பாரசீக மொழியில் கணக்குகள் எழுதப்படும் முறை நுழைக்கப்பட்டது. அதுவரை கன்னடத்தில் தான் எழுதப்பட்டு வந்தது, பிறகு வேண்டியவர்களுக்கு மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டது”, என்று எடுத்துக் காட்டுகிறார்[2]. பிரமிளா நெசர்கி (Pramila Nesargi) என்ற பெண்ணிய மகளிர் அமைப்பு தலைவியும், இத்தகைய சரித்திர உண்மைகளை, டிவி-விவாதங்களில் எடுத்துக் காட்டினார். கன்னடத்தை மதிக்காதவனுக்கு எப்படி மதிப்பு கொடுக்கலாம் என்று கன்னடர்கள் பொதுவாக கேட்கிறார்கள்.

இந்தியாவில் வெடிமருந்து- 1000லிருந்து

இந்தியாவில் வெடிமருந்து- 1000லிருந்து

திப்பு ராக்கெட்டைக் கண்டுபிடித்தான் போன்ற வாதம்: இந்தியாவில் கோவில் திருவிழாக்களில் ராக்கெட்டுகளை விட்டார்கள், மேலே சென்று பலவித வண்ணங்கள் பொழிந்தன, என்று ஒரு இத்தாலிய அறுவைசிகிச்சை வல்லுனர் தமிழகத்திற்கு வந்தபோது, பார்த்ததை, தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். வெடியுப்பு, கந்தகம் மற்றும் கரித்துகள்கள் கலந்த பொடியை வாண-வெடிகளுக்கு பயன்படுத்தினர். வெடிமருந்து பாறைகளை உடைக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே உபயோகப்படுத்தப் பட்டது. சிற்பக்கலை, கோவில் கட்டுமான முறை, முதலியவற்றைக் கவனித்தால், 20-30 அடிகள் நீளம் கொண்ட பாறைகள் எவ்வாறு பிளக்கப்பட்டு, அறுக்கப்பட்டு அல்லது நீளத்தில் உடைக்கப்பட்டு தூண்களாக வடிக்கப்பட்டன என்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். கிணறுகள், ஆழ்கிணறுகள், படிகட்டுகள் கொண்ட ஆழ்கிணறுகள், முதலியவற்றைக் காணும் போதும், வெடிமருந்து உபயோகம் இந்தியாவில் இருந்தது அறியலாம்[3]. மேலும் “வெடியுப்பு” [Potassium Nitrate] என்பதும் அறியப்பட்டிருந்தது. ராஜபுத்திரர்களிடமிருந்து, முகல்களுக்கும், முகல்களிடமிருந்து மற்றவர்களுக்கும் இந்த நுட்பம் பரவியது[4].  அரேபியர்கள் மூலம் ஐரோப்பவிற்கு பரவியது. இடைக்காலத்தில் “வெடியுப்பு” (Saltpetre) இந்தியாவிலிருந்து பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஐரோப்பிய கம்பனிகள் இதில் ஈடுபட்டிருந்தன. இந்த “வெடியுப்பு” பீரங்களில் வைத்து வெடிக்கப்பட்டு, போரில் உபயோகப்படுத்தப் பட்டன. இந்தியா வெடிமருந்தை, ராக்கெட் போன்றவற்றை அடுத்தவறைக் கொல்வதற்குப் பயன்படுத்தவில்லை. ஏனெனில், பாறைகளை உடைத்து, சாலைகள் போடுவது, கிணறுகள் தோண்டுவது, கோவில்களுக்கான பாறைகளை விநியோகம் செய்தல் என்ற முறைகளில் ஈடுபட்டதனால், அத்தகைய வன்முறை காணப்படவில்லை.

Tipu satanic ring - Was it Ram or Rahim or Allah- fact or myth-making in process

Tipu satanic ring – Was it Ram or Rahim or Allah- fact or myth-making in process

திப்புவின்ராம்பொறித்த மோதிரம்: ஜூலை.27, 2012 அன்று ஆர்தர் சோமர்செட் காலமானபோது, “ரக்லான் சேமிப்பை” காப்பாற்ற வேண்டும் என்ற பிரச்சாரம் இங்கிலாந்தில் நடந்தது[5]. அதில் இருந்தது தான், திப்பு அணிந்ததாக சொல்லப்படும் மோதிரம் என்று தெரிய வந்தது[6]. நவம்பர்.15, 1793 தேதியிட்ட கடிதத்தில், திப்பு, சங்கராச்சாரியாரிடமிருந்து பெற்ற நகைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றான். ஆகவே, அவரிடத்திலிருந்து பெற்ற நகைகளில் மோதிரமும் இருந்திருக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்பட்ட, மோதிரத்தை பாதுகாப்பிற்காக, தனது விரலில் அணிந்திருக்கலாம்[7]. அம்மோதிரத்தை தலைகீழாக வைத்துப் பார்த்தால், அதே எழுத்துகள் “அரேபிக்” போன்றே காணப்படுகிறது. அதாவது, அது “ரஹீம்” அல்லது “அல்லா” போன்றே தெரிவதால், ஒருவேளை, அத்தகைய மோதிரத்தை அணிந்திருந்தான் எனலாம். மேலும், 2012லிருந்து தான் இதை வைத்துக் கொண்டு ஆர்பாட்டம் செய்து வருகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இன்றும், ஆஸம் கான், திப்புவைப் பற்றிய சர்ச்சைகளையெல்லாம் பற்றி ஒன்றும் தெரியாதது போல, மோடியை லண்டனிலிருந்து, அந்த மோதிரத்தைக் கொண்டு வாருங்கள், என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது[8]. தினம்-தினம் எத்தனையோ பேர் லண்டனுக்குச் சென்றுவருகிறார்கள். ஏன் இவரே சென்றிருக்கலாம், ஆனால், மோடியை வாங்கி வரச்சொல்வது, நக்கல்தான் என்று தெரிகிறது. மேலும் கத்தியை வாங்கிவந்த, மல்லையாவை வாங்கி வரச்சொன்னால், சரியாக இருக்கும். ஆகவே, இனி கம்யூனர் அரசியல்வாதிகள், தொடர்ந்து செக்யூலரிஸ விளையாட்டுகள் ஆடிக்கொண்டிருப்பார்கள் எனலாம்.

Sankaracharya and Tipu

Sankaracharya and Tipu

செக்யூலரிஸ மாயையில் சிக்கி உழலும் இந்துகள்: திப்பு சுல்தான் மற்றும் சிருங்கேரி சங்கராச்சாரியார் நட்பு, உறவு மற்றும் குரு-சிஷ்ய விவகாரங்கள் வேடிக்கையாகத்தான் இருக்கின்றன. அப்பவித்தனமான, எதையும் நம்புகின்ற, ஏமாளித்தனமான இந்துக்கள் வேண்டுமானால் நம்பலாம், ஆனால், மற்ற எவரும் நம்பத்தகும் விதத்தில் இல்லை. செக்யூலரிஸ முறையில் இதனை விளக்க வேண்டுமானால், இக்காலத்தில் தேர்தலில் எப்படி “இந்துக்களாக” இருந்தாலும் கூட்டணிகள் அமைத்துக் கொண்டு போரிடுகிறார்களோ, முன்னரும், இதேபோல மராத்தியர் மற்ற தென்னிந்திய அரசர்கள் சண்டையிட்டு வந்தார்கள். ஐரோப்பிய சக்திகளை ஒழித்து, இந்திய அரசை நிறுவவேண்டும் என்று மராத்தியர் பாடுபட்டனர். அவ்விதத்தில், அவர்கள் மைசூரின் மீது படையெடுத்தனர். இக்காலத்தில் எப்படி சங்கராச்சாரியார்கள் காங்கிரஸ், பிஜேபி, என்று பல கட்சிகள் / கூட்டணிகளை ஆதரித்து வருகிறார்களோ, அதுபோல 1790 காலத்திலும், சிருங்கேரி சங்கராச்சாரி திப்புவை அதரித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை எனலாம். இன்று கூட மதுரை ஆதீனம், கருணாநிதி, வீரமணி போன்றோருடன் நெருக்கமாக இருக்கிறார். ஆனால், முஸ்லிம்களிடம் பயந்து சாகிறார். ஆகவே, இந்துக்களை வைத்தே, இந்துக்களுக்கு எதிராக, இப்படியொரு யுக்தி மேற்கொள்ளப்பட்டது குறித்து ஆராய வேண்டும்.

© வேதபிரகாஷ்

13-11-2015

[1] The British historian Lewis Rice who wrote the History of Mysore and Coorg says how in the “…vast empire of Tipu Sultan on the eve of his death, there were only two Hindu temples having daily pujas within the Srirangapattanam fortress. It is only for the satisfaction of the Brahmin astrologers who used to study his horoscope that Tipu Sultan had spared those two temples. The entire wealth of every Hindu temple was confiscated before 1790 itself mainly to make up for the revenue loss due to total prohibition in the country.”

[2] Equally, MH Gopal in his Tipu Sultan’s Mysore: An Economic History says that, “Mussulmans were exempted from paying the house tax and taxes on grain and other goods meant for their personal use and not for trade. Christians were seized and deported to the capital, and their property confiscated. Converts to Islam were given concessions such as exemption from taxes…[Tipu] removed Hindus from all administrative posts and replaced them with Mussulmans with the exception of Diwan Purnaiah…Another change was the introduction of Persian as the medium of accounts in the revenue department. It was so far the practice in Mysore…to make out the revenue accounts in Kannada, fair copies of which were communicated to the amildars who had them translated into Marathi.”

[3] RusellM.S, Chemistry of Fireworks, Springer, 2009, Chapt.1, p.4, 7.

[4] Jermy Black, War in the Early Modern World 1450-1815, Routledge, Taylor & Francis Group, 1999, see.chapter – 5. Warehouse and gunpowder in India c.1000-1850, pp.105-128.

[5] http://www.raglanrescue.co.uk/

[6] http://www.christies.com/lotfinder/jewelry/an-indian-antique-gold-ring-5797668-details.aspx?from=searchresults&intObjectID=5797668&sid=7670f99f-f845-4665-92ca-046be3886694

[7] Of particular interest to the subject of the ring is a letter from Tipu to the Shankaracharya dated November 15, 1793 where he offers his salutation to the Guru and acknowledges receipt of jewellery from the Guru, a Sirapecha, Kalgi (both turban ornaments) and a pair of shawl. So we now know that  exchange of gifts was not just from Tipu Sultan to the Guru but also the other way round. Such a gift as this inscribed ring from the Guru would be treasured by the Sultan and kept as an auspicious token among his dearest possessions. Lord Rama is also called as ‘Maryada Purushottam Rama’; Maryada meaning ‘epitome of  ethical behaviour’ and Purushottam meaning ‘first among men’. Rama was a God and the Sultan but a man. If the Sringeri Shankaracharya did send this ring to Tipu, perhaps he was only pointing to Tipu an ideal that an earthly monarch should aspire for.

https://toshkhana.wordpress.com/2012/03/25/tipu-sultan-and-the-ring-of-rama/

[8] http://www.hindustantimes.com/india/bring-back-tipu-sultan-ring-bearing-lord-ram-s-name-azam-to-modi/story-hCpxN8Zq04NR03BtxGwXCK.html

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (5)

நவம்பர் 12, 2015
The Sword of tipu sultan - praises Allah for killing kafirs

The Sword of tipu sultan – praises Allah for killing kafirs

மைசூர் மஹாராஜாவும், திப்பு சுல்தானும்: திப்பு சுல்தான் உடையாரிடமிருந்து அரசை அபகரித்துக் கொண்டான். தானாக எந்த அரசையும் உருவாக்கிவிடவில்லை. அப்பொழுது, கர்நாடகம் “மைசூர்” கலாச்சாரத்தை மையமாகக் கொண்டிருந்தது. “மைசூர் மஹாராஜா” என்று ஒரு மதிப்பு இருந்தது. “நீ என்ன பெரிய மைசூர் மஹாராஜாவா?” என்று சாதாரண மக்கள் கேட்கும் அளவுக்கு அவர் இருந்தார். கலை, விஞ்ஞானம், இசை போன்றவை ஆதரிக்கப்பட்டன. இதனால், “மைசூர்” என்ற அடைமொழியுடன் பல வார்த்தைகள் மட்டுமல்லாது, அவற்றுடன் தொடர்புடைய இசை, கலை என்று பல உருவாகின. சமையலைப் பொறுத்த வரையில் மைசூர் பாகு, மைசூர் ரசம், மைசூர் போண்டா, மைசூர் பகோடா, என்று அன்றும், மைசூர் சந்தன சோப், மைசூர்பா என்று இன்றும் பல தோன்றின. கர்நாடக சங்கீதம், இசை என்ற வழக்கும் உருவாகின. கலைஞர்கள், வித்வான்கள், பண்டிதர்கள், என்று பலரும் மைசூர் அரசால் ஆதரிக்கப்பட்டனர். ஆனால், திப்புவின் ஆட்சியில் பாரசீகத் திணிப்பு இவற்றை தடுத்தது. ஜிஹாதி மதவெறியில் அனைத்தும் பாதிக்கப்பட்டன. ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பது மட்டில், அவன் இந்திய தேசியவாதியாகி விட முடியாது. தன்னுடைய வாழ்விற்காக அவன் பலவழிகளைக் கையாண்டான். பிரான்ஸ், இரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்பு கொண்டதும் அதற்காகத்தான். ஜிஹாத் மூலம் இஸ்லாமிய நாட்டை உருவாக்க வேண்டும் என்று தனது கடிதங்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.

Studio fire during shooting of tele-serial 'The Sword of Tipu Sultan kills more than 40- 1989

Studio fire during shooting of tele-serial ‘The Sword of Tipu Sultan kills more than 40- 1989

கத்தி அல்லது குல்லாமற்றும்திப்புவின் கத்தி: “கத்தி அல்லது குல்லா” என்ற கொள்கையைத்தான் கடைபிடித்தான்[1]. ஆனால், முஸ்லிம் ஆசிரியர்கள் அவற்றை வேறுவிதமாக திரித்து விளக்கம் கொடுத்து, அவனை “ஆங்கிலேருக்கு எதிரான போராளி” போன்று சித்தரிக்கின்றனர்[2]. “கத்தி” என்றால் கத்தி முனையில் மதமாற்றம், அதாவது, “இஸ்லாத்தை ஏற்றுக்கொள் அல்லது செத்து மடி”, என்ற குரூரமான கொள்கையைக் கடைபிடித்தான். அதனால் “கத்தி” என்றால், “இந்துக்களுக்கு சாவு” என்ற பொருளாகியது. அதனால் தான் “திப்புவின் கத்தி” (The sword of Tipu Sultan) என்றபோது, அவர்கள் அதனை எதிர்த்தனர். ஏனெனில், அது அவர்களின் மதம், கலாச்சாரம் மற்றும் தேசிய கௌரவத்தை இழிவுபடுத்துவதாக இருந்தது. ஆனால், மல்லையா போன்றவர்கள் அதனை ஆதரிக்க முயன்றனர். கர்நாடகாவைப் பொறுத்த வரையில், ஜனதா கட்சிகள் திப்புவை அரசியலாக்கி ஆதாயம் தேடியுள்ளன. சாராய மன்னன் மல்லையா 2004ல் தனது ஜனதா கட்சியின் சார்பாக பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். ராஜ்ய சபா எம்.பியான அவர், அரசியல் செல்வாக்கை உயர்த்தி கொள்ள, ரூ.1.5 கோடிகள் கொடுத்து, “திப்பு சுல்தானின் கத்தி” என்று லண்டனிலிருந்து ஏலத்தில் வாங்கி வந்தார். இதுவும், அப்பொழுதைய கர்நாடக தேர்தலை ஒட்டிதான் நடத்தப் பட்ட நாடகம் ஆகும்[3].

Tipu letters - cap or sword policy followed

Tipu letters – cap or sword policy followed

திப்புமற்றும்திப்புவின் கத்தி” – தீயசக்திகளின் சின்னங்கள்: கர்நாடகா மற்றும் கேரள கடற்கரையில் லட்சக்கணக்கான இந்துக்களைக் கொன்றும், மதமாற்றம் செய்தும், குரூரங்களை செய்ததால், திப்பு ஒரு தீயசக்தி, துர்தேவதை (evil force), விலக்கப்பட வேண்டியது ஒன்று, “சபிக்கப்பட்ட பெயர்” (cursed name) என்ற விதத்தில் கருதப்படுகிறது. அதனால், அப்பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் கூட அப்பெயரை தங்களது குழந்தைகளுக்கு வைப்பதில்லை. அவர்களது பாஷையில் சொல்வதானால், இரண்டுமே “சைத்தானின் சின்னங்கள்” ஆகும்[4]. திப்பு சுல்தானைப் பற்றிய வழக்குகள், பழமொழிகள் போன்றவையெல்லாம், அவனைக் கடுமையாக விமர்சிப்பதாகத்தான் இருந்துள்ளது. அவன் முகத்தைப் பார்க்கக் கூடாது, பார்த்தால் விளங்காது; எல்லாம் அழிந்து விடும் – நாசமாகி விடும்; குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவன் – கொல்கிறவன்; “திப்பு வருகிறான், என்று சொன்னால் அழுகின்ற குழந்தை அழுகையை நிறுத்தி விடும்” என்றெல்லாம் வழங்கி வருகின்றன. ஆனால், இப்பொழுது கர்நாடகாவில் காங்கிரஸ் போன்ற  கட்சிகள் அத்தகைய தீய சக்தி, தீய சின்னங்களை வைத்து ஆதாயம் தேட பார்க்கின்றன. ஆனால், இவற்றைப் பின்பற்றியவர்கள் அழிவைத்தான் தேடினர்.

Tipu satanic force killing many Hindus- Hindukush

Tipu satanic force killing many Hindus- Hindukush

தியசக்தி திப்பு அழிவை ஏற்படுத்தும் என்பது நிரூபனமானது: திப்பு சுல்தான் கத்தி [“Sword of Tipu Sultan”] என்ற தொலைக்காட்சி தொடரை தூர்தர்ஷனில் 1990ல் காண்பித்தனர், பிப்ரவரி 8. 1990 அன்று இந்த டிவி-சீரியல் எடுக்கப்பட்ட ஸ்டுடியோவில் பெருத்த தீவிபத்து ஏற்பட்டதில் 62 பேர் கருகி இறந்தனர்[5]. இந்த சீரியலின் நடிகர்-தயாரிப்பாளர் சஞ்சய் கானுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டு 13 மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, 72 ஆபரேஷன்களை செய்து கொண்டு வெளிவந்தார். உயிரிழந்தவர்கள், விளம்பர நிறுவங்கள் நஷ்டம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்கள்[6]. அத்தீ விபத்து நடந்த போதும், இது எடுத்துக் காட்டப்பட்டது. கத்தியை வாங்கிய மல்லையாவும் திவாலா நிலையை அடைந்து, பல குடும்பங்களின் வாழ்க்கையினைக் கெடுத்தான். இப்பொழுதும், சித்தராமைய்யாவின் “திப்பு ஜெயந்தி” இரண்டு உயிர்பலிகளைக் கொண்டது. இன்னும் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கவேண்டும்.

Tipu satanic force killing many kafirs- Hindukush

Tipu satanic force killing many kafirs- Hindukush

திப்புவின் ஜோதிட நம்பிக்கை: திப்புவுக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை இருந்தது. இதனால், தனது அரசவையில் பிரத்யேகமாக ஜோதிடர்களை வைத்திருந்தான். அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் செய்து கொடுத்தான். இவ்விதத்தில் தான் அவன் சில கோவில்களுக்கு மானியம் கொடுத்தது, பூஜை செய்தது போன்றவையெல்லாம் நிகழ்ந்துள்ளன. இந்துமதத்தின் மீதான மதிப்பு அல்லது உண்மையிலேயே காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. மேலும் 1790ற்குப் பிறகு அவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கணித்துச் சொன்னதால், அவனது அத்தகைய ஈடுபாடு அதிகமாகியது. சிருங்கேரி சங்கராச்சாரியுடனான தொடர்பும் இவ்வகையில் ஏற்பட்டது தான். அவருடைய காலில் விழுந்தான் என்றும் குறிப்புகள் உள்ளன[7]. இதையெல்லாம், ஆசாரமான முஸ்லிம்கள் ஒப்புக்கொள்வார்களா?

The real Tipu sultan, tyrant- believing horoscope

The real Tipu sultan, tyrant- believing horoscope

ஔரங்கசீப், திப்பு சுல்தான், கருணாநிதி: ஔரங்கசீப் கூட கோவில்களுக்கு மானிய வழங்கினான் என்று சில சரித்திராசிரியர்கள் எழுதுகிறார்கள். இதெல்லாம், இக்கால கருணாநிதி போன்றது. அவரும் தங்களால் தான் திருவாரூர் ஆழித்தேர் ஓடியது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார். ஆனால், உண்மையில் அந்த ஆளின் இந்து-விரோதத்தை எல்லோரும் அறிவர். அவர் காலத்திலும் சில கோவில்களுக்கு கும்பாபிசேகம் நடந்தது. அதாவது முதலமைச்சர் என்ற ரீதியில், இந்து அறநிலைத் துறையின் கீழ் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதால், அழைப்பு இதழ்களில் முதல் பக்கத்திலேயே, கருணாநிதியின் புகைப்படம் தான் போடப்பட்டது. இதெல்லாம் சாதாரண விசயம். இவர்கள் இல்லாமல் இருந்திருந்தாலும், அவை தானாக நடந்திருக்கும். அதாவது பெரும்பான்மையினர் இந்துக்களாக இருப்பதினால், அரசு ஆதரவு இருந்தாலும், இல்லாமலிருந்தாலும், காலக்கிரமப்படி நடக்கவேண்டிய கிரியைகள், சடங்குகள், விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.  கருணாநிதிக்கும் ஜோதிட நம்பிக்கை உள்ளது. ஆகவே, இவர்கள் (ஔரங்கசீப், திப்பு சுல்தான், கருணாநிதி) கோவில்களுக்கு மானியம் கொடுத்தது அந்த ரீதியில் தான்! இனி திப்பு விவகாரத்தை விவரரமாகப் பார்ப்போம்.

© வேதபிரகாஷ்

13-11-2015


[1] Tipu Sultan’s notorious jihâd – Islamic war-slogan – was SWORD (death) or CAP (Islamic honour, i.e. forcible conversion), a cruel option for a hapless Hindu population.

[2]  Prof. B. Shaik Ali, International Relations of Tipu Sultan, Islamic Voice, Monthly,   Vol 13-02 No:146    *   FEBRUARY 1999/ RAMADAN 1419H ;email: editor@islamicvoice.com

http://islamicvoice.com/february.99/tippu.htm=

[3] The timing of Mr. Mallya’s announcement of his acquisition made some six months ago has not gone unnoticed, coming as it does a fortnight before the first phase of polling in Karnataka. However, the working president of the Janata Party said: “This is not political. It’s personal.” Mr. Mallya’s party has fielded candidates in more than a hundred Assembly constituencies and half-a-dozen Lok Sabha constituencies in the coming elections in Karnataka. He described the sword as a unique piece of history and said that he bought it as a `proud Kannadiga’ in order to restore the `rightful legacy’ to Karnataka.

http://www.thehindu.com/2004/04/08/stories/2004040805881200.htm

[4] If Tipu Sultan was a much-loved and respected Muslim ruler, as claimed by his present-day admirers, why is it that even Muslim do not name their children as Tipu, either in Mysore or in Malabar? Obviously, the name itself is a cursed name. Anyway, that is the belief in the entire West Coast and Mysore

[5] http://indiatoday.intoday.in/story/studio-fire-during-shooting-of-tele-serial-the-sword-of-tipu-sultan-kills-more-than-40/1/323127.html

[6] http://indiatoday.intoday.in/story/the-sword-of-tipu-sultan-fire-sanjay-khan-faces-legal-action-for-negligence/1/323237.html

[7] When the astrologers predicted an approaching malefic period from 1790 onwards and the combined forces of the British, the Nizam and the Marathas started surrounding Srirangapatanam, Tipu Sultan panicked and therefore did some good deeds – offering land-grants and even pujas and feeding Brahmin – mainly to ward off the evil effects and to get assistance from his Hindu subjects in his war efforts. He was reported to have even fallen prostrate before His Holiness Sringeri Shankaracharya and sought the latter’s pardon and blessings (Sakthan Thampuran by P. Raman Menon, and History of Mysore by Lewis Rice).

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (4)

நவம்பர் 12, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (4)

Playwright and Jnanapith awardee Girish Karnad talks to the media at his house in Bengaluru on Wednesday-10-11-2015-. Photo- Bhagya Prakash. K

Playwright and Jnanapith awardee Girish Karnad talks to the media at his house in Bengaluru on Wednesday-10-11-2015-. Photo- Bhagya Prakash. K

ஜெயந்தி கூட்டத்தில் பேசிய விவரங்கள்: சித்தராமைய்யா, கிரிஸ் கார்னாட், பரகூரு ராமசந்திரப்பா, கோ சன்னபசப்பா, பேராசியர் சியிக் அலி, என்.வி. நரசிம்மைய்யா, விரப்ப மொய்லி, முதலியோர் திப்புவைப் புகழ்ந்து பேசினர். கிரிஸ் கார்னாட், திப்பு ஒரு இந்துவாக இருந்திருப்பின், சிவாஜி போன்று இடத்தைப் பெற்றிருப்பான், போற்றப்பட்டிருப்பான் என்று ரீதியில் பேசினார்[1]. அதுமட்டுமல்லாது, “தீபாவளி நாங்கள் திப்பு ஜெயந்தியை கொண்டாடுகிறோம், இதை நாங்கள் பிஹார் நாள் என்று கூட கொண்டாடுகிறோம்”, என்றெல்லாம் தொடர்ந்து பேசினார். “பெங்களூரில் தேவனஹல்லி விமானநிலையம், கெம்பகௌடாவுக்குப் பதிலாக திப்பு சுல்தான் பெயர் வைத்திருக்கலாம்”, என்றெல்லாம் கூட பேசினார்[2]. சித்தராமைய்யாவும் அவர் பேசியதை ஆமோதித்துப் பேசினார். மற்றவர்களும் திப்பு சுல்தான் செயூலரிஸ ஆட்சியாளர், கோவில்களுக்கு மானியம் வழங்கினான் போன்ற வழக்கமான விசயங்களை அள்ளி வீசினர். அவர்கள் பேசியதெல்லாம் திப்பு ஜெயந்தியை நடத்தினர் என்பதை விட, இந்த சாக்கை வைத்துக் கொண்டு, பிஜேபியைத் தாக்குவதும், இந்துக்களைக் கிண்டல் செய்வதுமாக இருந்தது. இவற்றையெல்லாம் மற்றவர்கள் எப்படி பொறுத்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

BJP workers protest against Girish Karnads statement in Bengaluru on Wednasday- 10-11-2015 Photo- Sudhakara Jain

BJP workers protest against Girish Karnads statement in Bengaluru on Wednasday- 10-11-2015 Photo- Sudhakara Jain

தேவனஹல்லி விமானநிலையம், கெம்பகௌடாவுக்குப் பதிலாக திப்பு சுல்தான் பெயர் வைத்திருக்கலாம்: கிரிஸ் கார்னாட் இவ்வாறு சொன்னது, எல்லோரையும் உசுப்பி விட்டுள்ளது.  முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவ கவுடா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கிரிஷ் கர்னாட் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அவரது உளறல்களுக்கு எதிராக நிறைய பேர் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தனர்[3]. குறிப்பாக கன்னட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தபோது தான்[4], தான் பேசியதனால் ஏற்பட்டுள்ளா பாதிப்பை உணர்ந்தார் போலும். இதனால், அரண்டு போன கிரிஸ் கார்னாட் புதன் கிழமை 11-11-2015 அன்று[5], “என்னுடைய விமர்சனத்தினால், யாராவது புண்பட்டிருந்தால், நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்……..நான் என்ன பலனைப் பெறப்போகிறேன் (அவ்வாறு விமர்சனம் செய்ததனால்)”, என்று சொன்னதிலிருந்தே, அவரது குற்ற உணர்வும், அதிகப்பிரசங்கித் தனமாக உளறியதும் மற்றும் விரக்தியும் வெளிப்பட்டது. மேலும், சித்தராமையா, “கிரிஸ் கார்னாட் அவ்வாறு பேசியது தப்புதான். …..அவர் ஏன் அத்தகைய விமர்சனம் செய்தார் என்று எனக்குத் தெரியாது. அவர் அவ்வாறு பேசியபோது அங்கிருந்தேன். அவர் சொன்னதை மறுத்துப் பேச நினைத்தேன். ஆனால், நான் செய்யவில்லை”, என்று சொன்னதிலிருந்துதான்[6], பிரச்சினையை எந்த அளவுக்கு வகுப்புவாத, ஜாதீய முறையில் மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்பியது வெளிப்படுகிறது. அங்கு விழாவின் போது, இவர் ஆதரித்துப் பேசியைதைக் கவனிக்க வேண்டும். ஆனால், இப்பொழுது, “அந்தர்-பல்டி” அடிக்கிறார்! அடித்தது, தங்களையே திரும்ப அடிக்கும் நிலை வந்ததை உணர்ந்து ஜகா வாங்கியிருப்பதும் தெரிகிறது.

Tipu jayanti celebrated in dhakshina karnataka.2

Tipu jayanti celebrated in dhakshina karnataka.2

தக்ஷிண கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டது: கர்நாடகாவில் இவ்வாறு பல இடங்களில் எதிர்ப்பு, போராட்டங்கள் என்று நடந்த வேளையில், தக்ஷிண கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டது[7]. தக்ஷிண கர்நாடகாவில் முஸ்லிம்கள் அதிகம். மேலும், இதற்கு சோசியல் டெமாக்ரெடிக் பார்ட்டி [SDPI] என்ற முஸ்லிம் அடிப்படைவாத இயக்கம் ஆதரவு தெரிவித்து, பிரச்சாரம் செய்தது. அவ்விழாவில் பேசியவர்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்றிருந்தாலும், சொல்லி வைத்தால் போல, திப்புப் புராணம் பாடியுள்ளது, தமாஷாக இருந்தது எனலாம். அதற்குள், மரடிகேரியில் முஸ்லிம்கள் அனுமததீல்லாமல் ஊர்வலம் நடத்தியுள்ளதாக பிஜேபி குற்றஞ்சாட்டியுள்ளது[8]. ஒரு நபரைப் பற்றி சர்ச்சைகள் உள்ளான என்றபோது, அறிந்தே, அந்நபரது ஜெயந்தி என்று அரசே தீர்மானித்து நடத்தியிருப்பது, மக்களை தூண்டிவிடும் போக்குதான் காணப்படுகிறது. மேலும் பொறுப்புள்ளவர்கள், பொறுப்பற்ற நிலையில் பேசியும் தெளிவாகியுள்ளது. மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றால், ஞானபீடம் விருது வாங்கியவருக்குஙென்ன பேசுகிறோம் என்று தெரியாமலா பேசினார். இவ்வளவு நடந்தும், ஒரு முஸ்லிம் சார்புடைய தளம், “திப்பு ஜெயந்தியை” ஆதரித்து பதிவு செய்துள்ளதை கவனிக்கவும்[9]. ஆற்றோரம்.காம் என்ற தளம் சொல்லியிருப்பதை அப்படியே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Tipu jayanti celebrated in dhakshina karnataka.1

Tipu jayanti celebrated in dhakshina karnataka.1

திப்பு ஜெயந்திவிழாவை சிறப்பாக கொண்டாடி முடித்த சித்த ராமையாகாவி கயவர்களின் சதியை முறியடித்த கர்நாடக அரசு! சங்பரிவாருக்கு அஞ்சாமல்  “திப்பு ஜெயந்திவிழாவை சிறப்பாக கொண்டாடி முடித்தது![10]: “இந்தியாவில் சுதந்திர போராட்டத்தை முதன்முதலில் நடத்தியவரும்,ஆங்கிலேயரை முதன்முதலாக துணிச்சலுடன் எதிர்கொண்ட மாவீரரான திப்பு சுல்தானை மக்கள் மறந்தாலும்,கர்நாடக அரசும் அதன் குடிமக்களும் மறப்பதில்லை.காரணம் திப்பு சுல்தான் பிறந்த வீரமண்தான் கர்நாடக மாநிலம் மைசூர் அவருடைய தியாகத்தை போற்றுவதற்காக வருடாவருடம் நவம்பர் மாதம் 10ஆம் தேதிதிப்பு ஜெயந்திவிழா நாடெங்கும் உற்சாகத்தோடு கொண்டாடுவது வழக்கம். இதை கண்டு பொறாமைப்பட்ட சங்பரிவாரக் கும்பல்கள் அவ்விழாவினை கொண்டாடும் மக்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட செய்திகளை செய்தி சேனல்களில் பார்த்திருப்பீர்கள். 10-11-2015 ன்று தலைநகர் பெங்களூரில் விதான்னா சௌதா பகுதியில் அமைந்திருக்கும் பேண்குவைட் மஹாலில்திப்பு ஜெயந்திவிழாவினை ஊர்மக்கள் ஒன்றுகூடி நடத்தவிருந்தனர். இவ்விழாவிற்கு சங்பரிவார கயவர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் கர்நாடக அரசாங்கமே முழு களமிறங்கி அம்மஹாலில் அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் இணைந்து விழாவினை சிறப்போடு நடத்தி முடித்தனர். அவ்விழாவில் திப்பு சுல்தானின் வீரமும், தியாகமும், இந்தியாவிற்காக அவர் பாடுபட்ட பொதுநலனையும் அதிகாரிகள் பேசினர்! மேலும்,அடுத்த வருடம் முதல் பெருவாரியான மண்டபங்களில் திப்பு ஜெயந்தி விழாவினை அரசே ஏற்று நடத்தும் எனவும், அதற்கு மிரட்டல் விடும் சமூக விரோதிகளுக்கு கடுங்காவல் தண்டனக அளிக்கப்படும் எனவும் அவ்விழாவில் ஆட்சியாளர்கள் உறுதி கூறினர்!” ஆக, நாங்கள் ஷிர்கை ஆதரிக்கிறோம் என்கிறார்களா முஸ்லிம்கள்?

The real Tipu sultan, tyrant- changing faces of Tipu

The real Tipu sultan, tyrant- changing faces of Tipu

வருடாவருடம் நவம்பர் மாதம் 10ஆம் தேதிதிப்பு ஜெயந்திவிழா நாடெங்கும் உற்சாகத்தோடு கொண்டாடுவது வழக்கம்: ஆற்றோரம்.காமலிந்த அளவுக்கு பொய் சொல்வது, செக்யூலரிஸம் கொடுத்த லைசென்ஸ் போலிருக்கிறது. முன்பு 2012ல் கேரளாவில் மாத்ரு பூமி இதழில் சரித்திர உண்மைகளை எடுத்துக் காட்டியபோது “டுசர்கிள்ஸ்நெட்” என்ற முஸ்லிம் இணைதளம் அதனைக் கடுமையாக சாடியது[11]. ஆக, முஸ்லிம்கள் தங்களுக்குள்ள முரண்பாடுகளை வேண்டுமென்றே காபிர்களை வைத்து கலவரங்களை உருவாக்கி, இந்துக்களை இத்தகைய “புதிய ஜிஹாத்” அல்லது “செக்யூலரிஸ ஜிஹாத்” மூலம் கொன்று வருகிறார்கள். இங்கும் அந்த “ஷிர்க்” முரண்பாடு வருகிறது. திப்புவை “ஹஜரத்” ஆக்கி. “பிறந்த நாள்” கொண்டாடுவோம் என்பது, எந்த விதத்தில் ஆசார இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவில்லை. திப்புவின் முகமே முரன்பாடாக உள்ளது. அதாவது கருப்பு நிறம் மற்றும் குரூர தோற்றத்தில் உள்ள அவனது முகம், உருமாறி, நிறமாறி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவ்வாறு மாற்றுவதை எப்படி சரித்திர ஆசிரியர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அப்படியென்றால், அதுவும் ஒரு பெரிய மோசடியாகும். சரித்திரவரவியலில் இந்த அளவுக்கு மோசடிகளை செய்து, ஒரு குரூரக் கொடுங்கோலனிடமிருந்து, ஒரு புலியை உருவாக்கியுள்ளது மிகப்பெரிய சரித்திர மோசடி எனலாம்.

SDPI suppoting Tipu Jayanti 10-11-2015.2

SDPI suppoting Tipu Jayanti 10-11-2015.2

திப்புவை ஏன் பர்காவும், என்டிடிவியும் ஆதரிக்கின்றன?: சரதிந்து முகர்ஜி (இந்தியன் கவுன்சில் ஆப் ஹிஸ்டாரிகல் ரிசெர்ச்), “காங்கிரஸ் டிப்பு ஜெயந்தியைக் கொண்டாடுவதின் மூலம் ஜிஹாதை ஊக்குவிப்பது போலிருக்கிறது”, என்று என்டி-டிவி விவாதத்தில் எடுத்துக் காட்டியுள்ளார். அப்பொழுது, பர்கா தத் என்ற பெண்மணி, நக்கலாக, என்ன இதை அரசியல்படுத்தும் முறையில் பேசுகிறீர்களே என்று தனது கருத்தை வைத்தார்[12]. மேலும் “In a controversial statement, NDA government-appointed member of Indian Council of Historical Research Saradindu Mukherji says, “Congress is trying to promote jihad” by celebrating birth anniversary of Tipu Sultan”, என்று அந்த இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் 60 ஆண்டுகளாக அரசுசார்ந்த நிறுவனங்களில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் சார்புடையவர்கள் தான் அப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர். ஆனால், இப்பொழுது மட்டும், ஏதோ புதியதாகக் கண்டு பிடித்த விதத்தில் இவ்வாறு குறிப்பிடுவதும், பர்கா நக்கலாக பேசுவதும் கவனிக்கத்தக்கது[13]. NDTV-Hindu சேர்ந்து டிவி செனல் நடத்துவதும், அவை தொடர்ந்து இத்தகைய பிரச்சாரத்தை செய்து வருவதும், உள்ள பிரச்சினையை ஊக்குவிப்பது போலத்தான் உள்ளது. எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றும் செயலை ஏன் இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்?

© வேதபிரகாஷ்

12-11-2015

[1] தைஜி.வார்ல்ட், Bengaluru: Tipu would have enjoyed status of Shivaji if he was a Hindu: Karnad, நவம்பர்.10.2015.

[2] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367915

[3] http://www.thehindu.com/news/cities/bangalore/protests-over-tipu-jayanti-continues-bjp-targets-karnad/article7866212.ece?ref=relatedNews

[4] http://www.thehindu.com/news/cities/bangalore/girish-karnads-remarks-on-tipu-create-a-stir/article7866381.ece?ref=relatedNews

[5] ….the noted playwright and actor sought to end the controversy, saying, “If anybody has been hurt by my remarks, I apologise… what will I gain by doing it (by making such comments).”

http://www.thehindu.com/news/national/karnataka/girish-karnad-offers-apology-over-remarks-on-kempegowda/article7866724.ece?ref=relatedNews

[6] Mr. Siddaramaiah also said it was a mistake on the part of the Jnanapith award winner to have made such remarks. “It is a mistake. I have told you,” he said. “I do not know why Girish Karnad made such a remark. I was also there (when he made the remark), I wanted to counter but I did not do,” he said.

http://www.thehindu.com/news/national/karnataka/girish-karnad-offers-apology-over-remarks-on-kempegowda/article7866724.ece?ref=relatedNews

[7] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367842

[8] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367973

[9] http://www.aatroram.com/?p=35379

[10] ஆற்றோரம்.காம், திப்பு ஜெயந்திவிழாவை சிறப்பாக கொண்டாடி முடித்த சித்த ராமையா, BY ஹாரிஸ் அஹ்மது ON NOVEMBER 11, 2015

[11] http://twocircles.net/2012nov16/attempts_distorting_history_tipu_sultan.html#.VkPokNIrJdg

[12] NDTV, It’s Jihad by Congress to Celebrate Tipu: Government-appointed Historian,  PUBLISHED ON: NOVEMBER 10, 2015 | DURATION: 2 MIN, 01 SEC 66

[13] http://www.ndtv.com/video/player/the-buck-stops-here/it-s-congress-jihad-to-celebrate-tipu-sultan-govt-appointed-historian/390428

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (3)

நவம்பர் 11, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (3)

Bhawans compromising act - Tipu and Aryans books

Bhawans compromising act – Tipu and Aryans books

முஸ்லிம் அமைப்புகள், கம்யூனிஸ்டுகள் அரசியல் செய்தது (2013): ஹைதர் அலி – திப்பு சுல்தான் இந்திய விடுதலை போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பதுதான் சரித்திர உண்மை. முன்பு திப்பு சுல்தான் சீரியல் வந்தபோது, இம்மாதிரியான பிரச்சினை மூலம் அவர்களின் இந்துவிரோத காரியங்கள் பேசப்பட்டபோது, முஸ்லிம்கள் சங்கடத்திற்குள்ளானார்கள். நீதிமன்றத்திற்கு பிரச்சினை சென்றபோது, தயாரிப்பாளர்-நடிகர் சஞ்சய் கானுக்கு சரித்திர உண்மைகள் மறைக்காமல் சொல்லப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. “தி ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான்” (The Sowrd of Tipu Sultan) எழுதியவர் – பகவான் கித்வாய், “தி ரெடார்ன் ஆப் தி ஆரியன்ஸ்” (The Return of the Aryans) என்று எழுதி தாஜா செய்ய முனைந்தார். கர்நாடகத்தின் சாராய மன்னன் திப்பு சுல்தானின் கத்தியை வாங்கி தனது செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொண்டார். மதன் எழுதிய “வந்தார்கள்…..வென்றார்கள்!” என்ற புத்தகம் ஜாலிக்கு-பொழுதுபோக்கிற்கு மதன் எழுதினாலும், முஸ்லிம்கள் பயப்படத்தான் செய்தனர்[1]. என்ன இந்த ஆள் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறான், என்று அவர்களால் மதன் தொந்தரவுப்பட்டதும் உண்டு[2]. ஐ. எம். முத்தண்ணா[3] என்பவர் “திப்பு சுல்தான் எக்ஸ்-ரேட்” (Tipu Sultan X-rayed) தனது புத்தகத்தில் திப்புவின் கொடுங்கோல குரூரங்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளார்.  இப்புத்தகம் இன்று வரை மறுக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. இப்பொழுது கூட எப்படி ஒரு கொடுமைக்காரனிடமிருந்து, ஒரு புலி உருவாக்கப்பட்டது என்று சரித்திர ஆதாரங்களுடன் திப்புவைப் பற்றி வெளியிடுகிறார்கள்[4]. இவ்வாறு எழுதியுள்ளவர் இந்து-ஆதரவாளர் அல்ல என்ரு குறிப்பிடத்தக்கது.

சுதந்திய யுத்தமேஇல்லை என்று மார்க்சிஸ்ட் சரித்திராசிரியர்கள் விளக்கம் கொடுக்கும் பொது, திப்பு எப்படி சுதந்திர போராளி ஆவான்?: செக்யூலரிஸ இந்தியா சுதந்திர போராட்டத்தையே கொச்சைப்படுத்தி, அது “சுதந்திய யுத்தமே” இல்லை என்று கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு கருத்தரங்கங்கள் நடத்தி புத்தகங்களை வெளியிட்டது. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டத்தார் “1857 முதல் சுதந்திர யுத்த”த்தையே கொச்சைப் படுத்திப் பேசினர், பிரச்சாரம் செய்தனர். அதாவது, அது வெறும் ஒரு கிளர்ச்சி, சாதாரணமான அங்கங்கு ஏற்பட்ட மக்கள் எழுச்சி, என்று தான் இன்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இன்று முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு “ஹைதர்-திப்பு”களுக்கு மணிமண்டபம் கேட்கிறார்கள் என்றால் அத்தகைய இரட்டைவேடதாரிகளை, தேசவிரோதிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் இப்படித்தான், திப்பு சுல்தான் பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஆரம்பித்தபோது, அம்மாநிலத்தார், திப்புவின் குரூர முகத்தை கிழித்துக் காட்டினர். அலறிவிட்டனர் மக்கள். ஆகவே, அரசியல், மதம், ஓட்டுவங்கி போன்ற காரியங்களுக்காக இப்படி ஏதாவது வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தால், அரசாங்கப் பணம் தான் விரயம் ஆகும். சமீபத்தைய சரித்திர நிகழ்வுகளை மாற்றியமைக்க முயன்றால், இருக்கும் ஆதாரங்களே வெளிகாட்டிவிடும். அப்பொழுது, நிலைமை இன்னும் அதிகமாக பாதிப்பில் முடியும்[5].

1990ல் பகவான் எஸ். கித்வானி என்பவரின் நாவலை ஆதாரமாகக் கொண்டு, “திப்பு சுல்தானின் கத்தி” என்ற டிவி-தொடர் தூர்தர்ஷணில் ஒலி-ஒளிபரப்ப ஆரம்பிக்கப்பட்டது. அதில் திப்பு சுல்தானின் கூரூரங்களை, கொடுமைகளை, கொலைகளை மறைத்து, ஏதோ மிகவும் நல்லவன் மாதிரி காட்டப்பட்டது. இதனால், இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. சரித்திர ஆதாரம் இல்லாதலால், கீழ் கண்ட வாசங்களை ஒவ்வொரு காட்சியின் முதலும் காண்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டது[6].

“No claim is made for the accuracy or authenticity of any episode being depicted in the serial. This serial is a fiction and has nothing to do either with the life or rule of Tipu Sultan. The serial is a dramatised presentation of Bhagwan Gidwani’s novel.” இந்த டிவி தொடரில் காண்பிக்கப்படும் நிகழ்ச்சிக்கு எந்த உண்மையோ, ஆதாரமோ இருக்கிறது என்று கோரவில்லை. இது ஒரு கற்பனைக் கதையே அன்று, இது உண்மையான திப்புவின் வாழ்க்கை அல்லது ஆட்சியுடன் சம்பந்தமில்லாதது. இந்த தொடர் பகவான் கித்வானியின் நாவலை ஆதாரமாகக் கொண்டு நாடகம் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 8 1990 அன்று இந்த டிவி-சீரியல் எடுக்கப்பட்ட ஸ்டுடியோவில் பெருத்த தீவிபத்து ஏற்பட்டதில் 62 பேர் கருகி இறந்தனர். இந்த சீரியலின் நடிகர்-தயாரிப்பாளர் சஞ்சய் கானுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டு 13 மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, 72 ஆபரேஷன்களை செய்து கொண்டு வெளிவந்தார். உயிரிழந்தவர்கள், விளம்பர நிறுவங்கள் நஷ்டம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்கள்[7]. திப்பு சுல்தானைப் பற்றிய வழக்குகள், பழமொழிகள் போன்றவையெல்லாம், அவனைக் கடுமையாக விமர்சிப்பதாகத்தான் இருந்துள்ளது. அவன் முகத்தைப் பார்க்கக் கூடாது, பார்த்தால் விளங்காது; எல்லாம் அழிந்து விடும் – நாசமாகி விடும்; குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவன் – கொல்கிறவன்; “திப்பு வருகிறான், என்று சொன்னால் அழுகின்ற குழந்தை அழுகையை நிறுத்தி விடும்” என்றெல்லாம் வழங்கி வர்கின்றன. அத்தீ விபத்து நடந்த போதும், இது எடுத்துக் காட்டப்பட்டது.

கர்நாடகாவைப் பொறுத்த வரையில், ஜனதா கட்சிகள் திப்புவை அரசியலாக்கி ஆதாயம் தேடியுள்ளன. சாராய மன்னன் மல்லையா 2004ல் தனது ஜனதா கட்சியின் சார்பாக பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். ராஜ்ய சபா எம்.பியான அவர், அரசியல் செல்வாக்கை உயர்த்தி கொள்ள, ரூ.1.5 கோடிகள் கொடுத்து, “திப்பு சுல்தானின் கத்தி” என்று லண்டனிலிருந்து ஏலத்தில் வாங்கி வந்தார். இதுவும், கர்நாடக தேர்தலை ஒட்டிதான் நடத்தப் பட்ட நாடகம் ஆகும்[8].

திப்பு ஜெயந்தி எப்படி கொண்டாடப்பட்டது?: அரசு சார்பில் இவ்விழா கொண்டாடப்படுவதால், அரசின் பணம் உபயோகப்படுத்தப் படுகிறது. அதாவது, பெருபான்மையினரான இந்துக்கள் கொடுக்கும் வரிப்பணத்தை வைத்துக் கொண்டே, இவ்விழா எடுத்து, இந்துக்களை கொன்ற, கொடுமைப்படுத்திய திப்புவுக்கு ஜெயந்தி கொண்டாடுவதால் தான் அங்குள்ள மக்கள் எதிர்க்கிறார்கள். மேலும், முஸ்லிம் கோணத்தில் பார்த்தாலும், காபிர்களிடமிருந்து வரும் பணத்தை வைத்துக் கொண்டு, இத்தகைய விழாக்கள் கொண்டாடப்படலாமா என்ற கேள்வியையும் எழுப்பலாம். இவ்விழாவில் திப்புவின் படம் வைக்கப்பட்டு, பூமாலை போடப்பட்டிருந்தது. பிறகு அனைவரும், அப்படத்திற்கு பூதூவி மரியாதை செய்தனர். முஸ்லிம்களும் அவ்வாறே செய்தனர். கைக்கூப்பி வணங்கவும் செய்தனர். இப்பொழுதெல்லாம், முஸ்லிம்கள் படங்களை வைத்துக் கொள்ள மாட்டார்கள், உருவங்களுக்கு மரியாதை செய்ய மாட்டார்கள், பூதூவி பூஜைப் போன்றெல்லாம் செய்ய மாட்டார்கள், வணங்க மாட்டார்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள். பிறகு எப்படி, இந்த திப்பு ஜெயந்தி இவ்விதமாக நடந்தது? எப்படி ஆசாரமுள்ள முஸ்லிம்கள் ஒப்புக்கொண்டார்கள்? இவற்றையெல்லாம் “‌ஷிர்க்” என்றோ “ஹராம்” என்றோ கூறி தடுக்கவில்லையே? தொலைக் காட்சிகளில் காட்டப்பட்ட போது கூடல் கொதிக்கவில்லையே? அப்படியென்றால், சாமர்த்தியமாக ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லாவின் எச்சரிக்கைகளையும் மீறி அத்தகைய தகாத காரியங்களை அனுமதிக்கிறார்கள். சித்தராமையாவும், சந்தோஷமாகக் கொண்டாட தீர்மானித்து, முடித்து வைத்து விட்டார். இந்துக்களுக்கு வேண்டிய தீபாவளி நாளில் கொண்டாடி, ஒரு இந்துவயும் சாகடிக்க வைத்து விட்டார்.

© வேதபிரகாஷ்

11-11-2015

[1] மதன், வந்தார்கள்………..வென்றார்கள்!, ஆனந்த விகடன் வெளியீடு, சென்னை,, 1994. “50,000 பிரதிகளைத் தாண்டி விற்பனையில் ஒரு சாதனை!” என்று அட்டையில் பெருமையாக அறிவித்துக் கொண்டது!

[2] அணிந்துரை அளித்த சுஜாதா, எப்படி மிரட்டல் கடிதங்கள் வந்தன என்று எடுத்துக் காட்டியுள்ளார். 21-12-1993 தேதியிட்ட கடிதம்.

[3] I. M. Muthanna, Tipu Sultan X-rayed, Usha Press, Mysore,1980.

[4] http://www.ibnlive.com/blogs/india/d-p-satish/tipu-sultan-making-a-tiger-out-of-a-tyrant-11027-1162986.html

[5] https://secularsim.wordpress.com/2013/06/24/why-conflicting-views-come-about-hyder-ali-and-tipu-sultan/

[6]  A. G. Noorani. “Menace to free speech”. Online edition of The Frontline, volume 22, issue 26, December 17–30, 2005. Retrieved 2007-08-17.

[7] http://indiatoday.intoday.in/story/the-sword-of-tipu-sultan-fire-sanjay-khan-faces-legal-action-for-negligence/1/323237.html

[8] The timing of Mr. Mallya’s announcement of his acquisition made some six months ago has not gone unnoticed, coming as it does a fortnight before the first phase of polling in Karnataka. However, the working president of the Janata Party said: “This is not political. It’s personal.” Mr. Mallya’s party has fielded candidates in more than a hundred Assembly constituencies and half-a-dozen Lok Sabha constituencies in the coming elections in Karnataka. He described the sword as a unique piece of history and said that he bought it as a `proud Kannadiga’ in order to restore the `rightful legacy’ to Karnataka.

http://www.thehindu.com/2004/04/08/stories/2004040805881200.htm

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (3)

நவம்பர் 11, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (3)

Bhawans compromising act - Tipu and Aryans books

Bhawans compromising act – Tipu and Aryans books

முஸ்லிம் அமைப்புகள், கம்யூனிஸ்டுகள் அரசியல் செய்தது (2013): ஹைதர் அலி – திப்பு சுல்தான் இந்திய விடுதலை போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பதுதான் சரித்திர உண்மை. முன்பு திப்பு சுல்தான் சீரியல் வந்தபோது, இம்மாதிரியான பிரச்சினை மூலம் அவர்களின் இந்துவிரோத காரியங்கள் பேசப்பட்டபோது, முஸ்லிம்கள் சங்கடத்திற்குள்ளானார்கள். நீதிமன்றத்திற்கு பிரச்சினை சென்றபோது, தயாரிப்பாளர்-நடிகர் சஞ்சய் கானுக்கு சரித்திர உண்மைகள் மறைக்காமல் சொல்லப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. “தி ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான்” (The Sowrd of Tipu Sultan) எழுதியவர் – பகவான் கித்வாய், “தி ரெடார்ன் ஆப் தி ஆரியன்ஸ்” (The Return of the Aryans) என்று எழுதி தாஜா செய்ய முனைந்தார். கர்நாடகத்தின் சாராய மன்னன் திப்பு சுல்தானின் கத்தியை வாங்கி தனது செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொண்டார். மதன் எழுதிய “வந்தார்கள்…..வென்றார்கள்!” என்ற புத்தகம் ஜாலிக்கு-பொழுதுபோக்கிற்கு மதன் எழுதினாலும், முஸ்லிம்கள் பயப்படத்தான் செய்தனர்[1]. என்ன இந்த ஆள் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறான், என்று அவர்களால் மதன் தொந்தரவுப்பட்டதும் உண்டு[2]. ஐ. எம். முத்தண்ணா[3] என்பவர் “திப்பு சுல்தான் எக்ஸ்-ரேட்” (Tipu Sultan X-rayed) தனது புத்தகத்தில் திப்புவின் கொடுங்கோல குரூரங்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளார்.  இப்புத்தகம் இன்று வரை மறுக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. இப்பொழுது கூட எப்படி ஒரு கொடுமைக்காரனிடமிருந்து, ஒரு புலி உருவாக்கப்பட்டது என்று சரித்திர ஆதாரங்களுடன் திப்புவைப் பற்றி வெளியிடுகிறார்கள்[4]. இவ்வாறு எழுதியுள்ளவர் இந்து-ஆதரவாளர் அல்ல என்ரு குறிப்பிடத்தக்கது.

1857 rebellion - not war of independence- Marxist interpretation

1857 rebellion – not war of independence- Marxist interpretation

சுதந்திய யுத்தமேஇல்லை என்று மார்க்சிஸ்ட் சரித்திராசிரியர்கள் விளக்கம் கொடுக்கும் பொது, திப்பு எப்படி சுதந்திர போராளி ஆவான்?: செக்யூலரிஸ இந்தியா சுதந்திர போராட்டத்தையே கொச்சைப்படுத்தி, அது “சுதந்திய யுத்தமே” இல்லை என்று கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு கருத்தரங்கங்கள் நடத்தி புத்தகங்களை வெளியிட்டது. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டத்தார் “1857 முதல் சுதந்திர யுத்த”த்தையே கொச்சைப் படுத்திப் பேசினர், பிரச்சாரம் செய்தனர். அதாவது, அது வெறும் ஒரு கிளர்ச்சி, சாதாரணமான அங்கங்கு ஏற்பட்ட மக்கள் எழுச்சி, என்று தான் இன்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இன்று முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு “ஹைதர்-திப்பு”களுக்கு மணிமண்டபம் கேட்கிறார்கள் என்றால் அத்தகைய இரட்டைவேடதாரிகளை, தேசவிரோதிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் இப்படித்தான், திப்பு சுல்தான் பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஆரம்பித்தபோது, அம்மாநிலத்தார், திப்புவின் குரூர முகத்தை கிழித்துக் காட்டினர். அலறிவிட்டனர் மக்கள். ஆகவே, அரசியல், மதம், ஓட்டுவங்கி போன்ற காரியங்களுக்காக இப்படி ஏதாவது வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தால், அரசாங்கப் பணம் தான் விரயம் ஆகும். சமீபத்தைய சரித்திர நிகழ்வுகளை மாற்றியமைக்க முயன்றால், இருக்கும் ஆதாரங்களே வெளிகாட்டிவிடும். அப்பொழுது, நிலைமை இன்னும் அதிகமாக பாதிப்பில் முடியும்[5].

1857 rebellion - not war of independence

1857 rebellion – not war of independence

1990ல் பகவான் எஸ். கித்வானி என்பவரின் நாவலை ஆதாரமாகக் கொண்டு, “திப்பு சுல்தானின் கத்தி” என்ற டிவி-தொடர் தூர்தர்ஷணில் ஒலி-ஒளிபரப்ப ஆரம்பிக்கப்பட்டது. அதில் திப்பு சுல்தானின் கூரூரங்களை, கொடுமைகளை, கொலைகளை மறைத்து, ஏதோ மிகவும் நல்லவன் மாதிரி காட்டப்பட்டது. இதனால், இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. சரித்திர ஆதாரம் இல்லாதலால், கீழ் கண்ட வாசங்களை ஒவ்வொரு காட்சியின் முதலும் காண்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டது[6].

“No claim is made for the accuracy or authenticity of any episode being depicted in the serial. This serial is a fiction and has nothing to do either with the life or rule of Tipu Sultan. The serial is a dramatised presentation of Bhagwan Gidwani’s novel.” இந்த டிவி தொடரில் காண்பிக்கப்படும் நிகழ்ச்சிக்கு எந்த உண்மையோ, ஆதாரமோ இருக்கிறது என்று கோரவில்லை. இது ஒரு கற்பனைக் கதையே அன்று, இது உண்மையான திப்புவின் வாழ்க்கை அல்லது ஆட்சியுடன் சம்பந்தமில்லாதது. இந்த தொடர் பகவான் கித்வானியின் நாவலை ஆதாரமாகக் கொண்டு நாடகம் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 8 1990 அன்று இந்த டிவி-சீரியல் எடுக்கப்பட்ட ஸ்டுடியோவில் பெருத்த தீவிபத்து ஏற்பட்டதில் 62 பேர் கருகி இறந்தனர். இந்த சீரியலின் நடிகர்-தயாரிப்பாளர் சஞ்சய் கானுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டு 13 மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, 72 ஆபரேஷன்களை செய்து கொண்டு வெளிவந்தார். உயிரிழந்தவர்கள், விளம்பர நிறுவங்கள் நஷ்டம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்கள்[7]. திப்பு சுல்தானைப் பற்றிய வழக்குகள், பழமொழிகள் போன்றவையெல்லாம், அவனைக் கடுமையாக விமர்சிப்பதாகத்தான் இருந்துள்ளது. அவன் முகத்தைப் பார்க்கக் கூடாது, பார்த்தால் விளங்காது; எல்லாம் அழிந்து விடும் – நாசமாகி விடும்; குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவன் – கொல்கிறவன்; “திப்பு வருகிறான், என்று சொன்னால் அழுகின்ற குழந்தை அழுகையை நிறுத்தி விடும்” என்றெல்லாம் வழங்கி வர்கின்றன. அத்தீ விபத்து நடந்த போதும், இது எடுத்துக் காட்டப்பட்டது.

Mallaya, Janata Dal and Tipu politics 2003-04

Mallaya, Janata Dal and Tipu politics 2003-04

கர்நாடகாவைப் பொறுத்த வரையில், ஜனதா கட்சிகள் திப்புவை அரசியலாக்கி ஆதாயம் தேடியுள்ளன. சாராய மன்னன் மல்லையா 2004ல் தனது ஜனதா கட்சியின் சார்பாக பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். ராஜ்ய சபா எம்.பியான அவர், அரசியல் செல்வாக்கை உயர்த்தி கொள்ள, ரூ.1.5 கோடிகள் கொடுத்து, “திப்பு சுல்தானின் கத்தி” என்று லண்டனிலிருந்து ஏலத்தில் வாங்கி வந்தார். இதுவும், கர்நாடக தேர்தலை ஒட்டிதான் நடத்தப் பட்ட நாடகம் ஆகும்[8].

திப்பு ஜெயந்தி - முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

திப்பு ஜெயந்தி – முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

திப்பு ஜெயந்தி எப்படி கொண்டாடப்பட்டது?: அரசு சார்பில் இவ்விழா கொண்டாடப்படுவதால், அரசின் பணம் உபயோகப்படுத்தப் படுகிறது. அதாவது, பெருபான்மையினரான இந்துக்கள் கொடுக்கும் வரிப்பணத்தை வைத்துக் கொண்டே, இவ்விழா எடுத்து, இந்துக்களை கொன்ற, கொடுமைப்படுத்திய திப்புவுக்கு ஜெயந்தி கொண்டாடுவதால் தான் அங்குள்ள மக்கள் எதிர்க்கிறார்கள். மேலும், முஸ்லிம் கோணத்தில் பார்த்தாலும், காபிர்களிடமிருந்து வரும் பணத்தை வைத்துக் கொண்டு, இத்தகைய விழாக்கள் கொண்டாடப்படலாமா என்ற கேள்வியையும் எழுப்பலாம். இவ்விழாவில் திப்புவின் படம் வைக்கப்பட்டு, பூமாலை போடப்பட்டிருந்தது. பிறகு அனைவரும், அப்படத்திற்கு பூதூவி மரியாதை செய்தனர். முஸ்லிம்களும் அவ்வாறே செய்தனர். கைக்கூப்பி வணங்கவும் செய்தனர். இப்பொழுதெல்லாம், முஸ்லிம்கள் படங்களை வைத்துக் கொள்ள மாட்டார்கள், உருவங்களுக்கு மரியாதை செய்ய மாட்டார்கள், பூதூவி பூஜைப் போன்றெல்லாம் செய்ய மாட்டார்கள், வணங்க மாட்டார்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள். பிறகு எப்படி, இந்த திப்பு ஜெயந்தி இவ்விதமாக நடந்தது? எப்படி ஆசாரமுள்ள முஸ்லிம்கள் ஒப்புக்கொண்டார்கள்? இவற்றையெல்லாம் “‌ஷிர்க்” என்றோ “ஹராம்” என்றோ கூறி தடுக்கவில்லையே? தொலைக் காட்சிகளில் காட்டப்பட்ட போது கூடல் கொதிக்கவில்லையே? அப்படியென்றால், சாமர்த்தியமாக ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லாவின் எச்சரிக்கைகளையும் மீறி அத்தகைய தகாத காரியங்களை அனுமதிக்கிறார்கள். சித்தராமையாவும், சந்தோஷமாகக் கொண்டாட தீர்மானித்து, முடித்து வைத்து விட்டார். இந்துக்களுக்கு வேண்டிய தீபாவளி நாளில் கொண்டாடி, ஒரு இந்துவயும் சாகடிக்க வைத்து விட்டார்.

© வேதபிரகாஷ்

11-11-2015

[1] மதன், வந்தார்கள்………..வென்றார்கள்!, ஆனந்த விகடன் வெளியீடு, சென்னை,, 1994. “50,000 பிரதிகளைத் தாண்டி விற்பனையில் ஒரு சாதனை!” என்று அட்டையில் பெருமையாக அறிவித்துக் கொண்டது!

[2] அணிந்துரை அளித்த சுஜாதா, எப்படி மிரட்டல் கடிதங்கள் வந்தன என்று எடுத்துக் காட்டியுள்ளார். 21-12-1993 தேதியிட்ட கடிதம்.

[3] I. M. Muthanna, Tipu Sultan X-rayed, Usha Press, Mysore,1980.

[4] http://www.ibnlive.com/blogs/india/d-p-satish/tipu-sultan-making-a-tiger-out-of-a-tyrant-11027-1162986.html

[5] https://secularsim.wordpress.com/2013/06/24/why-conflicting-views-come-about-hyder-ali-and-tipu-sultan/

[6]  A. G. Noorani. “Menace to free speech”. Online edition of The Frontline, volume 22, issue 26, December 17–30, 2005. Retrieved 2007-08-17.

[7] http://indiatoday.intoday.in/story/the-sword-of-tipu-sultan-fire-sanjay-khan-faces-legal-action-for-negligence/1/323237.html

[8] The timing of Mr. Mallya’s announcement of his acquisition made some six months ago has not gone unnoticed, coming as it does a fortnight before the first phase of polling in Karnataka. However, the working president of the Janata Party said: “This is not political. It’s personal.” Mr. Mallya’s party has fielded candidates in more than a hundred Assembly constituencies and half-a-dozen Lok Sabha constituencies in the coming elections in Karnataka. He described the sword as a unique piece of history and said that he bought it as a `proud Kannadiga’ in order to restore the `rightful legacy’ to Karnataka.

http://www.thehindu.com/2004/04/08/stories/2004040805881200.htm

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (2)

நவம்பர் 11, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (2)

ரஜினி, திப்பு, சுல்தான்

ரஜினி, திப்பு, சுல்தான்

திப்புவை வைத்துக் கொண்டு அரசியல் செய்வது ஏன்?:  தி்ப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை தான் திரைப்படமாக தயாரிக்க உள்ளதாக கன்னட திரையுலக தயாரிப்பாளர் அசோக் கெனி எம்எல்ஏ கூறினார்[1]. இந்த படத்தில் திப்பு சுல்தானாக, ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், இந்த படத்தில் ரஜினி நடிக்கக்கூடாது என்று பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன[2]. இந்த படத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொள்ள மாட்டார் என்று நம்புவதாக, பா.ஜ. தேசிய பொதுச்செயலாளர் ஹெச்.ராஜா, தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது[3]. “ரஜினி திப்பு சுல்தான் படத்தில் நடிக்கப் போவதில்லை என்பது சின்ன குழந்தைக்கும் தெரியும். அப்படியிருந்தும், ரஜினியை முன்னிறுத்தி மதவெறியை கக்கியிருக்கிறது, இந்து முன்னணி”, என்று தனக்கேயுரிய பாணியில் தமிழ்.வெப்.துனியா கமென்ட் அடித்திருந்தது, அதனுடைய சிந்தாந்த வெளிப்பாடாக இருந்தது[4]. இது குறித்து இந்து அடிப்படைவாதியும், இந்து முன்னணி தலைவருமான ராமகோபாலன் மதவெறி கருத்துக்களை வெளியிட்டுள்ளார், என்றும் தொடர்ந்தது[5].  பொதுவாகவே, முஸ்லிம் ஆதரவான “வினவு” என்ற இணைதளமும், தன்னுடைய சித்தாந்தத்தை வெளிப்படுத்தியது[6]. ஆனால், முஸ்லிம்கள் என்ன பேசினர், அவர்களது கருத்து என்ன என்பது பற்றி இவை குறிப்பிடவில்லை. அவர்களது கருத்தும் உச்சங்களைத் தொட்டுள்ளது. தௌஹீத் அமைப்பின் வீடியோ ஒன்று உதாரணமாகக் காட்டப்படுகிறது[7]. அதாவது ரஜினி விவரம் அவர்களுக்கு மற்றவர்களை விட அதிகமாகத் தெரிந்துள்ளது. சிபிஎம்.மும் விடவில்லை, உடனே இராமகோபாலனுக்கு கண்டனத்தைத் தெரிவித்தது[8]. ஆகவே, இப்பிரச்சினை தமிழகத்திலும் அரசியலாக்கப் பட்டுவிட்டது.

ரஜினி, சந்திரமௌளி, திப்பு சுல்தான்

ரஜினி, சந்திரமௌளி, திப்பு சுல்தான்

திப்பு சுல்தான் பற்றி இராம கோபாலன் எடுத்துக் காட்டியது (செப்டம்பர்.2015): சரி, என்ன அப்படி இராம கோபாலன் சொல்லிவிட்டார் என்று பார்ப்போம், “திப்பு சுல்தான் வேடத்தில் தமிழ் நடிகர்கள் நடிப்பது தமிழர்களை அவமானப்படுத்துவதற்கு சமம். திப்பு சுல்தான் தமிழர்களுக்கும் குறிப்பாக இந்துக்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் பற்றி பல வரலாற்று புத்தகங்களில் இருந்து அடையாளம் காட்ட முடியும். தமிழர்களை துரத்தியடித்த திப்பு சுல்தானை சிறந்த சுதந்திர போராட்ட தியாகியாக சித்தரிப்பதற்கான முயற்சிதான் இந்த பட தயாரிப்பு. முன்னாள் முதல்அமைச்சர் எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் கொங்கு நாட்டில் உள்ள பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள். அந்த பகுதி மைசூர் சமஸ்தானத்தில் ஐதர் அலி ஆளுகையில் இருந்த போது இந்துக்களை மதம் மாறும்படி கட்டாயப்படுத்தினார்கள். மதம் மாற விருப்பம் இல்லாதவர்கள் அங்கிருந்து பாலக்காட்டுக்கு குடி பெயர்ந்தனர். அவ்வாறு குடி பெயர்ந்தவர்களில் எம்.ஜி.ஆரின் மூதாதையர்களும் அடங்குவர். எனவே எனது வேண்டுகோள் தமிழையும், தமிழரையும் நேசிப்பவர்கள் யாரும் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க கூடாது. அந்த படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்.” – இவ்வாறு ராமகோபாலன் கூறினார். இதில் என்ன கருத்துக்களை வெளியிடப்பட்டுள்ளன என்று தெரியவில்லை. சரித்திர உண்மைகளை சொன்னால், அது மதவேறி என்றால், இவர்களது ஞானசூன்யத்தை என்னென்பது? இதேபோல தௌஹீத் வீடியோ பேச்சையும் கேட்கலாம். அவர் ஏதோ திப்புதான் ஆங்கிலேயரை எடுத்து பாராடினான், ராக்கெட் விட்டான் என்ற ரீதியில் பேச்சு இருக்கிறது. இதனால், 2013ல் நடந்தவற்றை ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

செயின்ட் தாமஸ் சினிமா, கரு, ரஜினி, குஷ்பு, பிஷப்புகள் 2008

செயின்ட் தாமஸ் சினிமா, கரு, ரஜினி, குஷ்பு, பிஷப்புகள் 2008

தாமஸ்படத்தில் ரஜினி நடிப்பார் என்று கிறிஸ்தவ பாதிரிகள் அறிவித்தது: ரஜினிகாந்த்தின் பெயரை அந்த அளவுக்கு சுலபமாக இழுத்து விட முடியுமா என்று கவனிக்க வேண்டும். முன்னர் கூட, ரஜினிகாந்த், “தாமஸ்” படத்தில் நடிப்பார் என்றெல்லாம் கிறிஸ்தவ பாதிரிகள் அறிவித்தனர். அதற்கும் இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்கத்தான் செய்தனர். ஆனால், “தாமஸ்” பிரச்சினையில் பல்வேறு விவகாரங்கள் அடங்கியிருந்ததால், எங்கே விசயங்கள் வெளிப்பட்டுவிடுமோ என்று விளைவுகளை அறிந்த கிறிஸ்தவர்களே அடங்கி விட்டனர்[9]. அதாவது, இந்து-எதிர்ப்பு என்பதனால் நின்றுவிடவில்லை. அதேபோல, இப்பொழுது ரஜினி “திப்பு”வாக நடிப்பார் என்று ஒரு கன்னட தயாரிப்பாளர் சொல்வதை ஒதுக்கிவிட முடியாது. ரஜினியே கர்நாடகாவில் இருந்து வந்தவர் தாம், இன்றும் அவரது உறவினர்கள் அங்குள்ளனர். மற்றும் பலவிசயங்களில் அவர் சம்பந்தப்பட்டிருக்கிறார். ஆகவே, மற்ற கட்சியினர் கருத்துத் தெர்விக்கும் போது, இந்து சார்புடைய கட்சிகள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதில் ஒன்றும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. ஜெயலலிதா 2013லேயே, இதனை அரசியலாக்கிவிட்டார்.

ஹைதர் அலி - திப்பு - ஜெயலலிதா

ஹைதர் அலி – திப்பு – ஜெயலலிதா

மேமாதத்தில் 2013 ஜெயலலிதா எடுத்த முடிவு[10]: திப்புப் பிரச்சினையை தமிழகத்தில் ஆரம்பித்து வைத்தது ஜெயலலிதா தான். தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா படித்த அறிக்கையில் மே 2013ல் கூறியிருப்பதாவது: “…………………………. இதே போன்றுஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும்அடிமைத் தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில்அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும்”.[11], என்று அறிவித்ததால், திப்பு ஆதரவு-எதிர்ப்பு தமிழகத்திலும் ஏற்பட்டது. அம்மா செக்யூலரிஸ ரீதியில் எல்லோருக்கும் மணிமண்டபம், இவர்களுக்கும் அப்படியே என்ற ரீதியில் சொல்லிவிட்டார்! ஹைதர் அலி. அவரது புதல்வர் திப்பு சுல்தான். இவர்கள் நினைவாக, திண்டுக்கல்லில் நூலகம் அமைக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ,க்கள் சவுந்திரராஜன், பாலபாரதி, அஸ்லம் பாஷா, தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகம் (ஆம்பூர்) ஆகியோர், கோரிக்கை விடுத்தனர்[12]. இதுவே அரசியல்தான் என்று தெரிகிறது. மேலும் கம்யூனிஸ்ட்டுகள் எப்படி வெட்கம் இல்லாமல் சுதந்திரம், சுதந்திர வீரர் என்றெல்லாம் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. எங்கு ஒரு முஸ்லிம் கேட்டால் முஸ்லிம் கேட்கிறான் என்று ஆகிவிடுமோ என்று கம்யூனிஸ்ட்டுகளைவிட்டு கேட்க வைத்து காரியத்தை சாதித்துக் கொள்கின்றனர். ஆனால், சில முஸ்லிம்களே – நாகை மன்சூர்[13] போன்றோர் இதனை எதிர்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது[14]. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவோ திப்பு சுல்தானின் 214 நினைவு ஆண்டு என்று சொல்லி விழா நடத்தி பரிசுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

lash-over-tipu-sultan-jayanti-celebrations

lash-over-tipu-sultan-jayanti-celebrations

திப்பு ஜெயந்தி - முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமாதிப்புவின் நினைவு நாளா, பிறந்த நாளா, ஜெயந்தியா?: பொதுவாக, இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் அவர்களது இறையியலை அறியாத மக்கள், எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். இல்லையென்றால், “நமக்கு எதுக்கு வம்பு, இதெல்லாம் துலுக்கன் பிரச்சினை”, பிரச்சினைதான் வரும் என்று ஒதுங்கி விடுவர். ஆனால், நாகை மன்சூர்[15] போன்றோர் அதனை எதிர்த்ததும்[16], பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவோ திப்பு சுல்தானின் 214 நினைவு ஆண்டு என்று சொல்லி விழா நடத்தியதும் கவனிக்கத்தக்கது. முஸ்லிம்களுக்கு பிறப்பை விட, இறந்த நாள் தான் முக்கியத்துவமானது. அதனால் தான் அவர்கள்  214 நினைவு ஆண்டு என்று இறந்ததை-இறப்பைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், சித்தராமையா போன்ற செக்யூலரிஸ அரைகுறைகள் ஜெயந்தி, அதாவது பிறந்த நாள் என்று கொண்டாடுகின்றனர். இருப்பினும், முஸ்லிம்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது நோக்கத்தக்கது. அதாவது, இதை வைத்து ஓட்டு வங்கி, கலவரம், இந்து-விரோதம், அரசியல் நிலையில் வலதுசாரிகளுக்கு பாதிப்பு போன்றவற்றை உருவாக்கலாம், இருப்பதை அதிகமாக்கலாம், பிறகு அவற்றை உலகரீதியில் செய்திகளாக பரப்பி, பிரச்சாரம் செய்யலாம் என்று அவர்கள் தீர்மானத்துடன் அவ்வாறிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், முட்டாள் இந்து அமைப்புகள் எதிப்பு தெரிவித்து அவர்கள் விரித்த வலையில் விழுந்துள்ளன.

© வேதபிரகாஷ்

11-11-2015

[1] http://tamil.cinecoffee.com/news/rajini-and-rajamouli-join-for-tipu-sultan-movie/

[2]  தினமலர், திப்பு சுல்தானாக ரஜினி : பா.. எதிர்ப்பு, செப்டம்பர்.15, 2015.09.39.

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1342499

[4] தமிழ்.வெப்.துனியா, திப்பு சுல்தான் வேடத்தில் ரஜினியா? மதவெறியை தூண்டும் இந்து முன்னணி, Last Modified: சனி, 12 செப்டம்பர் 2015 (14:45 IST).

[5] http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/tipu-sultan-rajini-religious-fanaticism-hindu-munnani-ramagopalan-115091200017_1.html

[6] http://www.vinavu.com/2015/09/15/ramagopalan-diktat-to-rajinikanth-inside-story/

[7] http://thowheedvideo.com/5411.html

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/after-hindu-group-warns-rajini-cpm-says-tipu-protected-communal-235624.html

[9] மேலும் விவரங்களுக்கு என்னுடைய www.thomasmyth.wordpress.com என்ற தளத்தைப் பார்க்கவும்.

[10]  http://news.vikatan.com/article.php?module=news&aid=14904

[11]  http://www.dinamalar.com/news_detail.asp?id=714454&Print=1

[12] http://newindianexpress.com/states/tamil_nadu/Memorials-for-Sahajananda-Tipu-Hyder/2013/05/16/article1591819.ece?pageNumber=1&parentId=70530&operation=complaint

[13] https://www.facebook.com/NagaiMansoor

[14] https://www.facebook.com/pages/Islamic-Youngsters-EMAIL/228120720548662

[15] https://www.facebook.com/NagaiMansoor

[16] https://www.facebook.com/pages/Islamic-Youngsters-EMAIL/228120720548662

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (1)

நவம்பர் 11, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (1)

திப்பு ஜெயந்தி - சித்தராமையா- முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

திப்பு ஜெயந்தி – சித்தராமையா- முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

தீபாவளி 10-11-2015 அன்று இந்தியா முழுவதும் பண்டிகை கொண்டாடும் வேளையில், கர்நாடகாவில் 18-வது நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த மன்னரான திப்பு சுல்தானின் 266வது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்து[1], நடத்தியதில் கலவரத்தில் முடிந்தது. இந்து மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் தமது எதிப்பைத் தெரிவித்திருந்தும் பிடிவாதமாகக் கொண்டாடுவேன் என்று விழாவை ஏற்பாடு செய்து சித்தராமைய்யா நடத்தினார். பசுமாமிசம் சாப்பிடுவேன் என்றேல்லாம் பேசிய இவர் கர்நாடகாவின் முதலமைச்சர். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எனும் போது, எல்லா மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற பண்புக்கு எதிராக செயல் பட்டுவரும், அவர் இதற்கும் சளைக்கவில்லை. நிச்சயமாக சோனியா அம்மையாரின் சம்மதி இல்லாமல், இவர் இவ்வளவு ஆட்டம் போடமாட்டார். ஆக காங்கிரசின் உள்நோக்கம், கலவரத்தை உண்டாக்குவது என்பது தான் போலும். இருக்கவே இருக்கிறது, பிறகு இதெல்லாம் அந்த இந்துத்துவ சக்திகளின் வேலைதான் என்று பழி போட்டு திசைத்திருப்பி விடலாம்.

lash-over-tipu-sultan-jayanti-celebrations

lash-over-tipu-sultan-jayanti-celebrations

பலவித எதிர்ர்புகளை மீறி சித்தராமையா திப்பு ஜெயந்தி கொண்டாடியது: ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் மே 1799ல், ஹைதர் அலியின் மகனான திப்பு கொல்லப்பட்டான்[2]. அதன்படி, 10-11-2015 (செவ்வாய்க்கிழமை) அன்று திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது[3]. ஹைதர் மற்றும் திப்பு இருவரின் கொடுமைகளை தென்னிந்தியாவில், குறிப்பாக மைசூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் (கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா) மக்கள் அறிவர். இந்த விழாவை கொண்டாடுவதற்கு பா.ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். உள்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன[4]. இந்நிலையில், இன்று நடைபெறும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை புறக்கணிப்பதாக பா.ஜனதா அறிவித்தது. மாநில பிஜேபி தலைவர் பிரஹலாத் ஜோஷி, “எங்களுடைய 44 எம்.எல்.ஏக்கள், மற்ற அரசு பதவி வகிக்கும் எவரும் இந்த விழாவில் பங்கு கொள்ள மாட்டார்கள்”, என்று அறிவித்தார்[5]. கர்நாடக கௌரவ சம்ரக்ஷண சமிதி [Karnataka Gaurava Samrakshana Samiti] போன்ற இயக்கங்களும் எதிப்புத் தெரிவித்தன. குர்பூர் வஜ்ரதேஹி மடத்தின் ஸ்வாமிஜி ஶ்ரீ ராஜசேகரானந்தா அரசு அந்நிகழ்ச்சியை நடத்தினால், அதே நாளில், “அரசின் தற்கொலை தினம்” என்று எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தப் படும் என்றார்[6]. இதனிடையே, கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று சில மதஅமைப்புகள் அறிவித்தன. மத அமைப்புகளின் இந்த அறிவிப்புக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால், பாரதிய ஜனதா ஆதரவு வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோடகு மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அங்குள்ள சில அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

United Christian Association எதிப்பு-06-11-2015

United Christian Association எதிப்பு-06-11-2015

கிறிஸ்தவர்களின் எதிர்ப்பு: மங்களூரின் அனைத்து கிறிஸ்தவ சங்கமும், “கடற்கரை பகுதிகளில் இருந்த பல சர்ர்சுகளை திப்பு தனது ஆட்சியில் இடித்தான் மற்றும் கிறிஸ்துவர்களை துன்புறுத்தினான்”, என்று இந்த ஜெயந்தியை எதிர்த்துள்ளது[7]. நவம்பர் 6ம் தேதி எதிர்ப்பு தெர்வித்து கமிஷனரிடம் மனுவையும் கொடுத்தனர்[8]. திப்புவினால் கிறிஸ்தவர்கள் நடத்தப் பட்ட விதம் குறித்து, அவர்களே ஆவணப்படுத்தியுள்ளவற்றிலிருந்து அறியலாம், ஒருவேளை அதனால் தான், கிறிஸ்தவர்களாக இருந்த ஆங்கிலேயர், அவன் மீது படையெடுத்து, அப்பகுதியை, தமதாட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று போரை நடத்தியிருக்கலாம். எப்படியாகிலும், கிறிஸ்தவர்களால் கூட, திப்புவின் கொடுமைகளை, இன்றளவும் மறக்க முடியாத அளவுக்கு, அவர்களது மனங்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

lash-over-tipu-sultan-jayanti-celebrations-இரு குழுக்கள் மோதல்

lash-over-tipu-sultan-jayanti-celebrations-இரு குழுக்கள் மோதல்

மடிக்கேரியில் இரு குழுக்கள் மோதிக் கொண்டது எப்படி?: அரசு விழாவை ஆதரித்து முஸ்லிம் அமைப்பு ஒன்று ஊர்வலம் மடிக்கரையில் நடத்தியது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தியது[9]. இதனால், ஒரு இடத்தில் இரு அமைப்பு தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது[10]. இந்த பேரணியின் போது, திடீரென வெடித்த மோதல் விபரீதத்தில் முடிந்தது. விஷ்வ இந்து பரிஷத் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு அமைப்புக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது[11] என்கிறது தினத்தந்தி. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருடன் மோதினார்கள் என்றால், அது முஸ்லிமஸமைப்புதான் என்று பதிவு செய்யாமல் இருந்தது செக்யூலரிஸ பத்திரிகா தர்மத்தைக் காட்டுகிறது போலும். இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். குட்டப்பா இறந்த பிறகு, கலவரமாக மாறியது. இதையடுத்து, அங்கு நிலவிவரும் பதற்றத்தை தணிக்க கூடுதலாக பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோடகு மாவட்டம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமான இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

An injured is taken away for medical aid after two groups clashed over -Tipu Sultan Jayanti celebrations, in Kodgu.

An injured is taken away for medical aid after two groups clashed over -Tipu Sultan Jayanti celebrations, in Kodgu.

குட்டப்பா இறந்தது அல்லது கொல்லப்பட்டது எப்படி?: கல்வீச்சில் முன்னாள் அரசு ஊழியரும் உள்ளூர் விஷ்வ இந்து பரிஷத் தலைவருமான குட்டப்பா (50) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்[12] என்று சில ஊடகங்கள் கூறுகின்றன.  புட்டப்பா தடியடியில் உயிரிழந்ததாக செய்திகள் பரவின என்கின்றன மற்ற ஊடகங்கள்.. ஆனால் தடியடியிளிருந்து தப்பிக்க உயரமான சுவரை தாண்டி குதித்த போது தவறி விழுந்து அவர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது[13] என்றும் கூறப்படுகின்றன. ஆகவே, குட்டப்பா இறப்பில், எதையோ மறைக்கிறார்கள் என்று தெரிகிறது. கல்லடி கலாட்டாவில் இறந்தார் அல்லது கொல்லப்பட்டார் என்றால், வீசியவர்கள் காரணமாகிறார்கள். ஆனால், கல்லடி கலாட்டாவில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் தான் என்று குறிப்பிட செக்யூலரிஸ ஊடகங்கள் தயங்குகின்றன போலும்.  மேலும் தீபாவளியன்று, இப்படி இந்து-விரோத போக்கில் நடத்தப் பட்ட ஜெயந்தியில், ஒரு இந்து அமைப்பின் தலைவர் இறந்தது ஒரு பிரச்சினை ஆகக்கூடாது என்று அமுக்கி வாசித்திருக்கலாம்.

சித்தராமையாவின் திப்பு ஜெயந்தி 10-11-2015

சித்தராமையாவின் திப்பு ஜெயந்தி 10-11-2015

காங்கிரஸ் எம்.எல்,ஏ குட்டப்பாவின் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்கிறார்: குட்டப்பாவின் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஜி. போபைய்யா [Congress MLA K.G. Bopaiah] கேட்டுள்ளார். ஆமாம், பாவம் அவருக்கு இந்துக்களின் ஓட்டுகள் தேவைப்படுகிறது. மைசூரின் எம்.பியான, பிரதாப் சிம்ஹா, “மாவட்ட நிர்வாகம் நிலைமையை கையாளத் தவறிவிட்டது. மற்ற மாவட்டங்களிலிருந்து, நிறையபேர் இங்கு வந்து, திப்பு ஜெயந்தியை ஆதரிக்க வந்துள்ளனர். அதே மாதிரி விழாவை எதிர்ப்பவர்களையும், அவர்களையும் போலீஸார் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது”, என்றார். மூர்நாடு, ஹக்கதரு, விராஜ்பேட், கொட்டமுடி போன்ற ஊர்களிலிருந்து சுமார் 4,000 பேர் மடிகேரியுள் நுழையப் பார்த்தார்கள், ஆனால், போலீஸார் தடுத்ததால், அவர்கள் மடிகேரி எல்லைகளிலேயே தங்க நேர்ந்தது. சுமார் காலை பத்து மணிக்கு மோதல்கள் ஆரம்பித்தன, மதியம் குட்டப்பா இறந்தவுடன், கலவரமாக மாறிவிட்டது[14]. மேலும், “அரசு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போன்றோருக்கு விழா எடுக்கலாம், ஆனால், திப்புவைப் போன்றவர்களுக்கு அல்ல”, என்றும் கூறினார்[15].

© வேதபிரகாஷ்

11-11-2015

[1] மாலைமலர், திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட எதிர்ப்பு: வன்முறையில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஒருவர் பலி, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10.2015, 3:05 PM IST.

[2] http://www.greaterkashmir.com/news/national/story/201214.html

[3] http://www.maalaimalar.com/2015/11/10150553/Tipu-birth-anniv-celebrations.html

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=177868

[4]  தினகரன், பாஜக., வி.எச்.பி தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி கலவரத்தில் வி.எச்.பி பிரமுகர் உயிரிழந்ததால் பதட்டம், நவம்பர். 10.2015,16.00.21 PM IST.

[5] On Monday (09-11-2015), BJP announced its plans to boycott the celebrations across the state. State BJP president Prahlad Joshi told media persons on Monday that none of its 44 legislators and office-bearers will attend the Tipu Jayanti celebrations being organized by the state government.

http://www.business-standard.com/article/news-ians/one-dead-in-clash-over-tipu-sultan-anniversary-115111000719_1.html

[6] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367470

[7] Mangaluru United Christian Association has protested against the celebrations, alleging that Tipu was responsible for the destruction of many churches in the coastal region and harassing Christians.

http://atimes.com/2015/11/hindu-leader-dies-in-violence-during-protest-over-tipu-anniversary/

[8] The members of the United Christian Association staged a protest against the state government’s decision to celebrate “Tipu Jayanti”, in front of the DC’s Office here, on November 6.2015.

http://www.mangalorean.com/mangaluru-uca-stages-protest-against-state-governments-decision-to-celebrate-tipu-jayanti/

[9] தினத்தந்தி, திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போரட்டத்தில் வன்முறை வி.எச்.பி தலைவர் ஒருவர் பலி, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 10,2015, 2:16 PM IST; பதிவு செய்த நாள்:செவ்வாய், நவம்பர் 10,2015, 2:16 PM IST.

[10] The clashes erupted after a Muslim group that was taking out a procession to mark the Karnataka government’s Tipu Sultan Jayanti celebration through Madikeri town came face to face with Hindutva activists protesting against the celebration of the birth anniversary in the middle of the town.

http://indianexpress.com/article/india/politics/tipu-sultan-jayanti-protest-vhp-activist-succumbs-to-injuries-in-karnataka/

[11] http://www.dailythanthi.com/News/India/2015/11/10141620/Tipu-birth-anniv-celebrations-VHP-leader-dies-in-violence.vpf

[12] New Indian express, Tipu Sultan jayanti protest: VHP activist killed in violence in Karnataka, Written by Express News Service | Updated: November 10, 2015 4:09 pm.

[13]http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=177868

[14] Some 4,000 people, who had come from nearby towns such as Moornadu, Hakkaturu, Virajpet and Kottamudi, were stranded on the outskirts of Madikeri after police barricaded the town. According to police, clashes erupted in different parts of Madikeri by 10am. By noon, when Kuttappa died, police had a full blown riot on their hands.

http://www.hindustantimes.com/india/vhp-leader-dies-in-clashes-over-tipu-sultan-s-birth-anniversary-celebrations/story-25FViLDz9rageQiTW9rtwK.html

[15] Congress MLA K.G. Bopaiah called for immediate arrest of those responsible for Kuttappa’s death. Mysuru MP Pratap Simha, who spoke to The Hindu, flayed the district administration and the police for their failure to handle the situation. He alleged that people from other districts had arrived in large numbers ostensibly in support of the Jayanti celebrations and the police failed to crack down armed protesters. “Such events should be held to commemorate icons, who have rendered yeoman service to society. Let the government hold a jayanti celebration in honour of late President A.P.J. Abdul Kalam but not Tipu Sultan,” said Mr. Simha. Inspector-General of Police (South) B.K. Singh and other officers are camping in the district and monitoring the situation.

http://www.thehindu.com/news/national/karnataka/one-dead-in-stone-pelting-in-kodagu/article7864756.ece