Posted tagged ‘சங்கப் பரிவார்’

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

செப்ரெம்பர் 24, 2022

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முஸ்லிம்களுடனான உரையாடல் – உலகின் மிகப் பெரிய இமாம்களுக்கான அமைப்பான அகில இந்திய இமாம் அமைப்பு ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அழைப்பு விடுத்தது (2)

இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்: சந்திப்பில் மதரஸாவில் பயிலும் குழந்தைகளிடம் பேசிய மோகன் பாகவத், நாட்டின் மீதான அன்பையும் மனித வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். குழந்தைகளுக்கு மதரஸாவில் குரான் கற்பிக்கப்படுவது போல், இந்து மத வேதமான பகவத் கீதையையும் ஏன் கற்பிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், “இமயமலை முதல் குமரி வரை இந்தியா ஒன்றுதான். அதில் உள்ள அனைவரின் பாதைகளும் மதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும்,” என்று பேசினார். தொடர்ந்து மதரஸா நிர்வாகிகளிடம், “மதரஸாக்களில் கல்வி கற்கும் முஸ்லிம் சிறார்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்தி தெரியாததால், விமான நிலையம், ரயில் நிலையம் போன்றவற்றில் படிவத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. மதரஸாக்களில் நவீன அறிவைக் கற்பிக்க வேண்டும். ஒருமித்த கருத்து இல்லாத பிரச்சினைகள் விவாதிக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக வாழ விரும்புகிறோம் என்பதே அனைவராலும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது,” என்று பாகவத் பேசினார்.

மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் நடைபெற்றசந்திப்பு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் சந்திப்பு நடைபெற்றது[1]. பசுவதை, இழிவாக பேசுதல் உள்பட இரு சமூக முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[2]. தொடர்ந்து இது போன்ற சந்திப்புகள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் ஐந்து முஸ்லீம் சமூக தலைவர்களிடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரை மணி நேரம் திட்டமிடப்பட்ட சந்திப்பு 75 நிமிடங்கள் நீடித்தது. ஆர்எஸ்எஸ்யின் தற்காலிக டெல்லி அலுவலகமான உதாசீன் ஆசிரமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பகவத், சங்கத்தின் சா சர்கார்யவா கிருஷ்ண கோபால், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஒய் குரைஷி, முன்னாள் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் AMU துணைவேந்தர் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ஜமீர் உதீன் ஷா, ஆர்எல்டி தலைவர் ஷாகித் சித்திக், தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது: குரைஷி மற்றும் சித்திக் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தை சுமூகமான சூழலில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, முஸ்லிம் சமூகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க நான்கு மூத்த தலைவர்களை பகவத் நியமித்தார். எங்கள் பக்கத்தில், ஆர்எஸ்எஸ் உடனான பேச்சுவார்த்தையை தொடர முஸ்லீம் மூத்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை நாங்கள் நியமிக்க உள்ளோம்.” பசுவதை மற்றும் காஃபிர் (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குறிக்க பயன்படும் சொல்) போன்ற பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டது[3]. பசுவதை மற்றும் காஃபிர் குறித்து மக்கள் மகிழ்ச்சியடையவில்லை என்று பகவத் கூறினார்[4]. அதற்கு பதிலளித்த நாங்கள், “அதன் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. பசு வதையில் ஈடுபட்டால், சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினோம். காஃபிர் என்பது அராபிய மொழியில் நம்பிக்கையற்றவர்களை குறிக்க பயன்படுத்துவது. இது தீர்க்கப்பட முடியாத பிரச்சினை அல்ல என்று அவரிடம் கூறினோம். அதேபோல் இந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானியர் அல்லது ஜெகாதி என்று கூறும்போது நாங்கள் வருத்தமடைகிறோம்,” என்று கூறினோம்.

நூபுர் ஷர்மா விவகாரம் மற்றும் தொடர்ந்த வன்முறை: ஆர்எல்டி தேசிய துணைத் தலைவர் சித்திக் கூறுகையில், “நூபுர் ஷர்மா விவகாரம் நடந்தபோது ஆர்எஸ்எஸ் உடன் சந்திப்பை நாடினோம். பல இடங்களில் வன்முறை நடந்தது. முஸ்லீம் சமூகத்துக்குள்ளும் அசாதாரண சூழல் உருவாகியிருந்தது. மோகன் பகவத் சந்திப்பதற்கான தேதியை பெற்ற நேரத்தில், நூபுர் ஷர்மா சம்பவம் நடந்து ஒரு மாதமாகிவிட்டது. அது சற்று ஓய்ந்திருந்தது. எனவே இரு சமூகத்தினருக்கும் இடையிலான வகுப்புவாத நல்லிணக்க விவகாரங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். இத்தகைய சந்திப்புகள், உரையாடல்கள், தொடரவேண்டும், அமைதி நிலவ வேண்டும், மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்: பகவத்தின் திடீர் விசிட் குறித்து ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர் பிரமுக் சுனில் அம்பேகர் வெளியிட்ட அறிக்கையில், “சர்சங்கசாலக் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது ‘சம்வத்’ செயல்முறையின் ஒரு பகுதியாகும்” என்று கூறினார்[5]. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் கடந்த சில நாட்களாக மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், உள் உறவுகளை மேம்படுத்தவும் முஸ்லீம் மதகுருகளை தலைவர்களை சந்தித்து வருகிறார்[6]..  மாற்று மதம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது என்ற நோக்கில் இந்த சந்திப்பு நடந்தது[7]. அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது[8].  மேலும் இது தொடர்ச்சியான இயல்பான சம்வத் செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்தார்[9]. ஆனால் கடந்த மாதமும் ஐந்து முஸ்லிம் தலைவர்களை பகவத் சந்தித்தார். அப்போது நாட்டில் நல்லிணக்க சூழல் நிலவுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பகவத் சமீபத்தில் டெல்லியின் முன்னாள்  லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்.பி. ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது[10].

தீவிரவாத தொடர்புகள் நீங்க வேண்டும்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என கேரளா கோழிக்கோடு, டில்லி, மும்பை, அசாம், தெலுங்கானா, பெங்களூரூ, லக்னோ, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேசிய புலனாய்வு படையினர் நாடு முழுவதும் அதிரடி சோதனை மேற்கோண்டனர். அதனுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள், குறிப்பாக சட்டவிரோதமான தொடர்புகள், நிதியுதவி பெறுபவர்கள், தீவிரவாத சம்பந்தம் உள்ளவர்கள் தண்டிக்கப் பட வேண்டும், மற்றவர்கள் அவர்களிடமிருந்து விலக வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை, சேர்ந்த 106 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளா, தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் வன்முறைச் செயல்களும் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில், அமைதி காக்க, இத்தகைய உரையாடல்கள் அந்தந்த மாநிலங்களிலும் ஆரம்பிக்க வேண்டும். மக்களுக்கு ஏற்றமுறையில் நெருங்கி வர உரையாடல்கள் அமைய வேண்டும். அப்பொழுது தான், பதட்டம் நீங்கி, நட்பு, உறவுகள் மேன்படும். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் பொருளாதார, மற்ற முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும்.

© வேதபிரகாஷ்

24-09-2022


[1] காமதேனு, அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!, Updated on : 22 Sep, 2022, 3:29 pm; 2 min read

[2] https://kamadenu.hindutamil.in/politics/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims

[3] தமிழ். இந்தியன்.எக்ஸ்பிரஸ், மோகன் பகவத்முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பு: பசுவதை உட்பட முக்கிய பிரச்னைகள் பற்றி பேச்சு, Written by WebDesk, Updated: September 22, 2022 6:53:34 pm.

[4] https://tamil.indianexpress.com/india/rss-muslim-intellectuals-to-hold-periodic-talks-address-issues-of-concern-to-the-two-sides-514530/

[5] இடிவி.பாரத், மசூதிக்கு விசிட் அடித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்விஷயம் என்ன தெரியுமா?, Published on : 22, Sep 2022, 9.09 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/rss-chief-mohan-bhagwat-visits-mosque/tamil-nadu20220922210942766766339

[7] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், முஸ்லிம் தலைவர் இமாம் உமர் அகமது இல்யாசியுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்புகாரணம் இதுதான்!!, Narendran S, First Published Sep 22, 2022, 9:20 PM IST; Last Updated Sep 22, 2022, 9:20 PM IST.

[8] https://tamil.asianetnews.com/india/rss-chief-mohan-bhagwat-met-muslim-leader-imam-umar-ahmed-ilyasi-rimc0w

[9] தினத்தந்தி, இமாம் அமைப்பு தலைவருடன் மோகன் பகவத் சந்திப்பு, Sep 22, 2:32 pm

[10] https://www.dailythanthi.com/News/India/rss-chief-mohan-bhagwat-visits-mosque-in-outreach-to-muslims-798250

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின் “ஷிர்க்” விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (1)

நவம்பர் 11, 2015

திப்பு சுல்தான் ஜெயந்தியும், செக்யூலரிஸ அரசியல்வாதிகளின் கொண்டாட்டமும், இவ்வாறான காபிர்களின்ஷிர்க்விழாக்களைப் பொறுத்துபோகும் முஸ்லிம்களும் (1)

திப்பு ஜெயந்தி - சித்தராமையா- முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

திப்பு ஜெயந்தி – சித்தராமையா- முஸ்லிம்கள் இப்படி கொண்டாடலாமா

தீபாவளி 10-11-2015 அன்று இந்தியா முழுவதும் பண்டிகை கொண்டாடும் வேளையில், கர்நாடகாவில் 18-வது நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த மன்னரான திப்பு சுல்தானின் 266வது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசு முடிவு செய்து[1], நடத்தியதில் கலவரத்தில் முடிந்தது. இந்து மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் தமது எதிப்பைத் தெரிவித்திருந்தும் பிடிவாதமாகக் கொண்டாடுவேன் என்று விழாவை ஏற்பாடு செய்து சித்தராமைய்யா நடத்தினார். பசுமாமிசம் சாப்பிடுவேன் என்றேல்லாம் பேசிய இவர் கர்நாடகாவின் முதலமைச்சர். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எனும் போது, எல்லா மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற பண்புக்கு எதிராக செயல் பட்டுவரும், அவர் இதற்கும் சளைக்கவில்லை. நிச்சயமாக சோனியா அம்மையாரின் சம்மதி இல்லாமல், இவர் இவ்வளவு ஆட்டம் போடமாட்டார். ஆக காங்கிரசின் உள்நோக்கம், கலவரத்தை உண்டாக்குவது என்பது தான் போலும். இருக்கவே இருக்கிறது, பிறகு இதெல்லாம் அந்த இந்துத்துவ சக்திகளின் வேலைதான் என்று பழி போட்டு திசைத்திருப்பி விடலாம்.

lash-over-tipu-sultan-jayanti-celebrations

lash-over-tipu-sultan-jayanti-celebrations

பலவித எதிர்ர்புகளை மீறி சித்தராமையா திப்பு ஜெயந்தி கொண்டாடியது: ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் மே 1799ல், ஹைதர் அலியின் மகனான திப்பு கொல்லப்பட்டான்[2]. அதன்படி, 10-11-2015 (செவ்வாய்க்கிழமை) அன்று திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது[3]. ஹைதர் மற்றும் திப்பு இருவரின் கொடுமைகளை தென்னிந்தியாவில், குறிப்பாக மைசூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் (கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா) மக்கள் அறிவர். இந்த விழாவை கொண்டாடுவதற்கு பா.ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். உள்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன[4]. இந்நிலையில், இன்று நடைபெறும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை புறக்கணிப்பதாக பா.ஜனதா அறிவித்தது. மாநில பிஜேபி தலைவர் பிரஹலாத் ஜோஷி, “எங்களுடைய 44 எம்.எல்.ஏக்கள், மற்ற அரசு பதவி வகிக்கும் எவரும் இந்த விழாவில் பங்கு கொள்ள மாட்டார்கள்”, என்று அறிவித்தார்[5]. கர்நாடக கௌரவ சம்ரக்ஷண சமிதி [Karnataka Gaurava Samrakshana Samiti] போன்ற இயக்கங்களும் எதிப்புத் தெரிவித்தன. குர்பூர் வஜ்ரதேஹி மடத்தின் ஸ்வாமிஜி ஶ்ரீ ராஜசேகரானந்தா அரசு அந்நிகழ்ச்சியை நடத்தினால், அதே நாளில், “அரசின் தற்கொலை தினம்” என்று எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தப் படும் என்றார்[6]. இதனிடையே, கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று சில மதஅமைப்புகள் அறிவித்தன. மத அமைப்புகளின் இந்த அறிவிப்புக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தெரிவித்தது. ஆனால், பாரதிய ஜனதா ஆதரவு வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோடகு மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அங்குள்ள சில அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

United Christian Association எதிப்பு-06-11-2015

United Christian Association எதிப்பு-06-11-2015

கிறிஸ்தவர்களின் எதிர்ப்பு: மங்களூரின் அனைத்து கிறிஸ்தவ சங்கமும், “கடற்கரை பகுதிகளில் இருந்த பல சர்ர்சுகளை திப்பு தனது ஆட்சியில் இடித்தான் மற்றும் கிறிஸ்துவர்களை துன்புறுத்தினான்”, என்று இந்த ஜெயந்தியை எதிர்த்துள்ளது[7]. நவம்பர் 6ம் தேதி எதிர்ப்பு தெர்வித்து கமிஷனரிடம் மனுவையும் கொடுத்தனர்[8]. திப்புவினால் கிறிஸ்தவர்கள் நடத்தப் பட்ட விதம் குறித்து, அவர்களே ஆவணப்படுத்தியுள்ளவற்றிலிருந்து அறியலாம், ஒருவேளை அதனால் தான், கிறிஸ்தவர்களாக இருந்த ஆங்கிலேயர், அவன் மீது படையெடுத்து, அப்பகுதியை, தமதாட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று போரை நடத்தியிருக்கலாம். எப்படியாகிலும், கிறிஸ்தவர்களால் கூட, திப்புவின் கொடுமைகளை, இன்றளவும் மறக்க முடியாத அளவுக்கு, அவர்களது மனங்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

lash-over-tipu-sultan-jayanti-celebrations-இரு குழுக்கள் மோதல்

lash-over-tipu-sultan-jayanti-celebrations-இரு குழுக்கள் மோதல்

மடிக்கேரியில் இரு குழுக்கள் மோதிக் கொண்டது எப்படி?: அரசு விழாவை ஆதரித்து முஸ்லிம் அமைப்பு ஒன்று ஊர்வலம் மடிக்கரையில் நடத்தியது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தியது[9]. இதனால், ஒரு இடத்தில் இரு அமைப்பு தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது[10]. இந்த பேரணியின் போது, திடீரென வெடித்த மோதல் விபரீதத்தில் முடிந்தது. விஷ்வ இந்து பரிஷத் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு அமைப்புக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது[11] என்கிறது தினத்தந்தி. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினருடன் மோதினார்கள் என்றால், அது முஸ்லிமஸமைப்புதான் என்று பதிவு செய்யாமல் இருந்தது செக்யூலரிஸ பத்திரிகா தர்மத்தைக் காட்டுகிறது போலும். இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். குட்டப்பா இறந்த பிறகு, கலவரமாக மாறியது. இதையடுத்து, அங்கு நிலவிவரும் பதற்றத்தை தணிக்க கூடுதலாக பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோடகு மாவட்டம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமான இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

An injured is taken away for medical aid after two groups clashed over -Tipu Sultan Jayanti celebrations, in Kodgu.

An injured is taken away for medical aid after two groups clashed over -Tipu Sultan Jayanti celebrations, in Kodgu.

குட்டப்பா இறந்தது அல்லது கொல்லப்பட்டது எப்படி?: கல்வீச்சில் முன்னாள் அரசு ஊழியரும் உள்ளூர் விஷ்வ இந்து பரிஷத் தலைவருமான குட்டப்பா (50) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்[12] என்று சில ஊடகங்கள் கூறுகின்றன.  புட்டப்பா தடியடியில் உயிரிழந்ததாக செய்திகள் பரவின என்கின்றன மற்ற ஊடகங்கள்.. ஆனால் தடியடியிளிருந்து தப்பிக்க உயரமான சுவரை தாண்டி குதித்த போது தவறி விழுந்து அவர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது[13] என்றும் கூறப்படுகின்றன. ஆகவே, குட்டப்பா இறப்பில், எதையோ மறைக்கிறார்கள் என்று தெரிகிறது. கல்லடி கலாட்டாவில் இறந்தார் அல்லது கொல்லப்பட்டார் என்றால், வீசியவர்கள் காரணமாகிறார்கள். ஆனால், கல்லடி கலாட்டாவில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம்கள் தான் என்று குறிப்பிட செக்யூலரிஸ ஊடகங்கள் தயங்குகின்றன போலும்.  மேலும் தீபாவளியன்று, இப்படி இந்து-விரோத போக்கில் நடத்தப் பட்ட ஜெயந்தியில், ஒரு இந்து அமைப்பின் தலைவர் இறந்தது ஒரு பிரச்சினை ஆகக்கூடாது என்று அமுக்கி வாசித்திருக்கலாம்.

சித்தராமையாவின் திப்பு ஜெயந்தி 10-11-2015

சித்தராமையாவின் திப்பு ஜெயந்தி 10-11-2015

காங்கிரஸ் எம்.எல்,ஏ குட்டப்பாவின் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்கிறார்: குட்டப்பாவின் சாவுக்குக் காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.ஜி. போபைய்யா [Congress MLA K.G. Bopaiah] கேட்டுள்ளார். ஆமாம், பாவம் அவருக்கு இந்துக்களின் ஓட்டுகள் தேவைப்படுகிறது. மைசூரின் எம்.பியான, பிரதாப் சிம்ஹா, “மாவட்ட நிர்வாகம் நிலைமையை கையாளத் தவறிவிட்டது. மற்ற மாவட்டங்களிலிருந்து, நிறையபேர் இங்கு வந்து, திப்பு ஜெயந்தியை ஆதரிக்க வந்துள்ளனர். அதே மாதிரி விழாவை எதிர்ப்பவர்களையும், அவர்களையும் போலீஸார் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது”, என்றார். மூர்நாடு, ஹக்கதரு, விராஜ்பேட், கொட்டமுடி போன்ற ஊர்களிலிருந்து சுமார் 4,000 பேர் மடிகேரியுள் நுழையப் பார்த்தார்கள், ஆனால், போலீஸார் தடுத்ததால், அவர்கள் மடிகேரி எல்லைகளிலேயே தங்க நேர்ந்தது. சுமார் காலை பத்து மணிக்கு மோதல்கள் ஆரம்பித்தன, மதியம் குட்டப்பா இறந்தவுடன், கலவரமாக மாறிவிட்டது[14]. மேலும், “அரசு ஏ.பி.ஜே.அப்துல் கலாம் போன்றோருக்கு விழா எடுக்கலாம், ஆனால், திப்புவைப் போன்றவர்களுக்கு அல்ல”, என்றும் கூறினார்[15].

© வேதபிரகாஷ்

11-11-2015

[1] மாலைமலர், திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட எதிர்ப்பு: வன்முறையில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஒருவர் பலி, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, நவம்பர் 10.2015, 3:05 PM IST.

[2] http://www.greaterkashmir.com/news/national/story/201214.html

[3] http://www.maalaimalar.com/2015/11/10150553/Tipu-birth-anniv-celebrations.html

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=177868

[4]  தினகரன், பாஜக., வி.எச்.பி தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி கலவரத்தில் வி.எச்.பி பிரமுகர் உயிரிழந்ததால் பதட்டம், நவம்பர். 10.2015,16.00.21 PM IST.

[5] On Monday (09-11-2015), BJP announced its plans to boycott the celebrations across the state. State BJP president Prahlad Joshi told media persons on Monday that none of its 44 legislators and office-bearers will attend the Tipu Jayanti celebrations being organized by the state government.

http://www.business-standard.com/article/news-ians/one-dead-in-clash-over-tipu-sultan-anniversary-115111000719_1.html

[6] http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=367470

[7] Mangaluru United Christian Association has protested against the celebrations, alleging that Tipu was responsible for the destruction of many churches in the coastal region and harassing Christians.

http://atimes.com/2015/11/hindu-leader-dies-in-violence-during-protest-over-tipu-anniversary/

[8] The members of the United Christian Association staged a protest against the state government’s decision to celebrate “Tipu Jayanti”, in front of the DC’s Office here, on November 6.2015.

http://www.mangalorean.com/mangaluru-uca-stages-protest-against-state-governments-decision-to-celebrate-tipu-jayanti/

[9] தினத்தந்தி, திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போரட்டத்தில் வன்முறை வி.எச்.பி தலைவர் ஒருவர் பலி, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், நவம்பர் 10,2015, 2:16 PM IST; பதிவு செய்த நாள்:செவ்வாய், நவம்பர் 10,2015, 2:16 PM IST.

[10] The clashes erupted after a Muslim group that was taking out a procession to mark the Karnataka government’s Tipu Sultan Jayanti celebration through Madikeri town came face to face with Hindutva activists protesting against the celebration of the birth anniversary in the middle of the town.

http://indianexpress.com/article/india/politics/tipu-sultan-jayanti-protest-vhp-activist-succumbs-to-injuries-in-karnataka/

[11] http://www.dailythanthi.com/News/India/2015/11/10141620/Tipu-birth-anniv-celebrations-VHP-leader-dies-in-violence.vpf

[12] New Indian express, Tipu Sultan jayanti protest: VHP activist killed in violence in Karnataka, Written by Express News Service | Updated: November 10, 2015 4:09 pm.

[13]http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=177868

[14] Some 4,000 people, who had come from nearby towns such as Moornadu, Hakkaturu, Virajpet and Kottamudi, were stranded on the outskirts of Madikeri after police barricaded the town. According to police, clashes erupted in different parts of Madikeri by 10am. By noon, when Kuttappa died, police had a full blown riot on their hands.

http://www.hindustantimes.com/india/vhp-leader-dies-in-clashes-over-tipu-sultan-s-birth-anniversary-celebrations/story-25FViLDz9rageQiTW9rtwK.html

[15] Congress MLA K.G. Bopaiah called for immediate arrest of those responsible for Kuttappa’s death. Mysuru MP Pratap Simha, who spoke to The Hindu, flayed the district administration and the police for their failure to handle the situation. He alleged that people from other districts had arrived in large numbers ostensibly in support of the Jayanti celebrations and the police failed to crack down armed protesters. “Such events should be held to commemorate icons, who have rendered yeoman service to society. Let the government hold a jayanti celebration in honour of late President A.P.J. Abdul Kalam but not Tipu Sultan,” said Mr. Simha. Inspector-General of Police (South) B.K. Singh and other officers are camping in the district and monitoring the situation.

http://www.thehindu.com/news/national/karnataka/one-dead-in-stone-pelting-in-kodagu/article7864756.ece

ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது!

திசெம்பர் 11, 2014

ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது!

ஆக்ரா முஸ்லிம்கள் மதமாற்றம் உண்மையா, பொய்யா?

ஆக்ரா முஸ்லிம்கள் மதமாற்றம் உண்மையா, பொய்யா?

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரே சொன்ன விவரங்கள்[1]: தர்ம ஜாக்ரண் மஞ்ச் என்ற பஜ்ரங் தள் அமைப்பின் பிரிவு, “கர் வாபஸி” (வீட்டுக்குத் திரும்ப வருதல்) என்ற நிகழ்சி மூலம், சுமார் 60 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்றியுள்ளதாக செய்திகள் புகைப்படங்கள், வீடியோக்களுடன் வெளிவந்தன. அவர்களுக்கு ரேஷன் கார்டுகள், பணம் எல்லாம் கொடுக்கப் பட்டது என்றும் கூறப்படுகின்றது[2]. எகனாமிக்ஸ் டைம்ஸ், “ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது”, என்று வெளிப்படையாக செய்தியை வெளியிட்டுள்ளது[3]. “அலிகர் இதற்காகப் பிரத்யேகமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. ஏனெனில், இப்பொழுது இந்துக்களுக்கு அந்நகரத்தை முஸ்லிம்களிடமிருந்து மீட்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ராஜபுத் வீரர்களால் கட்டப்பட்டது அந்நகரம், அங்கிருந்த கோவில்கள் இடிக்கப்பட்டு கட்டப் பட்டுள்ள முஸ்லிம்களின் நிறுவனங்கள் தாம் இப்பொழுதுள்ளன. கிருஸ்துமஸ் தினம் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது, ஏனெனில், அது பரீட்சை செய்து / சோதித்து பார்க்கும் தினமாக அமையும். அலிகர், பூலத்சர், ஹத்ராஸ் போன்ற சேரிக்களில் வாழும் முஸ்லிகள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். 4,000 கிருத்துவர்களும் வால்மீகி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 1,000 முஸ்லிம் குடும்பங்கள் தாகூர் மற்றும் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்”, என்றெல்லாம் ராஜேஸ்வர் சிங் என்ற [RSS regional pracharak Rajeshwar Singh ] ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகரே அவ்வாறு சொல்லியுள்ளதாக வெளியிட்டுள்ளது. வெளிந்சாட்டு ஊடகங்களும் இதை வெளியிட்டுள்ளன[4]. ரீயூட்ட்ர்ஸ் இந்தியா [Reuters India], இலவச உணவு கொடுக்கப் படும் என்றுகூட வாக்குறுதி கொடுத்துள்ளார்கள் என்று சேர்த்துள்ளது. அதாவது, முன்பெல்லாம் பால் பவுடர், ரொட்டி போன்ற உணவு கொடுத்து கிருத்துவர்கள் இந்துக்களை மதமாற்றினார்கள் என்று சொல்வதுண்டு, அதனால், அப்படி நக்கலாக அதையும் சேர்த்துள்ளது போலும்! சத்தீஸ்கரில் இந்துத்வா கிருத்துவர்களை மாற்ற முயற்சிக்கிறது என்றும் செய்திகள் வந்துள்ளன[5].

ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது!

ஆர்.எஸ்.எஸ் 4,000 கிருத்துவர் மற்றும் 1,000 முஸ்லிம் குடும்பங்களை இந்துமதத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது!

வெளிப்படையாக சொல்லி செய்யும் முட்டாள்களா ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள்?:  இதெல்லாம் முந்தைய “தெஹல்கா”வின் குத்தும் ஆபரேஷன் செய்திகள் (Sting operation news) போன்றுள்ளது. குஜராத் கலவரங்கள் விவகாரங்கள் விசயத்தில் தெஹல்கா மற்றும் என்டிடிவி தொடர்ந்து சில காட்சிகளை பிரச்சாரரீதியில் நாள் முழுவதும் காட்டிக் கொண்டிருந்தது, பிறகு, அவையெல்லாமே வெட்டி-ஒட்டி செய்யப் பட்ட டேப்புகள் என்று தெரியவந்தது. ஆகவே, அந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் அப்படிபட்ட முட்டாளாஹைவ்வாறு டமாரம் அடித்து சொல்வதற்கு, என்று தெரியவில்லை. பொதுவாக, சில இந்துத்துவவாதிகள் விசயமே இல்லாமல் இருந்தாலும், தாங்கள் எதையோ சாதித்து விடுவோம், இல்லை சாதித்து விட்டோல் என்பது போல பேசித் தம்பட்டம் அடித்துக் கொள்வர். அம்மாதிரியாக இவர் பேசினாரா அல்லது உண்மையிலேயே அத்தகைய திட்டம் உள்ளதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இல்லை அந்த நாளிதழின் பேட்டியாளர் சொன்னதைத் திரித்து செய்தியாக வெளியிட்டுளாரா? நாளைக்கு ராஜேஸ்வர் சிங் தான் அவ்வாறு சொல்லவில்லை என்றுதான் கூறப்போகிறார்.

Members from Bajrang Dal and VHP hold a trident during a protest in New Delhi

Members from Bajrang Dal and VHP hold a trident during a protest in New Delhi – ரியூட்டர் இப்படத்தை இந்த செய்திக்குப் போட்டுள்ளது!

லோக்சபாராஜ்ய சபாக்களில் எதிர்கட்சிகள் அமளி: ஆக்ராவில் உள்ள முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன[6]. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள 57 இஸ்லாமிய குடும்பங்கள் இந்து மதத்திற்கு மாறியதாக கடந்த திங்கட்கிழமையன்று ஆர்.எஸ்.எஸ். தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு வறுமை கோட்டிற்கு கீழ் வாழுபவர்களுக்கான பிபிஎல் (BPL) ( ஏழை) அட்டை தருவதாக கூறி பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்கள் அழைத்துச் சென்றதாகவும், கட்டாயப்படுத்தப்பட்டு தாங்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாகவும் 57 இஸ்லாமிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்[7]. மாநிலங்களவையில் நேற்று இப்பிரச்னையை எழுப்பி பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம் மக்களை வலுக்கட்டாயமாக இந்து மதத்துக்கு மாற்றும் நடவடிக்கைகளை அங்குள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பான பஜ்ரங் தளம் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். அக்குடும்பத்தினர் கொடுத்துள்ளத் தகவல்களின் படி, கடந்த நான்கைந்து மாதங்களாக, அவ்வியக்கத்தினர் தங்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்றும், தாங்கள் மிகவும் ஏழைகளாக இருப்பதால், நிதியுதவி கிடைக்கும் என்ற காரணங்களுக்காக மதமாற ஒப்புக் கொண்டதாகவும் கூறியதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன[8].

An Indian Hindu sadhu holds a trident during a protest in New Delhi

An Indian Hindu sadhu holds a trident during a protest in New Delhi –   ரியூட்டர் இப்படத்தை இச்செதிக்குப் போட்டுள்ளது!

மாயாவதி நேரிடையாக ஆர்.எஸ்.எஸ்.ஐக் குற்றஞ்சாட்டியது: மாயாவதி, ‘‘ஆக்ராவில் உள்ள ஏழை முஸ்லிம்கள் 100 பேரிடம் ஆசைவார்த்தை கூறியும், கட்டாயப்படுத்தியும் இந்துவாக மாற்றும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான பஜ்ரங்தள் ஈடுபட்டுள்ளது. இது மிகவும் முக்கிய பிரச்னை. அரசியலமைப்பு சட்டத்தில் மதச் சுதந்திரத்துக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.  அனைத்து மதத்தையும் காக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. ஆக்ரா சம்பவத்துக்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்[9].  மாயாவதி தொடர்ந்தார், “மதமாற்றம் செய்துகொள்ள ஏழை மக்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். இதேபோல அலிகாரிலும் கிறிஸ்தவர்களை இந்து மதத்துக்கு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளால் நாட்டில் மிகப் பெரிய மத மோதல்களும் கலவரங்கள் ஏற்படும். இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ளது. இதற்குத் தக்க பதிலை பிரதமர் அளிக்க வேண்டும்” என்று மேலும் கூறினார்.

Members of the Muslim community stage a protest against alleged forced conversion of 300 people, in Agra on Wednesday Raju Tomar- HT Photo

Members of the Muslim community stage a protest against alleged forced conversion of 300 people, in Agra on Wednesday Raju Tomar- HT Photo

இது ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் இந்துத்துவ திட்டம் தான்கம்யூனிஸ்டுகள் உறுதி: இந்நிலையில் மாயாவதியின் கருத்தை காங்கிரஸ், திரிணமூல், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் ஆதரித்து, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவையில் எழுந்து நின்று கோஷமிட்டனர். இது தொடர்பாக காங்கிரûஸச் சேர்ந்த ஆனந்த் சர்மா கூறுகையில், “சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார்[10]. இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ‘‘இச்சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இது சட்டம், ஒழுங்கு பிரச்னை என்பதால், இதற்கு மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இதில் எதுவும் செய்ய முடியாது. இச்சம்பவத்தில் அரசியல் காரணங்களுக்காக ஆர்.எஸ்.எஸ் பெயர் இழுக்கப்படுகிறது. இதை அவை குறிப்பில் இருந்து, அவைத் தலைவர் நீக்க வேண்டும்’’ என்றார்[11]. இதே பிரச்னை குறித்து விவாதிக்க மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுல்தான் அகமது ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்தார். இதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிராகரித்தார்[12]. இருப்பினும் கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்களான டி.ராஜா, யச்சூரி முதலியோர், இது ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் இந்துத்துவ திட்டம் தான். கிருஸ்துமஸுக்கு முன்னால், ஓட்டுவங்கி அரசியலுக்காக இப்பிரச்சினையைக் கிளப்புகிறது, என்றெல்லாம் பேசினர்[13].

எகானாமிக்ஸ் டைம்ஸ் படம்

எகானாமிக்ஸ் டைம்ஸ் படம்

தர்ம கஜாக்ரண் மஞ்ச்என்ற இயக்கத்தின் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டு வழக்குப் பதிவு[14]: “தர்ம கஜாக்ரண் மஞ்ச்” [ Dharma Jagran Manch] என்ற இயக்கம் மற்றும் அதன் உபியின் தலைவர் கிஷோ மீது சதர் பஜார் போலீஸார் மக்கள் பிரிவுகளுக்குள் விரோதத்தை உண்டாக்குவது, மோசடி செய்வது போன்ற, இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகளில் [Police registered cases under Section 153 (A) (promoting enmity between different groups) and Section 415 (using fraudulent means) of the IPC.] எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது[15]. இந்தியாவில் மதமாற்றம் குற்றமாகுமா என்ற சர்ச்சையும் உள்ளது, ஏனெனில், கிருத்துவ இயக்கங்கள் ஆரம்பத்திலிருந்தே, மதமாற்றம் தங்களது உரிமை என்றும் அதற்கு அரசியல் நிர்ணயச் சட்டத்திலும் இடமுள்ளது என்று வாதிட்டு வருகின்றது. மேலும்ம் இங்கு இந்துபெயரில் உள்ள இயக்கங்கள் எல்லாமே, ஆர்.எஸ்.எஸ் என்று முத்திரைக் குத்தப் படுகிறது, சங்கப்பரிவார் என்று பேசப்படுகிறது. ஆனால், பிறகு ஆர்.எஸ்.எஸ் சம்பந்தமில்லை என்று மறுக்கிறது. பிறகு எதற்காக கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து அத்தகைய பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள்?

Noor Mohammad,  who alleged that the two RSSoffshoots had lured them into a programme to collect BPL and ration cards HT photo

Noor Mohammad, who alleged that the two RSSoffshoots had lured them into a programme to collect BPL and ration cards HT photo

முஸ்லிம்களை மதமாற்றம் செய்ய முடியுமா?: பொதுவாக முஸ்லிம் மதமாற முடியாது, அப்படி மாறினால், உடனடியாக அவன் மதத்துரோகி, விரோதி (apostate) என்று முத்திரைக் குத்தப் பட்டு கொல்லப்படுவான். ஆகவே விசயம் தெரிந்த எந்த முஸ்லிமும் வெளிப்படையாக மதமாற மாட்டான், மாறினாலும், சொல்லிக் கொள்ளா மாட்டான். இப்பொழுதே, நாங்கள் ஒன்றும் மதமாற்றப் படவில்லை என்று ஆக்ரா முஸ்லிம்கள் சொல்லியதாக செய்திகள் வந்துள்ளன[16]. உடனே இந்துத்துவவாதிகள் அவர்கள் பயந்து அவ்வாறு பேசுகிறார்கள் என்றும் கூறுகின்றனர்[17]. எனவே, இதெல்லாம் பிரச்சாரத்திற்காக செய்யப் பட்டதா அல்லது ஏதோ பிரச்சினையைத் திசைத் திருப்ப செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படும் போது, அமைதியாக இருக்கும் அரசியல்வாதிகள், ஊடகங்கள் இப்பொழுது ஏன் குதிக்கின்றன என்று வினய் கத்தியார் கேட்டிருப்பதாகவும் செய்தியுள்ளது[18].

© வேதபிரகாஷ்

11-12-2014

[1] http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/rss-plans-to-convert-4000-christian-1000-muslim-families-to-hinduism/articleshow/45442684.cms

[2] Around 60 Muslim families participated in a “ghar wapsi” ceremony organised by Bajrang Dal’s Dharm Jagran Manch on Monday. ‘Ghar Wapsi’ literally means ‘return home’ and according to the organisers it is meant for people who had left the Hindu fold and are now returning to it. A day later, these families are alleging that they had been promised ration cards and money in exchange for participating in the religious conversion ceremony.

http://www.abplive.in/india/2014/12/09/article451711.ece/Ration-card-money-promised-for-converting-to-Hinduism-families-accuse-Bajrang-Dal#.VIjad_mSynU

[3] Vasudha Venugopal, RSS plans to convert 4,000 Christian & 1,000 Muslim families to Hinduism , ET Bureau | 10 Dec, 2014, 04.40AM IST, Read more at:
http://economictimes.indiatimes.com/articleshow/45442684.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

[4] http://in.reuters.com/article/2014/12/10/india-religion-conversions-idINKBN0JO1CN20141210

[5] Firstpost, Hindutva targeting of Christians in Chhattisgarh over conversions really about land?, by Parivesh Mishra  Dec 10, 2014 18:54 IST.

[6] இந்நேரம்.காம், முஸ்லிம்கள் கட்டாய மதமாற்றம், வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2014 02:58, பதிவர்: ஜாஃபர்

[7] http://www.inneram.com/i-news/india/3311-muslims-convert-to-hidu-in-agra.html

[8] According to the details given by the families, volunteers from the Dharm Parivartan Mach had been in touch with them for the past four-five months. Since they were mostly poor and in dire financial straits, the families claim that they consented to change their religion for monetary compensation.

http://www.abplive.in/india/2014/12/09/article451711.ece/Ration-card-money-promised-for-converting-to-Hinduism-families-accuse-Bajrang-Dal#.VIjad_mSynU

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=122001

[10]http://www.dinamani.com/india/2014/12/11/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/article2565153.ece

[11] http://timesofindia.indiatimes.com/india/Agra-conversions-rocks-Parliament/articleshow/45464405.cms

[12] தினகரன், ஆக்ராவில் மதமாற்றம் மாயாவதி எதிர்ப்பு, சென்னை, 00.04.11, 12-11-2014.

[13] CPI-M leader and Rajya Sabha MP Sitaram Yechury said the re-conversions were a ploy to vitiate the environ¬ment before Christmas.“This is clearly a ploy, a scheme, being worked out before Christmas. This is the dirtiest of vote-bank politics being played by RSS and the BJP.

http://kashmirreader.com/forced-conversion-oppn-accuses-centre-of-hindutva-agenda-28105

[14] http://www.abplive.in/india/2014/12/10/article452586.ece/FIR-against-forced-religious-conversion#.VIjqx_mSynU

[15] http://www.deccanchronicle.com/141210/nation-current-affairs/article/fir-against-forced-religious-conversion-agra

[16] Hemendra Chaturvedi, Agra: Muslim families deny changing faith, slam Hindu groups, Hindustan Times  Agra, December 09, 2014; First Published: 20:12 IST(9/12/2014) | Last Updated: 10:10 IST(10/12/2014)

[17] http://www.hindustantimes.com/india-news/day-after-homecoming-muslim-families-deny-embracing-hinduism/article1-1294852.aspx

[18] http://www.ndtv.com/article/india/protests-in-parliament-against-mass-conversions-united-opposition-scores-debate-632030