சென்னை உருது போதிக்கும் மதரஸா, பீகாரிலிருந்து கொண்டு வரப் பட்ட சிறார்கள், சரியாகப் படிக்கவில்லை என்பதால் சித்ரவதை, புகார், கைது முதலியன!
சென்னைமதரஸாவில்பிகார்குழந்தைகள்துன்புறுத்தப்பட்டது: சென்னையில் இயங்கிவரும் மதரஸா (இஸ்லாமிய மதப் பள்ளி) ஒன்றில் பிகாரிலிருந்து அழைத்துவரப்பட்ட சிறார்கள் அடித்து துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழகம் மற்றும் பிகார் அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்ஹெச்ஆா்சி) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது[1]. சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் இந்த மதரஸா இயங்கி வருகிறது[2]. இங்கு படிக்கும் சிறார்களை அடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும் அவா்கள் வேதனையில் அழுதபடி கூச்சல் போடுவதாகவும் அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்[3]. அதனடிப்படையில் போலீஸார் அங்கு 29-11-2022 அன்று சென்று விசாரணை நடத்தினா்[4]. போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிஹாரில் அரபி வகுப்புகள் நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தால், அம்மாநில குழந்தைகள் சிலர் இந்த மதராஸா பள்ளியில் தங்கி அரபி வகுப்புகள் படித்து வருவதும், சரியாக படிக்காத குழந்தைகளை நிர்வாகிகள் சிலர் கேபிள் வயர்களால் அடித்து துன்புறுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது[5].
பிஹாரில்அரபிவகுப்புகள்நடத்துவதற்குவசதிஇல்லாதகாரணத்தால், தமிழகமதராஸாபள்ளியில்தங்கிஅரபிவகுப்புகள்படித்துவருவது: இதுவே விசித்திரமாக உள்ளது, ஏனெனில், வடவிந்தியாவில் இல்லாத “அரபிவகுப்புகள்நடத்துவதற்குஇல்லாதவசதி” தமிழகத்தில், அதிலும் சென்னையில் இருப்பது திகைப்பாக இருக்கிறது. அந்த அளவுக்கு உருதில் தேர்ச்சி, புலமை பெற்ற உருது-ஆசிரியர்கள்-பண்டிதர்கள் இந்த சிங்காரச் சென்னையில் இருக்கிறார் போலும். அந்நிலையில் தான் இந்தி வேண்டாம், இந்தி திணிப்பு என்றெல்லாம் திராவிடத்துவ வாதிகள் ஆர்பாட்டம்-போராட்டம் செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு தமிழும் படிப்பதில்லை, சொல்லிக் கொடுப்பதாகவும் தெரியவில்லை. ஆனால், “மெட்ராஸ் பாஷை” இன்றும் அதிகமாகி, பெறுகி, பிஎச்.டி லெவலுக்குச் சென்று விட்டது. பேச்சு, பாட்டு, கவிதை என்றெல்லாம் வளர்ந்து, சினிமாக்களில் சென்று விட்டு, உயர்ந்துள்ளது.
வழக்குப்பதிவுசெய்யப்படல்: இதையடுத்து சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்[6]. இதனால், குழந்தைகள் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதில், பிகார் மாநிலத்திலிருந்து சிறுவா்களை அழைத்து வந்து அவா்களுக்கு மத போதனை நடத்தப்படுவதும், சரியாகப் படிக்காதவா்களை கடுமையாக தாக்கியதும் தெரியவந்தது. 10 முதல் 12 வயது வரையுடைய அந்தச் சிறார்களை குச்சி மற்றும் கைகளால் கடுமையாக தாக்கியிருப்பதும், கேபிள் வயர்களால் அடித்து துன்புறுத்தியதும் அவா்கள் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேற்கு மண்டல இணைக்கமிஷனர் ராஜேஸ்வரி உடனே தகுந்த நடவடிக்கை எடுத்தார்[7]. என் லலிதா, சிறார் நலத்துறை உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் புகார் கொடுத்தார். அதன்படி, ஐபிசி 342 (தவறான முறையில் அடைத்து வைத்தல்), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 324 (அபாயகரமான ஆயுதங்களால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் ஜேஜே சட்டம் பிரிவு 75 (குழந்தைக்கு கொடுமைப்படுத்துதல்) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்[8].
சிறார்கள்மீட்கப்பட்டுசிகிச்சைஅளிக்கப்பட்டது: அதனைத் தொடா்ந்து, அங்கிருந்த 12 சிறார்களை போலீஸார் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்[9]. தொடர்ந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பிஹார் மாநிலத்தை சேர்ந்த 12 குழந்தைகளை மீட்டனர்[10]. பின்னர், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்[11]. தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரையும் ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘பிஹாரில் அரபிக் வகுப்புகள் நடத்துவதற்கு போதிய வசதி இல்லாததால், அம்மாநில குழந்தைகள் சிலர் இந்த மதரஸா பள்ளியில் தங்கி அரபி வகுப்புகள் படித்து வருகின்றனர். சரியாக படிக்காத குழந்தைகள், சொல் பேச்சு கேட்காத குழந்தைகளை நிர்வாகிகள் துன்புறுத்தி உள்ளனர். இதில் சில குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது’ என்றனர். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த பள்ளி நிர்வாகிகள் அக்தா் (26), பிகாரைச் சோ்ந்த ஆசிரியா் அப்துல்லா (24) ஆகிய இருவரை கைது செய்தனா். அன்வர், அக்தர் மற்றும் அப்துல்லா என்று மூவர் கைது செய்யப் பட்டதாக மற்ற ஊடகங்கள் கூறுகின்றன[12]. இந்த விவகாரத்தை தானாக முன்வந்து கையிலெடுத்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம்[13], இதுதொடா்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழகம் மற்றும் பிகார் மாநில அரசு தலைமைச் செயலாளா்களுக்கும் சென்னை காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது[14].
பீகார்மாநிலத்திற்குசென்றுவிசாரிக்கஆணை: மேலும், இந்த சிறுவர்கள் பீஹாரிலிருந்து, தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆணையம் அதன் சிறப்பு அறிக்கையாளர் டாக்டர் ராஜீந்தர் குமார் மாலிக்கை பீகார் மாநிலத்திற்கு சென்று தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது[15]. இளம் அனாதை சிறார்களை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள இடங்களுக்கு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக அவர் உண்மையைக் கண்டறியும் விசாரணையை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது[16]. பீகார் மாநிலத்தில் சட்டப்பூர்வமான கடமையைச் செய்யத் தவறிய பொறுப்புள்ள ஏஜென்சிகளைப் பற்றி ஆணையம் தெரிந்து கொள்வது அவசியம். மேலும், சம்பவம் குறித்து மேலும் அறிய, பாதிக்கப்பட்ட சிறார்களை சென்னையில் சந்தித்து பரிசோதனை செய்யுமாறும் அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். அவரது அறிக்கை ஒரு மாதத்திற்குள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, இது தேசிய அளவில் அறியப் பட்டு நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
[1] தினமணி, மதரஸாவில்சிறார்கள்அடித்துதுன்புறுத்தல்: தமிழகம், பிகார்அரசுகளுக்குஎன்ஹெச்ஆா்சிநோட்டீஸ், By DIN | Published On : 05th December 2022 12:19 AM | Last Updated : 05th December 2022 12:19 AM
[7] நான்காவது கண், விடுதியில்அடைத்துவைத்துசித்ரவதைசெய்யப்பட்ட 12 பீகார்சிறுவர்கள்மீட்பு: மேற்குமண்டலஇணைக்கமிஷனர்ராஜேஸ்வரிநடவடிக்கை, CRIMEPOLICE NEWSசெய்திகள், By Fourth Eye Last updated Nov 30, 2022.
[8] India Express, Three held for torturing 12 boys from Bihar at Chennai Madrassa, Published: 01st December 2022 02:49 AM | Last Updated: 04th December 2022 04:14 PM.
The police registered a case under four sections – IPC 342 (wrongful confinement), 323 (voluntarily causing hurt.), 324 (voluntarily causing hurt by dangerous weapons) and JJ Act section 75 (cruelty to child).
[12] After an investigation police said, three men – Anwar, Akthar and Abdullah – were running a madrassa where minor boys are taught to learn the Quran.
[13] NHRC notice to the Governments of Tamil Nadu and Bihar over reported torture of 12 orphaned juveniles brought from Bihar to a Madrasa in Chennai, New Delhi:3 December, 2022.
வக்ஃபு போர்ட் அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள், பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் எந்த மாடலில் உள்ளன?
பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் தில்லி மாடலா, திராவிட மாடலா?: வக்பு விவகாரங்களில் இந்தியாவில் மாநிலங்களில் பலவிதமான அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. சம்பந்தப் பட்ட முஸ்லிம்கள், அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களும் அதில் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவ்விவகாரங்களில், பெரும்பாலாக, கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்று வருகின்றன. துலுக்கர், மொஹம்மதியர் மற்றும் இன்றைக்கு முஸ்லிம்கள் என அழைத்துக் கொள்ளும் அந்நிய-அரேபிய வகையறாக்கள் தாங்கள் குரான், ஷரியத் மற்றும் ஹதீஸ் போன்ற புத்தகங்கள், சட்டநெறிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம் என்று சொல்லிக் கொண்டாலும், அது நாட்டிற்கு நாடு, பிரிவிக்குப் பிரிவு மாறித்தான் உள்ளது. இவையெல்லாம் அவர்களின், அதாவது, துலுக்கர், மொஹம்மதியர் மற்றும் இன்றைக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால், பலவிதமான அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள் என்று வரும் போது, அரசு, ஆட்சி, அதிகாரம், மோசடிகள், ஊழல்கள் முதலியவற்றில், புதிய பரிமாணங்கள் வருகின்றன. அதனால் வக்பு வாரிய மோசடிகள், ஊழல்கள் முதலியவையும் அவ்வாறே உள்ளன. தில்லி மாடல், திராவிட மாடல்………என்றெல்லாம் கூறிக் கொண்டாலும், நடப்பவை இவ்வாறுத் தான் உள்ளன.
2016லிருந்துதில்லிமாடல்வக்புஊழல்நடைபெறுகிறதா?: சமீபத்தில் வக்பு வாரிய அடாவடித் தனம், ஹிந்துக்களின், கோவில்களின் நிலம் அபகரிப்பு மற்றும் கோவிலே தமது நிலத்தில் உள்ளது போன்ற விவகாரங்களில் வெளிப்பட்டன. மேலும், துலுக்கரின் உள்-விவகார ஊழல்களும் வெளிவந்தன. அந்நிலையில் தில்லி வக்பு ஊழல் விவகாரமும் சேர்கிறது. பிப்ரவரி 8ஆம் தேதி 020 வக்ஃபு வாரிய நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ஏஏபி எம்எல்ஏ, வக்ஃபு வாரியத் தலைவர் அமனத்துல்லா கான் ( AAP MLA Amanatullah Khan) ஆகியோரை ஊழல் தடுப்புக்கிளை (Anti-Corruption Branch (ACB) ஏசிபி) புதன்கிழமை 08-02-2020 அன்று வழக்குப்பதிவு செய்தது[1]. பின்னர், வக்ஃபு வாரிய நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், ‘ஒழுங்கற்ற ஆள்சேர்ப்பு’ செய்ததாகவும் ஏ.சி.பி. தலைவர் அரவிந்த் தீப் தெரிவித்தார்[2]. இது குறித்து அமனத்துல்லா கானிடம் கேட்டபோது, “நான்முதலில்புகாரைமுழுமையாகப்படித்துப்பார்க்கிறேன், அதன்பிறகுஅதைப்பற்றிபேசுகிறேன்,” என்றார். கடந்தாண்டு வக்ஃபு வாரியத் தலைவராக இவர் நியமிக்கப்பட்டது குறித்து துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரிடம் உச்ச நீதிமன்றம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது[3]. இரண்டு ஆண்டுகளாகப் படித்துக் கொண்டே இருந்தார் போலும். அதற்குள் ஊழல் தடுப்புத் துறைக்குத் தெரிந்து விட்டது போலும்.
மத்திய-மாநில அரசுகளின் மோதல்கள், அரசியல் குழப்பங்கள்: டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது[4]. அங்குச் சமீபத்தில் தான் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடுகளில் ரெய்டு நடத்தி இருந்தனர்[5]. இதுபோன்ற ரெய்டுகள் இப்போதைக்கு அங்கு முடிவதாகத் தெரியவில்லை. இப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் ஊழல் புகார் ஒன்றில் செய்யப்பட்டு உள்ளார். பிஜேபி-அல்லாத மேற்கு வங்காளம், பஞ்சாப், தில்லி, கேரளம் முதலிய மாநிலங்கள் – மாநில அரசாளும் ஆட்சியாளர்கள், ஆளும் மத்திய அரசுடன் எப்பொழுதும் பிரச்சினை செய்து கொண்டு வந்தது தெரிந்த விசயமே. ஆளுநர் விவகாரம் என்று வைத்துக் கொண்டு அவ்வாறு கலாட்டா செய்து வருகின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், திராவிட மாடல், என்றெல்லாம் கூவிக் கொண்டு, முழுமையாக மத்திய அரசு விரோத போக்கைக் கடைபிடித்து வருகிறது. இதற்கு, திராவிடத்துவ சித்தாந்திகள் திராவிடியன் ஸ்டாக், ஒன்றிய அரசு, மாநில சுயயாட்சி போன்ற குப்பையில் வீசப் பட்ட சித்தாந்தங்களையும் துடைத்து கையில் எடுத்துள்ளனர்.
விதிகளைமீறிவக்புவாரியத்திற்குநிர்வாகிகளைநியமித்தது–என்றால்அதைஇஸ்லாமியமதத்தலைவர்கள்எவ்வாறுஏற்றுக்கொண்டனர்?: இஸ்லாமிய மத மக்கள் அவர்களின் சொத்துக்களை வக்பு பத்திரம் மூலம் இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்களுக்கு தானமாக கொடுக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு கொடுக்கப்படும் சொத்துக்கள், நிலங்களை பராமரிக்க, நிர்வகிக்க பொது மற்றும் தனியார் வக்பு வாரியங்கள் உள்ளன. நம்பிக்கையாளர்கள் அல்லாவுக்கு பயந்து, பய-பக்தியுடன் செயல் படவேண்டும், செயல் பட்டிருக்க வேண்டும். ஆனால், இவற்றில் எப்படி ஊழல் வந்தது என்பதனை அல்லாவிடாம் தான் கேட்க வேண்டும் போலிருக்கிறது. இதனிடையே, டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான். இவர் 2016-ல் ஆண்டு டெல்லி வக்பு வாரிய தலைவராக செயல்பட்டார். தலைவராக இருந்த காலத்தில், விதிகளை மீறி வக்பு வாரியத்திற்கு நிர்வாகிகளை நியமித்தது[6], பணமோசடியில் ஈடுபட்டதாக அமனத்துல்லா கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது[7]. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியின் வீட்டில் டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 24 லட்ச ரூபாய், உரிமம் இல்லாத 2 கைத்துப்பாக்கிகளை கைப்பற்றினர்.
வக்புவாரியத்திற்குபணிநியமனம்செய்ததில்முறைகேடுசெய்ததாக 2 ஆண்டுகளுக்குமுன்பாகபதிவுசெய்தவழக்கு: அப்படியென்றால், இஸ்லாமிய மதத்தலைவர்கள் எவ்வாறு ஏற்றுக் கொண்டனர், மற்ற வக்பு போர்ட் உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர்? போன்ற கேள்விகள் எழுகின்றன. வக்பு வாரிய ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கானை லஞ்ச ஒழிப்புத்துறை (ஏசிபி) போலீசார் 16-09-2022 அன்று கைது செய்தனர்[8]. டெல்லி வக்பு வாரியத்தின் தலைவராக ஆம் ஆத்மி கட்சியின் ஓக்லா தொகுதி எம்எல்ஏ அமனதுல்லா கான் இருந்து வருகிறார்[9]. இவர், வக்பு வாரியத்திற்கு பணி நியமனம் செய்ததில் முறைகேடு செய்ததாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பதிவு செய்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில், ரூ.12 லட்சம் ரொக்கம், உரிமம் பெறாத துப்பாக்கி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, 1609-2022 அன்று நண்பகலில் விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி, விசாரணைக்கு ஆஜரான அவரை, போலீசார் திடீரென கைது செய்தனர்.
வக்ஃபுவாரியமுறைகேடுதொடர்பாகஉரியவிசாரணைநடத்தக்கோரிதுணைநிலைஆளுநரிடம்காங்கிரஸ்குழுபுகார்: தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் குழு புகார் அளித்துள்ளது[10]. இது தொடர்பாக தில்லி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹர்னாம் சிங், பர்வேஷ் ஆலம், அலி மெஹந்தி, பர்வேஷ் முகமது, அன்ஸார் -அல்-ஹக், ஜாவேத் செளத்ரி ஆகியோர் அடங்கிய பிரதிநிதிக் குழு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜாலை 15-09-2022 வியாழக்கிழமை அன்று சந்தித்து மனு அளித்தது[11]. அதில், தில்லி வக்ஃபு வாரியத்தில் அமைச்சர் அமானதுல்லா கான் அவரது உறவினர்களை முறைகேடாக நியமித்துள்ளார். இதுபோன்று முறைகேடாக 33 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் ஹர்னாம் சிங் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும் என துணைநிலை ஆளுநர் உறுதியளித்துள்ளார்’ என்றார். பர்வேஷ் ஆலம் கூறுகையில், “தில்லி வக்ஃபு வாரிய நியமன முறைகேடுகள் தொடர்பாக அதன் அலுவலகம் முன்பு விரைவில் போராட்டம் நடைபெறும்’ என்றார். ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ்காரர்கள், இங்கு நடக்கும் வக்பு ஊழல்கள், முறைகேடுகள், கோவில் ஆக்கிரமிப்புகள் பற்றி மூச்சு விடுவதில்லை. இது காங்கிரஸ் மாடல் போலும்.
எழும் இக்கேள்விகளுக்கு, பிரச்சினைகளுக்கு பதில் கிடைக்குமா?:
தில்லி வக்ஃபு வாரிய முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸ் குழு புகார் அளித்துள்ளது.
அதாவது, தில்லி வக்ஃபு வாரியத்தில் முறைகேடு நடந்துள்ளதை ஒப்புக் கொண்டு தில்லி வக்ஃபு வாரியத்தின் அலுவலகம் முன்பு விரைவில் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
ஆனால், அதே நேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ்காரர்கள், இங்கு நடக்கும் வக்பு ஊழல்கள், முறைகேடுகள், கோவில் ஆக்கிரமிப்புகள் பற்றி மூச்சு விடுவதில்லை.
இது காங்கிரஸ் மாடல் போலும், தில்லி மாடல் அவ்வாறு இருக்கும் பொழுது, திராவிட, வங்காள மாடல்களும் அப்படியே உள்ளன!
பஞ்சாப, சிந்து, குஜராத, மராடா, திராவிட, உத்கல, வங்கா – கூட பொறுந்துகிறது. ஆனால், இந்த கூட்டணி பார்முலா செல்லுமா என்று பார்க்க வேண்டும்.
வக்ஃபு போர்ட் அணுகுமுறைகள், செயல்பாடுகள் மற்றும் அரசியல் சார்புகள், பிரச்சினைகள், சட்டமீறல்கள் மற்றும் வழக்குகள் எந்த மாடலில் உள்ளது?
குரான், ஷரியத் மற்றும் ஹதீஸ் போன்றவற்றை எப்படி அந்த முகமதியர்-முஸ்லிம்கள் மீற முடியும், ஊழல் செய்யக் கூடும், அல்லா அனுமதி அளித்தாரா?
மோமின்கள் எப்படி காபிர் அதிலும் நாத்திக, கம்யூனிஸ காபிர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ள முடியும்? யார் அனுமதித்தது?
மோமின்–காபிர் கூட்டு, சகவாசம், கூட்டணி ஹராமா-ஹலாலா, இதனால் கிடைப்பது சொர்க்கமா-எரியும் நரகமா, அல்-கிதாபியா என்ன சொல்கிறது?
தமிழகம் போல, தில்லியிலும் இந்துக்கள், கோவில் நிலங்களை முகமதியினர் ஆக்கிரமித்து உள்ளார்களா? வக்பிடம் சான்றிதழ் கொடுக்க ஆணை போட்டுள்ளார்களா?
[3] A case against Khan was filed in 2016, following a complaint from the sub-divisional magistrate (headquarters), revenue department, alleging that appointments to various “existing and non-existing posts” in the Waqf Board were “arbitrary and illegal”. The ACB registered an FIR in January 2020, under Section 7 (public servant taking gratification) of the Prevention of Corruption Act, and Section 120-B (criminal conspiracy) of the IPC.
[10] தினமணி, தில்லிவக்ஃபுவாரியமுறைகேடுவிவகாரம்: துணைநிலைஆளுநரிடம்காங்கிரஸ்புகார், By DIN | Published On : 12th July 2019 07:20 AM | Last Updated : 12th July 2019 07:20 AM.
பாராமவுன்ட்மார்க்கெட்டிங்கார்ப்பரேஷன்முதல்ஷேக்முகைதீன்வரை (2010-2021)[1]: மதுரை சின்னசொக்கிகுளத்தில் பாராமவுன்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி செய்ததாக, அதன் உரிமையாளர் ஷேக் முகைதீனை (62), மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்[2]. முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவுப்படி, ஷேக் முகைதீனை இரண்டு நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரை நேற்று போலீசார் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் முன் ஆஜர்படுத்தினர். அவரை மீண்டும் ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம்: “போலீஸ்துறையில்விரல்ரேகைபிரிவுநிபுணராக 1970ல்சேர்ந்தார். 2005ல்விருப்பஓய்வுபெற்றேன். சென்னையில்பசிபிக்நிறுவனம்தனதுவாடிக்கையாளர்களுக்குசுவர்கடிகாரம்வழங்கியது. அதைப்பார்த்து, தனியாகதொழில்துவங்கவேண்டும்என்றஎண்ணம்ஏற்பட்டது. மதுரையில்பாராமவுன்ட்மார்க்கெட்டிங்கார்ப்பரேஷன்என்றபெயரில்நிறுவனத்தைதுவங்கினேன். இதன்நிர்வாகஇயக்குனர்களாகநானும் (ஷேக்முகைதீன்), எனதுமனைவிமனைவிஜானு, மகன்கள்சர்தார்உசேன், யாகூப்உசேன்மற்றும்சிவக்குமார், முபாரக்அலிஆகியோர்இருந்தோம்”.
ஷேக்முகைதீன்வாக்குமூலத்தில்சொன்னது[3]: “திருக்குறள்புத்தகங்களைவிற்பதில்கிடைக்கும்லாபத்தைவாடிக்கையாளர்களுக்குபிரித்துகொடுப்பதாகஅறிவித்தேன். குறைந்தபட்சம் 100 ரூபாய்முதல்பத்தாயிரம்ரூபாய்வரைஎனபல்வேறுதிட்டங்கள்அறிவிக்கப்பட்டன. திட்டங்களுக்குஏற்பவாடிக்கையாளர்களுக்குலாபம்கிடைக்கும். இதில்ஒருகோடியே 20 லட்சம்பேர்வாடிக்கையாளர்களாகசேர்ந்தனர். அவர்களிடம்இருந்து 210 கோடிரூபாய்வரைவர்த்தகம்நடந்தது. அதில் 200 கோடிரூபாய்க்குவாடிக்கையாளர்களிடம்பணம்திருப்பிவழங்கப்பட்டுள்ளது. பத்துகோடிரூபாய்மட்டுமேவாடிக்கையாளர்களுக்குசெலுத்தவேண்டியுள்ளது. குட்ஷெட்தெருவில்உள்ளஆக்சிஸ், கோட்டக், ஐ.சி.ஐ.சி.ஐ., தல்லாகுளம்கரூர்வைஸ்யாவங்கிகளில்கணக்குதுவங்கினேன். வங்கிகளில் 80 லட்சம்ரூபாய்உள்ளது. குவாலிஷ், இன்னோவா, டெம்போஆகியவாகனங்கள்உள்ளன. அழகர்கோயிலில்இரண்டரைஏக்கர்நிலம்உள்ளது. மத்தியரிசர்வ்வங்கியின்திடீர்உத்தரவால்வாடிக்கையாளர்களுக்குகுறிப்பிட்டநாளில்பணத்தைதிருப்பிவழங்கஇயலவில்லை”, இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
“திருக்குறளும், திருக்குர்ஆனும்”- “திட்டப்பணி” செய்ய, ரூ, 2, 50, 000/- “செம்மொழி” செய்திமடல்-1 (2010): இந்நிலையில், முனைவர் முகம்மது அலி ஜின்னா என்பவர் “திருக்குறளும், திருக்குர்ஆனும்” என்ற தலைப்பில் “திட்டப்பணி” செய்ய, “ஆய்வறிஞர்” என்ற ரீதியில் ரூ, 2, 50, 000/- (இரண்டரை லட்சம் ரூபாய்) கொடுக்கப்பட்டுள்ளதாக “செம்மொழி” செய்தி மடல்- 1 கூறுவது[4] வேடிக்கையாக உள்ளது! இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும் அவர்களுடையதை எவர்களுடையதும் கூட இப்போதும், எங்கும், எவ்வாறும் ஒப்பீடு செய்யக்கூடாது, சமன் செய்யக் கூடாது, ………………………என்றெல்லாம் இருக்கும்போது, இந்த ஜின்னா எப்படி பணம் வாங்கினார்? எப்படி ஆராய்ச்சி செய்யப் போகிறார்? அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலுடன், எவ்வாறு குரானை பொறுத்திப் பார்க்கப் போகிறார்,………………….. முதலியவற்றைப் பற்றியெல்லாம் பொறுத்துதான் பார்க்கவேண்டும்[5] போல இருக்கிறது! இருப்பினும், தன்னது ஆராய்ச்சி விண்ணப்பப் படிவத்தில், அதைப் பற்றி சொல்லியிருப்பார். அதை பார்க்கவேண்டும். ஆக பொய் சொல்லி அரசு பணத்தை ஆராய்ச்சி என்ற பெயரில் அபகரிப்பது என்பது இப்படிகூட இருக்கும் போல இருக்கிறது. மேலும் யார் இந்த முகம்மது அலி ஜின்னா என்பதும் தெரியவில்லை! இது எழுதி மூன்று மாதங்கள் ஆகின்றன. முகம்மது அலி ஜின்னா வந்தாரோ இல்லையோ, ஷேக் மைதீன் என்ற இன்னொரு முஸ்லீம் கிளம்பி 220 கோடிகளை ஏமாற்றிவிட்டாராம்!
திருக்குறளைவிற்றுவியாபாரம்: திருக்குறள் புத்தகம் விற்பனை வாயிலாக, மதுரை தனியார் நிறுவனம், 65.46 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அதன் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்து, முதலீட்டாளர்களுக்கு வழங்க, அரசுக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது[6]. மதுரை, சின்ன சொக்கிகுளம் அஜ்மல்கான் ரோட்டில், ‘பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன்’ நிறுவனம் செயல்பட்டது[7]. ’10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, 100 திருக்குறள் புத்தகங்கள் வாங்க வேண்டும்; 37வது மாதத்தில், 46 ஆயிரத்து 900 ரூபாய் முதிர்வு தொகை வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது[8]. இதை நம்பி, 45 ஆயிரத்து 501 பேர், 65.46 கோடி ரூபாய் முதலீடு செய்தனர்[9]. இதை முதலீட்டாளர்களுக்கு தராமல், நிறுவனத்தைச் சேர்ந்த ஷேக் முகைதீன், கவுஸ் சர்தார் ஹூசைன், ஷானு ஷேக், கவுஸ் யாகூப் ஹூசைன், பானு ஆகியோர் தங்கள் சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றி, அசையும், அசையா சொத்துக்கள் வாங்கினர். பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் 2010ல் மோசடி வழக்குப் பதிந்தனர். ஷேக் முகைதீன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அவர், 2005ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.மோசடி வழக்கை விசாரித்த மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்ற – டான்பிட் -நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவு: “முதலீட்டாளர்களைபாதுகாக்கும்வகையில், தமிழகஅரசுசட்டம்இயற்றியுள்ளது. வழக்குவிசாரணையைதாமதப்படுத்தமுயற்சிக்கும்நோக்கில், எதிர்மனுதாரர்கள்மனுக்கள்மேல்மனுதாக்கல்செய்துள்ளனர். முதலீட்டாளர்களின்பணத்தில்எதிர்மனுதாரர்கள்சொத்துக்கள்வாங்கியுள்ளதைஅரசுதரப்புநிரூபித்துள்ளது.சொத்துக்களைஜப்திசெய்ய, தமிழகஅரசுபிறப்பித்தஉத்தரவுஉறுதிசெய்யப்படுகிறது. நிறுவனத்தின்வாகனங்கள், அசையாசொத்துக்களைபொதுஏலத்தில்விற்று, பணத்தைமுதலீட்டாளர்களுக்குவழங்கசம்பந்தப்பட்டஅதிகாரிநடவடிக்கைஎடுக்கவேண்டும்,” இவ்வாறு, அவர் கூறினார்.
குரளை, திருக்குறளைப்பழித்தமுஸ்லீம்கள்: முன்பு, இதே முஸ்லீம்கள், “குரானா, குறளா?” என்ற விவாதம் வந்துபோது, குறள் சிறுநீர் கழித்த பிறகு துடைத்துப் போடக்கூட லாயக்கற்றது……………….என்றெல்லாம் பேசி, எழுதி, பதிப்பது திராவிட தமிழர்கள் மறந்து விட்டார்கள் போலும். மேலும் இதில் நோக்கத்தக்கது திருக்குறளையே “குறள்” என்று கூறுவதுதான். தமிழ் மீது, திருக்குறள் மீது தமிழர்களுக்கு, மதிப்பு, காதல், அன்பு, மரியாதை…………இருந்திருந்தால், இவ்வாறு, திருக்குறளைக் கேவலப்படுத்திய முஸ்லீம்களை எப்படி நம்புகிறார்கள்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? ஒருவேளை குரானை அச்சடித்து, புத்தகங்கள் போட்டு, விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியிருந்தாலும் நம்பியிருப்பார்களா?[10] இல்லை நம்பமாட்டார்கள், வியாபாரத்திற்கு குரான் எடுபடாது, திருக்குறள்தான் கவர்ச்சிகரமாக இருக்கும், செம்மொழி மாநாடு வேறு நடக்கிறது, வியாபாரத்தை கருணாநிதியே வந்து துவங்கி வைப்பார், அல்லது, செம்மொழி மாநாட்டில் விநியோகம் நடத்தப் படும் என்றெல்லாம் கூட பிரச்சாரம் நடந்திருக்குமோ என்று தெரியவில்லை[11].
அல்லாவை மகிழ்விக்கவே பலி கொடுத்தேன் – ரம்ஜான் போது, நான்கு வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து பலி கொடுத்த 26 வயது தந்தை!
செக்யூலரிஸஇந்தியாவில், மதபண்டிகைக்களுக்குவிடுமுறைகளும், அரசியலும்: முன்பெல்லாம், இந்தியர்களுக்கு, முகமதிய மற்றும் கிருத்துவப் பண்டிகைகளைப் பற்றியெல்லாம் அதிகமாக தெரியாது. ஏதோ விடுமுறைக் கொடுக்கிறார்கள், வீட்டில், விடுமுறையை அமைதியாக, சுகமாகக் கழிக்கலாம் என்று இருப்பர். பிறகு தான் அவர்களுக்கு, கொண்டாட்டம் மற்றும் துக்கம் அனுஷ்டிக்கும் நாட்கள் பற்றி தெரிய வந்தது. முன்பெல்லாம் சிலர், “குட் பிரைடே”விற்கு வாழ்த்து சொல்வார்கள், கிருத்துவர்களும் “தேங்க் யூ” என்பார்கள். ஆனால், பிறகு தான் தெரிந்தது, “குட் பிரைடே,” “நல்ல வெள்ளி” அல்ல, ஆனால், கெட்ட வெள்ளி, அதாவது, அன்று தான், ஏசு சிலுவையில் அறைப்பட்டு, இறந்த நாள்.. பிறகு, அது வேறுவிதமாகியது. இப்பொழுது 12% முகமதிய மற்றும் 2% கிருத்துவப் பண்டிகைகள், மற்ற 88% / 86% மக்கள் மீது திணிக்கப்பட்டுகின்றன. விளம்பரங்கள் வேறு, தொந்தரவு கொடுக்கும் முறையில் உள்ளன. ரம்ஜானுக்காக, காஷ்மீரத்தில் “சண்டை நிறுத்தம்” அறிவித்தாலும், ஜிஜாதிகள் சுட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதாவது, அவர்கள் ரம்ஜான் கொண்டாடவில்லை போலும். அதாவது, இது அரசியலாகத்தான் இருக்கிறது அதேபோலத்தான், ஒரு தந்தை, தனது நான்கு வயது குழந்தையை, அல்லாவுக்கு பலி கொடுத்தான் என்ற செய்தி வந்துள்ளது.
காணாமல் போன நான்ஹ்கு வயது குழந்தை கழுத்தறுப் பட்டு இறந்து கிடந்தது: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் நவாப் அலி. இவருக்கு மனைவி ஷபானா, மகள்கள் ரிஸ்வானா (4) உட்பட மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்[1]. வியாழக்கிழமை 07-06-2018 அன்று எல்லோரும் தூங்கினர். 08-06-2018, வெள்ளிக்கிழமை காலை எழுந்து பார்த்தபோது, ரிஸ்வானாவைக் காணவில்லை. இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) காலை வேளையில் குழந்தையை காணவில்லை என அலியின் மனைவி ஷபானா தேடியுள்ளார், இன்னொரு இணைதள செய்தி [புதியதலைமுறை] கூறுகிறது. அப்போது தனது மகள் வேறொரு அறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தேடிபார்த்த போது, வீட்டின் தரை தளத்தில் கழுத்தறுப்பட்ட நிலையில் சிறுமி கண்டெடுக்கப்பட்டாள்[2]. சிறுமியை பூனை கடித்து இருக்கலாம் என்று அலி குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார் என்று கூறியதாக குறிப்பிடுகிறது[3]. சந்தேகப் பட்டதால், போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பலி கொடுக்கப்பட்ட குழந்தையின் தந்தை நவாப் அலியை மீது சந்தேகம் எழ, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
நரபலி கொடுத்த முகமதியன், தன்னை சாத்தான் / பேய் பிடித்துக் கொண்டது என்றது: குரேஷி சாத்தான் / பேய் தன்னுடலில் புகுந்து கொண்டது என்றான்[4]. இந்தியா டுடே குறிப்பிடுவதாவது[5], “சாத்தான் தான் என்னுடல் புகுந்து அவ்வாறு செய்ய வைத்துள்ளது. இதனை நம்புவதனால், அவன் செய்யவில்லை, சாத்ட்தான் செய்தது என்று சொல்வது போலுள்ளது…….”. மேலும், இது பக்ரீதின் போது, ஆட்டை பலி கொடுப்பது போலுள்ளது, ஆனால், இவனோ தனது மகளையே பலி கொடுத்துள்ளான்.[6] “நான் ஒரு நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம். என்னுடைய வாழ்வில், நான் என் மகளை உயிரைவிட மேலாக பிரியம் கொண்டிருந்தேன். இஸ்லாத்தில், தனக்குப் பிரியமானதை அல்லாவுக்குக் கொடுக்க வேண்டும் என்றுள்ளது. அதன்படியே, நான் செய்தேன். பலநாட்கள் பாட்டியின் வீட்டில் இருந்து வியாழக்கிழமை தான் வந்தாள். அவளை சந்தைக்குக்கூட்டிச் சென்று, அவளுக்கு இனிப்புகள், பழங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். பிறகு, கீழே கூட்டிச் சென்று, கலிமா சொல்லி, அவளது கழுத்தை அறுத்துக் கொன்றேன். மாடிக்கு வந்து படுத்துத் தூங்கினேன்,” என்று போலீஸாரிடன் சொன்னான்[7]. வெள்ளிக்கிழமை, 08-06-2018 அன்று போஸ்ட்மார்டம் செய்யப்பட்டுபுதைக்கப் பட்டாள்:[8] இது “பிடிஐ” செய்தியானதால், ஆங்கிலத்தில் ஒர்ரே மாதிரியாக செய்த் வெளியிடப்பட்டது[9].
அல்லாவைத் திருப்தி படுத்தவே பலி கொடுத்ததை ஒப்புக் கொண்ட நம்பிக்கையான தந்தை: முதலில், சிறுமியை பூனை கடித்து இருக்கலாம் என்று அலி குடும்பத்தினரிடம் சொல்லியிருக்கிறார். பிறகு முன்னுக்கு முறணாக பேசியதால், மனோதத்துவ முறையிலும், விசாரணை செய்துள்ளனர். விசாரணை நடைபெறும் வரை ஏதும் தெரியாதவராக இருந்த குரேஷி, சற்று அழுத்தமாக கேட்டதும் வித்தியாசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார்[10]. தனக்கு பேய் பிடித்துள்ளதாகவும், கடவுளிடம் சொல்லி என்னை காப்பாற்றுங்கள் என்றும் கூறியுள்ளார்[11]. முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் குரேஷியிடம் விசாரணையை தீவிரப்படுத்தியதில், தன் மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். கடவுள்தான் எனக்கு பிடித்தமான ஒன்றை பலியிட வேண்டும், அப்போதுதான் நன்மை செய்வேன் என்று கூறினாராம்… அதனால், கடவுளை மகிழ்ச்சிப்படுத்தவே தன் மகளின் கழுத்தை அறுத்து கொன்று பலியிட்டதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து குரேஷியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கொலை செய்யப்பட்டதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.
ரிஸ்வானா பலி பிறகு தமிழ் ஊடகங்கள் இவ்வாறு குறிப்பிட்டன: ரம்ஜான் மாதத்தில் அல்லாஹுவின் ஆசி தனக்கு கூடுதலாக கிடைக்க வேண்டும் என பிரார்தனை செய்து தனது நான்கு வயது குழந்தையை கழுத்தறுத்து பலி கொடுத்துள்ளார் நவாப் அலி[12]. சம்பவ தினத்தன்று இரவு தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை ரிஸ்வானாவை அவரது தந்தை அலி தூக்கிக் கொண்டுசென்று வேறொரு அறையில் வைத்து பிரார்த்தனை செய்துள்ளார். இதையடுத்து, கூர்மையான கத்தி கொண்டு தனது குழந்தையை கழுத்தறுத்து பலி கொடுத்துள்ளார். குழந்தை உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் அலி தனது மனைவியுடன் சென்று உறங்கியுள்ளார். விசாரணையில், தனது குழந்தையை தானே கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அல்லாவின் ஆசி பெறுவதற்காக தன்னுடைய சொந்த மகளை கத்தியால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் ஜோத்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 2016ல் இதேபோல, ஒரு பெண் நான்கு வயது குழந்தையைக் கொன்று, “அல்லாஹ் தான் அந்த குழந்தையை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார் ,” என்று நீதிமன்றத்தில் சொன்னது ஞாபகத்தில் வருகிறது..
2016ல் இதேபோல, நான்கு வயது குழந்தை பலியிட்டது: நான்கு வயது குழந்தையை அல்லாஹ் கொலை செய்யுமாறு உத்தரவிட்டதாக மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலையுடன் நடமாடிய ஆயா தெரிவித்துள்ளார்[13]. உஸ்பெகிஸ்தானை சேர்ந்த கியுல்செஹ்ரா போபோகுலோவா (39) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு வீட்டில் 4 வயது பெண் குழந்தையை கவனித்துக் கொள்ளும் ஆயாவாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து தலையை கத்தியால் துண்டாக வெட்டி அதை எடுத்துக் கொண்டு மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றார். மெட்ரோ நிலையத்தில் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் நின்று கொண்டு நான் ஒரு தீவிரவாதி என்று அவர் கத்தினார். இது குறித்து அறிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குழந்தையை கொலை செய்தீர்களா என்று நீதிபதி கேட்டதற்கு கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டே ஆமாம் என்றார்[14]. முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் சிரித்துக் கொண்டே கூறுகையில், அல்லாஹ் தான் அந்த குழந்தையை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார் என்றார். போபோகுலோவா தனக்கு மனநல பாதிப்பு இருப்பதை மறைத்து அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
[8] NDTV, Rajasthan Man Allegedly Kills Daughter To “Appease Allah”, Goes Off To Sleep, All India | Press Trust of India | Updated: June 10, 2018 10:34 IST.
முத்தலாக்வழக்கைஅரசியல்சாசனஅமர்வுக்குமாற்றிதலைமைநீதிபதிஅடங்கியஅமர்வுஉத்தரவிட்டது: தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டுக்கும், இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியத்திற்கும் கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில் மார்ச் 30, 2017 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது[1]. அப்போது, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், வரும் மே மாதம் 11-ம் தேதி 2017 முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். முன்னதாக, இவ்வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி இஸ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் முத்தலாக் முறையை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு பதிலளித்துள்ளது[2]. இதுவிசயமாக பல வழக்குகள் பதிவாகியுள்ளதால், அவை அனைத்தும், மொத்தமாக விசாரிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.
ஷரீயத்பிரிவுபெண்களின்அடிப்படைஉரிமையைமீறுவதாகஉள்ளது: இஷ்ரத் ஜகான் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மூன்று முறை தலாக் என கூறி மனைவியை கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு, இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது[3]. முஸ்லிம் தனிநபர் சட்டம்-1937 (ஷரியத்), பிரிவு-2ல் இதற்கு அனுமதியுள்ளது[4]. இந்த அனுமதி பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14ன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள, உரிமை மீறப்படுகிறது. எனவே தலாக் நடைமுறையை நீக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் முத்தலாக் முறை சம உரிமைக்கு எதிராக அமைந்திருப்பதால் அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பலமுறைகளில்தலாக், தலாக், தலாக்சொல்லிவிவாகரத்துசெய்வது: முஸ்லிம் கணவர்கள் எப்படி இந்த முத்தலாக்கை செய்து வருகின்றனர் என்று ஏராளமான செய்திகள் வந்துள்ளன. முன்பு, தபால் அட்டைல் தபால், கூரியர் என்றெல்லாம் இருந்து, பிறகு போன், டெலக்ஸ் என்று மாறி, இப்பொழுது, இணைதள அளவில், மெஸேஜ், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால், அதிகம் பெண்கள் பதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், முத்தலாக் முறையானது சம உரிமைக்கு எதிராக இருப்பதாகவும், அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை எனவும் மத்திய அரசு சார்பாக எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இம்முறையால் இஸ்லாமியப் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது[6]. ஆனால், அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம், முத்தலாக் முறையானது இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும், இதில் அரசு தலையிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதி கான்பூரைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவர், தனது கணவர் விரைவு தபாலில் முத்தலாக் அனுப்பியுள்ளதாக மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடமும் அவர் இதுபற்றி புகார் அளித்து இருந்தார். அவர், சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாரும் தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முத்தாலிக், குரானில்இல்லை, மௌலானாக்களால்உருவாக்கப்பட்டது – சல்மாஅன்சாரி: நாடு முழுவதும் ‘தலாக்’ விவகாரத்து விவகாரம் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது. இஸ்லாமிய திருமண முறையில் இருந்து விவகாரத்து பெறுவதற்கு மூன்று முறை ‘தலாக்’ என்று கூறினால் மட்டும் போதுமானது. இந்த முறையை பின்பற்றுவதால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று தொடர்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக போனில் எஸ்.எம்.எஸ்ஸில் ‘தலாக்’ என்று விவகரத்து பெறுவதும் தபாலில் ‘தலாக்’ என்று அனுப்பி விவாகரத்து பெறுவதும் நடைபெற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்தன. இந்த நிகழ்வுகள் தலாக் முறை மீது கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது[7]. இந்த நிலையில் ‘தலாக்’ குறித்து கருத்து தெரிவித்த சல்மா அன்சாரி, ‘மூன்றுமுறை ‘தலாக்‘ என்றுசொல்வதாகமட்டும் ‘தலாக்‘ நடைமுறைஇருக்ககூடாது. மவுலானாவில்என்னகூறியிருந்தாலும்அதுஉண்மையா ?.குரானைஅதன்மூலமொழியானஅராபியில்படித்துதெரிந்துகொள்ளுங்கள். அதனுடையமொழிபெயர்பில்படிக்காதீர்கள். குரானில்இருந்துஅறிவைவளர்த்துகொள்ளுங்கள். அதுகுறித்துசிந்தனைசெய்யுங்கள். யாரையும்குருட்டுத்தனமாகநம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[8].
ஷரியத்மற்றும்முத்தலாக்கிற்கு 3.5 கோடிமுஸ்லிம்பெண்கள்ஆதரவு: ராஜஸ்தானின் ஈத்காஹ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்த வாரியத்தின் பெண்கள் பிரிவின் தலைவரான அஸ்மா ஜோஹ்ரா, முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து எண்ணிக்கை அதிகம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். நாட்டில் ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு ஆதரவாக முஸ்லிம் பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[9]. இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறினார். பெண்களின் உரிமைகள் என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் மீது அவதூறு ஏற்படுத்துவதற்கான சதி மற்றும் முஸ்லிம் சமூக கட்டமைப்பினை தகர்க்கும் முயற்சியிது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்[10]. ஷரியத் மற்றும் இஸ்லாமில் உள்ள தங்களது உரிமைகளை முஸ்லிம் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேரமிது. பெண்களுக்கு அதிகளவில் உரிமைகளை இவை வழங்கியுள்ளன என்பதனை மற்றவர்கள் கூட தெரிந்து கொள்ளட்டும் என அவர் கூறியுள்ளார். அந்த வாரியத்தின் உறுப்பினர் யாஸ்மின் பரூக்கி கூறும்பொழுது, முஸ்லிம் பெண்கள் என்றால் படிக்காதவர்கள் மற்றும் எளிதில் முட்டாளாக்கி விடலாம் என சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. முஸ்லிம் பெண்கள் வெளிப்படையாக ஷரியத்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளனர். குறைந்த அளவிலான பெண்களே அவற்றிற்கு எதிராக உள்ளனர். தற்பொழுது வாரியம், வரதட்சணை கொடுமை, குறைந்த செலவில் திருமணங்களை முடித்தல் மற்றும் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை போன்ற விவகாரங்களை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.
ஷாபானுவழக்கின்விளைவு, தனிசட்டம்உருவானது (1986): இஸ்லாம் மதத்தில் மூன்று முறை ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் வழக்கமுள்ளதால், முறையால் பெண்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சட்டரீதியில் சென்றால் கூட, பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 1986ல் ராஜிவ் காந்தி காலத்தில் “ஷாபானு வழக்கு” மூலம் பிரச்சியானது, பலரால் விவாதிக்கப் பட்டது. இருப்பினும், இஸ்லாமிய அடிப்படைவாத அழுத்தத்திற்கு, மிரட்டல்-உருட்டல்களுக்கு ராஜிவ் காந்தி பயந்து, உச்சநீதி மன்ற தீர்ப்பிலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்கும் விதமாக, தனி சட்டத்தை உருவாக்கினார். உண்மையில், சிவில் சட்டம் [Code of Criminal Procedure] 125வது பிரிவின் படி, விவாக ரத்து செய்யப்படும் பெண்ணிற்கு, கணவன் உரிய ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும் என்றுள்ளது. இதனால், ஷாபானு, தனக்கு அளிக்கப் படும் ஜீவனாம்சம் போதவில்லை என்று, மேற்குறிப்பிட்ட சரத்தின் படி வழக்கு தொடர்ந்தாள். ஆனால், கணவன் மொஹம்மது கான், இஸ்லாமிய சட்டமுறையில், தான் விவாகரத்து செய்திருப்பதால், அச்சட்டத்தின் படியே மஹர் / ஜீவனாம்சம் கொடுக்க தீர்மானித்ததால், அச்சட்டம் [S.125 CrPC] தனக்கு பொறுந்தாது என்று வாதாடி, உயர்நீதி மன்றத்தில் வெற்றிபெற்றான். ஆனால், உச்சநீத் மன்றத்தில், அதை தள்ளுபடி செய்து, ஷாபானுக்கு உரிய ஜீவனாம்சம் அளிக்கும்படி ஆணையிட்டது[1].
ஷாபானுவழக்கிற்குஎதிர்ப்பு, மத–அரசியலின்ஆரம்பம்: இதனால், முஸ்லிம்கள் தங்களது மதச்சட்டத்தில் அரசு அல்லது நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி ஆர்பாட்டம் செய்தனர்[2]. 125ற்கு விலக்கு அளித்தது. தனியாக, முஸ்லிம் பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் விவாக ரத்து சட்டம், 1986 [The Muslim Women (Protection of Rights on Divorce) Act, 1986] என்று உருவாக்கப்பட்டது. இங்கு ஷாபானு என்பது 70 வயதிற்கும் மேலான மூதாட்டி என்று குறிப்பிடத் தக்கது. அத்தகைய நிலையில், பெண்கள், என்ன பாடு படுகிறாள் என்பது உலகிற்கு தெரிய வந்தது. இருப்பினும், செக்யூலரிஸ மற்ற சித்தாந்திகள் அதனை பெண்கள் பிரச்சினை என்று எடுத்துக் கொள்ளாமல், மதப்பிரச்சினை, முஸ்லிம்களின் உள்விவகாரம் அதில் மற்றவர்கள் நுழையக் கூடாது என்ற ரீதியில் பிரச்சாரம் செய்யப் பட்டது. அந்நிலையிலும், பொது சிவில் சட்டம் தேவை என்ற கருத்தும் உருவாகி, விவாதத்திற்கு வந்தது. அப்பொழுது, பிஜேபி ஆட்சியில் இல்லை, மேலும், அது அக்கட்சியினையும் தொடர்பு படுத்தவில்லை. ஆனால், தேர்தல் வாக்குருதிகளில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்வோம் என்று குறிப்பிட்டது.
1995ல்சர்ளாமுதுகல் – பொதுசிவில்சட்டஞாபகவூட்டல்தீர்ப்பு: 1995ல் சர்ளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பில், “1949லிருந்து, 41 வருடங்களாகஇந்த 44 பிரிவுகுளிர்பெட்டியிலேயேவைத்திருக்கிறார்கள். அரசுகள்வந்தன, சென்றன, ஆனால், இருப்பினும், இந்தியமக்கள்அனைவரையும்இணைக்கும்முறையில்ஒருபொதுசிவில்சட்டம்கொண்டுஎந்தமுயற்சியும்எடுக்காமல்தோல்விஅடைந்துள்ளனர்”, என்று நீதிபதி பதிவு செய்தார்[3]. இது எப்படி ஆண்கள் இரண்டாவது திருமணத்தை முகமதிய மதம் மாறி சட்டப்படி செய்து கொள்கிறார்கள், அதனால், முதல் மனைவி, இந்துவாக இருப்பதனால் பாதிக்கப்படுகிறாள் என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[4]. செக்யூலரிஸம், பெண்ணுரிமைகள் சமநீதி, சமூகநீதி என்றெல்லாம் பேசும், பேசிய வி.பி.சிங், சந்திரசேகர், ஐ.கே.குஜரால், தேவ கௌடா முதலியோர் கண்டுகொள்ளவில்லை. ”என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் பிஜேபி எப்பொழும் “பொது சிவில் சட்டத்திற்கு” ஆதரவாக குரல் கொடுத்து வருவது தெரிந்த விசயமே. ஆனால், அது “கம்யூனலிஸம்” என்று முத்திரைக் குத்தப்பட்டு, ஒதுக்கப்படுவது, மனித உரிமைகள் பேசும் கூட்டங்களின் போக்காகவே இருந்து வருகின்றது. இந்துக்கள் அதிகமாக இருப்பதால், அவர்களுக்கு சாதகமாக இருக்கும் போன்ற வாதங்களும் வைக்கப்பட்டன. ஆனால், மதரீதியில், எந்த இந்து பெண்ணும் / ஆணும், இந்திய அரசியல் நிர்ணய சட்டம் அல்லது வேறெந்த சட்டமும் தனக்கு பொறுந்தாது, தனது மத நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது என்று யாரும் வழக்குத் தொடரவில்லை. இருக்கும், சிவில்-கிரிமினல் சட்டங்களை ஏற்றுக்கொண்டு மதித்து நடந்து வருகிறார்கள். ஆனால், சிறுபான்மையினர் என்று முஸ்லிம்கள் தான் எதிர்த்து வருகின்றனர். கிருத்துவர்கள் பொதுவாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
பொதுசிவில்சட்டம்எதிர்ப்பு, முத்தலாக்ஆதரிப்பு: பொது சிவில் சட்டம் இவ்வாறு, செக்யூலரிஸ்டுகள், முஸ்லிம்கள் மற்ற சித்தாந்திகள் எதிர்த்து தங்களது வாதங்களை வைத்டுள்ளனர்:
இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, பல மதங்கள் இருப்பதனால், அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் நடந்து கொள்ளலாம். அதற்கான உரிமைகள் அரசியல் நிர்ணய சட்டம் கொடுத்துள்ளது.
மதரீதியில் மக்களை செக்யூலரிஸப்படுத்தலாம், ஆனால், சட்டரீதியில் அவர்களை செக்யூலரிஸப்படுத்த முடியாது.
மக்களை ஒரே விதமாக மாற்ற முயலும் இந்தப் பொது சிவில் சட்டம், நாட்டின் பன்முகத்துவம் மற்றும் கலாச்சார தனித்துவங்களுக்கு அச்சுறுத்த உள்ளது.
பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அது அனைவரைக்கும் எதிரான ஒரு செயலாக மாறும்.
எல்லோரையும் ஒரே மாதிரியானவர்களாக காட்ட எடுக்கப்படும் முயற்சி தோல்வியையே தழுவும்.
இது நாட்டு நலனுக்கு நல்லதல்ல. மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் தோல்வி அடைந்து வருகிறது. அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இதுபோன்ற முயற்சிகளை செய்து வருகிறது.
அதனால், அரசு இந்த முயற்சியைக் கைவிட வேண்டும். மூன்று முறை தலாக் கூறும் நடைமுறையை நீக்க நாங்கள் விரும்பவில்லை.
பிற சமூகத்தினரிடையே அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. முஸ்லிம்களை விட இந்துக்களிடையே இருமடங்கு விவாகரத்துகள் அதிகமாக உள்ளன.
முஸ்லிம்கள், தாமாகவே முன் வந்து, அத்தகைய சட்டத்தை ஏற்றுகொள்ள முன்வரும் வரை வற்புருத்தக் கூடாது.
அதுவரை, அவர்களுக்கு ஷரீயத் சட்டம் தொடர்ந்து அமூல் படுத்த வேண்டும்.
செக்யூலரிஸ ஊடகங்கள், 1995லிருந்து, இத்தகைய பிரச்சாரத்தை செய்து வருகின்றன. ஆனால், இணைதள விவரங்கள், செய்திகள் முதலியவை பரவி வருவதால், பொது மக்களுக்கு பற்பல உண்மைகள் தெரிய வர ஆரம்பித்தன.
முஸ்லிம்கள்தாமாகவேமுத்தலாக்முறையற்றது, பெண்களின்உரிமைகளைப்பறிப்பதுஎன்றுவாதிடவந்தது, வழக்குத்தொடுத்தது: முத்தலாக் முறை பெண்களின் விருப்பத்துக்கு எதிராக இருப்பதாகவும், இஸ்லாமிய பெண்களின் உரிமையைப் பறிப்பதாகவும் பா.ஜ.க அரசின் சார்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், பிரதமர் மோடி உத்தரப்பிரதேச தேர்தல் சமயத்தில், பா.ஜ.க முத்தலாக் முறையை எதிர்ப்பதாகவும், முத்தலாக் முறையை ஒழிக்க முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்தார். இம்முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, ‘நோட்டீஸ்’ அனுப்பியது. முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை “தலாக்” என கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை அரசியல் சாசன விதிகளின்படி ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. மூன்று முறை தலாக் செய்யும் முறையை நியாயப்படுத்தும் விதமாக இந்தியாவின் உயர்மட்ட இஸ்லாமிய சட்ட வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2016 சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்தது. சுப்ரீம் கோர்ட்டு மத சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்றும் சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் தனிப்பட்ட சட்டங்களை மீண்டும் மாற்றி எழுதக்கூடாது என்றும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
[1] Supreme Court of India, Mohd. Ahmed Khan vs Shah Bano Begum And Ors on 23 April, 1985; Equivalent citations: 1985 AIR 945, 1985 SCR (3) 844; Author: Y Chandrachud; Bench: Chandrachud, Y.V. ((Cj), Desai, D.A., Reddy, O. Chinnappa (J), Venkataramiah, E.S. (J), Misra Rangnath; PETITIONER: MOHD. AHMED KHAN Vs. RESPONDENT:SHAH BANO BEGUM AND ORS.; DATE OF JUDGMENT23/04/1985.
[3] “I do not think that at the present moment the time is ripe in India for me to try to push it through”. It appears that even 41 years thereafter, the Rulers of the day are not in a mood to retrieve Article 44 from the cold storage where it is lying since 1949. The Governments – which have come and gone – have so far failed to make any effort towards “unified personal law for all Indians”.
[4]Supreme Court of India, Smt. Sarla Mudgal, President, … vs Union Of India & Ors on 10 May, 1995, Equivalent citations: 1995 AIR 1531, 1995 SCC (3) 635; Author: K Singh; Bench: Kuldip Singh (J); PETITIONER: SMT. SARLA MUDGAL, PRESIDENT, KALYANI & ORS. vs. RESPONDENT: UNION OF INDIA & ORS. DATE OF JUDGMENT10/05/1995
இஸ்லாத்தில் கல்யாணத்திற்குமுன்பானகாதல்ஹராம் – Love before Wedding என்பது LBW!
இஸ்லாத்தில்காதல்ஹராமாஅல்லதுவேறுகாரணிகள்தடுக்குமா?: ஊடகங்கள் அமுக்கி வாசிப்பதனால், இது வெறும் காதல் பிரச்சினையா, மதப்பிரச்சினையா என்னெவென்றே புரியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது:
இஸ்லாத்தில் காதல் கூடாதா, ஹரமா?
“லைலா-மஜ்னு” போல சமூக-பொருளாதார அந்தஸ்து பார்ப்பார்களா?
சுன்னி-ஷியா போன்ற இறையியல் சித்தாந்தங்கள் – பிரிவுகள் தலையிடுமா?
சையது போன்ற உயர் ஜாதி முஸ்லிம்களை, லெப்பை போன்ற கீழ் ஜாதி முஸ்லிம்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது போன்றவை உண்மையா?
போரா முஸ்லிம்கள் உள்-திருமண முறையைத் தான் [Endogamy] ஆதரிக்கின்றது, வெளியேயிருந்து பெண் எடுக்கும் முறையினை [exogamy] ஆதரிப்பதில்லை. அத்தகைய முறை சுன்னிகளிடம், ஷியாக்களிடம் உள்ளதா?
அல்லது இவைத் தவிர வேறு பிரச்சினைகள் உள்ளனவா?
அதாவது, இருவரில் ஒருவர் “இந்து” போன்ற பிரச்சினை உண்டா என்று தெரியவில்லை.
இக்கேள்விகளுக்கு விடை காணமுடியுமா, முடியாதா என்று தெரியவில்லை. சமீப காலத்தில், திருச்சி-ஶ்ரீரங்கம் பகுதிகளில் நடந்து வரும் இத்தகைய காதல், காதல்-திருமணங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன. உதாரணத்திற்கு சென்ற மாத விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்.
காதல்திருமணம்செய்தபெண்கணவர்வீடுமுன்புதர்ணாகோர்ட்உத்தரவுப்படிசேர்த்துவைக்ககோரிக்கை[1]: திருச்சி காஜாமலை டிவிஎஸ் நகரைச் சேர்ந்தவர் / ஸ்டேடபாங்க் காலனியை பர்ஜானா பேகம் (31). இவர் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம் சாந்திநகரைச் சேர்ந்த வள்ளிநாயகம் மகன் சத்தியகுமார் (31) என்பவரது வீட்டின் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பர்ஜானாபேகம் கூறுகையில், ‘‘நானும்சத்தியகுமாரும்கடந்த 2009ம்ஆண்டுதிருச்சியில்காதல்திருமணம்செய்துகொண்டோம். முஸ்லிம்மதத்திற்குமாறிஅவர்என்னைதிருமணம்செய்தார். எனதுகுடும்பத்தார்முன்னிலையில்எங்களது 2009 நவ., 21 ல்திருமணம்நடந்தது. திருமணத்திற்குசத்தியகுமாரின்குடும்பத்தினர்வரவில்லை. தொடர்ந்துநாங்கள்தூத்துக்குடிஅருகில்உள்ளவாகைக்குளத்தில்தனியாகவாடகைவீட்டில்வசித்துவந்தோம். இந்நிலையில்எனதுகணவர், தான்வெளிநாடுசெல்லவிரும்புவதாகவும், இதனால்நீஇங்குதனியாகஇருக்கவேண்டாம்என்றும்கூறினார். வெளிநாட்டிலிருந்துஅவர்வரும்வரைசென்னையில்சட்டக்கல்லுரியில்படிக்குமாறுகூறி 27.8.2011ல்என்னைதிருச்சிக்குஅனுப்பினார். இந்தசமயத்தில்எனதுகணவர்வீட்டார்அவரின்மனதைமாற்றிவேறுஒருபெண்ணைமறுமணம்செய்துவைத்துள்ளனர். மேலகூட்டுடன்காடுபகுதியைசேர்ந்தபிரேமாஎன்பவரைசத்தியக்குமார் 2011 செப்., 1 ல்இரண்டாம்திருமணம்செய்துகொண்டார்[2]. இதுகுறித்துதகவல்தெரிந்துநான்வந்தபோதுஎன்னைசமாதானம்செய்துஎன்னுடன்இருப்பதாககூறிஎன்னைமீண்டும்ஏமாற்றிவிட்டார். பிரேமாதூத்துக்குடியில்குடியிருந்துவருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில்ஒருமகன்உள்ளார்[3]. இதனால்நான்புதுக்கோட்டைபோலீசாரிடம்புகார்கொடுத்துஅதன்படிவழக்குநடந்துவருகிறது. மேலும்கணவருடன்சேர்ந்துவாழஉரிமைகோரிதிருச்சிகூடுதல்மகிளாநீதிமன்றத்தில்நான் 2015ல் வழக்குதொடர்ந்தேன். இதைவிசாரித்தநீதிமன்றம், பாதுகாப்பைகருத்தில்கொண்டுவீரபாண்டியன்பட்டணத்தில்உள்ளஎனதுகணவரின்வீட்டில்நான்வசிக்கஅனுமதிஅளித்து2016 ஜூன் 28 ல்உத்தரவிட்டது. அதன்படிதான்இங்குவந்தபோதுஎனதுகணவர்வீட்டார்என்னைஅனுமதிக்கமறுத்துகதவைபூட்டிவிட்டனர். எனவேஎன்னைவீட்டில்சேர்க்கும்வரைஇந்தஇடத்தைவிட்டுநகரபோவில்லை’’ என்றார்[4].
தீர்ப்பில் தெளிவில்லையா, ஊடகங்கள் செய்தியை ஒழுங்காக வெளியிடவில்லையா?: இங்கு சத்தியகுமார் 2009ல் முஸ்லிம் மதம் மாறி பர்ஜானா பேகத்தைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரேமா என்பவரை சத்தியக்குமார் 2011 செப்., 1 ல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்[5] என்றால், முஸ்லிமாக இருந்து இந்துவை திருமணம் செய்து கொண்டது பிரச்சினையாகிறது. சரளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி செல்லுபடியாகாது. ஒன்று பிரேமா மதம் மாறியிருக்க வேண்டும், இல்லை, சத்திரயகுமார் தான் இந்து என்றே திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும். 2011லிருந்து இன்று வரை பிரேமாவுடன் வாழ்ந்து வருகிறார், அதாவது, பர்ஜானா பேகத்துடன் வாழவில்லை. 2016 ஜூன் 28 ல் தான், பர்ஜானா பேகத்துடன் சேர்ந்து வாழ உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஒரு முஸ்லிமாக சத்திரயகுமார், இரண்டு பெண்டாட்டிகளுடன் வாழ்வது சட்டப்படி செல்லும் என்று தீர்ப்பளித்தது போலும். அதனால் தான், சரளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பில் இந்தியர்களுக்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்று பரிந்துரைத்தது[6]. ஆனால், அவ்விசயம் தேவையில்லாமல் அரசியலாக்கப்பட்டுவிட்டது. இதனால், காலதாமதம் ஏற்பட்டு வருகிறது[7].
இஸ்லாத்தில் கல்யாணத்திற்குமுன்பானகாதல்ஹராம்: இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், காதல் பற்றி மாறுபட்ட கருத்துகள் தான் உள்ளன. குரானை வைத்து விளக்கப்படும் போது, காதல் ஹராமா – ஹலாலா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. காதலைப் பற்றி அல்லாவுக்குத் தான் எல்லாம் தெரியும், அதனால், ஒரு ஆணோ, பெண்ணோ அதை தீர்மானிக்க முடியாது, அல்லாவுக்குத் தான் தெரியும் என்றெல்லாம் கூட பதில் சொல்கிறார்கள். ஹராம் காதல் மற்றும் ஹலால் காதல் என்றும் பிரிக்கிறார்கள். ஜாகிர் நாயக் போன்றோர், கல்யாணத்திற்கு முன்பான காதல் ஹராம் என்று வெளிப்படையாக சொல்கிறார்கள்[8]. கல்யாணத்திற்கு முன்பான காதல் [Love before Wedding] என்பது LBW என்றே கிண்டல் அடிக்கிறார். பொதுவாக, யாரும் இதற்கு நேரிடையான பதிலைக் கொடுப்பதில்லை. ஆனால், முஸ்லிம் பையன்கள் மற்றும் பெண்கள் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபகாலங்களில் காதலர் தினத்தை கடுமையாக, ஆசார இஸ்லாமியர் எதிர்த்து வருகின்றனர். அந்நிலையில் காதலை விபச்சாரம் என்றும் விமர்சிக்கின்றனர். அல்லாவைத் தவிர யாரையும் காதலிக்க முடியாது என்ற தீவிர வாதமும் வைக்கப் படுகிறது.
[2] தினமலர், தன்னுடன்சேர்ந்துவாழவலியுறுத்திகணவர்வீட்டுமுன் 2 வதுநாளாகதிருச்சிபெண்வக்கீல்தர்ணாபோராட்டம் * கட்சிகள்ஆதரவு, பதிவு செய்த நாள். ஜூலை.2, 2016. 03.58.
[5] தினமலர், தன்னுடன்சேர்ந்துவாழவலியுறுத்திகணவர்வீட்டுமுன் 2 வதுநாளாகதிருச்சிபெண்வக்கீல்தர்ணாபோராட்டம் * கட்சிகள்ஆதரவு, பதிவு செய்த நாள். ஜூலை.2, 2016. 03.58.
[6] Supreme Court of India – Smt. Sarla Mudgal, President, … vs Union Of India & Ors on 10 May, 1995, Equivalent citations: 1995 AIR 1531, 1995 SCC (3) 635, Author: K Singh – Bench: Kuldip Singh (J).
ஜாகிர்நாயக்பிரிட்டனுக்குள்நுழைவதற்குஅந்நாட்டுஅரசுதடை(ஜூன் 19, 2010): இந்திய பிரபல மதபிரச்சாரகர் ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளதாக பி.பி.சி. இணைய சேவை செய்தி வெளியிட்டுள்ளது. எமது நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஸாகிர் நாயக். அதன் காரணமாகவே இவருக்கான விசா நிராகரித்துள்ளதாக பிரிட்டிஷ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஸாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார். இதேவேளை, ஸாகிர் நாயக் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவரது உரையை கேட்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் கூடியமை குறிப்பிடத்தக்கது. ஸாகிர் நாயக் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவர் என அங்கீகரிக்கப்பட்டவர். எனினும், ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிடுபவர் என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொருமுஸ்லீமும்தீவிரவாதியாகவேண்டும்என்றுபேசிவரும்ஜாகிர்நாயக்: இப்படியும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஒஸோமா பின் லேடனைப் புகழும், தீரவாதக் கொள்கையையுடைய ஜாகிர் நாயக்கை தடைசெய்யப்பட்டார், என்றும் கூறுகிறது. அந்நாட்டு உள்துறை செயலர், “டிவி மதப்பிரச்சாரகர் தூண்டிவிடும் வகையில் பேசுவதாலும் அவருடைய ஏற்றுக்கொள்ளமுடியாத நடத்தையினாலும் தடைசெய்யப்படுவதாகக் குறிப்பிடுகிறார்”. இப்பொழுதும் அந்த கருத்தை மறுக்கவில்லை. ஆனால், திடீரென்று முஸ்லிம்கள் எப்படி நாரக்கிற்கு ஆதரவு தெர்விக்கிறார்கள் என்று பார்த்தால், அது முஸ்லிம் ஆதரவு, ஷியா எதிர்ப்பு, முதலியவற்றை விட, மோடி-எதிர்ப்பு என்ற வகையில் வந்து முடிந்துள்ளது. ஜாகிர் நாயக்கை முடக்கத்தான் பாஜக அரசு முயல்கிறது என்பது போன்ற சித்தரிப்பு மற்றும் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது. இது கிட்டத்தட்ட “சகிப்புத் தன்மை” பிரச்சாரம் போல ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திக்விஜய சிங், எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு விட்டதால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஏகப்பட்ட அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்.
வெள்ளிக்கிழமை 15-07-2016 பாட்னாவில்நடந்தஆர்பாட்டம்: ஜாகிர் நாயக் மற்றும் அசாஸுத்தீன் ஒவைசி இவர்களை ஆதரித்து, பாட்னா விஞ்ஞான கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் போட்டுக் கொண்டு ஆர்பாட்டம் செய்தவர்களை போலீஸார் கைது செய்தனர்[1]. அது மட்டுமல்லாது, அதன் பின்னணியுள்ளவர்களைப் பற்றி விசாரிக்கவும் உத்தரவு இடப்பட்டுள்ளது[2]. அமெரிக்காவே, காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்று சொல்ல பாகிஸ்தான் அமுக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது. அவ்வாறிருக்கும் போது, இந்தியாவில், பீஹாரில் இருக்கும் முஸ்லிம்கள் இவ்வாறு பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எப்படி போட முடியும்? அத்தகைய மனோபாங்குதான் என்ன? ஆக, காஷ்மீர பிரச்சினையையும், இந்த ஜாகிர் நாயக்-ஒவைசி பிரச்சினையுடன் முடிச்சுப் போட பார்க்கிறார்கள் போலிருக்கிறது.
தமிழக முஸ்லிம்கள் தீவிரவாதத்தை முதலில் எதிர்க்க வேண்டும்: தமிழக முஸ்லிம்கள் முதலில் இஸ்லாம் தீவிரவாததத்திற்கு உபயோகப்படுத்துவதை எதிர்க்க வேண்டும். ஐசிஸ்-ஐசில் முதலிய இயக்கங்கள் உலகளவில் அப்பாவி மக்களைக் கொன்று வருவதை யாரும் மறுக்க முடியாது. இன்று வரை இந்தியாவில் காஷ்மீ, உத்திரபிரதேசம், கேரளா, ஹைதரபாத் முதலிய இடங்களில் காகிர் நாயக்கை வைத்து நடைபெற்று வரும் விவகாரக்களைக் கவனிக்க வேண்டும். இந்தி முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களுடம் சேர்வதை அவர்கள் தடுக்கவில்லை. கேரள முஸ்லிம் பெற்றோர்களே கலங்கியுள்ள நிலையில், அதைத் தடுக்க என்ன செய்வது என்று விடை கொடுப்பதில்லை. சவுதி அரேபிய இஸ்லாம், இந்திய இஸ்லாத்திடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இஸ்லாமிய தீவிரவாத்த்தைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ல முடியும். சவுதி வகாபிசத்துவ தீவிரவாதத்தை ஆதரித்ததால் தான், ஜாகிர்நாயக்கின்வகாபிசசேவையைப்பாராட்டிஇஸ்லாத்திற்குசேவைசெய்தவராகஅறிவித்து 2015 ஆம்ஆண்டுக்கானமன்னர்பைசல்சர்வதேசவிருதாகசவுதிவகாபிசஅரசு 24 காரட் 200 கிராம்தங்கப்பதக்கத்தோடு இந்திய பண மதிப்பாக ரூபாய் 1,35,00,000/- (2 லட்சம் யுஎஸ் டாலர்கள்) அன்பளிப்புத் தொகையாகவும் வழங்கியது. மார்க்கண்டேய கட்ஜு ஸாகிர்நாயக் பிரச்சாரம் குறித்தும் சமயத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான முரண்குறித்தும், வகாபிசம் சூபிகள் பேசிய இஸ்லாமிய அறவியல் கருத்துக்களிலிருந்து மாறுபட்டிருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.
முஸ்லிம்கள் ஏன் இந்திய குடிமகன்கள் என்பதை மறக்கும் விதமாக நடந்து கொள்கிறார்கள்?: இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள், எதிர்ப்புகள் முதலியவற்றில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதை கவனிக்க வேண்டும். அவர்களை ஏன் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் தடுக்காமல் இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். வெறும் வார்த்தைகள் ஒன்றும் செய்து விடமுடியாது. ஆயிரம் அப்பாவி மக்களைக் கொன்று விட்டு, அதனை நான் கண்டிக்கிறேன் என்றால் என்ன பிரயோஜனம்? ஒசாமா பின் லேடனை ஆதரிக்கிறேன் என்ற ஜாகிர் நாயக்கை ஆதரித்து ஆர்பாட்டம் நடத்துவதால் பொது மக்கள் என்ன நினைப்பார்கள்? என்ன இது, தீவிரவாதிகளை எதிர்த்து தானே கூட்டம் போடுகிறார்கள் என்று நினைப்பார்கள். முஸ்லிம்கள் இந்திய குடிமகன்கள் என்பதை மறந்து, அடிக்கடி எல்லைகளைக் கடந்த ஆதரவுகளை தெரிவித்த்துக் கொள்வது, தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் முதலியோருக்கு சாதகமாக பேசுவது, அறிக்கைக்கள் விடுவது, ஆர்பாட்டங்கள் செய்வது முதலியனன, அவர்களை மேலும் இந்திய சமூகத்திலிருந்து பிரிக்கத்தான் செய்யும்.
இசுலாமியத்தீவிரவாதம் என்றால் என்ன?: இசுலாமியத் தீவிரவாதம் (Islamic Terrorism) என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இஸ்லாமியர்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இத்தீவிரவாதச் செயல்களுக்கான கருத்தியல் ஆதாரமாக குரானின் வசனங்களைக் கொள்ளுவதால் இவை இஸ்லாமியத் தீவிரவாதம் என அழைக்கப்படுகிறது. இஸ்லாமியக் குழுக்கள் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையையும் கொலைகளையும் குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ் மூலம் நியாயப்படுத்துகின்றனர். சமீப காலங்களில் உலகெங்கும் தீவிரப் போக்குடைய இஸ்லாமியக் குழுக்கள் பிற இஸ்லாமியப் பிரிவைச் சார்ந்தவர்களையும் இறை நம்பிக்கையற்றவர்களையும் மற்றும் பிற மதத்தவர்களையும் கலீபா ஆட்சிமுறையின் படி தலையை வெட்டிக் கொல்லப் பரிந்துரைப்பது மற்றும் அடிமைப்படுத்துவது ஆகியவற்றைச் செய்கின்றனர். இவ்வாறான செயல்கள் மிதவாத இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதப் போக்குடைய இஸ்லாமியர்களுக்கும் கருத்தியல் வேறுபாடுகளை உருவாக்குகின்றன. இத்தீவிரவாதச் செயல்களானது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சோமாலியா, சூடான், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, சீனா, காக்கேசியா, வட-அமெரிக்கா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் நடைபெறுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள் குண்டுவெடிப்புகள், கடத்தல், தற்கொலைப் படையினர் போன்றவற்றிற்காக பல்வேறு தந்திரோபாயங்கள் மூலம் இணையம் வழி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதாகவும் அறியப்படுகிறது. இப்படி விகிபீடியா கூறுவதை[3] முஸ்லிம்கள் மறுக்கவில்லையே?
[1] India Today, Pro-Pakistan slogans raised in Patna, one arrested after police orders probe, Rohit Kumar Singh, Posted by Bijaya Kumar Das, Patna, July 16, 2016 | UPDATED 15:11 IST
2016ல் ஜாகிர் நாயக்கை ஆதரித்து சென்னையில் தமிழக முஸ்லிம்கள் ஆர்பாட்டம் நடத்துவது ஏன் – 2009ல் எதிர்த்தது ஏன்?
23 இஸ்லாமியஅமைப்புகள்மற்றும்அரசியல்கட்சிகள்கூட்டமைப்பினர்ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்: கூட்டத்தில் கீழ்கண்டவர் கலந்து கொண்டு பேசினர். 23 இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[1].
மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா,
எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி,
மக்கள் சிவில் உரிமை கழக தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.முகம்மது இஸ்மாயில்,
ஐ.என்.டி.ஜெ. தலைவர் எஸ்.எம்.பாக்கர்,
மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அ.ச.உமர் பாரூக்,
இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அகமது,
ஜம்மியத் உலமாயே ஹிந்து தலைவர் மன்சூர் காஸிபி,
வெல்பேர் பார்ட்டி தலைவர் எஸ்.என்.சிக்கந்தர்,
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஷப்பீர் அகமது,
முஸ்லிம் லீக் தலைவர் பாத்திமா முஸப்பர்,
இஸ்லாமிய விழிப்புணர்வு கழக தலைவர் முகம்மது கான் பாக்கவி
இப்படி, முஸ்லிம் அல்லாத இயக்கங்கள், பொட்டு வைத்த பெண்கள் முதலியோர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளது வியப்பாக உள்ளது. உண்மையிலேயே அவர்கள் விசயம் அறிந்து கலந்து கொண்டுள்ளனரா அல்லது தமிழகத்திற்கே உரிய “கூட்டம் சேர்க்கும்” முறையில் கலந்து கொண்டார்களா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும்.
அரசியல்நிர்ணயசட்டம்பிரிவு 25ன்கீழுள்ளஉரிமைகள்: தாங்கள் ஜாகிர் நாயக்கைப் பற்றி புலன் விசாரணை மேற்கொள்வதில் தலையிடுவதில்லை என்றாலும், தீவிரவாதத்திற்கும், அவருக்கும் தொடர்பிருப்பது போன்று சித்தரிப்பதை எதிர்ப்பதாக கூறினர்[2]. அரசியல் நிர்ணய சட்டம் பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றும், அதனை அரசு தடுக்கக் கூடாது என்றும் ஆர்பாட்டம் செய்தனர்[3]. மத்திய மற்றும் மஹாராஷ்ட்ரா அரசுகளை எதிர்த்து பலவித கோஷங்களை எழுப்பினர்[4]. பிரிவு 25ன் கீழ், எல்லோருக்கும், தமது மதத்தைப் பின்பற்றவும், போற்றவும், பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்றாலும், அவை மற்றவர்களின் உரிமைகளை மீறக்கூடாது, பொது அமைதியை பாதிக்கக்கூடாது என்றெல்லாம் கூட உள்ளன. அவற்றை மறந்து, மறைத்து, மறுத்து ஆர்பாட்டம் செய்வது வேடிக்கைதான்.
தமிழ்நாடுதவ்ஹீத்ஜாமாஅத்ஆர்பாட்டத்தைஅறிவித்து, பிறகுநிறுத்துக்கொண்டது: முன்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாஅத் பட்டுக்கோட்டையில், “ஜாகிர் நாயக் அவர்களின் இஸ்லாமிய பிரச்சாரத்தை முடக்க சதி செய்யும் மத்திய பாஜக அரசை கண்டித்து”ம் மற்றும் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக போராட்டம் என்று அறிவித்தது[5]. பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஜாகிர் நாயக்-கிற்கு ஆதரவாக நடைபெற இருந்த அனைத்து மாவட்ட ஆர்ப்பாட்டங்களும் ரத்து என்று அறிவித்தது. ஜாகிர் நாயக்கை கைது செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என மும்பை காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்த அனைத்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் ரத்து செய்யப்பபடுகிறது என்றது[6]. அதாவது ஒதுங்கவில்லை, ஜாகிர் நாயக்கே அடுத்த ஆண்டுதான் இந்தியாவுக்கு வரப்போகிறார் எனும்போது, இப்பொழுது என்ன ஆர்பாட்டம் வேண்டியிருக்கிறது, “வேஸ்ட்” தான் என்று தீர்மானித்திருக்கும். ஆனால், மற்ற கூட்டத்தினர் அவ்வாறில்லை, அவர்களுக்கு “மோடியை” எதிர்க்க வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது. கேரளா, காஷ்மீர், பங்களாதேசம், பாரீஸ், துருக்கி…..என்று எங்கு என்ன நடந்தாலும் அவர்களுக்குக் கவலை இல்லை, எப்படியாவது “மோடியை” தாக்க வேண்டும்.
2009ல்ஜாகிர்நாயக்கைஎதிர்த்தவர்கள்இப்பொழுது – 2016ல்ஆதரிப்பதேன்? (ப்ழையகட்டுரையிலிருந்து): பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஜாகிர் நாயக் என்பவர், வன்முறையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்து வருவதாகக் கூறி ஐஸ் அவுஸ் காவல் நிலையம் எதிரே சுன்னத் ஜமாத் பேரவையினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதே நேரத்தில் சிலர் ஆதரித்து, நாயக்கின் கூட்டங்களை எடெற்பாடு செய்தனர். இணைதளத்தில் தேடியபோது, கீழ்கண்ட விவரம் கண்ணில் பட்டது[7]:
இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று, இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள், இன்ஷா அல்லாஹ், வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.
சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில், மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது. (ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.
எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.
IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM
சகோதரர்களே,
உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!
தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!
அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்!
ஜாகிர்நாயக்கின் பெயர் சொல்லி முஸ்லிம்கள் ஒருபக்கம் அதிரடி பிரசாரம் செய்கின்றனர்! மறுபுறம் “சுன்னத் ஜாமாத்” என்று இவ்வாறு எதிர்க்கின்றனர்!
ஒன்றும் புரியவில்லையே?
ஜாகிர் நாயக்கின் விசயத்தில் இந்திய-தமிழக மூஸ்லிம்களின் ஆதரிப்பது-எதிர்ப்பது என்ற முரண்பாடு ஏன்?
தமிழகத்தில்ஜாகிர்நாயக்எதிர்ப்பு–ஆதரவு: ஜாகிர் நாயக்கை பொதுவாக இந்திய முஸ்லிம்கள் எதிர்த்தனர். ஒசமா பின் லேடனை ஆதரித்தது, எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும் என்றது போன்ற விவகாரங்களூக்காக நாயக் தனிமைப் படுத்தப் பட்டாலும், உள்ளூர எல்லா முஸ்லிம்களும் ஆதரித்துதான் வந்தனர். இந்தியாவில் நடத்தப் பட்ட கூட்டங்களுக்கு, இஸ்லாமிய அமைப்புகள், வியாபார நிறுவனங்கள் ஆதரவு கொடுத்தன. சென்னையில், கிருஷ்ணா கார்டன்ஸ் (திருமங்கலம்), காமராஜர் அரங்கம், இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகம் (ஈஞ்சம்பாக்கம்) என்று கூட்டங்கள் நடத்தப்பட்டன. முஸ்லிம்கள், குறிப்பாக படித்த இந்துக்களுக்கு குறி வைத்து, அவர்களை வேண்டி, நட்புரீதியில் “வற்புறுத்தி” கலந்து கொள்ள செய்தனர். அந்த கூட்டங்கள் முஸ்லிம்களுக்குட்தான் பிரமிப்பாக இருந்தது. தமிழக முஸ்லிம் இயக்கத்தினரின் தலைவர்களுக்கு புளியைக் கரைத்தது. பொறாமையாகக் கூட இருந்தது, நல்ல வேளை, தமிழில் பேசவில்லை என்று ஆஸ்வாசப்படுத்திக் கொண்டனர். இருப்பினும், தமிழில் அவரது ஆதரவாளர்கள் நாயக்கின் புத்தகங்கள் வெளியிட்டனர்.
பீஸ்டிவிவங்கதேசத்தில்தடைசெய்யப்பட்டது (09-07-2016): நாயக்கின் பிரசுரங்கள் தீவிரவாதிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், கடந்த ஜூலை 1-ம் தேதி டாக்கா உணவக தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், நாயக்கின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டதை அடுத்து, வங்கதேசத்தில் நாயக்கின் பிரச்சாரங்கள் தடை செய்யப் பட்டன. வங்காளதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ’பீஸ் டிவி’ க்கு தடை விதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது[1]. சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய அறிஞர்களில் நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது[2]. நாயக்கின், ‘பீஸ் டிவி’யை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலமாக ஒளிபரப்பவும் வங்கதேச அரசு தடை விதித்துள்ளது[3]. இதைத்தொடர்ந்து, ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை!
பீஸ்டிவியைஅடுத்து, பீஸ்மொபைல்போன்களுக்குக்கும்தடை (14-07-2016): முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்கின், ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு வங்கதேச அரசு தடை விதித்திருக்கிறது. ‘ஜாகிர் நாயக்கின் எந்தவிதமான பிரசுரங்களையும் வெளியிடக் கூடாது என அரசு தெளிவான உத்தரவை பிறப்பித்திருப்பதால், அவரின் பிரசுரங்கள் அடங்கிய ‘பீஸ் மொபைல் போன்’களை இனி அனுமதிக்க முடியாது’ என, வங்கதேச தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷாஜஹான் மஹமூத் தெரிவித்துள்ளார். ‘முதல் இஸ்லாமிய ஸ்மார்ட்போன்’ என்ற விளம்பரத்துடன் சந்தைக்கு வந்த இந்த கைபேசியில், ‘குரான்’ ஓதுவதற்கான வசதிகள், தொழுகை நேர நினைவூட்டல், இஸ்லாமிய வால்பேப்பர்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஜாகிர் நாயக்கின் ‘பீஸ் டிவி’ பிரசங்கங்களை, ஆங்கிலம், இந்தி, உருது போன்ற மொழிகளில் கேட்கவும், பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்த கைபேசிகளை, ‘பெக்சிக்கோ’ குழுமம் இறக்குமதி செய்து விற்பனை செய்தது[4]. ஆனால், தமிழகத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை! ஆனால், ஜாகிர் நாயக்கைப் பற்றி விசாரணை ஆரம்பிக்கப்பட்டதும், தமிழகத்தில் ஆர்பாட்டம் ஆரம்பித்து விட்டது. இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் மீது மகாராஷ்டிர அரசும், மத்திய பாஜக அரசும் கடுமையான அவதூறு பரப்பி வருவதாகவும்[5], இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகளை ஒன்றிணைத்து நாளை (ஜூலை 16) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் அப்துல் ரஹ்மான் மிஸ்பாகி தெரிவித்துள்ளார்[6].
உலகத்தில், இந்தியாவின்மற்றபகுதிகளில்இஸ்லாமியபயங்கரவாத, ஜிஹாத்தீவிரவாதசெயல்கள்என்னநடந்தாலும்போராட்டம்–ஆர்பாட்டம்இல்லை: 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மொஹம்மது லுஹ்வாஸ் ஃபூலெல் (31) என்ற முஸ்லிம் பாரிசில் லாரியை வெறித்தனமாக மக்கள் கூட்டத்தினுள் ஓட்டிச் சென்று ஒரு முஸ்லிம் குழந்தைக்களையும் சேர்த்து 84 பேரைக் கொன்றுள்ளான். குழந்தைகள் கொல்லப்பட்ட காட்சிகள் பரிதாபமாக இருந்தது. ஐரோப்பாவின் ஒரே இஸ்லாமிய நாடான, துருக்கியில் நடந்துள்ள ராணுவப் புரட்சியில் 100க்கும் மேலானவர்கள் பலியாகியுள்ளனர். இரண்டு தீவிரவாத தாக்குதல்களிலும் காயமடைந்தோர் பலர் மருத்துமனைக்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், தமிழக முஸ்லிம்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள். கேரளாவில் இளம் வயது முச்லிம் ஆண்கள்-பெண்கள் ஐஎஸ்சில் சேர்ந்து விட்டனர் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உம், அவர்கள் அசையவில்லை.
ஜாகிர்நாயக்கைஆதரித்துநடத்தியபோராட்டம் (16-07-2016): இவற்றையெல்லாம் கண்டிக்காமல், சென்னையில், “ஜாகிர் நாயக்கை தீவிரவாதி போன்று சித்திரப்பதை” கண்டித்து 500 பேர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்[7]. இப்பொழுதுள்ள நிலையில், தமிழக அரசு எப்படி அனுமதி கொடுத்தது என்பது கூட ஆச்சரியமாகத்தான் உள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் [Indian Union Muslim League (IUML)], தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் [the Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK)] மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி [the Social Democratic Party of India] முதலியன இந்த எதிர்ப்பு-போராட்டத்தில் பக்குக் கொண்டுள்ளன. முஸ்லிம் மதபோதகர் ஜாகீர் நாயக் மீது வீண் பழி சுமத்தி, அவரது பணிகளை முடக்க நினைப்பதாக கூறி மராட்டியம் மற்றும் மத்திய அரசை கண்டித்து, சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது[8].
ஜாகீர்நாயக்வன்முறையையோ, பயங்கரவாதத்தையோஆதரித்ததுஇல்லை: தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முகம்மது ஹனீபா தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது[9]: “உலகம் முழுவதும் முஸ்லிம் மதம் குறித்து பரப்புரை செய்து வருபவர் ஜாகீர் நாயக். இவர் வன்முறையையோ, பயங்கரவாதத்தையோ ஆதரித்தது இல்லை. அவருடைய பேச்சாலும், எழுத்தாலும் பயங்கரவாதத்தையும், பயங்கரவாதப் பழியை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு சுமத்தும் பாசிச சக்திகளையும் எதிர்த்து வருகிறார். எனவே அவர் மீது மத்திய அரசும், மராட்டிய அரசும் காழ்ப்புணர்வு கொண்டு அவரை ஒடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கண்டனத்துக்குரியது. மத்திய அரசு தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டங்கள் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது”, இவ்வாறு அவர் பேசினார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஜாகீர் நாயக்குக்கு எதிராக பேசியதாக கூறி, உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. எம்.பி. சாத்வி பிராட்சியின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது[10]. ஆனால், போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்று குறிப்பிடவில்லை.
[1] தினத்தந்தி, ஜாகிர்நாயக்கின்போதனைகளைஒளிபரப்பும் ’பீஸ்டிவி’யைவங்கதேசம்தடைசெய்தது, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 10,2016, 3:55 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 10, 2016, 3:55 PM IST.
[3] தி.இந்து, மதபோதகர்ஜாகிர்நாயக்கின் ‘பீஸ்மொபைல்போன்’களுக்குதடைவிதித்ததுவங்கதேசஅரசு, Published: July 14, 2016 21:21 ISTUpdated: July 15, 2016 10:22 IST
[8] தினத்தந்தி, ஜாகீர்நாயக்மீதுவீண்பழி: முஸ்லிம்அமைப்புகள்சென்னையில்ஆர்ப்பாட்டம், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 17,2016, 12:28 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 17,2016, 12:28 AM IST
அண்மைய பின்னூட்டங்கள்