Posted tagged ‘சிறுவர் கற்பழிப்பு’

முஸ்லிம் பிடோபைல்கள், சிறுவர்-சிறுமியர் கற்ப்பழிப்பாளர் பற்றி வெளிவந்துள்ள விவரங்கள்!

பிப்ரவரி 4, 2016

முஸ்லிம் பிடோபைல்கள், சிறுவர்-சிறுமியர் கற்ப்பழிப்பாளர் பற்றி வெளிவந்துள்ள விவரங்கள்!

What VP Rajeena wrote in the facebook - attacked

ரெஜினா மதரஸாவில் நடந்த அனுபவத்தை வெளியிட்டது: . பி. ரெஜீனா (V. P. Rajeena) என்ற பத்திரிக்கைக்காரர் தனது பேஸ்புக்கில் மதரஸாக்களில் சிறுவர்-சிறுமியர் செக்ஸ்-தொல்லைகளுக்குள்ளாகிறார்கள் என்று 22-11-2015 ஞாயிற்றுக் கிழமை அன்று குறிப்பிட்டார்.

  1. முதல் வகுப்பில், முதல் நாளில் நடந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். “குண்டான, நடுத்தர வயதான” உஸ்தாத் பையன்களை வரிசையாக தன்னிடம் வரச்சொன்னார். தன்னருகே வந்தபோது, டிரௌசரின் பொத்தான் / ஜிப்பைக் கழற்றி, தகாத முறையில் தொட்டார். இதனை, கடைசி பையன் வரைக்கு செய்தார்.
  2. நான்காம் வகுப்பு படிக்கும் போது, ஒரு உஸ்தாத் இரவு வகுப்புகளில், மாணவிகளுக்கு செக்ஸ்-தொல்லைகள் கொடுத்தார்.
  3. மின்சாரம் இல்லாத வேளைகளில், 60 வயதான உஸ்தாத் ஒருவர் மாணவிகள் உட்கார்ந்திருக்கும் பெஞ்சுகளை நோக்கி வருவார். ஒரு கொம்பை நுழைப்பார். இருமுறை, அவ்வகுப்பில் இருந்த பெரிய மாணவி, இப்படியே தொந்தரவு செய்து கொண்டிருந்தால், தலைமை-உஸ்தாத்திடம் புகார் செய்வேன் என்று எச்சரித்தாள்.

ரெஜினா இவ்வாறு மூன்று உதாரணங்கள் கொடுத்து, சிறுமிகள் மதரஸாக்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்பட்டதை எடுத்துக் காட்டினார். இதனால், மதரஸாக்களில் மாணவ-மாணவியர் நடத்தப் படும் முறைப் பற்றிய விவாதம் ஆரம்பித்தது[1]. இவர் “மத்தியமம்” என்கின்ற ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மூலம் நடத்தப்படும் நாளிதழின் உதவி ஆசிரியர் ஆவர்[2].

What VP Rajeena wrote in the facebookரெஜினாவின்  மீது தாக்கு, பேஸ்புக் முடக்கம் முதலியன (நவம்பர் 22 முதல் 25 2015 வரை): பேஸ்புக்கில் அவரை இழித்து, பழித்து, அவதூறாக பேசி பலவிதங்களில் எதிர்ப்புகள் பதிவாகின[3]. அவர், அவரது குழந்தை, கணவர் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை[4]. “முஸ்லிம்-விரோதி, இஸ்லாம்-விரோதி, நாத்திகவாதி, ……..கைக்கூலி”  என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டார். மிரட்டல்களும் இவற்றில் அடங்கும்[5]. எல்லைகளைக் கடந்ததால், அவரது பேஸ்புக் கணக்கே, 25-11-2015 அன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. “இந்நேரத்தில் இவ்விசயங்களை வெளிப்படுத்தும் நோக்கம் என்ன என்று கேட்கிறார்கள். பரூக்கிக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிற்குப் பிறகு, பால்சமத்துவம் (Gender Justice) மற்ற இயக்கத்தினரிடம் (Conservative organizations) கருத்துக்களைக் கேட்டறிந்தேன். அதன் பிறகுதான், நான் இதனை சொல்ல விரும்பினேன். முஸ்லிம் பெண்களுக்கு நீதி பலநிலைகளில் மறுக்கப்படுகிறது, தமது சமூகத்தினுள், தமது பிரச்சினைகளை எழுப்பவே, விவாதிக்கவோ மேடை இல்லை. பெண்கள் பேசுவதற்கே பயப்படுகிறார்கள். என்னைத் தாக்குவதற்குப் பதிலாக, பெண்களுக்கு நீதி கிடைக்க அவர்கள் பாடுபடவேண்டும். அமைதியாக கண்டுகொள்ளாமல் இருப்பதினால், தீர்வு கிடைத்து விடாது”, என்று ரெஜீனா விளக்கிக் கூறினார்[6].

Ali Akbar and V P Rajeena- attacked by the fundamentalistsஅலி அக்பர் என்ற சினிமா டைரக்டர் தானே பலிகடாவாக இருந்ததை ஒப்புக் கொண்டது: மதரஸாக்களில், உஸ்தாத் என்கின்ற ஆசிரியர்கள் எப்படி சிறிவர்-சிறுமியர்களை பாலியில் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளனர், சில்மிஷம் செய்துள்ளனர் மற்றும் வன்புணர்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதனை வி. பி. ரெஜினா என்ற பத்திரிக்கைக்காரர் வெளிப்படுத்திய பிறகு, அலி அக்பர் என்ற கேரளா சினிமா தயாரிப்பாளர் தானும் சிறுவனாக இருக்கும் போது, மதரஸாவில் தன்னுடைய உஸ்தாத்தால் செக்ஸ்-தொல்லைகளுக்குட்பட்டார் என்று வெளிப்படையாக தெரிவித்தார்[7]. அபூபக்கர் முசலியார் என்ற சுன்னி முஸ்லிம் தலைவர், கேரளாவில் காந்தபுரம் என்ற இடத்தில் உள்ளவர், மதஸாக்களில் செக்ஸ்-தொல்லைகள் எல்லாம் ஒன்றும் கிடையாது என்று அறிவித்தார். இதனை மறுத்து, அலி அக்பர் தனக்கு ஏற்பட்ட செக்ஸ் தொல்லைகளை வெளியிட்டுள்ளார்[8].

Akbar Ali attacked for BJP affiliationமதரஸாவில் இருந்த பிடோபைலின் பாலியல் லீலைகள்: 1970களில் வைநாடு மாவட்டத்தில், நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது, தன்னை உஸ்தாத் செக்ஸ்-தொல்லைக் கொடுத்து வன்புணர்ச்சியில் ஈடுபட்டார். உஸ்தாத் மூலம் செக்ஸ்-வக்கிரகக்களை தெரிந்து கொண்ட பையன்கள் மற்றவர்களுடன் அவற்றைச் செய்ய முற்பட்டார்கள். “வுது” [whudu (ablution)] என்ற பெயரில், எப்படி அலம்பி சுத்தப்படுத்திக் கொள்வது என்று சொல்லிக் கொடுத்த வினைகளால் அவை பெருகின. அந்த செக்ஸ்-வக்கிரங்கள் தனது மனத்தை பல வருடங்கள் ஆட்கொண்டிருந்து, வருத்திக் கொண்டிருந்தன. அவற்றிலிருந்து மீள்வதற்கு சில காலம் ஆயிற்று. அதனால், என் குழந்தைகளை மதரஸாவுக்கு அனுப்பக்கூடாது என்று தீர்மானித்தாகக் கூறினார். அம்மதரஸா காந்தபுரம் அபூபக்கர் முசலியாரால் நடத்தப்படும் மதரஸா தான். அந்த உஸ்தாத் பற்றிய விவரங்களையும் கொடுக்கத்தயார் என்று அறிவித்தார். தன்னை மட்டுமல்லாது மற்ற பையன்களையும் அவர் அவ்வாறு செக்ஸில் பயன்படுத்திக் கொண்டார். இவ்விதமான செக்ஸ்-தொல்லைகள், பாலியில் ரீதியில் தொந்தரவுகள்,

Ali Akbar narrating his experience in a Madrassa - pedophileபீதியில், அச்சத்தில் உண்மையை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள்: காம-சில்மிஷங்கள், மற்றும் வன்புணர்ச்சிகளில் ஈடுபடுவது என்பனவெல்லாம், இப்பொழுதும் மதரஸாக்களில் நடந்து வருகின்றன. மதத்ததலைவர்கள் அவர்களைக் கொல்லவும் செய்வார்கள் என்ற பீதியில் அமைதியாக இருக்கிறார்கள்[9]. ஆனால், அச்சத்தினால், முஸ்லிம்கள் வெளியே சொல்லத் தயங்குகிறார்கள்.  அதிலும், காந்தபுரம் அபூபக்கர் முசலியார் போன்ற அரசியல் செல்வாக்கு, பலம் முதலியவற்றைக் கொண்டவருக்கு எதிராக புகார் கொடுக்க யாருக்கும் துணிவு வராது. பீப்-பசு மாமிசம் பிரச்சினை பற்றி ஏகப்பட்ட கலாட்டாக்கள், ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் என்று நடந்தன. ஆனால், இவற்றைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால், இவரும் பேஸ்புக்கில் பல தொல்லைகளுக்குள்ளானார். அவர் கற்பழித்தார் என்றால், கர்ப்பம் உண்டானதா, குழந்தை பெற்றெடுத்தாயா, என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன; சரி, 40 வருடங்கள் கழ்த்து, இப்பொழுது ஏன் இதனை எடுத்துக் காட்டுகிறாய்? போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. பொதுவாக இஸ்லாத்தில் விமர்சனம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், முஸ்லிகள் எல்லோருமே பயந்து கிடக்கிறார்கள். பத்வா கொடுப்பார்கள், மிரட்டல்கள் வரும் என்ற பீதியில் உள்ளார்கள். ஏனெனில், கருத்து கூட இஸ்தாத்திற்கு எதிரானது என்று சொல்வதுடன், மிரட்டல்கள், சமூதாயத்திலிருந்து விலக்கி-வைக்கல் போன்ற காரியங்களை செய்து வருகிறார்கள்.

வேதபிரகாஷ்

03-02-12016

[1] http://indianexpress.com/article/india/india-news-india/woman-journalist-targeted-for-fb-post-on-abuse-in-madrasas/

[2] http://www.madhyamam.com/en/

[3] http://www.firstpost.com/living/kerala-journalist-faces-backlash-for-facebook-post-on-sexual-abuse-in-madrassa-2522022.html

[4] http://www.thenewsminute.com/article/some-disgusting-comments-journalist-vp-rajeena-got-post-abuse-madarassa-36350

[5] http://www.thenewsminute.com/article/kerala-woman-journalist-threatened-fb-account-blocked-after-post-child-sexual-abuse

[6]  “One of the other criticisms was on the timing of my revelations. I thought of making this public after I started hearing the opinions of conservative community organisations on the question of gender equality, related to the Feroke college issue. Muslim women here are facing denial of justice on so many levels, but they do not have a platform to raise these issues within the community. I was forced to use social networks because of this very reason. The suppressed anger of so many years might have also come out through the post,” she says. She says that many of those who have targeted her have spoken out against intolerance in other issues. “In this case, their intolerance to my opinion is due to the fact that I am a woman from their community. They are scared of more women speaking out. Instead of targeting me, they should try to ensure that women from the community get justice. Being silent about issues is not the solution,” she says.

http://www.thehindu.com/news/national/kerala/journo-comes-under-online-attack-for-facebook-post/article7917955.ece

[7] http://indianexpress.com/article/india/india-news-india/kerala-filmmaker-ali-akbar-says-he-was-also-abused-at-madrasa/

[8] http://indianexpress.com/article/india/india-news-india/kerala-filmmaker-ali-akbar-says-he-was-also-abused-at-madrasa/

[9] http://zeenews.india.com/news/kerala/i-was-sexually-abused-in-kerala-madrasa-no-one-would-support-me-filmmaker-ali-akbar_1828381.html

சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளது (2)

ஒக்ரோபர் 11, 2015

சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளது (2)

நஷீர் பாலியல்- தினகரன்

நஷீர் பாலியல்- தினகரன்

குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், நஷீருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: பெண் குழந்தை பாலியல் வன்மத்திற்குட்பட்டதனால், அந்த சிறுமியின் உடலில் காயம் ஏற்பட்டது[1]. இதையடுத்து அந்த சிறுமியிடம், அவரது பெற்றோர் அதைப்பற்றி விசாரித்தனர்[2]. அப்போது, நடந்த சம்பவத்தை அந்த சிறுமி அழுது கொண்டே கூறியுள்ளார். அவள் கூறியதிலிருந்து, நஷீர் அவளை பாலியல் ரீதியில் சதாய்த்துள்ளான் என்று தெரிந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர்[3]. போலீசார் வழக்குப்பதிவு செய்து, நஷீரை கைது செய்தனர்[4]. பிறகு முறைப்படி, வழக்கை மகளிர் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனா சதீஷ் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், ‘குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், நஷீருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கிறேன். இதுதவிர பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்[5]. இத்துடன் செய்தி முடிந்து விட்டது. ஆனால், நஷீர் அவ்வாறு ஏன் ஈடுபட்டான், அதன் பின்னணி என்ன என்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. தனது பெண் போன்றிருக்கும், ஒரு சிறுமியை எப்படி நஷீரால் அவ்வாறு வன்புணர்ச்சியில் ஈடுபட முடிந்தது என்பது ஆராயப்படவில்லை. அவன் முஸ்லிம் என்பதனால், பிடோபைல் கோணத்தில் செல்லாமல், சாதாரண குற்றம் போல செய்தியாக, அதிலும் சுருக்கமாக வெளியிட்டு அமைதியாகி விட்டனர் போலும். அவனது புகைப்படம் கூட வெளியிடப்படவில்லை. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை போன்ற அளவில், அதே செய்தியை திரும்ப-திரும்ப சுருக்கமாகத்தான் வெளியிட்டுள்ளன[6].  வில் ஹியூமைப் போன்று அதிரடி செய்திகளும் இல்லை, தேவநாதன் போன்று விடோயோக்களும் இல்லை, நித்யானந்தா போன்று பரபஎரப்பும் இல்லை. இதுதான் ஊடக செக்யூலரிஸம் போன்றிருக்கிறது. ஆனால், நஷீர் மேல்முறையீடு செய்வான், என்று நாளைக்கு செய்திகள் வரலாம்.

நஷீர் 5 ஆண்டு சிறை - தினமலர்

நஷீர் 5 ஆண்டு சிறை – தினமலர்

கேரள முஸ்லிம் ஆஸ்ரமங்கள் செயல்பட்ட விதம்: கேரளாவில் முஸ்லிம்கள் கிருத்துவர்களைப் போலவே அனாதை இல்லங்கள் வைத்து, பெண்குழந்தைகள், பருவத்திற்கு வந்த சிறுமிகள், இளம்-பெண்களை பாலியல் வேலைகளுக்கு உபயோகப்படுத்தியது சமீபத்தில் வெளிவந்தது[7]. தேசிய புலனாய்வு ஏஜென்சி (National Investigation Agency) ஜூலை 26, 2014 அன்று தனது விசாரணையை மேற்கொண்டது. 58 முஸ்லிம் குழந்தைகள் மால்டா என்ற இடத்திலிருந்து வேட்டத்தூர், மல்லப்புரத்தில் உள்ள அன்வர் ஹூடா அனதை இல்லத்திற்கு [Anwarul Huda Orphanage at Vettathur in Malappuram] கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. முக்கம் முஸ்லிம் அனாதை இல்லம் [ Mukkam Muslim Orphanage] என்ற இன்னொன்றும் இதில் உள்ளது. ஏழைக் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்லி மௌல்விகள் ஏமாற்றி அனுப்பி வைத்ததாக தெரிகிறது. மால்டாவிலிருந்து இதை ஆயும் குழு வேட்டத்தூருக்கு பார்வையிட வந்தபோது, சிறுவர்கள் மட்டுமல்லாது, சிறுமியர்களும் இருந்தது கண்டு திகைத்தது. முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆயிரக்கணக்கில் நடத்தப் பட்டு வருகின்றன. இவற்றை நடத்துவதற்கு வளைகுடா நாடுகளிலிருந்து தானம் என்ற பெயரில் பணம் வசூலிக்கப் படுகிறது.  சுமார் 1,400 அனாதை இல்லங்களுக்கு கோடி கணக்கில் பணம் வசூலிக்கப் படுகிறது. இப்பணத்தை வசூலிக்கு ஏஜென்டுகள் 40% எடுத்துக் கொண்டு மீதம் 60%-த்தை கொடுத்து விடுகின்றனர்[8]. கேரளாவில் கடந்த 25 வருடங்களாக செக்ஸ் குற்றங்கள், விபச்சாரங்கள், சிறுமிகளை ஷேக்குகளுக்கு விற்பது, பிடோபைல் (pedophile)/ குழந்தை செக்ஸ் விவகாரங்கள், கற்பழிப்புகள் என்று பாலியல் வன்மங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன[9].

சவுதி அரேபிய மதபோதகர்

இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினரின் தாக்கம் என்ன[10]: இங்கு இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினர் அதிகமாக மற்றும் எல்லாவிதங்களில் ஆதிக்கத்தில் இருப்பதால், அவர்களின் தாக்கம் என்ன என்பதும் அறிய வேண்டியுள்ளது. பொதுவாக இந்துமதம் தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தங்களது முடிவுகளைப் பெறும் போக்கு, இங்குத் திணறத்தான் செய்கிறது. ஏனெனில், இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதங்கள் இவற்றிலுள்ள பங்கு என்ன என்பதை அவர்கள் எடுத்துக் காட்டுவதில்லை. செக்யூலரிஸ, கம்யூனிஸ மற்றும் அதிகாரத்துவ சித்தாந்தங்களில் உள்ள எழுத்தாளர்கள், அராய்ச்சியாளர்கள் மற்றும் சமூகவியல் அறிவுஜீவுகளும், அவற்றின் இறையியல் தாக்கத்தை அறிந்தும், அறியாதவர்கள் போன்று நடித்துக் கொண்டிருக்கின்றனர். “இறைவனுடைய தேசத்திலேயே” பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று செய்திகள் வெளியிடும் போது, அவர்கள் உண்மைகளை வெளியிட்டு, அக்குற்றங்களை எப்படி குறைப்பது என்று தீர்வுகளைக் காண்பதற்கும் தயங்குகின்றனர். மாறாக குற்றங்களில் சம்பந்தப் பட்டுள்ளவர்கள், தங்களது அரசியல், பணம் மற்றும் அதிகாரக் காரணிகளைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

Muslim pedophiles all over thye world BBC

Muslim pedophiles all over thye world BBC

தமிழகத்து கோணத்தில் ஆராய்தல்: தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் பிடோபைல் குற்றங்கள் தொடர்ந்து பல்லாண்டுகளாக நடைப்பெற்று வருவதாலும், அவற்றில் அந்நியநாட்டவர்களின் பங்கு, குழந்தைகள்-சிறுமிகள் கடத்தல், அனாதை ஆஸ்ரமங்களுக்கு அனுப்புதல், அங்கிருந்து அவை பிடோபைல்களுக்கு அனுப்பப்படுதல், செக்ஸ்-டூரிஸத்தில் ஈடுபடுத்துவது, அரேபிய ஷேக்குகளுக்கு விற்பது மற்றும் உல்லாசங்களுக்கு விநியோகித்தல் முதலியவை நடந்து வருவதால், அவை சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறிப்பிட்ட மதப்பிரச்சினை மட்டுமல்லாது, சமூகப்பிரச்சினையாகவும் கையாளப்பட வேண்டியுள்ளது. அந்நியநாட்டவர்கள், இந்தியாவுடன் உள்ள நாடுகடத்தல், நாட்டிற்கு ஒப்படைத்தல், சொந்த நாட்டில் நீதிமுறைகளுக்கு உபடுத்தப்படுதல், அவ்வாறான ரீதியில், குற்றங்கள் இந்தியாவில் நடந்தாலும், குற்றாவாளிகள் அந்நியர்கள் என்பதனால், அவர்கள் அவரவர் நாடுகளுக்கு கைது செய்யப் பட்டு எடுத்துச் செல்லப்படுதல், அங்கு வழக்கை விசாரித்தல், தண்டனை கொடுத்தல் முதலியனவும் நடந்து வருகின்றன. ஆனால், முடிவுகள் செய்திகளில் வருவதில்லை.

Old Muslims marrying young girls.2

Old Muslims marrying young girls.2

பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு, ஒருவேளை இழப்பீடு கொடுத்து, வழக்குகளை முடித்து விட்டிருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள், தங்களது மனப்பாராட்டங்கள், மனப்பிராந்தி, மனக்குமுறல், மனச்சிக்கல்கள் முதலியவற்றிலிருந்து விடுபட முடியுமா, அவர்கள் உண்மையிலேயே அவ்வாறே விடுபட்டார்களா என்பவற்றையும் வெளிப்படுத்துவதில்லை. இடைக்காலத்திலிருந்து, 19-20வது நூற்றாண்டுகள் வரையில் ஹேரம், அடிமைகள் போன்ற முறைகளில், இத்தகைய பாலியல் குற்றங்கள் அங்கீகரிகப்பட்டு நடத்தப்பட்டன. பிறகு, அவையெல்லாம் மனிதத்தன்மைக்கு எதிரானது, மனித உரிமைகளை மீறுவது என்று அறியப்பட்டு தடை செய்யப் பட்டன. ஆனால், இத்தகைய ஆள்-கடத்தல், விற்றல், பாலியல் தொல்லைகளுக்கு, தொந்தரவுகளுக்கு சட்டவிரோதமாக உபயோகப்படுத்துதல், விபச்சாரத்திற்கு உட்படுத்துவது போன்றவை, பலவழிகளில் நாகரிகமாக, அமுக்கமாக செயல் பட்டு வருகின்றன. இவற்றிற்கு, மதசாயம் பூசுவது, இறையியல் விமர்சனம், விளக்கம் கொடுப்பது, நியாயப்படுத்துதல் முதலியனவும் நடந்து வருவதால், பெற்றோர், உறவினர், மற்றோர் இழப்பீடு, உதவித்தொகை, வேலை போன்றவற்றால் சமசரத்திற்கு வற்புறுத்தப்பட்டு, சமாதானம் செய்யப்படுகின்றனர்.

 

Old Muslims marrying young girls

Old Muslims marrying young girls

© வேதபிரகாஷ்

10-10-2015

[1] http://www.dinamalar.com/district_detail.asp?id=1358646

[2] தினத்தந்தி, சிறுமியிடம் சில்மிஷம் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு, மாற்றம் செய்த நாள்: புதன், அக்டோபர் 07,2015, 3:00 AM IST; பதிவு செய்த நாள்: புதன், அக்டோபர் 07,2015, 3:00 AM IST.

[3] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/little-girl-sexual-harassment-youth-5-years-prison-115100700015_1.html

[4] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=171428

[5] http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2015/10/07030035/Young-men5-years-in-prisonSentencedWomen-CourtJudgment.vpf

[6] http://bharathnewsonline.com/24/

பாரத் நியூஸ் ஆன்லைன், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை, 07 October, 2015.

[7] https://womanissues.wordpress.com/2014/08/03/child-trafficking-in-kerala-organized-carried-on-as-trade-with-motive/

[8] https://womanissues.wordpress.com/2014/08/03/kerala-orphanage-trafficking-sexual-abuse-and-other-issues/

[9] https://womanissues.wordpress.com/2014/08/03/human-or-child-trafficking-a-sexual-crime-carried-on-in-kerala/

[10] https://womanissues.wordpress.com/2014/08/03/sexual-crime-rate-religious-nexus-going-together-in-kerala/