Posted tagged ‘குதிரை’

மொஹரம் கடைப்பிடிப்பதில் சுன்னி-ஷியாக்களில் வித்தியாசம் ஏன், துக்கம்-சந்தோஷம் ஏன்?

ஓகஸ்ட் 11, 2022

மொஹரம் கடைப்பிடிப்பதில் சுன்னிஷியாக்களில் வித்தியாசம் ஏன், துக்கம்சந்தோஷம் ஏன்?

பாரம்பரிய முறைப்படி மொஹரம் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியர்கள்:  மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் ஷியா இஸ்லாமியர்கள் பேரணியாகச் சென்று தொழுகையில் ஈடுபட்டனர்[1]. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜானி ஜான் கான் சாலையிலிருந்து ஷியா முஸ்லிம்கள் ஏராளமானோர், ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஷியா முஸ்லிம் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டனர்[2]. பின்னர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேரணியாகச் சென்றனர். ராயபேட்டையில் நடக்கும் இந்த சடங்குகள் மற்ற ஊர்வலங்கள் எல்லாம் ஊடகங்களில் காட்டுவதில்லை. தஞ்சையை அடுத்த காசாநாடு புதூர் கிராமத்தில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக மொஹரம் பண்டிகை கிராம விழாவாக கொண்டாடப்பட்டது. ஊரின் மையப் பகுதியில் உள்ள அல்லாசாமி கோவிலில் வைத்து பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, ஏராளமானோர் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். சில இடங்களில், இந்துக்களும் கலந்து கொண்டார்கள் போன்ற செய்திகள் வெளியாகியுள்ளது.

மொஹரம் ஏன், எப்பொழுது?: மொஹரம், முஃகர்ரம் (முகரம், அரபி: محرم) என்பது இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாகும். இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப் படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியானதால் கிரிகொரியின் நாட்காட்டியுடன் ஒப்பிடும்போது இது ஆண்டிற்காண்டு நகருவது / மாறுவது போன்று காட்சியளிக்கும். இந்த மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் / ஜிஹாத் புரிவதாயினும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட இடங்களில் வன்முறைகள் இருக்கின்றன. சில இஸ்லாமியர் இம்மாதத்தின் ஒன்பதாம் நாளிலும் பத்தாம் நாளிலும் உண்ணா நோன்பு இருத்தல் வழக்கமாகும். முஃகர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் (அரபு மொழியில்ஆஷுரா / ஆசூரா) அன்று தியாகத் திருநாளாகக் கொண்டாடப்பட்டு அன்று ஷியா இஸ்லாமியர் உண்ணாதிருப்பர். மொஹரம் மதத்தின் 10 வது நாளைத்தான் `ஆஷூரா’ என்று இஸ்லாமிய வரலாறு அழைக்கிறது. ஆஷூரா எனும் அரபுச்சொல்லுக்கு `பத்தாவது நாள்’ என்றுதான் பொருள். சுன்னி-ஷியாக்களில் நாளைக் கணக்கிடுவதில் வேறுபாடு உள்ளது.

ஷியாக்களுக்கு துக்கநாள், சுன்னிகளுக்கு கொண்டாடும் நாள்: ஹுசைன் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பாலைவனத்தில் விடப்பட்டு எதிரி வீரர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்ட நாளை இது குறிக்கிறது. இந்த நாளில் தான் மொஹரம் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது என்று தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்டாலும், அது ஒரு துக்க நாள். அதன்படி இம்மாதத்தின் பிறை 9, 10 ஆகிய தினங்களில் முஸ்லிம்கள் நோன்பு வைப்பார்கள். முஃகர்ரம் பண்டிகை (Remembrance of Muharram) கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை ஷியாக்களால் நினைவுகூறப்படுகிறது. ஷியா முஸ்லிம்கள் அல்லாத சுன்னி இஸ்லாமியர் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளில் வைக்கப்படும் நோன்பானது, தான் கடவுள் என்று கூறிய அரசன் ஃபிர்அவ்ன் / எகிப்து அரசன் மற்றும் படைகளை கடலில் மூழ்கடித்து மூஸா (அலை) அவர்களை காப்பாற்றியதற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்காக வழிபடும் நிகழ்வு. ஆக ஷியாக்களுக்கு துக்கம், சுன்னிகளுக்கு மகிழ்ச்சி.

ஷியா முஸ்லிம்கள் என்று குறிப்பிட ஏன் தயங்க வேண்டும்?: நாகூர் தர்காவில் மொஹரம் பண்டிகை, தொழுகை நடத்துவதில், இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், யாத்ரீகர்கள் குழப்பமடைந்தனர்[3]. இப்படி ஊடகங்கள் குறிப்பிட்டாலும், யார் அந்த “இரு தரப்பினர்” என்று குறிப்பிடவில்லை. பொதுவாக, இந்துக்கள் மற்றும் இந்துக்கள்-அல்லாதவர் என்று குறிக்க, ஊடகங்கள் அத்தகைய சொற்பிரயோகங்கள் செய்வதுண்டு. “சிறுபான்மையினர்” என்று குறிப்பிட்டால், முஸ்லிம், கிருத்துவர் என்றாகும். இங்கு சுன்னி மற்றும் ஷியா பிரிவினர் என்று சொல்ல ஏன் தயங்குகின்றனர் என்று தெரியவில்லை. இதே கோணத்தில், பாகிஸ்தானில், ஷியா முஸ்லிம்கள் கொல்லப் படும் போது, அவர்கள் மசூதிகளில் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடக்கும் பொழுதும், இங்கிருக்கும் முஸ்லிம்கள் கண்டு கொல்ல மாட்டார்கள். பிறகு, சென்னை-ராயபேட்டையில் அத்தனை முகமதியர் மொஹரம் கொண்டாடும் பொழுது, அவர்கள் ஷியாவாகத்தான் இருக்க வேண்டும். பிறகு, அவர்களும் பாகிஸ்தானில், ஷியா முஸ்லிம்கள் கொல்லப் படும் போது, அவர்கள் மசூதிகளில் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடக்கும் பொழுதும் ஏன் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்று விசித்திரமாக இருக்கிறது.

ஃபதிஹா / அஷுரா ஆகூர் தர்காவில் தடுக்கப் பட்டது ஏன்?: முகம்மது நபியின் பேரனான இமாம் ஹுஸைன் இபின் அலியின் தியாகத்தை நினைவு கூற, மொஹரத்தின் ஒன்பதாவது நாளன்று, ஃபதிஹா என்றதை ஓதி, தொழுகை நடத்தி போற்றுவது ஷியாக்களின் கடமை. கர்பலாவில் நடந்த அந்த உயிர்தியாகத்தை, அஷுரா என்றும் தம்மை துன்புருத்திக் கொண்டு நினைவு கூர்வார்கள். இது நாகை அடுத்த நாகூர் ஹஸரத் ஷாஹுல் ஹமீது தர்காவில், ஆயிரக்கணக்கில் முஸ்லிம்கள் கூடி  ஃபதிஹா ஓதி, தொழுகை செய்வது வழக்கம். இம்முறை தர்கா புதிய நிர்வாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடால், மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்துவதில் பிரச்னை எழுந்தது[4]. பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் தொழுகை நடத்துவது குறித்து, தர்கா நிர்வாகிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப், நாகை, ஆர்.டி.ஓ.,விடம் புகார் மனு அளித்தார்[5]. இரு தரப்பினருக்கு இடையே, ஆர்.டி.ஓ., என். முருகேசன் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில், தர்காவின் பராம்பரியத்தை பாதுகாக்கவும், தர்காவின் உட்புறத்தில் வழிபாடு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது[6].

மொஹரம் தொழுகை ரத்து செய்யப்பட்டது: நாகூர் தர்காவில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடுவதில் சர்ச்சை ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. கோட்டாட்சியரின் தடையை மீறி பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் சார்பில், மொஹரம் தொழுகை ரத்து செய்யப்படுவதாக, தர்கா வளாகத்தில் துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டதால் தர்காவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உண்மையில் ஊடகத்தினர், இந்த மொஹரத்தைப் பற்றி புரிந்து கொள்ளாமல், “பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்பட்டது,” என்றெல்லாம் செய்தி வெளியிட்டு வருகின்றனர். இது உண்மையில் ஒரு துக்ககரமான நிகழ்ச்சி, ஏனெனில், கர்பலா போரில், ஹுஸைன் மற்றும் அஸன் கொல்லப் படுகின்றனர், அந்த உயிர்பலி, தியாகத்தை நினைவு கூருகின்றனர்.

பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்பட்டது: இந்நிலையில் டிரஸ்டிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் தலைமையில், தர்காவின் உட்புறம் உள்ள யாஹூசைன் பள்ளிவாசலில் மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது[7]. இதில், ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். “தலைமுறைகளாக என்னுடைய முன்னோர்கள், இந்த ஃபதிஹா சொல்லி தொழுகை செய்து வருகின்றனர். அதனால், நான், இதை நிறுத்த முடியாது,” என்றார்[8]. தர்கா புதிய நிர்வாகிகள் கருத்து வேறுபாடால் வெளியூரில் இருந்து மொஹரம் சிறப்பு தொழுகையில் பங்கேற்க வந்த யாத்ரீகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இதையே, ஜீ.நியூஸ் இவ்வாறு குறிப்பிடுகிறது[9], “இந்த நிலையில், நாகூர் தர்கா நிர்வாகத்தின் டிரஸ்டிகளுள் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப் காவல்துறையின் தடையை மீறி முஹர்ரம் பண்டிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். நாகூர் தர்கா உள்ளே அமைந்துள்ள யாஹுசைன் பள்ளி வாசலில் நடைபெற்ற முஹர்ரம் சிறப்பு துவாவில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்”.  கோலாகலமாக நடைபெற்ற முஹர்ரம் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் நாகூர் தர்காவில் குவிந்து வரும் நிலையில், நிர்வாகிகள் மத்தியில் நிலவி வரும் கருத்து வேறுபாடு காரணமாக தர்காவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது[10].

© வேதபிரகாஷ்

10-08-2022


[1] ஜெயா.நியூஸ், நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் தீ மிதித்து வழிபாடு, Aug 9 2022 5:13PM

[2] http://jayanewslive.com/spiritual/spiritual_189099.html

[3] தினமலர், மொஹரம் தொழுகை நாகூர் தர்காவில் சர்ச்சை, Added : ஆக 10, 2022  07:19

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3096668

[5] நியூஸ்.7.தமிழ், நாகூர் தர்காமுஹரம் பண்டிகை கொண்டாடுவதில் ஏற்பட்ட சர்ச்சை, by EZHILARASAN DAugust 9, 2022.

[6] https://news7tamil.live/nagor-dargah-controversy-over-the-celebration-of-muharram.html

[7] Indian Express, Nagapattinam: Trustee board fallout leads to cancellation of Muharram prayers at Nagore Dargah, Published: 10th August 2022 05:58 AM  |   Last Updated: 10th August 2022 05:58 AM.

[8] https://www.newindianexpress.com/states/tamil-nadu/2022/aug/10/nagapattinam-trustee-board-fallout-leads-to-cancellation-of-muharram-prayers-at-nagore-dargah-2485906.html

[9] ஜீ.நியூஸ் .இந்தியா, Muharram 2022: நாகூர் தர்காவில் முஹர்ரம் பண்டிகை கொண்டாடுவதில் சர்ச்சை, Written by – Sripriya Sambathkumar | Last Updated : Aug 9, 2022, 02:30 PM IST.

[10] https://zeenews.india.com/tamil/tamil-nadu/muharram-2022-controversy-in-nagore-dargah-muharram-celebrations-405760

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: மாலிகாபூர் படையெடுப்பு 1310-11 CE (1)

திசெம்பர் 6, 2017

மதுரையில், தமிழகத்தில் துலுக்கர் வருகை, ஆதிக்கம் மற்றும் விளைவுகள்: மாலிகாபூர் படையெடுப்பு 1310-11 CE (1)

Malikafur attack

பாண்டியர் துலுக்கர் தென்னிந்தியாவின் மீது படையெடுக்க இடம் கொடுத்தமுறையில் செயல்பட்டது: மாற வர்மன் குலசேகர பாண்டியன் – I [1268] கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம், சிங்களம் ஆகிய நாடுகளை வெற்றிகொண்டான் என்று கல்வெட்டுகள் கூறுவதும், துலுக்கரின் அவைப்புலவர்கள் மற்றும் சுற்றிப்பார்க்க வந்தவர்ககளின் தென்னிந்திய படையெடுப்புக் கொள்ளை விவரங்களும் எதிரும்-புதிருமாக இருக்கின்றன. மூன்றாம் இராசேந்திரன் மற்றும் போசப் ஹொய்சள இராமநாதனை கி.பி 1279 இல் வென்றான். சிங்களத்தில் உண்டான அரசியல் கலவரத்தை வாய்ப்பாக கொண்டு கி.பி 1284 இல் தனது படைத்தலைவன் ஆரியச் சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தான். புத்தரின் பல் சின்னமொன்றை கைப்பற்றி வந்தான். ஆனால், கி.பி 1302-1310 காலத்தில் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து பாண்டியனுக்கு அடிபணிந்து அப்புனித சின்னத்தை மீட்டு சென்றான். இதனால், சோழர்காலத்து பாதுகாப்பு கொண்ட கட்டுபாடு, கடற்படை, மற்ற அரசர்களின் நட்புறவு முதலியை பாதிக்கப் பட்டது என்று தெரிகிறது. பௌத்தர்களும் விரோதியானார்கள் எனும் போது, பாண்டியர் பெருமளவில் தென்னிந்தியாவின் கூட்டமைப்பை, கட்டுக்கோப்பை பாதித்தனர் என்றாகிறது. மேலும், துலுக்கரை தென்னிந்தியாவில் வர முடியாமல், ஹோய்சளர் யுக்திகளுடன் செயல்பட்டு வந்த நிலையில், அவர்களையும் வென்றது, அவர்களைச் செயலிழக்கச்செய்தது. அதாவது, துலுக்கர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து வர எளிதாகியது.

Tamilnadu ports

கடற்கரை பகுதிகளில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது இந்து விரோதமானது: மாற வர்மன் குலசேகர பாண்டியன் – I ற்கு இரண்டு மகன்கள் சுந்தர பாண்டியன் [வேறொரு பெண்ணிற்கு / காமக்கிழத்திற்குப் பிறந்தவன்] மற்றும் வீர பாண்டியன் [அரசியின் மூலம் பிறந்தவன்] கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை ஆட்சி புரிந்தான். குலசேகரன் அரசவையில் தகியுத்தீன் அப்துர் ரகுமான் என்பவன் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அரேபியன் குறிப்பிட்டுள்ளதாக, ஜே.பி. ப்ரஷாந்த் மோரே குறிப்பிடுகிறார்[1].  வியாபாரம் நிமித்தமாக ஏஜென்ட் போல தந்ததை, அவ்விடங்களே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு விட்டன போல எழுதி வைத்திருப்பது தெரிகிறது. எப்படியாகிலும், சோழர்கள் காலத்தில் முக்கியமாக இருந்த கடற்கரை பகுதிகளில் துலுக்கர் ஆதிக்கம் செல்லுதினார்கள், அதனால், அங்குள்ள கோவில்கள் இடிக்கப்பட்டன என்று தெரிகிறது. இப்பொழுதுள்ள மசூதி-தர்காக்களின் உட்புற சிற்பத் தூண்கள், கருவற்றை, மண்டபங்கள், குளங்கள் முதலியவை அவற்றை எடுத்துக் காட்டுகின்றன. வியாபாரத்திற்கு, முக்கியமாக குதிரை இறக்குமதி போன்றவற்றிற்கு ஏஜென்டுகள், தரகர்கள், துபாஷியாக இருந்தவர்கள், அவ்வாறு நெருக்கமாகினர் என்று தெரிகிறது. மேலும் படைகளிலும், துலுக்கர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

Vira-Sundara Pandyan - imaginary

சுந்தர பாண்டியன் அலாவுத்தீன் கில்ஜியிடம் உதவி கேட்டானா?: சகோதர போட்டி துவேசத்தில், துலுக்கரைப் போன்றே சதியில், துரோகத்தில், கொலைகளில் ஈடுபட்டது, அம்மண்ணில் இருந்த பாரம்பரியம், கலாச்சாரம், நாகரிகம் முதலியவற்றிற்கே ஒவ்வாததாகும். இருப்பினும் சுந்தர பாண்டியன் தனது தந்தையை – மாற வர்மன் குலசேகர பாண்டியன் – 1310 / 1311ல் கொலை செய்தது திகைப்படையச் செய்தது. இக்கொலைக்குப் பின்னரும், தகியுத்தீன் தனது பதவியைத் தொடர்ந்தான் என்பதும் ஆச்சரியமாக உள்ளது. 1311ல் மாலிகாபூர் மதுரையை நோக்கி படையெடுத்து வந்து, துலுக்கப்படைகள் தாக்கியபோது, இந்த இரு பாண்டியர்களும் புறமுதுக்கிட்டு ஓடி ஒளிந்தனர். சுந்தர பாண்டியன், அலாவுத்தின் கில்ஜியிடம் தில்லிக்கே சென்று சரணடைந்தான், என்று சரித்திராசிரியர்கள் எழுதுகின்றனர். அப்படியென்றால், சகோதரனைக் காட்டிக் கொடுத்தவனே அவன் தான் என்றாகிறது. ஆனால், வீர பாண்டியன் உள்ளூர் ஆதரவினால் தப்பித்தான். மாலிக்காபூர் கோவிலை கொள்ளையெடித்து, இடித்து, எரித்தான். அதாவது அந்த காலகட்டத்தில் தான், துலுக்கர்களின் அழிப்பிற்குண்டான கோவில்களை அசுத்தமாக, மிலேச்சர்களினால் தாக்கப்பட்டது என்ற முறையில் பூஜை-புனஸ்காரம் விடுத்து, ஒதுக்கி வைத்தனர் என்று தெரிகிறது. பிறகு, பரிகாரம் போன்ற முறைகளினால், அவை மீட்டெடுக்கப் பட்டன. விஜய நகர காலத்தில் ஆயிரக்கணக்கான கோவில்கள் புதிப்பிக்கப் பட்டன.

Malikafur attack -tent

பாண்டியனின் துரோகத்தால், துலுக்கர் ஆதிக்கம் பெற்றது: சுந்தர பாண்டியனுக்கு ஆதரவாக துலுக்கப்படை ஒன்று ஆதரவாக நிறுத்தப் பட்டது. ஏனெனில், 1313ல் கேரளத்து ராஜா ரவி வர்மன், தென் பெண்ணாரைத் தாண்டி, பூந்தமல்லி மற்றும் நெல்லூரை பிடித்துக் கொண்டான் என்றுள்ளது. அதாவது பாண்டியரை வென்றான் என்றாகிறது. அதனால், குர்ஷூ கானை [இவனும் இந்துவாக இருந்து துலுக்கனாக மதமாற்றப்பட்டவன்] 1318ல் மலபாருக்கு அனுப்பியது, மறுபடியும், அதனை, துலுக்கர்களின் கட்டுக்குள் கொண்டு வர அனுப்பியிருக்க வேண்டும். அமீர் குர்ஷூ எழுதியவற்றை வைத்து தான், சரித்திராசிரியர்கள் இத்தகைய விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். வெறும் கலிமா சொல்ல வைத்தே, துலுக்கராக்கினர், அவர்கள் “பாதி துலுக்கர்” அதாவது “பாதி இந்துக்கள்” என்று அமீர் குர்ஷூ எழுதி வைத்தான். 1335ல் முகமது துக்ளக்கின் ஆதிக்கத்தின் கீழ் ஒரு துலுக்க ஆட்சி மதுரையில் ஏற்படுத்தப் பட்டது. துலுக்க ஆவணங்கள் பிரகடனப்படுத்திக் கொள்வது போல, அவர்களின் ஆதிக்கம் முழுமையாக இருந்ததா என்பது சந்தேகமே.

Malikafur attack and kill people

கொடியகுரூரதுலுக்க அரக்கர்களின் முடிவு அவ்வாறே அமைந்தது: 312 யானைகள், 20 ஆயிரம் குதிரைகள், தங்கம், வைரம், முத்து, மரகதம், மாணிக்கம் என்று கொள்ளையடித்த பொருட்களுடன் தில்லிக்குச் சென்ற மாலிக் கபூருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அலாவுதீன் கில்ஜி பரிசாகக் கொண்டுவந்த பொருட்களை அனைவரும் காணும்படியாக பொது தர்பார் நடத்தி, ‘மாலிக் நைப்’ என்ற பட்டத்தை அனனுக்குக் கொடுத்தான். 1316-ல் அலாவுதீன் கில்ஜியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு படுக்கையில் வீழ்ந்தான், அந்நிலையில், விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டான். மாலிக் கபூர், ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டான். கில்ஜி வாரிசுகளின் கண்களைக் குருடாக்கிவிட்டு மீதம் இருந்த சிறுவனை கைப்பொம்மை போல அரியணையில் அமர்த்தி, தானே டெல்லியை ஆளத் தொடங்கினான். ஆனால், கில்ஜியின் குடும்பத்தினர், மாலிக் கபூர் பாதுகாவலர்களைக் வைத்தே, அவனை நள்ளிரவில் சுற்றி வளைத்து, கை வேறு கால் வேறாக வெட்டிக் கொன்றனர். இவ்வாறு கில்ஜி மற்றும் மாலிகாபூர் கொடிய-குரூர-துலுக்க அரக்கர்களின் முடிவு அமைந்தது. இங்கு கருவரையில் உள்ள சிவலிங்கம், தானாய்த் தோன்றியவர். மாலிகபூர் படையெடுப்பின் போது கருவறையை மூடி, முன்னே வேறு ஒரு லிங்கத்தை வைத்து ஏமாற்றி, உண்மையான லிங்கத்தை பாதுகாத்துள்ளனர். இன்றும் சுவாமி சன்னதி பிரகாரத்தில் துர்கைக்கு எதிரே மாலிகபூரால் உடைக்கப்பட்ட லிங்கம் காட்சிக்கு உள்ளது.

Kampanna saw the broken linga by Malikafur

மாலிக்காபூருக்குப் பிறகு தங்கி விட்ட துலுக்கரின் நிலை, திட்டம் முதலியன: மாலிகாபூர் 1311லேயே தில்லிக்குத் திரும்பி சென்று விட்டான். இருப்பினும், அவனுடன் வந்தவர்களில் சிலர் தங்கி விட்டனர்.  அவர்கள் தான் பகீர், சாமியார் போல திரிந்து தகவல்களை அறிந்து தில்லிக்கு அனுப்பி வைத்தவர்கள் எனலாம். ஜெசுவைட் என்கின்ற கத்தோலிக்க கிருத்துவ சாமியார்களும் இதே முறையைக் கையாண்டனர்[2]. முகமது துக்ளக் கி.பி.1324ல், அதே ஆசையுடன் மதுரைக்கு படைகளை அனுப்பி வைத்தான். பாண்டியர்களை தெற்காகத் துரத்திவிட்டதால், 1334 முதல் 1378 வரை மதுரையை சுல்தான்கள் பெயரால் பட்டாணியர்கள் எட்டுப்பேர்கள் மதுரையை ஆண்டு வந்து இருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் உடெளசி சலாதீன், குப்தீன், கியாஸ் உத்தீன், நாசீர் உத்தின், அடிலபெருதீன், முபராக்சா, அல்லாவுதீன், சிக்கந்தர். இவர்களடைய கொடுங்கோல் ஆட்சி என்றும் வரலாற்று ஆசிரியர் – 60,000 பட்டாணியர்கள் மதுரை நகர்க்குள் ஆயுதம் கையில் வைத்துக் கொண்டு தங்கி இருந்து தமிழ்நாட்டில் கொள்கையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். இக்காலகட்டத்தில் மதுரை மற்றும் சுற்றியுள்ள நகரங்கள், பகுதிகளில், அதிகமான அளவில், சேதங்கள் விளைந்தன.

© வேதபிரகாஷ்

06-12-2017

Malikafur attack -atrocities- imaginary

[1] J. B. Prashant More, Muslim Identity, Print Culture, and the Dravidian Factor in Tamil Nadu, Orient Longman, New Delhi, 2004, pp.9-12.

[2] ஜெசுவைட் பாதிரிகள் தங்களது கடிதங்கள், குறிப்புகள் முதலியவற்றில் இதைப் பற்றி எழுதியுள்ளனர். மதம் தவிர, பொருளாதாரம், பொருட்கள் உற்பத்தி செய்யும் முறை முதலியவற்றைப் பற்றி விவரமாக எழுதி அனுப்ப்பியுள்ளனர்.

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (2)

திசெம்பர் 1, 2017

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (2)

Tuluka in inscriptions- Tamilnadu

கல்வெட்டுகளில் துருக்கர் / துலுக்கர் பிரயோகம்; துருக்கி நாட்டில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் என்ற பொருளில் இந்தச் சொல் துருக்கர் என்றும், நாளைடைவில் துதக்கர் – எனவும் மருவி வழங்கியுள்ளது[1] என்று சிலர் விளக்கம் அளித்தாலும், எந்த இடத்தில், காலத்தில் உபயோகப்படுத்தப் பட்டது என்று கவனிக்க வேண்டும். இந்தச் சொல் வடமொழி, தெலுங்கு, இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் ‘துருஷகா / துருஷ்கா” என பயன்படுத்தப்பட்டு உள்ளது.

  1. “மேத்த சனி கார துலுஸ்க தானுஸ்க,’’ என்பது தாராபுரம் கல்வெட்டுத் தொடரில் உள்ள விருதாவளியாகும்[2].
  2. விஜய நகர மன்னர்களுக்கு [1336-1646] ‘துலுக்க மோகந் தவிழ்ந்தான்’ ‘துலுக்க தள விபாடன்’ என்பனவும், அவர்கள் விருதாவளி (சிறப்புப் பெயர்கள்) எனத் தெரிய வருகிறது[3].
  3. வீரபாண்டிய தேவரது [1309-1345] நிலக் கொடையொன்றில் எல்லை குறிப்பிடும்பொழுது கோவை மாவட்ட பாரியூர் கல்வெட்டு, “கிழக்கு புரட்டலுக்கு மேற்கு, துலுக்கன்பட்டி நேற் மேற்கு,” என வரையறுத்துள்ளது[4].
  4. கொங்குநாட்டில், துலுக்கர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிலைத்துவிட்டதை இந்தக் கல்வெட்டு உறுதிசெய்கிறது.
  5. மற்றும் தாராபுரம் கல்வெட்டு துலுக்கர் பள்ளியாகி தானம் தெரியாமலாகிவிட்ட[5]….’ என்ற 14வது நூற்றாண்டின் கல்வெட்டுத் தொடரும்
  6. முன்னாள் ராஜராஜன் பூரீ.சுந்தரபாண்டியத் தேவர் துலுக்கருடன் வந்த நாளையில் … …” என்ற திருக்களர் கல்வெட்டும்[6]:
  7. “துலுக்கர் பலசேமங்கள் தப்பித்து ….” என்ற திருவொற்றியூர் கல்வெட்டுத் தொடரும், துலுக்கர் பற்றிய வரலாற்றுச் செய்திகளை குறிப்பிட்டு, துலுக்கர் தமிழ் மண்ணில் தழைத்துவிட்ட பாங்கினை கோடிட்டு காட்டுகின்றன.

Tulukka patti, kulam, kurichi etc

துலுக்கப்பட்டிகள் / துலுக்கர் வாழ்ந்த இடங்கள்: இன்றைக்கும் தமிழ்நாட்டில், சில பகுதிகளில் உள்ள சிற்றுார்கள் “துலுக்கர்’ குடியிருப்பைக் குறிக்கும் வகையில் அவைகளின் ஊர்ப்பெயர்கள் அமைந்துள்ளன. அவை,

  1. துலுக்கபட்டி – வில்லிபுத்துர் வட்டம்
  2. துலுக்கபட்டி – சாத்துரர் வட்டம்
  3. துலுக்கபட்டி – விருதுநகர் வட்டம்
  4. துலுக்கன் குளம் – நெல்லை வட்டம்
  5. துலுக்கன் குளம் – ராஜபாளையம் வட்டம்
  6. துலுக்கன் குளம் – அருப்புக்கோட்டை வட்டம்
  7. துலுக்கன் குறிச்சி – முதுகுளத்துார் வட்டம்
  8. துலுக்க முத்துார் – அவினாசி வட்டம்
  9. துலுக்க மொட்டை – கோவை வட்டம்
  10. துலுக்க தண்டாளம் – காஞ்சி வட்டம்

Horses imported Vijayanagar

பதவிகளில் இருந்த துருக்கர் / துலுக்கர் / நாயக்கத் துருக்கர்: பன்னிரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த திருப்பத்துளர் கல்வெட்டில் துலுக்கராயன் குழி’ என்ற நில அளவை குறிப் இடப்பட்டுள்ளது[7]. இதிலிருந்து துலுக்கர்களில் சிறப்புடையவரன் ..துலுக்கராயன்’ என அழைக்கப்பட்டாரன் என்பது புலனாகிறது என்று கமால் கூறுகிறார். ஆனால், இடைக்காலத்தில், இந்து அரசர் ஆண்ட காலத்தில் ராணுவங்களில் கூட துருக்கர் / துலுக்கர் பணியில் அமர்த்தப் பட்டிருந்தனர். அதனால், அவன், நாயக் என்ற பதவியை அடைந்தபோது, துலுக்க நாயக் என்றழைக்கப் பட்டான் என்பதில் எந்த வியப்பும் இல்லை. மேலும், தமிழகத்தில் இந்த துலுக்கர்களது குடியிருப்பை குறிக்க துலுக்காணம் என்ற புதிய சொல் வழக்கில் வந்துள்ளது. இந்தச் சொல்லும் அதே 12ம் நூற்றாண்டில் உருவானதாக இருக்கவேண்டும். “துலுக்காணம்”  என்ற பெயரில் இன்றும் தனி நபர்கள் இருக்கிறார்கள், ஆனால், அவர்கள் இந்துக்களாக இருக்கிறார்கள். திரிகடராஜப்பகவிராயரது திருக்குற்றாலக் குறவஞ்சியிலும்[8], இராமநாதபுரம் மன்னர் திருமலை சேதுபதி பற்றிய வண்ணத்திலும்[9]‘ இந்தச் சொல் ஆளப்பட்டுள்ளது. இத்தகைய துலுக்காணத்தில் இருந்த நாயக்கர் ஒருவரது பெயரில் இந்தச் சொல் ஒட்டிக் கொண்டுள்ளதை பதினாறாவது நூற்றாண்டு கல் வெட்டு செய்திகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவரது பெயர் ஏரமஞ்சி துலுக்கான நாயக்கர் என்பதாகும். இவர் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். அதன் காரணமாக சேலம் ஆறகழுர் வட்டம் பணத்தளை என்ற ஊர், ”துலுக்கான நாயக்கர் பேட்டை” என்ற புதுப் பெயருடன் வழங்கப்பட்டது[10].

Horses imported Vijayanagar-Persian trader

துலுக்காணம், துலுக்காயம், துலுக்க ராஜ்யம் முதலியன; இவை போன்றே துலுக்கரது ஆட்சியைக் குறிக்க துலுக்காணியம்’ என்ற புதுச் சொல் உருவாக்கப்பட்டது. பதினான்காவது நூற்றாண்டில் மதுரையைச் ஆட்சி செய்த மதுரை சுல்தான்களின் ஆட்சியை துலுக்கானியமாக இருந்து” என மதுரைத் தல வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது[11]. காளையார் கோவிலில் உள்ள கி.பி. 1532 ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, தமிழகத்தில் நிலவிய துலுக்கர் ஆட்சியை துலுக்க அவாணம்’ துலுக்க அவாந்தரம்” எனவும் குறிப்பிடுகிறது[12]. இன்னும், ‘துருக்கர் ராச்சியமாய் பல சேமங்கள் தப்பித்து’ என்ற திருவொற்றியூர் கல்வெட்டுத் தொடரும்[13]. துலுக்கர் பற்றிய வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிட்டு, துலுக்கர் தமிழ் மண்ணில் தழைத்துவிட்ட விவரங்களை கோடிட்டுக் காட்டுகின்றன.

Madurai sultanate

துலுக்கு-தீய செயல் செய்யும் இந்துவையும் குறித்தது: இன்னும் ‘துலுக்கர் இனத்தைக்” குறிப்பிட, “துலுக்கு’ என்ற சொல் கூட கையாளப் பட்டுள்ளது. வடவிந்தியாவைப் போல, கொடுமைகளை செய்பவரை, துலுக்கன் என்று உருவகமாக குறிக்கப்பட்டதும் தெரிகிறது. திருவிழிமழலை திருக்கோயிலில் அர்ச்சகர் ஒருவர் புரிந்த அட்டுழியத்தை தத்துவப் பிரகாசர் என்ற புலவர், விஜயநகரப் பேரரசருக்கு ஒரு செய்யுள் மூலமாக தெரிவித்தார்.

ஊழித் துலுக்கல்ல, ஒட்டியான் துலுக்குமல்ல

வீழித்துலுக்கு வந்துற்றதே … … …'”[14]

என்பது அந்தக் கவியின் பகுதியாகும். இவ்விதம் துலுக்கர் என்ற சொல், “துலுக்கு’ என மருவி பிற்காலத்தில் மலுக்கு’ என்று கூட பிரயோகம் பெற்றிருப்பதைப் பல நூல்களில் காணலாம். இல்லை, இதனை, துலுக்கர் கோவிலுக்கு எவ்விதமாக இடித்தல், கொள்ளையடித்தல் போன்ற அட்டூழியங்களை செய்வதால், அத்தகைய அநியாயங்களை செய்பவர்களையும், அவ்வாறே குறிப்பிட்டனர் போலும். இக்காலத்தில் நாத்திகர் போர்வையில் திராவிட ஆட்சியாளர்களும், துலுக்கர் போலவே கோவில்களைக் கொள்ளையடித்து வருவதாலும், அவர்கள் துலுக்கருடன் அந்நியோன்யமாக இருப்பதாலும், அவர்களும் அவ்வாறே கருதப்படுகின்றனர் என்பது தெரிந்த விசயமாகிறது. கருணாநிதி, ஸ்டாலின் போன்றோரது இந்து-விரோத செயல்களும் மக்களால் அறியப்பட்டுள்ளன.

© வேதபிரகாஷ்

30-11-2017

Madurai sultanate-coins issed

[1] எஸ். எம். கமால், முஸ்லிம்களும், தமிழகமும், இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு மையம், சென்னை, 1990.

[2] தென்னிந்திய கோவில் சாசனங்கள் எண் 309AD-2949-1 தாராபுரம்

[3] சுப்பிரமணியம் பூ – மெய்கீர்த்திகள் (1885) பக் 294-95 கணோச 68/D – 2871

[4] தென்னிந்திய கோயில் சிலாசாசனங்கள் (l) தொகுதி சாசனம் பக்கம் 309/D2949 – 1.

[5] A. R. 642/1902 திருக்களர்

[6] தென்னிந்திய கோயில் சாசனங்கள் தொகுதி – – எண். 523. பக்கம். 82-17

[7] வள்ளியம்மை – திருப்புத்துரர் (1981) பககம் 17

[8] மக்கம், மராடம், துலுக்காணம், மெச்சி குறமகளும் … பாடல் எண் 63-1 திரிகூடராசப்ய கவிராயர் – திருக்குற்றால குறவஞ்சி

[9] வழுமன் மரகதர், துலுக்காணர், சோழர் …” திருமலை ரகுநாத சேதுபதி வண்ணம் (செந்தமிழ் தொகுதி)

[10] A. R. * 4O9, 406 | 1913.

[11] மதுரைத்தல வரலாறு – (மதுரை தமிழ் சங்க பதிப்பு

[12] A. R. 587 / 1902

[13] தென்னிந்திய கோயில் சாசனங்கள் தொகுதி 1.L.R. 52, திருவொற்றியல்.

[14] பெருந்தொகை : மதுரை தமிழ் சங்கப்பதிப்பு (1935) பாடல் எண் 1638

ஒன்பது நாட்களாக நடைப் பெற்று வந்த மொஹ்ஹரம் பத்தாவது நாளில் முடிவடைந்தது!

ஒக்ரோபர் 26, 2015

ஒன்பது நாட்களாக நடைப் பெற்று வந்த மொஹ்ஹரம் பத்தாவது நாளில் முடிவடைந்தது!

Zuljana-of-imam-hussain

Zuljana-of-imam-hussain

மொஹர்ரம் துக்க விழாவின் ஆரம்பம், சடங்குகள், சின்னங்கள்: மொஹ்ஹரம், என்றாலே தடுக்கப்பட்டது என்று பொருள். எதிர்மறையில் பிரயோகிக்கப்பட்டு வரும், இச்சொல் இஸ்லாத்தில் முக்கியமான பொருளுடன் விளங்கி வருகிறது. அஜதாரி [Azadari (Persian: عزاداری)] என்றால், அழுகை, ஒப்பாரி, துக்கம் என்று பாரசீக மொழியில் பொருள். மஜ்லிஸ் –இ ஆஜா [Majalis-e Aza] இமாம் ஹுஸைன் தியாகத்துடன் சேர்ந்த சடங்குகளை இணைத்து கூறினர். இவையெல்லாம் யஜீத் என்பவனுடைய கொடுமைகளுக்கு எதிராக செய்யப்படுகின்றன. துக்கத்துடன் மார்பை அடித்துக் கொள்வது, லட்ம்யா, லட்மயா, லட்மியா (மாரடித்தல்) எனப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மடம், மடம்-தாரி, சினா ஜன்னே (மாரடித்தல்) என்று வழங்கப்படுகிறது. மொஹம்மது நபியின் குடும்பத்தினர், இமாம் அலி மறைவுக்குப் பிறகு, 680லிருந்து, இதனைக் கடைபிடித்து வருகின்றனர். கர்பலா போரில் மொஹம்மதுவின் பேத்தி ஜேனாப் பின்ட் அலி [Zaynab bint Ali] மற்றும் இமாம் ஹுஸைனின் சகோதரி இவர்களின் இபின் ஜியாத் மற்றும் யதீத் முதலியோர்களுக்கு எதிராக ஒப்பாரிவைத்ததை மற்றவர்கள் பின்பற்ற ஆரம்பித்தனர். இமாம் ஜைநுல் ஆபிதீன் [Imam Zain-ul-Abideen] என்பவர் இமாம் ஹுஸைனின் சோக முடிவை எல்லோருக்கும் அறிவித்து பரப்பி, துக்கநாளாக அனுசரிக்க செய்தார். இவரதளத்தகைய போதனைகள் இராக், சிரியா, ஹேஜாஸ் போன்ற இடங்களுக்குப் பரவின.

ecorated-Zuljanah-on-Muharram-ul-Haram

ecorated-Zuljanah-on-Muharram-ul-Haram

மொஹர்ரம் அனுசரிப்பில் உள்ள சின்னங்கள், உருவங்கள், பழக்க-வழக்கங்கள், கிரியைகள், சடங்குகள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள்:

  1. சினி-ஜனி – மாரடித்தல்[sine-zani (beating the chest)], ஜன்கிர்-ஜனி [zangir-zani (beating oneself with chains)], தகே-ஜனி [tage-zani] முதலியவை துக்கத்தை அனுசரிக்கும் விதங்கள்.
  2. காமா-ஜனி / தட்பீர் – கத்தி, வாட்களால் காயப்படுத்திக் கொள்ளுதல் [Qama Zani/ Tatbeer (hitting oneself with swords or knives)]. பாடிக் கொண்டே அடித்துக் கொள்வதையும் பார்க்கலாம்[1]. இப்பாடலைக் கேட்டால், நிச்சயமாக எவரும் அசையத்தான் செய்வார்கள்[2].
  3. தஸ்தா-கர்தானி – துக்க அனுசரிப்பு ஊர்வலங்கள் [mourning-processions (dasta-gardani)].
  4. நகில் – பெரிய மரத்தால் ஆன உருவங்களைத் தூக்கிச் செல்லுதல் [இமாம் ஹுஸைனின் இறுதி ஊர்வலத்தைக் குறிக்கும்]
  5. தாஜியா / ராவ்ஜா கானி என்கிற உருவங்களை எடுத்துச் செல்லுதல் – கூடாரம், கோபுரம் போன்றவை. கூடாரத்தில் இமாம் ஹுஸைனின் குடும்பத்தார் எரித்துக் கொலை செய்யப்பட்டதால், கூடாரம் போன்றவை விழா முடிவில் எரிக்கப்படுகின்றன.
  6. ஆலம் ஊர்வலம் – கொடிகள், அல்லது வண்ணச்சிலைகளை கொம்புகளில் எடுத்துச் செல்வது. விளக்குகளும் சேர்ந்தவை உள்ளன.
  7. மடம், ஜஞ்சீர் மடம் – கூரிய ஆயுதங்களால் தம்மை துன்புருத்திக் கொள்ளுதல்.
  8. ஜுல்ஜன்னா [Zuljanna] என்கின்ற குதிரை உருவம் – அல்லது குதிரை [இமாம் ஹுஸைனை கர்பலா போருக்கு அழைத்துச் சென்ற குதிரை]. இதனைக் கொல்வதும் உண்டு, எரிப்பதும் உண்டு. ஊர்வலத்தில் செல்லும் போது, அக்குதிரைத் தொட்டு வணங்கவும், ஆசிர்வாதம் பெறவும் செய்கின்றனர்[3].
  9. மண்குழி, தீக்குழி முதலியன – இஸ்லாத்தில் இறந்தவர்களை புதைப்பது, என்ற பழக்கம் உள்ளது. ஆனால், கூடாரத்துடன் முஸ்லிம்கள் எரிக்கப்பட்டதால், அவர்களுக்கு மறுபடியுமஉடல் கொடுத்து, தீயில் காட்டி அடக்கம் செய்யும் வழக்கு உருவகப்படுத்தப் படுகிறது.
  10. தகியா ஊர்வலங்களில் உள்ள உருவங்களும், சில இடங்களில் எரிக்கப்படுகின்றன, சில இடங்களில் கடல், நதிகளில் போட்டு விடுகிறார்கள்.

Karbala, Imam Hussain horse

Karbala, Imam Hussain horse

பத்துநாட்கள் அனுசரிக்கப்படும் மொஹர்ரம்: ஹிஜ்ரி 1437 வருடத்தில் மொஹரா மாதம் பத்தாவது நாளன்று அசுரா, அஷுரா [பத்தாவது நாள்] என்ற துக்கநாள் ஷியா முஸ்லிம்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது[4]. பத்து நாட்களுக்கு இப்பண்டிகை உருவகமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த பத்து நாட்களில் கர்பலாவில் என்ன நடந்ததோ, அவற்றை ஷியா முஸ்லிம்கள் அப்படியே செய்து காட்டுவர். போர்க்களக்காட்சி, குதிரை, இமாம் ஹுஸைன் கூடாரங்கள் முதலியவை உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். இதற்கான பிரத்யேகமான துக்கக்கரமான ஆடைகள் அணிவதும் உண்டு. இரானின் தெற்குப்பகுதியில் உள்ள கொர்ரம்பாதில் மண்தேய்க்கும் வருடாந்திர விழா கொண்டாடப்படும்.

Mourners-in-Khorramabad

Mourners-in-Khorramabad

நடுத்தெருக்களில் தீ வளர்க்கப்பட்டிருக்கும். ஆண்கள்-பெண்கள் பெரிய குழிக்களில் இருக்கும் ஈரமான சேற்றில் குதித்து, உடலை சேராக்கிக் கொண்டு, பிறகு அந்த தீயில் பாய்ந்து உலர்ந்து, எழுந்து வருவர்[5]. அதாவது, இமாம் ஹுஸைன், 72 கூட்டாளிகள் முதலியோர் எவ்வாறு கொலைசெய்யப்பட்டனரோ, அதேபோல, நடத்திக் காட்டுகின்றனர்[6]. அதற்கான ஏற்பாடுகள் முன்னமே தொடங்கிவிடும். கொர்ரம்பாத், கொர்ர ராம்பாத், குர்ரம்பாத், என பலவாறு அழைக்கப்படுகின்ற, இவ்விடத்தில், லோரிஸ்தான் என்ற ஊரில் நடக்கும் பாரம்பரிய துக்கவிழாவில் அனைத்தும் அடங்கியிருக்கும்[7].

A girl covered with mud stands close to a fire to dry herself Khorramabad, Iran

A girl covered with mud stands close to a fire to dry herself Khorramabad, Iran

இமாம் ஹுஸைனின் தியாகம் ஷியாப்சுன்னி பிரிவுகளை உண்டாக்கியது: 1300 வருடங்களுக்கு முன்னர் மொஹம்மது நபியின் பேரர் / பெயரர் இமாம் அலி [Imam Husayn ibn Ali] மற்றும் அவரது மகன்கள் ஹுஸைன் மற்றும் ஹஸன் போரில் [Battle of Karbala] உயிர்தியாகம் அடைந்த நாளை அவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள். இமாம் அலியின் உடல் எதிரிகளால் சின்னா-பின்னமாக்கப் பட்டது. இரண்டாவது உமையாத் காலிப்பான யஜித் – I [the second Umayad caliph Yazid I] படைகளால் அவ்வாறு உயிர்தியாகம் அடைய நேர்ந்தது. குறிப்பாக ஹுஸைன் 680 அன்று இப்பொழுதைய இராக்கில், பாக்தாத்திற்கு அருகில் உள்ள கர்பலாவில் உயிர்தியாகம் செய்ததை, அதே போல தாமும் அந்த துன்பத்தை அனுபவிக்கும் வகையில், உடலை வருத்திக் கொண்டு, தமது சிரத்தையை வெளிப்படுத்திக் காட்டுவர். அக்டோபர் 24, 2015 அன்றும் உலகில் பல நாடுகளில் அத்தகைய நோன்பு கடைபிடிக்கப்பட்டது. இதுதான், அதாவது ஹுஸைனின் பலிதானம் தான், இஸ்லாம் ஷியா மற்றும் சுன்னி / சுன்னி என்று இரண்டாவதாக பிரிந்ததற்கான காரணம் என்று எடுத்துக் காட்டுகின்றனர். பத்து நாட்களாக வழிபட்டு வந்து, அஷுரா தினத்தன்று ஊர்வலமாக முஸ்லிம்கள் கைகளில் ஆயுதங்களுடன் செல்வர். ஒவ்வொருவரும், தமது உடலை அதனால், சேதித்துக் கொள்வர். யஜீத் ராணுவம் இமாம் ஹுஸைன் மற்றும் அவரது 72 நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தாக்கிக் கொன்றதுடன், அவர்களுடைய கூடாரங்களுக்கும் தீ வைத்துக் கொளுத்தினர். அந்த நிகழ்சியையும் அப்படியே தத்ரூபமாக நடத்திக் காட்டுவர்[8].

KARBALA, IRAQ - NOVEMBER 13:Shia Muslims turn around a burning tent according to a ritual ceremony of the Ashura Day on November 13, 2013 in Karbala, Iraq. Muslims to celebrate the day of Ashura which is the tenth day of Muharram (the first month of the Islamic calendar), mourning the seven-century martyrdom of Prophet Mohammad's grandson Prophet Hussein (Husayn ibn Ali) who was killed in Battle of Karbala in Iraq 680 AD. (Photo By Stringer/Anadolu Agency/Getty Images)

KARBALA, IRAQ – NOVEMBER 13:Shia Muslims turn around a burning tent according to a ritual ceremony of the Ashura Day on November 13, 2013 in Karbala, Iraq. Muslims to celebrate the day of Ashura which is the tenth day of Muharram (the first month of the Islamic calendar), mourning the seven-century martyrdom of Prophet Mohammad’s grandson Prophet Hussein (Husayn ibn Ali) who was killed in Battle of Karbala in Iraq 680 AD. (Photo By Stringer/Anadolu Agency/Getty Images)

அஷுரா – பத்தாவது நாளன்று, கூடாரத்தை தீயிட்டு அழிப்பது. யஜீத் ராணுவத்தினர், எவ்வாறு கூடாரத்தை டீயிட்டுக் கொளுத்தினரோ அதேபோல செய்து காட்டுகின்ற சடங்கு.

A Shiite Muslim walks on fire at a ceremony during the Ashura festival at a mosque in central Yangon, Myanmar.

A Shiite Muslim walks on fire at a ceremony during the Ashura festival at a mosque in central Yangon, Myanmar.

கூடாரம், குதிரை, மண்குழி, தீக்குழி முதலியன: கொர்ரம்மாபாதில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும், பத்துநாட்கள் துக்கவிழாவில் கூடாரம், குதிரை, கைகள், மண்குழி, தீக்குழி முதலியன இருக்கும். கூடாரங்கள் நாட்டுக்கு நாடு உருவத்தில் வேறுபட்டாலும், அதன் பின்னால் இருக்கும் இறையில் தத்துவம் ஒன்றகத்தான் இருக்கிறது. சில புகைப்படங்கள், இந்த தளத்திலிருந்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[9]. சிலர் இவையெல்லாம் இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அல்ல, இஸ்லாத்திற்கு முன்பாக இருந்த பழக்க-வழக்கங்கள் அவை, ஆதலால் அவற்றை ஊக்குவிக்கக் கூடாது என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்[10]. சரித்திரரீதியில் அவையெல்லாம் உண்மை எனும்போது, ஒருவேளை, இக்காலத்தைய முஸ்லிம்கள் அவற்றை மறைத்தாலும், மறுத்தாலும், மறக்க நினைத்தாலும், பற்பல இடங்களில் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், சடங்குகளில், கிரியைகளில் அவை வெளிப்பட்டுவிடுகின்றன. இஸ்லாத்திற்கு முன்பிருந்தவை எல்லாமே “ஜஹல்லியா” இருண்டகாலத்தைச் சேர்ந்தது என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்க முடியாது. இந்த அண்டம், பேரண்டம் எல்லாமே இருந்து வந்துதான் உள்ளன. அவற்றில் உள்ளவை, இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் இருக்கும் போது, அவர்களுடன், அந்தந்த சின்னங்கள், உருவங்கள், பழக்க-வழக்கங்கள், கிரியைகள், சடங்குகள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் என்று இருந்து கொண்டுதான் இருக்கும்.

In this photo taken on Monday, Nov. 11, 2013, Myanmar Shia Muslim walks across burning embers during the Ashura festival in Yangon, Myanmar. Shia Muslims mark the Day of Ashura as a day of mourning for the death of the grandson of Prophet Muhammad. Devotees recite prayers, flagellate themselves and walk on fire to mark the day of mourning. (AP Photo/Khin Maung Win)

In this photo taken on Monday, Nov. 11, 2013, Myanmar Shia Muslim walks across burning embers during the Ashura festival in Yangon, Myanmar. Shia Muslims mark the Day of Ashura as a day of mourning for the death of the grandson of Prophet Muhammad. Devotees recite prayers, flagellate themselves and walk on fire to mark the day of mourning. (AP Photo/Khin Maung Win)

நாவாஸ் ஷெரிப்பின் மொஹர்ரம் சந்தேசம்அறிவிப்பு, இந்திய விரோதமாகத்தான் இருக்கிறது: ஆனால், பாகிஸ்தானின் பிரதம மந்திரி அதனையும் அரசியலாக்கி, “பாகிஸ்தானின் இஸ்லாமிய குடியரசை எவை பாதிக்கின்றன, அதன் ஒற்றுமையை குலைக்கின்றன என்பதனை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். தீர்த்து வைக்கப்படாத காஷ்மீர் பிரச்சினை, இப்பகுதியில் அமைதியைக் குலைப்பதாக உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள மக்களின் உரிமைகள் மீறப்படுகின்றன”, என்றெல்லாம் கூறியிருக்கிறார்[11]. பாகிஸ்தானில் அடிக்கடி ஷியா முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர்; அவர்களது மசூதிகளில் குண்டுவெடிப்பு நடத்தி தரைமட்டம் ஆக்கப்படுகின்றன; அந்நிலையில் குரான் புத்தகங்களும் எரிக்கப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டுள்ளன. அப்பொழுது, அவர்களது உரிமைகளைப் பற்றி இவர் கவலைப்பட்டாரா, இதே மாதிரியான கருத்தை வெளியிட்டாரா என்று தெரியவில்லை. பிரதம மந்திரியாக இருப்பதால், வருந்துகிறேன், கண்டிக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம், ஆனால், குண்டுகள் வெடிப்பது, மசூதிகள் இடிக்கப்படுவது, ஷியா முஸ்லிம்கள் கொல்லப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

26-10-2015

[1] http://www.dailymotion.com/video/x17k38t_bloodshed-at-panja-sharif-karbala-muharram_travel

[2] http://www.dailymotion.com/video/x295sgh_bas-ya-hussain-bas-ya-hussain-by-nadeem-sarwar-must-watch-online-dailymotion_music

[3] http://www.dailymotion.com/video/x17i464_everyone-taking-the-blessings-of-holy-horse-muharram_travel

[4] https://www.rt.com/news/319654-ashura-blood-muslim-cut/

[5] Karbala and other cities hosted reenactments of what Shi’ites refer to as Hussein’s martyrdom, complete with horseback warriors and the annual ‘mud rubbing’ ceremony took place in Khorramabad, southern Iran. Hundreds of men and women jumped into vats of wet mud before standing by huge bonfires lit in the middle of the streets to dry it on their skin and clothes. ‘Mud Rubbing’ is a traditional ceremony that is held in the city of Khorramabad every year to commemorate the Ashura day. Read more: http://www.dailymail.co.uk/news/article-3287819/Spilling-blood-religion-Tiny-Shi-ite-Muslim-boys-whip-sharp-blades-mourn-death-Prophet-Muhammad-s-grandson.html#ixzz3pd0lrpVo
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[6] http://www.dailymail.co.uk/news/article-3287819/Spilling-blood-religion-Tiny-Shi-ite-Muslim-boys-whip-sharp-blades-mourn-death-Prophet-Muhammad-s-grandson.html

[7] http://www.payvand.com/news/09/jan/1090.html

[8] http://en.abna24.com/service/pictorial/archive/2015/10/25/716789/story.html

[9] http://www.huffingtonpost.com/2013/11/14/photos-ashura_n_4274307.html?ir=India&adsSiteOverride=in

[10] The Messenger of Allah,Muhammad S strictly forbade such display of sorrow and grief, as these were traditions from the days of pre-Islamic Jahiliyah (Ignorance). Many Bid’at (Innovations) have been associated with the day of ‘Ashurah (Tenth day of Muharram) by another group of ignorantMuslims who celebrate the day like ‘Id.  Some of the Bid’at (Innovations) are applying Kohl and Henna, shaking hands with each other and cooking grains(Hubub) or other special dishes. There is absolutely no evidence to this effect in any SahihHadith (Authentic Tradition ofMuhammad S) or Da’if (Weak)tradition, nor is any evidence of this being done by any of his Sahabah (Companions). None of the Khulafa (Caliphs) of theMuslims or anyone from the Tabi’in encouraged or recommended such things. http://www.islam4theworld.net/islamic_calendar/muharram.htm

[11] Meanwhile, in his message on the Ashuraday, the Prime Minister said on this day, “we must recognize the elements who are harming the Islamic Republic of Pakistan and want to shatter the unity of nation in pursuance of their selfish interests”. He said, “the unresolved Kashmir had become a problem for regional peace and also for the people of Jammu Kashmir, who were being subjected to grave human rights violations”.

http://financialspots.com/2015/10/25/shiite-muslims-around-the-world-mark-ashura/

கான்பூரில் நடந்த சன்னி தாக்குதலில் 20 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர், 30ற்கும் மேலானோர் காயம்!

ஜனவரி 16, 2012

கான்பூரில் நடந்த சன்னி தாக்குதலில் 20 ஷியா முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர், 30ற்கும் மேலானோர் காயம்!

பாகிஸ்தானில், ரஹீம் யார் கான் மாவட்டத்தில், கான்பூரில், ஞாயிற்றுக் கிழமை (15-01-2012 அன்று) இமாம் ஹுஸைன், (மொஹம்மது நபியின் பேரன்) இறந்த 40 வது தினத்தை அனுஸ்டிக்க ஷியா முஸ்லீம்கள் ஊர்வலத்தை நடத்தினர்[1]. அப்பொழுது, தீவிரவாத சன்னி முஸ்லீம்களால் குண்டு வெடிக்கப் பட்டதில், 20 பேர் கொல்லப்பட்டனர்,  30ற்கும் மேலானோர் காயமடைந்தனர்[2]. 20% மக்கட்தொகையுள்ள, ஷியாக்களின் மீது தாக்குஇதல் நடத்துவது, குண்டு வைப்பது, கொல்வது முதலியன வழக்கமாக பாகிஸ்தானில் நடந்து வருகிறது. எல்லோரும் மூஸ்லீம்களஸென்று சொல்லிக் கொண்டாலும், இப்படி சன்னி முஸ்லீம்கள், ஷியா முஸ்லீம்களைக் கொன்று வருவது வினோதமே. ஒரே கடவுளை நம்பும் முஸ்லீம்கள் எப்படி, இப்படி அரடித்துக் கொல்கிறாற்கள் என்று தெரியவில்லை.

நாற்பது நாட்களுக்கு முன்னமும், பின்பும்: சரியாக நாற்பது நாட்களுக்கு முன்பு, 06-12-2011 அன்று இதே மாதிரி குண்டு வெடிக்க வைத்து முஸ்லீம்கள் கொலைசெய்யப்பட்டனர், 160ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[3]. கொடுத்துள்ள பட்டியலில், இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான். சரி, எதற்கு இத்தனை கொலைவெறி? தாத்தா மற்றும் பேரன்களைப் பின்பற்றுவதிலும் கூட இப்படி மத-சண்டைகள், கொலைகள் இருக்குமா?

வேதபிரகாஷ்

16-01-2012


[1] The explosion hit the gathering in Rahim Yar Khan district where Shias were marking the 40th day of mourning of the death of the Prophet Mohammad’s grandson Imam Hussain, Al Jazeera’s Zein Basravi reported from Islamabad.

[3] வேதபிரகாஷ், , இமாம்ஹுஸைனின் 700வதுதியாகத்திருநாள்அன்றுகுண்டுவெடிப்பு: 54 ஷியாமுஸ்லீம்கள்சாவு, 160ற்கும்மேல்காயம்தாலிபன்களின்கொடூரம்!, https://islamindia.wordpress.com/2011/12/06/shias-killed-in-suicide-bomb-attack-in-afghanistan-2011/