Posted tagged ‘ஜெயில்’

தங்களது மகன்களது உயிர்களைப் பற்றிக் கவலைப்படும் தாய்மார்கள், மற்ற உயிர்களைப் பற்றியும் கவலைப்பட்டிருக்க வேண்டும் – மகன்களை ஜிஹாதிகளாக வளர்த்திருக்கக் கூடாது, தடுத்திருக்க வேண்டும், அப்பொழுதே மாற்றியிருக்கவேண்டும்!

செப்ரெம்பர் 28, 2015

தங்களது மகன்களது உயிர்களைப் பற்றிக் கவலைப்படும் தாய்மார்கள், மற்ற உயிர்களைப் பற்றியும் கவலைப்பட்டிருக்க வேண்டும் – மகன்களை ஜிஹாதிகளாக வளர்த்திருக்கக் கூடாது, தடுத்திருக்க வேண்டும், அப்பொழுதே மாற்றியிருக்கவேண்டும்!

 

Panna Ismail, Bilal Malik, Police Fakruddhin

Panna Ismail, Bilal Malik, Police Fakruddhin – இவர்கள் ஏன் மாறவில்லை?

ஊடகங்களில் இந்நால்வர்களின் புராணங்கள் அதிகமாகவே உள்ளன.தொகுத்து சுருக்கமாகக் கொடுக்கப்படுகிறது.

 

போலீஸ் பக்ருதீன், - அல்-உம்மா,

போலீஸ் பக்ருதீன், – அல்-உம்மா,

  1. போலீஸ் பக்ருதீன் [Fakruddin alias ‘Police’ Fakruddin] –மதுரை நெல்பேட்டையை சேர்ந்தவன் பக்ருதீன். இவனது தந்தை சிக்கந்தர் அலி போலீஸ் ஏட்டாக பணியாற்றினார். இதனால் போலீஸ்காரர் மகன் பக்ருதீன் என அழைக்கப்பட்ட பக்ருதீனுக்கு நாளடைவில் ‘போலீஸ்‘ பக்ருதீன் ஆனான். சகோதரர் தர்வீஸ் மைதீன் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அத்வானியை குண்டுவைத்து கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டான் பக்ருதீன்.  அல் உம்மா இயக்கத்தின் முக்கிய நிர்வாகி இமாம் அலிக்கு நெருக்கமானவன் பக்ருதீன். 1995ல் விளக்குத்தூண் ஸ்டேஷனில் அடிதடியில் ஈடுபட்டதாகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டில் திடீர்நகரில் கொலை முயற்சி வழக்கு, 1996ல் அனுப்பானடியில் அழகர் என்பரை கொலை செய்ததாகவும், மீனாட்சி கோயிலில் வெடிகுண்டு வைத்ததாகவும், மதிச்சியத்தில் கொலை வழக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவன் ஜாலியாக சுற்றிவந்துள்ளான், தொடர்ந்து குரூரக் குற்றங்களை செய்து வந்துள்ளான். டாக்டர் வி. அரவிந்த ரெட்டி கொலை [அக்டோபர் 23, 2012]; எஸ். வெள்ளையப்பன் [ஜூலை 1 2013]; ஆடிட்டர் ரமேஷ் [ஜூலை 19, 2013]; தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்[1].
பன்னா இஸ்மாயில் - அல்-உம்மா, கோவை குண்டு வழக்கு

பன்னா இஸ்மாயில் – அல்-உம்மா, கோவை குண்டு வழக்கு

  1. பன்னா இஸ்மாயில் [Mohammed Ismail alias Panna Ismail], – இவரது வீடு மேலப்பாளையம் ஆமீம்புரத்தில் உள்ளது.  கோவை குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பன்னா இஸ்மாயில் மீது உள்ளது. தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்திலும் இவர் செயல்பட்டு வந்துள்ளார். டாக்டர் வி. அரவிந்த ரெட்டி கொலை  [அக்டோபர் 23, 2012]; எஸ். வெள்ளையப்பன் [ஜூலை 1 2013]; ஆடிட்டர் ரமேஷ் [ஜூலை 19, 2013]; தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்.
பிலால் மாலிக், - அல்-உம்மா,

பிலால் மாலிக், – அல்-உம்மா,

  1. பிலால் மாலிக் [Bilal Malik] – டாக்டர் வி. அரவிந்த ரெட்டி கொலை [அக்டோபர் 23, 2012].; எஸ். வெள்ளையப்பன் [ஜூலை 1 2013]; ஆடிட்டர் ரமேஷ் [ஜூலை 19, 2013]; தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்.
அபுபக்கர் சித்திக் - கொலைகள் பல, சென்ட்ரல் குண்டு வெடிப்பு

அபுபக்கர் சித்திக் – கொலைகள் பல, சென்ட்ரல் குண்டு வெடிப்பு

  1. அபுபக்கர் சித்திக் – அபுபக்கர் சித்திக் என்ற காக்கா (46). நாகூரைச் சேர்ந்தவன். டாக்டர். வி. அரவிந்த ரெட்டி கொலை [அக்டோபர் 23, 2012] கடந்த 1995–ம் ஆண்டு நாகூரில் இந்து முன்னணி பிரமுகர் தங்கமுத்து கிருஷ்ணனை கொலை செய்வதற்காக இவன் புத்தக பார்சலில் குண்டு வைத்து அனுப்பினான். இதனை வாங்கி பிரித்து பார்த்த அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல, மயிலாடு துறையில் இந்து அமைப்பை சேர்ந்த ஜெகவீர பாண்டியன் என்பவரை கொலை செய்வதற்கும், அபுபக்கர் சித்திக் புத்தக குண்டுகளை அனுப்பினான். ஆனால், தபால் நிலையத்தில் வைத்தே கண்டுபிடித்து புத்தக குண்டு செயல் இழக்க வைக்கப் பட்டது. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வீசிய வழக்கும் அபுபக்கர் சித்திக் மீது உள்ளது. இப்படி கடந்த 18 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாகவே இருந்து வரும் சித்திக், பா.ஜக. மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் ஆகியோர் கொலை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான்[2]. சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாய் மற்றும் மலேசியாவில் அபுபக்கர் சித்திக் தலைமறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது[3]. தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் ஆவர்.
அபுபக்கர் சித்திக் - கொலைகள் பல - சென்ட்ரல் குண்டுவெடிப்பு

அபுபக்கர் சித்திக் – கொலைகள் பல – சென்ட்ரல் குண்டுவெடிப்பு

ஜிஹாதிகள் உருவாக்கப்படிவது எவ்வாறு?: இந்நால்வர்களைத் தவிர மற்ற குற்றாவாளிகள், தீவிரவாதிகள் முதலியோரைப் பற்றி பார்க்கும் போது, அவர்கள் எப்படி மனிதத்தன்மை கொஞ்சமும் இல்லாமல், மனித உயிர்களைப் பறிக்கும் அரக்கர்களை விட, மிகக்கொடியக் குரூர ஜிஹாதிகளாக மாறியுள்ளனர் என்று தெரிகிறது. இவர்கள் இவ்வாறு மாறுவதற்கு, மற்ற ஜிஹாதிகள் மட்டும் காரணமாக இருக்க முடியாது. குழந்தையாகப் பிறந்து, வளரும் போது பெற்றோர்களிடம் தான் அக்குழந்தைகள் முதலில் பாடங்களைக் கற்றுக் கொள்கிறார்கள், அப்பொழுதே அடிப்படைவாதம் கற்பிக்கப் பட்டால், அக்குழந்தைகள் அத்தகைய மனப்பாங்குடன் தான் வளரும். பிறகு பள்ளிக்குச் செல்ல வேண்டும்[4]. அங்கும் அத்தகைய மதபோதனைகள், மக்களை “மோமின்-காபிர்” என்று பிரித்துப் பார்ப்பது, “தாருல்-இஸ்லாம் மற்றும் தாருல்-ஹராப்” என்ற போரிடும் இடங்களை உருவாக்குவது, “ஜிஹாத் என்ற புனிதப்போரின்” தத்துவத்தை மனங்களில் ஏற்றி, உலகத்தில் உள்ள காபிர்களை எப்படியாவது ஒழ்த்துக் கட்டுவது என்றெல்லாம் கற்றுக் கொடுத்தால், அவர்கள் அப்படித்தான் வளர்வார்கள், பெரியவர்கள் ஆவார்கள். கல்லூரிகளில் படிக்கும் போது கூட அத்தகைய எண்ணங்களை வைத்துக் கொண்டிருந்தால், தமது படித்த-திறமைகளை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என்ற யோசனை தான் வரும். பட்கல் சகோதர்களின் செயல்களே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். படித்தப் படிப்பு, எப்படி குண்டுகளைத் தயாரிக்கலாம் என்றுதான் புத்தி போயிற்று. பெற்றோர், மற்றோர் இவர்களை ஜிஹாதிகள், ஷஹீதுகள் என்றெல்லாம் பாராட்டிப் பேசி, வாழ்த்திக் கொண்டிருந்தால், அவர்கள் மனம் மாறமாட்டார்கள். இஸ்லாமிய இறையியலில் அத்தகைய பேச்சுக்கே இடமில்லை.

தேடப்பட்டு வரும் தீவிரவாதிகள் - கொலை-குண்டுவெடிப்பு முதலியன

தேடப்பட்டு வரும் தீவிரவாதிகள் – கொலை-குண்டுவெடிப்பு முதலியன

  1. காஜா மொய்தீன் [Khaja Moideen],  ஜூன்.2014ல் அம்பத்தூரில் கே.பி.எஸ். சுரேஷ் குமார் கொலைக்காக கைது செய்யப்பட்டான். இப்பொழுதைய ஜெயில் கலவரத்திற்கு வித்திட்டவன் இவன் தான் என்று கருதப்படுகிறது[5].
  1. முன்னா [Munna alias Mohammed Rafiq] – கிச்சன் புகாரிக்கு துப்பாக்கி வாங்கிக் கொடுத்தான்.
  1. கர்நாடகா மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த அப்துல்லாவை [Abdulla alias Abdulla Muthalip],
  1. அஷ்ரப் அலி (34). கோவையை சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொலை வழக்கில் தேடப்படுபவர்.
  1. அயூப் என்ற அஷ்ரப் அலி (33). இஸ்லாம் டிபென்ஸ் ஃபோர்ஸ் (ஐடிஎப்) என்ற அமைப்பை சேர்ந்தவர். பாண்டியன் எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு குண்டு வைக்க திட்டம் தீட்டியது தொடர்பாக வழக்கு. இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது[6].
  1. இப்ராகிம் (31). என்டிஎப் இயக்கத்தில் இருந்த இவர் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  1. முகமது அலி என்ற யூனுஸ் என்ற மன்சூர் (32). மேலபாளையத்தை சேர்ந்தவர். சென்னை விக்டோரியா அரங்கில் குண்டு வைத்தது தொடர்பாக தேடப்பட்டு வருபவர்.
  1. முஜிபுர் ரகுமான் என்ற முஜி (38). கோவையை சேர்ந்தவர். 1998ம் ஆண்டு நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்டார். இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
  1. முஸ்டாக் அகமது (53). வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர். அல்-உம்மா அமைப்போடு தொடர்புடையவர். இந்து அமைப்பை சேர்ந்தவர் கொலை வழக்கில் தொடர்புடையவர். தீவிரவாதிகளுக்காக டெட்டனேட்டர் வாங்கி வந்தவர். இவரை பிடித்து கொடுத்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
  1. ஜாகுபர் சாதிக் என்ற சாதிக் என்ற டெய்லர் ராஜா (28). கோவையை சேர்ந்தவர். அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர். கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார். இவரை பற்றி தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது[7].
  1. நூகு என்.பி என்ற ரஷீத் (21). கேரளா கல்குட்டையை சேர்ந்தவர். கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்.
  1. குஞ்சு முகமது என்ற கனி (42). கேரளா மலப்புரத்தை சேர்ந்தவர். கோவை தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்.

© வேதபிரகாஷ்

28-09-2015

[1] http://www.maalaimalar.com/2013/07/25113951/hindu-munnani-leaders-murder-p.html

[2] http://www.maalaimalar.com/2013/10/06141843/18-year-wanted-militants-abupa.html

[3] http://www.puthiyathalaimurai.tv/chennai-bomb-blast-incident-enquiry-with-criminals-141123.html

[4]  இங்கும் மதரஸாக்களில் படித்தால், அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று விளக்கவேண்டிய அவசியல் இல்லை. இன்றைக்கு தலிபான்கள், ஐசிஸ், ஐ.எஸ் போன்றவையே உலகத்திற்கு வெட்டவெளிச்சமாக்கிக் கொண்டிருக்கின்றன.

[5]  Prison officials said Khaja Moideen, arrested in connection with Hindu Munnani leader K P S Suresh Kumar murder in Ambattur in June 2014, was the brain behind the clash.

http://www.nyoooz.com/chennai/210598/back-door-diplomacy-by-2-unarmed-officers-helped-avert-crisis-at-puzhal

[6] http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=16943

[7] http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=16943

தாய்மார்கள் தங்கள் மகன்களை என்கவுன்டரில் கொலை செய்ய்யப் படுவார்களோ என்று அச்சப்படுகின்றனரே – அப்படியென்றால் அவர்களால் கொலை செய்யப் பட்டவர்களின் தாய்மார்கள், மனைவிமார்கள், சகோதரிகள் என்ன பாட்டு பாட்டிருப்பர், இன்றும் தவித்துக் கொண்டிருப்பர்?

செப்ரெம்பர் 28, 2015

தாய்மார்கள் தங்கள் மகன்களை என்கவுன்டரில் கொலை செய்ய்யப் படுவார்களோ என்று அச்சப்படுகின்றனரே – அப்படியென்றால் அவர்களால் கொலை செய்யப் பட்டவர்களின் தாய்மார்கள், மனைவிமார்கள், சகோதரிகள் என்ன பாட்டு பாட்டிருப்பர், இன்றும் தவித்துக் கொண்டிருப்பர்?

puzhal_ஜெயிலர், வார்டன், போலீஸ் தாக்கப்படல்

puzhal_ஜெயிலர், வார்டன், போலீஸ் தாக்கப்படல்

புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம்[1]: பிலால் மாலிக் உள்ளிட்டவர்களை என்கவுன்டர் செய்யவே, புழல் சிறையில் போலீசார் மோதல் நாடகம் நடத்தி இருக்கலாம் என பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகம்மதுசந்தேகம் எழுப்பியுள்ளார்[2]. “போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பண்ணா இஸ்மாயில் உள்ளிட்டோர் இவர்கள் உயர் பாதுகாப்பு சிறையில் தனியாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 25-09-2015 அன்று ஜெயிலர் இளவரசனை இவர்கள் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற சென்ற வார்டன்கள் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகியோர் அவர்களை திருப்பி தாக்கியதாகவும், பதிலுக்கு வார்டன்களை தீவிரவாதிகள் தாக்கியதாகவும் சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி, இரவு சிறைக்கு சென்று கைதிகளிடம் சமாதானம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டி.வியில் காயம்பட்ட சிறை அதிகாரிகளைத்தான் காட்டுகிறார்களே தவிர, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், இஸ்மாயில் இவர்களை காட்டவில்லை”.  இவையெல்லாம் யாரோ சொல்லிக் கொடுத்து பேசப்பட்டவை என்று நன்றகவே தெரிகிறது[3].

போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், ஒஇலால் மாலிக், அபுபக்கர் சித்திக் - அல்-உம்மா,

போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், ஒஇலால் மாலிக், அபுபக்கர் சித்திக் – அல்-உம்மா,

ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை தாக்கும் அளவுக்கு நமது காவல்துறை பலவீனமானதா?: இப்படி கேள்வி கேட்டு தொடர்கிறார் கஜினி முகமது, “சிறைக்குள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் எப்படி ஒன்றாக சேர முடியும். அப்படியே சேர்ந்தாலும் ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை இவர்களால் தாக்க முடியுமா? அவ்வளவு பலவீனமானதா நமது காவல்துறை?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[4]. புழல் சிறை அதிகாரி இளவரசன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள கஜினி முகம்மது[5], இந்த வழக்கை மெதுவாக நடத்தி வருவதாகவும், இருக்கிற கொலை வழக்கு அனைத்தையும் இவர்கள் மீது போட்டுள்ளதாகவும் போலீசார் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்[6]. இப்போது சிறையில் நடந்திருப்பதாக சொல்லப்படும் தாக்குதலில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், இஸ்மாயில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என கஜினி சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், இவர்களை சிறைக்கு மாற்றுவதாக அறிவித்திருப்பது வழக்கை நடத்த முடியாமல் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டிருப்பதுபோல் தெரிகிறது. தமிழக அரசு, கைதிகளை ஒரே மாதிரியாக அணுகி அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்[7]. மாதம் ஒருமுறை இவர் சென்று வருவதினால், இவருக்கு மேலும் விசயங்கள் தெரியும் போலிருக்கிறது. பன்னா இஸ்மாயில் நேற்று மதியம், மதுரை சிறைக்கு கொண்டு வரப்பட்டார். அவர் ரிமாண்ட் கைதிகள் உள்ள 2 வது ‘செல்’லில் அடைக்கப்பட்டார். அவரை சிறை காவலர்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது[8].

பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் - அல்-உம்மா, கோவை குண்டு வழக்கு

பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் – அல்-உம்மா, கோவை குண்டு வழக்கு

பக்ருதீனின் தாய் சையது மீரான், பிலால் மாலிக்கின் தாய் மும்தாஜ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி: சிறை நிலவரம் குறித்து மதுரை நெல்பேட்டையை சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதற்கிடையில் பக்ருதீனின் தாய் சையது மீரான், பிலால் மாலிக்கின் தாய் மும்தாஜ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது[9]: “சிறையில் போலீசார் தாக்கப்பட்டது குறித்து டி.வி.யில் பார்த்து தெரிந்து கொண்டேன். பாதுகாப்பு மிகுந்த சிறையில் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறைக்காவலர்களை எப்படி தாக்க முடியும். காயம்பட்ட அவர்களை மட்டும் காண்பிக்கிறார்கள். கடந்த முறை நாங்கள் அவர்களை சந்திக்க முயன்ற போது, ஜெயிலர் எங்களை மோசமாக நடத்துகிறார். நோன்பு கஞ்சியை கூட சரியாக தருவதில்லை. மேலும் எங்களிடம் வேண்டுமென்றே வம்பு செய்கிறார் என்று கூறினார்கள். நாங்கள் இது குறித்து உயர் அதிகாரியிடம் தெரிவித்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மேலும் அங்கு கலவரம் ஏற்படுத்தி, அவர்களை என்கவுண்ட்டர் செய்ய தான் திட்டம் தீட்டி உள்ளனர். முதியவர்களாகிய நாங்கள் வெகு தூரத்திற்கு சென்று அவர்களை சந்திக்க முடியவில்லை. எனவே அரசு அவர்களை நாங்கள் எளிதில் சந்திக்கும் வண்ணம் மதுரை அல்லது திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டும். நாங்கள் அடிக்கடி சந்திப்பதால் அவர்கள் திருந்த அதிக வாய்ப்பு உள்ளது. அதை விட்டு, விட்டு அவர்களை தனித்தனியாக பிரித்து என்கவுண்ட்டர் செய்ய சதி நடப்பதாக எங்களுக்கு தகவல் வருகிறது. திருந்தி வாழ நினைக்கும் அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட கூடாது. அவர்களை அருகில் உள்ள சிறைக்கு மாற்ற வேண்டும்”, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்[10]. பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், ஜாகிர் உசேனை அடித்து கலாட்டா செய்து, கலவரம் உண்டாக்கி ஜெயிலர், வார்டன் மற்றும் போலீஸாரைத் தாக்கியதால், அவர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.

 Auditor Ramesh murder - moaned by wife etc

திருந்தி வாழ நினைக்கும் அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட கூடாது”: குண்டுவெடிப்பு, கொலைகள், அப்பாவி மக்களின் உயிர்பலி, குடும்பங்கள் அதோகதி, தந்தையர்களை இழந்த மகன்கள் – மகள்கள், கணவர்களை இழந்த மனைவிகள், மகன்களை இழந்த தாயார்கள், சகோதர்களை இழந்த சகோதரிகள், இவர்களைப் பற்றி இந்த தாய்மார்கள் யோசித்துப் பார்த்திருப்பார்களா? பிறகு மகன்களை தீவிரவாத செயல்களில் ஈடுபட எப்படி சம்மதம் கொடுத்தனர், ஒப்புக் கொண்டனர்? அவர்களது நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு, அவஎகளை அப்பொழுதே திருத்தி இருக்கலாமே? ஏன் அவ்வாறு செய்யவில்லை? “திருந்தி வாழ நினைக்கும் அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்பட கூடாது”, என்று வேறு குறிப்பிட்டிருக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாமானது? இவர்கள் திருந்தியிருந்தால், புழல் ஜெயிலில் இத்தகைய கலவரம், தாக்குதல், முதலியன நடந்திருக்காதே? சித்தூரில் குடும்பம் முழுவதும் சேர்ந்து கொண்டு தானே இதே தீவிரவாதிகளுக்கு உதவி செய்தனர்? குழந்தைகளை முன் வைத்து, தப்பிச் செல்லப்பார்த்தனரே? அவர்களுக்கு உண்மைகள் எல்லாமே தெரிந்து தானே இருந்திருக்க வேண்டும். இல்லாமலா அவர்கள் போலீஸாரையும் எதிர்த்து வேலை செய்திருக்கிறார்கள்?

© வேதபிரகாஷ்

28-09-2015

[1] தினமலர், பிலால் மாலிக், பக்ருதீன் உயிருக்கு ஆபத்து போலீஸ் மீது சகோதரர் குற்றச்சாட்டு, செப்டம்பர்.26, 2015: 22.29.

[2] ஒன்.இந்தியா, புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம், Posted by: Jayachitra, Published: Sunday, September 27, 2015, 12:21 [IST].

[3] முன்பு பெங்களூரு குண்டுவெடிப்பில் கைதானவர்களை, எங்களுக்கு முன்பாக கொண்டு வந்து காட்ட வேண்டும் என்று கைதானவர்களின் மனைவிகள் வழக்கு போட்டார்கள், பேட்டி கொடுத்தார்கள், ஆனால், குற்றவாளிகள் தாம் என்றவுடன் அமைதியாகி விட்டன. விளம்பரம் கொடுத்த ஊடகங்களும் அடங்கிவிட்டன.

[4]  விகடன்.காம், புழல் சிறை மோதல் என்கவுன்டருக்கான நாடகமா? சந்தேகம் எழுப்பும் பிலால் மாலிக் சகோதரர், Posted Date : 16:05 (26/09/2015)

Last updated : 16:05 (26/09/2015).

[5] புழல் சிறைக்கு இவர்கள் மாற்றப்பட்டதில் இருந்து சிறை அதிகாரி இளவரசன் ரொம்பவும் மோசமாக நடந்து கொள்கிறார். நான் மாதம் ஒரு தடவை பார்க்க செல்வேன். என்னையே கடுமையாக திட்டுவார். http://www.vikatan.com/news/article.php?aid=52934

[6] http://tamil.oneindia.com/news/tamilnadu/bilal-malik-s-brother-questions-puzhal-prison-clash-incident-236563.html

[7] http://www.vikatan.com/news/article.php?aid=52934

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1350856&Print=1

[9] மாலைமலர், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக்கை என்கவுண்டர் செய்ய சதி: உறவினர்கள் பேட்டி, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 27, 6:23 PM IST.

[10] http://www.maalaimalar.com/2015/09/27182331/Police-Fakhruddin-Bilal-Malik.html

அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும் முன்பே நடந்த கதை தான்!

செப்ரெம்பர் 27, 2015

அல்உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில்ஹாலிவுட் ஸ்டைலில்போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்என்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும் முன்பே நடந்த கதை தான்!

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம்: பிலால் மாலிக் உள்ளிட்டவர்களை என்கவுன்டர் செய்யவே, புழல் சிறையில் போலீசார் மோதல் நாடகம் நடத்தி இருக்கலாம் என பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகம்மதுசந்தேகம் எழுப்பியுள்ளார்[1]. “போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பண்ணா இஸ்மாயில் உள்ளிட்டோர் இவர்கள் உயர் பாதுகாப்பு சிறையில் தனியாக அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 25-09-2015 அன்று ஜெயிலர் இளவரசனை இவர்கள் தாக்கியதாகவும், அவரை காப்பாற்ற சென்ற வார்டன்கள் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகியோர் அவர்களை திருப்பி தாக்கியதாகவும், பதிலுக்கு வார்டன்களை தீவிரவாதிகள் தாக்கியதாகவும் சிறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த சிறை அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைத்துறை ஏடிஜிபி திரிபாதி, இரவு சிறைக்கு சென்று கைதிகளிடம் சமாதானம் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டி.வியில் காயம்பட்ட சிறை அதிகாரிகளைத்தான் காட்டுகிறார்களே தவிர, போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், இஸ்மாயில் இவர்களை காட்டவில்லை”.

Five arrested in Melappalayam - Musims protest, argue

Five arrested in Melappalayam – Musims protest, argue

ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை தாக்கும் அளவுக்கு நமது காவல்துறை பலவீனமானதா?: இப்படி கேள்வி கேட்டு தொடர்கிறார் கஜினி முகமது, “சிறைக்குள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இவர்கள் எப்படி ஒன்றாக சேர முடியும். அப்படியே சேர்ந்தாலும் ஆயுதங்களுடன் இருக்கும் சிறை அதிகாரிகளை இவர்களால் தாக்க முடியுமா? அவ்வளவு பலவீனமானதா நமது காவல்துறை?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்[2]. புழல் சிறை அதிகாரி இளவரசன் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக குற்றம்சாட்டியுள்ள கஜினி முகம்மது[3], இந்த வழக்கை மெதுவாக நடத்தி வருவதாகவும், இருக்கிற கொலை வழக்கு அனைத்தையும் இவர்கள் மீது போட்டுள்ளதாகவும் போலீசார் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்[4]. இப்போது சிறையில் நடந்திருப்பதாக சொல்லப்படும் தாக்குதலில் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், இஸ்மாயில் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என கஜினி சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், இவர்களை சிறைக்கு மாற்றுவதாக அறிவித்திருப்பது வழக்கை நடத்த முடியாமல் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டிருப்பதுபோல் தெரிகிறது. தமிழக அரசு, கைதிகளை ஒரே மாதிரியாக அணுகி அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும் கஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்[5]. மாதம் ஒருமுறை இவர் சென்று வருவதினால், இவருக்கு மேலும் விசயங்கள் தெரியும் போலிருக்கிறது.

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot.fullஎன்கவுண்டர் அச்சமும், ஹேபஸ் கார்பஸ் பெட்டிஷனும்: பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் எ‌ல். கே. அத்வானி கொலை முயற்சி வழக்கில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பக்ருதீனை  நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்த காவ‌ல்துறை‌க்கு உத்தரவிட‌க் கோ‌ரி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தாக்கல் செய்யப்பட்டது[6], ஆனால் தள்ளுபடி செய்யப்பட்டது. தீவிரவாதிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு, இத்தகைய பீதியைக் கிளப்பி விடுவது வழக்கமான வேலையாக இருக்கிறது. ஆனால், குண்டு வைத்தது உண்மை, அத்தகைய தீவிரவாத எண்ணம் உள்ளது உண்மை, அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற திட்டம் தீட்டியது உண்மை; கொலைகள் நடந்திருப்பது உண்மை; குண்டுகள் வெடித்திருப்பது உண்மை; அப்பாவி மக்கள் இறந்திருப்பது உண்மை; எல்லாவற்றையும் மறைத்து ஒன்றுமே இல்லை, நடக்கவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொண்டால், நடந்தது நடக்கவில்லை என்றாகுமா?[7]. நீதிமன்றத்திலேயே, இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் கொடுக்கப்படுகிறது.

Chota-rajan-with-Dawoodநீதிமன்றத்தில் சட்டமீறல்கள்: அத்வானியைக் கொலை செய்ய திட்டமிட்ட ஜிஹாதிகளுள் ஒருவன் ஜாஹிர் ஹுஸைன் என்ற குற்றவாளி நீதிமன்றத்தில் செய்த கலாட்டாவால் பரப்பரப்பு ஏற்பட்டது. மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டுவரப்பட்ட அவன் பிளேடினால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றான். உடனே, போலீஸார் தடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறிய காயத்துடன் அவன் தப்பினான். கடந்த ஏப்ரல் மாதம் கூட இதே மாதிரி தற்கொலை முயற்சியில் அவன் ஈடுபட்டான்[8]. அப்பொழுது தன்னை விடுவிக்குமாறு முறையீடு செய்திருந்தான். ஆனால் நீதிபதி அவனது மனுவை தள்ளுபடி செய்தார்[9]. அதாவது, இவ்வாறு கலாட்டா செய்வதே அவர்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது என்பதற்காக எடுத்துக் காட்டப்படுகிறது. நீதிமன்றத்தையே மதிக்காதவர்கள் சிறைச்சாலையை, சிறை போலீஸாரை எப்படி மதிப்பர்?

gulshan-kumar-killer-Abdul Rauf Merchant

gulshan-kumar-killer-Abdul Rauf Merchant

முகமது அனிபா டிஎஸ்பியைத் தாக்குதல் (08-07-2013): திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை 08-07-2013 அன்று மடக்கி பிடித்தனர்[10]. அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த முகமது அனீபா, டி.எஸ்.பி. கார்த்திகேயன் மீது வீசினார். இதில் டி.எஸ்.பி. கார்த்திகேயன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்[11]. இதனால் அந்த இடத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவனை மடக்கி பிடித்த போலீசார், அவனிடம் வெடிமருந்து, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வத்தலகுண்டு காவல்நிலையத்தில், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், வெடிமருந்து மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தாகவும், இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தது உட்பட 5 வழக்குகள் முகமது அனீபா மீது டி.எஸ்.பி. கார்த்திகேயன் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது[12]. அன்று டி.எஸ்.பியை தாக்கியவர்களின் மனப்பாங்குதான், புழல் சிறையில் போலீஸாரைத் தாக்கியவர்களின் மனப்பாங்குடன் இயைந்து போகிறது. குற்றவாளிகள் மேன்மேலும் குற்றங்களை செய்து கொண்டே இருந்தால், ஒன்றும் செய்ய முடியாது என்ற போக்கும் அவர்களிடையே உள்ளது.

© வேதபிரகாஷ்

27-09-2015

[1] ஒன்.இந்தியா, புழல் சிறை மோதல் எதற்காக, என்கவுன்டருக்கான ஒத்திகையா…?- பிலால் மாலிக் சகோதரர் சந்தேகம், Posted by: Jayachitra, Published: Sunday, September 27, 2015, 12:21 [IST].

[2]  விகடன்.காம், புழல் சிறை மோதல் என்கவுன்டருக்கான நாடகமா? சந்தேகம் எழுப்பும் பிலால் மாலிக் சகோதரர், Posted Date : 16:05 (26/09/2015)

Last updated : 16:05 (26/09/2015).

[3] புழல் சிறைக்கு இவர்கள் மாற்றப்பட்டதில் இருந்து சிறை அதிகாரி இளவரசன் ரொம்பவும் மோசமாக நடந்து கொள்கிறார். நான் மாதம் ஒரு தடவை பார்க்க செல்வேன். என்னையே கடுமையாக திட்டுவார். http://www.vikatan.com/news/article.php?aid=52934

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/bilal-malik-s-brother-questions-puzhal-prison-clash-incident-236563.html

[5] http://www.vikatan.com/news/article.php?aid=52934

[6] Claiming himself to be a friend of Fakruddin, M Abdulla of Chennai alleged that he was arrested by CB-CID SIT on November 2 and was being kept in “illegal” custody in violation of Article 21 and 22 of the Constitution.

 http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=5580797

[7] https://islamindia.wordpress.com/2011/11/11/plan-to-kill-advani-arrest-haeabus-corpus-petition-legal-warangles/

[8]  http://zeenews.india.com/news/tamil-nadu/accused-in-advani-bomb-planting-case-causes-flutter-in-court_861146.html

[9]  http://www.business-standard.com/article/pti-stories/accused-in-advani-bomb-planting-case-causes-flutter-in-court-113070901058_1.html

[10]  http://www.dinamalar.com/news_detail.asp?id=753374

[11]  http://www.dnaindia.com/india/1858935/report-one-more-case-filed-for-trying-to-plant-bomb-during-lk-advani-s-yatra-in-tamil-nadu-in-2011

[12] http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=103304

அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம் – ஆனால் என்கவுன்டர் ஒத்திகை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது!

செப்ரெம்பர் 27, 2015

அல்உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில்ஹாலிவுட் ஸ்டைலில்போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்ஆனால் என்கவுன்டர் ஒத்திகை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது!

TN POLICE announcement

அல்உம்மா கும்பல் தாக்கியது[1]: என்று தலைப்பிட்டு தி இந்து செய்தி வெளியிட்டது. அதற்குள் சிறை காவலர்கள் விரைந்து வந்து கைதிகளை மடக்கிப் பிடித்து அறையில் அடைத்து பூட்டினர். பின்னர் படுகாயம் அடைந்த 4 பேரையும் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்[2]. அந்த கைதிகளை அறைக் குள் அடைத்த போது, அவர்கள் துணை ஜெயிலர் குமார், சிறை காப்பாளர் மாரி ஆகிய இருவரையும் தங்கள் வசம் பிடித்து வைத்துக் கொண்டனர்[3].  காவலர்கள் அவர்களை விடுவிக்கும்படி கூறிய போது அவர்கள் மறுத்துவிட்டனர்.   இது தொடர்பாக   அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். புழல் சிறைக்குள் கைதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சிறைத்துறை தலைவர் திரிபாதி புழல் சிறைக்கு விரைந்து வந்தார்[4]. அவர் அதிகாரிகளிடம்   நடந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தினார். மேலும் கைதிகள் பிடித்து வைத்துள்ள 2 காவலர்களை விடுவிக்க அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து இரவு அந்த காவலர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்[5].  பிறகு சிறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது[6].

Dinamalar-TN-Jihadis-arrest-Graphicsபுழல்  சிறையில் கலவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லை:  டி.ஐ.ஜி.  ராஜேந்திரன், வடக்கு மண்டல இணை கமிஷனர் தினகர், மாதவரம் துணை கமிஷனர் விமலா, புழல் உதவி கமிஷனர் மன்னர் மன்னன் ஆகியோர் புழல் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். புழல்  சிறையில் கலவரத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் இல்லாததால் தற்போது கூடுதலாக போலீசார் வரவழைக்கப் பட்டு நிறுத்தப்பட்டுள்ளனர். சிறைக்குள் கைதிகளை கண்காணிக்க  1 டி.ஐ.ஜி, 3 சூப்பிரண்டுகள், 2 ஜெயிலர்கள், 11 துணை ஜெயிலர்கள், 112 வார்டன், 81 துணை  வார்டன்கள் உள்ளனர்.இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் தற்போது நடவடிக்கை   எடுக்கப் பட்டுள்ளது. கைதிகள் தாக்குதலில் காயம் அடைந்தவர்களில் சிறை வார்டன் முத்துமணி, நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.   ஸ்டான்லி ஆஸ்பத்திரி ஐ.சி.யு. வார்டில் அவருக்கு   டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்[7]. கொலை முயற்சி, அரசு அதிகாரியை தாக்குதல் உட்பட 12 பிரிவுகளின் கீழ் 20 கைதிகள் மீது புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்[8].  ;போலீஸாரின் மனைவி, மக்கள், உறவினர் சிறைச்சாலை முன்பு போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டி ஆர்பாட்டம் செய்தனர்[9].

Mohammed Haneefa arrested - Advani murder plotஅல்உம்மா தீவிரவாதிகள் கலவரத்தில் இறங்கியது ஏன்?: ஹிந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன், பா.ஜ., மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோர் வேலூரிலும், ஆடிட்டர் ரமேஷ் சேலத்திலும், வெட்டி கொலை செய்யப்பட்டனர். கொலை வழக்குகளில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணைக்காக, இவர்கள் அனைவரும் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். 25-09-2015 அன்று, புழல் சிறையில் பாதுகாப்பு பணியில் இருந்த உளவுப்பிரிவு போலீஸ்காரர் முத்து மணி, சிறை வார்டன்கள் செல்வன், இளவரசன், மோகன் உள்பட, 5 பேரை கைதிகள் தாக்கி, பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதில், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் முக்கிய பங்கு வகித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் சிறையில் பதட்டம் ஏற்பட்டது.

Bomb plnters to kill Advaniஅல்உம்மா தீவிரவாதிகள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்[10]: குறிப்பிட்ட அல்-உம்மா தீவிரவாதிகள் சேர்ந்திருந்தால், மேலும் பிரச்சினை பெரிதாகும் என்பதனால், அவர்கள் வெவேறு சிறைகளுக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது. கலவரத்திற்கு காரணமான –

  1. போலீஸ் பக்ருதீன் [Fakruddin alias ‘Police’ Fakruddin], வேலூர் சிறைக்கும்,
  2. பன்னா இஸ்மாயில் [Mohammed Ismail alias Panna Ismail], மதுரை சிறைக்கும்,
  3. பிலால் மாலிக் [Bilal Malik], கடலூர் சிறைக்கும்,
  4. காஜா மொய்தீன் [Khaja Moideen], சேலம் சிறைக்கும்,
  5. முன்னா [Munna alias Mohammed Rafiq] கோவை சிறைக்கும்,
  6. கர்நாடகா மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த அப்துல்லாவை [Abdulla alias Abdulla Muthalip], திருச்சி சிறைக்கும் மாற்றி,

சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., திரிபாதி உத்தரவிட்டார்[11]. இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸ் பக்ருதீன் 26-09-2015 அன்று, காலை புழல் சிறையில் இருந்து, காலை, 11 மணிக்கு வேலூர் சிறைக்கு கொண்டு சென்று, தனி செல்லில் அடைத்தனர். அவருக்கு, 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. 26-09-2015 அன்று மதியம், 12 மணிக்கு, போலீஸ் பக்ருதீனுக்கு மதிய உணவவாக, அரிசி சாதம், கீரை பொரியல் கொண்டு சென்றனர். உணவு தட்டை தூக்கி எரிந்த போலீஸ் பக்ருதீன், தனக்கு சிக்கன் பிரியாணி வேண்டும் என, கலாட்டா செய்தார்[12]. அதாவது அவனுக்கு எந்த அளவுக்கு கொழுப்பு, ஆணவம் இருக்கிறது என்பதனை கவனிக்க வேண்டும். அரை மணி நேரம் கெஞ்சிக் கூத்தாடிய சிறை காவலர்கள், நாளை சிக்கன் பிரியாணி கொடுப்பதாக கூறி, சமாதானம் செய்தனர். பிறகு வேறு உணவை கொடுத்து, சாப்பிட வைத்தனர்[13]. ஏற்கெனவே போலீஸாரைத் தாக்கி, கலவரம் செய்ததலினால், சிறை மாற்றம் செய்யப்பட்டுள்ள கைதிக்கு, ஏன் இவர்கள் இவ்வாறு தாஜா செய்ய வேண்டும்? சமீபத்தில் ஆம்பூர் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வைத்திருந்தபோது, போலீஸார் பிரியாணி விருந்து போட்டது ஞாபகம் இருக்கலாம். அப்படியென்றால், முஸ்லிம்கள் என்பதனால் அவர்களுக்கு இத்தகைய சீராட்டு கிடைக்கிறதா? இந்நிலையில் பிலால் மாலிக்கின் சகோதரர் கஜினி முகமது ஒரு குண்டைப் போட்டுள்ளார்.

© வேதபிரகாஷ்

27-09-2015

[1]  S. Vijayakumar, Al Umma cadre attack jail officials in Puzhal prison, The Hindu, September.26, 2015, Updated: September 26, 2015 13:59 IST.

[2]  தினகரன், புழல் சிறையில் கைதிகள் தாக்கியதில் சிறை காவலர்கள் 4 பேர் காயம், பதிவு செய்த நேரம்: 2015-09-25 21:08:54.

[3]  தினமலர், புழல் சிறை அதிகாரிகள் மீது தாக்குதல் கைதிகள், பயங்கரவாதிகள் ஆவேசம், செப்டம்பர்.26, 2015. 03.11.

[4] http://www.thehindu.com/news/cities/chennai/al-umma-cadre-attack-jail-officials-in-puzhal-prison/article7690955.ece

[5] http://www.dinamalar.com/news_detail.asp?id=1350503

[6] https://www.youtube.com/watch?v=rczOrMOMIBU

[7] http://www.dailythanthi.com/News/State/2015/09/26110857/6-prisoners-were-transferred-to-another-prison.vpf

[8]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-20-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article7694509.ece

[9] Policemen’s wives protest– Furious over the attack on the warders, the family members of prison staff staged a protest near Puzhal prison demanding that security for the personnel be stepped up. The police pacified them and they dispersed only after officers assured them that the necessary measures will be taken to ensure their safety. http://www.thehindu.com/news/cities/chennai/shortage-of-personnel-hits-security-at-puzhal-prison/article7693585.ece?ref=relatedNews

[10]  Viveka Narayanan, 6 Al-Umma cadre sent to different jails, The Hindu, September.27, 2015; Updated: September 27, 2015 08:06 IST

[11] http://www.thehindu.com/news/national/tamil-nadu/6-alumma-cadre-sent-to-different-jails/article7694506.ece?ref=relatedNews

[12]  தினமலர், சிக்கன் பிரியாணி கேட்டு போலீஸ் பக்ருதீன் கலாட்டா, செப்டம்பர்.27, 2015.08.33.

[13] http://www.dinamalar.com/news_detail.asp?id=1351396

அல்-உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில் “ஹாலிவுட் ஸ்டைலில்” போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்!

செப்ரெம்பர் 27, 2015

அல்உம்மா தீவிரவாதிகள் புழல் சிறையில்ஹாலிவுட் ஸ்டைலில்போலீஸார் மீது தாக்குதல், கலவரம், சிறைமாற்றம்!

Puzhal jail

Puzhal jail

புழல் சிறையில் பயங்கரமான குற்றவாளிகள் இருப்பது, போலீஸார் குறைவாக இருப்பது[1]: சென்னை புழல் சிறையில் தண்டனை கைதிகள் 230 பேரும், விசாரணை கைதிகள் 2003 பேரும், பெண் கைதிகள் 150 பேர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். 3 விதமான கைதிகளுக்கும் தனித்தனி ஜெயில்கள் விசாலமாக உள்ளது. போதை  பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் முக்கிய   பிரமுகர்களை தீர்த்து கட்டிய பயங்கரமான கைதிகளும் இங்கு அடைக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 2014ல் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கி இருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்ற போது போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது[2].  அப்போது என் கவுண்டரும் நடந்தது. இதில் பிடிபட்ட பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக் ஆகியோர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இதேபோல் சென்னை அம்பத்தூர் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார் கொலை வழங்கில் கைதான காஜா மொய்தீன், அப்துல் வகாப், ராஜா முகமது, தமீம் அன்சாரி, முன்னா என்ற முகமது ரபீக், மண்ணடி அப்துல்லா உள்பட 16 பேரும் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இத்தனை முக்கியமான சிறைக்கு பாதுகாப்பாக போலீஸார் இல்லை என்று எடுத்துக் காட்டப்படுகிறது.

Puzhal attacked -Puthiya thalaimurai - 25-09-2015

Puzhal attacked -Puthiya thalaimurai – 25-09-2015

கொலைக்குற்றவாளிகள், தீவிரவாதிகள் எப்படி வசதிகளை சிறைகளில் அனுபவிக்கின்றனர்?: திரைப்படங்களில் தாம், சிறைக்குற்றவாளிகள் எல்லா வசதிகளையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைப் போல காட்டுவார்கள். ஆனால், இப்பொழுது உண்மையாகவே அத்தகைய வசதிகள் குற்றவாளிகளுக்கு, கொலைகாரர்களுக்கு, தீவிரவாதிகளுக்குக் கிடைக்கிறது என்று அஜ்மல் கசாப், அபு சலீம் போன்றோரின் விவரங்களிலிருந்து அறியப்படுகிறது. அவர்களுக்கு வேண்டியதையெல்லாம் கொடுத்து திருப்தி படுத்தினர். அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதால், கோடிக்கணக்கில் செலவான பணம் நின்றது. ஆனால், அபு சலீம் போன்றோர் இன்னும் வாழ்க்கையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அபு சலீமை தாவூத் இப்ராஹிமின் ஆள் முஹமது தோஸா என்பவன் ஆர்தர் சாலை ஜெயிலிலேயே 24-07-2010 அன்று காலை (சனிக்கிழமை) ஒரு கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்டான்[3]. அதாவது, இந்திய சிறைச்சாலைகள் அந்த அளவுக்கு ஓட்டையாக உள்ளனவா அல்லது தீவிரவாதிகள் தங்களது ஆடிக்கத்தைச் செல்லுத்தி வருகிறார்களா என்று பார்க்க வேண்டும். வில் ஹியூம் என்ற குழந்தை கற்பழிப்பாளி புழல் சிறையில் தான் அடைக்கப்பட்டான் என்ற செய்திகள் வந்தன. இப்பொழுது, அச்சிறையில் கலவரம், அல்-உம்மா தீவிரவாதிகள் ஜெயில் வார்டன் மற்றும் போலீஸாரைத் தாக்கினர், செல்போன் வைத்திருந்தனர் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன.

Puzhal police attacked - chennai patrika- 25-09-2015

Puzhal police attacked – chennai patrika- 25-09-2015

முகமது ரபீக் ஜெயிலில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்[4]: கடந்த வாரம் சுரேஷ்குமார் கொலை வழக்கில் கைதான முகமது ரபீக் ஜெயிலில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். இதை ஜெயிலர்   இளவரசன் கண்காணித்து செல்போனை பறிமுதல் செய்தார்[5]. அப்படியென்றால், செல்போனை யார் கொடுத்தது, எப்படி ஜெயிலின் உள்ளே சென்றாது போன்ற கேள்விகள் எழுகின்றன. மேலும் சில கைதிகளிடம் இருந்து போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் ஜெயிலர் மீது கடும் கோபத்தில் இருந்தனர். ஜெயிலில் யாரோ தகவல் சொல்வதால்தான் செல்போன் பேசுவது தெரிந்துவிட்டதாக கருதினர்.  இதனால் ஜாகீர் உசேன் என்ற கைதியை சந்தேகப்பட்டு கைதிகள் அடித்தனர்[6]. இதுபற்றி புழல் சிறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. ஜெயிலர் இளவரசன் கைதிகளை தீவிரமாக கண்காணித்தார். இந்நிலையில் புழல் சிறை ஜெயிலர் இளவரசன், உதவி ஜெயிலர் குமார், வார்டர் முத்துமணி (28), எலக்ட்ரீசியன் மாரி என்ற மாரியப்பன் மற்றும் சில காவலர்கள் சிறையின் கைதிகள் அறையை சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்தனராம்[7].  அவர்கள் மாலை 5.15 மணியளவில், சிறையின் உயர் பாதுகாப்பு பகுதி-2 இல் இருக்கும் முஸ்லிம் கைதிகள் இருக்கும் பகுதியில், சோதனையிடச் சென்றனர். இதற்கு கைதிகள் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது[8].

Puzhal attacked police admitted in Hospital - 25-09-2015

Puzhal attacked police admitted in Hospital – 25-09-2015

ஜாகிர் உசேனை சிறையிலேயே அல்உம்மா ஆட்கள் அடித்தது ஏன்?: ஜெயிலில் யாரோ தகவல் சொல்வதால்தான் செல்போன் பேசுவது தெரிந்துவிட்டதாக கருதினர்.  இதனால் ஜாகீர் உசேன் என்ற கைதியை சந்தேகப்பட்டு கைதிகள் அடித்தனர்[9]. இதுபற்றி புழல் சிறை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. ஜாகிர் உசேன் சொன்னான், அதனால், அல்-உம்மா கும்பல் அவனை அடித்தது என்றால், சிறைக்குள்ளேயே அவர்கள் தங்களது ராஜ்யத்தை நடத்துகின்றனர் என்றாகிறது. மும்பை சிறைகளில் தான் அத்தகைய வசதிகளை பெறுகிறார்கள் என்றால், இங்கும் அதே நிலைதான் என்று தெரிகிறது. ஜெயிலில் கைதிகள் அடித்துக் கொள்வது, கலவரம் செய்வது, ஜெயிலரை அடிப்பது, தாக்குவது முதலியன போலீஸார் கட்டுப்பாட்டில் சிறை உள்ளதா அல்லது இந்த தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளதா, ஆட்டி வைக்கிறார்களா, இதன் பின்னணி என்ன என்ற சந்தேகங்கள் எழுகின்றான.

Prison warden Muthumani, who was reportedly hit with a carom board, got 20 stitches — Photo-B. Jothi Ramalingam-the hindu

Prison warden Muthumani, who was reportedly hit with a carom board, got 20 stitches — Photo-B. Jothi Ramalingam-the hindu

அனைத்து கைதிகளும் ஒன்று சேர்ந்து ஜெயிலர் இளவரசனை தாக்குதல்: இந்த நிலையில் 25-09-2015 அன்று மாலை வழக்கம் போல் ஜெயிலர்  இளவரசன், சிறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அவர் உயர் பாதுகாப்பு அறைக்கு சென்ற போது, அங்கு அடைக்கப்பட்டு இருந்த அனைத்து கைதிகளும் ஒன்று சேர்ந்து திடீரென ஜெயிலர் இளவரசனை தாக்கினார்கள்[10]. எதிர்பாராத விதமாக நடந்த இந்த தாக்குதலில் நிலை குலைந்த  ஜெயிலர் இளவரசன், அலறி அடித்துக் கொண்டு கதவை திறந்து வெளியே ஓடி வந்தார்.  அவரை பின் தொடர்ந்து விரட்டி வந்த கைதிகள், அங்கே கிடந்த செங்கல் மற்றும் உருட்டுக் கட்டைகளால் அவரை தாக்கினார்கள். இதைப் பார்த்த சிறை காவலர்கள் முத்துமணி, செல்வின் தேவராஜன், சிறை காப்பாளர் ரவிமோகன் ஆகியோர் கைதிகளை தடுக்க முயன்றனர்.  ஆத்திரம் அடைந்த கைதிகள் அவர்களையும் கற்கள், கட்டைகளால் தாக்கினார்கள். கேரம் போர்டை உடைத்து அந்த கட்டையாலும் தாக்கினர். அப்போது கைதிகள் காவலர் முத்துமணியை  இரும்பு கம்பியாலும் குத்தினர். இதில் ஜெயிலர் இளவரசன் மற்றும் முத்துமணி, ரவிமோகன், செல்வின் தேவராஜ் ஆகிய 4 பேரும் படுகாயம்  அடைந்தனர்.

© வேதபிரகாஷ்

27-09-2015

[1]  Vivek Narayanan, Shortage of personnel hits secuirity at Puzhal prison, The Hindu, September.27, 2015.

[2] https://islamindia.wordpress.com/2013/10/05/tn-police-clash-with-jihadis-in-ap-one-policeman-killed/

[3]https://islamindia.wordpress.com/2010/07/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A/

[4] தினத்தந்தி, புழல் சிறையில் வார்டன் மீது தாக்குதல்:கைதிகள் 6 பேர் வேறு சிறைக்கு மாற்றம், மாற்றம் செய்த நாள்: சனி, செப்டம்பர் 26,2015, 11:08 AM IST

பதிவு செய்த நாள்: சனி, செப்டம்பர் 26,2015, 11:08 AM IST.

[5] The clashes in which two jail personnel were taken hostage and four others injured, was a fallout of an altercation over use of mobile phones in the prison and visitors bringing in prohibited food items. The Al Umma cadres attacked prison staff with carrom board and stones, the sources added.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/6-alumma-cadre-sent-to-different-jails/article7694506.ece?ref=relatedNews

[6] தங்களுடன் இருக்கும் ஜாகீர் உசேன் என்ற கைதி உளவு சொல்வதாக சந்தேகப்பட்டு அவரை தாக்கினர்.

தமிழ்.இந்து, சிறைக்குள் காவலர்களை தாக்கி கலவரம்: புழலில் இருந்து 6 கைதிகள் இடமாற்றம் – 20 கைதிகள் மீது வழக்கு பதிவு, Published: September 27, 2015 08:49 ISTUpdated: September 27, 2015 08:50 IST.

[7]  தினமணி, புழல் சிறையில் கைதிகள்காவலர்கள் மோதல்: ஜெயிலர் உள்பட 4 பேர் காயம்; பணயக் கைதிகளாக இருவரை சிறைப் பிடித்தனர், By  சென்னை, First Published : 26 September 2015 01:49 AM IST.

[8]http://www.dinamani.com/tamilnadu/2015/09/26/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D—%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2/article3047911.ece

[9] தங்களுடன் இருக்கும் ஜாகீர் உசேன் என்ற கைதி உளவு சொல்வதாக சந்தேகப்பட்டு அவரை தாக்கினர்.

தமிழ்.இந்து, சிறைக்குள் காவலர்களை தாக்கி கலவரம்: புழலில் இருந்து 6 கைதிகள் இடமாற்றம் – 20 கைதிகள் மீது வழக்கு பதிவு, Published: September 27, 2015 08:49 ISTUpdated: September 27, 2015 08:50 IST.

[10] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=169216

வெள்ளிக் கிழமையன்று ஜெயிலில் இருந்த இந்திய முஜாஹத்தீன் குற்றவாளி, சககுற்றவாளிகளின் மூலம் கழுத்து நெறித்துக் கொள்ளப்பட்டான்!

ஜூன் 9, 2012

வெள்ளிக் கிழமையன்று ஜெயிலில் இருந்த இந்திய முஜாஹத்தீன் குற்றவாளி, சககுற்றவாளிகளின் மூலம் கழுத்து நெறித்துக் கொள்ளப்பட்டான்!

இஸ்லாத்தில் வெள்ளிக் கிழமை புனித நாளாகக் கருதப் படுகிறது. ஜிஹாதிகள் அன்றுதான் தொழுகைக்குப் பிறகு முக்கியமான வேலைகளை செய்ய தீர்மானம் எடுப்பர், அதன்படியே செயல்படுவர். முஹம்மது கதீல் சித்திக் (27 வயது) என்ற இந்திய முஜாஹத்தீன் மற்றும் பல வழக்குகளில் சிக்கியுள்ள முக்கியக் குற்றவாளி / குற்ரஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நபர், புனேயில் உள்ள மத்திய எரவாடா சிறையில் அவனது கூட்டாளிகளால் 08-06-2012 வெள்ளிக்கிழமை அன்று காலை கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தான்[1]. இது வெறும் “காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது” மாதிரியா அல்லது வேறுவகையா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஜெயில் பாதுகாப்பில் தோய்வா, இந்திய முஜாஹத்தீனின் ஊடுருவலா-ஆதிக்கமா? பாதுகாப்பு மிக்க அச்சிறையில் அவன் கொல்லப்பட்டது, ஜெயில் பாதுகாப்பு முறையின் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. நிச்சயமாக அவன் மூலம் வரும் உண்மைகளை மறைக்கவே அவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளான் என்று தெரிகிறது. தினமும் பாத்திமா என்ற கர்ப்பவதியான அவனது மனைவி தினமும் போன் செய்து பிரார்த்தனை செய்யச் சொல்வாளாம். ஆனால், இன்று போன் எதுவும் வரவில்லை. ஏனெனில், அவள் தொலைக்காட்சி மூலம் தன்னுடைய கணவன் கொலை செய்யப் பட்ட செய்தியை அறிந்தாளாம்[2]. அவனது பெற்றோர்களும் அவ்வாறே அறிந்துள்ளனர். இதனால், இதன் பின்னணியில் சதியுள்ளதாக சந்தேகிக்கப் படுகிறது[3]. அதிகமாக ஜாக்கிரதையாக தனியாக வைக்கப்பட வேண்டிய இவன் எப்படி மற்ற இரு குற்றவாளிகளுடன் சேர்த்து வைக்கப் பட்டான் என்று தெரியவில்லை[4]. அக்பர் முனிர் செயுக் மற்றும் பலு வெகைர், மஹோல் மற்றும் பலேராவ் என்ற உள்ளூர் / மாமூல் கொலையாளிகளால் அவன் கொல்லப்பட்டுள்ளதாக ஜெயில் அதிகாரிகள் கூறுகின்றனர் (Akbar Munir Shaikh and Balu Waghire, informed the jail authorities that Mohol and Bhalerao had killed Siddiqui).

பல வழக்குகளில் சிக்கியுள்ளவன் கொல்லப்பட்டதால், வழக்குகள் பலவீனமாகின்றன: கோவிலில் குண்டு வைத்த வழக்கு விசாரணை இப்பொழுதுதான் முடிந்துள்ளது[5]. பட்கல் எப்படி சித்திக்கிற்கு பணம் கொடுத்து அத்தகைய குற்றங்களை செய்ய வைத்தான் என்ற விவரங்களை போலீஸார் விசாரணையில் அறிந்துள்ளனர்[6].

  • The IM had allegedly promised Siddiqui Rs 50,000 for planting the bomb at Halwai.
  • According to ATS officers, Bhatkal gained Siddiqui’s loyalty by offering him money during times of need. In the later part of 2009, when Siddiqui’s daughter was suffering from a rare illness, Bhatkal first offered Rs 1 lakh. The daughter eventually died, but Bhatkal had succeeded in gaining a loyal supporter.
  • An amount of Rs 25,000 was allegedly exchanged between him and Siddiqui before the Chinnaswamy Stadium blasts of 2010.

இதனால் சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டு வைத்த வழக்கில், கர்நாடக போலீஸாருக்கு பின்னடைவு ஏற்படும் என்று தெரிகிறது[7]. யாசின் பட்கல் (தென்னிந்திய இந்திய முஜாஹத்தீனின் தளபதி) மற்றும் ரியாஸ் பட்கல் (Yasin Bhatkal and Riyaz Bhatkal) முதலியோர்க்குண்டான தொடர்பு பற்றிய ஆதாரங்கள் உள்ள நிலையில், இவ்வாறு அவன் கொலை செய்யப்பட்டது பல கேள்விகளை எழுப்புகிறது[8]. சித்திகின் பங்கு பல கொடிய வழக்குகளில் தெரிகிறது[9]. என்ன காரணத்திற்கோ, இவன் தில்லியில் கைது செய்யப் பட்டு, கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, நேராக கடற்கரை ஊரான பட்கல்லிற்கு அழௌஇத்துச் செல்லப் பட்டான், ஆனால், பெங்களூருக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்படவில்லை. காங்கிரஸ் ஒருவேளை மறைமுகமாக இவர்களுக்கு, இவ்வாறு சட்டரீதில்யில் உதவுகிறதா என்ற சந்தேகமும் நீதிமன்ற வளாகங்களில் எழுந்துள்ளது. அதற்கேற்றபடியே, சித்திக்கின் வழக்கறிஞர்கள் – ரெஹ்மான் மற்றும் கைனத் செயிக் இக்கொலையில் துப்புத்துலக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டுயுள்ளனர்[10]. எதிர்பார்த்தப் படியே, பலிக்கடாவாக எஸ்.வி.கடவகா[11] என்ற ஜெயில் சூப்பிரென்டென்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்!


[1]  Indian Mujahideen operative Mohammad Qateel Siddiqui, accused of executing terror attacks in Bangalore and Delhi and involvement in the attempt to blow up Pune’s famed Dagadusheth Ganapati temple, was strangled to death by two other prisoners in a high-security cell of Pune’s Yerawada central jail on Friday morning.

http://timesofindia.indiatimes.com/india/Top-terror-suspect-killed-in-high-security-Pune-jail/articleshow/13942693.cms

[4] Akbar Munir Shaikh and Balu Waghire, informed the jail authorities that Mohol and Bhalerao had killed Siddiqui.

[9]  Siddiqui allegedly visited Bhatkal with Yasin to organize logistics for their terror missions.  “He was working with his uncle in his native Darbhanga, Bihar and was involved in gun running. He also supplied explosives to Indian Mujahiddeen and helped them in making bombs. Though he was not involved directly in the stadium twin blasts, he had always been a pillar of support for Yasin who allegedly planted the bombs in this instance,” said a source. Siddiqui was arrested from Delhi in November last year, but was never brought to Bangalore. But earlier this year, he was brought to Bhatkal to track down an explosives dump hidden in the coastal town.

[10] Meanwhile, Siddiqui’s lawyers A Rehman and Kainat Shaikh have demanded a CBI probe into the murder.

[11] The Maharashtra government on Friday ordered a CID probe into the case as home minister R R Patil has ordered the suspension of Yerawada jail superintendent S V Khatavka.