Posted tagged ‘சாயாலி’

மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்!

மே 2, 2010

மொஹம்மது மௌதூத் கான்: நான் தான் கடவுள், என்னுடைய ஆறு மனைவிகள் தேவதைகள்!

மொஹம்மது மௌதூத் கான் (Mohammed Maodood Ahmed Khan) தன்னை கடவுள் என்று சொல்லிக் கொண்டான், “நான் கிருத்துவர்களுக்கு ஏசு கிருஸ்து; இந்துக்களுக்கு சிவா; முஸ்லீம்களுக்கு மஸிஹா. நான் உலகத்தைக் காப்பாற்றி இருப்பேன்“, என்றெல்லாம் சொன்னனாம், அவன் மார்ச் 8ம் தேதி 2010 கைது செய்யப் பட்டபோது!

முஹம்மது கான் / அஹமது கான் தனது மனைகள் – தேவதைகள் – காயத்ரி, சதி, பார்வதி, கங்கா, துர்கா மற்றும் மஹாகாளி என்றானாம். அனால், உண்மையில்

1. இவனது முதல் மனைவி நஜ்மா ஃபாதிமா ஆவாள், அவளுடன் ரியாதில் வாழ்ந்து வந்தானாம்.

2, இரண்டாவது மனைவி காயத்ரி தேவி, பத்தே நாட்களில் ஓடிவிட்டாளாம்.

3. சஜிதா என்ற மூன்றாவது மனைவி பதினான்கு நாட்கள் இருந்தாளாம். அந்த  குருகிய காலத்திலேயே முகல் ரெஸிடன்ஸி என்ற இடத்தில் இருந்த அடுக்கு மாடி வீட்டை தனது பெயரில் எழுதி வாங்கிக் கொண்டானாம்.

4. நான்காவது மனைவி சும்ரனா. அவள் இவன் கொடுமை தாங்காமலேயே இறந்து விட்டாளாம்.

5. ஐந்தாவது மனைவு தஸீன் மட்டும் இவனுடனே இருக்கிறாளாம்.

6. ஆறாவது மனைவி ஸபானா, இவன் அவளை கொலை செய்ய முயற்சித்தபோது தப்பித்து ஓடிவிட்டாளாம்.

இவ்வாறு, இவன் பணக்காரப் பெண்களாகத் தேர்ந்தெடுத்து, பல லட்சங்களை சுருட்டிக் கொண்டு மறைந்து விடுவானாம்.

போலீஸ் சொல்வது என்னவென்றால், “ஏமாற்றுவேலைகளுக்காக இந்த கான் பல தடவை கைது செய்யப் ப்ட்டிருக்கிறான். பஞ்சாபில் கடியனா போலீஸாரால், மத ஒற்றுமை குளைக்கும் விதத்தில் பேசியதற்காக கைது செய்யப் பட்டிருக்கிறான். அவன் ஆறு பெண்களை மணந்து கொண்டு ஒன்பது கொழந்தைகளைப் பெற்றெடுத்து இருக்கிறான். ஆனால், எல்லா மனைவிகளும் இவனை விட்டு ஓடிபோய் விட்டனராம்“. அவனுடைய டார்ச்சர் / கொடுமை தாங்க முடியவில்லை என்று ஓடினராம்.

வெஸ்லி என்பவரின் கூற்றுப்படி, “ஜெயிலிலிருந்துவெளியே வந்த பிறகும் அதே மாதிரியான வேலைகளை மறுபடியும் செய்து வந்தானாம்“.

சில மாதங்களுக்கு முன்பாக, எம். ஜே. மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த  யாஸ்மீன் என்ற டாக்டரிடமிருந்து, ஒரு கிலோ எடையுள்ள தங்கநகைகளைத் திருட்டுத்தனமாக கவர்ந்துள்ளானாம். அது தவிர தனக்காக ஒரு மனையை ரரூ.25 லட்சங்களுக்குப் பதிவு செய்துத் தரச் சொல்லியுள்ளான்.

இதே மாதிரி பஸீர்பாக்கைச் சேர்ந்த லதா என்ற பெண்மணியிடமிருந்து ரூ. ஆறு லட்சம் அபகரித்துள்ளான். பிறகு புகார் பேரில் அவன்  மார்ச் 8ம் தேதி சிறப்புப் போலீஸ் பிரிவால் பிடிபட்டான்.

ஆகமொத்தம், இவன் நிச்சயமாக செக்ஸ் மற்றும் பணத்திற்காகத் தான் இவ்வாறு சாமியார் வேடம் போட்டு திரிந்துள்ளான் எனத் தெரிகின்றது. ஆனால், ஊடகங்கள் ஏன் மௌனமாக இருந்தன, இப்பொழுது லேசாக வெளிவிடுகின்றன என்று புரியவில்லை.

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திரா கோர்ட்டு, சானியா, சோயிப் மாலிக் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு!

ஏப்ரல் 22, 2010

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திரா கோர்ட்டு, சானியா, சோயிப் மாலிக் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு!

முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திரா கோர்ட்டு, சானியா, சோயிப் மாலிக் உட்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்ய நேற்று உத்தரவு இட்டது.  மஸ்லுமின்-உம்மதை முகமதியா என்ற முஸ்லிம் அமைப்பின் தலைவர் மௌலிம் மோஸின் பின் உஸைன், சோயப் மாலிக்கின் தந்தையின் பெயர்கள் இரண்டு நபர்கள் இருப்பது மாதிரி குறிப்பிடப் படுகின்றன. சானியா, சானியா தந்தை- இம்ரான் மிர்ஜா, அஜாருத்தீன், இரு காஜிக்கள் உட்பட 14 பேர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தினமலரில் 23-04-2010 அன்றைய செய்தி:

சோயப் – சானியா மீது புது வழக்கு: அறிக்கை தர போலீசுக்கு உத்தரவு
ஏப்ரல் 23,2010,00:00  IST

Court news detail

ஐதராபாத்: முஸ்லிம் மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் – டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மீது தொடரப்பட்ட புதிய வழக்கு தொடர்பாக அறிக்கை அளிக்கும் படி ஐதராபாத் போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், சானியா மிர்சா திருமணம் கடந்த 12ம் தேதி ஐதராபாத்தில் நடந்தது. ஆனால், சோயப் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும், அவரால் பலமுறை கருச்சிதைவு செய்து கொண்டதாகவும், ஐதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக் என்ற பெண், போலீசில் புகார் செய்தார்.  இதனால், சோயப் பின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்யும் சூழல் உருவானது. ஆந்திர அமைச்சர், மாநில காங்கிரஸ் தலைவர், முஸ்லிம் பெரியவர்கள் தலையிட்டு பிரச்னைக்கு முடிவு கட்டினர். இதையடுத்து சோயப், ஆயிஷாவை, ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்தார். உடனடியாக சானியாவை திருமணம் செய்து கொண்டார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் சோயப் வீட்டு சார்பில் இந்த வாரம் திருமண வரவேற்பு நடக்க உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் சோயப்பிடம் ஐதராபாத் போலீசார் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தனர்.

‘சட்டப்படி ஆயிஷாவை, சோயப் விவாகரத்து செய்யவில்லை. இது முஸ்லிம் மதத்தை அவமதிப்பதாக உள்ளது’ எனக் கூறி, ஐதராபாத்தைச் சேர்ந்த மஸ்லுமின் -இ-உமாதோ முகமதியா என்ற அமைப்பு உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் சோயப், சானியா, சானியாவின் தந்தை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன், ஐதராபாத்தைச் சேர்ந்த இரண்டு காஜிகள் உள்ளிட்ட 14 பேர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஐதராபாத் கூடுதல் மெட்ரோபாலிடன் தலைமை மாஜிஸ்திரேட் விசாரித்தார். மனுவில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து விசாரித்து, அடுத்த மாதம் 26ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கும் படி பஞ்சாரா ஹில்ஸ் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டுள்ளார். ‘கோர்ட் உத்தரவை தொடர்ந்து புகார் கூறப்பட்டுள்ள 14 பேரிடமும் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்’ என, துணை கமிஷனர் ஸ்டீபன் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.

சானியா திருமணம் – படங்கள்!

ஏப்ரல் 13, 2010

சானியா திருமணம் – படங்கள்!

மணமகள் அழைத்துச் செல்லப் படுகிறாள்

மணமகள் அழைத்துச் செல்லப் படுகிறாள்

திருமணத்திற்காக மணமகள் அலங்கரிக்கப் பட்டு அழைத்துச் செல்லப் படுகிறாள்.

மாப்பிள்ளை சடங்கு

மாப்பிள்ளை சடங்கு

மாமனார் ஒப்புதல் அளிக்கிறார்.

மணமகன் மணமகளுக்கு மோதிரம் அணிவித்தல்!

மணமகன் மணமகளுக்கு மோதிரம் அணிவித்தல்!

சோயப் சானியாவிற்கு மோதிரம் அணிவித்தார். ஆமாம், அந்த கருமணி மாலையும் அவர்தான் அணிவித்தாரா?

பெண்ணை வாழ்த்துதல்

பெண்ணை வாழ்த்துதல்

மணமகள் ஆசிர்வதிக்கப் படுகிறாள்.

மணமகன் வாழ்த்தப்படுதல்

மணமகன் வாழ்த்தப்படுதல்

மணமகனும் வாழ்த்தப்படுகிறான்.

மகிழ்ச்சியான நேரம்

மகிழ்ச்சியான நேரம்

தோழி கிண்டல் செய்கிறாரா?

ஜோடியாக நிற்கிறார்கள்

ஜோடியாக நிற்கிறார்கள்

மணமகன், மணமகள் ஜோடியாக நிற்கிறார்கள்

குடும்பதுடன் ஃபோட்டோ

குடும்பதுடன் ஃபோட்டோ

குடும்பத்துடன் புகைப்படம்!

ஒருவழியாக முடிந்து விட்டது - இனி ஜாலிதான்

ஒருவழியாக முடிந்து விட்டது - இனி ஜாலிதான்

சானியா திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்து விட்டது!

பாவம் இந்தியர்கள்

பாவம் இந்தியர்கள்

பாவம் இந்தியர்கள் – எட்டித்தான் பார்க்கமுடியும் போல இருக்கிறது! பார்த்தாலும் என்னத் தெரியும்?

சானியா இந்தியாவிற்குக் கொடுப்பது?

சானியா இந்தியாவிற்குக் கொடுப்பது?

அதாவது, இங்கு சானியா என்ற தனிப்பட்ட நபரைப் பற்றிக் கவலைப் படவில்லை. ஆனால், அப்பெண்ணை வைதுக் கொண்டு பலவிதமாக ஊடகங்கள், மற்றவர்கள், ஏன் அந்நிய சக்திகளும் விளையோடும் போதுதான் இந்தியர்களுக்கும் கவையாக இருக்கிறது.

இதற்கு, பால் தாக்கரேயும், பிரமோத் முத்தாலிக்கும்…………………..யாரும் தேவையில்லை.

ஆமாம் நம் சன் – டிவிக்காரகள் ஏன் அமைதியாக இருந்துவிட்டார்கள்?

அவர்களது “நிஜம்”, “பூதக் கண்ணாடி” கூட்டங்கள் எல்லாம் தூங்கி விட்டனனா அல்லது சுருட்டிக் கொண்டு படுத்துவிட்டனவா? இல்லை, அவர்களுக்கும் ஃபத்வா கொடுத்துவிட்டார்களா?

நிக்காஹ் 15ம் தேதி வைத்திருந்தாலும், ஏதோ காரணங்களுக்காக முன் கூட்டியே நடத்தி விடுவது என்று ஞாயிற்றுக்கிழமை திர்மானிக்கப் பட்டது. அன்றுதான் சுன்னி உலேமா வாரியமும் ஃபத்வா கொடுத்தது. ஆகவே முன்னதாக நடத்தி விட்டால் எல்லா விமர்சனங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று தீர்மானித்ததாகத் தெரிகிறது.

ஆகவே மெஹந்தி 14ம் தேதி, வரவேற்பு 15ம் தேதி என்று குறிப்பிட்டபடி நடக்கும். ஆகவே மற்ற சடங்குகளிக்கு முன்பாகவே நிக்காஹ் நடந்ததே பாரம்பரியத்திலிருந்து மிகவும் விலகியே நடந்ததுள்ளது கண்டு பெரியவர்கள் குறை சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாது மெஹந்தி செய்வது இஸ்லாமிய வழக்கம் இல்லையென்றலும், முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்றும் கூறப்பட்டது. அப்படியே மெஹந்தி வைத்துக் கொண்டாலும், திருமணத்திற்கு முந்தைய நாளில் தான் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் சொல்லப் பட்டது.

சனியான சானியா பிரச்சினை – அந்நியருக்கு என்ன இதில் விருப்பம்?

ஏப்ரல் 11, 2010

சனியான சானியா பிரச்சினை – அந்நியருக்கு என்ன இதில் விருப்பம்?

இந்திய ஊடகங்களுக்குத்தான் விவஸ்தையில்லை, தனிநபர் பிரச்சினை, படுக்கையறை ஊடல், எல்லைகள் கடந்த காதல்………………எல்லாவற்றையும் உணர்ச்சிகள் ததும்ப, உச்சிக்கு ஏறும் வகையில் விஷயங்களை அலசிவிடுகின்றன என்றால், அந்நிய ஊடகங்ளுக்கும் அரிப்புதான் போலும்.

ஆனால், இதை இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையாக்க முயல்கின்றனர் எனத்தெரிகிறது.

பாகிஸ்தானைப் பொருத்த வரைக்கும் கேட்கவே வேண்டாம், ஏனெனில் இந்தியா ஒரு எதிரி நாடு, சண்டையில் உள்ள நாடு (தார்-உல்-ஹரப்) – அதை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும்……எனவே ஒரு பாகிஸ்தானியன் அங்கிருந்து ஒரு பெண்ணை தூக்கிக் கொண்டு வருகிறான் என்றால் சந்தோஷம் தான். அவர்களது நாளிதழ்கள் பூரிப்புடன் எழுதி தள்ளி விடுகின்றன.

முன்பு ரீனா ராய் என்ற இந்தி நடிகை 1983ல் மோஷின்கான் என்ற கிரெக்கெட் வீரரை மணந்தபோது, இதே மாதிரியான பிரச்சினை வந்தது. ஆனால் அமைதியாக அடங்கி விட்டது. சொல்லப்போனால், நிறைய பேருக்கு அந்த விஷயமே தெரியாது.

முஸ்லீம்களுக்கு தாங்கள் முன்னர் இந்தியர்களாக இருந்தோம், இந்துக்களாக இருந்தோம், அதே கலாச்சாரம், பன்பாடு, பாரம்பரியம், நாகரிகத்தைச் சேர்ந்திருந்தோம் என்ற உண்மையை மனத்தளவில் வைத்திருந்தாலும், இத்தகைய பகை உணர்வுகளைத் தாண்டி நட்பை வளர்க்க முடியும்.

விஞ்ஞானம், தொழிற்நுட்பங்கள் பெருகும் போது, தூரங்கள் குறைகின்றன. ஒருவர் மற்றவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஏதுவாகிறது.

ஆகவே பிரச்சாரம், பொய்களை வளர்ப்பது, வதந்திகளை பரப்புவது,……………முதலியவை எடுபடாமல் போகும்.

ஆயிரங்காலத்து பந்தத்தை, 60-70 கால விரோதம் பாதிக்கிறது என்றால், பாகிஸ்தானியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

அதே ஆயிரங்காலத்து பந்தத்தை, 300 வருட கால மத மாற்றம் விரோதத்தை இன்னும் ஊக்குவிக்கிறது என்றால், அதைப் பற்றி முஸ்லீம்கள் அறிய வேண்டாமா?

எதற்காக அந்நிய சதிகளின் சதிகளுக்கு நாம் துணை போக வேண்டும்?

முகமது ஆசிப்பும், காதலி வீணா மாலிக்கும்: ஊடல்!

ஏப்ரல் 9, 2010

ஆசிப் மீது நடிகை வீணா மோசடி புகார்

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=5624&value3=I 09-04-2010 IST

லாகூர்: சோயப் மாலிக்கை தொடர்ந்து, மற்றொரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிப்பும் சிக்கலில் மாட்டியுள்ளார். பணப்பிரச்னை காரணமாக, ஆசிப் மற்றும் அவரது முன்னாள் காதலி வீணா மாலிக் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆசிப் கொடுத்த காசோலை “பவுன்ஸ்’ ஆனதால், சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளார் வீணா.
Asif-Veena-scandal

Asif-Veena-scandal

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய வீரர் முகமது ஆசிப். ஊக்கமருந்து உட்கொண்டது (2006), போதை பொருள் வைத்திருந்தது (2008) என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியவர். பல முறை தடையை எதிர்கொண்டவர். கடந்த ஆண்டு அணிக்கு திரும்பிய இவர், தற்போது போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.  சமீபத்தில் லாகூரை சேர்ந்த ஹினா என்பவரை ஆசிப்புக்கு திருமணம் செய்ய அவரது குடும்பத்தார் முடிவு செய்தனர். 5 மாதத்துக்குப் பின் இவர்களது திருமணம் முறைப்படி நடைபெற உள்ளது. இந்நிலையில் அவரது முன்னாள் காதலியும் பாகிஸ்தான் நடிகையுமான வீணா மாலிக் மூலம் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
Veena-asif-scandal

Veena-asif-scandal

ஆசிப் தடையை சந்தித்த நேரங்களில், இவருக்கு ஆதரவாக இருந்துள்ளார் வீணா. அப்போது இருவரும் நெருக்கமாக பழகி உள்ளனர். ஆசிப்புக்கு சுமார் 2 கோடி ரூபாய் வரை பண உதவி செய்துள்ளதாக தெரிகிறது. ஆசிப், வீணா இருவரும் துபாயில் திருமணம் செய்து கொண்டதாகவும் செய்தி வெளியானது. பின்னர் ஆசிப் இதனை மறுத்தார்.
Asif-Veena-sex-scam-money

Asif-Veena-sex-scam-money

மோசடி புகார்: தற்போது ஆசிப் வேறு ஒருவரை திருமணம் செய்ய உள்ள நிலையில், தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார் வீணா. ரூ. 40 மற்றும் 75 லட்சத்துக்கான இரண்டு காசோலைகளை ஆசிப், வீணாவுக்கு அனுப்பியுள்ளார். வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால், காசோலைகள் திரும்பியுள்ளன. இதனால் வெறுப்படைந்த வீணா, ஆசிப் மீது மோசடி புகார் கூறி, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
குற்றச்சாட்டு: இது குறித்து வீணா மாலிக் கூறியது: ஆசிப் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் முடிப்பது பற்றி எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கடந்த 2008 ம் ஆண்டு, ஆசிப் பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்த போது, வழக்கு செலவு உட்பட பல காரியங்களுக்காக பண உதவி செய்துள்ளேன். ஆனால் இதுவரை எந்த பணத்தையும் அவர் திரும்ப தரவில்லை. அவருக்கு நான் கடனாகத்தான் பணம் கொடுத்தேன். எனது பணம் வேண்டும். நான் வழக்கு தொடர்ந்தால், எங்களுக்கு இடையில் என்ன உறவு இருக்கிறது என்ற உண்மை வெளிப்படும். என்னை மோசடி செய்யும் முயற்சியை ஆசிப் கைவிட வேண்டும். இவ்வாறு வீனா தெரிவித்தார்.
காசோலை திருட்டு?
வீணாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ஆசிப் கூறுகையில்,”” கடந்த பிப்ரவரி மாதம் எனது வீட்டில் இருந்த வங்கி காசோலைகளை, வீணா திருடி விட்டார். இது குறித்து போலீசில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் ஏன் வீணாவிடம் பணம் வாங்க வேண்டும். நான் அணியிலிருந்து நீக்கப்பட்ட சமயங்களில், ஐ.பி.எல்., தொடர் மூலம் நல்ல வருமானம் எனக்கு கிடைத்தது. நான் வேறு ஒருவரை திருமணம் செய்ய உள்ளதால், பழிவாங்கும் நோக்குடன் வீணனா செயல்பட்டு வருகிறார்,” என்றார்.

ரூ.15,000/- கொடுக்கும் மாலிக்கும், 5000 கொடுக்கும் குஞ்சும்!

ஏப்ரல் 8, 2010

ரூ.15,000/- கொடுக்கும் மாலிக்கும், 5000 கொடுக்கும் குஞ்சும்!

விவேக் ஜோக்கில் அடிக்கடி சன் – டிவி மற்ற எல்லா டிவிக்களும் ஓலிபரப்பி பரவசத்தில் ஆழ்த்தி, பிள்ளைகள் வேறு அதை ஒப்பிவித்து, மிகவும் பிரபலமான, “மனைர் குஞ்சு” ஒன்று உள்ளது.

அதில் ஏதோ ரூ.5000/- கொடுத்துவிட்டு கற்பழிப்பு செய்து, அதாவது கற்பழித்து விட்டு ரூ.5000 அபராதம் கொடுத்துத் தப்பித்துக் கொள்வது மாதிரியும், விவேக் குஞ்சை சுட்டு தண்டிப்பது மாதிரியும் இருக்கும்.

இப்பொழுது, பத்து நாட்களாக பொய்-மேல்-பொய் சொல்லி, இந்தியர்களுக்கு ஏதோ இதுதான் முக்கியமானப் பிரச்சினை போல, இந்த அசிங்கமான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு, ஒளிபரப்பி அவந் அவளுடன் இருந்தான், இவள்-இவனுடன் படுத்தான், கர்ப்பம் ஏற்பட்டது, கரு-கலைந்தது……………………………என்றெல்லாம் விவரமாக போட்டுவிட்டு, இப்பொழுது, தலாக் செய்து விட்டார், ரூ. 15,000/- கொடுப்பார் என்று கதையை முடித்துரிப்பது, நடந்த நிகழ்ச்சிகளை விட மிகவ்ய்ம் கேவலமாக இருக்கிறது.

இதெல்லாம், தனிப்பட்ட மனிதர்களின் பிரச்சினை என்றால், ஊடகங்களில் வரச் செய்திருக்கக் கூடாது.

அவ்வாறு விளக்கம் எல்லாம் கொடுத்திருக்கக் கூடாது.

மேல்தட்டு, பணக்கார, நவீன-நாகரிக மாந்தர்களின் உலகம், அவர்கலது எண்ணப்படி ஆண்-பெண்கள் கூடுவார்கள், உறவு வைத்துக் கொல்வார்கள், பிரிந்து விடுவார்கள்……………………..என்றெல்லாம் இருந்தால், ஏன் அத்தகைய “படுக்கையரை” அசிங்கங்களை ஊடகங்களில் எடுத்து வந்து, இம்மாதிரி தேவையற்ற முறையில் ஆபாச-விளம்பரம் பெறுகிறார்கள்.

அதுமட்டுமல்ல , மத கலவரம் என்று ஊரே அடங்கிக் கிடக்கும் போது, எதற்கிந்த அடங்காத காம-கல்யாண-கிரக்க-குறுகிய-கலாட்டா செய்திகல், படங்கள்……எல்லாம்…………….எந்த உண்மையை மறைக்க?

சாயாலியுடன் சரசம், ஆயிஷாவுடன் உறவு, சானியாவுடன் திருமணம்!

ஏப்ரல் 7, 2010

சாயாலி, ஆயிஷா, சானியா!

சாயாலியுடன் சரசம், ஆயிஷாவுடன் உறவு, சானியாவுடன் திருமணம்!

Shoaib Malik, Sayali Bhagat (Inset: Sania Mirza)சோஹைப் மாலிக், பெரிய கில்லாடியாக இருப்பார் போல இருக்கிகிறது.
முன்பு, சாயாலி பகத் என்ற நடிகையுடன் “டேடிங்” வைத்திருந்தாராம்!
இவர் முந்தைய “மிஸ் இந்தியா” ஆவார்.
இருவரும் ஹோட்டலில் பார்க்கப் பட்டார்களாம்!
அதே நேரத்தில்; தான், அந்த ஹைதராபாத் பெண் புகார் செய்தாளாம்!
அப்பொழுது சாயாலி சொன்னாளாம், “இல்லை அவர் என்றுமே ஒத்தைத்தான்”, என்று!

மாலிக் பலதடவை எல்லைகளைக் கடந்து வந்து சாயாலியைச் சந்தித்துள்ளான். அவள் தன்னுடைய “நெருக்கமான மற்றும் பிரியமான தோழி” என்றும் ஒப்புக்கொண்டுள்ளான்.

அப்பொழுது, எங்கு தங்கினான், என்ன செய்தான் என்ற விவரங்களை சாயாலி சொல்லவில்லை!

நன்றாக தாராளமாகத்தான் இருக்கிறார். ஆனால் ஆயிஷா விடவில்லை.

நிக்கநாம்மா காட்டி ஒரு பிடி பிடுத்து விட்டாள்.

முதலில் புளுகிய மாலிக், பிறகு உண்மையை ஒப்புக்கொண்டான்.

தலாக், தலாக், தலாக் – ஆமாம், இப்பொழுது மரியாதையாக விவாக ரத்து செய்து விட்டானாம்!

பிறகு எதற்கு இந்த கலாட்டா?

சானியாவுடன் இனி திருமணம் தான்!

ஆக மொத்தம் மாலிகிக்கிற்கு செம ஜாலி – மூன்று பெண்களுடன் சரசம், உறவு……………………எல்லாம்!

ஆகவே, சானியாவும் அப்படித்தான்!
நிச்சயதார்த்தம் பழைய காதலுடன்!
திருமணம், இன்னொருவனுடன்!
வாழ்க காதல்!
வாழ்க கற்பு!
வாழ்க ஆண்-பெண் சேர்ந்து வாழும் வாழ்க்கை! ஐ.பி.எல் என்றாலெ செம ஜாலிதான் போலிருக்கிறது!