பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ரகளை, கலவரம், போலீசாரின் மீது தாக்குதல்!
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஏன் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றை ஆதரிக்கிறது?: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் பலமுறை கொலை[1], வெடிப்பொருட்களைப் பதுக்கி வைத்தல்[2], தேசவிரோத செயல்கள் முதலியவற்றில் ஈடுபடுதல், முதலியவை உறுதிபடுத்தியிருப்பதால், போலீஸ் நடவடிக்கை எடுக்கப் பட்டதுள்ளது[3].
கேரள அரசு அம்மாநிலத்தில் நடந்துள்ள 27 கொலைகளுக்கு (மார்க்சிஸ்ட், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உட்பட) இவ்வியக்கங்கள் தாம் காரணம் என்று கேரள உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள தன்னிலை விளக்கத்தில் கூறியுள்ளது[4]. தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தனர் இவ்வாறு புதிய இயக்கங்களாக மாறிவருவதாகவும் தெரிகிறது[5]. 2006ல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, மனித நீதி பாசறை, ஃபோரம் பார் டினிடி ஆப் கர்நாதகா [Forum for Dignity of Karnataka] என்று முறையே கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் உருவாக்கப் பட்டன. இவற்றிற்கு இஸ்லாத்தைக் காப்போம், மைனாரிட்டிகளின் உரிமைகளுக்காக பாடுபடுவோம் என்ற கொள்கைகள் இருப்பதாகப் பறைச்சாற்றிக் கொண்டாலும், அங்கத்தினர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர், பல வழக்குகளிலிலும் சிக்கியுள்ளனர். தெற்கிலிருந்து வடக்காக இவ்வியக்கத்தின் தாக்கம் நகர்வதாகத் தெரிகிறது. இதற்காக திடீரென்று கூட்டம் சேர்க்கப்பட்டு வருகிறது[6]. ஜூலை 2010ல் டி. ஜோசப் என்ற ஒரு விரிவுரையாளரின் கையை இந்த PFI ஆள் வெட்டியபோது[7] இவ்வியக்கத்தின் பெயர் இந்தியா முழுவதும் அறியப்பட்டது எனலாம். தடை செய்யப்பட்ட சிமி கூட்டத்தினர் இம்மாதிரியான Social Democratic Party of India (SDPI), Popular Front of India (PFI), National Development Front (NDF), என்று பரவி வருவதாகத் தெரிகிறது[8]. இவ்வியக்கத்தினரின் இடங்களை சோதனையிடும் போது, தலிபான் போன்ற இயக்கத்தினரின் தீவிரவாத இயக்கத்தினரின் நூல்கள், செயல்முறை கையேடுகள், பயிற்சிப் புத்தகங்கள், முதலியவை சிக்குவதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன[9]. அத்தகைய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் செயல்பாடுதான், தமிழகத்திலும் காணப்படுகிறது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் இயக்கதினம் (17-02-2014): திருநெல்வேலி, ராமநாதபுரம் பகுதிகளில் முஸ்லிம்களுக்கும், போலீசாருக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன[10]. அதே பாணியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் இயக்க தினம் (17-02-2014) ராமநாதபுரத்தில் கடைபிடிக்கப்பட்டது. இதே அமைப்பு உடுப்பியில் ஊர்வலம் சென்றபோது, ஒன்றும் நடக்கவில்லை[11], ஆனால், ராமநாதபுரத்தில் கலவரம் போன்ற நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டனர். இதற்கான அனுமதி வழங்கப்பட்டு ஊர்வலத்திற்காக மதுரை – ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமானோர் திரண்டனர். ஏடிஎஸ்பி வெள்ளைத்துரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதித்தனர். இதன்படி, ராமேஸ்வரம் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில், குமரையா கோவில் பகுதியில், 17-02-2024 அன்று மதியம், 3:30 மணிக்கு, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா தொண்டர்கள், ஊர்வலமாக சென்றனர்[12]. அப்போது சிலர் திடீரென்று வெள்ளை சீருடை அணிந்து டிரம்செட் வாசித்தபடி ஊர்வலத்தில் செல்ல முயன்றனர். அனுமதி இல்லாததால் இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் செல்ல மட்டுமே அனுமதி வழங்கியுள்ளோம். டிரெம்செட் மற்றும் சீருடை அணிந்து செல்ல கூடாது என அவர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தில் தடையை மீறி ஊர்வலம் : கலவரத்தில் கல் வீச்சு: போலீஸ் தடியடி[13]: சீருடை ஊர்வலம் தடுக்கப்பட்டதால், கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் செல்கிறார்கள், நாங்கள் செல்லக்கூடாதா, நாங்களும் இந்தியர்களாம், எங்களுக்கும் உரிமைகள் உள்ளன, என்றெல்லாம் வாதிட்டனர். அப்போதும், சிலர் தடையை மீறி டிரெம்செட் வாசித்தபடி ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் முயன்றபோது சிலர் கல்வீசி தாக்கினர். இதைப்பற்றியும் போலீசார் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ஆட்களைக் குற்றஞ்சாட்டுகின்றனர், ஆனால், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ஆட்களோ, யாரோ கல் எரிந்தனர், மறைந்து விட்டனர் என்று சொல்கிறார்கள்[14]. இதனால் அங்கு பதற்றம் ஏற்படவே போலீசார் லேசான தடியடி நடத்தினர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. கூட்டத்தின் பின்பகுதியில் இருந்து மேலும் சில கற்கள் வீசப்படவே, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதுவும் வழக்கமான விசயங்கள். பி.எப்.ஐ / எஸ்டிபிஐ இவ்விசயங்களில் இம்மாதிரியான கலவரம் ஏற்படுத்துகின்ற நிகழ்வுகளை நடத்துவதில் வல்லவர்கள். இதனால் அங்கு கலவர சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கமுதி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி, திண்டுக்கல் ஆயுதப்படையை சேர்ந்த செந்தில்குமார், பாலமுருகன், திரவியசெல்வன், ஜெயமுருகன் / ஜெயமுகுந்தன் உட்பட 18 காயமடைந்தனர். இதேபோல் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு முதலியன: இந்த சம்பவம் காரணமாக ராமநாதபுரத்தில் பதட்டம் உருவானது. கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. போலீசாரை கண்டித்து, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா தொண்டர்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால், 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இதன்பின், மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்[15]. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அபய்குமார் சிங், ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) ஆனந்தகுமார் சோமானி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதோடு காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதலும் கூறினர். கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 2 சிறப்பு காவல்படை பட்டாலியன், சிவகங்கை மற்றும் விருதுநகரில் இருந்து ஆயுதப்படை பட்டாலியன், ராமநாதபுரம் வரவழைக்கப்பட்டு தீவிர ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை திரும்பியது[16].
பி.எப்.ஐ மற்றும் போலீசார் பரஸ்பர குற்றச்சாட்டுகள்: காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டனர்[17]. அதன்படி ஐ.ஜி. அபய் குமார்சிங், டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி ஆகியோர் வீடியோவை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து சட்ட விரோதமாக கூடுதல், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், கொலை முயற்சி, தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் 1011 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது[18]. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் இஸ்மாயில் மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி[19]: “நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னரே கலவர தடுப்பு படையினர், கண்ணீர் புகை குண்டு வாகனத்தை ஏற்பாடு செய்தது சந்தேகம் அளிக்கிறது. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு எழுத்து பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் பேரணி துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து நிர்வாகிகள் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. தேவையின்றி ஒரு கலவர சூழ்நிலை போலீசாரால் ஏற்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக நீதி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்”, என்று தெரிவித்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது[20].
இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் பேரணியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்குஎஸ்.டி.பி. ஐகண்டனம்[21]: இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் மீது காவல்துறை கொடூர தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான்பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “இராமநாதபுரத்தில் பாப்புலர்ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் துவக்க தினமான பிப்ரவரி 17 ம் தேதி பேரணி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு போலீசாரிடம் முறையாக அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால், பேரணி துவங்கும் நேரத்தில் காவல்துறை அதிகாரிகள்அனுமதி மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழப்பத்தை பயன்படுத்தி ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசமிகள் சிலர் கூட்டத்தின் மீது கல்வீசி தாக்கினர். இதை காரணம் காட்டி கூட்டத்தினர் மீது மிக கொடூரமாக காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியதோடு தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்களை குறி வைத்தும் தாக்கியுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடைபெற்றது. கல்வீசிய விசமிகள் சிலரை பொது மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த தாக்குதல் மிகவும் திட்டமிட்டு காவல்துறையால் அரங்கேற்றப்பட்டதாகவே தெரிகிறது. காவல்துறையின் வன்முறை வெறியாட்டமும், துப்பாக்கிச் சூடும் நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் தமிழக அரசிற்கு எதிராக முஸ்லிம்களை திருப்ப முயற்சி செய்திருப்பது, அரசுக்கு எதிரான காவல்துறையின் சதியா என்ற கோணத்தில் தமிழக அரசு சிறப்பு புலனாய்வு மூலம் விசாரணை நடத்த வேண்டும். சிறுபான்மையினர் மீதான இந்தத்தாக்குதலுக்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் ஊர்வலத்திற்கு பாதுகாப்பு வழங்காததோடு, வன்முறைக்கு காரணமான இராமநாதபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஏ.டி.எஸ்.பிவெள்ளத்துரை ஆகியோரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் மிக அமைதியான முறையில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடைபெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் காவல்துறையினரின் தாக்குதலும், அணுகுமுறையும் வேதனைக்குரியது. நாடு முழுவதும் எத்தனையோ, ஊர்வலங்கள் பேரணிகள் நடைபெறும் போது, முஸ்லிம்கள் நடத்தும் பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் மட்டும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது[22]. இங்கு ஏதோ மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதைப் போல கூறியிருக்கிறார். ஆனால், “வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென மர்ம நபர்கள் கூட்டத்தினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் வானத்தை நோக்கி 6 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அப்பகுதியல் பதற்றம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன”, என்று தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது[23].
http://tamil.oneindia.in இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள்: இந்திய சனநாயக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு சனநாயக ரீதியாக எமது சகோதர இயக்கம் நடத்திய பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் பேரணியில் திட்டமிட்டு உட்புகுந்து கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்பட்ட விசமிகளை கைது செய்யாமல் பேரணியில் கலந்து கொண்ட ஒட்டு மொத்த சனத்திரள் மீதும் தனது வக்கிரமான கோரத்தாக்குதலை நடத்திய காவல்துறையின் செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கொடூர தடியடி பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் பெரும்பாலானோர் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் என்பது இன்னும் கவலையளிக்க கூடிய விசயமாகும். நாம் இந்திய சனநாயக நாட்டில்தான் வாழ்கின்றோமா அல்லது ஏதாவது காட்டாட்சியின் கீழ் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் எம்முள் எழுந்துள்ளது. இந்திய தேசியத்தில் சிறுபான்மையினரின் மீதான அரசபயங்கரவாதத்தின் கோர அடையாளங்களில் இதுவும் ஒன்றாக இன்று பதிந்துள்ளது. இதன் மூலம் சிறுபான்மை இன மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையின்மையின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மை. எது எப்படியாக இருந்தாலும் எம் சமுதாயத்தின் மீதான இந்த அரச பயங்கரவாதம் என்பது எத்தகைய முறையிலும் ஏற்றுக்கொள் இயலாதது. வரும் தேர்தல் களத்தில் இதற்கான பதிலை எம் மக்கள் எதிரொலிப்பார்கள் என்று நம்புகிறோம்[24]. நாங்கள் எம் முன்னோர் மூட்டிய சுதந்திர யாகத்தில் பிறந்த அக்கிணி குஞ்சுகள்…எம் மீதான தாக்குதலை கொண்டு எம்மை அடக்கி ஆளலாம் என்று நினைத்தால் அது நடக்காது…..வல்ல இறைவனை தவிர வேறு யாருக்கும் அஞ்சிடவோ …அடி பனிந்திடவோ மாட்டோம் நாங்கள்….!! இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். யாருடைய உயிருக்கும் எந்த ஆபத்துமில்லை. காயமடைந்தவர்களில் பெரும்பகுதியினர் சிகிச்சை முடித்துவிட்டனர். பெருங்காயமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. களத்தில் நயவஞ்சகர்களை தவிர அனைத்து அமைப்பினரும் ஒற்றுமையுடன் செயல்பட்டுக்கொண்டுள்ளனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஏன் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றை ஆதரிக்கிறது, என்று அவர்கள் தாம் பதில் சொல்லவேண்டும்: முஸ்லிம்கள் ஜிஹாதிகளாக இந்தியாவில் குண்டுகளை வெடிக்கும் போ
தோ, அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் போதோ, தினம்தினம் காஷ்மீரத்தில், மற்ற பகுதிகளில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிக்கின்றபோதோ, இந்த இஸ்லாமிய அமைப்புகள் தங்களை தேசபக்தர்களாகக் காட்டிக் கொள்வதில்லை. அப்பொழுது தீவிரவாதத்திற்கு எதிராக ஊர்வலம் போவோம் என்று வருவதில்லை. மேலும், மக்கள் என்ற பொதுப்பெயரை உபயோகித்திருந்தாலும், குறுகிய நோக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தைத் தீவிரமாக கடைபிடுக்கும் போக்கு தான் இவ்வியக்கத்தின் நடவடிக்கைகளினின்று வெளிப்பபட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஏன் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் முதலியவற்றை ஆதரிக்கிறது, என்று அவர்கள் தாம் பதில் சொல்லவேண்டும்.
வேதபிரகாஷ்
© 19-02-2014
[2] http://zeenews.india.com/news/kerala/country-made-bombs-seized-21-pfi-cadres-arrested-in-kerala_844220.html
[3] http://indianexpress.com/article/news-archive/web/concern-in-govt-over-pfis-growing-outfits-spread/0/
[4] The Kerala government today told the high court that the Popular Front of India is the ‘resurrection’ of banned SIMI in another form and along with National Democratic Front, had “active involvement” in 27 murder cases, mostly of cadres of CPI-M and RSS. The objectives of NDF and PFI were similar. However, NDF felt that if it were to remain confined to Kerala, it would be branded as any other communal organization and to spread its activities to other states, PFI was formed on December 19, 2006 at a meeting of NDF, Manitha Neethi Passrai (MNP- Tamil Nadu) and Forum for Dignity of Karnataka, held at Bangalore. Though PFI had claimed that it was formed to safeguard human rights and protection of minority, they were “clandestinely engaged in wholetime criminal activities with the object to defend Islam”, it was submitted. http://news.outlookindia.com/items.aspx?artid=769976
[6] Cadres of banned Students Islamic Movement of India (SIMI) are understood to have been fast regrouping under the banner of Popular Front of India (PFI), an outfit which has expanded its tentacles to north after carrying out initial recruitment in south India. SIMI has since been banned thrice by the government and the organisation has lost its case in the Supreme Court seeking lifting of the ban.
[7] The PFI had come on the national radar after its activists chopped off the palm of a lecturer in Ernakulum district’s Newman College on July 4,2010, for alleged blasphemy in preparation of examination papers.
[8] According to a government paper,starting largely as a Kerala Muslim outfit and successor to National Development Front (NDF),the PFI now has more than 80,000 members and sympathisers,with a countrywide spread. The paper,that has already been circulated in the PMO,National Security Council Secretariat and the Home Ministry,states that the PFI has a militant core cadre,radical following and a subtly divisive and subversive media organ. While this case was handed over to the NIA last month,subsequent police raids at that time on PFI activists had led to the recovery of subversive material. The paper says that raid on 100-odd PFI establishments had led to recovery of crude explosives,lethal weapons,besides a computer disk containing clips of executions by the al-Qaeda. It says Green Valley Foundation in Mallapuram district provided combat training to PFI cadre under the cover of providing vocational training to the indigent and physically challenged.
[9] போலீசார், நேற்று முன்தினம் (11-07-2010), இடுக்கி மாவட்டம் அடிமாலி கிராமத்திலும், தமிழக – கேரள எல்லையை ஒட்டி குமிளி பகுதியில் சிலரது வீடுகளிலும், “ரெய்டு’ நடத்தினர்.அதில், பல முக்கிய ஆவணங்களும், தகவல்களும் கிடைத்துள்ளதாக பத்தனம்திட்டாவில், மாநில போலீஸ் டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ் தெரிவித்தார். முக்கியமாக ராணுவத்தினரின் செயல்பாடுகள் மற்றும் அவர்களது நடவடிக்கைகளை தடுப்பது குறித்தான, “சிடி’க்கள், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களது வீடுகளில், “ரெய்டின்’ போது சிக்கியது.”இக்குறிப்பிட்ட, “சிடி’க்கள் குறித்து ராணுவ புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்’ என, போலீஸ் டி.ஜி.பி., கோரினார். இதையடுத்து நேற்று, கொச்சி வந்த ராணுவ புலனாய்வுத் துறை அதிகாரிகள், கொச்சி நகர போலீஸ் கமிஷனர் மனோஜ் ஆபரகாமை சந்தித்தனர்.மாநில போலீசார் நடத்திய, “ரெய்டு’ மற்றும் கைப்பற்றிய சில குறிப்பிட்ட, “சிடி’க்கள் குறித்தும் விசாரித்தனர். அதில், குறிப்பாக ராணுவத்தினர் குறித்தும், தலிபான் அமைப்பினர் வழங்கும் தண்டனைகள் மற்றும் தேச விரோத நடவடிக்கைகள் ஆகியவை அடங்கிய, “சிடி’க்களை ஆய்வு செய்து விசாரித்து அறிந்தனர். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38159
[10] http://www.thehindu.com/news/national/tamil-nadu/police-disperse-clashing-groups-at-devipattinam/article4772025.ece
[11] http://www.mangaloretoday.com/main/Udupi-PFI-celebrates-Foundation-Day-by-holding-Unity-Rally.html
[18]மாலைமலர், ராமநாதபுரம்ஊர்வலத்தில்கலவரம்: 1011 பேர்மீதுவழக்குப்பதிவு, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 18, 11:28 AM IST
[19] தினகரன், போலீசைதாக்கியதாக 1000 பேர்மீதுவழக்கு: ராமநாதபுரத்தில்போலீஸ்குவிப்பு, மாற்றம் செய்த நேரம்:2/19/2014 2:54:22 AM
[21] ஒன் இந்தியா தமிள், இராமநாதபுரத்தில்முஸ்லிம்கள்பேரணியில்போலீஸ்துப்பாக்கிச்சூட்டுக்குஎஸ்.டி.பி.ஐகண்டனம், Karur Vadivel,
Updated: Tuesday, February 18, 2014, 14:20 [IST]
அண்மைய பின்னூட்டங்கள்