Posted tagged ‘கேள்வி’

யாசின் பட்டகல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (5)

செப்ரெம்பர் 2, 2013

யாசின் பட்டகல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (5)

 

 டிஎன்ஏ சோதனை: யாசின் பட்கலின் அடையாளத்தை உறுதி செய்ய உடனடியாக ஒரு சிறப்பு குழுவை அனுப்பிவைக்கும்படி கர்நாடக போலீசாரை பீகார் போலீசார் கேட்டுக் கொண்டனர். மேலும் யாசின் பட்கலுக்கு டிஎன்ஏ சோதனை செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கும் கர்நாடக போலீசாரிடம் உதவி கோரியுள்ளனர். இதில் பீகார் போலீசார் எந்த அளவிற்கு ஒத்துழைப்பார்கள் என்று பார்க்க வேண்டும். “நான் அவனில்லை” என்ற வாதங்கள் வருவதால், புலன்விசாரணைக் குழு இதனை உறுதி செய்ய தீர்மானித்துள்ளது. இதனை அறிந்து தான், ஒருவேளை தந்தை, மாமா மற்ற உறவினர்கள் வேறு மாதிரி நடந்து கொள்கிறார்கள் போலும்.

விசாரிக்க கர்நாடகம்,  குஜராத் போலீஸ் தீவிரம்[1]: கர்நாடகம், குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் யாசின் பட்கலுக்கு தொடர்பு இருப்பதால், அவரை விசாரணைக்கு தங்களிடம் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் கோருவதற்கு இரு மாநில காவல் துறையும் திட்டமிட்டுள்ளன. இதுதொடர்பாக கர்நாடக காவல் துறை இயக்குநர் லால் ரொகுமா பசாவ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: “பெங்களூரில் இந்தியன் முஜாஹிதீன் நடத்திய பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரிக்க நீதிமன்றம் மூலம் அனுமதி பெறப்படும்”, என்றார். குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரக் காவல்துறை இணை ஆணையர் ஏ.கே. சர்மா கூறியது: “யாசின் பட்கலை எங்களிடம் விசாரணைக்கு ஒப்படைக்கும்படி நீதிமன்றத்தில் கோருவோம்”, என்றார்.

முல்லாயம் சிங் கட்சி முஸ்லிம் தலைவர் தீவிரவாதிகளுக்கு சாதகமாக செய்திகளை வெளியிடுவது,  பேசுவது ஏன்?: இந்திய ஊடகங்கள், அரசியல்வாதிகள், சட்டத்துறையினர், மனித உரிமைப் போராளிகள், செக்யூலரிஸ வித்வான்கள், சமத்துவ ஞானிகள், மனிதநேய விற்பன்னர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொள்பவர்கள் இத்தகைய தீவிராவாதிகள் தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றே, சில முரண்பட்ட செய்திகளை போட்டு வைக்கிறார்கள். தீவிரவாதிகளின் பெயர்களைக் கூட வேண்டுமென்றே மாற்றி-மாற்றி குறிப்பிடுவார்கள். அவற்றை தீவிரவாதிகள் தரப்பில் ஆஜராகும் வக்கீல்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, யாசீன் போன்ற படித்த தீவிரவாதிகள் “நான் அவனில்லை” போன்ற வாதங்களை வைத்து, “அலிபி”, அதாவது “அந்நேரத்தில் நான் அங்கில்லை” என்றும் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

யாசின் பட்டகல் மற்றும் அவனது வக்கீல் எம். எஸ். கான் வாதிப்பது ஏன்?: யாசின் பட்டகல் சொல்கிறான், “இந்திய முஜாஹித்தீனை தோற்றுவித்தவர்களுள் ஒருவன் நான் என்பதனை நான் மறுக்கிறேன்”, என்கிறான். பிறகு, “தில்லி மற்றும் 7 தொடர்குண்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவனும் நானும் வேறு”, என்கிறான். ஆனால், யாசின் பட்டகல், அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா என்ற எல்லோரும் ஓரே நபர் தான் என்று என்.ஐ.ஏ எடுத்துக் காட்டியது[2]. இப்பொழுது கூட, எம். எஸ். கான் என்ற யாசினின் வக்கீல் அத்தகைய வாதங்களை வைத்துள்ளது கவனிக்கத்தக்கது[3].

ஊடகங்களின்  தேவையற்ற செய்திகள், பிரச்சாரங்கள்: யாசின் பட்டகல் பாகிஸ்தானில் இருந்தான், ஐ.எஸ்.ஐ.யினால் பயிற்சி கொடுக்கப்  பட்டான் என்ற உண்மை அவனை விசாரிக்கும் போது தெரிய வந்துள்ளது. இதுவரை அவன் லச்கர்-இ-தொய்பா தான் பயிற்சி கொடுத்தது என்று நம்பி வந்தார்களாம்[4]. இப்படிபட்ட செய்திகள் வெளியிடும் போக்கும் என்னவென்று தெரியவில்லை. இந்திய துப்பறிவாளர்கள் என்ற நினைத்தார்கள், நம்பிக் கொண்டிருந்தார்கள் என்பதெல்லாம், இந்தியர்களுக்கு வேண்டிய செய்திகளா? முன்பு கூட மும்பை வெடிகுண்டுவெடிப்பிற்கு பிறகு, யாசின் தில்லிக்குச் சென்று அங்கிருந்து தப்பிச் சென்றதில் மும்பை மற்றும் தில்லி போலீஸார் பரஸ்பர குற்றச்சாட்டுகளை சொல்லி வருகின்றன[5]. யாசின் தப்பிச் செல்ல தில்லி போலீஸார் தான் காரணம் என்ரு மும்பை போலீஸார் கூறினர்[6]. வழக்கம் போல, சி.என்.எநை.பி.என், டைம்ஸ்-நௌ, என்.டி-டிவி, ஹெட்லைன்ஸ்-டுடே முதலியவை பாகிஸ்தான் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் முதலிவவர்களை வைத்துக் கொண்டு “பட்டி மன்றம்” நடத்தி, தாங்கள் ஏதோ மிகப்பெரிய உண்மைகளை தருவது போல “டமாரம்” அடித்துக் கொள்வார்கள். இதுதான் இந்தியாவின் லட்சணம் என்று விசயம் தெரிந்தவர்கள் பரிகாசம் செய்வார்கள். முதலில், இனிமேல் இந்தியாவில் இவர்களது கொட்டம் அடக்கப்படும், அவர்களது கூட்டாளிகளின் வால்கள் அறுக்கப்படும், இந்தியாவில் இருந்து கொண்டு ஆதரவு காட்டி வரும் சதிகாரர்கள் அடக்கப்படுவார்கள். அதனால், இனி குண்டுவெடிப்புகளே நிகழாது என்றுதானே தைரியமாக சொல்ல வேண்டும். மாறாக, இத்தகைய பிரச்சாரங்களால், சாதாரண மக்களுக்கு என்ன லாபம்.

© வேதபிரகாஷ்

01-09-2013


[2] However, District Judge I S Mehta, who remanded Bhatkal and his close associate and alleged top IM operative Asadullah Akhtar for custodial interrogation for 12 days, did not accept his claims saying NIA has said that he was the IM co-founder. ‘Both the accused have been produced before the court on the issuance of NBWs (non-bailable warrants) on July 18, 2013 wherein the accused Yasin Bhatkal and accused Asadullah Akhtar alias Haddi alias Danial. In the present application it is stated that Mohd. Ahmed Siddibappa is Yasin Bhatkal and he is the same person against whom the NBWs were issued.

http://www.business-standard.com/article/pti-stories/bhatkal-s-attempt-to-falsify-nia-s-claim-fails-113083000906_1.html

[3] Yasin Bhatkal today failed in his attempt in a Delhi court to falsify the claim of investigators that he was the same person whom the NIAhas dubbed as the co-founder of Indian Mujahideen (IM) involved in a string of terror strikes in the country in the last seven years. His lawyer M S Khan opposed National Investigation Agency (NIA’s) plea seeking 14-day custody saying ‘the accused person before the court is Mohmmad Ahmed and not Yasin Bhatkal.’

http://www.business-standard.com/article/pti-stories/bhatkal-s-attempt-to-falsify-nia-s-claim-fails-113083000906_1.html

[6] A series of reports on an alleged botched operation to catch Indian Mujahideen operative and purported 13/7 mastermind Yasin Bhatkal has left the Maharashtra Anti-Terrorism Squad and the State government fuming. A top official told The Hindu on Thursday that the government was upset with the leaks from the Delhi police and is sure to take up the matter with the Ministry of Home Affairs “at the right time.” The ATS, which is investigating the 13/7 blasts, has already flagged off its grievance to Delhi.

http://www.thehindu.com/news/national/other-states/maharashtra-flays-delhi-police-on-137-leaks/article2814646.ece?ref=relatedNews

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (4)

செப்ரெம்பர் 2, 2013

யாசின் பட்டகல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (4)

 

கர்நாடகத்திலிருந்து தப்பித்தது (2008): மும்பைப் பிரிவு போலீஸார், அவனைப் பிடிக்க பட்கலுக்கு வந்தது. ஆனால், அப்பொழுது உள்ளூர் போலீஸ்காரனால் உசார்படுத்தப் பட்டான். மும்பை குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர், அவன் வீட்டிற்க்கு வந்தபோது, பின் கதவு திறந்து கிடந்தது, அடுப்பில் கெட்டிலில் டீ கொதித்துக் கொண்டிருந்தது. ஆமாம், யாசின் தப்பித்து விட்டான்[1]. பிறகு ஏன் பெற்றோர் அவனிடத்தில் கேட்கவில்லை? போலீஸார் விளாவரியாக சொல்லியிருப்பார்களே?

 

தில்லியிலிருந்து தப்பித்தது (2008): “2008 ஆம் ஆண்டு தில்லியில் இருந்து தலைமறைவாகி மேற்கு வங்கத்தில் நடமாடிய யாசின் பட்கலை அம்மாநில காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாததால் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்”, என்று குறித்து மத்திய உளவுத் துறை உயர் அதிகாரி கூறியுள்ளாராம்.

 

2009ல் தப்பித்தது[2]: அனைத்துலக ரீதியில் நடந்து வரும் கள்ளநோட்டு கும்பலைப் பிடித்தபோது, இவனும் சிக்கிக் கொண்டான். ஆனால், தன்னை தர்பங்காவைச் சேர்ந்த “மொஹம்மது அஸ்ரப்” என்று சொல்லிக் கொண்டு தப்பித்து விட்டான். தான் வங்காளதேசத்திலிருந்து, வெறும் பார்சலைத் தான் கொண்டு வருவதாகவும், உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாது என்றும் நாடகம் ஆடினான். அதாவது நேபாளத்திலிருந்து, வங்காளதேசம், அங்கிருந்து தில்லி என்று சென்று வந்து கொண்டிருக்கும் போது கூட யாரும் கண்டு கொள்ளவில்லை. ஜெயிலில் ஒரு மாதம் இருக்கும் போது பெயிலில் வெளியே வந்தான். பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற அவன் பிப்ரவரி 2010ல் புனேவிற்கு வந்து, ஜெர்மன் பேக்கரியில் குண்டிவெடிப்பு நடத்தினான், என்றும் சொல்கிறார்கள்.

 

சென்னையில்அப்துல்ரகுமான்வீட்டிலிருந்துயாசின்தப்பியது (2011): இதேபோல, 2011 ஆம் ஆண்டு நவம்பரில் சென்னை சேலையூர் பகுதியில் அப்துல் ரகுமான் என்பவரது வீட்டில் யாசின் பட்கல் பதுங்கியிருப்பதாக மத்திய உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்த வீட்டுக்கு மத்திய உளவுத் துறை, தில்லி போலீஸ், சென்னை போலீஸ் அதிகாரிகள் செல்வதற்குள் அங்கிருந்து யாசின் பட்கல் தப்பித்து விட்டார்’ என்று உள்துறை உயரதிகாரி கூறினார். அப்படியென்றால், கர்நாடக போலீஸார் மாதிரி, இங்கும் யாரோ எச்சரிக்கைக் கொடுத்து விட்டார்கள் போலும்! சரி, யார் இந்த சேலையூர் அப்துல் ரகுமான், அவர் எப்படி பட்கல்லுக்கு இடம் கொடுத்தார் என்ற விவரங்கள் ஊடகங்கள் தெரிவிக்கவில்லை. மற்ற விசயங்களுக்கு பாய்ந்து க்ஷ்செல்லும் ஊடகங்கள், இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை, காட்டவில்லை. அதாவது, அந்த அப்துல் ரகுமான் “ஸ்லீப்பர்-செல்” வகையில் வருகிறாரோ என்னமோ?

 

2012ல் தில்லியிலிருந்து பீஹாருக்குத் தப்பி சென்றது: 2011 மும்பை குண்டுவெடிப்பிற்கு பிறகு, தில்லிக்குத் தப்பி சென்றான். அங்கு தன்னை லக்னௌவைச் சேர்ந்த இம்ரான் அஹமது [Imran Ahmed] என்று அறிமுகப்படுத்திக் கொண்ண்டு, ஜெய்தா இர்ஸத் கான் [Zahida Irshad Khan] என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டான். நவம்பர் 2012ல் தில்லி போலீஸார் வெடிமருந்து தயாருக்கும் தொழிற்சாலை வைத்ததற்காக ஆறு இந்தியன் முஜாஹித்தீன் ஆட்களை பிடித்தபோது, எச்சரிக்கை செய்ததால், பீஹாருக்குத் தப்பிச் சென்றான்[3]. அந்த ஆறுபேரில் இவனது மாமனார் மொஹமது இர்ஸத் கானும் [Mohammed Irshad Khan] அடக்கம். அங்கிருந்துதான், எல்லையைக் கடந்து சென்றுள்ளான். இவ்விசயத்தில் மும்பை மற்றும் தில்லி போலீஸாருக்கு இடையில் மனஸ்தாபம், கோபம், சண்டை முதலியன உள்ளன[4].

 

யாசினுக்கு மனைவி இருப்பதே எங்களுக்குத் தெரியாது: யாகூப் சித்திபாபா, யாசினின் மாமா, அவனுக்கு திருமணம் ஆனது, மனைவி இருப்பது என்பதெல்லாம் தெரியாது என்கிறார்[5]. செய்திகளினின்று தான் அவருக்கு தெரியவருகிறதாம்! அதேபோல, ஜெய்தா குடும்பத்தாருக்கு யாசினின் பின்னணி தெரியாதாம். அஞ்சர் ஹுஸைன் என்ற பெயரில் ராஞ்சியிலிருந்து பாஸ்போர்ட் பெற்றிருக்கிறான்[6]. 2008ல் உடுப்பியில் தங்கியிருக்கும் போது, அஹமதாபாத், தில்லி குண்டுவெடிப்புகளுக்கு வெடிப்பொருட்களை அனுப்பியிருக்கிறான். அப்பொழுதுதான், மதானியையும்ம் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது[7]. இதிலிருந்து ஒட்டு மொத்தமாக அவர்களது குடும்பத்தினர், தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று, தப்பித்துக் கொள்ள அல்லது யாசினை தப்பிக்கவைக்கப் பார்க்கின்றனர் என்று தெரிகிறது.

 

யாசின்தில்லியில்உருவாக்கியஆயுதங்கள்தொழிற்சாலை: தில்லியில் நங்லோய் என்ற இடத்தில் பலவித ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை வைத்திருந்ததை நவம்பர் 2012ல் போலீஸார் கண்டுபிடித்தனர். லேசான மிஷன் துப்பாக்கி மற்றும் ராக்கேட்டுகளை ஏவும் கருவிகள் முதலியவற்றை தயாரிக்கும் அளவில் அங்கு இயந்திரங்களை (லேத், டிரில்லிங், போரிங் முதலியன) வைத்திருந்தான்[8]. அவன் 18-வயதாக இருக்கும் போதே, 9/11 தாகுதலுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் நேடோ படைகளை எதிர்த்து போராட வேண்டும் என்று தீர்மானித்தானாம்[9]. அதைத்தவிர, ரெயிடுக்குப் போனபோது, ஆயுதங்களின் பகுதிகள், உதிரிகள், பாகங்கள் முதலியஅ கண்டெடுக்கப் பட்டன. அப்பொழுதே பெயில் இல்லாத கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. பட்கலில் FIRம் போடப்பட்டது. ஆனால், தப்பிச் சென்றுவிட்டான்[10]. அதாவது ஜிஹாதி போதனைகள் எப்படி அவனை அந்த வயதிலேயே மனத்தை இருக்கி, தீவிரவாதியாக மாற தீர்மானிக்கும் என்ற போக்கை அறிய முடிகிறது. இப்பொழுது கூட, குண்டுவெடிப்புகளைப் பற்றி விசாரித்தபோது, “ஆமாம், குண்டுகள் வெடிக்கப்பட்டன, அதற்கென்ன இப்பொழுது, அவை அப்படித்தான் நடந்தன, அதில் புதியதாக என்ன இருக்கிறது”, என்று கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் பதில் அளித்தானாம்[11].

 

ரம்ஜான்பண்டிகைக்குமனைவிக்குரூ.1 லட்சத்தைபரிசாகஅனுப்பியயாசின்பட்கல்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் உள்ள தனது மனைவிக்கு ரூ.1 லட்சத்தை பரிசாக அனுப்பியுள்ளார் பயங்கரவாதி யாசின் பட்கல்[12]. எந்த மனைவிக்கு (பட்கல் அல்லது தில்லி) அனுப்பப் பட்டது என்று தெரியவில்லை. இதன் மூலம் அவரது செயல்பாடுகளைக் கண்காணித்து வரை கைது செய்ய போலீஸாருக்கு உளவுத் துறை உதவியது. அவன் தனது மனைவிக்கு வங்கி மூலம் ரூ.1 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். இதனைக் கண்காணித்த இந்திய உளவுத் துறை, மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடுவதற்காக பட்கல் இந்தியாவுக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என்பதை சரியாகக் கணித்தது. இதன்படியே நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

 

நேபாள எல்லையில் என்ன நடக்கிறது?: நேபாள எல்லையில் தொடர்ந்து இரண்டாவது தீவிரவாதியைப் பிடித்துள்ளதில், சில கேள்விகள் எழுகின்றன. பொதுவாக நேபாளம் அனைத்துலக தீவிரவாதிகள், தப்பியோடும் குற்றவாளிகள், தேடப்பட்டு வரும் குற்றவாளிகள், முதலியோருக்கு மறைந்து வாழ்வதற்கு சிறந்த இடமாக இருந்து வந்துள்ளது. கம்யூனிஸ்டுகள் ஆட்சி வந்தபிறகு, ஊழல் கட்டுக்கடங்காத நிலையில் உள்ளது. பணம் கொடுத்தால் யாரும் கண்டுகொண்டாத நிலையுள்ளது. இதனை குற்றவாளிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குறிப்பாக கள்ளநோட்டுகள், போதை மருந்து, விபச்சாரம் முதலியவற்றில் தாராளமாக ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும், நேபாளம் இந்தியாவின் நிலையை மதிக்கிறது என்று சொல்கிறது[13]. ஒரு கோணத்தில் பார்க்கும் போது, உலகத்திலேயே ஒரே “இந்து நாடு” என்று சொல்லப்பட்ட நேபாளம், கம்யூனிஸ்ட் நாடான பிறகு, இந்தியா ஒட்டு மொத்தமாக எதிரளல்லது இந்தியாவிற்கு சாதகமாக இல்லாத நாடுகள் சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுவிட்டது. குட்டி நாடுகள் எல்லாம், இந்தியாவை எதிர்த்து வருகின்றன, இந்தியாவிற்கு பாதகமான செயல்களில் ஈடுபட்டுள்ளன. இங்கும் வெளியுறவு மந்திரிகள் என்பவர்கள் இந்தியாவின் நிலைக்கு சாதகமாக வேலை செய்கிறார்களா என்று பார்த்தால், இல்லை என்றுதான் உள்ளது.

 

யாசின்பட்கல்புராணம் (தொகுத்தது): 1983ம் ஆண்டு கர்நாடக மாநிலம், வடகனரா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள சிறிய கடற்கரை நகரமான பட்கலில் பிறந்தவன் யாசின் பட்கல். இவனது இயற்பெயர் முகமது அகமது சரார் சித்திபாபா. இவரது தந்தை தொழிலதிபர் என்பதால் அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றுவிடுவார். இதனால் தனது தாயுடன் வசித்த இவன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பட்கல் நகரத்திலேயே முடித்தான். பொறியியல் படிப்பை முடித்த இவன் தொழிலில் தந்தைக்கு உதவுவதற்காக சவுதி அரேபியாவிற்கு சென்றான். அங்கு தந்தைக்கு சரிவர உதவாமல் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வந்தான். இதன் பின்னர் பட்கல் பகுதியில் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்[14]. ஆனால் அங்கிருந்து தப்பிய அவன் புனே பகுதியில் உள்ள அவனது பால்ய நண்பன் இக்பால் இஸ்மாயில் ஷாபந்த்ரி என்பவனுடன் சேர்ந்து யுனானி மருத்துவ பயிற்சி பெற்று வந்தான்.

 

பட்கல் சகோதரர்கள் குண்டுகளை தயாரித்து வெடித்தது (தினகரன்): இதனிடையே இக்பால் மதபோதகராக மாறினான். சிறிது காலத்திற்கு பிறகு இக்பாலும் அவரது சகோதரரான ரியாஸ் இஸ்மாயில் என்பவரும் சேர்ந்து ஒரு நடமாடும் முஸ்லிம் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். நாளடைவில் இந்த அமைப்பை லஷ்கர்-இ-தொய்பாவுடன் இணைத்து தீவிரவாத செயல்களில் ஈடுபட தொடங்கினார்கள். இந்த அமைப்பில் சேர்ந்த யாசின் பட்கல் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட தொடங்கினான். இதன் பின்னர் தான் இந்திய முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை தொடங்கி கடந்த 2008 முதல் பல்வேறு மாநிலங்களில் வெடிகுண்டுகள் வைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டான். தனது பொறியியல் நுண்ணறிவால் இவனே வெடிகுண்டுகளை தயாரித்து பல்வேறு மாநிலங்களில் வெடிக்கவும் வைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தான் பிறந்த மாநிலமான கர்நாடகாவின் சட்டம் , ஒழுங்கை சீர்குலைக்க 2008 மற்றும் 2010ம் ஆண்டுகளில் மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் மூளையாக செயல்பட்டுள்ளான். மேலும் 2012ம் ஆண்டு புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி வெடிகுண்டு சம்பவத்திலும் தொடர்பு கொண்டிருந்தான்.

 

இந்தியன்முஜாஹித்தீனின் குண்டுவெடிப்புகள் (தினகரன்): பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் நிதி உதவியுடன் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு. இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமிக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய அமைப்பு தொடங்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த யாசின் பட்கல், தனது சகோதரர்களான ரியாஸ் மற்றும் அப்துல் சுபான் குரேஷி ஆகியோருடன் சேர்ந்து இந்த இயக்கத்தை தொடங்கினான். புணேவில் ஜெர்மன் பேக்கரியில் 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் யாசின் பட்கல், ரியாஸ் பட்கல் உள்ளிட்டோர் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. வெளிநாட்டினர் உள்பட 17 பேர் அந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக 2010 ஆம் ஆண்டில் இந்தியாவும் 2011 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் அறிவித்தன. அதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி மும்பையில் உள்ள மேற்கு தாதர், ஜாவேரி பஜார், காவேரி ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் யாசின் பட்கல், அவரது கூட்டாளிகள் தஹசீன் அக்தர் வாசிம் அக்தர் ஷேக் (23), அசதுல்லா அக்தர் (26), வகாஸ் என்கிற அகமது (26) ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த மூவர் குறித்தும் தகவல் தெரிவிப்போருக்கு தலா ரூ. 10 லட்சம் பரிசுத் தொகையை மகாராஷ்டிர மாநில பயங்கரதவாதத் தடுப்புப் படை அறிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி தஹசீன் நீங்கலாக மற்ற மூவரும் மும்பையில் உள்ள முக்கிய சாலையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. தில்லி உயர் நீதிமன்ற வளாக வெடிகுண்டு தாக்குதல் உள்பட மூன்று பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் யாசின் பட்கல் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரது சகோதரர் ரியாஸ் பட்கலும் இக்பால் பட்கலும் தற்போது பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வருவதாக மத்திய உளவுத் துறை சந்தேகிக்கிறது.

 

என்.ஐ.ஏகுற்றப்பத்திரிகை: கடந்த வாரம் தில்லி குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் யாசின் பட்கலுக்கு உள்ள பயங்கரவாதத் தொடர்புகளை அந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது. தில்லி, பிகாரின் தர்பங்கா, மும்பை, கர்நாடகத்தின் பட்கல், ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டாளிகள் மூலம் அங்குள்ள இளைஞர்களுக்கு “ஜிஹாத்’ (புனிதப் போர்) பயிற்சி அளிக்க யாசின் பட்கல் மூளையாக செயல்பட்டான்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 100 பேருக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் இதற்காகவே தாம் நேபாளத்தில் 6 மாதம் தங்கியிருந்ததாகவும் அந்த வாக்குமூலத்தில் பட்கல் கூறியிருக்கிறான். அதே நேரத்தில் புத்த கயாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தங்களுக்கு தொடர்பில்லை என்று பட்கல் தெரிவித்திருக்கிறான்[15].

 

© வேதபிரகாஷ்

01-09-2013


[2] In 2009, the West Bengal police cracked an international fake currency racket operating via West Bengal and had even arrested Bhatkal but he managed to escape from there too. Bhatkal identified himself as Mohammed Ashraf from Darbhangadistrict in Bihar. He told the police that he was a ‘courier’ and was asked to ‘receive’ a consignment of fake currencies from Bangladesh. He was in jail for a month and later released on bail. Bhatkal managed to escape to Pakistan via Dubai only to return in February 2010 to Pune to carry out the blast at German bakery.

http://www.thehindu.com/news/national/he-was-lucky-three-times/article5072470.ece?ref=relatedNews

[9] Indian Mujahideen co-founder Yasin Bhatkal wanted to fight NATO forces in Afghanistan as an 18-year-old when the US launched its campaign against Taliban following the 9/11 attacks, investigators here said. http://indiatoday.intoday.in/story/yasin-bhatkal-indian-mujahideen-9-11-attacks-nato-forces-afghanistan/1/304945.html

[10] The official, who has spent a significant time of his career investigating various terror cases across the country, said Bhatkal is “highly motivated” and “very ambitious” as he had set up a weapons manufacturing unit in Nangloi area of Outer Delhi way back in 2011. “He wanted to manufacture rocket launchers and LMGs (Light Machine Guns) in Delhi. This is evidence enough of how ambitious he is,” the official said. The Special Cell of Delhi police had busted an illegal arms factory located in Meer Vihar area of Nangloi in Outer Delhi in November, 2011. “This ordinance unit was first of its kind as it was equipped with machinery and the capacity to manufacture not only conventional arms but the ammunition required for them as well as fabrication of LMG and rocket launchers,” the official said. An FIR was filed against Bhatkal in the case on November 22, 2011 and later a non-bailable warrant was also issued against him for setting up the factory. The unit had elaborate equipment like moulding machine, lathe machine, cutting machine, assembly drilling machine and buffing/grinding machine besides explosives and iron pieces to be parts of pistols, carbines, rocket launchers among others, he said. Read more at: http://indiatoday.intoday.in/story/yasin-bhatkal-indian-mujahideen-9-11-attacks-nato-forces-afghanistan/1/304945.html

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (3)

செப்ரெம்பர் 2, 2013

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (3)

புத்தகயாவெடிகுண்டுவிசயத்தில்நிதிஷ்குமார்மெத்தனம்காட்டியது: புத்தகயா வெடிகுண்டு இந்திய-முஜாஹித்தினின் கைவரிசைதான், அவர்களுடையை கைவேலைத் திறன் அதில் காணப்படுக்கிறது என்றெல்லாம் பாட்டுப் பாடியவர்கள், திடீரென்று அடங்கிப் போனதை கவனித்திருக்கலாம். ஈ-மெயில் வந்தது, பாகிஸ்தானிலிருந்து அனுப்பப்பட்டது, வெடிபொருட்கள் சப்ளை செய்தவன் பிடிபட்டான்[1] என்றெல்லாம் செய்திகள் வந்தன[2]. எப்படி மத்திய மற்றும் பிஹார் அரசுகள் இவ்விசயத்தில் தமது நிலையை மாற்றிக் கொண்டன என்பதனையும் காணலாம்[3]. வழக்கம் போல திவிஜய் சிங் சங்கப்பரிவார் தான் குண்டு வைத்தது என்று டுவிட்டரில் உளறினார் என்றும் செய்திகளை போட்டனர். சையது மக்பூல் என்பவன் ஏற்கெனவே புத்தகயா அவர்களின் தாக்குதல் பட்டியலில் உள்ளது என்று எச்சரித்தப் பிறகும் பீஹார் அரசு மெத்தனமாக இருந்தது நினைவிருக்கலாம்[4]. மேலும் தொடர்குண்டுகள் வெடித்தாலும் உயிர்சேதம் ஏற்படவில்லை, மற்றும் மிரட்டத்தான் அக்குண்டுகள் வைக்கப்பட்டன என்றும் சோதனையில் தெரியவந்தது. முதலில் புத்தபிட்சு தோற்றத்தில் படம் வெளியிடப்பட்டது. பிறகு வேறு விசயத்தில் கைது செய்யப் பட்ட ஒருவரை “இந்து பூஜாரி புத்த கயாவில் கைது” என்றும் செய்திகள் வெளிவந்தன[5]. பிறகு குண்டுவெடிப்பிற்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்கம் அளித்தன.

இவன்இந்தியமுஜாஹித்தீனைசேர்ந்தவனா?: பிடிபட்டவன் யாராக இருந்தாலும் அந்தந்த சட்டமீறல்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய முஜாஹித்தீனின் கைவேலை தான் இது, என்று ஏற்கெனவே கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து செய்திகள் வந்துள்ளன[6]. அவர்களிடமிருந்து, மயன்மாரில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு பழி வாங்கத்தான் இச்செயல் என்று தகவல் வந்ததாகவும் உள்ளது. ஜார்கண்டில் எவ்வாறு நக்சல்கள் மற்றும் இந்திய முஜாஹித்தீனின் ஜிஹாதிகள் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர் என்று புலன்விசாரணை செய்யும் அதிகாரிகளும் எடுத்துக் காட்டியுள்ளனர்[7]. கடந்த மாதம் ஜூலையிலேயே, அன்வர் முல்லிக் என்பவன் ராணிபந்த், சப்ரா கோட்டம், நாடி மாவட்டம், மேற்கு வங்காளத்திலிருந்து இந்திய முஜாஹித்தீனுக்கு வெடிமருந்துப் பொருட்கள் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளான்[8]. ஹைதராபாத்-புத்தகயா குண்டுவெடிப்பில் இருக்கும் ஒற்றுமை மற்றும் குண்டு தயாரிக்கப்படுள்ள முறை இந்திய முஜாஹித்தீனைக் காட்டுகிறது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது[9]. ஆனால், திசைத் திருப்ப “சுக்குமி, ளகுதி, ப்பிலி” போன்ற செய்திகளை ஏன் வெளியிட வேண்டும்? ஆகவே, இந்நிலையில் குழப்பத்தை உண்டாக்கவே, இத்தகைய செய்திகளை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

பீஹாருக்கும், இந்தியமுஜாஹித்தீனுக்கும்தொடர்புஉள்ளாதா?: அதாவது இந்திய-முஜாஹித்தின் என்றால், நாளைக்கு பீஹாரின் தொடர்பு வெளிவரும், அப்பொழுது பீஹாரில் யாரோ உதவியுள்ளனர் என்று தெரிந்து விடும் என்று யாரோ கவனமாக இருக்கின்றனர். அப்படியென்றால், இந்திய-முஜாஹித்தின் சௌகரியமாக பீஹாரில் வேலை செய்து வர யாரோ உதவி செய்து வருகிறார்கள். ஒருவேளை, நிதிஷ்குமாரை மிரட்டி பிஜேபி-கூட்டைக் கலைத்து, காங்கிரஸுடன் நெருங்கி வந்ததற்கு இதுதான் காரணாமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. இப்பொழுது லல்லு எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை! யாசினிடம் இது பற்றி கேட்டபோது, “நல்லது, எங்களைப் போலவே யாரோ அதேப் பணியில் ஈடுப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது” என்றானாம்[10]. அதாவது, இவனும் திக்விஜய சிங் போல, பரூக்கியைப் போல பேசுகிறான் என்பதை கவனிக்கலாம். இந்தியாவில் இப்படி, தீவிரவாதிகளை ஆதரித்துக் கொண்டிருக்கும் வரை, பிடிபட்ட தீவிரவாதிகள் கூட இப்படி பேசுவது, இந்தியா எத்தகைய துரோகிகளைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. அதாவது, இத்தகைய வெட்டிப்பேச்சுகளில், பொய் பிரச்சாரங்களில் குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களைக் கூட மறக்கடித்து விடும் வகையில் இவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதனை அறியவேண்டும்.

பட்டகலில்அவனதுசொந்தக்காரர்கள், நண்பர்கள், மற்றவர்கள்அவனைஒதுக்குவதுஏன்?: இதே மாதிரி கர்நாடகா மாநிலத்தில், மங்களூரிலிருந்து 150 கி.மீ தூரத்தில் கடற்கரைப் பகுதியில் உள்ள பட்டகல் என்ற நகரத்தில், யாசீனைப் பற்றி விசாரித்தால், ஒருவனை வைத்துக் கொண்டு எங்களை எடை போடாதீர்கள் என்று பொரிந்து தள்ளுகிறார்களாம்[11]. இருப்பினும் முன்னர், அந்த ஊரினர் எப்படி பட்டகல் சகோதரர்களுக்கு உதவினர் என்று விவரங்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. ஏனெனில், உள்ளூர் உதவிகள் இல்லாமல், பொருட்களை வாங்க முடியாது, எடுத்துச் செல்லமுடியாது, விநியோகிக்க முடியாது என்று என்ற நிலையில், பலர் உள்ளனர். அதுல் கரீம் துண்டா விசயத்தில், குடும்பத்தார் ஒட்டு மொத்தமாக அவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், இங்கோ எரிந்து விழுந்துள்ளதாக சொல்கிறார்கள். “சும்மா, கொஞ்சம் அசிங்கத்தை வைத்துக் கொண்டு, எங்களை இப்படி-அப்படி என்று தீர்மானிக்க வேண்டாம்”, என்கிறார்களாம். மேலும் ஊடகக்காரர்கள் என்றால் அடிக்கவும் வருகிறார்களாம்[12]. ஒரு பக்கத்தில் செய்திகள் இப்படி, மறுபக்கமோ கீழ்கண்டவாறு உள்ளது.

யாசின்பட்கல்உயிரோடு இருப்பதால் குடும்பத்தார்நிம்மதி: இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனன் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டதால் அவனது குடும்பத்தார் நிம்மதி அடைந்துள்ளனர். இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் தேசிய புலனாய்வு துறையினரால் இந்திய-நேபாள எல்லையில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டான். இந்நிலையில் இது குறித்து அவனது தந்தை ஜரார் சித்திபாபா மற்றும் மாமா யாகூப் பட்கல் கூறுகையில், “அகமது சித்திபாபா (யாசின் பட்கல்) கைது செய்யப்படத்தில் எங்களுக்கு நிம்மதியாக உள்ளது. எங்கே அவனை போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடுவார்களோ என்று பயந்தோம்[13]. அவன் இறந்துவிட்டான் என்றே இத்தனை நாட்கள் நினைத்தோம்[14]. என் மகன் அப்பாவி. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் போராடுவோம். அவன் மீது குற்றம் இருந்தால் தண்டிக்கட்டும். கடந்த 2005ம் ஆண்டு என் மகன் என்னுடன் துபாய் வந்து ஒரு கடை வைக்க உதவினான். அதன் பிறகு 2007ம் ஆண்டு காணாமல் போனான். இது குறித்து துபாய் போலீசாரிடம் புகார் தெரிவித்தோம். அவன் மீது செக் மோசடி வழக்கு இருப்பதால் ஓடிப் போயிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். யாசின் என்ற பெயரை போலீசாரும், ஊடகங்களும் அவனுக்கு வைத்துள்ளன என்றார். அகமதை பற்றி பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. அகமது 1983ம் ஆண்டு பிறந்தான். அவன் 1ம் வகுப்பு முதல் பத்தாவது வரை பட்கலில் படித்தான். ஆனால் அவனால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. அதனால் 2005ல் துபாய்க்குச் சென்றான். 2007லிருந்து அவனுடன் எந்த தொடர்பும் இல்லை”.

போலிஎன்கவுண்ட்டரில்சுட்டுக்கொன்றுவிடுவார்களோஎன்றுபயந்தோம்: எங்கே அவனை போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றுவிடுவார்களோ என்று பயந்தோம் என்று கூறுவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்றால், தங்களது பிள்ளையை ஒழுங்காக வைத்திருக்கலாமே? “இது குறித்து துபாய் போலீசாரிடம் புகார் தெரிவித்தோம். அவன் மீது செக் மோசடி வழக்கு இருப்பதால் ஓடிப் போயிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்”, என்கின்றனர். பிறகு, உள்ளூர் போலீசில் ஏன் புகார் கொடுக்கவில்லை? மும்பை போலீஸார் விட்டிற்கு வந்தபோது, ஓடிவிட்டான் என்றுள்ளதே, அப்பொழுதே விழித்துக் கொண்டிருக்க வேண்டாமோ? அதாவது துபாயிலிருந்தே காணாமல் போய்விட்டான் என்று நிரூபிக்கப் பார்க்கிறார்கள் போலும்! அப்படியென்றால் தெரிந்தே அனுசரித்து கொண்டு இருந்தார்களா அல்லது பையன் ஜிஹாதில் ஈடுபட்டுள்ளான் அதனால் அவனுக்கு நிச்சயம் சொர்க்கம் தான் என்று பூரித்து போய் விட்டார்களா?

© வேதபிரகாஷ்

01-09-2013


 


[4] Indian Mujahideen terror suspect Syed Maqbool, who was freed from Charlapally jail in Hyderabad on remission (good conduct), had revealed during his arrest by Delhi Police in October 2012 that the IM was planning to carry out attacks in Bodhgaya. Maqbool told interrogators that the IM wants to take revenge against attacks on Muslims in Myanmar. He was also questioned during the recent twin blasts in Dilsukhnagar. Maqbool alias Zuber, a former convict, was picked up by the Delhi Police with the help of counter intelligence sleuths from Shaheennagar in October 2012. The key allegation against him was that he was planning a suicide bomb attack in Bodhgaya in Bihar to avenge attacks on Muslims in Myanmar, and also imparted training to those responsible for a couple of low-intensity bomb blasts in Pune in 2012. It is alleged that in July 2012, Maqbool aided other IM terror suspects to do a recce of Dilsukhnagar, Begum Bazaar and Abids in Hyderabad. He was said to be acting on the orders of the most wanted terror suspect, Riyaz Bhatkal.

http://www.deccanchronicle.com/130708/news-current-affairs/article/bodhgaya-blasts-indian-mujahideen-man-had-warned

[7] The angle is being looked into by the NIA even in the recent serial blasts in the Mahabodhi temple in Bodh Gaya, Bihar. Sources in NIA said the attack in Gaya seems to be the work of a new module of the IM. “It is clear that an organised group is behind it. Planting 13 bombs requires planning. It is suspected to be IM but a new module set up in the neighbouring state of Jharkhand could be responsible for the attack,” said an NIA officer. Sources in the NIA said Manzar attended a training camp in Kerala and was given the responsibility of recruiting youths from Jharkhand since he belonged to the state. He is alleged to be an important functionary of the banned Students Islamic Movement of India (SIMI) and later joined the IM. A fresh revelation that Amir Raza Khan, one of the founder members of IM, originally hails from Gaya has led the agencies to probe some of his old contacts. So far, it was believed that Khan was from Kolkata. Support from Pakistan-based terror outfits is also not ruled out. Sources said even in the past Pakistan’s Inter Services Intelligence (ISI) had made attempts to support the Naxalites in India. Read more: http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2369414/Terror-web-spreads-Jharkhand-State-revealed-prime-recruiting-ground-Indian-Mujahideen.html#ixzz2c2wX8Ibr; Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[8] A resident of Ranibandh in Chapra sub-division of Nadia district of West Bengal, Mullick was arrested with explosives and counterfeit Indian currency with face value of around Rs 1.90 lakh, according to reports.

http://www.indianexpress.com/news/bodhgaya-blasts-im-explosives-supplier-held-in-bengal/1142659/

[10] When he was questioned by top officers of the Bihar Police and the  National Investigating Agency. Sources say that he denied the Mujahideen’s involvement in a series of bomb blasts in the pilgrimage town of Bodh Gaya in July, but said of the attacks, “Good… it seems there are other people like us working for the same purpose.”

http://www.ndtv.com/article/india/bodhgaya-blasts-show-others-share-our-goal-yasin-bhatkal-allegedly-said-412152

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (2)

செப்ரெம்பர் 2, 2013

யாசின் பட்கல் முஸ்லிமா, முஜாஹித்தீனா, ஜிஹாதியா, தீவிரவாதியா – யார், அவன் பெயர் அஸதுல்லா அக்தர், ஹட்டி, தானியல், முஹம்மது அஹமது சித்திபாபா அல்லது வேறெது – இப்படி கேள்விகளை எழுப்பும் நோக்கம் என்ன (2)

anti_terrorism_muslim_conference_Islam-means-peaceயாசின் பட்டகல் வடக்கு பீஹாரில் அதே இடங்களில் ஆள் சேர்த்தது எப்படி?: சரி, பீஹாரில் ஏன் தீடீரென்று இத்தகைய சர்ச்சை ஏற்பட வேண்டும்? இதெல்லாம் காஷ்மீரத்தில் அதிகமாகப் பேசப்படுகின்றது. அதன்படியே தீவிரவாதிகள் செயல்பட்டு, அங்கிருந்து காபிர்களை-பண்டிட்டுகளை-இந்துக்களை விரட்டியடித்துள்ளனர். பிறகு, பீஹார் என்ன அத்தகைய ஜிஹாதிகளின் விளையாட்டுக் களமாக இருக்கிறதா என்ன? இங்கு தான் விஷயமே வெளிவருகிறது. அதாவது, யாசின் பீஹார் இளைஞர்கள் பலரை, ஜிஹாதில் சேர்க்க வேலைசெய்துள்ளான். அவர்களைத் தூண்டிவிட்டு வேலைக்கு அமர்த்தியுள்ளான்[1]. மேலே குறிப்பிட்ட தர்பங்கா, மதுபனி, கதிஹர், பேடியா, புர்னியா, கிருஷ்ணகஞ் முதலிய இடங்களில் தான் அத்தகைய ஆள்-சேர்ப்பு நடந்திருக்கிறது[2]. தர்பங்காவில் மட்டும் 18 பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிடிபட்டுள்ளனர். அவர்கள்:இடம் விசாரித்தபோது, யாசின் பற்றிய உண்மைகள் வெளிவந்துள்ளன. யாசின் சிறந்த இஸ்லாமிய போதகன் மாதிரி இருந்து கொண்டு, முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாதிகளாக மாற்ரியுள்ளான். உணர்ச்சியுள்ள அவனது பேச்சுகளை, இந்த முஸ்லிம் இளைஞர்கள் தங்களது மொபைல்களில் பதிவு செய்து வைத்துக் கொண்டு கேட்டு மகிழ்ந்து வருகின்றனர். தூண்டுதலும் பெறுகின்றனர்.

IM-email-2010-1காங்கிரஸின் குண்டுவெடிப்பு டுவிட்டர்களும், பிரச்சாரங்களும்: புத்தகயா குண்டுவெடிப்புகளுக்கு “இந்திய முஜாஹித்தீன்” பொறுப்பேற்றுக் கொண்டது, திக்விஜய சிங் கிண்டலடித்து சங்கப்பரிவார் மீது குற்றஞ்சாட்டியது முதலியவற்றை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். இதே போல, பெங்களூரு குண்டுவெடிப்பின் போது முகமது ஷகீல், “இந்த குண்டு வெடிப்பு பிஜேபிக்கு உதவும்”, என்றார், ஆனால், காங்கிரஸ் தான் வென்றது. ஆகவே, இது தீவிரவாததிற்கு ஒத்திகையா அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு உதவும் தந்திரமா என்று தெரியவில்லை. கடந்த 10-15 ஆண்டுகளுகாக எங்கெல்லாம் குண்டுவெடிப்பு நடக்கின்றனவோ அங்கெல்லாம் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் ஆதரவு கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெற்று வருகிறது. இதனை மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்தே கண்டு கொள்ளலாம். எனவே “இந்திய முஜாஹித்தீன்” காங்கிரஸுக்கு சாதகமாக வேலை செய்து வருகின்றாதோ என்ற சந்தேகம் எழுகின்றது.

Key players in the blastsபீஹார் அரசியல்வாதிகள், முஸ்லிம்கள் யாசினுக்கு உதவியது ஏன்?: தர்பங்கா நேபாள எல்லைக்கு அருகில் இருப்பதால், பிரச்சினை வரும் போது, சுலபமாக அங்குச் சென்றுவிடலாம் என்ற திட்டத்துடனே அவ்வூரைத் தேர்ந்தெடுத்துள்ளான். மேலும் அவ்வூரில், ஏற்கெனவே LeT தொடர்பாளிகள் இருந்திருக்கிறார்கள். யாசின் பீஹாரில், தர்பங்காவில் இருந்து கொண்டு, பலருடன் போனில் பேசிக் கொண்டு, ஜிஹாதுக்கு ஆட்சேர்ப்பு செய்து கொண்டு, தாராளமாக வேலை செய்து கொண்டிருந்தபோது, பீஹார் போலீசார் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? 2006ல் உமர் மதானி என்ற LeT ஆளை சந்தித்துள்ளான். 2009ல் தில்லியில் கைது செய்யப்படும் வரை இவனுடன் தொடர்பு வைத்திருந்தான். தன்னை வியாபாரி மற்றும் யுனானி மருத்துவர் போல காட்டிக் கொண்டான். லெஹேரிசராய் [Laeherisarai] என்ற இடத்தில் தங்கியிருந்தான். தர்பங்காவின் ரப்பானி (இஸ்லாம் மதகுரு) இவனுக்கு ஜிஹாதி ஆள்-சேர்ப்பிற்கு உதவி செய்திருக்கிறார்[3]. 2007 மற்றும் 2010 வருடங்களில் தர்பங்காவில் இருந்துள்ளதால், “பீஹார் ஜிஹாத் திட்டம்” பற்றி உளவுத்துறை எச்சரித்துள்ளனர். இவ்வளவு விசயங்களும் மற்றவர்களுக்குத் தெரியாமல் பீஹார் வைத்துள்ளது ஆச்சரியமான விசயம் தான்.

ied-cutout01கைதுகளில் நிதிஷ்குமாரின் இரட்டை வேடம் ஏன்?: கடந்த மே 2012ல் கபீல் அக்தர் என்பவன் கர்நாடகா போலீசாரால் பர்ஹ் சமைலா என்ற இடத்திலிருந்து கைது செய்த போது, உள்ளூர் கோர்டில் அனுமதி பெறாமல் செல்லக்கூடாது என்று நிதிஷ்குமார் தடுத்தார். ஆனால், ஆதே மாதத்தில், அதே ஊரில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பாசி மெஹ்மூத் என்பவன் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப் பட்டுள்ளான். இப்பொழுதோ, யாசின் விசயத்தில் அவ்வாறு செய்யவே மறுத்திருக்கிறார்[4]. தனது மாநிலத்தில் இவ்வாறு எல்லைக்கடந்த சட்டமீறல்கள், தீவிரவாதிகளின் போக்கு வரத்து, ஜிஹாதி ஆள்-சேர்ப்பு முதலியவை நடந்து கொன்டிருக்கின்றன எனும் போடது, எப்படி நிதிஷ்குமார் அமைதியாக இருந்திருக்கிறார்? முஸ்லிம்கள் என்பதால் ம்சட்டும் இப்படி சும்மா இருந்துவிடலாமா? அல்லது அப்படி சும்மாயிருக்கச் சொன்னது யார்? அப்படியிருந்தால் என்ன ஆதாயம்? இதுதான் செக்யூலரிஸம் பேசுபவர்களின் லட்சணமாகத் தெரிகிறது.

Nitish-Modi Muslim politicsபீஹாரில் தொடர்ந்து நடந்துள்ள ஜிஹாதிகளின் கைதுகள் முதலியன: பீஹாரில் எல்லாவிதமான ஜிஹாதிகள், மாவ்வோயிஸ்ட் முகமூடிகளில் ஒளிந்துள்ள ஜிஹாதிகள், ஜிஹாதி வேலையாட்கள், தொடர்பாளிகள், வேவுபார்க்கும் வகைறாக்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நாள் / தேதி

தீவிரவாதி, பிடிபட்ட இடம், விவரங்கள்

2005 LeT terrorist Haroon Rashid arrested from Siwan
July 20, 2006 Mumbai ATS arrests Mohammed Kamal Ansari from Basopatti village, Madhubani, for Mumbai serial blasts
Nov 12, 2007 Mohammed Sabauddin alias Farhan, a Madhubani resident, arrested from Lucknow for Rampur CRPF camp attack and firing at a Jaipur science conference
Oct 14, 2008 UP ATS arrests Mohamed Khalil, a Madhubani resident, from Lucknow for the Delhi blast
Aug 17, 2009 LeT operative Omar Madani of Basopatti, a Madhubani resident, arrested from Delhi
2010 Rampur CRPF camp attack accused Mohammed Sabauddin arrested from Gandhwari, Madhubani
Nov 24, 2011 IM operatives Ghayur Ahmed Jamali and Mohammed Ajmal arrested from Madhubani
Nov 2011 IM operative Irshad Khan, a Samastipur resident, held by Special Cell in Chennai
Nov 22-23, 2011 Gauhar Aziz Khomaini, Qateel Ahmed Siddiqui arrested
Jan 12, 2012 IM operatives Naquee and Nadeem arrested from Darbhanga (official arrest shown later)
May 6, 2012 Kafeel Akhtar arrested by Karnataka Police fromDarbhanga

மதுபனியில் தான் அதிகம் கைதுகள் நடந்துள்ளன. அதாவது, அவ்விடம் அவர்களுக்கு எளிதான புகளிடமாக இருந்துள்ளது. உள்ளுர்வாசிகள் அவர்களுக்கு உதவுவதாகவும் தெரிகிறது. சரி, அவர்களுக்கு அப்படி ஏன் உதவவேண்டும் என்றால், அவர்கள் ஜிஹாதில் ஈடுபட்டுள்ளார்கள் அதாவது புனிதபோரில் ஈடுபட்டுள்ளதால், எந்த முஸ்லிமும் அவர்களுக்கு உதவ வேண்டும், ஆனால், காட்டிக் கொடுக்கக் கூடாது. அதே போல காபிர்களான இந்தியர்களும் அவர்களுக்கு உதவ வேண்டும், உதவினால் அவர்களது ஆட்சி தொடரும், அதற்கு ஜிஹாதிகள் உதவுவார்கள். இல்லையேல், ஜிஹாதிகளுக்கு உதவாத ஆட்சி நீக்கப்படும்.

© வேதபிரகாஷ்

01-09-2013


[2] Bhatkal was the brain behind recruitment of youth in Bihar to carry out terror attacks across the country, a police official said on Saturday……he recruited youth from Bihar’s Mithilanchal region, including DarbhangaMadhubani and Samastipur districts, in the last few years, “Bhatkal confessed that he used to target young boys, mostly from poorest of the poor background, in Mithilanchal for recruitment to carry out terror attacks in the country,” ………..was the man behind recruitment of all 18 Indian Mujahideen operatives arrested by security forces from Darbhanga in the last two years.

http://www.business-standard.com/article/politics/yasin-bhatkal-wooed-bihar-youth-for-terror-attacks-113083100403_1.html

[3] During his Darbhanga stay, Bhatkal made important contacts, first as a business networking agent and then as a Unani practitioner. He had also come to know Rabbani (now dead) of Darbhanga, who helped him build a network of youths in villages.

http://www.indianexpress.com/news/close-to-border-darbhanga-was-yasins-hunting-ground/1163244/

[4] In May 2012, Kafeel Akhtar was arrested by Karnataka police from Barh Samaila. Chief Minister Nitish Kumar had objected to Karnataka Police taking him away without a transit remand from a local court. The same month, Fasih Mehmood, a Saudi Arabia-based engineer from Barh Samaila village, was arrested. He was deported to India. Terror links with Darbhanga was first established with D Company man Fazlur Rahman’s connection with Deora Bandhauli.

http://www.indianexpress.com/news/close-to-border-darbhanga-was-yasins-hunting-ground/1163244/2