Posted tagged ‘ஜதமைத்-உல்-முஜாஹித்தீன்’

தில்லியில் தீவிரவாதிகள் கைது – ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டமிட்டிருந்தனராம்!

மார்ச் 22, 2013

தில்லியில் தீவிரவாதிகள் கைது – ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டமிட்டிருந்தனராம்!

Hijbul Mujahiddeen - Paki-terrorist group

இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டு அவதாரங்களை எடுத்து வருவது: சட்டப்படி, தப்பித்துக் கொள்ள இஸ்லாமிய, ஜிஹாதி மற்ற பிதாயீன் தீவிரவாதிகள் சட்டத்திலிருந்துத் தப்பித்துக் கொள்ள இயக்கங்களின் பெயரை மாற்றிக் கொண்டு வருகின்றன. அதன்படியே, தங்களது வங்கிக் கணக்குகளையும் மாற்றி வருகின்றன. சிமி தடை செய்யப்பட்டதிலிருந்து, இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருக்கிறது. பெயர்கள், சின்னங்கள், அடையாளங்கள் ஒருவிதத்தில் மாற்றப்பட்டாலும், அவர்களே அந்தந்த பணியை செய்து வருகிறார்கள்.

Paki-terrorist arrested - militant of Al-barq

ஹோலி பண்டிகையின் போது தீவிரவாதச் செயலை நடத்தத் திட்டம்: தில்லியில் ஹோலி பண்டிகையின் மீது தீவிரவாதத் தாக்குதல் திட்டமிட்ட சதியை முறியடித்துள்ளதாக, தில்லியின் போலீஸ் அதிகாரி எஸ்.என். ஶ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த லியாகத் ஷா  (Syed Liyaqat Shah, a former militant of Al Barq terror outfit) என்பவன் புதன்கிழமை அன்று (20-03-2013) கைது செய்யப்பட்டான்[1]. அவன் பாகிஸ்தானிய தீவிர இயக்கமான அல்-பர்க் என்பதின் அங்கத்தினன்.

Haji Arafat Guest house - room No.301 arms stored

அல்-பர்க் பாகிஸ்தானிய இயக்கத்தின் தீவிரவாத செயல்கள்: அல்-பர்க் இந்தியாவில் பல பயங்கரவாத செயல்களை மேற்கொண்டுள்ளது[2]. தான் பாகிஸ்தானிலிருந்து நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டிற்கு வந்ததாகவும், அங்கிருந்து சாலை வழியாக நேபாள எல்லை வரை பிராயணித்து, பிறகு எல்லைகளைக் கடந்து, இந்தியாவில் நுழைந்ததாக ஒப்புக்கொண்டான்[3]. ரயில் மூலம் தில்லிக்கு சென்றுகொண்டிருக்கும் போது, கோரக்பூரில் கைது செய்யப்பட்டுள்ளன். தான் பாகிஸ்தானின் குடிமகன் என்பதற்கான ஆதாரங்களையும் அழித்துவிட்டதாக ஶ்ரீவஸ்தவா கூறுகிறார்[4].

Kashmir terror

லியாகத்தின் உறவினர்கள் மறுக்கின்றனர்: ஆனால், லியாகத்தின் தாயார், சகோதரர் இதனை முழுமையாக மறுத்துள்ளனர்[5]. தீவிரவாதத்தை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் கலக்க விரும்புவர்களுக்கு, மன்னிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படிதான் இவன் வந்துள்ளான். ஆனால், போலீஸார் அதனை வேறுவிதமாக விளம்பரப்படுத்துகிறார்கள்[6] என்று குறை கூறுகின்றனர். இருப்பினும், தீவிரவாதிகள் அனைத்தையும் தகக்கு சாதகமாத்தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான், ஒரு முறை, ஒரு தீவிரவாதிக்கு பத்மஶ்ரீ விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது! இங்கும் குடும்பம் முழுவதுமாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ளது[7]. இந்துக்கள் பாகிஸ்தானில் கொடுமைப்படுத்தப்படுவதால், இந்தியாவிற்கு வருகின்றனர், ஆனால், அவர்களை கைது செய்து திரும்ப அனுப்பப்படுகின்றனர்.

Indian flag burned

ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் ஆயுதங்கள் பறிமுதல்: இந்தியாவிற்குள் நுழைந்து, தில்லிக்கு வந்ததும், ஹாஜி அராபத் விருந்தினர் விடுதி, அறை எண்.301ற்கு வந்து ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுமாறு இவனுக்கு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படித்தான், இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டெல்லியில் சிறப்பு காவல் படையினர் நேற்று இரவு ஜும்மா மசூதிக்கு அருகில் உள்ள ஒரு ஓட்டலில் சோதனை நடத்தினர்.  அப்போது அங்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கி, 30 காட்ரிஜ்கள் அடங்கிய இரண்டு சுற்று துப்பாக்கிக் குண்டுகள், அதிக அளவிலான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன[8].  இதனால் தீவிரவாதிகளின் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது[9]. அதேசமயம் ஓட்டலில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை விட்டுச் சென்ற நபரைக் கண்டறிய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த ஓட்டலுக்கு வந்த நபர்கள் அனைவரும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பார்கள். எனவே, அந்த வீடியோ பதிவை ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக ஓட்டல் ஊழியர்களிடம் போலீசார் கேட்டபோது, ஹாஜி அராபத் என்பவர், ‘சுற்றுலாப் பயணி போன்று வந்த ஒரு நபர் 301 எண் அறை எடுத்து தங்கியிருந்தார். ஒரு நாள் வாடகை கொடுத்திருந்தும், இரவு 8 மணிக்கு அந்த நபர் அறையைவிட்டு சென்றுள்ளார்.  அதன்பின்னர் திரும்பி வரவில்லை” என்று கூறினர்.

Indian-flag-burned2

தீவிரவாத இயக்கம் செயல்படும் முறையை விளக்கிய லியாகத்[10]: ஹிஜ்புல் முஜாஹித்தீனின் தலைவனான காஜி நஸ்ரித்தூன் மற்றும் பரூக் குரேஷி லியாகத்தைச் சந்தித்து, “பிதாயீன்” வேலைக்கு இளைஞர்களை சேர்க்க நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். குடியரசு தினத்தை துக்க நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ரும், பிறகு அப்சல் குரு தூக்கிலிடுவதை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ரும் முடிவு செய்யப்பட்டது. அவர்கள் பிறகு, தில்லியில் அருமையான பயங்கரவாத வேலையை செய்து முடிப்பார்கள் என்றார்கள். இந்த வேலை முடிந்ததும், ஒன்றுமே தெரியாத மாதிரி, காஷ்மீரத்திற்கு வந்து மறுபடியும் அத்தகைய “திறமைசாலிகள்” கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிடருக்க வேண்டும்[11].

INDIA-KASHMIR-UNREST

INDIA-KASHMIR-UNREST

கஜினியை வென்றுவிட்ட 18வது முயற்சி: கடந்த ஜனவரி 2011லிருந்து, இப்பொழுது வரை தில்லியில் ஹிஜ்புல் முஜாஹித்தீனின் சதிதிட்டத்தின் குழுவை பிடிப்பது 18வது முறையாகும்[12]. தொடர்ந்து இவ்வாறு பல இஸ்லாமிய தீவிரவாதிகளை இந்தியா பிடித்து வருவதால், பாகிஸ்தான் அத்தகைய தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அதனை மறுத்து வருகிறது[13]. அதாவது, தீவிரவாதத்தினால் பாகிஸ்தானே பாதிக்கப்பட்டுள்ளது என்கிறது.

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை

ஸ்ரீநகரில்-தீவிரவாதத்தின்-உச்சநிலை

முஸ்லாம் தேசமான பாகிஸ்தானை ஏன் முஸ்லீம்கள் தாக்குகின்றன?: ஆனால், முஸ்லீம்களே முஸ்லீம்களை ஏன் தாக்குகின்றனர் என்பதனை பாகிஸ்தானோ, ஊடகங்களோ விளக்குவதில்லை. இங்குதான் அந்த ஜிஹாதின் மகத்துவம் வருகின்றது. குரானின் மீது ஆணையிட்டு, ஒரு முஸ்லீம் மறு முஸ்லீமை காபிர் என்று அறிவித்து விட்டால், அவன் மீது ஜிஹாதைத் தொடங்கிவிடலாம். அதாவது அந்த மறு முஸ்லீம் என்பவன் ஒரு குறிபிட்டப் பிரிவை / சமூகத்தை / நாட்டை சேராதவனாக இருப்பான். பாகிஸ்தானில் ஷியாக்கள் தாக்கப்படுவது, அவர்கள் மசூதிகள் இடிக்கப்படுவது, அவர்களது மசூதிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்வது எல்லாமே ஜிஹாத் தான், தீவிரவாதம் தான். அது எப்படி வேலை செய்கிறதோ, அதேபோலத்தான் இந்தியாவிலும் வேலை செய்கிறது.

© வேதபிரகாஷ்

23-03-2013


[7] NDTV has learnt that Liyakat Shah and his family, including his 18-year-old daughter flew from Karachi to Kathmandu and reached Sanauli post on the Indo-Nepal border on March 20. There, they informed the border police. However, instead of allowing them to proceed to Jammu and Kashmir as planned and promised, the Delhi Police arrested them.

http://www.ndtv.com/article/india/delhi-police-claims-wanted-terrorist-caught-not-true-says-kashmir-345826

[8]  Delhi Police seized an AK-56 assault rifle, two magazines with 30 cartridges each, and a hand grenade from a room of a guest house near the famous Jama Masjid mosque.

http://www.ndtv.com/article/india/delhi-police-claims-wanted-terrorist-caught-not-true-says-kashmir-345826

[9] The Delhi Police have arrested a suspected Hizbul Mujahideen militant from Uttar Pradesh. Police sources said the alleged operative, Liaqat Ali, was on way to Delhi in a train when he was arrested from Gorakhpur two days back. During interrogation, the man is reported to have confessed that a possible attack in Delhi was being planned around Holi. Going by the man’s confessional statement, the Special Cell of Delhi Police raided a guest house in the Jama Masjid area in Old Delhi last night and recovered one AK-47 rifle and some explosives.

[11] Later, a person called Ghazi Nasiruddin, said to be a commander of Hizbul Mujahideen, and Farooq Qureshi informed Liyaqat that he had been chosen to supervise young “fidayeen” recruits who would commit spectacular terrorist strikes in Delhi. He was told that after the strikes were execued, he should return to the Kashmir valley to settle down and to engage himself in “talent spotting”, that is finding new recruits and facilitating their cross-border travel into Pakistan-occupied Kashmir, he said.

[12] This is the 18th module of Hizb-ul-Mujahideen busted in Delhi, the last being in January, 2011 in which four members of Hizb-ul-Mujahideen were arrested, police said.

[13] India has long accused Pakistan of arming and training Islamic militants and unleashing them into India to attack government forces and other targets – a charge Islamabad denies.

வெடிகுண்டுகளும் ஜிஹாதிகளின் தயாரிப்பும்: கத்திகளினின்று நவீனமாகியுள்ள யுத்தத் தந்திரங்கள்!

பிப்ரவரி 23, 2013

வெடிகுண்டுகளும் ஜிஹாதிகளின் தயாரிப்பும்: கத்திகளினின்று நவீனமாகியுள்ள யுத்தத் தந்திரங்கள்!

Hyderabad-blast-2013-IM

சரித்திரத்தை அறியாத இந்தியர்கள்: சரித்திரத்தை சரியாக இந்தியர்கள் அறிந்து கொள்ளாததாலும், தவறாக எழுதப்பட்டுள்ள சரித்திரத்தைப் படித்தே தமது அறிவை வளர்த்துள்ளதாலும், இந்தியர்களுக்கு உண்மைகள் நிறையவே தெரியாமல் உள்ளன[1]. இன்று தீவிரவாதத்தை-பயங்கரவாதத்தை யாதொரு மதத்துடனும் இணக்கலாகாது என்று ஆவேசமாகப் பேசி ஆர்பாட்டம் செய்து வருகின்றனர், வற்புறுத்துகின்றனர்[2]. அத்தகைய ஆர்பாட்டங்கள், போராட்டங்களே பார்ப்பவர்களுக்கு அச்சத்தை ஊட்டுவதாக உள்ளது. அந்நிலையில் உண்மையைச் சொன்னால் கூட கோபித்துக் கொள்வார்களோ என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால், நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கியும் இருக்கின்றனர். இப்படி மூளைசலவை செய்யப்பட்டும், மூளை மழுங்கியும் இந்தியர்கள் மீதுதான் – ராணுவ வீரர்கள் முதல் பாமர மக்கள் வரை – இத்தகைய தாக்குதல்கள் நடைப் பெற்று வருகின்றன.

IM-IED-Jihad-terror

உண்மையை மறைப்பவர்கள், மறுப்பவர்கள்: ஓட்டு வங்கி அரசியலில் பிழைக்கும் அரசியல் கட்சிகள் தெரிந்தும் உண்மைகளைப் பற்றி பேசவே பயப்படுகின்றன. ஊடகங்களை உபயோகப்படுத்திக் கொண்டு முன்னுக்கு முரணான செய்திகளை தந்தும், தேவையில்லாத விவாதங்களை ஒலி-ஒளிபரப்பியும், சாதாரண மக்களை ஏமாற்றி வருகின்றனர். உயிர்களை இழந்தவரிகளின் உறவினர்கள் தவிக்கும் போது, டிவியில் தாம் தோன்றலாம் என்ற எண்ணத்துடன், விளம்பர மோகத்துடனும், மெழுகு வர்த்தி ஏற்றி வரும் கூட்டமும் பெருகி வருகிறது[3]. ஆனால், எப்படி தீவிரவாதத்தை-பயங்கரவாத ஜிஹாதிகள் கத்தியிலிருந்து, பீரங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என்று மாறி-மாறி தங்களது போர்களை நடத்தி வருகின்றனர் என்று அறியாமல் இந்தியர்கள் உள்ளதுதான் வருத்தப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

21 Indian Mujahideen men, accused in various serial bomb blast cases, being taken to the Maharashtra Control of Organised Crime Act court in Mumbai on 17-02-2009

ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் பின்னணியில் உள்ளதா?: ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் [the United Jehad Council (UJC)] என்ற தீவிரவாத அமைப்புதான் ஐதராபாத் வெடிகுண்டு வெடிப்புகளுக்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஜதமைத்-உல்-முஜாஹித்தீன், ஜைஸ்-உல்-மொஹம்மது, மற்றும் அல்- பதர் என்ற மூன்று பயங்கரவாத ஜிஹாதி குழுக்கள் பிப்ரவரி 13ம் தேதி கூடிப்பேசி, பழிவாங்கும் விதமாக இந்த குண்டுவெடிப்புகளைச் செய்துள்ளதாகத் தெரிகிறது[4].

bhatkal-brothers-riyaz-iqbal

ஐந்து மறைமுகத்தாக்குதல் குழுக்கள் இந்த தில்குஷ் தொடர் குண்டு வெடிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். ஐதராபாதிலிருந்தே அதற்கான வெடிப்பொருட்கள் தருவிக்கப்பட்டிருக்கின்றன. தேசிய புலனாய்வு ஏஜென்ஸி இதன் விஷயமாக பீஹாருக்குச் சென்று விசாரிப்பதாகத் தெரிகிறது[5].

Hyderabad-IM-Suspects

ஒரு கிலோ வெடிப்பொருள் உபயோகப்படுத்தியுள்ளனர். சிகப்பு மற்றும் பழுப்புந்நிற திரவங்களும் காணப்பட்டன. தாமதித்து வெடிக்கும் கடிகாரம் கொண்ட சாதனமும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[6].

நவீன உள்ளே வெடித்து சிதறும் குண்டுகள் தயாரிக்கும் விதம்[7]: மூன்று விதமான வெடிகுண்டுகள்:

  1. சிறிய அளவில் பாக்கெட்டுகள் போன்ற உருவமுடையவை[8] (Package-Type Improvised Explosive Devices (IEDs).
  1. வண்டிகளில் எடுத்து வந்து மோதி வெடிக்கும் வகை[9] [Vehicle Borne IEDs (VBIEDs)].
  1. தற்கொலை / மனித வெடிகுண்டுகள்[10] [Suicide Bombs].

இத்தகைய குண்டுகளை ஜிஹாதிகள் தாராளமாக உபயோகித்து வருவது, நடந்துள்ள வெடிகுண்டு தீவிரவாத-பயங்கரவாத நிகழ்ச்சிகளினின்று தெரிந்து கொள்ளலாம். 150 மீட்டர் இடைவெளி வைத்து பைக்குகள் உள்ள இடத்தில் வைத்திருப்பதால், அவை வெடிக்கும் போது, அதன் விளைவால் பக்கத்தில் உள்ள பைக்குகளின் பெட்ரோல் டேங்குகள் வெடித்து, தீப்பிழம்பை உருவாக்கும். கூர்மையான பொருருட்கள் 30 அடி வரை இருக்கும் மக்களை தாக்கி பாதிக்கும்[11].

ied-cutout01

According to sources, terrorists used over one kg of ammonium nitrate — 400gm in one and 700gm in another — and packed them in aluminum containers with sharpnels. Sources, however, said not too many shrapnels were found from the spot. “Either few shrapnels were used or they were lost in the melee that followed the incident. A timer device, which could be a clock or a cellphone, is suspected to have been used in the circuit, while the charge to the detonator was given using a .3 volt or .9 volt battery. It’s a classic IED used by terror groups,” said an official from the National Bomb Data Centre[12]. ஒரு கிலோ அம்மோனியம் நைட்ரேட் – 400 கிராம் ஒன்றில், 700 கிராம் மற்றொன்றில் – பெட்ரோல் மற்றும் கூர்மையான ஆணிகள், பால்பேரிங்குகள் வைத்து, அலுமீனிய டப்பாக்களில் அடைத்து, அவை வெடிப்பதற்காக, செல்போன் அல்லது நேரத்திற்கு வெடிப்பதற்கான மின்னணு சாதனம் இணைக்கப்பட்டது. வெடிப்பதற்கான சாதனம் .3 volt or .9 volt பாட்டரியுடன் இணைக்கப்பட்டது. இத்தகைய தயாரிப்பு முந்தைய “இந்திய முஜாஹித்தீன்” தயாரிப்புக்களை ஒத்துள்ளது.

அம்மோனியம் நைட்ரேட் உரப்பொருளாக எளிதில் கடைகளில் விற்பக்கப்படுகின்றன. இதனை 94:6 என்ற விகிதத்தில் ஏதாவது ஒரு எளிதில் எரியும் தன்மைக் கொண்ட திரவத்துடன் கலந்தால், அது வெடிகுண்டு தயாரிக்கும் பொருளாகி விடும்[13]. அமெரிக்காவில் அம்மோனியம் நைட்ரேட் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி அவற்றைத் தயாரித்து, சைக்கிள்களில் வைத்து விட்டுச் சென்றால், யாருக்கும் சந்தேகமே வராது என்று திட்டமிட்டு, இந்த ஜிஹாதிகள் உபயோகப்படுத்தி வருகின்றனர்[14].

தப்பிப் பிழைத்தவன் சந்தேகத்தில் உள்ளான்: அப்துல் வாசிப் மிர்ஜா (Abdul Wasif Mirza of Kala Pathar) ஆடைகளை விற்றுவரும் நபர் மறுபடியும் வெடிகுண்டில் காயமடைந்துள்ளது சோகமான கதையென்றே சொல்லலாம், ஏனெனில், கடந்த 2007 குண்டு வெடிப்பில் தனது காலை இழந்தார்[15]. இரண்டு குண்டு வெடிப்பிலும் அந்த இடத்தில் இருந்துள்ளதாலும், தப்பித்துப் பிழைத்துள்ளதாலும், காலாபத்தர் என்ற ஏழு கி..மீ தூரத்திலிருந்து அங்கு டீ குடிக்க வந்தேன் என்று சொல்வதாலும் போலீசார் அவனை சந்தேகிப்பதாகத் தெரிகிறது[16].

 

வேதபிரகாஷ்

23-02-2013


 


[1] “வந்தார்கள் வென்றார்கள்” இப்பொழுது எழுதப்பட்டால், எப்படி எழுதப்படும் என்று யோசிக்கும் போதே உண்மை தெரிகிறது. நிச்சயமாக அந்த எழுத்தாளர் எழுத துணிவிருக்காது என்றே தெரிகிறது.

[2] விஜயும், கமல் ஹஸனும் சந்தோஷமாக இருப்பார்களா அல்லது மற்றொருத் திரைப்படம் எடுக்க துணிவைப் பெறுவார்களா என்றும் தெரியவில்லை.

[3] இதனை ஐதராபாத் விஷயத்தில் ஊடகங்களே ஒப்புக் கொண்டது வியப்பாக இருந்தது.

[4] Sources say that the United Jehad Council (UJC)could be behind the blast. UJC, comprising of militant outfits like Jamiat-ul-Mujahideen (JuM), Jaish-e-Mohammed (JeM) and Al Badr, met on February 13 to plan revenge on India following the execution of Parliament attack accused Afzal Guru.

http://zeenews.india.com/news/andhra-pradesh/live-hyderabad-blasts-united-jehad-council-maybe-behind-the-operation_830723.html

[5] Sources informed that 5 sleeper cells were involved in carrying out the twin blasts in Dilsukh Nagar. The explosive used in the blast was bought in Hyderabad itself and a team of NIA officials will soon head to Darbhanga (Bihar) in search of clues, sources added.

[6] Reports say over 1 kg explosive was used in each bomb in Hyderabad. Also, red and grey liquid was found after the blasts and timer was used to carry out the dastardly incident.

[13] It is easy to put together an explosive using ammonium nitrate, which is even available in the market as fertiliser. All that is needed is to mix it with fuel oil in the ratio 94:6.

http://www.indianexpress.com/news/need-for-checks-on-ammonium-nitrate/1078444/