Posted tagged ‘சிதம்பரம்’

டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது!

திசெம்பர் 7, 2013

டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது!

06-12-2013

சென்டிரல் ரெயில் நிலையத்தில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அழகர்சாமி கூறியதாவது[1]: சென்டிரல் ரெயில் நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து நுழைவுவாயில்களிலும் உள்ள ‘மெட்டல் டிடக்டர்’ கதவு(வெடிகுண்டு கண்டறியும்) வழியாகவே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.  பயணிகள் உடைமைகளும் ‘ஸ்கேனர் கருவி மூலம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. பிளாட்பாரங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீசாரும் ரெயில் நிலையத்தில் ரோந்து சுற்றி வருகிறார்கள். பயணிகளோடு, பயணிகளாக மாறுவேடத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். ரெயில்வே போலீசார் 250 பேரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், நாய் படையினர் உள்பட 350 பேர் 2 ஷிப்ட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

06-12-2013 முஸ்லிம்கள் போராட்டம்

டிசம்பர் 6ம் நாள் நினைவு தினமா, எதிர்ப்பு தினமா அல்லது தீவிரவாதிகளைத் தூண்டிவிடும் தினமா?: உதாரணத்திற்காக, சென்ட்ரல் பற்றிய செய்தி கொடுக்கப்பட்டது, ஆனால், இதே நிலைதான் மற்ற ரெயில்வே மற்றும் பேரூந்து நிலையங்களில். டிசம்பர் 6ம் நாள் மற்றும் அதற்கு முந்தைய தினங்களில் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன, ஆனால், மாற்ற நாட்களில் சாதாரணமாக இருந்து விடுகிறார்கள். சில நேரங்களில் அவ்வாறான நாட்களில் வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து, அப்பாவி மக்களைக் கொன்று வருகிறார்கள். ஆகவே, தீவிரவாதிகள் அல்லது டிசம்பர் 6ம் தேதியில் பழி வாங்க வேண்டும் என்று கங்கணல் கட்டிக் கொண்டுள்ள முஸ்லிம்கள் இந்த உண்மையினை உணரவேண்டும். ஏனெனில், இவர்களது பிரச்சாரம், அத்தகைய ஜிஹாதி மற்றும் தீவிரவாத முஸ்லிம்களைத் தூண்டிவிடுவதாகும் என்பது தெள்ளத்தெரிந்த விசயமே, பிறகு ஏன் அவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்?

06-12-2013 முஸ்லிம்கள் போராட்டம்- எதற்கு

06-12-2013 மிரட்டல், பீதி, ஆர்பாட்டங்கள்: திண்டுக்கல்லில், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் பொது அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரையில்பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரெயில் மறியல் செய்ய முயன்ற 40 பேரை போலீசார் கைது செய்தனர்[2]. சென்னையில் கைது! பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்[3], பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடையடைப்புக்கு எந்த அமைப்பும் வேண்டுகோள் வைக்கவில்லையெனினும், சில ஆண்டுகளுக்கு முன் சில சமுதாய அமைப்புகளால் வைக்கப்பட்ட வேண்டுகோள் வழமையாக்கப்பட்டு, ஆண்டுதோறும் இந்நாளில் கடைகள் அடைக்கப்படுகிறது[4], இப்படி செய்திகள் தொடர்கின்றன.

பாபர் இடிப்பு தினத்தையொட்டி காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2013

பாபர் இடிப்பு தினத்தையொட்டி காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2013

திண்டுகல்-மதுரையில்போலீஸ்பாதுகாப்பு: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,200 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில்கள், மசூதிகள் உள்ள பகுதியில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டனர். மேலும் ரெயில் நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். ரெயில் தண்டவாள பகுதியிலும், பார்சல் அலுவலகங்கள் உள்ள பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நகரின் எல்லைப் பகுதியில் நுழையும் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி பஸ்நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி இன்று காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.06-12-2013

பாபர் இடிப்பு தினத்தையொட்டி காயல்பட்டினத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2013

பொது  அமைதியை  குலைக்க  சதித்திட்டம்  தீட்டுவதாக  ரகசிய  தகவல்: திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாகன ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் திண்டுக்கல்–தாடிக்கொம்பு ரோடு பி.வி.தாஸ் காலனி அருகில் உள்ள பகுதியில் ஒரு கும்பல் பதுங்கி இருந்து பொது அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது[5]. அவரது உத்தரவின்பேரில் திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 6 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்[6]. பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் செல்லாண்டியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த அகில உலக இஸ்லாமிய முன்னேற்ற கழக நிறுவனர் முபாரக் (வயது 34), ஜாபர் அலி (35), கணவா சையது (29), யாசிக் (24), ஷேக்பரீத் (24), அசனத்புரத்தைச் சேர்ந்த அகில உலக இஸ்லாமிய முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஹபிபுல்லா (28) என தெரியவந்தது[7].

Tindigul Muslims adopting part of IED

அகில  உலக  இஸ்லாமிய  முன்னேற்ற  கழக  மாவட்ட  தலைவர்  ஹபிபுல்லா  முதலியோர்  சிறையில்  அடைப்பு: அவர்கள் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், அரசின் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கத்தோடும், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் செயல்பட சதித்திட்டம் தீட்டியதாக திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்[8]. கைது செய்யப்பட்ட 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டு, 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வேதகிரி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Dindigul Muslims adopting part of IED technology

 ஆணிகளை  எறிந்து  பொதுமக்களை  கொல்லசதி:   மதுரை,   திண்டுக்கல்லில்   10 பேர்  கைது[9]: திண்டுக்கல்லில், பஸ்கள் மீது ஆணிகளை கொண்ட பைப்களை வீசி, பொது சொத்தை சேதப்படுத்தி, பொதுமக்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய 10 பேரை, மதுரை, திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் பகுதியில், டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பரவாசுதேவன், புகழேந்தி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர், நேற்று, சோதனை மேற்கொண்டனர். அப்போது, செல்லாண்டியம்மன் கோயில் பகுதியில் கும்பல் ஒன்றை சுற்றி வளைத்தனர். இதில், ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; எட்டு பேர் தப்பியோடினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த அகில உலக இஸ்லாமிய கழகத் தலைவர் முபாரக், 34, ஜாபர்அலி, 35, கணவா சையது, 29, யாசிக், 28, சேக்பரித், 23, அபிபுல்லா, 28, என, தெரிந்தது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யவும், பொது சொத்துக்கு சேதப்படுத்தவும் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து, திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் கைது செய்தனர்[10].

மதுரையில்  பெட்ரோல்  குண்டுவீசி,   அரிவாளால்  வெட்டி  ஒருவர்  கொல்லப்பட்டதற்கு  பழிக்குப்  பழியாக  சம்பவம்  நடந்தது  போல்  திட்டமிட்டவர்கள்  மதுரையிலும்  கைது: மதுரையிலும் 4 பேரை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறியதாவது: மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ஷேக்முகமது,19, கல்லூரி மாணவர் தாகா முகமது, 20, தெற்குவாசல் மீன்வியாபாரி நசீர்,22, நெல்பேட்டை மீன்வியாபாரி சம்சுதீன், 25, கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், நேற்று திண்டுக்கல்லில் நடந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு செல்ல முடிவு செய்திருந்தனர். செல்லும் வழியில், திண்டுக்கல் நகர் பகுதியில், மக்கள் கூடும் இடங்களில், பஸ் ஓட்டி வரும் டிரைவர்கள் மீது ஆணிகளை கொண்ட “பைப்’களை வீசி, விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தனர். அங்கு முடியாதபட்சத்தில், மதுரை அவனியாபுரம் “ரிங்’ ரோட்டில் திட்டத்தை நிறைவேற்ற இருந்தனர். காரணம், மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டி ஒருவர் கொல்லப்பட்டதற்கு பழிக்குப்பழியாக சம்பவம் நடந்தது போல், போலீஸ் கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டிருந்தனர். இவ்வாறு, போலீசார் கூறினர்.

டிசம்பர் 6ம் தேதி – பீதி கிளப்பும், பொது மக்களை தொந்தரவு செய்யும் தினமாக மாறி வருவது: இந்த வருடம் அம்பேத்கரை மறந்து விட்டனர். வழக்கம் போல இத்தினம் ரெயில்வே மற்றும் பேருந்து நிலையங்களில் கெடுபிடி இருந்தது. பொது மக்கள் தொல்லைக்குள்ளானார்கள். கோவில்களில் கூட பக்தர்கள் அத்தகைய தொல்லைகளை அனுபவிக்க வேண்டியிருந்தது. யாரோ குண்டு வைத்து விடுவார்கள் என்று தான், இத்தகைய சோதனகள். பிறகு, பொது மக்கள் மனங்களில் யார் குண்டு வைப்பார்கள் என்று அறிய மாட்டார்களா அல்லது அவர்களைப் பற்றி அடையாளம் காணமாட்டார்களா. இத்தகைய போராட்டங்களால் முஸ்லிம்கள் சாதிப்பது என்ன என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இக்காலப் பிரசார யுகத்தில், விளம்பரத்திற்காக, இவ்வாறெல்லாம் செய்யலாம், ஆனால், தொடர்ந்து தொல்லகளுக்குள்ளாகும் பொது மக்களின் மனங்களில் முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வேதபிரகாஷ்

© 07-12-2013


[5] தினமணி, பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்த சதி செய்ததாக 6 பேர் கைது, By திண்டுக்கல், First Published : 07 December 2013 12:17 AM IST

[6] தினத்தந்தி, பாபர்மசூதிஇடிப்புதினத்தில்பொதுஅமைதியைகுலைக்கசதித்திட்டம்தீட்டிய 6 பேர்கைதுதிண்டுக்கல்லில்பரபரப்பு, பதிவு செய்த நாள் : Dec 06 | 08:51 pm

[9] தினமலர், ஆணிகளைஎறிந்துபொதுமக்களைகொல்லசதி: மதுரை, திண்டுக்கல்லில் 10 பேர்கைது, பதிவு செய்த நாள் : டிசம்பர் 06,2013,23:01 IST

சிதம்பரத்தின் முகமூடி கிழிகிறது: இஸ்ரத் ஜஹான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிதான்: சொல்வது தீவிரவாதி டேவிட் ஹெட்லி!

ஜூலை 5, 2010

சிதம்பரத்தின் முகமூடி கிழிகிறது: இஸ்ரத் ஜஹான் லஷ்கர் தொய்பா தீவிரவாதிதான்: சொல்வது தீவிரவாதி டேவிட் ஹெட்லி

ஜிஹாதித் தீவிரவாதியே ஃபிதாயீன்  என்று ஒப்புக்கொள்கிறான்: அகமதாபாத்தில் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்ட இஸ்ரத் ஜஹான் என்ற பெண், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிதான் என்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளான. மும்பையை சேர்ந்த இஸ்ரத் ஜஹான், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காவல்துறையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இஸ்ரத் ஜஹான் லஷ்கர் இயக்கத்தை சேர்ந்தவர் என்று குஜராத் மாநில காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால் அதனை மறுத்திருந்த இஸ்ரத் ஜஹான் குடும்பத்தினர், அவள் கல்லூரி மாணவி மட்டுமே என்று கூறியிருந்தனர்.  இந்நிலையில், மும்பை தாக்குதலில் தொடர்புடையவனும், அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதியுமான டேவிட் ஹெட்லியிடம், அண்மையில் இந்தியாவில் இருந்து சென்ற தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் சட்டத்துறையை சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது.  அப்போது இஸ்ரத் ஜஹான் என்ற பெண், லஷ்கர் இ தொய்பா தற்கொலை தீவிரவாதிதான் என்று ஹெட்லி கூறியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன[1].

இஸ்ரத்-தீவிரவாதிகளுடன்-கொல்லப்பட்டது

இஸ்ரத்-தீவிரவாதிகளுடன்-கொல்லப்பட்டது

சிதம்பரம் பொய் சொன்னாரா, உள்துரை அமைச்சரின் புரட்டா இல்லை, தீவிரவாதிகளுக்கு ஆதரவா? இஸ்ரத் ஜஹான் லஸ்கர்-இ-தொய்பாவின் ஆள்தான் என்று டேவிட் ஹெட்லி ஒப்புக்கொண்டது, சிதம்பரம் பொய் சொன்னதாக ஆகிறது. முஜாம்மில் என்ற இந்திய லஷ்கர் பொறுப்பாளி தான் அவளை அத்தகைய தீவிரவாத வேலைக்கு ஆள் எடுத்ததாக ஒப்புக்கொண்டான். இவளைத்தவிர மேலும் நான்கு பெண்களை மனித வெடிகுண்டுகளாக – ஃபிதாயீன் – தேர்ந்தெடுத்தான்[2]. ஹெட்லுக்கு இந்த எல்லா பெண்களிடமும் தொடர்பு இருந்ததாகவும், அவன் தான் அத்தகைய தீவிரவாத வேலைகளுக்கு அனுப்பிவைத்ததாகவும் ஒப்புக் கொண்டான்[3]. இனி சிதம்பரம் மற்ற அறிவு ஜீவிகள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

Gopinatha_pillai_Javeds-father

Gopinatha_pillai_Javeds-father

ஜேவித் ஷேய்க் (பிராணேஷ் பிள்ளை)கின் பெற்றோர்கள் தொலைக்காட்சி செனல்களில் பேசியதை நினைவில் கொள்ளவெஏண்டும் : இஸ்ரத் ஜஹான், ஜேவித் ஷேய்க் (பிராணேஷ் பிள்ளை) மற்றும் இரண்டு பாகிஸ்தானிய ஆட்கள் – அஜ்மத் அலி மற்றும் ஜிஷான் ஜோஹர் அப்துல் கனி முதகியோர் ஜூன் மாதம் 15, 2004ல் போலீஸாரால் சுட்டுக் கொள்ளப்பட்டனர். அப்பொழுது போலீஸாருக்கு, இவர்கள் சதிதிட்டம் தீட்டி நரேந்திர மோடியைக் கொலைசெய்ய புறப்பட்டு வந்ததாக செய்தி கிடைத்தது[4]. அப்பொழுது பிராணேஷ் பிள்ளையின் பெற்றோர் தமது பிள்ளை தீவிரவாதி கிடையாது என்றேல்லாம் வாதாடினர்[5]. அவர்கள் தமது மகன் ஏதோ “இந்து” என்ற ரீதியில்தான் தொலைக்காட்சி செனல்களுக்கும் பரபரப்பாக பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது தீஸ்தா செதல்வாத் என்ற செக்யூலரிஸ தீவிரவாதிதான், அவர்கள் தீவிரவாதிகள் இல்லை, பால்குடுக்கும் குழந்தைகள், அநியாயமாக என்கவுண்டர் என்று போட்டுத் தள்ளீவிட்டனர் என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு சவுதி அரேபியாவில் உள்ள கூட்டத்திற்கும் காங்கிரஸுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இஸ்ரத்தின் தாயார் ஷமிமா கௌஸர் ஷேய்க் வாசனைத் திரவியகங்கள் என்ற கம்பெனியின் வியாபார வளர்ச்சியாளராக இருந்ததாக குஜராத் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்[6].

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு2

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு2

மத்திய அரசின் புலனாய்வுத் தகவல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மாநில அரசுகள் முடிவுகட்டிவிடக் கூடாது: வாஷிங்டன், செப். 11, 2009:   போலியான என்கவுன்டர் மூலம் இஸ்ரத் ஜஹான் கொல்லப்பட்டதற்கு குஜராத் மாநில அரசுதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார்[7]. அமெரிக்காவுக்கு நான்கு நாள் பயணமாக வந்திருந்த அவர், வாஷிங்டனில் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனைச் சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின்போது இதைக் குறிப்பிட்டார்.

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு

இஸ்ரத்-ஜஹான்-அழகிய-வெடிகுண்டு

சிதம்பரத்தின் வக்காலத்து: குஜராத் மாநிலத்தில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற என்கவுன்டர் ஒன்றில் இஸ்ரத் ஜஹான் மற்றும் அவரது சகாக்கள் மூன்று பேர் போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணையில் இது போலி என்கவுன்டர் என்பது தெரியவந்தது. நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் இது மேற்கொள்ளப்பட்டதாக குஜராத் மாநில அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. குஜராத் மாநிலத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுன்டர் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில்: “மத்திய அரசின் புலனாய்வுத் தகவல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மாநில அரசுகள் முடிவுகட்டிவிடக் கூடாது. அதுவே இறுதியான ஆதாரமாகவும் ஆகிவிடாது. மத்திய புலனாய்வு அமைப்பானது தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் பகிர்ந்து கொள்ளும் அந்த வகையில்தான் குஜராத் மாநிலத்துக்கும் தகவல்கள் தரப்பட்டன. இதையே இறுதி முடிவாக எடுத்துக் கொண்டு அம்மாநில அரசு செயல்பட்டால் அது மிகவும் துரதிருஷ்டவசமானது. மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் ஒருவரைக் கொலை செய்வதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்றார் சிதம்பரம்.

ishrat-jahan-family

ishrat-jahan-family

மத்திய புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் அடிப்படையில்தான் ஒருவரைக் கொலை செய்வதாகக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்: அதாவது சிதம்பரத்தைப் போல, மத்திய புலனாய்வு அமைப்பு கூட தவறான தகவல் அளிக்கும் என்றால், அது அந்த அமைப்பையே கேவலப்படுத்துவது போலல்லவா இருக்கிறது? எந்த நாட்டிலாவது, ஒரு உள்துறை அமைச்சர் இப்படி மத்திய புலனாய்வு அமைப்பு பற்றி இவ்வளவு கேவலாமாக பேசியிருக்க முடியாது. தனது மாநில போலீஸார் வரம்பு மீறி மேற்கொண்ட செயலை நியாயப்படுத்தும் வகையில் மத்திய அரசு மீது குஜராத் மாநில அரசு பழிசுமத்தியுள்ளது. இது மிகவும் மோசமான முன்னுதாரணம். குஜராத் மாநிலத்தில் போலீஸ் நிர்வாகம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். நீதிமன்றத்தில் குஜராத் மாநில அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், இஸ்ரத் ஜஹான் மற்றும் அவரது சகாக்கள் மூவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது. இதனாலேயே மாநில காவல்துறையினர் என்கவுன்டர் மூலம் அவர்களை சுட்டுக் கொன்றதாகக் குறிப்பிட்டனர். புலனாய்வுத் தகவலை முடிவான ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது வெறும் தகவல்தான். மத்திய புலனாய்வு அமைப்பு தகவலை மாநில அரசிடம் பகிர்ந்து கொண்டுள்ளது. அதுவே ஆதாரமாகாது என்றார் சிதம்பரம். 2004-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்வதற்கு வந்ததாக இஸ்ரத் ஜாவேத், குலாம் ஷேக் என்கிற பிரானேஷ் குமார் பிள்ளை, அம்ஜத் அலி என்கிற ராஜ்குமார், அக்பர் அலி ராணா என்கிர ஜிசான் ஜோஹர் அப்துல் கனி ஆகியோரை போலீஸôர் நகருக்கு வெளியே சுட்டுக் கொன்றனர்.


[1] http://www.24dunia.com/tamil-news/shownews/……..%AE%BF/409719.html

[2] http://www.indianexpress.com/comments/ishrat-wouldbe-modi-assassin-was-an-let-fidayeen-headly/642435

[3] http://indiatoday.intoday.in/site/Story/104236/India/headley-claims-ishrat-was-lashkar-operative.html

[4] http://www.ndtv.com/article/india/ishrat-jahan-was-an-let-suicide-bomber-headley-to-nia-35665?from=rightpanel

[5] Read more at: http://www.ndtv.com/article/india/ishrat-jahan-was-an-let-suicide-bomber-headley-to-nia-35665?from=rightpanel&cp

[6] http://www.indianexpress.com/news/ishrat-wouldbe-modi-assassin-was-an-let-fidayeen-headly/642435/

[7] தினமணி, புலனாய்வு தகவல்களை மட்டும் வைத்து என்கவுன்டர் நடத்தக் கூடாது‘: சிதம்பரம், First Published : 12 Sep 2009 12:07:00 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=……………..MainSectionID=131&SEO=&SectionName=World

அபு ஜிண்டால் யார்?

பிப்ரவரி 26, 2010
மும்பைத் தாக்குதலில் ஒரு இந்தியர் தொடர்பு : சிதம்பரம் தகவல்
பிப்ரவரி 05,2010,00:00  IST
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6507
இந்தியாவிற்கு-எதிராக-ஜிஹாத்

இந்தியாவிற்கு-எதிராக-ஜிஹாத்

அபு சிண்டால் யார், அபு ஜண்டால் யார், அபு யார், என்பதைப் பற்றியெல்லாம் இந்தியர்களுக்கு அறிவிக்காமல், இந்த உள்துறைக் கூறுவது, கீழே பார்க்கவும்!
Front page news and headlines today
புதுடில்லி : “”மும்பைத் தாக்குதலில் இந்தியர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம்,” என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: மும்பை பயங்கரவாத தாக்குதலில், இந்தியர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என, நம்பப்படுகிறது. இருந்தாலும், பாகிஸ்தானிடமிருந்து குரல் மாதிரிகளைப் பெற்றுப் பரிசோதித்தால்தான் அதை உறுதி செய்ய முடியும். மேலும், தாக்குதலை கையாண்ட அந்த நபரின் பெயர் அபு ஜிண்டலாக இருக்கலாம் என, முடிவுக்கு வந்துள்ளோம். இருந்தாலும், அது அந்த நபரின் உண்மையான பெயர் அல்ல. குரல் மாதிரிகளைப் பெற்று பரிசோதிக்காத வரை இந்த விஷயத்தில் தெளிவான முடிவுக்கு வர இயலாது.
Abu Jandal

Abu Jandal

அபு ஜண்டால், அபு ஜிண்டால், ……….என்றால் கொலைகாரன் என்று பொருளாம்!

சரி, இதே பெயரில் பலர் உள்ளனராம்!

பிறகு எப்படி நமது சிதம்பரம் ரகசியத்தைக் கண்டு பிடித்தது?

AbuJandal2 Nasser al Bahri, Abu Jandal, “The Killer”

His “career as a professional holy warrior” had begun.

மும்பைத் தாக்குதலை கையாண்ட அந்த நபரின் குரல் மாதிரிகளைத் தர பாகிஸ்தான் மறுக்கிறது. இருந்தாலும், உள்துறை அமைச்சராக இருக்கும் நான், இந்த விஷயத்தில் வதந்திகளைப் பரப்ப முடியாது. சம்பந்தப்பட்ட அந்த நபர், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஊடுருவி, நீண்ட காலம் இங்கு தங்கியிருந்து, இங்குள்ளவர்களிடம் பழகி அதன்பின் சதி வேலையை அரங்கேற்றி இருக்கலாம். இல்லையெனில், இங்கிருந்து பாகிஸ்தானுக்கு சென்று, அங்கு பயங்கரவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு, மும்பை தாக்குதலுக்கு அவர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அபு ஜிண்டால் என நம்பப்படும் அந்த நபரின் உண்மையான பெயர், சையது சபீயுதீன் அன்சாரியாக இருக்கலாம். அவுரங்காபாத் ஆயுத வழக்கு மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல முயன்ற வழக்கு போன்றவற்றில் அந்த நபருக்கு தொடர்பு இருக்கலாம். இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

Photos: Brent Stirton / Gettty Images (left); Bryant MacDougall / AP
Osama Bin Laden’s former driver, Al-Bahri (left), was one of the first graduates of a Yemeni rehabilitation program. He calls it ‘completely useless.’ Right, Yemeni gun dealers wait for customers.

t