Posted tagged ‘சுபஹனி மொய்தீன்’

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் – ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (3)?

ஒக்ரோபர் 26, 2016

 

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (3)?

muhammad-ghani-usman-and-adel-haddadi

சுபஹனி மொஹிதீன் மற்றும் மொஹம்மது கனி உஸ்மான் மிகவும் நெருங்கிய நண்பர்களாம்: சுபஹனியில் மிக்க நெருங்கிய நண்பன், லஸ்கர்-இ-தொய்பாவின் சிறந்த வெடிகுண்டு தயாரிப்பாளனான மொஹம்மது கனி உஸ்மான் [Mohammad Ghani Usman] ஆவான்[1]. இவன் பாரிஸ் குண்டுவெடிப்பு வழக்கில் சால்ஸ்பர்க் அருக்கில் ஆஸ்திரிய போலீஸாரால் டிசம்பர் 2015ல் கைதானான். மும்பை 26/11ல் தொடர்புள்ள உஸ்மான், அடெல் ஹட்டாட் [Adel Haddad] என்கின்ற ஐசிஸ் கூட்டாளியோடு பிரான்ஸில் நுழையும் போது பிடிபட்டான். இவர்கள் இருவரும் ஒரே படகில் கிரேக்கத் தீவான லெரோஸுக்குச் சென்றனர். அப்பொழுது, அவர்களுடன் அஹமது அல்-மொஹம்மது [Ahmed Al-Mohammed] மற்றும் மொஹம்மது அல்-மொஹம்மது [M al Mahmod] என்ற இருவரும் இருந்தனர். போலி பாஸ்போர்ட் மூலம் இவர்கள் பாரிஸில் நுழைந்தனர்[2]. அஹமது அல்-மொஹம்மது மற்றும் மொஹம்மது அல்-மொஹம்மது இருவரும் நவம்பர் 13, 2015 அன்று தங்களை ஸ்டேட் டி பிரான்ஸ் [Stade De France] என்ற இடத்தில் வெடித்துக் கொண்டனர். இப்படி தமிழக கடையநல்லூர்வாசி, இவர்கள் எல்லோருடனும் உல்லாசப் பயணம் செய்யவில்லை. ஆக, இவர்கள் எல்லோருமே ஒன்றாக பிரான்ஸில் ஜிஹாதி-குண்டுவெடிப்பு திட்டத்துடன் நுழைந்துள்ளனர்[3].

tatp-explosives-used-in-brusselsஹைதராபாதில் TATP-குண்டு-தயாரிப்பு-வெடிப்பிற்கு தொடர்புள்ள ரசாயனங்கள் பிடிபடல்: ஜூன் 29, 2016 அன்று ஹைதராபாதில் அப்துல்லா பின் அஹமது [Abdullah bin Ahmed] என்ற ஐசிஸ் ஆளின் வீட்டில் சோதனையிட்டபோது, வீட்டின் கீழறையில், மிக்க நச்சுத்தன்மை வாய்ந்த டிரை-அசிடோன் டிரை-பெராக்ஸைட் [triacetone triperoxide (TATP)] என்ற வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டது[4]. இதே TATP தான் பாரிஸ் குண்டுவெடிப்பிலும் உபயோகப்படுத்தப் பட்டது. 200 லிட்டர் அசிடோன், ஹைரஜன் பெராக்ஸை மட்டும் பாட்டிகளில் கந்தக அமிலம் முதலியவற்றை ஹபீப் மொஹம்மது என்கின்ற “சார்” [Habeeb Mohammad alias Sir] என்பவனிடமிருந்து வாங்கியிருந்தான்[5].  இவனுக்கு இவை எவ்வாறு கிடைத்தன, அவற்றை அப்துல்லா பின் அஹமதுக்கு ஏன் விற்றான் போன்ற கேள்விகளும் எழுகின்றன. இவையெல்லாம் நிச்சயமாக தமாஷுக்கு வாங்கி வைக்கவில்லை, ஏனெனில், இவற்றை வைத்துக் கொண்டு 40-50 IED என்கின்ற வெடிகுண்டுகள் தயாரிக்க முடியும். பிறகு, அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகின்றனர்?

isis-linked-july-2016-arrested-26-11-link-etcமொஹம்மது இப்ராஹிம் யஜ்தானி கீழே வேலை செய்பவர்கள், வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டவர்கள்: இவர்கள் எல்லோருமே மொஹம்மது இப்ராஹிம் யஜ்தானி [Mohammad Ibrahim Yazdani] என்பவனின் கீழ் வேலை செய்து வருகிறார்கள்[6]. சந்தேகம் வராமல் பொதுவாக வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் ரசாயனங்களை வைத்துக் கொண்டு வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி என்ற அத்தொழிற்நுட்பத்தை அவனிடமிருந்து தான் பெற்றனர்[7]. யஜ்தானி இந்த கலையை சிரியாவில் உள்ள ஷபி ஆர்மர் என்பவனிடமிருந்து கற்றுக் கொண்டான். இவன் தான் அர்மார் அல்லது யூசூப் அல்-ஹிந்த் [Syria-based Shafi Armar alias Yusuf Al Hindi] என்பவன். பட்கல்லில் இருந்த இவன் இப்பொழுது சைசிஸுக்காக வேலை செய்கிறான். ஜுனூத்  உல் முஜாஹித்தீன் மற்றும் அன்சுர்-உல் தௌஹீத் இல் பிலாத் அல்-ஹிந்த் போன்ற இயக்கங்களை நடத்தி, ஐசிஸுக்காகா ஆட்களை சேர்ப்பவன்[8]. பட்கல் என்பது கநாடகாவில் கடற்கரை நகரமாக இருக்கிறது. இங்கு முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றனர், அவர்களில் உள்ளவர்கள் தான் தீவிரவாத செயல்களில் அதிகமாக சம்பந்தப்பட்டுள்ளனர். குறிப்பாக யாசின் பட்கல், உள்ளூரில் எளிதாக கிடைக்கும் ரசாயனப் பொருட்களை வைத்து வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் வல்லவன். எனவே அங்கிருந்த அர்மார் இத்தகைய யுக்தியை கையாண்டு வெடிகுண்டுகளை தயாரிக்கிறான் என்பதில் வியப்பில்லை. பர்பனி குழுமம் [Parbhani module] என்று நடத்தி தனது நாசவேலைகளை செய்து வருபவன். சுபஹனியும் வெடிப்பொருட்கள் வாங்கியதிலும், கேரள நண்பவர்களுக்கு கொடுத்த விவகாரங்களிலும் தான் பிடிபட்டான். கேரளாவில் உள்ள முக்கிய அரசாங்க அதிகாரிகளைக் கொல்வதற்குதான், வெடிகுண்டுகள் தயாரிக்க அவற்றை மொஹித்தீன் வாங்கினான் என்று சொல்லப்பட்டது. ஆகையால், இவர்களுக்கு இந்த ரசாயனப் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் என்ன, அவற்றை வைத்துக் கொண்டு, இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதெல்லாம் ஆராயும் போது, அவர்களது குரூரத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.

subahani-haja-moideenகடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள்: பட்கல்-வெடிகுண்டு தயாரிப்பு முறை இவர்கள் எல்லோரிடத்திலும் வெளிப்படுகிறது. எப்படி முன்னர் இந்தியன் முஜாஹித்தீன் முறைகள் இவர்களிடம் வெளிப்பட்டனவோ, ஐசிஸ் உருவாகியப் பிறகு, அவர்களிடம் வெளிப்படுகிறது. ஐசிஸுக்கு பணம் அதிகமாக இருப்பதால், இவர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு, அத்தகைய வெடிகுண்டு தயாரிப்பை செய்து வருகிறது. அவ்வகையில் உருவானது தான் “சாத்தானின் தாய்” எனப்படுகின்ற இந்த TATP-வெடிகுண்டு. இது பாரிஸில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது, ஹைதராபாத், கடையநல்லூர் தீவிரவாதிகளிடமும் வெளிப்படுகிறது. இந்த TATP-குண்டு தயாருக்கும் முறை, இவர்களுக்குள் ஏற்பட்டுள்ள சந்திப்புகள், நாடுகள் கடந்த பயணிப்புகள், சகவாசங்கள் முதலியன அவர்களது தீவிரவாத இணைப்புகளைக் காட்டுகின்றன. இதெல்லாம் தற்கெயலாக நடந்தவை என்று சொல்ல முடியாது. முஸ்லிம் இளைஞர்களாக இருந்து கொண்டு, நாட்டுப் பற்று இல்லாமல், இந்தியாவிற்கு எதிராக சதிதிட்டம் போடுதல், வெடிமருந்து பொருட்களை சேகரித்தல், வெடிகுண்டுகள் தயாரித்தல், மலை-காடுகள் பிரதேசங்களில் வெடித்து சோதனை செய்தல், பயிற்சிபெறுதல், குண்டுவெடிப்புகள் நிகழ்த்துதல் போன்றவை தீவிரவாத-பயங்கரவாத நாசவேலைகள் செய்வதையே எடுத்துக் காட்டுகின்றன. இப்பொழுது அனைத்துல ரீதியில் செயல்படுவதால், இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

26-10-2016

abdelhamid-abaaoud-paris-bomb-blast-plotter

[1] The Times of India, Tamil Nadu IS jihadi’s best pal was Pakistani bombmaker, Neeraj Chauhan| TNN | Updated: Oct 25, 2016, 02:10 IST.

[2] Usman, who Indian investigators feel also needs to be investigated for the 26/11Mumbai attacks conspiracy, was caught along with another ISIS operative — an Algerian national — Adel Haddadi while they were trying to enter France for “second wave of attacks in Europe”, as claimed by authorities there. It had turned out that Usman and Haddadi had travelled on the same boat to Greek Island of Leros on October 3, 2015 on which two Paris suicide bombers – Ahmed Al-Mohammed and M al Mahmod, who blew themselves up at Stade De France on November 13, 2015, were also there. Initially Usman and Haddadi were detained by Greek authorities as they were in possession of fake Syria passports in the name of Faycal Alaifan and Fozi Brahi respectively and were taking shelter as “refugees”.

[3] http://timesofindia.indiatimes.com/india/LeTs-bomb-expert-was-the-best-friend-of-IS-jihadi-from-India/articleshow/55039440.cms

[4]  A lethal explosive triacetone triperoxide (TATP) that was used by Islamic State (IS) bombers in the Paris and Brussels attacks was found in the basement of a Hyderabad house of a member – Abdullah bin Ahmed Al Amoodi alias Fahad of the IS module that was busted by the NIA on Wednesday.29-06-2016 –  the module led by Mohammad Ibrahim Yazdani – When Fahad’s residence was raided early on Wednesday morning, the NIA team found around 200 litres of acetone, hydrogen peroxide and bottles of sulphuric acid. Interrogation of the suspects revealed that the chemicals were enough to make 40-50 IEDs and were purchased by arrested member Habeeb Mohammad alias Sir from Anantapur and Hyderabad.

http://timesofindia.indiatimes.com/india/Explosives-links-Hyderabad-to-Paris-Brussels/articleshow/52998048.cms?

[5]The Times of India, Explosives links Hyderabad to Paris & Brussels, Neeraj Chauhan & Bharti Jain| TNN | Jul 1, 2016, 12.40 AM IST.

[6] http://timesofindia.indiatimes.com/india/Explosives-links-Hyderabad-to-Paris-Brussels/articleshow/52998048.cms?

[7] Investigators said Yazdani was guided by Syria-based Shafi Armar and had procured huge quantities of acetone, hydrogen peroxide and sulphuric acid, the primary ingredients of TATP. Often termed the ‘Mother of Satan’, the explosive is easy to make in a basement lab under controlled conditions with chemicals easily available at pharmacies, hardware shops and cosmetics stores, making it a popular choice of terror groups like al-Qaida and IS.

http://timesofindia.indiatimes.com/india/Explosives-links-Hyderabad-to-Paris-Brussels/articleshow/52998048.cms?

[8] Armar, a resident of Bhatkal in Karnataka and former Indian Mujahideen (IM) operative, headed and recruited Indians for the IS and its regional franchisee Junood ul Khalifa-e-Hind. He had also headed Ansar-ul Tawhid fil Bilad al-Hind, which too has links with IS.

http://www.dnaindia.com/mumbai/report-cops-suspect-syria-based-parbhani-handler-could-be-im-man-2250499

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் – ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (2)?

ஒக்ரோபர் 26, 2016

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (2)?

paris-bombers-subahani-link-dec-2015

பாரிஸ் தொடர்புகளை ஒப்புக் கொண்ட சுபஹனி மொஹிதீன்: இஸ்லாமிய அரசு போராளி, தமிழகத்தைச் சேர்ந்தவன்[1], அவனுக்கு பாரிஸ் குண்டுவெடிப்பாளர்களுடன் தொடர்புகள் இருக்கின்றன என்று இப்பொழுது (அக்டோபர் 23 2016) வாக்கில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன[2]. 2015 நவம்பரில் அவர்களை சந்தித்தப் பிறகு, இந்தியாவுக்கு வந்ததாகவும், அப்பொழுது ஊடகங்கள் மூலம், பாரிஸ் தாக்குதல் பற்றி அறிந்தபோது, அவர்களுடைய சந்திப்புகளை நினைவு கூர்ந்ததாகவும் சொன்னான்[3]. பாரிஸ் குண்டுவெடிப்பில் மூன்று குழுக்கள், ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் என்று ஈடுபட்டு குண்டுகளை வெடித்தும், ஏ.கே.47 துப்பாக்கிகளால் சுட்டும் 130 பேரைக் கொன்றுள்ளனர். இவர்களுக்கு – இந்த தீவிரவாதிகளுக்கு புனைப்பெயர்கள் தான் கொடுக்கப் பட்டன. மொஹம்மது அல்-பிரான்ஸிசி, அப்சலாம் அல்-பிரான்ஸிசி, என்று தான் அழைக்கப்பட்டனர்[4]. இதெல்லாம் “ஸ்லீப்பர் செல்” சித்தாந்தத்தின் படி, ஒருவரையொருவர் அறிந்து கொள்ளக் கூடாது என்ற முறையில் உருவாக்கப் பட்டதா அல்லது போலீஸாரிடம், தீவிரவாத தடுப்பு-கண்காணிப்பு குழுக்களிடம் மாட்டிக் கொண்டாலும் தப்பித்துக் கொள்ள யுக்தியாக பயன்படுத்திக் கொள்ளப் பட்டதா என்றும் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக கீழ்கண்ட பெயர்கள் வெளியிடப்பட்டன:

  1. Abdelhamid Abaaoud [main plotter] – அபதல்ஹமீது அபௌத்
  2. Brahim Abdeslam [brother of Abdelhamid Abaaoud] – இப்ராஹிம் அப்சலம் [1ன் சகோதரன்]
  3. Salah Abdeslam [brother of Abdelhamid Abaaoud]  – சலஹ் அப்துல் ரஸாக் [1ன் சகோதரன்]
  4. Aleed Abdel-Razzak [killed in bomb blast, but not a terrorist] – அலீத் அப்தல் ரஸாக் [பாரீஸ் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவன், ஆனால், தீவிரவாதி கிடையாது]
  5. Omar Ismail Mostefei – ஒமர் இஸ்மயில் மொஸ்தபி.

abdelhamad-abaaooud-and-ahmad-al-mohammadபாரிஸ் குண்டுவெடிப்பு தலைவன் தான் சுபஹனி மொஹிதீனின் தலைவன் ஆவான்: NIA மற்றும் பிரெஞ்சு தீவிரவாத கண்காணிப்புக் குழு, இவ்வழக்கை ஆராய்ந்து வரும் நிலையில், NIA அவர்களை தொடர்பு கொண்டபோது, பிரான்ஸில் தாக்குதல் நடந்த போது, அப்பகுதிகளில் சுபஹனி மொஹிதீன் இருந்ததாக சொல்கிறார்கள்[5]. மேலும் பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்டவன் தான் தன்னுடைய தலைவன் என்றும் கூறிக் கொண்டான்[6].  “தி ஹிந்து” “குண்டுவெடிப்பாளர்கள்” என்று பன்மையில் குறிப்பிடுகின்றது[7]. அதாவது மேற்குறிப்பிடப் பட்ட மூவரில் ஒருவன் தலைவனா அல்லது மூவருமே தலைவனா என்பதை அவன் தான் சொல்ல வேண்டும்[8]. மேலும் குண்டுவெடிப்பிலும் இவனுக்கு பங்கு உள்ளாதா இல்லையா போன்றா கேள்விகளும் எழுகின்றன. அப்படியென்றால், அவன் ஆணையின் படி அவன் இந்தியாவுக்குத் திரும்பினானா, அவனுக்கு என்ன திட்டம் கொடுக்கப்பட்டது, போன்ற கேள்விகள் எழுகின்றன. பாரிஸ் குண்டுவெடிப்பு நடந்தபோதே, தமிழகத்தைச் சேர்ந்தவனுக்கும் அந்த நிகழ்சிக்கும் தொடர்புகள் இருந்தன, தமிழகத்தைச் செர்ர்ந்த ஒருவன் அதில் இறந்து விட்டான், என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன.

bilar-hadfi-and-samy-amimour-paris-bombers-deadசுபஹனி மொஹிதீன் பாரிஸில் இருந்தானா, இல்லையா என்ற சந்தேகமும் எழுகின்றது: ஏப்ரல் 8, 2015ல் இராக்கில் இருந்தான், செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பினான், அக்டோபர் 2016ல் திருநெல்வேலியில் கைதானான் என்பதெல்லாம் திகைப்பாக இருக்கிறது. ஏனெனில் நவம்பர் 2015ல் பாரிஸில் குண்டு வைத்தவர்களை இவனுக்குத் தெரிந்தது, அல்லது இவனே அப்பகுதிகளில் இருந்தது போன்றவையும் வியப்பாக இருக்கின்றன. ஆகவே, இவன் இந்தியாவுக்குத் திரும்பி வந்ததே ஒரு நாடகம் போன்றுள்ளது. போரில் தான் கண்ட கொடூரத்தைக் கண்டு பயந்து திரும்பி வந்தான் என்றால், அவன் தொடர்ந்தி, ஐசிஸ் உடன் தொடர்புகள் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. போலி பெயர், போலி பாஸ்போர்ட், தமிழக போலீஸாருக்கே, அவன் சிரியாவுக்குச் சென்றுத் திரும்பியது தெரியாது போன்ற விசயங்கள், ஒருவேளை ஆள்-மாறாட்டம் செய்து ஆட்களை அனுப்பி வைக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது. எப்படியிருந்தாலும், இந்தியர்களை முட்டாள்கள் ஆக்கி, எமாற்றி வருகின்றனர். ஆனால், அவன் தொடர்புகள் வைத்துக் கொண்டு ஆள்சேர்த்தல், சதிதிட்டம் போடுதல் முதலியவற்றை செய்துள்ளான் என்பதிலிருந்தே அவனது பயங்காவாத-தீவிரவாத-குரூர மனத்தை வெளிக்காட்டுகிறது.

imael-omar-mostefai-salah-abdeslam-and-abrahim-abdeslamசுபஹனி மொஹிதீனை பாரிஸ் போலீஸார் விசாரிப்பார்கள்: 2015 நவம்பரில் இந்தியா திரும்பியுள்ளதாக சொல்லப்படும், மொய்தீன், பாரிஸ் தாக்குதல் தொடர்பான தகவலை செய்தியின் மூலம் தெரிந்ததாக கூறியுள்ள நிலையில், சிரியா மற்றும் ஈராக்கின் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் பிடிக்கப்பட்டு இருந்த பகுதியில் பாரீஸ் தாக்குதல் பயங்கரவாதிகள் உடனான சந்திப்பைப்பற்றியும் ஒப்புக் கொண்டுள்ளாதால், இதுதொடர்பான தகவல்களை தேசிய புலனாய்வு பிரிவு பிரான்ஸ் போலீசிடம் தெரிவித்து, இந்தியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திடமும் தெரிவிக்கப்பட்டு, விசாரணைக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை பெற்றபின்னர் பிரான்ஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்துவார்கள் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. பாரீஸ் தாக்குதல் தொடர்பாக பல்வேறு நாடுகளின் அதிகாரிகள் உள்ளடங்கிய விசாரணை நடைபெற்று வருகிறது, ஐ.எஸ். கைவசம் உள்ள பகுதியில் கொடூரமான கொலைகள் அரங்கேற்றப்பட்ட நேரத்தில் மொகதீனும் அங்குதான் இருந்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த நவம்பரில் 6 இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதில், 135-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

© வேதபிரகாஷ்

26-10-2016

muhammad-ghani-usman-and-adel-haddadi

[1] Indian Express, ‘Islamic State recruit’ from Tamil Nadu knew Paris attackers tells sleuths, By: Express News Service | New Delhi | Updated: October 24, 2016 6:22 am

[2] http://indianexpress.com/article/india/india-news-india/islamic-state-recruit-paris-attack-tamil-nadu-3099457/

[3] http://www.dnaindia.com/india/report-indian-isis-operative-subahani-haja-moideen-knew-paris-bombing-accused-2266706

[4] “In Mosul, he was put in a group which also had these two individuals. He knew them only by their pseudonyms which carried the suffix al-Francisi. However, when he was shown the photographs of the attackers, he recognised them,” an NIA officer said.

http://indianexpress.com/article/india/india-news-india/islamic-state-recruit-paris-attack-tamil-nadu-3099457/

[5] The NIA has informed the French security officials and contacted its Embassy here, the sources said, adding this was done in case it would help in their investigation. They said that French officials could question him as well after getting the requisite court order. According to the multi-country investigation into the French terror strikes, the accused involved in the gruesome killings were in IS-controlled areas at the same time Moideen was there.

The Hindu, ‘Indian ISIS operative knew Paris bombers, NEW DELHI, October 24, 2016 Updated: October 24, 2016 01:36 IST

[6] The Times of India, Paris attacker was my leader: IS recruit from India, Neeraj Chauhan| TNN | Updated: Oct 24, 2016, 01:38 IST

[7] http://www.thehindu.com/news/national/indian-is-operative-knew-paris-bombers/article9258867.ece

[8] http://timesofindia.indiatimes.com/india/Paris-attacker-was-my-leader-IS-recruit-from-India/articleshow/55020602.cms