Posted tagged ‘தர்கா’
மார்ச் 31, 2020
தில்லி நிஜாமுத்தீன் மசூதியில் கலந்து கொண்டு திரும்பிய துலுக்கர் மூலம் தென் மாநிலங்களில் கோவிட்-19 பரவிய நிலை [1]

மார்ச் 21 முதல் 23 வரை மூன்று நாட்கள் மாநாடு: டில்லியில் நிஜாமுதீன் பகுதியில் தவுஹித் ஜமாத் அமைப்பின் சார்பில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் பல மாநிலத்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர், ஆனால், முன்னர் தெரிவிக்கவில்லை. இதில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1,500 பேரில், 16 பேருக்கு, ‘கொரோனா’ வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது[1]. அதாவது குறிப்பிட்ட 17 பேரில் 16 பேர் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரிய வந்துள்ளது[2]. அதில் 16 பேருக்கு கொரோனா இருப்பது ஏற்கனவே உறுதியாகி இருக்கிறது[3]. அதனால், மாநாட்டில் பங்கேற்க, டில்லி சென்று வந்தவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்தும்படி, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது[4]. மாநாட்டில் பங்கேற்ற 519 பேரை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்[5]. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 1,500 பேர் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்றவர்களில் 981 பேரின் விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளது[6]. மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 519 பேர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை[7]. 519 பேரை அடையாளம் காண தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்[8].

தமிழகத்திலிருந்து 1500 பேர் கலந்து கொண்டனர்: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது[9]. இந்நிலையில், தமிழகத்தில் திடீரென கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது[10]. அதற்கு, டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர்களும் காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ‘தப்லீக் ஜமாத்’ என்ற, இஸ்லாமிய பிரசார குழு சார்பில், டில்லியில், மார்ச், 21 முதல் 23 வரை மூன்று நாட்கள் மாநாடு நடந்தது[11]. இந்த மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த, 1,500 பேரும் பங்கேற்றனர். அவர்கள் ஊரடங்கு அமலாவதற்கு முன்தினம், சென்னைக்கு ரயிலிலும், விமானத்திலும் வந்துள்ளனர்[12]. பின், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதே மாநாட்டில் பங்கேற்ற சிலர், அந்தமானை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்தமானுக்கு விமானத்தில் சென்று, அங்கு தனிமை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது. ஆனால், இவர்கள் யாருமே, அதிகாரிகளுக்கு எந்த தகவல்களையும் கொடுக்கவில்லை. மத்திய அரசு, 09-03-2029 அன்றே, கோவிட்-19 பரவுதல் ஆபத்தினால், எல்லாவித கூடுதல்கள்- மாநாடு, கருத்தரங்கம், பட்டறை முதலியவை ரத்து செய்யப் படவேண்டும் என்று சுற்றறிக்கை No.PS/AMS/SJH/2020 dated 09-03-2020 மூலம் எச்சரித்துள்ளது[13]. ஆகவே, இது போன்ற கூட்டங்கள் நிறுத்தப் பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, தில்லியில், இது நன்றாகவே தெரிந்திருப்பதால், நிறுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால், நடந்திருக்கிறது.

981 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், மீதம் 519 தெரியவில்லை: அவர்களிடம் நடத்திய விசாரணையில், டில்லி மாநாட்டில், பங்கேற்றதை உறுதி செய்துள்ளனர். மேலும், ஈரோட்டுக்கு வந்த தாய்லாந்து குழுவினர், ஏற்கனவே டில்லிக்கு போய் வந்தது தெரியவந்துள்ளது. ஈரோட்டில் புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சிலர், டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். மொத்தத்தில், டில்லி மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1,500 பேரில், 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க டில்லி சென்று வந்த அனைவரும், அவர்களது குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்திக் கொள்ளும்படி, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், இஸ்லாமிய மாநாட்டிற்காக, டில்லி சென்று வந்தவர்களில், 981 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை – 519 அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் யாராவது, தாமாகவே முன்வந்து, சுகாதாரத் துறையிடம் பதிவு செய்து, தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை எனில், அவர்களைப் பற்றிய விபரம் அறிந்த மற்றவர்கள், அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். பிப்ரவரியில் வந்தவர்களின் பிரச்சினைகள், வோவிட்-19 பாதிப்பு, இறப்பு முதலியவை தெரிந்திருக்கின்ற நிலையில், அவர்கள் சென்று வந்ததையே மறைத்துள்ள நிலையில், அந்த 519 ஆட்களும் எப்படி வலிய வந்த தகவல்களைக் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மறுப்பும், தில்லி அமைச்சர் உறுதி செய்தலும்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தில்லியில் நடந்த மாநாட்டில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்று அதன் சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது[14]. வெளிவரும் செய்திகள் பொய் என்றும் கூறுகிறது[15]. ஒரு வாரமாக, இத்தனை செய்திகள் வந்தும், இறப்புகள் நேர்ந்தும், இவ்வாறு மறுத்து சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் எல்லோரும், எங்களது உறுப்பினர் இல்லை என்று சாதிக்கலாம். ஆனால், துலுக்கர் சென்றது, கலந்து கொண்டது, திரும்பி வந்தது, மஹாராஷ்ட்ரா, தெலிங்கானா, முதலிய மாநிலங்களில் இறந்தது, மருத்துவ மனைகளில் அடைப் பட்டு கிடப்பவர், மற்றும் சம்பந்தப் பட்டவர் பாதிப்பு, குவாரென்டைன் செய்யப் பட்டுள்ளது, முதலியவை எல்லாமே பொய்யாகாது. ஆகவே, இதில் ஏதோ ஒரு உண்மை மறைக்கப் படுகின்றது என்றாகிறது. துலுக்கர்களுக்கு, இதில் வேறு ஒரு திட்டம் உள்ளது என்றால், அதை மறைக்கக் கூடும். இது வரை நடந்த போராட்டங்களுக்கு, இவர்கள் தூண்டுதலாக இருக்கலாம். இல்லை, இப்பொழுது ஒரு சந்தேகத்தை எழுப்புகின்ற நிலையில், இது ஒரு வகையான ஜிஹாதா, தற்கொலை ஜிஹாதா என்று கூட நினைக்கலாம். இதைப் பற்றி முந்தைய பதிவுகளில் எடுத்துக் காட்டியுள்ளேன். ஆகவே, துலுக்கர் உண்மையினை சொல்ல வேண்டும், இல்லையெனில், இன்னொரு பெரிய பிரச்சினை உருவாகும் நிலையுள்ளது.
© வேதபிரகாஷ்
31-03-2020

[1] தினமலர், டில்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா, Updated : மார் 30, 2020 21:24 | Added : மார் 30, 2020 19:02.
[2] தினகரன், தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதித்த 17 பேரில் 16 பேர் டெல்லியில் மாநாட்டில் பங்கேற்றவர்கள்: மீதமுள்ள 519 பேரை தேடும் பணி தீவிரம், 2020-03-30@ 20:45:26.
[3] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=575564
[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2512218
[5] தினகரன், டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற 519 பேருக்கு வலைவீச்சு, 2020-03-30@ 18:51:43
[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=575545
[7] தினமணி, தில்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கரோனா உறுதி, By DIN | Published on : 30th March 2020 08:10 PM
[8] https://www.dinamani.com/tamilnadu/2020/mar/30/corona-has-confirmed-the-16-participants-in-the-delhi-conference-3391464.html
[9] புதிய தலைமுறை, டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1500 தமிழர்கள் : 16 பேருக்கு கொரோனா ?, Web Team, Published :30,Mar 2020 06:50 PM
[10] http://www.puthiyathalaimurai.com/newsview/67387/1500-Tamils-participate-in-Delhi-Conference—16-got-positive-in-COVID-19
[11] தினகரன், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 16 பேருக்கு கரோனா… சுகாதாரத்துறை அறிவிப்பு, கலைமோகன், Published on 30/03/2020 (18:52) | Edited on 30/03/2020 (19:08).
[12] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/india-corona-tamil-nadu-health-department-announces-16-participants-delhi
[13] The GOI issued a circular No.PS/AMS/SJH/2020 dated 09-03-2020, warning that, “In wake of COVID-19 outbreak going on in the country, all the functions including seminars, workshops, conferences are to be cancelled. This is for urgence and necessary compliance.” So, all the organizations, institutions and others who arrange such gatherings, where, more than 50 / 100 people assemble must have cancelled considering the prevailing conditions.
[14] புதிய தலைமுறை, டெல்லி மாநாட்டில் யாரும் பங்கேற்கவில்லை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விளக்கம், Web Team, Published :30,Mar 2020 07:29 PM
[15] http://www.puthiyathalaimurai.com/newsview/67389/Tamil-Muslims-not-participate-in-Delhi-Conference—Jamath-Explain
பிரிவுகள்: அச்சம், அடிப்படைவாதம், அடையாளம், அத்தாட்சி, அழிவு, கந்தசாமி தெரு, கரோனா, கரோனா தொற்று, கொங்கலம்மன் கோவில், கொரோனா, கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டை, ஜிஹாதி, தமிழ் முஸ்லிம், தமிழ்நாடு தவ்ஹீத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழ்நாடு தௌஹீத் ஜமாத், துலுக்கர், தெலிங்கானா, தெலுங்கானா, தொத்து வியாதி, நோய்கொள்ளி, பள்ளிவாசல், பெருந்துறை, பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மசூதி, மனித கொல்லி, முஸ்லிம், முஸ்லிம் தெரு, வைரஸ், Uncategorized
Tags: அமெரிக்கா, இஸ்லாம், ஈரோடு, கரோனா, கரோனா ஜிஹாத், கரோனா தொற்று, கிரிகிஸ்தான், கோவிட்-19, ஜிஹாத், தர்கா, தாய்லாந்து, தில்லி, துலுக்கன், துலுக்கர், தொத்து, தொத்து நோய், நிஜாமுத்தீன், பரப்புதல், பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வியாதி, வைரஸ்
Comments: Be the first to comment
நவம்பர் 9, 2019
2001 தீவிபத்து, 2019 கற்ப்பழிப்பு, ஏர்வாடியில் நடப்பது என்ன? போதிய பாதுகாப்பு இல்லையா?

தீ விபத்திற்குப் பிறகு, கூட்டு கற்பழிப்பு: உலகம் முழுவதும் நடைபெறும் குற்றச்சம்பவங்களுக்குப் பின் போதை முக்கியகாரணமாக இருக்கிறது[1]. சிறுவயதிலேயே போதைக்கு அடிமையானதன் விளைவாக ஏர்வாடியில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது[2]. 2001ம் ஆண்டில் தர்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட 28 பேர் உயிரிழந்து நாட்டையே உலுக்கியது. அது தான் ஏர்வாடியைப் பொறுத்தமட்டில் பெரிய விஷயமாக இருந்தது. அதன் பிறகு இந்த விவகாரம். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியிலுள்ளது சுல்தான் சையது இப்ராஹிம் சையது ஒலியுல்லா தர்கா. இந்த தர்காவிற்கு வந்தால் மனநோய் குணமாகும் என்ற நம்பிக்கையால், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மனநோயாளிகள் இங்கு வருவதுண்டு. அதிலும், இங்கு வந்து தங்கினாலேயே நோய் குணமாகும் என்ற நம்பிக்கையால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் புகலிடமாகமே மாறிவிட்டது ஏர்வாடி தர்கா. இந்த தர்ஹாவிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது காட்டுப் பள்ளிவாசல்.

2001ல் நடந்த தீ விபத்தில் பலர் மாண்டது: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஏராளமான மன நலக் காப்பகங்கள் உள்ளன. இங்கு மன நலம்பாதிக்கப்பட்ட நோயாளிகள் கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு இந்தக் காப்பகத்தில், பெரும் தீவிபத்து ஏற்பட்டது. 06-08-2001 அன்று, தீ குபுகுபுவென காப்பகம் முழுவதும் பரவியது. சிறிய இல்லமாக அந்தக் காப்பகம் இருந்ததால் தப்பி வரவும் வழியில்லை. மேலும், மன நோயாளிகளுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்பதால் 25-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் கருகி இறந்தனர். தீ விபத்து குறித்து அறிந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்தனர். நீண்ட நேரப்போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. உள்ளே சிக்கி இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சில பிணங்கள் அடையாளமே காண முடியாத அளவுக்கு கருகின. இறந்தவர்களில் 11 பேர் பெண்கள். மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

2001ல் நடந்த தீ விபத்திற்கு, 2007ல் தண்டனை அளிக்கப் பட்டது: இங்கு செயல்பட்டுவந்த மனநலக் காப்பகங்களை அனைத்தும் 2001 ஆகத்து 13 அன்று மூடப்பட்டு, அங்கு இருந்த 500 மன நோயாளிகள் அரசாங்க பராமரிப்பில் கொண்டுவரப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி, என். ராமதாஸ் தலைமையிலான ஒரு ஆணையம் இந்த மரணங்களை விசாரிக்க அமைக்கப்பட்டது. ஆணையமானது மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் கவனிப்பானது மேம்படுத்தப்பட வேண்டும், மனநலக் காப்பகத்தை அமைக்க விரும்புபவர்கள் அனைத்து கைதிகளும் கொண்டதாக காப்பகத்தை அமைக்க வேண்டும், அதற்கு உரிய உரிமத்தைக் கட்டாயம் பெறவேண்டும் என்று பரிந்துரைத்தது. 2007 ஆம் ஆண்டு, தீவிபத்து நேர்ந்த மொகைதீன் பாதுசா மனநலக் காப்பக உரிமையாளர், அவரது மனைவி மற்றும் இரண்டு உறவினர்களுக்கு குற்றவியல் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

19 வயது பெண் ஏழு பேரால் கற்பழிக்கப் பட்டது: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் தர்காவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் முகமதிய மதத்தின் படி, நம்பிக்கையின் ஆதாரமாக நடைப் பெற்று வருகிறது. இருப்பினும், இங்கு வருகிறவர்களுக்கு மனநலம் சரியாகுவதால், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் சிகிச்சைக்கு வருகின்றனர். அவ்வாறு வருகின்றவர்கள் தர்காவின் அருகிலேயே வீடு எடுத்து தங்குவது வழக்கம். இருப்பினும் போதிய வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 7 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்[3]. கேரளாவைச் சேர்ந்த 19 வயது மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண், ஏர்வாடி தர்காவையொட்டியுள்ள காட்டுப்பள்ளி என்ற இடத்தில் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்[4]. இங்கு பல மனகாப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன என்று மேலே எடுத்துக் காட்டப் பட்டது. கடந்த சிலநாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர்கள், தர்காவின் அருகிலேயே வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

வழக்கம் போல ஊடகங்கள் மாறுபட்ட செய்திகளை வெளியிடுவது: இதனிடையே சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக நள்ளிரவில் வீட்டின் வெளியே பானு வந்திருக்கிறார்[5]. அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் ஏழுபேர், பானுவை அருகே இருக்கும் காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்றுள்ளனர்[6]. அங்கு வைத்து 7 பேரும் பானுவை மாறிமாறி பாலியல் வன்கொடுமை செய்தனர்[7]. இதில் வலியால் துடித்து பானு அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர்[8]. ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும், சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். நக்கீரன்[9], “அதிகாலை வேளையில் மகளின் இயற்கை உபாதைக்காக அங்கிருக்கும் கழிவறைக்கு அழைத்து சென்றபோது, பின் தொடர்ந்து வந்த 16 வயதிற்குட்பட்ட 7 சிறுவர்கள் ஒன்று சேர்ந்து தந்தை பேகத்தை தாக்கி தள்ளிவிட்டு, அவரின் கண் எதிரிலேயே வாயை பொத்தி தூக்கிச் சென்று அருகில் இருந்த கருவேலங்காட்டுக்குள் வைத்து ஒன்றுமறியாத ஷானிதாவினை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்,” என்கிறது[10].

இதைப் பற்றி இன்னொரு செய்தி: இந்த நிலையில் அங்கிருந்து கடந்த 4 ஆம் தேதி இரவு மாயமான இளம்பெண், தர்காவுக்கு அருகில் மயங்கிய நிலையில் அதிகாலை அவ்வழியே சென்றவர்களால் மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது[11]. இதையடுத்து அந்த பெண்ணின் தந்தை போலிஸில் அளித்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தினர்[12]. இதை தொடர்ந்து இளம்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் விசாரணை நடத்தினர்[13]. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த 14 முதல் 18 வயதிற்குட்பட்ட 7 சிறுவர்கள், கஞ்சா போதையில் இளம்பெண்ணை காப்பகத்தில் இருந்து இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது[14]. இந்த நிலையில் அந்த சிறுவர்களை பிடித்து, கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் அறிக்கை: ‘ஏர்வாடியில், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட, ஏழு பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை, மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்’ என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா கூறியுள்ளார்[15]. அவரது அறிக்கை: “ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்காவில் தங்கி, மனநல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்த பெண்ணை, 17 வயதிற்கு உட்பட்ட, ஏழு சிறுவர்கள், பாலியல் பலாத்காரம் செய்ததாக, அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பெண்ணிற்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யாமல், மீண்டும் இரும்பு சங்கிலியால், மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.தர்காவில், 2001ல் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து, யாரையும் இரும்பு சங்கிலி போட்டு கட்டக்கூடாது என, அரசு அறிவித்தது. அரசு உத்தரவு, காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.ஏர்வாடி தர்காவில், மீண்டும் தலைதுாக்கியுள்ள இந்த செயலை, உடனடியாக, அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த பெண்ணை மன நல காப்பகத்தில் சேர்க்க வேண்டும்,” இவ்வாறு, அவர் கூறியுள்ளார்[16].

உண்மை நிலை என்ன?: விகடன் எடுத்துக் காட்டுவது, “மனநலம் பாதித்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கைது செய்யப்பட்டவர்கள், தொடர்ந்து இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் போலீஸார் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முன்வருவதில்லை எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் கூறுகின்றனர்[17]. மேலும், ஏர்வாடி தர்ஹாவில் உள்ள மனநல மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது, கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன[18]. இதைத் தடுப்பதிலும் போலீஸார் கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது”. தமிழ் திரைப்படங்கள், டெலி சீரியல்கள், இத்தகைய தர்கா / மசூதி பேயோட்டுக் காட்சிகளை “பாசிடிவாகக்” காட்டி வருகின்றனர். வெறும் நீர், மயில்தோகை வைத்து, பேயோட்டுவது போன்ற காட்சிகளைக் காட்டுகிறார்கள். அடக்க முடியாத, மனநோயாளிகள் கட்டிப் போட்டு வைப்பது தெரிகிறது. அனுமதி பெறாத மனகாப்பகங்கள் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது[19].
© வேதபிரகாஷ்
08-11-2019

[1] தமிழ்.சமயம், ஏர்வாடி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்த சிறுவர்கள்!, Samayam Tamil | Updated:Nov 6, 2019, 04:03PM IST
[2] https://tamil.samayam.com/latest-news/crime/mentally-challenged-girl-raped-by-7-boys-in-ervadi-ramanathapuram-district/articleshow/71938227.cms
[3] பாலிமர் செய்தி, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக 7 சிறுவர்களிடம் விசாரணை, Nov 06, 2019.
[4] https://www.polimernews.com/amp/news-article.php?id=87682&cid=10
[5] நியூஸ்.7.டிவி, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: ஏர்வாடியில் 7 சிறுவர்கள் கைது…!, November 08, 20191 viewPosted By : Nandhakumar
[6] https://ns7.tv/ta/bst3fy
[7] தமிழ்.ஏசியா.நியூஸ், காட்டுப்பகுதியில் நடந்த பயங்கர சம்பவம்..! மனநலம் பாதித்த பெண்ணை கூட்டாக கற்பழித்த காமவெறி சிறுவர்கள்…, By Manikandan S R SRamanathapuram, First Published 8, Nov 2019, 12:09 PM IST…
[8] https://tamil.asianetnews.com/crime/women-was-raped-by-7-boys-q0n15b
[9] நக்கீரன், அவளுக்கு ஒன்னும் தெரியாதுடா… விட்டுடுடா..! அப்பாவின் கண்முன்னே சிதைக்கப்பட்ட மன நோயாளி பெண்..!!!, Published on 06/11/2019 (17:08) | Edited on 06/11/2019 (17:39)
[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/she-knows-nothing-deformed-mentally-ill-woman
[11] தமிழ்.வெப்.துனியா, ஏர்வாடி மனநலக் காப்பகத்தில் இருந்து மாயமான பெண் – பலாத்கார வழக்கில் 7 பேர் கைது !, Last Modified வியாழன், 7 நவம்பர் 2019 (10:14 IST)
[12] https://tamil.webdunia.com/article/regional-tamil-news/mentally-disabled-woman-raped-by-7-youths-119110700017_1.html
[13] News18 Tamil, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் கைது!, November 7, 2019, 12:55 PM IST
[14] https://tamil.news18.com/photogallery/tamil-nadu/police-arrested-7-boys-for-sexually-abused-mentally-ill-woman-vin-223575.html
[15] தினமலர், ஏர்வாடி விவகாரம் முஸ்லிம் லீக் கோரிக்கை, Added : நவ 07, 2019 23:19
[16] https://www.dinamalar.com/news_detail.asp?id=2406395
[17] விகடன், `மகளை குணமாக்க வந்தவருக்கு இப்படியொரு துயரம்!’-அத்துமீறியவர்களை விரட்டிப்பிடித்த ஏர்வாடி மக்கள், இரா.மோகன், உ.பாண்டி, Published:06 Nov 2019 5 PM; Updated:06 Nov 2019 5 PM
[18] https://www.vikatan.com/news/crime/7-booked-for-sexual-harassment-complaint-in-ervadi
[19] Ranganathan, Shubha. Does Community Mental Health Really Engage the Community?.” Power to Label: The Social Construction of Madness (2015): 17.
பிரிவுகள்: அடி வைத்தியம், அடி வைத்திய்ம், அடித்து சித்ரவதை, இஸ்லாமிய பிரச்சினை, எரியூட்டல், ஏர்வாடி, ஏர்வாடி தர்கா, கட்டி வைத்தல், கருணை, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், துன்புருத்தல், பிணைத்து வைத்தல், பேயோட்டு, மன நோயாளி, மனநலக் காப்பகம்
Tags: இறப்பு, ஏர்வாடி, ஏர்வாடி தர்கா, கட்டி வைத்தல், செயின், தர்கா, தீ விபத்து, நோயாளி, பிணைத்து வைத்தல், பேயோட்டு, பேயோட்டுதல், பேய், பைத்தியம், மன நோயாளி, மனநலக் காப்பகம், மனநோய்
Comments: Be the first to comment
திசெம்பர் 7, 2017
மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: துலுக்கர் ஆட்சியும், தர்கா உண்டானது, கார்த்திகை தீபம் விளக்கேற்றல் தடைபட்டது (4)

லண்டனில் வழக்கு: தர்கா அமைந்துள்ள மலைப்பகுதிகள் முழுவதுமே தங்களுக்கு சொந்தம் என்று முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு லண்டன் ப்ரீவி (உயர்மட்ட) கவுன்சிலில் நடைபெற்றது. மலை முழுவதுமே, அங்கு கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானுக்கே சொந்தம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமல்லாமல் அங்குள்ள தர்காவை எந்தக் காரணம் கொண்டும் விஸ்தரிக்கக் கூடாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜகோபால் உயிர்த் தியாகம்: ஹிந்து முன்னணி தலைவராக இருந்த மதுரை ராஜகோபால், திருப்பரங்குன்ற மலையில் மீண்டும் கார்த்திகை தீபத்தை ஏற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்து அந்தப் பகுதியில் பாத யாத்திரை நடத்தினார். அதே போன்று ராமநாதபுரம் மாவட்ட கீழ்க்கரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்த முஸ்லிம்கள் எதிர்த்தபோது தானே தலைமை தாங்கி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தினார். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றச் சொல்லி போராட்டம் நடத்தியதாலும் கீழ்க்கரையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தியதாலும் மதுரையில் ராஜகோபால் அவரது வீட்டு வாசலிலேயே முஸ்லிம்களால் படுகொலை செய்யப்பட்டார்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு: திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பில் தர்காவின் காம்பவுண்டு சுவரிலிருந்து 15 மீட்டர் தூரம் தள்ளி மலை உச்சியில் எங்கு வேண்டுமானாலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றிக் கொள்ளலாம்” என்று தீர்ப்பு வந்தது. வழக்கமாக ஏற்றும் தீபத் தூண் தர்காவிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. தமிழக அரசும் அறநிலையத் துறையும் நினைத்திருந்தால், பாரம்பரியமாக உள்ள விளக்குத் தூணிலேயே தீபத்தை ஏற்றியிருக்கலாம்; முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக கோயில் நிர்வாகம் மலையில் 150 அடி உயரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபத்தை ஏற்றினார்கள். இப்போது தீபம் ஏற்றும் இடம் இறந்தவர்களுக்காக ஏற்றப்படும் மோட்ச தீபம் இடமாகும். இன்றைக்கும் கூட அந்தப் பகுதியில் யாராவது இறந்து போனால் அவர்களுக்காக அங்கு மோட்ச தீபம் ஏற்றி வருகிறார்கள். மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது.

ஹிந்து முன்னணி தொடர் போராட்டம்: ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஹிந்து முன்னணி போராடி வருகிறது. இந்த ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று, மலை உச்சியில் தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி களம் இறங்கியுள்ளது. முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த நினைக்கும் அரசு பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. எங்களது போராட்டம் தொடரும்” என்று முத்துக்குமார் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

ஆகஸ்ட் 2017ல் நீதிமன்ற உத்தரவு[1]: அகில பாரத இந்து மகா சபா துணைத் தலைவர் கணேசன். இவர்,’கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, திருப்பரங்குன்றம் மலை குதிரை சுனை திட்டு பகுதியில், தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும். இது காலங்காலமாக நடந்து வருகிறது. சமீபத்தில் நிறுத்தப் பட்டது. போலீசார் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்,’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்[2]. இது, சுல்தான் சிக்கந்தர் அவூலியா தர்காவிற்கு [Sulthan Sikkandhar Avulia Dargha] அருகில் உள்ளது. போலீஸார் மற்றும் கோவில் நிர்வாகம், அவ்வாறு அனுமதி அளித்தால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மற்றும் கலவரம் ஏற்படும் என்று தெரிவித்து அனுமதி மறுத்தனர். எந்த தனி இயக்கமும், அத்தகைய உரிமையைக் கோர முடியாது என்று அரசு தரப்பு வக்கீல் வாதாடினார்[3]. அம்மலைப் பகுதி கோவிலுக்கு சொந்தமானது, அதாவது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், மதுரையில் மதவாதப் பிரச்சினையுள்ளதால், அங்கு விளக்கேற்ற அனுமதி கொடுக்க முடியாது, மாறாக, உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் விளக்கேற்றலாம் என்றும் கூறினார். தனிநீதிபதநெம். வேணுகோபால், 2014ல் தள்ளுபடி செய்தார்[4]. இதை எதிர்த்து கணேசன் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வு உத்தரவு[5]: “சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் துணை கமிஷனர், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுவை பைசல் செய்கிறோம்,”என்றனர். ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அம்மலைப் பகுதி கோவிலுக்கு சொந்தமானது, அதாவது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது, எனும்போது, அறநிலையத் துறை எவ்வாறு அந்த சமாதியை / தர்காவை அனுமதித்தது என்று தெரியவில்லை.

இந்து அமைப்புகள் சட்டப்படி முறையாக வாதாடமல் இருந்தது: மண்டபத்தின் முகப்பில் மேலே 1805 என்று தெளிவாக தெரிகிறது. அதாவது, அம்மண்டபம், 1805ல் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். உள்ளே ஒரு குகை உள்ளது, அது கர்ப்பகிருகம் போன்றுள்ளது. அதற்கான கதவும், இந்து கோவில் கதவு போன்று, மணிகளுடன் இருக்கின்றன. தூண்கள் எல்லாமே, இந்து கோவில் தூண்கள் போலத்தான் உள்ளன. ஆகவே, ஒரு இந்து கோவில் ஆக்கரமிக்கப்பட்டு, அது தர்காவாக மாற்றப்பட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. முதலில், நீதிபதியை அந்த இடத்திற்கு நேரடியாக வந்து, உள்ள நிலைமை என்னவென்று பார்த்தால், அவருக்கு உண்மை புரிந்து-தெரிந்து விடும், ஆனால், மதகலவரம் ஏற்படும் என்றெல்லாம் கூறுவதும், அத்தகைய மனப்பாங்கு ஏற்படுவதும், மேலெழுந்தவாரியான விசயக்களை வைத்து, கருத்துரிவாக்கம் கொள்வது போன்றுள்ளது. சரித்திர ஆதாரங்கள் எனும் போது, மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும், அவர் படித்துப் பார்த்திருக்கலாம். இடைக்காலத்தில் இவ்வாறு நடந்துள்ளதை அறிந்து கொள்ளலாம், ஆனால், எடுத்தவுடன், மதகலவரம் என்றெல்லாம் யோசிப்பது, முன்னரே தீர்மானம் செய்து கொண்டது போலத்தான் உள்ளது. இந்து மஹாசபா சார்பிலும், வழக்கில் சரியான ஆதாரங்களை வைக்காமல், வாதிட்டிருப்பது போல தெரிகிறது. மற்றபடி, இந்து முன்னணி பிஜேபி முதலியோர், இதில் வாதி-பிரதிவாதிகளாக இல்லாததால், சட்டப் படி, இவ்வழக்கில், அவர்களுக்கு எந்த முகாந்திரமோ, பாத்தியதையோ இல்லை என்றாகிறது.
© வேதபிரகாஷ்
06-12-2017

[1] தினமலர், கார்த்திகை தீபம்: உயர்நீதிமன்றம் உத்தரவு, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.01, 2017. 00:56.
[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1824074
[3] The Madras High Court Bench in Madurai on Thursday dismissed a writ petition filed by an office-bearer of Akhil Bharat Hindu Maha Sabha (ABHMSB) seeking permission to light the Karthigai Mahadeepam on Kudhiarai Sunai Thittu, a stone tower close to Sulthan Sikkandhar Avulia Dargha atop Tirupparankundram hills, near here, on Friday. Justice M. Venugopal rejected the plea on the ground that the police as well as the temple administration feared break out of communal clashes in the district if such permission was granted. “No religion prescribes that prayers should be performed by disturbing the peace of others and in fact, others’ rights should also be honoured and respected,” the judge said. According to the petitioner, it had been a practice since time immemorial to light the Mahadeepam at Kudhirai Sunai Thittu during the Tamil month of Karthigai every year. However, due to certain disputes, the location was shifted to Uchipillaiyar Temple for the last few years. This year, his organisation sought police protection to light it in the traditional place. But the request was rejected and hence the writ petition. On the other hand, Special Government Pleader B. Pugalendhi contended that no private organisation could claim a right to light the Mahadeepam since it vests exclusively with the temple management which owns the hillock and falls under the control of the Hindu Religious and Charitable Endowments Department.
The Hindu, HC says no to lighting Mahadeepam close to Dargah, Mohamed Imranullah S., MADURAI:, DECEMBER 04, 2014 21:19 IST, UPDATED: APRIL 07, 2016 02:52 IST.
http://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-says-no-to-lighting-mahadeepam-close-to-dargah-atop-tirupparankundram/article6662145.ece
[4] He said that the High Court too had recognised the right way back in 1996 itself. Further stating that Madurai district was a communally sensitive place, he said that the Revenue Divisional Officer had called for a peace committee meeting on November 25 to decide the modalities for the Karthigai Deepam festival to be conducted this year. It was resolved in the meeting that the Mahadeepam would be lighted at Uchipillayar Temple this year also. However, with respect to the festival to be celebrated next year, it was resolved that a committee would be formed at least a month before the festival to convey to the State Government the desire of Bharatiya Janata Party, Hindu Munnani and other organisations to light the Mahadeepam on Kudhirai Sunai Thittu and to act according to the Government’s decision.
http://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-says-no-to-lighting-mahadeepam-close-to-dargah-atop-tirupparankundram/article6662145.ece
[5] http://www.dinamalar.com/district_detail.asp?id=1824074&dtnew=8/1/2017&Print=1
பிரிவுகள்: அமிர் குஷ்ரு, அமிர் குஸ்ரு, அமீர் குஷ்ரு, அலாவுத்தீன் கில்ஜி, அழிப்பு, அழிவு, அவூலியா, தர்கா, திருப்பரக்குன்றம், திருப்பரங்குன்றம், துருக்க, துருக்கர், துருக்கி, துருஷ்க, துருஷ்கா, துலுக்க, துலுக்கன், துலுக்கர், தேசவிரோதம், தொழுகை, பாண்டியன், பாப்புலர் பிரென்ட், மசூதி, மதுரை, மலையேறுதல், மாலிகாபூர், வல்லாளன், விளக்கு, வீர பாண்டியன்
Tags: அலாவுத்தீன் கில்ஜி, கார்த்திகை, குன்றம், சுந்தர பாண்டியன், தர்கா, திருப்பரங்குன்றம், தீபம், துருக்கி, துருஷ்கா, துலுக்கன், துலுக்கர், மசூதி, மதுரை, மஹா தீபம், வல்லாளன், விஜயநகரம், விளக்கு, விளக்கேற்றல், வீர பாண்டியன்
Comments: 2 பின்னூட்டங்கள்
திசெம்பர் 7, 2017
மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: திருப்பரங்குன்றத்தின் மீது தர்கா உண்டானது, தீபம் ஏற்றுவது தடைப் பட்டது (3)

துருக்கரின் குரூர மாபாதக செயல்கள் – இபின் பதூதாவின் புத்தகத்தின்படி[1]: இபன்பதூதா மொராக்கா நாட்டைச் சேர்ந்தவன். சிறந்த கல்வியாளன் ஆவான். இவன் பல நாடுகளைச் சுற்றி விட்டுக் கி.பி. 1333இல் டெல்லி வந்தான். இவன் தம்கானியினது மனைவியின் சகோதரியை மணந்தவன் ஆவான். இவன் கி.பி.1334 முதல் 1342 வரை இந்திய நகரங்கள் பலவற்றைச் சுற்றிப் பார்த்துவிட்டு இறுதியில் மதுரை வந்தான். தம்கானியின் நெருங்கிய உறவினனாக இருந்தாலும், தம்கானி பாண்டிய நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்ததைத் தனது குறிப்பில் இபன்பதூதா விரிவாகக் கூறியுள்ளான். தம்கானி இந்துப் பெண்களைக் கொன்று குவித்தான்; ஆண்களைக் கழுவில் ஏற்றினான்; தாயின் மார்பிலே பால் உண்டு கொண்டிருந்த பச்சிளங் குழந்தைகளை வாளால் வெட்டிக் கொன்றான். தான் கொன்று குவித்த மக்களின் தலைகளைக் கொய்து மாலைகளாகக் கோத்துச் சூலங்களில் தொங்க விட்டான். இவற்றை எல்லாம் இபன்பதூதா தனது குறிப்பில் விவரித்துள்ளான். கடைசிக் காலத்தில் தம்கானி காலராநோய் வாய்ப்பட்டு இறந்தான். கொடுமைகள் நிறைந்த கியாஸ் உதீன் தம்கானிக்குப் பின்பு நாசீர்உதின், அடில்ஷா, பக்ருதீன் முபாரக் ஷா, அலாவுதீன் சிக்கந்தர்ஷா ஆகியோர் ஆண்டனர். இவர்களது ஆட்சி கி.பி.1345 முதல் 1378 வரை மதுரையில் நடந்தது.

மதுரை சூரையாடியதைப் பற்றி கங்காதேவியின் விளக்கம்[2]: கங்கா தேவி தனது மதுரா விஜயம் என்ற நூலில், இவ்வாறு மதுரைவாசிகளின் நிலையை பதிவு செய்துள்ளார்[3], “கோவில்கள் கவனிப்பாரற்றுக் கிடந்தன, அவற்றில் வழிபாடுகளும் நிறுத்தப்பட்டன. ……….மதுரையைச் சுற்றியுள்ள தோட்டங்கள் எல்லாம் சீரழிந்து கிடந்ததைப் பார்க்கும் போது மிக்கத் துயராமாக இருந்தது. ………………….எல்லா புறங்களிலும் வரிசையாக கொம்புகள் நடப்பட்டிருந்தன, அவற்றில் மனித மண்டையோடுகள் செருகப்பட்டிருந்தன. ……………..தாமிரபரணி ஆற்றில் பசுக்களின் ரத்த ஓடிக் கொண்டிருந்தது. வேதங்கள் மறக்கப்பட்டன நீதி ஓடிவொளிந்து கொண்டது……………திராவிடவாசிகளின் முகங்களில் சோகமு அப்பிக் கொண்டிருந்தது.” அந்நூல் பாண்டியரது மிகப்பழமை வாய்ந்த, பாரம்பரிய அரசு கத்தி எவ்வாறு கம்பண்ணாவிடம் சென்று விட்டது என்பதையும் குறுப்பிடுகிறது. பாண்டியர் தமது சக்தியை இழந்ததால், அகத்தியர் கொடுத்த கத்தி, கம்பண்ணாவிடம் சென்று விட்டது. பாண்டியரால் முடியாததால், மதுரையை துலுக்கர்களிடமிருந்து மீட்கும் பணிக்காக அது அவனிடம் சென்று சேர்ந்தது[4]. ஆக மொத்தத்தில், மதுரை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் உள்ள கோவில்கள் துலுக்கரால் கொள்ளையடிக்கப் பட்டது, இடிக்கப்பட்டது, நிரூபனமாகிறது.

விஜயநகர பேரரசு [1336-1646] முதல் நாயக்கர் காலம் வரை: விஜயநகர பேரரசு 1336-1646 வரை சிறந்து விளங்கி, துலுக்கரால் அழிக்கப்பட்ட, ஆயிரக்கணக்கான கோவில்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டன. 300 வருட ஆட்சியில், தென்னிந்தியா பல வழிகளில் சிறந்தோங்கியது. துலுக்கர்களுக்கும் படை, அரசு முதலியவற்றில் வேலைகள் கொடுக்கப்பட்டது. அவர்கள் நாணயமாக செயல்பட்டனரா அல்லது ரகசியங்களை அவ்வப்போது, துலுக்க அரசுகளுக்கு தெரிவித்தனரா என்பது கேள்விக்குரியது. இருப்பினும், 1565ல் தலைக்கோட்டைப் போரில், பீஜப்பூர், பீடார், பேரார், அஹமது நகர், கோல்கொண்டா, முதலிய கூட்டு சுல்தான் படைகளால், விஜயநகர பேரரழு வீழ்த்தப்பட்டது, நகரமே சூரையாடப் பட்டது. பொதுவாக இவர்களின் ஆட்சியில் சமயச்சார்பின்மை காணப்பட்டது என்று இக்காலத்து செக்யூலரிஸ எழுத்தாளர்கள் பறைச்சாற்றிக் கொண்டலும்[5], 1347-1527 வரை நடந்த இவர்களது ஆட்சியில், தக்காணப் பகுதியிலுள்ள பகுதிகள், அதிக அளவில் சூரையாடப்பட்டன. அவ்விழிவிகளிலிருந்து தான், இப்பொழுதைய சரித்திரமே எழுதப் பட்டுள்ளது. பிறகு நாயக்கர்கள் ஆட்சியில், ஓரளவிற்கு, உயிர்த்தெழுந்தது. அவர்களால் மறுபடியும் கோவில்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டன. பிறகு ஆங்கிலேயர் ஆட்சி வந்தாலும், ஓரளவிற்கு, சுரண்டல்கள் அவர்களின் யுக்திகளில் நடந்தேறின. சுதந்திரம் பிறகும் நிலைமை மாறாவில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகு செக்யூலரிஸமும், ஜிஹாதி பயங்கரவாதமும் சேர்ந்த நிலை: அப்பொழுது துலுக்கர் குதிரைகள் மீது வந்து கொள்ளையடித்தனர் என்றால், இப்பொழுது, கடைகள் வைத்துக் கொண்டு, கள்ளக்கடத்தல், பதுக்கல், போலிப் பொருட்கள், கள்ளப்பணம், ஹவாலா, வரியேய்ப்பு முதலியவற்றில் ஈடுபட்டு பொருளாதாரத்தை சீரழித்து வருகின்றனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதலியோரை வளைத்துப் போட்டு, தங்களது சட்டமீறல் காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்கின்றனர். கோவில் கொள்ளை இப்பொழுது, வேறு விதமாக நடந்து வருகிறது. முதலில், கிராமப் புறங்கள், ஒதுக்குப் புறமாக இருக்கும் கோவில்களுக்கு அருகில் குடிசை போட்டுக் கொண்டு வாழ ஆரம்பிக்கின்றனர். பிறகு மின்சார இணைப்பு முதலியவற்றைப் பெற்று, பட்டா வாங்கிக் கொள்கின்றனர். குடிசை வீடுகளாகி, மசூதியும் கட்டிக் கொள்கின்றனர். கோவில் நிலம், அருகில் உள்ள மண்டபங்கள் முதலியவற்றை அப்படியே ஆக்கிரமித்துக் கொண்டு மாற்றி விடுகின்றனர். கடந்த 150 ஆண்டுகளாக, இந்த முறைதான் கையாளப்பட்டு வருகின்றது, இனி, திருப்பரங்குன்ற தர்கா விசயத்தைப் பார்ப்போம்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ‘குதிரை சுனை திட்டு’ எனும் பகுதியில் ஒரு பெரிய விளக்குத் தூண்: இவ்விவரங்கள் “விஜய பாரதம்” இதழில் வந்துள்ளது என்று இணைய தளத்தில் உள்ளதை அப்படியே எடுத்துக் கொண்டு அலசப் படுகிறது. திருப்பரங்குன்றம், அறுபடை வீடுகளின் முதல் படைவீடு. முருகப்பெருமான் தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்ட புனிதத் தலம். இங்குள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஹிந்து சமுதாயத்தின் அபிலாஷையை பிரதிபலிக்கும் வகையில் ஹிந்து முன்னணி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. இது பற்றிய விபரங்களை ஹிந்து முன்னணி மாநிலச் செயலாளர் மதுரை முத்துக்குமாரிடம் கேட்டபோது அவர் தெரிவித்த கருத்துக்கள்…. – ஆசிரியர் [விஜயபாரதம்].

நின்றுபோன கார்த்திகை தீபம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ‘குதிரை சுனை திட்டு’ எனும் பகுதியில் ஒரு பெரிய விளக்குத் தூண் இன்றும் உள்ளது. பல்லாண்டுகளாக அந்த விளக்குத் தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது, அன்றைய ஆங்கிலேய அரசு, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்தது. அதனால், அந்த வருடம் அந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. மலை ஏறுவதில் சிரமம் இருந்ததால், அடுத்து வந்த ஆண்டுகளில் நமது கோயில் சிவாச்சாரியார்கள் கார்த்திகை தீபம் ஏற்றுவதையே நிறுத்திவிட்டார்கள்.

மலையில் பச்சை பிறைக் கொடி: முஸ்லிம்கள் சிலர் மலை மீதேறி சில பகுதிகளை ஆக்கிரமிக்கத் துவங்கினர். ‘சிக்கந்தர்’ என்பவருடைய பிணத்தைப் புதைத்து, அங்கு ஒரு தர்காவைக் கட்டி சிக்கந்தர் தர்கா என்று பெயர் சூட்டினர். அதுமட்டுமல்லாமல், மலைப் பகுதிகளையே சிக்கந்தர் மலை என்று அழைக்கத் துவங்கினர். மலை உச்சியில் உள்ள மரங்களில் முஸ்லிம்களின் பச்சை நிற பிறைக் கொடியைப் பறக்கவிட்டனர். அன்றைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சின்ன கருப்பத் தேவர் மக்களைத் திரட்டி மலை மீது சென்று, பச்சைக் கொடிகளை அகற்றிவிட்டு தேசியக் கொடியை ஏற்றிவிட்டு வந்தார். திருப்பரங்குன்ற மலை மீதுள்ள முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, தொடர்ந்து அவரது தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. 700 பேர் கைதானார்கள். சட்டம், ஒழுங்கு பிரச்சினை உருவாகிறது என்றவுடன் முதல்வர் ஆந்திர கேசரி பிரகாசம் நேரில் வந்து சின்ன கருப்பத் தேவரை சந்தித்து மிரட்டி போராட்டத்தை வாபஸ் வாங்க வைத்தார்.
© வேதபிரகாஷ்
06-12-2017

[1] http://www.tamilvu.org/courses/degree/a031/a0313/html/a0313333.htm
[2] Madurā Vijayam (Sanskrit: मधुरा विजयं), meaning “The Conquest of Madurai”, is a 14th-century C.E Sanskrit poem written by the poet Gangadevi. It is also named Vira Kamparaya Charitham by the poet. It chronicles the life of Kumara Kampanna Udayar or Kumara Kampanna II, a prince of the Vijayanagara Empireand the second son of Bukka Raya I.
[3] K. A. Nilakanta Sastri, The Pandyan Kingdom – from the Earliest times to the sixteenth century, Luzac & Co., London, 1929, p. 242
[4] K. V. Raman, Some aspects of Pandyan History in the light of Recent Discoveries, University of Madras, Madras, 1971, p.37.
[5] Wikipedia – போன்றவையும் சேர்த்து.
பிரிவுகள்: அசிங்கப்படுத்திய முகமதியர், அமிர் குஷ்ரு, அமிர் குஸ்ரு, அமீர் குஷ்ரு, அமைதி, அழிப்பு, அழிவு, அழுகை, அழுக்கு, அவமதிக்கும் இஸ்லாம், சுந்தர பாண்டியன், தர்கா, திருப்பரக்குன்றம், திருப்பரங்குன்றம், பாண்டியன், பாப்புலர் பிரென்ட், பாப்புலர் பிரென்ட் ஆப் இந்தியா, வீர பாண்டியன்
Tags: அமிர் குஷ்ரு, அமிர் குஷ்ரூ, அமிர் குஸ்ரு, அமீர் குஷ்ரு, அமீர் குஷ்ரூ, அமீர் குஸ்ரு, அலாவுத்தீன் கில்ஜி, இபின் பதூதா, கார்த்திகை, குதிரைத் திட்டு, குன்றம், சமாதி, சுந்தர பாண்டியன், தர்கா, திருப்பரங்குன்றம், தீபம், பாண்டியன், மசூதி, மதுரை, வீர பாண்டியன்
Comments: 2 பின்னூட்டங்கள்
ஓகஸ்ட் 8, 2017
முளைப்பாரி ஊர்வலங்களை வரவேற்று மரியாதை செய்யும் முஸ்லிம்கள் ஏன் மாற வேண்டும் – சேலத்து முஸ்லிம் பெண்கள் ஏன் இந்து பெண்கள் வழிபாட்டை எதிர்க்க வேண்டும் (3)

முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி ஊர்வலத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது (ஆகஸ்ட் 2017): ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் விசேஷ விழாக்கள் நடப்பது வழக்கம். இவற்றில், தென் மாவட்டங்களில் நடைபெறும் முளைப்பாரி திருவிழாக்கள் முக்கிய இடம்பிடிக்கின்றன. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முளைப்பாரி திருவிழாக்கள் நடந்துவருகின்றன. ராமநாதபுரம் புளிக்காரத் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு முளைப்பாரித் திருவிழா நடைபெற்றது. ஒரு வார காலம் நடந்த இந்தத் திருவிழாவின் இறுதி நாளான புதன்கிழமை [02-08-2017] அன்று, பெண்கள் மாரியம்மன் கோயில் முன்பாக பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, மாரியம்மனுக்காக நேர்ந்து வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை நீர்நிலையில் கரைப்பதற்காக அம்மன் கரகத்துடன் ஊர்வலமாகச் சென்றனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற இந்த முளைப்பாரி ஊர்வலம், சின்னக்கடைத்தெரு வழியாக வந்தது. இது காலங்காலமாக நடந்து வருகின்றது.

முஸ்லிம்கள் ஊர்வலத்தை வரவெற்றது – பரஸ்பர மரியாதை செய்து கொண்டது: அங்குள்ள முஸ்லிம் பள்ளிவாசல் அருகே முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி ஊர்வலத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது[1]. அம்மன் கரகம் எடுத்து வந்தவருக்கு முஸ்லிம் சங்க நிர்வாகி முகமது நிஷார், பொன்னாடை போர்த்தி வரவேற்றார்[2]. இந்த நிகழ்ச்சியில் சைரோஸ், நைனார் உள்ளிட்ட ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர். கோவில் பூசாரிகளுக்கு ஜமாத் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்[3]. அப்போது புளிக்காரத்தெருவின் சார்பில் தலைவர் அங்குச்சாமி முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்[4]. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்த இந்த வரவேற்பு அனைவரையும் நெஞ்சம் நெகிழ செய்தது. அவ்வப்போது, மதப் பிரச்னைகளைச் சந்தித்துவரும் ராமநாதபுரத்தில், அவற்றுக்கு மாற்றாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் மக்கள் ஒற்றுமை, இரு தரப்பினைச் சேர்ந்தவர்களிடையே சகோதரத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டாண்டு காலமாக இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய முறையை ஏன் மற்ற பகுதிகளில் கடைப் பிடிக்க முடியாது?

2015ல் கீழக்கரையில் முளைப்பாரி ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்த முஸ்லிம்கள்[5]: ஏர்வாடி, யாதவர் தெருவில் உள்ள வாழவந்த மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நடந்தது. 02-08-2015 அன்று மாலை 5 மணியளவில் ஏர்வாடி தர்காவிற்குள் அம்மன் கரகம் முன்னே செல்ல முளைப்பாரி ஊர்வலம் மூன்று முறை வலம் வந்தது[6]. பின்னர் உலக நன்மைக்காக இஸ்மாயில் ஆலிம்சா மவுலீது ஓதினார்[7]. பாதுஷா நாயகத்திற்கான இரண்டு முளைப்பாரியை தர்கா வாசல் முன் வைத்து கும்மி கொட்டி அம்மன் வாழ்த்துப் பாடல்களை பாடினர். சிறிதளவு முளைப்பாரியினை வழங்கினர். ஏர்வாடி தர்கா ஹக்தார் சபை மூத்த உறுப்பினர் துல்கருணை பாட்ஷா லெப்பை கோயில் விழா தலைவர் முத்துமணிக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் ஏர்வாடி கடற்கரையில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்து, முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந் நிகழ்ச்சி நடந்தது[8]. 2014லிலும் இவ்வாறே நடந்தது[9].

தும்பைப்பட்டி வீரகாளியம்மன் கோவில் சமத்துவம் [ஜனவரி 2017] ஏன் மற்ற இடங்களில் இல்லை?: மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தும்பைப்பட்டியில் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுத்தோறும் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் பண்டிகை அன்று அதே பகுதியில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பம் ஒன்று காலம் காலமாக வீரகாளியம்மனுக்கு அணிவிக்க பட்டாடை கொடுத்து வருகிறது[10]. இந்த ஆண்டு -2017 அந்த குடும்பத்தைச் சேர்ந்த நாகூர் அனீபா என்பவர் தனது தலையில் பட்டாடையும், பூமாலைகளும் சுமந்து, தாரை தப்பட்டைகள் முழங்க வீரகாளியம்மன் கோயில் மந்தைக்கு வந்தார்[11]. அவரை வரவேற்று பதினெட்டுப்பட்டியைச் சேர்ந்த ஏழு அம்பலக்காரர்களும் பட்டாடையை பெற்றுக் கொண்டனர். கோவில் பூஜாரியான தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் பட்டாடையை அம்மனுக்கு சாத்தி அபிஷேம் செய்தார். அதன்பிறகு வழக்கம் போல பூஜாரி கோவில் மாட்டை அவிழ்த்து விட்டு, மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தார். மேலூரில் நடந்த சமத்துவப் பொங்கல் விழாவில் இரு மதங்களை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர். மேலூரில் நடந்து ஏழுமாதங்கள் கூட ஆகவில்லை, ஆனால், ஆகஸ்ட் 2017ல், சேலத்து முஸ்லிம்கள் மட்டும் எப்படி மாறாக நடந்து கொண்டிருக்க வேண்டும்?

சிராவன மாதமும், ஆடிமாதமும், முகமதியரும்: சூரியன் கர்க்கடக இராசியுட் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 31 நாள், 28 நாடி, 12 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும்[12]. சிராவான மாதம் ஜூலை 24, 2017 முதல் ஆகஸ்ட் 23, 2017 வரை உள்ளது. இதில் ஒவ்வொரு நாளுமே விஷேசமான நாள்தான் –
- ஒவ்வொரு திங்கட்கிழமையும் சோமவார விரதம்,
- செவ்வாய்கிழமை மங்கள கௌரி விரதம்,
- வெள்ளிக்கிழமை லக்ஷ்மிக்கு உதந்ததான விரதம்
சிராவன பௌர்ணமி 07-08-2017 அன்று வந்தது. அன்று சந்திரகிரகணமாகவும் இருந்தது. அன்று நாகபஞ்சமி, ரக்ஷாபந்தன், ஆவனி ஆவிட்டம், நாரளி பௌர்ணிமா [தேங்காய்] என்று பலவாறு இந்தியாவில் கொண்டாடப் படுகிறது. ஆகஸ்ட் 14 ஜன்மாஸ்டமி, கிருஷ்ணாஸ்டமி, கோகுலாஸ்டமி என்று வருகிறது. ஆனால், முகமதியர்களுக்கு, இம்மாதத்தில் ஒன்றும் இல்லை. ரம்ஜான் முடிந்ததும், ஹஜ் [30-08-2017] வரை சும்மாதான் இருக்க வேண்டும். ஆனால், இம்மாதத்தில் தான் கந்தூரி விழா என்றெல்லாம் கொண்டாடுகின்றனர். அதாவது, பழைய பண்டிகைகளை மாற்றி கொண்டாடுகிறார்கள். இப்பொழுது தான் “ஷிர்க்” என்றெல்லாம் சொல்லி கலாட்டா செய்து வருகின்றனர். ஆனால், இந்த உர்ஸ், கந்தூரி, தீமிதி விழாக்கள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் தான் அடிப்படைவாத-வெறிபிடித்த ஜிஹாதி முஸ்லிம்கள், இவற்றை எதிர்க்கின்றனர். அந்த போகில் தான், இப்பொழுது 2017ல் அம்மன் விழாக்களை எதிர்க்கின்றனர். இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.
© வேதபிரகாஷ்
07-08-2017

[1] விகடன், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் முளைப்பாரி ஊர்வலத்துக்கு வரவேற்பு அளித்த முஸ்லிம்கள்!, இரா.மோகன், Posted Date : 12:08 (03/08/2017), Last updated : 12:08 (03/08/2017)
[2] http://www.vikatan.com/news/tamilnadu/97804-people-from-all-religion-joined-mulaipaari-rally.html
[3] தினத்தந்தி, மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக முளைப்பாரி ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள் வரவேற்பு, ஆகஸ்ட் 03, 2017, 03:30 AM
[4] http://www.dailythanthi.com/News/Districts/2017/08/03003215/An-example-of-religious-harmony–Mulberry-marchMuslims.vpf
[5] தினமலர், மதநல்லிணக்கமுளைப்பாரி ஊர்வலம், பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.2, 2015, 03:26.
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1355010&Print=1
[7] தினத்தந்தி, மாரியம்மன் கோவில் முளைப்பாரி விழா ஏர்வாடி தர்காவில் பிரார்த்தனை, அக்டோபர் 01, 2015, 04:15 AM.
[8] http://www.dailythanthi.com/News/Districts/2015/10/01031227/Mariamman-Temple-Dargah-mulaippari-Yervadi-prayer.vpf
[9] http://temple.dinamalar.com/news_detail.php?id=35380
[10] தமிழ்.ஒன்.இந்தியா, மேலூரில் இந்து, முஸ்லிம்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல், Posted By: Jijo, Published: Tuesday, January 17, 2012, 13:54 [IST]
[11] http://tamil.oneindia.com/news/2012/01/17/tamilnadu-hindu-muslims-celebrate-pongal-madurai-aid0180.html
[12] சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலத்தினை தட்சிணாயனம் என்று கூறுகின்றனர். இவை ஆடி , ஆவணி , புரட்டாசி , ஐப்பசி, கார்த்திகை , மார்கழி என ஆண்டின் ஆறு மாதங்களாகும். இந்தக் காலத்தினை இந்து சமயத்தில் தேவர்களின் ஓர் இரவுப் பொழுதாக கருதப்படுகிறது. இக்காலங்களில் சூரியனின் கதிர்வீச்சு பகலில் குறைந்ததும், இரவில் குளிர்ச்சி அதிகமாகவும் இருக்கும்.
பிரிவுகள்: 786, ஃபத்வா, அடிப்படைவாதம், அடையாளம், கிச்சிப் பாளையம், கிச்சிப்பாளையம், சேலம், ஜிஹாதித்தனம், ஜிஹாதித்துவம், ஜிஹாத், தடுக்கப்பட்டது, தடுப்பது, தமிழகத்து தீவிரவாதி, தமிழ் ஜிஹாதி, தமிழ் முஸ்லிம், தமிழ் முஸ்லீம், திருவிழா, தீக்குழி, Uncategorized
Tags: அம்மன், அம்மன் விழா, ஆடி, ஆடி மாதம், ஆடி விழா, ஏர்வாடி, கந்தூரி, கிச்சிப் பாளையம், கிச்சிப்பாளையம், சேலம், தர்கா, தர்கா கூத்துகள், தீமிதி, மசூதி, முளைப்பாரி, ராமநாதபுரம்
Comments: Be the first to comment
ஏப்ரல் 3, 2017
விமான விபத்திற்கு கருப்பு ஆடு பலிகொடுத்த பாகிஸ்தானிய விமானத்துறையும், ஒரு பைத்தியம் செய்த 20 நிர்வாணக் கொலையும் (2)

ஆண், பெண்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அவர்களை தடிகளால் அடித்து, பேய் விரட்டப்படுகிறது: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா மாவட்டத்தில் லாஹூர் நலரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் முஹம்மது அலி குஜ்ஜார் தர்கா உள்ளது. அந்த தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் அந்நாட்டு அரசு பணியாளர், தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் வேலைசெய்தார், என்பது தெரியவந்து உள்ளது. மனநிலை பாதிப்புடன் இங்கு வரும் பக்தர்களுக்கு பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் மிக கொடூரமான முறையில் சிகிச்சை அளிப்பது வழக்கம். ஆண், பெண்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி அவர்களை தடிகளால் அடித்து, பேய் விரட்டப்படுகிறது. இதற்காக வருபவர்கள் தங்குவதற்கு தர்கா வளாகத்தில் காப்பகம் ஒன்றும் உள்ளது. இங்கு சிலநாட்கள் தங்கி ‘சிகிச்சை’ பெற்றால் தங்களது பிரச்சனை நீங்கிவிடும் என்பது இங்கு வருபவர்களின் (மூட) நம்பிக்கையாக உள்ளது.

தர்காவின் நிர்வாகத்திற்காக போட்டி, சண்டை: இந்நிலையில், இந்த தர்காவின் நிர்வாகத்தை யார் கவனிப்பது? என்பது தொடர்பாக பரம்பரை வாரிசுகளுக்கு இடையில் சமீபகாலமாக போட்டியும் மோதலும் இருந்து வந்துள்ளது[1]. தலைமை பேயோட்டுகிறவன் தான் திறமையான பேயோட்டுகிறவன் என்றால், அவனை வைத்து தான் அந்த தொழில் நடத்தியாக வேண்டும். ஆகவே அவனைக் கொலைசெய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவனையே தீர்த்துக் கட்ட வேண்டும் என்றால், அவனை விட பெரிய எத்தனாக, அவனது மகன் அல்லது வேறொருவன் இருந்திருக்க வேண்டும். இந்த போட்டியின் விளைவாக ஞாயிற்றுக்கிழமை அன்று பின்னிரவு [02-04-2017] நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட 20 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்[2]. அந்த தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார்[3]. என்று தமிழ் ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

தொலைபேசியில் வரச்சொல்லி, மயக்க மருந்து கொடுத்து கொலை செய்த மனநோயாளி: தர்காவிற்கு வருபவர்கள் ஒவ்வொருவருக்காக இரவு தொலை பேசியில் அழைப்பு விடுத்து உள்ளார். முக்கியமான பணி இருப்பதாக கூறி தன்னுடைய அறைக்கு அளைத்து அவர்களுக்கு மயக்க மருந்தை கொடுத்து உள்ளார்[4]. அதாவது,, ஒரு மனநோயாளி / பைத்தியம் இந்த அளவுக்கு வேலை செய்யுமா என்று தெரியவில்லை. இல்லை, அந்த பைத்தியம் அந்த அலவுக்கு விசயம் தெரிந்து வைத்துள்ளது. அவரது ஆலோசனையின் பேரில் உதவியாளர்கள் சிலர் அங்கு வசித்துவந்த எதிர் தரப்பினருக்கு மயக்க மருந்து கலந்த உணவு வகைகளை கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்டவர்கள் மயங்கி சாய்ந்தபோது அவர்களின் ஆடைகளை களைந்து கத்தி மற்றும் வீச்சரிவாள்களால் வெட்டியும், கனத்த தடிகம்புகளால் தாக்கியும் அப்துல் வஹீதின் ஆதரவாளர்கள் துடிதுடிக்க கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சிகிச்சைக்காக அந்த தர்காவுக்கு வந்திருந்த மூன்று / நான்கு பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்[5]. இந்த கோரச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்யுள்ள போலீசார் மேலும் பலரை தேடி வருகின்றனர்[6]. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படுகொலையை தொடர்ந்து, சம்பவம் நடந்த தர்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஷியாக்களுக்கு எதிரான பிரச்சாரமா?: பாகிஸ்தானில், சுன்னிகளைத் தவிர மற்ற முஸ்லிம்கள், முஸ்லிம்களாகக் கருதப் படுவதில்லை. கடந்த 50 ஆண்டுகளில் காதியான் – அஹமதியா முஸ்லிம்கள் வேடையாடப் பட்டு, விரட்டியடிக்கப் பட்டனர். பஹாய் முஸ்லிம்களின் கதியும் அவ்வாறே முடிந்தது. ஷியாக்கள் அதிகமாக இருப்பதால். தலிபான் இயக்கம் வளர்ந்த பிறகு, அவர்களைத் தாக்கி வேட்டையாடி வருகின்றனர். ஐசிஸ் வந்த பிறகு கேட்கவே வேண்டாம், ஜிஹாதி தீவிரவாதம் எல்லைகளக் கடந்தது. தொடர்ந்து ஷியாக்கள் பலவிதங்களில் தாக்கப் பட்டு வருகின்றனர். தர்காக்களை ஒழிக்கிறோம் என்ற போர்வையில், குண்டுவெடிப்புகளுடன் வேலைசெய்து வருகிறார்கள். சுன்னிகள் தவிரவீதர முஸ்லிம்களின் மசூதிகள், மடாலயங்கள், சூபிகானா போன்ற இடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. குண்டுவெடிப்புகளும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானை விட்டு, ஓடி வந்த பஹாய் முஸ்லிம்கள், தில்லியில், தாமரை கோவிலைக் கட்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. கர்நாடகத்தில், அஹமதியா முஸ்லிம்கள் கனிசமாக உள்ளனர். ஆனால், இவர்கள் எல்லோருமே அடங்கிக் கிடக்கின்றனர். எதைப் பற்றியும் எந்த கருத்தையும் சொல்வதில்லை.

பிப்ரவரியில் நடந்த குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானோர் சாவு, காயம் முதலியன: பாகிஸ்தானில் உள்ள தர்கா ஒன்றின் மீது நடைபெற்ற தாக்குதலில் குறைந்தது 80 பேர் பலியானதை தொடர்ந்து நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றில் டஜன்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது[7]. சுமார் 18 தீவிரவாதிகள் தெற்கு சிந்து மாகாணத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அங்குத்தான் அந்த தர்கா அமைந்திருந்தது. மேலும் 13 பேர் வட-மேற்கு பகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேவான் நகரில் இருந்த சூஃபி தர்காவில் தற்கொலை குண்டுத்தாரி ஒருவர் வழிப்பட வந்திருந்தோர் மத்தியில் தன்னைத்தானே வெடிக்க வைத்துள்ளார். இஸ்லாமிய அரசு என அழைத்துக்கொள்ளும் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. ஜிஹாதி குழுக்கள் நடத்திவரும் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் இது சமீபத்தியதாகும். தாக்குதலில் பலியானவர்களுக்கு 17-02-2017 அன்று (வெள்ளிக்கிழமை) இறுதிச் சடங்கு நடைபெறுகிறது, என்று பிபிசி வெளியிட்டது[8]. ஆனால், அத்தகைய “குண்டுதாரிகள்” ஏன் ஷியா மசூதிகளில் மட்டும், தங்களை வெடித்துக் கொள்கிறார்கள் என்று சொல்லவில்லை.

ஷியாக்களின் பலியை “சகிப்புத் தன்மையோடு” அனுசரித்து வரும் செக்யூலரிஸ சித்தாந்திகள்: ராணுவம் மற்றும் போலீஸ் சுன்னிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதனால், ஷியாக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். ஆகவே, சுன்னிகளும் பேயோட்டுதல், மந்திரம் வைத்தல், பில்லி-சூன்யம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டிருந்தாலும், இதனை சாக்காக வைத்துக் கொண்டு, அவர்களை ஒழிப்பதை நியாயப் படுத்துவது போன்ற, இந்நிகழ்சிகள் தெரிகின்றன. மனித உரிமைகள் எல்லாம் இதில் யாரும் கவலைப்படவில்லை. இங்குள்ள செக்யூலரிஸ்டுகளும் கண்டுகொள்வதில்லை. இங்குள்ள ஷியா முஸ்லிம்கள், ஆச்சரியப் படும் அளவுக்கு ஊமைகளாக இருக்கின்றனர். இங்கு ஒரு பாரூக் நாத்திகன் என்பதனால் கொலை செய்யப்பட்டான் என்றால், அங்கு சுன்னிகள் தவிர மற்ற எல்லோருமே “காபிர்கள்” என்று முத்திரைக்குத்தப்பட்டு தீர்த்துக் கட்டப் படுகிறார்கள். ஆனால், “சகிப்புத் தன்மையோடு” அமைதி காக்கிறார்கள். இப்பொழுதும், பைத்தியம் கொலை செய்தது என்று கதையை முடித்து விடுவார்கள்.
© வேதபிரகாஷ்
03-04-2017

[1] மாலைமலர், மயக்க மருந்து தந்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி: பாகிஸ்தான் தர்காவில் கொடூரம், பதிவு: ஏப்ரல் 02, 2017 10:57
[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/02105709/1077548/20-people-killed-by-mentally-ill-custodian-of-dargah.vpf
[3] தினத்தந்தி, பாகிஸ்தானில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு தர்கா நிர்வாகியால் 20 பேர் கொடூரக் கொலை, ஏப்ரல் 02, 12:00 PM
[4] http://www.dailythanthi.com/News/World/2017/04/02120016/20-killed-by-shrine-custodian-in-Sargodha-police.vpf
[5] தினமலர், தர்காவுக்கு சென்ற 20 பேர் நிர்வாணமாக்கி படுகொலை, பதிவு செய்த நாள். ஏப்ரல்.3, 2017, 00.05.
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1743594
[7] பிபிசி, தர்கா மீது நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி: 31 தீவிரவாதிகள் கொலை, பிப்ரவரி 17, 2017.
[8] http://www.bbc.com/tamil/global-39005133
பிரிவுகள்: அடி வைத்திய்ம், அவமதிக்கும் இஸ்லாம், அஹமதியா, அஹம்மதியா, அஹ்மதியா, அஹ்மதியாக்கள், கருப்பு ஆடு, சர்கோதா, சூடு, சூடு வைத்தியம், சூனியம், தர்கா, பலி, பலி ஆடு, பில்லி, பைத்தியம், மாந்திரீகம், வெடிகுண்டு, வைத்தியம், ஷியா, ஷியா-சுன்னி, ஷிர்க், Uncategorized
Tags: இஸ்லாம், கருப்பு, கருப்பு ஆடு, கொலை, சர்கோதா, சூனியம், சூபி, சூபி-ஜிஹாத், சூபித்துவம், சூபியா, தர்கா, தர்கா கூத்துகள், நரபலி, நிர்வாண கொலை, பலி, பாகிஸ்தான், பிசாசு, பில்லி, பேயோட்டுதல், பேய், மந்திரம், மாந்திரீக நரபலிகள், முஸ்லீம் மாந்திரீக நரபலிகள், லாகூர், லாஹூர்
Comments: Be the first to comment
ஏப்ரல் 3, 2017
பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? – ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

இவனே “மனநோயாளி” என்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்?: பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர், பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும், தாக்கியும் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் ஊடகங்கள் 03-04-2017 அன்று செய்திகளை வெளியிட ஆரம்பித்தாலும், 02-04-2017 மாலையில் முரண்பட்ட விவரங்கள் தான் பாகிஸ்தான் நாளிதழ்கள் மூலம் அறியப்பட்டன[1]. பக்தர்களை காப்பகத்தின் பொறுப்பாளர் தன்னை கொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று பயந்து, கொன்றதாக செய்திகள் வெளிவந்தன[2]. தனக்கே விஷம் கொடுத்து கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதால் தான், அவர்களை கொலை செய்ததாக கூறினான்[3]. சொத்து-அதிகாரம் போட்டி என்றால், தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத், அவன் மகன் மற்றவர்கள், இவர்களுக்கிடையில் தான் பகை-கொலை செய்யும் வெறி இருந்திருக்க வேண்டும்[4]. தர்காவை பிடிக்க திட்டம் போட்டவர்களுக்கும், சொகிச்சைப் பெற்றவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? தன்னை கொலை செய்ய வருகிறார்கள் என்பது எப்படி “மனநோயாளிக்கு”த் தெரியும்? இவனே “மனநோயாளி” என்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்? ஆகவே, எதையோ மறைக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் குரூர சிகிச்சை அளித்த தர்கா: இந்திய விவகாரங்களில் உள்ளே புகுந்து, ஆராய்ந்து, விவரங்களை வெளியிடும் செக்யூலரிஸ ஊடகங்கள், பாகிஸ்தான் நாளிதழ்கள் சொன்னதை கூட போடாமல், திரித்து வெளியிட ஆரம்பித்துள்ளன. தினமணியில் தலைப்பே தமாஷாக இருந்தது! “பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி,” என்ற தலைப்பிட்டது[5]. மனநோயாளி எப்படி, அடுத்தவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்தான், கொடுத்த பிறகு, வெட்டிக் கொன்றான் என்று விளக்கவில்லை[6]. கொலைசெய்கிறவன், வந்தவர்களின், ஆடைகளை நீக்கி, நிர்வாணமாக்கி, தடிகளால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தான் என்பது புதிராக உள்ளது. அதில் நான்கு பெண்களும் அடக்கம் எனும்போது, அவர்களை நிர்வாணமாக்கியவன், மருந்து கொடுத்து, மயக்கமடையச் செய்தவன், அப்படியே அடித்துக் கொன்றான, குத்திக் கொன்றானா, அல்லது பாலியல் பலாத்காரம் செய்தானா போன்ற விவரங்கள் தெரியவில்லை.

பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது: மதநிர்வாக விவகார மந்திரி, ஜெயீம் காதரி, “ரகசிய புலனாய்வுத் துறைமூலம், இத்தகைய மத–காப்பங்கங்கள் பஞ்சாப் மாநிலத்தில் 552 இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இது பதிவு செய்யப்படாதது ஒன்றாகும். பேயோட்டுகிறேன் என்று இப்பகுதியில், இத்தகைய கொலைகள் நடப்பது மற்றும் அவர்களை உயிரோடு எரிப்பது, இந்நாட்டில் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால், இதுபோன்ற கூட்டுக் கொலை நடப்பது, இதுதான் முதல் தடவை,” என்றார்[7]. அதாவது, “பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது” என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால், தமிழ் ஊடகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. யூத-கிருஸ்துவ-முகமதிய மதங்களின் படி, பேய்-பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனானப் பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே இப்பழக்கம் 20 நூற்றாண்டு வரை இருந்தது. பிறகு சட்டங்கள் மற்றும் கடுமையான நடவடிக்கைக்கள் மூலம் கட்டுப் படுத்தினர். ஆனால், இஸ்லாமிய நாடுகளில், மதநம்பிக்கை மூலம் நடப்பதால், அரசுகள் கண்டும் காணாதது போல இருந்து விடுகின்றன.

விமான பாதுகாப்பிற்கு கருப்பு ஆடு பலிக் கொடுத்த பாகிஸ்தான் விமானத் துறை[8]: நான்கு மாதங்களுக்கு முன்னர் டிசம்பர் 2016ல், பாகிஸ்தானிய விமானத்துறை பாதுகாப்பு கோரி, ஒரு கருப்பு ஆட்டை அறுத்து பலியிட்டனர்[9]. பாகிஸ்தான் விமானங்கள் அடிக்கடி விபத்தில் மாட்டிக் கொள்கின்றன[10]. டிசம்பர் 7, 2016 அன்று நடந்த விபத்தில், விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பிரயாணம் செய்தவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அடிக்கடி பலிகள் நடப்பதால், ஏதோ தியசக்திதான் வேலை செய்கிறது, அதனை விரட்ட கருப்பு ஆடு பலியிட வேண்டும் என்று, மாந்தீரிகர்கள் அறிவுருத்தியதால், விமான ஆட்கள் அவ்வாறே செய்தனர்[11]. சமூக ஊடகங்கள், மற்றவர்கள் கிண்டலடித்தாலும், அவர்கள் கவலைப்படவில்லை. அதேபோல, பாலங்கள் கட்டுவது, பெரிய சாலைகள் போடுவது போன்ற வேலைகள் ஆரம்பிக்கும் போதும் பலி கொடுக்கப் படுகின்ற்து. நம்ம வீரமணி போன்றோர் அல்லது ஷிர்க் கூட்டத்தால் கலாட்டா செய்யவில்லை. பொதுவாக ஈத் அன்று 1,00,00,000க்கும் [ஒரு கோடி] மேலான விலங்குகள் பலியிடப் படுகின்றன. இதில் மதநம்பிக்கையை விட வியாபாரம் தான் பெரிதாக இருக்கிறது[12]. தோல் அதிகம் கிடைக்கும், அதனை ஏற்றுமதி செய்யலாம், ரூ 8 கோடிகள் கிடைக்கும் என்றுதான் கணக்குப் போடுகின்றனர்[13]. தோல் வியாபரக் கழகம் அதில் அதிகமாகவே சிரத்தைக் காட்டுகிறது[14]. மிருகங்களை அறுக்கும் போதே, தோலை யார் பெறுவது என்று சண்டை போட்டுக் கொள்வர் / அதையே விளையாட்டாக கொள்வர். அதிலும் அடிதடி-சண்டை நடைபெறுவதுண்டு.
© வேதபிரகாஷ்
03-04-2017

[1] Pakistan Observer, Sargodha Shrine custodian kills 20 devotees, April.3, 2017.
[2] http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/
[3] Geo.TV.news, Killed people because they had planned to poison me: Sargodha murder accused, Malik Asghar and Naveen Anwar, April.2, 2017.
[4] https://www.geo.tv/latest/136447-Killed-people-because-they-had-planned-to-poison-me-Sargodha-murder-accused
[5] தினமணி, பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி, ஏப்ப்ரல்.3, 2017.
[6] http://www.dinamani.com/latest-news/2017/apr/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-2677320.html
[7] Punjab Minister for Religious Affairs Zaeem Qadri said intelligence agencies along with police and the local government were investigating all aspects of the case. Qadri said that his department managed some 552 shrines in the province, but this one was not a registered with it.
“Investigators will also look into how this shrine was allowed to be set up on private land,” he said. Punjab Chief Minister Shahbaz Sharif has asked for a police report on the investigation within 24 hours, a senior government official said. There have been cases of people dying during exorcism ceremonies at some shrines across the country, but mass killings are rare.
http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/
[8] Daily Mail, Pakistan airline responds to safety fears after plane crash kills everyone on board one of its jets by sacrificing a goat , PUBLISHED: 12:01 BST, 19 December 2016 | UPDATED: 23:17 BST, 19 December 2016.
[9] http://www.dailymail.co.uk/news/article-4047924/Pakistan-airline-mocked-goat-sacrifice.html
[10] Daly Mail, PIA plane crash: Pakistan’s national airline sacrifices goat on Tarmac before test flight, Monday 19 December 2016 11:15 GMT
[11] http://www.independent.co.uk/travel/news-and-advice/pia-lane-crash-goat-sacrifice-pakistan-national-airline-tarmac-atr-grounded-benazir-bhutto-a7484081.html
[12] According to Gulzar Feroz, the central chairman at the Tanners’ Association, more than 2.7 million cows/bulls, four million goats, 800,000 lambs, and up to 30,000 camels will be sacrificed this year. He said that the hides of cows/bulls were expected to fetch a price of Rs1,600 in the market, while goat hides would fetch a market price of Rs 250 each. He said that hides of sacrificial animals fetched a total of Rs8 billion last Eid, but due to fall in prices this year, hides of sacrificial animals are expected to fetch around Rs7 billion this year.
https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid
[13] Geo News, Pakistanis to sacrifice over 10 million animals this Eid, September 12, 2016.
https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid
[14] https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid
பிரிவுகள்: 786, ஃபிதாயீன், அடி உதை, அடி வைத்தியம், அடிப்பது, அஹம்மதியா, அஹ்மதியா, அஹ்மதியாக்கள், குண்டு வெடிப்பது, குண்டு வெடிப்பு, குண்டு வெடிப்பு வழக்கு, குண்டுவெடிப்பு, குத்து வைத்தியம், குரூரம், குரோதம், கொடூரம், கொலை, கொலை செய்வது, கொலை வெறி, கொலைவெறி, சன்னி, சலாபிசம், சலாபிஸம், சிரச்சேதம், சுத்தம், சுத்தி, சூஃபி, சூஃபி நம்பிக்கையாளர், சூஃபித்துவம், சூடு, சூடு வைப்பது, சூபி, சூபித்துவம், ஜிஹாதி, ஜிஹாத், ஜோதிடம், தர்கா, தீய சக்திகளை விரட்டுவது, நரபலி, நிர்வாண வைத்தியம், பலி, பலிக்கடா, பழமைவாத கோட்பாடு், பழமைவாதம், பாகிஸ்தான், பைத்தியம், மசூதி, மசூதி இடிப்பு, மசூதி எரிப்பு, மசூதி சாவு, மந்திரக் கட்டை அவிழ்த்தல், மந்திரத் தொழிலில், மந்திரம், மாயை, முனி, முஸ்லிம் சாமி, முஸ்லிம் சாமியார், முஸ்லிம்-சோதிடம், முஸ்லிம்-மாந்திரிகம், முஸ்லீம் சட்டம், முஸ்லீம் நரபலிகள், ரத்தக் காட்டேரி, ரத்தக் காட்டேரிகள், ரத்தம், ரத்தம் குடித்தல், வன்முறை, வாஹாபி, வாஹாபி இயக்கம், விமானம், வியாபாரம், வெடிகுண்டு, ஷியா, Uncategorized
Tags: அடி வைத்தியம், இஸ்லாம், கருப்பு ஆடு, சுடு வைத்தியம், சுடுதல், சூடு, சூனியம், தர்கா, தர்கா கூத்துகள், நரபலி, பலி, பில்லி, பைத்தியம், மந்திரம், மாந்திரீக நரபலிகள், முஸ்லீம் மாந்திரீக நரபலிகள், ரத்தம், வைத்தியம்
Comments: Be the first to comment
செப்ரெம்பர் 4, 2016
ஆஜ்மீர் தர்காவின் இரண்டு முஸ்லிம் சாமியார்கள் நேர்த்திக்கடன் செய்ய வந்த ஒரு பெண்ணை எட்டு நாட்களாக கூட்டு கற்பழித்துள்ளனர்!

ஆஜ்மீர், தர்கா, கற்பழிப்புகள்: க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டி [Khwaja Moinuddin Chiட்shty] என்ற தர்கா முஸ்லிம்களின் பிரசித்தி பெற்ற வழிபாட்டு ஸ்தலமாக இருக்கிறது. பல நாடுகளிலிருந்து முஸ்லிம் பிரமுகர்கள், பிரபலங்கள் முதலியோர் இங்கு வந்து நேர்த்திக் கடன் செய்து விட்டு போகின்றனர். ஆபாச நடிகைகள் கூட வந்து செல்கின்றனர். அயல்நாட்டவரும் சுற்றுலா ரீதியில் வந்து செல்கின்றனர். அதனால் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், கற்பழிப்புகள் முதலியவையும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏப்ரல் 2016ல் கூட தர்காவுக்கு வந்த ஒரு ஸ்பெயின் நாட்டு பெண்ணை ஒரு கும்பல் சேர்ந்து கற்பழிக்க முயன்றுள்ளனர். பிறகு, அவரது நண்பர்களால் மீட்கப்பட்டனர்[1]. பிப்ரவரி 2015லும் தர்காவில் வழிபட வந்த ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டுள்ளாள்[2]. தில்லியிலிருந்து ஆஜ்மீருக்கு வந்து, ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கி நேர்த்திக் கடன் செய்து வஎந்த வேலையில், மத்திய பிரதேசத்து நபரால் கற்பழிக்கப்பட்டாள். குற்றவாளியையை கைது செய்து, பெண்னை தில்லிக்கு அனுப்பி வைத்தனர்[3]. ஜூன் 2014லிலும் அத்தகைய கற்பழிப்பு நடந்தது[4]. அதில் சம்பந்தப்பட்டது, மூன்றாம் பாலினத்த பெண் என்பதால் போலீஸ் மெத்தனம் காட்டியதால், சி.ஐ.டி விசாரணைக்கு ஒப்படைக்கப் பட்டது[5]. தர்கா விழாக்களின் போது, இங்கு ஆயிரக்கணக்கான மூன்றாம் பாலினத்தவர் இங்கு வந்து, மகிழ்விப்பது வழக்கமாக இருக்கிறது.

க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டியின் காதிம்கள் கற்பழிப்பில் இறங்கியது (ஆகஸ்ட் 2016): 26-08-2016 அன்று கொல்கொத்தாவிலிருந்து வந்த ஒரு பக்தையைக் கற்பழித்ததற்காக, இரண்டு முஸ்லிம் சந்நியாசிகள்-காதிம்கள், ஆஸிம் மற்றும் சலீம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்[6]. இவ்விருவரும் சகோதரர்கள் என்றும் தெரிய வந்தது. சகோதரர்கள் இப்படி ஒரு பெண்ணை கூட்டாகக் கற்பழித்தது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி, இருவரையும் தேடுகின்றனர்[7]. அந்த பெண் எட்டு நாட்களுக்கு முன்னர் என்ற கிரிஸ்டி-சாமிக்கு நேர்த்தி கடன் செய்ய வந்து, விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தாள்[8]. அப்பொழுது தான், இவ்விருவரும் உள்ளே நுழைந்து, கதவை தாழிட்டு தன்னை கற்பழித்ததாக கூறினாள். 225-08-2016 அன்று தப்பித்து வெளியே வந்த அவள் போலீஸாரிடம் புகார் கொடுத்தாள்[9]. அதற்குள் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் குடும்பத்தினர், ஆஸிம் அவளை ஏழு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தான், பிறகு விவாகரத்து / தலாக் செய்துவிட்டான் என்றனர். மேலும், போலீஸார் கேட்டபோது, சட்டரீதியில் அக்குடும்பத்தினர் எந்த ஆவணத்தையும் கட்டமுடியவில்லை[10]. பிறகு, எதற்கு வக்காலத்து வாங்க வந்தார்கள் என்று தெரியவில்லை.

காதிம்கள் கூட்டுக் கற்பழிப்பில் ஈடுபடலாமா?: இங்கு காதிம் [खादिम] என்றால், க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டியின் சேவகர்கள், வேலையாட்கள், பாதுகாவலர்கள் என்று பொருள். காலபோக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தாலும், காதிம்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து வருகிறார்கள்[11]. இங்கு கூட்டம் அதிகமானால், இவர்களுக்கு வருமானமும் அதிகமாகிறது. இதனால், முன்னர் திவான் ஜைனுல் ஆபிதின் அலி கான் [ Dewan Zainul Abedin Ali Khan] பாலிவுட் ஆபாசங்கள் எல்லாம் இங்கு வரக்கூடாது, தடை விதிக்க வேண்டும் என்றபோது[12], காதிம்களின் அமைப்பு, அஞ்சுமான் கமிட்டி [Anjuman committee,representative body of khadims ] எதிர்ப்பு தெரிவித்தது[13]. ஏனெனில், தர்காவில் ஜியாரத் [ziyarat in the dargarh] என்ற சடங்கை இவர்கள் தான் செய்வித்து வருகிறாற்கள். ஆனால், இந்த காதிம்கள் கற்பழிப்பில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், மனைவி இல்லாத ஒரு பெண்ணை மறுபடியும் கற்பழிக்க முடியுமா? அதிலும் இரண்டு காஜிக்கள், முல்லாக்கள், காதிம்கள் போன்றோர் சேர்ந்து கூட்டாகக் கற்பழிக்கலாமா? சகோதரர்களாக இருக்கும் அவர்கள் அவ்வாறு கற்பழிக்கலாமா? இப்பொழுது தலாக் பற்றி பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் போது, முஸ்லிம் சாமியார்கள் இவ்வாறெல்லாம் செய்யலாமா?

1992ம் ஆண்டு ஆல்மீர் கற்பழிப்பு: ஆஜ்மீர் என்றாலே கற்பழிப்பு என்ற நிலைவு, நிலை மற்றும் நெடிய ஒரு தீய பாரம்பரியம் 1992லிருந்து இருந்து வந்துள்ளது. 1992ல் நூற்றுக்கணக்கான பள்ளிமாணவிகளை அங்கு அழைத்து வந்து, கூட்டாக 18-பேர் கொண்ட ஒரு கும்பல் பண்ணை இல்லங்களுக்கு வகுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்று கற்பழித்து வந்தது. அதுமட்டுமல்லாது, கற்பழிக்கும் காட்சிகளை புகைப்படம் எடுத்து வைத்து, அவர்களை மிரட்டி அத்தகைய கற்பழிப்புகள் தொடர்ந்தன. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்லக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்[14]. அரசியல்வாதிகள் சம்பந்தங்களினால் ஆறு ஆண்டுகளாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. ஒருவழியாக விசாரணை முடிந்து 1998ல் ஆஜ்மீர் மாவட்ட நீதிமன்றாம் எட்டு பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது[15]. ஆனால், அவர்கள் பிடிபடாமல் தப்பித்து வந்தனர்.

1998 முதல் 2012 வரை தப்பித்து வந்த குற்றாவாளிகள்: 1998ல் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டாலும், அவர்கள் பிடிபடவில்லை.
- அதில் பரூக் கிரிஸ்டி என்பவன் காங்கிரஸ் இளைஞர் அணியின் தலைவன் ஆவான். அவனுக்கு பைத்தியம் பிடித்தது என்றார்கள்.
- இன்னொருவன் புருசோத்தமன் 1994ல் பிணையில் விடுவித்தபோது, தற்கொலை செய்து கொண்டான் என சொல்லப்பட்டது. ஆனால், அவன், உயிரோடு இருந்தானாம்.
- சோஹைல் ஹனி முதலிய ஆறு பேர் காணாமல் போய் விட்டனர்.
- 2012ல் சையது சலீம் கிருஸ்டி [Saiyed Saleem Chishty, 42] பிடிக்கப்பட்டான்[16]. இவன் பங்களாதேசம் மற்றும் மும்பை போன்ற இடங்களில் மறைந்து வாழ்ந்தான். ஆஜ்மீருக்கு 2012ல் வந்தபோது பிடிபட்டான்[17].
- சலீம் கிரிஸ்டி, காதிம் மொஹல்லாவில் பிடிபட்டான் என்பது குறிப்பிடத் தக்கது[18].
பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

2004ல் உச்சநீதிமன்றம் தண்டனை குறைப்பு தீர்ப்பை தள்ளுபடி செய்தது: ராஜஸ்தான் நீதிமன்றம், ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்தது. ஆனால், 2004ல் உச்சநீதி மன்றம் அதனை தள்ளுபடி செய்தது. ஆஜ்மீர் மஹிலா சமோஹ் என்ற இயக்கம், கற்பழிக்கப் பட்ட பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியது. அப்பெண்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த இயக்கத்திற்கும் மிரட்டல்கள் இருந்ததால், தனது போராட்டங்களை நிறுத்திக் கொண்டு அமைதியானது. இப்பொழுது அவர்களின் நிலை என்ன என்பதெல்லாம் தெரியாமல் கிடக்கின்றன.
© வேதபிரகாஷ்
04-09-2016

[1] Published on Apr 5, 2016 – A group of drunk miscreants allegedly tried to rape a Spanish tourist and beat up her friends in Ajmer in Rajasthan. The tourists were also looted. However, luckily they called up their friend, who rescued them – https://www.youtube.com/watch?v=jEvcPzav8FM
[2] english.pradesh18.com, Ajmer dargah tour turns tragic, minor pilgrim raped by MP man, Posted on: Feb 06, 2015 12:06 AM IST | Updated on: Feb 06, 2015 12:06 AM IST
[3] A minor girl who went to Ajmer Dargah for worship was allegedly raped by a man from Madhya Pradesh. The crime was allegedly committed in a guest house in Dargah Bazar. The pilgrim had come from Delhi to Ajmer on January 19, 2015. A case has been registered under sections of POCSO. The rape survivor moved to Delhi after the incident. Police have arrested the accused.
http://english.pradesh18.com/news/bihar/ajmer-dargah-tour-turns-tragic-minor-pilgrim-raped-by-mp-man-681681.html
[4] Indian Express, CID to probe transgender’s rape in Ajmer, Written by Sweta Dutta | Jaipur | Published:June 27, 2014 12:27 am.
[5] http://indianexpress.com/article/india/india-others/cid-to-probe-transgenders-rape-in-ajmer/
[6] Times of India, Two khadims of Ajmer Sharif Dargah face gangrape charge, TNN | Aug 27, 2016, 08.31 AM IST.
[7] http://www.india.com, Ajmer Sharif Dargah: Priest brothers accused of gangraping devotee, By Sandhya Dangwal on August 27, 2016 at 4:40 PM.
[8] http://www.india.com/news/india/ajmer-sharif-dargah-priest-brothers-accused-of-gangraping-devotee-1438898/
[9] http://timesofindia.indiatimes.com/city/ajmer/Two-khadims-of-Ajmer-Sharif-Dargah-face-gangrape-charge/articleshow/53882064.cms
[10] Meanwhile, family members of the accused have stated to police that Azim married the victim seven years ago and later they had a divorce and last week the victim again came to Ajmer but police said that no legal papers of marriage or ivorce have been produce by the family members and therefore police is looking for both the accused.
http://timesofindia.indiatimes.com/city/ajmer/Two-khadims-of-Ajmer-Sharif-Dargah-face-gangrape-charge/articleshow/53882064.cms
[11] Although the Khadims have faced a number of revolutions and changes of Government, but under all circumstances and worst political upheavals they kept themselves attached to the Shrine and performed all their traditional duties and services.http://dargahajmer.com/descendent-khadims/
[12] Indian Express, B’wood obscenity: Ajmer Dargah caretakers slam dewan’s star ban demand, Written by Agencies | Jaipur | Published:July 23, 2012 7:36 pm
[13] http://indianexpress.com/article/entertainment/entertainment-others/bwood-obscenity-ajmer-dargah-caretakers-slam-dewans-star-ban-demand/
[14] http://news.outlookindia.com/items.aspx?artid=746397
[15] http://www.thaindian.com/newsportal/uncategorized/accused-in-1992-ajmer-sex-scandal-case-arrested_100588267.html
[16] Mid-day, Accused in 1992 Ajmer sex scandal case arrested, January 04, 2012, Jaipur
[17] http://archive.mid-day.com/news/2012/jan/041211-Accused-in-1992-Ajmer-sex-scandal-case-arrested.htm
[18] http://icarelive.com/news/news.php?cat_id=1&article_id=34444
பிரிவுகள்: அசிங்கப்படுத்திய முகமதியர், அத்தாட்சி, ஆஜ்மீர், ஆபாசம், இச்சை, உடலின்பம், உடலுறவு, கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், கற்பு, காதிம், தர்கா, தலாக், நேர்த்திக் கடன், முஸ்லிம் சாமி, முஸ்லிம் சாமியார், Uncategorized
Tags: ஆஜ்மீர், கற்பழிப்பு, கற்பு, காதிம், கூட்டுக் கற்பழிப்பு, செக்ஸ், செக்ஸ் வழக்கு, தர்கா, தர்கா சாமி, தலாக், தலாக்-தலாக்-தலாக், நிக்காஹ், நேர்த்திக் கடன், முகமதியர், முஸ்லிம் சாமியார், முஸ்லீம்கள், வலுக்கட்டாயம், ஷெரிப்
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 31, 2016
கற்பழிப்பு விசயத்தில் கற்பழித்த இமாமும், ஆஸம் கானும், ஒரே மாதிரி பேசுவதேன் – உபியில் கற்பழிப்பு வீடியோக்கள் விற்பதேன்?

உ.பி.யில் கற்பழிப்பு காட்சியை வீடியோ எடுத்து 150 ரூபாய் வரை விற்கும் கொடூரமும் நடக்கிறது[1]: உ.பி.யில் கற்பழிப்புகள் தொடர்கதையாகி விட்ட நிலையில், கற்பழிப்பு காட்சியை வீடியோ எடுத்து 150 ரூபாய் வரை விற்கும் கொடூரமும் நடக்கிறது. உ.பி.யில் அடிக்கடி கற்பழிப்பு குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. கடந்த வெள்ளி(27-07-2016)யன்று இரவில் நெடுஞ்சாலையில் ஒரு காரை வழிமறித்து தாயையும் மகளையும் ஒரு கும்பல் கற்பழித்தது. சுமார் 3 மணி நேரம் கொடூரமான முறையில் நடந்து கொண்ட அந்த கும்பல், துப்பாக்கி முனையில் இந்த கொடுமையை அரங்கேற்றி உள்ளது. இது தொடர்பாக 3 பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடுவதாக கூறுகிறார்கள். அதே இடத்தில் தொடர்ந்து 3 முறை இது போன்ற கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் ஒரு ஆசிரியை துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளார். இப்படி தொடரும் இந்த கற்பழிப்புகளை வீடியோவும் எடுத்து வைத்துள்ளனர். இதை ஒரு தொழிலாகவே நடத்துவது தெரிய வந்துள்ளது. அந்த வீடியோ காட்சியை இப்போது சிடி வடிவில் விற்கவும் துணிந்துவிட்டார்கள். உபி கடைவீதிகளில் 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
30 வினாடி முதல் 5 நிமிடம் வரை ஓடக்கூடிய வகையில் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் என்று பெயர் சொல்லியே விற்கப்படுவதாகவும் தினமும் ஆயிரக்கணக்கான சிடிக்கள் விற்பதாகவும் தெரிய வந்துள்ளது. ஆபாச சிடி எல்லாம் காலம் கடந்தது. இப்போது இது நிஜத்தில் நடந்தது என்று கூறியே ஆக்ராவில் விற்பதாகவும் கூறப்படுகிறது. பென் டிரைவரை கொண்டு கொடுத்தால், அதில் பதிவு செய்தும் கொடுக்கிறார்கள். சமீபத்தில் பள்ளி மாணவி தனது பாய்பிரண்டுடன் வந்தபோது, அவனை அடித்து விரட்டிவிட்டு கற்பழித்த கொடுமையான காட்சியை, மாணவியை பிளாக்மெயில் செய்வதற்காக மொபைலில் எடுத்துள்ளனர். அதுதான் தற்போது விற்பனை ஆவது தெரிய வந்துள்ளது[2]. இமாம், ஆஸன்கான் போன்றே பேசியிருப்பதும் நோக்கத்தக்கது.
தாய்–மகள் கற்பழிப்பும், ஆஸம்கானின் ஆபாச பேச்சும்[3]: உத்தரபிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27-07-2016) இரவு ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நொய்டாவில் இருந்து ஷாஜகான் பூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். வழியில் புலந்த்ஷர் என்ற இடத்தில் இரும்பு கம்பியை போட்டு தடை ஏற்படுத்தி ஒரு கும்பல் காரை நிறுத்தியது. கார் நின்றதும் காரில் இருந்த ஆண்களை கட்டிப்போட்டு விட்டு தாய்-மகளை அந்த கும்பல் கற்பழித்தது. பிறகு நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் 14 நாள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்[4]. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற புலந்த்ஷர் கும்பல் பலாத்கார சம்பவத்தில் மேலும் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்[5]. அதில் முக்கியமான குற்றவாளியும் ஒருவர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச அமைச்சர் ஆசம் கான் நிருபர்களிடம் கூறுகையில், இது அரசுக்கு எதிரான சதி சம்பவம் என கூறியிருந்தார்[6].
பெண்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது: இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இனிமேலும் உத்தரபிரதேசத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பில்லை என கூறினர். மேலும், ஆசம்கான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர். இதுகுறித்து, விசாரித்த சுப்ரீம்கோர்ட், ஆசம்கான் போன்ற அரசியல்வாதிகள் கருத்து வழக்கின் போக்கை திசை திருப்பிவிடும் என்றும், தனது கருத்து குறித்து கோர்ட்டில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளது[7]. ஆக, இவையெல்லாம் ஒரே நேரத்தில், வாரத்தில், மாதத்தில் நடப்பதாலும், பேச்சும்-செயலும்-நடவடிக்கைகளும் இருப்பதாலும், உண்மையில் சதி செய்வது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. மேலும், இந்த இமாம் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுடன் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
© வேதபிரகாஷ்
31-08-2016

[1] தினமலர், கற்பழிப்பு வீடியோ கடைகளில் விற்பனை: உபியில் 150 ரூபாய்க்கு விலைபோகும் கொடூரம், 04 ஆகஸ்ட் 2016, 05:44 PM
[2] http://www.dinamalarnellai.com/cinema/news/12649
[3] தமிழ்.ஒன்.இந்தியா, சிறுமி, தாய் பலாத்காரம்.. கண்டபடி கருத்து கூறிய உ.பி அமைச்சர் மீது சுப்ரீம்கோர்ட் பாய்ச்சல், By: Veera Kumar, Published: Monday, August 29, 2016, 12:44 [IST]
[4] மாலைமலர், புலந்த்ஷர் கற்பழிப்பு சம்பவம்: முக்கிய குற்றவாளி உட்பட மேலும் 3 பேர் கைது, பதிவு: ஆகஸ்ட் 09, 2016 00:01
[5] http://www.maalaimalar.com/News/National/2016/08/09000139/1031529/Three-more-persons-including-the-main-accused-in-the.vpf
[6] http://tamil.oneindia.com/news/india/bulandshahr-rape-remark-sc-pulls-up-azam-khan-261428.html
[7] http://www.thehindu.com/news/national/sc-takes-note-of-azam-khans-remark-on-bulandshahr-gang-rape/article9045527.ece
பிரிவுகள்: கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், கற்பு, சட்டம் மீறல், தாய், பாலியல் குற்றம், பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பிஜேபி, பிஜ்நோர், பிஜ்னோர், பில்லி, பீர், பெண்ணியம், மசூதி, முல்லாயம், முஸ்லீம், ரேப், ரேப் விடியோ, ரேப் வீடியோ, Uncategorized
Tags: அகிலேஷ் யாதவ், அன்வருல் ஹக், இமாம், சிறுபான்மையினர், சூனியம், ஜமா மஸ்ஜித், ஜிஹாத், தர்கா, நஜிபாபாத், பிசாசு, பிஜ்நோர், பிஜ்னோர், பில்லி, புனிதப்போர், பேய், மசூதி, மிரட்டல், முஸ்லீம்கள், ரேப், ரேப் விடியோ, ரேப் வீடியோ
Comments: Be the first to comment
ஓகஸ்ட் 31, 2016
தர்காவில் இமாம் ஒரு பெண்ணை கற்பழித்தது – பேயோட்டுகிறேன் என்று கொக்கோகத்தில் ஈடுபட்ட ஹக் கையும் களவுமாக பிடிபட்டான்!
தர்காக்களில் நடப்பது என்ன?: இந்தியாவில் பொதுவாக தர்காக்களுக்கு குழந்தைகளைக் கூடிச் சென்று மந்திரித்தால், குழந்தைக்கு நல்லது, எதையாவது கண்டு பயந்தது அல்லது எந்த தீய சக்தியும் அணுகாது போன்ற நம்பிக்கைகளில் அவ்வாறு செய்கின்றனர். பெண்களும் பேய்-பிசாசு பிடித்துள்ளது அல்லது அவர்கள் ஒருமாதிரி பைத்தியம் பிடித்தது போல நடந்து கொண்டால், ஏதோ கெட்டகாற்றினால், ஆவியினால் அவ்வாறு நடந்து கொள்கிறாள் மந்திரித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தர்காவுக்குக் கூட்டிச் செல்கின்றனர். தர்காக்களில் இதற்கான பிரத்யேக அறை, பூஜைசெய்ய இமாம் போன்றோர் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் சிறுமிகள், பெண்கள் முதலியோரை பாலியல் ரிதியில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு சீரழிக்கப் படுகின்றனர். வெளியே சொன்னால் கொன்று விடுவேன், விலக்கி வைத்து விடுவேன் என்று பயமுருத்தியே, விவகாரங்களை மறைத்து விடுகின்றனர். எப்பொழுதாவது எல்லைகளை மீறும் போது, தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாகும் போது, பொறுக்கமுடியாமல், புகார் கொடுக்கும் போது உண்மைகள் வெளிவருகின்றன. அதுபோலத்தான், பிஜ்னோர் இமாம் விசயமும் உள்ளது.
பிஜ்னோர் இமாம் மாட்டிக் கொண்டது: மௌலானா அன்வருல் ஹக் [Maulana Anwarul Haq (40)] பிஜ்னோர் நகரத்தின் தலைமை இமாமாக [head Imam of Jama Masjid in Chah Siri, Bijnor city] இருக்கிறான். அரசியல் ஆதரவும் இருப்பதால், அதே தோரணையில் உலா வந்து கொண்டிருந்த நேரத்தில் தான், ஒரு பெண் உருவில் பிரச்சினை வந்தது. ஆகஸ்ட்.19, 2016 வெள்ளிக்கிழமை அன்று அவனை சிலர் நன்றாக அடித்துள்ளனர். அதனால் தான் விவகாரம் வெளியே வந்துள்ளது. ஆகஸ்ட்.12 2016 வெள்ளிக்கிழமை அன்று கிராடாபூரைச் சேர்ந்த 30 வயதுள்ள ஒரு பெண்ணை பேய்-பிசாசை வெளியேற்றுகிறேன் என்ற சாக்கில் கற்பழித்துள்ளான்[1] என்று பிறகு தெரிய வந்தது. முதலில் பயந்த அப்பெண் பிறகு தனது கணவனிடம் நடந்ததை கூறியுள்ளாள். இதனால், அவள் கணவன் மற்றும் சிலர் அந்த இமாமை அடித்துள்ளனர்.
தர்காவில் கற்பழித்த இமாம்: முன்னர் அக்கணவன் தன் மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது, அதனை நீக்க வேண்டும் என்று தான், இமாமிடம் தன் மனைவியைக் கூட்டிச் சென்றுள்ளான். பொதுவாக முஸ்லிம்கள் அவ்வாறு நம்பிக்கைக் கொண்டிருப்பதால், அவ்வாறு செய்துள்ளான். இமாம் அதற்கு தர்காவில் சில பரிகாரங்கள் முதலியவை செய்ய வேண்டும் என்று அவர்களை ஹரித்வாருக்கு கூட்டிச் சென்று சென்று ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளான். இமாம் அவளை ஹரித்வாரில் உள்ள கலியூர் தர்காவுக்கு [Kaliyar Sharif dargah in Haridwar] கூட்டிச் சென்று அங்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துள்ளான். பிறகு தன் கணவனுக்கு தெரிவித்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியும் உள்ளான். இதனால், அப்பெண் விசயத்தை வெளியில் சொல்லவில்லை போலும். முஸ்லிம்கள் இப்படித்தான் உண்மைகளை மறைத்து விடுகிறார்கள் போலும்.
ருசி கண்ட பூனை மறுபடியும் சென்றது: ருசி கண்ட பூனை சும்மாயிருக்காது என்பது போல, அந்த இமாம், மறுபடியும் அப்பெண்ணை அனுபவிக்க விரும்பினான் போலும். அதனால், ஆகஸ்ட்.19, 2016 அன்று ஹக், குர்ரம் என்ற தனது உதவியாளுடன், அப்பெண் வீட்டில் தனியாக இருக்கும் போது சென்றுள்ளான். அதாவது, பக்ஷிவாலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அப்பெண்ணை வருமாறு அழைத்துள்ளான்[2]. குர்ரத்தை வெளியே நிறுத்து வைத்து, உள்ளே சென்றுள்ளான். உடம்பை பரிசோதனை செய்ய வேண்டும் என்று தன்னுடைய வேலையை ஆரம்பித்துள்ளான். சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வந்தபோது, குர்ரம் அவனை உள்ளே செல்ல தடுத்துள்ளான். இதனால், சந்தேகமடைந்த கணவன், கோபத்துடன் கதவைத் தள்ளிக் கொண்டு, உள்ளே சென்றபோது, இமாம் தன் மனைவியைக் கட்டித்தழுவி சேட்டைகளை செய்து கொண்டிருந்ததைக் கண்டான். அவன் தன்னுடைய உடைகளையும் கழட்டியிருந்தான். அரை நிர்வாண கோலத்தில் இமாம் மற்றும் தன் மனைவி என்று கண்டதால், கோபத்துடன் கத்தி, விவரத்தைக் கேட்டுள்ளான். மனைவி உண்மையினை கூறினாள். இதனால், அவன் சத்தம் போட, அருகில் உள்ளவர்கள் வந்து, அவனை அடித்துள்ளனர். அடிப்பதை தடுக்கும் இமாமையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. இக்காட்சியை வீடியோ, புகைப்படமும் எடுத்துள்ளனர்[3]. இவ்வளவு நடந்தும், அவர்கள் இவ்விவகாரத்தை போலீஸில் சொல்லவில்லை.
கையும் களவுமாக மாட்டிக் கொண்ட இமாம்: ஒரு இமாம், மௌலானா, முஸ்லிம் மதகுரு இவ்வளவு வக்கிரத்துடன் நடந்து கொண்டுள்ளான்[4]. ஏற்கெனவே மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததுடன், மறுபடியும், மந்திரிக்கிறேன் என்று அழைத்துள்ளான். போதாகுறைக்கு, யாரும் உள்ளே வரக்கூடாது என்று ஒரு ஆளை வேறு நிற்கவைத்துள்ளான். இதெல்லாம் அவனின் குரூர காமத்தையே வெளிப்படுத்துகிறது. இமாம் மற்றும் அப்பெண் உள்ளே இருப்பதை எல்லோரும் பார்க்கின்றனர், கணவன் விசயம் என்ன என்று கேட்கிறான், மனைவி சொல்கிறாள், கணவன் “நீயெல்லாம் ஒரு முஸ்லிமா?” என்று கொதித்து அடிக்க ஆரம்பிக்கிறான். இவையெல்லாம் அந்த விடியோக்களில் தெரிகிறது[5]. இப்பொழுதும் கையும் களவுமாக பிடிபட்டும், அதிகாரத் தோரணையில் வாதிடுகிறான், மறுக்கிறான், திரும்பத் தாக்க முனைந்துள்ளான்[6]. போதாகுறைக்கு ஐந்தாறு பேர் வீடியோவும் எடுத்துள்ளனர்[7]. எல்லோர் முன்னிலையில், இத்தனையும் நிகழ்ந்தேறியுள்ளன[8]. பெண்களுக்கு எல்லாம் உரிமைகள் உள்ளன, தர்காவுக்குள் பென்கள் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று இன்னொரு புறம் போராட்டம் நடைபெறுகிறது. நீதிமன்றங்கள் தலையிடுகின்றன. ஆனால் அதே நேரத்தில், தர்காக்களில் நடக்கும் இத்தகைய கற்பழிப்புகளைப் பற்றி மூச்சு விடாமல் இருப்படு வேடிக்கையாக இருக்கிறது.
கற்பழிக்கப்பட்ட பெண், கணவன், படமெடுத்த மற்றவர் மீது பொய் புகார் கொடுத்த இமாம்: மௌலானா அன்வருல் ஹக் அப்பகுதியில் அதிகாரம் மிக்க ஆள் என்பதனால், அவர்களைக் கூப்பிட்டு மிரட்டினான். மேலும், இமாம் வீடியோ உட்பட அப்படங்களை கொடுக்குமாறு அழுத்தம் கொடுத்து மிரட்டியுள்ளான். ஆனால், எடுத்தவர்கள் மறுத்தனர். இதனால், ஹக் அவர்கள் மீதே போலீஸிடம் புகார் கொடுத்து, எப்.ஐ.ஆர் போட வைத்துள்ளான்[9]. அந்த கணவன் மற்றும் நான்கு நபர்கள் மீது, தன் மனைவியுடன் அவர்கள் தவறாக நடந்து கொண்டதாகவும், ரூ.50,000/- மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாகவும் புகார் கொடுத்தான்[10]. இதற்குள் அச்சம்பவத்தைப் பற்றிய வீடியோ இணைதளங்களில் பரவ ஆரம்பித்தது. இதனால், போலீஸார் திகைத்தனர். ஏற்கெனவே கற்பழிப்புகள் அதிகமாகி, உபியில் பெருத்த சர்ச்சை கிளம்பியுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிடுப்பட்டுள்ளது. இமாம் என்றதால், தயங்கினாலும், விடீயோ ஆதாரங்கள் வெளிவந்து விட்டதால் நடவடிக்கை எடுக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது.
© வேதபிரகாஷ்
31-08-2016

[1] Indian Express, Bijnor Jama Masjid imam booked for rape, Written by Manish Sahu | Lucknow | Published:August 27, 2016 12:56 am
[2] IndiaTVnews, Bijnor Jama Masjid’s head Imam booked for rape, India TV News Desk, Bijnor [Published on:27 Aug 2016, 12:03:56].
[3] Daily.Bhaskar.com, Bijnor Jama Masjid Head Imam Rapes Woman on the Pretext of ‘Rescuing Her from Evil Spirits’!, Poornima Bajwa Sharma | Aug 27, 2016, 16:25PM IST
[4] timesofahmad., India: Bijnor Jami’a Masjid imam booked for rape, Times of Ahmad | News Watch | UK deskSource/Credit: IB Times, By Asmita Sarkar | August 27, 2016.
http://www.uttarpradesh.org/uttarpradesh/bijnor-rape-police-caught-maulana-red-handed-3814/
[5] http://www.uttarpradesh.org/uttarpradesh/bijnor-rape-police-caught-maulana-red-handed-3814/
[6] http://timesofahmad.blogspot.in/2016/08/india-bijnor-jamia-masjid-imam-booked.html
[7] Z-news, What a pervert! Bijnor imam caught on camera during rape – Watch shocking video, Last Updated: Saturday, August 27, 2016 – 19:56.
[8] http://zeenews.india.com/news/uttar-pradesh/what-a-pervert-bijnor-imam-caught-on-camera-during-rape-watch-shocking-video_1923153.html
[9] http://indianexpress.com/article/cities/lucknow/bijnor-jama-masjid-imam-booked-for-rape-2998311/
[10] http://www.indiatvnews.com/news/india-bijnor-jama-masjid-s-head-imam-booked-for-rape-345516
பிரிவுகள்: அகிலேஷ் யாதவ், அடி, அடி உதை, அன்வருல் ஹக், அம்மணம், ஆஸம் கான், இமாம், உடலின்பம், உடலுறவு, உடல், கற்பழிப்பு, கற்பழிப்பு ஜிஹாத், கற்பு, காமம், சூனியம், ஜமா மஸ்ஜித், தர்கா, பிசாசு, பிஜ்நோர், பிஜ்னோர், பில்லி, பேயோட்டுதல், பேய், Uncategorized
Tags: அகிலேஷ் யாதவ், அன்வருல் ஹக், அழகிய இளம் பெண்கள், ஆஸம் கான், இமாம், இஸ்லாம், சிறுபான்மையினர், சூனியம், ஜமா மஸ்ஜித், ஜிஹாத், தர்கா, பிஜ்நோர், பிஜ்னோர், பிராசு, பில்லி, பேய், மௌலானா, லவ் ஜிஹாத்
Comments: Be the first to comment
அண்மைய பின்னூட்டங்கள்