Posted tagged ‘கஞ்சி குடிக்கும் கருணாநிதி’

ரம்ஜான் கஞ்சியும், செக்யூலரிஸமும், பச்சரிசியும்-ரேசன் அரிசியும், இப்தர் பார்ட்டிகளும்-சமூக விலகலும்- எல்லாமே கொரோனா விளையாட்டு தான்!

ஏப்ரல் 17, 2020

ரம்ஜான் கஞ்சியும், செக்யூலரிஸமும், பச்சரிசியும்-ரேசன் அரிசியும், இப்தர் பார்ட்டிகளும்-சமூக விலகலும்- எல்லாமே கொரோனா விளையாட்டு தான்!

No gruel cooking at mosque, Daily Thanthi, 17-04-2020

2020 ரம்ஜான் மாறுபட்டதாக இருக்கிறது: கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் மே3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது[1]. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க, அங்காடிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது[2] என்று நியூஸ்.தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில், ரம்ஜானுக்கு இலவசமாகத்தான் அரசு அர்சி டன் டன்னாக கொடுத்து வருகிறது.. இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது[3]. இதில் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்[4]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சண்முகம், “5450 மெட்ரிக் டன் பச்சரிசி 2895 பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும்,” என்றார். இவை வரும் 19ஆம் தேதிக்குள் [இஸ்லாமிய] தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கப்படும் என்றும், இதனை இயலாதவர்களுக்கு பள்ளிவாசல்கள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்[5]. மேலும் வீட்டிலேயே தொழுகை நடத்துவது, வீட்டிலேயே நோன்பு கஞ்சி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்[6].

No gruel cooking at mosque, Malai Murasu, 17-04-2020

அரசு தலைமை காஜியை வைத்து விவகாரத்தை முடிக்க ஆலோசனை கூட்டம் நடதியது: இதனிடையே இது போன்ற விவகாரங்கள் முடிவெடுக்கும் போது இஸ்லாமிய கட்சிகள் அமைப்புகளின் தலைவர்களை அழைத்து தான் தலைமைச் செயலாளர் ஆலோசித்து முடிவை அறிவிப்பார்[7]. ஆனால் இன்று தமிழ்நாடு அரசு தலைமை காஜியை அழைத்து அவருடன் மட்டும் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது[8] என்கிறது இன்னொரு ஊடகம். ஏனெனில், துலுக்க இயக்கத்தினர், இதுவரை, “கொரோனா பிரச்சினை” வரும் வரை, அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. உண்மையில் கஞ்சி காய்ச்சுவது மசூதியிலா, விட்டிலா என்பதை எல்லாம் தீர்மானிப்பது, துலுக்கரின் வேலையே தவிர அரசின் வேலை கிடையாது. ஆனால், இம்முறை கரோனா அச்சுருத்தல், அனைவரையும் பீடித்துள்ளது. தப்லிக் விவகாரத்தினால், துலுக்கர் பலர், தொற்றினால் பீடித்துள்ளனர். அதனால், குடும்பங்கள், வீதிகள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. அந்நிலையில், யார் கஞ்சி காய்ச்சுவது, யாருக்குக் கொடுப்பது, குடித்தால் என்னாகும் போன்ற கேள்விகள் எழுந்து அச்சுருத்தத் தொடங்கி விட்டன. இது அவரளுக்குள்ளேயே பிரச்சினையாகி உள்ளது.

Mosques get free rice, The Hindu,17-04-2020

ரேசனில் மோசமான அரிசி, ரம்ஜான் கஞ்சிக்கு பச்சரசி: ரமலான் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் பச்சரிசி இந்த ஆண்டும் வழங்கப்படும்[9]. ரேசனில் மோசமான அரிசி விநியோகித்தது இங்கு ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். ஆனாலும் பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சக்கூடாது என தலைமைச் செயலர் சண்முகம் தெரிவித்தார்[10]. இந்த ஆண்டு ரமலான் நோன்பு ஏப்ரல் 25 அன்று தொடங்க உள்ளது[11]. ஆனால், கொரோனா பீதி காரணமாகப் பள்ளிவாசல்களில் ரமலான் தொழுகை நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது[12]. அதாவது, ரம்ஜான் நேரத்தில், துலுக்கர் ஒன்றாக வந்து, கஞ்சி காய்ச்சி உண்ணும் நிலையில், கரோனா விதிமுறைகள் பின்பற்ற முடியாமல் போகும். அதனால், பிரச்சினை ஏற்படும். அதனால், ரமலான் நோன்பு வருவதை ஒட்டி நோன்புக் கஞ்சி காய்ச்ச தமிழக அரசு அரிசியை வழங்குவது, ரமலான் நோன்பை எதிர்கொள்வது, தொழுகை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இஸ்லாமியத் தலைவர்கள், தலைமை காஜி உள்ளிட்டோருடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

No gruel cooking at mosque, Namadhu Murasu, 17-04-2020

5,450 டன் பச்சரிசியை 2,895 பள்ளி வாசல்களுக்கு வழங்கி வருகிறோம்: பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: “5,450 டன் பச்சரிசியை 2,895 பள்ளி வாசல்களுக்கு வழங்கி வருகிறோம். இதை இந்த ஆண்டு கரோனா தொற்று, ஊரடங்கு உத்தரவினைக் கருத்தில் கொண்டு அரிசியை எப்படி வழங்குவது பள்ளிவாசல்கள் எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து இஸ்லாமியத் தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினோம். இன்றும் இஸ்லாமிய சமயத் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு ஆலோசனை செய்து அதன்படி சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி நோன்புக் கஞ்சி காய்ச்ச பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் அரிசி 19-ம் தேதிக்குள் நேரடியாக வழங்கப்படும். அதை சிறு, சிறு பைகளாக பிரித்து தன்னார்வலர்கள் மூலம் அந்தக் குடும்பங்கள் இருக்கும் வீடுகளுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது.

No gruel cooking at mosque, Manasoli, 17-04-2020

கஞ்சியாக கொடுப்போம் என்று அடம் பிடித்த துலுக்கர்: செயலர் தொடர்ந்தார்,  “இதைக் கஞ்சியாக தயாரித்து வழங்கி விடுகிறோமே என இஸ்லாமியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கஞ்சி தயாரித்து வழங்குவது என்பது தினந்தோறும் கஞ்சியைத் தயாரித்து அதைத் தன்னார்வலர்கள் வீடு நோக்கிச் சென்று கொடுப்பது. அப்படிச் செய்தால் பாத்திரங்கள் பயன்பாடு காரணமாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க முடியாது. நோய்த்தொற்று வரக் காரணமாக அமையும். ஆகவே அது கூடாது என முடிவெடுக்கப்பட்டது[13]. ஆகவே 5,450 டன் பச்சரிசி வழக்கம்போல் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். அதை 22-ம் தேதிக்குள் வீடுகளுக்கு தன்னார்வலர்கள் கொண்டு சேர்த்து விடுவார்கள். தனிமைப்படுத்தப்பட்ட, குவாரண்டைன் பகுதிகளில் என்ன வழிவகைகளைப் பின்பற்றி அளிக்கப்படுகிறதோ அதை அப்படியே பின்பற்றி தன்னார்வலர்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளில் கொண்டு சேர்ப்பார்கள்[14]. சிறப்புத்தொழுகை பற்றி முடிவெடுக்க வேண்டியது அவர்கள் மதம் சார்ந்த பிரச்சினை. அதை அவர்கள் மதம் சார்ந்த தலைவர்கள் அறிவிப்பார்கள். ஏற்கெனவே வீடுகளில் தொழுகை என முடிவெடுத்து விட்டார்கள். அதனால் பிரச்சினை இல்லை,” இவ்வாறு தலைமைச் செயலர் சண்முகம் பேட்டி அளித்தார்.

No gruel cooking at mosque, Makkal Kural, 17-04-2020

ஈரோட்டில் தனித்தனியாக கஞ்சி: ஈரோடு மாவட்ட, அரசு ஹாஜி முகம்மது கிபாயதுல்லா, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்[15]. அதில் அவர் கூறியிருப்பதாவது: “கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தி வருகிறோம். ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக அரசால் வழங்கப்படும் அரிசி, எங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. எனவே, தமிழக அரசால் வழங்கப்படும் அரிசியை, நாங்களே ஜமாஅத் மூலமாக வீடுகளுக்கு வினியோகம் செய்து விடுகிறோம். அல்லது நாங்களே, நோன்பு கஞ்சி தயாரித்து வீடுகளுக்கு அனுப்பி, மக்கள் மசூதிகளுக்கு வருவதை தவிர்த்து விடுகிறோம். எனவே, ரம்ஜான் நோன்புக்காக வழங்கும் அரிசியை எங்களுக்கு வழங்க வேண்டும்,” இவ்வாறு கடிதத்தில் கோரியுள்ளார்[16]. ஈரோட்டில், கொரோனா பிரச்சினை தீவிரமாக உள்ளது என்பது அறிந்ததே. பெருந்துறை ஆஸ்பத்திரியில், தொற்றுடன் இன்னும் பீடித்துள்ளவர்கள் இருக்கிறார்கள்.

©  வேதபிரகாஷ்

17-04-2020

No gruel cooking at mosque, Tamil Hindu, 17-04-2020

[1] நியூஸ்.தமிழ், நியூஸ்.தமிழ், ரம்ஜான் பண்டிகைக்கு கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு !!, By Searma Samy | Thu, 16 Apr 2020, By Searma Samy | Thu, 16 Apr 2020

[2] https://newstm.in/tamilnadu/tamil-nadu-government-imposes-restrictions-on-ramzan/c77058-w2931-cid538450-s11189.htm

[3] தினத்தந்தி, ரமலான் நோன்புக்கான அரிசி வழங்குவது குறித்து ஆலோசனைஇஸ்லாமிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் அறிவிப்பு, பதிவு : ஏப்ரல் 17, 2020, 08:00 AM

[4] https://www.thanthitv.com/News/TamilNadu/2020/04/17080011/1265214/Discussion-on-Ramzan-festival.vpf

[5] தினகரன், பள்ளிவாசல்களுக்கு வருகின்ற ஏப்ரல் 19ம் தேதிக்குள் நோன்புக் கஞ்சிக்கான அரிசி வழங்கப்படும்: தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி, 2020-04-16@ 18:05:50.

[6] http://www.dinakaran.com/News_detail.asp?Nid=579522

[7] தமிழ்.ஒன்.இந்தியா, பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக்க அனுமதி மறுப்புவீடுகளுக்கு பச்சரிசியை விநியோகிக்க முடிவு, By Arsath Kan | Published: Thursday, April 16, 2020, 20:21 [IST]

[8] https://tamil.oneindia.com/news/chennai/denial-of-permission-to-produce-fasting-porridge-in-mosques-382848.html

[9] தமிழ்.இந்து, ரமலான் நோன்புக் கஞ்சிக்கு 5,450 டன் அரிசி; பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சப்படாது: தலைமைச் செயலர் அறிவிப்பு, Published : 16 Apr 2020 06:37 PM

Last Updated : 16 Apr 2020 10:01 PM.

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/549886-5450-tonnes-of-rice-for-ramadan-fasting-porridge-porridge-is-not-feverish-in-mosque-notice-of-chief-secretary.html

[11] ஏசியா.நெட்.தமிழ், வீட்டிலேயே தொழுகைபள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி கிடையாதுதமிழக அரசு அதிரடி அறிவிப்பு!, By Asianet Tamil, Chennai, First Published 16, Apr 2020, 9:34 PM…

[12] https://tamil.asianetnews.com/politics/tamil-nadu-government-on-ramzan-festival-in-corona-curfew-period-q8w1zw

[13] புதியதலைமுறை, பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சியை வழங்குவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் முடிவு, Web Team, Published :16,Apr 2020 09:48 PM

[14] http://www.puthiyathalaimurai.com/newsview/68618/Chief-Minister-Palanisamy-has-said-that-Islamic-organizations-have-decided-that-Ramadan-does-not-provide-porridge

[15] தினமலர், ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி: மாவட்ட அரசு ஹாஜி கோரிக்கை, Added : ஏப் 15, 2020 09:02; https://www.dinamalar.com/news_detail.asp?id=2521561

[16] https://www.dinamalar.com/news_detail.asp?id=2521561

முன்பிருந்த முஸ்லிம் லீக் இப்பொழுதில்லை: முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – இப்படி முஸ்லிம்களுக்கு காபிர்கள் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமா, நாடகமா, கபடமா?

ஜூலை 26, 2013

முன்பிருந்த முஸ்லிம் லீக் இப்பொழுதில்லை: முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் – இப்படி முஸ்லிம்களுக்கு காபிர்கள் அறிவுரை சொல்லவேண்டிய அவசியமா, நாடகமா, கபடமா?

வழக்கம் போல கஞ்சி குடிக்கும் அரசியல்வாதிகளும், நோன்பு திறக்கும் / துறக்கும் நிகழ்சிகளும்: முஸ்லிம்களுக்கு நோன்பு என்றாலே கருணாநிதிக்கு குஷ்ஈய்யாகி விடுகிறது.

  • குல்லாப் போட்டு கஞ்சி குடிக்க சந்தர்ப்பம்,
  • இந்து பண்டிகைகளை தூஷிக்க சந்தோஷம்[1],
  • பிரத்யேகமாக குல்லா வாங்கி வந்து மாட்டிவிடும் வேலை
  • தன்னுடைய பெருமைகளை டமாரம் அடித்துக் கொள்ளும் விதம்
  • முஸ்லிம்களைவிட நான் எவ்வளவு பெரிய முஸ்லிமாக இருக்கிறேன் என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் விதம்
  • முஸ்லிம்கள் இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு கைத்தட்டும் காட்சி

இப்படித்தான், வழக்கம் போல கஞ்சி குடிக்கும் அரசியல்வாதிகளும், நோன்பு திறக்கும் / துறக்கும் / தொறக்கும் நிகழ்சிகளும் நடந்து வருகின்றன. திறக்கும் / துறக்கும் / தொறக்கும் நிகழ்சிகள் என்கிறார்கள் இதில் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. பனகல் பார்க் அருகில் ஒரு பேனர், “நோன்பு துறக்க வசதி செய்யப்பட்டுள்ளது” (ஶ்ரீ வேங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில்) என்று அறிவிக்கிறது.

முஸ்லிம் சமுதாயத்தினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்  (தினமணி): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எழும்பூரில் வியாழக்கிழமை 25-07-2013 நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியது: “நான் (கருணாநிதி) அதிக நேரம் பேச வேண்டும் என்பதற்காக காதர் மொகிதீன் குறைவான நேரம் பேசினார். அதுபோல எல்லாவற்றிலும் (மக்களவை இடம்) குறைவாக எடுத்துக் கொண்டு, திமுகவுக்கு அதிகமாக ஒதுக்குவார் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கிறேன். முஸ்லிம் சமுதாயத்தினர் கட்சி ரீதியாக 4 பிரிவுகளாக தமிழகத்தில் இருக்கிறீர்கள். ஆனால் என்ன காரணத்தினாலோ, தமிழகத்திலும், இந்திய அளவிலும் இது போன்ற நிலை இல்லாமல் போய்விட்டது. அந்தக் காலத்தில் நான் பார்த்த முஸ்லிம் லீக் இன்றைக்கு இல்லை. பல கூறுகளாக பிளந்துகிடக்கிறது. முஸ்லிம் சமுதாயத்தினரிடையே தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் ஒற்றுமை இல்லாத காரணத்தினால்தான் பாபர் மசூதி இடிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்டபோது தமிழகத்தில் இருந்து முதலில் குரல் கொடுத்தது திமுகதான். திராவிடர் இயக்கத்திலும் இதுபோன்ற பிளவுகள் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. மீலாது நபிக்கு விடுமுறை, உருது பேசும் மக்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது, சிறுபான்மையினர் நல ஆணையம் என திமுக ஆட்சியில் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு பல்வேறு நலப்பணி ஆற்றப்பட்டுள்ளன”, என்றார் அவர். முஸ்லிம் சமுதாயத்தினர் இந்திய அளவில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்[2]. முன்னதாக நோன்பை திறந்து வைத்து, கருணாநிதி கஞ்சி குடித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் பழநிமாணிக்கம் உள்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கருணாநிதி பேச்சு,“இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்  (தினகரன்): இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் ஒற்றுமை இல்லை என்பதை கண்டுகொண்டதால்தான் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி எழும்பூரில் நடந்தது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தமிழக தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் வரவேற்றார். அப்துல் ரஹ்மான் எம்.பி அறிமுக உரையாற்றினார். திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று நோன்பு கஞ்சி அருந்தினர். கனிமொழி இம்முறை கஞ்சி குடிக்க வரவில்லை[3] போலும்!

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: “நிகழ்ச்சியில் பேசிய காதர் மொய்தீன், தனக்கு நேரம் குறைவாக எடுத்துக் கொண்டு எனக்கு நேரம் அதிகமாக கொடுத்துள்ளார். இப்படி எல்லாவற்றிலும் குறைவாக எடுத்துக் கொண்டு திமுகவுக்கு அதிகம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்லாமிய சமுதாயம், ஒரே பிரிவாக இருந்து ஒற்றுமை பாராட்டினால் இந்த சமுதாயம் இன்னும் வீறுகொண்டு எழும். இந்த சமுதாயத்தை துச்சமாக கருதும் சில, மதவாத எரிச்சல்காரர்கள், ஒதுங்கும் நிலை உருவாகியிருக்கும்தமிழகத்தில் நான் சிறுவனாக இருந்தபோது இருந்த முஸ்லிம் லீக், இன்று பல பிரிவுகளாக மாறியுள்ளது. திராவிட இயக்கம் பிரியவில்லையா என்று கேட்கலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அது ஏற்பட்டிருந்தாலும் இஸ்லாமிய சமுதாய மக்கள், முஸ்லிம் லீக்கின் வரலாறு, இயக்கத்தை எப்படி வளர்த்தார்கள் என்பதை எண்ணிப்பார்த்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். அந்த ஒற்றுமை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் இல்லை என்பதை கண்டுகொண்டதால்தான் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டது. அதை கண்டித்து முதல் முதலில் குரல் கொடுத்தவன் நான். இஸ்லாமிய சமுதாயத்துக்காக என்னென்ன தொண்டு ஆற்ற முடியுமோ, அவற்றை ஆற்றி வருகிறோம். தொடர்ந்து ஆற்றுவோம். திமுக ஆட்சி இப்போது இல்லை.

 

ஆட்சியில் இருந்தபோதே இந்த சமுதாயத்துக்காக எந்த வகையில் பாடுபட்டோம் என்பதை அறிவீர்கள்.

Ø  மிலாது நபி தினத்தன்று விடுமுறை,

Ø  உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பு,

Ø  அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர்,

Ø  சிறுபான்மையினர் நல ஆணையம்,

Ø  விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு,

Ø  உருது அகாடமி,

Ø  காயிதே மில்லத் மணிமண்டபம்

Ø  இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு,

Ø  உமறுபுலவருக்கு மணிமண்டபம்,

Ø  திருமண பதிவு சட்டத்தில் திருத்தம்

 

என்று எத்தனையோ செய்தோம். திமுக ஆட்சியை மைனாரிட்டி ஆட்சி என்று ஜெயலலிதா கூறுவார். அதற்கு நான் மைனாரிட்டி மக்களுக்காக இருக்கும் ஆட்சி என்று பதில் அளித்தேன். இதற்கெல்லாம் நன்றியை பரிசாக அளித்திருக்கிறேன்”, இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “இஸ்லாமிய சமுதாயத்துக்கும் திமுகவுக்கும் எந்த அளவு தொடர்பு உண்டு என்பதை அறிவீர்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமிய மக்களுக்காக பாடுபடும் கட்சி திமுக. உங்களுக்காக வாதாடுபவர், போராடுபவர் கருணாநிதி. அந்த கடமையை திமுக தொடர்ந்து செய்யும். குரானில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதைத்தான் பெரியார் தீர்மானமாக முன்மொழிந்தார். 60 ஆண்டுகளுக்கு பிறகு கருணாநிதி அதை நிறைவேற்றினார்.  தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை நாடி வரும் கட்சி திமுக அல்ல. அதற்கென்று சில கட்சிகள், தலைவர்கள் உள்ளனர். அவர்களை நீங்கள் அறிவீர்கள். என்றும் உங்களை பற்றியே சிந்திக்கும் கருணாநிதிக்கு ஆதரவு தாருங்கள்”, இவ்வாறு அவர் பேசினார்[4].

தி.மு.., அதிகதொகுதிகளில்போட்டியிடும் : கருணாநிதி சூசக அறிவிப்பு (தினமலர்)“லோக்சபா தேர்தலில், தி.மு.க., அதிக தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி குறைந்த தொகுதிகளிலும் போட்டியிடும்,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி சூசகமாக தெரிவித்தார்[5]. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மாநில தலைவர் காதர் மொய்தீன் தலைமை வகித்து பேசுகையில், “2004ல், நாட்டில் மதசார்பற்ற ஆட்சி அமைய கருணாநிதி பாடுபட்டார். அதேபோல் மீண்டும் நல்லாட்சி அமைய அவர் வழி காட்ட வேண்டும்,” என்றார்.

பின்னர் கருணாநிதி பேசியதாவது: “முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. நான் சிறுவயதில் பார்த்த முஸ்லிம் லீக் இப்போது இல்லை. அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, தமிழகத்திலிருந்து, முதல் கண்டன குரல் நான் கொடுத்தேன். நான் அதிகமாக பேச வேண்டும் என்பதற்காக, காதர் மொய்தீன் குறைவாக பேசினார். அதேபோல் எல்லாவற்றிலும் அவர் குறைவாக எடுத்துக் கொண்டு, எனக்கு, அதாவது தி.மு..,வுக்கு அதிகமாக ஒதுக்குவதற்கு அவர் ஒத்துழைப்பு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தி.மு.., ஆட்சியில்,

  • மிலாது நபிக்கு விடுமுறை;
  • உருது பேசும் முஸ்லிம்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது;
  •  சென்னையில் உள்ள அரசு மகளிர் கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்பட்டது;
  • ஹஜ் பயணிகள் குலுக்கல் மூலமாக தேர்வு செய்யும் முறை ரத்து செய்து,
  • விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இப்படி, சிறுபான்மை மக்களின் நலனுக்காக, தி.மு.., ஆட்சி நடந்தது”, இவ்வாறு, அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சியினருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இப்படி வருத்தப் படவேண்டிய அவசியம் இல்லை. போட்டிப் போட்டுக் கொண்டு நிகழ்சிகள் நடத்துவதால், கஞ்சிக் குடிக்க அவகாசங்கள் அதிகமாகவே உள்ளன. ஏற்கெனவே கார்த்திக் சிதம்பரம், தனியாக கஞ்சி குடிக்க ஏற்பாடு செய்தது நினைவு படுத்திக் கொள்ளவேண்டும்[6]. திராவிடக் கட்சிகளுக்கு வெட்கமே இல்லை, குல்லா போட்டு போட்டோ, குல்லா போடாமல் போட்டோ என்று தமாஷாக்கள் நடத்தியுள்ளன[7].

ரம்ஜான் நோன்பு போது தான் இப்படி பேசுவார்கள் என்றில்லை. மற்ற நேரங்களிலும், மற்ற கட்சிகளும் சலைத்தவை அல்ல. மார்ச் மாதத்திலேயே இந்த நாடகம் ஆரம்பித்து விட்டது[8]. ஜெயலலிதா தனியாக கஞ்சி குடிக்க ஏற்பாடு செய்வார்[9]. இப்படி வேடிக்கை-வினோதங்கள், இனி நிறைய பார்க்கலாம். இதோ இவற்றையும் படியுங்களேன்:

1.குல்லா போய் தொப்பி வந்தது டும், டும், டும், கஞ்சிபோய் கேக் வந்தது அம், அம், அம்: திராவிட கட்சிகளின்கிருஸ்துமஸ் விழாவும், வாக்குறுதிகளும்[10], ரௌல் ராபர்ட்டோ கந்தியின் மிரட்டல்களும் (4)!

2.  குல்லா…………..மிரட்டல்களும்[11] (3).

3.  குல்லா…………..மிரட்டல்களும்[12] (2).

4.  குல்லா…………..மிரட்டல்களும்[13] (1).


[1] வேதபிரகாஷ்ரம்ஜான் கஞ்சியும்இந்துவிரோத திராவிட பேச்சுகளும், http://dravidianatheism.wordpress.com/2009/10/07/ரம்ஜாந்கஞ்சியும்-இந்து/

குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!

மார்ச் 19, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!

முஸ்லீகளுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்: “முதலில் முஸ்லீம்களின் நலன் தான், பிறகு தான் அரசாட்சி, என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நான் முஸ்லீம்களை ஏமாற்றமாட்டேன். முஸ்லீம்கள் ஆசைகளுக்காக எங்களுடைய அரசாங்கத்தையே தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்[1]………..எனது சபையில் 11 முஸ்லீம் மந்திரிகள் இருக்கிறார்கள். அரசு முதன்மை செயலாளரே முஸ்லீம் தான் (Javed Usmani)”, என்று முல்லா முலாயம் சிங், ஜமைத் உலாமா ஹிந்த் [Ulema-e-Hind] ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் அடுக்கிக் கொண்டே போனார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்குகள் நடைப்பெற்று வரும் நிலையில் சிறைலிருக்கும் கணிசமான முஸ்லீம் கைதிகளையும் சமீபத்தில் விடுவிக்க முஸ்லீம்கள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த அப்பாவி முஸ்லீமும் சிறையில் இருக்கமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்[2]. இப்படி முல்லாயம் பேசியவுடன், சோனியாவின் விசுவாசியான பேனி பேசியது இப்படித்தான்!

மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா என்றும் பேசியுள்ளார்[3]. இருவரும் இப்படியிருக்கும் போது, உபியை எப்படி காப்பாற்ற முடியும்? என்று பேனி கேட்டுள்ளார். “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய்.” பேனி பிரசாத் வர்மாவின் பேச்சு, முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, என்ற பேச்சு. கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[4]. இதைக்கேள்விப்பட்ட முல்லாயம், “ஒன்று அவர் பதவி விலக வேண்டு, இல்லை நான் கைது செய்யப்படவேண்டும்”, என்று ஆர்பரித்தார்[5], என்னைப்பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?”, என்றும் கேட்டார்[6].

மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்இப்படி ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார்அதாவது பிஜேபியை வம்புக்கு இழுத்தார்: இவரது பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியினர் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெனிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெனிபிரசாத் கூறுகையில், “என்னை பதவி விலக சொல்வதற்கு முலாயம் யார் ? நான் பதவி விலகத்தயார் ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன். முலாயம்சிங் அயோத்தி இடிப்பு சம்பவத்தின்போது சிலருக்கு துணையாக இருந்தார். குறிப்பாக மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்”“, என்றார். மேலும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.

மாயாவதி அமைதியாக இருக்கும்போது, இன்னொரு கஞ்சிகுடித்தவர் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார்: ஆமாம், கருணாநிதி வழக்கம் போல, தங்களது ஆதரவு பற்றி பரிசீலினை செய்ய வேண்டியிருக்கும் என்று பாடலை ஆரம்பித்தார். உடனே, இலங்கை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக, திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இந்தியா சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இதையடுத்து மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் இன்று கருணாநிதியை சந்தித்து, அமெரிக்காவின் தீர்மானம் குறித்து விவாதித்தனர். கருணாநிதியின் சிஐடி காலனி வீட்டில் இன்று மாலை 5.30 மணியளவில் சந்திப்பு தொடங்கியது.  முன்னதாக, இன்று காலையில், டெசோ உறுப்பினர் சுப. வீரபாண்டியன் மற்றும் திமுக தலைமை நிர்வாகிகளுடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இச்சந்திப்பில், மத்திய அமைச்சர்களுடன் என்ன பேசுவது என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குலாம்நபிஆசாத் இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: “தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் சில திருத்தம் செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரினார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்திலும் திருத்தம் பற்றி விளக்கியிருந்தார். அது தொடர்பாகவும் நேரில் விவாதித்தோம். கருணாநிதியுடன் பேசியது பற்றி பிரதமரிடம் கூறுவோம். கருணாநிதியின் கோரிக்கை பற்றி பிரதமரிடம் ஆலோசித்து, பின்னர் முடிவு எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்.

சிதம்பரம்  இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதியை , மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று வழக்கம் போல புன்னகையுடன் சொன்னார். பிறகு, “சி.ஏ.ஜி.க்கு கூடுதலாக உறுப்பினர்கள் நியமிக்கும் திட்டம் இல்லை”, என்றார்[7]. ஆனால், இதன் ரகசியம் என்ன, கருணாநிதி அவ்வாறு கேட்டுக் கொண்டாரா, அல்லது இவராகச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. பிறகு சிவகங்கைக்குச் சென்று ஏதாவது வங்கிக் கிளையை திறந்து வைப்பார் போலும்!

நாராயணசாமி இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[8]: “இலங்கையில் தமிழர்கள் நலமுடன் வாழ மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக மக்களும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் திருப்தி அடையும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். இதற்கான அறிவிப்பை பிரதமர் விரைவில் அறிவிப்பார். மூவரும் ஒரே பாட்டை மாற்றிப் பாடியுள்ளனர்.

நாராயணசாமி விடுவாரா – அவரும் பிஜேபியை இழுத்துள்ளார்: கூடங்குளத்தை வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை சீண்டி வரும் இவர், “கடந்த 9 ஆண்டுகளாக தி.மு.க. – காங்கிரஸ் இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது. இதில் பிரிவு எதுவும் வராதா என்று பா.ஜனதா எதிர்ப்பார்க்கிறது. இலங்கை பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கையை வரவேற்று பா.ஜனதா குட்டையை குழப்ப பார்க்கிறது. எதிர்கட்சியான அவர்களே இப்படி செய்யும் போது ஆளுங்கட்சியான நாங்கள் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம். அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்வது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்”, இவ்வாறு அவர் கூறினார்[9]. ஆக தேர்தலுக்காக இவ்வாறு எல்லோரும்மாடுகின்றனர் என்று தெரிகிறது.

ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர் மாயாவதி, முல்லாயம் சிங் யாதவ், மோடி, பீஜேபி என்று அனைவரையும் இழுத்து வசவு பாடியாகி விட்டது. பிறகு ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர்? ஒருவேளை புத்த பிக்குகளைத் தாக்கி அதனால் ஏற்படுத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும், அவர் மீது அவதூறு ஏற்படும், அவரது ஆட்சியை கலையுங்கள் என்று கூட பேசலாம் என்று செய்ய ஆரம்பித்துள்ளனரா? வழக்கம் போல மம்தா-சமதா-அம்மா-மாயா சீண்டல்கள் ஆரம்பித்துள்ளன. பங்களாதேச முஸ்லீம்கள் விவகாரத்தில் மம்தா காங்கிரஸை மிஜ்சி விட்டார். சமதா கட்சி முதல்வர் தில்லிக்கே வந்து விட்டார். மாயாவைத் திட்டியாகி விட்டது. அதனால் அம்மாவை இப்படி சீண்டுகிறர்கள் போலும்!

முஸ்லீம் கூட்டுத் தேவை[10]: நிதிஷ் குமாரை கவனித்தாகி விட்டது; கருணாநிதியை சந்தித்தாகி விட்டது; ஆனால், இப்படி பேனி பேசியவுடன், முலாயம் முஸ்லீம் பிரச்சினையைத் திசைத்திருப்பி விட்டது போலாகி உள்ளது. முஸ்லீம் பிரச்சினையை விட்டு, முலாயம் பிரச்னையை அலச ஆரம்பித்து வருவார்கள்[11]. முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது[12], இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருந்தாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு செய்வது விடுவார். தமிழகத்திலும் ஒரு முஸ்லீம் மாநாடு நடத்தி அதில் கருணாநிதி பங்கு கொள்ளலாம். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.

© வேதபிரகாஷ்

19-03-2013


[1] “We will not hesitate in even sacrificing our government to fulfil the aspirations of the Muslims,” he said. “We will not let any kind of injustice be done against Muslims,” he added.

http://www.dnaindia.com/india/report_keeping-muslim-votebank-intact-a-challenge-for-mulayam_1812375

[2] He referred to the demand for the release of Muslim youths, who had been lodged in various jails in the state after being charged with terror activities. He said the SP government will make sure that no ‘innocent’ Muslim youth remains in prison.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html

காங்கிரசில் முஸ்லிம்கள் சேர கார்த்தி சிதம்பரம் அழைப்பு – குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் திராவிட வீரர்கள் புறப்பட்டுவிட்டனர்! (2)

செப்ரெம்பர் 2, 2010

காங்கிரசில் முஸ்லிம்கள் சேர கார்த்தி சிதம்பரம் அழைப்பு – குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் திராவிட வீரர்கள் புறப்பட்டுவிட்டனர்! (2)

கார்த்திக்-சிதம்பரம்-குல்லா-கஞ்சி-2010

கார்த்திக்-சிதம்பரம்-குல்லா-கஞ்சி-2010

காங்கிரசில் முஸ்லிம்கள் சேர கார்த்தி சிதம்பரம் அழைப்பு[1]: சிதம்பரம், ஜிஹாதினால் பேதி போன நிலையில், பிள்ளை கார்த்திக்கு, வேறுவிதமான யோசனை வந்து விட்டது போலும். “முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும்,” என அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசினார். தேசிய நண்பர்கள் குழு சார்பில் புனித ரமலான் (இப்தார்) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. முன்னாள் எம்.பி. அப்துல்காதர் தலைமை வகித்தார். தாராஷபி தொகுத்து வழங்கினார்.

Anbalagan-without-cap

Anbalagan-without-cap

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்தார் நோன்பை சடங்காக நடத்தி வருகின்றன: செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., பேசும் போது, “தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் மலரும் போது மதுக்கடைகள் மூடப்படும்,” என்றார். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது: “ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்தார் நோன்பை சடங்காக நடத்தி வருகின்றன. ஆனால், முஸ்லிம்களுக்கான முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை பதிவு செய்யவில்லை. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு காங்கிரஸ் பாதுகாப்பு அரணாக இருந்து வருகிறது[2].

Anbazhagan-with-kulla

Anbazhagan-with-kulla

கார்த்திக்கின் புதிய கண்டு பிடிப்பு: “மதச்சார்பின்மையை காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது”: “எல்லாரும் ஏதாவது ஒரு வகையில் சிறுபான்மையினராகத் தான் உள்ளனர்[3]. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறுபான்மையாக தான் இருக்கிறது. முஸ்லிம்கள் தங்களது கருத்தை ஆழமாக சொல்ல வேண்டும். அவர்களின் கருத்துக்கள் ஓங்கி ஒலிக்க தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும். காங்கிரஸ் கட்சியும் மற்ற பிரதான கட்சிகளும் முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். மதச்சார்பின்மையை காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது”.

chiru-real life - not reel

chiru-real life - not reel (நடிகராக இருக்கலாம், அதற்காக இப்படியா மாறுவேட போட்டிப் போன்று சேக் உடையெல்லாம் அணிந்து கொண்டு கஞ்சி குடிக்க வரவேண்டும்?)

திராவிடக் கட்சிகள் பிஜேபியுடன் கூட்டு வைத்துக் கொண்டால் மதசார்பின்மை போய்விடும்: கார்த்தியின் அடுத்த கண்டு பிடிப்பு: மதச்சார்பின்மை கட்சிகள் என சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் தங்களுக்கு வசதி என்றால் பா.ஜ., கட்சியுடன் கூட்டணி வைக்கின்றன. பா.ஜ.,வின் எதிர்ப்பு இயக்கமாக காங்கிரஸ் கட்சி விளங்குகிறது[4]. மற்ற சமுதாயத்தினரை விட முஸ்லிம்களுக்கு கல்வி பயில வாய்ப்பு மறுக்கப்படுகிறது[5]. இந்த நிலை மாற வேண்டும். முஸ்லிம் பெண்கள் கல்வி பயில வேண்டும். கல்வி அறிவு கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியும். வறுமையை ஒழிக்க முடியம். விடுதலை கிடைக்கும்[6]. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் பேசினார்.விழாவில் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, ராஜ்குமார், சுந்தரம், சிரஞ்சீவி, கராத்தே தியாகராஜன், , ஹசீனா சையத், ரஞ்சன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

BJP-Iftar-2005

BJP-Iftar-2005 - பாவம் பிஜேபி காரர்கள் கூட இப்படி குல்லா போட்டு கஞ்சி குடிக்க வேண்டியிருக்கிறது!

கஞ்சி-குல்லா லிஸ்ட் நீளுகின்றது: எது எப்படியாகிலும், இந்த தடவை குல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கூட்டம் ஜாஸ்தியாகவே உள்ளது. அப்பன்-பிள்ளை என்று போட்டிப் போட்டுக் கொண்டு குல்லா போட்டுக் கஞ்சி குடிக்க வந்து விட்டார்கள் போலும். அடுத்த வருடத்தில், பேரப்பிளைகள் வந்து விடுவார்களோ என்னமோ?

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை இதுதான் போலும்! ஃபிரோஸ் கான் என்கின்ற ஃபிரோஸ் கந்தி என்கின்ற, ஃபிரோஸ் காந்தியாக மாறிய, இந்திராவின் கணவருக்குப் பிறந்த ராபர்டோ ராஜிவ் காந்தி!

Karunanidhi-with-kulla

Karunanidhi-with-kulla

அப்பா, அப்பப்பா, ஐயோ அப்பா, இந்த படத்தை பிடிப்பதற்குள் போதும், போதும் என்றாகி விட்டது! ஒரு நன்பர் அனுப்பி வைத்தார்! படத்தைப் பெரிது படுத்தினால், ஏதோ டச்-அப் செய்திருப்பது போல இருக்கிறது. இருப்பினும், இவர்கள் எல்லோரும் குல்லா போட்டது உண்மை, கஞ்சி குடித்தது உண்மை…………………


[1] தினமலர், காங்கிரசில் முஸ்லிம்கள் சேர கார்த்தி சிதம்பரம் அழைப்பு, செப்டம்பர் 02, 2010

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=75927

[2] ஏதோ, ஸ்டாலின் பேசியதற்கெல்லாம் பதிலாக ஏதாவது பேச வேண்டும் என்ற தீர்மானத்தில் தயார் செய்து கொண்டு பேசியது பொல உள்ளது.

[3] அடிக்கடி ஜெயா டிவியைப் பார்க்கும் வழக்கம், கார்த்திக்கு அதிகமாகவே உள்ளது போல உள்ளது.

[4] பாவம் பிஜேபி இனி அதோகதிதான். பிஜேபி இன்னுமொரு காங்கிரஸ் ஆனால் காங்கிரஸ் காலி, இல்லை காங்கிரஸ் இன்னுமொரு பிஜேபி ஆனால், பிஜேபி காலி.

[5] பாவம் ஸ்டாலின், பட்டியல் இட்டுக் காட்டியதை பொய் என்கிறார் போலும்!

[6] ஆஹா, பாவம் முஸ்லீம்கள், அவர்கள் விடுதலையில்லாமல், இவர்தான் விடுதலை கொட்க்கப் போகிறார்போல இருக்கிறது. இணை வைக்கிறாரோ என்னவோ?

சங்கராச்சாரியும், கருணாநிதியும், முஸ்லீம்களும்!

ஜூலை 14, 2010

சங்சராச்சாரியும், கருணாநிதியும், முஸ்லீம்களும்!

சங்கராச்சாரி பிறந்தநாள் விழாவில் மதுரை ஆதீனம் ஏதோ கூறிவிட்டார் என்றதும், ஆதினத்தையே முற்றுகையிடுவோம் என்று ஔரங்கசீப், மாலிக்காஃபூர் மாதிரி மிரட்டினர். தமிழ்நாட்டிலும் இப்படி “நக்கீரன்” வடநாட்டு ஊடகங்களைப்போல “ஸ்டிங் ஆபரெஸன்” செய்திருக்கிறர்கள் போல. பாவம், இந்த சாமியார்களுக்கு இதெல்லாம் என்ன தெரியப்போகிறது?

கஞ்சி குடிக்கவேண்டும் என்றால், கருணாநிதிக்குக் கொள்ளை ஆசை!

அதுவும் குல்லா போட்டு கஞ்சி குடிக்கவேண்டும் என்றால், கருணாநிதிக்கு ஆசையோ ஆசை!!

முன்பெல்லாம் “குல்லா போட்ட கருணாநிதி”யின் போட்டோக்கள் நூற்றுக்கணக்கான இருந்தன. ஆனால், திடீரென்று அவையெல்லாம் மறைந்துவிட்டன!

அப்படி கஞ்சிக் குடித்துக் கொண்டே இந்துக்களை வசைப்பாட, அவதூறு பேச, தூஷிக்க, தூஷணம்…………… செய்யவேண்டும் என்றால் பேராசை!!!

இப்பொழுதுதான், கனிமொழியை, அன்பழகனை அனுப்பி வைக்கிறார் போலும்.

அவர்களும் தங்களது அபிமானத்தைக் காட்டி வருகிறார்கள்.

கனிமொழி, பொட்டில்லாமல், பூவில்லாமல், (நாத்திகர் என்பதால் தாலி இருக்கிறாதா என்று தெரியவில்லை), கருப்பு ஜாக்கெட்-புடவை சகிதம் சென்று கஞ்சி குடித்தூள்ளார். இது ஆத்திகத்தின் அமங்கலமா, நாத்திகத்தின் புரட்சியா என்று பெண்ணினம் தான் சொல்லவேண்டும் [ஆமாம், இத்தகைய பகுத்தரிவு புரட்சியாளர்கள் திருமணத்தின்போது ஏன் கருப்பு உடைகளை அணிவதில்லை என்று பெரியாரிடம்தான் கேட்கவேண்டும்]

அன்பழனுக்கோ சொல்லவே வேண்டாம், சிறப்பான உபச்சாரம், மரியாதை, சலுகைகள் எல்லாம்!

எஸ்ரா சற்குணம் பாதிரியார் கேட்கவே வேண்டாம், “உங்களுக்காகத்தான் சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்தேன் “, என்று ஒரு குல்லாவை மாட்டிவிட்டார். அன்பழகன் குல்லாவில் அழகாகவே இருந்தார். ஆனால், பத்திரிக்கைக் காரர்கள் புகைப்படம் எடுக்கும் போது குல்லாவை எடுத்து கஞ்சிக் குடிப்பது போன்று போஸ் கொடுத்தது வேடிக்கையாக இருந்தது!

(தொடரும்).