Posted tagged ‘சுத்தம்’

கொரோனா மதநம்பிக்கைகளை பாதித்து விட்டதா – கொரோனா கடவுளை வென்றதா, ஜம்-ஜம் நீர் அதை வெல்லாதா?

ஜூன் 26, 2020

கொரோனா மதநம்பிக்கைகளை பாதித்து விட்டதா – கொரோனா கடவுளை வென்றதா, ஜம்-ஜம் நீர் அதை வெல்லாதா?

Empty space arond Kaba in Mecca

கொரோனா மதநம்பிக்கைகளை பாதித்திருப்பது: கொரோனா உடல், மனம், ஆரோக்கியம், படிப்பு, வேலை, தொழில், வாழ்வாதாரம், பொருளாதாரம், மதம், சமூகம் என்று அனைத்தையும் பாதித்துள்ளது. உலகளவில் கோடிக்கணக்கான மக்களை எந்தவித பாரபட்சமும் இன்றி கொன்றுள்ளது. இன்றும் பீடித்து வருகிறது, அதன் தீவிரம் தெரிகிறது. மதநம்பிக்கையாளர்கள் தத்தம் கடவுளர்களை பிராத்தனை செய்து, வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், குறையவில்லை. அந்நிலையில், ஆயிரக்கணக்கான வருடங்களாக நடைப் பெற்று வரும் வருடாந்திர பண்டிகைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள், விரதங்கள், சடங்குகள் என்று எல்லாமே தடுக்கப் பட்டுள்ளன. ஏனெனில், மக்கள் கூடினால், நெருங்கினால், கொரோனா தொற்று அதிகமாகும். உயிரின் மீது ஆசை இருப்பதால், மக்கள் அடங்கி இருக்கிறர்கள். கடவுள் மீதான பயத்தை விட கொரோனாவின் மீதான பயம் அதிகமாக இருப்பது தெரிகிறது.

Empty space arond Kaba in Mecca-2
ஹஜ் பயணத்தையும் கட்டுப்படுத்திய கொரோனா: இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக கருதப்படும் ஹஜ் புனித பயணம் ஜூலை மாதம் இறுதியில் தொடங்க உள்ளது[1]. வழக்கமாக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், மக்கா மற்றும் மதினா நகருக்கு வருகை தருவார்கள்[2]. ஆனால், தற்போது கொரோனா பரவல் அச்சம் இருப்பதால் ஹஜ் பயணம் தொடர்பாக சவுதி அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு மக்காவுக்கு ஹஜ் பயணத்தில் பங்கேற்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை சவுதி அரேபியா கணிசமாக குறைக்க திட்டமிட்டு உள்ளதாக அரசு நடத்தும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெளி நாடுகளில் இருந்து யாரும் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அதே நேரம் சவுதி அரேபியாவுக்குள் உள்ள வெளிநாட்டினர் ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறி உள்ளது. சவுதி அரேபியாவில் 160,000 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் மற்றும் 1,307 இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது[3]. சவுதி அரேபியா மார்ச் மாதத்தில் முஸ்லிம்களை தங்கள் ஹஜ் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டது, மேலும் அறிவிப்பு வரும் வரை உம்ராவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது[4].

cleaning Kaba in Mecca-4

கொரோனா மெக்கா-மதினாவைத் தாக்கியது: ஒரோனா பாதிப்பு, தொற்று என்று சவுதி அரேபியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்கள் அதிக அளவில் இறந்துள்ளனர். இதனால் மார்ச் மாதம் முதலே, மெக்கா / மக்கா, மதினா போன்ற, இஸ்லாமிய மத-ஸ்தலங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. அரசு அங்கு, உட்புறம்-வெளிப்புறம் என்று அனைத்தையும் சுத்தம் செய்து கொண்டிருக்கிறது. மேலும், ஜம்-ஜம் என்ற இடத்தில் உள்ள நீரை பக்தர்கள் குடிப்பது, எடுத்துச் செல்வது உண்டு. மார்ச் மாதத்திலேயே, சவுதி அரேபியா, ஹஜ் திட்டங்களை நிறுத்து வைத்தது. இத்தாண்டும் அடையாளமாக சிலரே, தகுந்த மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப் படுவர் என்று அறிவிக்கப் பட்டுள்ளது[5]. விமானங்கள் சவுதி அரேபியாவுக்கு வருவதை மார்ச் மாதத்திலிருந்து தடை செய்துள்ளது[6]. திராவிட நாத்திகர், இந்துவிரோத அவநம்பிக்கையாளர், கடவுள்-மறுப்பாளிகள் போல இந்துக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால், துலுக்கர், இன்றும், இப்பொழுதும் இந்துமதத்தைத் தூஷித்து வருவது, சரியில்லை என்றோ, அவர்களை கண்டிப்பதோ இல்லை. அந்நிலையில் தான், இந்துக்கள் துலுக்கர், வெறிபிடித்த முஸல்மான்கள், முஸ்லிம்களின் நம்பிக்கைகளை கேள்வி கேட்க வேண்டியதாகிறது.

Cleaning Kaba in Mecca-5

வெளிநாட்டு பயணிகளை ஹஜ் யாத்திரைக்கு சவுதி அரேபியாவில் அனுமதிக்க முடியாதுசவுதி அரேபியா: கரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு வெளிநாட்டு பயணிகளை ஹஜ் யாத்திரைக்கு சவுதி அரேபியாவில் அனுமதிக்க முடியாத சூழலால் அதற்கு செல்வதற்காக இந்தியாவில் விண்ணப்பித்த 2,13,000 பேருக்கும் செலுத்திய பணத்தை எந்தப் பிடித்தமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தும் பணிகள் 23-06-2020 அன்று தொடங்கியுள்ளது[7]. கரோனா தொற்று சவால்கள் காரணமாக, சவுதி அரேபிய அரசு எடுத்த முடிவுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தி்ல் கொண்டும், இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை (1441 H/2020 AD) மேற்கொள்ள, இந்தியாவிலிருந்து முஸ்லிம்கள் சவுதி அரேபியா செல்ல மாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்[8].

Cleaning Kaba in Mecca-6

சவுதி அரேபியா முடிவால், இந்தியா பணத்தைத் திரும்ப கொடுத்தது: 23-06-2020 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசினார். சவுதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சர் டாக்டர். முகமது சலே பின் தாகர் பென்டனிடம் இருந்து நேற்று தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு (1441 H/2020 AD[9]), இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரிகர்களை அனுப்பவேண்டாம் என சவுதி அரேபியா அமைச்சர் ஆலோசனை கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து விரிவாக ஆலோசித்தாகவும், கரோனா தொற்று சாவல்களை இந்த உலகமே சந்தித்து வருவதாகவும், இதனால் சவுதி அரேபியாவும் பாதிக்கப்பட்டுள்ளதை அவர்கள் ஒப்புக் கொண்டதாக மத்திய அமைச்சர் கூறினார்[10]. இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு 2,13,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்[11]. விண்ணப்பதாரர்கள் செலுத்திய பணத்தை எந்தப் பிடித்தமும் இல்லாமல், திருப்பிச் செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் பணம் விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில், ஆன்லைன் மூலம் நேரடியாக திருப்பிச் செலுத்தப்படும்[12]. இந்தியாவிலிருந்து சவுதிக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள 2.13 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்[13].

Ozone ech to sterlize Kaba in Mecca-7

இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாமல் போவது: இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு ஆண் துணையில்லாமல் செல்ல 2,300-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்து இருந்ததாக அமைச்சர் தெரிவித்தார். இவர்கள் இந்தாண்டு விண்ணப்பம் அடிப்படையில் அடுத்தாண்டு (2021) ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் தெரிவித்தார். இது தவிர புதிதாக விண்ணப்பிக்கும் பெண்கள் அடுத்தாண்டு ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுவர். கடந்த 2019ஆம் ஆண்டில், மொத்தம் 2 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர் என நக்வி தெரிவித்தார். இவர்களில் 50 சதவீதபெண்களும் அடங்குவர். ஆண் துணை இல்லாமல் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை மத்திய அரசு கடந்த 2018-இல் உறுதி செய்த பின், மொத்தம் 3,040 பெண்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்[14]. இந்திய விடுதலைக்குப் பின், நம் நாட்டை சோ்ந்த முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாமல் போவது இதுவே முதல்முறை என்று முக்தாஸ் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்[15].

Sheikh Al-Sudais participates in the washing and disinfecting of the Holy Kaaba.

நாத்திகர், முகமதியர், மற்ற மதத்தினர் உணர்ந்து ஒழுங்காக இருக்க வேண்டும்: மெக்காவில் இருக்கும் பெரிய மசூதி மற்றும் நபிகள் மசூதி இவற்றை ஷேக் அப்துல் ரஹ்மான் அல்-சுதைஸ், “ஹூஷோன் டெக்” உபயோகப் படுத்தி, காபா பகுதியை கிருமிகள் நீங்க, மருந்து அடித்து, ஏப்ரல் மாதத்தில் சுத்தப் படுத்தினார்[16]. அதேபோல, மற்ற பகுதிகள், உள்ளே இருக்கும், முக்கியமான இடங்கள் முதலியனவும் சுத்தம் செய்யப் பட்டன.[17] காபா, காபத்துல்லாஹ் என்றால், அல்லாஹ் கடவுள் வாழும் இடம், அப்படியென்றால், கடவுள் தன்னுடைய இடத்தைக் காப்பாற்றிக் கொள்ளமாட்டாரா, சுத்தமாக வைத்திருக்க மாட்டாரா, தெரியாதா என்று நாத்திகவாதிகள், திராவிட கடவுள் மறுப்பு கோஷ்டிகள், பெரியாரிஸ வெங்காயங்கள் கேட்கவில்லை. ஆக, உண்மையில், இந்த கொரோனா, இத்தகைய போலிகளை, பொய்யர்களை, சித்தாந்த இரடைவேட கபோதிகளை வெளிப்படுத்தியுள்ளன. துலுக்கரும்ம் தம் நிலை உணர வேண்டும். இத்தகைய உண்மைகளை அறிந்து, மற்ற மதத்தினரைத் தாக்குவது, இழிவு படுத்துவது போன்ற வேலைகளை நிறுத்திக் கொள்ளவேண்டும். இவையெல்லாம் கிருத்துவர்களுக்கும் பொறுந்தும்.

© வேதபிரகாஷ்

26-06-2020

To enter-Cleaning Kaba in Mecca-7

[1] மாலைமலர், ஹஜ் யாத்திரைக்கு அனுமதி இல்லைகட்டணம் திரும்ப கொடுக்கப்படும்முக்தார் அப்பாஸ் நக்வி, பதிவு: ஜூன் 23, 2020 14:13 IST

[2] https://www.maalaimalar.com/news/national/2020/06/23141342/1639365/Indian-pilgrims-will-not-travel-to-Saudi-Arabia-for.vpf

[3] தினத்தந்தி, குறைந்த எண்ணிக்கையுடன் ஹஜ் நடைபெறும்சவுதி அரேபியா, பதிவு: ஜூன் 23, 2020 07:38 AM

[4] https://www.dailythanthi.com/News/World/2020/06/23073805/Saudi-Arabia-confirms-Haj-to-be-held-this-year.vpf

[5] Gulfnews, Saudi Arabia considers limiting Haj numbers amid COVID-19 fears, Reuters, Published: June 08, 2020 22:25.

[6]  https://gulfnews.com/world/gulf/saudi/saudi-arabia-considers-limiting-haj-numbers-amid-covid-19-fears-1.1591641097152

[7] தமிழ்.இந்து, இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை இல்லை; விண்ணப்பித்த 2,13,000 பேருக்கும் பணத்தை பிடித்தம் இல்லாமல் திருப்பி வழங்க மத்திய அரசு நடவடிக்கை, Published : 23 Jun 2020 04:04 PM; Last Updated : 23 Jun 2020 04:29 PM.

[8] https://www.hindutamil.in/news/india/560783-muslims-from-india-will-not-go-to-saudi-arabia-to-perform-haj-2020.html

[9]  இந்து நிருபர்கள் இன்னும் AD போடுவதை கவனியுங்கள், மெத்டப் படித்த, பயிற்சி எடுத்த அவர்களுக்கு CE தெரியாதா என்ன?

[10] ZH Web (தமிழ்), இந்த வருடம் இந்திய முஸ்லிம்கள், Haj பயணம் மேற்கொள்ள மாட்டார்கள்: முக்தர் அப்பாஸ் நக்வி , Updated: Jun 23, 2020, 06:24 PM IST.

[11] https://zeenews.india.com/tamil/india/indian-muslims-will-not-go-to-haj-this-year-mukhtar-abbas-naqvi-337185

[12] நக்கீரன், இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை குறித்து மத்திய அரசின் புதிய அறிவிப்பு, Published on 23/06/2020 (17:21) | Edited on 23/06/2020 (17:43), நக்கீரன் செய்திப்பிரிவு.

[13] https://www.nakkheeran.in/24-by-7-news/india/hajj-trip-cancelld-india-2020

[14] தினமணி, நிகழாண்டு ஹஜ் பயணம் ரத்து: மத்திய அமைச்சா் நக்வி, By DIN | Published on : 23rd June 2020 11:06 PM

[15] https://www.dinamani.com/india/2020/jun/23/hajj-trip-canceled-central-senchach-naqvi-3429099.html

[16] Tuqa Khalid, Al Arabiya English, Coronavirus: Saudi Arabia’s Al-Sudais uses ‘Ozone tech’ to sterilize Kaaba in Mecca, Tuesday 28 April 2020

[17] The General President of the Affairs of the Grand Mosque and the Prophet’s Mosque, Sheikh Abdul Rahman Al-Sudais used on Monday “Ozone tech” to sterilize Islam’s holiest site, the Kaaba, in the Grand Mosque in Mecca, amid the coronavirus outbreak.

https://english.alarabiya.net/en/coronavirus/2020/04/28/Coronavirus-Saudi-Arabia-s-Al-Sudais-uses-Ozone-tech-to-sterilize-Kaaba-in-Mecca

பாகிஸ்தான் முஸ்லீம்கள் கோரிக்கை: பக்ரீத் அன்று மிருகவதை செய்யாதீர்கள்; இந்திய முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்!

நவம்பர் 4, 2011

பாகிஸ்தான் முஸ்லீம்கள் கோரிக்கை: பக்ரீத் அன்று மிருகவதை செய்யாதீர்கள்; இந்திய முஸ்லீம்கள் என்ன சொல்வார்கள்!

பாகிஸ்தானில் பக்ரீத் மிருகவதை எதிர்த்துப் பிரச்சாரம்: பக்ரீத் பண்டிகை நெருங்குவதை ஒட்டி, பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் சிலர் மிருக வதையை எதிர்த்து தங்கள் பிரசாரத்தை துவக்கியுள்ளனர்[1]. பக்ரீத் பண்டிகையின் போது, ஒட்டகம், ஆடு, மாடு போன்ற மிருகங்களை அறுக்கும், “குர்பானி’ என்ற சடங்கு நிறைவேற்றப்படுவது வழக்கம். பாகிஸ்தானில் இது அதிக எண்ணிக்கையில் நடக்கும். கடந்தாண்டு, மிருக வதை தடுப்பு அமைப்பு ஒன்று, பாகிஸ்தானில் மிருக வதையைத் தடுக்க ஒரு பிரசாரத்தை மேற்கொண்டது.

மிதவாதி முஸ்லீம்களின் கோரிக்கை: முஸ்லீம்களில் தாராள மனப்பாங்குடன், திறந்த மனத்துடன், மிதவாதிகளாக் இருக்கும் முஸ்லீம்கள்  அத்தகைய கோரிக்கையை வைத்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் சிலர், மிருகங்களை அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்துக்களை பிரசாரம் செய்து வருகின்றனர். பினா அகமது மற்றும் பரா கான்[2] இருவரும் இதுகுறித்து தங்கள் வலைப்பூவில்[3] எழுதியிருப்பதாவது: குர்பானியின் தத்துவம் நாம் அறிந்தது தான். நமது மதச் சடங்குகளை பண்பாடு, மத ரீதியில் அறிவியலோடு சேர்த்து நடத்த வேண்டும்.

கடவுளின் படைப்புகளான மிருகங்கள் கொல்லப்படுவதில் கொடூரம் இருக்கிறது, சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுகிறது: கடவுளின் படைப்புகளான இந்த மிருகங்கள் கொல்லப்படுவதில் கொடூரம் இருப்பதையும், சுற்றுச்சூழலுக்கு இதனால் எவ்வளவு கேடு ஏற்படுகிறது என்பதையும், மனித உடலுக்கு அசைவ உணவு எவ்வளவு கேடுகளைத் தருகிறது என்பதையும், அசைவ உணவு குறித்து இஸ்லாம் என்ன சொல்லியிருக்கிறது என்பதையும் நாம் யோசிக்க வேண்டும்; பரிசீலிக்க வேண்டும்[4].

வெள்ளம் போது செய்யப்பட்ட பிரச்சாரம் (2010): இந்தாண்டு 2010 ஒரு ஆடு வாங்குங்கள். அதை, “குர்பானி’ கொடுப்பதற்குப் பதிலாக, வெள்ளத்தில் தங்கள் கால்நடைகளை இழந்த கிராமத்தவருக்கு அதை தானமாகக் கொடுங்கள்.இவ்வாறு அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்[5].

மாமிச உணவு கிடைக்கும் விதம், அதனால் வரும் உபாதைகள்: மாமிசத்தைத் தின்பதமனால் யயிற்றுகப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டு, ஈத் நாட்களில், மருத்துவ மனைகளில் முஸ்லீம்கள் அனுமதிக்கப் படுவதும் அதிகமாகிறது[6] அதுமட்டுமல்லாமல், பொதுவாக “ஹலால்” மாமிசம் முறையாக மிருக்லங்களைக் கொன்று எடுத்தாலும், பலமுறை, அம்மிருகங்கள் எப்படி கிடைக்கின்றன, எவ்வாறு உள்ளன என்று முஸ்லீம்களுக்குத் தெரிவதில்லை[7]. அதிகமாக மாமிசம் சாப்பிடுவதும் ஆரோக்யத்திற்கு நல்லதில்லை. அதனால் இருதயநோய்கள் வருவதற்கு அதிகமான சாத்தியக் கூறுகள் உள்ளன[8].

இந்திய முஸ்லீம்கள் மௌனம் சாதிப்பது ஏன்? பாகிஸ்தான் முஸ்லீம்கள் இப்படி பிரச்சாரம் முன்றாண்டுகளாக செய்து வருகின்ற நிலையில், இந்திய முஸ்லீம்கள் அமைதியாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. வலைப்பூக்களில் / இணைத்தளங்களில் தமது சக்தியைத் திரட்டி, இரவு-பகலாக மற்ற விஷயங்களுக்கு பிரச்சாரம் செய்து வரும் முஸ்லீம்கள் இதைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை!

வேதபிரகாஷ்

04-11-2011


[1]தினமலர், மிருகவதையைஎதிர்த்துபாகிஸ்தானில்பிரசாரம்,  அக்டோபர் 31,2011,02:59 IST, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=340779

[2] அவர்களது முழு கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்: http://goatmilkblog.com/2010/11/15/muslims-please-spare-the-animals-this-eid/

[3] www.goatmilkblog.com;  அதுமட்டுமல்லாது ஆதரித்து-எதிர்த்து கொடுக்கப்படுள்ள கருத்துகளையும் படித்தறியலாம்.

[4] “Muslims have a duty both religiously and culturally to evolve with scientific and moral progress. The meaning behind Eid-ul-Azha will always stand, but in today’s world, we must look at things practically,” wrote Bina Ahmed and Farah Khan on goatmilkblog.com, a virtual hangout for Asian Muslims settled in the West.

http://zeenews.india.com/news/south-asia/pak-liberals-oppose-sacrifice-of-animals-on-eid_738929.html

[5] Last year, an animal activist organisation, which is now almost defunct, had run a campaign asking people to “save” an animal instead of “sacrificing it” after the devastating floods that left over a million animals dead in Pakistan. “Buy a goat – and this year, instead of sacrificing it, send it back to a village to replace what was lost and help people back onto their feet. Goats can provide an ongoing income for families through the sale of milk, ghee, meat and kids, as well as supplement their own diet and agriculture,” was the appeal from the Karachi-based organisation.  www.pakistaniat.com

[6] In many parts of the world, the festivities of Eid-ul-Azha bring along with it an increase in illness.  For example, according to the Daily Star newspaper in Bangladesh, the number of individuals being admitted to hospitals increases by about 10 percent during this time of year brought on by a gluttonous consumption of meat.  http://newshopper.sulekha.com/meat-intake-during-eid-makes-dhaka-medicos-see-red_news_1127916.htm

[7] While it is true that some halal slaughterhouses try their best to ensure that the animals they slaughter are raised according to Islamic teachings, many are unaware of the origins of the animals that they sell to consumers, focusing instead only on the manner in which the animal is killed.  

(http://www.islamonline.net/servlet/Satellite?c=Article_C&pagename=Zone-English-News/NWELayout&cid=1178724246679)

[8] Eating too much eat is not good for your health either.  Studies upon studies have revealed to us that eating red meat in excess increases our risks of developing cardiovascular diseases and developing cancer. We are only about five percent of the world’s population yet we grow and kill an astonishing 10 billion animals a year – more than 15 percent of the world’s total. http://www.nytimes.com/2008/01/27/weekinreview/27bittman.html.

பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று சொல்லும் ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா கோடிகளைக் கொட்டி அழுவதேன்?

ஒக்ரோபர் 26, 2011

பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று சொல்லும் ஆப்கானிஸ்தானிற்கு இந்தியா கோடிகளைக் கொட்டி அழுவதேன்?

முஸ்லீம் முஸ்லீமைத்தான் ஆதரிப்பேன் என்றால்,  அவர்கள் தனியாக இருந்து விடலாமே: உண்மையைச் சொன்னால் முஸ்லீமுக்கு பொத்துக் கொண்டு கோபம் வரும், ஆனால் முஸ்லீம் என்றாலும், அடிப்படைவாதி என்றாலும், ஏன் தீவிரவாதி என்றே குறிப்பிட்டாலும், முஸ்லீம் என்றால், முஸ்லீமுக்குத்தான் ஆதரவு கொடுப்போம் என்று சொல்வது, முன்னர் அலி சகோதரர்கள், “ஒரு மிகவும் கேடுகெட்ட மோசனான ஆள் முஸ்லீமாக இருந்தால், அவனுக்கு மரியாதை செய்வோமே தவிர, காந்தியை மகாத்மா என்று மதிக்க மாட்டோம், ஏனென்றால், அவர் ஒரு காஃபிர்”,  என்று பொருள்பட சொன்னதை இங்கு நினைவு கூர்தல் வேண்டும்[1]. அதை நன்றாக அறிந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர், அலி சகோதரர்களை தனது வீட்டில் விருந்தினர்களாகத் தங்க வைத்துக் கொண்டபோது, “இந்தியா வேண்டுமானால், காந்தியை பெருமையாக மதிக்கலாம், ஆனால் இந்த காந்தி இவர்களது ஜேபிக்குள் அடக்கம்”, என்றார். முஹமது அலியின் பேச்சைக் கேட்டு அம்பேத்கரே வியந்து அதனைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்[2].

காஃபிர்-மோமின், “தூய்மையானவன்” – “தூய்மையில்லாதவன்” என்ற எண்ணம் இருக்கும் வரையில் முஸ்லீம் முஸ்லீமாகத்தான் இருப்பான்: அலி சகோதரர்களை காந்தி தனது சகோதரர்களைப் போல பாவித்தார். ஆனால், முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனைகளால், அலி சகோதரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளா முடியவில்லை. “காந்தியின் குணாதியம் (நடத்தை, பண்பு) எந்த அளவிற்கு தூய்மையாக இருந்தாலும், எனது மதத்தின் (இஸ்லாம்) பார்வையில் ஒரு குணாதியமே இல்லாத ஒரு முசல்மானை விட தாழ்ந்தவராகத்தான் தோன்றுகிறார்”. அதாவது இந்து “தூய்மையில்லாதவன்” ஆனால் முஸ்லீம் “தூய்மையானவன்” என்று சொல்வது “காஃபிர்” மற்றும் “மோமின்” என்று பிரித்து பாகுபாடு காட்டிப் பேசுவதுதான். அமினாபாத், லக்னௌவில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, முஹம்மது அலியை, என்ன காந்தியைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இதோ[3] – “ஆமாம், என்னுடைய மதம் மற்றும் நம்பிக்கையின்படி, ஒரு விபச்சாரத்தனமுடைய மற்றும் வீழ்ந்த (மிக மோசமான / கேடுகெட்ட) முசல்மான்தான் காந்தியைவிட உயர்ந்தவன்”! அதுமட்டமல்ல தாங்கள் உயர்ந்த முஸ்லீம்கள் என்பதனால், காந்தியுடன் செரமாட்டோம், மேடையில் சமமாக உட்காரமாட்டோம் என்றெல்லாம் கூட வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள், நடந்து காட்டியிருக்கிறார்கள். காந்தி தன்னுடைய எழுத்துகளில் அதனை தக்கேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார்[4].

முஸ்லீம் மனதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்: அம்மாதிரித்தான் தேவையில்லாமல் இந்தியா ஆப்கானிஸ்தானிற்கு பலவழிகளில் கோடிகளில் பணம், மற்ற உதவிகளை செய்து வருகிறது. ஆனால், அங்கு வேலை செய்து உதவும் இந்தியர்களைக் கொன்று வருவதுதான் முஸ்லீம்களாகிய ஆப்கானிஸ்தானியர் செய்து வருகின்றனர். தாலிபான்கள் இருந்து மற்ற உலக மகா பிரத்தி பெற்ற ஜிஹாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள் முதலியோர் உண்மையில் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுக்குள் வைத்திருக்கின்றனர். இந்நிலையில் தான் அந்த நன்றி கெட்ட பொம்மை பிரதம மந்திரி கூறுகிறார், “போர் என்று வந்து விட்டால், நாங்கள் பாகிஸ்தானிற்குத்தான் ஆதரவு அளிப்போம்”, வீராப்பாக சொல்லியிருக்கிறார். இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடுமோ, பாகிஸ்தானை தாக்கினால், போர் தொடுத்தால், நாங்கள் எங்கள் சகோதரன் பாகிஸ்தானைத்தான் ஆதரிப்போம் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் கர்ஸாயின் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. சீனாவின் துரோகத்தனத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பாக்.மீது படையெடுத்தால்: இந்தியா-அமெரிக்காவிற்கு கர்சாய் எச்சரிக்கை[5]: தலிபான்களிடம் சிக்கி சீரழிந்த ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்த அமெரிக்கப் படையினர், ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து தலிபான்களை வேட்டையாடி வருகின்றனர். கூடவே பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்தபடி ஆப்கானிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தி வரும் அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகளுடனும் மோதி வருகின்றன. சீரழிந்து போய் விட்ட ஆப்கானிஸ்தானை கட்டி எழுப்பும் முக்கியப் பணியில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. கிட்டத்தட்ட ஆப்கானிஸ்தானை தத்தெடுத்துக் கொண்டது போல பல ஆயிரம் கோடி பணத்தை இறைத்து ஆப்கானிஸ்தானில் பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது இந்தியா[6]. இந்த நிலையில் இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ அல்லது வேறு நாடோ பாகிஸ்தானை தாக்கினால், போர் தொடுத்தால் நாங்கள் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவாக இருப்போம் என ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாய் அதிரடியாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அல்லது வேறு நாடுகளுடன் சண்டை மூளக் கூடாது என்றே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் ஒரு வேளை நாளையே பாகிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தால் நாங்கள் பாகிஸ்தானுக்குத்தான் ஆதரவாக இருப்போம். காரணம், பாகிஸ்தான் எங்களது சகோதரன்.

பாகிஸ்தானை தாக்கினால் பதிலடி கொடுபோம் : ஹமித் கர்சாய்[7] ! பாகிஸ்தான் மீது யாராவது போர் தொடுத்தால் பாகிஸ்தான் மக்கள் ஆப்கானிஸ்தானின் உதவியைத்தான் நாடுவார்கள். அப்போது பாகிஸ்தானியர்களுக்கு உதவ, கை கொடுக்க நாங்கள் தயாராக இருப்போம். பாகிஸ்தானின் சகோதரர்கள் நாங்கள். 1979-80ல் ரஷ்யா எங்களை ஆக்கிரமித்தபோது பாகிஸ்தானியர்கள்தான் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். எங்களை சகோதரர்களாக கருதி எங்களுக்கு உதவினர் பாகிஸ்தானியர். தங்களது உள்ளங்களை மட்டுமல்லாமல் இல்லங்களையும் கொடுத்தவர்கள் அவர்கள். எங்களுக்கு உதவிய அவர்களுக்கு நாங்கள் துரோகம் இழைக்க முடியாது, ஏமாற்ற முடியாது. எனவே அமெரிக்காவோ, இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் எங்களது முழு ஆதரவும் பாகிஸ்தானுக்குத்தான் இருக்கும்[8].

பாகிஸ்தான் எங்களுக்கு துயரத்தை அளித்தாலும் அவர்கள் தாம் எங்களுக்கு சகோதரர்கள்: எங்களுக்கு பாகிஸ்தான் அரசு நிர்வாகம் பல துயரங்களை இழைத்துள்ளது. நான் அதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் எங்களது சகோதரர்கள். அதை நாங்கள் மறக்க மாட்டோம். இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் நான் விளக்க விரும்புகிறேன். இதுதிடீரென நடந்த ஒப்பந்தம் அல்ல, பல காலமாகவே பேசப்பட்டு வந்த ஒன்றுதான். இதற்கும், பாகிஸ்தானுடனான எங்களது உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் கர்ஸாய். கர்ஸாயின் இந்தக் கருத்து அமெரிக்காவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹக்கானி தீவிரவாதக் குழு மீது அமெரிக்கா கடும் ஆத்திரத்தில் உள்ளது. ஆனால் அந்த குழு மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுத்து விட்டது. இதற்காக அமெரிக்காவுடன் நேரடி மோதலிலும் ஈடுபட அது தயாராக உள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அமெரிக்கா படைகளைக் குவித்துள்ளது. அதேபோல பாகிஸ்தானும் தனது பகுதியில் படைகளைக் குவித்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பதட்டமான நிலையில் கர்ஸாயின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

பாம்புகளை தோட்டத்தில் வைத்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது[9]:  பாம்புகள் என்றால் அவற்றின் தன்மை என்ன என்பது தெரிந்துதான் இருக்கும், அதிலும் கடிக்கும் பாம்புகள் எனும்போது, விளையாட்டாக இருக்கும் பாம்புகள் இல்லை. “பின் தோட்டத்தில் நச்சுப் பாம்புகளை வைத்துக் கொண்டு, அதிலும் அவை உங்களது அடுத்த வீட்டுக் காரர்களை கடிக்கும் நிலையில் இருக்கும்போது, நாம் சும்மா இருக்க முடியாது”, என்று ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானிற்கு விஜயம் செய்தபோது வெளிப்படையாகக் குறிப்பிட்டார்[10]. இருப்பினு பாம்புகளை அவர்கள் வைத்துள்\னர்[11]. பாம்புகள் என்று குறிப்பிட்டது ஜிஹாதிகள் தாம், தீவுரவாதிகள் தாம், பயங்கரவாதிகள் தாம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில், ஹக்கானி குழுவினர் மீது அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன[12]. கடந்த சில நாட்களுக்குமுன் பாகிஸ்தான் வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ஹக்கானி குழுவினரை ஒழிக்க, பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என கூறியிருந்தார்[13]. நட்பு எனும்போது, நல்ல உறவு எனும்போது, அதில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும், நீ முட்டாள் மாதிரி எங்கலுக்கு உதவி செய்து கொண்டேயிரு, அவர்கள் விமானங்களைக் கடத்தினாலும் சரி, நமது எஞ்சினியர்களைக் கொன்றாலும் சரி, எல்லைகள் கடந்த தீவிரவாதத்திற்கு ஆட்களை அனுப்பினாலும் சரி, இந்தியா உதவி செய்து கொண்டியிருக்கிறது என்றால், அதில் முட்டாள்தனம் இல்லை, ஏதோ சதி இருக்கிறது எனலாம்.

வேதபிரகாஷ்

26-10-2011


[1] “However pure Mr. Gandhi’s character may be, he must appear to me from the point of religion inferior to any Mussalman he be without character”

“Yes, according to my religion and creed, I do hold an adulterous and a fallen Mussalman to be better than Mr Gandhi”

[2] B. R. Ambedkar, Thoughts on Pakistan, Thacker & Co., Bombay, 1941, p.302.

[3] Mahathama Gandhi, Collected works, Volume.XXIII, Appendix, 13, p.569.

[4] Mahathama Gandhi, Collected works, Volume XXVI, p.214.

[8] மேலே விளக்கியபடி, மோமின், மோமின் கூட சேர்ந்து காஃபிருக்கு எதிராகத்தான் ஜிஹாத்-போரை நடத்துவோம் என்று வெளிப்படையாக பேசும் முஸ்லீம்களுடம், ஏன் இன்னும் தாஜா செய்து கொண்டிருக்கிறார்கள்?

[10] US secretary of state Hillary Clinton on Friday warned Pakistan that it cannot keep “snakes in your backyard and expect them to only bite your neighbours”, a not so veiled reference to terror havens in its tribal areas. Then she pressed Islamabad to crackdown on Afghan insurgent Haqqani network holed up there.