Posted tagged ‘குடி’

குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

பிப்ரவரி 13, 2013

குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

Photo0652

மக்களைக் கொல்லும் மாலிக்: யாஸின் மாலிக் ஒரு முஸ்லீம், ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (JKLF) என்ற இந்திய-விரோத, பிரிவினைவாத இயக்கத்தை நடத்தி வருபவன். கடந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்தப் பின்னணியில் அவ்வியக்கத்தினர் உள்ளனர். இஸ்லாமாபாதில் நடந்த உண்ணாவிரத போராட்டதில், பயங்கரவாதி-தீவிரவாதி ஹாவீஸ் சையீத் கலந்து கொண்டுள்ளான். JKLF பேனர் பின்னால் இருக்கிறது. ஆகவே, அக்கூட்டத்தில் அவனைக் கலந்து கொள்ள அழைத்துள்ளாதத் தெரிகிறது. இருப்பினும், மாலிக் மறுத்துள்ளான்[1]. எதற்காக இதிய பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும் என்று கேட்டதற்கு, காந்தி கூட, பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை வைத்திருந்தார் என்றான்[2].

Photo0653

நண்பர்களுடன் உல்லாசம்!

Photo0648

ஆட்டத்தில் கிக் ஏருகிறது போலும்!

Photo0649

அலேக்காக தூக்குதல்!

Photo0654

குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக்: யாஸின் மாலிக் மற்றும் மற்றொரு குல்லா போட்ட முஸ்லீம், இரு பெண்களுடன் ஆடிகொண்டு கும்மாளம் போடுகின்றனர். இறுக்கமாக சிகப்பு நிற சட்டைப் போட்ட இரு பெண்கள் ஆடுகின்றனர். அவர்களுடன் இவ்விருவரும் ஆடுகின்றனர். குல்லாப் போட்டவன், மாலிக்கின் தோளின் கையை போடுகிறன். திடீரென்று யாஸின் மாலிக், பின்னால் ஆடிக்கொண்டிருக்கின்ற பெண்ணை அலேக்காகத் தூக்கி, இரண்டு சுற்று சுற்றுகிறான். அப்பெண் பயந்து அலறுகிறாள். உடனே, பக்கத்தில் இருக்கும் குல்லா போட்ட முஸ்லீம், பர்தா அணிந்த பெண் மற்றவர்கள் யாஸின் மாலிக் மற்றும் அப்பெண் இருவரையும் வலுக்கட்டாயமாக விலக்கி விடுகின்றனர். அப்பெண் கீழே விழுகிறாள், மாலிக்கையும் தூரத்தள்ளிவிடுகின்றார்கள். இதையெல்லாம் இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா என்று முஸ்லீம்கள் தாம் சொல்ல வேண்டும். இந்த வீடியோவை இங்கு காணலாம்[3]. இப்படி குடித்து பெண்களுடன் கும்மாளம் போடும் யாஸின் மாலிக் காந்திய வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்கிறான்!

Photo0650

இருவரையும் பிரித்து விடுகின்றனர்!

Photo0651

காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம்[4]: யாஸின் மாலிக் தான் காந்தி-நேரு போன்று நாங்கள் அஹிம்சாவழி பின்பற்றுகிறோம் என்று வேறு கூறியிருக்கிறான்[5]. கடைசியாக தான் ஹாவித் சையீதை சந்திக்கவே இல்லை என்றும் சொல்லிவிட்டான்[6]. டைம்ஸ்-நௌ டிவி-செனலுக்கு அளித்த பேட்டியில் இதை சொல்லியிருக்கிறான். இனி நோபல் அமைதி பரிசிற்காக அவன் பெயர் பரிந்துரைக்கப் பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏற்கெனவே நேரு குடும்பம் இத்தாலிக்கு அடிமையாகி விட்டது. காந்தி குடும்பம் மறைந்து விட்டது. உள்ள பெயரும் சோனியாவுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. அதனால், இப்படி இந்திய-விரோதிகள், அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் எல்லோரும், காந்தி-நேரு பெர்களைச் சொல்லி, அவர்களைப் போன்று நாங்கள் அஹிம்சாவழி நடக்கிறோம் என்பதில் ஒன்றும் வியப்பில்லை. காங்கிரஸ்காரர்கள் இவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடி, இன்னும் பத்தாண்டுகளில், பிரதம மந்திரி, ஜனாதிபதி ஆக்கினாலும் வியப்பில்லை.

 

வேதபிரகாஷ்

13-02-2013


[4] Irks me when Yasin Malik compares himself with Gandhi & Nehru. They never picked up guns & killed innocents. Didn’t hobnob with terrorists.

http://inagist.com/all/301357321534177281/

இஸ்லாம், சூதாட்டம், கிரிக்கெட்: எப்படி நம்பிக்கையாளர்கள் ஈடுபடுகின்றனர்?

திசெம்பர் 1, 2010

இஸ்லாம், சூதாட்டம், கிரிக்கெட்: எப்படி நம்பிக்கையாளர்கள் ஈடுபடுகின்றனர்?

பொதுவாக முஸ்லீம்கள் ஒழுங்கு, ஒழுக்கம், நன்னடத்தை, நன்னெறி என்றெல்லாம் வரும்போது, இந்த உலகத்தில் அவர்கள்தாம் ஒட்டு மொத்தமாக அத்தகைய குணங்களை குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளவர்கள் போல வியாக்யானம் அளிப்பர், பேசுவர், எழுதுவர். ஆனால், ஏதாவது ஒழுங்கீனம், ஒழுக்கமின்மை, கெட்ட நடத்தை, தீயநெறி என்றெல்லாம் என்று வரும்போது, அத்தகைய காரியங்களில் முஸ்லீம்கள் ஈடுபடும்போது, அமைதியாக இருப்பார்கள், சப்பைக் கட்டுவார்கள் அல்லது முஸ்லீம்கள் என்பதால்தான், அத்தகைய செய்திகள் வருகின்றன என்றெல்லாம் கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். இந்திய கிரிக்கெட் வீரர் அஸாருத்தீன் வசமாக மாட்டிக் கொண்டபோது[1], தான் முஸ்லீம் என்பதால்தான், இப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றார். அப்பொழுதுதான், முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு, ஒருவர் தம்மைக் காத்துக் கொள்ள அத்தகைய வாதத்தை வைக்கிறார் என்று வெளிப்படையாக தெரிந்து கொண்டனர். ஏனெனில், இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று என்று ரசிகர்கள் வேறுபடுத்திப் பார்த்தது கிடையாது. ஜடேஜா, மோங்கியா கூட அதே குற்றத்தில் மாட்டிக் கொண்டனர், அப்பொழுது அவர்கள் தங்களது மதத்தைக் குறிப்பிட்டு தப்பித்துக் கொள்ள பார்க்கவில்லை, அல்லது, அவர்கள்மீது மட்டும் வேறுவிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு சி.பி.ஐ.யிடம் குற்றத்தை ஒப்புக் கொண்டார்[2].

எழுகின்ற பல கேள்விகள்: இந்நிலையில் தொடர்ந்து பாகிஸ்தானியர் அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டு வருவது பல கேள்விகளை எழுப்புகின்றன. இஸ்லாம் சூதாட்டம், பணம் வாங்கிக் கொண்டு தோல்வி அடைவது அல்லது வெற்றிப் பெறுவது, அதற்கான முறையில் ஒழுங்காக ஆடாமல் போலியாக ஆடுவது, பந்துகளை வீசுவது, கேட்சுகளை விடுவது, சரியாக ஃபீல்டிங் செய்யாமல் இருப்பது………..முதலிய வேலைகளை எப்படி, ஏன், எதற்காக செய்கிறார்கள்? பணத்திற்காக என்றால், அவர்கள் ஆடுவது கிரிக்கெட் அல்ல, சூதாட்டம் தான். மேலும், ஹோட்டல்களில் நடிகைகளுடன் சேர்ந்து குடிப்பது, ஆடுவது, இருப்பது முதலியனவும் எம்மதத்திலும் ஏற்றுக் கொள்ளமுடியாத காரியங்கள். பிறகு எப்படி அவை நடக்கின்றன?

மஷார் மஜீத் போட்ட குண்டு: இப்பொழுது (நவம்பர் 30, 2010), மஷார் மஜீத் என்ற கிரிக்கெட் சூதாடி வஹாப் ரியாஸ், கம்ரன் அக்மல். உமர் அக்மல் மற்றும் இம்ரான் ஃபர்ஹத் முதலியோரும் “போலிப் போட்டி”யில் (match fixing) ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளான்[3]. செப்டம்பரில் 2010 இங்கிலாந்து-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில் தவறுதலான பந்து வீச்சுகளுக்கு (no-balls) பணம் கொடுக்கப் பட்டதாக செய்திக வெளிவந்தன.  மொஹம்மது ஆசிஃப் மற்றும் மொஹம்மது அமீர் வேண்டுமென்றே, அத்தகைய தப்பான பந்து வீச்சில் ஈடுபட்டதாக தெரியவந்தது[4]. அதற்காக மஷார் மஜீத் என்பவனை பொலீஸார் கைது செய்தனர். மஷார் மஜீத் ஒரு ஹோட்டல் ரூமில் உட்கார்ந்து கொண்டு ரூபாய் நோட்டுகளை எண்ணிக்கொண்டிருக்கிறான். அவன் தான் குறைந்த பட்சம் ஏழு பாகிஸ்தான் வீரர்களுக்கு பணம் கொடுத்துள்ளாதாக கூறுகின்றான். செப்டம்பரில் 2010 – மூன்று வீரர்கள் – சல்மான் பட், மொஹம்மது ஆஸிஃப், விலக்கி வைக்கப்பட்டனர்[5].

பாகிஸ்தானிய கிரிக்கெட் – சூதாட்டமும், வன்முறையும்: வரவர சூதாட்டமும் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரர்களும் ஒன்றாகிவிட்டது போன்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்லாது கடத்தல், மிரட்டுதல் முதலிய வன்முறை செயல்களும் சாதாரணமாகவே இருக்கின்றன. ஜியோஃப் லாவ்சன் என்ற பயிற்சியாளர் 2007 முதல் 2008 வரை 15 மாதங்கள் பாகிஸ்தானியர்களுக்கு பயிற்சியளித்துள்ளார். அப்பொழுது, கேப்டன் தன்னை தனியாக அழைத்து, “குறிப்பிட்ட விடுக்கப்பட்ட வீரரை மறுபடியும் சேர்த்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால், நாளைக்கு என்னுடைய மகளை கடத்திக் கொண்டு சென்றுவிடுவோம், பிறகு அவளைப் பார்க்கவே முடியாது என்று என்னை மிரட்டுகிறார்கள் என்று அழாதகுறையாக கூறிக்கொண்டார்[6], என்ற விஷயத்தை வெளியிட்டார். 1998 மற்றும் 2000 வருடங்களில் “போலியான போட்டிகள் என்ற வழக்கில் மாலிக் மொஹம்மது கய்யூம் என்ற நீதிபதி விசாரித்துவந்தார். அவர் ராஜா மற்றும் ஜோஜோ என்ற இரண்டு சூதாடிகளைப் பற்றிய விவரங்களை கேட்டார். அவர்கள் வாஸிம் அக்ரம் தந்தையை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். அபொழுது,  வாஸிம் அக்ரம் தனது மைத்துனிகளையும் சூதாட்டக்கூட்டம் மிரட்டியது என்று கூறினார். அதாவது, அவர்கள் சூதாடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளார்கள் என்பது தெரிந்தது.

தாவூத் இப்ராஹிம் கிரிக்கெட், சினிமா, ஜிஹாத்: தாவூத் இப்ராஹிம், 1993ல் மும்பை வெடிகுண்டு வழக்கில் சிக்கும் வரையில், ஷர்ஜாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை பார்க்க தவறாது வருவது வழக்கம். அவற்றிற்காக தாராளமாக ஸ்பான்ஸர் செய்வதும் வழக்கம். கிரிக்கெட் மற்றும் சினிமாகாரர்கள் தாவூத் இப்ராஹிமின் விருந்தினர்களகவே துபாய் மற்ற வளைகுடா நாடுகளில் தங்கியிருப்பது வழக்கம். கிரிக்கெட், சினிமாக்காரிகளுடன் ஜல்ஸா முதலியவை சேர்ந்துதான் நடக்கும். மும்பை திரை உலகை இன்றும் தாவூத் இப்ராஹிம் ஆட்டிப் படைப்பது தெரிந்த விஷயமே. பிறகு தனது மகளையே, ஜாவத் மியான்டட் என்ற கிரிக்கெட் வீரருக்கு 2005ல் திருமணம் செய்து கொடுத்தான். சொஹைப் அக்தர் சிறையில் இருக்கும்போது, தனது குழுவைப்பற்றி கூறியுள்ளார்.

பாகிஸ்தான்

கிரிக்கெட்காரர்களின் இஸ்லாம் பின்பற்றப்படும் முறை: பாகிஸ்தானில் நாத்திகர்கள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை, ஆனால் சூதாட்டத்தில் ஈடுபட்ட நம்பிக்கையாளர்கள் நிறையவே இருக்கிறார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரகள் எல்லோருமே, கிரிக்கெட்டை விட இஸ்லாத்தை அதிகமாக நேசிக்கிறார்கள், பிரச்சாரம் செய்கிறார்கள், தப்லீக் ஜமாத்துடன் இணைந்து வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது. கிரிக்கெட் பிச்சிலேலேயே, விழுந்து வணங்குவது, தொழுகை புரிவது, மண்ணை முத்தமிடுவது, மெக்கா திசையை நோக்கி வணங்குவது, தாடியை நன்றாக வளர்த்துக் கொள்ளுதல், ஆகாசத்தைப் பார்த்தல், கைகளை உயர்த்துதல், முதலில் இடது பக்கம் பார்ப்பது, பிறகு மெதுவாக அப்படியே, வலது பக்கம் திரும்பிப் பார்ப்பது முதலிய செய்கைகளை தாராளமாகப் பார்க்கலாம். கிரிக்கெட் ஆடும் போது கூட அத்தகைய செய்கைகளை செய்வதுண்டு. ரம்ஜான் மாதத்தில் பட்டினிகூட இருப்பார்கள்.

பாப் உல்மர் பாகிஸ்தான் வீரர்களைக் கண்டித்தற்காக கொலை செய்யப்பட்டாரர? 2007ல் பாப் உல்மர் மர்மமான முறையில் ஹோட்டல் ரூமில் செத்துக் கிடந்தார். பாகிஸ்தான் உலகபோட்டியில் தோல்வியெடைந்ததற்காகத் தான், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று முதலில் கூறினர். ஆனால், பிறகு அவரது சாவைப்பற்றி பல காரணங்கள் முன் வைக்கப்பட்டன. அவர் தமது முஸ்லீம் கிரிக்கெட் மாணவர்களின் அளவிற்கு அதிகமான  மதக்கிரியைகளைத் தட்டிக் கேட்டதற்காகத்தான் இறந்து பட்டாரா என்பது பல காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது[7]. ஹோட்டல் பாத்ரூமில் நிர்வாணமாக அவர் பிணம் கிடந்தது[8]. ஜமைக்கா போலீஸார் பாப் உல்மர்  கழுத்து நெரிக்கப்பட்டுத்தான் கொலைசெய்யப்பட்டார் என்று உறுதி படுத்தினர்[9].

பாகிஸ்தானியனரின் சுய விமர்சனம்: நஸீம் ஆஸ்ரஃப் என்ற பாகிஸ்தானிய கிரிக்கெட் போர்டின் தலைவர் இஸ்லாத்திற்கும், கிரிக்கெட்டிற்கும் நடுவில் மத்தியஸ்தம் செய்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை கூறியுனார்[10]. 2005லிருந்து பாகிஸ்தானியர் பொது இடங்களில் தொழிகை செய்வதையும், தாங்கள் தங்கியுள்ள ஹோட்டல்களில் இஸ்லத்தைப் பற்றி கூட்டம் போட்டு பேசுவதையும் செது வருகிறார்கள். பாகிஸ்தானிய கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கள் கிரிக்கெட்டைவிட, மதத்தில் தான் அதிகமாக விருப்பத்துடன் இருக்கிறார்கள் என்று அவர்களுடைய பயிற்சியாளர்கள் பலமுறை குற்றம் சாட்டியுள்ளனர். 2007ல் உலகக் கோப்பை போடியில் தோல்வியடைந்ததற்கு, பீ.ஜே.மீர் இன்ஸிமாமுல் ஹக்கை அவ்வாறு வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார். 1999களில் காலித் ஹஸ்ஸன், அமீர் மீர் போன்ற கிரிக்கெட் எழுத்தாளர்களும் இதைப்பற்றி எழுத ஆரம்பித்தனர்.  வாசிம் அக்ரம் பிறகு வக்கார் யூனிஸ் கேப்டனாக வந்தவுடன், ஆட்டக்காரர்கள் கிரிக்கெட்டை விட, இஸ்லாத்தைப் பற்றி அதிகமாக  விவாதிக்க ஆரம்பித்து விட்டனர் என்று எடுத்துக் காட்டினர்.

இஸ்லாம் இத்தகைய காரியங்களை அனுமதிக்காது என்றால், அவர்கள் / முஸ்லீம்கள் அவற்றை செய்திருக்கக் கூடாது, தொடர்ந்து செய்யக்கூடாது. இல்லை, முஸ்லீம்கள் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது. ஆனல், கடந்த ஆண்டுகளில் அவ்வாறு நடப்பது வாடிக்கையாகி விட்டது. இதில், தீவிரவாத கூட்டங்களுக்கும் தொடர்பு உள்ளது என்ற பேச்சும் அடிபடுகிறது. தீவிரவாதிகள், இலங்கை வீரர்களை குறிவைத்தபோது, அத்தகைய நிலையும் வெளிப்பட்டது. இன்றைய நிலையில், கிரிக்கெட் போட்டிகளுக்கு, அளவுக்கு அதிகமாக பாதுகாப்பு கொடுத்து, நடத்துகிறார்கள். ஆனால் கோடிகளில் இதிலும் ஊழல் நடக்கிறது. மக்களின் பணம் விரயமாகிறது.

வேதபிரகாஷ்

© 01-12-2010


[2] Indian Express, Wednesday, November 1, 2000, http://www.expressindia.com/ie/daily/20001101/isp01034.html

ஜாதிகள் இல்லை என்று சொல்லும் முஸ்லீம்கள் “தலித்” கோட்டா கேட்கிறார்களா?

ஏப்ரல் 13, 2010

ஜாதிகள் இல்லை என்று சொல்லும் முஸ்லீம்கள் “தலித்” கோட்டா கேட்கிறார்களா?

முஸ்லீம்கள் என்றாலே சமத்துவம் தான்.

அல்லா எந்த பேதமிம் பார்ப்பதில்லை.

ஜாதி என்று இஸ்லாத்தில் இல்லை, சகோரத்துவம் தான்.

இப்படியேல்லாம் தலைசிறந்த பண்புகள் கொண்ட, உயர்ந்த கொள்கைகளுடன் முஸ்லீம்கள் பேசுவர்.

ஆனால், ஜாதிகள் மீதான ஒதுக்கிடு கேட்பது எப்படி என்று தெரியவில்லை.

அதிலும் தலித் போர்வையில் எஸ்.சி போன்ற ஒதுக்கீடு வேண்டும் என்று முஸ்லீம்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

Muslims-demanding-reservation

Muslims-demanding-reservation

மிஸ்ரா கமிஷன் அத்தகைய பரிந்துரை செய்துள்ளதாம். அதன் படி முஸ்லீம்களும் கேட்கிறார்களாம்!

மண்டல் கமிஷன் தீர்ப்பில் இஸ்லாத்தில் உள்ள ஜாதி கட்டமைப்பு, ஜாதியம் முதலியவை எடுத்துக்  காட்டப் பட்டுள்ளன.

அரேபியத்துவம், பழங்குடிகள் அமைப்பு, அவற்றின் மூலம் ஏற்பட்டுள்ள சமூக அடுக்கு முறைகள், மதம் மாறிய பின்னரும், நாட்டுக்கு நாடு அவை எவ்வாறு செயல் படுகின்றன என்பனவற்றை, முஸ்லிம் ஆராய்ச்சியாளர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர்.

இருப்பினும் ஆசார இஸ்லாம் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை என்று முஸ்லிம்கள் உறுதியாக அடித்துச் சொல்கின்றனர். அதாவது, அத்தகைய, ஜாதியம், ஜாதி அமைப்பு, ஜாதிய வேறுபாடுகள் இல்லை என்கிறார்கள்……..

தலித்-முஸ்லீம்கள்

தலித்-முஸ்லீம்கள்

இதையும் ஜிஹாத் என்கிறார்கள்!

முகமது நபி பிறந்தநாளை முன்னிட்டுமதுக்கடைகள் மூட உத்தரவு!

பிப்ரவரி 26, 2010

நாளை 27-02-2010: மதுக்கடைகள் மூட உத்தரவு!

Chennai liquor shops asked to shut on Miladi Nabi- 25-10-2010

இஸ்லாம், முகமது நபி, மது குடித்தல், மீலாடி நபி: முகமதியர் மது குடிப்பதில்லை என்பதில்லை. சாதாரணமாக பல இடங்களில் அவர்கள் மது குடிப்பதைப் பார்க்கலாம். பாகிஸ்தானிலேயே, மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது.  இந்தியாவிலும், தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் முகமதுவின் பிறந்த நாளன்று மதுக்கடைகள் மூட வேண்டும் என்ற கட்டுப்பாடு தடை இல்லை. அந்நிலையில், தமிழகத்தில், நபிகள் நாயகம் பிறந்த தினமான மிலாடி நபியையொட்டி பிப்ரவரி 27ம் தேதியன்று மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது[1]. பிப்ரவரி 27ம் தேதி மிலாடி நபி எனப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது[2]. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் பிறப்பித்துள்ள உத்தரவில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 27ஆம் தேதியன்று மதுக்கடைகள், ஹோட்டல்கள், மற்றும் கிளப்புகளில் உள்ள பார்கள் ஆகியவற்றை மூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது[3].

Miladi Nabi - Hyderabad

முகமதுவின் பிறந்த நாள் கொண்டாடலாமா, கூடாதா?: முகமதுவின் பிறந்த நாள் பற்றிய கணக்கீட்டிலும் சில வேறுபாடு இருப்பதால், மீலாடி நபி கொண்டாட வேண்டாம் என்ற கருத்தும், சில ஆசார முஸ்லிம்களிடம் கருத்துள்ளது. கடந்த இரண்டரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் தோற்றம் பெற்ற ஸலபி மற்றும் தேவ்பந்தி பிரிவுகளின் அறிஞர்கள் இதனை நிராகரிக்கின்றனர். முஸ்லிம் உலகின் பெரும்பான்மை இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன் நபி கொண்டாட்டத்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.  நபி பிறந்த தினத்தைக் கொண்டாடுவது அவசியமானது என்றுஅவர்கள் கருதுகின்றதுடன், அது போற்றத்தக்க நிகழ்வு என்ற ரீதியில் நோக்குகின்றனர். எனினும் ஸலபிகள் அல்லது வஹாபிகள் எனும் பிரிவினர் மீலாதுன் நபி கொண்டாட்டத்தை அது நபிகளாரின் வழிமுறைக்கு மாறானது என எதிர்க்கின்றனர்.

Miladi Nabi - Mumbai Cong MLA

வழக்கமாக ஒவ்வொரு வருடமும், ஒரு அறிக்கை வெளியிடப் படுகிறது: இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற ……… அன்று நபிகள் நாயகம் பிறந்த தினத்தினை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12-ன்படி மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25II(a) ஆகியவைகளின் கீழ், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் எனவும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் தவறினால், மதுபான விதி முறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Miladi Nabi - no liquor- 2015-Dinamalar

மதுபானம் அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும்[4]: இன்று மதுக்கடைகள் பெருகியுள்ளது. இஸ்லாமுக்கு அதில் அறவே விருப்பமில்லை. நபிகள் நாயகம், மது அருந்துதலின் தீமையைப் பற்றி மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார். மதுப்பழக்கம் வாழும் காலத்தில் மட்டுமல்ல, வாழ்க்கைக்குப் பிறகும் கடும் துயரங்களை நமக்குத் தரும்.  ஒருமுறை, நபிகள் நாயகத்திடம், தைலம் ஷர்ரி (ரலி) என்ற தோழர் வந்தார். “இறை தூதே! நாங்கள் குளிர்பிரதேசத்தில் வசிப்பவர்கள். குளிரைப் போக்க மதுவை அருந்துகிறோம்,” என்றார். அவரிடம் நாயகம், “”அந்த மதுவில் போதை இருக்கிறதா?” என்றார். “ஆம்’ என பதிலளித்த தோழரிடம், “அப்படியானால், நீங்கள் அதனைக் குடிக்கக்கூடாது,”என்றார் நாயகம்.  “சரி…நான் குடிக்கவில்லை. ஆனால், மக்கள் கேட்க மாட்டார்களே,” என்று தோழர் சொன்னதற்கு, “அப்படியானால் குடிப்பவர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்,” என்றார் நாயகம். குடிப்பவர்களுடன் சண்டை போட்டாவது அவர்களைத் திருத்த வேண்டும் என்பது நபிகளாரின் கொள்கை. மதுபானம் அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும். மது அருந்துபவன் தொழுகையை விட்டுவிடுவான்[5].

Islam prohibits alcohol

மது அருந்துவோருக்கு இவ்வுலகில் மட்டுமல்ல, மறுவுலகிலும் கடும் தண்டனை கிடைக்கும்[6]: ஒருமுறை மது அருந்திய ஒருவரை நபிகள் நாயகத்தின் முன் கொண்டு வந்தார்கள். நாயகம் அவர்களிடம், “இவரை அடியுங்கள்,” என்றார். சிலர் அவரை கையால் அடித்தனர். சிலர் துணியை முறுக்கி அடித்தனர். சிலர் செருப்பால் அடித்தனர். மது அருந்துவோருக்கு இவ்வுலகில் மட்டுமல்ல, மறுவுலகிலும் கடும் தண்டனை கிடைக்கும் என்கிறார் நாயகம்.  “மது அருந்திய நிலையில் ஒருவனது உயிர் பிரியுமானால், இறைவன் அவனுக்கு கவுத்தா என்னும் நதியில் இருந்து நீரைப் புகட்டுவான். “கவுத்தா’ என்றால், விலைமாதின் மர்ம ஸ்தானத்தில் இருந்து வெளிப்படும் நீர்,” என்று அவர் சொல்கிறார். அது மட்டுமல்ல! “மது அருந்துபவன் இறந்தால், அவனுக்கு மறுமையில், நரகவாசியின் சீழ், வியர்வை ஆகியவற்றை அல்லாஹ் அருந்தச் செய்வான்’ என்றும் குர்ஆன் எச்சரிக்கிறது[7]. மது தயாரிப்பவர், தயாரிக்கக் கூறுபவர், அருந்துபவர், அருந்தத் தருபவர், மதுவை எடுத்துக்கொண்டு போகிறவர், எடுத்துச் செல்லக் கூறுபவர், விற்பவர், மதுவை வாங்கிச் செல்பவர், மதுவை அன்பளிப்பாக தருபவர், மது விற்ற பணத்தில் உணவு உண்பவர் ஆகிய 10 பேரும் சபிக்கப்பட்டவர்கள் தான் என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்.

© வேதபிரகாஷ்

26-02-2010

07-12-2017 அன்று மாற்றப்பட்டது.

[1] தமிழ்.ஒன்,இந்தியா, மிலாடி நபி – 27ம் தேதி மதுக் கடைகளை மூட உத்தரவு, Published: Thursday, February 25, 2010, 13:22 [IST]

[2] https://tamil.oneindia.com/news/2010/02/25/liquor-shops-be-closed-miladi-nabi.html

[3] நக்கீரன், நாளை 27-02-2010: மதுக்கடைகள் மூட உத்தரவு!, 26-02-2010. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27641

[4] தினமலர், மது அருந்துபவர்களுடன் யுத்தம் செய்யுங்கள்! , ஆகஸ்ட் 11,2015,12:52  IST

[5] http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=9320

[6] விவேகம் நியூஸ், மது குடிப்பவர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்” – நபிகள் நாயகம், குமார் 18/08/2015

[7] http://www.vivegamnews.com/Page.aspx?id=14165