Posted tagged ‘கொலை’

காதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை – “ஜில்டெட் லவ்” என்று கேவலப்படுத்த வேண்டாம், ஜிஹாதி கொலையை செக்யூலரிஸமாக்க வேண்டாம்!

செப்ரெம்பர் 15, 2016

காதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை – “ஜில்டெட் லவ்” என்று கேவலப்படுத்த வேண்டாம், ஜிஹாதி கொலையை செக்யூலரிஸமாக்க வேண்டாம்!

love-me-or-else-i-kill-you-jilted

ஜில்டெட் ஆளா, கொலைகரனா? ஆங்கில ஊடகங்களின் உணர்ச்சியற்றத் தன்மை: காதல் எப்படி என்று ஆங்கில ஊடகங்கள் கிண்டலாக விமர்சித்திருப்பது திகைப்பாக இருக்கிறது. இது தமிழகத்தில் நடந்துள்ள நான்காவது “ஜில்டெட்”[1], அதாவது காதலில் விடப்பட்ட கொலையாகும், “This is the fourth such brutal killing by jilted lovers in Tamil Nadu in the last four months” – என்று மலையாள மனோரமா குறிப்பிட்டுள்ளது[2].  இதையே மற்ற ஆங்கில ஊடகங்களும் பின்பற்றியுள்ளன[3]. “இந்தியா டுடே” போன்ற பத்திரிக்கைக் கூட அவ்வாறு வெளியிட்டுருப்பது[4], லவ்-ஜிஹாதை மறைக்கும் போக்காகவே தெர்கிறது. இது காதலே இல்லை, பிறகு எங்கு காதலி திடீரென்று, காதலை உதறப் போகிறாள்?  ஒருதலைகாதல் என்பது முதலில் காதல் என்று வர்ணிப்பதே கொடூரமாகும். அதனை காதலி விட்டுவிட்டாள், உதறிவிட்டாள் [to reject or cast aside (a lover or sweetheart), especially abruptly or unfeelingly] என்றெல்லாம் குறிப்பிடுவது கேவலமாகும்[5]. நாஜுக்காக அப்படி சொன்னாலும், இது வவ்-ஜிஹாதில் உருவாக்கப்பட்ட ஜிஹாதி கொலைதான். ஒருதலை காதல் எல்லாம் “ஜில்டெட்” ஆகிவிடாது[6], ஏனெனில், இது திட்டமிட்டு செய்த கொலை. உண்மையில் “ஜிஹாதி கொலை” ஆகும். கொலை செய்யப்பட்டிருப்பதைக் கூட கண்டிக்காமல், உணர்ச்சியற்றத் தன்மையில், இவ்வாறு செய்தியை வெளியிட்டிருப்பதை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை.

love-me-or-else-i-kill-you-jilted-love

லவ்-ஜிஹாத் கொலைகளை செக்யூலரிஸமாக்கக் கூடாது: குரூர காதல் கொலைகளில் கூட செக்யூலரிஸத்தை ஊடகங்கள் நுழைக்க முயற்சிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. கிருத்துவப் பெண்கள் “லவ்-ஜிஹாதில்” சிக்கிக் கொண்டபோது, மலையாள மனோரமா வக்காலத்து வாங்கியது. ஆனால், இப்பொழுது, ஒரு இந்து இளம்பெண் கொலைசெய்யப் பட்டிருந்தாலும் “ஜில்டெட்” என்று நக்கல் அடிக்கிறது. காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கயவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை என்று மெத்தப் படித்த இந்த ஊடகக் காரர்களுக்குத் தெரியாதா என்ன? பிறகு ஏன் இத்தகைய போக்கை கடைப் பிடுஇக்கின்றன. ஜிஹாதி கொலைகளை செக்யூலரிஸமாக்க முயல்வது, கொலைக்காரர்களுக்கு ஒத்துழைப்பது மற்றும் கொலை செய்வதற்கு சமானம் என்றே சொல்லலாம்.

love-me-or-else-i-kill-you-jilted-love-blood

பாமக ராம்தாஸின் அறிக்கை பொறுப்புள்ளதாக இருக்கிறது: மனித நேயத்திற்கு எதிரான இந்த மிருகச் செயல் கண்டிக்கத்தக்கது. தன்யாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது[7]: “கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையத்தைச் சேர்ந்த தன்யா என்ற இளம் பெண் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு பக்கத்து வீட்டில் வாழ்ந்து வந்த ஜாகீர் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக  பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில், ஜாகீரை தன்யாவின் பெற்றோர் பலமுறை கண்டித்துள்ளனர். அத்துடன் தன்யாவுக்கு திருமண ஏற்பாடுகளையும் செய்தனர். கடந்த 10 நாட்களுக்கு தன்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் நேற்று தன்யா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஜாகீர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்யாவை சரமாரியாக கத்தியால் படுகொலை செய்திருக்கிறான்.

love-me-or-else-i-kill-you

ஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிச் செயல்களால் ஏற்படும் பாதிப்புகளை உணர வேண்டும்: தன்யாவுக்கு நடந்த கொடுமையை என்ன தான் வார்த்தைகளில் வர்ணித்தாலும் அதன் முழுமையான தீவிரத்தை உணர வைக்க முடியாது. பெற்றெடுத்து ஆசை ஆசையாய் வளர்த்து, படிக்க வைத்து, பணிக்கு அனுப்பி, திருமணம் நிச்சயித்து மகளின் எதிர்காலம் குறித்த கனவுகளுடன் திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்த தன்யாவின் பெற்றோருக்கு இந்த கொலை எத்தகைய அதிர்ச்சியையும், வலியையும் தந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்ப்பதன் மூலம் தான், ஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிச் செயல்களால் ஏற்படும் பாதிப்புகளின் முழுமையான பரிமாணத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d

காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கயவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை: தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் சென்னை சூளைமேடு பொறியாளர் சுவாதி, விழுப்புரம் வ. பாளையம் மாணவி நவீனா, கரூர் பொறியியல் கல்லூரி மாணவி சோனாலி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா, விருத்தாசலம் பூதாமூர் செவிலியர் புஷ்பலதா கடைசியாக தன்யா என இளம் பெண்கள் ஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிக்கு இரையாகி தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர்.  எந்த தாய்க்கும் பிள்ளைகளை கொல்ல மனம் வராது என்பது எப்படி உண்மையோ, அதேபோல் மனப்பூர்வமாகவும், உண்மையாகவும் காதலிக்கும் யாருக்கும் அன்பு வைத்தவரை கொலை செய்ய மனம் வராது என்பதும் உண்மை. ஆனால், காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கயவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர்.

%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d

அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: இத்தகைய மோசமான கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால், ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலையளிக்கிறது. ஒருதலைக் காதல் தறுதலைகளால் உயிரிழந்த 6 பேரில், விருத்தாசலம் புஷ்பலதா என்பவர் மட்டும் தனசேகர் என்ற மிருகத்தால் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பாலியல் சீண்டலுக்குள்ளாக்கப்பட்டதால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள 5 பேரும் மிகவும் கொடூரமான முறையில் வெட்டியும், உயிருடன் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலைகள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தின. ஆனால், அரசோ தமிழகத்தில் இத்தகைய கொடுமைகள் நடந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. அதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் பாலியல் சீண்டல் கொலைகள் தொடர்கின்றன.

danya-killed-by-jakir-14-09-2016

புற்றுநோயைப் போல பரவி வரும் பாலியல் சீண்டல் கொலைகள் தடுக்கப்பட வேண்டும்: தமிழகத்தில் புற்றுநோயைப் போல பரவி வரும் பாலியல் சீண்டல் கொலைகள் தடுக்கப்பட வேண்டும்.  பெண்களை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிப்பதன் மூலம் தான் இதை சாதிக்க முடியும். பெண்களின் பாதுகாப்புக்காக 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்த 13 அம்சத் திட்டத்தின் நான்காவது அம்சமாக பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.  பெண்களை பின்தொடர்ந்து சென்று தொல்லை தருபவர்களையும் இச்சட்டப்படி தண்டிக்க வேண்டும்”, என குறிப்பிட்டுள்ளார்[8].

© வேதபிரகாஷ்

15-09-2016

[1] Malayala Manorama online, Spurned youth hacks Keralite woman to death in Coimbatore, attempts suicide, Thursday 15 September 2016 05:49 PM IST, By Onmanorama Staff

[2] http://english.manoramaonline.com/news/just-in/spurned-youth-hacks-kerala-woman-death-coimbatore-murder.html

[3] India Today, Tamil Nadu: Jilted lover kills girl, attempts suicide later Pramod Madhav ,  Posted by Shruti Singh, Coimbatore, September 15, 2016 | UPDATED 10:28 IST.

[4] http://indiatoday.intoday.in/story/tamil-nadu-coimbatore-jilted-lover-kills-girl-attempts-suicide/1/764735.html

[5] The Hindusthan times, 23-year-old woman hacked to death by jilted man in Coimbatore, HT Correspondent, Hindustan Times, Chennai, Updated: Sep 15, 2016 17:42 IST.

[6] http://www.hindustantimes.com/india-news/23-year-old-woman-hacked-to-death-by-jilted-man-in-coimbatore/story-gwtfpzIcPxRtO8CAXSMYyI.html

[7] தினமணி, ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ், By DIN  |   Last Updated on : 15th September 2016 12:24 PM

[8] http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/15/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE-2565102.html?pm=home

திருவோணத்தன்று லவ்-ஜிஹாதி கொலை செய்த ஜாகீர்! காதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை!!

செப்ரெம்பர் 15, 2016

திருவோணத்தன்று லவ்-ஜிஹாதி கொலை செய்த ஜாகீர்! காதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை!!

kerala-gods-own-countryகடவுளின் சொந்த தேசத்திலிருந்து வந்தவன் கொலை செய்தது: திருவோணத்தைப் பற்றி சர்ச்சைகளைக் கிளப்பி விட்டு, குழப்பத்தை உண்டாக இக்கால நாரதர்கள், எட்டப்பன்கள், முதலியோர் தயாராக இருக்கும் போது, அந்நாளில், ஒரு முகமதியன் திட்டமிட்டே, ஒரு கேரள இளம்பெண்ணை குரூரமாக கொலை செய்துள்ளான். “கேரளா கடவுளுடைய தேசம்” [Kerala- Gods own country] என்று பெருமையாக சொல்லிக் கொள்வர், ஆனால், எந்த கடவுள் என்பதை சொல்லாதலால், கேரளாவில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன போலும். ஏகப்பட்ட இளம் பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி, திருமணம் செய்து ஐசிஸுக்கு கூட்டிச் சென்றதாக செய்திகளை வெளியிட்டனர். அரசு மாறியதும், அவை குறைந்து விட்டதால், பிரச்சினை குறைந்து விட்டதா, அல்லது கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திக-கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதால், அவ்வாறாகி விட்டதா?

dhanya-murder-by-zakir-14-09-2016-news-cuttingகேரளாவிலிருந்து வந்து, தமிழகத்தில் குடியேறி வாந்துவந்த குடும்பம்: கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் சோமு / சோமசுந்தரம் (50) டெய்லர், இவரது மனைவி சாரதா (48) பட்டுநூல் ஊழியர். இவரது மகள் தன்யா (23) பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் படிப்பு படித்து முடித்து விட்டு பொங்கலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். தையல்காரராக இருந்து மகளைப் படிக்க வைத்து, பட்டம் பெற செய்து வேலைக்கும் அனுப்பியுள்ளதை பாராட்ட வேண்டும். இவர்கள், கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னூர் பகுதியில் குடியேறி வசித்து வந்தனர்[1].

%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8dஜாகிர் என்பவன் வந்து சேர்ந்தது: அந்நிலையில் தான் ஜாகிர் என்பவன் வந்து சேர்ந்தான். சோமுவின் பக்கத்து வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்து, அன்னூர் ரோட்டில் உள்ள தனது சித்தப்பா பேக்கரியில் வேலை செய்து வந்தார்[2]. அப்போது தன்யா பள்ளியில் படித்து வந்தார். அப்போது தன்யாவிடம், சகீர் அடிக்கடி பேசுவது வழக்கம். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் என்பதால், சோமுவின் குடும்பத்தினரும் இதனை கண்டு கொள்ளவில்லை. இந்த பேச்சும், பழக்கமும், சகீரின் மனதில் ஒருதலைக் காதலாக உருவெடுத்தது. இந்த காதல் எண்ணங்களை அறிந்து கொள்ளாமல், தன்யாவும் அவருடன் பேசுவது உண்டு. ஆனால் இந்த பேச்சும், பழக்கமும் விபரீதம் ஆகிவிடக்கூடாது என்று, தன்யாவின் பெற்றோர், மகளிடம் அறிவுரை கூறினர். இதனால் தன்யாவும், பெற்றோர் சொல்லை கேட்டு, சகீரிடம் பேசுவதை நிறுத்தி கொண்டார்[3]. அதாவது, ஜாகிரின் போக்கை அறிந்து தான், தன்யா பெற்றோர் அறிவுருத்தியுள்ளனர்.

danya-killed-by-jakir-14-09-2016ஜாகிரைக் கண்டிக்காத பெற்றோரும், திரும்பிவந்த நிலையும்: ஜாகிரின் மாமா, அம்மா அல்லது வேறொருவரும் அவனைக் கண்டித்தாகத் தெரியவில்லை. ஒரு வேளை ஊக்குவித்தார்கள் போலும். இதனால், சந்தர்ப்பம் பார்த்து ஒருநாள், தன்யாவை வழிமறித்து தனது காதலை சொல்லி உள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத தன்யா, “தயவு செய்து என்னை மறந்து விடு. உன்னை பற்றிய எண்ணம் என்னிடம் துளிகூட இல்லை. நீ நினைத்தாலும், எனது பெற்றோர் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள். ஏனெனில் நீ வேறு மதம், நாங்கள் வேறு மதம்”, என்று கூறி விட்டு சென்று விட்டார். மாலைமலர், இப்படி சொல்ல, தமிழ்.இந்து, இப்படி கூறுகிறது, அதேபகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்த திருப்பூரை சேர்ந்த ஜாகீர் (27) என்பவர் தன்யாவை ஒரு தலையாக காதலித்து வந்தார். ஜாகிரும் தன்யா வீட்டருகே உள்ள காம்பவுண்டில்தான் வசித்து வருகிறார். தன்யா, ஜாகிர் நட்புடன் பழகி வந்துள்ளனர். ஆனால் தன்யா ஜாகீரின் காதலை ஏற்க மறுத்து விட்டார். இது தொடர்பாக தன்யாவின் பெற்றோர் ஜாகிரின் தாயாரிடமும் பேசியுள்ளனர். இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஜாகிரின் தாயார் கேரளா சென்றுவிட்டார்[4].

danya-killed-by-jakir-14-09-2016-ani-photo-1மார்ச்சில் திரும்ப வந்த ஜாகீர்: “இதனால் மனமுடைந்த ஜாகீர் 6 மாதங்களுக்கு முன்பு திருப்பூருக்கு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றார்” என்று ஊடகம் குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. இவன் ஒருதலையாக காதலித்தால், அதற்காக அடுத்தவர் எப்படி பாதிக்க முடியும்? எனினும் ஜாகீரால் தன்யாவை மறக்க முடியவில்லை. அவர் அடிக்கடி தன்யாவை பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்தார். இதையறிந்த தன்யாவின் பெற்றோர் ஜாகீரை கண்டித்தனர். ஆனால், போலீஸாரிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை, மற்றும் ஜாகீரின் மாமா, அம்மா, உறவினர்கள், மற்றவர்கள் ஏன் கண்டிக்கவில்லை என்று தெரியவில்லை.

danya-killed-by-jakir-14-09-2016-ani-photo-2நிச்சயதார்த்தமும், ஜாகீரின் கொலைத் திட்டமும்: தன்யாவுக்கு அன்னூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் தினேஷ் என்பவரை திருமணம் பேசி கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்தனர். அடுத்த மாதம் இவர்களது திருமணம் நடக்க இருந்தது. இது ஜாகீருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தனக்கு கிடைக்காத தன்யாவை தீர்த்துக் கட்ட அவர் முடிவு செய்தார்[5]. 14-09-2016 அற்று ஓணம் விடுமுறை நாள் என்பதால் தன்யா வேலைக்கு செல்லவில்லை. அவர் தனது வருங்கால கணவர் தினேசுடன் வெளியே சென்று விட்டு மாலை 5 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது தன்யாவின் தந்தை சோமுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்ததால் மனைவி சாரதாவுடன் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். தன்யா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஜாகீர் வீட்டின் பின்பக்க சுவர் ஏறிக் குதித்து[6] வீட்டிற்குள் நுழைந்ததோடு பின்புற கதவை உடைத்து உள்ளே சென்றார். அவரைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த தன்யா சத்தம் போட்டார்[7]. உடனே ஜாகீர் கத்தியால் அவரை குத்தினார்[8]. இதில் தன்யாவின் தலை, கழுத்து, வயிறு, கைகளில் கத்திக்குத்து பட்டு ரத்த வெள்ளத்தில் பலியானார்[9]. உடனே ஜாகீர் தப்பி ஓடினார்[10].  நியூஸ்7 இப்படி மரியாதையோடு செய்தி வெளியிட்டுள்ளது.

%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8dதப்பி ஓடிய ஜாகிர் பாலக்காட்டில் பிடிபட்டது: ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய தன்யாவின் பெற்றோர் வீட்டில் மகள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு கதறினர். போலீசார் விசாரணை நடத்திய போது வீட்டில் சாணிப்பவுடர் சிதறிக் கிடந்ததை கண்டனர். இதனால் தன்யாவை கொலை செய்த ஜாகீர் தற்கொலைக்கு முயற்சி செய்யலாம் என கருதிய போலீசார் அவரை கண்டுபிடிக்க தீவிரம் காட்டினர். சாணிப்பவுடருக்கும், தற்கொலைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஜாகீரின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு என்பதால் கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்தநிலையில் 14-09-2016 அன்று இரவு 11 மணி அளவில் ஜாகீர் பாலக்காட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையறிந்த அன்னூர் போலீசார் பாலக்காட்டுக்கு விரைந்து சென்று ஜாகீரை கைது செய்தனர். அங்கு ஜாகீர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் போலீசார் ஆஸ்பத்திரியில் பாதுகாப்புபணி மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே, ஜாகீரை கைது செய்யும் வரை தன்யாவின் உடலை எடுத்து செல்ல விட மாட்டோம் என கூறி அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தன்யாவின் உடல் பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது.

© வேதபிரகாஷ்

15-09-2016

 

[1] திஇந்து, கோவையில் ஒருதலைக் காதலால் விபரீதம்: இளம் பெண் குத்திக் கொலை; இளைஞர் தற்கொலை முயற்சி, Published: September 15, 2016 14:46 ISTUpdated: September 15, 2016 14:46 IST.

[2] மாலைமலர், வீடு புகுந்து பெண் குத்திக்கொலை: ஒரு தலை காதலால் வாலிபர் வெறிச்செயல், பதிவு: செப்டம்பர் 15, 2016 05:13.

[3] http://www.maalaimalar.com/News/TopNews/2016/09/15051338/1038943/woman-murder-near-Coimbatore.vpf

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article9110654.ece

[5] மாலைமலர், ஒருதலைக்காதலில் புதுப்பெண்ணை கொன்ற வாலிபர் கேரளாவில் கைது, பதிவு: செப்டம்பர் 15, 2016 14:06.

[6] தினகரன், கோவை அருகே ஒருதலைகாதலில் வாலிபர் வெறிச்செயல் காதலிக்க மறுத்த பட்டதாரி பெண் படுகொலை, Date: 2016-09-15@ 00:18:01.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=245675

[7] நியூஸ்7, ஒரு தலைக் காதலால் இளம்பெண்ணைக் கொலை செய்தவர் தற்கொலை முயற்சி!, September 15, 2016.

http://ns7.tv/ta/killer-attempted-committ-suicide-kerala.html

[8] http://www.maalaimalar.com/News/TopNews/2016/09/15140602/1039042/woman-killed-young-man-arrested-in-Kerala.vpf

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=245675

[10] http://ns7.tv/ta/killer-attempted-committ-suicide-kerala.html

 

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா, இஸ்லாம் தாம்பத்திய மதப்பிரச்சினையா?

ஓகஸ்ட் 17, 2016

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா, இஸ்லாம் தாம்பத்திய மதப்பிரச்சினையா?

அக்பர் கொலை 16-08-2016

மைத்துனர் சையது தானாகவே வந்தாரா, பாத்திமுத்து தகவல் கொடுத்து வந்தாரா?: 16-08-2016 காலை அதே பகுதியில் வசிக்கும் அக்பரின் மைத்துனர் சையது, அக்பரின் வீட்டுக்கு வந்தார். பாத்திமுத்து தகவல் சொல்ல வந்தார் என்றும் உல்ளது. அவர் கதவு தட்டும் சத்தம் கேட்டு, பாத்திமுத்து எழுந்து சென்று கதவை திறந்தார். அவரிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே, அக்பர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சையது சென்றார். அங்கு வாயில் துணி திணிக்கப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அக்பர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து சையது சத்தம் போட்டார்[1]. பாத்திமுத்து மற்றும் பிள்ளைகளும் ஓடி வந்தனர். அக்பரின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.காலையில் எழுந்த உடன் கணவனை யாரோ கொலை செய்து விட்டார்கள் என நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது[2].

அக்பர் கொலை 16-08-2016.நியூஸ்7டிவி

அக்பருக்கு பாத்திமா என்ற பெண்ணுடன் தொடர்பு, கள்ளக்காதல், உல்லாசம்: வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (35). கணவனை விட்டுப் பிரிந்தவர். இவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கடையில் கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்வதற்காக அக்பர் வேலைக்கு வைத்துக் கொண்டார். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது[3]. பிறகு மண்ணடியிலேயே வாடகை வீடு எடுத்து பாத்திமாவை அக்பர் தங்கவைத்துள்ளார். பிறகு இருவரும் அவ்வப்போது நெருக்கமாக இருந்துள்ளனர். வெளி இடங்களிலும் சுற்றித் திரிந்துள்ளனர். நாளடைவில் இந்த கள்ளத்தொடர்பு பாத்திமுத்துவுக்கு தெரிய வர அக்பரை கண்டித்துள்ளார். ஆனால் அக்பரோ அப்படி ஏதும் இல்லையென்று மறைத்துள்ளார். ஆனாலும் சந்தேகம் தீராத பாத்திமுத்து தனது கணவரை பின் தொடர்ந்து வேவு பார்த்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாத்திமாவின் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

Akbar murder, Mannady 16-08-2016, Dinakaran

Akbar murder, Mannady 16-08-2016, Dinakaran

பாத்திமுத்து கையும் களவுமாக கணவன் கள்ளக்காதலியைப் பிடித்தது: தனது உறவினர்களுடன் அங்கே சென்று கையும் களவுமாகப் பிடித்த பாத்திமுத்து, பாத்திமாவை அடித்து உதைத்துள்ளார். பிறகு அங்கிருந்த பாட்டிலால் அக்பரின் தலையில் அடித்துள்ளார். இதில் அக்பருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாத்திமுத்துவுடன் கோபித்துக்கொண்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அக்பருக்கு பாத்திமாதான் உதவியாக இருந்துள்ளார். பிறகு உறவினர்கள் சமாதானப்படுத்தியதை அடுத்து பாத்திமுத்துவுடன் வீட்டுக்கு வந்துள்ளார். பாத்திமாவையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். ஆனால், சில நாட்களிலேயே மீண்டும் இருவரும் பழகத் தொடங்கியுள்ளனர். இதை பாத்திமுத்து கண்டிக்க, ‘நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்’ என்று கூறியுள்ளார். இதுதான், அவளை கொலைச் செய்யத் தூண்டியது.

Akbar murder, Mannady 16-08-2016, The Hindu

Akbar murder, Mannady 16-08-2016, The Hindu

போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்ட பாத்திமுத்து: தகவலறிந்த போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்[4]. இந்நிலையில் அக்பர் வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இயங்கவில்லை என தெரிகிறது[5]. இந்த கொலை தொடர்பாக அக்பர் குடும்பத்தினர் உள்ளிட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[6]. அக்பர் கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாத்திமுத்து முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவரை கொலை செய்ததை பாத்திமுத்து ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபரை அவருடைய மனைவியே கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இதையடுத்து பாத்திமுத்து மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர் கைது செய்யப்பட்டார்[7]. கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவனை, மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்பரின் மகள் பூஜா(12) சற்றே மனநலம் பாதித்தவர். அவர் நள்ளிரவில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அக்பரை பார்த்துவிட்டு பாத்திமுத்துவிடம் கேட்டுள்ளார். ஒன்றுமில்லை. அப்பா தூங்குகிறார். காலையில் எழுந்துவிடுவார் என்று அவரை பாத்திமுத்து தூங்க வைத்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Akbar murder, Mannady 16-08-2016, TOI

Akbar murder, Mannady 16-08-2016, TOI

எல்லோருக்கும் தெரிந்த கள்ளக்க்காதல்-தொடர்புகளை உறவினர்கள்-நண்பர்கள் ஏன் கண்டிக்கவில்லை, எதிர்க்கவில்லை?: பாத்திமுத்து உறவினருக்கு அக்பரின் கள்ளக்காதல் தொடர்புகள் தெரிந்திருக்கின்றன. அதேபோல, அவர்கள் அக்பரை கையும் களவுமாகப் பிடித்து அடித்த போதும், மற்றவர்களுக்கு, குறிப்பாக சுற்றிலும் உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அக்பருன் உறவினர்களுக்கும் தெரிந்திருக்கக் கூடும். ஆனால், யாரும் அக்பரைக் கண்டிக்கவில்லை அல்லது அத்தகைய கள்ளக்காதல், உறவு தப்பு, தவறு, குற்றம் என்றெல்லாம் எடுத்துக் காட்டவில்லை என்பது வியப்பாக உள்ளது. மனைவி பாத்திமுத்து மட்டும் எதிர்க்க வேண்டும், கண்டிக்க வேண்டும் என்பது ஆச்சரியமாக உள்ளது. அதாவது, முஸ்லிம்கள் ஒன்றிற்கும் மேலான பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கலாம் மற்றும் திருமணம் செய்து கொண்டு மனைவியரை வைத்துக் கொள்ளலாம், இதெல்லாம் சகஜம் தான் என்று அமைதியாக இருந்தார்கள் போலும். இருப்பினும், மனைவி எதிர்த்திருக்கிறாள். ஆக, இதை பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்லது இஸ்லாமிய பெண்ணின் பிரச்சினை என்றே ஒதுக்கப்பட்டு விட்டதா என்று தெரியவில்லை.

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது-குழப்பம்

கொலை செய்யத் தூண்டியது என்ன?: பாத்திமுத்து கண்டித்தபோது, “நான் பாத்திமாவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உன்னால் என்ன செய்ய முடியும். பாத்திமாவும் நானும் திருமணம் செய்துகொண்டு இந்த ஊரை விட்டே செல்லப் போகிறோம். பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும். நான் உனக்காக நிறைய செலவு செய்தேன். ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்”, என்று கூறியுள்ளது நோக்கத்தக்கது. இங்கு ஒருவேளை தனது இஸ்லாமிய உரிமையை எடுத்துக் காட்டியுள்ளது தெரிகிறது. “நான் உனக்காக நிறைய செலவு செய்தேன்”, என்பது, அந்த மனைவிக்கு செய்த கடமையை குறிப்பதாக உள்ளது. “ஆனால் நீ எனது சந்தோஷத்தை கெடுக்கிறாய்”, அதாவது, இன்னொரு திருமணத்தை செய்து கொள்ள ஆட்சேபிக்கிறாய் என்கிறார் போலும். “பிறகு நீயும் உனது குழந்தைகளும் பிச்சைதான் எடுக்க வேண்டும்”, என்றது, விவாக ரத்து செய்துவிடுவேன் என்பதைக் குறிக்கிறது. பணம் நிறைய இருப்பதால், “மஹர்” கொடுத்து “தலாக்” செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், பாத்திமுத்து தனது முழந்தைகளை வைத்துக் கொண்டு வாழ்வது எப்படி? “அக்பரின் மகள் பூஜா (12) சற்றே மனநலம் பாதித்தவர்”, என்றும் உள்ளது. அதாவது, அவளுக்கு மருத்துவ செலவு, வளர்த்து பெரியவள் ஆக்குவது, திருமணம் செய்து வைப்பது போன்ற கடமைகளிலிருந்தும் அக்பர் தப்பிப்பது தெரிகிறது. இதனால், ஒரு பெண் எல்லாவிதங்களிலும் நெருக்கித் தள்ளப்பட்டபோது, அத்தகைய கொடுமையான முடிவுக்கு வந்து, தனது கணவனையே கழுத்தறுத்துக் கொன்றிருக்கிறாள்.

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

பெண்கள் பிரச்சினைகள் உணரப்பட வேண்டும்: பொதுவாக, இப்பிரச்சினையை பெண்கள் பிரச்சினை என்றெ எடுத்துக் கொள்ளலாம். கணவன் ஒரு மனைவியை / பெண்ணை விவாகரத்து செய்தால், மனைவி-மக்கள் / குழந்தைகள் வாழ, ஜீவனாம்சம் கொடுக்கப்படவேண்டும். ஆனால், ஆண் ஏதோ பணத்தைக் கொடுத்து கழட்டி விடுவது, மற்றும் பெற்ற குழந்தைகளைப் பற்றி கவலைப் படாமல் இருப்பது, கடமைகளைத் தட்டிக் கழிப்பது மற்றும் சட்டப்படி மனைவிக்கு தொல்லைக் கொடுப்பது போன்ற நிலைகளில் ஈடுபட்டால், மனைவி-குழந்தைகள் கதி அதோகதிதான். தனியாக ஒரு பெண் குழந்தைகளுடன் வாழ்வது என்பது பெரிய சோதனை ஆகும். ஆனால், இஸ்லாம் என்று பார்த்தால் பிரச்சினை வருகிறது. அதனால் தான் இதனை விமர்சிக்காமல் ஒதுங்கி விடுகிறார்கள் என்று தெரிகிறது. பொது சிவில் சட்டம் என்று பேசுபவர்களும், பேச பயப்படுபவர்களும், செக்யூலரிஸப் பழங்களும் கூட மௌனிகளாகி விடுகின்றனர். ஆனால், பெண்கள் படும்பாட்டை மற்றவர்கள் உணர, அறிய, புரிய வேண்டும். இப்பிச்சினை பொதுப்பிரச்சினையாக கருதப்படவேண்ட்ம். அப்பொழுதுதான், இந்திய சமூகம் சிறப்பாக இருக்கும்.

© வேதபிரகாஷ்

17-08-2016

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=239296

[2] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58

[3] http://news.lankasri.com/india/03/107579

[4] நியூஸ்.7.டிவி, இரும்பு வியாபாரி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்!, August 16, 2016

[5] http://ns7.tv/ta/death-husband-and-police-arrested-wife.html

[6] http://ns7.tv/ta/while-iron-dealer-kaluttarukkappatta-mysterious-death.html

[7] http://www.dailythanthi.com/News/State/2016/08/17010831/Wife-killed-their-throats-cut.vpf

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா?

ஓகஸ்ட் 17, 2016

கணவன் அக்பரை மனைவி பாத்திமுத்து கொலை செய்தது – கணவன்-மனைவி சண்டையா, கள்ளக்காதல் சீர்கேடா, பெண்ணியப் பிரச்சினையா, சமூக சீர்கேடா?

அக்பர் கொலை 16-08-2016.பாத்தமுத்து

மர்மமான முறையில் கொலைசெய்யப்பட்டுக் கிடந்த மண்ணடி இரும்பு வியாபாரி அக்பர்: சென்னை மண்ணடி என்றாலே, இரும்புப் பொருட்கள், கழிவுகள் போன்றவைதான் ஞாபகம் வரும். வண்ண்டிகளால் அடைந்து கிடக்கும் தெரு, மக்கள் இப்படியும், அப்படியும் சென்று கொண்டிருக்கும் நிலை. இங்கு பெரும்பாலான வியாபாரிகள் முஸ்லிம்கள் தாம். சென்னை பிராட்வே மண்ணடி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 54). இரும்பு வியாபாரி. இவருடைய மனைவி பாத்திமுத்து (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 16-08-2016 அன்று காலை வீட்டின் படுக்கையறையில் தொழில் அதிபர் அக்பர் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்[1]. உடனே, பாத்திமுத்து சத்தம் போட்டு, பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் மைத்துனர் சையதிடம் விசயத்தைக் குறினார். சையது போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த வடக்கு கடற்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்பர் பிணமாக இருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர். தொழில் அதிபர் அக்பர் வசித்து வந்த வீடு 3 மாடிகளை கொண்டது. இந்நிலையில், 3-வது மாடியில் வசித்து வந்த அக்பர் வீட்டிலேயே படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டிருப்பது மர்மமாக உள்ளது[2].

industrialist-murder-Mannady-Chennai-police-investigation_அக்பரை கொலை செய்த மனிதன் வெளியே இருந்து வரவில்லை: இரவு மர்ம நபர்கள் வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர் என்று முதலில் சொல்லப்பட்டது. அக்பர் கொலையுண்ட படுக்கையில் ரத்த கறை படிந்துள்ளது. அதனையும் போலீசார் சேகரித்துள்ளனர்[3]. படுக்கையில் இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர்[4]. கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை. அக்பரின் வீட்டில் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் யாரேனும் புகுந்து அவரை கொன்று விட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது[5]. ஆனால், பிறகு வீட்டில் எதுவும் திருடப்படவில்லை என்று தெரிந்தது. வியாபார போட்டியும் இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது[6]. பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[7]. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். வீட்டில் கொள்ளை அடிக்க வந்த மர்ம நபர்கள் கொலை செய்தார்களா? அல்லது அக்பருக்கு தெரிந்த நபர்கள் அவரை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது[8]. வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்தது என்றும் தெரிந்தது. மேலும், மோப்ப நாய் சோனா வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து தெரு வரை ஓடி சென்று நின்றுவிட்டது[9]. இதனால், கொலையாளி வெளியே இருந்து வரவில்லை அல்லது உள்ளேயிருந்தவர் உதவியுடன் வெளியாள் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் தீர்மானித்தனர்.

அக்பர் கொலை 16-08-2016“சென்னையில் தொழில் அதிபர் கொலை நகைபணம் கொள்ளை” என்று ஆரம்பித்து “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று முடிந்துள்ள செய்திகள்:  நேற்று, “சென்னையில் தொழில் அதிபர் கொலை நகை-பணம் கொள்ளை” என்று தான் செய்திகள் வந்தன. பிறகு, “கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது” என்று செய்திகள் முடிந்துள்ளன. அதாவது, தாம்பத்திய உறசு முறைக்கு அப்பாற்பட்ட கள்ளக்காதல்-தொடர்பு தான் கொலைக்குக் காரணம் என்பது தெரிந்திருக்கிறது, இருப்பினும், “முஸ்லிம்கள் சமாச்சாரம்” என்று செய்தியாளர்கள் ஜாக்கிரதையாக இருந்து, “நகை-பணம் கொள்ளை” என்று கதையினை ஆரம்பித்து வைத்தார்கள். பெண் தகராறில் அக்பர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[10] என்று முன்னரே கூறப்பட்டது. பிறகு, அதனை ஏன் இன்னும் விளக்கவில்லை என்று தெரியவில்லை. கள்ளக்காதலால், மனைவி கணவனை கொலை செய்தாள், கணவன் மனைவியைக் கொலை செய்தான், ஏன் ஆட்களை வைத்தே கொலை செய்தாள் / செய்தான் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன, வந்துக் கொண்டிருக்கின்றன. அந்நிலையிலும், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய வீராங்கனைகள், மனநல வல்லுனர்கள் என்று யாரும் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வழக்கம் போல ஊறுகாய் ;போடுவது எப்படி, எந்த கடையில் எந்த புடவை வாங்கலாம், லிங்கின்ஸைப் போடுவது எப்படி என்று தான் வாத-விவாதங்களை செய்து கொண்டிருந்தனர். பெண்ணிய அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை.

அக்பர் கொலை 16-08-2016.தினத்தந்திபோலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு: தூத்துக்குடி காயல்பட்டினத்தை சேர்ந்தவர் அக்பர் (50). இவர் சென்னை மண்ணடி கிருஷ்ணன் கோயில் தெருவில் உள்ள வீட்டின் 3வது மாடியில் வாடகைக்கு வசித்தார். தொழிலதிபரான இவர், மண்ணடி பகுதியிலேயே இரும்பு கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பாத்திமுத்து (45). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அக்பருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது[11]. கள்ளக்காதலை கைவிடக்கோரி பாத்திமுத்து பலமுறை கெஞ்சியும் அக்பர் மறுத்து விட்டார். சில வாரங்களுக்கு முன்பு கள்ளக்காதலியுடன் இருந்த அக்பரை, பாத்திமுத்து கையும், களவுமாக பிடித்து எச்சரித்தார். அடித்து உதைத்தனர் என்றும் இன்னொரு ஊடகம் குறிப்பிட்டது. 15-08-2016 இரவு அன்று 12.30 மணியளவில் குடிபோதையில் வந்த அக்பரிடம், பாத்திமுத்து கள்ளக்காதலை கைவிட கூறியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது[12].  ‘‘ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்னையும் குழந்தைகளையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் செய்வது நியாயமா’’ என்று பாத்திமுத்து அழுது புலம்பினார். ஆனால் அவரோ பாத்திமுத்துவை எட்டி உதைத்தார். பிறகு போதையில் தனது அறையில் படுத்துள்ளார்.  அவரைப் பார்க்கக் பார்க்க ஆத்திரமுற்ற பாத்திமுத்து வீட்டிலிருந்த இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து அவரது கழுத்தில் சராமாரியாக 3 முறை வெட்டியுள்ளார்[13]. மேலும் ரத்தம் கொட்டியதை பார்த்ததும் பாத்திமுத்துக்கு மயக்கம் வந்துவிட்டது. அரிவாளை துணியில் சுற்றி பீரோவுக்கு அடியில் தள்ளிவிட்டு அவர் இறந்ததை உறுதி செய்த பிறகு தன்னுடைய அறைக்கு சென்று தூங்கினார்.

© வேதபிரகாஷ்

17-08-2016

[1] தினத்தந்தி, கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழில் அதிபர் கொலை கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி கைது, பதிவு செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 1:08 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், ஆகஸ்ட் 17,2016, 2:45 AM IST.

[2] தமிழ்.ஒன்.இந்தியா, சென்னையில் தொழிலதிபர் கொலை.. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கொடூரம்!, By: Ganesh Raj, Published: Tuesday, August 16, 2016, 17:48 [IST]

[3] தினத்தந்தி, சென்னையில் தொழில் அதிபர் கொலை நகைபணம் கொள்ளை, பதிவு செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 16,2016, 3:19 PM IST

[4] மாலைமலர், சென்னை மண்ணடியில் தொழில் அதிபர் படுகொலை: நகைபணம் கொள்ளை?, பதிவு: ஆகஸ்ட் 16, 2016 12:03.

[5] http://www.dailythanthi.com/News/State/2016/08/16151929/Kill-the-industry-leaders-in-Chennai-5-kg-jewel-robbery.vpf

[6] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=96671

[7] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf

[8] http://tamil.oneindia.com/news/tamilnadu/businessman-murdered-chennai-260381.html

[9] தமிழ்முரசு, மண்ணடியில் பயங்கரம்கழுத்து அறுத்து தொழிலதிபர் படுகொலை; மனைவி, கள்ளக்காதலியிடம் போலீசார் தீவிர விசாரணை, 8/16/2016 . 3:33:44 PM

[10] http://www.maalaimalar.com/News/TopNews/2016/08/16120317/1032870/industrialist-murder-Mannady-Chennai-police-investigation.vpf

[11] The Times of India, Woman kills sleeping hubby, tells children to wake him up, TNN, Chennai edition, Aug 17, 2016, 04.17 AM IST.

[12] http://timesofindia.indiatimes.com/city/chennai/Woman-kills-sleeping-hubby-tells-children-to-wake-him-up/articleshow/53731735.cms

[13] தினகரன், கள்ளக்காதலியுடன் ஓட முயன்ற கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்றார் மனைவி, Date: 2016-08-17@ 00:38:58

ஜாகிர் நாயக் – கேரளா- ஐசிஸ் விவகாரங்களில் 23-07-2016 வரை மும்பையில் மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்!

ஜூலை 24, 2016

ஜாகிர் நாயக் – கேரளா- ஐசிஸ் விவகாரங்களில் 23-07-2016 வரை மும்பையில் மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்!

Raheel Sheikh, Hafeez Saeed, Zakir Naik - how they are connected though jihad

ஜாகிர் நாயக்கிற்கு ரஹீல் செயிக்கைத் தெரியும்: ரஹீல் செயிக் தன்னுடய நிறுவனங்களில் நிகழ்ச்சிகளுக்காக வேலைசெய்துள்ளதை ஜாகிர் நாயக் ஒப்புக்கொண்டுள்ளார். “ஆயிரக்ககணக்கில் உள்ள தொண்டர்களில் அவனும் ஒருவன். ஊடகங்களின் மூலம் தான், அவக் சந்தேகிக்கப்படும் தீவிரவாதி என்று எனக்கு தெரிய வந்தது. அதனால், அவன் தோன்றும் காட்சிகளை எங்களுடைய வீடியோக்களிலிருந்து எடுத்துவிட சொன்னேன். ஏனென்றால், அதனை பார்ப்பவர்கள், அவனும் ஐ.ஆர்.எப்புடன் தொடர்புடைவன் என்ற நினைக்கக்கூடும் என்பதால், அவை நீக்கப்பட்டன”, என்று விளக்கினார்[1]. அதாவது, ஜாகிர் நாயக்கே தனக்கு சாதகமாக இல்லை என்றால், எடுத்த வீடியோக்களில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது. பிறகு, தான் பேசிய பேச்சுகளே “எடிட் / டாக்டர்டு” (மாற்றம் செய்யப்பட்ட) செய்யப்பட்டுள்ளன என்று இப்பொழுது சாக்கு சொல்வதேன்? அதற்கு திக்விஜய் சிங்கும் ஒத்து ஊதியதை கவனிக்கத் தக்கது. இவ்வாறு ஆதாரங்கள் மாற்றப்பட்டிருப்பது, திக்விஜயுக்கு முன்பே தெரியுமோ?

Rohan Imtiyaz and the gang 01-07-2016 shootingதற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுகிறதுஜாகிர் நாயக்கின் வாதம்[2]:. பங்காளதேச தற்கொலை தாக்குதல் விசயத்தில், தற்கொலை தாக்குதலை நியாயப்படுத்தியதோடு, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் எப்படி குண்டு போட்டதோ அது போல என்று விளக்கமும் அளித்தார். ஆனால், ஜப்பானியர்களுக்கு குரானும் இல்லை, ஜிஹாத் போன்றா வெறித்தனங்களும் இல்லை. தற்கொலை தாக்குதல் இஸ்லாத்தில் ஒரு யுத்த யுக்தியாக கையாளப்பட்டு வருவதால், அது அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அதில் அப்பாவிகள் கொல்லப்பட்டால் அது ஹராம் ஆகும், என்று ஜாகிர் நாயக் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்[3]. அதுமட்டுமல்லாது, செயிக் அப்த்-அ- இபின் பாஜ், என்ற சலாபி இஸ்லாமிய மதத்தலைவர் ஆதரிப்பதாக எடுத்துக் காட்டினார்[4]. இவர் சவுதி அரேபியாவின் தலைமை முப்தி ஆவார். அப்துல்-முஸ்ஹின் அல்-அப்பாத் என்ற இன்னொரு இஸ்லாமிய சலாபி வல்லுனர் பெயரையும் குறிப்பிட்டார்[5]. இப்படி மற்ற சலாபி வல்லுனர்கள் ஆதரித்து, ஒப்புதல் அளித்துள்ள விவரங்களை இங்கு படிக்கலாம்[6].

Rohan Imtiyaz and young jihadis 01-07-2016 insired by Zakir Naik.இஸ்லாம் தற்கொலை தாக்குதலை ஆதரிப்பது ஏன்?: இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், உலகத்தில் உள்ள குப்ரு (இஸ்லாத்திற்கு விரோதமாக உள்ளவை என்று தீர்மானப்படுத்தப்பட்டுள்ளவை) தன்மை ஒழியும் வரை, ஜிஹாத் என்கின்ற சண்டையை ஒவ்வொரு முஸ்லிமும் செய்து கொண்டே இருக்க வேண்டும். “உலகத்தில் காபிர்கள் இருக்குவரை, அல்லாவின் வழியில் சண்டையிட்டுக் கொண்டே இரு”, என்கிறது குரான். அதாவது, காபிர்கள் முழுவதுமாக நீக்கப்பட்டால் தான், கொலை செய்யப்பட்டால் தான், அந்த ஜிஹாத் நிறுத்தப்படும். உலகத்தில், முஸ்லிம்கள் தவிர மற்றவர்கள் எல்லோருமே அழிய வேண்டும் என்றால், இந்து ஜிஹாதி-தீவிரவாதிகள் காலத்திற்கு ஏற்ப எந்த முறைகளையும் கையாளுவார்கள். கத்தி போய், துப்பாக்கி வந்து, அத்துப்பாக்கியும் ஏ.கெ-47 என்று மாறி, பிறகு ராக்கெட் லாஞ்சர், குண்டுவெடுப்பு கொலை என்று வளர்ந்து வருவதால், இத்தகைய தற்கொலை ஜிஹாதையும் ஆதரிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதனால் தன் இஸ்லாமிய மதகுருக்கள் அதனை பறிந்துரைக்கின்றனர்[7].

Can Naik blamed for JuD website link argues-but story differsஜாகிர் நாயக் எங்குள்ளார்?: ஜாகிர் நாயக் இந்தியாவுக்கு வராதது வியப்பாக உள்ளது. வீடியோ / ஸ்கைப் மூலம் பதில் சொன்னதால், அவர் சவுதி அரேபியாவில், துபாயில் அல்லது ஏதோ ஒரு ஆப்பிரிக்க நாட்டில் உள்ளார் என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளன. மேலும், உள்துறை அமைச்சகம் ஐ.ஆர்.எப்பிற்கு, யார்-யாரிடமிருந்து பணம் வந்துள்ளது என்பதையும் ஆராய ஆரம்பித்து விட்டது. இதனால், அந்த தொடர்புகள் மற்ற விவகாரங்கள் அறியப்படும். அந்நிலையில், ஜாகிர் நாயக்கிடம் வேலை செய்த ஒருவர், அவர் அயல்நாடுகளிலிருந்து வரும் பணத்தை தவறாகப் பயன்ப்டுத்துகிறார் என்று ஜி-டிவிக்கு பேட்டி கொடுத்துள்ளார். ஏழை முஸ்லிம்களுக்கு என்று கொடுக்கும் பணத்தை இவர், தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதற்கு செலவழிக்கிறார். மேலும், “மணி லான்டரிங்” முறையற்ற பண-பரிவர்த்தனையிலும் ஈடுபட்டுள்ளார் என்று குற்றஞ்சாட்டுகிறார்[8]. நாயக் உச்சநீதி மன்றத்தில் பல மாநிலங்களில் பலதரப்பட்ட அரசு துறைகளால், பல வழக்குகளாக விசாரிக்கப்பட்டு இதை, ஒரே புலனாய்வு ஏஜென்சியை அமைத்து விசாரிக்கக் கோரி, ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார், அது நிலுவையில் உள்ளது[9].

zakir-mumba- A. N. Orchid22-07-2016 வியாழக்கிழமை ஜாகிர் நாயக் கம்பெனியின் மானேஜர் கைது செய்யப்பட்டது: எபின் ஜேக்கப் என்பவர் கணவனுடன் மும்பைக்குச் சென்ற தன்னுடைய சகோதரி மெரின் ஜேக்கப்பை, காணவில்லை என்றும், மும்பையில் உள்ள அர்ஸி குரேசி / அர்ஷி குரேஷி என்பவர் வல்லுக்கட்டாயமாக மதம் மாற்றியுள்ளார் என்றும் கொச்சி போலீஸில் புகார் கொடுத்தார்[10]. மெரின் ஜேக்கப், பெஸ்டின் வின்சென்ட் என்பவன் கூட பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டாள். பிறகு, இருவரும் ஶ்ரீலங்கா சென்று அங்கிருந்து, சிரியாவுக்குச் சென்று ஐசிஸில் சேர்ந்து விட்டனர் என்று புகார் கொடுத்தார்[11]. அதனால், கேரள போலீஸார் மற்றும் ஏடிஎஸ் போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர். இங்கு “லவ் ஜிஹாத்” வேறு முறையில் வேலை செய்துள்ளது. அதாவது, இந்து பெண்ணிற்குப் பதிலாக, ஒரு கிறிஸ்தா பெண் இலகாகியுள்ளார். இதனால், கேரளாவில் ஆதிக்கத்தில் உள்ள கிருத்துவர்களும் இதை விடுவதாக இல்லை போலும்! அர்ஸி குரேசி, ஐ.ஆர்.பியின் உறுப்பினர், 21-07-2016 அன்று நவி மும்பையில் கேரளா மற்றும் ஏடிஎஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டான்[12].

How-Indian-Media-Got-Mad-On-Zakir-Naik-And-Hafiz-Saeed-Links-Must-Watchஅர்ஷி குரேஷி ஜாகிர் நாயக் கம்பனியின் மானேஜர்: இவன் ஐ.ஆர்.பியில் விருந்தினர் நலன் மேலாளர் [Guest Relations Manager] என்று வேலைசெய்து கொண்டு, ஐ.ஆர்.பிக்கு வரும் நபர்களுடன் உரையாடி வந்துள்ளான். மெரின் ஜேக்கப் என்ற கேரள பெண் மும்பையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, பெஸ்டின் வின்சென்ட் என்ற தனது கணவனோடு வேலை செய்து கொண்டிருந்தாள்.  2009ல் ஜாகிர் நாயக் கூட்டத்தில் இவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு இவர்கள் ஜாகிர் நாயக்கால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் படியான போதனை செய்யப்பட்டது[13]. முதலில் பெஸ்டின் வின்சென்ட் முஸ்லிமாகி யாஹ்யா என்ற பெயரை வைத்துக் கொண்டான். பிறகு தனது மனைவியையும் மதம் மாற னற்புறுத்தினான். ஆனால், அவள் மறுத்ததால், 2015ல்  ஐ.ஆர்.பி நடத்தும் வகுப்புகளில் கலந்து கொள்ள செய்தான். பிறகு அவளும் மதம் மாறினாள். மேலும் இஸ்லாம் பற்றி படிக்க வேண்டும் என்ற போர்வையில், அவர்கள் ஶ்ரீலங்கா மூலம், சிரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது[14]. ஆனால், நவிமும்பை, செக்டார்.20, சீயுட்ஸ் ஏரியா பகுதியில் உள்ல அடுக்குமாடி வீட்டில் முதல் மாடியில் வசிக்கும் அர்ஸி குரேசியின் மனைவி தனது கணவன் 1000% அப்பாவி என்றும் அவருக்கு ஒன்றுமே தெரியாது என்றும் சாதித்தாள்[15]. இது வழக்கமாக, மாட்டிக் கொள்ளும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் மற்ற ஜிஹாதிகளின் பெற்றோர், உறவினர், மற்றோர் கூறுவது போலவே இருக்கிறது. குரேசி அங்கிருந்துதான் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டான்[16]. 22-07-2016 அன்று இஸ்வான் கான் என்பவன் மும்பையில் கைது செய்யப்பட்டு, 23-07-2016 அன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டான்[17].

© வேதபிரகாஷ்

24-07-2016

[1]  Naik accepted that Raheel Shaikh, a terror suspect, had worked as a volunteer in some of his programmes. “I did not know him personally and he was not part of our organisation. We have thousands of volunteers and he was one of them. When I came to know from media about him being a terror suspect I enquired my staff about him and when they said he was our volunteer, I asked them to remove his visuals from the videos so that people do not think he is part of IRF (Islamic Research Foundation, his organisation),” he added. Mr Naik, however, said he does not know about Abu Jundal.

http://www.asianage.com/kolkata/zakir-naik-denounces-terror-wrong-366

[2] India.today, Zakir Naik justifies suicide bombing as legal in tactic of war, Mail Today Bureau, Posted by Arpan Rai, New Delhi, July 16, 2016 | UPDATED 09:14 IST

[3] Controversial Islamic preacher Zakir Naik who is under fire for inspiring terrorists, including those who attacked a Dhaka café said on Friday that suicide bombings are permitted in Islam if it used as a tactic in war but if innocents are getting killed it is haram. Justifying suicide bombings as a tactical move in wars, he gave the example of Japan in World War II.

http://indiatoday.intoday.in/story/zakir-naik-suicide-bombing-islamic-preacher/1/716209.html

[4] Who are, then, those many scholars who have permitted the suicide bombing as war tactic? Naik has honestly named a few of them like Shaikh Abd al-Aziz ibn Baz, a Saudi Arabian Islamic scholar and a leading proponent of the Salafi sect. Notably, Ibn Baz has served as Grand Mufti of Saudi Arabia from 1993 until his death in 1999.

firstpost.com, Only Salafists like Zakir Naik view suicide bombing as war tactic; it’s haraam in Islam, Ghulam Rasool Dehlvi,  Jul 17, 2016 17:27 IST

[5] Naik also cited another Salafist Shaikh Abdul-Muhsin al-Abbaad who wrote a complete paper entitled, “With Which Religion and Intellect are Suicide Bombings and Destruction Considered Jihaad?

http://www.salafipublications.com/sps/sp.cfm?subsecID=MNJ14&articleID=MNJ140006&articlePages=1

[6] http://www.firstpost.com/india/suicide-bombing-is-haram-in-islam-only-salafist-ideologues-like-zakir-naik-view-it-as-a-war-tactic-2898840.html

[7] http://www.thenational.ae/thenationalconversation/comment/hatred-violence-and-the-sad-demise-of-yusuf-al-qaradawi

[8] https://www.youtube.com/watch?v=4WQKY11ON9w

[9] Naik had filed a writ petition in the Supreme Court (SC), asking for one agency to be appointed for investigating all the cases spread in different states. The petition is pending before the apex court.

http://indianexpress.com/article/cities/mumbai/man-held-for-radicalising-kerala-woman-my-husband-1000-innocent-claims-arshi-qureshis-wife-2930483/

[10] India.today, Employee of Zakir Naik’s IRF arrested for allegedly brainwashing youths to join ISIS, Mustafa Shaikh | Posted by Ashna Kumar Mumbai, July 22, 2016 | UPDATED 02:50 IST

[11] http://indiatoday.intoday.in/story/zakir-naik-irf-islamic-research-foundation-mumbai-kerala-isis-islam-nia/1/721036.html

[12] According to an eyewitness, the police took Qureshi into custody from his first-floor apartment in Sector 50 of Navi Mumbai’s Seawoods area.

[13] Hindusthantimes, Employee from Zakir Naik’s foundation arrested for influencing youth to join IS, HT Correspondent, Hindustan Times, Mumbai, Updated: Jul 22, 2016 10:30 IST

[14] Jacob alleged that his sister had been influenced to convert to Islam by Yahya and Ashi. Hailing from a Christian family, Mariyam née Merin had met her husband while working in Mumbai in 2015. Though she initially resisted Islam, she was taken to several classes, following which, she had been converted, police sources said. Ebin said that at one point his sister wished to come back to Kerala, where her family is, but was eventually forced into joining the IS. His brother-in-law also tried to convert him, Ebin added.His parents alleged that Yahya and Mariyam were radicalised though Dr Naik, who they had met while in Mumbai. According to police sources, Arshi was the public relation manager responsible when Dr Naik had held a massive public conference in 2009.

http://www.hindustantimes.com/mumbai-news/irf-employee-arrested-in-mumbai-for-influencing-youth-to-join-is/story-M0bty3pRiV8KAnxXrlvhDL.html

[15] Express News Service, Man held for ‘radicalising’ Kerala woman: ‘My husband 1000% innocent’, claims Arshi Qureshi’s wife, Mumbai, Published:July 23, 2016 1:36 am.

[16] http://indianexpress.com/article/cities/mumbai/man-held-for-radicalising-kerala-woman-my-husband-1000-innocent-claims-arshi-qureshis-wife-2930483/

[17] The special team, probing the mass disappearance of Keralite youths and their suspected links with Islamic State, arrested a man named Rizwan Khan from Mumbai on Saturday – 23-07-2016.

http://english.manoramaonline.com/in-depth/is-kerala-terrorism/islamic-state-kerala-youth-mumbai-arrest-story-in-points.html

மோடியை விமர்சித்த முஸ்லிம் நடிகை கொலை செய்யப்பட்டாள் – மிஸ்டர் மோடி காஷ்மீரை எங்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று கேட்டவள்!

ஜூலை 19, 2016

மோடியை விமர்சித்த முஸ்லிம் நடிகை கொலை செய்யப்பட்டாள் – மிஸ்டர் மோடி காஷ்மீரை எங்களுக்கு கொடுத்து விடுங்கள் என்று கேட்டவள்!

How-qandeel-was killed by his brother-shot dead in Multan

15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று கொலை செய்யப்பட்டது: இந்நிலையில்தான் 15-07-2016 வெள்ளிக்கிழமை இரவு அவர் தனது வீட்டில் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார்[1]. சனிக்கிழமை என்று சில பாகிஸ்தான் நாளிதழ்கள் கூறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்ப வீட்டில் வைத்து அவருடைய குரல்வளையை நெரித்துக் கொன்றதை சகோதரர் வாசீம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஒத்துக்கொண்டார் என்கிறது தமிழ்.பிபிசி[2]. பாகிஸ்தானிலேயே, முதலில் அவள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டாள் என்று செய்திகள் வெளியாகின[3]. அவரது சகோதரர் வசீம் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது[4]. அவர் வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை தேடி வந்த போலீசார், 16-07-2016 சனிக்கிழமை இரவு பஞ்சாப்  மாகாணத்தில் உள்ள  தேரா  காசி கான் பகுதியில் கைது செய்தனர். பிபிசியின் படி “ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்ப வீட்டில் வைத்து அவருடைய குரல்வளையை நெரித்துக் கொன்றதை சகோதரர் வாசீம் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஒத்துக்கொண்டார்”, என்றால், 16-07-2016 சனிக்கிழமை இரவு பஞ்சாப்  மாகாணத்தில் உள்ள  தேரா  காசி கான் பகுதியில் கைது செய்தனர் என்பது சரியாக இருக்க முடியும். இது வெள்ளிக்கிழமையில் நடந்த ஜிஹாதி கொலை என்பதனை மறைக்க முயல்வது போல தெரிகிறது.

Qanteel Bloch - brother killerகொலைசெய்த சகோதரன் கூறியது: கைது செய்யப்பட்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் வசீம் பேசும்பொழுது தெரிவித்ததாவது, “எனது தங்கைக்கு மயக்க மருந்து குடுத்து அவர் உறங்கும் பொழுது கழுத்தை நெரித்துக் கொன்றேன. சமூக வலைதளங்களில்   அவளது நடவடிக்கைகள் மூலம் எங்கள் குடும்பத்திற்கு தீராத அவப்பெயரை உண்டாக்கி விட்டாள். பலூச் இனத்திற்கே எனது தங்கையால் அவப்பெயர் வந்து விட்டது. ஆபாசப் படங்களைப் போட்டு எங்களது சமூகத்தை அவர் கேவலப்படுத்தி வந்தார்[5]. மேலும் மதகுரு முஃதி காவியுடன் அவள் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் முக்கியமான ஒன்றாகும். நான் அவளைக் கொன்றதே அவளுக்கு தெரியாது. அவளுக்கு மயக்க மருந்தை மாத்திரை வடிவில்   கொடுத்து விட்டு அவள் உறங்கும் பொழுது கழுத்தை நெறித்துக் கொன்றேன்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்[6]. இந்தக் கொலை குறித்து கருத்து தெரிவித்த வசீமின் தந்தை முஹம்மத் அஷீம், இந்த கொலையை வசீம் அவனது சகோதரன் முக்கமது அஸ்லம் சஹீனின் தூண்டுதலின் பேரில் செய்தான் என்று தெரிவித்தார். இந்நிலையில் குவாந்தீல் பலூச்சின் உடலை அவரது சொந்த ஊரான சாசாதார்தின் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து விசாரித்த காவல்துறையினர். குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக அவரது அண்ணனே பலோச்சை ஆணவக் கொலை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்[7]. பாகிஸ்தானில், சமீபத்தில் ஆணவக்கொலைகள் அதிகரித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பிரபல மாடல் அழகி கொலை செய்யப்பட்டிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது[8]. ஆண்டொன்றுக்கு 100க்கும் மேலான கொலைகள் நடக்கின்றன.

qandeel marriage certificateகௌரவ கொலையா, மதக்கொலையா, ஜிஹாதி கொலையா – பின்னணி என்ன?: பாகிஸ்தானிய ஊடகங்களே இக்கொலையை பலவிதமாகச் சித்தரித்துள்ளன. மனித உரிமை குழுக்கள் இதனை கௌரவக் கொலையாக கருதுகின்றன. இதனை எதிர்த்து ஆர்பாட்டமும் நடத்தியுள்ளனர். ஆனால், குவான்தீன் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்து மாடல், நடிகை என்றெல்லாம் உலா வந்ததாலும், பேஸ்புக்கில் பலரை விமர்சித்ததாலும், அவள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக இருந்தாள் என்று மதவாதிகள் தீர்மானித்திருந்தனர். அந்நிலையில் அவள் கொலை செய்யப் பட்டிருந்தால், அதனை மதக்கொலை எனலாம். ஆசார இஸ்லாத்தை நீர்த்தாள், பர்தாவிலிருந்து வெளிவந்தாள், ஹிஜாபை துறந்தாள், இஸ்லாமாக வாழவில்லை என்று அவளை அடுக்கடுக்காக குறைகூறி குற்றஞ்சாட்டியுள்ளனர். அவளது சகோதரன் கொடுத்த விளக்கம், மற்றும், அவளை கொலை செய்தலால், சுவர்க்கத்தின் கதவு தனக்காக திறந்திருக்கிறது என்றேல்லாம் பேசியதைப் பார்த்தால், இது ஒரு ஜிஹாதி கொலை என்று தோன்றுகிறது[9]. “அவளைக் கொன்றதற்காக நான் வருத்தப்படவில்லை. மாறாக பெருமைப்படுகிறேன். என்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களின் மனவருத்தத்தை நீக்கியதற்காக, சுவர்க்கத்தில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளேன். நான் என்னுடைய குடும்ப மானத்தைக் காத்துள்ளேன், நான் எந்த டண்டனைக்கும் தயாராக உள்ளேன்”, என்றான்[10]. ஆக ஒரு ஜிஹாதி பேசுவதைப் போல பேசியுள்ளான்[11].

Qandeel-Baloch-admits-her-marriageகுவான்தீல் பலூச்சின் வீடியோ பேச்சுகள்: பாகிஸ்தான் ட்ரிப்யூன் கீழ்கண்ட ஐந்து வீடியோக்களை தொகுத்து வெளியிட்டுள்ளது[12]. பொறுமையாக அவற்றை கேட்கும் போது, ஒரு முஸ்லிம் என்ற நிலையில் அவர் பேசியுள்ளது தெரிகிறது. அவளது சகோதரன், இவற்றைக் கேட்டிருந்தால், நிச்சயமாக அவன் கொன்றிருக்க மாட்டான். ஆனால், அதே நேரத்தில் அடிப்படைவாத முஸ்லிம், ஒரு பெண் இவ்வளவு தைரியசாலியாக, அறிவாளியாக இருப்பதையும் விரும்பியிருக்க மாட்டான்.கஊழலைத் தட்டிக் கேட்டதால், அரசியல்வாதிகளும் அதிருப்தி அடைந்திருப்பார்கள்.

எண் வீடியோ விவரம் நேரம் – நிமிடம்-நொடி விடியோ லிங்
1 பேஸ்புக்கில் தன்னை வெறுத்தவர்களை, தைரியமாக நேர்கொண்டு பதில் அளித்தாள். 1.46 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/714341198710635/
2 பாகிஸ்தான் தோற்றதற்கு ஷஹீத் அப்ரிதை திட்டியது. 1.34 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/788099754668112/
3 முஸரப், இம்ரான் கான் முதலியோரது அரசியல் ஊழலைப் பற்றி விமர்சித்தது. 2.04 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/749377201873701/
4 இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கேள்வி கேட்டது. 5.16 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/785186261626128/
5 தனக்குத்தானே, ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டது. 0.49 https://www.facebook.com/OfficialQandeelBaloch/videos/707321109412644/

அவள் பேசும் விதம், அவள் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அரசியல் நிகழ்வுகளை நன்றாக அறிந்திருக்கிறாள் என்று தெரிகிறது. இந்தியாவில் கூட எந்த நடிகையும் இந்த அளவுக்கு தைரியமாக பதில் சொல்லியிருக்க முடியாது.

© வேதபிரகாஷ்

19-07-2016

With mufti - Qanteel Bloch

[1]http://www.dinamani.com/world/2016/07/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81/article3533905.ece

[2] பிபிசி.தமிழ், பாகிஸ்தான் மாடல் அழகியை கொலை செய்த அவரது சகோதரர் கைது, 17 ஜூலை 2016.

[3] https://jang.com.pk/latest/138693-qandeel-baloch-shot-dead-in-multan; http://atv.com.pk/qandeel-baloch-shot-dead/

[4] http://www.bbc.com/tamil/global/2016/07/160717_pak_model_brother

[5] தமிழ்.ஒன்.இந்தியா, பலூச் இனத்தின் அவமானச் சின்னம் என் தங்கை.. பாக். அழகியின் அண்ணன் வாக்குமூலம், By: Sutha, Updated: Monday, July 18, 2016, 11:38 [IST]

[6] http://tamil.oneindia.com/news/international/qandeel-balooch-killing-she-was-drugged-before-murder-258248.html

[7] நியூஸ்.7.டிவி, நிர்வாண சவால் விடுத்த பாகிஸ்தான் மாடல் அழகி ஆணவக்கொலை!, July 17, 2016.

[8]  http://ns7.tv/ta/qandeel-baloch-case-brother-held-pakistan-celebritys-murder.html

[9] http://edition.cnn.com/2016/07/18/asia/pakistan-qandeel-baloch-brother-confession/

[10]  “I have no regrets. Instead I am proud of what I did,” he added. “I have earned a place in heaven by relieving the agony of my parents and family.” Waseem, who said he has decided not to hire a lawyer, recorded his confessional statement in court on Sunday. “I saved my family’s honour and I’m ready for any punishment,” he said.

http://www.samaa.tv/pakistan/2016/07/qandeels-brother-says-he-earned-a-place-in-heaven-by-killing-her/

[11] samaa.tv/pakistan, Qandeel’s brother says he earned “a place in heaven” by killing her, July 18, 2016, By: Samaa Web Desk

[12] http://tribune.com.pk/story/1143002/5-times-qandeel-baloch-brutally-honest/

 

முஸ்லிம்கள், இந்தியர்களின் நலன்களுக்கு அல்லது தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றிய தங்களது நிலையை தெளிவாக்க வேண்டும்!

ஜூலை 17, 2016

முஸ்லிம்கள், இந்தியர்களின் நலன்களுக்கு அல்லது தீவிரவாதிகளின் செயல்களுக்கு ஆதரவு கொடுப்பதை பற்றிய தங்களது நிலையை தெளிவாக்க வேண்டும்!

Pro-zakir ralley in patna raising pro-paki slogans 16-07-2016

ஜாகிர் நாயக் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை(ஜூன் 19, 2010): இந்திய பிரபல மதபிரச்சாரகர் ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி. இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். இதேவேளை, ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது. ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Zakir Naik inspired terrorists 01-07-2016

ஒவ்வொரு முஸ்லீமும் தீவிரவாதியாக வேண்டும் என்று பேசிவரும் ஜாகிர் நாயக்: இப்படியும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஒஸோமா பின் லேடனைப் புகழும், தீரவாதக் கொள்கையையுடைய ஜாகிர் நாயக்கை தடைசெய்யப்பட்டார், என்றும் கூறுகிறது. அந்நாட்டு உள்துறை செயலர், “டிவி மதப்பிரச்சாரகர் தூண்டிவிடும் வகையில் பேசுவதாலும் அவருடைய ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையினாலும் தடைசெய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார்”. இப்பொழுதும் அந்த கருத்தை மறுக்கவில்லை. ஆனால், திடீரென்று முஸ்லிம்கள் எப்படி நாரக்கிற்கு ஆதரவு தெர்விக்கிறார்கள் என்று பார்த்தால், அது முஸ்லிம் ஆதரவு, ஷியா எதிர்ப்பு, முதலியவற்றை விட, மோடி-எதிர்ப்பு என்ற வகையில் வந்து முடிந்துள்ளது. ஜாகிர் நாயக்கை முடக்கத்தான் பாஜக அரசு முயல்கிறது என்பது போன்ற சித்தரிப்பு மற்றும் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது. இது கிட்டத்தட்ட “சகிப்புத் தன்மை” பிரச்சாரம் போல ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திக்விஜய சிங், எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு விட்டதால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஏகப்பட்ட அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்.

அதிரை - எஸ்.டி.பி.ஐ போராட்டம்

வெள்ளிக்கிழமை 15-07-2016 பாட்னாவில் நடந்த ஆர்பாட்டம்: ஜாகிர் நாயக் மற்றும் அசாஸுத்தீன் ஒவைசி இவர்களை ஆதரித்து, பாட்னா விஞ்ஞான கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் போட்டுக் கொண்டு ஆர்பாட்டம் செய்தவர்களை போலீஸார் கைது செய்தனர்[1]. அது மட்டுமல்லாது, அதன் பின்னணியுள்ளவர்களைப் பற்றி விசாரிக்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளது[2]. அமெரிக்காவே, காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று சொல்ல பாகிஸ்தான் அமுக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கும் போது, இந்தியாவில், பீஹாரில் இருக்கும் முஸ்லிம்கள் இவ்வாறு பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எப்படி போட முடியும்? அத்தகைய மனோபாங்குதான் என்ன?  ஆக, காஷ்மீர பிரச்சினையையும், இந்த ஜாகிர் நாயக்-ஒவைசி பிரச்சினையுடன் முடிச்சுப் போட பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

 zakir naik protest chennai 2

தமிழக முஸ்லிம்கள் தீவிரவாதத்தை முதலில் எதிர்க்க வேண்டும்: தமிழக முஸ்லிம்கள் முதலில் இஸ்லாம் தீவிரவாததத்திற்கு உபயோகப்படுத்துவதை எதிர்க்க வேண்டும். ஐசிஸ்-ஐசில் முதலிய இயக்கங்கள் உலகளவில் அப்பாவி மக்களைக் கொன்று வருவதை யாரும் மறுக்க முடியாது. இன்று வரை இந்தியாவில் காஷ்மீ, உத்திரபிரதேசம், கேரளா, ஹைதரபாத் முதலிய இடங்களில் காகிர் நாயக்கை வைத்து நடைபெற்று வரும் விவகாரக்களைக் கவனிக்க வேண்டும். இந்தி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களுடம் சேர்வதை அவர்கள் தடுக்கவில்லை. கேரள முஸ்லிம் பெற்றோர்களே கலங்கியுள்ள நிலையில், அதைத் தடுக்க என்ன செய்வது என்று விடை கொடுப்பதில்லை. சவுதி அரேபிய இஸ்லாம், இந்திய இஸ்லாத்திடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இஸ்லாமிய தீவிரவாத்த்தைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ல முடியும். சவுதி வகாபிசத்துவ தீவிரவாதத்தை ஆதரித்ததால் தான், ஜாகிர்நாயக்கின் வகாபிச சேவையைப் பாராட்டி இஸ்லாத்திற்கு சேவை செய்தவராக அறிவித்து 2015 ஆம் ஆண்டுக்கான மன்னர் பைசல் சர்வதேச விருதாக சவுதி வகாபிச அரசு 24 காரட் 200 கிராம் தங்கப் பதக்கத்தோடு இந்திய பண மதிப்பாக ரூபாய் 1,35,00,000/- (2 லட்சம் யுஎஸ் டாலர்கள்) அன்பளிப்புத் தொகையாகவும் வழங்கியது. மார்க்கண்டேய கட்ஜு ஸாகிர்நாயக் பிரச்சாரம் குறித்தும் சமயத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான முரண்குறித்தும், வகாபிசம் சூபிகள் பேசிய இஸ்லாமிய அறவியல் கருத்துக்களிலிருந்து மாறுபட்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.

 zakir naik protest chennai 3

முஸ்லிம்கள் ஏன் இந்திய குடிமகன்கள் என்பதை மறக்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்?: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள், எதிர்ப்புகள் முதலியவற்றில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதை கவனிக்க வேண்டும். அவர்களை ஏன் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்காமல் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். வெறும் வார்த்தைகள் ஒன்றும் செய்து விடமுடியாது. ஆயிரம் அப்பாவி மக்களைக் கொன்று விட்டு, அதனை நான் கண்டிக்கிறேன் என்றால் என்ன பிரயோஜனம்? ஒசாமா பின் லேடனை ஆதரிக்கிறேன் என்ற ஜாகிர் நாயக்கை ஆதரித்து ஆர்பாட்டம் நடத்துவதால் பொது மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ன இது, தீவிரவாதிகளை எதிர்த்து தானே கூட்டம் போடுகிறார்கள் என்று நினைப்பார்கள். முஸ்லிம்கள் இந்திய குடிமகன்கள் என்பதை மறந்து, அடிக்கடி எல்லைகளைக் கடந்த ஆதரவுகளை தெரிவித்த்துக் கொள்வது, தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் முதலியோருக்கு சாதகமாக பேசுவது, அறிக்கைக்கள் விடுவது, ஆர்பாட்டங்கள் செய்வது முதலியனன, அவர்களை மேலும் இந்திய சமூகத்திலிருந்து பிரிக்கத்தான் செய்யும்.

ZAkir on sex

இசுலாமியத் தீவிரவாதம்  என்றால் என்ன?: இசுலாமியத் தீவிரவாதம் (Islamic Terrorism) என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும் கொலைகளையும் குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நியாயப்படுத்துகின்றனர். சமீப காலங்களில் உலகெங்கும் தீவிரப் போக்குடைய இஸ்லாமியக் குழுக்கள் பிற இஸ்லாமியப் பிரிவைச் சார்ந்தவர்களையும் இறை நம்பிக்கையற்றவர்களையும் மற்றும் பிற மதத்தவர்களையும் கலீபா ஆட்சிமுறையின் படி தலையை வெட்டிக் கொல்லப் பரிந்துரைப்பது மற்றும் அடிமைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்கின்றனர். இவ்வாறான செயல்கள் மிதவாத இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமியர்களுக்கும் கருத்தியல் வேறுபாடுகளை உருவாக்குகின்றன. இத்தீவிரவாதச் செயல்களானது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, சூடான், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, சீனா, காக்கேசியா, வட-அமெரிக்கா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் குண்டுவெடிப்புகள், கடத்தல், தற்கொலைப் படையினர் போன்றவற்றிற்காக பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் இணையம் வழி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதாகவும் அறியப்படுகிறது. இப்படி விகிபீடியா கூறுவதை[3] முஸ்லிம்கள் மறுக்கவில்லையே?

 

© வேதபிரகாஷ்

17-07-2016

Zakir girls need not study

[1] India Today, Pro-Pakistan slogans raised in Patna, one arrested after police orders probe, Rohit Kumar Singh, Posted by Bijaya Kumar Das, Patna, July 16, 2016 | UPDATED 15:11 IST

[2] http://indiatoday.intoday.in/story/pro-pakistan-slogans-raised-in-patna-one-arrested-after-police-orders-probe/1/716225.html

[3] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

குற்றச்சாட்டை மறுக்கும் ஜாகிர் நாயக் – செக்யூலரிஸமும் ஜிஹாதித்துவத்தை ஆதரிக்கும் போக்கும் – உரையாடல்களை மீறுகின்ற அடிப்படைவாதம்!

ஜூலை 9, 2016

குற்றச்சாட்டை மறுக்கும் ஜாகிர் நாயக் செக்யூலரிஸமும் ஜிஹாதித்துவத்தை ஆதரிக்கும் போக்கும் உரையாடல்களை மீறுகின்ற அடிப்படைவாதம்!

Ravishankar - Zakir Naik - 21-06-2006, Bangalore

ஶ்ரீ ரவிசங்கர்ஜாகிர் நாயக் உரையாடல் தான்: ஜாகிர் நாயக்குக்கும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கும் இடையே இஸ்லாமியம் மற்றும் இந்து மதம் கடவுள் கருத்து பற்றி விவாதம் பெங்களூரில் 21 ஜனவரி 2006 அன்று நடைபெற்றது. இவரைப் போல, கட்டிப் பிடித்துக் கொண்டு பாராட்டவில்லை. இரு மதங்கள் பற்றி, இருவரும் அலசினர், ஆனால், எந்த முடிவுக்கும் வரவில்லை. மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் சாமியார் சாத்வி பிரக்யா தாக்குர் உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று தேசிய புலனாய்வு முகமை சமீபத்தில் விசாரணை கோர்ட்டில் தெரிவித்தது. இதன் காரணமாக சாத்வி பிரக்யா தாக்குர் விடுவிக்கப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.  உண்மையில், காங்கிரஸ் அரசு, “காவி பயங்கரவாதம்” என்று சொல்லி அதனை மெய்பிக்க இவ்வாறான, பொய்யான வழக்குகளை போட்டன என்று தெரியவரும் நிலையில், இத்தகைய பேச்சுகள் வெளிவருகின்றான என்பதனை கவனிக்க வேண்டும்.

Hindus complained againt Zakir in 2012பீஸ்டிவி” / அமைதி தொலைக்காட்சி வளர்ந்த விதம்: மும்பையில் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான “பீஸ் டிவி” என்ற செனலை, கேபிள் நெட்வொர்க்கில் பரப்பாபட்டு வருகிறது. அதில் தான், நாயக் சர்ச்சைக்குரிய போதனைகளை செய்து வருகிறார். இதற்கு பல நாடுகளிலிருந்து பணம் நன்கொடையாக வந்து கொண்டிருக்கிறது. அதற்கு அரசு அனுமதி அளித்து வருகிறது. அதாவது, இது காங்கிரஸ்-பாஜக அரசுகளுக்கு தெரிந்தே நடந்து வருகிறது. அப்பொழுது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊடகங்களும் அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, இப்பொழுது, ஏதோ தாங்கள் புதியதாக கண்டுபிடித்து விட்டதைப் போன்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டன. இதனால், மஹாராஷ்ட்ர அரசு நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது[1]. இப்பொழுது, இப்பிரச்சினை வெளிவந்தவுடன், “ஜாகிர் நாயக் பேச்சு குறித்த அனைத்து சிடிக்களையும் பெற்று, ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்யும்படி மும்பை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன்[2]. அவரது முகநூல் உட்பட சமூக வலைத்தள பக்கங்கள் போலீஸ் உதவியுடன் காண்காணிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது” என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார்[3].

Zakir Naik denies his inspiration to Bangladesh terrorகுற்றச்சாட்டை மறுக்கும் ஜாகிர் நாயக்[4]: தன் மீது குற்றஞ்சாட்டப் பட்டு வருகிறது என்பதனை உணர்ந்த ஜாகிர், தன்னைக் காத்துக் கொள்ள முயன்றார். இஸ்லாமிய நாடான பங்களாதேசம் தீவிரவாதிகள் தன்னால் ஊக்குவிக்கப்பட்டார் என்றதும் உசாரானார். இதனால், தன் மீதான குற்றச் சாட்டுகளை மறுத்துள்ள ஜாகீர் நாயக், “தீவிரவாதத்தை நான் அடியோடு வெறுக்கிறேன். முஸ்லீம் அல்லது முஸ்லீம் அல்லாத மக்களை கொலை செய்யும்படி நான் யாரிடமும் கூறவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது,” என்றார்[5]. நிலைமை மோசமாகி, தன்னுடைய அடிப்படைவாத-தீவிரவாத ஆதரவு வெளிப்பட்டு விட்டதால், மேலும், “எனக்கும் வங்க தேச தாக்குதலுக்கும் எவ்வித தொர்பும் இல்லை. மீடியாக்கள் தவறாக சித்தரிக்கின்றன.  டாக்கா தாக்குதலுக்கு நான் பொறுப்பல்ல”, என மும்பையை சேர்ந்த ஜாகீர் நாயக் கூற ஆரம்பித்துவிட்டார்[6]. மெக்காவிலிருந்து, காணொலியில் பேசி, அவ்வாறு சொன்னதாக செய்திகள் வெளிவந்துள்ளன[7].

IRF - Islamic research Centre, Mumbai - The Hinduயார் இந்த காஜிர் நாயக்?: அப்துல் கரீம் நாயக் Zakir Naik (1965 அக்டோபர் 18 இல் பிறந்தவர்) பிரபல இஸ்லாமிய மதபோதகர், அறிஞர், சர்வதேச சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் ஆவார்  என்று புகழ்ந்து தள்ளுகிறது தமிழ்-விகிமீடியா[8]. அவர் தற்போது இந்தியாவில் பீஸ் டிவி எனும் தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்[9]. இஸ்லாமிய பொது பேச்சாளர் ஆவதற்கு முன்பு அவர் ஒரு மருத்துவரும் ஆவார். மும்பை, மகாராஷ்டிரா, இந்தியாவில் 18 அக்டோபர் 1965 பிறந்த சாகிர் நாயக் மும்பை புனித பீட்டர் உயர்நிலை கல்லூரியிலும் பின்னர் மும்பை பல்கலைக்கழகதில் மருத்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1991 ஆம் ஆண்டில் அவர் ஐ அர் எப் எனும் நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் இசுலாமிய அழைப்பு பணியை ஆரம்பித்தார்[10]. சாகிர் நாயக் 1991ம் ஆண்டின் பின்னர் தனது இசுலாமிய ஆராய்ச்சி மூலம் திரிபுவாதங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். இவர் குரான், இந்துமத வேதங்கள், கிறித்துவ, பைபிள்கள் மற்றும் பல புத்தகங்களையும் படித்து மனப்பாடம் செய்து, அத்தகைய விளக்கங்களைக் கொடுத்து வந்தார்.  செப்டம்பர் 2001 முதல்   ஜூலை 2002 வரை கடும் எதிர்ப்பில் அமெரிக்கவில் இசுலாமிய மதப் பிரச்சாரம் செய்து 34,000 அமெரிக்கர்களை இஸ்லாமிய மதத்தினுள் கொண்டு வந்தார்[11] என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், முஸ்லிம்கள் ஏன் அமெரிக்காவில் 11/9 தீவிரவாதத்தை செய்தனர் என்று விளக்கவில்லை.  மாறாக, ஒசாமா பின் லேடனை புகழ்ந்து பேசுவது தான், பழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தியாவின் இசுலாமிய இதழான இஸ்லாமிய குரல்பத்திரிகையில் அவரது கட்டுரை சில வெளி வந்துள்ளன[12].

 Zakir opposing building of churches and temples

ஜாகிர் நாயக்கின் பொன்மொழிகள் தீவிரவாதியின் குரூர மனப்பாங்கைக் காட்டுகிறது[13]: ஜாகிர் நாயக்கின் “பொன் மொழிகள்” என்று வீடியோக்கள், இணைதளங்களில் குறிப்பட்டப்பட்டுள்ளது. அவற்றைப் படித்துப் பார்த்தால், தலிபான், அல்-குவைதா போன்ற தீவிரவாதிகள் சொன்னதற்கும், இந்த ஆள் சொல்வதற்கும், எந்த வித்தியாசமும் இல்லை என்று தெரிகிறது. அவற்றில் சில, பின்வருமாறு[14]:

  1. அவர்களது மதம் தவறானது மற்றும் அவர்கள் வழிபடுவதும் தப்பானது எனும்போது, அவர்களது நாம் எப்படி இஸ்லாமிய நாடுகளில் சர்ச்சுகள், கோவில்கள் கட்டப்படுவதற்கு அனுமதிக்கலாம்?
  1. முன்றாம் பாலினர் முதலியோர் பாவமான மனநோயாயால் பீடிக்கப்பட்டுள்ளனர், அது ஹராம் ஆகும். ஏனெனில், அவர்கள் டிவி-செனல்களில் போர்னோகிராபி படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனால், அத்தொலைக்காட்சிகளை தடை செய்ய வேண்டும்.
  1. குரானில் பல அயத்துகள் சொல்வதாவது, “நீ உன் மனைவியுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், பிறகு, வலது கையில் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம்”! அதாவது, நான்கு மனைவிகளைத் தவிர, பெண்ணடிமைகளையும் செக்ஸுக்கு வைத்துக் கொள்ளலாம்.
  1. “சார்லஸ் டார்வினின் “பரிணாம வளர்ச்சி சித்தாந்தம்”, சித்தாந்தம் தான், “பரிணாம வளர்ச்சி உண்மை” என்று டெந்த புத்தகமும் இல்லை” – இப்படி அதையும் மறுக்கிறார்.
  1. ஒசாமா பின் லேடன், இஸ்லாத்தின் எதிரிகளோடு போராடுகிறார் என்றால், நான் அவரோடு இருக்கிறேன். அமெரிக்கா என்ற மிகப் பெரிய தீவிரவாதியை பயமுறுத்துகிறார் என்றால், நான் அவரை ஆதரிக்கிறேன். அதனால், எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும். அதாவது ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றிக் கொண்டு, தீவிரவாதியையே கதிகலங்கும் படி பயமுறுத்துகிறான் என்றால், தீவிரவாதியாக இருக்கலாம்.
  1. சிறுமிகள், பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பக் கூடாது, ஏனெனில், அவர்கள் தேறி வெளியில் வருவதற்குள், அவர்களது கற்ப்பு, பறிபோயிருக்கும். அதனால் பள்ளிகள் மூடப்பட வேண்டும். அவர்கள் எந்த அணிகலன்களையும் அணியக்கூடாது.

© வேதபிரகாஷ்

09-07-2016

Saba Nazvi article on Zakir Naik-cutting

[1] தினகரன், ஜாகிர் நாயக் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விசாரிக்க மராட்டிய போலீசுக்கு உத்தரவு, பதிவு செய்த நாள். ஜூலை, 2016. Date: 2016-07-07 18:33:56.

[2] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=229567

[3] ஜன்னல்.மீடியா.காம், உள்துறை கண்காணிப்பில் ஜாகிர் நாயக், Fri, 08 Jul 2016 02:00 PM

[4] ஜாகிர் நாயக்கின் பேச்சை இங்கே கேட்கலாம்: https://www.youtube.com/watch?v=iNLhvuqQilI

[5] http://www.jannalmedia.com/article?nId=8622; Published on Jul 8, 2016.

[6] தினமலர், தாக்குதலுக்கு நான் பொறுப்பல்ல: ஜாகீர், பதிவுசெய்த நாள். ஜூலை.7, 2016.18.02

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=1559936

[8]https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D

[9] 24-Hour Islamic Spiritual Edutainment International Satellite TV Channel
  1. Telecasting ‘Free to Air’ state-of-the-art TV Programmes in English, Urdu, Bangla and Chinese.
  2. Telecasting ‘Free to Air’ state-of-the-art TV Programmes in English, Urdu, Bangla and Chinese.
    2.  Backed by the Best available Media Technology, Creativity, Research, Programmes Softwares and
    Operational Management.
    3.  Quest for Promoting truth, Justice, Morality, Harmony and Wisdom for the whole of Humankind.
    4.  Now can be received in more than 125 countries… in Asia, Middle East, Europe, Africa and Australia.
    Shortly it would be telecast to the rest of the world too.
    5. The TV programmes will feature internationally famous scholars and orators on religion and
    humanity like: Dr Zakir Naik,  India, Ahmed Deedat ,   South Africa, Salem Al Aamry,  UAE,   Assim Al Hakeem,   Saudi Arabia, A. Rahim Green,  UK, Hussain Yee,   Malaysia, etc. http://www.irf.net/peacetv.html

[10] The Islamic Research Foundation (IRF), Mumbai, India, is a registered non-profit public charitable trust. It was established in February 1991. It promotes Islamic Da’wah – the proper presentation, understanding and appreciation of Islam, as well as removing misconceptions about Islam – amongst less aware Muslims and non-Muslims. IRF uses modern technology for its activities, where ever feasible. Its presentation of Islam reach millions of people worldwide through international satellite T.V. channels, cable T.V. networks, internet and the print media. IRF’s activities and facilities provide the much needed understanding about the truth and excellence of Islamic teachings – based on the glorious Qur’an and authentic Hadith, as well as adhering to reasons, logic and scientific facts. http://www.irf.net/

[11] Ghafour, P.K. Abdul. “New Muslims on the rise in US after Sept. 11”. Arab News. 3 November 2002.

[12] “Questions Commonly Asked by Non-Muslims – VI : Prohibition of Alcohol”“Was Islam Spread by the Sword?”“Are Ram And Krishna Prophets Of God?”.

[13] Thefirstpost.com, ‘Every Muslim should be a terrorist’: Zakir Naik and six of his most provocative statements, FP Staff,  Jul 7, 2016 19:55 IST

[14] http://www.firstpost.com/india/every-muslim-should-be-a-terrorist-zakir-naik-and-six-of-his-most-provocative-statements-2879876.html

ஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் கலவரம் ஏற்படுத்தும், நகரங்களைத் தாக்கும் தீவிரவாத வெளிப்பாடுகள்!

ஜூலை 1, 2016

ஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் கலவரம் ஏற்படுத்தும், நகரங்களைத் தாக்கும் தீவிரவாத வெளிப்பாடுகள்!

Hyderabad module - busted India Today picture

பிடிபட்டவர்களின் விவரங்கள்: இதையடுத்து, ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சிலர் கடந்த நான்கு மாதங்களாக ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தனர்[1]. சந்தேகம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த அதிரடி சோதனையும், கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்டவர்கள், சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஹைதராபாத் நகரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த இவர்கள் தயாராகி வந்துள்ளனர் என்றும். இதற்காக ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து அந்த இளைஞர்கள் பணம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த இந்த தீவிரவாதிகள், நாட்டிலுள்ள பிற தீவிரவாத அனுதாபிகளை மூளை சலவை செய்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது[2].

  1. முகமது இப்ராஹிம் யாஷ்தானி [Mohammed Ibrahim Yazdani, 30],
  2. மொஹம்மது இலியாஸ் யஷ்தானி [Mohammad Illyas Yazdani, 24] (1)ன் சகோதரன்
  3. ஹபீப் முகமது [Habib Mohammed, 32],
  4. முகமது இர்ஃபான்,
  5. அப்துல் பின் அகமது,
  6. முஷாபர் ஹூசைன் [Muzaffar Hussain Rizwan , 29],
  7. ரிஸ்வான்,
  8. முகமதுல்லா ரஹ்மான்,
  9. அல் ஜிலானி அப்துல் காதர்,
  10. முகமது அர்பாஸ் அகமது
  11. அப்துல்லா-பின்-அமூதி [Abdullah- Bin-Amoodi, 31].

உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடைபெற்றதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆறுபேர் பிடிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது[3].

those arrested by NIA of Hyderabad moduleமுதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு: சிறுபான்மையினர் வாக்குவங்கியைக் கருத்தில் கொண்டு ஹைதராபாத் நகரை பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றிவிட்டதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர், ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சிறுபான்மையினரின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஹைதராபாத் நகரை பயங்கரவாதிகளின் புகலிடமாக முதல்வர் சந்திரசேகர ராவ் மாற்றிவிட்டார். பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்கிறார்கள் என்ற சந்தேகம் இருந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது. இதனால் தேசிய அளவில் ஹைதராபாத் நகருக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

Hyderabad module - busted - The Hindu -picture.பிடிபடும் தீவிரவாதிகள் முஸ்லிம்கள் என்றாலும், இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிப்பது இல்லை: முன்னர் தீவிரவாதம் விசயமாக, ஹைதராபாத் இளைஞர்கள் மாட்டிக் கொண்டதால், சில வழக்கமான அறிக்கைகள் விடப்பட்டன. ஹைதராபாத் முஸ்லிம் இளைஞர்கள் ஐஎஸ் போன்ற அமைப்புகளில் சேருவது, இங்கிருந்தே ஆன்-லைன் மூலம் வேலை செய்வது, வேலைக்கு ஆள் சேர்ப்பது போன்ற காரியங்கள் அதிகமாகி வந்ததால், முன்பே முஸ்லிம் இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அதனால், பதிலுக்கு 2014ல் ஜாமியா நிஜாமியா [Jamia Nizamia one of the oldest Islamic seminaries in south India] போன்ற இஸ்லாமிய நிறுவனங்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு “தீவிரவாதத்திற்கு ஐஎஸ் துணைபோகிறது, அதனால் அதற்கு இஸ்லாத்தில் இடம் இல்லை,” ஐஎஸ்போன்ற இயக்கங்களுடன் சேரக்கூடாது என்று எச்சரித்தது[4]. ஆனால், இளைஞர்களும் அத்தகைய வேலைகளில் சேர்வது நிற்கவில்லை, தீவிரவாத செயல்களும் நின்றபாடில்லை.

Hyderabad module - ISIS connection-TV9 pictureகலவரங்கள் ஏற்படுத்துவது மற்றும் தீவிரவாத திட்டங்கள் செயல்படுத்துவது: இவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது: இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணம் அதிக அளவில் கிடைத்து வருகிறது. அந்த பணத்தை வைத்து, இவர்கள் ஆயுதங்களை வாங்கியுள்ளனர். மேலும், வெடி குண்டு தயார் செய்யும் தொழில்நுட்பமும் இவர்களுக்கு தெரியும். பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களை வெடி குண்டு வைத்து தகர்க்க, இந்த அமைப்பினர் திட்ட மிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது[5]. இதற்காக, மூன்று குழுக்களாக பயங்கரவாதிகள் செயல்பட்டு வந்த தகவலும் வெளியாகியுள்ளது. அதனால், கைது செய்யப்பட்ட அனைவரையும், காவலில் எடுத்து விசாரிக்க, கோர்ட்டின் அனுமதி கோரப் பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், அவர்களை டில்லி அழைத் துச் சென்று விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டது. கோவிலில் மாட்டிறைச்சி…:என்.ஐ.ஏ., அதிகாரி கள் கூறியதாவது: ஐதராபாத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற பாக்கியலட்சுமி கோவிலில், மாட்டிறைச்சியை வைத்து, மிகப்பெரிய மதக் கலவரத்தை ஏற்படுத்த, இந்த அமைப்பினர் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.  விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் போன்ற பண்டிகைக் காலங்களில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், இதற்கு முன்பும் கலவரங்கள் நடந்துள் ளன. அதுபோலவே, இந்தாண்டும் கலவரத்தை ஏற்படுத்த, இவர்கள் திட்டமிட்டு இருந்தனர்[6].  ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் 25-06-2016 சனிக்கிழமை அன்று மாலை தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவல், அவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது[7].அதற்கு முன்னோட்டமாக ஹைதராபாத் நகரின் பல்வேறு முக்கிய பொதுஇடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன[8].

triacetone triperoxide bomb makingபிரஸ்ஸெல்ஸ் குண்டுவெடிப்பில் உபயோகப்படுத்தப் பட்ட ரசாயனப் பொருள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது: டிரையசிடோன் ட்ரிபராக்ஸைடு [ triacetone triperoxide (TATP)] ஹபீப் முஹமது இல்லத்திலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது[9]. பாரிசில் நடந்த குண்டுவெடிப்பில் இந்த ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தப்பட்டது. முகமது இப்ராஹிம் யஜ்தானி என்பவன் தான் ஹபீப் முகமதுவை தன்னில்லத்தில் இந்த குண்டை [ improvised explosive device (IED)] தயாரிக்கச் சொல்லியிருக்கிறான். அவனது வீட்டிலிருந்து ஆணிகள் முதலியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஷபி ஆர்மர் அல்லது யூசூப் அல்-ஹிந்தி [Shafi Armar alias Yousuf Al Hindi] என்பவன் தான் சிரியாவிலிருந்து இவர்களை கட்டுப்படுத்தியுள்ளான்[10]. வழக்கமாக, இவர்களின் பெற்றோர், தங்களது மகன்கள் அப்பாவி, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளனர். ஆனால், டிரையசிடோன் ட்ரிபராக்ஸைடு போன்ற ரசாயனப் பொருட்களை ஏன் வீட்டில் வைத்திருந்தனர் என்பதற்கு பதில் சொன்னதாகத் தெரியவில்லை. இன்டெர்நெட் சென்டரில் வேலை பார்க்கிறான் என்றால், ஐஎஸ்சுடன் ஏன் தொடர்பு வைத்துள்ளான் என்றும் விளக்கவில்லை. அவர்கள் அத்தகைய வேலைகளை செய்வதை தடுக்க வேண்டுமே, ஆனால், அதைப் பற்றியும் விளக்கவில்லை.

© வேதபிரகாஷ்

01-07-2016

Hyderabad module - ISIS connection - NIA

[1]http://www.dinamani.com/india/2016/06/30/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/article3506835.ece

[2] http://tamil.oneindia.com/news/india/nia-busts-isis-module-hyderabad-11-arrested-explosives-rs-257035.html

[3] http://www.ndtv.com/hyderabad-news/isis-module-busted-in-hyderabad-says-nia-1425829

[4] http://www.thehindu.com/news/national/andhra-pradesh/hyderabad-seminary-warns-youth-against-islamic-state/article6388793.ece?utm_source=InternalRef&utm_medium=relatedNews&utm_campaign=RelatedNews

[5] தினமலர், ஐதராபாத், பெங்களூரை தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம், பதிவு செய்த நாள் : ஜூன் 30,2016,23:26 IST

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554333&

[7]http://www.dinamani.com/india/2016/07/01/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86/article3508410.ece

[8] தினமணி, ஹைதராபாதில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்த ஐஎஸ் சதி: விசாரணையில் அதிர்ச்சித் தகவல், By ஹைதராபாத், First Published : 01 July 2016 03:19 AM IST

[9] The Hindu, Chemicals similar to Brussels bomb found in Hyderabad house, Vijaita singh, Updated: July 1, 2016 09:23 IST

[10] http://www.thehindu.com/news/national/chemicals-similar-to-brussels-bomb-found-in-hyderabad-house/article8793246.ece

 

ஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் தீவிரவாத வெளிப்பாடுகள்!

ஜூலை 1, 2016

ஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் தீவிரவாத வெளிப்பாடுகள்!

Al Jeelani Abdul Qader Mohsin Mahmood was one among the six persons released by the NIA after the terror raids in Hyderabad -Express photo

என்ஐஏ சோதனையில் ஹைதராபாதில் தீவிரவாதிகள் பிடிபட்டனர்: மாதிரி தீவிரவாதி குழுமம் [module] என்று அமைக்கப்பட்டு, தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் ரகசியமாக செயல்பட்டு வருகின்றன. என்னத்தான் முஸ்லிம்கள்  தங்களுக்கும், தீவிரவாதத்திற்கும் சம்பந்தமில்லை, இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது என்றெல்லாம் வாத-விவாதங்கள் புரிந்தாலும் அத்தகைய காரியங்களை செய்யும் ஆட்கள் முஸ்லீம்களாகத்தான் இருக்கிறார்கள். இரண்டாவது முறையாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் பழைய ஹைதராபாத்தில் 28-06-2016 அன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு நடத்திய அதிரடி சோதனையில் 11 ஐஎஸ் தீவிரவாதிகள் பிடிபட்டனர்[1]. ஹைதராபாத் நகரின் மீர் சவுக், பவானி நகர், மொகுல்புரா, பர்காஸ் உள்ளிட்ட பல பகுதிகளில், தெலங்கானா மற்றும் ஹைதராபாத் போலிஸாருடன் என்ஐஏ அதிகாரிகள் கூட்டாக இணைந்து 30-06-2016 புதன்கிழமை அன்று காலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்[2]. இதில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 11 பேர் கைது செய்யப் பட்டனர்[3].

Hyderabad module - ISIS connection - NIA-detainedஐ.எஸ்சுடன் தொடர்புகள்: ஜனவரியில் இதே போன்ற நடவடிக்கையில் 25 பேர் பிடிபட்டனர். இந்திய முஜாஹித்தீன் [Indian Mujahideen (IM)] தீவிரவாத இயக்கத்திலிருந்து பிரிந்த அன்சர்-உல்-தவ்ஹீத் [Ansar-ul-Tawhid (AuT)] என்ற கூட்டத்தைச் சேர்ந்த இவர்கள், ஐஎஸ்சுடன் தொடர்புகள் வைத்துள்ளனர்.  ஐஎஸ்சுக்கு இந்த ஆட்கள் மிகவும் பாதுகாக்கப்படும் இணைதளம் மூலம் கடந்த மூன்று மாதங்களில் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்[4]. இவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள், ரூ.15 லட்சம் ரொக்கம், 23 செல் போன்கள், 3 லேப்டாப்கள், போலி அடையாள ஆவணங்கள், அமிலங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன[5]. ஐந்து மாதங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது இந்த கைது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. ஹைதராபாத் நகரில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்ட சதி முறியடிக்கப்பட்டது.

 Hyderabad module - ISIS connection

முன்னர் கண்காணீத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது: ஹைதராபாத் நகரின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைப்பது உள்பட பல்வேறு வழிகளில் தாக்குதல் நடத்த ஐஎஸ் பயங்கரவாதிகள் சதி செய்துள்ளதாகவும், அதற்காக அந்நகரில் உள்ள இளைஞர்களை ரகசியமாகப் பயன்படுத்தி வருவதாகவும் உளவுத் தகவல் கிடைத்தது[7]. ஜூன் மாத ஆரம்பத்திலேயே அத்தகைய எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, இலங்கையில் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை வைத்து ஆந்திராவில் பெரும் நாச வேலையில் ஈடுபடத் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்தது[8]. தற்போது இந்தத் தீவிரவாதிகள் ஐஎஸ்ஐயின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் ஐபி எச்சரித்தது. குறிப்பாக விசாகப்பட்டனத்தில் இந்தத் தாக்குதல் நடைபெறலாம் என்றும் ஐபி எச்சரித்தது. இதையடுத்து விசாகப்பட்டனத்தில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டது. இலங்கையிலிருந்து ஊடுறுவி வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று ஐபி கூறியது. இந்த விவகாரம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது அரசின் உயர் அமைச்சர்கள், உயர் காவல்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். விசாகப்பட்டனத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்ட அவர் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த உத்தரவிட்டார்[9]. 22-06-2016 அன்றே முதல் தகவல் அறிக்கையை பல சட்டங்களின் கீழுள்ள பிரிவுகளில் பதிவு செய்து, நடவடிக்கையை ஆரம்பித்தது[10].

The houses in Charminar and Moghalpura from where the IS suspects were arrested.ரம்ஜான் காலத்தில் தீவிரவாதம் ஏன்?: பொதுவாக, இந்தியாவில் பண்டிகைகள், விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் நேரங்களில் வதந்திகளைப் பரப்புதல், குழப்பம் உண்டாக்குதல், இணைதளம் மற்றும் செல்போன்களில் போலியான தயாரிக்கப்பட்ட புகைப்படங்கள்-வீடியோக்கள் போட்டு பரப்புதல், கலவரங்களை ஏற்படுத்துதல், போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ரம்ஜான் மாதத்தில், இத்தகைய கொலை-குண்டுவெடிப்பு முதலியவற்றால் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொன்றால் சொர்க்கம் கிடைக்கும் என்று மூளைசலவையும் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தான், இந்த ரம்ஜான் நேரத்தில் உலகம் முழுவதும் அத்தகைய குரூர குண்டுவெடிப்புகள் நடைப்பெற்று வருவதை கவனிக்கலாம். “ஓநாய் போன்ற தாக்குதல்” என்ற முறையை பயன்படுத்தி, கலவரங்கள், நாசவேலைகள் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது[11]. நகரத்தில் உள்ள எல்லா வழிபாட்டு ஸ்தலங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்வதிலும் பிரச்சினைகள் உள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்[12]. அதாவது, ரம்ஜான் நேரத்தில், அத்தகைய முறைகளை முஸ்லிம்கள் விரும்பமாட்டார்கள் என்று அரசியல்வாதிகள் கருதுகிறார்கள். தங்களைக் கண்காணிக்கத்தான், பாதுகாப்பு என்றா போர்வையில் போலீஸாரை மசூதிகளுக்குள் நுழைய ஏற்பாடு செய்கின்றனர் என்று முஸ்லிம்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

© வேதபிரகாஷ்

01-07-2016

Hyderabad module - triacetone triperoxide bomb making

[1] தி.இந்து, 11 ஐஎஸ் தீவிரவாதிகள் ஹைதராபாத்தில் கைது, Published: June 30, 2016 08:12 ISTUpdated: June 30, 2016 09:07 IST.

[2] http://tamil.thehindu.com/india/11-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article8791075.ece

[3] புதியதலைமுறை.டிவி, ஹைதராபாத்தில் 11 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது,  பதிவு செய்த நாள் : June 30, 2016 – 10:02 AM; மாற்றம் செய்த நாள் : June 30, 2016 – 10:05 AM.

[4] All the recruitments were done through the Internet and secure web-based applications. The accused were under surveillance for the past three months.

http://www.thehindu.com/news/cities/Hyderabad/hyderabad-youths-picked-by-city-police-nia-for-links-with-islamic-state/article8787455.ece

[5] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/india/7/35539/11-isis-terrorist-arrested-in-hyderabad

[6] தமிழ்.ஒன்.இந்தியா, ஹைதராபாத்தில் என்.. அதிரடி ரெய்டு.. அடுத்தடுத்து 11 .எஸ்..எஸ் ஆதரவாளர்கள் 11 பேர் கைது, By: Veera Kumar, Published: Wednesday, June 29, 2016, 10:28 [IST].

[7] தினமணி, ஹைதராபாதில் தாக்குதல் நடத்த சதி:.எஸ். தொடர்புடைய 11 இளைஞர்கள் கைது, First Published : 30 June 2016 04:06 AM IST.

[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஆந்திராவில் நாச வேலையில் ஈடுபடத் தயாராகும் லஷ்கர் தீவிரவாதிகள்எச்சரிக்கும் ஐபி, By: Sutha, Published: Thursday, June 2, 2016, 11:44 [IST].

[9] http://tamil.oneindia.com/news/india/isi-s-sri-lanka-module-waiting-strike-andhra-pradesh-intelligence-bureau-255073.html

[10] A First Information Report (FIR) was registered by the NIA on June 22 under various sections of Indian Penal Code, the Explosive Substances Act and the Unlawful Activities Prevention Act (UAPA). The FIR, available with The Hindu, says: “The accused and their accomplices from Hyderabad and other parts of the country have entered into a criminal conspiracy to wage war against government of India by collecting weapons and explosive materials to target prominent places, public places, religious places, malls, markets, public properties and in particular sensitive government buildings in Hyderabad and other places.” It also read: “It is also reliably learnt that they have acquired weapons and explosive materials to carry out violent terrorist attacks and related subversive activities. The members of this group are in constant touch with each other on the Internet and are using various other communication platforms within India and have linkages abroad. Information has also been received to the effect that the group members are in communication with a terrorist organisation namely IS, which is a proscribed organisation.”

http://www.thehindu.com/news/cities/Hyderabad/hyderabad-youths-picked-by-city-police-nia-for-links-with-islamic-state/article8787455.ece

[11] It was clear that Syria-based IS handlers were luring the 11 suspects to join the group. Many individuals owing allegiance to IS or supporting their fight had carried out lone wolf attacks — springing up at public places and shooting at people with firearms — in different parts of the world recently.

http://www.thehindu.com/news/national/andhra-pradesh/did-is-handlers-plan-lone-wolf-attack-in-hyderabad/article8790389.ece?utm_source=InternalRef&utm_medium=relatedNews&utm_campaign=RelatedNews

[12] “We cannot poke them continuously to improve their alertness, as they accuse us of harassment,” a Task Force official says.

http://www.thehindu.com/news/national/andhra-pradesh/security-at-public-places-still-dicey/article8790391.ece?utm_source=InternalRef&utm_medium=relatedNews&utm_campaign=RelatedNews