Posted tagged ‘சூடு’

பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? – ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

ஏப்ரல் 3, 2017

பாகிஸ்தான் தர்காவில் நடந்தது பைத்தியம் செய்த கொலையா, இல்லை நரபலியா? ஒரு பைத்தியம் எப்படி இருபது பைத்தியங்களைக் கொல்ல முடியும்? (1)

Abdul Waheed before becominh Peer

இவனேமனநோயாளிஎன்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்?: பாகிஸ்தானில் உள்ள தர்கா காப்பகத்தின் நிர்வாகி ஒருவர், பெண்கள் உள்பட 20 பேருக்கு மயக்க மருந்து தந்து அவர்களை வெட்டியும், தாக்கியும் கொன்ற கோரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ் ஊடகங்கள் 03-04-2017 அன்று செய்திகளை வெளியிட ஆரம்பித்தாலும், 02-04-2017 மாலையில் முரண்பட்ட விவரங்கள் தான் பாகிஸ்தான் நாளிதழ்கள் மூலம் அறியப்பட்டன[1]. பக்தர்களை காப்பகத்தின் பொறுப்பாளர் தன்னை கொலை செய்யப் பார்க்கிறார்கள் என்று பயந்து, கொன்றதாக செய்திகள் வெளிவந்தன[2]. தனக்கே விஷம் கொடுத்து கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதால் தான், அவர்களை கொலை செய்ததாக கூறினான்[3]. சொத்து-அதிகாரம் போட்டி என்றால், தர்காவின் காப்பாளரான அப்துல் வஹீத், அவன் மகன் மற்றவர்கள், இவர்களுக்கிடையில் தான் பகை-கொலை செய்யும் வெறி இருந்திருக்க வேண்டும்[4]. தர்காவை பிடிக்க திட்டம் போட்டவர்களுக்கும், சொகிச்சைப் பெற்றவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? தன்னை கொலை செய்ய வருகிறார்கள் என்பது எப்படி “மனநோயாளிக்கு”த் தெரியும்? இவனே “மனநோயாளி” என்றால், அங்கே வரும் பைத்தியங்களுக்கு எப்படி, இந்த பைத்தியம் வைத்தியம் பார்க்கும்? ஆகவே, எதையோ மறைக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது.

Sargohda - dargh inside - photos of peers

பேய் ஓட்டுவதாகவும், பாவ மன்னிப்பு அளிப்பதாகவும் குரூர சிகிச்சை அளித்த தர்கா: இந்திய விவகாரங்களில் உள்ளே புகுந்து, ஆராய்ந்து, விவரங்களை வெளியிடும் செக்யூலரிஸ ஊடகங்கள், பாகிஸ்தான் நாளிதழ்கள் சொன்னதை கூட போடாமல், திரித்து வெளியிட ஆரம்பித்துள்ளன. தினமணியில் தலைப்பே தமாஷாக இருந்தது! “பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி,” என்ற தலைப்பிட்டது[5]. மனநோயாளி எப்படி, அடுத்தவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்தான், கொடுத்த பிறகு, வெட்டிக் கொன்றான் என்று விளக்கவில்லை[6]. கொலைசெய்கிறவன், வந்தவர்களின், ஆடைகளை நீக்கி, நிர்வாணமாக்கி, தடிகளால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தான் என்பது புதிராக உள்ளது. அதில் நான்கு பெண்களும் அடக்கம் எனும்போது, அவர்களை நிர்வாணமாக்கியவன், மருந்து கொடுத்து, மயக்கமடையச் செய்தவன், அப்படியே அடித்துக் கொன்றான, குத்திக் கொன்றானா, அல்லது பாலியல் பலாத்காரம் செய்தானா போன்ற விவரங்கள் தெரியவில்லை.

Abdul Waheed killed 20 at sargodha

பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது: மதநிர்வாக விவகார மந்திரி, ஜெயீம் காதரி, “ரகசிய புலனாய்வுத் துறைமூலம், இத்தகைய மதகாப்பங்கங்கள் பஞ்சாப் மாநிலத்தில் 552 இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இது பதிவு செய்யப்படாதது ஒன்றாகும். பேயோட்டுகிறேன் என்று இப்பகுதியில், இத்தகைய கொலைகள் நடப்பது மற்றும் அவர்களை உயிரோடு எரிப்பது, இந்நாட்டில் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால், இதுபோன்ற கூட்டுக் கொலை நடப்பது, இதுதான் முதல் தடவை,” என்றார்[7]. அதாவது, “பேய், பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிக்கும் வழக்கம் இன்றும் பாகிஸ்தானில் உள்ளது” என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால், தமிழ் ஊடகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. யூத-கிருஸ்துவ-முகமதிய மதங்களின் படி, பேய்-பிசாசு பிடித்தவர்களை உயிரோடு எரிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனானப் பட்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே இப்பழக்கம் 20 நூற்றாண்டு வரை இருந்தது. பிறகு சட்டங்கள் மற்றும் கடுமையான நடவடிக்கைக்கள் மூலம் கட்டுப் படுத்தினர். ஆனால், இஸ்லாமிய நாடுகளில், மதநம்பிக்கை மூலம் நடப்பதால், அரசுகள் கண்டும் காணாதது போல இருந்து விடுகின்றன.

Black goat sacrificed by Pak airlines Dec.7, 2016.

விமான பாதுகாப்பிற்கு கருப்பு ஆடு பலிக் கொடுத்த பாகிஸ்தான் விமானத் துறை[8]: நான்கு மாதங்களுக்கு முன்னர் டிசம்பர் 2016ல், பாகிஸ்தானிய விமானத்துறை பாதுகாப்பு கோரி, ஒரு கருப்பு ஆட்டை அறுத்து பலியிட்டனர்[9]. பாகிஸ்தான் விமானங்கள் அடிக்கடி விபத்தில் மாட்டிக் கொள்கின்றன[10]. டிசம்பர் 7, 2016 அன்று நடந்த விபத்தில், விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பிரயாணம் செய்தவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அடிக்கடி பலிகள் நடப்பதால், ஏதோ தியசக்திதான் வேலை செய்கிறது, அதனை விரட்ட கருப்பு ஆடு பலியிட வேண்டும் என்று, மாந்தீரிகர்கள் அறிவுருத்தியதால், விமான ஆட்கள் அவ்வாறே செய்தனர்[11]. சமூக ஊடகங்கள், மற்றவர்கள் கிண்டலடித்தாலும், அவர்கள் கவலைப்படவில்லை. அதேபோல, பாலங்கள் கட்டுவது, பெரிய சாலைகள் போடுவது போன்ற வேலைகள் ஆரம்பிக்கும் போதும் பலி கொடுக்கப் படுகின்ற்து. நம்ம வீரமணி போன்றோர் அல்லது ஷிர்க் கூட்டத்தால் கலாட்டா செய்யவில்லை.  பொதுவாக ஈத் அன்று 1,00,00,000க்கும் [ஒரு கோடி] மேலான விலங்குகள் பலியிடப் படுகின்றன. இதில் மதநம்பிக்கையை விட வியாபாரம் தான் பெரிதாக இருக்கிறது[12]. தோல் அதிகம் கிடைக்கும், அதனை ஏற்றுமதி செய்யலாம், ரூ 8 கோடிகள் கிடைக்கும் என்றுதான் கணக்குப் போடுகின்றனர்[13]. தோல் வியாபரக் கழகம் அதில் அதிகமாகவே சிரத்தைக் காட்டுகிறது[14]. மிருகங்களை அறுக்கும் போதே, தோலை யார் பெறுவது என்று சண்டை போட்டுக் கொள்வர் / அதையே விளையாட்டாக கொள்வர். அதிலும் அடிதடி-சண்டை நடைபெறுவதுண்டு.

© வேதபிரகாஷ்

03-04-2017

Black goat sacrificed by Pak airlines Dec.7, 2016.2

[1] Pakistan Observer, Sargodha Shrine custodian kills 20 devotees, April.3, 2017.

[2] http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/

[3] Geo.TV.news, Killed people because they had planned to poison me: Sargodha murder accused, Malik Asghar and Naveen Anwar, April.2, 2017.

[4] https://www.geo.tv/latest/136447-Killed-people-because-they-had-planned-to-poison-me-Sargodha-murder-accused

[5] தினமணி, பாகிஸ்தானில் உள்ள தர்காவில் கொடூரம்: மயக்க மருந்து கொடுத்து 20 பேரை வெட்டிக் கொன்ற மனநோயாளி, ஏப்ப்ரல்.3, 2017.

[6] http://www.dinamani.com/latest-news/2017/apr/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-2677320.html

[7] Punjab Minister for Religious Affairs Zaeem Qadri said intelligence agencies along with police and the local government were investigating all aspects of the case. Qadri said that his department managed some 552 shrines in the province, but this one was not a registered with it.
“Investigators will also look into how this shrine was allowed to be set up on private land,” he said. Punjab Chief Minister Shahbaz Sharif has asked for a police report on the investigation within 24 hours, a senior government official said. There have been cases of people dying during exorcism ceremonies at some shrines across the country, but mass killings are rare.

http://pakobserver.net/sargodha-shrine-custodian-kills-20-devotees/

[8] Daily Mail, Pakistan airline responds to safety fears after plane crash kills everyone on board one of its jets by sacrificing a goat , PUBLISHED: 12:01 BST, 19 December 2016 | UPDATED: 23:17 BST, 19 December 2016.

[9] http://www.dailymail.co.uk/news/article-4047924/Pakistan-airline-mocked-goat-sacrifice.html

[10] Daly Mail, PIA plane crash: Pakistan’s national airline sacrifices goat on Tarmac before test flight, Monday 19 December 2016 11:15 GMT

[11] http://www.independent.co.uk/travel/news-and-advice/pia-lane-crash-goat-sacrifice-pakistan-national-airline-tarmac-atr-grounded-benazir-bhutto-a7484081.html

[12] According to Gulzar Feroz, the central chairman at the Tanners’ Association, more than 2.7 million cows/bulls, four million goats, 800,000 lambs, and up to 30,000 camels will be sacrificed this year. He said that the hides of cows/bulls were expected to fetch a price of Rs1,600 in the market, while goat hides would fetch a market price of Rs 250 each. He said that hides of sacrificial animals fetched a total of Rs8 billion last Eid, but due to fall in prices this year, hides of sacrificial animals are expected to fetch around Rs7 billion this year.

https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

[13] Geo News, Pakistanis to sacrifice over 10 million animals this Eid, September 12, 2016.

https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

[14] https://www.geo.tv/latest/114495-Pakistanis-to-sacrifice-over-10-million-animals-this-Eid

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் இருவர் சாவு கலவர நிலையில் அலுவலகம், ஆவணங்கள், வண்டிகள் தீக்கிரை!

ஏப்ரல் 25, 2016

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் இருவர் சாவு கலவர நிலையில் அலுவலகம், ஆவணங்கள், வண்டிகள் தீக்கிரை!

Aligarh கில்லிங் 2

அலிகர் பல்கலைக்கழகத்தின் சித்தாந்த நிலைப்பாடும், மாணவர்கள் பிளவுப்பட்டிருக்கும் நிலையும்: உபியின் அலிகர் நகரில் அமைந்துள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம், முஸ்லிம்கள் கல்வி நிறுவனம் ஆகும். சமீபத்தில் இது “சிறுபான்மையினர்” பல்கலைக்கழமாகக் கருத முடியாது போன்ற செய்திகள் வெளி வந்தன. பொதுவாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிக்கும் சிந்தனைகள் கொண்ட கல்வி நிறுவனமாக உள்ளது. இர்பான் ஹபீப் (Hirfan Habib) போன்ற இடதுசாரி, “மார்க்சீய சரித்திவியல் சிந்த்தாந்தம்” (Marxist ideology) கொண்ட சரித்திராசிரியர்களின் கூடாரமாகவும் இருந்து வருகிறது. “இந்தியன் ஹிஸ்டரி காங்கிரஸ்” (Indian History Congress) நடக்கும் பொழுது, “அலிகர் ஹிஸ்டாரியன்ஸ் போரம்” (Aligarh Historians Forum) என்ற பெயரில் அம்மாநாடு நடந்து கொண்டிருக்கும் போதே, இணையாக கருத்தரங்களம் நடத்தி தங்களது “மார்க்சீய” சரித்திர-வரைவியல் முறையை (Marxist historiography) திணித்து வருகின்றனர். இவ்வாறு, இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் மார்க்சீயம் இரண்டும் சேர்வதால், படிக்கும் மாணவர்களில் சித்தாந்த ரீதியில் பிளவு ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் அடிக்கடி காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பேசுவது, ஆர்பாட்டம் நடத்துவது, முஸ்லிம்களின் உரிமைகள் என்று கூட்டங்கள் போடுவது முதலியவை நடந்து வருகின்றன. மத்திய பல்கலைக்கழகமான இங்கு சுமார் 37,000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

amu-story-vehicles burnt முஸ்லிம் மாணவர்களுக்கு இடையே கோஷ்டி பூசல், சண்டை, தகராறு: உத்தர பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில், மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், வன்முறை வெடித்தது[1]. இதில், முன்னாள் மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்[2]. உத்தர பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக, மாணவர் விடுதியில், முன்னாள் மாணவர்கள் பலர் விதிமுறைகளை மீறி தங்கியுள்ளனர்[3]. இதுதவிர, இரு மாணவர் கோஷ்டிகளுக்கு இடையில் பல்வேறு காரணங்களால் விரோதம் நிலவி வந்தது[4].  அவர்களுக்கு ஆதரவாக சில மாணவர்கள் செயல்பட்டு வரும் நிலையில், மற்றொரு பிரிவு மாணவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்[5]. இது தவிர இந்நிலையில் சனிக்கிழமை  இரவு (22-04-2016), இரு பிரிவு மாணவர்களும் பயங்கரமாக மோதினர்[6]. அப்போது, வளாகத்துக்குள் உள்ள”மும்தாஜ்’ என்ற பெயரிலான மாணவர் விடுதியில்  மோசீன் இக்பால் என்ற மாணவர் ஒருவரின் அறையை (எண்.12), மற்றொரு பிரிவினர் தீ வைத்து எரித்தனர்;  தாளாளர் அறை மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது மாணவர்கள் தீ வைத்து எரித்தனர்[7]. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களும் எரிக்கப்பட்டன[8]. தாளாளர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 28,000 மாணவர்களின் ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்திருக்கும் விவரங்களிலிருந்து, அவற்றை மீட்டு விடலாம் என்று நம்புகின்றனர்[9]. இதையடுத்து, இங்கிருந்து உயிர் தப்பிய பல்கலைக்கழகத்தில் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரியிடம் மோசீன் 9.30 அளவில் புகார் அளிக்கச் சென்றார். அப்பொழுது பைக்குகளில் சுமார் 30-40 மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்து சேர்ந்தனர்[10]. அப்போது, அந்தச் செய்தி வெளியே பரவியது. இதையடுத்து, ஆஸம்கர் நகரைச் சேர்ந்த மாணவர்களும், சம்பல் நகரைச் சேர்ந்த மற்றொரு மாணவர்களும் மோதலில் ஈடுபட்டனர். காஜிப்பூர் மாணவர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்[11]. 30 முறை துப்பாக்கிகள் சுடப்பட்டன என்று குறிப்பிடப்படுகிறது[12].

amuviolence தீவைப்பு

A burnt building of Proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

துப்பாக்கி சுடும் வேலையை மாணவர்கள் எப்படி செய்தார்கள்?: இப்படித்தான் – அதாவது, மேலே குறிப்பிட்டப்படி, ஊடகங்கள் பொதுவாக செய்திகளில் சொல்லி வருகின்றன. மற்ற விசயங்களுக்கு “புலன்-விசாரணை ஜார்னலிஸம்” என்று எல்லா விசயங்களும் எங்களுக்குதான் தெரியும் என்பது போல புட்டு-புட்டு வைக்கும் ஊடகங்கள் இவ்வாறு செய்திகளை வெளியிடுவது தமாஷாகத்தான் இருக்கிறது. துப்பாக்கிகளை வைத்து சுட்டுக் கொண்டனர் என்றால், படிக்கும் மாணவர்களிடம் எப்படி துப்பாக்கிகள் வந்தன? போலீஸார் அதைப் பற்றி ஏன் விவரங்களைக் கொடுக்காமல் இருக்கின்றனர்? ஹைதராபாத் மத்திய பல்கலை, ஜே.என்.யூ, புனே பிளிம் இன்ஸ்டிடுயூட் என்றேல்லாம் வரும் போது, நேரிடையாக சென்று, மாணவர்கள், ஆசிரியர்கள் எல்லோரையும் பேட்டிக் கண்டு விவரங்களை அள்ளி வீசினவே? இப்பொழுது அவ்வாறு ஏன் செய்யவில்லை? யார் தடுக்குகிறார்கள்? மோட்டார் சைக்கிள்களில் வந்தார்கள் என்றால், எண்களை வைத்து யார் என்று கண்டுபிடிக்கலாமே? உள்ளே நுழையும் போது, செக்யூரிடியில் அவ்விவரங்கள் பதிவாகி இருக்குமே? சரி, உள்ளே நடக்கும் நிகழ்சிகளை கண்காணிக்க வைத்துள்ள கேமராக்கள் என்ன விவரங்களைக் கொடுக்கின்றன?

rk24amuviolence1

Policemen stand next to the blood stains at Proctor office after the violence in two students group, at Aligarh Muslim University in Aligarh on April 24th 2016.Express photo by Ravi Kanojia.

துப்பாக்கிப் பிரயோகம் மாணவர்களல் நடத்தப் பட்டது: இந்நிலையில் சில மாணவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் துப்பாக்கியால், ஒருவருக்கு ஒருவர் சுட்டதில், முன்னாள் மாணவர் ஒருவர் பலியானார்; மேலும் இருவர் காயம் அடைந்தனர். தமிழ்.இந்து, “அப்போது அங்கும் வந்த அந்த மாணவர் கோஷ்டி புகார் செய்ய வந்தவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் குண்டுபட்டு படுகாயம் அடைந்தனர்.” என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸும் இதனை “கேம்பஸ் கன்பைட்”, அதாவது வளகத்தில் நடந்த துப்பாக்கிச்சண்டை என்றெ குறிப்பிட்டுள்ளது[13]. ஆனால், தினத்தந்தி, “அலிகார் பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.” செய்தி வெளியிட்டுள்ளது[14]. தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவர்களின் வன்முறையை கட்டுப்படுத்த முதலில் கண்ணீர் புகை வீசினர். மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்தால் துப்பாக்கிச்சூடு நடத்தினர்[15]. இதில் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த கலவர சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. பலியானவர் பெயர் மெஹ்தாப் / மக்தாப்[16]. இவர், பல்கலைக்கழகத்தில் இருந்து, ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்ட மாணவர். இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

© வேதபிரகாஷ்

25-04-2016

[1] மாலைமலர், உத்தரப்பிரதேசத்தில் அலிகார் பல்கலைக்கழகத்தில் கலவரம்துப்பாக்கி சூட்டில் மாணவர் பலி, பதிவு: ஏப்ரல் 24, 2016 11:19

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2016/04/24111926/1008139/Clash-between-two-student-groups-in-AMU-one-killed.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்.. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, By: Jayachitra, Updated: Sunday, April 24, 2016, 10:43 [IST]

[4] தமிழ்.இந்து, அலிகர் பல்கலை. மாணவர் கோஷ்டி மோதலில் இருவர் பலி; பதற்றம்: மத்திய பாதுகாப்பு படை குவிப்பு, ஆர்.ஷபிமுன்னா, Published: April 24, 2016 14:16 ISTUpdated: April 24, 2016 18:13 IST.

[5] http://tamil.oneindia.com/news/india/amu-clash-one-student-killed-proctor-office-vehicles-torched-252013.html

[6] தினமலர், அலிகார் பல்கலையில் வன்முறை:முன்னாள் மாணவர் படுகொலை, ஏப்ரல்.24. 2016.20.02.

[7] நியூஸ்7.தமிழ், பல்கலைகழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் பலி, Updated on April 24, 2016; http://ns7.tv/ta/fight-among-students-university-and-student-died.html

[8] http://www.dinamalar.com/news_detail.asp?id=1508546

[9] http://indiatoday.intoday.in/story/violence-in-amu-campus-2-students-killed-in-gun-battle-28000-student-records-gutted-in-fire/1/650495.html

[10] http://indianexpress.com/article/india/india-news-india/amu-clash-one-student-killed-proctor-office-vehicles-torched-2767734/

[11] Sources in the university told The Hindu at the clash was between students from Ghazipur, Sambhal and Azamgarh. “The tension between students and former students belonging to Sambhal, Azamgarh and Ghazipur has been simmering for quite some time now. And the violence which we saw on Saturday was result of an ongoing war of ego between these warring groups of regional students,” said a university official.

http://www.thehindu.com/news/national/other-states/exstudent-killed-in-amu-campus-clash/article8515953.ece

[12] At about 9.30 pm Saturday, Mohsin along with others reached the proctor’s office to lodge a complaint. “Meantime, a group of students belonging to a rival gang arrived on motorcycles. They were around 30 to 40 in number and were carrying weapons. After heated arguments, firing started from both the sides and went on for 15 minutes. At least 30 rounds were fired…we were helpless as the students were armed,” a member of the security staff, who was present at the spot, said.

[13] Indian express, Two killed in AMU campus gunfight, vehicles torched, Updated: April 25, 2016 1:53 am

[14] தினத்தந்தி, அலிகார் பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே மோதல்:போலீஸ் துப்பாக்கி சூட்டில் மாணவர் பலி , மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஏப்ரல் 24,2016, 12:38 PM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஏப்ரல் 24,2016, 12:38 PM IST

[15] http://www.dailythanthi.com/News/India/2016/04/24123829/1-killed-in-clashes-at-Aligarh-Muslim-University-proctors.vpf

[16] தினமணி, அலிகர் பல்கலை.யில் துப்பாக்கிச் சண்டை: 2 இளைஞர்கள் பலி, By அலிகர், First Published : 25 April 2016 12:31 AM IST

இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!

மார்ச் 1, 2013

இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது!

Bangladesh - India

பங்களாதேசத்தில்இஸ்லாமியத்தலைவருக்குத்தூக்குத்தண்டனை: பங்களாதேசத்தில் 1971ல் யுத்தம் நடந்தபோது, இந்தியப் படை, முக்தி வாஹினி என்ற பாகிஸ்தானிற்கு எதிராகப் போராடிய படைக்கு ஆதரவாக இருந்து, சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது. இருப்பினும், பாகிஸ்தானை ஆதரித்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அப்பொழுது, போர்நிலையை பயன்படுத்திக் கொண்டு, பற்பல அட்டூழியங்களைச் செய்துள்ளனர். பங்களாதேசம், இஸ்லாமிய நாடாக இருந்தாலும், இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வருகின்றானர். குறிப்பாக பாகிஸ்தான் ஆதரவாளர்களை தேசவிரோதிகளாகவே கருதுகின்றனர். இதனால், அத்தகைய போர்க் குற்றங்களை விசாரிக்க, ஒரு சிறப்பு நீதிமன்றம் உருவாக்கப் பட்டது. அதன்படி, டெலாவார் ஹொஸைன் சையீது (Delawar Hossain Sayedee, a leader of Jamaat-e-Islami, an Islamist party) என்ற இஸ்லாமியக் கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் தலைவருக்கு 1971 போர் குற்றங்களுக்காக சிறப்புப் போர் குற்றங்களை ஆராயும் நீதிமன்றம் தூக்குத் தண்டனை[1] விதிக்கப்பட்டுள்ளது!

Bangladesh protesters against Capital punishment

ஜமாத்இஸ்லாமிதலைவர்செய்தகுற்றங்கள்: இவர் கீழ்கண்ட குற்றங்களுக்காக விசாரணைச் செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது[2].

  • மனிதகுலத்திற்கு எதிராக பல குற்றங்களைப் புரிந்தது
  • பல கிராமங்களை கொள்ளையடித்தது
  • பலகிராமங்களை தீயிட்டுக் கொளுத்தியது
  • அப்பவி மக்களைக் கொன்றது
  • பெண்களைக் கற்பழித்தது
  • இந்துக்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்தது
  • அவர்களின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டது.

போர் மற்றும் போர்க்குற்றங்களில் 30,00,000 மக்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்[3]. அதாவது,ளாப்பொழுது கிழக்கு வங்காளம் அல்லது கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சுதந்திரம் நாடி போராடியபோது, பாகிஸ்தான் படையினர் மற்றும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் விடுதலைப் படைக்கு எதிராக போராடினர், மக்களைக் கொன்றனர்.

The peoples verdict -Giant hoardings demand the hanging of war criminals

கடந்த அநீதிக்குத் தீர்வு வேண்டும் என்றால், நீதி காக்கப்படவேண்டும்: நீதிபதி ஏ.டி.எம். பஸலே கபீர் தமது எழுத்து மூலம் அளித்தத் திப்பில் அறிவித்ததாவது[4], “நீதிபதிகளாகிய நாங்கள் இந்த தண்டனை அளிக்காவிட்டால், கடந்தகால அநீதி நேர்ததற்கான பிராயச்சித்ததை நீதியாக அடையமுடியாது என்ற தத்துவத்தில் மிகவும் ஆழமான நம்பிக்கைக் கொள்கிறோம் மற்றும் கொண்டிருக்கிறோம்”. நீதி எனும்போது, நீதிபதிகள் நீதியில் நம்பிக்கைக் கொண்டுள்ளது தெரிகிறது. இருப்பினும், குற்றாவாளியின் வழக்கறிஞர் மேல் முறையீடு செய்வோம் என்று அறிவித்துள்ளார்.

Supporters at Shabag square Bangladesh 2013

தீவிவாத அமைப்புகளுடன் தொடர்பு: இந்த இஸ்லாமிய இயக்கம், பாகிஸ்தானிய மற்றும் இதர தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு வேலை செடய்து வந்துள்ளது. இந்த இச்ளம்ய ஜமாத் கட்சி, முந்தைய பிரதம மந்திரியின் கட்சியான தேசியக் கட்சியுடன் சேர்ந்து அரசாட்சியிலும் பங்குக் கொண்டுள்ளது. இருப்பினும், தீவிரவாத இயக்கத் தொடர்புகளினால், பொது மக்கள் அதனை வெறுத்தொதிக்கினர்[5]. அதுமட்டுமல்லாது, அக்கட்சியின் எல்லா தலைவர்களுமே, பற்பல குற்றங்களுக்காக சிறையில் உள்ளார்கள்[6].

Bangladeshi- absconding Terrorists

தொடர்ந்து நடந்த கலவரங்களில் 35 பேர் சாவு: இத்தீர்ப்பை ஆதரித்து, எதிர்த்தும் பங்களாதேசத்தில் வெளிப்படையாக பேசப்பட்டது. பலர் ஆதரித்து பொதுநிகழ்ச்சியில் பேசவும் செய்தனர். தலைநகர் டாக்காவில், சபாக் சதுக்கத்தில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள் என்று பலர் கூடி தீர்ப்பை ஆதரித்து முழக்கமிட்டனர். “தேசவிரோத பாகிஸ்தானிய ஆதரவாளர்கள், பாகிஸ்தானிற்கு போங்கள்ளென்று ஆர்பரித்தனர்[7]. இதனால், எதிர்க்கும் ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டத்தனர் ஆர்பாட்டத்தில், ரகளையில் ஈடுபட்டனர்[8]. இதனால் அரசு பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் 35 பேர் இறந்துள்ளனர்[9]. இறந்தவர்களில் 4 போலீஸாரும் அடங்குவர், அதில் இருவர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளனர்[10]. 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

My jihad is bomb your country

இந்திய முஸ்லீம்கள் இதன் மூலம் பாடம் கற்றுக் கொள்வார்களா?: இங்கு, இந்தியாவில் அப்சல் குருவைத் தூக்கிலிட்டதற்கு, சென்னையிலேயே எதிர்ப்புத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். காஷ்மீர முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கவேவேண்டாம், அவனது உடலைப் பெறுவது, அடக்கம் செய்வது என்ற விஷயங்களில் இரு கட்சிகளும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், ஆளும் கட்சியினர், ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் முதலியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமாக செயல் பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? நாடு எனும்போது, தமது நாட்டை ஆதரிக்க முஸ்லீம்கள் ஏன் மாறுபட்டு நடக்க வேண்டும்?

© வேதபிரகாஷ்

28-02-2013


[2] Prosecutors accused him of involvement in looting and burning villages, raping women and forcing members of religious minorities to convert to Islam during the war.

http://www.nytimes.com/2013/03/01/world/asia/islamic-leader-sentenced-to-death-in-bangladesh.html?_r=0

[4] “As judges of this tribunal, we firmly hold and believe in the doctrine that ‘justice in the future cannot be achieved unless injustice of the past is addressed,’ ” Justice A. T. M. Fazle Kabir commented in a written summary of the judgment.

http://www.nytimes.com/2013/03/01/world/asia/islamic-leader-sentenced-to-death-in-bangladesh.html?_r=0

[5] One of the largest Islamist parties in South Asia, Jamaat was the leading coalition partner of former Premier Khaleda Zia’s Bangaldesh Nationalist Party. It bred many terror groups but is now becoming an outcast in Bangladesh, with almost its entire top leadership behind bars on war crimes charges.

[7] Just adjacent to the Bangbandhu medical college, and not far away from the Prime Minister’s residence, it has become home to thousands of students, doctors, artists, government officials and landless workers who have made it their abode amid chants of “phaansi” to traitors and “traitors go to Pakistan”.
http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2286185/Shahbag-Square-cheers-change-Dhakas-young-protesters-demand-ban-extremism-death-war-criminals.html?ito=feeds-newsxml

[9] Violent clashes between protesters and security forces erupted across Bangladesh on Thursday, leaving at least 35 people dead.