Posted tagged ‘சித்தராமைய்யா’

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (4)

நவம்பர் 12, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (4)

Playwright and Jnanapith awardee Girish Karnad talks to the media at his house in Bengaluru on Wednesday-10-11-2015-. Photo- Bhagya Prakash. K

Playwright and Jnanapith awardee Girish Karnad talks to the media at his house in Bengaluru on Wednesday-10-11-2015-. Photo- Bhagya Prakash. K

ஜெயந்தி கூட்டத்தில் பேசிய விவரங்கள்: சித்தராமைய்யா, கிரிஸ் கார்னாட், பரகூரு ராமசந்திரப்பா, கோ சன்னபசப்பா, பேராசியர் சியிக் அலி, என்.வி. நரசிம்மைய்யா, விரப்ப மொய்லி, முதலியோர் திப்புவைப் புகழ்ந்து பேசினர். கிரிஸ் கார்னாட், திப்பு ஒரு இந்துவாக இருந்திருப்பின், சிவாஜி போன்று இடத்தைப் பெற்றிருப்பான், போற்றப்பட்டிருப்பான் என்று ரீதியில் பேசினார்[1]. அதுமட்டுமல்லாது, “தீபாவளி நாங்கள் திப்பு ஜெயந்தியை கொண்டாடுகிறோம், இதை நாங்கள் பிஹார் நாள் என்று கூட கொண்டாடுகிறோம்”, என்றெல்லாம் தொடர்ந்து பேசினார். “பெங்களூரில் தேவனஹல்லி விமானநிலையம், கெம்பகௌடாவுக்குப் பதிலாக திப்பு சுல்தான் பெயர் வைத்திருக்கலாம்”, என்றெல்லாம் கூட பேசினார்[2]. சித்தராமைய்யாவும் அவர் பேசியதை ஆமோதித்துப் பேசினார். மற்றவர்களும் திப்பு சுல்தான் செயூலரிஸ ஆட்சியாளர், கோவில்களுக்கு மானியம் வழங்கினான் போன்ற வழக்கமான விசயங்களை அள்ளி வீசினர். அவர்கள் பேசியதெல்லாம் திப்பு ஜெயந்தியை நடத்தினர் என்பதை விட, இந்த சாக்கை வைத்துக் கொண்டு, பிஜேபியைத் தாக்குவதும், இந்துக்களைக் கிண்டல் செய்வதுமாக இருந்தது. இவற்றையெல்லாம் மற்றவர்கள் எப்படி பொறுத்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.

BJP workers protest against Girish Karnads statement in Bengaluru on Wednasday- 10-11-2015 Photo- Sudhakara Jain

BJP workers protest against Girish Karnads statement in Bengaluru on Wednasday- 10-11-2015 Photo- Sudhakara Jain

தேவனஹல்லி விமானநிலையம், கெம்பகௌடாவுக்குப் பதிலாக திப்பு சுல்தான் பெயர் வைத்திருக்கலாம்: கிரிஸ் கார்னாட் இவ்வாறு சொன்னது, எல்லோரையும் உசுப்பி விட்டுள்ளது.  முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் தேவ கவுடா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கிரிஷ் கர்னாட் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அவரது உளறல்களுக்கு எதிராக நிறைய பேர் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தனர்[3]. குறிப்பாக கன்னட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தபோது தான்[4], தான் பேசியதனால் ஏற்பட்டுள்ளா பாதிப்பை உணர்ந்தார் போலும். இதனால், அரண்டு போன கிரிஸ் கார்னாட் புதன் கிழமை 11-11-2015 அன்று[5], “என்னுடைய விமர்சனத்தினால், யாராவது புண்பட்டிருந்தால், நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்……..நான் என்ன பலனைப் பெறப்போகிறேன் (அவ்வாறு விமர்சனம் செய்ததனால்)”, என்று சொன்னதிலிருந்தே, அவரது குற்ற உணர்வும், அதிகப்பிரசங்கித் தனமாக உளறியதும் மற்றும் விரக்தியும் வெளிப்பட்டது. மேலும், சித்தராமையா, “கிரிஸ் கார்னாட் அவ்வாறு பேசியது தப்புதான். …..அவர் ஏன் அத்தகைய விமர்சனம் செய்தார் என்று எனக்குத் தெரியாது. அவர் அவ்வாறு பேசியபோது அங்கிருந்தேன். அவர் சொன்னதை மறுத்துப் பேச நினைத்தேன். ஆனால், நான் செய்யவில்லை”, என்று சொன்னதிலிருந்துதான்[6], பிரச்சினையை எந்த அளவுக்கு வகுப்புவாத, ஜாதீய முறையில் மாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்பியது வெளிப்படுகிறது. அங்கு விழாவின் போது, இவர் ஆதரித்துப் பேசியைதைக் கவனிக்க வேண்டும். ஆனால், இப்பொழுது, “அந்தர்-பல்டி” அடிக்கிறார்! அடித்தது, தங்களையே திரும்ப அடிக்கும் நிலை வந்ததை உணர்ந்து ஜகா வாங்கியிருப்பதும் தெரிகிறது.

Tipu jayanti celebrated in dhakshina karnataka.2

Tipu jayanti celebrated in dhakshina karnataka.2

தக்ஷிண கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டது: கர்நாடகாவில் இவ்வாறு பல இடங்களில் எதிர்ப்பு, போராட்டங்கள் என்று நடந்த வேளையில், தக்ஷிண கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டது[7]. தக்ஷிண கர்நாடகாவில் முஸ்லிம்கள் அதிகம். மேலும், இதற்கு சோசியல் டெமாக்ரெடிக் பார்ட்டி [SDPI] என்ற முஸ்லிம் அடிப்படைவாத இயக்கம் ஆதரவு தெரிவித்து, பிரச்சாரம் செய்தது. அவ்விழாவில் பேசியவர்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்றிருந்தாலும், சொல்லி வைத்தால் போல, திப்புப் புராணம் பாடியுள்ளது, தமாஷாக இருந்தது எனலாம். அதற்குள், மரடிகேரியில் முஸ்லிம்கள் அனுமததீல்லாமல் ஊர்வலம் நடத்தியுள்ளதாக பிஜேபி குற்றஞ்சாட்டியுள்ளது[8]. ஒரு நபரைப் பற்றி சர்ச்சைகள் உள்ளான என்றபோது, அறிந்தே, அந்நபரது ஜெயந்தி என்று அரசே தீர்மானித்து நடத்தியிருப்பது, மக்களை தூண்டிவிடும் போக்குதான் காணப்படுகிறது. மேலும் பொறுப்புள்ளவர்கள், பொறுப்பற்ற நிலையில் பேசியும் தெளிவாகியுள்ளது. மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றால், ஞானபீடம் விருது வாங்கியவருக்குஙென்ன பேசுகிறோம் என்று தெரியாமலா பேசினார். இவ்வளவு நடந்தும், ஒரு முஸ்லிம் சார்புடைய தளம், “திப்பு ஜெயந்தியை” ஆதரித்து பதிவு செய்துள்ளதை கவனிக்கவும்[9]. ஆற்றோரம்.காம் என்ற தளம் சொல்லியிருப்பதை அப்படியே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Tipu jayanti celebrated in dhakshina karnataka.1

Tipu jayanti celebrated in dhakshina karnataka.1

திப்பு ஜெயந்திவிழாவை சிறப்பாக கொண்டாடி முடித்த சித்த ராமையாகாவி கயவர்களின் சதியை முறியடித்த கர்நாடக அரசு! சங்பரிவாருக்கு அஞ்சாமல்  “திப்பு ஜெயந்திவிழாவை சிறப்பாக கொண்டாடி முடித்தது![10]: “இந்தியாவில் சுதந்திர போராட்டத்தை முதன்முதலில் நடத்தியவரும்,ஆங்கிலேயரை முதன்முதலாக துணிச்சலுடன் எதிர்கொண்ட மாவீரரான திப்பு சுல்தானை மக்கள் மறந்தாலும்,கர்நாடக அரசும் அதன் குடிமக்களும் மறப்பதில்லை.காரணம் திப்பு சுல்தான் பிறந்த வீரமண்தான் கர்நாடக மாநிலம் மைசூர் அவருடைய தியாகத்தை போற்றுவதற்காக வருடாவருடம் நவம்பர் மாதம் 10ஆம் தேதிதிப்பு ஜெயந்திவிழா நாடெங்கும் உற்சாகத்தோடு கொண்டாடுவது வழக்கம். இதை கண்டு பொறாமைப்பட்ட சங்பரிவாரக் கும்பல்கள் அவ்விழாவினை கொண்டாடும் மக்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட செய்திகளை செய்தி சேனல்களில் பார்த்திருப்பீர்கள். 10-11-2015 ன்று தலைநகர் பெங்களூரில் விதான்னா சௌதா பகுதியில் அமைந்திருக்கும் பேண்குவைட் மஹாலில்திப்பு ஜெயந்திவிழாவினை ஊர்மக்கள் ஒன்றுகூடி நடத்தவிருந்தனர். இவ்விழாவிற்கு சங்பரிவார கயவர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் கர்நாடக அரசாங்கமே முழு களமிறங்கி அம்மஹாலில் அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் இணைந்து விழாவினை சிறப்போடு நடத்தி முடித்தனர். அவ்விழாவில் திப்பு சுல்தானின் வீரமும், தியாகமும், இந்தியாவிற்காக அவர் பாடுபட்ட பொதுநலனையும் அதிகாரிகள் பேசினர்! மேலும்,அடுத்த வருடம் முதல் பெருவாரியான மண்டபங்களில் திப்பு ஜெயந்தி விழாவினை அரசே ஏற்று நடத்தும் எனவும், அதற்கு மிரட்டல் விடும் சமூக விரோதிகளுக்கு கடுங்காவல் தண்டனக அளிக்கப்படும் எனவும் அவ்விழாவில் ஆட்சியாளர்கள் உறுதி கூறினர்!” ஆக, நாங்கள் ஷிர்கை ஆதரிக்கிறோம் என்கிறார்களா முஸ்லிம்கள்?

The real Tipu sultan, tyrant- changing faces of Tipu

The real Tipu sultan, tyrant- changing faces of Tipu

வருடாவருடம் நவம்பர் மாதம் 10ஆம் தேதிதிப்பு ஜெயந்திவிழா நாடெங்கும் உற்சாகத்தோடு கொண்டாடுவது வழக்கம்: ஆற்றோரம்.காமலிந்த அளவுக்கு பொய் சொல்வது, செக்யூலரிஸம் கொடுத்த லைசென்ஸ் போலிருக்கிறது. முன்பு 2012ல் கேரளாவில் மாத்ரு பூமி இதழில் சரித்திர உண்மைகளை எடுத்துக் காட்டியபோது “டுசர்கிள்ஸ்நெட்” என்ற முஸ்லிம் இணைதளம் அதனைக் கடுமையாக சாடியது[11]. ஆக, முஸ்லிம்கள் தங்களுக்குள்ள முரண்பாடுகளை வேண்டுமென்றே காபிர்களை வைத்து கலவரங்களை உருவாக்கி, இந்துக்களை இத்தகைய “புதிய ஜிஹாத்” அல்லது “செக்யூலரிஸ ஜிஹாத்” மூலம் கொன்று வருகிறார்கள். இங்கும் அந்த “ஷிர்க்” முரண்பாடு வருகிறது. திப்புவை “ஹஜரத்” ஆக்கி. “பிறந்த நாள்” கொண்டாடுவோம் என்பது, எந்த விதத்தில் ஆசார இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவில்லை. திப்புவின் முகமே முரன்பாடாக உள்ளது. அதாவது கருப்பு நிறம் மற்றும் குரூர தோற்றத்தில் உள்ள அவனது முகம், உருமாறி, நிறமாறி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவ்வாறு மாற்றுவதை எப்படி சரித்திர ஆசிரியர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அப்படியென்றால், அதுவும் ஒரு பெரிய மோசடியாகும். சரித்திரவரவியலில் இந்த அளவுக்கு மோசடிகளை செய்து, ஒரு குரூரக் கொடுங்கோலனிடமிருந்து, ஒரு புலியை உருவாக்கியுள்ளது மிகப்பெரிய சரித்திர மோசடி எனலாம்.

SDPI suppoting Tipu Jayanti 10-11-2015.2

SDPI suppoting Tipu Jayanti 10-11-2015.2

திப்புவை ஏன் பர்காவும், என்டிடிவியும் ஆதரிக்கின்றன?: சரதிந்து முகர்ஜி (இந்தியன் கவுன்சில் ஆப் ஹிஸ்டாரிகல் ரிசெர்ச்), “காங்கிரஸ் டிப்பு ஜெயந்தியைக் கொண்டாடுவதின் மூலம் ஜிஹாதை ஊக்குவிப்பது போலிருக்கிறது”, என்று என்டி-டிவி விவாதத்தில் எடுத்துக் காட்டியுள்ளார். அப்பொழுது, பர்கா தத் என்ற பெண்மணி, நக்கலாக, என்ன இதை அரசியல்படுத்தும் முறையில் பேசுகிறீர்களே என்று தனது கருத்தை வைத்தார்[12]. மேலும் “In a controversial statement, NDA government-appointed member of Indian Council of Historical Research Saradindu Mukherji says, “Congress is trying to promote jihad” by celebrating birth anniversary of Tipu Sultan”, என்று அந்த இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் 60 ஆண்டுகளாக அரசுசார்ந்த நிறுவனங்களில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் சார்புடையவர்கள் தான் அப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர். ஆனால், இப்பொழுது மட்டும், ஏதோ புதியதாகக் கண்டு பிடித்த விதத்தில் இவ்வாறு குறிப்பிடுவதும், பர்கா நக்கலாக பேசுவதும் கவனிக்கத்தக்கது[13]. NDTV-Hindu சேர்ந்து டிவி செனல் நடத்துவதும், அவை தொடர்ந்து இத்தகைய பிரச்சாரத்தை செய்து வருவதும், உள்ள பிரச்சினையை ஊக்குவிப்பது போலத்தான் உள்ளது. எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றும் செயலை ஏன் இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்?

© வேதபிரகாஷ்

12-11-2015

[1] தைஜி.வார்ல்ட், Bengaluru: Tipu would have enjoyed status of Shivaji if he was a Hindu: Karnad, நவம்பர்.10.2015.

[2] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367915

[3] http://www.thehindu.com/news/cities/bangalore/protests-over-tipu-jayanti-continues-bjp-targets-karnad/article7866212.ece?ref=relatedNews

[4] http://www.thehindu.com/news/cities/bangalore/girish-karnads-remarks-on-tipu-create-a-stir/article7866381.ece?ref=relatedNews

[5] ….the noted playwright and actor sought to end the controversy, saying, “If anybody has been hurt by my remarks, I apologise… what will I gain by doing it (by making such comments).”

http://www.thehindu.com/news/national/karnataka/girish-karnad-offers-apology-over-remarks-on-kempegowda/article7866724.ece?ref=relatedNews

[6] Mr. Siddaramaiah also said it was a mistake on the part of the Jnanapith award winner to have made such remarks. “It is a mistake. I have told you,” he said. “I do not know why Girish Karnad made such a remark. I was also there (when he made the remark), I wanted to counter but I did not do,” he said.

http://www.thehindu.com/news/national/karnataka/girish-karnad-offers-apology-over-remarks-on-kempegowda/article7866724.ece?ref=relatedNews

[7] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367842

[8] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367973

[9] http://www.aatroram.com/?p=35379

[10] ஆற்றோரம்.காம், திப்பு ஜெயந்திவிழாவை சிறப்பாக கொண்டாடி முடித்த சித்த ராமையா, BY ஹாரிஸ் அஹ்மது ON NOVEMBER 11, 2015

[11] http://twocircles.net/2012nov16/attempts_distorting_history_tipu_sultan.html#.VkPokNIrJdg

[12] NDTV, It’s Jihad by Congress to Celebrate Tipu: Government-appointed Historian,  PUBLISHED ON: NOVEMBER 10, 2015 | DURATION: 2 MIN, 01 SEC 66

[13] http://www.ndtv.com/video/player/the-buck-stops-here/it-s-congress-jihad-to-celebrate-tipu-sultan-govt-appointed-historian/390428

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (3)

நவம்பர் 11, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (3)

Bhawans compromising act - Tipu and Aryans books

Bhawans compromising act – Tipu and Aryans books

முஸ்லிம் அமைப்புகள், கம்யூனிஸ்டுகள் அரசியல் செய்தது (2013): ஹைதர் அலி – திப்பு சுல்தான் இந்திய விடுதலை போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பதுதான் சரித்திர உண்மை. முன்பு திப்பு சுல்தான் சீரியல் வந்தபோது, இம்மாதிரியான பிரச்சினை மூலம் அவர்களின் இந்துவிரோத காரியங்கள் பேசப்பட்டபோது, முஸ்லிம்கள் சங்கடத்திற்குள்ளானார்கள். நீதிமன்றத்திற்கு பிரச்சினை சென்றபோது, தயாரிப்பாளர்-நடிகர் சஞ்சய் கானுக்கு சரித்திர உண்மைகள் மறைக்காமல் சொல்லப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. “தி ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான்” (The Sowrd of Tipu Sultan) எழுதியவர் – பகவான் கித்வாய், “தி ரெடார்ன் ஆப் தி ஆரியன்ஸ்” (The Return of the Aryans) என்று எழுதி தாஜா செய்ய முனைந்தார். கர்நாடகத்தின் சாராய மன்னன் திப்பு சுல்தானின் கத்தியை வாங்கி தனது செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொண்டார். மதன் எழுதிய “வந்தார்கள்…..வென்றார்கள்!” என்ற புத்தகம் ஜாலிக்கு-பொழுதுபோக்கிற்கு மதன் எழுதினாலும், முஸ்லிம்கள் பயப்படத்தான் செய்தனர்[1]. என்ன இந்த ஆள் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறான், என்று அவர்களால் மதன் தொந்தரவுப்பட்டதும் உண்டு[2]. ஐ. எம். முத்தண்ணா[3] என்பவர் “திப்பு சுல்தான் எக்ஸ்-ரேட்” (Tipu Sultan X-rayed) தனது புத்தகத்தில் திப்புவின் கொடுங்கோல குரூரங்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளார்.  இப்புத்தகம் இன்று வரை மறுக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. இப்பொழுது கூட எப்படி ஒரு கொடுமைக்காரனிடமிருந்து, ஒரு புலி உருவாக்கப்பட்டது என்று சரித்திர ஆதாரங்களுடன் திப்புவைப் பற்றி வெளியிடுகிறார்கள்[4]. இவ்வாறு எழுதியுள்ளவர் இந்து-ஆதரவாளர் அல்ல என்ரு குறிப்பிடத்தக்கது.

சுதந்திய யுத்தமேஇல்லை என்று மார்க்சிஸ்ட் சரித்திராசிரியர்கள் விளக்கம் கொடுக்கும் பொது, திப்பு எப்படி சுதந்திர போராளி ஆவான்?: செக்யூலரிஸ இந்தியா சுதந்திர போராட்டத்தையே கொச்சைப்படுத்தி, அது “சுதந்திய யுத்தமே” இல்லை என்று கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு கருத்தரங்கங்கள் நடத்தி புத்தகங்களை வெளியிட்டது. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டத்தார் “1857 முதல் சுதந்திர யுத்த”த்தையே கொச்சைப் படுத்திப் பேசினர், பிரச்சாரம் செய்தனர். அதாவது, அது வெறும் ஒரு கிளர்ச்சி, சாதாரணமான அங்கங்கு ஏற்பட்ட மக்கள் எழுச்சி, என்று தான் இன்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இன்று முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு “ஹைதர்-திப்பு”களுக்கு மணிமண்டபம் கேட்கிறார்கள் என்றால் அத்தகைய இரட்டைவேடதாரிகளை, தேசவிரோதிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் இப்படித்தான், திப்பு சுல்தான் பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஆரம்பித்தபோது, அம்மாநிலத்தார், திப்புவின் குரூர முகத்தை கிழித்துக் காட்டினர். அலறிவிட்டனர் மக்கள். ஆகவே, அரசியல், மதம், ஓட்டுவங்கி போன்ற காரியங்களுக்காக இப்படி ஏதாவது வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தால், அரசாங்கப் பணம் தான் விரயம் ஆகும். சமீபத்தைய சரித்திர நிகழ்வுகளை மாற்றியமைக்க முயன்றால், இருக்கும் ஆதாரங்களே வெளிகாட்டிவிடும். அப்பொழுது, நிலைமை இன்னும் அதிகமாக பாதிப்பில் முடியும்[5].

1990ல் பகவான் எஸ். கித்வானி என்பவரின் நாவலை ஆதாரமாகக் கொண்டு, “திப்பு சுல்தானின் கத்தி” என்ற டிவி-தொடர் தூர்தர்ஷணில் ஒலி-ஒளிபரப்ப ஆரம்பிக்கப்பட்டது. அதில் திப்பு சுல்தானின் கூரூரங்களை, கொடுமைகளை, கொலைகளை மறைத்து, ஏதோ மிகவும் நல்லவன் மாதிரி காட்டப்பட்டது. இதனால், இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. சரித்திர ஆதாரம் இல்லாதலால், கீழ் கண்ட வாசங்களை ஒவ்வொரு காட்சியின் முதலும் காண்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டது[6].

“No claim is made for the accuracy or authenticity of any episode being depicted in the serial. This serial is a fiction and has nothing to do either with the life or rule of Tipu Sultan. The serial is a dramatised presentation of Bhagwan Gidwani’s novel.” இந்த டிவி தொடரில் காண்பிக்கப்படும் நிகழ்ச்சிக்கு எந்த உண்மையோ, ஆதாரமோ இருக்கிறது என்று கோரவில்லை. இது ஒரு கற்பனைக் கதையே அன்று, இது உண்மையான திப்புவின் வாழ்க்கை அல்லது ஆட்சியுடன் சம்பந்தமில்லாதது. இந்த தொடர் பகவான் கித்வானியின் நாவலை ஆதாரமாகக் கொண்டு நாடகம் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 8 1990 அன்று இந்த டிவி-சீரியல் எடுக்கப்பட்ட ஸ்டுடியோவில் பெருத்த தீவிபத்து ஏற்பட்டதில் 62 பேர் கருகி இறந்தனர். இந்த சீரியலின் நடிகர்-தயாரிப்பாளர் சஞ்சய் கானுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டு 13 மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, 72 ஆபரேஷன்களை செய்து கொண்டு வெளிவந்தார். உயிரிழந்தவர்கள், விளம்பர நிறுவங்கள் நஷ்டம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்கள்[7]. திப்பு சுல்தானைப் பற்றிய வழக்குகள், பழமொழிகள் போன்றவையெல்லாம், அவனைக் கடுமையாக விமர்சிப்பதாகத்தான் இருந்துள்ளது. அவன் முகத்தைப் பார்க்கக் கூடாது, பார்த்தால் விளங்காது; எல்லாம் அழிந்து விடும் – நாசமாகி விடும்; குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவன் – கொல்கிறவன்; “திப்பு வருகிறான், என்று சொன்னால் அழுகின்ற குழந்தை அழுகையை நிறுத்தி விடும்” என்றெல்லாம் வழங்கி வர்கின்றன. அத்தீ விபத்து நடந்த போதும், இது எடுத்துக் காட்டப்பட்டது.

கர்நாடகாவைப் பொறுத்த வரையில், ஜனதா கட்சிகள் திப்புவை அரசியலாக்கி ஆதாயம் தேடியுள்ளன. சாராய மன்னன் மல்லையா 2004ல் தனது ஜனதா கட்சியின் சார்பாக பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். ராஜ்ய சபா எம்.பியான அவர், அரசியல் செல்வாக்கை உயர்த்தி கொள்ள, ரூ.1.5 கோடிகள் கொடுத்து, “திப்பு சுல்தானின் கத்தி” என்று லண்டனிலிருந்து ஏலத்தில் வாங்கி வந்தார். இதுவும், கர்நாடக தேர்தலை ஒட்டிதான் நடத்தப் பட்ட நாடகம் ஆகும்[8].

திப்பு ஜெயந்தி எப்படி கொண்டாடப்பட்டது?: அரசு சார்பில் இவ்விழா கொண்டாடப்படுவதால், அரசின் பணம் உபயோகப்படுத்தப் படுகிறது. அதாவது, பெருபான்மையினரான இந்துக்கள் கொடுக்கும் வரிப்பணத்தை வைத்துக் கொண்டே, இவ்விழா எடுத்து, இந்துக்களை கொன்ற, கொடுமைப்படுத்திய திப்புவுக்கு ஜெயந்தி கொண்டாடுவதால் தான் அங்குள்ள மக்கள் எதிர்க்கிறார்கள். மேலும், முஸ்லிம் கோணத்தில் பார்த்தாலும், காபிர்களிடமிருந்து வரும் பணத்தை வைத்துக் கொண்டு, இத்தகைய விழாக்கள் கொண்டாடப்படலாமா என்ற கேள்வியையும் எழுப்பலாம். இவ்விழாவில் திப்புவின் படம் வைக்கப்பட்டு, பூமாலை போடப்பட்டிருந்தது. பிறகு அனைவரும், அப்படத்திற்கு பூதூவி மரியாதை செய்தனர். முஸ்லிம்களும் அவ்வாறே செய்தனர். கைக்கூப்பி வணங்கவும் செய்தனர். இப்பொழுதெல்லாம், முஸ்லிம்கள் படங்களை வைத்துக் கொள்ள மாட்டார்கள், உருவங்களுக்கு மரியாதை செய்ய மாட்டார்கள், பூதூவி பூஜைப் போன்றெல்லாம் செய்ய மாட்டார்கள், வணங்க மாட்டார்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள். பிறகு எப்படி, இந்த திப்பு ஜெயந்தி இவ்விதமாக நடந்தது? எப்படி ஆசாரமுள்ள முஸ்லிம்கள் ஒப்புக்கொண்டார்கள்? இவற்றையெல்லாம் “‌ஷிர்க்” என்றோ “ஹராம்” என்றோ கூறி தடுக்கவில்லையே? தொலைக் காட்சிகளில் காட்டப்பட்ட போது கூடல் கொதிக்கவில்லையே? அப்படியென்றால், சாமர்த்தியமாக ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லாவின் எச்சரிக்கைகளையும் மீறி அத்தகைய தகாத காரியங்களை அனுமதிக்கிறார்கள். சித்தராமையாவும், சந்தோஷமாகக் கொண்டாட தீர்மானித்து, முடித்து வைத்து விட்டார். இந்துக்களுக்கு வேண்டிய தீபாவளி நாளில் கொண்டாடி, ஒரு இந்துவயும் சாகடிக்க வைத்து விட்டார்.

© வேதபிரகாஷ்

11-11-2015

[1] மதன், வந்தார்கள்………..வென்றார்கள்!, ஆனந்த விகடன் வெளியீடு, சென்னை,, 1994. “50,000 பிரதிகளைத் தாண்டி விற்பனையில் ஒரு சாதனை!” என்று அட்டையில் பெருமையாக அறிவித்துக் கொண்டது!

[2] அணிந்துரை அளித்த சுஜாதா, எப்படி மிரட்டல் கடிதங்கள் வந்தன என்று எடுத்துக் காட்டியுள்ளார். 21-12-1993 தேதியிட்ட கடிதம்.

[3] I. M. Muthanna, Tipu Sultan X-rayed, Usha Press, Mysore,1980.

[4] http://www.ibnlive.com/blogs/india/d-p-satish/tipu-sultan-making-a-tiger-out-of-a-tyrant-11027-1162986.html

[5] https://secularsim.wordpress.com/2013/06/24/why-conflicting-views-come-about-hyder-ali-and-tipu-sultan/

[6]  A. G. Noorani. “Menace to free speech”. Online edition of The Frontline, volume 22, issue 26, December 17–30, 2005. Retrieved 2007-08-17.

[7] http://indiatoday.intoday.in/story/the-sword-of-tipu-sultan-fire-sanjay-khan-faces-legal-action-for-negligence/1/323237.html

[8] The timing of Mr. Mallya’s announcement of his acquisition made some six months ago has not gone unnoticed, coming as it does a fortnight before the first phase of polling in Karnataka. However, the working president of the Janata Party said: “This is not political. It’s personal.” Mr. Mallya’s party has fielded candidates in more than a hundred Assembly constituencies and half-a-dozen Lok Sabha constituencies in the coming elections in Karnataka. He described the sword as a unique piece of history and said that he bought it as a `proud Kannadiga’ in order to restore the `rightful legacy’ to Karnataka.

http://www.thehindu.com/2004/04/08/stories/2004040805881200.htm

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (3)

நவம்பர் 11, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (3)

Bhawans compromising act - Tipu and Aryans books

Bhawans compromising act – Tipu and Aryans books

முஸ்லிம் அமைப்புகள், கம்யூனிஸ்டுகள் அரசியல் செய்தது (2013): ஹைதர் அலி – திப்பு சுல்தான் இந்திய விடுதலை போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்பதைவிட, தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள ஆங்கிலேயர்களை எதிர்த்தான் என்பதுதான் சரித்திர உண்மை. முன்பு திப்பு சுல்தான் சீரியல் வந்தபோது, இம்மாதிரியான பிரச்சினை மூலம் அவர்களின் இந்துவிரோத காரியங்கள் பேசப்பட்டபோது, முஸ்லிம்கள் சங்கடத்திற்குள்ளானார்கள். நீதிமன்றத்திற்கு பிரச்சினை சென்றபோது, தயாரிப்பாளர்-நடிகர் சஞ்சய் கானுக்கு சரித்திர உண்மைகள் மறைக்காமல் சொல்லப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. “தி ஸ்வார்ட் ஆப் திப்பு சுல்தான்” (The Sowrd of Tipu Sultan) எழுதியவர் – பகவான் கித்வாய், “தி ரெடார்ன் ஆப் தி ஆரியன்ஸ்” (The Return of the Aryans) என்று எழுதி தாஜா செய்ய முனைந்தார். கர்நாடகத்தின் சாராய மன்னன் திப்பு சுல்தானின் கத்தியை வாங்கி தனது செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொண்டார். மதன் எழுதிய “வந்தார்கள்…..வென்றார்கள்!” என்ற புத்தகம் ஜாலிக்கு-பொழுதுபோக்கிற்கு மதன் எழுதினாலும், முஸ்லிம்கள் பயப்படத்தான் செய்தனர்[1]. என்ன இந்த ஆள் இப்படியெல்லாம் எழுதியிருக்கிறான், என்று அவர்களால் மதன் தொந்தரவுப்பட்டதும் உண்டு[2]. ஐ. எம். முத்தண்ணா[3] என்பவர் “திப்பு சுல்தான் எக்ஸ்-ரேட்” (Tipu Sultan X-rayed) தனது புத்தகத்தில் திப்புவின் கொடுங்கோல குரூரங்களை ஆதாரங்களோடு வெளியிட்டுள்ளார்.  இப்புத்தகம் இன்று வரை மறுக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது. இப்பொழுது கூட எப்படி ஒரு கொடுமைக்காரனிடமிருந்து, ஒரு புலி உருவாக்கப்பட்டது என்று சரித்திர ஆதாரங்களுடன் திப்புவைப் பற்றி வெளியிடுகிறார்கள்[4]. இவ்வாறு எழுதியுள்ளவர் இந்து-ஆதரவாளர் அல்ல என்ரு குறிப்பிடத்தக்கது.

1857 rebellion - not war of independence- Marxist interpretation

1857 rebellion – not war of independence- Marxist interpretation

சுதந்திய யுத்தமேஇல்லை என்று மார்க்சிஸ்ட் சரித்திராசிரியர்கள் விளக்கம் கொடுக்கும் பொது, திப்பு எப்படி சுதந்திர போராளி ஆவான்?: செக்யூலரிஸ இந்தியா சுதந்திர போராட்டத்தையே கொச்சைப்படுத்தி, அது “சுதந்திய யுத்தமே” இல்லை என்று கம்யூனிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு கருத்தரங்கங்கள் நடத்தி புத்தகங்களை வெளியிட்டது. காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டத்தார் “1857 முதல் சுதந்திர யுத்த”த்தையே கொச்சைப் படுத்திப் பேசினர், பிரச்சாரம் செய்தனர். அதாவது, அது வெறும் ஒரு கிளர்ச்சி, சாதாரணமான அங்கங்கு ஏற்பட்ட மக்கள் எழுச்சி, என்று தான் இன்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இன்று முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டு “ஹைதர்-திப்பு”களுக்கு மணிமண்டபம் கேட்கிறார்கள் என்றால் அத்தகைய இரட்டைவேடதாரிகளை, தேசவிரோதிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். கர்நாடகத்தில் இப்படித்தான், திப்பு சுல்தான் பல்கலைக்கழகம் வேண்டும் என்று ஆரம்பித்தபோது, அம்மாநிலத்தார், திப்புவின் குரூர முகத்தை கிழித்துக் காட்டினர். அலறிவிட்டனர் மக்கள். ஆகவே, அரசியல், மதம், ஓட்டுவங்கி போன்ற காரியங்களுக்காக இப்படி ஏதாவது வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தால், அரசாங்கப் பணம் தான் விரயம் ஆகும். சமீபத்தைய சரித்திர நிகழ்வுகளை மாற்றியமைக்க முயன்றால், இருக்கும் ஆதாரங்களே வெளிகாட்டிவிடும். அப்பொழுது, நிலைமை இன்னும் அதிகமாக பாதிப்பில் முடியும்[5].

1857 rebellion - not war of independence

1857 rebellion – not war of independence

1990ல் பகவான் எஸ். கித்வானி என்பவரின் நாவலை ஆதாரமாகக் கொண்டு, “திப்பு சுல்தானின் கத்தி” என்ற டிவி-தொடர் தூர்தர்ஷணில் ஒலி-ஒளிபரப்ப ஆரம்பிக்கப்பட்டது. அதில் திப்பு சுல்தானின் கூரூரங்களை, கொடுமைகளை, கொலைகளை மறைத்து, ஏதோ மிகவும் நல்லவன் மாதிரி காட்டப்பட்டது. இதனால், இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. சரித்திர ஆதாரம் இல்லாதலால், கீழ் கண்ட வாசங்களை ஒவ்வொரு காட்சியின் முதலும் காண்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டது[6].

“No claim is made for the accuracy or authenticity of any episode being depicted in the serial. This serial is a fiction and has nothing to do either with the life or rule of Tipu Sultan. The serial is a dramatised presentation of Bhagwan Gidwani’s novel.” இந்த டிவி தொடரில் காண்பிக்கப்படும் நிகழ்ச்சிக்கு எந்த உண்மையோ, ஆதாரமோ இருக்கிறது என்று கோரவில்லை. இது ஒரு கற்பனைக் கதையே அன்று, இது உண்மையான திப்புவின் வாழ்க்கை அல்லது ஆட்சியுடன் சம்பந்தமில்லாதது. இந்த தொடர் பகவான் கித்வானியின் நாவலை ஆதாரமாகக் கொண்டு நாடகம் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 8 1990 அன்று இந்த டிவி-சீரியல் எடுக்கப்பட்ட ஸ்டுடியோவில் பெருத்த தீவிபத்து ஏற்பட்டதில் 62 பேர் கருகி இறந்தனர். இந்த சீரியலின் நடிகர்-தயாரிப்பாளர் சஞ்சய் கானுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டு 13 மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து, 72 ஆபரேஷன்களை செய்து கொண்டு வெளிவந்தார். உயிரிழந்தவர்கள், விளம்பர நிறுவங்கள் நஷ்டம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்கள்[7]. திப்பு சுல்தானைப் பற்றிய வழக்குகள், பழமொழிகள் போன்றவையெல்லாம், அவனைக் கடுமையாக விமர்சிப்பதாகத்தான் இருந்துள்ளது. அவன் முகத்தைப் பார்க்கக் கூடாது, பார்த்தால் விளங்காது; எல்லாம் அழிந்து விடும் – நாசமாகி விடும்; குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு போகிறவன் – கொல்கிறவன்; “திப்பு வருகிறான், என்று சொன்னால் அழுகின்ற குழந்தை அழுகையை நிறுத்தி விடும்” என்றெல்லாம் வழங்கி வர்கின்றன. அத்தீ விபத்து நடந்த போதும், இது எடுத்துக் காட்டப்பட்டது.

Mallaya, Janata Dal and Tipu politics 2003-04

Mallaya, Janata Dal and Tipu politics 2003-04

கர்நாடகாவைப் பொறுத்த வரையில், ஜனதா கட்சிகள் திப்புவை அரசியலாக்கி ஆதாயம் தேடியுள்ளன. சாராய மன்னன் மல்லையா 2004ல் தனது ஜனதா கட்சியின் சார்பாக பல தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார். ராஜ்ய சபா எம்.பியான அவர், அரசியல் செல்வாக்கை உயர்த்தி கொள்ள, ரூ.1.5 கோடிகள் கொடுத்து, “திப்பு சுல்தானின் கத்தி” என்று லண்டனிலிருந்து ஏலத்தில் வாங்கி வந்தார். இதுவும், கர்நாடக தேர்தலை ஒட்டிதான் நடத்தப் பட்ட நாடகம் ஆகும்[8].

திப்பு ஜெயந்தி - முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

திப்பு ஜெயந்தி – முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

திப்பு ஜெயந்தி எப்படி கொண்டாடப்பட்டது?: அரசு சார்பில் இவ்விழா கொண்டாடப்படுவதால், அரசின் பணம் உபயோகப்படுத்தப் படுகிறது. அதாவது, பெருபான்மையினரான இந்துக்கள் கொடுக்கும் வரிப்பணத்தை வைத்துக் கொண்டே, இவ்விழா எடுத்து, இந்துக்களை கொன்ற, கொடுமைப்படுத்திய திப்புவுக்கு ஜெயந்தி கொண்டாடுவதால் தான் அங்குள்ள மக்கள் எதிர்க்கிறார்கள். மேலும், முஸ்லிம் கோணத்தில் பார்த்தாலும், காபிர்களிடமிருந்து வரும் பணத்தை வைத்துக் கொண்டு, இத்தகைய விழாக்கள் கொண்டாடப்படலாமா என்ற கேள்வியையும் எழுப்பலாம். இவ்விழாவில் திப்புவின் படம் வைக்கப்பட்டு, பூமாலை போடப்பட்டிருந்தது. பிறகு அனைவரும், அப்படத்திற்கு பூதூவி மரியாதை செய்தனர். முஸ்லிம்களும் அவ்வாறே செய்தனர். கைக்கூப்பி வணங்கவும் செய்தனர். இப்பொழுதெல்லாம், முஸ்லிம்கள் படங்களை வைத்துக் கொள்ள மாட்டார்கள், உருவங்களுக்கு மரியாதை செய்ய மாட்டார்கள், பூதூவி பூஜைப் போன்றெல்லாம் செய்ய மாட்டார்கள், வணங்க மாட்டார்கள், என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள். பிறகு எப்படி, இந்த திப்பு ஜெயந்தி இவ்விதமாக நடந்தது? எப்படி ஆசாரமுள்ள முஸ்லிம்கள் ஒப்புக்கொண்டார்கள்? இவற்றையெல்லாம் “‌ஷிர்க்” என்றோ “ஹராம்” என்றோ கூறி தடுக்கவில்லையே? தொலைக் காட்சிகளில் காட்டப்பட்ட போது கூடல் கொதிக்கவில்லையே? அப்படியென்றால், சாமர்த்தியமாக ஏதோ ஒரு காரணத்திற்காக அல்லாவின் எச்சரிக்கைகளையும் மீறி அத்தகைய தகாத காரியங்களை அனுமதிக்கிறார்கள். சித்தராமையாவும், சந்தோஷமாகக் கொண்டாட தீர்மானித்து, முடித்து வைத்து விட்டார். இந்துக்களுக்கு வேண்டிய தீபாவளி நாளில் கொண்டாடி, ஒரு இந்துவயும் சாகடிக்க வைத்து விட்டார்.

© வேதபிரகாஷ்

11-11-2015

[1] மதன், வந்தார்கள்………..வென்றார்கள்!, ஆனந்த விகடன் வெளியீடு, சென்னை,, 1994. “50,000 பிரதிகளைத் தாண்டி விற்பனையில் ஒரு சாதனை!” என்று அட்டையில் பெருமையாக அறிவித்துக் கொண்டது!

[2] அணிந்துரை அளித்த சுஜாதா, எப்படி மிரட்டல் கடிதங்கள் வந்தன என்று எடுத்துக் காட்டியுள்ளார். 21-12-1993 தேதியிட்ட கடிதம்.

[3] I. M. Muthanna, Tipu Sultan X-rayed, Usha Press, Mysore,1980.

[4] http://www.ibnlive.com/blogs/india/d-p-satish/tipu-sultan-making-a-tiger-out-of-a-tyrant-11027-1162986.html

[5] https://secularsim.wordpress.com/2013/06/24/why-conflicting-views-come-about-hyder-ali-and-tipu-sultan/

[6]  A. G. Noorani. “Menace to free speech”. Online edition of The Frontline, volume 22, issue 26, December 17–30, 2005. Retrieved 2007-08-17.

[7] http://indiatoday.intoday.in/story/the-sword-of-tipu-sultan-fire-sanjay-khan-faces-legal-action-for-negligence/1/323237.html

[8] The timing of Mr. Mallya’s announcement of his acquisition made some six months ago has not gone unnoticed, coming as it does a fortnight before the first phase of polling in Karnataka. However, the working president of the Janata Party said: “This is not political. It’s personal.” Mr. Mallya’s party has fielded candidates in more than a hundred Assembly constituencies and half-a-dozen Lok Sabha constituencies in the coming elections in Karnataka. He described the sword as a unique piece of history and said that he bought it as a `proud Kannadiga’ in order to restore the `rightful legacy’ to Karnataka.

http://www.thehindu.com/2004/04/08/stories/2004040805881200.htm

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (1)

நவம்பர் 11, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (1)

திப்பு ஜெயந்தி - சித்தராமையா- முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

திப்பு ஜெயந்தி – சித்தராமையா- முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

தீபாவளி 10-11-2015 அன்று இந்தியா முழுவதும் பண்டிகை கொண்டாடும் வேளையில், கர்நாடகாவில் 18-வது நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த மன்னரான திப்பு சுல்தானின் 266வது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்து[1], நடத்தியதில் கலவரத்தில் முடிந்தது. இந்து மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் தமது எதிப்பைத் தெரிவித்திருந்தும் பிடிவாதமாகக் கொண்டாடுவேன் என்று விழாவை ஏற்பாடு செய்து சித்தராமைய்யா நடத்தினார். பசுமாமிசம் சாப்பிடுவேன் என்றேல்லாம் பேசிய இவர் கர்நாடகாவின் முதலமைச்சர். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எனும் போது, எல்லா மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற பண்புக்கு எதிராக செயல் பட்டுவரும், அவர் இதற்கும் சளைக்கவில்லை. நிச்சயமாக சோனியா அம்மையாரின் சம்மதி இல்லாமல், இவர் இவ்வளவு ஆட்டம் போடமாட்டார். ஆக காங்கிரசின் உள்நோக்கம், கலவரத்தை உண்டாக்குவது என்பது தான் போலும். இருக்கவே இருக்கிறது, பிறகு இதெல்லாம் அந்த இந்துத்துவ சக்திகளின் வேலைதான் என்று பழி போட்டு திசைத்திருப்பி விடலாம்.

lash-over-tipu-sultan-jayanti-celebrations

lash-over-tipu-sultan-jayanti-celebrations

பலவித எதிர்ர்புகளை மீறி சித்தராமையா திப்பு ஜெயந்தி கொண்டாடியது: ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் மே 1799ல், ஹைதர் அலியின் மகனான திப்பு கொல்லப்பட்டான்[2]. அதன்படி, 10-11-2015 (செவ்வாய்க்கிழமை) அன்று திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது[3]. ஹைதர் மற்றும் திப்பு இருவரின் கொடுமைகளை தென்னிந்தியாவில், குறிப்பாக மைசூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் (கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா) மக்கள் அறிவர். இந்த விழாவை கொண்டாடுவதற்கு பா.ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். உள்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன[4]. இந்நிலையில், இன்று நடைபெறும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை புறக்கணிப்பதாக பா.ஜனதா அறிவித்தது. மாநில பிஜேபி தலைவர் பிரஹலாத் ஜோஷி, “எங்களுடைய 44 எம்.எல்.ஏக்கள், மற்ற அரசு பதவி வகிக்கும் எவரும் இந்த விழாவில் பங்கு கொள்ள மாட்டார்கள்”, என்று அறிவித்தார்[5]. கர்நாடக கௌரவ சம்ரக்ஷண சமிதி [Karnataka Gaurava Samrakshana Samiti] போன்ற இயக்கங்களும் எதிப்புத் தெரிவித்தன. குர்பூர் வஜ்ரதேஹி மடத்தின் ஸ்வாமிஜி ஶ்ரீ ராஜசேகரானந்தா அரசு அந்நிகழ்ச்சியை நடத்தினால், அதே நாளில், “அரசின் தற்கொலை தினம்” என்று எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தப் படும் என்றார்[6]. இதனிடையே, கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று சில மதஅமைப்புகள் அறிவித்தன. மத அமைப்புகளின் இந்த அறிவிப்புக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால், பாரதிய ஜனதா ஆதரவு வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோடகு மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அங்குள்ள சில அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

United Christian Association எதிப்பு-06-11-2015

United Christian Association எதிப்பு-06-11-2015

கிறிஸ்தவர்களின் எதிர்ப்பு: மங்களூரின் அனைத்து கிறிஸ்தவ சங்கமும், “கடற்கரை பகுதிகளில் இருந்த பல சர்ர்சுகளை திப்பு தனது ஆட்சியில் இடித்தான் மற்றும் கிறிஸ்துவர்களை துன்புறுத்தினான்”, என்று இந்த ஜெயந்தியை எதிர்த்துள்ளது[7]. நவம்பர் 6ம் தேதி எதிர்ப்பு தெர்வித்து கமிஷனரிடம் மனுவையும் கொடுத்தனர்[8]. திப்புவினால் கிறிஸ்தவர்கள் நடத்தப் பட்ட விதம் குறித்து, அவர்களே ஆவணப்படுத்தியுள்ளவற்றிலிருந்து அறியலாம், ஒருவேளை அதனால் தான், கிறிஸ்தவர்களாக இருந்த ஆங்கிலேயர், அவன் மீது படையெடுத்து, அப்பகுதியை, தமதாட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று போரை நடத்தியிருக்கலாம். எப்படியாகிலும், கிறிஸ்தவர்களால் கூட, திப்புவின் கொடுமைகளை, இன்றளவும் மறக்க முடியாத அளவுக்கு, அவர்களது மனங்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

lash-over-tipu-sultan-jayanti-celebrations-இரு குழுக்கள் மோதல்

lash-over-tipu-sultan-jayanti-celebrations-இரு குழுக்கள் மோதல்

மடிக்கேரியில் இரு குழுக்கள் மோதிக் கொண்டது எப்படி?: அரசு விழாவை ஆதரித்து முஸ்லிம் அமைப்பு ஒன்று ஊர்வலம் மடிக்கரையில் நடத்தியது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தியது[9]. இதனால், ஒரு இடத்தில் இரு அமைப்பு தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது[10]. இந்த பேரணியின் போது, திடீரென வெடித்த மோதல் விபரீதத்தில் முடிந்தது. விஷ்வ இந்து பரிஷத் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு அமைப்புக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது[11] என்கிறது தினத்தந்தி. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருடன் மோதினார்கள் என்றால், அது முஸ்லிமஸமைப்புதான் என்று பதிவு செய்யாமல் இருந்தது செக்யூலரிஸ பத்திரிகா தர்மத்தைக் காட்டுகிறது போலும். இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். குட்டப்பா இறந்த பிறகு, கலவரமாக மாறியது. இதையடுத்து, அங்கு நிலவிவரும் பதற்றத்தை தணிக்க கூடுதலாக பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோடகு மாவட்டம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமான இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

An injured is taken away for medical aid after two groups clashed over -Tipu Sultan Jayanti celebrations, in Kodgu.

An injured is taken away for medical aid after two groups clashed over -Tipu Sultan Jayanti celebrations, in Kodgu.

குட்டப்பா இறந்தது அல்லது கொல்லப்பட்டது எப்படி?: கல்வீச்சில் முன்னாள் அரசு ஊழியரும் உள்ளூர் விஷ்வ இந்து பரிஷத் தலைவருமான குட்டப்பா (50) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்[12] என்று சில ஊடகங்கள் கூறுகின்றன.  புட்டப்பா தடியடியில் உயிரிழந்ததாக செய்திகள் பரவின என்கின்றன மற்ற ஊடகங்கள்.. ஆனால் தடியடியிளிருந்து தப்பிக்க உயரமான சுவரை தாண்டி குதித்த போது தவறி விழுந்து அவர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது[13] என்றும் கூறப்படுகின்றன. ஆகவே, குட்டப்பா இறப்பில், எதையோ மறைக்கிறார்கள் என்று தெரிகிறது. கல்லடி கலாட்டாவில் இறந்தார் அல்லது கொல்லப்பட்டார் என்றால், வீசியவர்கள் காரணமாகிறார்கள். ஆனால், கல்லடி கலாட்டாவில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் தான் என்று குறிப்பிட செக்யூலரிஸ ஊடகங்கள் தயங்குகின்றன போலும்.  மேலும் தீபாவளியன்று, இப்படி இந்து-விரோத போக்கில் நடத்தப் பட்ட ஜெயந்தியில், ஒரு இந்து அமைப்பின் தலைவர் இறந்தது ஒரு பிரச்சினை ஆகக்கூடாது என்று அமுக்கி வாசித்திருக்கலாம்.

சித்தராமையாவின் திப்பு ஜெயந்தி 10-11-2015

சித்தராமையாவின் திப்பு ஜெயந்தி 10-11-2015

காங்கிரஸ் எம்.எல்,ஏ குட்டப்பாவின் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்கிறார்: குட்டப்பாவின் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஜி. போபைய்யா [Congress MLA K.G. Bopaiah] கேட்டுள்ளார். ஆமாம், பாவம் அவருக்கு இந்துக்களின் ஓட்டுகள் தேவைப்படுகிறது. மைசூரின் எம்.பியான, பிரதாப் சிம்ஹா, “மாவட்ட நிர்வாகம் நிலைமையை கையாளத் தவறிவிட்டது. மற்ற மாவட்டங்களிலிருந்து, நிறையபேர் இங்கு வந்து, திப்பு ஜெயந்தியை ஆதரிக்க வந்துள்ளனர். அதே மாதிரி விழாவை எதிர்ப்பவர்களையும், அவர்களையும் போலீஸார் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது”, என்றார். மூர்நாடு, ஹக்கதரு, விராஜ்பேட், கொட்டமுடி போன்ற ஊர்களிலிருந்து சுமார் 4,000 பேர் மடிகேரியுள் நுழையப் பார்த்தார்கள், ஆனால், போலீஸார் தடுத்ததால், அவர்கள் மடிகேரி எல்லைகளிலேயே தங்க நேர்ந்தது. சுமார் காலை பத்து மணிக்கு மோதல்கள் ஆரம்பித்தன, மதியம் குட்டப்பா இறந்தவுடன், கலவரமாக மாறிவிட்டது[14]. மேலும், “அரசு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போன்றோருக்கு விழா எடுக்கலாம், ஆனால், திப்புவைப் போன்றவர்களுக்கு அல்ல”, என்றும் கூறினார்[15].

© வேதபிரகாஷ்

11-11-2015

[1] மாலைமலர், திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட எதிர்ப்பு: வன்முறையில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஒருவர் பலி, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10.2015, 3:05 PM IST.

[2] http://www.greaterkashmir.com/news/national/story/201214.html

[3] http://www.maalaimalar.com/2015/11/10150553/Tipu-birth-anniv-celebrations.html

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=177868

[4]  தினகரன், பாஜக., வி.எச்.பி தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி கலவரத்தில் வி.எச்.பி பிரமுகர் உயிரிழந்ததால் பதட்டம், நவம்பர். 10.2015,16.00.21 PM IST.

[5] On Monday (09-11-2015), BJP announced its plans to boycott the celebrations across the state. State BJP president Prahlad Joshi told media persons on Monday that none of its 44 legislators and office-bearers will attend the Tipu Jayanti celebrations being organized by the state government.

http://www.business-standard.com/article/news-ians/one-dead-in-clash-over-tipu-sultan-anniversary-115111000719_1.html

[6] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367470

[7] Mangaluru United Christian Association has protested against the celebrations, alleging that Tipu was responsible for the destruction of many churches in the coastal region and harassing Christians.

http://atimes.com/2015/11/hindu-leader-dies-in-violence-during-protest-over-tipu-anniversary/

[8] The members of the United Christian Association staged a protest against the state government’s decision to celebrate “Tipu Jayanti”, in front of the DC’s Office here, on November 6.2015.

http://www.mangalorean.com/mangaluru-uca-stages-protest-against-state-governments-decision-to-celebrate-tipu-jayanti/

[9] தினத்தந்தி, திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போரட்டத்தில் வன்முறை வி.எச்.பி தலைவர் ஒருவர் பலி, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 10,2015, 2:16 PM IST; பதிவு செய்த நாள்:செவ்வாய், நவம்பர் 10,2015, 2:16 PM IST.

[10] The clashes erupted after a Muslim group that was taking out a procession to mark the Karnataka government’s Tipu Sultan Jayanti celebration through Madikeri town came face to face with Hindutva activists protesting against the celebration of the birth anniversary in the middle of the town.

http://indianexpress.com/article/india/politics/tipu-sultan-jayanti-protest-vhp-activist-succumbs-to-injuries-in-karnataka/

[11] http://www.dailythanthi.com/News/India/2015/11/10141620/Tipu-birth-anniv-celebrations-VHP-leader-dies-in-violence.vpf

[12] New Indian express, Tipu Sultan jayanti protest: VHP activist killed in violence in Karnataka, Written by Express News Service | Updated: November 10, 2015 4:09 pm.

[13]http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=177868

[14] Some 4,000 people, who had come from nearby towns such as Moornadu, Hakkaturu, Virajpet and Kottamudi, were stranded on the outskirts of Madikeri after police barricaded the town. According to police, clashes erupted in different parts of Madikeri by 10am. By noon, when Kuttappa died, police had a full blown riot on their hands.

http://www.hindustantimes.com/india/vhp-leader-dies-in-clashes-over-tipu-sultan-s-birth-anniversary-celebrations/story-25FViLDz9rageQiTW9rtwK.html

[15] Congress MLA K.G. Bopaiah called for immediate arrest of those responsible for Kuttappa’s death. Mysuru MP Pratap Simha, who spoke to The Hindu, flayed the district administration and the police for their failure to handle the situation. He alleged that people from other districts had arrived in large numbers ostensibly in support of the Jayanti celebrations and the police failed to crack down armed protesters. “Such events should be held to commemorate icons, who have rendered yeoman service to society. Let the government hold a jayanti celebration in honour of late President A.P.J. Abdul Kalam but not Tipu Sultan,” said Mr. Simha. Inspector-General of Police (South) B.K. Singh and other officers are camping in the district and monitoring the situation.

http://www.thehindu.com/news/national/karnataka/one-dead-in-stone-pelting-in-kodagu/article7864756.ece