Posted tagged ‘கடையநல்லூர்’

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (2)!

பிப்ரவரி 12, 2017

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (2)!

three-trio-arrested-by-nia-in-mdurai-out-of-six

குண்டுவெடிப்புகளில் காணப்பட்ட தமிழக தொடர்புகள், இணைப்புகள், சம்பந்தங்கள்: தென்மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் உள்ள 6 நீதிமன்ற வளாகங்களில் தொடர்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் அனைத்தும் ஒரே விதமாக நிகழ்த்தப்பட்டதால் இந்த சம்பவத்தில் ஒரே குழுக்கள்தான் ஈடுபட்டு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பிர‌ஷர் குக்கர், டிபன் பாக்ஸ் மற்றும் வெடிபொருட்களையும் ஆய்வு செய்தபோது இந்த வகையான வெடிகுண்டுகள் ஏற்கனவே தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பிர‌ஷர் குக்கர் மற்றும் டிபன் பாக்ஸ்கள் மதுரையில் உள்ள பிரபல கடையில் வாங்கப்பட்டதையும் உறுதி செய்த அதிகாரிகள் தீவிரவாத குழுக்கள் மதுரையை மையமாக வைத்து செயல்பட்டு வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல்களையும் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் தான் தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் (28) கைது செய்யப்பட்டான்.

is-jihadi-from-tirunelveli-dinamani-cutting
தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் கைது மதுரையில் குண்டுகள் தயாரிக்கப்பட்டனவா? : இந்த நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு சந்தேகப்படும் நபர்களை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் துப்புதுலக்கப்பட்டது. மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்த முகம்மது அயூப் (வயது23), புதூர் மண்மலைமேட்டை சேர்ந்த கரீம்ராஜா (26), இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி (24) ஆகிய 3 பேர் கடந்த 27-ந்தேதி கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த என்ஜினீயர் தாவூத் சுலைமான் (28) கைது செய்யப்பட்டார். இதனிடையே தடை செய்யப்பட்ட அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த சுட்டு கொல்லப்பட்ட இமாம் அலியின் நெருங்கிய கூட்டாளி மதுரை நெல் பேட்டையை சேர்ந்த சம்சுதீன் (24) என்பவரையும் நேற்று கைது செய்தனர். இவரும் பல்வேறு சதி வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பிடிப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து சதி திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
subahani-kadayanallur-arrested-and-questioned-08-10-2016

திருவான்மியூரில் கைதான சுலைமான் தான் தலைவன்: பலத்த பாதுகாப்புடன் மதுரை அருகே உள்ள இடையப்பட்டி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை அலுவலகத்திற்கு அவர்களை அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஒவ்வொருவரையும் தனித்தனியாக பல மணி நேரம் விசாரித்தனர். தென்மாநிலங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் இதற்கான காரணங்கள் குறித்தும் 200-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு விசாரித்தனர். கைதான தீவிரவாதிகள் பின்லேடனின் அல்கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததும், அந்த இயக்கத்தில் உள்ள சர்வதேச குழுக்களுடன் அடிக்கடி போனில் பேசிய தும் தெரியவந்துள்ளது. மதுரையில் மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து சதி திட்டங்கள் குறித்து ஆலோசித்ததாகவும், அதன் பேரிலேயே குண்டு வெடிப்புகளை நடத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அவர்கள் வெடிபொருட்களை வைத்துக் கொள்வதில்லை. சதி திட்டத்தை நிறைவேற்ற அவ்வப்போது வெடிபொருட்களை வாங்குதை வழக்கப்படுத்தி உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது, மிகவும் கவனமாக எல்லா ஆதாரங்களையும் மறைப்பதில்-அழிப்பதில் திறமையாக செயல்படுகின்றனர்.

kadayanallur-subahani-haja-moideen-bomb-making

சுலைமான் செயல்பட்ட விதம்:  “தி பேஸ் மூமெண்ட்” என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கிய இவர்கள் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் அடிப்படை அமைப்பாக செயல்பட்டு வந்துள்ளனர். இதன் தலைவராக சுலைமான் செயல்பட்டுள்ளார். இவர்கள் சதி திட்டத்தை நிறைவேற்ற பெற்றோரிடம் சுற்றுலா செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறுவர். சில வாரங்கள் மறைந்திருந்து குண்டுவெடிப்புகளை நடத்தி விட்டு டிப்-டாப்பாக வீட்டுக்கு வருவதால் பெற்றோர்களுக்குகூட இவர்கள் மீது சந்தேகம் வரவில்லை. அடுத்த கட்டமாக இஸ்லாமியர்களுக்கு விரோதிகளாக செயல்படும் முக்கிய தலைவர்களை கொலை செய்யவும் இவர்கள் தீவிரமாக ஆலோசித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள இளைஞர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆக, இவ்வாறு தமிழகத்தின் பல நகரங்களில் செயல்படும் தீவிரவாதிகள், கேரளாவுக்கு சகஜமாக சென்று வரும் போக்கு, பெங்களூரில் உள்ள தொடர்புகள், ஹைதராபாத் (தெலிங்கானா) இணைப்புகள், இவை எல்லாமே சென்னையை தீவிரவாத-பயங்கரவாத பகுதியில் கொண்டு வந்துள்ளது.

moideen-is-operative-ie-cutting-25-10-2016

சிரியாவுக்கு சென்று .எஸ்சில் சேர திட்டம் போட்ட சதி சென்னையில் தான் நடந்தது[1]: என்.ஐ.ஏவின் ஆவணங்களிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ்சில் சேருவது என்ற திட்டம் / சதி “அபுதாபி திட்டம்” சென்னையில் தான் உருவாக்கப்பட்டது என்று தெரிகிறது[2]. முன்னர் ஜனவரி 2016ல் தமிழகம், தெலிங்கானாவில் கைதான எட்டு பேர்களிடம் நடத்திய விசாரணை, பின்னர் சரிபார்த்த விவரங்கள் மூலம் இது உறுதியாகிறது[3]. இதற்காகாக வேண்டிய பணம் பலவழிகளில் திரட்டப் படுகின்றன. முஸ்லிம் வியாபாரிகளிடமிருந்து நிதி வசூலிக்கப் படுகிறது. ஐ.எஸ்சிற்கு இப்பணம் உதவுகிறது என்று தெரிந்தும் கொடுப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இதனால் தான், யாராவது கைதானாலும், அதைப் பற்றிய செய்திகள் வந்தாலும், ஒன்றுமே நடக்காதது முஸ்லிம்கள், முஸ்லிம் அமைப்புகள், போராட்ட குழுக்கள் இருக்கின்றன. சிரியா மீது அமெரிக்கா, ரஷ்யா குண்டு வீசினால் போராட்டம் நடத்தும் இவர்கள், இச்செய்திகள் வரும் போது காணாமல் போகிறார்கள்.

Name in English பெயர் ஊர் / மாநிலம்
Adnan Hussain from Karnataka[4] அட்னன் ஹுஸைன் பட்கல், கர்நாடகா
Mohammed Farhan from Maharashtra மொஹம்மது பர்ஹன் மஹாராஷ்ட்ரா
Sheikh Azhar Al Islam from Kashmir. ஷேக் அஸ்ர் அலி காஷ்மீர்
Abdul Basith, a youth from Hyderabad அப்துல் பஸித் ஹைதரபாத், தெலிங்கானா
Sultan Armar சுல்தான் அர்மர்
Shafi Armar. சஃபி அர்மர்
Subahani Haja Mohiddheen சுபஹனி ஹாஜா மொஹிதீன் கடையநல்லூர், தமிழகம்
Suwalik Mohammed சுவாலிக் முகமது (26) கொட்டிவாக்கம், சென்னை
Suliman  சுலைமான் திருவான்மியூர்

இப்படி சென்னையிலேயே கைது செய்யப்பட்டதும், இதனை மெய்ப்பிக்கிறது. அப்படியென்றால், சென்னையில் உள்ளவர்களின் சம்பந்தமும் இதில் வெளியாகிறது.

© வேதபிரகாஷ்

12-02-2017

sulaiman-house-searched-in-chennai-where-incriminating-documents-seized

[1] One.India.com, REVEALED: Conspiracy to recruit into the IS hatched in Chennai, Written by: Vicky Nanjappa, Published: Saturday, February 11, 2017, 11:33 [IST]

[2] http://www.oneindia.com/india/revealed-conspiracy-to-recruit-into-the-is-hatched-in-chennai-2344903.html

[3] According to NIA case records, a criminal conspiracy was hatched “in Chennai and other parts of the country by forming a terrorist gang which raised and received funds, organised camps, recruited and trained some persons, and facilitated their travel to Syria, to join ISIS”.

Indian Express, Abu Dhabi module recruited nine Indians for Islamic State, sent some to Syria: NIA probe, Written by Johnson T A | Bengaluru | Published:February 11, 2017 3:59 am.

http://indianexpress.com/article/india/abu-dhabi-module-recruited-nine-indians-for-islamic-state-sent-some-to-syria-nia-probe-4518611/

[4] Adnan Hussain, 34, an accountant from Bhatkal town who had been working in the UAE since 2012, had emerged on the radar of police after he was found to have transferred funds to the account of Abdul Basith, a youth from Hyderabad who had been recruited to join the IS by Indian recruiters Sultan Armar and Shafi Armar. Adnan Hussain, alias Adnan Damudi, transferred funds to an account linked to Basith to enable him to travel to Syria along with four others recruited from Hyderabad but the trip came to an abrupt end after the families of the youths got wind of their plan and sought help to bring them back.

 

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (1)!

பிப்ரவரி 12, 2017

ஐ.எஸ்.சில் ஆள்-சேர்ப்பதற்கான சதி-திட்டம் சென்னையில் தீட்டப்பட்டது: தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழிகளும் வெளிப்படுகின்றன (1)!

gold-bars-seized-and-four-arrrested-from-ap-05_02_2017_013_006

தெலிங்கானாசென்னை .எஸ் தொடர்புகள்: ஜல்லிக்கட்டு-சசிகலா விவகாரங்கள் ஐ.எஸ்.தொடர்புள்ளவர்கள் கைதான விவரங்கள், சென்னையில் சதி-திட்டம் தொஈட்டியது முதலிய விவாகரங்களை பின் தள்ளிவிட்டடு அல்லது சென்னைவாசிகள் ஜாலியாக சசிகலா மோகத்தில் மூழ்கி விட்டனர் என்றே தெரிகிறாது. தெலிங்கானாவில் முஸ்லிம் மக்கட்தொகை கனிசமாக இருக்கும் நிலையில் அங்கு பிரிவினைவாதம், தீவிரவாத நடவடிக்கைகள், பிரச்சாரங்கள் முதலியவையும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஐ.எஸ்.சில் சேருவது, அதற்கான ஆட்சேர்ப்பு நடத்துவது, நிதியுதவி செய்வது என்பதெல்லாம் ஒரு பின்னப்பட்ட வலை போல வேலைகள் நடந்து வருகின்றன. தங்கம், போதை மருந்து, போலி ரூபாய் புழக்கம் என்ற ரீதியில் அவர்கள் நன்றாகவே வேலைசெய்து வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து தமிழக தலைநகர் சென்னைக்கு தனியார் சொகுசு பஸ்ஸில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னையில் செயல்படும் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு நேற்று முன்தினம் இரவு (02-02-2017) ரகசிய தகவல் கிடைத்தது[1]. இதனையடுத்து, மத்திய நுண்ணறிவு பிரிவு எஸ்பி அருண்குமார், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சனுக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து, 03-02-2017 அன்று அதிகாலை 3 மணி முதல் அருண்குமார் மற்றும் பொன்னேரி டிஎஸ்பி மாணிக்கம் ஆகியோர் தலைமையிலான போலீஸார், இரு குழுக்களாக கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திரா- தமிழக எல்லையில் உள்ள ஆரம்பாக்கம் பகுதியில், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

isis-linked-11-arrested-in-mp-11_02_2017_001_005

03-02-2017 அன்று தங்கத்துடன் பிடிபட்ட முகமது இக்பால்: இந்த வாகன சோதனையின் போது, காலை 6 மணி அளவில், ஆந்திர பகுதியிலிருந்து, சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பஸ் ஒன்றை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, தெலங்கானா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த அந்த தனியார் சொகுசு பஸ்ஸில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த 4 இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்[2]. இளைஞர்களின் பைகளை முழுமையாக சோதனை செய்தனர். இதில், துணிகள் மற்றும் காய்கறிகளின் அடியில் தலா 168 கிராம் எடை கொண்ட 20 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது[3]. இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 4 பேரையும் ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர் போலீஸார். அந்த விசாரணையில் தெரியவந்த விவரம் வருமாறு: சென்னை – மயிலாப் பூரை சேர்ந்த-

  1. காஜா நஜிமுதீன் (42),
  2. சகாபுதீன் (38),
  3. ஜமாலுதீன் (30),
  4. முகமது இக்பால் (35)

ஆகிய அந்த 4 பேரும் கூலிக்காக தங்க கட்டிகளை தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு கடத்தியது தெரியவந்தது[4]. இதனைதொடர்ந்து, தலா 168 கிராம் எடை கொண்ட 20 தங்க கட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த எடை 3 கிலோ 360 கிராம் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சாதாரண ஆட்களிடம் எப்படி இப்படி ஒரு கோடி மதிப்பில் தங்கக் கட்டிகள் இருக்க முடியும், அவற்றை சென்னைக்குக் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பதையும் யோசிக்கத் தக்கது.

gold-bars-seized-comimg-from-telingana-05_02_2017_004_007

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது இக்பால் .எஸ்.அமைப்பிற்கு தாராளமாக நிதியுதவி / “தீவிரவாத பணம்” [Terror money / Terror funding] அளித்துள்ளான்: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவனிடம், ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இதுகுறித்து, ராஜஸ்தான் மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு, எஸ்.பி., விகாஸ் குமார், ஜெய்ப்பூரில் 05-02-2017 அன்று நிருபர்களிடம் கூறியதாவது[5]: “முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான, .எஸ்.,சுக்கு, இந்தியாவில் ஆதரவு திரட்டிய பயங்கரவாதி, ஜமீல் அஹமது, கடந்தாண்டு நவம்பரில் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடந்த விசாரணையில், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது இக்பாலுக்கு, 35, .எஸ்., அமைப்புடன் நெருங்கிய தொடர்புள்ளது தெரிய வந்தது. இக்பாலிடம் இருந்து, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவன் மீது, டி.ஆர்.., எனப்படும் வருவாய் புலனாய்வுத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, இக்பாலை, ஜெய்ப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்த, பயங்கரவாத தடுப்புப் பிரிவு திட்டமிட்டு உள்ளது”, இவ்வாறு அவர் கூறினார்[6]. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, முகமது இக்பால் ஐ.எஸ்.அமைப்பிற்கு தாராளமாக நிதியுதவி அளித்துள்ளான்[7]. இதுவரை மும்முறை நிதியுதவி செய்தது தெரிய வந்துள்ளதால், அவற்றின் விவரங்கள், ஆதாரங்கள் முதலியவற்றை கைப்பற்ற ராஜஸ்தானிலிருந்து துப்பறியும் போலீஸார் வந்தனர்[8]. இந்நிலையில் தான் இக்பால் தங்கத்துடன் பிடிபட்டுள்ளான். ஆக, ஐ.எஸ்,சுக்கு பணம் பட்டுவாடா / நிதியுதவி செய்து வந்த திருவள்ளூர் முகமது இக்பால் தான் இப்பொழுது பிடிபட்டுள்ளான். இதை “தீவிரவாத பணம்” [Terror money / Terror funding] என்றேயாகிறது. நவம்பரில் கைதானவர்களின் தொடர்பும் இதில் பினைந்துள்ளது. சுபஹனி ஹாஜா மொஹிதீன் கதை இதில் உள்ளது.

isis-terror-links-with-chennai-dccan-chronicle-chn_2017-02-08_maip3_6

ஐசிஸ் தீவிரவாதி கடையநல்லூர் நகைக்கடையில் எப்படி சாதாரணமாக வேலை செய்து கொண்டிருக்க முடியும்?: சென்னைக்கும், தமிழகத்திற்கும் தீவிரவாதத்திற்கும் உள்ள தொடர்புகளும் திகைக்க வைக்கின்றனர். ஏற்கெனவே திருவான்மியூர், கொட்டிவாக்கம் முதலிய பகுதிகளில் சென்ற நவம்பர் 2016ல் சிலர் கைது செய்யப்பட்டனர். சுபஹனி ஹாஜா மொஹிதீன் ஏப்ரல் 8, 2015ல் இராக்கில் இருந்தான், செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பினான், அக்டோபர் 2016ல் திருநெல்வேலியில் கைதானான் என்ற நிலையில் சுபஹனி ஹாஜா மொஹிதீன் இருப்பதை எப்படி பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியோருக்குத் தெரியாமல் இருக்கும். ஐசிஸ்.சுக்கு ஆதரவாக போரிட்டு, திரும்பி வந்தால், எந்தவித சட்டங்களையும் மீறவில்லை என்று, அவன், மறுபடியும் இந்தியாவில் வேலை செய்கிறான் என்பது சரியானதா என்றும் நோக்கத்தக்கது. உள்ளூர் போலீஸாருக்கு தெரியுமா, தெரிவிக்கப்பட்டதா முதலிய விவரங்களும் மர்மமாகவே இருக்கின்றன. சிரியாவில் தீவிரவாதத்திற்குத் துணைபோனான், தீவிரவாதியாக இருந்தான் என்றால், அங்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லையா? இந்திய தூதரகம் மூலம் திரும்பியுள்ளான் என்பது, இன்னும் மர்மமாக இருக்கிறது.  வேலைக்குப் போகிறேன் என்று சென்று ஓடிவந்தவர்களுக்கும், ஐசிஸில் சேர்ந்து போராடி, திரும்பவந்தவனுக்கும் வித்தியாசம் இல்லையா? இந்தியா எந்த அளவுக்கு தாக்குதல்களுக்கு மிகவும் மென்மையாக குறியாக இருக்கிறது என்பதை மறுபடியும் தெரிந்து கொள்ள அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால், துரோகம் செய்யும் இந்தியர்கள் கவலைப்படப் போவதில்லை. நவம்பரில் கைதானவர்களில் இன்னொருவன் – சுவாலிக் முகமது.

swalih-mohammed-working-in-club-mahindra-isis-link-arrested

சென்னை கொட்டிவாக்கத்தில் சுவாலிக் முகமது கைது (அக்டோபர் 2016): சுவாலிக் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா (26) என்பவரும் ஒருவர். தற்போது, இவர் சென்னை கொட்டிவாக்கம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் அன்னை சத்யா தெருவில் குணசேகர் என்பவரில் வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். இதையடுத்து, சுவாலிக் முகம்மது வீட்டில் 03-10-2016 திங்கள்கிழமை அதிகாலை திடீர் சோதனை நடைபெற்றது. விசாரணையில் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா குறித்து கிடைத்த தகவல்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது: “12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர், 2010-ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசிக்கிறார். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள அவர், திருவல்லிக்கேணியில் மேன்சன்களிலும், கொட்டிவாக்கத்தில் தனது நண்பர்களின் அறைகளிலும் தங்கியுள்ளார். ராயப்பேட்டை ஓயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இயங்கும் ஒரு தனியார் ரிசார்ட் அலுவலகத்தில் (மஹிந்த்ரா கிளப்[9]) 2013ஆம் ஆண்டு முதல் கணினி இயக்குபவராக வேலை செய்து வந்திருக்கிறார். வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது, கேரள கோழிக்கோடைச் சேர்ந்த ஜிம்சின்னாவை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.

swalih-mohammed-isis-link-arrested

கத்தாருக்கு செல்ல திட்டம் போட்ட சுவாலிக் முகமது: பின்னர், கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது, பிரசவத்துக்காக 2014ஆம் ஆண்டு ஜிம்சின்னா கோழிக்கோட்டுக்கு சென்றபோது, முகம்மது வீட்டை காலி செய்துவிட்டு தனது நண்பர்கள் அறையில் தங்கினார். இந்த நிலையில், கடந்த ஜூனில் சென்னைக்கு திரும்பி வந்தபோது, குணசேகரின் வீட்டின் முதல் தளத்தில் உள்ள வீட்டை மாதம் ரூ.7 ஆயிரம் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். வாரத்துக்கு இரு முறை வெளியூருக்கு செல்லும் அவர், வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளார். சந்தேகக்குரிய வகையில் சிலர் அடிக்கடி இவரை பார்த்துவிட்டு செல்வார்களாம். ஒரு மாதத்துக்கு முன்பு வெளிநாடு செல்ல இருப்பதால், தனது குடும்பத்தை திருச்சூரில் வைத்துவிட்டு, வீட்டை காலி செய்ய உள்ளதாக குணசேகரிடம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் கத்தார் நாட்டுக்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். கத்தாருக்கு சென்று, ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் இருக்கும் சிரியாவுக்கு தப்பிச் சென்று ஆயுதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்துள்ளார். இந்த நிலையில், தென் மாநிலங்களில் ஏதேனும் சதிச் செயல் நடத்த திட்டமிருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றனர்.

© வேதபிரகாஷ்

12-02-2017

habeus-corpus-petition-dismissed-madurai-terror-dm-01_12_2016_003_008

[1] தினத்தந்தி, ஆந்திராவில் இருந்து சொகுசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்க கட்டிகள் சிக்கின, பிப்ரவரி 05, 01:16 AM.

[2]  http://www.dailythanthi.com/News/State/2017/02/05011622/Luxury-bus-from-Andhra-Pradesh-and-Rs-1-crore-smuggled.vpf

[3] தமிழ்.இந்து, தெலங்கானாவில் இருந்து சென்னைக்கு 3 கிலோ தங்கம் கடத்திய 4 பேர் கைது, Published: February 5, 2017 09:32 ISTUpdated: February 5, 2017 09:32 IST

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article9522479.ece

[5] தினமலர், .எஸ்., அமைப்புடன் தொடர்பு : தமிழக இளைஞன் சிக்கினான், பதிவு செய்த நாள். பிப்ரவரி.6, 2017. 23.50.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1705753

[7] A 40-year-old man from Chennai who was arrested along with three others while trying to smuggle Rs 1 crore worth gold bars from Rajamundhry on Saturday (03-02-2017) morning at Arambakkam near Chennai was picked up for questioning by central agencies for his suspected links with ISIS. Mohamed Iqbal has been picked up after he was found donating generously to ISIS. He had made three donations to ISIS and a team of IB officials from Rajasthan had come to trace him based on evidence of his transactions. A team of Intelligence Bureau officials on Saturday (03-02-2017) nabbed four people with 3.3  kg of 20 gold bars worth Rs 1 crore, in an omnibus coming from Rajahmundry to Chennai at Arambakkam near Gumudipoondi in neighboruing Thiruvallur district. All the four were later handed over to DRI for further action with regard to smuggling while Mohamed Iqbal was taken for further questioning him on money donation to ISIS.

Deccan Chronicle,Chennai: Gold smuggler picked up for ISIS link,  Published Feb 8, 2017, 6:15 am IST; Updated Feb 8, 2017, 6:23 am IST.

[8] Deccan Chronicle,Chennai: Gold smuggler picked up for ISIS link,  Published Feb 8, 2017, 6:15 am IST; Updated Feb 8, 2017, 6:23 am IST.

http://www.deccanchronicle.com/nation/in-other-news/080217/chennai-gold-smuggler-picked-up-for-isis-link.html

[9] Club Mahindra, Westcott Rd, Express Estate, Royapettah, Chennai, Tamil Nadu 600002.

Mahindra Holidays & Resorts India Limited, Mahindra Towers, 2nd Floor, 17/18, Patullos Road, Mount Road, Chennai – 600 002. Tamilnadu, India.Tel : +91 (044) 3988- 1000; Fax : +91 (044) 3027- 7778.

 

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் – ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (1)?

ஒக்ரோபர் 26, 2016

கடையநல்லூர், 26/11 மும்பை, ஹைதரபாத் மற்றும் பாரிஸ் தொடர்புகள் ஐசிஸ்.ன் கைகள் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்துவது எப்படி (1)?

subahani-haja-moideen-isis-instagram-links

அபு நைஸா மற்றும் அபு அல்ஸ்வீடி பெண்களுடன் தொடர்பு கொண்டு சுபஹனி ஹாஜா மொஹிதீன் ஐசிஸ்ஸில் சேர்ந்தது: அல்-மக்ரபி 2015ல் அபு பக்கர் அல்-பாக்தாதி [Abu Bakr al-Baghdadi] என்பவன் இஸ்லாமிய அரசுக்கு [the land of Islamic State of Iraq and Syria (ISIS)] குடியேறி, அந்நாட்டிற்காகப் போராடுமாறு அழைப்பு விடுத்தான். +2 படித்து கடைகள் மற்றும் ஆடையுற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்த சுபஹனி ஹாஜா மொஹிதீன் [Subahani Haja Moideen] இதற்கு ஈர்க்கப்பட்டான். திருமணமாகியும், இணைதளத்தில் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தான். ஸ்வீடன் நாட்டு பெண் ஒருத்தி உம்ரா / ஹ்ஜ் யாத்திரை செய்வது எப்படி என்று சந்தேகம் கேட்டபோது, அவளுடன் நண்பன் ஆனான்.  அதாவது “ஹஜ்-யாத்திரை” செல்வது என்பது “மோசுலுகுச் செல்வது” என்பது போன்ற பரிபாஷைகளை வைத்துள்ளனர் போலும். மேலும் பெண்களை வைத்து ஆட்களைப் பிடிப்பதும், செக்ஸ்-தூண்டில் போட்டு பிடிக்கின்றனர் என்பதும் தெரிகிறது. இதே போல அபு நைஸா அல்-மக்ரபி [Abu Naisha al Maghrabi] மற்றும் அபு அல்-ஸ்வீடி [Abu al-Swedi] என்ற பெண்களுடன் தொடர்பு துரித தொடர்பு சேவை மூலம் [instant messaging app Telegram] கிடைத்தது. துருக்கிக்கு வந்து விட்டால், அங்கிருந்து ஐசிஸ் நாட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்வதாகவும், அங்கு அவனுக்கு சகல வசதிகளுடன் வேலை கிடைக்கும் என்று உத்தரவாதம் அளித்தனர்.

 gone-for-hajj-returned-as-isis-terrorist

ஹஜ் யாத்திரை செல்கிறேன் என்று மோசுலுக்குச் சென்றது: அதன்படியே, மொஹித்தீன் தனது வீட்டை ரூ.18 லட்சங்களுக்கு விற்ருவிட்டு, இஸ்தான்புல்லிற்கு பறந்தான். வீட்டில் ஹஜ் யாத்திரைக்கு செல்வதாக கூறிக்கொண்டான். தாய்-மனை எல்லோரும் சந்தோஷமாகத்தான் அனுப்பி வைத்தனர் போலும்! இஸ்தாபுல்லில் ஒரு வீட்டில் தங்க வைத்தபோது, தன்னைப் போன்று மொரோக்கோ, இங்கிலாந்து, ரஷ்யா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து வந்தவர்களை சந்தித்தான். அங்கிருந்து துருக்கி சிரியா எல்லையில் இருக்கும், ரக்தாத் பகுதியில் உள்ள டெல் அபயது [Tell Abyad on Turkey-Syria border in Raqqa] என்ற நகரத்தை அடைந்தனர். அவர்களுக்கு இஸ்லாம், ஜிஹாத், போர்முறை முதலியவை சொல்லிக் கொடுக்கப்பட்டது. பயிற்சியும் அளிக்கப்பட்டது. பிறகு, சிரிய படைகளுடன் போரிட அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போரில் குண்டு போட்டபோது, தன்னுடன் இருந்த இருவர் கருகி உயிரிழந்தனர். இதைக் கண்டதும், மொஹித்தீன் அலறிவிட்டான். சாவின் கொடூரம், போரின் பயங்கரம் முதலியவற்றை புரிந்து கொண்டான். இதனால் தான் அவன் திரும்பி ஓடி வந்து விட்டான் என்று கூறப்படுகிறது.

 mosques-dargahs-and-madrassas-should-teach-against-terrorism-to-create-awareness-among-the-muslim-younth

மோசுல்லுச் சென்று திரும்பியவன் “ஹாஜா” எப்படி ஆவான்?: சுபஹனி ஹாஜா மொஹிதீன் என்று குறிப்பிடுவதே கேவலமானது, மோசமானது கூட, ஏனெனில், அவன் ஹஜ்ஜிற்கு சென்று திரும்பவில்லை. அதனால் அவனை “ஹாஜா” என்று சொல்வதே தவறு. மோசுலுக்குத்தான் சென்று திரும்பியிருக்கிறான். திரும்பி ஓடி வந்தான் என்பதைவிட, அவன், வேறொரு காரணத்திற்காகத்தான் வந்துள்ளான் என்பது தெரிகிறது. ஏனெனில், அவன் தொடர்ந்து, ஐசிஸுடன் தொடர்புகள் வைத்துக் கொண்டு தீவிரவாதத்திற்காக வேலைசெய்து வந்தது, அவன் “டபுள்-ஏஜென்ட்” அல்லது ஐசிஸ்-உளவாளி என்ற முறையில் செயல்படுவதாக தெரிய வந்தது. ஒருவன் எப்படி இருந்தாலும், ஐசிஸுக்கு உதவுகிறான் என்றால் அவனை, பட்டியிலில் வைத்துக் கொண்டு கவனிக்கப்படுவார்கள். தீவிரவாதியாகி விட்டப் பிறகு, அத்தொழிலில் ஈடுபடமாட்டான் என்பதெல்லாம் மாயை. ஆகவே, இந்திய தூதரகம், ஐ.பி, முதலியவற்றை ஏமாற்றவே அத்தகைய பொய்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவனைப் போன்று, இன்னும் ஏத்தனை உளவாளிகள், ஐசிஸ் ஏஜென்டுகள் உள்ளனர் என்று தெரியவில்லை.

 %e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%b9%e0%ae%a9%e0%ae%bf

தமிழக போலீஸாருக்கு ஒன்றுமே தெரியாது என்பது ஆச்சரியமாக உள்ளது: மேலும் தமிழக போலிஸார் அவன் சிரியாவில் போரிடவில்லை என்றெல்லாம் வக்காலத்து வாங்கியதும் வியப்பாக இருந்தது[1]. ஒருவேளை, வழக்கம் போல தீவிரவாதத்தில் கூட “செக்யூலரிஸ” முறைகளை கையாளுகிறார்கள் போலும். சென்னையிலேயே ஐசிஸ்காரகள் பிடிப்பட்ட பிறகு, மெத்தனமாக இருப்பதும் வேடிக்கைதான். இஸ்தான்புல் இந்திய தூதரகத்தில் கூட மொஹித்தீன் பொய் சொல்லியிருக்கிறான். தான் ஒரு சுற்றுலா பயணி என்றும், பாஸ்போர்ட் மற்றும் உடமைகள் காணாமல் போய்விட்டன என்று கூறிக் கொண்டு, திரும்பிச் செல்ல அவசர சான்றிதழ் பெறுறுள்ளான்[2]. இதன்படிதான் செப்டம்பர் 22, 2015 அன்று மும்பைக்கு வந்து, கடையநல்லூருக்குச் சென்றுள்ளான். ஐ.பி இவ்வாறான “அவசர சான்றிதழுடன்” திரும்பிவரும் நபர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கையும் விட்டது. ஆனால், தமிழக போலீஸ் உயரதிகாரிகள், அவன் சிரியாவுக்குச் சென்று திரும்பியது எல்லாம் தெரியாது என்று சாதிக்கின்றனர்[3]. இஸ்தான்புல் தூதரகம் கூட தமிழக போலீஸாருக்கு விவரங்களை அனுப்பியிருக்கலாம்.

paris-bombers-7-identified

சுபஹனி மொஹிதீனின் பாரிஸ் குண்டுவெடிப்பவர்களின் தொடர்புகள்: தமிழக முஸ்லிம் இளைஞனுக்கும் பாரிஸ் குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கும் இருக்கும் தொடர்புகள் திடுக்கிட வைக்கின்றன. ஆனால், அவனை, தமிழகத்தில் பெற்றோர், உற்றோர், மற்றோர் போற்றி வளர்ந்துள்ளனர் என்பது, அவர்களது ஜிஹாதி மனப்பாங்கைத் தோலுரித்துக் காட்டுகிறது. ஒருவேளை இவர்கள் தமது அரசியல், பணம், செல்வாக்கு வைத்து, இவனது நடவடிக்கைகளை மறைத்திருப்பார்கள் போலும்! அதனால் தான், தமிழக போலீஸார் தமக்கு தெரியாது என்கிறார்கள். ஐசிஸ் இஸ்லாத்திற்கு எதிரி என்று சில நேரங்களில் சில முஸ்லிம்கள் கூறிக் கொண்டாலும், அவர்கள் ஆதரவு கொடுப்பது தான் அதிகமாக உள்ளது என்பது, இத்தகைய ஒத்துழைப்புகளில் வெளிப்படுகிறது. திருநெல்வேலி, கடைய நல்லூரில் கைதான, மொஹிதீம் தனக்கு பாரிஸ் குண்டுவெடிப்பில் பங்கு கொண்ட அப்துல் அஹமது அபாவைத் [Abdelhamid Abaaoud], ஒமர் இஸ்மாயில் மொஸ்தபி [Omar Ismail Mostefei] மற்றும் சலாஹ் அப்சலாம் [Salah Abdeslam] முதலியோரை சந்தித்துள்ளதாக ஒப்புக் கொண்டான்[4]. அப்துல் அஹமது அபாவைத் நவம்பர் 2015ல் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டான். சலாஹ் அப்சலாம் மார்ச் 2016ல், மோலன்பெக், பெல்ஜியத்தில் [Molenbeek, Belgium] பிடிபட்டு, பாரிஸ் போலீஸ் காவலில் உள்ளான். ஒமர் இஸ்மாயில் மொஸ்தபி பற்றிய விவரங்களை சொல்ல அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

kadayanallur-org-says-kerala-is-terrorist-arrested-03-10-2016

ஐசிஸ் தீவிரவாதி கடையநல்லூர் நகைக்கடையில் எப்படி சாதாரணமாக வேலை செய்து கொண்டிருக்க முடியும்?: ஏப்ரல் 8, 2015ல் இராக்கில் இருந்தான், செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பினான், அக்டோபர் 2016ல் திருநெல்வேலியில் கைதானான் என்ற நிலையில் சுபஹனி ஹாஜா மொஹிதீன் இருப்பதை எப்படி பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியோருக்குத் தெரியாமல் இருக்கும். ஐசிஸ்.சுக்கு ஆதரவாக போரிட்டு, திரும்பி வந்தால், எந்தவித சட்டங்களையும் மீறவில்லை என்று, அவன், மறுபடியும் இந்தியாவில் வேலை செய்கிறான் என்பது சரியானதா என்றும் நோக்கத்தக்கது. உள்ளூர் போலீஸாருக்கு தெரியுமா, தெரிவிக்கப்பட்டதா முதலிய விவரங்களும் மர்மமாகவே இருக்கின்றன. சிரியாவில் தீவிரவாதத்திற்குத் துணைபோனான், தீவிரவாதியாக இருந்தான் என்றால், அங்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லையா? இந்திய தூதரகம் மூலம் திரும்பியுள்ளான் என்பது, இன்னும் மர்மமாக இருக்கிறது.  வேலைக்குப் போகிறேன் என்று சென்று ஓடிவந்தவர்களுக்கும், ஐசிஸில் சேர்ந்து போராடி, திரும்பவந்தவனுக்கும் வித்தியாசம் இல்லையா? இந்தியா எந்த அளவுக்கு தாக்குதல்களுக்கு மிகவும் மென்மையாக குறியாக இருக்கிறது என்பதை மறுபடியும் தெரிந்து கொள்ள அவகாசம் கிடைத்துள்ளது. ஆனால், துரோகம் செய்யும் இந்தியர்கள் கவலைப்படப் போவதில்லை.

© வேதபிரகாஷ்

26-10-2016

moideen-is-operative-ie-cutting-25-10-2016

[1] Police officers from Tamil Nadu said Moideen did not take part in any armed conflict either in Mosul or Raqqa, because he was physically inept and also because he questioned IS strategies.

http://www.dnaindia.com/india/report-the-isis-mirage-2266839

[2] At the Indian embassy, Moideen, too, pretended to be an Indian tourist who had lost his passport and luggage. The Indian embassy, after checking his background, issued him an Emergency Certificate that allowed him to travel back. He returned on September 22 to Mumbai and headed to his village in Kadayanallur in Tamil Nadu’s Tirunelveli district. Although the Intelligence Bureau has issued a circular that states should be notified about any EC issued to any of their residents, senior officials from Tamil Nadu police said they were in the dark about Moideen’s journey to Syria and his return.http://www.dnaindia.com/india/report-the-isis-mirage-2266839

[3] Although the Intelligence Bureau has issued a circular that states should be notified about any EC issued to any of their residents, senior officials from Tamil Nadu police said they were in the dark about Moideen’s journey to Syria and his return.http://www.dnaindia.com/india/report-the-isis-mirage-2266839

[4] DNA-Daily News & Analysis, ‘Indian ISIS operative Subahani Haja Moideen knew Paris bombing accused, Sun, 23 Oct 2016-03:30pm , PTI.

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக-சென்னை தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – கணினி வேலை பார்த்தாலும், ஜிஹாதியில் குறியாக இருந்த தீவிரவாதி (3)

ஒக்ரோபர் 13, 2016

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழகசென்னை தொடர்புகள்உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறதுகணினி வேலை பார்த்தாலும், ஜிஹாதியில் குறியாக இருந்த தீவிரவாதி (3)

t-swalih-mohammed-an-isis-sympathiser-lived-in-this-house-sathya-street-kottivakkam-chennai

கொட்டிவாக்கத்தில் வசித்த தா. சுவாலிக் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா (26): பிடிபட்ட ஐந்து பேரையும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து, என்.ஐ.ஏ போலீஸ் அதிகாரிகள் கடந்த இரு நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர்.  நேற்று 3வது நாளாக 5 பேரிடமும் விசாரணை நடத்தினர். 5 பேரில் இரண்டு பேர், கோழிக்கோட்டில் கைதான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் பேஸ்புக் பக்கத்தின் சாட் (தகவல் பரிமாறும் தனிப்பட்ட பிரிவு) மூலம் பல்வேறு தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.  மேலும், பரிமாறிக்கொண்ட தகவல்களை உடனுக்குடன் அழித்துள்ளனர்[1]. இவர்களில் ஒருவர் கேரள மாநிலம் திருச்சூர் வெங்கநல்லூரைச் சேர்ந்த தா. சுவாலிக் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா (26) என்பவரும் ஒருவர். தற்போது, இவர் சென்னை கொட்டிவாக்கம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.நகர் அன்னை சத்யா தெருவில் குணசேகர் என்பவரில் வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். இதையடுத்து, சுவாலிக் முகம்மது வீட்டில் 03-10-2016 திங்கள்கிழமை அதிகாலை திடீர் சோதனை நடைபெற்றது. அப்போது அவரது மனைவி ஜிம்சின்னா (24), இரண்டரை வயது மகன் ஜின்னா ஆகியோர் இருந்தனர். இதில் ஜிம்சின்னாவிடம் சுமார் 3 மணி நேரமும், வீட்டின் உரிமையாளர் குணசேகர் குடும்பத்தினரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சில முக்கிய ஆவணங்களையும், ஜிம்சின்னா பயன்படுத்திய செல்லிடப்பேசி, சுவாலிக் முகம்மது பயன்படுத்திய மடிக்கணினி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

swalih-mohammed-working-in-club-mahindra-isis-link-arrested

சென்னைகொட்டிவாக்கத்தைச் சேர்ந்த முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனாவிடம் விசாரணை: விசாரணையில் முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா குறித்து கிடைத்த தகவல்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியதாவது:- 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள அவர், 2010-ஆம் ஆண்டு முதல் சென்னையில் வசிக்கிறார். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ள அவர், திருவல்லிக்கேணியில் மேன்சன்களிலும், கொட்டிவாக்கத்தில் தனது நண்பர்களின் அறைகளிலும் தங்கியுள்ளார். ராயப்பேட்டை ஓயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இயங்கும் ஒரு தனியார் ரிசார்ட் அலுவலகத்தில் (மஹிந்த்ரா கிளப்[2]) 2013ஆம் ஆண்டு முதல் கணினி இயக்குபவராக வேலை செய்து வந்திருக்கிறார். வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது, கேரள கோழிக்கோடைச் சேர்ந்த ஜிம்சின்னாவை காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். பின்னர், கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது, பிரசவத்துக்காக 2014ஆம் ஆண்டு ஜிம்சின்னா கோழிக்கோட்டுக்கு சென்றபோது, முகம்மது வீட்டை காலி செய்துவிட்டு தனது நண்பர்கள் அறையில் தங்கினார். இந்த நிலையில், கடந்த ஜூனில் சென்னைக்கு திரும்பி வந்தபோது, குணசேகரின் வீட்டின் முதல் தளத்தில் உள்ள வீட்டை மாதம் ரூ.7 ஆயிரம் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.

swalih-mohammed-isis-link-arrested

முகம்மது என்ற யூசுப் என்ற அபு ஹசனா கத்தார் செல்ல திட்டம்: வாரத்துக்கு இரு முறை வெளியூருக்கு செல்லும் அவர், வேலைக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளார். சந்தேகக்குரிய வகையில் சிலர் அடிக்கடி இவரை பார்த்துவிட்டு செல்வார்களாம். ஒரு மாதத்துக்கு முன்பு வெளிநாடு செல்ல இருப்பதால், தனது குடும்பத்தை திருச்சூரில் வைத்துவிட்டு, வீட்டை காலி செய்ய உள்ளதாக குணசேகரிடம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் கத்தார் நாட்டுக்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். கத்தாருக்கு சென்று, ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் இருக்கும் சிரியாவுக்கு தப்பிச் சென்று ஆயுதப் பயிற்சி பெற திட்டமிட்டிருந்துள்ளார். இந்த நிலையில், தென் மாநிலங்களில் ஏதேனும் சதிச் செயல் நடத்த திட்டமிருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றனர்.

Logo_of_Boko_Haram.svg

Logo_of_Boko_Haram.svg

முகநூலில் வளர்ந்த தொடர்பு தீவிரவாதத்திற்கு தான் சென்றுள்ளது: முகநூல் (ஃபேஸ்புக்) மூலம் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரிடம் சுவாலிக் முகமது தொடர்பு வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதன்வாயிலாகவே அவர் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினரின் குறிப்பிட்ட பக்கத்தை பின் தொடர்ந்துள்ளார். அப்போது, சுவாலிக் முகம்மதுவை தொடர்பு கொண்டு பேசிய அந்த இயக்கத்தினர் பேச்சில், மூளை சலவை செய்யப்பட்ட சுவாலிக் முகம்மது காலப்போக்கில் இணைந்து தீவிரமாக செயல்பட்டிருப்பது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது முகநூல் நண்பர்கள், சந்தேகம்படும்படியான தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

My jihad is bomb your country

நம்ப முடியவில்லைஎன்று நண்பர்கள் கூறியது: சுவாலிக் முகம்மது ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இருந்ததாக கைது செய்யப்பட்டிருப்பதை தன்னால் நம்ப முடியவில்லை என அவரது நீண்ட கால நண்பரும், மென்பொறியாளருமான மிர்ஷாத் தெரிவித்தார். 01-10-2016  (வெள்ளி) – ஆறு பேர் கைது, 02-10-2016 (சனி) – கோயம்புத்தூரில் ஐந்து பேர் வீட்டில் சோதனை, 03-10-2016 (ஞாயிறு) – கடையநல்லூரில் சோதனை, 04-10-2016 (திங்கள்), 05-10-2016 (செவ்வாய்), 06-10-2016 (புதன்) 07-10-2016 (வியாழன்), 08-10-2016 (வெள்ளி) நாட்களில் விசாரணை, 09-10-2016 (சனிக்கிழமை) – 16 இளைஞர்களிடம் விசாரணை நடந்தது, 10-10-2016 (ஞாயிற்றுக்கிழமை) எர்ணாகுளத்தில் – சுபானி ஹாஜி மொஹித்தீன் மார்கெட் ரோட், தொடுபுழாவில் உள்ள அவனது வீட்டிற்கு கூட்டிச் சென்றனர்[3]., இப்படி எல்லாமே நம்ப முடியாத அளவுக்கு தான் உள்ளன. ஆனால், குண்டுகள் வெடிக்கின்றன, அப்பாவி மக்கள் இறக்கின்றானர் என்பது உண்மைதானே? விசாரணையில் அவனது உறவினர்களுக்கு, இவனது ஐ.எஸ் தொடர்புகள் இருந்தது தெரிய வந்தது. அவனது வீட்டிலிருந்து அவன் மீது குற்றஞ்சாட்டுவதற்கு உபயோகமான ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன. அவன் இராக்கில் உள்ள மோசூலுக்கு அழைத்துச் செல்லப் பட்டு, பயிற்சி கொடுக்கப்பட்டது. எல்லா வசதிகளுடன் மாதம் $100 (சுமார்ரூ.8,000) கொடுக்கப்பட்டது[4], முதலிய விவரங்கள் தெரிய வந்தன[5].

Zakir supporting Osama bin laden

07-10-2016 அன்று கோயம்புத்தூரில் விசாரணை[6]: கோயம்புத்தூரில் 11  அபு பஸீரின் தொடர்பு கொண்ட இளைஞர்கள் விசாரிக்கப்பட்டனர். அவன் மூலம் ஒருவேளை ஐசிஸ் தொடர்புகள் இருக்கக்கூடுமோ என்று, பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், செல்போன் எண்கள் போன்றவற்றில் தொடர்புடையவர்களிடம் தான் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பஸீர் உக்கடத்தில், ஜீ.எம். நகரில் தங்கியிருந்தபோது இந்த இளைஞர்களுக்கு கவர்ச்சிகரமான வேலைவாய்ப்புகளை ஆங்கிக் கொடுக்கிறேன் என்று வாக்குக் கொடுத்ததாகத் தெரிகிறது. அதை வைத்துதான், அவர்கள் விசாரிக்கப்பட்டனர். ஆனால், தீவிரவாதத்திற்கும், அவர்களது வேலைதேடுதலுக்கும் சம்பந்தம் இல்லை என்றதால், அவர்கள் அனுப்பப்பட்டனர்[7].

© வேதபிரகாஷ்

13-10-2016

 triacetone triperoxide bomb making

[1] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=250291

[2] Club Mahindra, Westcott Rd, Express Estate, Royapettah, Chennai, Tamil Nadu 600002.

Mahindra Holidays & Resorts India Limited, Mahindra Towers, 2nd Floor, 17/18, Patullos Road, Mount Road, Chennai – 600 002. Tamilnadu, India.Tel : +91 (044) 3988- 1000; Fax : +91 (044) 3027- 7778.

[3] New Indian Express, NIA grills 16 youth over suspected terror links in Kovai, By Express News Service,  Published: 10th October 2016 04:10 AM; Last Updated: 10th October 2016 04:10 AM

[4] News18, Suspected ISIS Operative Arrested in Tamil Nadu, Was Planning Attacks, Press Trust Of India, First published: October 6, 2016, 2:46 PM IST.

[5] http://www.nia.gov.in/writereaddata/Portal/News/104_1_PressRelease_02.10.2016.pdf

[6] The Hindu, NIA team searches for evidence against Subahani at Kadayanallur, Tirunelveli, October 8, 2016, Updated: October 8, 2016 07:31 IST

[7]  http://www.thehindu.com/news/national/tamil-nadu/nia-team-searches-for-evidence-against-subahani-at-kadayanallur/article9199882.ece

 

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – ஐசிஸ் திரும்பி வந்து, மறுபடியும் தீவிரவாதத்தில் ஈடுபட்ட நிலை (2)

ஒக்ரோபர் 13, 2016

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக தொடர்புகள்உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது  – ஐசிஸ் திரும்பி வந்து, மறுபடியும் தீவிரவாதத்தில் ஈடுபட்ட நிலை (2)

kadayanallur-subahani-haja-moideen-bomb-making

கோயம்புத்தூர் தமிழ்நாடுகேரளா தீவிரவாத மையமாக இருக்கிறது: இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து, என்.ஐ.ஏ தென்மாநில ஐ.ஜி அலோக், சூப்பிரண்டு விக்ரம் தலைமையிலான அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தனர். உள்ளூர் போலீசார் உதவியுடன் கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்த ஐந்து பேரை பிடித்தனர். 03-10-2016 அன்று கேரளாவைச் சேர்ந்த ஹாஜா மொஹித்தீன் திருநெல்வேலியில் பிடிபட்டான்[1]. இவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது[2]. கோயம்புத்தூரில், குண்டுவெடிப்பு நடந்து, கலவரம் ஏற்பட்ட பிறகு கூட, அங்கு, இவ்வாறு தீவிரவாத செயல்களுக்கு உள்ளூர்வாசிகள் ஒத்துழைப்பது, கவலையாகத்தான் உள்ளது. கோயம்புத்தூர் தமிழ்நாடு-கேரளா தீவிரவாத மையமாக இருக்கிறது என்பது போன்று தெரிகிறது.

is-jihadi-from-tirunelveli-dinamani-cutting

சென்னை தொடர்புகள் திகைக்க வைக்கின்றன: கைது செய்யப்பட்ட 6 பேரில் அபு பஷீர்‌ என்பவர் கோவையின் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கேரளா திருச்சூரைச் சேர்ந்த ஸ்வாலி முகமது என்கிற யூசுப் உட்பட மேலும் ஒருவர் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் சில நாட்கள் தங்கிவிட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது. இவர்களுடன் கோவை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வரும் நவாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து செல்போன், ‘லேப் டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும், இவர்கள் அனைவரும் வெடிகுண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைச் சேகரித்ததாகவும் தெரிகிறது. மேலும், தென்னிந்தியாவில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் முக்கியமான பிரபலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முக்கியமாக, இவர்கள் அனைவரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின்மீது கொண்ட ஈர்ப்பால், அந்த அமைப்புக்காக வேலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது[3].

gone-for-hajj-returned-as-isis-terrorist

05-10-2016 அன்று கைது செய்யப்பட்ட சுபஹனி ஹாஜா மொஹிதீன்: இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து 3 பெண்கள் உட்பட 21 பேர் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பதாக அண்மையில் தகவல் வெளியான நிலையில், அது தொடர்பாகவும், கைது செய்யப்பட்ட 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கைது செய்யப்பட்ட 6 பேர் கொடுத்த தகவலின் அடிப்படையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுபஹானி [K. Subuhan Abdullah (35)] அவரது மாமனார் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்[4]. கடையநல்லூரில் அவரது வீட்டில் தங்கியிருந்த போது அதிகாலையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் துப்பாக்கிமுனையில் கைது செய்தனர். பின்னர் சுபஹனியை கொச்சிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. NIA குழு திருநெல்வேலியில் தங்கியிருந்த சுபாஹினியை கைது செய்து விசாரித்தனர். அவன் சிவகாசியில் வெடி தயாரிப்பாளர்களிடமிருந்து ரசாயனப் பொருட்களை வாங்கியுள்ளான்[5]. கைதான சுபஹானி ஐ.எஸ். ஆதரவாளரா என்று தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட அனைவரையும் எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் 06-10-2016 அன்று ஆஜர்ப்படுத்தி, விசாரணை காவலில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்[6].

mosques-dargahs-and-madrassas-should-teach-against-terrorism-to-create-awareness-among-the-muslim-younth

செப்டம்பர் 2015ல் இந்தியாவுக்குத் திரும்பி வந்த ஐசிஸ் போராளி[7]: கடையநல்லூரில் வசித்து வந்த சுபஹனி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் ஈர்க்கப்பட்டு சமூக ஊடகங்கள் மூலம் அந்த அமைப்பில் சேர்ந்தார். பின்னர் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் மெக்கா செல்வதாக கூறி விட்டு 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா விசாவில் சென்றார். அங்கிருந்து ஈராக்கில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டார். போரின் தீவிரத்தை தாங்க முடியாமல் ஐ.எஸ் அமைப்பில் இருந்து விலக முயன்ற சுபஹானியை அந்த அமைப்பினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்தியாவில் ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சுபஹனியை ஐ.எஸ். அமைப்பு விடுதலை செய்தது. விடுதலையான அவர் இஸ்தான்புல்லில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து தான் இந்தியா செல்ல உதவி கேட்டான். அதன்படி இந்திய தூதரக உதவியுடன் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இந்தியாவிற்கு சுபஹனி திரும்பி வந்தான்[8].

%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%b9%e0%ae%a9%e0%ae%bf

கடையநல்லூரிலிருந்து ஐசிஸுடன் தொடர்பு வைத்திருந்த போராளி: சபஹனி ஹாஜா மொஹ்தீன் பின்னர் அவர் கடையநல்லூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அங்கு ஒரு நகைக்கடையில் வேலை செய்து வந்தான். ஆனால், சில நாட்களில், மறுபடியும், இணையத்தளம் வழியாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டான். அந்த அமைப்பின் கட்டளைபடி சிவகாசியில் இருந்து வெடிமருந்து வாங்கி இந்தியாவில் உள்ள ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு சப்ளை செய்துள்ளான். மேலும் ஹவாலா பணம் மூலமும், தங்க நகைகள் மூலமும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சபஹனி பண பரிமாற்றம் செய்துள்ளார். விசாரணையில் இந்த விவரங்களை தெரிந்து கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பினர் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து 05-10-2016 அன்று கொச்சியில் இருந்து தேசிய புலனாய்வு தென்பிராந்திய ஐ.ஜி. அம்ரத் டங் தலைமையில் பலத்த பாதுகாப்புடன் சுபஹனியை நள்ளிரவில் நெல்லை மாவட்டம் குற்றாலம் அழைத்து வந்தனர். அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சுபஹனியை பலத்த பாதுகாப்புடன் வைத்திருந்தனர்.

kadayanallur-org-says-kerala-is-terrorist-arrested-03-10-2016

கடையநல்லூரில் விசாரணை: அப்போது அவரிடம் தீவிர விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. பிறகு, காலை 10 மணியளவில் சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கடையநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் சுபஹனியை ஆஜர்படுத்தி விசாரணையை தொடங்கினர். கடையநல்லூரில் யார்? யாருடன் அவருக்கு தொடர்பிருந்தது, ஹவாலா பணத்தை யார் மூலம் அவர் பெற்றார்? சிவகாசியில் யாரிடம் வெடி மருந்து வாங்கினார்? என்பது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சுபஹனியின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சுபஹனி கடையநல்லூர் அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அழைத்துவரப்படும் செய்தி அறிந்த கடையநல்லூர் நகைக்கடை வியபாரிகள் பலர் கடைகளை அடைத்திருந்தனர்.

is-jihadi-from-tirunelveli-indian-express

வீடு, நகைக்கடை முதலிய இடங்களில் விசாரணை / சோதனை[9]: தொடர்ந்து அவரது வீட்டில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.  அங்கு பள்ளிவாசல் தெருவில் உள்ள சுபஹானி வசித்து வந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. சுபஹனி மனைவியின் தாய் வீடு கடையநல்லூர் புதுமனை தென்வடல் தெருவில் உள்ளது. அங்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள், சுபஹனியின் மனைவியிடம் சுபஹனி வசித்து வந்த வீட்டின் சாவியை பெற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து ஒரு பழைய செல்போன் மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்[10]. பின்னர் அவர் பணியாற்றிய நகைக் கடையிலும் விசாரணை மேற்கொண்டனர். கடையநல்லூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுபஹனி ஹாஜாமொய்தீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடைபெற்றது. சோதனையின்போது செல்லிடப்பேசி, சிம்கார்டு, கணினி நினைவகம் போன்றவற்றை தேசிய புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது[11]. 7 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நகைக்கடை பங்குதாரர் பேட்டி: இதற்கிடையே சுபஹனி ஹாஜாமொய்தீன் பணியாற்றிய நகைக் கடையின் பங்குதாரர் நயினாமுகமது செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சரியாக நடந்து கொள்ளாத காரணத்தால் கடந்த 27ஆம் தேதியே [27-09-2016] அவர் வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர்தான் அவர் குறித்த விவரம் எங்களுக்கு தெரியவந்தது. வேலையை விட்டு நீக்கிய பின்னர் மோசமான வார்த்தைகளால் கட்செவி அஞ்சல் மூலம் எங்களை அவர் திட்டினார். இது தொடர்பான தகவல்களையும் நாங்கள் தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவித்துள்ளோம் என்றார்[12].

© வேதபிரகாஷ்

13-10-2016

ஐசிஸ் சர்ட் அணிந்த முச்லிம் வாலிபர்கள் - ராமநாதபுரம் மசூதி

[1] Indian Express, Tamil Nadu: One more person linked to ISIS arrested by NIA in Kerala, By: Express Web Desk | New Delhi | Updated: October 4, 2016 5:56 pm.

[2]http://www.dinamani.com/tamilnadu/2016/oct/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2575458.html?pm=home

[3]  விகடன், தமிழகத்தை குறிவைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்… கேரளாவில் 6 பேர் கைது, Posted Date : 18:10 (03/10/2016); Last updated : 18:10 (03/10/2016).

[4] The Hindu, NIA picks up IS suspect from Kadayanallur, Tirunelveli October.4, 2016; Updated: October 4, 2016 02:21 IST.

[5] News18, Suspected ISIS Operative Arrested in Tamil Nadu, Was Planning Attacks, Press Trust Of India, First published: October 6, 2016, 2:46 PM IST.

[6] http://www.vikatan.com/news/india/69109-isis-terrorists-targeted-tamil-nadu-6-arrested-in-kerala.art

[7] மாலைமலர், .எஸ். தீவிரவாதி சுபஹனியை கடையநல்லூர் அழைத்து வந்து விசாரணை, பதிவு: அக்டோபர் 07, 2016 14:09

[8] http://www.maalaimalar.com/News/State/2016/10/07140918/1043769/kadayanallur-IS-extremist-investigation.vpf

[9] தினமணி, .எஸ். பயங்கரவாதியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை, By கடையநல்லூர் Last Updated on : 08th October 2016 08:21 AM

[10] http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/oct/08/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2578126.html?pm=478

[11] தினத்தந்தி, கேரளாவில் இருந்து .எஸ். பயங்கரவாதி சுபஹனியை கடையநல்லூருக்கு அழைத்து வந்து விசாரணை, பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 12:45 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 08,2016, 4:15 AM IST

[12] http://www.dailythanthi.com/News/State/2016/10/08004534/And-brought-to-trial-cupahaniyai-Kadayanallur.vpf

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழக-சென்னை தொடர்புகள் – உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறது – இஞ்சினியரிங் படித்தாலும் அடிப்படைவாதம் ஆட்டிப்படைக்கிறது (1)

ஒக்ரோபர் 13, 2016

ஐசிஸ் தீவிரவாதிகள் மற்றும் தமிழகசென்னை தொடர்புகள்உள்ளூர் தீவிரவாதம் என்றாலும் ஜிஹாதி மனப்பாங்கு அதிரவைக்கிறதுஇஞ்சினியரிங் படித்தாலும் அடிப்படைவாதம் ஆட்டிப்படைக்கிறது (1)

khilafat-e-rashida-is-the-only-solution

ஐசிஸ் தீவிரவாதத்துடன் தொடர்பு கொண்ட சென்னைவாசி:  இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவிற்குள் உள்நாட்டுக் குழப்பங்களை உண்டுபண்ணும் நோக்கில் பாகிஸ்தானின் உளவு அமைப்புகள் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கி உள்ளன. தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அந்த முயற்சியை முறியடித்து, தீவிரவாதிகள் ஆறு பேரை கேரளாவில் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவனுக்கு தமிழகத்துடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. பிறகு, சென்னையில் தங்கியிருந்த ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதி கத்தார் நாட்டுக்கு தப்பிச் செல்லத் திட்டமிட்டிருந்தது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது[1].

six-arrested-02-10-201601-10-2016 அன்று பிடிபட்ட தீவிரவாதிகள்[2]: கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம் கனகமலைப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டிருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்தனர்[3].  முதலில் மலைமீது ஐவர் கூடியிருந்தபோது பிடிபட்டனர், பிறகு இன்னொருவன் பிடிபட்டான்.

எண் பிடிபட்டவன் பெயர், வயது தந்தை முகவரி
1 மன்சித் / உமர் அல் ஹிந்தி / முத்துக (Manseed alias Omar al Hindi 30) மஹ்மூத் மதீனா மஹால், அனியரம், கன்னூர் மாவட்டம், கேரளா.
2 அபு பஷீர் / ரஸீத் / பச்சா / தளபதி / அமீர்  (Abu Basheer 29) கோட்டைகுடிர், மஸ்ஜித் தெரு, ஜி.எம். நகர், தெற்கு உக்கடம், கோயம்புத்தூர், தமிழ்நாடு
3 ஸ்வாலிஹ் மொஹமத் டி / யூசுப் / அபு ஹஸ்னா (26) தாஹா மொஹமது அம்பலத், வெங்கநல்லூர், செலக்கர பஞ்சாயத்து, திரிசூர், கேரளா. இப்பொழுது சென்னையில் வசித்து வருகிறான்.
4 பி. சப்வான் (30) ஹம்ஜா பூக்கட்டில்இல்லம், பொன்முன்டம் பி.ஓ, திரூர், மலப்பப்புரம் மாவட்டம், கேரளா.
5 என். கே. ஜாஸிம் (25) அப்துல்லா நங்கீலம் கன்டி, கோழிக்கோடு மாவட்டம், கேரளா.
6 ராம்ஷெத் நகீலன் கண்டியல் / அம்மு (Ramshad Nageelan Kandiyil 24) அஸ்ரப் நங்கீலன் கன்டியல் இல்லம், குட்டியாடி பி.ஓ, கோழிக்கோடு மாவட்டம், கேரளா.

 ஆகிய 6 பேரை தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ) போலீஸ் அதிகாரிகள் கடந்த 2ம் தேதி கைது செய்தனர்[4].  இவர்கள் 24-30 வயதுடையவர்கள். இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக செய்யும் வேலைகளைத் தடுக்கும் சட்டம் முதலியவற்றின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது[5]. மூன்று மாதங்களுக்கு முன்பு, கேரளாவிலிருந்து 21 பேர் காணவில்லை என்றும், அவர்கள் ஆப்கானிஸ்தான் வழியாக சிரியாவிற்கு சென்று ஐ.எஸ்ஸில் சேர்ந்துள்ளதாக தெரிய வந்தது[6]. இவர்களால் அல்லது இவர்களின் கூட்டாளிகளின் மூலம் இரண்டு கேரள நீதிபதிகளுக்கு ஆபத்து என்று கேரள முதலமைச்சருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது[7]. தென்னிந்தியா முழுவதும் மேற்கொண்ட தேடுதலில் இவ்விவகாரங்கள் வெளிவந்துள்ளன[8].

Russian plane crash - ISIS claiming responsibility blowing with IED in softdrink canஅன்ஸர்உல்காலிபா கேரளா” – “ஐஎஸ் பரப்பும் கொள்கைகளைப் பின்பற்றும் காலிபைட்டின் வீரர்கள்: இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்கு சென்று, ஆனால், இந்தியாவுக்கு விசுவாசமாக இல்லாமல், அயல்நாடுகளுடன் விசுவாசம் கொண்டு, ஜிஹாதி மனப்பாங்குடன், தீவிரவாதத்தை மேற்கொள்வது எப்படி என்பது புதிராகத்தான் உள்ளது. உமர் அல் ஹிந்தி என்பவன் இக்கூட்டத்தின் தலைவன். இவன் “அன்ஸர்-உல்-காலிபா கேரளா” என்ற இயக்கத்தை உருவாக்கினான். “ஐஎஸ் பரப்பும் கொள்கைகளைப் பின்பற்றும் காலிபைட்டின் வீரர்கள்” [”Ansar-ul-Khilafah Kerala” (soldiers of the Caliphate as propagated by IS)] என்று பொருளாகும். இவ்வாறு மனப்பாங்கை ஏற்படுத்துவது விஞ்ஞானம், தொழிற்நுட்பம் படிப்பதால் அல்ல, மாறாக, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிப்பதால் தான் உண்டாகிறது. என்.கே. ஜாஸிம் என்பவன் இஞ்சினியர், இவன் சிரிய அரசு ஐஎஸ்ஸுக்கு எதிராக நடத்தும் நடவடிக்கைக்களை எதிர்த்து சமூக ஊடகங்களில் செய்திகளைப் போட்டு வந்தான்[9]. பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில், முஸ்லிம் இளைஞர்களை தொடர்ந்து கவர்ந்து, தீவிரவாதத்தில் இணைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளான். முஸ்லிம் அல்லாத இளைஞர்களைக் கூட “எல்லாம் கிடைக்கும்” என்ற ரீதியில் தூண்டில் போடப்பட்டுள்ளது. இளம்பெண்கள் போன்று நண்பர்களாகி, திசைத்திருப்பும் யுக்தியும் கையாளப்பட்டது. இவையெல்லாமே, பெற்றோர், உற்றோர், மற்றோர் அறியாமல் செய்யும் காரியங்கள் அல்ல. அவரவர் வீடுகளில் சோதனையிட்டபோது, ஆவணங்கள், மிண்ணனு கருவிகள் முதலியன கைப்பற்றப்பட்டன.

tamilnadu-jihad-hi-tech-jihad-with-isisபி., பி.டெக் என்று படித்த இளைஞர்கள் தாம் இந்த தீவிரவாத அமைப்புகளில் சேருகிறார்கள்: எம். கே. ஜாசிம் (24) ஒரு எஞ்சினியராக இருந்தாலும், ஜாகிர் நாயக்கின் போதனையால் கவரப்பட்டு, பாலஸ்டைன், சிரியா போன்ற இடங்களில் முஸ்லிம்கள் கொலையுண்ட காட்சிகளை பேஸ்புக்கில் தொடர்ந்து போட்டு, பழிவாங்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தான். தவிர தான் கால்பந்து, கிரிக்கெட் போன்றவற்றில் விருப்பம் உள்ளவன் என்றும் காட்டிக் கொண்டான். கன்னூரில், ஒரு மலையுச்சியில், வெடிகுண்டுகளை தயாரித்து, கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல்வாதிகளின் மீது தாக்குதல் நடத்த திட்டம் போட்டான். இருப்பினும் வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. செப்டம்பர் கடைசி வாரத்தில் மன்ஸீத் கட்டாரிலிருந்து கன்னூருக்கு வந்தான். அபு பஸீர் அல்லது ரஸீத் (29) ஒரு மெக்கானிக் ஆவான். டி. ஸ்வாலி மொஹம்மது (26) சென்னையில், கிளப் மஹிந்தராவில் வேலை செய்து வந்தான். பி. சப்வான் (30), ஒரு நாளிதழில், வடிவமைப்பாளனாக வேலை செய்தான். என். கே. ஜாஸிம் (25) மற்றும் ரம்ஸீத் (24) மைத்துனர்கள் ஆவர். இவர்கள் எல்லோருமே, யாருடைய உத்தரவின் மீது வேலை செய்து வந்தார்கள். அவர்களிடமிருந்து கைப்பற்றிய செல்போன்கள், சமூக ஊடக விவரங்கள் மற்ற மின்னணு சாதனங்கள் மூலம், இவ்விவரங்களை என்.ஐ.ஏ பெற்றுள்ளது.

© வேதபிரகாஷ்

13-10-2016

subahani-kadayanallur-arrested-and-questioned-08-10-2016

[1] தினமணி, சென்னையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற .எஸ். பயங்கரவாதி: என்... விசாரணையில் கிடைத்த தகவல், By DIN  |   Last Updated on : 04th October 2016 10:34 AM.

[2] http://www.nia.gov.in/writereaddata/Portal/News/104_1_PressRelease_02.10.2016.pdf

[3] NDTV, 6 Persons With Suspected ISIS links Arrested In Kerala, Updated: October 03, 2016 07:55 IST.

[4] தினகரன், .எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பா? கோவையில் பிடிபட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை, Date: 2016-10-05@ 01:19:28

[5] http://indiatoday.intoday.in/story/kerala-nia-is-terrorism/1/778722.html

[6] http://www.ndtv.com/kerala-news/6-persons-with-suspected-isis-links-arrested-in-kerala-1469311

[7]  Intelligence agencies in Kerala have alerted the State government of a threat from an Islamic State-linked module to two High Court judges and some politicians, close on the heels of the National Investigation Agency (NIA) arresting six persons of the terror module from the State.

The Hindu, Kerala warned of IS threat to 2 HC judges, Thiruvananthapuram, October.5, 2016; Updated: October 5, 2016 01:20 IST.

[8] NIA teams along with the Kerala Police, the Delhi police and the Telangana police had launched surveillance on the movement of the accused involved in the conspiracy and, during searches, the six were arrested from Kozhikode and Kannur districts.

http://www.thehindu.com/news/national/kerala/kerala-warned-of-is-threat-to-2-hc-judges/article9185038.ece

[9] The accused, who were radicalised online, had formed a group called ”Ansar-ul-Khilafah Kerala” (soldiers of the Caliphate as propagated by IS) on Telegram — a web-based application platform, a senior Home Ministry official told The Hindu. One of the accused, Jasim N.K. (24) — an engineer and the only one with an active Facebook account — was following Islamic preacher Zakir Naik and posted several messages against killings in Syria by the Assad regime and also about children and women killed in Palestine. His social media account also said that he was a keen follower of football and cricket and he last posted a message on May 3.

http://www.thehindu.com/news/national/isinspired-group-was-on-radar-for-4-months/article9181053.ece?utm_source=InternalRef&utm_medium=relatedNews&utm_campaign=RelatedNews

முஸ்லிம்கள் எல்லோரும் சமம் என்றால் தமிழக முஸ்லிம்களில் மோதல் ஏற்படுவது ஏன்?

ஏப்ரல் 27, 2013

முஸ்லிம்கள் எல்லோரும் சமம் என்றால் தமிழக முஸ்லிம்களில் மோதல் ஏற்படுவது ஏன்?

Clash between Muslim groups in constructing mosque

முஸ்லிம்கள் எல்லோரும் சமம்: பொதுவாக முஸ்லிம்கள் எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்று, ஒரு வித்தியாசமும் இல்லை, தோளோடு தோள் இணைந்து, தொட்டுக் கொண்டு, இடித்துக் கொண்டு தொழுகை செய்வோம், ஒன்றாக இருப்போம், சாப்பிடுவோம் என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டு வருவர். ஆனால், அச்சமத்துவ, சகோதரத்துவ, ஏகத்துவ, ஒருத்துவ நிலையில் எப்படி முஸ்லீம்கள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள் என்பது கூர்மையாக ஆய்வதற்குரியது[1]. சன்னி-ஷியா மோதல்கள், கொலைகள், குண்டுவெடிப்புகள் முதலியவை உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றவை[2]. ஆனால், “அமைதிப் பூங்கா”, “வந்தாரை வாழவைக்கும்” என்றெல்லாம் போற்றப்படுகின்ற தமிழகத்தில் எப்படி அத்தகைய மோதல்கள் நடக்கலாம்.

Fight among the Muslims - Kadaiyanallur, Tit

இஸ்லாமியர்களுக்குள்சண்டைஏன்?: சைவம் தழைத்தோங்கிய திருநெல்வேலியில், கடையநல்லூரில் இப்பொழுது முஸ்லிம்கள் ஜனத்தொகைப் பெருகியுள்ளது. இப்பிரச்சினை மீனாட்சிபுரம் மதமாற்றத்திலிருந்தே ஆரம்பிக்கிறது[3]. அதற்கேற்றார்போல, அவர்களது தமிழ்நாடு ஜமாத், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, எஸ்.டி.பி.ஐ, என்று பல அமைப்புகள் உள்ளன. வெளிநாட்டிலிருந்து பணம் வருவதனால்[4], மசூதி, மதரஸா, முதலிய கட்டிடங்கள் கட்டுவது, தொழுகை நடத்துவது, விழாக்கள் நடத்துவது என்ற உள்விஷயங்களில் பெரிய புரச்சினைகள் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள்[5]. கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாஅத்தார் முதலியோருக்கு மோதல், அடிதடி முதலியவை எப்பொழுதும் உள்ளது போலிருக்கிறது, ஏனெனில் அதனை அவர்களே ஒப்புக் கொள்கின்றனர்[6].

Kadayanallur clash between Muslim groups.3

TNTJ மற்றும் TMMK மோதல்கள்: தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாத மற்றும் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் இப்பிரச்சினைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், TNTJ மற்றும் TMMK இடையில் பலமுறை மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

  • 2006ல் மஸ்ஜித்-உர்-ரஹ்மான் என்ற மசூதியை யார் நிர்வகிப்பது என்ற விஷயத்தில் TNTJ மற்றும் TMMK இடையில் சண்டையிட்டுக் கொண்டனர்[7]. இதை அனைத்துலக ரீதியில் பெரிதுபடுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன[8].
  • ஜனவரி 2008ல் அல்-முபாரக் மஸ்ஜிதை நிர்வகிப்பதில் ஜாக் அமைப்பினருக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது[9].
  • 2009ல் தேர்தல் பிரச்சரத்தின்போது மோதல் ஏற்பட்டது[10].
  • செபடம்பர் 2010ல் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்[11].
  • கடந்த மார்ச்சில் கூட மசூதியில் பிரச்சினை ஏற்பட்டது, ஒருவர் தாக்கப்பட்டார்[12].

இதோ அரேபிய, ஆப்பிரிக்க மற்றும் மத்திய ஆசிய முஸ்லீம் அல்லது இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் நிகழ்சியாக, சண்டையாக, சச்சரவாக நினைக்க வேண்டாம். செக்யூலரிஸத்தில் ஊறிப்போயிருக்கும் இந்தியாவில், பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மாநிலத்தில், நுண்ணறிவு, பிரித்தறிவு, செம்மறிவு, என்றெல்லாம் கொண்டுள்ள அறிவிஜீவிகள் கொண்ட தமிழகத்தில் தான் இவ்வாறு முஸ்லீம்கள், முஸ்லிம்கள், இஸ்லாமியர்கள், முகமதியர்கள், துலுக்கர்கள் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றவர்கள்[13] அடித்துக் கொள்கின்றனர்.

Kadayanallur clash between Muslim groups.4

மசூதி, அரபுப்பள்ளிக்கூடம், மர்கஸ், மதரஸாஎதுகட்டுவதால்பிரச்சினை: தமிழ் ஊடகங்கள் பிரச்சினை ஏற்பட்டது ஒரு மசூதி, பள்ளிவாசல், அரபுப் பள்ளிக்கூடம் கட்டுவதால் ஏற்பட்டது என்கின்றன. TNTJ “மர்கஸ்” ஒன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பேட்டை பகுதியில் அமைய உள்ளது[14] என்று குறிப்பிடுகின்றது. மர்கஸாவா, மதரஸாவா என்று மற்றவர்களுக்கு புரியவில்லை. அதே மாதிரி எதிர்ப்புத் தெரிவித்த முஸ்லீம்கள் கூறுவதும் வித்தியாசமாக உள்ளது.

தினமலர்சொல்வது: கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெருப்பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறுவர், சிறுமியர் அரபி பாடசாலை[15] பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது[16].

TNTJ சொல்வது: “மர்கஸ்” ஒன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பேட்டை பகுதியில் அமைய உள்ளது[17].

மாலைமலர்கூறுவது: கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெருவின் மேற்கு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதிய பள்ளிவாசல் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது[18].

தினமணி கூறுவது: கடையநல்லூரில், பேட்டை ஜமாத்துக்கு சொந்தமான பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இதற்கு அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறுவர் சிறுமியர் அரபி பாடசாலை என்ற பெயரில் துவக்கப் போவதாகச் சொல்லி, பள்ளிவாசல் ஒன்று கட்டும் முனைப்பில் இருந்தார்களாம்[19].

ஏற்கனவே பள்ளிவாசல் உள்ள நிலையில் புதிய பள்ளிவாசல் அமைக்க வேண்டாம் என்றனர்.

தினத்தந்திகூறுவது: கடையநல்லூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர்[20].  இங்கு “இரு தரப்பினர்” என்று குறிப்பிட்டு, பிரச்சினைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லை.

நெல்லை-ஆன்-லைன் கூறுவது: தவ்ஹீத் ஜமாத் சார்பில் புதிய அலுவலகம் கட்டும் வேலைகள் நடக்கின்றன. இதற்கு பேட்டை ஜமாத் எதிர்ப்புத் தெரிவித்தனர்[21].

இங்கு அரபிப் பள்ளி என்பது “மதரஸா” ஆகுமா, ஒருவேளை அதைத்தான் எதிர்க்கிறார்களா என்று தெரியவில்லை. மதரஸாக்களில் நடப்பவைப் பற்றி பற்பல விஷயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன[22]. தலிபானின் மதரஸாக்கள் பற்றி சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

செக்யூலரிஸஊடகங்கள்உண்மையைச்சொல்கின்றனவா?: மேற்குறிப்பிட்டபடி, தமிழக நாளிதழ்கள் நிகழ்வுகளின் உண்மையினை திருத்தியோ, மாற்றியோ, மறைத்தோ வெளியிடுகின்றன. “இரு பிரிவினர்களுக்கு” என்றால் எப்படி படிக்க வேண்டும் என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

  • இந்து-முஸ்லீம்கள்
  • சன்னி-ஷியா / சுன்னி-ஷியா
  • சையது-லெப்பை
  • முஸ்லிம்-எஸ்.சி
  • முஸ்லிம்-தலித்துகள்
  • TNTJ – TMMK

இப்படி எந்த இரு பிரிவினரை எடுத்துக் கொள்வது. இதை எழுதும் நேரத்திலே, பள்ளக்கால் பொதுக்குடியில் முஸ்லீம்களுக்கும், தலித்துகளுக்கும் இடையே டேற்படவிருந்த மோதல் தடுக்கப்பட்டது என்று செய்தி வருகிறது[23]. எனவே, “செக்யூலரிஸம்” என்ற போர்வையிலேயோ, வேறு எந்த பாரபடசம் அல்லது ஆதரவு, விருப்பு-வெறுப்பு ரீதிகளில் செய்திகளை வெளியிடுவதால், படிப்பவர்களுக்கோ மற்றவர்களுக்கோ எந்த பயனும் இல்லை. இதனால், முஸ்லீம்கள் தங்கள் பிரச்சினையைப் பொதுப் பிரச்சினையாக்கி விடுவர். பந்த, கடையடைப்பு, போராட்டம், ஆர்பாட்டம் என்று எல்லோரையும் படுத்திவிடுவர்.

வேதபிரகாஷ்

27-04-2013


[4] அயல்நாட்டு பணமாற்றத்தில் கடையநல்லூர் முக்கிய ஊராக இருக்கிறது. அனைத்துலக அளவில் தெரியப்பட்டும் உள்ளது. மசூதி, மதரஸா, முதலிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நன்கொடைகளும் வருகின்றன.

[6] கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தார் மோதல்: எஸ்ஐ உள்பட 10 பேர் காயம் – Thursday, April 18, 2013.

[9] கடையநல்லூர்: கடையநல்லூரில் பள்ளிவாசலை நிர்வாகிப்பதில் இரு அமைப்பினரிடையே இருந்து வரும் தொடர் மோதலால் இன்று தொழுகை நடத்துபவரை தாக்கி பள்ளிவாசலின் பூட்டை உடைத்து 6 பேர் கொண்ட கும்பல் நுழைய முயன்றது. இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடையநல்லூர் மெயின் பஜாரில் அல் முபராக் மஸ்ஜீத் பள்ளிவாசல் 1985ம் ஆண்டு துவக்கப்பட்டது. இப்பள்ளி வாசலை நிர்வாகிப்பதில் ஜாக் அமைப்பினருக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 4 மணிக்கு பள்ளி வாசலில் தொழுகையை நடத்துபவரும், ஜாக் அமைப்பை சேர்ந்தவருமான முகமது இஸ்மாயில் பள்ளிவாசலுக்கு வந்துக் கொண்டிருந்தார். அவர் பள்ளிவாசலை நெருங்கியதும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த சேகனா உள்பட 6 பேர் கொண்ட கும்பல் முகமது இஸ்மாயிலை சராமரியாக தாக்கியது. அவர் சுதாரிப்பதற்குள் பூட்டை உடைத்து பள்ளி வாசலுக்குள் நுழைய முயன்றது. அவர் சத்தம் போடவே கும்பல் தப்பியோடி விட்டது. இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். Read more at: http://tamil.oneindia.in/news/2008/01/03/tn-clash-in-masjid-at-kadayanallur.html

http://tamil.oneindia.in/news/2008/01/03/tn-clash-in-masjid-at-kadayanallur.html

[10] பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தமுமுகவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் 11 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன் பட்டியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்திரத்திற்கு ஆதரவாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அதே பகுதியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவாக தமுமுகவினர் பிரசாரம் செய்து வந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக தவ்ஹீத் ஜமாத் அமைப்பினருக்கும், தமுமுகவினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகின்றது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read more at: http://tamil.oneindia.in/news/2009/05/08/tn-tntj-tmmk-cadres-clash-near-pollachi.html

[11] Two persons were shot dead and 10 injured in a shootout following a clash between two groups over observing a fast at Thiruvidaicherry in this district last last night.Police said, misunderstanding between a section of Muslims belonging to Tamil Nadu Thowheed Jamad (TNTJ)and another belonging to Tamil Nadu Muslim Munnetra Kazhagam (TMMK) often led to clashes. Since last evening, the two groups were quarrelling and when they assembled in the mosque late last night, they clashed and exchanged fire with country made revolvers.– (UNI) –  http://news.webindia123.com/news/articles/India/20100906/1581449.html

[12] கடையநல்லூர்,: கடையநல்லூரில் பள்ளிவாச லில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர் பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ரஹ்மானியாபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் சுலைமான் (79). கடையநல்லூர் வடக்கு அய்யாபுரத்தில் உள்ள செய்யது அப்துல்லா கலிபா சாகிப் பள்ளிவாசலில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் பள்ளிவாசலை பூட்டும் போது அதே தெருவை சேர்ந்த கபீத்ரஹ்மான், ஷேக் மைதீன் ஆகியோர், ‘‘நாங்கள் உள்ளே இருக்கும்போது எப்படி பள்ளிவாசலை பூட்டலாம்?’’ என்று கூறி அவரை தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து அவர் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் கபீத்ரஹ்மான் போலீசில் அளித்த புகாரில்,  நானும், ஷேக்மைதீனும் பள்ளிவாசலில் இருக்கும்போது வடக்கு அய்யாபுரத்தை சேர்ந்த சுலைமான், இலியாஸ், காதர்மைதீன், செய்யது அப்துல்லா ஆகிய 4 பேரும் தாக்கியதில் காயம் அடைந்ததாக குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பாக கபீத்ரஹ்மான், ஷேக்மைதீன், சுலைமான், இலியாஸ், காதர்மைதீன், செய்யது அப்துல்லா ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=181750&cat=504

[13] சரித்திரரீதியில் காலக்கட்டங்களில் அவ்வாறுதான் அழைக்கப்பட்டனர். இன்று குறிப்பிட்ட வார்த்தைகள் இப்படித்தான் சொல்லப்பட வேண்டும், எழுதப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் வற்புறுத்துகின்றனர்.

[23] The timely initiative taken by the Communist Party of India (Marxist) and the Tamil Nadu Muslim Munnetra Kazhagam averted a clash between Muslims and Dalits of Pallakkaalpothukkudi near Ambasamudram in the district recently. – TIRUNELVELI, April 26, 2013

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/communal-clash-averted/article4656034.ece