Posted tagged ‘சென்னை’

மறுபடியும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!

செப்ரெம்பர் 23, 2017

மறுபடியும் .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய, தொடர்புடைய, இன்னொரு ஆதரவாளன் சென்னையில் கைது!

ISIS-K kERALA NEXUS- WOMEN TOO

தென்னகத்தில் .எஸ் ஆதரவு அதிகம் ஏன்?: ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் உலகம் முழுவதையும் தனது தீவிரவாதத்தினால் அச்சுறுத்தி வருகிறது[1]. தொடக்கத்தில் ஈராக் மற்றும் சிரியாவில் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, பின் உலகின் பல்வேறு நாடுகளில் ஆட்களை சேர்த்து, படர்ந்து, விடரிந்து தாக்குதல் நடத்தி வருகிறது[2].  ஐ.எஸ் அமைப்புக்கு உலகம் முழுவதும் ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது, அதன்படியே, இந்தியாவிலேயே ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அந்த தீவிரவாதையக்கத்தில் சேர்ந்து, போராடி, இறந்து கொண்டிருக்கும் செய்தியும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவிலும் ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணி நடந்து வருவதுவாடிக்கையான விசயம் ஆகிவிட்டது. இதுதொடர்பாக, என்.ஐ.ஏ தானாக விசாரணையில் விவரங்கள் வெளிவந்தன. கேரளா மற்றும் தமிழகத்தில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகப் பலர் கைது செய்யப்பட்டனர். ஆகவே தன்னகத்தில், ஐ.எஸ் ஆதரவு அதிகமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

Shahul Hameed, Chennai arrested by NIA -and Khaja Moideen

சாகுல் ஹமீது, ஓட்டேரியில் கைது (18-09-2017): இந்நிலையில், 18-09-2017 அன்று ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக, சென்னை ஓட்டேரிப் பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது [Shakul Hameed (A-3), son of Mohammed Zackariya,resident of House No. 59, S. S. Puram, A-Block, 10th Street, Ottery, Chennai- 600 012] என்பவவர் முதல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஹாஜா பக்ருதீனுடன் [Haja Fakkurudeen (A)] தொடர்பு கொண்டவன். சக- குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காஜ மொஹித்தீன் [co-accused Khaja Moideen (A-2)] மற்றும் இவன் ஹாஜா பக்ருதீனுடன் தமிழகம் வந்தபோது, கடலூரில் சந்தித்துள்ளான். பிறகு தமிழக,ம் மற்றும் கந்நாட மாநிலங்களில் பல இடங்களுக்கு சென்று ஐசிஸுக்கு ஆள் சேர்த்திருக்கிறார்கள். சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ் தீவிரவாத இயக்கதுக்கு ஆதரவாக பரப்புரை செய்ததாகவும், அந்த அமைப்புக்கு நிதி திரட்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்[3]. அப்போது அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்[4]. பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இந்த வழக்கில் 3-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 15-09-2017 அன்று காஜா மொஹித்தீன் இவ்வழக்கில் ரீமான்டில் வைக்கப்பட்டான். தவிர பல குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டிருக்கிறான்[5].

Swalih was settled in Chennai for some time now with wife and 2-year-old son.

சென்னையில் கடந்த மாதங்களில் கைதானவர்கள்: ஹரூன் ரஷீத் [முகமதி அலி ஜின்னாவின் மகன்] என்பவன் 04-07-2017 அன்று கைது செய்யப்பட்டான். இதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மண்ணடியில் ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது[6].  18-09-2017 அன்று கைது செய்யப்பட்ட சாகுல் அமீதையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காஜா மொய்தீனையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. சார்பில் நாளை பூந்தமல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது[7]. சென்னையில் தொடர்ந்து ஐ.எஸ் விவகாரத்தில் பலர் கைது செய்து பட்டு வருவது, திட்டமிட்டி ஆட்கள் வேலை செய்து வருவது தெரிகிறது. தேவையில்ல்லாத விசயங்களை வைத்துக் கொண்டு, தினமும் அலசும் ஊடகங்கள். இத்தகைய அபாயகரமான விசயத்தைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது” என்றதற்கு மேலாக ஊடகத்தினருக்கு, வேறெந்த விவரமும் கிடைக்காதது போலமூன்ரு-நான்கு வரிகளில் செய்தி வெளியிட்டுள்ளன[8]. என்.ஐ.ஏ. ஊடகத்தினருக்கான அறிக்கை என்பதிலிருந்தே மேலும் விவரங்களை வெளியிடலாம்[9]. ஆனால் அவர்களுக்கு பயமா அல்லது வெளியிடக் கூடாது என்று யாராவது ஆணையிட்டுள்ளார்களா என்று தெரியவில்லை.

Nasser who designed ISIS flag is from Chennai

தினகரன் அளிக்கும் கூடுதல் தகவல்கள்[10]: டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீஸ் தரப்பில் ஆர்.சி. 3/2017 என்ற  வழக்கு எண்ணில் பிரிவுகள் 15, 16, 17, 20, 29 கீழ் சாகுல் ஹமீதை கைது செய்துள்ளனர்.  இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் முதல் குற்றவாளியாக காஜா பஹ்ரூதின் என்பவர் காட்டப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.  மேலும் அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி தனி கிளை சிறையில் உள்ள காஜா மொய்தீன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சாகுல் ஹமீது மற்றும் காஜா மொய்தீன் ஆகிய இருவரையும்  தேசிய புலனாய்வு முகமை போலீசார், கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை 19-09-2017 அன்று வந்தது.

Shahul Hameed, Chennai arrested by NIA -19-09-2017 - Dinakaran-2

அரசு தரப்பு வழக்கறிஞர் கூறிய தகவல்கள்[11]: இந்நிலையில் இது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பிள்ளை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக, நிதி திரட்டியதாக, ஆதரவாக செயல்பட்டதாக சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரை டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் இது தொடர்பாக சிரியா நாட்டிற்கு சென்று அங்கு ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிகிறது. மேலும் அம்பத்தூர் இந்து முன்னணி  பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில்  காஜா மொய்தீன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு உள்ளதாக அறியப்பட்டுள்ளது. அவர் இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் புலனாய்வு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு டெல்லி தேசிய புலனாய்வு முகமை போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை கொச்சின் தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரிப்பார்கள்சாகுல் ஹமீது மற்றும் காஜா மொய்தீன் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர் தரப்பிலிருந்து கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது. நீதிபதியின் உத்தரவுக்குப்பின் சாகுல் ஹமீது, காஜா மொய்தீன் இருவரையும் தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் டெல்லி அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்த உள்ளனர். இவர்களை முழுமையாக விசாரித்த பிறகுதான் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்கள் பதுங்கி இருக்குமிடம்இவர்களது தலைவர் யார்? இவர்களை இயக்குபவர் யார் இவர்களுக்கு நிதி உதவி எப்படி வருகிறது? உள்ளிட்ட  பல்வேறு தகவல்கள் தெரியவரும்’’ என்றார்.

© வேதபிரகாஷ்

23-09-2017

Shahul Hameed, Chennai arrested by NIA -19-09-2017 - Deccan Herald-modified

[1] விகடன், .எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது!, Posted Date : 19:19 (18/09/2017); Last updated : 21:09 (18/09/2017), இரா.குருபிரசாத்.

[2] http://www.vikatan.com/news/tamilnadu/102625-nia-arrested-an-accused-shakul-hameed-from-chennai-in-a-case-related-to-isis.html

[3] தினமணி, சென்னையில் .எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர் கைது!, Published on : 18th September 2017 05:37 PM

[4]http://www.dinamani.com/tamilnadu/2017/sep/18/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2775335.html

[5] On 15th September, 2017, accused Khaja Moideen @ Abdullah Muthalif (A-2), son ofChinna Thambi Ambalam, resident of Salapathputhu Nagar, Kollumedu, Taluk Kattumanarkovil, Cuddalore district, Tamil Nadu who has already been in judicial custody in Crime No. 746/2014 of Ambattur Police Station, Chennai has been remanded in this case by the Hon’ble NIA Special Court (Sessions Court for Bomb Blast cases), Poonamalle, Chennai. The custody of Khaja Moideen @ Abdullah Muthalif (A-2) has been sought by the Chief Investigation Officer in RC-03/2017/NIA/DLI.

 

[6] மாலைமலர், .எஸ். தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியவர் சென்னையில் கைது, பதிவு: செப்டம்பர் 18, 2017 19:10.

[7] http://www.maalaimalar.com/News/TopNews/2017/09/18191008/1108657/NIA-arrests-ISIS-supporter-in-Chennai.vpf

[8] தமிழ்.ஒன்.இந்தியா, .எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் சென்னையில் கைது. லக்ஷ்மி பிரியா, திங்கர்கிழமை.செப்டம்பர் 18, 2017  16:53 [IST]

[9] https://tamil.oneindia.com/news/tamilnadu/nia-makes-one-arrest-chennai-isis-case-296179.html

[10] தினகரன், சென்னையில் .எஸ். இயக்க ஆதரவாளர் கைது, 2017-09-19@ 00:43:12

[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=336681

சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு தீவிரவாதிகள் அனுப்பியது, பர்மா பஜார் பணம், ஜாகிர் நாயக்கின் ஈஞ்சம்பாக்கம் பள்ளி – தீவிரவாதத்தில் சென்னையின் தொடர்பு (2)?

ஏப்ரல் 13, 2017

சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு தீவிரவாதிகள் அனுப்பியது, பர்மா பஜார் பணம், ஜாகிர் நாயக்கின் ஈஞ்சம்பாக்கம் பள்ளி – தீவிரவாதத்தில் சென்னையின் தொடர்பு (2)?

IIL, Injambakkam, Jakir Naik

ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் ஜாகிர் நாயக்கின் பள்ளியில் நடப்பதென்ன? (மார்ச்.2017): சென்னை மற்றும் சென்னையின் புறப்பகுதிகளில் இஸ்லாமிய இயக்கங்கள், உருது பள்ளிகள், மசூதிகள், தங்குமிடங்கள் என்று பலவற்றை கடந்த ஆண்டுகளில் உருவாக்கி வருகின்றன. குல்லா அணிந்த இளைஞர்கள் வரிசையாக வருவதும்-செல்வதும் காண நேரிடுகிறது. இவர்கள் எல்லோரும் யார், எங்கிருந்து வருகின்றனர், ஏன் வருகின்றனர் என்றேல்லாம் புதிராக உள்ளன. பொதுவாக, மக்கள், இவற்றைக் கவனித்து வந்தாலும், “நமக்கேன் வம்பு” என்ற முறையில் கண்டுகொள்ளாமல் இருந்து விடுகின்றனர். ஆனால், அவ்வப்போது செய்திகள் வரும் போது, “அப்பொழுதே நினைத்தேன், அந்த ஆள் மூஞ்சியே சரியில்லை, தீவிரவாதி மாதிரி தான் இருந்தான்” என்று தமக்குள் பேசிக்கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.

Islamic International school, Injambakkam, Jakir Naik

இந்நிலையில் ஈஞ்சம்பாக்கத்தில், கிழக்குக் கடற்கரை சாலையில் தடை செய்யப் பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி பௌன்டேஷனுக்கு சொந்தமான, இஸ்லாமிய அனைத்துலக பள்ளி [Islamic International School in Injambakkam] பற்றி, என்.ஐ.ஏ விசாரிக்க ஆரம்பித்துள்ளது[1]. இதன் மதிப்பு ரூ ஏழு கோடிகளுக்கும் அதிகமாகவுள்ளது. ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தப் பட்டு, அதன் கீழ் நிர்வகிக்கப் பட்டு வருகிறது. ஜாகிர் நாயக் இங்கு பலமுறை வந்து சென்றதும் தெரிகிறது[2]. ஐசில், ஜாகிர் நாயக், தீவிரவாத செயல்கள் முதலியவற்றை விசாரித்து வரும் நிலையில், இங்கும் சோதனையிடப் பட்டுள்ளது. ஆனால், அந்த பள்ளி நிர்வாக முதன்மை பொறுப்பாளர்கள் / டிரஸ்டிகள், விசாரணைக்கு வராமல் தப்பித்து வருகின்றனர். பிரச்சினை ஒன்றும் இல்லை என்றால், அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

Rohan Imtiyaz and young jihadis 01-07-2016 insired by Zakir Naik.

முஸ்லிம் இயக்கங்களே இதனை எடுத்து நடத்த தயங்குகின்றன: என்.ஐ.ஏ. தாமதமாக இப்பள்ளியைப் பற்றி தெரிந்து கொண்டது, விசாரணை மேற்கொள்வதும் வியப்பாக உள்ளது. ஏனெனில், ஜாகிர் நாயக் சென்னைக்கு மற்றும் இங்கு வந்தபோது, பிரம்மாண்டமான விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. இப்பொழுது தான், வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதால், இப்பள்ளிக்கு நிதிசெல்வது தடுக்கப்பட்டுள்ளது[3]. மேலும் மும்பையிலிருந்து நிதி வருவது நிறுத்தப் பட்டுள்ள நிலையில், இது ஒரு “தீவிரவாத பள்ளி” என்ற நிலையில் கருதப்படுகிறது. தீவிரவாதம் மற்றும் ஐசிஸ் போன்றவற்றுடன் தொடர்பு படுத்தியுள்ளதால், முஸ்லிம்கள் கூட அதனை எடுத்து நடத்த தயங்குகின்றனர். வேறொரு முஸ்லிம் இயக்கமோ அல்லது என்.ஜி.ஓ போறோர் இப்பள்ளியை எடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும் என்று, அப்பள்ளியைச் சேர்ந்தவர் கூறினார். ஆனால், “இப்பொழுதுள்ள நிலைமையில், யாரும் இதை எடுத்து நடத்துவார்கள் என்று எனக்கு தோன்றவில்லை,” என்று மனிதநேயக் கட்சி, தலைவர், எம். எச். ஜவஹிருல்லாஹ் போன்றோர் கூறியிருப்பதும் நோக்கத் தக்கது[4]. சமீபத்தில் கொட்டிவாக்கத்திலும், இரு சிசிஸ் ஆள் பிடிபட்டுள்ளான். ஜாகிr நாயம் சென்னைக்கு பலமுறை வந்தபோது, சில பொது நிகழ்ச்சிகள் என்ற பெயரில் பிரமாண்டமான கருத்தரங்கத்தை, லட்சங்கள் செலவழித்து ஏற்பாடு செய்யப்பட்டன என்று குறிப்பிடத்தக்கது.

chennai-mannady-isis-sponsor-arrested-mohammed-iqbal

பர்மா பஜார் ஆட்கள் ஹவாலா பணத்தை நன்கொடையாகக் கொடுத்தது: மேலும், சென்னையில் உள்ள நான்கு முக்கிய பிரமுகர்களிடம் அவர் ஐ.எஸ் இயக்கத்திற்காக பணம் பெற்றுள்ளதாகவும், அவர்கள் யார் யார்? என்பதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேடப்படும் 4 பேரும் ரூ.3 லட்சம் வரை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு மண்ணடி, பர்மா பஜார் பகுதியைச் சேர்ந்த சிலர் ஹவாலா பணத்தை நன்கொடையாக வழங்கியிருப்பது தெரியவந்தது[5]. மண்ணடியில்ணைரும்பு வியாபாரம் செய்யும் எவரும் பலவித வரிகளை ஏய்த்து தான் வியாபாரம் செய்து வருகின்றனர். பர்மா பஜார் வியாபாரத்தைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கருப்புப் பணம் அதிகமாக உற்பத்தியாவதே அத்தொழில்களில் தான். போதாகுறைக்கு, ஹவாலா என்றால், கேட்கவா வேண்டும். இத்தகைய பணம் தான் தீவிரவாதத்திற்கு செல்கிறது. இதையடுத்து போலீஸார், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்து போலீஸார் 22-02-2017 புதன்கிழமை விசாரணை செய்தனர்[6]. அளித்திருப்பதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது 20-02-2017லிருந்து, அந்த நான்கு பேரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார், அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை மூலம், சென்னையில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் பற்றிய மேலும் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது[7]. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு உதவி செய்ததாகவும், அந்த இயக்கத்தில் இருந்ததாகவும் தமிழகத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[8]. சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த சுவாலிக் முகமது, திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சுபஹானி, கோவையைச் சேர்ந்த அபு பஷீர் உள்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 3 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

© வேதபிரகாஷ்

13-04-2017

sulaiman-house-searched-in-chennai-where-incriminating-documents-seized

[1] Investigators with the National Investigation Agency (NIA), who are looking for possible links between controversial televangelist Zakir Naik and Islamic State of Iraq and Syria (IS), have made quiet visits to Chennai in the recent past to probe the Islamic International School in Injambakkam, which is allegedly funded by his banned Islamic Research Foundation (IRF), which has assets worth 7.05 crore. The Centre had in November 2016 banned the IRF and the Enforcement Directorate(ED) attached properties of IRF, mostly in Mumbai and Chennai, valued at 18.37 crore. Naik was chairman of IRF Educational Trust and president of the Islamic Research Foundation in Mumbai, which runs Islamic International School on East Coast Road in the city.

Times of India, National Investigation Agency sleuths bring Zakir probe to Chennai, A Selvaraj, TNN, Mar 24, 2017, 06.46 AM IST.

[2] NIA has issued fresh summons for a second time to Naik to appear before investigators regarding foreign funds directed to the non-governmental organisation. Officers said they could not, during the probe, speak about the discoveries they have made in Chennai. “It is routine to monitor the activities of a suspect in such a case,” an investigating officer said. But the agency is keen to make a breakthrough in the investigation of the activities of Naik – who they suspect to have influenced youngsters to join IS – after failing to make headway in the case it filed against him last year. Indian security agencies put Naik under the lens after at least one suspect in a deadly cafe attack in the Bangladesh capital of Dhaka last July 2016 said the televangelist’s speeches inspired him. Naik, who security agencies say is in Saudi Arabia, is suspected of “promoting enmity between groups on religious grounds”, an NIA officer said. Efforts to reach school management proved futile.

http://timesofindia.indiatimes.com/city/chennai/national-investigation-agency-sleuths-bring-zakir-probe-to-chennai/articleshow/57802280.cms

[3] Times of India, Zakir inquiry: ‘Terror’ severs school funds, TNN | Updated: Mar 27, 2017, 06.22 AM IST.

[4] “If a minority institution or an NGO takes charge of the school, it will be a more secular institution,” he said. “We want to open our doors to teachers and students of all faiths.” But Muslim philanthropists and activists don’t think there will be any takers for a school under the government scanner. “I don’t think anyone will [want] to take over the school in these circumstances,” Manithaneya Makkal Katchi leader M H Jawahirullah said.

http://timesofindia.indiatimes.com/city/chennai/zakir-inquiry-terror-severs-school-funds/articleshow/57845242.cms

[5]தினமணி, .எஸ்.  பயங்கரவாத  இயக்கத்துக்கு  ஹவாலா பணம்:  என்...  விசாரணை,  Published on 24 February, 2017, 03.24 AM;  UPDATED:  FEBRUARY 22, 2017 01:18 IST

[6]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/24/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2654997.html

[7]தினமணி, .எஸ். இயக்கத்துக்கு நிதி அளித்த சென்னைஇளைஞர் கைது: மேலும் 4 பேர் சிக்குகின்றனர்: சிரியா செல்லதிட்டமிட்டது அம்பலம், Published on : 21st February 2017 01:47 AM

[8]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/21/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2653020.html

சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு தீவிரவாதிகள் அனுப்பியது எப்படி – தீவிரவாதத்தில் சென்னையின் தொடர்பு (1)?

ஏப்ரல் 13, 2017

சென்னை கொரியர் கம்பனியிலிருந்து வெடிமருந்து பொருட்களை மதுரைக்கு தீவிரவாதிகள் அனுப்பியது எப்படி – தீவிரவாதத்தில் சென்னையின் தொடர்பு (1)?

explosives sent to Madurai from Chennai courier co 07-04-2017

சென்னையில் வண்ணாரப்பேட்டையிலிருந்து மதுரைக்கு கொரியர் சர்வீஸ் மூலம் வெடி குண்டு பொருட்கள் அனுப்பப்பட்டது: சென்னையில் வண்ணாரப்பேட்டையிலிருந்து மதுரைக்கு கொரியர் சர்வீஸ் மூலம் வெடி குண்டு பொருட்கள் பலமுறை அனுப்பப்பட்டுள்ளதை என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ஆனால், வழக்கம் போல ஊடகங்கள், கொரியர் கம்பெனி இருப்பது வண்ணாரப்பேட்டை அல்லது பல்லாவரம் என்று செய்திகளில் குறிப்பிடுகின்ற்ன. இவ்விசயத்தில் ஆகஸ்ட் 2016ல் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்,

  1. என். அப்பாஸ் அலி [N Abbas Ali (27)] ,
  2. மொஹம்மது அயூப் அலி [Mohammed Ayub Ali (25)],
  3. எம். சம்ஸுத்தீம் கரீம் ராஜா [M Samsumdeen Karim Raja (23)],
  4. எஸ். கார்வா சம்ஸுத்தீன் [S Karwa Samsumdeen (25)] மற்றும்
  5. எஸ். தாவூத் சுலைமான் [S Dawood Sulaiman (25).Of these, four were arrested by NIA in August 2016 in Madurai and Dawood Sulaiman was nabbed in Chennai].

ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர், கேரள மாநிலம் கொல்லம், மலப்புரம், கர்நாடக மாநிலம் மைசூர் ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் கடந்த ஆண்டு வெவ்வேறு நாட்களில் குண்டுகள் வெடித்தன. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் குண்டு வெடித்த இடங்களில் இருந்து சில துண்டு பிரசுரங்கள், பென்டிரைவ் கண்டு பிடிக்கப்பட்டன. அதில் இருந்த தகவல்களை ஆய்வு செய்ததில், அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் அடிப்படைவாத அமைப்பான ‘தி பேஸ் மூவ்மென்ட்’ என்ற அமைப்பே குண்டுவெடிப்புகளுக்கு காரணம் என்பது தெரியவந்தது.

தென்னக நான்கு மாநிலங்களுலும் பரவி ஒற்றுமையாக, உதவியுடன் செயல்பட்டு வரும் தீவிரவாதம்: மதுரையில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த, ஆறு பயங்கரவாதிகளை, ஆந்திர மாநில போலீசார், தங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சித்துார் நீதிமன்ற குண்டு வெடிப்பு தொடர்பாக, அவர்களிடம் ஆந்திர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், இஸ்லாமிய தீவிரவாதம் கேரலா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என்று நான்கு மாநிலங்களிலும் பரவியிருப்பதுடன், தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. மேலும், இவர்கள் குடும்பத்தோடு செயல்பட்டு வருவது, கர்நாடகா மற்றும் ஆந்திரா குண்டுவெடுப்புகள், கைதுகள் முதலியவை எடுத்துக் காட்டியுள்ளன. இருப்பினும், குடும்பத்தவர், ஒன்றும் தெரியாதது போல நடித்து, சட்டரீதியில், குறுக்கு வழியில், அவர்களைக் காப்பாற்ற, உண்மைகளை திரிக்க, திசைத் திருப்ப முயன்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொலயுண்டது, மேலும் ஆயிரக்கணன்னாணவர் கை-கால் இழந்து கிடப்பது போன்ற குரூர செயல்களை செய்தவர்களைக் கண்டிக்காமல், அவர்களைக் காப்பாற்ற நினைக்கின்றனர் எனும் போது, இவையெல்லாம் திட்டமிட்டே செயல்படுகிறது தெரிகிறது. இவ்வாறு, மனிதர்களிடம் ஈவு-இரக்கம் இல்லாமல், மதவெறியோடு கொன்று வரும் இவர்களுக்கு, இனி இரக்கம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று பாதிக்கப்பட்டவர், ஒருநிலையில் வெளிப்படையாக சொன்னாலும் வியப்படுவதற்கில்லை.

Chennai cuuriers

சென்னைமதுரை தீவிரவாத கும்பல் தொடர்புகள்: குண்டு வைத்தவர்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதையும் என்ஐஏ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கிடந்த பிரஷர் குக்கரில் சீரியல் எண்கள் இருந்தன. அதன் அடிப்படையில் விசாரித்ததில், மதுரையில் உள்ள பிரபல பாத்திரக் கடையில் குக்கர் வாங்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் மதுரையில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மதுரையில் முகாமிட்ட என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, அப்பாஸ் அலி (27), சம்சும் கரீம் ராஜா (26) ஆகியோரை மதுரையில் கடந்த நவம்பர் 27-ம் தேதி 2016 கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சென்னையில் பதுங்கியிருந்த தாவூத் சுலைமான் (23) என்பவரும் கைது செய்யப்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்ட தாவூத் சுலைமான், பாலவாக்கம் எம்ஜிஆர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சிஸ்டம் அனலைசராக வேலை செய்துவந்தார். தீவிரவாத சம்பவங்களுக்குத் தேவையான தகவல்களைப் பரிமாறுவது, தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மற்ற நபர்களுக்கு அனுப்புவது, ஆன்லைன் பணப்பரிமாற்றம், இணையதளம் வாயிலாக வெடி குண்டு தயாரிக்கும் தொழில் நுட்பங்களைக் கண்டுபிடிப்பது போன்ற நாசவேலைகளில் தாவூத் சுலைமான் ஈடுபட்டு வந்துள்ளார். ஆக, இவனுக்கும் அந்த பட்கல் குண்டு தயாரிப்பாளனுக்குமெந்த வித்தியாசமும் இல்லை.

mathurai arrest

என்.. இதை கண்டு பிடித்தது எப்படி?: ‘தி பேஸ் மூவ்மென்ட்’ தீவிரவாத அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவராக அவர் செயல்பட்டு வந்துள்ளார் என்றும் தெரியவந்தது. இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில், நவீன ரக வெடிபொருட்களை சென்னையில் இருந்து மதுரைக்கு பிரபல கொரியர் நிறுவனம் மூலம் சுலைமான் அனுப்பியது தெரியவந்துள்ளது[1]. இங்கும் அக்கொரியர் கம்பனியில் பெயர் குறிப்பிடாதது வியப்பாக இருக்கிறது. இதனால் என்ஐஏ அதிகாரிகள் அக்கம்பெனிக்கு சம்மன் அனுப்பினர். முதலில் சில ஆவணங்களை சமர்ப்பித்தனர். இதுதொடர்பாக சென்னையில் உள்ள கொரியர் நிறுவனத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுலைமான் கொரியர் அனுப்பிய தேதிகள், நேரம் உட்பட அனைத்து தகவல்களையும் என்ஐஏ அதிகாரிகளிடம் கொரியர் நிறுவனத்தினர் கொடுத்துள்ளனர்[2]. அதை வைத்து சுலைமான் என்னென்ன வகையான வெடி பொருட்களை அனுப்பினார் என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்[3]. என்ஐஏ அதிகாரிகள் பிச்சைக்காரர்கள், திரிபவர்கள், பைத்தியக்காரர்கள் போன்று, குறிப்பிட்ட இடங்களில் அலைந்து திரிந்து, விவரங்களை சேகரித்தனர். சம்பந்தப்பட்டவர்களின் நடமாட்டதினையும் கவனித்தனர்[4]. முதலில் செய்தி, “மதுரைக்கு கொரியர் மூலம் கருப்பு பணம் அனுப்பப்பட்டது” என்றுதான் வந்தது. சென்னை – மதுரைக்கு கொரியர் மூலம் கருப்பு பணம் அனுப்பப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையில் தெரியவந்துள்ளது[5]. சென்னையில் உள்ள பார்சல் நிறுவனத்திற்கு தேசிய புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[6] என்று தினகரன் செய்தி வெளியிட்டது.

Courier co under scanner by NIA

கொரியர் கம்பனி இருப்பது வண்ணாரப்பேட்டையாபல்லாவரமா, அனுப்பப்பட்டது கருப்புப் பணமா, வெடிப்பொருட்களா?: என்.ஐ.ஏ விசாரணையின் போது, அவர்கள் பல்லாவரத்தில் இருக்கும் கொரியர் கம்பனி வழியாக வெடி பொருட்கள் அனுப்பியதாக ஒப்புக் கொண்டனர்[7] என்று “ஈநாடு இந்தியா” செய்தி வெளியிட்டுள்ளது[8]. நியூஸ்.வெப்.இந்தியா இணைதளமும், “பல்லாவரத்திற்கு அருகில் உள்ள”, என்கிறது[9]. கொரியர் கம்பனி கண்காணிக்கப்படுகிறது என்றும் உள்ளது[10]. ”இந்தியன் எக்ஸ்பிரஸ் வண்ணாரப் பேட்டை கொரியர் கம்பனியிலிருந்து அனுப்பப்பட்டது என்கிறது[11]. தினகரன், “மதுரைக்கு கொரியர் மூலம் கருப்பு பணம் அனுப்பப்பட்டது” என்றது. மற்றவை வெடி பொருட்கள் அனுப்பியதாக தெரிவித்துள்ளன[12]. வழக்கம் போல, தமிழ் ஊடகங்கள் அவ்வாறு செய்திகளை வெளியிடுகின்றனவா அல்லது வேறொரு காரணத்திற்காக அவ்வாறு செய்கின்றனவா என்று தெரியவில்லை. கொரியர் கம்பனி இருப்பது வண்ணாரப்பேட்டையா-பல்லாவரமா, அனுப்பப்பட்டது கருப்புப் பணமா, வெடிப்பொருட்களா அல்லது இரண்டு இடங்களிலிருந்து, இரண்டு வகையான பொருட்கள் அனுப்பப்பட்டனவா? எப்படியிருப்பினும், கொரியர் கம்பனியின் பங்கு திடுக்கிட வைக்கிறது. ராஜஸ்தான் தொடர்புகள் ஏற்கெனவே எடுத்துக் காட்டப் பட்டன[13]. அதேபோல ஜாகிர் நாயக்கின் சென்னை தொடர்புகள், ஈஞ்சம்பாக்கம் பள்ளி முதலியவயும் திகைப்படைய செய்கின்றன.

© வேதபிரகாஷ்

13-04-2017

New college students become ISIS warriors

[1] தி.இந்து, சென்னையில் இருந்து மதுரைக்கு கொரியரில் வெடிகுண்டு பொருட்களை அனுப்பியது கண்டுபிடிப்பு: என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை, Published: April 7, 2017 09:25 ISTUpdated: April 7, 2017 09:25 IST

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/article9621196.ece

[3] Indian Express, Courier firm under terror probe lens, By M Sathish, Express News Service, Published: 05th April 2017 01:41 AM; Last Updated: 05th April 2017 04:56 AM.

[4]  http://www.newindianexpress.com/cities/chennai/2017/apr/05/courier-firm-under-terror-probe-lens-1590052.html

[5] தினகரன், சென்னைமதுரைக்கு கொரியர் மூலம் கருப்பு பணம் கடத்தல்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை, 2017-04-06@ 13:19:01

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=292779

[7] The NIA, which arrested five persons recently (four in Madurai and one in Chennai) for their alleged links in various bomb blast cases, interrogated them thoroughly. It is said that during questioning, they told the investigation officials that they had sent explosives from Chennai to Madurai as consignments through a courier company at Pallavaram in the city. Following this, NIA officials summoned top officials of the courier firm, sources said. In the meantime, NIA sleuths also visited the courier office on Thursday 06-04-2017 and inquired the employees there. They also checked registers, sources added.

http://www.eenaduindia.com/tamil-nadu/chennai-city/2017/04/07113752/NIA-grills-employees-of-courier-firm-in-Chennai-over.vpf

[8] Eenadu India, NIA grills employees of courier firm in Chennai over ‘terror consignments’, Published 07-Apr-2017 11:37 IST.

[9] News.web.India, Pvt Courier firm in NIA scanner, Chennai , Friday, Apr 7 2017 IST

[10] http://news.webindia123.com/news/articles/India/20170407/3087976.html

[11] Indian Express, Courier firm under terror probe lens, By M Sathish, Express News Service, Published: 05th April 2017 01:41 AM; Last Updated: 05th April 2017 04:56 AM.

[12] http://www.eenaduindia.com/tamil-nadu/chennai-city/2017/04/07113752/NIA-grills-employees-of-courier-firm-in-Chennai-over.vpf

[13] http://economictimes.indiatimes.com/news/defence/isis-sympathiser-deported-from-saudi-arrested-by-nia/articleshow/58054075.cms

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (4)!

பிப்ரவரி 26, 2017

.எஸ்.சில் ஆள்சேர்ப்பதற்கான சதிதிட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: மைலாப்பூர் மொஹம்மது இக்பால் மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (4)!

chennai-mannady-isis-sponsor-arrested-mohammed-sanjeevin-today-photo

பர்மா பஜார் ஆட்கள் ஹவாலா பணத்தை நன்கொடையாகக் கொடுத்தது: மேலும், சென்னையில் உள்ள நான்கு முக்கிய பிரமுகர்களிடம் அவர் ஐ.எஸ் இயக்கத்திற்காக பணம் பெற்றுள்ளதாகவும், அவர்கள் யார் யார்? என்பதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தேடப்படும் 4 பேரும் ரூ.3 லட்சம் வரை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு மண்ணடி, பர்மா பஜார் பகுதியைச் சேர்ந்த சிலர் ஹவாலா பணத்தை நன்கொடையாக வழங்கியிருப்பது தெரியவந்தது[1]. மண்ணடியில்ணைரும்பு வியாபாரம் செய்யும் எவரும் பலவித வரிகளை ஏய்த்து தான் வியாபாரம் செய்து வருகின்றனர். பர்மா பஜார் வியாபாரத்தைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கருப்புப் பணம் அதிகமாக உற்பத்தியாவதே அத்தொழில்களில் தான். போதாகுறைக்கு, ஹவாலா என்றால், கேட்கவா வேண்டும். இத்தகைய பணம் தான் தீவிரவாதத்திற்கு செல்கிறது. இதையடுத்து போலீஸார், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பிடித்து போலீஸார் 22-02-2017 புதன்கிழமை விசாரணை செய்தனர்[2]. அளித்திருப்பதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. தற்போது 20-02-2017லிருந்து, அந்த நான்கு பேரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார், அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை மூலம், சென்னையில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் பற்றிய மேலும் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது[3]. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு உதவி செய்ததாகவும், அந்த இயக்கத்தில் இருந்ததாகவும் தமிழகத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்[4]. சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த சுவாலிக் முகமது, திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சுபஹானி, கோவையைச் சேர்ந்த அபு பஷீர் உள்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் 3 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

burma-bazar-chennai

பிப்ரவரி 16, 2017 அன்று பாபநாசம் மொஹம்மது நாசர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்: மொஹம்மது நாசர் / காலித் [4 வயது], தந்தை பெயர் – பக்கீர் மொஹம்மது, விலாசம் – 17/3, சின்னக்கடை, திருப்பாலத்துரை தெரு, பாபநாசம் போஸ்ட், தஞ்சாவூர் தாலுகா, தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் துபாயில் அக்டோபர் 2014 வரை வேலை செய்து வந்தான். ஐஎஸ்.சுடன் சேர்ந்து “ஜிஹாத்” போரிட வேண்டும் என்ற வெறியுடன், தனது இந்திய சகாக்கள் சிலருடன் செப்டம்பர் 2015ல் சூடானுக்கு சென்றிருக்கிறான். அங்கேயேயிருந்து, பல ஆட்களுடன் தொடரு கொண்டு, இருந்தான். ஆனால், டிசம்பர் 11, 2015 அன்று தில்லிக்கு வந்தபோது, கைது செய்யப்பட்டான். ஜூன்.3, 2016 அன்று அவன் மீது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 21, 2017 அன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பிப்ரவரி 16, 2017 அன்று மறுபடியும் பல பிரிவுகளில், தில்லி-பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதாவது, இதெல்லாம் ஒரே நேரத்தில் நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அந்த தஞ்சாவூர் / பநாசம் மொஹம்மது நாசருக்கு, இந்த சென்னை மொஹம்மது இக்பாலை தெரியுமா-தெரியாதா என்று ஆராய்ச்சி செய்யலாமே?

mohamed-naser-391_1_pressrelease_17_02_2017-papanasam

மைல்லாப்பூர் மொஹம்மது இக்பாலை யாரும் கண்டு கொள்ளவில்லை: சென்னை பஜார் தெரு, மயிலாப்பூரை சேர்ந்த மொஹம்மது இக்பால் என்றவன் வாழ்ந்து வருகிறான் என்றால், யாரும் ஒன்றும் நினைத்திருக்க மாட்டார்கள் எனலாம். ஆனால், அவன் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு, பணம் சேகரித்து வருகிறான் என்பது யாருக்கும் தெரிந்திருக்காது. சரி, சென்னையிலேயே அப்படி பணத்தை தாராளமாக தரும் முஸ்லிம்களும் இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. பிறகு, அவர்களின் தேசப் பற்று எத்தகையது என்பது யோசிக்கத் தக்கது. சாதாரணமான விசயங்களுக்கு மேலும்-கீழும் குதித்து ஆர்பாட்டம் செய்து, கலாட்டா செய்யும் முஸ்லிம்கள் இத்தகைய விசயங்கள் வெளிவரும் போது, ஒன்றுமே தெரியாதது போலவும், நடக்காதது போலவும் இருப்பார்கள் என்றும் தெரிந்ததே. இந்துத்துவவாதிகள் போன்றோருக்கு கவலையே இல்லை. அதிமுக, சசிகலா, தீபா என்று பேசியே பொழுது போக்கி விடுவார்கள். மைல்லாப்பூர் தான், “இந்தித்துவவாதிகள்” அதிகம் இருக்கும் இடமாயிற்றே, துப்பறியும் புலிகள் கண்டு கொள்ளவில்லையா?

is-linked-terrorists-interrogated-by-ap-police-26_02_2017_112_010

மொஹம்மது இக்பாலின் சைனா பயணங்கள் முதலியன: சீனா பொருட்களை வாங்காதீர்கள், தடை செய்யுங்கள், எதிர்ப்போம் என்றெல்லாம், டுவிட்டர், பேஸ்புக் முதலியவற்றில் இந்துத்துவ வீரர்களும் காரசாரமாக பதிவு செய்வர். 100-500 என்றெல்லாம் “லைக்ஸ்” போடுவர். இக்பால் “டிராவல் ஹக்” என்ற சமூக குழுவை டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்-அப் முதலியவற்றில் நடத்தி வந்தான். ஆனால், பிப்ரவரி 4, 2017 அன்று கைதான போது, அவற்றையெல்லாம், சுத்தமாக நீக்கிவிட்டானாம்[5]. இருப்பினும், கணினி வல்லுனர்கள் அவற்றை அறிய முடியாமலா போய்விடும்? அவற்றை மீட்டெடுக்க வழிகள் இல்லாமலா இருக்கும்? இதுவும் பிஜேபி-கணினி வல்லுனர், இந்துத்துவவாதிகளுக்கு தெரியாது போலும். தெரிந்தால் உதவலாமே? ஆனால், மைலாப்பூரில், ஒருவன் சீனப்பொருட்களை வாங்கி விற்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியாது போலும். அவர்களும் கடைகள் வைத்திருப்பதால், ஊக்குவிக்கிறார்களோ என்னமோ? ஆகவே, இக்பால் சீனாவிலிருந்து வரும் பொருட்களை, குறிப்பாக மொபைல் விற்பனையில் பணம் சம்பாதித்து வந்தான்[6]. இதனால், கடத்தல்காரர்களிடமும் தொடர்பு இருந்தது. இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தான்.

jameel-ahmad-arrested-in-oct-2016

ஐசிஸ் தொடர்புகளால் கண்காணிக்கப் பட்டு மாட்டிக் கொண்டான்: ஐசிஸ் தொடர்புகளால், அவன் சந்தோசமாக இருந்தாலும், பிரச்சினை வந்தது. அக்டோபர் 2016ல் கைதான் ஜமீல் கான் [Jameel Khan] மற்றும் 2014ல் கர்நாடகாவில் கைதான மெஹ்தி மஸ்ரூர் பீஸ்வாஸ் [Mehdi Masroor Biswas] முதலியோருடன் இவனுக்கு தொடர்பு இருந்தது என்பதனை என்.ஐ.ஏ தெரிந்து கொண்டது[7]. வியாபார நிமித்தம் மலேசியா, சிங்கப்பூர், மெக்கா, மெதினா, சைனா என்று பலதடவை சென்றிருக்கிறான். சைனாவுக்கு மட்டும் எட்டு முறை சென்று வந்திருக்கிறான்[8]. இதனால், சைனாவுக்கும், முஸ்லிம்களுக்கும் உள்ல தொடர்புகளையும் ஆராய வேண்டும். ஏனெனில், சைனப் பொருட்களை எப்படி இறக்குமதி செய்கிறார்கள் அல்லது இந்தியாவிற்குள் வருகின்றன என்பதில் வரியேப்பு போன்ற விசயங்களையும் கவனிக்க வேண்டும். இந்த விவரங்களும் சரி பார்க்கப்பட்டன. பலதடவை ஐசிஸுடன் சேர சிரியாவுக்கு செல்ல முயற்சித்திருக்கிறான். ஆனால், பல காரணங்களுக்காக முடியவில்லை[9]. இதனால், சென்னையில் இருந்து கொண்டே, நிதி திரட்டுமாறு அவனுக்கு ஆணையிடப்பட்டது. அதைத்தான், அவன், விசுவாசத்துடன் செய்து வந்தான். தனது, மொமைல் மூலம் தெரிந்து கொண்ட நுணுக்கங்களை, தீவிரவாதம் வளர்க்க உபயோகித்தான்[10].

mohammed-iqbal-isis-fund-kik-messengaer“கிக் மெஸஞ்சர்”, “டெலிகிராம்” போன்றவற்றை உபயோகித்து, அபு-சாத் அல்-சுடானி மற்றும் அபு ஒஸாமா அல் சொமானி என்ற இருவருடன் தொடர்பு கொண்டிருந்தான்[11]. இப்பொழுது, அந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில் மாட்டிக் கொண்டான். சென்னை கல்லூரி மாணவர்களுக்கும் இவனுக்கும் தொடர்புகள் இருக்கின்றன[12].  அப்படியென்றால், பெற்றோர்களுக்கு, உறவினர்களுக்கு, மற்றவர்களுக்குத் தெரியாமலா போகும்? மற்றும் சுமார் 20 பேர்களுடன், நிதி தொடர்பான சம்பந்தங்களும் இருக்கின்றன. ஆனால், அவன் சொல்லாமல் சாதித்து வருகிறான்.

© வேதபிரகாஷ்

26-02-2017

mohammed-iqbal-isis-fund-telegram

[1] தினமணி, .எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஹவாலா பணம்: என்... விசாரணை, Published on 24 February, 2017, 03.24 AM

[2]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/24/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2654997.htmlUPDATED: FEBRUARY 22, 2017 01:18 IST

[3] தினமணி, .எஸ். இயக்கத்துக்கு நிதி அளித்த சென்னை இளைஞர் கைது: மேலும் 4 பேர் சிக்குகின்றனர்: சிரியா செல்ல திட்டமிட்டது அம்பலம், Published on : 21st February 2017 01:47 AM

[4]http://www.dinamani.com/tamilnadu/2017/feb/21/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2653020.html

[5] With two foreign handlers and one local link ‘Jameel Khan’, Iqbal is now being probed for his alleged links to Shami Witness, now known as Mehdi Masroor Biswas, who was arrested by Karnataka Police in 2014. He was alleged to have operated the single most influential pro-ISIS Twitter account from India, which was followed by two-thirds of all the foreign jihadis, but its was identity exposed following a Channel 4 News investigation in the UK.

http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4243456/Arrested-ISIS-recruit-links-Medhi-Biswas.html

[6] On the face of it, everything about Iqbal – a businessman of Chinese mobiles and goods – looked innocuous. He belongs to a well-to-do Chennai-based family and is married with two children, staying in the upmarket locality of Myalapore. However Iqbal’s undoing began after he was radicalised online.

dailymail.co.uk, Arrested ISIS ‘recruit’ was ‘radicalised online’ and ‘had links to Medhi Biswas’, By KAMALJIT KAUR SANDHU, PUBLISHED: 23:46 GMT, 20 February 2017 | UPDATED: 02:55 GMT, 21 February 2017.

[7] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4243456/Arrested-ISIS-recruit-links-Medhi-Biswas.html

[8] Iqbal who ran an account ‘Travel Haq’ on social media sites had deleted his account just before his arrest on February 4, making it difficult for the ATS to establish the link. Iqbal frequented Malaysia, Hong Kong, Singapore, Mecca and Medina but his business interests took him to China seven to eight times.

dailymail.co.uk, Arrested ISIS ‘recruit’ was ‘radicalised online’ and ‘had links to Medhi Biswas’, By KAMALJIT KAUR SANDHU, PUBLISHED: 23:46 GMT, 20 February 2017 | UPDATED: 02:55 GMT, 21 February 2017.

[9] DECCAN CHRONICLE.Chennai: 4 college students under intelligence scanner for ISIS links,| R PRINCE JEBAKUMAR, Published: Feb 22, 2017, 1:50 am IST; Updated: Feb 22, 2017, 8:46 am IST

[10] A year before his arrest, he is believed to have gone through websites of ISIS, drawn by Abu Bakr al-Baghdadi’s declaration of a caliphate.  Through social media applications like Kik messenger and telegram, Iqbal allegedly established contact with two ISIS handlers Abu Saad al-Sudani, a Sudanese, and Abu Osama Al Somali, a Somalian notorious commander.  Arrested earlier this month in Rajamundri on Andhra Pradesh-Tamil Nadu border, Iqbal spilled the beans of his failed dream to fight along with other ISIS militants in Syria and Iraq to establish a caliphate.  On invitation from Saad, Iqbal made two attempts to reach the warzone in Syria – first, applying for a visa to Turkey to slip into Syria to get trained as an ISIS fighter in one of several ISIS’ camps, and secondly, by trying to reach Turkey through the France route,’ Rajasthan ATS ADG Umesh Mishra told Mail Today.  ‘After his failed attempts, Sudani advised Iqbal to raise funds for the establishment of caliphate. Five fund transfers made by Iqbal to [Jameel] Ahmed are now under scanner.

http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4243456/Arrested-ISIS-recruit-links-Medhi-Biswas.html

[11] dailymail.co.uk, Arrested ISIS ‘recruit’ was ‘radicalised online’ and ‘had links to Medhi Biswas’, By KAMALJIT KAUR SANDHU, PUBLISHED: 23:46 GMT, 20 February 2017 | UPDATED: 02:55 GMT, 21 February 2017.

[12] The custodial interrogation of an ISIS sympathiser from the city had revealed the role of at least 14 others being involved in the Chennai module; of them four could be college students.

http://www.deccanchronicle.com/nation/in-other-news/220217/chennai-four-city-college-students-under-radar-for-isis-links.html

 

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (2)!

பிப்ரவரி 12, 2017

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (2)!

three-trio-arrested-by-nia-in-mdurai-out-of-six

குண்டுவெடிப்புகளில் காணப்பட்ட தமிழக தொடர்புகள், இணைப்புகள், சம்பந்தங்கள்: தென்மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் உள்ள 6 நீதிமன்ற வளாகங்களில் தொடர்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் ஒரே விதமாக நிகழ்த்தப்பட்டதால் இந்த சம்பவத்தில் ஒரே குழுக்கள்தான் ஈடுபட்டு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பிர‌ஷர் குக்கர், டிபன் பாக்ஸ் மற்றும் வெடிபொருட்களையும் ஆய்வு செய்தபோது இந்த வகையான வெடிகுண்டுகள் ஏற்கனவே தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பிர‌ஷர் குக்கர் மற்றும் டிபன் பாக்ஸ்கள் மதுரையில் உள்ள பிரபல கடையில் வாங்கப்பட்டதையும் உறுதி செய்த அதிகாரிகள் தீவிரவாத குழுக்கள் மதுரையை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல்களையும் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் தான் தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் (28) கைது செய்யப்பட்டான்.

is-jihadi-from-tirunelveli-dinamani-cutting
தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் கைது மதுரையில் குண்டுகள் தயாரிக்கப்பட்டனவா? : இந்த நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு சந்தேகப்படும் நபர்களை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் துப்புதுலக்கப்பட்டது. மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்த முகம்மது அயூப் (வயது23), புதூர் மண்மலைமேட்டை சேர்ந்த கரீம்ராஜா (26), இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி (24) ஆகிய 3 பேர் கடந்த 27-ந்தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் (28) கைது செய்யப்பட்டார். இதனிடையே தடை செய்யப்பட்ட அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த சுட்டு கொல்லப்பட்ட இமாம் அலியின் நெருங்கிய கூட்டாளி மதுரை நெல் பேட்டையை சேர்ந்த சம்சுதீன் (24) என்பவரையும் நேற்று கைது செய்தனர். இவரும் பல்வேறு சதி வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து சதி திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
subahani-kadayanallur-arrested-and-questioned-08-10-2016

திருவான்மியூரில் கைதான சுலைமான் தான் தலைவன்: பலத்த பாதுகாப்புடன் மதுரை அருகே உள்ள இடையப்பட்டி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஒவ்வொருவரையும் தனித்தனியாக பல மணி நேரம் விசாரித்தனர். தென்மாநிலங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் இதற்கான காரணங்கள் குறித்தும் 200-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரித்தனர். கைதான தீவிரவாதிகள் பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும், அந்த இயக்கத்தில் உள்ள சர்வதேச குழுக்களுடன் அடிக்கடி போனில் பேசிய தும் தெரியவந்துள்ளது. மதுரையில் மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து சதி திட்டங்கள் குறித்து ஆலோசித்ததாகவும், அதன் பேரிலேயே குண்டு வெடிப்புகளை நடத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவர்கள் வெடிபொருட்களை வைத்துக் கொள்வதில்லை. சதி திட்டத்தை நிறைவேற்ற அவ்வப்போது வெடிபொருட்களை வாங்குதை வழக்கப்படுத்தி உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது, மிகவும் கவனமாக எல்லா ஆதாரங்களையும் மறைப்பதில்-அழிப்பதில் திறமையாக செயல்படுகின்றனர்.

kadayanallur-subahani-haja-moideen-bomb-making

சுலைமான் செயல்பட்ட விதம்:  “தி பேஸ் மூமெண்ட்” என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கிய இவர்கள் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் அடிப்படை அமைப்பாக செயல்பட்டு வந்துள்ளனர். இதன் தலைவராக சுலைமான் செயல்பட்டுள்ளார். இவர்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற பெற்றோரிடம் சுற்றுலா செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறுவர். சில வாரங்கள் மறைந்திருந்து குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு டிப்-டாப்பாக வீட்டுக்கு வருவதால் பெற்றோர்களுக்குகூட இவர்கள் மீது சந்தேகம் வரவில்லை. அடுத்த கட்டமாக இஸ்லாமியர்களுக்கு விரோதிகளாக செயல்படும் முக்கிய தலைவர்களை கொலை செய்யவும் இவர்கள் தீவிரமாக ஆலோசித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள இளைஞர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆக, இவ்வாறு தமிழகத்தின் பல நகரங்களில் செயல்படும் தீவிரவாதிகள், கேரளாவுக்கு சகஜமாக சென்று வரும் போக்கு, பெங்களூரில் உள்ள தொடர்புகள், ஹைதராபாத் (தெலிங்கானா) இணைப்புகள், இவை எல்லாமே சென்னையை தீவிரவாத-பயங்கரவாத பகுதியில் கொண்டு வந்துள்ளது.

moideen-is-operative-ie-cutting-25-10-2016

சிரியாவுக்கு சென்று .எஸ்சில் சேர திட்டம் போட்ட சதி சென்னையில் தான் நடந்தது[1]: என்.ஐ.ஏவின் ஆவணங்களிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்சில் சேருவது என்ற திட்டம் / சதி “அபுதாபி திட்டம்” சென்னையில் தான் உருவாக்கப்பட்டது என்று தெரிகிறது[2]. முன்னர் ஜனவரி 2016ல் தமிழகம், தெலிங்கானாவில் கைதான எட்டு பேர்களிடம் நடத்திய விசாரணை, பின்னர் சரிபார்த்த விவரங்கள் மூலம் இது உறுதியாகிறது[3]. இதற்காகாக வேண்டிய பணம் பலவழிகளில் திரட்டப் படுகின்றன. முஸ்லிம் வியாபாரிகளிடமிருந்து நிதி வசூலிக்கப் படுகிறது. ஐ.எஸ்சிற்கு இப்பணம் உதவுகிறது என்று தெரிந்தும் கொடுப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் தான், யாராவது கைதானாலும், அதைப் பற்றிய செய்திகள் வந்தாலும், ஒன்றுமே நடக்காதது முஸ்லிம்கள், முஸ்லிம் அமைப்புகள், போராட்ட குழுக்கள் இருக்கின்றன. சிரியா மீது அமெரிக்கா, ரஷ்யா குண்டு வீசினால் போராட்டம் நடத்தும் இவர்கள், இச்செய்திகள் வரும் போது காணாமல் போகிறார்கள்.

Name in English பெயர் ஊர் / மாநிலம்
Adnan Hussain from Karnataka[4] அட்னன் ஹுஸைன் பட்கல், கர்நாடகா
Mohammed Farhan from Maharashtra மொஹம்மது பர்ஹன் மஹாராஷ்ட்ரா
Sheikh Azhar Al Islam from Kashmir. ஷேக் அஸ்ர் அலி காஷ்மீர்
Abdul Basith, a youth from Hyderabad அப்துல் பஸித் ஹைதரபாத், தெலிங்கானா
Sultan Armar சுல்தான் அர்மர்
Shafi Armar. சஃபி அர்மர்
Subahani Haja Mohiddheen சுபஹனி ஹாஜா மொஹிதீன் கடையநல்லூர், தமிழகம்
Suwalik Mohammed சுவாலிக் முகமது (26) கொட்டிவாக்கம், சென்னை
Suliman  சுலைமான் திருவான்மியூர்

இப்படி சென்னையிலேயே கைது செய்யப்பட்டதும், இதனை மெய்ப்பிக்கிறது. அப்படியென்றால், சென்னையில் உள்ளவர்களின் சம்பந்தமும் இதில் வெளியாகிறது.

© வேதபிரகாஷ்

12-02-2017

sulaiman-house-searched-in-chennai-where-incriminating-documents-seized

[1] One.India.com, REVEALED: Conspiracy to recruit into the IS hatched in Chennai, Written by: Vicky Nanjappa, Published: Saturday, February 11, 2017, 11:33 [IST]

[2] http://www.oneindia.com/india/revealed-conspiracy-to-recruit-into-the-is-hatched-in-chennai-2344903.html

[3] According to NIA case records, a criminal conspiracy was hatched “in Chennai and other parts of the country by forming a terrorist gang which raised and received funds, organised camps, recruited and trained some persons, and facilitated their travel to Syria, to join ISIS”.

Indian Express, Abu Dhabi module recruited nine Indians for Islamic State, sent some to Syria: NIA probe, Written by Johnson T A | Bengaluru | Published:February 11, 2017 3:59 am.

http://indianexpress.com/article/india/abu-dhabi-module-recruited-nine-indians-for-islamic-state-sent-some-to-syria-nia-probe-4518611/

[4] Adnan Hussain, 34, an accountant from Bhatkal town who had been working in the UAE since 2012, had emerged on the radar of police after he was found to have transferred funds to the account of Abdul Basith, a youth from Hyderabad who had been recruited to join the IS by Indian recruiters Sultan Armar and Shafi Armar. Adnan Hussain, alias Adnan Damudi, transferred funds to an account linked to Basith to enable him to travel to Syria along with four others recruited from Hyderabad but the trip came to an abrupt end after the families of the youths got wind of their plan and sought help to bring them back.

 

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (1)!

பிப்ரவரி 12, 2017

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (1)!

gold-bars-seized-and-four-arrrested-from-ap-05_02_2017_013_006

தெலிங்கானாசென்னை .எஸ் தொடர்புகள்: ஜல்லிக்கட்டு-சசிகலா விவகாரங்கள் ஐ.எஸ்.தொடர்புள்ளவர்கள் கைதான விவரங்கள், சென்னையில் சதி-திட்டம் தொஈட்டியது முதலிய விவாகரங்களை பின் தள்ளிவிட்டடு அல்லது சென்னைவாசிகள் ஜாலியாக சசிகலா மோகத்தில் மூழ்கி விட்டனர் என்றே தெரிகிறாது. தெலிங்கானாவில் முஸ்லிம் மக்கட்தொகை கனிசமாக இருக்கும் நிலையில் அங்கு பிரிவினைவாதம், தீவிரவாத நடவடிக்கைகள், பிரச்சாரங்கள் முதலியவையும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐ.எஸ்.சில் சேருவது, அதற்கான ஆட்சேர்ப்பு நடத்துவது, நிதியுதவி செய்வது என்பதெல்லாம் ஒரு பின்னப்பட்ட வலை போல வேலைகள் நடந்து வருகின்றன. தங்கம், போதை மருந்து, போலி ரூபாய் புழக்கம் என்ற ரீதியில் அவர்கள் நன்றாகவே வேலைசெய்து வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து தமிழக தலைநகர் சென்னைக்கு தனியார் சொகுசு பஸ்ஸில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னையில் செயல்படும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு நேற்று முன்தினம் இரவு (02-02-2017) ரகசிய தகவல் கிடைத்தது[1]. இதனையடுத்து, மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்பி அருண்குமார், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சனுக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து, 03-02-2017 அன்று அதிகாலை 3 மணி முதல் அருண்குமார் மற்றும் பொன்னேரி டிஎஸ்பி மாணிக்கம் ஆகியோர் தலைமையிலான போலீஸார், இரு குழுக்களாக கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா- தமிழக எல்லையில் உள்ள ஆரம்பாக்கம் பகுதியில், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

isis-linked-11-arrested-in-mp-11_02_2017_001_005

03-02-2017 அன்று தங்கத்துடன் பிடிபட்ட முகமது இக்பால்: இந்த வாகன சோதனையின் போது, காலை 6 மணி அளவில், ஆந்திர பகுதியிலிருந்து, சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ் ஒன்றை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, தெலங்கானா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த அந்த தனியார் சொகுசு பஸ்ஸில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த 4 இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்[2]. இளைஞர்களின் பைகளை முழுமையாக சோதனை செய்தனர். இதில், துணிகள் மற்றும் காய்கறிகளின் அடியில் தலா 168 கிராம் எடை கொண்ட 20 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது[3]. இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 4 பேரையும் ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர் போலீஸார். அந்த விசாரணையில் தெரியவந்த விவரம் வருமாறு: சென்னை – மயிலாப் பூரை சேர்ந்த-

  1. காஜா நஜிமுதீன் (42),
  2. சகாபுதீன் (38),
  3. ஜமாலுதீன் (30),
  4. முகமது இக்பால் (35)

ஆகிய அந்த 4 பேரும் கூலிக்காக தங்க கட்டிகளை தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு கடத்தியது தெரியவந்தது[4]. இதனைதொடர்ந்து, தலா 168 கிராம் எடை கொண்ட 20 தங்க கட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த எடை 3 கிலோ 360 கிராம் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சாதாரண ஆட்களிடம் எப்படி இப்படி ஒரு கோடி மதிப்பில் தங்கக் கட்டிகள் இருக்க முடியும், அவற்றை சென்னைக்குக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பதையும் யோசிக்கத் தக்கது.

gold-bars-seized-comimg-from-telingana-05_02_2017_004_007

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது இக்பால் .எஸ்.அமைப்பிற்கு தாராளமாக நிதியுதவி / “தீவிரவாத பணம்” [Terror money / Terror funding] அளித்துள்ளான்: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவனிடம், ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இதுகுறித்து, ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு, எஸ்.பி., விகாஸ் குமார், ஜெய்ப்பூரில் 05-02-2017 அன்று நிருபர்களிடம் கூறியதாவது[5]: “முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான, .எஸ்.,சுக்கு, இந்தியாவில் ஆதரவு திரட்டிய பயங்கரவாதி, ஜமீல் அஹமது, கடந்தாண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடந்த விசாரணையில், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது இக்பாலுக்கு, 35, .எஸ்., அமைப்புடன் நெருங்கிய தொடர்புள்ளது தெரிய வந்தது. இக்பாலிடம் இருந்து, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவன் மீது, டி.ஆர்.., எனப்படும் வருவாய் புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, இக்பாலை, ஜெய்ப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்த, பயங்கரவாத தடுப்புப் பிரிவு திட்டமிட்டு உள்ளது”, இவ்வாறு அவர் கூறினார்[6]. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது இக்பால் ஐ.எஸ்.அமைப்பிற்கு தாராளமாக நிதியுதவி அளித்துள்ளான்[7]. இதுவரை மும்முறை நிதியுதவி செய்தது தெரிய வந்துள்ளதால், அவற்றின் விவரங்கள், ஆதாரங்கள் முதலியவற்றை கைப்பற்ற ராஜஸ்தானிலிருந்து துப்பறியும் போலீஸார் வந்தனர்[8]. இந்நிலையில் தான் இக்பால் தங்கத்துடன் பிடிபட்டுள்ளான். ஆக, ஐ.எஸ்,சுக்கு பணம் பட்டுவாடா / நிதியுதவி செய்து வந்த திருவள்ளூர் முகமது இக்பால் தான் இப்பொழுது பிடிபட்டுள்ளான். இதை “தீவிரவாத பணம்” [Terror money / Terror funding] என்றேயாகிறது. நவம்பரில் கைதானவர்களின் தொடர்பும் இதில் பினைந்துள்ளது. சுபஹனி ஹாஜா மொஹிதீன் கதை இதில் உள்ளது.

isis-terror-links-with-chennai-dccan-chronicle-chn_2017-02-08_maip3_6

ஐசிஸ் தீவிரவாதி கடையநல்லூர் நகைக்கடையில் எப்படி சாதாரணமாக வேலை செய்து கொண்டிருக்க முடியும்?: சென்னைக்கும், தமிழகத்திற்கும் தீவிரவாதத்திற்கும் உள்ள தொடர்புகளும் திகைக்க வைக்கின்றனர். ஏற்கெனவே திருவான்மியூர், கொட்டிவாக்கம் முதலிய பகுதிகளில் சென்ற நவம்பர் 2016ல் சிலர் கைது செய்யப்பட்டனர். சுபஹனி ஹாஜா மொஹிதீன் ஏப்ரல் 8, 2015ல் இராக்கில் இருந்தான், செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பினான், அக்டோபர் 2016ல் திருநெல்வேலியில் கைதானான் என்ற நிலையில் சுபஹனி ஹாஜா மொஹிதீன் இருப்பதை எப்படி பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியோருக்குத் தெரியாமல் இருக்கும். ஐசிஸ்.சுக்கு ஆதரவாக போரிட்டு, திரும்பி வந்தால், எந்தவித சட்டங்களையும் மீறவில்லை என்று, அவன், மறுபடியும் இந்தியாவில் வேலை செய்கிறான் என்பது சரியானதா என்றும் நோக்கத்தக்கது. உள்ளூர் போலீஸாருக்கு தெரியுமா, தெரிவிக்கப்பட்டதா முதலிய விவரங்களும் மர்மமாகவே இருக்கின்றன. சிரியாவில் தீவிரவாதத்திற்குத் துணைபோனான், தீவிரவாதியாக இருந்தான் என்றால், அங்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லையா? இந்திய தூதரகம் மூலம் திரும்பியுள்ளான் என்பது, இன்னும் மர்மமாக இருக்கிறது.  வேலைக்குப் போகிறேன் என்று சென்று ஓடிவந்தவர்களுக்கும், ஐசிஸில் சேர்ந்து போராடி, திரும்பவந்தவனுக்கும் வித்தியாசம் இல்லையா? இந்தியா எந்த அளவுக்கு தாக்குதல்களுக்கு மிகவும் மென்மையாக குறியாக இருக்கிறது என்பதை மறுபடியும் தெரிந்து கொள்ள அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால், துரோகம் செய்யும் இந்தியர்கள் கவலைப்படப் போவதில்லை. நவம்பரில் கைதானவர்களில் இன்னொருவன் – சுவாலிக் முகமது.

swalih-mohammed-working-in-club-mahindra-isis-link-arrested

சென்னை கொட்டிவாக்கத்தில் சுவாலிக் முகமது கைது (அக்டோபர் 2016): சுவாலிக் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா (26) என்பவரும் ஒருவர். தற்போது, இவர் சென்னை கொட்டிவாக்கம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் அன்னை சத்யா தெருவில் குணசேகர் என்பவரில் வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். இதையடுத்து, சுவாலிக் முகம்மது வீட்டில் 03-10-2016 திங்கள்கிழமை அதிகாலை திடீர் சோதனை நடைபெற்றது. விசாரணையில் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா குறித்து கிடைத்த தகவல்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது: “12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர், 2010-ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசிக்கிறார். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள அவர், திருவல்லிக்கேணியில் மேன்சன்களிலும், கொட்டிவாக்கத்தில் தனது நண்பர்களின் அறைகளிலும் தங்கியுள்ளார். ராயப்பேட்டை ஓயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இயங்கும் ஒரு தனியார் ரிசார்ட் அலுவலகத்தில் (மஹிந்த்ரா கிளப்[9]) 2013ஆம் ஆண்டு முதல் கணினி இயக்குபவராக வேலை செய்து வந்திருக்கிறார். வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது, கேரள கோழிக்கோடைச் சேர்ந்த ஜிம்சின்னாவை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.

swalih-mohammed-isis-link-arrested

கத்தாருக்கு செல்ல திட்டம் போட்ட சுவாலிக் முகமது: பின்னர், கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது, பிரசவத்துக்காக 2014ஆம் ஆண்டு ஜிம்சின்னா கோழிக்கோட்டுக்கு சென்றபோது, முகம்மது வீட்டை காலி செய்துவிட்டு தனது நண்பர்கள் அறையில் தங்கினார். இந்த நிலையில், கடந்த ஜூனில் சென்னைக்கு திரும்பி வந்தபோது, குணசேகரின் வீட்டின் முதல் தளத்தில் உள்ள வீட்டை மாதம் ரூ.7 ஆயிரம் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். வாரத்துக்கு இரு முறை வெளியூருக்கு செல்லும் அவர், வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளார். சந்தேகக்குரிய வகையில் சிலர் அடிக்கடி இவரை பார்த்துவிட்டு செல்வார்களாம். ஒரு மாதத்துக்கு முன்பு வெளிநாடு செல்ல இருப்பதால், தனது குடும்பத்தை திருச்சூரில் வைத்துவிட்டு, வீட்டை காலி செய்ய உள்ளதாக குணசேகரிடம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் கத்தார் நாட்டுக்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். கத்தாருக்கு சென்று, ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் இருக்கும் சிரியாவுக்கு தப்பிச் சென்று ஆயுதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்துள்ளார். இந்த நிலையில், தென் மாநிலங்களில் ஏதேனும் சதிச் செயல் நடத்த திட்டமிருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றனர்.

© வேதபிரகாஷ்

12-02-2017

habeus-corpus-petition-dismissed-madurai-terror-dm-01_12_2016_003_008

[1] தினத்தந்தி, ஆந்திராவில் இருந்து சொகுசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்க கட்டிகள் சிக்கின, பிப்ரவரி 05, 01:16 AM.

[2]  http://www.dailythanthi.com/News/State/2017/02/05011622/Luxury-bus-from-Andhra-Pradesh-and-Rs-1-crore-smuggled.vpf

[3] தமிழ்.இந்து, தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு 3 கிலோ தங்கம் கடத்திய 4 பேர் கைது, Published: February 5, 2017 09:32 ISTUpdated: February 5, 2017 09:32 IST

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article9522479.ece

[5] தினமலர், .எஸ்., அமைப்புடன் தொடர்பு : தமிழக இளைஞன் சிக்கினான், பதிவு செய்த நாள். பிப்ரவரி.6, 2017. 23.50.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1705753

[7] A 40-year-old man from Chennai who was arrested along with three others while trying to smuggle Rs 1 crore worth gold bars from Rajamundhry on Saturday (03-02-2017) morning at Arambakkam near Chennai was picked up for questioning by central agencies for his suspected links with ISIS. Mohamed Iqbal has been picked up after he was found donating generously to ISIS. He had made three donations to ISIS and a team of IB officials from Rajasthan had come to trace him based on evidence of his transactions. A team of Intelligence Bureau officials on Saturday (03-02-2017) nabbed four people with 3.3  kg of 20 gold bars worth Rs 1 crore, in an omnibus coming from Rajahmundry to Chennai at Arambakkam near Gumudipoondi in neighboruing Thiruvallur district. All the four were later handed over to DRI for further action with regard to smuggling while Mohamed Iqbal was taken for further questioning him on money donation to ISIS.

Deccan Chronicle,Chennai: Gold smuggler picked up for ISIS link,  Published Feb 8, 2017, 6:15 am IST; Updated Feb 8, 2017, 6:23 am IST.

[8] Deccan Chronicle,Chennai: Gold smuggler picked up for ISIS link,  Published Feb 8, 2017, 6:15 am IST; Updated Feb 8, 2017, 6:23 am IST.

http://www.deccanchronicle.com/nation/in-other-news/080217/chennai-gold-smuggler-picked-up-for-isis-link.html

[9] Club Mahindra, Westcott Rd, Express Estate, Royapettah, Chennai, Tamil Nadu 600002.

Mahindra Holidays & Resorts India Limited, Mahindra Towers, 2nd Floor, 17/18, Patullos Road, Mount Road, Chennai – 600 002. Tamilnadu, India.Tel : +91 (044) 3988- 1000; Fax : +91 (044) 3027- 7778.

 

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!

ஜனவரி 18, 2017

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!

talaq-case-nikkah-namah-divorce

காஜி வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது[1]: மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

kajis-and-the-talaq-certificates-issued-high-court-12-01-2017

முஸ்லீம் லீக் வலியுறுத்துவது[2]: இத்தகைய குழப்பங்கள் அவ்வப்போது எழும் என்பதால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கீழ்க்கண்டவற்றை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.

  1. முதலாவதாக, 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  2. 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
  3. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

இப்படிப்பட்ட தீர்மானங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநாடுகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் அனைத்திலும் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. காஜிகளுடைய அந்தஸ்தையும், கண்ணியத்தையும் நிலைபெறச் செய்வதற்கு இத்தகைய அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துவது சமுதாயத்தின் இன்றைய கட்டாயக் கடமையாகும். இதனை விடுத்து வேறு விதமான சிந்தனைகளில் ஈடுபட்டு, சமுதாயத்தில் ஷரீஅத் சட்டப் பிரச்சனையிலும், குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிற குழப்பவாதிகள் தங்களை திருத்திக் கொண்டு காஜிகளுடைய அதிகார வரம்பை கூட்டுவதற்கும், அதன் மூலம் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தை நிலை நாட்டுவதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்.

kajis-and-the-talaq-certificates-issued-high-court-12-01-2017-2

ஷபானு பிரச்சினை போன்று இதைத் திருப்ப முயற்சிக்கும் முஸ்லிம் இயக்கங்கள்: முஸ்லீம் லீக்கின் கருத்துகளை அலசவேண்டியுள்ளது:

  1. ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.
  2. அதே காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். அதாவது, அரசால் நியமிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.
  3. மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
  4. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை.
  5. அதாவது தீர்ப்புகளை முஸ்லிம்கள் ஏற்கலாம், ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். இங்குதான், அடிப்படைவாத-தீவிரவாதிகளின் கட்டுப்பாடு வருகிறது. அவர்களது கருத்து, காஜிக்களின் கருத்துகளை மிஞ்சும் போது, அவர்களது பத்வா எடுபடுகின்றது.talaq-certificates-issued-by-cheif-kazi-no-legal-sanction-toi-high-court-12-01-2017
  6. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
  7. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது.
  8. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
  9. 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  10. 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

ஏற்கெனவே, இவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், முஸ்லிம் பெண்ணிய இயக்கங்கள் வழக்குத் தொடுத்துள்ளதாலும், இப்பிரச்சினையை பெரிதாக்க, முஸ்லிம்கள் விரும்பவில்லை, விளம்பரம் கிடைப்பதையும் விரும்பவில்லை.

© வேதபிரகாஷ்

18-01-2017

triple-talaq-certificate-issued-by-chief-kazi-illegal-the-hindu-12-01-2017

[1] http://www.muslimleaguetn.com/news.asp?id=3429

[2] கே.எம்.கே, , காஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, மணிச்சுடர் Friday, January 12, 2007.

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!

ஜனவரி 18, 2017

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!

madras-high-court-bans-sharia-court-woman-position

2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய தலாக் சான்றிதழ்கள் முறையற்றவை: அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இஸ்லாமிய தனி நபர் சட்டத்தின்படி திருமணமான ஆண் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது என்றும், ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்கிவிட்டால் அதுவே இறுதி முடிவாக எடுத்து கொள்ளப்படுவதாகவும் அதில் கூறியிருந்தார். இந்த முஸ்லிம் நடைமுறையானது பெண்களுக்கு எதிரானது என்றும், ஹாஜிக்கள் வழங்கும் சான்றிதழ் வெறும் பரிந்துரையே தவிர அது இறுதி முடிவல்ல என்றும் பதர் சயீத் தெரிவித்திருந்தார்[1]. மேலும், 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய பரிந்துரை சான்றிதழ்களில் சிலவற்றை நீதிமன்றத்தில் சமர்பித்த பதர் சயீத் தரப்பு, ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரைத்து சான்றிதழ் வழங்கியது, சம்பந்தப்பட்ட பல பெண்களுக்கு தெரியாது என்றும், இந்த நடைமுறையின் போது பெண்கள் ஆஜராகவில்லை என்றாலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது[2].

muslim-women-divorce-act-1986பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது: வழக்கம்போல, பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது கவனிக்கத்தக்கது. சாதாரணமான விசயங்களுக்கு எல்லாம் போராட்டம் என்றெல்லாம் புறப்படும் வீராங்கனைகள் எங்கோ பதுங்கி விட்டது போலத் தெரிகிறது. ரத்தம் சொரிவோம், ஐயப்பன் கோவிலில் நுழைவோம் என்றெல்லாம் புறப்பட்ட பெண்ணுருமை போராளிகளையும் காணோம். முஸ்லிம்கள் விவகாரம் என்றாலே, அவ்வாறு ஒளிந்து கொள்வார்கள் போலும். ஷாபானு விசயத்தில் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் கால்களை உடைப்போம் என்ற தில்லி இமாம், சட்டத்தை மாற்றி, புதிய சட்டத்தை எடுத்து வந்த விதம், வயதான ஷாபானு இறந்த பிறகும், கண்டுகொள்ளாமல் இருந்தது முதலியன மறந்து விட்டார்கள் போலும், இல்லை நமக்கேன் வம்பு பயந்து செக்யூலரிஸத் தனமாக ஒதுங்கி விட்டார்களோ என்று தெரியவில்லை. அது அவர்களது உள்-விவகாரம் என்றும் நாஜுக்காக சொல்லி அமைதியாக இருந்து விடலாம்.

muslim-women-protection-divorce-act-1986சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்: தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய காஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவிகளை மூன்று முறை, ‛தலாக்’ கூறி, விவகாரத்து செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி இருந்தார்[3]. இந்த மனு இன்று, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜிக்கள் பிப்., 21 2017 வரை, தலாக் சான்றிதழ் வழங்க தடை விதித்தனர்[4]. மேலும், இந்த சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்[5]. இந்த வழக்கு விசாரணை பிப்.,21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது[6].

திருமணம் என்னும் நிக்காஹ்.3

திருமணம் என்னும் நிக்காஹ்.3

முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ்ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும்: 1980ம் ஆண்டு ஹாஜிகளுக்கான சட்டத்தில் அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருப்பதாக நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுந்தரேஷ் தெரிவித்தனர்[7]. அந்த விதிகளின்படி தலாக் கூறி விவாகரத்து வழங்க ஹாஜிகளுக்கு உரிமை இல்லை என அவர்கள் கூறினர்[8]. முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ், ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும் என்றும், உத்தரவிடமுடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்[9]. இதையடுத்து இந்த வழக்கில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹாஜிகளுக்காக உரிமைகள் குறித்து புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்[10].

badar-syedநீதிபதியின் உத்தரவில் சொல்லப்பட்டிருப்பது[11]: “ஹாஜிகளுக்கு எந்த அளவு சட்டஉரிமை இருக்கிறது என்பது முஸ்லீம் ஹாஜி சட்டம் 1880 பிரிவு 4 இல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவருக்கு மதச் சடங்கு செய்யும் உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே ஹாஜிகளுக்கு எந்த விதசட்டரீதியான உத்தரவும் பிறப் பிக்க உரிமையில்லை. முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தலாக்சான்றிதழில் மாற்றம் கொண்டுவரப்போவதாகத் தெரிவித்துள் ளது. எனவே இது தொடர்பான அடுத்த உத்தரவு வரும் வரை ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்கால தடை விதிக்கிறோம். மேலும், ஹாஜிக்கள் வழங்கும் தலாக் சான்றிதழ்களுக்கு எந்த விதமான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான உரிமையில்லை என்றும், அது ஹாஜிக்களின் தனிப்பட்ட கருத்தாகவே கருதப்படும் என்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் உயர்நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெறும்”, இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. இதைப்பற்றி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், “மணிச்சுடர்” கூறுவது, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

badar-syed-with-jayaகாஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்![13]: சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கீழ்க்கண்டவாறு அறிவித்திருக்கிறது.

  1. முதலாவதாக, தமிழ்நாடு தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜிகள்) யாருக்கும் தலாக் பற்றி சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரமில்லை.
  2. இரண்டாவதாக, 1997 முதல் 2015 வரை தமிழ்நாடு தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களில் தலாக் என்னும் விவாகரத்து ஏற்பட்டதற்குரிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்டிருக்கிறது.
  3. மூன்றாவதாக, வரும் பிப்ரவரி 21-ந்தேதி வரை தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களை தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களோ, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளோ சான்றிதழ்களாக அங்கீகரிக்கத் தேவையில்லை என்று உயர்நீதி மன்ற பதிவாளர் அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தீர்ப்பின் வாசகங்களை பார்க்கும் போது தலைமை காஜி மற்றும் துணை காஜிகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளன. உண்மை நிலை அதுவல்ல. ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. அதே சட்டத்தின் அடிப்படையில்தான் இன்றும் காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். தலைமை காஜி, தங்களிடம் கொண்டு வரப்படும் ‘தலாக்’ போன்ற மார்க்க விவகாரங்களுக்கு பத்வா என்றும், தனது கருத்தை எழுத்து மூலம் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

 

© வேதபிரகாஷ்

18-01-2017

badar-syed-talaq-case

 

[1] பிபிசி, தமிழகம் : ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை, ஜனவரி.11, 2017.

[2] http://www.bbc.com/tamil/india-38593266

[3] தினமலர், தலாக்சான்றிதழ் வழங்க தடை, பதிவு செய்த நாள். ஜனவரி.11, 2017.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1688593

[5] தினகரன், தமிழகம் முழுவதும் தலாக் சான்று வழங்க ஹாஜிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை, 2017-01-11@ 17:30:14

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=271858

[7] புதியதலைமுறை, தலாக் கூறி விவாகரத்து வழங்கும் உரிமை ஹாஜிகளுக்கு இல்லை..நீதிமன்றம், பதிவு செய்த நாள் : January 11, 2017 – 07:57 PM; மாற்றம் செய்த நாள் : January 11, 2017 – 09:46 PM.

[8] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/75692/madras-high-court-says-haji-has-no-right-to-provide-grounds-for-divorce

[9] நியூஸ்.7.செனல், இஸ்லாமிய ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்காலத் தடை!, January 11, 2017

[10] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/11/1/2017/high-court-ordered-not-issue-talaq-certificate-muslim-haji

[11] தீக்கதிர், தலாக் முறைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, January 11, 2017.

[12]https://theekkathir.in/2017/01/11/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/

[13] மணிச்சுடர், காஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, Friday, January 12, 2007.

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது!

திசெம்பர் 21, 2016

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது!

dinakaran-madras-high-court-to-ban-shariat-court

தலாக், தலாக், தலாக்விசயத்தில் வழக்கு: கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிபாட்டு தலமாக இருந்தாலும், அவை வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும் என்று சென்னை ஐகோர்ட்டு 20-12-2016 திஙட்கிழமை அன்று உத்தரவிட்டுள்ளது, என்று தமிழ் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டாலும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை [ illegal ‘sharia courts’ functioning from various mosques across Tamil Nadu], சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது என்று ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன[1]. தினகரன் மட்டும் தான் “ஷரியத் கவுன்சில் கட்டப்பஞ்சாயத்து செய்தால் போலீஸ் தடுக்க வேண்டும் : நீதிமன்றம் உத்தரவு” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[2]. மேலும் நான்கு வாரங்களில் செயபடுத்திய விவரங்களை தாக்கல் செய்யுமாறு ஆணையிட்டது[3]. ஷரீயத் போல, மத சட்டங்களின் அடிப்படையில், நீதிமன்றம் போன்று கோவில்களில் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்வதில்லை. இருப்பினும் செக்யூலரிஸ முறையில் நீதிபதிகள் அவ்வாறு சொல்லியிருப்பது தெரிகிறது.

dinamalar-madras-hingh-court-about-sharia-court-20_12_2016_005_005

முகமதிய பெண்களும் மாறி வருவது தெரிகிறது: சமீப காலத்தில் முஸ்லிம் பெண்கள் “தலாக், தலாக், தலாக்”     என்று மூன்று முறை வாயால் கூறி, விவாகரத்து செய்யும் முறையை எதிர்த்து வருகின்றனர். ஏனெனில், பெரும்பாலும், முகமதிய ஆண்கள் இந்த நவீன காலத்தில், போன், செல்போன், ஈ-மெயில் போன்ற முறைகளிலும் அத்தகைய  “தலாக்” செய்து வருகின்றனர். காரணம் இல்லாமல், பல பெண்களுடன் வாழ வேண்டும் போன்ற நோக்கில் செயல்படும் ஆண்களும் இருக்கிறார்கள். அதற்காக இந்துக்களில் சிலர் மதம் மாறியுள்ளார்கள். ராஜிவ் காந்தி ஆட்சியில், “ஷாபானு” வழக்கில் மெத்தனமாக இருந்ததால், இப்பிரச்சினை பெரிதாகியுள்ளது. இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத வழக்கத்தை, செக்யூலரிஸப் போர்வையில் இந்தியாவில் இத்தகைய இடைக்கால, ஒவ்வாத பழக்க-வழக்கங்களை இந்தியாவில் ஏற்றுக் கொண்டுள்ளதை, முகமதிய பெண்களே சமீபகாலத்தில் எடுத்துக் காட்டி, எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். பலதார முறை இருந்தாலும், பெரும்பாலான முகமதிய பெண்கள், ஒரு ஆண் – ஒரு பெண் என்ற நியதியை விரும்புகிறார்கள். படித்தவர்கள் அவ்வாறே கடைப்பிடிக்கிறார்கள். இருப்பினும் அடிப்படைவாதிகள் மதவாத அச்சுருத்தல்களுடன், சமூகத்தை மிரட்டி வருகிறார்கள்.

mont-rosd-mosque-shariat-council

சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலை எதிர்த்து வழக்கு: சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் அப்துர் ரஹ்மான். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது[4]: “நான் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றினேன். என்னுடைய மனைவி என்னை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார். அவரை சேர்த்து வைக்கும்படி சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலில் [Makka Masjid Shariat Council] முறையிட்டேன். ஆனால், அவர்கள் என்னை மிரட்டி எனது மனைவியை விவகாரத்து செய்து விட்டதாக என்னிடம் கையெழுத்து வாங்கி கொண்டு, என்னை அனுப்பி விட்டனர். என்னைப் போல பலர் இதுபோல பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் பல இடங்களில் சட்டத்திற்கு விரோதமாக ஷரியத் நீதிமன்றம் என்ற பெயரில் முஸ்லிம் ஜமாஅத்களில் குடும்ப பிரச்சினைகளை விசாரிக்கின்றனர். இவ்வாறு ஜமாஅத்களில் நீதிமன்றம் நடத்துவதற்கு சட்டப்படியான அங்கீகாரம் உள்ளது என்றும், முஸ்லிம் மக்கள் தங்களது பிரச்சினைகளை தங்களது ஷரியத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் எனவும் ஜமாத்தார்கள் கூறி வருகின்றனர்.” சென்னை அண்ணா சாலையில் அத்தகைய ஷரீயத் கோர்ட் இருப்பதே யாருக்கும் தெரியாது எனலாம். ஹெரிந்திருந்தாலும், முகமதியர் விவகாரங்கள் என்று கண்டு கொள்ளாமலும் இருந்திருக்கலாம்.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-toi

ஜமாஅத்களில் தம்பதிகளுக்கு விவாகரத்துகள் மனம்போன போக்கில் ஒரு தலைபட்சமாக வழங்கப்படுவதால் பெண்களுக்கு பாதிப்பு: அப்துர் ரஹ்மான் மேலும் கூறியிருப்பது[5], “இந்த ஜமாஅத்களில் தம்பதிகளுக்கு விவாகரத்துகள் மனம்போன போக்கில் ஒரு தலைபட்சமாக வழங்கப்படுகின்றன. சொத்துப் பிரச்சினைகளிலும் இவர்கள் தான் தீர்ப்பு வழங்குகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான பெண்கள் தங்களின் வறுமை காரணமாக இந்த தீர்ப்புகளை எதிர்த்து நீதிமன்றங்களை நாடுவதில்லை. ஆகவே ஜமாஅத்களில் இதுபோன்ற கட்ட பஞ்சாயத்து நீதிமன்றங்கள் செயல்படுவதை தடை செய்ய வேண்டும்,”  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது[6]. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது. முதன்முதலாக இப்பிரச்சினை கோர்ட்டுக்குச் சென்று, இவ்வாறு வெளி வந்திருப்பது தெரிகிறது. பொதுவாக முகமதியர், இத்தகைய விவகாரங்களை, வெளியே வராமல் அமுக்கி விடுவார்கள். ஜமாத்தை மீறி செயல்படுவதை ஒதுக்கி வைப்பது, மிரட்டுவது, தீர்த்துக் கட்டுவது போன்ற நிலைகளும் உள்ளன.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-hindusthan-times

விவாக ரத்து செய்த தம்பதியரிடம் கருத்து வேறுபாடு: இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் கமிஷனர் சார்பில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பி.பெருமாள் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது[7]: “மனுதாரருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2013–ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனுதாரர் அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலில் புகார் செய்துள்ளார். அந்த கவுன்சிலின் பொதுச் செயலாளர், இருவரையும் சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறியுள்ளார். இதற்காக இருவருக்கும் கவுன்சிலிங்கும் நடந்துள்ளது.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-financial-express

மறு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்: போலீஸ் தரப்பு மனுவில் கூறியிருப்பது தொடர்கிறது[8], “இதன்பின்னர் மனுதாரர் முஸ்லிம் சட்டம் மற்றும் பழக்க வழக்கத்தின் அடிப்படையில், அவரது மனைவியிடம்தலாக்சொல்லியுள்ளார். அவரது மனைவியும் அதை ஏற்றுக் கொண்டார். இந்த விவாகரத்து பெரியவர்கள் முன்னிலையில் தான் நடந்துள்ளது. இதன்பின்னர் மனுதாரரின் புகார் முடித்து வைக்கப்பட்டு விட்டது. இதன்பின்னர் மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மனுதாரர் குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 19–ந் தேதி குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மனைவியிடம் விவாகரத்து கேட்டு மற்றொரு வழக்கும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில் இந்த இரு வழக்குகளும் நிலுவையில் இருக்கும்போது, மனுதாரரை விவாகரத்து செய்த பெண், வேறு ஒருவரை மறுதிருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த அக்டோபர் 27–ந் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.”

 

© வேதபிரகாஷ்

21-12-2016

ஷா பானு வழக்கு

[1] Times of India, Madras high court bans unauthorised ‘Sharia courts’, A Subramani| TNN | Updated: Dec 20, 2016, 07.02 AM IST.

[2] தினகரன், ஷரியத் கவுன்சில் கட்டப்பஞ்சாயத்து செய்தால் போலீஸ் தடுக்க வேண்டும் : நீதிமன்றம் உத்தரவு, Date: 2016-12-19 15:44:48

http://www.dinakaran.com/latest_detail.asp?Nid=266694

[3] http://timesofindia.indiatimes.com/city/chennai/madras-hc-bans-sharia-courts/articleshow/56061972.cms

[4] தினத்தந்தி, கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வழிபாட்டை தவிர வேறு செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமை; ஐகோர்ட்டு உத்தரவு, பதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 20,2016, 7:28 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், டிசம்பர் 21,2016, 1:15 AM IST.

[5] தினமணி, வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை தவிர்த்து வேறு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, Published on : 20th December 2016 03:58 AM

[6] http://www.dailythanthi.com/News/State/2016/12/20192814/Temples-churches-mosques-participate-in-acts-of-worship.vpf

[7]http://www.dinamani.com/tamilnadu/2016/dec/20/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-2618328.html

[8] தமிழ்.இந்து, மத வழிபாட்டுத் தலங்களில் சட்டவிரோத நீதிமன்றம் செயல்படுவதை ஏற்க முடியாது: போலீஸார் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு, Published: December 20, 2016 08:17 ISTUpdated: December 20, 2016 08:18 IST

ஜிஹாதி தீவிரவாதம் மற்றும் குண்டு தயாரிப்புகளில் மையமாகிய மதுரை – குறி அத்வானி முதல் மோடி வரை!

திசெம்பர் 2, 2016

ஜிஹாதி தீவிரவாதம் மற்றும் குண்டு தயாரிப்புகளில் மையமாகிய மதுரைகுறி அத்வானி முதல் மோடி வரை!

dm-nia-arrested-al-queda-men-at-madurai-29-11-2016மதுரையில் வளர்ந்த குண்டுதயாரிப்பு, வெடிப்பு நிகழ்வுகள்: மதுரையில் இஸ்லாமிய தீவிரவாதம் ஊக்குவித்து வளர்த்தது, இப்பொழுது எல்லைகளைக் கடந்து விட்டன. தொடர்ந்து குண்டு தயாரிப்பு, குண்டுவெடித்தல் மற்றும் ஜிஹாதிகளுக்கு பயிற்சி, ஆள்-சேர்ப்பு என அனைத்தும் நடைபெறுவது ஒரு சாதாரண மதுரைவாசிக்குக் கூட தெரியும் அளவுக்கு இருக்கிறது. மலைகளை வெடித்து, பாறைகள் எடுக்கும் தொழில் போர்வையில், வெடிமருந்துகள் வாங்கப்பட்டு அவை, குண்டு தயாரிப்புக்கு உபயோகப்படுத்தப் படுகின்றன. வெடிமருந்து தயாரிப்பாளர்களிடமிருந்தும், அவர்களுக்கு மூலப்பொருட்கள் கிடைத்து வருகின்றன. சிவகாசி அருகில் இருப்பதால், அவர்களது வேலை அமோகமாக நடந்து வருகிறது. மேலும், பாஸ்போர்ட், விசா, கரன்சி மாற்றுதல், பணப்பரிமாற்றம், ரெயில்-பஸ் முன்பதிவு போன்ற எல்லாவற்றிலும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செல்லுத்தி வருவதால், இத்தகைய வேலைகளை செய்து வர சுலபமாக இருந்து வருகிறது. பெற்றோர்களுக்கு தெரியும்-தெரியாது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதெல்லாம் சகஜமாக நடந்து வருகின்றன.

nia-detains-four-youths-the-hindu-29-11-2016மதுரையில் அல் கொய்தா இயங்கி வருவது: மதுரையில் அல் கொய்தா அடைப்படை இயக்கம் என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்த 3 பேரை தேசிய புலனாய்வுத்துறை கைது செய்து உள்ளது[1]என்று செய்தி இப்பொழுது தான் வந்துள்ளது. ஆனால், இத்தனை ஆண்டுகள் எப்படி மறைந்திருந்தது என்று தெரியவில்லை. பிரதமர் மற்றும் உள்நாட்டை சேர்ந்த 22 தலைவர்களை கொல்ல இவர்கள் சதி திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. மேலும் 6 நாட்டு தூதர்களுக்கு மிரட்டல் விடுத்து உள்ளனர்[2]. தென்மாநிலங்களில் 5 இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாதிகள் 4 பேர் கைதான நிலையில், 29-11-2016 அன்று மேலும் ஒருவர் மதுரையில் கைதானார்[3]. என்.ஐ.ஏ முகவும் ஜாக்கிரதையாக செய்ல்பட்டு, இக்கைதுகளை செய்துள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தென் மாநிலங்களில் குண்டு வெடிப்பு நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

nia-arrested-connected-with-five-blasts

கோர்ட் வளாகங்களில் குண்டுவெடிப்புகளை நடத்திய விவரங்கள்: கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களின் கோர்ட் வளாகங்கள் உட்பட 5 இடங்களில் பயங்கர குண்டு வெடிப்புகள் நடந்தன. கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1–ந் தேதி குண்டு வெடித்தது. இதுபோன்று, ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர், கேரள மாநிலம் கொல்லம், மலப்புரம் ஆகிய இடங்களில் உள்ள கோர்ட்டு வளாகங்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன[4].

  1. ஆந்திராவில் சித்தூர் மாவட்ட நீதிமன்ற வாகன காப்பகத்தில்4.2016-ல்[5],
  2. கேரளாவில் கொல் லம் தலைமை குற்றவியல் நீதி மன்ற வாகன காப்பகத்தில்6.2016-ல்,
  3. கர்நாடகா மாநிலம் மைசூரு நீதிமன்றத்தில்6.2016-ல்,
  4. ஆந்திராவில் நெல்லூர் நீதிமன்றத் தில்9.2016-ல்,
  5. கேரளாவில் மல்லபுரம் நீதிமன்ற கழிப்பறையில்11.2016-ல் என அடுத்தடுத்து தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்ப வங்கள் நடந்தன.

நீதி, நீதிமன்றம், முதலியவை எல்லாம் எங்களுக்கு துச்சம், நாங்கள் இந்நாட்டு சட்டங்களை மதிக்க மாட்டோம் என்பதை காட்டவும், பீதியைக் கிளப்புவும், இக்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன.

nia-took-the-arrested-to-melur-court-dm-30_11_2016_005_004_001மைசூர் குண்டுவெடிப்பு, கைது, விசாரணை இத்தீவிரவாதிகளைக் காட்டிக் கொடுத்துள்ளது: மைசூரு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வுப் பிரிவினர் (என்ஐஏ) விசாரணை நடத் தியபோது, அனைத்து வெடிகுண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாகவும், அதே குற்றவாளிகள் மீண்டும், மீண்டும் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது[6]. மதுரையைச் சேர்ந்த சிலர் சதிச் செயலில் ஈடுபட்டதும் தெரிந்தது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து ‘தி பேஸ் மூவ்மெண்ட்’ என்ற அமைப்பின் பெயரில் துண்டு பிரசுரங்கள், பென் டிரைவ் உள்பட பல்வேறு தடயங்களும் தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்தன. அந்த அமைப்பு ‘அல்கொய்தா‘ தீவிரவாத அமைப்பின் பெயரின் ஆங்கில மொழியாக்கத்தில் இயங்கியது என்றும் விசாரணையில் தெரியவந்தது[7]. டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையில், மதுரையை மையமாகக் கொண்ட ஒரு தீவிரவாத கும்பல் குண்டுகளை வெடிக்க செய்தது தெரிந்தது. இதன்பேரில் கடந்த 3 நாட்களாக தேசிய புலனாய்வுப்படையினர் (என்ஐஏ) மதுரையில் முகாமிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.  இதில், –

  1. மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 4வது தெருவைச் சேர்ந்த அப்பாஸ் அலி (27),
  2. மதுரை புதூர் விஸ்வநாத நகரை சேர்ந்த சம்சும் கரீம் ராஜா (26) ஆகியோர் 28-11-2016 அன்று கைதாகினர்[8].

இவர்களது தகவலின்பேரில் தீவிரவாத கும்பலின் தலைவராக செயல்பட்ட மதுரை கரீம்ஷா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சுலைமான் (23) என்ற சென்னையில் உள்ள TCS ஐடி நிறுவன கம்ப்யூட்டர் என்ஜினனியரையும் அன்றே, சென்னையில் தேசிய புலனாய்வுப்படையினர் கைது செய்தனர்[9]. இதுதவிர மதுரை புதூரை சேர்ந்த முகம்மது அயூப் (25) என்பவரும் சிக்கினார். அப்பாஸ் அலி, சம்சும் கரீம் ராஜா மற்றும் முகம்மது அய்யூப் ஆகியோரை மதுரை அருகே இடையபட்டி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமில் வைத்து தேசிய புலனாய்வுப்படையினர் தொடர் விசாரணை நடத்தினர்.

© வேதபிரகாஷ்

02-12-2016

two-arrested-by-nia-in-mdurai-out-of-six

[1] தினத்தந்தி, மதுரையில் அல் கொய்த அடிப்படை இயக்கம் நடத்திய 3 தீவிரவாதிகள் கைது, பதிவு செய்த நாள்: திங்கள் , நவம்பர் 28,2016, 3:51 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , நவம்பர் 28,2016, 3:51 PM IST

[2] http://www.dailythanthi.com/News/State/2016/11/28155132/In-Madurai-The-basic-movement-Al-koyta–3-terrorists.vpf

[3] தினகரன், மதுரையில் மேலும் ஒரு அல்கொய்தா தீவிரவாதி கைது: தென் மாநிலங்களில் குண்டு வைக்க சதி திட்டம், Date: 2016-11-30@ 00:53:25

[4] தினத்தந்தி, மைசூரு கோர்ட்டு வளாக குண்டு வெடிப்பு: கைதான பயங்கரவாதிகள் 5 பேருக்கு 10 நாள் போலீஸ் காவல், மாற்றம் செய்த நாள்: வியாழன் , டிசம்பர் 01,2016, 4:33 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , டிசம்பர் 01,2016, 4:33 AM IST.

[5] The Indian Express, Chittoor blast: NIA arrests, interrogates three Al-Qaeda suspects in Madurai, By Express News Service  |   Published: 28th November 2016 08:31 PM  |

Last Updated: 29th November 2016 08:12 AM.

http://www.newindianexpress.com/nation/2016/nov/28/chittoor-blast-nia-arrests-interrogates-three-al-qaeda-suspects-in-madurai-1543528.html

[6]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/article9400836.ece

[7] http://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2016/12/01043306/Mysore-Campus-Court-blast.vpf

[8] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=262467

[9] The Times of India, TCS techie who ‘plotted’ to target PM Narendra Modi held in Tamil Nadu, TNN | Updated: Nov 29, 2016, 06.20 PM IST