Posted tagged ‘ஜார்கெண்ட்’

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (10)

நவம்பர் 19, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (10)

huji Bangaladesh

huji Bangaladesh

என்.. (NIA) மற்றும் ஆர்..பி (RAB)சேர்ந்து வேலை செய்ய திட்டம்: இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகிற ஷேக் கவுசர், யூசுப் என்னும் இரண்டு பேர் உள்பட 12 பேர் தலைமறைவாக உள்ளனர். ஷேக் கவுசர், யூசுப் இவ்விருவரும் வங்காளதேச பிரஜைகள் என்பதால், என்.ஐஏ – தேசிய புலனாய்வு ஏஜென்சி படையினர் வங்காள தேசத்திற்கு சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். அதன்படியே, தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் மேற்குவங்க போலீஸ் அதிகாரிகள் நவம்பர் 9 அல்லது 10-ம் தேதியில் வங்காளதேசம் செல்வதாக உள்ளது. இருநாடுகளின் புலனாய்வு குழுக்கள் [the National Investigation Agency (NIA) and Rapid Action Battalion (RAB)] இவ்விசயத்தில் ஒன்றாக வேலை செய்யவும், விவரங்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடிவு செய்துள்ளன[1]. இந்த வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகள் தொடர்பாக துப்பு தருவோருக்கு ரூ.10 லட்சமும், மீதி 7 குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் கொடுப்போருக்கு ரூ.5 லட்சமும் ரொக்கப்பரிசு வழங்குவதாக என்.ஐஏ ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதற்குள் சில முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன.

Burdwan blast -Subramanian swami photo

Burdwan blast -Subramanian swami photo

12-11-2014 (புதன் கிழமை) அசாமில் அன்று அசாமில் விசாரணை: அசாமில் உள்ள பார்பேடா என்ற இடம், ஜிஹாதிகளின் புகலிடமாக உள்ளது போலும். என்.ஐ.ஏ இங்கு கீழ்கண்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டது[2]:

  1. கவான் புர்ஹா, கிராமத் தலைவர் [Gaon Burha (village headman)]
  2. ரஷீத் அலி அஹமது [Rashid Ali Ahmed],
  3. ஜஹிதுல் இஸ்லாம் [Jahidul Islam],
  4. படாஸி பேகம் [Batasi Begum],
  5. சைஃபுல் இஸ்லாம் [Saiful Islam] மற்றும்
  6. சைபர் அலி [Saibar Ali],

சஹனூர் ஆலம் [Sahanur Alam] பர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சந்தேகிக்கப் படும் குற்றவாளியின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மசூதியில் இவர்கள் இருந்ததனர்[3]. இவ்வாறு மசூதிகளில் தஞ்சம் அடைவது, ஒளிந்து கொண்டிருப்பது முதலியன புலன் விசாரணை செய்பவர்களுக்கு தர்ம சங்கடமாக, பிரச்சினையாக இருக்கிறது. சஹனூர் ஆலத்தின் மனைவி சுஜனா பேகம் [Sujana Begum] ஏற்கெனவே 07-11-2014 அன்று வெளியூர் பேருந்து நிலையத்தில் [interstate bus terminus -ISBT] கைது செய்யப் பட்டுள்ளாள்[4]. படாஸி பேகம் இவருக்கு நெருங்கிய நண்பராம். இப்பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுக்கப் பட்டுள்ளது. ரஷீத் அலி அஹமது பல முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதச் செயல்களுக்கு ஆள் சேர்த்துள்ளான். அவர்கள் எல்லோருமே “சதாலா” என்ற கிராமத்திலிருந்து மறைந்து விட்டதாக சொல்கிறார்கள். அதாவது, மாயமாகும் முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறு ஜிஹாதிகளாக மாற்றப் படுகிறார்கள் போலும். சஹனூர் ஆலம் மறைந்திருந்தாலும், அவனது சகோதரன் ஜகாரியாவும் [Jakaria] ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளான்[5]. சஹனூர் ஆலம் வங்காளதேசத்திற்கு தப்பித்துச் சென்றுவிட்டதாகச் சொல்லப் படுகிறது[6]. ஆக மொத்தம் எட்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவ்வாறு ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள், குறிப்பாக மனைவியும் கணவனுடன் சேர்ந்து தீவிரவாத வேலைகளில் ஈடுபட்டு வருவது இவ்வழக்கில் அதிகமாக தெரிய வருகிறது. அதாவது, ஜிஹாதி-குண்டு தயாரிப்பு-குண்டுவெடிப்பு முதலியன ஏதோ குடும்பத் தொழிலாகி விட்டது போலிருக்கிறது.

jmb - Bangala terror

jmb – Bangala terror

அகில இந்திய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஜிஹாதிகளுக்கும் தொடர்புள்ளதா?: அசாமில் அகில இந்திய ஜனநாயக் கூட்டணி கட்சி தனது ஆதிக்கத்தைச் செல்லுத்தி வருகிறது. பங்காளதேச எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. அசாம் சட்டசபையிலும் 26 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ளதுமசாமில் குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சியை இக்கட்சி கண்டுள்ளது. ஆனால், முஸ்லிம் கட்சிக்கும் [All India United Democratic Front (AIUDF)] இதற்கும் தொடர்புள்ளது என்று ஒரு டிவி-செனல் குறிப்பிட்டதால்[7], ஹைதர் ஹுஸைன் போரா [Haidar Hussain Bora] என்ற அக்கட்சியின் தலைவர், ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்[8]. “இந்தியா-டிவி” செனல் மீதும் வழக்குத் தொடரப் பட்டுள்ளது[9]. அச்செனல் “நியூஸ்-எக்ஸ்” என்று இன்னொரு தளத்தின் மூலம் தெரிய வருகின்றது[10]. அசாம் அனைத்து ஜனநாயக பேரவை மற்றும் ஜமைத் உலமா இ-இந்த் ஒரு இளைஞர் குழுவை சுக்சார், தூப்ரி மாவட்டம், அசாமிலிருந்து ஜிஹாதி பயிற்சி பெற பங்களாதேசத்தில் உள்ள ரங்கப்பூர் என்ற இடத்திற்கு, கடந்த ஜூன்-ஜூலை 2013 மாதங்களில் அனுப்பி வைத்ததாக “நியூஸ் எக்ஸ்” செனல் குறிப்பட்டது[11]. முதல் குழுவில் உள்ளவர்களை முன்னணி தலைவர்களே பிரத்யேகமாகத் தேர்ந்தெடுத்து அனுப்பினர் என்றும், இரண்டாவது குழு நவம்பர் 2013ல் சென்றது என்றும் குறிப்பிட்டது[12]. இத்தகைய பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஜிஹாதி நிறுவனங்கள் ஹுஜி, சிமி, மூல்தா – [ intelligence reports named jihadi organisations like HuJI, SIMI, MULTA.] முதலியன. அசாம் முதலமைச்சர் தருண் ககோய் செய்தியாளர்களிடம் 04-11-2014 (செவ்வாய்கிழமை) இதே மாதிரித்தான் சொல்லியிருந்தார்[13], “ஜே.எம்.பி இங்கு முஸ்லிம் பெண்களிடம் பர்கா / பர்தா துணிகளை விற்கும் போர்வையில் ஒரு பெண்கள் பிரிவை ஏற்படுத்த முயன்றுள்ளார்கள். பார்பேடா மற்றும் நல்பாரி ஊர்களில் உள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று ஜிஹாதி பயிற்சி பெற்றுள்ளனர்.” முன்பு (29-10-2014) பிஜேபி, பஜ்ரங் தள் முதலியவை மௌலானா பதாருத்தீன் அஜ்மல் [Maulana Badruddin Ajmal ] கைது செய்யப் படவேண்டும் என்று போராட்டம் நடத்தின[14]. ஆனால் அக்கட்சி தங்களுக்கும் பங்களாதேசத்து ஜிஹாதி குழுமங்களுக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று அறிவித்துள்ளது[15].

 

வங்காளதேசத்தின் மெத்தனம்

வங்காளதேசத்தின் மெத்தனம்

ஜே.எம்.பியின் அம்ஜத் அலி சென்னைக்குத் தப்பிச் சென்றான் என்றது ஆனால் கைது என்றது (10-11-2014): ஜே.எம்.பியின் அம்ஜத் அலி ஷேக்கிற்கு [Amjad Ali Sheikh] அடைக்கலம் கொடுத்து உதவியதற்காக, சஸ்ஹஸ்த்ரா சீமா பல் [Sashastra Seema Bal] என்ற மத்திய அரசு போலீஸ் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரனிடம் 10-11-2014 அன்று விசாரணை நடத்தப் பட்டது[16]. இவன் உத்திரப் பிரதேசத்தில் உள்ள பஸ்தி வழியாக சென்னைக்குத் தப்பிச் செல்ல, அந்த வீரன் அம்ஜத் அலி ஷேக்கிற்கு உதவியுள்ளான்[17]. தில்லியில் அவனுக்கு இடம் கொடுத்துள்ளான், தில்லியிலிருந்து அவன் சென்னைக்குத் தப்பிச் சென்றுள்ளான்[18]. அதாவது, சென்னையில் இத்தகைய ஆட்களுக்கு தங்கிக் கொள்ள அல்லது மறைந்து வாழ இடம் கொடுக்கப் படுகிறது என்று தெரிகிறது. ஏற்கெனவே, சென்னையில் உள்ள மூன்று நபர்களுடன் ரஜீயா பீபி மற்றும் ஷகீல் அஹமது தொடர்பு கொண்டு பலமுறை பேசியுள்ளனர். இதையறிந்து தான், என்.ஐ.ஏ சென்னையில் உள்ள அந்த மூன்று நபர்களை விசாரித்தது. ஆகவே சென்னையில் “ஸ்லீப்பர் செல்கள்” உள்ளனவா அல்லது அறிந்தே ஜிஹாதிகளுக்கு, இங்குள்ள அடிப்படைவாதி முஸ்லிம்கள் உதவுகிறார்களா என்ற விசயம் நோக்கத்தக்கது. ஜே.எம்.பியின் அம்ஜத் அலி இப்பொழுது சென்னையிலுள்ளானா அல்லது வேறெங்காவது தப்பித்துச் சென்று விட்டானா எ இருக்கின்று தெரியவில்லை. அம்ஜத் அலி ஷேக் 10-11-2014 (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக “டெயிலி மெயில்” குறிப்பிடுகின்றது[19]. இவர்களுக்கு ஜார்கண்டிலும் தொடர்பு இருப்பதால், அங்கும் விசாரணை நடந்து கொண்டிருக்கின்றது.

அல்-உம்மா சிமி ஹிஹாதின் பல உருவங்கள்

அல்-உம்மா சிமி ஹிஹாதின் பல உருவங்கள்

சென்னையில் வாழும் குல்ஷன் பீபி என்றபோதைமருந்து ராணி[20]: என்.ஐ.ஏ குல்ஷன் பீபி என்ற “போதைமருந்து ராணி”யைத் தீவிரமாகத் தேடி வருகிறாதாம். கொல்கொத்தாவிலிருந்து சென்னைக்கு ஓடிவந்துவிட்ட அந்த பெண்மணி இப்பொழுதும் தனது “ரிமோட் கன்ட்ரோல்” மூலம் “போதைமருந்து வியாபாரத்தை” செய்துவருவதாக, என்.ஐ.ஏ-துப்பறிவாளர்களுக்குத் தெரியவந்துள்ளது. ஆனால், சென்னை போலீஸாருக்கோ, போதைமருந்து தடுப்புத்துறையினருக்கோ, அப்பெண்மணியைப் பற்றிய எந்த விவரங்களும் தெரியாமல் இருக்கிறது. ஆனால், மே.1.2014 குண்டுவெடிப்புக்கு முன்னர், இரண்டு ஜே.எம்.பி தீவிரவாதிகள் தங்க சென்னையில் இடம் கொடுத்துள்ளார். அவள் கிழக்குக் கடற்கரையில் மஹாபலிபுரம் வரையில் உள்ள ரிசார்ட்டுகளில் போதைமருந்து ஜல்ஸா பார்ட்டிகளை நடத்தியிருப்பதாகவும் கூறுகிறார்கள். பி.பி.ஓக்கள் மற்றும் கே.பி.ஓக்களில் வேலை செய்யும் இளம் ஆண்கள்-பெண்கள் தவிர, திரைப்பட உலகில் உள்ளவர்களும், இவளது வாடிக்கையாளர்களாம். ஆகஸ்ட்.1,1993 அன்று உத்தம் மண்டல் என்ற சி.பி.எம் தோண்டர், இந்த பெண்மணி ஒரு உருது பள்ளிக்கு வந்திருந்த போது எதிர்ப்புத் தெரிவித்தால் குரூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். அப்பொழுது குல்ஷன் பீபி கைது செய்யப் பட்டாலும், பிறகு ஒரு சி.பி.எம் அமைச்சர் தயவால் தப்பி விட்டார். கொல்கொத்தாவில் தேசிய போதைமருந்து தடுப்புத்துறை மற்றும் போலீஸாரின் தொல்லை தாங்காமல், சென்னைக்கு தனது ஜாகையை மாற்ரிவிட்டதாக தெரிகிறது. எல்லொருக்கும் லஞ்சம் கொடுத்து கொல்கொத்தா-சென்னை ரயில்வழியில் தனது ஆட்சியை நடத்தி வருகிறாராம்[21]. இவ்வழக்கில் ஏற்கெனவே ஒரு குல்ஷன் பீபி கைது செய்யப் பட்டிருக்கிறாள், ஆனால், அவள் வேறு. பாகிஸ்தானில், இதே பெயரில் இன்னொரு போதை மருந்து ராணி இருக்கிறாள். அவளும் வேறு, ஆக இந்த சென்னையில் இருக்கும் ராணி யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

 முந்தைய சென்னையுடனான தொடர்புகள்: முர்ஷிதாபாத்தில் உள்ள உயிரிழந்த ஷகீல் அஹமதுவின் வீட்டையும் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் குண்டு தயாரிப்புக்கான முக்கிய கருவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையிலும், மேற்கொண்டு தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையிலும் சென்னையை சேர்ந்த மூன்று பேருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மூன்று பேருக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இது சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை போலும். பொறுப்பான முஸ்லிம்களும் கண்டு கொள்ளவில்லை போலும். இதுதவிர, நேரில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் பி.வி.ராமசாஸ்திரி ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார்[22]. சென்னையில் தங்கியிருந்து மூன்று பேரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.  இது தவிர சென்னை கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் இவர்களது சம்பந்தம் உள்ளதாக தெரிகிறது.

© வேதபிரகாஷ்

17-11-2014

[1] http://www.hindustantimes.com/india-news/nia-bangladesh-s-rab-may-share-info-on-probe/article1-1285465.aspx

[2] http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[3] A NIA team led by Superintendent of Police Debojit Hazarika during their search in the village yesterday had directed the five to present themselves at the NIA office in Guwahati as they had attended a prayer meeting in a house in the village which was close to the one of Sahanur Alam, one of the main accused in the Burdwan blast case, they said.

http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[4] Batasi Begum is a close friend of Sahanur’s arrested wife Sujana Begum, they said adding, Rashid Ali Ahmed was called as many youths were missing from his Chatala village.

http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[5] In continuation of their search operation at Chatala village, the NIA searched Sahanur’s house yesterday (11-11-2014) for the third time, quizzed his father and brother about the accused. Alam is absconding and the NIA has recently declared a reward of Rs five lakh for anyone giving information leading to his arrest. Alam’s wife Sujana Begam was arrested in Guwahati on November 7 from the ISBT. So far eight persons, including Sujana and Sahanur’s brother Jakaria have been arrested in this connection.

http://zeenews.india.com/news/west-bengal/nia-summons-village-headman-4-others-in-burdwan-blast-probe_1498105.html

[6] http://timesofindia.indiatimes.com/india/Sahanur-might-have-fled-to-Bangladesh-NIA-says/articleshow/45104798.cms

[7] The All India United Democratic Front (AIUDF) has slammed a criminal defamation case against a private news channel which had recently broadcast news about party’s alleged involvement with Jehadi elements.

http://twocircles.net/2014nov12/1415811473.html#.VGQtdPmSynU

[8] Meanwhile, the Badruddin Ajmal-led All India United Democratic Front (AIUDF) has filed a criminal case against a national TV channel on Monday. The party’s Dhubri district unit registered the case against the channel after accusing it of airing ‘defamatory’ content. Haidar Hussain Bora, an AIUDF leader, said, “A case has been registered. Seven officials of the TV channel have been accused of maligning the party’s image.”

http://timesofindia.indiatimes.com/india/Sahanur-might-have-fled-to-Bangladesh-NIA-says/articleshow/45104798.cms

[9] http://www.milligazette.com/news/11249-maulana-badruddin-ajmal-slaps-defamation-on-newsx-tv-channel

[10] http://twocircles.net/2014nov12/1415811473.html

[11] The New Delhi-based news channel, News X, claimed leaders of Assam’s All India United Democratic Front (AIUDF) and a leading Islamist organisation, Jamiat Ulama-e-Hind, had sent a group of youths from Sukchar area in the state’s Dhubri district for Jihadi training from terrorist organisations in Bangladesh’s Rangpur in June-July last year. http://bdnews24.com/bangladesh/2014/10/29/assam-youths-undergo-jihadi-training-in-bangladesh

[12] The channel, quoting intelligence reports, also said apart from the first batch of youths, the leaders of the AIUDF and the Jamiat Ulama-e-Hind personally handpicked the members of the second team that went to Bangladesh last November.

http://bdnews24.com/bangladesh/2014/10/29/assam-youths-undergo-jihadi-training-in-bangladesh

[13] http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-otherstates/bangladesh-outfit-trying-to-set-up-womens-wing-in-assam/article6565371.ece

[14] http://indianexpress.com/article/india/india-others/bjp-bajrang-dal-bandh-demanding-aiudf-leader-ajmals-arrest-cripples-life-in-assam/

[15] http://www.thehindu.com/news/national/other-states/aiudf-refutes-links-with-bangladesh-jihadi-groups/article6547627.ece

[16] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2830582/India-reveals-terror-plot-Bangladesh-tip-shows-terrorists-active-Jharkhand.html

[17] http://www.ndtv.com/article/india/nia-questions-soldier-who-reportedly-sheltered-key-burdwan-blast-suspect-619456

[18] After the blast in Burdwan on October 2, which was believed to be an accident, Sheikh reportedly fled to Delhi, where he was allegedly given shelter by the soldier. From Delhi, Sheikh reportedly escaped to Chennai through Basti in Uttar Pradesh. “The soldier helped Sheikh in this too,” sources said.

[19] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2830582/India-reveals-terror-plot-Bangladesh-tip-shows-terrorists-active-Jharkhand.html

[20] http://www.newindianexpress.com/nation/Police-Clueless-as-Terror-Trail-Leads-to-Chennai-Drug-Queen/2014/11/16/article2525871.ece

[21] NIA is looking for a “drug queen” from Kolkata, now reportedly based in Chennai. Gulshan Bibi, who fled to Chennai years ago, still runs, through remote control, the narcotics business and sleuths have found connections between her and Islamic terrorists, said NIA sources. However, the police in Chennai have no clue about the drug queen. But NIA sources in Kolkata said Gulshan provided shelter to two Jamaat-ul-Mujahideen (JUMB) terrorists, who visited Chennai before the May 1 blasts at the Central railway station. Sources said she conducted rave parties in resorts at Mahabalipuram on the East Coast Road. Besides young men and women working in various call centres, BPOs and KPOs, her clientele reportedly included members of the film industry. On August 12, 1993, Uttam Mondal, a CPM worker protested the presence of a narcotics den in an Urdu medium school in Dakshindari in eastern Kolkata. Mondal, who used to tutor poor students, was brutally killed for taking on the drug mafia. Gulshan was arrested but due to the intervention of a CPM minister, went scot free. With the NCB and the Kolkata police hot on her trail, she shifted to Chennai. With money power growing, she could reportedly bribe police not only in Tamil Nadu and West Bengal but also states along the Kolkata-Chennai train route.

[22] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=113757

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (8)

நவம்பர் 19, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (8)

greater-islamic-bangladesh

greater-islamic-bangladesh

தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்ய சாதகமாக இருக்கும் பங்களாதேசத்தின் இருப்பிடம்: பங்களாதேசம், மேற்கு வங்காளம், அசாம், மேகாலயா, திரிபுரா, மயன்மார், வங்காள விரிகுடா என்று சூழ்ந்துள்ளது. வடக்கில் நேபாளம், பூடான் போன்ற நாடுகள் இருப்பதால், பங்களாதேச தீவிரவாதிகள், இந்தியாவில் நுழைந்து, இம்மாநிலங்கள் வழியாக நேபாளம், பூடான் சென்றுவிட்டால், அங்கிருந்து தப்பித்து விடலாம். அதேபோல, உள்ளே நுழையவும் செய்யலாம். இத்தலைய பாதுகாப்பற்ற எல்லைகளின் தன்மையினைத்தான், பங்களாதேச தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள். பிறகு இம்மாநிலங்களை ஒட்டியுள்ள ஜார்கெண்ட், பிஹார், சிக்கிம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம் போன்ற மாநிலங்களில் தொடர்புகளை வைத்துக் கொண்டால், இவர்களது வலை பெரிதாகி, தப்பித்துக் கொள்ள சுலபமாகிறது. மேலும், வடகிழக்கில் கடந்த 60 வருடங்களாக இந்தியாவிற்கு எதிராக வேலை செய்து வரும் இயக்கங்களும், சில நேரங்களில் – பணம், போதை மருந்து, ஆயுதங்கள் – என்று வரும்போது, கைக்கோர்த்துக் கொள்கின்றன. இதனால் தான், இஸ்லாமிய ஜிஹாதிகள், பாகிஸ்தானையும், பங்களாதேசத்தையும் இணைக்கலாம் என்று பலவழிகளில் முயன்று வருகிறார்கள்.

burdwan-blast-location of Bhirbum, murshidabad etc

burdwan-blast-location of Bhirbum, murshidabad etc

ஜிஹாதிகளின் ஜார்கெண்ட் தொடர்பு (13-11-2014)[1]: கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், 13-11-2014 (புதன்கிழமை) சங்கிராம்பூர் என்ற, ககூர் மாவட்டம், ஜார்கெண்டில் உள்ள ஊரில் என்.ஐ.ஏ. இரண்டு பேர்களிடம் விசாரணை மேற்கொண்டது. இவ்வூர், மேற்கு வங்களாத்தின் பீர்பூம் மாவட்டத்தை ஒட்டியுள்ளது. பீர்புமில் ஆயிரக்கணக்கான குண்டுகள் கண்டெடுக்கப் பட்டன, போலீஸ் அதிகாரியின் மீது குண்டெரியப் பட்டது, கலவரம் ஏற்பட்டது, மூன்று பேர் கொல்லப் பட்டனர் போன்ற விவரங்கள் முன்னமே கொடுக்கப் பட்டன. ஆகவே, மாநில எல்லைகளைக் கடந்து ஈடுபட்டு வரும் இவர்களைக் கண்காணிப்பதில், இம்மாநில பாதுகாப்பு, போலீஸார் முதலியோரும் மெத்தனமாகவே இருந்து வருகின்றனர் என்றாகிறது. இல்லை, தீவிரவாதிகளால் அவர்கள் நன்றாக கவனிக்கப் பட்டு வருவதால், அவ்வாறு இருந்திருக்கிறார்கள் போலும். ஜார்கெண்டில் உள்ள இந்திய முஜாஹித்தீன் நடவடிக்கைகளைக் கவனிக்க வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது[2].

how money reached khagragarh from sylhet

how money reached khagragarh from sylhet

கள்ளநோட்டுகள் தொடர்பு: என்.ஐ.ஏ 09-11-2014 (ஞாயிற்றுக் கிழமை) அன்று போலி / கள்ளா இந்திய ரூபாய் நோட்டுகள் [FICN – Fake Indian Currency Notes] விசயமாக ஆழ்ந்த சோதனையை மேற்கொண்டது. இந்திய பொருளாஹாரத்தை சீரழிக்கும் இந்த விசயத்தில், என்.ஐ.ஏ தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து விசாரித்து வருகிறது[3]. நான்கு நாட்கள் பங்களாதேசத்தில் பிரயாணம் மேற்கொண்டிருந்தபோது, ஜே.எம்.பி மற்றும் இதர ஜிஹாதிக்குழுக்கள் இந்த கள்ள நோட்டுகள் கடத்தல் மற்றும் விநியோகங்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது[4]. இந்திய-பங்களாதேச எல்லைகள், பல இடங்களில் வேலையில்லாமல் இருப்பதாலும், பாதுகாப்பு-சோதனை போதிய அளவு இன்மை, ஆளும் கட்சிகள் கொடுக்கும் ஊக்குவிப்பு ஆதரவு முதலிய காரணங்களினால், எல்லைகளைத் தாண்டி இவ்வேலைகள் நடந்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மற்ற இந்திய-விரோத இயக்கங்களும் இதில் ஈடுப்பட்டுள்ளன, கைகோர்த்துக் கொண்டு வேலை செய்து வருகின்றன. ஊடுருவல்காரகளுக்கு கொடுக்கப் படும் முக்கியமான வேலையே, இந்த நோட்டுகளை விநியோகிக்கும் வேலைதான். கடந்த 2011-2014 ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமாக கள்ளாநோட்டுகள் பிடிபட்டுள்ளன. குறிப்பாக அசாம் மாநில எல்லைப் பிரதேசங்களிலிருந்து, இக்கள்ளப்பணம் அதிகமாக நுழைந்து, மற்ற இடங்களுக்குப் பட்டுவாடா செய்யப் படுகின்றன. குறிப்பாக உபியில் அதிகமாக செல்கிறது. இப்பணம் தான், அங்குள்ள தீவிரவாத-பயங்கரவாத-வன்முறை செயல்களுக்குப் பயன்படுத்தப் படுகின்றது.

burdwan masterminds plotting

burdwan masterminds plotting

ஜியா உல் ஹக் தொடர்புகள் – 07-11-2014 அன்று கைது செய்யப் பட்டான்[5]: என்.ஐ.ஏ. அதிகாரிகள் 07-11-2014 அன்று ஜியா உல் ஹக் (மொஹம்மது பரித்தூனின் மகன்) என்பவனை கைது செய்தனர். இவன் மறைந்து வாழும் ரிஜாவுல் கரீம் மற்றும் யூசுப் ஷேக் அல்லது மௌலானா யூசுப்பின் கூட்டாளி ஆவான். மஸ்ஜித் தல்ஹாவில் (காக்ராகர், பர்த்வான்) தங்கியிருந்தபோது பிடிபட்டான். இவன் ஜிஹாதித்துவத்துவை புதியவர்களுக்கு பயிற்சி கொடுப்பதில் ஈடுபட்டுள்ளவன் என்று தெரிய வந்தது. ஜிஹாதி சம்பந்தப்பட்ட வீடியோக்களை சேகரித்துத் தொகுப்பது இவனது முக்கியமான வேலை. குஜராத் கலவரங்கள், அஸாம் கலவரங்கள், ரோஹிங்கிகள் கொல்லப் படுதல் முதலியவற்றின் வீடியோக்களை வெட்டி-ஒட்டி ஜிஹாதி நோக்கில் தயாரிக்கப் பட்ட வீடியோக்களை சிமுலியா மற்றும் முகிம்நகர் மதரஸாக்களில் போட்டுக் காண்பிப்பது வழக்கம். இவற்றை மற்ற “ஹை-டெக்” ஜிஹாதிகள் இணைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இவன் இப்பொழுது தப்பி மறைந்து வாழும் ஜே.எம்.பியின் தளபதி, சஜித் மற்றும் சகிப் என்கின்ற சுமன் முதலிவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன். மால்டாவின் அவனது வீட்டில் சோதனையிட்டபோது, கிடைத்த லேப்டாப்பில், இவ்விசயங்கள் இருந்தன. பர்த்வான் குண்டுவெடிப்புப் பிறகு, ரிஜாவுல் கரீம் லேப்டாப்பை ஜியா உல் ஹக்கிற்குக் கொடுத்தான். ஆக இந்த இளைஞர்கள் எல்லாவற்றிலும் பயிற்சியளிக்கப் பட்டு தயார் செய்யப் படுகிறார்கள் என்று தெரிகிறது.

Burdwan_District_WB_Google_Maps_0_0_0_1_0

Burdwan_District_WB_Google_Maps_0_0_0_1_0

08-11-2014 அன்று எஸ்.கே. ரஹமத்துல்லா கைது[6]: எஸ்.கே. ரஹமத்துல்லா என்கின்ற எஸ்.கே. புர்ஹான் (லெப்னினென்ட். சித்திக் மியா அலியின் மகன்) பொலீஸாரால் கைது செய்யப் பட்டான். ஜெசோர் ரோடில் கைது செய்யப் பட்டு என்.ஐஏவிடம் ஒப்படைக்கப் பட்டான். ஜே.எம்.பியின் பர்த்வான்-திட்டத்தை அமைத்த முக்கிய நபர்களில் ஒருவன். இவனிடமிருந்து பல போலியான சிம் கார்டுகள், பான் கார்டுகள், EPIC, DL, முதலியன கண்டெடுக்கப்பட்டன[7]. இன்னொரு அறிக்கை, அவன் பெயர் ஷேயிக் ரஹமத்துல்லா / சஜித் / புர்ஹான் ஷேக் / சுரோத் அலி (ஆலம் ஷேயிக் / ஜானு எஸ்.கே / மறைந்த சித்திகி மியா-வின் மகன்) என்று குறிப்பிடுகிறது[8]. பங்காளதேசத்தவன், இப்பொழுது ஜார்கெண்டில் வாழ்ந்து வந்தான்[9]. பல இடங்களில் நகர்ந்து கொண்டு வேலை செய்யும் இவர்கள், தங்களது அடையாளங்களை மாற்றிக் கொண்டு, அதற்கெற்றப் படி ஆவணங்களிலும் தங்களது விவரங்களை பலவிதமாகக் கொடுத்து வருகிறார்கள்.

burdwan-blast_Photo taken from Anandabazar Patrika

burdwan-blast_Photo taken from Anandabazar Patrika

அம்ஜத் ஷேக் / காஜல் 10-11-2014 அன்று கைது[10]: 10-11-2014 அன்று 30 வயதான அம்ஜத் ஷேக் / காஜல் (சுகுர் ஷேக்கின் மகன்) பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பந்தமாகக் கைது செய்யப் பட்டான். இவனும் ஜே.எம்.பியின் உறுப்பினன், பர்த்வான் குண்டு தொழிற்சாலை திட்டத்தில் பங்குக் கொண்டவர்களில் முக்கியமாக செயல்பட்டவன். குண்டு தயாரிக்க வேண்டிய முக்கியமான ரசாயனப் பொருட்களைப் பெற்று, மற்றவர்களுக்கு அனுப்பி வைத்தான். குண்டுவெடிப்பிற்குப் பிறகு, கொல்கொத்தாவில் உள்ள இவனது வீட்டை சோதனை செய்தபோது, ரசாயனப் பொருட்கள் வாங்கியதற்கான சிட்டுகள், ரசீதுகள் முதலிய கண்டெடுக்கப் பட்டன. 08-11-2014 அன்று இவன் தில்லிக்குச் சென்றுள்ளான். பிறகு உப்யில் உள்ள பஸ்தி என்ற இடத்திற்கு வந்துள்ளான். அங்கு ஒரு போலீஸ்காரன், இவன்மறந்திருக்க இடம் கொடுத்துள்ளான். பிறகு, மறுபடியும் மேற்கு வங்காளத்திற்கு சென்றபோது, அங்கு கைது செய்யப்பட்டான். ஜே.எம்.பியின் திட்டப்படி, மேற்கு வங்காளத்திலுள்ள மதரஸாக்களில் ஜிஹாதி பயிற்சிமுறைகளை அளிக்க பாடுப்பட்டவர்களில் முக்கியமானவனாக இருந்தவன்[11]. இவனைப் பற்றி துப்புத் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்படிருந்தது.

24 பர்கானாஸ் மாவட்டத்தில் விமான நிலையப் பகுதியில் ஷேக் ரகமதுல்லா (40) என்பவரை ஞாயிற்றுக்கிழமை (08-11-2014) போலீஸார் கைது செய்தனர்[12]. விசாரணையில் அவர்தான் பர்த்வான் குண்டுவெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டிய சஜித் என்பது தெரியவந்தது. வங்கதேசத்தைச் சேர்ந்த அவர் ஜமாத்-உல்-ஹக் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவராவார். மேலும் அவர் மஜ்லிஸ்-இ-சுரா என்ற அமைப்பின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். வங்கதேசத்தில் சில ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் பின்னர் மேற்கு வங்க மாநிலம், முர்ஷீதாபாத் மாவட்டத்தில் உள்ள முகிம்நகரில் ஒரு மதரஸா அருகே வசித்துள்ளார்.

© வேதபிரகாஷ்

15-11-2014

[1] http://zeenews.india.com/news/jharkhand/burdwan-blast-probe-two-picked-up-from-jharkhand_1498285.html

[2] As per GOI, MHA Oder No. 11011/67/2013-IS.IV dated 27/12/2013, NIA has taken over the investigation of the FIR No. 985/2013 dated 04/11/2013 of Kotwali (Hindpiri) Police Station, Ranchi, Jharkahnd and re- registered the case on 31/12/2013 at PS NIA, New Delhi as Case No. RC-12/2013/NIA/ under section 121, 121A, 120B, 34 of IPC, Section 16,18,20,23 of UA (P) Act, Section 3,4 of Explosive Substances Act and section 17 of Criminal Law. The accused persons are involved in commission of subversive and anti-national activities by entering into a criminal conspiracy with others and in pursuance to that they had collected explosives and other prohibited articles in concealed manner for the purpose of waging war against the Governement of India.

[3] Damage to the monetary stability of India was caused by way of transporting, smuggling and circulating of high quality counterfeit Indian Currency Notes of Rs.1000/- denomination in India. As per GOI, MHA order F. No. 11011/35/2014/IS.IV dated 16 June 2014, NIA registered a case on 25.06.2014 at PS, NIA, Delhi as Case RC-02/2014/NIA/DLI U/s -120B, 489B & 489C of IPC and Section 16 & 19 of UA (P) Act .

[4] http://bdnews24.com/neighbours/2014/11/09/nia-probing-jmbs-fake-currency-business

[5] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி.

[6] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி, Arrest of SK Rahmatlla @ Sajid in RC-3/2014/NIA-DLI. – SK Rahmatlla @ Sajid @ Burhan SK, S/O Lt. Siddique Miyan Vill Farajikanda, P.O. Madangunj, P.S.Bandar, District Narayangunj, Bangladesh arrested by Police from Jessore Rode, PS Airport, around 1430 Hrs. and handed over to National Investigation Agency. He is one of the main leaders of West Bengal Module of Jamaat-ul-Mujahideen-Bangladesh. Several fake identity documents like EPIC, DL, PANCARD and other items have been recovered from his possession.

[7] http://www.nia.gov.in/writereaddata/PressRelease08112014.pdf

[8] http://www.nia.gov.in/writereaddata/PressRelease09112014.pdf

[9] STATUS REPORT AS ON 09.11.2014 IN BURDWAN BLAST CASE (NIA CASE NO. RC-03/2014/NIA-DLI)

[10] http://www.nia.gov.in/writereaddata/PressRelease10112014.pdf

[11] என்.ஐ.ஏ. பத்திரிக்கைக் குறிப்பின் படி.  NIA today achieved a major breakthrough with the arrest of one Amjad Sheikh@ Kajal, son of Sukur Sheikh, age 30 years, resident of Kazi market, Kirnahar, District- Birbhum (West Bengal) for his role in Burdwan blast case. Amjad Sheikh was a key member of Jamaat-ul-Mujahideen, Bangladesh (JMB) and also one of the main conspirators of the Burdwan blast case.

[12]http://www.dinamani.com/india/2014/11/09/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE/article2514313.ece