Posted tagged ‘சிமி’

8–சிமி குற்றவாளிகள் கொலை – ஸ்டீல் டம்பளர், தட்டு கத்திகளாக மாறியது எப்படி? என்கவுன்டர் வீடியோக்களை எடுத்தது யார் – எப்படி?

நவம்பர் 1, 2016

 

8–சிமி குற்றவாளிகள் கொலைஸ்டீல் டம்பளர், தட்டு கத்திகளாக மாறியது எப்படி? என்கவுன்டர் வீடியோக்களை எடுத்தது யார் – எப்படி?

people-gathered-on-hillock-where-the-smi-were-shot-dead-bodies-scatteredஊடகக்காரர்களின் பொறுப்பு முதலியனவெல்லாம் கூட தீவிரவாதிகளின் உரிமைகளைத் தான் ஆதரிக்கின்றன: இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில போலீஸ் ஐ.ஜி. யோகேஷ் சவுத்ரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுட்டுக்கொல்லப்பட்ட 8 பயங்கராவதிகளிடமிருந்து துப்பாக்கிகள், மூன்று கூர்மையான கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்றார்[1].  பயங்கரவாதிகள் எந்தஒரு ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்று வெளியான தகவல்கள் வெளியாகியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜெயில் காவலர் கொல்லப்பட்டது கூட அவருக்குத் தெரியவில்லை / கவலையில்லை, ஆனால், இதுபோல கேள்வி கேட்க தயாராக உள்ளார். யோகேஷ் சவுதாரி, “இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றார்.  இதற்கிடையே என்கவுண்டர் நடத்தப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அப்படியென்றால், இவற்றையெல்லாம் யாரோ கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்றாகிறது. அந்த அளவுக்கு யார் கவனிப்பது, வீடியோ எடுத்தது, தங்களது அடையாளங்களை மறைப்பது – இவற்றைச் செய்வது யார்?

people-gathered-on-hillock-where-the-smi-were-shot-deadஎன்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்.ஜி. யோகேஷ் சவுத்ரி: என்கவுட்னர் வீடியோக்கள் குறித்தளவை உண்மையா-இல்லையா என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்[2]. இந்த என்கவுன்டரில் 3 போலீசார் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக அவர்களை உயிருடன் பிடிக்க முயன்ற போலீசாரை பயங்கரவாதிகள் தான் துப்பாக்கியால் சுட்டனர். இதில் நடந்த என்கவுன்டரில் 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இல்லை அவர்களே தங்களை சுட்டுக் கொண்டனர் என்று கூட ஊடகக்காரர்கள் வாதிப்பார்கள் போலும். இது திட்டமிட்டு நடத்தப்படவில்லை. அந்த இடத்தில் நடந்த சூழ்நிலையை பொறுத்து எடுக்கப்பட்ட முடிவு. இருப்பினும் என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். என்றார். இந்த சிமி பயங்கரவாதிகள் தொடர்ச்சியான குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர், அவர்கள் 2008, 2011-ல் போலீஸ் கான்ஸ்டபிளை கொலை செய்து உள்ளனர்[3]. பயங்கரவாதிகள் எப்படி சிறையில் இருந்து தப்பினர்கள், தப்பிய பின்னர் அவர்கள் எங்கு சென்றனர் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார்[4].

video-scenes-killing-simi-on-hillockஎன்கவுன்டர் வீடியோ வெளிவ்ந்தது எப்படி? யார் எடுத்தது?: என்கவுன்டர் வீடியோ பற்றி தான் இப்பொழுது ஊடக ஆராய்ச்சி அதிகமாகியுள்ளது[5]. திங்கட்கிழமை காலை 10.30 – 11.30 இடையில் இந்த சிமி-தீவிரவாதிகள் மற்றும் போலீஸார் மோதல் நடந்துள்ளது[6]. போலீஸார் எடுத்துள்ள வீடியோ தவிர மற்றவர்களும் வீடியோ எடுத்துள்ளதாக தெரிகிறது.

Ø  அப்படியென்றால், யார் எடுத்தது?

Ø  தீவிரவாதிகள் அங்குதான் இருக்கின்றனர் அல்லது போலீஸார் அங்கு வருவார்கள், இவ்வாறேல்லாம் நடக்கும், அப்பொழுது வீடியோ எடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு எப்படி தெரியும்?

Ø  அப்படியென்றால், “என்கவுன்டர்” பெயரில், இவர்களை சிறையிலிருந்து வெளியேற்றி, போலீஸாரை வைத்தே தீர்த்துக் கட்ட திட்டம் போட்ரது யார்?

Ø  அது யார் சார்பாக எடுக்கப்பட்டது?

Ø  போலீஸாருக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் எடுக்கப்பட்டதா?

Ø  அது ஊடகங்களுக்கு எப்படி கிடைத்தது?

ஊடகங்கள் எப்படி அவற்றை ஒலி-ஒளிபரப்பி விவதாங்களை உடனடியாக ஆரம்பி வைக்கலாம். உடனே தீவிரவாதிகளின் வழக்கறிஞர் அப்பிரச்சினையை எடுத்துக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கலாம்?

escaped-simi-killers-on-the-hillock-4-missingஸ்டில் டம்பளர், தட்டு கத்தியாக மாறியது, தலைமை கான்ஸ்டெபிள் கொல்லப்பட்டது எப்படி?: சிறையில் சிமி கைதிகளுக்குக் கொடுக்கப் பட்ட ஸ்டீல் டம்பளர், தட்டு முதலியன கூர்மையாக கத்திகளாக மாறியது எப்படி என்பதை யாரும் விள்ளக்குவதாக இல்லை. சிமிக்காரர்கள் அத்தகைய தொழிற்நுட்பங்களை சிறையிலேயே ஏற்படுத்டிக் கொண்டார்களா அல்லது வெள்ளியியிலிருந்து, அத்தகைய தொழிற்நுட்பங்கள் வரவழைக்கப்பட்டனவா என்றும் விவாதிக்கப்படவில்லை. சிறையிலேயே அவற்றை வளைத்து, வெட்டி, ராவி கூராக மாற்றியுள்ளனர் என்றால், எப்படி சாத்தியமாகும். பிறகு, சிறையிலேயே அவர்களுக்கு உதவ யாரோ இருக்கின்றனர் என்றாகிறது? அவர்கள் யார்? ராம்சங்கர் யாதவ் என்ற தலைமை கான்ஸ்டெபிள் தனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார்[7]. டிசம்பர் 9, 2016 அன்று திருமணம் நடக்கும் என்றும் மிகவும் சந்தோசமாக இருந்தார், ஆனால், கொலைகாரர்கள் அவரைக் கொண்டு விட்டார்கள்[8]. இவரது உரிமைகள் பற்றி யார் பேசுவார்கள், விவாதம் நடத்துவார்கள்?

5-lalhs-announced-on-the-escaped-simi-killersபொறுப்புள்ள முஸ்லிம்கள் கேள்விகளைத் தவிர்ப்பது: குண்டுவெடிப்புகள் நடந்திருப்பது, கொள்ளைகள் நடந்தது, ஜெயிலிருந்து ஆயுதங்களுடன் தப்பியோடியது, போலீஸார் கொல்லப்பட்டது, சாதாரண அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது இவையெல்லாம் பொய்யா? இவர்களது உரிமைகளைப் பற்றி யாரும் பேசமாட்டார்களா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரது உரிமைகள் என்னாவது? ஐசிஸில் சேரத்துடிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளார்களே? அதேபோலத் தானே, இந்திய முஜாஹித்தீன் வேலை செய்து கொண்டு வருகிறது. பிறகு ஏன், எப்படி இந்திய முஸ்லிம்கள் அதனை ஆதரித்து வருகிறார்கள்? உள்ளூர் தீவிரவாதம் அதிகமாகி, பெருகிவருவது அவர்களுக்கு மகிழ்ச்சியாகவா இருக்கிறது? இன்னும் எத்தனை ஆண்டுகள் இத்தகைய குண்டுவெடுப்புகளை ஆதரித்துக் கொண்டிருப்பர்? தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய காரியங்களை ஏன் அவர்களது பெற்றோர்ருறவினர், மற்றோர் தடுப்பதில்லை? இவற்றையெல்லாம் விடுத்து, “சர்வதேச பயங்கரவாத அமைப்புகளால் கவரப்படாமல், இந்திய இளைஞர்கள் தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அளவுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசின் பாதுகாப்புப் படைகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ” என்று வாதிடுவது, அத்தகையவரை ஊக்குவிப்பதாகத்தான் அமையுமே தவிர, அமைதியை உண்டாக்காது.

© வேதபிரகாஷ்

01-11-2016

escaped-simi-killers-on-the-mount-got-killed

[1] தினமலர், என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை: .பி. .ஜி.பேட்டி, பதிவு செய்த நாள்: திங்கள், அக்டோபர் 31,2016, 19:43 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 20:36 PM IST.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1638739

[3] தினத்தந்தி, சிமி பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது போலி என்கவுண்டர் என்ற விமர்சனத்தை நிராகரித்தது போலீஸ் , பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 9:05 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 9:05 PM IST.

[4] http://www.dailythanthi.com/News/India/2016/10/31210512/Police-rejects-criticism-of-fake-encounter-of-SIMI.vpf

[5] Indian Express, SIMI activists’ jailbreak: Video shows cop shooting at inmate on ground; in another, a talk of talks, Written by Milind Ghatwai | Bhopal | Updated: November 1, 2016 5:49 am

[6] http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-simi-activist-dead-video-jailbreak-undertrials-3731611/

[7] DNA, Bhopal jailbreak: Constable killed by SIMI activists was preparing for daughter’s wedding, Mon, 31 Oct 2016-09:45pm , PTI

[8] http://www.dnaindia.com/india/report-bhopal-jailbreak-constable-killed-by-simi-activists-was-preparing-for-daughter-s-wedding-2269076

8–சிமி குற்றவாளிகள் கொலை – தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை மறைத்து உரிமைகள் பற்றி பேசுவது ஏன்?

நவம்பர் 1, 2016

8–சிமி குற்றவாளிகள் கொலைதீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை மறைத்து உரிமைகள் பற்றி பேசுவது ஏன்?

the-eights-simi-terrorists-but-got-killed-in-a-police-encounter8- சிமி பயங்கரவாதிகள் சிறையிலிருந்து தப்பி ஓட்டம்: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் நகரில் 1977ம் ஆண்டு தோன்றிய இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு எனப்படும் ‘சிமி’ இயக்கம் [Students Islamic Movement of India (SIMI)] தீவிரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவ்வியக்கத்தின்மீது மத்திய-மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. முஸ்லிம்கள் இன்றும் இவர்களை ஆதரித்து வருகிறார்கள் என்பது, அவர்களது பெற்றோர், உற்றோர், மற்றோர் மற்றும் அரசியல்வாதிகளின் அறிக்கைகள் முதலிய காட்டி வருகின்றது. அவர்கள் செய்துள்ள கொலைகள், கொள்ளைகள், குண்டுவெடுப்புகள், சிறையிலிருந்து தப்பிச் சென்றது, மறுபடியும் குற்றங்கள் செய்தது, பிடிபட்டது, சிறையில் அடைக்கப்பட்டது முதலியவற்றை மறைத்தே அவ்வாறு செய்து வருகின்றனர். இதற்கு டிவிசெனல்கள் இடம் கொடுத்து விவாதம் செய்வது தான் திகைப்பாக இருக்கிறது. தீவிரவாதத்தினால் பாதிக்கப் பட்டவர்களிடம், அவர்களுக்கு சார்பாக, அவர்களது உரிமைகளை ஆதரிப்பவர்களிடம், அவர்களின் வழக்கறிஞர்கள் முதலியோரைக் கூப்பிட்டு அத்தகைய விவாதம் நடத்துவதில்லை.

bhopal-central-jail-from-where-the-simi-terrorists-escapedசிறையில் இருக்கும், அந்த சிமிதீவிரவாதிகளின் யோக்கியதை[1]: சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் தொடந்து குற்றங்கள் செய்து வரும் இவர்களின் யோக்கியதை இதுதான்[2]:

1.       பிப்ரவரி 1, 2014 சோப்படான்டி, கரீம்நகர் மாவட்டம், ஸ்டேட் பாங்கில் ரூ 46 லட்சம் கொள்ளையடித்த வழக்கிலும் ஜாகிட் உஸைன் மற்ரும் செயிக் மஹபூப் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

2.       மே.1, 2014 அன்று பெங்களூரு-கௌஹாத்தி எக்ஸ்பிரஸில் குண்டு வைத்து, ஒரு இளம்பெண் கொலைசெய்யப்பட்ட மற்றும் 12க்கும் மேற்பட்டவர் படுகாயம் அடைந்த வழக்கு.

இதே வழக்கில் –

1.       ஜாகிர் உஸைன் / சாதிக் / விக்கி [Zakir Hussain, alias Sadiq, alias Vicky (32)]

2.       செயிக் மஹபூப் / குட்டு [Sheikh Mehboob alias Guddu (30)]

3.       எஜாவுத்தீன் [Ejazuddin (32)]

3.       ஜூன் 2014ல் பூனாவிலுள்ள பரஸ்கானா மற்றும் விஸ்ரம்பாக் என்ற இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன.

4.       செப்டம்பர் 2014ல் பிஜ்னோர், உபியில் ஒரு தற்செயலாக நடந்த குண்டுவெடிப்பு. அப்பொழுது மெஹ்பூப் குட்டுவின் தாய் நஜ்மா அங்கிருந்தாள்.

5.       டிசம்பர் 2014ல் பெங்களூரில், சர்ச் தெருவில், ஒரு உணவகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு [blast outside a restaurant in Bengaluru’s Chruch Street area in December 2014].

6.       பிப்ரவரி 2015ல், ஆர்.சி.புரத்தில் [Muthoot Finance in RC Puram] முத்தூட் நிதிநிறுவனத்தில் கொள்ளையடித்தனர்.

dinathanthi-graphics-about-jail-breal-and-simi-killingபோபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தசிமிகைதிகள் தப்பிச் சென்றது: 2015ல் எஜாவுத்தீன் நல்கொண்டா அருகில் தெலிங்கானா போலீசாரால் கொல்லப்பட்டான். அவ்வகையில், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தினர் விசாரணை மற்றும் தண்டனை கைதிகளாக நாட்டில் உள்ள பல சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில், போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘சிமி’ கைதிகள் எட்டுபேர் 31-10-2016 அன்று அதிகாலை 2-3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சிறையில் இருந்த ஸ்டீல் தட்டு, மற்றும் டம்ப்ளரால் காவலரின் கழுத்தை அறுத்துக் கொன்றனர்[3].  இதைத்தொடரந்து அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த போர்வையை பயன்படுத்தி மதில்சுவரை தாண்டி குதித்து, இந்த எட்டுபேரும் தப்பிச் சென்றதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன[4]. தப்பிச் சென்றவர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்[5]. தடைசெய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் 8 பேர் சிறையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. அவர்கள் இவ்வாறு தப்பிச் சென்றதே, திட்டமிட்டு செய்தது என்று தெரிகிறது. இனி, கைதிகளுக்கு ஸ்டீல் டம்பளர், தட்டு முதலியவை கொடுக்கலாமா-கூடாதா என்ற ஆராய்ச்சி நடத்த வேண்டும் போலிருக்கிறது.

the-eight-simiதப்பிச் சென்றவர்களை எச்சரித்தும், மறுத்ததால் போலீஸார் சுட்டதில் 8-பேர் கொலை: போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்[7] இப்படி தமிழ் ஊடகங்கள் சுருக்கமாக செய்திகளை வெளியிட்டன. போபால் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த 8 தீவிரவாதிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர்[8] என்று நீட்டிச் சொல்கிறது இன்னொரு தமிழ் நாளிதழ். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் மத்திய சிறையில் காவலரை சுட்டுக்கொன்று ஞாயிற்றுக் கிழமை 30-10-2016 அன்றிரவு 8 தீவிரவாதிகளும் தப்பிச்சென்றனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது என்கிறது இன்னொரு தமிழ் நாளிதழ்.  போபால் புறநகர் பகுதியில் உள்ள இன்கொடி என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் 8 பேரும் பதுங்கியிருந்தது தெரியவந்தது.  கிராமவாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.  இதையடுத்து, போலீசார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர். தீவிரவாத தடுப்பு படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றி வளைத்தனர்[9]என்று தினத்தந்தி விளக்குகுறது. பயங்கரவாதிகளை சரண் அடைந்து விடுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அதை ஏற்காமல் பயங்கரவாதிகள் போலீசாரை தாக்க முயன்றனர். இதனால், வேறு வழியின்றி போலீசார் துப்பாக்கியை பிரயோகித்தனர். அப்போது நடைபெற்ற  என்கவுண்டரில் பயங்கரவாதிகள்  8 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்[10]என்றும் தினத்தந்தி கூறியுள்ளது. இதனையடுத்து சிமி பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட என் கவுண்டரின் உண்மை தன்மை குறித்து கேள்விகள் எழுப்பட்டது.  ஊடகக்காரர்கள் அந்த 8-பேர் எப்படி அங்கு சென்றனர், ஊர்மக்கள் ஏன் போலீஸாருக்கு தகவல் அளிக்க வேண்டும் முதலியவற்றைப் பற்றி கூட விவாதம் நடத்தலாமே?

smi-terror-politicizedஅரசியலாக்கப் படும் என்கவுன்டர் வழக்குகள்: தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை அரசியல்வாதிகள் நினைத்துப் பார்ப்பதில்லை என்று தான் தோன்றுகிறது. அவர்கள் முஸ்லிம்கள் அதனால், அவர்களை ஆதரிக்க வேண்டும், அப்படி செய்தால் ஆதாயம் கிடைக்கும் என்ற எண்ணாத்தில் தான் காங்கிரஸ், ஆப் போன்ற கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி சிமி பயங்கரவாதிகள் பாதுகாப்பு நிறைந்த சிறையில் இருந்து தப்பியது எப்படி என்பது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றது.  அரவிந்த் கேசரிவாலும் அத்தகைய கோரிக்கை விடுத்துள்ளார். டிவிசெனல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், ஒவைசியைக் வைத்து, உரிமை போராட்டமே நடத்திக் கொண்டிருக்கின்றன. இனி, பாகிஸ்தான் இந்திய வீரர்களைக் கொன்றதை மறந்து, இதை வைத்துக் கொண்டு கதையை ஓட்ட ஆரம்பித்து விடுவர். எல்லையில் நடந்த அக்கிரமங்களுக்கு இந்திய ராணுவம் பதில் நடவடிக்கை எடுத்தற்குக் கூட, எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் தான், இதுவும் நடக்கிறது. அப்படியென்றால், எதிர்கட்சிகள் சிமி-தீவ்ரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன என்று விளக்கம் கொடுக்கலாமா?

© வேதபிரகாஷ்

01-11-2016

the-eight-simi-clear-faces

[1] The Hindu, Cadres of an outlawed group, with long list of terror cases, Updated: November 1, 2016 01:10 IST.

[2] http://www.thehindu.com/news/national/cadres-of-an-outlawed-group-with-long-list-of-terror-cases/article9288680.ece?textsize=large&test=1

[3] தினத்தந்தி, போபால் சிறைச்சாலையில் இருந்து 8 சிமி இயக்கத்தினர் தப்பி ஓட்டம், பதிவு செய்த நாள்: திங்கள், அக்டோபர் 31,2016, 8:53 AM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 8:53 AM IST.

[4] http://www.dailythanthi.com/News/India/2016/10/31085334/8-SIMI-activists-escape-from-Bhopal-jail-1-guard-killed.vpf

[5] மாலைமலர், சிறையில் இருந்து 8 ‘சிமிதீவிரவாதிகள் தப்பியோட்டம், பதிவு: அக்டோபர் 31, 2016 08:29.

[6] http://www.maalaimalar.com/News/TopNews/2016/10/31082923/1047882/8-SIMI-activists-escape-from-Bhopal-jail-1-guard-killed.vpf

[7] தினகரன், போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, Date: 2016-10-31 11:47:00

[8] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=255546

[9] தினத்தந்தி, போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை, பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 12:05 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 12:05 PM IST.

[10] http://www.dailythanthi.com/News/India/2016/10/31120513/8-SIMI-terrorists-who-earlier-today-fled-from-Bhopal.vpf

இந்திய முஸ்லிம்கள் ஏன் சிமி, இந்திய முஜாஹித்தீன், ஐஎஸ்ஐ, ஐசிஸ் போன்ற ஜிஹாதி இயக்கங்களுடன் சேர்ந்து தீவிரவாத குரூரங்களை செய்கிறார்கள்?

பிப்ரவரி 7, 2016

இந்திய முஸ்லிம்கள் ஏன் சிமி, இந்திய முஜாஹித்தீன், ஐஎஸ்ஐ, ஐசிஸ் போன்ற ஜிஹாதி இயக்கங்களுடன் சேர்ந்து தீவிரவாத குரூரங்களை செய்கிறார்கள்?

SMI founder Mohammad Ahmadullah Siddiqi

ரியாஸ் பட்கல், சுல்தான் அர்மாருடன் உரையாடியது (மே.2015)[1]: தமிழ்.ஒன்.இந்தியா தொடர்ந்து, “இன்னொரு உரையாடல் ரியாஸுக்கும், சுல்தான் அர்மார் என்பவருக்கும் இடையே நடந்ததாகும். இந்த அர்மாரும், ரியாஸின் சொந்த ஊரான கர்நாடக மாநிலம் பத்கலைச் சேர்ந்தவர்தான். அவர் அல் கொய்தாவுடன் இணைய எதிர்ப்பு தெரிவித்திருந்தார். காரணம், எப்படியும் ஒரு நாள் அல் கொய்தா அமைப்பானது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு ஆதரவாக மாறி விடும். எனவே ஐஎஸ் அமைப்பில் சேருவதே நல்லது என்று அவர் கூறியிருந்தார். மேலும் ஐஎஸ் அமைப்புதான் சுத்தமான ஜிஹாத்தை நடத்தி வருவதாகவும், அதனுடன் இணைவதே சரியானது என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரியாஸுக்கும், அர்மாருக்கும் இடையே மோதல் முற்றி அதன் பின்னரே இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு உடைந்தது[2], என்று முடிக்கிறது.

Muslims still supporting SIMI 2010

பட்கலின் அப்துல் காதீர் சுல்தான் அர்மார், சிமிஇந்தியன் முஜாஹித்தீன் தலைவர், ஐசிஸ் போராளி சிரியாவில் சாவு (மார்ச்.14, 2015)[3]: கோபானெயில் சண்டையிட்டபோது அப்துல் காதீர் சுல்தான் அர்மார் உயிரிழந்தார் என்று டுவிட்டரில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 14-ம் தேதி இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. கோபானெ, வடமேற்கு சிரியாவில் துருக்கியின் எல்லையில் உள்ளது. சுல்தான் ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக சண்டையிட்டபோது, கொல்லப்பட்டார் என்று டூவிட்டர் தகவல்கள் வெளியாகியது. 39-வயதான அப்துல் காதீர் சுல்தான் அர்மார், கர்நாடக மாநிலம் சேர்ந்தவர், தடைசெய்யப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்தவர், 10 வருடங்களுக்கு முன்னதாக தனது சகோதரர் சாய்ப்புடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். இந்திய முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் யாசின் பாத்கல் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சுல்தான் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து சண்டையிடுவதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. ஜிகாதி அப்துல் காதீர் சுல்தான் அர்மார், ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு ஆள்சேர்த்தவர் என்றும் இங்கிலாந்து செய்தி இணையதளம் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டு உள்ளது[4].

Traning Muslim women online Mumbai

மும்பை பெண்களுக்கு தற்கொலை படையாக மாற ஆன்லைன் மூலம் ஐஎஸ் பயங்கரவாதிகள், பயிற்சி: மும்பை பெண்களுக்கு தற்கொலை படையாக மாற ஆன்லைன் மூலம் ஐஎஸ் பயங்கரவாதிகள், பயிற்சி அளித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மும்பை பயங்கரவாதி எதிர்ப்பு படையினர் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது[5].இது குறித்து மும்பை பயங்கரவாத தடுப்பு படையினர் கூறுகையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சிலரிடம் விசாரணை நடத்திய போது சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதில் ஐஎஸ் இயக்க தலைவன் அபு பக்கர் அல் பாக்தாதி, மும்பையைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு தற்கொலைப் படையாக மாற பயிற்சி அளித்தது தெரிய வந்துள்ளது. ஆன்லைனில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாக்தாதியும், அவரது சகாக்களும் ஸ்கைப் உள்ளிட்ட பிற வீடியோ காலிங் சாப்ட்வேர்களை பயன்படுத்தி மும்பை இளம்பெண்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களை மூளை சலவை செய்து, பயிற்சி அளித்துள்ளனர். மும்பை மட்டுமின்றி இந்தியாவில் பல பகுதிகளை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு எவ்வாறு தற்கொலைப்படையாக மாறுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெண்கள் தான் அதிகம் என தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இளம்பெண்களை தற்கொலைப் படையாக ஐஎஸ் பயங்கரவாதிகள் மாற்றி வருவதை போன்று, பாகிஸ்தானில் பள்ளி ஆசிரியைகளுக்கு ஏகே 47 ரக துப்பாக்கிகளை இயக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது[6].

SIMI activities continued subversively

 ஜனவர் 2016ல் நாடுகடத்தப்பட்டவர் மற்றும் இறந்தவர்களின் விவரங்கள்: ஜனவரி 28, 2016 அன்று யு.ஏ.இலிருந்து நாடுகடத்தப்பட்ட ஐஎஸ் சார்புடையவர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

  1. அட்னன் ஹுஸைன், கர்நாடகா [Adnan Hussain, who hails from Karnataka],
  2. மொஹம்மது ப்ர்ஹான், மஹாராஷ்ட்ரா [Mohammad Farhan, from Maharashtra],
  3. செயியிக் அலி, ஜம்மு-காஷ்மீர் [Sheikh Azhar Al Islam, from Jammu and Kashmir]

இம்முவரும் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டனர். இது தவிர ஏற்கெனவே, நூற்றுக்கும் மேலானவர்கள் துருக்கி, சிரியா முதலிய நாடுகளிலிருந்து நாடு கடத்தப் பட்டுள்ளனர். இதனால், இந்தியாவிலிருந்து எத்தனை பேர் ஐசிஸ் உடன் சேர்ந்துள்ளனர், போராடி வருகின்றனர், இறந்துள்ளனர் என்ற விவரங்கள் தெரியாமல் இருக்கின்றன. ஆனால், பெற்றோர்கள் எப்படி அமைதியாக இருக்கிறார்ர்கள் என்று தெரியவில்லை. இது தவிர இறந்தவர்கள் விவரங்களும் தெரிய வந்துள்ளன[7]:

  1. அதிம் வஸீம் மொஹம்மத், அடிலாபாத், தெலிங்கானா [Athif Vaseem Mohammad (Adilabad, Telangana)],
  2. மொஹம்மது உமர் சுபான், பெங்களூரு [Mohammad Umar Subhan (Bengaluru)],
  3. மௌலானா அப்துல் சுல்தான் ஆர்மர், பட்கல், கர்நாடகா [Maulana Abdul Kadir Sultan Armar (Bhatkal, Karnataka)],
  4. சமீம் பரூக்கி தங்கி, தானே, மஹாராஷ்ட்ரா [Saheem Farooque Tanki (Thane)],
  5. பைஸ் மசூத், பெங்களூரு [Faiz Masood (Bengaluru)]
  6. மொஹம்மது சஜித் என்கின்ற படா சஜித், ஆஸம்கர், உபி [Mohammad Sajid alias Bada Sajid (Azamgarh, Uttar Pradesh)].

இவர்களது பெற்றோர்கள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர். பிடிபட்டவர்களின் பேற்றோர், தமது மகன் அல்லது மகள் அப்பாவி, ஒன்றும் தெரியாது, சும்மா கசூதிக்குச் சென்று வருவான், முச்லிம் தலைவர்களின் கூட்டத்திற்குச் சென்று வருவான், இஸ்லாம் பற்றிய புத்தகங்களைப் படிப்பான் என்று தான் சொல்லிவருகின்றனர். இதை டிவி செனல்கள் பிரமாதமாக போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. அதே போல, இறந்தவர்களின் பெற்றோர்களை அணுகி பேட்டிக் காண்பது தானே? அவர்கள் எப்படொ வெற்றிகரமாக, இந்தியாவிலிருந்து வெற்றிகரமாக சிரியாவுக்குச் சென்றனர், எப்படி சென்றார்கள், யார் பாஸ்போர்ட், விசா, எடுத்துக் கொடுத்தார்கள், பணம் கொடுத்தார்கள் என்ற விசயங்களை எல்லாம் ஆராய்ச்சி செய்வது தானே?

khilafat-e-rashida-is-the-only-solution

சிமி, அல்குவைதா, இந்திய முஜாஹித்தீன், ஐசிஸ் மாற்றங்கள்: இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் (Students’ Islamic Movement of India) அல்லது சிமி (SIMI) 1997ல் அலிகர், உத்திரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட  இஸ்லாமிய அமைப்பு ஆகும். இந்தியாவை இஸ்லாம் மயமாக்க வேண்டும், மேற்கின் செல்வாக்கத்திலிருந்து விடுதலை செய்துயைடைக்கால இஸ்லாமிய அரசை இந்தியாவில் மறுபடியும் நிறுவ வேண்டும் என்பதெல்லாம் இந்த இயக்கத்தின் நோக்கம் ஆகும். ஆகவே, ராமஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் பிரச்சினை இதற்கு காரணம் என்று சொல்லி வருவது அபத்தமான பிரச்சரம் ஆகும். இந்திய அரசு இவ்வியக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து, 2002இல் தடை செய்தது. இவ்வியக்கம் அல்கைதாவை சேர்ந்து இருக்கிறது என்று அறியப்படுகிறது.  சிமி இந்தியன் முஜாகிதீன் என்று பெயர் மாற்றிக்கொண்டது. இந்திய முஜாஹிதீன் இயக்கம் அதே ஆண்டில் 2008ல் ஜெய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இப்பொழுது மேலே பட்கல் மற்றும் அர்மார் சகோதரர்கள் விளக்கியுள்ள உள்-விவகாரங்களினால், ஐசிஸ் நோக்கி முஸ்லிம்கள் நகர்ந்து விட்டார்கள். படித்த முஸ்லிம் இளைஞர்களுக்கு வேலை தருகிறோம், நன்றாக சம்பளம் தருகிறோம், தவிர என்னென்ன வேண்டுமோ, அனைத்தையும் தருகிறோம் என்று தான், இவர்களை வளைத்துப் போடுகிறார்கள். இதனால் தான், சமூக வளைதளங்களில் சுலபமாக தொடர்பு கொள்கிறார்கள். குடும்பத்திற்கு அட்வான்ஸாக லட்சங்களும் கொடுக்கப்படுவதால், குடும்பமும் ஒத்துழைக்கிறது எந்த உண்மையினையும் சொல்வதில்லை.

ஆயிஸா அன்ட்ரபி கத்திகளுடன்

குடும்பம் பலன் பெறுவதனால் உண்மையினை மறைப்பதால் தீவிரவாதம் வளர்கிறது: பிரச்சினை என்று வரும் போது, முதலில் எங்கள் பையன், பெண் மிகவும் நல்லவன், அப்பாவி, ஒன்றுமே தெரியாது என்று தான் சொல்கிறார்கள். பிறகு, ஐயோ அவன் அப்படியெல்லாம் செய்திருப்பான் என்று நினைக்கவில்லை என்கின்றனர். அதற்கும் பிறகு, அவன் அப்படி செய்திருந்தால், அவனை தூக்க்கில் போடுங்கள் என்கிறார்கள். முடாபிர் முஸ்தாக் செயிக்கின் மனைவி உஜ்மா கூட தனது கணவன் ஏதோ ஒரு இஸ்லாமிய / தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளான் ஆனால் பெயர் தெரியாது என்று சொல்லி சமாளிக்கிறார். வேலையை விட்டாலும், லட்சங்களில் பணம் வருகிறது என்பதும் தெரிந்திருக்கிறது. பிறகு, எப்படி அவ்வாறு பணம் வருகிறது என்று பார்த்தாலே தெரிந்து விடுமே? யாரும் சும்மா லட்சங்களில் பணத்தை வங்கி கணக்கில் தாராளமாக போடமாட்டார்கள். ஆகவே அப்பணம் எங்கிருந்து வருகிறது என்பதனை தாராளமாகவே கண்டு பிடித்து விடலாம். பட்கல் மற்றும் அர்மார் குடும்பங்கள் அடிகடி வீடுகளை மாற்றுவதே அவர்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது என்றாகிறது. ஆகவே, குடும்பங்கள் மாற வேண்டும், அவர்களை மாற்ற வேண்டும். பேற்றோர், உற்றோர், மாற்றோர் அவர்களின் வித்தியாசமான போக்கைக் கண்டவுடன், கண்கானித்து திருத்த வேண்டும், மாற்ற வேண்டும். பிறகு வருத்தப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

© வேதபிரகாஷ்

06-02-12016

[1] http://tamil.oneindia.com/news/india/kamal-s-vishwaroopam-made-riyaz-bhatkal-happy-the-im-split-explained-227090.html

[2] Read more at: http://tamil.oneindia.com/news/india/kamal-s-vishwaroopam-made-riyaz-bhatkal-happy-the-im-split-explained-227090.html

[3] தினத்தந்தி, சிரியாவில் கொல்லப்பட்ட ஜிகாதி, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்தவர்       , மாற்றம் செய்த நாள்: வெள்ளி, மார்ச் 20,2015, 5:48 PM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, மார்ச் 20,2015, 5:48 PM IST.

[4] http://www.dailythanthi.com/News/World/2015/03/20174844/Indian-IS-recruit-killed-in-Syria-was-from-Bhatkal.vpf

[5] தினமலர், ஆன்லைன் மூலம் மும்பை பெண்களை தற்கொலைபடையாக மாற்றும் ஐஎஸ்.,, ஜனவரி.31.2016.08.58.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1445881

[7] http://indiatoday.intoday.in/story/3-isis-sympathisers-arrested-by-nia-after-deported-from-uae/1/583266.html

தடைசெய்யப்பட்ட சிமி தீவிரவாதிகள் தொடர்ந்து செயல்படுவது எப்படி – தெலிங்கானா என்கவுன்டர்கள், முன்னர் நடந்த கொலைகள், கொள்ளைகள், குண்டுவெடிப்புகள் (2)

ஏப்ரல் 11, 2015

தடைசெய்யப்பட்ட சிமி தீவிரவாதிகள் தொடர்ந்து செயல்படுவது எப்படி – தெலிங்கானா என்கவுன்டர்கள், முன்னர் நடந்த கொலைகள், கொள்ளைகள், குண்டுவெடிப்புகள் (2)

சிமி கொல்லப்பட்டவர்கள்

சிமி கொல்லப்பட்டவர்கள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை (டிசம்பர், 2014) : 2013ல் மத்தியப் பிரதேச சிறையில் இருந்து தப்பியோடிய சிமி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. போலீசாரைக் கொலை செய்தது, கொலை முயற்சிகள், வங்கிக் கொள்ளைகள், மதங்களிடையே பதற்றத்தைத் தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் “சிமி’ இயக்கத்தைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் கடந்த 2011ம் ஆண்டு கைது செய்யப் பட்டனர். மத்தியப் பிரதேசத்தின் கண்ட்வா நகரச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் அனைவரும் காந்த 2013ம் ஆண்டு தப்பி ஓடினர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள இவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், இந்த 5 தீவிரவாதிகளும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் உத்தரவுப்படி இந்தியாவில் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டி வருவதாக மத்திய உளவுத் துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

Telengana SIMI activities

Telengana SIMI activities

ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் அதிகாரி ஒருவருக்கும், பயங்கரவாதிகளைக் கையாளும் நபர் ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் : பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் அதிகாரி ஒருவருக்கும், பயங்கரவாதிகளைக் கையாளும் நபர் ஒருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை இந்திய உளவு அமைப்பினர் ஒட்டுக் கேட்டதில் இந்தச் சதித் திட்டம் குறித்து தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. அந்த உரையாடலில், “அவர்களுக்கு (5 பயங்கரவாதிகள்) ஒரு முக்கியமான திட்டம் தரப்பட்டுள்ளது. சில தினங்கள் காத்திருங்கள்’ என்று ஐ.எஸ்.ஐ. அமைப்பின் அதிகாரி கூறுவது இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு அமைப்புகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தப்பியோடிய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபடுமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், கர்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளுக்கு பிரத்யேக எச்சரிக்கைத் தகவலை அனுப்பி உள்ள மத்திய அரசு, அம்மாநிலங்களில் தப்பியோடிய தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கிறது. இந்த 5 பயங்கரவாதிகளில் குறைந்தபட்சம் 2 பேர் கடைசியாக கர்நாடகத்தில் இருந்ததை உளவுத் துறை கண்டறிந்ததாகவும், தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அவர்களது நடமாட்டம் காணப்பட்டதாகவும் உளவுத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தெலங்கானாவின் கரீம்நகரில் இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற வங்கிக் கொள்ளை, சென்னை சென்ட்ரலில் மே 1ஆம் தேதி இளம் பொறியாளர் கொல்லப்படக் காரணமான பெங்களூரு – குவாஹாட்டி ரயில் குண்டு வெடிப்பு, மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள ஃபாராஸ்கானா, விஷ்ராம்பாக் காவல் நிலையங்களில் ஜூலை 10ஆம் தேதி நிகழ்ந்த குண்டு வெடிப்பு ஆகிய நாசவேலைகளில் இந்த தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனிடையே, மத்தியப் பிரதேச சிறையில் இருந்து தப்பியோடிய 5 பயங்கரவாதிகளில் ஒருவரான மெஹ்பூபின் தாய் நஜ்மா பீ சில மாதங்களுக்கு முன்பு கண்ட்வா நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டார். எனவே, அவர் தன் மகனுடன் பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரைக் கண்டு பிடிப்பதன் மூலம், தீவிரவாதிகளின் இருப்பிடத்தை எளிதாக கண்டறியலாம் என போலீசார் நம்புகின்றனர்.

Muslim population of Telengana

Muslim population of Telengana

தொடர்ந்து நிகழ்ந்து வரும் கொள்ளைகள், குண்டுவெடிப்புகள்: . இருப்பினும் எஞ்சியுள்ள சிமி தீவிரவாதிகள் துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள் முதலியவற்றைத் திரட்டி லஸ்கர்-இ-தொய்பா போன்ற இயக்கங்களின் உதவியுடன் தீவிரவாதச் செயல்களைத் தொடர்ந்து செய்ய தீர்மானித்தனர்.

1. பிப்ரவரி 2014ல் கரீம்நகரில் [February 1, 2014 bank robbery in Karimnagar-Telengana] சொப்படன்டி SBI கிளையில் ரூ.46 லட்சங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
2. மே 2014ல் [blast on a Bangalore-Guwahati train at the Chennai Central Station in May 2014] சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில், ஒரு இளம்பெண் உயிரிழந்தார்.
3. ஜூன் 2014ல் பூனாவிலுள்ள பரஸ்கானா மற்றும் விஸ்ரம்பாக் என்ற இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன.
4. செப்டம்பர் 2014ல் பிஜ்னோர், உபியில் ஒரு தற்செயலாக நடந்த குண்டுவெடிப்பு. அப்பொழுது மெஹ்பூப் குட்டுவின் தாய் நஜ்மா அங்கிருந்தாள்.
5. டிசம்பர் 2014ல் பெங்களூரில், சர்ச் தெருவில், ஒரு உணவகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு [blast outside a restaurant in Bengaluru’s Chruch Street area in December 2014].
6. பிப்ரவரி 2015ல், ஆர்.சி.புரத்தில் [Muthoot Finance in RC Puram] முத்தூட் நிதிநிறுவனத்தில் கொள்ளையடித்தனர்.

இவ்வாறு தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு, அவர்கள் மறைந்து விடுகின்றனர். NIA கேரளா, உபி என்ற்று பலவிடங்களில் விசாரித்து இவிவரங்களை சேகரித்துள்ளது .

SIMI escaped from Indore MP jail October 2013

SIMI escaped from Indore MP jail October 2013

தடை செய்யப்பட்ட சிமி எப்படி வேலை செய்து வருகின்றது?: தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினர் எப்படி தொடர்ந்து வேலைசெய்து வருகின்றன? அவர்கள் இவ்வாறு பக்ல இடங்களுக்குச் சென்று வர, மற்ற காரியங்களை செய்து வர பணம் எங்கிருந்து வருகிறது? அவர்களை ஆதரிப்பது யார் போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இருக்கிறது. “பைசல் கும்பல்” என்கின்ற இந்த சிமி தீவிரவாதக் கூட்டத்தைப் பற்றிய விவரங்கள் தெரிய ஆரம்பித்தன . இக்கூட்டத்தில் இருப்பவர்கள்:
1. அஜாஜுத்தீன் [Aijajudeen]
2. அஸ்லம் [Aslam]
3. அமஜத் கான் [Amjad Khan],
4. ஜாகிர் உஸைன் [Zakir Hussain],
5. மெஹ்பூப் குட்டு [Mehboob Guddu]
02-04-2015 அன்று சூரியாபேட்டை காவல்நிலயத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த, இரு போலீஸாரை [Naga Raju],.. பைக்கில் வந்த இருவர் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர். பால கங்கி ரெட்டி,, இன்ஸ்பெக்டர் [Bala Gangi Reddy, police inspector] மற்றும் சித்தைய்யா, உதவி இன்ஸ்பெக்டர் [Siddaiah, sub-inspector] காயமடைந்தனர் .

SIMI escaped from MP jail October 2013

SIMI escaped from MP jail October 2013

அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்களின் வரைபடங்கள் வைத்திருந்த முனீர் அகமது கைது: இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுப்பிரிவு 2 மாநில அரசுக்கும் எச்சரிக்கை செய்தது. இதனால் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். குண்டூரில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற திருமலா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு தீவிரவாதி பயணிப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தெனாலி ரெயில் நிலையத்தில் வந்து நின்ற அந்த ரெயிலை சோதனையிட்டு சந்தேகப்படும் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்ததால் போலீசார் அவரை கைது செய்து ரெயிலில் இருந்து இறக்கினர். விசாரணையில் அவனது பெயர் முனீர் அகமது என்பதும், சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவனிடம், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்களின் வரைபடங்கள் உள்ளது . அந்த கோவிலுக்கு செல்லும் பாதை, வெளியேறும் பாதை போன்ற குறிப்புகள் இருந்தது. எனவே அவன் சிமி தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அவனிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். தெனாலி போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

வேதபிரகாஷ்
© 11-04-2015

தடைசெய்யப்பட்ட சிமி தீவிரவாதிகள் தொடர்ந்து செயல்படுவது எப்படி – தெலிங்கானா என்கவுன்டர்கள், முன்னர் நடந்த கொலைகள், கொள்ளைகள், குண்டுவெடிப்புகள் (1)

ஏப்ரல் 11, 2015

தடைசெய்யப்பட்ட சிமி தீவிரவாதிகள் தொடர்ந்து செயல்படுவது எப்படி – தெலிங்கானா என்கவுன்டர்கள், முன்னர் நடந்த கொலைகள், கொள்ளைகள், குண்டுவெடிப்புகள் (1)

சிமி கொல்லப்பட்டவர்களுள் ஒருவன்

சிமி கொல்லப்பட்டவர்களுள் ஒருவன்

வாராங்கல் ஜெயிலிலிருந்து நீதிமன்றத்திற்கு செல்லும்போது, 5 சிமி தீவிரபவாதிகள் சுட்டுக்கொலை: தெலுங்கானா மாநிலம் வரங்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 5 சிமி தீவிரவாதிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் ஐதராபாத் அழைத்துச் சென்றனர். அலெர்–ஜான்கான் ஆகிய இடங்களுக்கு இடையே போலீசாரை தாக்கி 5 பேரும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் 5 பேரையும் சுட்டுக் கொன்றனர் . தெலங்கானா தலைநகர் ஹைதராபாதைச் சேர்ந்தவர் விக்ருதீன் அகமது (30). தெரீக்-கல்பா-இ-இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கிய அவர் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். இரண்டு போலீஸாரை சுட்டுக் கொன்றது, குஜராத் உள்துறை அமைச்சர் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது உள்ளன . பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் விக்ருதீன் அகமதுவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. தலைமறைவாக இருந்த அவர் கடந்த 2010-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் முகமது ஹனீப், சையது அகமது அலி, இஷார் கான், முகமது ஜாஹிர் ஆகியோரும் கைது செய்யப் பட்டனர். இவர்கள் விசாகப்பட்டினம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு வன்முறையில் ஈடுபட்ட தால் வாரங்கல் சிறைக்கு மாற்றப் பட்டனர். இந்நிலையில் விக்ருதீன் அகமது உள்ளிட்ட 5 பேரையும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் நேற்று அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸாரை தாக்கிவிட்டு அவர்கள் தப்பிக்க முயன்றபோது 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர் .

சிமி கொல்லப்பட்டவர்களுள் இன்னொருவன்

சிமி கொல்லப்பட்டவர்களுள் இன்னொருவன்

என்கவுன்ட்டர் நடத்தியது / நடந்தது எப்படி?: இந்த என்கவுன்ட்டர் குறித்து தெலங்கானா போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: வாரங்கல் சிறையில் இருந்து காலை 8.30 மணிக்கு விக்ருதீன் அகமது உள்ளிட்ட 5 பேரையும் வேனில் ஏற்றிக் கொண்டு போலீ ஸார் புறப்பட்டனர். அவர்களுடன் 17 போலீஸார் பாதுகாப்புக்கு சென்றனர். ஹைதராபாத்-வாரங்கல் நெடுஞ் சாலையில் கண்டிகாடா தண்டா என்ற இடத்தில் காலை 10.25 மணிக்கு வேன் வந்தபோது இயற்கை உபாதை கழிப்பதற்காக வேனை நிறுத்துமாறு விக்ருதீன் அகமது கோரினார். அந்த இடத்தில் போலீஸார் வேனை நிறுத்தினர். ஐந்து பேரும் கீழே இறங்கியவுடன் அருகில் நின்ற போலீஸாரின் துப்பாக்கியை பறித்து சுட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட மற்ற போலீஸார் அவர் கள் ஐந்து பேரையும் சுட்டு வீழ்த்தினர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவ இடத்தில் வாரங்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஏ.கே.ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநில போலீஸ் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். ஐந்து தீவிரவாதிகளின் உடல்களும் ஜாங்கோன் நகர அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

சிமி கொல்லப்பட்டவர்களுள் இன்னுமொருவன்

சிமி கொல்லப்பட்டவர்களுள் இன்னுமொருவன்

2-வது என்கவுன்ட்டர் சம்பவம்: சில நாட்களுக்கு முன்பு நலகொண்டா மாவட்டம், சூர்யாபேட்டை பஸ் நிலையத்தில் நின்றிருந்த 2 போலீஸாரை சிமி தீவிரவாதிகள் இரண்டு பேர் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்துக்கு உட்பட்ட சூரியபேட் பஸ் நிலைய பகுதியில் கடந்த ஏப்ரல் 2–ந்தேதி அதிகாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு பஸ்சில் இருந்த மர்ம நபர்கள் 2 பேரை போலீசார் இறக்கி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசார் மீது திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு, அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும் பறித்து விட்டு தப்பி ஓடினர். இதில் ஒரு போலீஸ்காரர் மற்றும் ஒரு ஊர்க்காவல் படை வீரர் என 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர் . விசாரணையில் இவர்களுக்கும் மற்ற சிமி தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது . போலீஸார் நடத்திய தீவிர வேட்டையில் 2 தீவிரவாதிகளும் [Aslam Ayub and Mohammed Aijajuddeen] 04-04-2015 அன்று சனிக்கிழமை அன்று என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்ட்டர் நடைபெற்ற ஒரு வாரத்துக்குள் வாரங்கல் மாவட்டத்தில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தெலிங்கானாவில் இத்தகைய நிகழ்சிகள் நடப்பது கவலைக்குரியதாக உள்ளது. தெலிங்கானாவில் முஸ்லிம்களின் ஜனத்தொகை 12.4%மாக இருப்பதாலும், மஜ்லிஸ் கட்சி பொதுவாக அடிப்படைவாதத்தை ஆதரித்து வருவதாலும், இப்பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகமாகும் என்று தீவிரவாதம் பற்றி ஆயும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளார்கள்.

Vikruddhi father alleged that it was fake encounter, custodial death

Vikruddhi father alleged that it was fake encounter, custodial death

பொய்யான என்கவுன்டர், உண்மையில் போலீஸ் பாதுகாப்பில் அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்: தில்லியிலிருந்து வந்த ஒருவன் இவர்களை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது . ஆனால், விக்ருத்தீனின் தந்தை மற்றவர்கள், இதெல்லாம், பொய்யான என்கவுன்டர், உண்மையில் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும்போதே அவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டினர் . அகில இந்திய மஜ்லீஸ்-இ-முஷாவரத் என்ற அந்த அமைப்பின் தலைவர் ஜாஃபருல் இஸ்லாம், 09-04-2015 வியாழக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “மோதல் நடைபெற்றபோது, உயிரிழந்தவர்களின் கைகள் விலங்கிடப்பட்டிருந்ததாக பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர். சர்வதேச பயங்கரவாத அமைப்புகளால் கவரப்படாமல், இந்திய இளைஞர்கள் தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அளவுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசின் பாதுகாப்புப் படைகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்தக் கருத்தை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மூத்த அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். இது, கடந்த காலங்களில் நடைபெற்ற ஹாஷிம்புரா, பாட்லா ஹவுஸ் போன்ற போலி மோதல் சம்பவங்களைப் போன்றதாகும். இந்தச் சூழ்நிலை பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்”, என்றார் ஜாஃபருல் இஸ்லாம்.

பொறுப்புள்ள முஸ்லிம்கள் கேள்விகளைத் தவிர்ப்பது: குண்டுவெடிப்புகள் நடந்திருப்பது, கொள்ளைகள் நடந்தது, ஜெயிலிருந்து ஆயுதங்களுடன் தப்பியோடியது, போலீஸார் கொல்லப்பட்டது, சாதாரண அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது இவையெல்லாம் பொய்யா? இவர்களது உரிமைகளைப் பற்றி யாரும் பேசமாட்டார்களா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரது உரிமைகள் என்னாவது? ஐசிஸில் சேரத்துடிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளார்களே? அதேபோலத் தானே, இந்திய முஜாஹித்தீன் வேலை செய்து கொண்டு வருகிறது. பிறகு ஏன், எப்படி இந்திய முஸ்லிம்கள் அதனை ஆதரித்து வருகிறார்கள்? உள்ளூர் தீவிரவாதம் அதிகமாகி, பெருகிவருவது அவர்களுக்கு மகிழ்ச்சியாகவா இருக்கிறது? இன்னும் எத்தனை ஆண்டுகள் இத்தகைய குண்டுவெடுப்புகளை ஆதரித்துக் கொண்டிருப்பர்? தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய காரியங்களை ஏன் அவர்களது பெற்றோர்ருறவினர், மற்றோர் தடுப்பதில்லை? இவற்றையெல்லாம் விடுத்து, “சர்வதேச பயங்கரவாத அமைப்புகளால் கவரப்படாமல், இந்திய இளைஞர்கள் தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அளவுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசின் பாதுகாப்புப் படைகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ” என்று வாதிடுவது, அத்தகையவரை ஊக்குவிப்பதாகத்தான் அமையுமே தவிர, அமைதியை உண்டாக்காது.

2013 சிறையிலிருந்து தப்பி வந்ததிலிருந்து கொள்ளைகள், குண்டுவெடிப்புகள்: அக்டோபர் 2013ல் கந்த்வா என்ற சிறையிலிருந்து ஐந்து சிமி பயங்கரவாதிகள் தப்பித்ததிலிருந்து, தொடர்ந்து நடந்து வரும் திருட்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகள் முதலியவற்றை பொலீஸார் கவனித்து வருகின்றனர் . அக்டோபர் 7ம் தேதி காலை நேரத்தில் ஜெயில் பாதுகாவலர்களைத் தாக்கி துப்பாக்கிகள், வயலெஸ் செட் முதலியவற்றை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர் . இவர்கள் உபி, தெலிங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்குவங்காளம் என்று தொடர்ந்து தங்களது இடங்களை மாற்றிக் கொண்டு வருகிறார்கள். இதிலிருந்து அங்கங்குள்ள அவர்களது உறவினர்கள் மற்ற தொடர்பாளிகள் ஆதரித்து வருகின்றனர் என்றாகிறது. கர்நாடகாவில் ஹோஸ்பெட் என்ற இடத்தில் பார்த்தபோது, அடையாளம் காணப்பட்டனர். மெஹ்பூப் அப்பொழுது தனது தாய் நஜ்மாபீபியுடன் தங்கியிருந்தான்ளதாவது பெற்ற தாயே, மகனை தீவிரவாதத்தில் ஈடுபடாதே என்று கண்டிப்பதை விடுத்து, அவனுடனே பல இடங்களுக்குச் சென்று வருவது வியப்பாக இருக்கிறது. 2008ல் பாட்லா என்கவுன்டரில் முக்கியமான அதீப் அமீன் [Atif Ameen] என்பவனும் மற்றவர்களும் கொல்லப்பட்டவுடன் இந்திய முஜாஹித்தீனின் செயல்கள் கொஞ்சம் குறைந்திருந்தன. யாசின் பட்கல் [Yasin Bhatkal, ஆசதுல்லா அக்தர் [Asadullah Akhtar], தேஸின் அக்தர் [Tehsin Akhtar] மற்றும் ஹைதர் அலி [ Haider Ali] முதலியோர் இதற்குப் பிறகு கைதாக உதவியது.

வேதபிரகாஷ்
© 11-04-2015

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (5)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (5)

 

முஸ்லிம்களின் எச்சரிக்கை தினத்தந்திக்கு

சென்னை முஸ்லிம்களின் ஜிஹாதி ஆதரவு இருக்கும் போது ஏன் ஜிஹாதிஎதிர்ப்பு இல்லை?: சாதாரணமாக தமிழக முஸ்லிம்கள் மற்ற விசயங்களுக்கு, ஆயிரக்கணக்கானவர்களை சென்னைக்கு கூட்டி வந்து ஆர்பாட்டம் நடத்துவார்கள். “கசாபை தூக்கில் போடாதே” என்று முன்னரும் தூக்கில் போட்ட பிறகும் அவனை புகழ்ந்து சுவரொட்டிகள் ஒட்டுவார்கள். சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய் என்பார்கள், ஆனால், முஸ்லிம்கள் இப்படி தீவிரவாத செயல்களை செய்து கொண்டிருப்பதைக் கண்டிக்க மாட்டார்கள், தடுக்க மாட்டார்கள். ஆனால், இவ்விசயத்தில் அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறார்களே ஏன் என்று தெரியவில்லை. “தீவிரவதிகளாக மாறும் பெண்கள்” என்று 05-10-2014 தேதியிட்ட தினத்தந்தியில் ஒரு கட்டுரை வெளியிட்டவுடன், “ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்” என்ற முஸ்லிம் அமைப்பு, அதனை எதிர்த்து கண்டன கடிதத்தை அனுப்பியதாம். உடனே, 08-10-2014 அன்று, தினத்தந்தி, “கட்டுரையில் இடம் பெற்ற ஜிஹாத் பற்றிய தகவல் தவறானது. இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல”, என்று வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதாம். ஆனால், அதையும் விடாமல், “இதுபோன்ற தவறான அவதூறான செய்திகளை வெளியிடுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் முஸ்லிம் விரோதபோக்கை பத்திரிக்கையில் தொடர்வீர்களானால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை வன்மையான கண்டனுத்துடன் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (ஐமுமுக) எச்சரிக்கிறது”, என்று இன்னொரு கடிதத்தை 08-10-2014 அன்று அனுப்பியுள்ளது. அதாவது, அதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை.

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் - தினத்தந்திக்கு ஐமுமுக கடிதம்

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்திக்கு ஐமுமுக கடிதம்

ஐமுமுகவின் கடிதத்தின் நோக்கம் அலசப்படுகிறது: இந்தியாவில் அடிக்கடி கருத்து சுதந்திரம், எண்ணும் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் பேசப்படும், எழுதப்படும், விவாதிக்கப்படும். ஆனால், அந்த உரிமைகள், சுதந்திரங்கள் எந்த அளவிற்கு இருக்க வேண்டும், செய்பவர்களின் உரிமைகள், சுதந்திரங்களரென்ன, மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் என்ன என்பது பற்றி அவர்கள் பேசுவது, எழுதுவது, விவாதிப்பது இல்லை. “பாசிஸம்” என்று அடிக்கடி சொல்வார்கள். அதாவது ஒருவர் தனது கருத்தை வலுக்கட்டாயமாக அடுத்தவர் மீது திணிக்கும் முறை அதுவாம். பிறகு அப்படி சொல்பவர்களே, அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறதே? இதென்ன, அந்த போதிக்கும் மகாத்மாக்களுக்குப் புரியாமலா இருக்கும்? இங்கும் “ஐமுமுக”வின் கடிதம் பல விசயங்களை வெளிப்படுத்துகிறது. தினத்தந்தி அல்லது இன்னொரு ஊடகம் எந்த செய்தியை வெளியிட வேண்டும் அல்லது கூடாது என்பதனை இவ்வாறு முடிவெடுக்க முடியுமா? அல்லது தினத்தந்தி ஒரு செய்தியை வெளியிட்டு விட்டு, பிறகு அது தவறு, பொய் என்று சொல்லி இருந்துவிட முடியுமா?

ஐசிஸ் - ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் - சென்னை தொடர்பு

ஐசிஸ் – ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் – சென்னை தொடர்பு

மேலே குறிப்பிட்ட “ஐமுமுக”வின் கடிதத்தில் உள்ள சொற்றொடர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அவை கிழே கொடுக்கப் படுகின்றன?

  • தவறான அவதூறான செய்திகள் – இந்தியாவில் ஏன் தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், முஸ்லிம்கள் வெடிகுண்டு வெடிப்பு, கொலை முதலிய காரியங்களில் வன்முறைகளில், குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்களே. பர்த்வானில் கூட, ரெசூல் கரீம் வீட்டில் உள்ளூர் போலீஸ் தேடியபோது கிடைக்காத குண்டுகள்[1] என்.ஐ.ஏ தேடியபோது கிடைத்ததாமே? கிடைத்துள்ள ஒரு பென்-டிரைவில் குண்டுகள் எப்படி தயாரிப்பது என்ற விவரங்கள் இருக்கின்றன[2]. மால்டா மாவட்டத்தில் பத்து நாட்களில் மூன்று முறை குண்டுகள் வெடித்துள்ளன[3]. அந்த குண்டு தொழிற்சாலையில் 36 பேர் வேலை செய்துள்ளனர்[4]. முன்பே அந்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தியிருந்தால் குண்டுதயாரிப்பு முறைபற்றி விவரங்கள் கிடைத்திருக்கும்[5]. ஆனால், மாநில போலீஸார் அவற்றை அழித்து விட்டார்கள். அசாமில் பார்பேடா என்ற இடத்தில் ஆறு இளைஞர்கள் இவ்விசயத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்[6]. இவையெல்லாம் செய்திகளாக வந்துள்ளனவே, வந்துக் கொண்டிருக்கின்றனவே? அவையெல்லாம் தவறான செய்திகளா அல்லது அவதூறான செய்திகளா? காஷ்மீரத்தில் ஐசிஸ் கொடிகள் காட்டி, “நாங்கள் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவோம்”, என்று முழக்கமிடும் போது, மற்ற முஸ்லிம்கள் கண்டிக்கவில்லையேலொமர் அப்துல்லா மட்டும் அவர்கள் “முட்டாள்கள்” என்று சொல்லியிருக்கிறார், அதையும் அவதூறு என்று எச்சரிக்கப் படவில்லையே? அந்த “ஐசிஸ்”ஸுடன் சம்பந்தப் பட்டதுதானே “செக்ஸ் ஜிஹாத்” என்பதெல்லாம்.

  • முஸ்லிம் விரோதபோக்கு – ஊடகங்களில் பெரும்பான்மையாக “இந்துவிரோத போக்கு” தான் காணப்படுகின்றது, ஆனால், இவர்கள் “முஸ்லிம் விரோதபோக்கு” உள்ளதாக எடுத்துக் காட்டுகிறார்கள். முஸ்லிம்களுக்கு இந்து நண்பர்கள் இருக்கின்றார்கள், அவ்வாறே இந்துக்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு, ஒருவேளை மோமின் முஸ்லிம்களுக்கு, “என்னடா இழவு இது, இந்த காபிர் நண்பர்களுடன் இப்படி நட்பு வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே”, என்ற எண்ணம் வரலாம். இந்து நண்பர்கள், தாடி வைத்த – குல்லா போட்ட முஸ்லிம்களைப் பார்க்கும் போது, “ஐயோ, இவன் தீவிரவாதியாக இருப்பானோ, குண்டு வைத்து விடுவானோ?”, என்று அச்சத்துடன் நினைக்கலாம். இதற்கெல்லாம் யார் காரணம் என்று முஸ்லிம்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்துக்கள் முஸ்லிம்களை எதிரிகளாக நினைத்ததில்லை. ஆனால், முச்லிம்கள் அவ்வாறு நினைக்கவில்லை என்றால், முச்லிம்களே ஆகமாட்டார்கள், இங்குதான் அவர்களுடைய பிரச்சினை உள்ளது. அவர்கள் தாம் மற்ற எல்லோரையும் தமக்கு எதிரிகளாக நினைக்கிறார்கள். அந்த எதிர்மறை எண்ணங்கள் தாம், இப்படி அவர்களை நினைக்கச் செய்கிறது. இது அவர்களுடைய இறையியல் மற்ரும் மனோரீதியிலாக நடக்கும் போராட்டம். அதற்கு ஜிஹாதி தான் தீர்ப்பு என்று அவர்கள் நினைத்து செயல்படும் போது, அவர்கள் தாம் விரோதத்தை சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

  • பத்திரிக்கையில் செய்திகளை வெளியிடுவது – அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களை பெரும்பாலும் ஆட்டி வைப்பவர்கள் கிருத்துவர்கள், முஸ்லிம்கள் மற்றும் கம்யூனிஸ சித்தாந்திகள். இவர்கள் தங்களது சித்தாந்தம் வலுப்பட, ஆதரவாக இருக்க, மற்ற சித்தாந்திகளை எதிர்க்க, தங்களது பத்திரிகா தர்மத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்த வரையில், “செக்யூலரிஸம்” போர்வையில், அவர்கள் உண்மையில், பாரபட்சமான செய்திகளைத் தான் வெளியிட்டு வருகின்றனர். செய்திகளை விலைக்கு வாங்குவது, ஊடகங்களில் செய்திகளை விதைப்பது, வளர்ப்பது, பரப்புவது…..போன்ற வேலைகளை தாராளமாக செய்து வருகிறார்கள். அதற்காக இப்பொழுது நவீன முறையில் “ஜேர்னலிஸ்ட்” பள்ளிகள், கல்லூரிகள் எல்லாமே நடத்தி வருகிறார்கள். மேலும், அவர்களுடைய வியாபாரங்களை நேரிடையாகவோ-மறைமுகமாகவோ எந்த செயல், இயக்கம் அல்லது தனிமனிதன் செயல்படுகிறானோ, அதற்கு எதிராக செயல்படும். இந்த காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்களை ஆராய்ந்தாலே போதும், “பத்திரிக்கையில் செய்திகளை வெளியிடுவது” எவ்வாறுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

  • பத்திரிக்கையில் தொடர்ந்து வெளியிடுவது – ஒன்று உண்மையான செய்திகளை, ஒட்டு மொத்தமாக மனிதர்கள், பொதுவாக பாதிக்கப்படும் விசயங்கள் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். இக்காலத்தில் பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா போன்ற விசயங்களும் செய்திகளாக வரும். அதேபோல, தீவிரவாதம், பயங்கரவாதம், ஜிஹாதி போன்ற காரியங்கள் தொடர்ந்து நடந்து வரும்போது, அத்தகைய செய்திகளும் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். அதுதவிர மேலே குறிப்பிடப் பட்டபடி, அவர்களுடைய வணிகங்கள்-வியாபாரங்களை நேரிடையாகவோ-மறைமுகமாகவோ பாதிக்கப் பட்டால், அதை எதிர்க்கும் முறையில் பிரச்சார ரீதியில் செய்திகள் தோன்றும்.

  • விளைவுகள் கடுமையாக இருக்கும் – ஏற்கெனவே விளைவுகள் மிகக்கடுமையாகி விட்டதால் தான், இந்தியர்கள் ஜிஹாதைக் கண்டு எச்சரிக்கையாக இருக்கிறார்கள். பாகிஸ்தான் மதரீதியில் பிரிக்கப் பட்டு, அது ஒன்றாக இருக்கமுடியாமல், இரண்டாக பிரிந்தும், முஸ்லிம்கள் உண்மையினை புரிந்து கொள்ளாமல், இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டியிருக்கிறார்கள். காஷ்மீர் மட்டுமல்லாது வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் பெரும் பிரச்சினைகள் உருவாக்கப் பட்டு வருகின்றன. இதற்கு ஜிஹாதிகள் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கினர். இத்தனை குண்டுகள் வெடித்தும், மக்கள் இறந்தும், ரத்தம் பாய்ந்தும், மனித உறுப்புகள் சிதறியும்……அவர்கள் திருப்தியடையாமல், குண்டு தொழிற்சாலைல்கள் வைத்துக் கொண்டு, கடுமையான விளைவுகளைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் கண்ண்டிக்காமல், “விளைவுகள் கடுமையாக இருக்கும்” என்று மிரட்டுவதின் உள்நோக்கம் என்ன?

  • வன்மையான கண்டனுத்துடன் எச்சரிக்கை – எச்சரிக்கை ஜிஹாதிகளுக்கு இல்லாமல், அத்தகைய அபாயகரமான உண்மைகளை எடுத்துக் காட்டுபவர்களுக்கு ஏன் விடவேண்டும்? கண்டனமும் “இஸ்லாம் பெயரில்” நடக்கின்ற குற்றங்களை, தீவிரவாதங்களை நோக்கியில்லாமல், பாதிக்கப் பட்டவர்கள் மீது ஏன் தொடர்ந்து இருக்கவேண்டும்? அத்தகைய வார்த்தை தீவிரவாதம், சொல்-பயங்கரவாதம் போன்றவை ஏன் வன்மையுடன் இருக்கும் என்று அறிவித்துக் கொள்ள வேண்டும்? “வன்மையான கண்டனுத்துடன் எச்சரிக்கை” என்பது இப்படித்தான் மிரட்டலாக இருக்க வேண்டுமா?

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு - அல் - உம்மா

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு – அல் – உம்மா – நன்றி “சதர்ன் ஜிஹாதி.காம்”

இந்திய முஸ்லிம்கள் மாறவேண்டும்: “தாருல்-இஸ்லாம் : தாருல்-ஹராப்” “மோமின்-காபிர்”,ளிறைவனால் வெளிப்படுத்தப் பட்ட புத்தகத்தைக் கொண்டவர்கள் – புத்தகங்கள் இல்லாதவர்கள்” ….என பற்பல வேறுபாடுகளை வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் தான் இந்தியாவில் முஸ்லிம்-அல்லதவர்களை, குறிப்பாக இந்துக்களை அணுகி வருகின்றனர். இது நேர்-எதிர்மறை முறைகள், நல்லது-கெட்டது வழிகள், அறிவிக்கப்பட்ட-அறிவிக்கப்படாத தாக்குதல்கள் என்றபலமுறைகளில் நடந்து வருகின்றன. முன்பெல்லாம் முஸ்லிம்கள், இந்துக்களின் வீடுகளில் விசேஷங்கள் நடந்தால் முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள், ஆனால், இப்பொழுது தவிர்த்து வருகிறார்கள். காரணம் அடிப்படவாத முஸ்லிம்கள், “இந்து வீடுகளுக்குச் செல்லக் கூடாது. சாத்தான்களின் வழிபாட்டில் கலந்து கொள்ளக் கூடாது”, என்றேல்லாம் போதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், இந்துக்கள் இதுமாதிரி சொல்வதில்லை, ஏன், அவர்களுக்கு அத்தகைய எண்ணமே தோன்றுவதில்லை. இன்னும் சொல்லப் போனால், ஏழை முஸ்லிம்களைப் பார்த்தால் இரக்கப்படத்தான் செய்கிறார்கள், தானம் செய்கிறார்கள் (அதாவது அவர்கள் முஸ்லிம்கள் என்று பார்ப்பதில்லை).

அல்-உம்மா சிமி ஜிஹாதின் பல உருவங்கள்

அல்-உம்மா சிமி ஜிஹாதின் பல உருவங்கள்

முஸ்லிம்கள் பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க வேண்டும்: முஸ்லிம்களுக்கு இந்து நண்பர்கள் இருக்கின்றார்கள், அவ்வாறே இந்துக்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு, ஒருவேளை மோமின் முஸ்லிம்களுக்கு, “என்னடா இழவு இது, இந்த காபிர் நண்பர்களுடன் இப்படி நட்பு வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே”, என்ற எண்ணம் வரலாம். இந்து நண்பர்கள், தாடி வைத்த – குல்லா போட்ட முஸ்லிம்களைப் பார்க்கும் போது, “ஐயோ, இவன் தீவிரவாதியாக இருப்பானோ, குண்டு வைத்து விடுவானோ?”, என்று அச்சத்துடன் நினைக்கலாம். முதலில் இந்த மனப்பாங்கை நீக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கையை வளர்க்க வேண்டும். பயங்கரவாதம், தீவிரவாதம், ஜிஹாதித்துவம் பேசும், ஊக்குவிக்கும், பரப்பு முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள் கண்கானிௐகபட வேண்டும், அவர்கள் திருத்தப் படவேண்டும். அப்பொழுது தான் உண்மையான அமைதி, சாந்தி முதலியவை வரும், கிடைக்கும், தொடரும். பர்த்வானில் குண்டுகள் வெடித்த ஒலி இப்பொழுதுதான் மம்தா பேனர்ஜிக்குக் கேட்டிருக்கிறதாம்[7], அதுபோல, இங்குள்ள முஸ்லிம்களுக்கும் கேட்டால்[8] சரிதான்! காந்தி யெயந்தி அன்று குண்டுவெடித்து ஆட்கள் செத்து, இவ்வளது சோதனைகள் நடந்து முடிந்த பிறகு, “தீவிரவாதிகள், தீவிரவாதிகள் தாம்”, என்று அம்மையார் 17-10-2014 அன்றுதான் ஒப்புக் கொண்டுள்ளார். சரி சென்னை முஸ்லிம்கள் எப்பொழுது ஒப்புக் கொள்வார்கள்?

© வேதபிரகாஷ்

25-10-2014

[1] Earlier, a senior Bengal police officer told The Telegraph that departmental proceedings would be initiated against the team that had searched Rezaul Karim’s house in Burdwan and returned empty-handed on October 8. In the same house, the NIA and the NSG had yesterday found 39 home-made bombs.

[2] …….the Bengal police had also recovered a pen drive from a house in the area, that had a recording of an instructor explaining in Urdu and Bangla how to make bombs, improvised explosive devices and hand grenades.

http://www.ndtv.com/article/india/burdwan-blast-a-pen-drive-with-video-on-bomb-making-key-for-bengal-terror-investigation-608226

[3] http://www.ibtimes.co.in/third-blast-west-bengals-malda-district-10-days-611486

[4] http://www.ndtv.com/article/india/burdwan-blast-a-pen-drive-with-video-on-bomb-making-key-for-bengal-terror-investigation-608226

[5]   On October 3, CID had detonated the 55 IEDs found in the Khagragarh blast site.  October 5 itself, just three days after the Khagragarh IED explosions when all the samples had been destroyed by CID.

http://timesofindia.indiatimes.com/city/kolkata/Burdwan-39-bombs-detonated-explosives-samples-sent-for-testing/articleshow/44863732.cms

[6] http://indiatoday.intoday.in/story/burdwan-blast-nia-gets-custody-of-three-accused/1/395558.html

[7] http://www.telegraphindia.com/1141018/jsp/frontpage/story_18939287.jsp

[8] Left defenceless by the discovery of a cache of bombs that Bengal police had overlooked, chief minister Mamata Banerjee today said “terrorists are terrorists” and declared that “we do not have any problems with the NIA” which is probing the Burdwan blast.

முன்னாள் தமிழக சிமி தலைவர் அயல்நாட்டிலிருந்து பணம் பெற்றது, கைது, சிறை, பின்னணி!

ஒக்ரோபர் 3, 2011

முன்னாள் தமிழக சிமி தலைவர் அயல்நாட்டிலிருந்து பணம் பெற்றது, கைது, சிறை, பின்னணி!

 

முன்னாள் தமிழக சிமி தலைவர் கைது: கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி பிணையில்லாத கைது வாரண்ட் பிறப்பித்தபோது[1], வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்றதாக, மனிதநேய மக்கள் கட்சித்தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லா வரவில்லை. பிறகு அடுத்த நாள் சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்திரேட் கோர்ட் முன்னிலையில் ஆஜர் படுத்தப் பட்டார்[2]. ஏற்கெனவே குற்றாப்[ பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது[3]. வெ‌ளிநா‌ட்டி‌‌ல் இரு‌ந்து பண‌ம் பெ‌ற்றது தொட‌ர்பாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவுக்கு ஓரா‌ண்டு ‌சிறை‌த் ‌த‌ண்டனையு‌ம், 10 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. சி.பி.ஐ. காவ‌ல்துறை‌யி‌ன் லஞ்ச ஒழிப்பு பிரிவு சார்பில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில தலைவர் எம்.எஸ்.ஜவாஹிருல்லா, மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி மற்றும் எச்.சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்ட‌ன் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடரப்பட்டது. பிறகு இந்த ஆணை ரத்து செய்யப்பட்டது[4].

அல்-உம்மா, சிமி தலைவர்கள் உருமாறிய விதம்[5]: இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் அவ்வப்பொழுது, பெயர்களை மாற்றிக் கொண்டு, புதிய அவதாரங்களுடன் செயல்பட்டு வருகின்றன. சிமி தடை செய்யப்பட்டப் பிறகு, அதனுடைய தலைவர்கள், உறுப்பினர்களை தங்களுடைய அடையாளங்களை, அத்தகைய புதிய இயக்கங்கள், நிறுவனங்களுடன் சேர்த்து மாற்றிக் கொண்டனர். மனித நீதி பாசறை என்ற நிருவனத்தை முன்னாள் சிமி தலைவர் எம். குலாம் அஹ்மது ஆரம்பித்தார். அவர் அதிலிருந்து நீக்கப்பட்டபோது, தாஹ்ருல் இஸ்லாமிக் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.  இன்னொரு சிமித் தலைவர் எம்.எஸ். ஜவாஹிருல்லா முஸ்லீம் முன்னேற்றாக் கழகம் என்பதின் தலைவரானார். மற்றோருவர் எஸ்.எம்.பாக்கர் தௌஹீத் ஜமாத்தின் தலைவராக உருமாறினார். வங்கிக் கணக்குகள் முடக்கப் பர்டுவதால், கண்காணிக்கப் படுவதால், அவைகளும் மாற்றப் படுகின்றன. பணம் கொடுப்பவர்களும் வேறு வடிவத்தில், உருவத்தில் கொடுக்கிறார்கள். ஆனால், அததகைய பணம், நிதியுதவி தீவிரவாதத்திற்கு உபயோகப் படுத்தப்படும் போதுதான், மனித நேயம் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டாலும், உண்மை வெளிப்படத்தான் செய்கிறது.

 

அனுமதியின்றி அயல்நாடுகளிலிருந்து கோடிகள் பெற்றது: கடந்த 15.12.1997 முதல் 20.6.2000 வரை இவர்கள் செய்த குற்றம் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து ரூ.1 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரத்து 508 வசூலித்ததாகவும், இதற்கு முறையாக மத்திய அரசிடமோ, ரிசர்வ் வங்கியிடமோ அனுமதி பெறவில்லை என்றும் மேற்கண்ட 5 பேர் மீதும் வெளிநாட்டு பணம் முதலீட்டு ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் குற்றம்சா‌ற்‌றி வழக்கு போடப்பட்டது[6]. “கோயம்புத்தூர் முஸ்லிம் நிவாரண நிதி” என்ற பெயரில், சட்டத்திற்குப் புறம்பாக, திட்டமிட்டு பணம் பெற்று “பேங்க் ஆப் இந்தியா” சென்னை கிளையில் பணத்தைப் போட்டு வைத்ததை கண்டுபிடித்தது[7]. இந்த வழக்கில் சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் ‌நீ‌திப‌தி பி.மோகன்தாஸ் தீர்ப்பு வழங்கினார்[8]. அந்த தீர்ப்பில் ஜவாஹிருல்லாவுக்கும், ஹைதர் அலிக்கும் தலா ஓரா‌ண்டு ‌சிறை‌த் தண்டனையும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் ‌சிறை‌த் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்[9].

வழக்குகள் நிலுவையில் உள்ளபோது வெற்றிப் பெற்று எம்.எல்.,ஏ ஆனது: மற்ற கட்சிக்காரர்கள் என்றால், உடனே அவர் அந்த சவழக்கில் சிக்கியுள்ளார் என்றெல்லாம் பட்டியல் இல்ல்டுக்ல் காட்டும். ஆனால், இவர்கள் விஷயத்தில் அவர்களது பின்னணி கொடுக்கப்படவில்லை. மேலும் இவர்கள் அனைவருக்கும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் அபராதமும், ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரமும், சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா ரூ.40 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது) விதித்து தீர்ப்பு வழங்கினார். தண்டனை பெற்றவர்களில் எம்.எச்.ஜவாஹிருல்லா மனிதநேய மக்கள் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் எ‌ன்பது ‌நினை‌வி‌ல்‌ கொ‌ள்ள‌த்த‌க்கது. தண்டனை பெற்றவர்கள் 30 நாட்களுக்குள் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய கோர்ட்டில் அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தண்டனை பெற்றவர்கள் அனைவரும் தலா இரு நபர் ஜாமீனில் உடனடியாக விடுதலை செய்யப்பட்டனர்.


[2] June 14 (PTI) Rameswaram MLA MH Jawahirullah and four others appeared in a court today, a day after non-bailable warrant (NBW) was issued against them in connection with a case relating to alleged violation of Foreign Contributions Regulation Act. Additional Chief Metropolitan Magistrate, Egmore, R Killivalavan had issued the warrants against MMK President Jawahirullah and four others yesterday in a case in which they allegedly collected Rs two crore in foreign contributions in the name of ”Coimbatore Muslim Relief Fund,” in violation of laws.

[7] CBI had registered a case against Jawahirullah, representing Ramanathapuram Assembly Constituency, S Hyder Ali, H Sayed Nizar Ahmed, G M Shiek and Nalla Mohmed Kalanjim, all authorised signatories of ‘Coimbatore Muslim Relief Fund’, alleging that they entered into a criminal conspiracy to form an association to accept foreign contributions without prior permission and registration with the central government between 1997 and 2000.

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

ஜூலை 17, 2011

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

 

குண்டு தயாரிப்பு விவரம்: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[1]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது. இப்பொழுதும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[2]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[3]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[4]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[5]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்து இருந்தது[6]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுக்கிறது.

 

வழக்கம் போல முரண்பட்ட வெளியிடப்படும் அறிக்கைகள்: ஆளும் சோனியா கட்சித் தலைவர்கள் சட்டப்படி திவிரவாதிகளுக்கு உதவும் வகையில் முன்னுக்குமுணாகப் பேசுவது, அறிக்கைகள் விடுவது தொடர்கிறது. அவை முழுவதுமாக பொய் அல்லது நீதிமன்ற அவமதிப்பு அல்லது வழக்கை திசைத்திருப்பும், பாதிக்கும் என்று தெரிந்தே செய்து வருகிறார்கள். மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மும்பைக்கு 13-07-2011 நள்ளிரவில் வந்த ப.சிதம்பரம், குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் பார்த்து நலம் விசாரித்தார். 14-07-2011 அன்று காலை ப.சிதம்பரமும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், “இதுவரை 17 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டுள்ளது. அது யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 131 பேர் காயமடைந்து 13 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். 82 பேரின் நிலைமை ஸ்திரமாக உள்ளது. 23 பேர் மிகவும் கடுமையான காயங்களைச் சந்தித்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 

ஒன்றும் தெரியாமல் உள்துறை அமைச்சர் இருப்பதைவிட இல்லாமலேயே இருக்கலாம்: “நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை எச்சரிக்கை எதுவும் எங்களுக்கு இல்லை. மாநில உளவுத்துறையோ அல்லது மத்திய உளவுத்துறையோ இதுகுறித்து எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. கிட்டத்தட்ட 30 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் தீவிரவாதம் திரும்பியுள்ளது. மும்பை மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். தாதர், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் மூன்று குண்டுகள் வெடித்தன. மூன்று இடங்களையும் நான் நேரில் பார்த்தேன். அதில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாதரில் நடந்தது சிறிய அளவிலான குண்டுவெடிப்பு. மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரவு முழுவதும் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக அலசி ஆராய்ந்துள்ளனர். தடவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

 

அம்மோனியம்நைட்ரேட்உபயோகப்படுத்தப்பட்டிருப்பது: “மகாராஷ்டிர தடவியல் ஆய்வகம் பல முக்கிய தொடக்க நிலை ஆதாரங்களை சேகரித்துள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன. அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்தப்படவில்லை. அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. யார் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. யாரையும் குறிப்பிட்டு நாங்கள் சந்தேகிக்கவில்லை. மாறாக, அனைவரையுமே சந்தேகிக்கிறோம். அனைத்து தீவிரவாத குழுக்களின் தொடர்புகள் குறித்தும் நாங்கள் விசாரிக்கிறோம். அனைத்து விதமான தகவல்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சமீபத்தில் புனேயில் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல மும்பையில், சிபிஐ மாவோயிஸ்ட்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். மும்பையை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் அவர்கள் குறி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் மும்பை அதிக அளவில் குறி வைக்கப்படுவது பெரும் வேதனை தருகிறது”, என்றார் ப.சிதம்பரம்[7].

 

உள்ளூர் அல்லது வெளியூர் தீவிரவாத இயக்கமா? இருப்பினும் மும்பை எதிர்-தீவிரவாத குழு மெத்தனமாகவே இருந்துள்ளது. முந்தைய குண்டுவெடிப்புகளைப் போல, இப்பொழுது இந்திய-முஜாஹித்தீன் போன்ற எந்த தீவிரவாத இயக்கமும் ஈ-மெயில் அனுப்பி பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்திய-முஜாஹித்தீன் 14 இளைஞர்களை இந்த மூன்று குண்டுவெடிப்புகளில் உபயோகப்படுத்தியுள்ளதாக யூகிக்கப்படுகிறது.  ராஞ்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டபோது, சிமியின் அங்கத்தினர்கள் அத்தகைய வேலைச் செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. பெங்களூர் மற்றும் ஹைதரபாத் நகரங்களிலுள்ள அவர்களது கூட்டாளிகள் உதவியுள்ளார்கள். பிடிக்கப்பட்டுள்ள சல்மான் என்பவன் முன்னமே அவர்கள் அத்தகைய குண்டுவெடிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளான்[8]. சிறிய இடங்களை ரகசியமாகக் கண்காணிக்கும் கேமராக்களில் பிடிபட்டுள்ள காட்சிகளினின்று, குறிப்பிட்ட மூன்று நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவன் முழுவதுமாக அடையாளங்காணபாட்டுள்ளான். அவர்களுடைய படங்கள் வரையப்படபோகின்றன. இருப்பினும், இம்முறை அவர் வெளியிடப்படாது என்று சொல்லப்படுகிறது. முந்தைய 26/11 குண்டுவெடிப்புகள் போல 13/7 அன்றும் உள்ளூர்வாசிகள் உதவியுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது[9].

 

சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள்: மும்பையில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. குண்டுவெடிப்புக்கு முன்பு 3 மர்ம ஆசாமிகள் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடியது தொடர்பான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது[10]. இந்த தகவலை மகாராஷ்டிர முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்திருக்கிறார். அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இந்த தகவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.தெற்கு மும்பை பகுதியில் தாதர், ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் உட்பட 3 இடங்களில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். 133 பேர் காயமடைந்தனர்.

 

செல்போனில் பேசிக்கொண்டிருந்த அந்த மூவர்: இது தீவிரவாதிகளின் செயல் என்பது உறுதி செய்யப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் கடைகள் மற்றும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒபரா ஹவுஸ் அருகே கவு ஹள்ளி என்ற இடத்தில் வீடியோ கேமராவில் 3 பேர் அந்தப் பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடமாடியதுகண்டுபிடிக்கப் பட்டது. அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் செல்போன் மூலமே சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனவே இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியன் மொஜாகிதீன் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். ஆனால் இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசிடம் பிடிபடாமல் இருக்க செல்போனை கடந்த சில மாதங்களாக பயன்படுத்துவதில்லை. எனவே இந்த தாக்குதலை நடத்தியவர்கள் வேறு தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

மூவரில் ஒருவன் இறந்து விட்டானா? மற்றொரு இடத்தில் கிடைத்த வீடியோ காட்சிகளை போலீசார் பார்த்தனர். அதில் ஒருவர் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாக வாகன நிறுத்த இடத்தை நோக்கி செல்கிறார். சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் குண்டு வெடிக்கிறது. அந்த இடத்தில் மின்சார ஒயர்கள் பின்னப்பட்டு ஒருவர் பிணமாக கிடந்தார். வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக அது இருக்கலாம் என்று தற்போது போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் கொண்டு சென்ற பையை போன்று அந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. எனவே அவர் பையில் வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக இருக்க வேண்டும் என்று புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டை வைத்து விட்டு அவர் திரும்புவதற்குள் முன்கூட்டியே வெடித்து விட்டதால் அவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

 

மும்பை குண்டுவெடிப்பு-குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து நடந்த தாக்குதல்? குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து மும்பையில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது[11]. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலட், கான்டிவ்லி, பொரிவிலி ஆகிய பகுதிகளைக் குறி வைத்து நடத்தப்பட்டது. 13-07-2011 மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளும் குஜராத் சமுதாயத்தினர், குறிப்பாக வர்த்தகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்திருக்கிறது. எனவே இந்த முறையும் குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஜவேரி பஜார், கேட்வே ஆப் இந்தியா ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல 2003ல் கட்கோபர், 2003 மார்ச்சில் முலுந்த், 2003 ஜனவரியில் விலே பார்லே ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இங்கும் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 2003 சம்பவத்திற்குப் பின்னர் பேசிய மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, குஜராத்திகளை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

 

தீவிரவாதிகளின் இலக்கு ஏன்? அதேசமயம், குஜராத்திகளை குறி வைத்துத்தான் பெரும்பாலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதாக கூறுகிறார் மும்பை மாநகர குஜராத்தி சமாஜ் தலைவர் ஹேம்ராஜ் ஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், ஜவேரி பஜார் பகுதி கமிஷனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. ஓபரா ஹவுஸ் பகுதியில் உள்ள கவ் காலி, தாதரில் உள்ள கபூதர்கானா ஆகியவை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாகும். மாலை நேரங்களில் இங்குமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஷா. சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் விரேன் ஷா கூறுகையில், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் பகுதிகளில் தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்திகள்தான். இங்கு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதைப் பார்க்கும்போது குஜராத்திகளைக் குறி வைத்தே தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேசமயம், மக்கள் நெருக்கமான பகுதிகளை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும் கருத முடியும் என்றார்.

 

மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்[12]: மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு உயர் அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் தொட ர்பு சாதனங்கள் அனைத்தும் முழு மையாக செயலிழந்து விட்டன என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சவாண் மேலும் கூறுகையில், குண்டு வெடிப்பு நடந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் காவல் துறை உயர் அதிகாரிகளையோ, நிர்வாக உயர் அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

 

தீவிரவாதிகளுக்கு துணையாக அவ்வாறு நிறுவனங்கள் செய்துள்ளனவா? வேறு எந்த வகை சாதனங்களையும் தகவல் தெரிவிக்க பயன்படுத்த இயலாத நிலை இருந்ததால், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. எனவே, இதுபோன்ற நேரங்களில் செயற்கைகோள் துணையுடன் இயங்கும் தொலைத் தொடர்பு சாதனங்களையோ அல்லது எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் அமைந்த சாதனங்களையோ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. எனவே, இதுகுறித்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார்.

 

26/11ற்கு பின்னரும் நவீனப்படுத்தப்படவில்லை என்று புலம்பும் மஹாராஷ்ட்ர முதல்வர்: அவர் மேலும் கூறுகையில், காவல்துறையினருக்கான சாதனங்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஆனால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட ராம் பிரதான் குழு பரிந்துரைத்த எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. காவல் துறையை நவீனப்படுத்துவதற்கான குழு பரிந்துரைகள் எதையும் நாம் நினைத்த அளவில் அமல்படுத்த இயலவில்லை என்றார். உளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் உரிய தகவல் தரவில்லை என்பதை ஏற்க முடியாது என்ற சவாண், அதுபற்றி கூறுகையில், ஆனால் அப்பிரிவின் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றார் சவாண்.


[1] இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.

தமிழகத்து ஜிஹாதி தீவிரவாதி பிரான்ஸில் பிடிபட்டான்: உள்ளூரில் வளரும் தீவிரவாதத்தின் அபாயம் அதிகரித்து வருகிறது!

மே 25, 2011

தமிழகத்து ஜிஹாதி தீவிரவாதி பிரான்ஸில் பிடிபட்டான்: உள்ளூரில் வளரும் தீவிரவாதத்தின் அபாயம் அதிகரித்து வருகிறது!

உள்ளூர் தீவிரவாதமா அல்லது வீட்டுத் தீவிரவாதமா? தமிழகத்தில் தீவிரவாதிகளுக்கு அமைதியாக தங்க இடம் கிடைக்கிறது என்று மறுபடியும் தெரியவந்துள்ளது. ஆனால், சிதம்பரம், உள்ளூரில் வளரும் தீவிரவாதத்தின் அபாயம் அதிகரித்து வருகிறது என்கிறார்! [Threat of home-grown terror rising: Chidambaram]. அதாவது, இதை உள்ளூர் தீவிரவாதம் என்பதா அல்லது வீட்டுத் தீவிரவாதம் / வீட்டிலே வளர்த்த தீவிரவாதம்[1] என்பதா என்று தெரியவில்லை.

தமிழகத்து ஜிஹாதி தீவிரவாதி: முகமது நியாஸ் அப்துல் ரஷீத் – திருச்சியைச் சேர்ந்த இவன், தன்னுடைய 21வது வயதில் சிமியில் சேர்ந்துள்ளான். கணினி மென்துறையில் வல்லுனரான, நியாஸ் மற்றவர்களின் இணைதளங்களில் நுழைவதிலும், கைத்தேந்தவனாம். எப்படிப்பட்ட இணைதளத்தையும் உடைத்துவிடும் ஆற்றல் பெற்றவனாம். அதுமட்டுமல்லாது, வெடிகுண்டுகள் போன்றவை தயரிக்க, செயல்பட பல கணினி புரோக்ராம்களை தயாரித்துள்ளானாம்[2]. தந்தை மலேசிய நாட்டு பிரஜையாக உள்ளார். சகோதர்கள் கடாரில் வசிக்கின்றனர். தாயார் பாத்திமா (65), புதியதாகக் கட்டப்பட்டுள்ள, கூத்தப்பன்பட்டி என்ற இடத்தில் மேலூரில் தனியாக வசித்து வருகிறார்[3]. ஆறு மாதங்களுக்கு முன்பு அவன் இங்கு வந்தாதாகவும், தாயுடன் இரண்டு வாரம் தங்கியிருந்து, சென்றுவிட்டதாக அருகிலுள்ளோர் கூறுகின்றனர். தமிழகத்திலிருந்து, அவன் இரண்டு பாஸ்போர்ட்டுகளைப் பெற்ருள்ளதாகத் தெரிகிறது. ஒன்று திருச்சி சரகத்திலிருந்து, இன்னொன்று, இடம் தெரியாதலால், அது போலியாக இருக்கும் என்று தெரிகிறது[4].

தமிழக போலீஸார் தூங்கினார்களா? தமிழக போலீஸார், வழக்கம் போல கோட்டை விட்டதுடன், அவனைப் பற்றி விரோதமான அறிக்கைகள் / தகவல்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளாரர்களாம்[5]. வழக்கம் போல, உள்துறை அமைச்சர், நாளுக்கு நாள் உள்ளூரில் வளரும் தீவிரவாதம் பெருகிவருகிறது என்று சொல்லியுள்ளார்[6]. வழக்கம் போல தி ஹிந்துவின் செய்தி வெளியீடே அலாதியானது தான். முதலில் “பாரிஸில் கைது செய்யப் பட்ட மனிதன் மதுரையைச் சேர்ந்தவனா?” என்று செய்தி வெளியிட்டது[7]. பிறகு வரும் செய்தியில், ரஷிதைப் பற்றி இந்தியா பிரான்சிடம் விவரங்களைக் கேட்கிறது, என்று செய்தி வருகிறது[8]. உண்மையில், பிரான்ஸ் இந்தியாவிடமிருந்து, அவனைப் பற்றி விவரங்களைக் கேட்டுள்ளது. இவன் தனது தாயாரது தொலைபேசியை உபயோகித்து, பாகிஸ்தானிலுள்ள தனது தொடர்பாளிகளுடன் பேசியுள்ளான். பிரான்ஸ் இதைப் பற்றி விவரங்களைக் கொடுத்துள்ளது. ஆனால், அவரது தாயார் அதை மறுப்பது போன்று தமிழில் சொல்வதை தொலைகாட்சிகளில் காட்டப்படுகிறது.

அல்ஜீரியாவிலிருந்து பிரான்சுக்கு திரும்பி வந்த முகமது நியாஸ் அப்துல் ரஷீத் கைது: பிரான்ஸில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட மதுரை மேலுரைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்[9].  பிரான்ஸில் தீவிரவாதப் பயிற்சி மேற்கொண்டதாக கடந்த மே 10ம் தேதி 6 பேரை [Charles de Gaulle Airport ] அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது நியாஸ் அப்துல் ரஷீத் என்பவரும் அடக்கம். அல்ஜீரியாவிலிருந்து திரும்பி பிரான்சுக்கு வந்த நிலையில் சார்லஸ் டி கால் விமானநிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார்[10]. பிரான்ஸைச் சேர்ந்த மூவரை பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களுக்கு இவர் அனுப்பி வைத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. ரஷீத் குறித்து பிரான்ஸ் போலீசார் மத்திய அரசுக்குத் தகவல் அனுப்பியதைத் தொடர்ந்து அவர் குறித்து மத்திய உளவுப் பிரிவினரும் தமிழக உளவுப் பிரிவினரும் விசாரணையில் இறங்கியுள்ளனர். தாஹிர் ஷைஜாத் கைது செய்யப் பட்டவுடன், உமர் படேக் என்ற தீவிரவாதியுடனான அவனது தொடர்பு தெரியவந்துள்ளது. பாலி வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப் பட்டுள்ள அவன், அபோதாபாதில் கடந்த ஜனவரி மாதம் பிடித்து கைது செய்துள்ளனர்[11].
இவர் மதுரை மேலூரைச் சேர்ந்தவர் என்றும், தனியார் பொறியியல் படித்தபோது சிமி இயக்கத்துடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த தீவிரவாதியின் கூட்டாளிகளுடன் இவர் நெருக்கமாக இருந்தது தெரியவந்தபோதே இவரை மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. கண்காணிக்க ஆரம்பித்ததாகவும், 3 மாதங்களுக்கு முன் இவர் பிரான்சிலிருந்து மேலூர் வந்து 10 நாட்கள் தங்கியிருந்தபோதும் கண்காணிப்பிலேயே இருந்தார் என்றும், அந்த நேரத்தில் இவரது நடவடிக்கைகளில் தீவிரவாத செயல்கள் ஏதும் இல்லாததால் இவரை அப்போது ஐ.பி. கைது செய்யாமல் விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவிற்குத் தெரியாதது, எப்படி பிரான்ஸிற்கு தெரிந்துள்ளது? ஆனால், பிரான்சில் இவர் எந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டார் என்ற விவரம் ஐ.பியிடம் இல்லை. இப்போது பிரான்ஸ் போலீசார் தந்துள்ள தகவல்களின்படி இவரது பின்னணியை ஐ.பியும் மாநில உளவுப் பிரிவினரும் மீண்டும் தோண்ட ஆரம்பித்துள்ளனர். இவர் மீது தமிழகத்தில் எந்த வழக்குகளும் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், மெக்கனிக்கல் என்ஜினியரான இவர் அல்-கொய்தா அமைப்புடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும், பாகிஸ்தானில், குறிப்பாக பின்லேடன் கொல்லப்பட்ட அபோடாபாத் நகரில் தீவிரவாத அமைப்பினருடன் இவர் தொடர்பு கொண்டிருந்ததாகவும் பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பிரான்ஸ் வாலிபர்கள் மூவரை தீவிரவாத பயிற்சிக்காக இவர் பாகிஸ்தானுக்கு அனுப்பியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது[12].

போலீஸார் திரட்டி வருகின்றனர்: இவர் குறித்து முழுமையாக விசாரித்து தகவல் தருமாறு பிரான்ஸ் கோரியுள்ளது. இதையடுத்து ரஷீத்தின் குடும்பத்தைப் பற்றிய முழுமையான தகவல்களைப் போலீஸார் திரட்டி வருகின்றனர். ரஷீத் குடும்பத்தினர் கடைசியாக திருச்சியில் தங்கியிருந்ததும், அவர் தனது பாஸ்போர்ட்டை திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் தான் பெற்றார் என்றும் தெரியவந்துள்ளது. ஆனால் அவரிடம் போலி பாஸ்போர்ட் ஒன்றும் இருக்கலாம் என்றும் தெரிகிறது. பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு பலமுறை சென்று வந்துள்ள ரஷீத்துக்கு, ஷியா எதிர்ப்பு இயக்கமான ஜுன்துல்லா (Jundullah) என்ற அமைப்பின் மூலமாக அல்-கொய்தா இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்பட்டதாக பிரான்ஸ் உளவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

முகமது நியாஸ் அப்துல் ரஷீத் பற்றி உள்துறை அமைச்சர் கூறியுள்ளது[13]: தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக பிரான்சில் கைது செய்யப்பட்ட மதுரை வாலிபர் – ரஷீத் ஆப்கானிஸ்தானில் ஜிகாத் பயிற்சிக்காக மொராக்கோ, பாகிஸ்தான், துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த 3 பிரான்ஸ் வாலிபர்களை அனுப்பி வைத்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். டெல்லியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், சிமி இயக்கத்துடன் தொடர்புள்ள இவர் வேலைக்காக  2008-ம் ஆண்டில் பிரான்ஸ் சென்ற அவர்[14],  பிரான்ஸ் சென்று, அங்கு தீவிரவாத கொள்கை கொண்டவர்களுடன் நெருக்கமாகி அவர்களுக்கு உதவியுள்ளார். ஆப்கானிஸ்தானில் ஜிகாத்[15] பயிற்சிக்காக மொராக்கோ, பாகிஸ்தான், துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த 3 பிரான்ஸ் வாலிபர்களை அனுப்பி வைத்துள்ளார். இவரது வலையில் இந்தியர்கள் யாரும் சிக்கவில்லை. முதலில் இவரது குழு மாதம் ஒரு முறை சந்தித்து வந்துள்ளது. பின்னர் அடிக்கடி சந்தித்து தீவிரவாத பயிற்சி-தாக்குதல்கள் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களிடம் பயிற்சி பெற ஆட்களை அனுப்பியதாக பிரான்ஸ் போலீசாரிடம் ரஷீத் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த விஷயத்தில் பிரான்ஸ் முழுமையாக விசாரித்து முடிக்கும் வரை ரஷீதுக்கு இந்தியத் தூதரக உதவிகள் ஏதும் வழங்கப்படாது. விசாரணையின் முடிவைப் பொறுத்தே மத்திய அரசின் செயல்பாடு இருக்கும். ரஷீத் விஷயத்தில் பிரான்சும் இந்தியாவும் தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து வருகின்றன. தனது 21 வயதிலிருந்தே தீவிரவாத எண்ணங்களில் மூழ்கியுள்ளார் ரஷீத் என்பது உளவுத் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார் சிதம்பரம்.

வேதபிரகாஷ்

25-05-2011


[1] வீட்டு சமையல் / வீட்டு ஊறுகாய் போல, இப்படியும் சொல்லலாமா என்று சிதம்பரம் தான் கூற வேண்டும்.

[7] Man detained inParis is fromMadurai?,  MADURAI, May 24, 2011

http://www.thehindu.com/news/national/article2043102.ece

[8] India seeks report from France on Rashid; http://www.hindu.com/2011/05/25/stories/2011052563090100.htm

[15] முன்பு ஜிஹாத் பற்றிய எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளேன் என்று சொன்ன சிதம்பரம், இப்பொழுது, புதியதாக எந்த ஜிஹாதைப் பற்றி சொல்கிறார் என்று தெரியவில்லை.