Posted tagged ‘சோதனை’

மயிலாடுதுறையில் நடப்பது என்ன, என்.ஐ.ஏ சோதனை ஏன், முஸ்லிம்கள் கைது செய்யப் படுவது ஏன், இந்தியாவை துண்டாடும் இந்திய கிலாபா கட்சி, இந்திய கிலாபா முன்னணி தேவையா? (2)

மே 11, 2022

மயிலாடுதுறையில் நடப்பது என்ன, என்.. சோதனை ஏன், முஸ்லிம்கள் கைது செய்யப் படுவது ஏன், இந்தியாவை துண்டாடும் இந்திய கிலாபா கட்சி, இந்திய கிலாபா முன்னணி  தேவையா? (2)

அக்டோபர் 2021ல் அப்துல்லா மீது குற்றப் பத்திரிக்கைத் தாக்கல்: இஸ்லாமிய தேசம் ஒன்றை இந்தியாவில் தனியாக உருவாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மதுரையை சேர்ந்த அப்துல்லா (என்ற) சரவணகுமார் (31), என்பவர் ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது[1].  இவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மதுரை போலீசாரால் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசாருக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்த வழக்கு பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சரவணகுமார் மீது என்ஐஏ அதிகாரிகள், 5 வது செஷன்ஸ் நீதிபதி முன்பு நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்[2]. அப்துல்லா, அப்துல்லாவாகத்தான் செயல்படுகிறான், சரவணன் என்பதால், இந்தியாவை ஆதரிக்கவில்லை. மற்ற இந்துபெயர்கள் கொண்டவர்களும், தமிழகத்தில், இந்தியவிரோதிகளாகத் தான், பேசியும், எழுதியும் வருகின்றனர். பிறகு, இவ்விரு கூட்டங்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தூண்டும் துண்டு பிரசுரங்கள்:  சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததற்கான சில ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறை, திருச்சி, கோவை என, பல இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கி உள்ளனர். இவர்களிடம் எப்போதும் துப்பாக்கி இருக்கும். அதேபோல, ஒரு கைவிலங்கு, அதற்குரிய இரண்டு சாவிகளும் வைத்திருப்பர். காரில் மடிக்கணினி, ‘பவர் பாங்க், வீடியோ பேனா’ உள்ளிட்ட பொருட்களையும் வைத்திருப்பர். இவர்கள், பயங்கரவாத அமைப்புக்கு, சமூக வலைதளம் வாயிலாக, ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு நிதியுதவி செய்து வந்த நபர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்பதற்கான ஆதாரங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். இத்தனையும் தமிழக போலீஸாருக்குத் தெரியாமல் நடக்கின்றனவா அல்லது முஸ்லிம்கள் என்றதால், கண்டுகொள்ளாமல் இருக்கப் படுகிறதா?  

கிலாபத் இயக்கம் நடத்தும் அடிப்படைவாத முஸ்லிம்கள்: ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தஞ்சாவூரில் மூன்று பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் 12-02-2022 அன்று சோதனை நடத்தினர்[3]. கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த மதுரை அப்துல்காதர் என்பவருக்கு ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பியதாகவும் ஓராண்டுக்கு முன்புதேசிய புலனாய்வு அமைப்பினரால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்[4]. இதேபோல, மன்னார்குடியைச் சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரும் நான்கு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கிலாபத் இயக்கத்தில் உள்ள –

  1. தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி கீழவாசல் தைக்கால் தெருவைச் சேர்ந்த மெக்கானிக் அப்துல்காதர் (49),
  2. அதே பகுதியை சேர்ந்த  முகமதுயா சின் (30),
  3. காவேரி நகரைச் சேர்ந்த அகமது (37)

இதனை தொடர்ந்து, தஞ்சை மகர்நோன்புசாவடியில் உள்ள அப்துல்காதர், முகமதுயாசின் மற்றும் காவேரி நகர் முகமது ஆகியோர் வீட்டுக்குள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவாக பிரிந்து சென்றனர். ஆகியோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டை பூட்டி சோதனை நடத்தினர்.

என்.ஐ.ஏ சோதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்த முஸ்லிம்கள்: இந்த சோதனை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி காலை 10 மணி வரை நடைபெற்றது. அப்போது, மூன்று பேரின் செல்போன்கள், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிப்.16-ல் சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் மூன்று பேரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் கொடுத்துவிட்டு, புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே மகர்நோன்புசாவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[5]. ஆதாரம் இன்றி சோதனை நடந்து வருவதாகவும், அவர்கள் மூன்று பேருக்கும் தொடர்பு இல்லை என்றும் கோ‌ஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்[6]. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனையும், பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும் நடப்பதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தஞ்சையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

போலீஸாரை மிரட்டும் அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது எது, யார்?: இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது யார்? என்,ஐ,ஏ.வையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்வது, கேள்விகள் கேட்பது எல்லாம் எந்த அளவுக்கு மோசமானது, ஏன் ஆபத்தானது என்பதனை அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்கும், மறைமுகமாக வேறு பலன்கள் கிடைக்கும் என்றெல்லாம் அரசியல் கட்சிகள் செயல் படலாம். ஆனால், அவையெல்லாம் தேசவிரோதமாகத்தான் முடியும். இவ்வாறு, முஸ்லிம்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதே, ஊக்கம் கொடுப்பதற்கு சமம் ஆகும். மேலும் “தொப்புள் கொடி உறவுகள்” என்றெல்லாம் பேசும் போது, எங்களை ஒன்றும் செய முடியாது, அரசே ஆதரவாக உள்ளது என்ற தொரணையும் வரும். அதுதான், மயிலாடுதுறை போலீஸாரைப் பார்த்து அந்த முஸ்லிம்கள் திமிருடன் கேட்டது.

போலீஸார் உதவியுடன் என்.ஐ.ஏ சோதனை: முன்னதாக, அப்துல்காதர் மற்றும் முகமது யாசின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்துவதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தஞ்சாவூர் ஏடிஎஸ்பி பிருந்தா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சோதனை முடிந்து வெளியில் வந்த என்ஐஏ அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சூழ்ந்துகொண்டு, முழக்கம் எழுப்பினர். அவர்களை போலீஸார் கலைந்து போகச் செய்தனர். இதேபோல, காரைக்கால் நகராட்சி சந்தைத் திடலுக்கு எதிரே உள்ள ராவணன் நகர் பகுதியில் வசிக்கும் உணவக உரிமையாளரான அப்துல்அமீன் என்பவரின் வீட்டிலும் என்ஐஏஅதிகாரிகள் 12-02-2022 அன்று அதிகாலை 5மணி முதல் பகல் 1 மணி வரை சோதனை நடத்தினர். 

14-03-2022 அன்று, கீழ்கண்டவர்கள் மீது வழக்குத்தொடரப் பட்டது[7].

  1. பாவா பஹ்ருத்தீன் என்கின்ற மன்னார் பாவா, சம்சுதீன் மகன், வயது 41, மன்னார்குடி, தஞ்சாவூர் ( Bava Bahrudeen @ Mannai Bava s/o Samsudeen,aged 41 yrs, r/o Mannargudi, Tiruvarur District, Tamil Nad) மற்றும்
  2. ஜியாவுத்தீன் ஜாகுபார் மகன், வயது 40, கும்பகோணம், தஞ்சாவூர் ( Ziyavudeen Baqavi, s/o Jagubar, aged 40 yrs, r/o Kumbakonam, Thanjavur Dt),

இசமா சாதிக் எனப்படுகின்ற சாதிக் பாட்சா இத்தகைய தேசவிரோத நடவடிக்கைகளுடன், மனித நீதி பாசறை என்ற அமைப்பின் உறுப்பினருமாகவும் உள்ளார். அது இப்பொழுது போப்புலர் பிரென்ட் ஆப் இன்டியரேன்றழைக்கப் படுகிறது. எப்.ஐ.ஆர்,ன் படி இந்த ஐந்து நபர்களும், இஐசிஸ் சித்தாந்தத்தைப் பரப்பி, தேசவிரோதத்தை வளர்த்து வருகின்றனர். இந்தியாப் பகுதிகளைத் துண்டாடி அவற்றை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் அல்லது “பிரச்சினை உள்ள பகுதி” என்று அறிவிக்கப் படும் வகையில் தீவிரவாதத்தை உண்டாக்கவேண்டும் என்று,  “இந்திய கிலாபா கட்சி (Khilafah Party of India),” “இந்திய கிலாபா முன்னணி (Khilafa Front of India),” “இந்திய அறிவிஜீவி மாணவர் (Intellectual Students of India),” “இந்திய மாணவர் கட்சி (Student Party of India),” என்றெல்லாம் உருவாக்கி, செயல்பட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

© வேதபிரகாஷ்

11-05-2022


[1] தினகரன், ஐஎஸ்ஐஎஸ் ஆதவாளர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை, 2021-10-07@ 01:03:24.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=710564

[3] தமிழ்.இந்து, 3 பேருக்கு .எஸ் உடன் தொடர்பு? – தஞ்சையில் என்ஐஏ சோதனை: முஸ்லிம்கள் போராட்டத்தால் பரபரப்பு, செய்திப்பிரிவு, Published : 13 Feb 2022 11:22 AM; Last Updated : 13 Feb 2022 11:22 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/767041-nia-raid-in-tanjore-1.html

[5] மாலைமலர், தஞ்சையில் 3 பேரின் வீடுகளில் என்... அதிகாரிகள் திடீர் சோதனை, பதிவு: பிப்ரவரி 12, 2022 13:02 IST..

[6] https://www.maalaimalar.com/news/district/2022/02/12130227/3480787/Tamil-News-NIA-raid-three-houses-in-Tanjore.vpf

[7] NIA Files Charge Sheet against Two Operatives of Hizb-ut-Tahrir in Madurai Iqbal HuT case (RC-08/2021/NIA/DLI) dated 14-03-2022.

டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது!

திசெம்பர் 7, 2013

டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது!

06-12-2013

சென்டிரல் ரெயில் நிலையத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அழகர்சாமி கூறியதாவது[1]: சென்டிரல் ரெயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து நுழைவுவாயில்களிலும் உள்ள ‘மெட்டல் டிடக்டர்’ கதவு(வெடிகுண்டு கண்டறியும்) வழியாகவே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.  பயணிகள் உடைமைகளும் ‘ஸ்கேனர் கருவி மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பிளாட்பாரங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீசாரும் ரெயில் நிலையத்தில் ரோந்து சுற்றி வருகிறார்கள். பயணிகளோடு, பயணிகளாக மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். ரெயில்வே போலீசார் 250 பேரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், நாய் படையினர் உள்பட 350 பேர் 2 ஷிப்ட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

06-12-2013 முஸ்லிம்கள் போராட்டம்

டிசம்பர் 6ம் நாள் நினைவு தினமா, எதிர்ப்பு தினமா அல்லது தீவிரவாதிகளைத் தூண்டிவிடும் தினமா?: உதாரணத்திற்காக, சென்ட்ரல் பற்றிய செய்தி கொடுக்கப்பட்டது, ஆனால், இதே நிலைதான் மற்ற ரெயில்வே மற்றும் பேரூந்து நிலையங்களில். டிசம்பர் 6ம் நாள் மற்றும் அதற்கு முந்தைய தினங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, ஆனால், மாற்ற நாட்களில் சாதாரணமாக இருந்து விடுகிறார்கள். சில நேரங்களில் அவ்வாறான நாட்களில் வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து, அப்பாவி மக்களைக் கொன்று வருகிறார்கள். ஆகவே, தீவிரவாதிகள் அல்லது டிசம்பர் 6ம் தேதியில் பழி வாங்க வேண்டும் என்று கங்கணல் கட்டிக் கொண்டுள்ள முஸ்லிம்கள் இந்த உண்மையினை உணரவேண்டும். ஏனெனில், இவர்களது பிரச்சாரம், அத்தகைய ஜிஹாதி மற்றும் தீவிரவாத முஸ்லிம்களைத் தூண்டிவிடுவதாகும் என்பது தெள்ளத்தெரிந்த விசயமே, பிறகு ஏன் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்?

06-12-2013 முஸ்லிம்கள் போராட்டம்- எதற்கு

06-12-2013 மிரட்டல், பீதி, ஆர்பாட்டங்கள்: திண்டுக்கல்லில், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் பொது அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரையில்பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரெயில் மறியல் செய்ய முயன்ற 40 பேரை போலீசார் கைது செய்தனர்[2]. சென்னையில் கைது! பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்[3], பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடையடைப்புக்கு எந்த அமைப்பும் வேண்டுகோள் வைக்கவில்லையெனினும், சில ஆண்டுகளுக்கு முன் சில சமுதாய அமைப்புகளால் வைக்கப்பட்ட வேண்டுகோள் வழமையாக்கப்பட்டு, ஆண்டுதோறும் இந்நாளில் கடைகள் அடைக்கப்படுகிறது[4], இப்படி செய்திகள் தொடர்கின்றன.

பாபர் இடிப்பு தினத்தையொட்டி காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2013

பாபர் இடிப்பு தினத்தையொட்டி காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2013

திண்டுகல்-மதுரையில்போலீஸ்பாதுகாப்பு: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,200 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில்கள், மசூதிகள் உள்ள பகுதியில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டனர். மேலும் ரெயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். ரெயில் தண்டவாள பகுதியிலும், பார்சல் அலுவலகங்கள் உள்ள பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நகரின் எல்லைப் பகுதியில் நுழையும் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி பஸ்நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.06-12-2013

பாபர் இடிப்பு தினத்தையொட்டி காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2013

பொது  அமைதியை  குலைக்க  சதித்திட்டம்  தீட்டுவதாக  ரகசிய  தகவல்: திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாகன ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் திண்டுக்கல்–தாடிக்கொம்பு ரோடு பி.வி.தாஸ் காலனி அருகில் உள்ள பகுதியில் ஒரு கும்பல் பதுங்கி இருந்து பொது அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது[5]. அவரது உத்தரவின்பேரில் திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 6 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்[6]. பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் செல்லாண்டியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த அகில உலக இஸ்லாமிய முன்னேற்ற கழக நிறுவனர் முபாரக் (வயது 34), ஜாபர் அலி (35), கணவா சையது (29), யாசிக் (24), ஷேக்பரீத் (24), அசனத்புரத்தைச் சேர்ந்த அகில உலக இஸ்லாமிய முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஹபிபுல்லா (28) என தெரியவந்தது[7].

Tindigul Muslims adopting part of IED

அகில  உலக  இஸ்லாமிய  முன்னேற்ற  கழக  மாவட்ட  தலைவர்  ஹபிபுல்லா  முதலியோர்  சிறையில்  அடைப்பு: அவர்கள் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், அரசின் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கத்தோடும், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் செயல்பட சதித்திட்டம் தீட்டியதாக திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்[8]. கைது செய்யப்பட்ட 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டு, 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வேதகிரி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Dindigul Muslims adopting part of IED technology

 ஆணிகளை  எறிந்து  பொதுமக்களை  கொல்லசதி:   மதுரை,   திண்டுக்கல்லில்   10 பேர்  கைது[9]: திண்டுக்கல்லில், பஸ்கள் மீது ஆணிகளை கொண்ட பைப்களை வீசி, பொது சொத்தை சேதப்படுத்தி, பொதுமக்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய 10 பேரை, மதுரை, திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் பகுதியில், டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர், நேற்று, சோதனை மேற்கொண்டனர். அப்போது, செல்லாண்டியம்மன் கோயில் பகுதியில் கும்பல் ஒன்றை சுற்றி வளைத்தனர். இதில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; எட்டு பேர் தப்பியோடினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அகில உலக இஸ்லாமிய கழகத் தலைவர் முபாரக், 34, ஜாபர்அலி, 35, கணவா சையது, 29, யாசிக், 28, சேக்பரித், 23, அபிபுல்லா, 28, என, தெரிந்தது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யவும், பொது சொத்துக்கு சேதப்படுத்தவும் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து, திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் கைது செய்தனர்[10].

மதுரையில்  பெட்ரோல்  குண்டுவீசி,   அரிவாளால்  வெட்டி  ஒருவர்  கொல்லப்பட்டதற்கு  பழிக்குப்  பழியாக  சம்பவம்  நடந்தது  போல்  திட்டமிட்டவர்கள்  மதுரையிலும்  கைது: மதுரையிலும் 4 பேரை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஷேக்முகமது,19, கல்லூரி மாணவர் தாகா முகமது, 20, தெற்குவாசல் மீன்வியாபாரி நசீர்,22, நெல்பேட்டை மீன்வியாபாரி சம்சுதீன், 25, கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நேற்று திண்டுக்கல்லில் நடந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு செல்ல முடிவு செய்திருந்தனர். செல்லும் வழியில், திண்டுக்கல் நகர் பகுதியில், மக்கள் கூடும் இடங்களில், பஸ் ஓட்டி வரும் டிரைவர்கள் மீது ஆணிகளை கொண்ட “பைப்’களை வீசி, விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர். அங்கு முடியாதபட்சத்தில், மதுரை அவனியாபுரம் “ரிங்’ ரோட்டில் திட்டத்தை நிறைவேற்ற இருந்தனர். காரணம், மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டி ஒருவர் கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சம்பவம் நடந்தது போல், போலீஸ் கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டிருந்தனர். இவ்வாறு, போலீசார் கூறினர்.

டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது: இந்த வருடம் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வேதபிரகாஷ்

© 07-12-2013


[5] தினமணி, பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்த சதி செய்ததாக 6 பேர் கைது, By திண்டுக்கல், First Published : 07 December 2013 12:17 AM IST

[6] தினத்தந்தி, பாபர்மசூதிஇடிப்புதினத்தில்பொதுஅமைதியைகுலைக்கசதித்திட்டம்தீட்டிய 6 பேர்கைதுதிண்டுக்கல்லில்பரபரப்பு, பதிவு செய்த நாள் : Dec 06 | 08:51 pm

[9] தினமலர், ஆணிகளைஎறிந்துபொதுமக்களைகொல்லசதி: மதுரை, திண்டுக்கல்லில் 10 பேர்கைது, பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013,23:01 IST

சவூதியில் 5 வயது மகளை கொடுமைப் படுத்தி, கற்பழித்துக் கொன்ற இஸ்லாமிய போதகருக்கு 8 ஆண்டு சிறை, 800 சவுக்கடி – சாட்சி சொன்ன மனைவிக்கும் தண்டனை!

ஒக்ரோபர் 10, 2013

சவூதியில் 5 வயது மகளை கொடுமைப் படுத்தி, கற்பழித்துக் கொன்ற இஸ்லாமிய போதகருக்கு 8 ஆண்டு சிறை, 800 சவுக்கடி – சாட்சி சொன்ன மனைவிக்கும் தண்டனை!

சவுதி அரேபிய மதபோதகர்

ஷரீயத்தின்படிதண்டனைக்கொடுக்கப்பட்டது: சவுதி அரேபியாவில், ரியாதில், பாலியல் பலாத்காரம் செய்து, ஐந்து வயது மகளை, கொலை செய்த, பிரபல இஸ்லாமிய மத போதகருக்கு, எட்டு ஆண்டு சிறையும், 800 சவுக்கடியும், தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது[1]. உலகம் முழுவதும் இதைப் பற்றி வலுவான கருத்து உரூவானதால், சவுதி அரச குடும்பத்தினரே தலையிட்டு குற்றவாளி வெளிவராமல் செய்ததாகத் தெரிகிறது[2]. மேலும் வேடிக்கை என்னவென்றால், புகார் கொடுத்த அவரது முந்தைய இரண்டாவது மனைவிக்கு 10 மாதங்கள் சிறை மற்றும் 150 சவுக்கடி என்று தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது[3]. ஏனெனில், பெண்ணாகிய இவர் சாட்சியாக நீதிமன்றத்தில் தோன்றி சாட்சியம் சொல்லியிருக்கிறார். இஸ்லாமியச் சட்டத்தின் படி, ஒரு பெண் சாட்சி கூறமுடியாது. இப்பொழுது ஒரு மில்லியன் ரியால் [one million riyals ($270,000) in ‘blood money’] முந்தைய இரண்டாவது மனைவிக்குக் கொடுக்கப் படவேண்டும் என்றும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  தலாக் / விவாகரத்து செய்யப் பட்ட இவர் மறுபடியும் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளைப் பெற்றிருக்கிறார். தனது அந்த குழந்தைகளைப் பற்றியும் கவலைப் படுவதாகக் கூறுகிறார். அதனால், அரசுதான் அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இஸ்லாமிய குருவின் குழந்தை

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இஸ்லாமிய குருவின் குழந்தை

மகளைக்கொடுமைப்படுத்தி, கற்பழித்துக்கொன்றஇஸ்லாமியமதபோதகர்: சவுதி அரேபியாவை சேர்ந்தவர், பய்ஹான் அல் கம்தி [Fayhan al-Ghamdi]. முஸ்லிம் மத போதகரான இவர், அந்நாட்டு “டிவி’ நிகழ்ச்சிகளில், மத போதனைகள் செய்து வந்தார். அவர் தனது 5 வயது மகள் லாமா அல் கம்தியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் லாமாவை அவர் தாக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்தார்.

  • மண்டயோடு நொறுங்கியிருந்தது,
  • விலா எலும்புகள் உடைந்திருந்தன,
  • ஒரு நகம் பிய்க்கப்பட்டிருந்தது,
  • உடலில் பல இடங்களில் அடித்ததாலும்-
  • தீயினால் சுட்டதாலும் காயங்கள் இருந்தன.

டிசம்பர் 25, 2011 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு 2012 அக்டோபர் மாதம் பலியானார்[4]. வயர்கள் மற்றும் கொம்பு முதலியவற்றை உபயோகப் படுத்தி அடித்ததாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து சில மாதங்கள் சிறையில் இருந்த பஹ்யான் லாமாவின் தாய்க்கு “ரத்தப் பணம்” என்ற இழப்பீடு கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டார்[5].

லாமா என்ற அந்த குழந்தை

லாமா என்ற அந்த குழந்தை

ஷரீயத்மற்றும்சட்டகுழப்பங்கள்: இவர், தன், எட்டு வயது மகளை, பல முறை பலாத்காரம் செய்து இறுதியில் கொலை செய்து விட்டதாக, மாஜி மனைவியான, குழந்தையின் தாய், போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், தமாதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமாதிக்கு, எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 800 சவுக்கடியும் வழங்கி அந்நாட்டு கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. “தமாதிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்’ என, பலரும் குரல் கொடுத்துள்ளனர். “குழந்தையின் தாய், நஷ்ட ஈடு கோரியுள்ளதால், தமாதிக்கு மரண தண்டனை விதிக்க இயலாது’ என, கோர்ட் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ஷரீயத்தின் படி, “ரத்தப் பணம்” கொடுக்கப் பட்டால், பெண் வாங்கிக் கொள்ளவேண்டும், தண்டனை அதோடு முடிந்து விடும். இதைத்தான் சவூதி ஊடகங்கள் கூறுகின்றன[6].

கற்பழித்து கொலை செய்த இஸ்லாமிய மதபோதகர்

கற்பழித்து கொலை செய்த இஸ்லாமிய மதபோதகர்

ஷரியத்தின் நிலைமை: ஷரீயத்தின் படி, ஒரு பெண், ஆணுக்கு எதிராக சாட்சியம் சொல்ல முடியாது. அதிலும் கற்பழிப்பு வழக்கில் சொல்லமுடியாது. கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டாலும், இஸ்லாமிய ஷரீயத் சட்டத்தில் படி ஆட்சி நடக்கும் அங்கு மனைவிகளைக் கொல்லும் கணவர்களுக்கு மற்றும் குழந்தைகளைக் கொல்லும் தகப்பன்களுக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது[7]. “ரத்தப் பணம்” அல்லது இஸ்லாமிய இழப்பீடு பணம் கொடுக்கப் பட்டால், ஆண்களுக்கு தண்டனை கொடுக்க முடியாது. இந்த வழக்கில் கூட, முந்தைய மனைவி பணத்தைப் பெற்றுக் கொண்டதால், சிறையிலிருந்து பய்ஹான் அல் கம்தி வெளியே வரக்கூடும் என்ற நிலைமை இருந்தது.

பய்ஹான் அல்-கம்தி

பய்ஹான் அல்-கம்தி

சவுதிசமூகத்தொண்டர்களின்அதிருப்தி: இதனால், ரண்டா அல்-கலீப் [Randa al-Kaleeb], அஜீஜா அல்-யூசுப் [Aziza al-Yousef], மனல் அல்-செரீப் [Manal al-Sharif ] போன்ற சமூகதொண்டர்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்[8]. “ஒன்று அவனுக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை கொடுக்கப் பட்டிருக்க வேண்டும், அப்பொழுதுதான் இது போன்ற குற்றங்கள் செய்பவர்களுக்குப் படிப்பினையாக இருந்திருக்கும்”, என்று கூறினர். பய்ஹான் அல் தமாதி தனது மகளின் கற்புப் பற்றி சந்தேகப்பட்டதால் (அதாவது அவள் தனது கன்னித்தன்மையை இழந்து கொண்டே இருக்கிறாள் என்று சந்தேகம் வந்ததாம்[9]), அவளை கொடுமைப் படுத்தி, கற்பழித்திருக்கிறான், என்று பாகிஸ்தானிய ஊடகம் கூறுகின்றது[10].

© வேதபிரகாஷ்

10-10-2013


[2] After the case attracted international attention, members of the Saudi Arabia’s Royal Family are now believed to have blocked al-Ghamdi’s release and ensured that a stronger sentence is upheld.

http://www.dailymail.co.uk/news/article-2277437/Saudi-celebrity-cleric-raped-murdered-daughter-claimed-injured-doubted-virgin.html

[3] Ghamdi’s second wife, accused of taking part in the crime, was sentenced to 10 months in prison and 150 lashes, said Rasheed, who is lawyer for the girl’s mother. Ghamdi was convicted of “raping and killing his five-year-old daughter Lama,” he added.

[6] Albawaba News reported the judge as saying: ‘Blood money and the time the defendant had served in prison since Lama’s death suffices as punishment.’But the Saudi Justice Ministry responded saying that the cleric was still in prison and that the case was continuing. The death penalty is thought to be unlikely in this case.

[9] It was reported that al-Ghamdi had suspected his daughter of losing her virginity and had beaten her and molested her in response.  http://www.bbc.co.uk/news/world-middle-east-24438375