Posted tagged ‘சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம்’

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, தமிழர் கலாச்சாரத்தின் படி களவா-கற்பா அல்லது சட்டத்தின் படி பொக்சோவா கொலையா? (1)

மார்ச் 8, 2022

29 வயது நாகூர் ஹனீபா 16-17 வயது சிறுமியைக் கூட்டிச் சென்று 15-02-2022 முதல் 02-03-2022 வரை கணவன் – மனைவி போன்று வாழ்ந்தது, தமிழர் கலாச்சாரத்தின் படி களவா-கற்பா அல்லது சட்டத்தின் படி பொக்சோவா கொலையா? (1)

14-02-2022 அன்று காணாமல் போன சிறுமி சாவு: மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றார்[1]. 16 வயது என்கிறது தமிழ்.இந்து. அதன் பிறகு அவர் மாயமானார்[2]. 14-02-2022 அன்று காணாமல் போனாள் என்று மற்ற ஊடகங்கள் கூறுகின்றன. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் மேலூர் போலீசில் 15-02-2022 அன்று அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காணாமல் போன சிறுமியும், தும்பைப்பட்டியை சேர்ந்த நாகூர் ஹனிபாவும் (வயது 29) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இ்ந்த நிலையில் நாகூர் ஹனிபாவும் மாயமாகி இருந்தார். இதனால் சிறுமி அவருடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். 16/17 வயது சிறுமி 12 வயது வித்தியாசம் கொண்ட ஒரு வாலிபனுடன் சென்றாளா அல்லது அவன் ஏமாற்றி, வலுக்கட்டாயமாக அல்லது வெறேதாவது காரணத்திற்காகக் கடத்திச் சென்றானா என்று புரிந்து கொள்ள முடியாதா? அதாவது, ஒரு முஸ்லிம், இந்து சிறுமியை காதலித்து கல்யாணம் செய்து கொள்ளாமல், உடலுறவு கொண்டுள்ளான், கற்பழித்துள்ளான். ஆகையால், இது “லவ் ஜிஹாத்” வகையில் கூட வரும், என்றாகிறது.

14-02-202 அன்று காணாமல் போன சிறுமியை 03-03-2022 அன்று ஹனிபாவின் தாய் ஒப்படைத்தது, 06-03-2022 அன்று மரணமடைந்தது: இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு கடந்த 3-ந்தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் மதினாபேகம் மயக்க நிலையில் இருந்த அந்த சிறுமியை அவரது தாயாரிடம் 03-03-2022 அன்று ஒப்படைத்தார். தனது மகளின் நிலையை கண்டு பதறிப்போன, சிறுமியின் பெற்றோர் அவரை உடனே மேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் ஆலோசனையின் பேரில் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் 06-03-2022 அன்று மதியம் அந்த சிறுமி பரிதாபமாக இறந்ததால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மூன்று நாட்களில் போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை. மருத்துவ மனையிலும், மருத்துவர்கள் சிறுமி விசம் குடித்ததைக் கண்டு பிடித்து, போலீஸாரிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவில்லை.

05-03-2022 அன்று கைதான நாகூர் ஹனீபா சொன்னதுஎலி மருந்து சாப்பிட வைத்தேன்: இதற்கிடையே நேற்று முன்தினம் 05-03-2022 அன்று நாகூர் ஹனிபாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன[3]. இதுதொடர்பாக போலீசில் நாகூர் ஹனிபா தெரிவித்தது வருமாறு[4]: “நானும், அந்த சிறுமியும் காதலித்து வந்தோம். சம்பவத்தன்று காதலியை பிப்., 14ல் திருப்பரங்குன்றத்தில் நண்பர் பெருமாள் கிருஷ்ணன், 25, வீட்டிற்கு நண்பர்களுடன் அழைத்துச் சென்றேன்[5]. பின்னர் அங்கிருந்து 15-02-2022 அன்று ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள எனது சித்தப்பா இப்ராகிம் வீட்டிற்கு கூட்டிச்சென்றேன்[6]. இதற்கு என்னுடைய நண்பர்கள் உதவினர். அங்கு சிறுமியை தங்க வைத்திருந்தேன். இந்த நிலையில் எனது தாயார் என்னிடம் தொடர்பு கொண்டு, சிறுமியை நான் அழைத்து சென்றதாக ஊருக்குள் பேசிக்கொள்கின்றனர். இது பிரச்சினையாகி விடும் என்று கூறினார். இதைவைத்து அந்த சிறுமியை பயமுறுத்துவது போல் பேசினேன்[7]. பின்னர் இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்தேன். இதற்காக எலி மருந்து வாங்கி வந்திருந்தேன். அதை சிறுமியை சாப்பிட வைத்தேன்[8]. ஆனால் நான் அதை சாப்பிடவில்லை[9]. அதன் பின்னர் சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மதுரைக்கு அழைத்து வந்து எனது தாயாரிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டேன். பின்னர் எனது தாயார் அவரை அவரது வீட்டில் ஒப்படைத்தார்,” இவ்வாறு நாகூர் ஹனிபா தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற காதலன் காதலியை ஏன் ஏமாற்ற வேண்டும்?: நாகூர் ஹனிபா சிறுமிக்கு மட்டும் எலிமருந்து கொடுத்து சாப்பிட வைத்து, இவன் துப்பி விட்டான் என்றால், நாடகம் ஆடியிருக்கிறான் என்று தெரிகிறது. மேலும் அந்த அப்பாவி சிறுமியை கொலைசெய்ய தீர்மானித்திருக்கிறான். அப்படியென்றால் அவளை கொலைசெய்ய வேண்டிய அவ்சியம் என்ன? அவளை ஒரே அடியாக ஒழித்துவிட வேண்டிய கட்டாயம் என்ன? அதாவது, அவள் ஏதோ ஒரு உண்மையினை சொல்லலாம், அவ்வாறு சொன்னால், இவன் மாட்டிக் கொள்வான் என்ற நிலை இருந்திருக்கிறது. அத்தகைய நிலை என்னவென்று தெரியவில்லை. ஆனால், ஊடகங்களில், “கூட்டு பலாத்காரம்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இவனே திருமணம் செய்து கொள்ளாமல் 14-02-2022 முதல் 02-03-2022 வரை கற்பழித்திருக்கிறான். மற்ற விவகாரங்கள் தெரியவில்லை.

8 பேர் கைது போலீஸ் சூப்பிரண்டு பேட்டி: இதற்கிடையில் மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாகூர் ஹனிபா, மதுரை திருநகரை சேர்ந்த அவரது நண்பர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் பெருமாள் கிருஷ்ணன், திருப்பூர் ராஜாமுகமது, நாகூர் ஹனிபா, தாயார் மதினாபேகம், தந்தை சுல்தான் அலாவுதீன், சித்தப்பா சாகுல் அமீது மற்றும் ரம்ஜான் பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள். சிறுமி இறப்பு சம்பவம் குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது: “மேலூர் சிறுமியை காதலன் நாகூர் ஹனிபா கடத்தி ஈரோடு சென்று அங்கு அவரது சித்தப்பா வீட்டில் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளார்[10]. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டம், சிறுமியை கடத்தியது உள்பட 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[11]. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அந்த சிறுமி இறந்து விட்டதால் அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது,” இவ்வாறு அவர் கூறினார்.

©வேதபிரகாஷ்

07-03-2022


[1] தினத்தந்தி, மதுரை: 17 வயது சிறுமி கடத்தி விஷம் கொடுத்து கொலைகாதலன் உள்பட 8 பேர் கைது, மார்ச் 07, 04:52 AM.

[2] https://www.dailythanthi.com/amp/News/TopNews/2022/03/07045239/8-arrested-for-kidnapping-and-poisoning-girl.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, எலி மருந்து கொடுத்து 17 வயது மேலூர் சிறுமி கொலை? 8 பேர் கைது.. காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம், By Vishnupriya R, Updated: Mon, Mar 7, 2022, 14:08 [IST]

[4] https://tamil.oneindia.com/amphtml/news/madurai/police-arrested-8-members-those-who-are-involved-in-17-years-old-melur-girl-death-450910.html

[5] தினமலர், கடத்தப்பட்ட சிறுமி மரணம்: சிறுமியின் காதலன் உட்பட 8 பேர் கைது,  Added : மார் 07, 2022  10:48.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=2977283

[7] அதாவது நடித்தான் என்றாகிறது, பிறகு அவன் ஏன் அந்த சிறுமியை பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றான், அங்கெல்லாம் இருந்தவர்கள் ஒப்புக் கொண்டு இருவரையும் வைத்துக் கொண்டார்கள், அறிவுரைக் கூறி அனுப்பி வைக்கவில்லை அல்லது சந்தேகம் கொண்டு போலீஸாரிடம் புகார் அளிக்கவில்லை போன்ற கேள்விகளும் எழுகின்றன.

[8] தினகரன், போலீஸ் தேடியதால் எலிபேஸ்ட் சாப்பிட்டார் காதலனால் கடத்தப்பட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு: காதலன், தாய் உள்பட 8 பேர் கைது, 2022-03-07@ 01:13:12.

[9] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=747689

[10] தமிழ்.இந்து, கடத்தப்பட்ட சிறுமி பாலியல் துன்புறுத்தலால் உயிரிழப்பு? – காதலன் உட்பட 8 பேர் கைது, செய்திப்பிரிவு, Published : 07 Mar 2022 08:17 AM; Last Updated : 07 Mar 2022 08:17 AM.

[11] https://www.hindutamil.in/news/crime/774781-sexual-harassment.html

சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் 2006 (the Prohibition of Child Marriage Act, 2006) முஸ்லிம்களுக்கு செல்லுபடியாகுமா, ஆகாதா?

மார்ச் 10, 2015

சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் 2006 (the Prohibition of Child Marriage Act, 2006) முஸ்லிம்களுக்கு செல்லுபடியாகுமா, ஆகாதா?

Saudi Arabian women slavery

முஸ்லிம்கள்  திருமணம்

தி இந்து 07-03-2015 அன்று முஸ்லிம்கள் திருமணத்தில் அதிகாரிகள் தலையிடுவதை நிறுத்தக் கோரி வழக்கு என்றும், சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என்றும், இரு செய்திகள் போன்று வெளியிட்டது. 05-03-2015 அன்று சென்னை உயர்நீதி மன்றம் சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் 2006 (the Prohibition of Child Marriage Act, 2006 )  எல்லொருக்கும் பொதுவானது, ஏனெனில், அது பெண்குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெண்களின் உடல்நலன் முதலியவற்றைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்ட சட்டமாகும், என்று நீதிபதி சி.டி.செல்வம் எடுத்துக் காட்டினார்[1]. கடந்த நவம்பர் 23, 2012 அன்று நடைபெறவிருந்த அப்துர் காதிர் என்பவருடைய பெண்ணின் திருமணம், பெண்ணிற்கு 17 வயதுதான் ஆகிறது என்பதால், மாநில நலத்துறை அதிகாரி தடுத்து நிறுத்தினார். இதையெடுத்து மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்கு செல்ல, அதிகாரியின் செயல் சரிதான் என்று தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தொடர்ந்த அப்பீல் தான் அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வந்தது, அப்பொழுது, அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரையில் அத்தகைய வழக்கம் அதிகம் இருப்பதினால், அதனைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவருகின்றன[2].

திருமணம் என்னும் நிக்காஹ்.3

திருமணம் என்னும் நிக்காஹ்

மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த எம்.முகமது அப்பாஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு[3]: முஸ்லிம் மதத்தினரின் திருமணங்கள் இஸ்லாமிய திருமணச் சட்டத்தின்கீழ் நடைபெறுகின்றன. இச்சட்டத்தின்கீழ், பெண் பருவம் அடைந்துவிட்டால் அவர் திருமணம் செய்து கொள்ளலாம். இஸ்லாமியச் சட்டப்படி பருவம் அடைவதும், மேஜராவதும் ஒன்றுதான். ஆனால், தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடைய முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதை சமூக நலத் துறை அதிகாரிகள் தடுக்கின்றனர். முஸ்லிம் சட்டப்படி நடைபெறும் திருமணங்களை அதிகாரிகள் தடுக்க முடியாது. ஸ்ரீவில்லிபுத்தூர் மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய ஆயிஷாபானுவுக்கு நாளை (8-ம் தேதி) திருமணம் நடக்கவுள்ளது. ஆனால், கடந்த 2-ம் தேதி மாவட்ட சமூக நலத் துறை அதிகாரிகள், போலீஸாருடன் எங்கள் வீட்டுக்கு வந்து ஆயிஷாபானுவை அழைத்துச் சென்றுவிட்டனர். அச்சிறுமியைக் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். அவரை பெற்றோர் சந்திக்க அனுமதிப்பதில்லை. முஸ்லிம் பெண்களின் திருமணத்தைத் தடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. ஆயிஷாபானுவை விடுவிக்கவும், ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் முஸ்லிம்கள் தனிச் சட்டப்படி நடைபெறும் திருமணங்களை, குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தை மேற்கோள் காட்டி தடுக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி இஸ்லாமிய திருமணச் சட்டம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிட்டார். விசாரணைக்குப் பின், சிறுமி ஆயிஷாபானுவை மார்ச் 9-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்[4]. அன்று நீதிமன்றம் விசாரித்து, பெண்ணை பெர்றோரிடம் ஒப்படைக்குமாறு ஆணையிட்டது. வழக்கையும் மார்ச் 1 வரை ஒத்திவைத்தது[5].

Saudi women wait for their drivers outsiகுழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது[6]. இஸ்லாம் தோன்றிய ஆரம்பக் காலங்களில் சூழ்நிலை காரணமாகவும் மற்ற பல்வேறு காரணங்களுக்காகவும் இஸ்லாமியர்களிடம் குழந்தைத் திருமணம் நடைபெற்றிருக்கலாம். அதுவே, இஸ்லாமியச் சட்டம் கிடையாது. இப்போது குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் என்பது ஒரு மதச்சார்பற்ற இந்தியச் சட்டம். இதில் குழந்தைகளின் உடல்நலன், கவுரவம், முன்னேற்றம், மனநிலை ஆகியவைதான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தில் மதத்தை இணைத்துப் பார்ப்பதும் முஸ்லிம்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று வாதிடுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல[7]. மத்திய திருமணத் தடுப்புச் சட்டம் மதங்களுக்கு அப்பாற்பட்டது என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். கே.பி.எச். முகம்மது முஸ்தபா சொல்லிவிட்டார். என்னவாகும் என்று பார்க்க வேண்டும். அப்படியே விட்டுவிடுவார்களா அல்லது மொஹம்மது அஹம்மது கான் மற்றும் ஷா பானு (Supreme Court of India- Mohd. Ahmed Khan vs Shah Bano Begum And Ors on 23 April, 1985; Equivalent citations: 1985 AIR 945, 1985 SCR (3) 844) உச்சநீதி மன்ற தீர்ப்பு மாதிரி ஆகிவிடுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!

Sha bano divorced in 1978

Sha bano divorced in 1978

சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் 2006 (the Prohibition of Child Marriage Act, 2006) எங்களுக்கு செல்லுபடியாகாது: 1987களில் குறிப்பிட்ட

மற்றும் ஷா பானு வழக்கில், சிவில் முறை (Code of Civil Procedure) சட்டப்பிரிவு 125ன் படி, விவாகரத்து செய்யப்படும் மனைவுக்கு, ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும் என்றுள்ளது. ஆனால், மொஹம்மது அஹம்மது கான் அவ்வாறு தரமுடியாது என்றபோது, ஷா பானு எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது, உச்சநீதிமன்றம் தகுந்த ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும் என்று உறுதி செய்தது[8]. இதனையடுத்து முஸ்லிம்கள் தங்கள் மதவிவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்று ஆர்பாட்டம் செய்தனர். முஸ்லிம்களை தாஜா செய்ய, அப்பொழுதைய ராஜிவ் காந்தி அரசு, ஒரு புதிய சட்டத்தை எடுத்து வந்தது. அதேபோல, இப்பொழுதும், சிறுமிகளின் திருமணத் தடுப்புச் சட்டம் 2006 (the Prohibition of Child Marriage Act, 2006) எங்களுக்கு செல்லுபடியாகாது, எங்கள் சட்டப்படிதான், நாங்கள் திருமணம் செய்து வைப்போம் என்றால் அரசு என்ன செய்யும் என்று நோக்கத்தக்கது. மேலும், இப்பொழுது மோடி அரசு இருப்பதால், பிரச்சினை அடக்கித்தான் வாசிக்கப்படும்.

முஸ்லிம் விவாகரத்தில் உண்டாகும் பிரச்சினைகள்

முஸ்லிம் விவாகரத்தில் உண்டாகும் பிரச்சினைகள்

முஸ்லிம்களுக்கு சிவில் சட்டம் தனியாக இருக்கிறது: மதச்சார்பற்ற இந்தியாவில் கிரிமினல் சட்டங்கள் மட்டுமே அனைவருக்கும் பொதுவாக இருக்கின்றன. ஆனால் சிவில் சட்டங்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோ​ருக்குத் தனித்தனியாக இருக்கின்றன. இதில் கிறிஸ்தவர்களுக்கு திருமணப் பதிவு மற்றும் விவாகரத்து தவிர மற்ற அனைத்தும் இந்திய சிவில் சட்ட வரம்போடு இணைந்துகொள்கின்றன. ஆனால், முஸ்லிம் தனிநபர் சிவில் சட்டம் மட்டுமே வித்தியாசமானது.

  1. உயிலிலா இறக்கம் (Intestate succession)
  2. திருமணம் (Marriage)
  3. திருமண இழப்பு (Dissolution of Muslim Marriage)
  4. மணமகன் மணமகளுக்கு அளிக்கும் திருமணக் கொடை(mahar)
  5. ஜீவானாம்சம் (Maintenance).
  6. பெண்கள் சிறப்புச் சொத்து (Special Property of females)
  7. காப்பாளர் பொறுப்பு (Guardianship)
  8. கொடை (Gift)
  9. வக்ஃபு (wakf)
  10. அறக்கட்டளை அமைப்பும் அதன் சொத்தும் (Trust and Trust properties).

மேற்கண்ட 10 அம்சங்களின் அடிப்படையில்தான் முஸ்லிம் தனிநபர் சட்டம் இந்தியாவில் இன்னும் தொடர்கிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் இதுகுறித்த பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால், 1973-ல் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (All India muslim personal law board) ஏற்படுத்தப்பட்டது. இதில் இந்தியாவின் முன்னணி மத அறிஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட 200 மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதன் பணி, முஸ்லிம் தனிநபர் சட்டத்தைக் காப்பதுடன் அதன் அமலாக்கத்தைக் கண்காணிப்பது[9].

இந்திய முஸ்லிம்கள் பொதுசட்டத்திற்கு ஒப்புக்கொள்வார்களா?: இந்தியாவைப் பொறுத்தவரை முஸ்லிம் தனிநபர் சட்டத்தை அமலாக்குவதும், அதைத் தொடர்ந்து செயல்படுத்துவதும் ஊர் கூட்டமைப்பு என்றழைக்கப்படும் ஜமாஅத்துகள். அதன் பின்புலமாக இருக்கும் மத அறிஞர்கள் மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் காஜிகள். இந்த அதிகாரபூர்வமற்றக் கட்டமைப்பு இந்தியாவில் தொடர்ந்த நிலையில் பல இஸ்லாமிய குடும்பம் சார்ந்த சிக்கல்கள் பலமுறை நேரடியாக நீதிமன்றங்களுக்குச் சென்றிருக்கின்றன. அதில் பெண்களே பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்படுகிறார்கள். நீதிமன்றங்கள் தலையிட்டு தார்மீக மற்றும் சட்ட நெறி​முறையிலான தீர்ப்புகளைச் சொன்ன சம்பவங்களும் இருக்கின்றன[10]. இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் சார்ந்த பிரச்னைகள் பலமுறை நீதிமன்றங்களுக்குச் சென்றிருக்கின்றன. குடும்ப நீதிமன்றங்களின் தேவையும் தவிர்க்க முடியாதது. இதற்கான குரல்கள் இந்தியா முழுவதும் பலதரப்பினராலும் எழுப்பப்படுகின்றன. சமூகப் பொருளாதார நிலைமைகளில் இந்திய முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கி இருக்கும் சூழலில், அவர்களின் முன்னேற்றத்துக்கு  சட்டப் பாதுகாப்பு மிகஅவசியம். எல்லோரும் இதுகுறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என்று எச்.பீர்முஹம்மது என்பவர் ஜூனியர் விகடனில் எழுதியிருந்தார்[11].

வேதபிரகாஷ்

© 10-03-2015

[1] http://zeenews.india.com/news/india/child-marriage-prevention-act-secular-in-nature-hc_1557096.html

[2] http://www.thehindu.com/news/cities/Madurai/police-on-zero-child-marriage-campaign/article5420719.ece

[3]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article6968917.ece?utm_source=vuukle&utm_medium=referral

[4] தி இந்து, முஸ்லிம்கள் திருமணத்தில் அதிகாரிகள் தலையிடுவதை நிறுத்தக் கோரி வழக்கு, Published: March 7, 2015 09:47 ISTUpdated: March 7, 2015 10:06 IST

[5] http://www.business-standard.com/article/pti-stories/hc-directs-madurai-officials-to-hand-over-rescued-girl-to-115030901322_1.html

[6] கே.பி.எச். முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது, Published: March 7, 2015 10:37 IST; Updated: March 7, 2015 10:54 IST.

[7]http://tamil.thehindu.com/opinion/letters/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/article6969002.ece

[8] http://indiankanoon.org/doc/823221/

[9] http://www.vikatan.com/article.php?aid=33524

[10] அதில் புகழ்பெற்றது ஷாபானு வழக்கு. ஷாபானு வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் அந்த பெண் ஏன் நீதிமன்றத்திற்கு சென்றாள்? அவளை செலவுசெய்து நீதிமன்றத்துக்கு செல்ல நிர்பந்தப்படுத்திய சூழல் எது என்பது குறித்து எதுவும் பேசுவது இல்லை. விவாதிப்பதும் இல்லை என்று எடுத்துக்காட்டினார். Supreme Court of India, Mohd. Ahmed Khan vs Shah Bano Begum And Ors on 23 April, 1985; Equivalent citations: 1985 AIR 945, 1985 SCR (3) 844.

[11] எச்.பீர்முஹம்மது, முஸ்லிம் பெண்களும் கோர்ட்டுக்கு வர வேண்டும்!, ஜூனியர் விகடன் – 19 Jun, 2013.