Posted tagged ‘தலிபான்’

செக்ஸ் படங்கள் வெளியிடும் பாகிஸ்தானிய தியேட்டர்கள் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல்!

பிப்ரவரி 13, 2014

செக்ஸ் படங்கள் வெளியிடும் பாகிஸ்தானிய தியேட்டர்கள் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல்!

 

பாகி சினிமா பேனர்கள்

பாகி சினிமா பேனர்கள்

அமைதியான இஸ்லாமிய பாகிஸ்தான்: பாகிஸ்தானில் இஸ்லாம் என்ற அமைதியான மதம் இருக்கிறது. அந்த அமைதிக்காகத்தான், ஜின்னா என்ற முஸ்லிம், பாரதத்தை உடைத்து இந்த அழகான நாட்டை உருவாக்கினார். ஆனால், ரத்தத்தில் உருவான, இந்நாட்டில் எப்பொழுதும் ரத்தம் சிந்திக் கொண்டுதான் வருகிறது. இஸ்லாம் இருந்தாலும், அமைதி இல்லை. கைபர் பக்துன்வா [Khyber Pakhtunkhwa] என்ற மாகாணத்தின் தலைநகராக இருக்கும் பெஷாவர், தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த நகரமாகும். பாகிஸ்தானில் திரையரங்கு ஒன்றில் செவ்வாய்க்கிழமை (11-02-2014) நிகழ்ந்த குண்டு வீச்சு தாக்குதலில் 12 பேர் பலியானார்கள்[1]. 20 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் புகழ் பெற்ற பிலோர் குடும்பத்தினருக்குச் சொந்தமான “ஷமா’ என்ற தியேட்டரில் செவ்வாய்க்கிழமை சுமார் 80 ரசிகர்கள் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சில மர்ம நபர்கள் 3 கையெறி குண்டுகளை அடுத்தடுத்து வீசியெறிந்ததில் 12 பேர் உடல் சிதறி பலியானார்கள்[2]. இக்குண்டுகள் சைனாவில் உற்பத்திச் செய்யப் பட்டவை என்று குறிப்பிடத் தக்கது[3]. தலிபான்களின் சைன தொடர்பும் இதில் வெளிப்படுகிறது. ஒரு குண்டு தியேட்டர் உள்ளே வெடித்தது, மற்றவை வெளியே வெடித்தன. ஏற்கனவே இப்பகுதியில் தீயேட்டர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது[4].

 

Bomb attack at Pakistan cinema kills 11

Bomb attack at Pakistan cinema kills 11

பாகிஸ்தான்  தியேட்டரில்  குண்டுவெடிப்பு: ‘பலானபடம்  பார்க்க  வந்த 10 பேர்பரிதாபப்பலி[5]: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் ஆபாச சினிமா காட்டப்படுவதாக தலிபான் ஆதரவு அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது. இது போன்ற படங்களை திரையிடும் தியேட்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது[6]. பெஷாவரில் உள்ள பழமை வாய்ந்த ஷமா சினிமா தியேட்டரில் ஆபாச படங்கள் அடிக்கடி திரையிடப்பட்டு வந்துள்ளன[7]. காயமடைந்த 20 பேர் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த தியேட்டரில் ஆபாச திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. மேலும் இந்திய திரைப்படங்களும் அவ்வப்போது திரையிடப்பட்டு வந்தன.  தீவிரவாதிகளிடம் இருந்து தியேட்டர் உரிமையாளருக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததாக பெஷாவர் போலீஸார் தெரிவித்தனர்.

 

Bomb attack at Pakistan cinema kills 1

Bomb attack at Pakistan cinema kills 1

இந்தி படங்கள் பெயரில் செக்ஸ் / புரோன் படங்கள் காண்பிக்கப்படுவது: பொதுவாக பாலிவுட், அதாவது இந்தி திரைப்படங்கள் பிரபலமாக இருந்து வருகின்றன.  லாஹூரில் கூட படங்கள் காட்டப்படுகின்றன. இதுதவிர, நடுவில் செக்ஸ் படங்களும் காட்டுவது வழக்கமாக இருக்கிறது[8]. “ட்ரைலர்” என்ற பெயரிலும் சில காட்சிகள் காட்டப்படுகின்றன. அவற்றில் பெண்கள் படுக்கைகளில் உருளுவது போலவும், பாப் பாடல்களுடம் அக்காட்சிகள் இருக்கின்றன[9]. இதற்கு பிறகு, படம் ஆரம்பிக்கிறது. அதிலும் செக்ஸ் காட்சிகள் இருக்கின்றன[10]. ஏற்கெனவே இந்தி படங்கள் காட்டக் கூடாது என்ற எதிர்ப்பிஉ இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தி படங்கள் பெயரில் புரோனோ / செக்ஸ் படங்கள் காண்பிக்கப் படுவது, இந்தியவிரோதத்தை வளர்ப்பதற்கு என்றே தெரிகிறது. மேலும், உண்மையான முஸ்லிம்கள் என்றால், அவர்கள் எப்படி அத்தகைய படங்களைக் காட்டுகிறார்கள், மக்களும் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

 

pakistan-shama-cinema-story-top

pakistan-shama-cinema-story-top

தலிபான் ஆதிக்கத்தில் உள்ள பாகிஸ்தான் பகுதிகள்: பெஷாவரில் தலிபான் மற்ற ஜிஹாதிகளின் தாக்குதல்கள் நடப்பது சகஜமாக உள்ளன. கடந்த வாரத்தில் ஒரு தற்கொலைப் படை ஜிஹாதியினால் ஒரு ஓட்டலில் குண்டுவெடிப்பு நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டனர், 30ற்கும் மேலானவர்கள் படுகாயம் அடைந்தனர்[11]. பெஷாவர் நகரில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஒரு தியேட்டரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த  சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதையடுத்து பெஷாவரில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சினிமாவும், இசையும் இஸ்லாத்துக்கு எதிரானது என தலிபான் தீவிரவாதிகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தேர்தல்களில் எப்படி பெண்கள், இசை முதலியவை உபயோகப்படுத்தப் பட்கின்றன என்பதை முந்தைய பதிவுகளில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

 

வேதபிரகாஷ்

© 13-02-2014


[2] தினமலர், பாகிஸ்தான்திரையரங்கில்குண்டுவீச்சு : 12 பேர்பலி, By Somasundaram Thirumalaikumarasamy, பெஷாவர், First Published : 12 February 2014 07:33 AM IST

[7] தினத்தந்தி, ஆபாசபடம்திரையிடும்சினிமாதியேட்டரில்குண்டுவெடித்ததில் 10 பேர்பலி, பதிவு செய்த நாள் : Feb 12 | 09:17 am

,

[10] It shows popular Bollywood hits made in Lahore, Pakistan’s film capital. One screen was reserved for pornographic films, or “sexy movies” as a moustached usher had told The Daily Telegraph during a recent visit to the cinema. A show began with trailers showing women rolling around on unmade beds to pop songs. Then came the main feature, drawing cheers from the audience. Titled Friendship, it described a family’s attempt to marry off a son despite an affair, told with frequent sexual scenes.

http://news.nationalpost.com/2014/02/12/terrorists-toss-hand-grenades-into-audience-at-last-porn-cinema-in-peshawar-killing-at-least-10-people/

[11] A week ago a suicide bomber blew himself up near a hotel restaurant in Peshawar, killing nine people and injuring more than 30 others, according to local officials.

http://edition.cnn.com/2014/02/11/world/asia/pakistan-cinema-blasts/

தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி (கணவரைக் கட்டிப் போட்டு) என்ற எழுத்தாளரை சுட்டுக் கொன்றுள்ளனர்!

செப்ரெம்பர் 5, 2013

தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி (கணவரைக் கட்டிப் போட்டு) என்ற எழுத்தாளரை சுட்டுக் கொன்றுள்ளனர்!

தலிபான் ஜிஹாதிகளால் கொலை செய்யப்பட்ட சுஷ்மிதா பானர்ஜி

தலிபான் ஜிஹாதிகளால் கொலை செய்யப்பட்ட சுஷ்மிதா பானர்ஜி

தலிபான் ஜிஹாதிகள் சுஷ்மிதா பானர்ஜி என்ற எழுத்தாளரை, வீட்டுக்குள் நுழைந்து கணவரைக் கட்டி வைத்து விட்டு, வெளியே கொண்டு சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, உடலை மதரஸா அருகில் போட்டுச் சென்றதாக செய்திகள் வந்துள்ளன[1].

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவர் எழுதிய நாவல்

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவர் எழுதிய நாவல்

சையது பானர்ஜி என்கின்ற சுஷ்மிதா பானர்ஜி, ஜான்பாஸ் கான் என்ற, ஆப்கானிஸ்தான் வியாபாரியைத் திருமணம் செய்து கொண்டு பக்டிகா மாகாணத்தில், கரனா என்று ஊரில் வசித்து வந்தார். “ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியது” என்ற பெயரில் இவரது நாவல், திரைப்படமாக 2003ல் எடுக்கப்பட்டது[2]. இந்நாவலை இவர் 18 வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தார்[3]. இவரது மைத்துனரும் கல்கத்தாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார்[4].

© வேதபிரகாஷ்

05-09-2013


[2] The report, quoting Afghan police officials, said Taliban militants arrived at her home in, Kharana, capital of Paktika province, tied up her husband and other members of the family, took Banerjee out and shot her. They dumped her body near a religious school. No militant group has yet said it killed Banerjee, 49, also known as Sayed Kamala, who was married to an Afghan businessman Jaanbaz Khan. She earned fame for her memoir, A Kabuliwala’s Bengali Wife, recounting her life in Afghanistan and her escape in 1995. The memoir was made into ‘Escape from Taliban’, a Bollywood film starring Manisha Koirala. The film was touted as a “story of a woman who dares [the] Taliban”. The deceased had recently moved back to Afghanistan to live with her husband, the report said. In an article in Outlook magazine in 1998, she had written that “life was tolerable until the Taliban crackdown in 1993” when the militants ordered her to close a dispensary she was running from her house and “branded me a woman of poor morals”.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Indian-diarist-Sushmita-Banerjee-shot-dead-in-Afghanistan/Article1-1117939.aspx

இந்தியா போதை மருந்து ஜிஹாதிற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது – பாகிஸ்தானிலிருந்து வந்த ரூ.10 கோடி கோக்கைன் காஷ்மீரில் பிடிபட்டது!

ஓகஸ்ட் 4, 2013

இந்தியா போதை மருந்து ஜிஹாதிற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது – பாகிஸ்தானிலிருந்து வந்த ரூ.10 கோடி கோக்கைன் காஷ்மீரில் பிடிபட்டது!

Cocaine truck-loc- seized 2013

பாகிஸ்தானிலிருந்து வந்த ரூ.10 கோடி கோக்கைன் காஷ்மீரில் பிடிபட்டது: ஹிஜ்புல் முஜாஹித்தீன் என்ற தீவிரவாத அமைப்பிற்கு சொந்தமான ரூ.10 கோடிகள் மதிப்பிலான கோக்கைன் பாகிஸ்தான் வழியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் JK02F-0127 என்று பதிவு செய்யப் பட்ட சரக்குலாரி வழியாக நுழைந்தபோது, பிடிபட்டது[1]. சரக்கு லாரிகளை சோதனை போட பாகிஸ்தான் சகோடி என்ற இடத்திலும், இந்தியா சலமாபாதில், அமன் சேது என்ற இடத்திலும் சோதனைச் சாவடிகளை வைத்துள்ளன. லாரி ஓட்டுனர் அப்துல் அஹத் கனி [Abdul Ahad Ganie] என்பவன் பிடிபட்டான். வழக்கம் போல அவன் ஒரு குருவி போன்ற ஏஜென்ட் தான். இருப்பினும் தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு கொண்டவன் என்பதால், விசாரித்தபோது, தானும் அவர்களைச் சேர்ந்தவன், சரக்கு ஹிஜ்புல் முஜாஹித்தீனுக்குச் சொந்தமானது என்பதை ஒப்புக் கொண்டான்[2].

Pakistan Terrorist Warchests

ஜிஹாதிகளின் புதிய தீவிரவாத தாக்குதல் – போதை மருந்து: ஶ்ரீநகர் மண்டியிலிருந்து வாழைப்பழங்களை பைஸன் டிரேடர்ஸ் பாக் [Faizan Traders PaK] என்ற கடையில் இறக்கி வைத்து திரும்ப வந்ததாகச் சொல்லப் பட்டது[3]. ஆனால், வண்டியை சோதனை செய்தபோது, ஒன்பது பார்சல்களில் நன்றாக பேக் செய்யப்பட்ட வெண்மை நிறம் கொண்ட போதைப் பொருள் கண்டு பிடிக்கப் பட்டது. அப்பொருளை சோதனை செய்தபோது கோக்கைன் என்றும் தெரிய வந்தது[4]. பிறகு போலீஸார் ஒரு வழக்கைப் பதிவு [FIR No. 47/2013 ] செய்தனர். டிரைவர் மற்றும் கன்டக்டெர் கைது செய்யப்பட்டனர். இப்பொருள் காஷ்மீரில் ஒருவரிடம் டெலிவரி செய்யப் படவேண்டும் என்றும், அங்கிருந்து அவை பிரிக்கப் பட்டு விற்பனை செய்யப் பட்டு, அதிலிருந்து வரும் பணம் தீவிரவாத-பயங்கரவாத-பிரிவினைவாத செயல்களுக்கு உபயோகப் படுத்தப் படும் என்று தெரிய வந்துள்ளது[5]. ஆப்கானிஸ்தானில் இத்தகைய போதை மருந்துப் பொருட்கள் தயாரிக்கப் பட்டு, தீவிரவாதிகளுக்கு விநியோகிக்கப் படுகிறது. அதனை விற்று அவர்கள் பணம் பெருகிறார்கள்.

opium-poppies-afghanistan

இந்திய விரோத ஜிஹாதிகள் ஏன்?: தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானின் ஊடுருவல்காரர்களின் தீவிரவாதம், பயங்கரவாதம் முதலிய குரூரங்களைத் தடுப்பதற்காகத்தான் 1978ல் எல்லைகள் மூடப்பட்டன. எல்லைகள் வழியாக நடந்து வந்த சரக்குப் போக்கு வரத்தும் நிறுத்தப் பட்டது. வாஜ்பேயி ஆட்சியில் இருதரப்பு உறவுகள் ஓரளவிற்கு சரியாக ஆரம்பித்தன. பிறகு, முஸ்லிம்கள் விருப்பத்திற்கு இணங்க, 57 வருடங்களுக்குப் பிறகு சரக்குலாரிகள் மட்டும் குறிப்பிட்ட 10-15 பொருட்கள் எடுத்துக் கொண்டு வரலாம் என்று ஏப்ரல் 2005ல் அனுமதிக்கப்பட்டது. ஆனால், தளர்த்தப் நிலையை தீவிரவாதத்திற்குத்தான் முஸ்லிம்கள் பயன்படுத்துகிறார்கள். இப்படடீந்திய முஸ்லிம்கள் நம்பிக்கை துரோகிகளாகத் தான் இருந்து வந்துள்ளார்கள் ஏன்று தெரியவில்லை. அவ்வப்போது, தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள், பாகிஸ்தானிய சிம் கார்ட்டுகள் என்று எடுத்து வந்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றையும், செக்போஸ்டில் இந்திய வீரர்கள் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இம்முறை இப்படி ரூ.10 கோடிகள் மதிப்பிலான கோக்கைன் போதைப் பொருள் பிடிப்பட்டுள்ளது[6].

Cocaine Jihad India has to face

ஜிஹாதி தீவிரவாதமும், போதை மருந்து வியாபாரமும் பின்னிப் பிணைந்துள்ளது: தலிபான் – பாகிஸ்தான் – காஷ்மீர் போதை மருந்து வியாபார இணைப்பு, ஜிஹாதி தொடர்பு, தீவிரவாத சம்பந்தம் முதலியவை வெளிப்படையாகிறது[7]. உலகம் முழுவதும் இப்போதை பொருட்கள் ஊடுருவிச் செல்கின்றன. தலிபான் ஆதிக்கத்தில் ஆப்கானிஸ்தானில் போதை மருந்து பொருட்களின் உற்பத்தி அதிகமாகி உள்ளது.Afgan opium crossing bordersஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்படும் போதை பொருட்கள் பாகிஸ்தான் வழியாக மற்ற நாடுகளுக்குக் கடத்தப் படுகிறது. afghanistan-opium-production sales, consumption across globeமயன்மார் / பர்மாவிற்கும் செல்கிறது. பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்கின்றது. மத்திய ஆசிய நாடுகளும் இதில் சம்பந்தப் பட்டுள்ளன. Taliban rule increased opium tradeகசாப் போன்றவர்கள் ஒரு முறையில் பயங்கரவாதத்தால் தாக்கினர் என்றால், முஜாஜித்தீன் பெயரில் பட்டகல் கும்பல் வெடிகுண்டுகள் வைத்து குரூரமாகக் கொல்கின்றனர் என்றால், இந்த போதை மருந்து ஜிஹாதி கும்பல் இவ்வாறு வேலை செய்கிறது[8]. ஆகவே, இந்திய பெற்றோர்கள், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனானப் பட்ட டேவிட் கோல்மேன் ஹெட்லி அல்லது சையது தாவூத் ஜிலானிவே போதை மருந்து கடத்தலில் தான் முதலில் பிடிபட்டான்[9]. பிறகு அவனது பின்னணி தெரிய வந்தது. ஆகவே ஜிஹாதி தீவிரவாதமும், போதை மருந்து வியாபாரமும் பின்னிப் பிணைந்துள்ளது என்பது உறுதியாகிறது.

How drug trade operates through Golden crescent

முஸ்லிம்களின் இரட்டை வேடங்கள்: பொதுவாக முஸ்லிம்கள் தாங்கள் மது, போதை மருந்து முதலியவற்றை கையால் கூடத் தொடமாட்டோம். அல்லா அவற்றை ஒதுக்கியுள்ளார், என்றெல்லாம் பெருமையாக பேசுவார்கள், தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். ஆனால், இப்பொழுது, முஸ்லிம்கள் எப்படி சட்டங்களை மீறி, தார்மீக விதிகளை மீறி, மனித நேயங்களைத் தாண்டி, சமூகத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், திட்டத்தில், இப்படி போதை மருந்தைக் கடத்திக் கொண்டு வந்துள்ளார்கள் என்று தெரியவில்லை. வழக்கம் போல, தமிழ் ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. முஸ்லிம் இணைத்தளங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், ஒன்றுமே தெரியாதது போல நடிக்கின்றன. இஸ்லாத்தின் எதிரிகள் என்று அவர்களை சாடவில்லை. நரகத்திற்கு போவார்கள் என்று சாபமிடவில்லை.

Pakistan women drug addicts

பாகிஸ்தான் பெண்கள் போல இந்திய பெண்களும் சீரழிய வேண்டுமா?: பாகிஸ்தான் பெண்களே போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி உழல்வதாக பாகிஸ்தான் பத்திரிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன[10]. பள்ளி-கல்லூரி மாணவிகள் அப்பழக்கத்தில் உள்ளதாக கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்[11]. பாகிஸ்தான் அரசின் போதை மருந்து தடுப்புப் பிரிவு சோதனை மேற்கொண்டதில் 70% பள்ளி-கல்லூரி மாணவிகள் போதை மருந்தை யாதாவது ஒரு முறையில் – புகைத்தல், உக்கா, பீடா, இஞ்செக்சன் – உட்கொள்வதாகத் தெரிகிறது[12]. அதில் 47% கல்லூரி மற்றும் 21% பள்ளி மாணவிகள் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவிலும் இதே நிலை வரவேண்டுமா? பிறகு இஸ்லாம் பெயரில் ஏன் தாலிபான், முஜாஹித்தீன்,. லஸ்கர் போன்ற தீவிரவாத இயக்கங்கள் இவ்வாறு செய்து வருகின்றன? ஏன் காஷ்மீர் முஸ்லிம்கள் அதை ஆதரிக்க வேண்டும்? மற்ற இந்திய முஸ்லிம்களும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும்? பாகிஸ்தானிலிருந்து வரும் போதை பொருள் தமிழகத்திற்கு வராதா என்ன?

Pakistan first day cover reveals devilish drugish plan

வேதபிரகாஷ்

© 04-08-2013


[1] While claiming that the Rs. 10 crore worth cocaine consignment, seized from a truck across the LoC in Baramulla district, had been smuggled in for Hizbul Mujahideen, the Jammu and Kashmir Police have arrested an alleged operative of the militant outfit from the capital city on Friday – 02-08-2013.

http://www.thehindu.com/news/national/jk-police-claim-seized-drug-was-meant-for-hizbul-militant/article4984854.ece

[4] The vehicle had gone to Pakistan Administered Kashmir on Thursday with a load of Bananas from fruit Mandi Srinagar which were delivered to one Faizan Traders PaK, he said. “On through search of the vehicle on its return near Sheeri, nine Packets (approx.10Kgs) of contraband consisting of white colored substance (Cocaine) were seized from the vehicle which were concealed in a tyre in the overhead toolbox,” the spokesman said, adding, “The driver and conductor of the vehicle were questioned on spot who admitted that they had brought the illegal drugs from (PaK) which was to be delivered to some conduit in Srinagar.”

http://www.kashmirreader.com/08032013-ND-cocaine-worth-rs-10-crore-seized-from-cross-loc-truck-18976.aspx

[6] Even as some prohibited items, including rounds of ammunition and Pakistani SIM cards have been recovered from some vehicles and passengers in Jammu, it is for the first time in the last five years of the cross-LoC trade that a sizable quantity of cocaine has been allegedly smuggled in and seized.

http://www.thehindu.com/news/national/jk-police-claim-seized-drug-was-meant-for-hizbul-militant/article4984854.ece

[8] In the late 1980s,Pakistan and Afghanistan exported nearly half the world’s heroin, and, although their relative share declined somewhat thereafter, they remain among the world’s major producers. Pakistanis one of the primary transit countries for drugs from Afghanistan and hence knowledge of new routes and evolving methods of drug trafficking is essential for successful interdiction. Pakistan’s population is currently 16 million.

http://www.citijournal.com/pakistan-drug-addidct/

[12] A new survey conducted by the Pakistan Ministry of Narcotics Control shows that nearly 70% of female drug addicts in the country are either high-school or college educated. The study, which interviewed 500 women in Islamabad, Lahore and other cities throughout Pakistan, finds that 47% of the women are college graduates, while 21% have had at least primary or matriculation education.

http://www.thefix.com/content/pakistan-female-addicts-education9482

நங்க பர்வதத்தின் மேல் ஏறத்தயாரான 10 பேரை இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்!

ஜூன் 25, 2013

நங்க பர்வதத்தின் மேல் ஏறத்தயாரான 10 பேரை இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்!

 

பாகிஸ்தானில் உள்ள நங்க பர்வதம் (26,660 feet, is the world’s ninth-highest mountain) இரண்டாவது உயந்த சிகரத்தைக் கொண்டுள்ளது, உலகத்தின் 9வது உயர்ந்த மலையாகும். இதன்மேல் ஏற வெளிநாட்டு பிரயாணிகள் சென்றனர். அப்பொழுது கில்கிட்-பலிஸ்தான் என்ற இடத்தில் ராணுவ உடையில் வந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சுட ஆரம்பித்தார்கள். அதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

 

தலிபானின் தொடர்பாளி இஷானுல்லா இஷன் (Taliban spokesman, Ehsanullah Ehsan) என்பவன் அந்த துப்பாக்கி வீரர்கள் ஜுன்டால் அப்சா (a Taliban affiliate named Jundul Hafsa) என்ற தலிபான் பிரிவை சேர்ந்தது மற்றும் மே 29 அன்று ஒரு அமெரிக்க விமான தாக்குதலில் வலி உர் –ரஹ்மான் என்ற தலிபான் தலைவர் கொல்லப்பட்டதற்குத்தான் இந்த பழி வாங்கும் நடவடிக்கை (an American drone attack that killed the Taliban deputy leader, Wali ur-Rehman, on May 29) என்று தொலைபேசியில் ஒப்புக்கொண்டுள்ளான்[1].

 

இந்த ஜுன்டால் அப்சா, லஸ்கர் -இ- ஜாங்வி (Lashkar-e-Jhangvi) என்ற கூட்டத்தின் புதியதாக முளைத்துள்ள இஸ்லாமிய ஜிஹாதிக் கூட்டம் என்று அறியப்படுகிறது. முன்பு ஷியைத் என்ற முஸ்லிம்கள் சென்று கொண்டிருந்த பேருந்தை தாக்கியது இந்த கும்பல்தான் என்று கூறப்படுகிறது. என்னத்தான் பெயரை மாற்றிக் கொண்டாலும், குணமோ, தீவிரவாதமோ மாறாமல், தீவிரம் அடைந்து கொண்டுதான் வருகிறது.

 

இந்நிலையில், எங்கு தமது பிழைப்பு போய்விடுமோ என்று, அயல்நாட்டு பிரயாணிகள், சுற்றுலா பிரயாணிகள் மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாதத் தாக்குதலை உள்ளூர்வாசிகள் கண்டித்துள்ளனராம். ஆமாம், பிரான்ஸ் போன்ற நாடுகளே கண்டிக்கும் போது[2], உள்ளூர்வாசிகளுக்கு என்ன? இஸ்லாமாபாதிலும் கண்டன ஆர்பாட்டம் நடந்துள்ளதாம்[3]. ஆமாம், “நாங்கள் கொன்று கொண்டே இருப்போம், நீங்கள் வந்து கொண்டே இருங்கள்”, என்றால் என்ன அர்த்தம்?

 

இந்தியா வழியாக இமயமலையின் மீது ஏற்பவர்கள் கொல்லப்படுவதில்லை, அதஅவது, அந்த பேச்சிற்கே  இடமில்லை.  ஆனால், பாகிஸ்தான் வழியாக மலையேற முயன்றால், இப்படியான தீவிரவாதத் தாக்குதலும் இருக்கிறது என்பதனை அயல்நாட்டவர் புரிந்து கொள்வார்கள்.


பாகிஸ்தானில் தேர்தல் – தலிபான், ரத்தம், குண்டுவெடிப்பு, இவற்றிற்கிடையில் வாக்குப் பதிவு நடக்கிறது!

மே 11, 2013

பாகிஸ்தானில் தேர்தல் – தலிபான், ரத்தம், குண்டுவெடிப்பு, இவற்றிற்கிடையில் வாக்குப் பதிவு நடக்கிறது!

who will be next prime minister of pakistan 2013பலத்த பாதுகாப்பில் தேர்தல் நடக்கிறது: பாகிஸ்தானில் தேர்தல் நடப்பது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. நடந்த நாட்களில் குண்டுவெடிப்பு[1], வேட்பாளர்கள் கொலை, வன்முறை என்ற கொடுமைகளுக்கு மத்தியில் 11-05-2013 அன்று அங்கு தேர்தல் நடந்தது. தலிபான் அச்சுறுத்தலுக்காக ஆறு லட்சம் பாதுகாப்பு வீரர்கள், தேர்தலின் போது ஓட்டுப்போட நியமிக்கப்பட்டார்கள்[2]. 73,000 ஓட்டு சாவடிகள் இருந்தன, அதாவது ஒரு சாவடிக்கு 5-10 வீரர்கள் என்று காவல் இருந்தார்கள்.

quaid-e-azam-and-liaquat-ali-khan-was-the-prime-minister-smokingபாகிஸ்தானில் எல்லா முஸ்லீம்களும் முஸ்லீம்கள் இல்லை: பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருந்தால், எல்லா முஸ்லீம்களும் அங்கு சரிசமமாக நடத்தப் படுவதில்லை, ஏன் முஸ்லீமாகக் கூட கருதப்படுவடில்லை. சுன்னி / சன்னி முஸ்லீம்கள் தாம் உயர்ந்தவகள், அதற்கடுத்து ஷியா முஸ்லீம்கள். ஆனால், அவர்களும் பலமுறைத் தாக்கப் பட்டுள்ளார்கள், அவர்கள் மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன. பிறகு அஹ்மதியா[3], காதியான், பஹாய் போன்றோர் முஸ்லீம்களே இல்லை என்று விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்[4]. முஸ்லீம்-அல்லாவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஆக ஓட்டுரிமை அவர்களுக்கு இல்லை[5]. அஹ்மதியர் ஓட்டுரிமைப் பிரச்சினைப் பற்றி அமெரிக்காவே வக்காலத்து வாங்கியுள்ளது[6].

Veero Kolhiபெண்கள் ஓட்டுரிமை, வாக்களிப்பு,  முதலிய பிரச்சினைகள்: வடமேற்கு பிராந்தியத்தில் பெண்கள் ஓட்டு போடமுடியுமா என்ற சந்தேகம் உள்ளது[7]. தலிபான்களின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருப்பதால், பெண்கள் தைரியமாக வெளிவந்து ஓட்டுப் போடுவர்களா என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, பெண்கள் தேர்தலில் பங்கு கொள்வது ஜனநாயக நெறிமுறைக்கு எதிரானது என்ற பிரச்சாரம் நடந்துள்ளது. பிரச்சாரத் துண்டுகளும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளன[8]. இந்த தடவை 18-29 வயதுள்ள இளைஞர்கள் ஓட்டுப் போடலாம் என்றுள்ளதால், பாகிஸ்தானில் 42% இளைஞர்கள் ஓட்டாளர்களாக இருக்கிறார்கள்[9].

Nawaz vs Imranஅடுத்த பிரதம மந்திரி யார்: அடுத்த பிரதம மந்திரி யார் என கெட்டதற்கு[10], “நான் தான், ஏனெனில் இம்ரன் கானுக்கு அத்தகைய வாய்ப்பு என்றும் இருந்ததில்லை” என்று மௌலானா பசல்-உர்-ரஹ்மான், அமீலர் ஜமைத்-உலேமா-இ-இஸ்லாம் என்ற இயக்கத்தின் தலைவர் கூறியிருக்கிறாராம்[11]. இருப்பினும் நவாஸ் செரிப் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Bindia Rana - transgender contest PAK-ele-2013முதல் முறையாக  திருநங்கை தேர்தலில் போட்டி: முதல் முறை, அலி / திருநங்கை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது[12]. பிந்தியா ரானா என்ற அந்த நபர் போட்டியிடுகிறார். நான் தோற்றாலும், வென்றாலும் உரிமைகளுக்காகப் போராடுவேன் என்கிறார். இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப் படுவார்கள். தேர்தல் நேரங்களில் ஓட்டு வேட்டையின் போது ஆடவைப்பர்.

© வேதபிரகாஷ்

11-05-2013


[8] In an increasingly fraught and violent runup to the 11 May vote, leaflets are appearing stating that it is “un-Islamic” for women to participate in democracy.

[10] Amir Jamiat Ulema-e-Islam (JUI-F), Maulana Fazl-ur-Rehman said on 08-05-2013 it was likely that he becomes the next prime minister of Pakistan but the Pakistan Tehreek-e-Insaf Chief Imran Khan neither had any such chance before nor now

1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!

மார்ச் 3, 2013

1971 போலவே இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன – அமைதி கொடுக்கும் இஸ்லாம் இதுதான் போலும்!

Attacks on Hindus is similar to 1971

முஸ்லீம் கலவரத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது: முஸ்லீம்களுக்குள்ளான விவகாரத்தில் கலவரம் வெடித்து அது இந்துக்களைத் தாக்குவதுதான், ஜிஹாதித்துவமாக இருக்கின்றது. தலைநகர் டாக்காவில் கலவரம் செய்தால் அது எதிர்ப்பாக இருக்கலாம் ஆனால், நவகாளி, சிட்டாகாங் பகுதிகளில் வாழும் இந்துக்களைத் தாக்கினால், அதற்கு என்ன அர்த்தம்? “இஸ்லாம்” என்றால் அமைதி என்று மார்தட்டிக் கொள்ளும் முஸ்லீம்கள் இந்துக்களுக்கு கொடுக்கும் அமைதி இதுதான் போலும்! ஜமாத்-இ-இஸ்லாமிய கலவரத்தில் இந்து கோவில்கள் எரியூட்டப்பட்டுள்ளன, இந்துக்கள் தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளணர். இப்பொழுதுதான் செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. நவகாளி மற்றும் சிட்டகாங் பகுதிகளில் அவ்வாறு இந்துக்களின் வீடுகள்-கோவில்கள் தாக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்[1].

Hindus attacked - temples torched - houses looted - 2013

இந்தியாவில் இதைப் பற்றி மூச்சு-பேச்சு இல்லை: ஆனால், செக்யூலரிஸ இந்தியர்கள் கண்டுகொள்வதாக இல்லை! காலம் மாறினாலும், யுத்தமுறைகள் மாறினாலும், மாற்றங்களை இந்துக்கள் புரிந்து கொள்வதாக இல்லை[2]. வெளிநாட்டு கத்தோலிக்க சோனியாவிற்கு, 2014ல் ஆட்சியை எப்படி மறுபடியும் பிடிக்க வேண்டும் என்றுள்ளதால், இதைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை[3]. இந்து தொழிலதிபர்களை அடையாளங்கண்டு மிரட்டினாலும், அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதில்லை[4]. மமதா அம்மையாரும் இதனை கண்டுகொள்வதாக இல்லை, மாறாக முஸ்லீம்களைத்தான் அவர் ஆதரித்து வருகின்றார். முலாயம் மறுபடியும் “முல்லவாகி” முஸ்லீம்களுடன் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்[5]. ராஹுல் காந்தி பொது காரியதரிசிகளைக் கூட்டி கூட்டம் போடுகிறார்[6].

Hindu woman wails after her house looted and torched

தீவிரவாதிக்குத் தூண்டு தண்டனை அளித்ததால் கலவரம்:  டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[7] விதிக்கப்பட்டுள்ளது! இதனால் ஜிஹாதிகளை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் முஸ்லீம் குழுமங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால், ஜமாத்-இ-இஸ்லாமிகாரர்கள் இரண்டு நாட்களாக கலவரங்களில் ஈடுபட்டு, பதிலுக்கு போலீஸார் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளது. இவ்வாறு கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

Nipu Sheel wails -Jamaat-Shibir men at Banshkhali in Chittagong - Photo - Anup Kanti Das

கலவரங்களில் இந்துக்களும் தாக்கப்படுகின்றனர் என்ற செய்தி இப்பொழுது வெளிவருவது: முதலில் ஏதோ முஸ்லீம்களுக்குள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள், கலவரம் செய்து கொள்கிறார்கள் என்று தான் செய்திகள் வந்தன. இப்பொழுது சம்பந்தமே இல்லாமல் இந்துக்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர். சுமார் 10 இந்து கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன[8]. 50 இந்துக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன[9]. இதனை படமெடுத்த ஊடகக் கரர்களை, அவற்றை வெளியிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டியும் உள்ளனர். என்றேல்லாம் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

Bangladesh protesters against Capital punishment

அருந்ததி ராய், ஜிலானி, லோனி, செதல்வாத் போன்றோர் இப்பொழுது ஏன் வாயைத் திறக்கவில்லை?: முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கி வரும் இந்த அறிவு ஜீவிகள் இப்பொழுது ஏன் இருக்கின்ற இடம் கூட தெரியாமல் இருக்கிறார்கள்? பீஜேபி கூட மகிழ்ச்சியாக கூட்டம் கூடுகிறதே தவிர, இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லையே? ஆனால், இலங்களை தமிழர்களுக்கு ஆதரிப்பதாக செய்திகள் வந்துள்ளன. அப்படியென்றால், பீஜேபியும் அதே வழியில் செல்கிறாதா? சல்மான் குர்ஷித் முன்பு முஸ்லீம் போல கத்தினார், ஆனால், இப்பொழுதோ, அது அவர்களது “தொட்டுவிடும்” உள்நாட்டு விஷயம் என்கிறார்[10]. அப்படி என்னத்தைத் தொடுகிறது என்று சொல்லவில்லை[11]. கம்யூனிஸ்ட் யசூரி கலவரத்தைக் கண்டித்தோது சரி[12]. பிரனாப் முகர்ஜி இத்தனை கலவரங்கள், கொலைகள், எரியூட்டுகள் நடந்து கொண்டிருந்தாலும், தமது மாமா-மச்சான்களைப் பார்க்க, தனது அங்கிருக்கும் சொந்த ஊருக்கு வருகிறாராம்!

Mulayam again poses as Mulla - hobnobbing with Muslims 2013

1971 மற்றும் 2013 – இந்துக்கள் தாக்கப்படுவது: பங்களாதேசம் உருவாக இந்திய உதவியது. அதாவது, முக்திவாஹ்னியுடன் போரிட்டு விடுதலை வாங்கிக் கொடுத்த இந்திய ராணுவத்தில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். ஆனால், இந்தியர்கள் அப்பொழுது அவ்வாறு நினைத்ததில்லை. ஆனால், 1071லேயே, பாகிஸ்தானி ஆதரவாளர்கள், ஜமத்-இ-இஸ்லாமி, போன்ற வெறிபிடித்த முஸ்லீம்களை இந்துக்களைத் தாக்கினர், பெண்களைக் கற்பழித்தனர், வீடுகளை சூரையாடினர், கோவில்களை தரை மட்டமாக்கினர். அதேதான் இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

Taliban wanting Jihadi Bangla Muslims

‘Amra Sobai Hobo Taliban Bangla Hobe Afghanistan’ – பங்களாதேசம் ஆப்கானிஸ்தான் ஆனால் தான், எங்களுக்கு சோபை வரும் என்று வெளிப்படையாக தீவிரவாதத்தை வளர்க்கும் வங்காள ஜிஹாதிகள்! இப்படி இந்தியாவைச் சுற்றி ஜிஹாதிகள் இருந்தால், இந்தியா என்னவாகும்?

© வேதபிரகாஷ்

03-03-2013


 


[1] Police also reported attacks on several Hindu homes and temples in the southern Noakhali and Chittagong districts.

http://thepeninsulaqatar.com/qatar/227373-bangla-death-verdict-sparks-riots-34-die-.html

[6] Party vice-president Rahul Gandhi has convened a meeting of all general secretaries and central leaders in charge of states on March 6, leading to wide anticipation in the party quarters that some of them may get new assignments.http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Rahul-Gandhi-calls-general-secys-meeting/Article1-1020202.aspx

[10] Terming the riots in Bangladesh over a war crimes verdict as an internal matter of that country, External Affairs Minister Salman Khurshid on Friday said the government sitting in Dhaka is fully capable of handling this situation and that the law will take its own course. Khurshid said it is a very touchy political issue for some sections of the Bangladesh polity. http://www.indianexpress.com/videos/international/21/bangladesh-capable-of-handling-riots-over-war-crimes-verdict-khurshid—/15760

இஸ்லாமிய தீவிரவாதத்தின் இன்னுமொரு நாடகம்: “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” சொல்பவர் பாகிஸ்தானிய பிரதம மந்திரி!

ஏப்ரல் 7, 2012

இஸ்லாமிய தீவிரவாதத்தின் இன்னுமொரு நாடகம்: “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” சொல்பவர் பாகிஸ்தானிய பிரதம மந்திரி!

முஸ்லீம் என்று வந்துவிட்டால் நாங்கள் பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம்: இப்படி சொன்னது ஆப்கானிஸ்தான் பிரதம மந்திரி முஹம்மது கர்ஸாய்[1]. இந்தியாவின் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட மை கூட காயவில்லை. ஆனால், “…..போர் / ஜிஹாத் அது அமெரிக்கா அல்லது இந்தியா என்று வந்துவிட்டால் நாங்கள் பாகிஸ்தான் பக்கம் தான்[2]. ஏனெனில் அவர்கள் எங்களது சகோதரர்கள்”. இருப்பினும், இந்திய மரமண்டைகளுக்கு இது புரியவில்லை[3]. இதுபோலத்தான், இப்பொழுது மாண்புமிகு பிரதம மந்திரி, “ஹாவிஸ் சயீத் சாஹப் நம்மால் காக்கப்படவேண்டியவர்” என்கிறார். அதாவது அமெரிக்கா எத்தனை கோடி கொடுடுத்தாலும் கவலையில்லை, “முஸ்லீம்-முஸ்லீம் தான் பாய்-பாய், மற்றவர்கள் காபிர்-காபிர்” தான்!

முந்தைய சயீது கைது-விடுதலை நாடகம்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீதுவின் தலைக்கு ரூ. 50 கோடி (ஒரு கோடி / 10 மில்லியன் டாலர்கள்) பரிசுத்தொகையை அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா நிறுவனரும், ஜமாத் உத் தவா தலைவருமான ஹபீஸ் சயீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து, பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டது. அப்பொழுது உலகரீதியில் ஏற்பட்ட கருத்து மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்று அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முதலியவற்றைக் கருத்திற்கொண்டு, நாடகம் போல கைது செய்யப்பட்ட ஹபீஸ் சயீது பின்னர் விடுதலை செய்யப்பட்டான். அப்பொழுதுகூட, ஷா முஹமது குரேஷி என்ற பாகிஸ்தானிய வெளி உறவு அமைச்சர் மூல்தானில் நிருபர்களிடையே பேசும் போது, இந்தியா பிப்ரவரி 25, 2010 அன்று வெளியுறவு அதிகாரிகளிடம் நடந்த பேச்சுகளில் நிருபமா ராவ், சல்மான் பஷீரிடம் தீவிரவதி ஹாவிஸ் சையது கைது செய்யப் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே இல்லை[4]. அவன் இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித்திரிகிறான்.

பெயர் மாற்றம் செய்தால் ஜிஹாதி தீவிரவாதம் மறைந்து விடாது: இதையும் இந்தியா இன்னும் புரிந்து கொள்ளவில்லை. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஓபராய் ஓட்டலில் தங்கியிருந்த ஆறு அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் பலியாயினர். அதிரடிப் படை வீரர்கள் பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதில் உயிர் பிழைத்த அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் தற்போது சிறையில் உள்ளான். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த அமைப்பு தற்போது ஜமாத் உத் தாவா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் முழுவடும் கூட்டங்கள் நடத்தி வருகிறது. இஸ்லாம் பெயரில் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது.

இஸ்லாமிய சாச்சா-பதீஜா உறவுமுறையில் காபிர் இந்தியா என்ன செய்யும்? பாய்-பாய் என்றாலும், சாச்சா-பதீஜா என்றாலும், காபிர் இந்தியா ஒன்றும் செய்யமுடியாது. பாகிஸ்தானில் இந்த அமைப்பு தங்குத் தடையின்றி செயல்பட்டு வருகிறது. இவனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி பல முறை கோரப்பட்டும், அவன் மீதான உறுதியான குற்றச்சாட்டு இல்லை எனக் கூறி, அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதற்கிடையே, மும்பை தாக்குதலுக்கு காரணமான ஜமாத்-உத்-தாவா தலைவர் ஹபீஸ் சயீது (61) தலைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க அரசு தெரிவித்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சயீதின் மைத்துனர் அப்துல் ரஹ்மான் மக்கி பற்றிய தகவலை தெரிவிப்பவர்களுக்கும் இரண்டு மில்லியன் டாலர் அளவுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் வென்டி ஷெர்மான், டில்லியில் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார்.

ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை பலியிடும் சோனியா அரசு: ஆகமொத்தம், இந்தியர்களைக் கொல்லத்தான் அனைவரும் துடிக்கின்றனர். இதனை அறியாத இந்தியர்கள் சோனியா-காங்கிரஸை நம்பி வாழ்கின்றனர். ஆப்கானிஸ்தானில் இந்தியதாக்குதல்களுக்கு (இந்திய தூதரகத் தாக்குதல் உட்பட[5]) மக்கித்தான் பொறுப்பாளி, அவன் உமர் மற்றும் அல்-ஜவஹிரி கூடுதல்களில் பங்குக் கொண்டுள்ளான்[6]. தலிபானுக்கும், லஷ்கருக்கும் இடையில் தொடர்பாக இருந்து வேலைசெய்து வந்தான். 2005 மற்ரும் 2007ல் சதிக்கூட்டங்களில் பங்குகொண்டு லஷ்கர் பயிற்சி முகாம்களையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளான். 2007ல் மக்கி, திடீரென்று ஆப்கானிஸ்தானில் தலிபானின் குகையான அல்-ஜவஹரிக்கு சென்றுள்ளதில், ஒசாமா பின் லேடனுக்கும் தொடர்பிருக்கலாம் என்று அமெரிக்காவிற்கு இந்தியா தெரிவித்திருந்தது. அதற்கேற்றாற்போல, புரூஸ் ரெய்டல் என்ற அமெரிக்கப் பாதுகாப்பு வல்லுனரும் இந்த தொடர்பை எடுத்துக் காட்டியுள்ளார்[7]. மும்பை தாக்குதலில் சமீர் அலி என்பவனுடன் 2008ல் தொடர்பு கொண்டிருந்தான். இந்த அலி இந்தியாவின் “மிகவும் முக்கியமான தேடப்பட்டுவரும் தீவிரவாதிகளின்” பட்டியலில் உள்ளான். 2010லும், இந்தியாவிற்கு எதிரான காஷ்மீர் போராட்டங்கள், ஜெர்மன் பேக்கரி வழக்கு முதலியவற்றிலும் தொடர்புள்ளது.

ஹாவிஸ் சயீத் சொல்வதை கர்ஸாய் சொல்வது ஏன் காபிர்களுக்குப் புரியவில்லை? ஹாவிச் சயீதைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், அவன் பேசுவதே இப்படித்தான் இருக்கும்: “இன்ஸா அல்லா! இந்தியா காபிர்கள் நாடு, அமெரிக்கா, இஸ்ரேல் அடுத்து நமது இலக்கு இந்தியாதான்……………… ஜிஹாத் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். ஏற்கெனவே, அங்கு ஜிஹாத் தொடங்கிவிட்டது……………………….. நான்கு பக்கங்களிலிருந்தும் காபிர்கள் தாக்கப்படுகிறார்கள். கூடிய சீக்கிரத்தில் அவர்கள் ஒழிந்து விடுவார்கள்…………………………… அல்லாவின் படைகளின் முன்பு அவர்கள் துச்சம். இந்தியா இஸ்லாம் ஒளியில் வந்துவிடும், இருள் மறைந்து விடும். நமக்கு அல்லா வழிகாட்டுவாராக”. கர்ஸாயும் இதே பாஷையைத் தான் பேசியுள்ளார்.

அமெரிக்கா அறிவித்தால், இந்தியா தாக்கப்படுவது குறைந்து விடுமா? அமெரிக்கா பில்லியன்களில் பாகிஸ்தானுக்குக் கொடுத்து, இப்பொழுது மில்லியன்களைக் கொடுத்து தீவிரவாதத்தைத் தடுக்கப் போகின்றதாம்! அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு சென்றால் கூட, பத்தாண்டுகளுக்கு நான்கு பில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என்று கர்ஸாய் கூறுகிறார்[8]. பிறகு, இந்தியாவிற்கு ஏன் பில்லியன்களில் கொடுக்கக் கூடாது? அமெரிக்க அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வரவேற்புக்கு உரியது என்றார். விவரமான கோப்பில், சயீதின் தீவிரவாதத்தில் உள்ள பங்கு, ஆதாரங்கள் முதலியன கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கும் மேல் உண்மையை மறுத்தால், சயீதை யாரும் மன்னிக்க முடியாது. அப்பாவத்தில் இருந்து தப்பவும் முடியாது[9]. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு லஷ்கர் இ தொய்பாவுக்கு ஒரு பலமான அபாய எச்சரிக்கை என்றும் அவர் கூறினார். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சயீது இப்போது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார். இதற்கு கிடுக்கிப்பிட போடும் வகையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

தேடப்பட்டு வரும் சயீது கொடுத்த பேட்டி: இதுகுறித்து பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள ஓட்டலில் சயீது நிருபர்கள் கூட்டத்தில் பேசுகையில், “ஒசாமா பின்லேடனை போல என்னையும் கொல்ல அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. நான் மலைகளிலும், குகைகளிலும் ஓடி ஒளிய மாட்டேன். நான் தங்கியுள்ள இடத்தை அமெரிக்காவுக்கு நானே தெரிவிப்பேன். என்னை கொன்றால் ஒரு கோடி டொலர் கிடைக்கும் என்றால், அந்த தொகையை பலுசிஸ்தானின் மேம்பாட்டுக்கு செலவிடட்டும். இந்தியாவின் கருத்தை ஏற்று, தொலைக்காட்சிகளில் செய்யப்படும் பிரசாரத்தை கொண்டு அமெரிக்கா என்னுடைய தலைக்கு வெகுமதி அறிவித்துள்ளது”, என்று தெரிவித்தார். இந்நிலையில் அல்ஜெஸீரா டி.வி.க்கு ஹபீஸ்சையத் அளித்த பேட்டி வருமாறு: “எதையும் முடிவு எடுப்பதில் அமெரிக்காவிற்கு அறிவும், ஆர்வமும் சற்று குறைவு, அல்லது எங்கள் இயக்கத்தைப்பற்றி அமெரிக்காவிற்கு இந்தியா தவறான தகவலினை அளித்திருக்கலாம். பாகிஸ்தானில் நேட்டோப்படை, வான் தாக்குதல் மீண்டும் துவக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது..இதற்கு எங்களின் எதிர்ப்பினை முறியடிக்க திரணியில்லை. இதன் காரணமாகத்தான் என் தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.ஆனாலும் நாங்கள் குகைக்குள் ஓடிச்சென்று ஒளிந்து கொள்ளமாட்டோம். நேட்டோ படைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம்”, என்றார்.

தீவிரவாதியை ஆதரிக்கும் யூசுப் ராஷா ஜிலானி, மற்றும் மறுக்கும் உள்துறை ரஹ்மான் மாலிக்: பிரதம மந்திரி யூசும் ராஷா ஜிலானி, அது முழுக்கவும் அவர்களது உள்நாட்டுப் பிரச்சினை என்பதால், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு தவறான சமிஞையை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்[10]. அவர் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசும் போது “ஹாவிஸ் சயீது சாஹப்” என்று மிகவும் மரியாதையாக அழைக்கிறார். உலகத்திலேயே, இப்படி ஒரு தீவிரவாதியை,  ஆதரிக்கும் பிரதம மந்திரி இவராகத்தான் இருக்க வேண்டும். இதற்கிடையே பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான்மாலிக் கூறுகையில், “அமெரிக்க அறிவித்துள்ள பரிசுத்தொகை குறித்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. எனினும் அவர் வீட்டுக்காவலில் இருந்திருக்‌க வேண்டும். ஆனால் சுப்ரீம் கோர்ட் மூலம் ஜாமினில் உள்ளார். இது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை. சயீதைக் காக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அவரைக் கைது செய்ய மாட்டோம்[11]. அவர் மீது எந்த ஆதாரங்களும் இல்லை”, என்றார்[12]. சர்தாரியிடம் மன்மோகன் ஆலோசிக்க வாய்ப்பு: வரும் 8-ம் தேதி இந்தியா வர உள்ள பாகிஸ்தான் அதிபர் சர்தாரி,பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. அப்போது ஹபீஸ் சையத் குறித்து இருவரும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்களை ஒன்றும் ஆட்டமுடியாது என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆர்பாட்டம்: முசபராபாதில், இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூடி அமெரிக்கக் கொடியை எரித்துள்ளனர்[13]. “அல்-ஜிஹாத், அல்-ஜிஹாத்” என்று கத்திக்கொண்டே ஆர்பாட்டம் நடத்தினர்[14]. முசபராபாத், பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள காஷ்மீரின் தலைநகர் ஆகும். இங்கு, அமெரிக்காவை எதிர்த்து ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது மூலம், இந்தியாவால் ஒன்றும் செய்யமுடியாது என்று தீவிரவாதிகள் மெய்ப்பித்துள்ளார்கள். அதனை பாகிஸ்தான் ஆதரிப்பது தெரிந்த விஷயமே. இதே நேரத்தில் ஜிலானியை பேச்சுவார்த்தைகளுக்கு கர்ஸாய் அழைத்துள்ளதை கவனிக்கவேண்டும்[15].

வேதபிரகாஷ்

07-04-2012


[2] “If Pakistan is attacked, and if the people of Pakistan need help, Afghanistan will be there with you,” Mr. Karzai said. “Afghanistan is a brother.”

[3] Afghan Presdident Karzai’s remarks in an interview that his country would stand by Pakistan in case of a conflict with the United States or India have created a lot of stir though he had predicated them with the proviso: ‘if attacked’. Karzai was apparently trying to calm Pakistan’s concerns over the strategic agreement he signed with India that included provision for military training to Afghan troops much to Pakistan’s discomfort. He had also obliquely accused Pakistan of using Taleban as instrument of policy to attack Kabul from sanctuaries in the tribal areas. The statement of support to Pakistan in case of US or Indian aggression was taken lightly in Islamabad and did not evoke any comment. But the explanation coming from Presidency in Kabul is odd. It said the president only meant to provide shelter to refugees who may flee from tribal areas in case of attack thus reciprocating similar gesture by Pakistan after Soviet invasion.

[7] Indian agencies had warned their US counterparts about a surprise and sudden visit by al-Zawahiri to Islamabad in mid-2007, even suggesting that it could be linked to Osama bin Laden’s whereabouts, and it is Makki who is said to have facilitated this visit at the behest of Hafiz Saeed. US security expert Bruce Riedel, who is known to be close to the Obama administration, has said that Saeed was in touch with Osama himself through a courier right until his death last year.

[8] Karzai told a graduation ceremony at a military academy in Kabul (05-04-2012): “It’s set that post 2014, for the next 10 years until 2024 the international community, with the US in the lead and followed by Europe and other countries, will pay Afghanistan security forces $4.1 billion annually.”http://tribune.com.pk/story/353585/west-to-pay-afghan-military-4-bn-a-year-karzai/

[10] “This is purely an internal issue of Pakistan and the US has been asked to provide evidence [against Saeed], if they have any, to the Pakistani government… This was also conveyed to the US deputy secretary of state that when new rules of engagements are being defined, they should send a positive signal to Pakistan,” Gilani told the joint sitting of parliament.

http://paktribune.com/news/US-bounty-on-Saeed-a-wrong-signal-PM-Gilani-248887.html

[11] Interior Minister Rehman Malik said Jamaatud Dawa (JuD) chief Hafiz Saeed would not be arrested as there are no concrete evidences against him.

http://www.paktribune.com/news/Hafiz-Saeed-wont-be-arrested-Malik-248904.html

[14] n Muzaffarabad, the capital of Pakistan-administered Kashmir, around 500 activists shouted “Al-Jihad, Al-Jihad (holy war)” as they marched on the city and set fire to a US flag in a main square

[15] Rezaul H Laskar, Karzai invites Gilani for talks on reconciliation process,  Thu, 05 Apr 2012 05:15:21 GMT
p>Islamabad, Apr 4 (PTI) Afghan President Hamid Karzai today invited Pakistan Prime Minister Yousuf Raza Gilani to visit Kabul for talks on the reconciliation process in Afghanistan. Karzai extended the invitation when he telephoned Gilani to express his concern over the emergency landing made by the premier”s aircraft shortly after taking off from a military airbase in Rawalpindi yesterday. The Afghan President “extended an invitation to the Prime Minister to visit Kabul as the weather has become considerably pleasant”, said a statement from Gilani”s office. Gilani accepted the invitation and said he would soon visit Kabul. “We would also review the progress made toward political reconciliation in the context of the last bilateral meeting held in Islamabad,” the premier said. Pakistan is keen on playing a larger role in the endgame in Afghanistan. Acting on a request from Karzai, Gilani recently appealed to all militant factions in Afghanistan to join the peace process in the neighbouring country.http://news.in.msn.com/international/article.aspx?cp-documentid=5992738

பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று சொல்லும் ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா கோடிகளைக் கொட்டி அழுவதேன்?

ஒக்ரோபர் 26, 2011

பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று சொல்லும் ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா கோடிகளைக் கொட்டி அழுவதேன்?

முஸ்லீம் முஸ்லீமைத்தான் ஆதரிப்பேன் என்றால்,  அவர்கள் தனியாக இருந்து விடலாமே: உண்மையைச் சொன்னால் முஸ்லீமுக்கு பொத்துக் கொண்டு கோபம் வரும், ஆனால் முஸ்லீம் என்றாலும், அடிப்படைவாதி என்றாலும், ஏன் தீவிரவாதி என்றே குறிப்பிட்டாலும், முஸ்லீம் என்றால், முஸ்லீமுக்குத்தான் ஆதரவு கொடுப்போம் என்று சொல்வது, முன்னர் அலி சகோதரர்கள், “ஒரு மிகவும் கேடுகெட்ட மோசனான ஆள் முஸ்லீமாக இருந்தால், அவனுக்கு மரியாதை செய்வோமே தவிர, காந்தியை மகாத்மா என்று மதிக்க மாட்டோம், ஏனென்றால், அவர் ஒரு காஃபிர்”,  என்று பொருள்பட சொன்னதை இங்கு நினைவு கூர்தல் வேண்டும்[1]. அதை நன்றாக அறிந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர், அலி சகோதரர்களை தனது வீட்டில் விருந்தினர்களாகத் தங்க வைத்துக் கொண்டபோது, “இந்தியா வேண்டுமானால், காந்தியை பெருமையாக மதிக்கலாம், ஆனால் இந்த காந்தி இவர்களது ஜேபிக்குள் அடக்கம்”, என்றார். முஹமது அலியின் பேச்சைக் கேட்டு அம்பேத்கரே வியந்து அதனைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்[2].

காஃபிர்-மோமின், “தூய்மையானவன்” – “தூய்மையில்லாதவன்” என்ற எண்ணம் இருக்கும் வரையில் முஸ்லீம் முஸ்லீமாகத்தான் இருப்பான்: அலி சகோதரர்களை காந்தி தனது சகோதரர்களைப் போல பாவித்தார். ஆனால், முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனைகளால், அலி சகோதரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளா முடியவில்லை. “காந்தியின் குணாதியம் (நடத்தை, பண்பு) எந்த அளவிற்கு தூய்மையாக இருந்தாலும், எனது மதத்தின் (இஸ்லாம்) பார்வையில் ஒரு குணாதியமே இல்லாத ஒரு முசல்மானை விட தாழ்ந்தவராகத்தான் தோன்றுகிறார்”. அதாவது இந்து “தூய்மையில்லாதவன்” ஆனால் முஸ்லீம் “தூய்மையானவன்” என்று சொல்வது “காஃபிர்” மற்றும் “மோமின்” என்று பிரித்து பாகுபாடு காட்டிப் பேசுவதுதான். அமினாபாத், லக்னௌவில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, முஹம்மது அலியை, என்ன காந்தியைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இதோ[3] – “ஆமாம், என்னுடைய மதம் மற்றும் நம்பிக்கையின்படி, ஒரு விபச்சாரத்தனமுடைய மற்றும் வீழ்ந்த (மிக மோசமான / கேடுகெட்ட) முசல்மான்தான் காந்தியைவிட உயர்ந்தவன்”! அதுமட்டமல்ல தாங்கள் உயர்ந்த முஸ்லீம்கள் என்பதனால், காந்தியுடன் செரமாட்டோம், மேடையில் சமமாக உட்காரமாட்டோம் என்றெல்லாம் கூட வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள், நடந்து காட்டியிருக்கிறார்கள். காந்தி தன்னுடைய எழுத்துகளில் அதனை தக்கேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார்[4].

முஸ்லீம் மனதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்: அம்மாதிரித்தான் தேவையில்லாமல் இந்தியா ஆப்கானிஸ்தானிற்கு பலவழிகளில் கோடிகளில் பணம், மற்ற உதவிகளை செய்து வருகிறது. ஆனால், அங்கு வேலை செய்து உதவும் இந்தியர்களைக் கொன்று வருவதுதான் முஸ்லீம்களாகிய ஆப்கானிஸ்தானியர் செய்து வருகின்றனர். தாலிபான்கள் இருந்து மற்ற உலக மகா பிரத்தி பெற்ற ஜிஹாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள் முதலியோர் உண்மையில் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். இந்நிலையில் தான் அந்த நன்றி கெட்ட பொம்மை பிரதம மந்திரி கூறுகிறார், “போர் என்று வந்து விட்டால், நாங்கள் பாகிஸ்தானிற்குத்தான் ஆதரவு அளிப்போம்”, வீராப்பாக சொல்லியிருக்கிறார். இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடுமோ, பாகிஸ்தானை தாக்கினால், போர் தொடுத்தால், நாங்கள் எங்கள் சகோதரன் பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் கர்ஸாயின் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. சீனாவின் துரோகத்தனத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பாக்.மீது படையெடுத்தால்: இந்தியா-அமெரிக்காவிற்கு கர்சாய் எச்சரிக்கை[5]: தலிபான்களிடம் சிக்கி சீரழிந்த ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்த அமெரிக்கப் படையினர், ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து தலிபான்களை வேட்டையாடி வருகின்றனர். கூடவே பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்தபடி ஆப்கானிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தி வரும் அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகளுடனும் மோதி வருகின்றன. சீரழிந்து போய் விட்ட ஆப்கானிஸ்தானை கட்டி எழுப்பும் முக்கியப் பணியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானை தத்தெடுத்துக் கொண்டது போல பல ஆயிரம் கோடி பணத்தை இறைத்து ஆப்கானிஸ்தானில் பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா[6]. இந்த நிலையில் இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது வேறு நாடோ பாகிஸ்தானை தாக்கினால், போர் தொடுத்தால் நாங்கள் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவாக இருப்போம் என ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாய் அதிரடியாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அல்லது வேறு நாடுகளுடன் சண்டை மூளக் கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் ஒரு வேளை நாளையே பாகிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தால் நாங்கள் பாகிஸ்தானுக்குத்தான் ஆதரவாக இருப்போம். காரணம், பாகிஸ்தான் எங்களது சகோதரன்.

பாகிஸ்தானை தாக்கினால் பதிலடி கொடுபோம் : ஹமித் கர்சாய்[7] ! பாகிஸ்தான் மீது யாராவது போர் தொடுத்தால் பாகிஸ்தான் மக்கள் ஆப்கானிஸ்தானின் உதவியைத்தான் நாடுவார்கள். அப்போது பாகிஸ்தானியர்களுக்கு உதவ, கை கொடுக்க நாங்கள் தயாராக இருப்போம். பாகிஸ்தானின் சகோதரர்கள் நாங்கள். 1979-80ல் ரஷ்யா எங்களை ஆக்கிரமித்தபோது பாகிஸ்தானியர்கள்தான் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். எங்களை சகோதரர்களாக கருதி எங்களுக்கு உதவினர் பாகிஸ்தானியர். தங்களது உள்ளங்களை மட்டுமல்லாமல் இல்லங்களையும் கொடுத்தவர்கள் அவர்கள். எங்களுக்கு உதவிய அவர்களுக்கு நாங்கள் துரோகம் இழைக்க முடியாது, ஏமாற்ற முடியாது. எனவே அமெரிக்காவோ, இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் எங்களது முழு ஆதரவும் பாகிஸ்தானுக்குத்தான் இருக்கும்[8].

பாகிஸ்தான் எங்களுக்கு துயரத்தை அளித்தாலும் அவர்கள் தாம் எங்களுக்கு சகோதரர்கள்: எங்களுக்கு பாகிஸ்தான் அரசு நிர்வாகம் பல துயரங்களை இழைத்துள்ளது. நான் அதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் எங்களது சகோதரர்கள். அதை நாங்கள் மறக்க மாட்டோம். இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் நான் விளக்க விரும்புகிறேன். இதுதிடீரென நடந்த ஒப்பந்தம் அல்ல, பல காலமாகவே பேசப்பட்டு வந்த ஒன்றுதான். இதற்கும், பாகிஸ்தானுடனான எங்களது உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் கர்ஸாய். கர்ஸாயின் இந்தக் கருத்து அமெரிக்காவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹக்கானி தீவிரவாதக் குழு மீது அமெரிக்கா கடும் ஆத்திரத்தில் உள்ளது. ஆனால் அந்த குழு மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுத்து விட்டது. இதற்காக அமெரிக்காவுடன் நேரடி மோதலிலும் ஈடுபட அது தயாராக உள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அமெரிக்கா படைகளைக் குவித்துள்ளது. அதேபோல பாகிஸ்தானும் தனது பகுதியில் படைகளைக் குவித்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலையில் கர்ஸாயின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

பாம்புகளை தோட்டத்தில் வைத்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது[9]:  பாம்புகள் என்றால் அவற்றின் தன்மை என்ன என்பது தெரிந்துதான் இருக்கும், அதிலும் கடிக்கும் பாம்புகள் எனும்போது, விளையாட்டாக இருக்கும் பாம்புகள் இல்லை. “பின் தோட்டத்தில் நச்சுப் பாம்புகளை வைத்துக் கொண்டு, அதிலும் அவை உங்களது அடுத்த வீட்டுக் காரர்களை கடிக்கும் நிலையில் இருக்கும்போது, நாம் சும்மா இருக்க முடியாது”, என்று ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானிற்கு விஜயம் செய்தபோது வெளிப்படையாகக் குறிப்பிட்டார்[10]. இருப்பினு பாம்புகளை அவர்கள் வைத்துள்\னர்[11]. பாம்புகள் என்று குறிப்பிட்டது ஜிஹாதிகள் தாம், தீவுரவாதிகள் தாம், பயங்கரவாதிகள் தாம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில், ஹக்கானி குழுவினர் மீது அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன[12]. கடந்த சில நாட்களுக்குமுன் பாகிஸ்தான் வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ஹக்கானி குழுவினரை ஒழிக்க, பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என கூறியிருந்தார்[13]. நட்பு எனும்போது, நல்ல உறவு எனும்போது, அதில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும், நீ முட்டாள் மாதிரி எங்கலுக்கு உதவி செய்து கொண்டேயிரு, அவர்கள் விமானங்களைக் கடத்தினாலும் சரி, நமது எஞ்சினியர்களைக் கொன்றாலும் சரி, எல்லைகள் கடந்த தீவிரவாதத்திற்கு ஆட்களை அனுப்பினாலும் சரி, இந்தியா உதவி செய்து கொண்டியிருக்கிறது என்றால், அதில் முட்டாள்தனம் இல்லை, ஏதோ சதி இருக்கிறது எனலாம்.

வேதபிரகாஷ்

26-10-2011


[1] “However pure Mr. Gandhi’s character may be, he must appear to me from the point of religion inferior to any Mussalman he be without character”

“Yes, according to my religion and creed, I do hold an adulterous and a fallen Mussalman to be better than Mr Gandhi”

[2] B. R. Ambedkar, Thoughts on Pakistan, Thacker & Co., Bombay, 1941, p.302.

[3] Mahathama Gandhi, Collected works, Volume.XXIII, Appendix, 13, p.569.

[4] Mahathama Gandhi, Collected works, Volume XXVI, p.214.

[8] மேலே விளக்கியபடி, மோமின், மோமின் கூட சேர்ந்து காஃபிருக்கு எதிராகத்தான் ஜிஹாத்-போரை நடத்துவோம் என்று வெளிப்படையாக பேசும் முஸ்லீம்களுடம், ஏன் இன்னும் தாஜா செய்து கொண்டிருக்கிறார்கள்?

[10] US secretary of state Hillary Clinton on Friday warned Pakistan that it cannot keep “snakes in your backyard and expect them to only bite your neighbours”, a not so veiled reference to terror havens in its tribal areas. Then she pressed Islamabad to crackdown on Afghan insurgent Haqqani network holed up there.

ஆயிஷாவின் மூக்கு-காது அறுக்கப்பட்டன: தாலிபானின் அகோரச் செயல்!

ஓகஸ்ட் 7, 2010

ஆயிஷாவின் மூக்கு-காது அறுக்கப்பட்டன: தாலிபானின் அகோரச் செயல்!

பெண்ணின் மூக்கை துண்டித்த தலிபான்கள்: ஆப்கனில் கொடூரம்[1]: கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது.

Afghan-women-nose-cut-Taliban-2010

Afghan-women-nose-cut-Taliban-2010

ஆப்கானிஸ்தான் / காந்தாரத்தின் தற்போதைய நிலை: காந்தாரி கௌரவர்களின் தாயார் என்பது தெரிந்த விஷயமே. காந்தாரக் கலைகளுக்கும், உலர் பழ விளைச்சலுக்கும் ஒருகாலத்தில் புகழ் பெற்ற தேசம் இது. இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. குண்டு வெடிப்பும், துப்பாக்கிச் சத்தமும் ஆப்கன் மக்களின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. திரும்பிய இடமெல்லாம், குண்டு வெடிப்பால் சிதைந்த கட்டடங்கள், இறுக்கமான முகங்களுடன் துப்பாக்கிகளுடன் நடமாடும் ராணுவ வீரர்கள். பீதி அகலாத கண்களுடனும், விரக்தி அடைந்த மனதுடனும் நடமாடும் மக்கள். இதுதான் இன்றைய ஆப்கானிஸ்தானின் அடையாளங்கள். அழகு மிகுந்த அந்த தேசம், தற்போது உருக்குலைந்து போய் கிடக்கிறது.

Aisha-Bibi-nose-ear-cutoff

Aisha-Bibi-nose-ear-cutoff

தாலிபான்களின் கீழ் காந்தாரம்; ஆப்கானிஸ்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டில் வந்தது, அதிலிருந்து இஸ்லாமிய சட்டதிட்டங்கள் அமூலுக்கு வந்தன. ஊடகங்களில் பெண்கள் படும் பாட்டை அவ்வவ்வப்போது வெளியிட்டத்திலிருந்து உல்கம் தெரிந்து கொண்டது. அப்போது அவர்கள் வைத்தது தான், அங்கு சட்டம். பெண்கள் பள்ளிக்கு போகக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் அங்கு அரங்கேறின. கடந்த 2001ல் அமெரிக்காவின் நியூயார்க் இரட்டை கோபுரத்தின் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவம், ஆப்கனில் குவிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின், தலிபான்களின் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது. இருந்தாலும், தலிபான்களின் ஆதிக்கம் இன்னும் அங்கு கொடிகட்டி பறக்கிறது.

மூக்கு-காது-ஆயிஷா-தாலிபான்

மூக்கு-காது-ஆயிஷா-தாலிபான்

தலிபான்களின் கொடூரத்துக்கு ஆளான ஆப்கன் இளம்பெண் ஒருவரை பற்றிய விஷயம் தான், தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அமெரிக்காவின் “டைம்’ பத்திரிகையைச் சேர்ந்த குழு, ஆப்கனுக்கு சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேட்டி எடுத்து, அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

அது குறித்த விவரம்: பீபி ஆயிஷா: அந்த இளம்பெண்ணின் பெயர் பீபி ஆயிஷா. தற்போது அவருக்கு 18 வயதாகிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாகும்போதே, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து, ஆயிஷாவை பணத்துக்காக விற்பனை செய்து விட்டார், அவரது தந்தை. அதற்கு பின், இரண்டு ஆண்டுகளுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகளை சந்தித்தார், ஆயிஷா. கணவரின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோர் ஆயிஷாவை தினமும் கொடுமைப் படுத்தி வந்தனர்.

கொடுமையிலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியேறினார்: ஒரு கட்டத்தில், இங்கிருந்து எப்படியாவது வெளியேறி விடவேண்டும் என்று முடிவெடுத்தார். அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆனால், இந்த நிம்மதி அவருக்கு நீண்ட நாள் நீடிக்கவில்லை. கடந்தாண்டு அவரது கணவர், ஆயிஷாவை கண்டு பிடித்து விட்டார். ஒருஜ்கான் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தலிபான் கோர்ட் முன், ஆயிஷா நிறுத்தப்பட்டார். வீட்டை விட்டு ஓடிப்போன குற்றத்துக்காக ஆயிஷாவின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தலிபான் கோர்ட், கடுமையான தண்டனை விதித்தது.

தண்டையாக காது-மூக்கு வெட்டப்பட்டது: உயரமான மலைப் பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆயிஷாவின் கணவரின் சகோதரரும், மற்றவர்களும் அவரை கீழே படுக்க வைத்து, அசையவிடாமல் பிடித்துக் கொண்டனர். பின், அவரது கணவர் கத்தியுடன் வந் தார். முதலில் ஆயிஷாவின் காதை கத்தியால் வெட்டினார். இதன்பின், அவரது மூக்கையும் துண் டித்தார். வலியால் கதறித் துடித்தார், ஆயிஷா. இறந்து விடுவார் என, நினைத்து அவரை மலைப் பகுதியிலேயே விட்டு, விட்டு போய்விட்டனர்.

தப்பித்த ஆயிஷா, “டைம்” பத்திரிக்கையின் வெளியீடு: இதன்பின், எப்படியோ அங்கிருந்து தப்பிச் சென்றார். காபூலில் பெண்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அகதிகள் முகாமில், ஆயிஷா தஞ்சம் அடைந்தார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் சேதமான உறுப்புகளுடன் தற்போது உயிர் வாழ்கிறார். கடந்த சில மாதங்களாக அங்கு தான் அவர் தங்கியுள்ளார். அகதிகள் முகாமுக்கு ஏராளமான மீடியாக்காரர்கள் வந்து சென்றனர். அவர்களுக்கு, ஆயிஷாவின் பரிதாப நிலை குறித்து தெரியவந்தது. இதற்கு பின், அமெரிக்காவின் “டைம்’ பத்திரிகையில், சிதைந்த முகத்துடன் ஆயிஷா விரக்தியுடன் காட்சி தரும் புகைப்படங்கள் வெளியாயின. இந்த பரிதாப காட்சியை பார்த்த மக்கள், அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். சிலர் இத்தகைய பயங்கரமான படத்தை வெளியிட்டிருக்கவேண்டாம் என்றும் கூறியுள்ளனர்[2].

மறுவாழ்வுக்காக ஆயிஷா தயார், உதவியும் தயார்[3]: இதுகுறித்த தகவல், அமெரிக்காவில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் தெரியவந்தது. நல்ல உள்ளம் கொண்ட சிலர், ஆயிஷாவின் சிதைந்த மூக்கு மற்றும் காதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முன்வந்தனர். இதற்கு ஆயிஷாவும் சம்மதித்தார். இதற்காக அவர் விரைவில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். பயங்கரவாதத்துக்கு தன் முகத்தையே விலையாக கொடுத்த ஆயிஷா, “டைம்’ பத்திரிகை குழுவிடம் கூறுகையில், “தலிபான் அமைப்புடன் சில ஒப்பந்தங்களை செய்து கொள்ள முடிவு செய்துள்ளாக அதிபர் கர்சாய் தெரிவித்துள்ளார். ஆனால், மிகக்கொடூரமாக நடந்து கொள்வோரிடம் எப்படி இணக்கமாக வாழ முடியும். என்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் அவர்கள் தானே’ என, தனது சிதைந்த முகத்தை விரல்களால் தொட்டுக் காட்டி விரக்தியுடன் பேசினார்.


[1] தினமலர், பெண்ணின் மூக்கை துண்டித்த தலிபான்கள்: ஆப்கனில் கொடூரம், ஆகஸ்ட் 06, 2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=56320

[2] http://www.cbsnews.com/8301-500803_162-20012442-500803.html

[3] http://atwar.blogs.nytimes.com/2010/07/31/afghan-women-fearing-a-taliban-future/